Tuesday 26 March 2024

மறைவிட ஸ்தானங்கள் தரும் மகத்தான பலன்கள்

 மறைவிட ஸ்தானங்கள் தரும் மகத்தான பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் மூன்று ,ஆறு , எட்டு மற்றும். பன்னிரண்டாம். இடங்கள் மறைவிட ஸ்தானங்கள்  என்று அழைக்கப்படுகிறது .


     பொது பலனாக மறைவிட ஸ்தானங்கள் கெட்ட பலனை தரக்கூடிய ஸ்தானமாக  மூல நூல்களில் கூறப்பட்டாலும் அதை அப்படியே  எடுத்துக் கொண்டு பலன் அளிக்க முற்பட்டால் பலன்கள் தவறாக போய் விடும்.


 ஒரு கிரகம் மறைவிட ஸ்தானங்களில் இருந்தாலும் மற்றும் மறைவிட ஸ்தானதிபதி கேந்திர ,கோணங்களிலோ அல்லது அதன் அதிபதிகள் உடனோ இருந்தால் கெட்ட பலனை தான் கொடுக்கும் என்று முடிவு செய்து விடக்கூடாது.இந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும்போது மறைவிட ஸ்தான அதிபதிகளாக இருந்தாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்க கூடிய நிலைக்கு மாறிவிடுகிறது.


இந்த மறைவிட ஸ்தானங்களில் மூன்றாம் இடம் மற்றும்  பன்னிரண்டாம் இடம் பெரிய அளவில் மறைவிட ஸ்தானமாக கருதப்படுவதில்லை இந்த ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் சாதகருக்கு மிகுந்த நல்ல பலனை தரக்கூடிய அமைப்பிலே இருக்கிறது.


மூன்றாம் இடம் ஒருவருக்கு கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து போன்றவற்றை தரக்கூடிய இடமாகும் .ஒருவருடைய வீரியத்தை அறிந்து கொள்ள இந்த ஸ்தானம் உதவுகிறது. காம விஷயங்களில் ஒருவன் திறம்பட செயல்படக்கூடிய தன்மை படைத்தவனாக உள்ளானா ? என்பதையும்   இந்த ஸ்தானம்  மூலம் அறிந்து கொள்ளலாம். எழுத்தாளராக கலைகளில் சிறந்து விளங்க புகழ் பெற இந்த ஸ்தானம் உதவுகிறது.


   " தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பதற்கு இணங்க உடன்பிறந்த சகோதர சகோதரிகளை அறிந்து கொள்ள இந்த ஸ்தானமும் அதன் காரகரான செவ்வாய்  பகவான் உதவுகிறது.


இந்த மூன்றாம் இடம் உப ஜெய ஸ்தானம் வரிசையில் முதலாக அமைகிறது. எனவே மூன்றாம் இடத்தில் கிரகங்கள் நட்பு நிலையில் நின்றால் மிகுந்த யோக பலனை சாதகருக்கு கொடுக்கிறது.


 இதே போல பனிரெண்டாம் இடம் விரய ஸ்தானம் என்று அழைக்கப்பட கூடிய விரயத்தை  தரக்கூடிய மறைவிட  ஸ்தானமாக இருந்தாலும் ஜாதகருக்கு எந்த வகையான நல்ல பலனை தருகிறது என்பதை பார்ப்போம்.


    பன்னிரண்டாம் இடமானது ஒரு நாளின் இறுதி இரவு ஆகும்.அந்த இரவில் நடக்கக்கூடிய காம விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.பன்னிரென்டாம் இடத்தில் எவ்வித சுப தொடர்பு இன்றி சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் சேர்ந்த நிலையில் சனி பார்வை பெற்று இருந்தாலும் அல்லது சுக்கிரன்,சனி சேர்க்கை பெற்ற நிலையில் செவ்வாய் பார்வை செய்த நிலையில் அல்லது சுக்கிரன், சனி, ராகு மற்றும் செவ்வாய் சேர்ந்த நிலையில் இருந்தால் அந்த ஆணோ /பெண்ணோ மிகுந்த காம எண்ணம் கொண்டு தடம் மாறி நடக்க கூடிய பெண்ணாக திகழ்வார்.


 ஒரு நாளின் இறுதி நிலையை போல் ஒரு மாத இறுதி ‌மற்றும் ஆண்டின் இறுதி நிலை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.


ஒரு வாழ்வின் இறுதி நிலையை போல் முக்தி நிலையை அறிய பயன்படுகிறது.பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் மறு பிறப்பு இல்லாத முக்தி நிலையை தருகிறது.


பன்னிரண்டாம் இடத்தில் சனி கேது இருந்து குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலை ஆன்மீக நிலை அதாவது தாமரை இலை தண்ணீர் போல பற்றற்ற நிலையை சாதனை தருகிறது..


பன்னிரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் ஒருவர் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தையும் ஜாதகருக்கு அளிக்கிறது.


பன்னிரண்டாம் இடத்தில் சனி ,செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் அல்லது இருந்தாலும் அவர் கஞ்சத்தனம் மிக்கவராக கருமிதனம் உடையவராக இருப்பார் .அதே நேரத்தில் 12ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் காசை தண்ணீர் போல செலவழிக்க கூடிய மனநிலை படைத்தவராக இருப்பார்.


பன்னிரண்டாம் இடம் ஒருவர் வாழ்வில் இறுதி நிலையை பற்றிய அறிய உதவும் ஸ்தானமாகவும் அமைகிறது .12ஆம் இடம் ஒரு செய்யக்கூடிய செலவு நிலை எப்படிப்பட்டது என்பதை அறிய உதவுகிறது.


   அந்த வகையில் 3., 12 ஆம் இடங்களை தவிர்த்து ஆறு மற்றும் எட்டாமிமிடங்கள் மறைவிட ஸ்தானங்களில் மிக கடுமையான மறைவிட ஸ்தானமாகும். இந்த ஆறு மற்றும் எட்டுக்கூடிய தசைகள் ஒருவருக்கு வந்தால் சாதகருக்கு மிகுதியான கெடு பலனை தரக்கூடிய நிலையில் இருப்பார் .இவ்வாறு ஆறு மற்றும் எட்டு தசைகள் வரும் பொழுது லக்னாதிபதியும் பலமிழந்து நின்றால் சாதகர் மிகுந்த வேதனைக்கு உட்படுவதுடன்   எதிர்த்து நிற்க அல்லது வாழ்வில் எதிர்ச்சில் போடக்கூடிய திராணி அற்றவராக இருப்பார் .ஆனால் அதே நேரத்தில் லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் அவை அனைத்தையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டு பிறகு நல்ல தசை  வரும்போது நிமிர்ந்து எழுந்து சமூகத்தில் நல்ல முறையில் வலம் வருவார்.


    ஆறாம் இடம் ஒருவருக்கு கடன் ,பிணி எதிர்ப்பு ,நோய் மான அவமானம் போன்ற பல்வேறு கஷ்டங்களை கொடுத்தாலும் அதே நேரத்தில் ஒருவர் அடிமை வேலை கிடைக்க, ஒருவர் வேலை பார்த்து சம்பாதிப்பாரா  ? என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆறாம் இடம் உதவுகிறது.


  எட்டாமிடம் வம்பு ,சண்டை, வழக்கு மரணத்துக்கு நிகரான தொல்லை ,சிறை செல்லல் ,ஆடு , மாடு விரயம் , விவசாயம் அல்லது வியாபாரத்தில் நட்டம் போன்ற கடுமையான பலனை தந்தாலும் ஒருவருடைய ஆயுளுக்கு காரணமான ஸ்தானமாகும் . ஆயுள் கூட ஒருவருக்கு தேவையில்லாத ஒன்றுதான். மேலும் மறைபொருள் உண்மைகளை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது எட்டாம் இடம் சுபத்துவமான நிலையில் கடல் கடந்து செல்லக்கூடிய நல்ல தன்மையை ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கோள்களின் அரசன் சூரியன்

 கோள்களின் அரசன் சூரியன் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  சூரிய பகவான் ஒளி கிரகமாகும். எல்லா கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. சூரியனே "கோள்களின் அரசன்" அழைக்கப்படுகிறது, ஆத்மா காரகன் என்றும் போற்றப்படுகிறது. வெளிநாடுகளில் சூரியன் இருக்கக்கூடிய வீட்டையே லக்ணமாகக் கொண்டு பலன் எடுக்கிறார்கள். சாதகத்தில் விதி ,மதி என்று லக்கனம் மற்றும் ராசி வழியாக பார்க்கக்கூடிய இரண்டும் கெட்டுப் போனால் கதி என்று அழைக்கப்படக்கூடிய சூரியனை லக்கினணமாகக் கொண்டு பலன் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 


   தலைமையேற்று நடத்தக்கூடிய தன்மைக்கும் மற்றும் தன்னம்பிக்கைக்கும் சூரிய பகவானின் வலிமையை பொறுத்து அமைகிறது.

சூரிய பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்குவார் இவ்வாறாக மேஷ வீட்டில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் மீனம் வீட்டை வந்து அடைகிறது. சூரியன் இருக்கக்கூடிய வீட்டை கொண்டு ஜாதகர் எந்த மாதத்தில் பிறந்து உள்ளார் ? என்பதை எளிதாக கண்டறிந்து விடலாம்.


சூரிய பகவான் தன்னை 17,15,13,11,9 என்ற பாகை அளவில் சனி, செவ்வாய்,சுக்கிரன் ,புதன் மற்றும் குரு நெருங்கும் பொழுது அந்த கிரகத்தை அஸ்தமன படுத்தி விடுவார் .இவ்வாறு சூரியன் தன்னுடைய இணைந்த சுப கிரகங்களை அஸ்தமன படுத்தும் போது தான் வலிமை பெற்று திகழ்வார்.


    குரு, செவ்வாய் மற்றும் சனி போன்ற கிரகங்கள் சூரிய பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் வக்ரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறது. புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சூரியன் உடன் இணைந்து செல்லக்கூடிய கிரகங்கள் ஆகும் .

புதன் சூரியன் உடன் அல்லது முன்பின் ஒரு ராசியிலும் மற்றும் சுக்கிரன் சூரியனுடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகளுக்குள் சுற்றி வருவார்.


    சூரியனை சந்திரன் எட்டு பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை உண்டாகிறது .இது "அமாவாசை யோகம்" என்று அழைக்கப்படுகிறது. சூரியன் இருக்கும் இடத்திற்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சம சப்தமாக சந்திக்கும் பொழுது பௌர்ணமி உருவாகிறது. இது "பௌர்ணமி யோகம் "ஆகும்.

 


    சூரியனை நெருங்கும் சந்திரன் அல்லது சூரியனை விட்டு விலகும் சந்திரன் ஆகிய அமைப்புகளும் மற்றும் பௌர்ணமி அமைப்புகளும் ஒரு மனிதனை அரசு மற்றும் அரசியலில் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கக்கூடிய அமைப்பாகும்.

 இது எந்த வகையிலும் பங்கம் அடை.யாமல் அல்லது சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படாமலும் அல்லது சூரியனையோ அல்லது சந்திரனையோ சனி பார்க்காமலும் இருந்தால் மட்டுமே இந்த யோகம் முழுமையாக செயல்படும் .மேலும் அந்த யோகம் தசையே நடப்பில் வரும் காலங்களில் சிறப்பாக அமையும்.


 விருச்சிக லக்னத்தை பொருத்தவரை சந்திரன் பாக்ய அதிபதியாகவும் மற்றும் சூரியன் கர்ம அதிதியாகவும் செயல்படுவார் .விருச்சிக லக்கனத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி யோகத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு 

தர்ம-கர்மாதிபதி யோகம் மற்றும் பௌர்ணமி யோகம் ஆகிய இரண்டும் செயல்பட்டு அந்த காலகட்டத்தில் அரசியலில்லோ அல்லது அரசாங்க பதவிகள் மூலமாக பெரிய பதவி கிடைத்து அதில் நல்ல புகழை அடையக் கூடிய யோகம் லக்கனாதிபதியோட வலிமையை பொறுத்து அமையும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் வலிமை பெற்று இருந்தால் அரசாங்க உயர் பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டாகும் .மேலும் அப்பா வழி உறவுகளால் பெரிய ஆதாயத்தை ஈட்ட முடியும்.


 சிம்ம லக்னத்திற்கு லக்கனத்தில் ஆட்சி மற்றும் ஒன்பதாம் இடத்தில் உச்சம் போன்ற நிலைகளில் இருப்பதை விட சூரியன் மற்றும் செவ்வாய் பத்தாம் இடத்தில் திக்பலம் பெற்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை பெற்ற நிலையில் போலீஸ், ராணுவம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகள் மூலமாக பெரிய அளவில் புகழ் அடைய கூடிய தன்மையை ஜாதகருக்கு கொடுக்கும்.


சூரியன் பகவான் குரு ,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்களை அஸ்தமனப்படுத்தும் போது இதுபோன்ற அமைப்பும் வலிமை பெற்ற அமைப்பில் இருந்து அரசாங்கம் மற்றும் அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு அந்த தசைகளில் கொடுக்கும் .இது லக்கனாதிபதி வலிமையை பொறுத்து அமைகிறது.


    சூரியன் பகவானுடன் சனி அல்லது ராகு உடன் நெருக்கமா இணைந்து இருப்பது அல்லது சூரியன் அல்லது சளி சம சப்தமாக பார்த்துக் கொள்ளக்கூடிய நிலை தந்தை மகன் உறவு நிலையை பாதிக்கும் .


      மேற்கண்ட அமைப்பில் பலன் தரும் படிநிலை என்பது ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றின் வலிமையை பொறுத்து அல்லது அந்த இடத்தின் சுபத்துவ தன்மையை பொறுத்து அமைகிறது . தந்தை ஆயுள், தந்தை -மகன் அன்பு அரவணைப்பு, தந்தை தந்தையாக இருக்கக்கூடிய நிலை போன்றவை அமைகிறது.


 சூரியன் மற்றும் சந்திரன் சம சப்தமாக பார்த்துக் கொள்ளும் பெளர்ணமி அமைப்பில் சூரியன் அல்லது சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணையும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

இதேபோல் அமாவாசை நேரத்தில் ராகு அல்லது கேது இணைந்த நிலையில் சூரிய கிரகணம் உண்டாகிறது.


சூரியன் மேஷத்தில் உச்சம்,,துலாத்தில் நீசம் , ஆகும். இது மேஷம் மற்றும் துலாத்தில் சூரியன் மற்றும் சனி சேர்ந்து இருப்பது நீச பங்கம் ராஜ யோகத்தை தராது. மாறாக அது கடுமையான அவயோக அமைப்பை தந்துவிடும்.

நேசத்தில் சூரியன் உச்சம் பெற்று சனி நீசம் பெறும் பொழுது நிச்சயம் அது சனிக்கு நீசபங்க ராஜயோகத்தை தராது இதற்கு மாறாக அவ யோக அமைப்பையே தரும்.


சூரியன் சிம்மத்தை ஆட்சி வீடாகவும் மற்றும் மூல திரிகோண வீடாகவும் கொண்டுள்ளது. காத்திகை, உத்திரம் உத்திராடம் ஆகிய நட்சத்திர நாதனாகவும் சூரிய தசை 6 ஆண்டுகள் ஆகும்.


சூரிய பகவானை பலமிழந்த அமைப்பை பெற்றவர்கள் சிவ வழிபாடு செய்வதும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதும் சிறந்த பரிகாரம் ஆகும்.


சூரிய பகவான் சுகத்துவமான நிலையில் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு பற்றிய ஆராய்ச்சி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் ஆர்வம், அரசாங்கத்தில் உயரிய பதவியில் அமரக்கூடியவர் ஆகும். ஆட்சிக் கட்டில் அமர்பவர் .

எந்த இடத்திலும் தலைமையேற்று நடத்தக்கூடிய , திறம்பட செயல் படக்கூடிய திறமை படைத்தவர் ஆகவும் இருப்பார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

தேவ குருவும் அசுர குருவும்

 #தேவகுருவும்அசுரகுருவும் 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 தேவர்களின் குரு என அழைக்கப்படுபவர் பிரகஸ்பதி என்று அழைக்க கூடிய குரு பகவான் ஆகும் .அசுர குரு என்று அழைக்கப்படுபவர் சுக்கிர பகவான் ஆவார்.


  குரு பகவான் மற்றும் சுக்கிரன் பகவான் ஆகிய இருவரும் இயற்கை சுப கிரகம் ஆகும்.


   இந்த இரு கிரகங்களும் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த கிரகமும் மற்றும் ஸ்தானமும் சுப தன்மை அடையும் என்பது அனைவரும் அறிந்த ஜோதிட உண்மையாகும்.


ஆனா அதே நேரத்தில் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்னை படைத்த கிரகமாகும்.


  குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இவ்விரு கிரகங்கள் இணைந்து இருந்தாலும் அல்லது ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டாலும் அந்த நிலையில் ஜாதகருக்கு குரு திசை சுக்கிர புத்தி, சுக்கிர திசையில் குரு புத்தியை நடப்பில் இருக்கக்கூடிய காலங்களில் கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டு .தாம்பத்திய சுகத்தில் தடைபடக்கூடிய நிலையை உருவாக்குவார் .அதற்கு ஏற்றார் போல் சில நேரங்களில் சுப பிரிவாக வெளிநாடு செல்லுதல், வெளியூர் செல்லுதல் போன்ற நிலைகளை உருவாக்கி விடுவார், சில நேரங்களில் பாவத்துவமான நிலைகளில் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உருவாக்கி விடுவார்.


    தேவ குருவான குரு பகவான் அருள் அணியைச் சேர்ந்தவர். இந்த அணியினை சேர்ந்த ஏனைய கிரகங்கள் சந்திரன், செவ்வாய் சூரியன் முதலியன ஆகும். குரு அணியைச் சேர்ந்த ராசிகளாக தனுசு, மீனம், மேஷம் விருச்சகம், கடகம் ,சிம்மம் ஆகும்.


       அசுரகுருவான சுக்கிரனை தலைமையாகக் கொண்ட அணியை பொருள் அணி என்று அழைக்கிறோம். இந்த அணியை சேர்ந்த ஏனைய கிரகங்கள் சனி, புதன் ஆகும் .ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும்.


       நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் எந்த அணியை சேர்ந்தது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அவர்கள் ஒரு பச்சோந்தி கிரகம் என்று அழைக்கப்படுகிறது .அவர்கள் குரு. அணியைச் சேர்ந்த லக்னத்தில் பிறந்தவரா நீங்கள் இருந்தால் அவர் குரு அணியை சேர்ந்த வீடுகளில் இருக்க வேண்டும் .நீங்கள் சுக்கிர அணியை சேர்ந்த லக்கனங்களில் பிறந்திருந்தால் அந்த ராகு கேது அதாவது நிழல் கிரகங்கள் சுக்கிர அணியை சேர்ந்த வீடுகளில் இருக்கும் பொழுது நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


குரு சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் சேர்ந்து சனி , செவ்வாய் ,ராகு போன்ற பாவ கிரகங்களுடன் இணைந்து இருக்கும் பொழுது இவ்விரு கிரகங்களும் சேர்ந்து அந்த பாவ கிரகங்களை சுப தன்மை அடைய வைக்கிறது .அதே போல சனி, ராகு ,செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை குரு மற்றும் சுக்கிரன் தனித்து அல்லது சேர்ந்தோ பார்க்கும் பொழுது அந்தக் கிரகம் முழு சுபத்தன்மை அடைகிறது.


    குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு பிறப்பிலிருந்து சூரிய, சந்திர ,செவ்வாய் குரு மற்றும் குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சகம் ,தனுசு, மீனம், கடக மற்றும் சிம்மம் வீட்டில் உள்ள ராகு பகவான் அல்லது கேது பகவான் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றார்கள் யோக ஜாதக வரிசையில் அமைகிறது.


    ஒரு சமயம் மாற்று அணியை சேர்ந்த சுக்கிரன், சனி மற்றும் புதன் தசை நடப்பில் வரும் பொழுது அதை உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு, பத்து, பதினொன்னாம் இடங்களில் நட்பு நிலையில் நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகமான இந்த குரு சுக்கிரன் ஆகியவை தொடர்பு பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த கிரகம் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் உள்ளது.


   பொதுவாக நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கும் வீட்டையே சொந்த வீடாக கொண்டு செயல்படும். மேலும் இருக்கக்கூடிய வீட்டையும் சேர்ந்துள்ள மற்றும் பார்க்கின்ற கிரகங்கள் பொறுத்து பலன்கள் அமைகிறது.


  நீங்கள் சுக்கிர அணியை சேர்ந்த லக்கணங்களில் பிறந்திருந்தால் தொடர்ந்து சுக்கிரன் புதன் மற்றும் சனி ஆகிய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் பெற்றிருந்த ஜாதகம் யோக ஜாதகம் வரிசையில் வருகிறது. 


    நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது ஆகியவை சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கு வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார் என்பதால் சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு இந்த நிழல் கிரகங்கள் அந்த அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம், மிதுனம் ,கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு மிகுந்த யோக பலனை அள்ளித் தருகிறார்.


    "ஒரு சமயம் மாற்று அணியை சேர்ந்த தசை நடப்பவருக்கு யோகமே தராதா ? அவங்க வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படணுமா? " அப்படின்னு நீங்க கேள்வி கேட்டீங்கன்னா அப்படி சொல்லிவிட முடியாது. மாற்று அணியை சேர்ந்த சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் குரு தசைகள் நடக்கும் பொழுது அந்த கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3 ,6, 10, 11ஆம் இடத்தில் நட்பு நிலையில் நிற்கும் பொழுது அல்லது இயற்கை சுப கிரக தொடர்பு பெற்ற நிலைகள் அந்த தசையும் ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் மாறுகிறது.


  ஜாதகத்தில் குரு பகவான் தன காரகன், புத்திர காரகன் மற்றும் கல்விக்கு காரகன் ஆகவும் செயல்படுகிறார் .சுக்கிர பகவான் தாம்பத்திய சுகத்தை தரக்கூடியவராகவும், களத்திர காரகன், வாகனம் மற்றும் வீட்டிற்கு காரகராகவும் செயல்படுகிறார்.


குரு பகவான் ஜாதக கட்டத்தில் தன ஸ்தானமான இரண்டாம் இடம், புத்திர ஸ்தானமான ஐந்தாமிடம், பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11 இடம் ஆகிய நான்கு வீடுகளுக்கும் காரக கிரகமாக செயல்படுகிறது. சுக்கிரன் வாகன ஸ்தானமான நான்காம் இடம் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாமிடம் ஆகிய இரண்டிற்கும் காரக கிரகமாக செயல்படுகிறார்.


குரு பகவானுக்கு உயிர் காரகத்துவம் புத்திர பாக்கியம் மற்றும் சுக்கிர பகவானுக்கு உயிர் காரகத்துவம் வாழ்க்கைத் துணையாகும்.


குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் வாசம் செய்யக்கூடிய கிரகமாகும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாதனாக செயல்படுகிறார். தனுசு, மீனம் ஆட்சி வீடாகவும், கடகம் உச்சவீடாகவும், மகரம் நீச விடவும் செயல்படுகிறது குரு பகவானுக்கு தனுசு மூல திரிகோண வீடு ஆகும். இதனுடைய தசை காலம் 16 ஆண்டு ஆகும். குரு பகவான் லக்னத்தில் திக்பலத்தையும், ஏழாமிடத்தில் நிஷ் பலத்தையும் பெறுகிறார்.


சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாத கால தங்கக்கூடிய கிரகமாகும். இவை சூரியன் இருக்கும் இடத்திற்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் அல்லது சூரியனுடன் சேர்ந்து சுழலக்கூடிய கூடிய உள்வட்ட கிரகமாகும் .சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம் ஆட்சி வீடாகவும்,

 மீனம் உச்ச வீடாகவும்ஃ கன்னி நீச வீடாகவும் உள்ளது சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு துலாம் ஆகும். சுக்கிர பகவான் பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக செயல்படுகிறார் ‌சுக்கிரனுடைய தசைக்காலம் 20 ஆண்டுகள் ஆகும். சுக்கிரனுக்கு நான்காம் இடம் திக்பலம் ஆகும். பத்தாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிடம் என்பது குறி சொல்வது அல்ல.அது ஒரு விஞ்ஞானம்

 ஜோதிடம் என்பது குறி சொல்வது அல்ல .அது ஒரு விஞ்ஞானம்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகம் பலன் பார்க்க வரும் உங்களுக்கு ஒரு சில ஜோதிட அடிப்படையான  உண்மையான விவரங்களை சொல்லி தருவதற்கு இந்த பதிவினை பயன்படுத்தி கொள்கிறேன்.


உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கு  ஜாதக பலன் பார்க்க செல்லும் போது நீங்கள் செய்ய வேண்டிய சில விவரங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


 ஜாதக பலன் பெற செல்லும் ஜோதிடரிடம் சென்று ஜோதிடரை பரிசோதனை செய்யும் பொருட்டு குழந்தை உடன் பிறந்த பிறப்பு , குழந்தையின் தாய் உடன் பிறந்த பிறப்பு மற்றும் தந்தை உடன் பிறந்த பிறப்பு விவரங்கள் அதாவது எண்ணிக்கையை கேள்வியாக நீங்கள் கேட்டு அந்த எண்ணிக்கையை சரியாக சொல்லும் சோதிடர்  சிறந்த ஜோதிடராக நீங்கள் முடிவு செய்து விடுவதால் இதுபோன்ற பிறப்பு விவரங்களை ஒரு சில சங்கேத  குறிகளால் சாதகம் எழுதும் ஜோதிடர் அல்லது எங்காவது பலன் பார்க்கும்போது அந்த சோதிடர் ஏதாவது  ஒரு மூலையில் குறித்து விடுவார்கள் அதை வைத்துக்கொண்டு சரியாக பிறப்பு விவரங்களை தந்து விடுவார்கள் .இதை தந்தாலே அவர்கள் சொல்லக்கூடிய ஏனைய முக்கிய பலன் அனைத்தும் சரியான பலனாக இருக்கும் என்று நீங்கள் நம்பி விட நேரிடுகிறது.


   ஒரு சிலர் ஜாதகம் பார்க்க சோதிடரிடம்  சென்றவுடன், அவர்களிடம் தங்களது மேதமை தன்மையை காட்டிக்கொள்வதற்காக தமக்கு எல்லாம் தெரியும் என்ற வகையில் அந்த சோதிடர் பலனை சொல்ல விடாமல் தாங்களே அதிக பிரசிங்கத்தனமாக பேசி சரியான பலனை பெறாமல் சென்று விடுவதும் உண்டு.


     ஒரு சிலர் ஜாதகம் பார்க்க போனவுடன் அந்த சோதிடர் ஒரு பலனை சொல்ல ஆரம்பித்த உடன் அந்த சோதிடர் அப்படிச் சொன்னார். இந்த சோதிட இப்படிச் சொன்னார் என்று சொல்லி யாரிடம் பலன் பார்க்க சென்றோமோ அவரை முழுமையாக சரியாக பலனை சொல்ல விடாமல் அல்லது சரியான பலனை பெறாமல் தட்சணை கொடுத்து சென்று விடுவதும் சிலர் உண்டு.


     ஒரு சிலருக்கு ஓரளவு சோதிட ஞானம் இருக்கும் அந்த ஜோதிட ஞானத்தை கொண்டு சாதக பலன் சொல்லக்கூடிய நபரை சொல்ல விடாமல் பதிலுக்கு பதில் இவர் பேசி கடைசியில் அவர் சொல்வதையே கேட்டு ஆமாம் சாமி போட்டு அனுப்பி விட நேரிடுவதும் ஆன தர்ம சங்கடமான  நிலை எழுவதும் உண்டு.


 ஒரு சில நபர்கள் சோதிட பலன் செல்லும் பொழுது அந்த ஜோதிடர் ஒரு கோயிலுக்கு செல்ல பரிந்துரைத்தால்  இவர் இவர் சென்ற கோயில் அனைத்தும் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு விடுவார் .

அதிகமான கோயிலுக்கு சென்று விடுவதாலோ அவ்வாறு அந்த கோயிலுக்கு சென்று நிறைய பணம் செலவழித்து பெரிய மாலை, பூஜை  மற்றும் அதிக எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து விடுவதாலோ உங்கள் கஷ்டங்களை கடவுள் குறைத்து விடுவதில்லை .


     மனதளவில் நீங்கள் செய்யக்கூடிய தனிமையான ஒரு பிரார்த்தனை கூட சில நேரங்களில் உங்கள் கஷ்டங்களை குறைத்து விட  வாய்ப்பு உள்ளது. பக்தியில் காட்டும் ஆடம்பரம் நிச்சயமாக உங்களை கிரக பாதிப்பில்  இருந்து நல்ல நிலைக்கு கொண்டு சென்று விடாது என்ற அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கூட சிலர் அதிக பக்திமான் போல் தங்களை காட்டிக் கொண்டு அதே நேரத்தில் மனதில் அழுக்கு படிந்து இருக்கக்கூடிய நபர்களிடம் சோதிடம் பார்க்கக் கூடிய ஜோதிடர்கள் பேச்சு சில நேரங்களில் எடுபடாமல் போய்விடும் உண்டு.


  கிரக பலனை குறைக்க உண்மையான மனதளவில் அகம் நோக்கி மனதை ஒரு முக படுத்தி செய்யப்படும் தியான நிலையிலான வழிபாடு கூட கிரகங்கள் தரும் கஷ்டங்களை குறைத்து விடுவதில்லை.ஆனால் மனதளவில் அதனை தாங்கி செல்லும் மன பக்குவத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


  இங்கு" யாரும் மந்திரத்தால் மாங்காய் பறித்து விட முடியாது" என்ற அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு உள்ள பலரது வாழ்வியல் பிரச்சினைகள் ஆன்மீகவாதிகள் அல்லது பூசாரிகள் என்று சொல்லி கொள்ளக் கூடியவர்களுக்கு ஆன்மீகம் என்பது வருமானத்தை உருவாக்கி தரும் களமாக உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.


   ஒரு சிலர் என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பொழுது எந்த பரிகாரம் செய்தால்தான் எனக்கு லாட்டரியில் லட்சம் அல்லது கோடி ரூபாய் விழும்  என்று கேட்டு வருகிறார்கள். நிச்சயமாக பரிகாரத்தின் மூலம் ஒருவருக்கு பத்து ரூபாய் விழ செய்ய இயலாது.


   லாட்டரி யோகம் என்று உங்கள் ஜாதகத்தில் இருந்து அதற்கு உரிய தசா புத்திகள் வரக்கூடிய நபருக்கு மட்டுமே விழக் கூடிய நிலை உண்டு. மற்றபடி எந்த பரிகாரத்தாலோ பூஜைகளாலோ அதிர்ஷ்டத்தை வர வைக்க முடியாது .


      ஒரு கரடி ஓட்டிக் கொண்டு செல்லும் ஒரு நபர் அவர் கரடி முடியை ஒரு தாயத்தில் வைத்து அதிர்ஷ்ட கயிறை விற்பார். அந்த கயிறை வாங்கிக் கொண்டு சென்றால் உங்க வீட்டில் ஐஸ்வர்யம் பொங்கிப் பெருகும் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு இந்த கயிறு பெற்று தரும் என்பார் . ஆனால் அவரோ அந்த கரடி வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பார் அவர் நினைத்தால் அந்த கயிறை அவர் வீட்டில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய கோடீஸ்வரராக ஆகி இருக்கலாம் ஆனால் அவர் இதுபோன்று கரடியை  ஓட்டிக்கொண்டு வீதி வீதியாக அலைந்து திரிய தேவையில்லை.


  ஜோதிடம் என்பது கணித அடிப்படையிலான அறிவியல்.இங்கு ஆன்மிகத்திற்கும் மற்றும் ஜோதிடத்திற்கும் பெரிய அளவில் தொடர்பு கிடையாது.ஜோதிடம் பலன் சொல்ல கடவுள் அனுகிரகம் வேண்டுமே ஒழிய ஜோதிட அடிப்படை அறிவு இல்லாமல் சாமி பக்தியை மட்டும் வைத்து கொண்டு ஜோதிட பலன் சொல்லி விட முடியாது.


 ஒரு சிலருக்கு சாஸ்திரம் நன்றாக தெரிந்து இருக்கும்.வெறும் சாஸ்திர அறிவை மட்டும் வைத்து கொண்டு ஜோதிட பலன் கூறி விட முடியாது. இது போன்ற நபர்கள்தான் நட்சத்திரம், திதி கரணம், யோகம் இது போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு சாதக பலன்  சொல்வார்கள் .ஆனால் ஜாதக பலன் என்பது திதி கரணம் திதி சூனியம் போன்றவற்றில் இல்லை.


இது போன்ற மிகக் குறைவான ஜோதிட ஞானம் கொண்டவர்கள் அதே நேரத்தில் சாஸ்திர அறிவு பெற்றவர்கள் இந்த பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம் ,நட்சத்திர தோஷம் மற்றும்  நாக தோஷம் இது போன்ற விவரங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு பெரிய சோதிடராக ஜோதிட பலன் சொல்லுவார்கள் அவ்வாறு தரக்கூடிய பலன்கள் நிச்சயமாக சரியான பலனாக அமையாத போது தான் ஜோதிடத்தின் மீது ஒரு நம்பகத்தன்மை இல்லாத நிலை வந்திருக்கிறது.


  ஒரு சோதிட பலனை துல்லியமாக தர ராசி, பாத சாரம், அம்சம் இது போன்ற நிலைகளை வைத்துக்கொண்டு ஒரு கிரகம் ஒரு ராசியில் எத்தனை பாகையில் உள்ளது போன்ற விவரங்களை கொண்டு ஷட் பல  வரிசையில் ஆராய்ந்து அந்த கிரகத்தின் சுப தன்மை பாவத்தன்மைக்கு ஏற்ப நடக்கக்கூடிய தசாபுத்தி கோச்சார பலன்களுடன் ஆய்வு செய்து தரக்கூடிய பலன்களை நிச்சயமாக 100% துல்லியமான பலனாக இருக்கும் இது போன்ற வகையில் ஆய்வு செய்து தான் திருமண பொருத்தத்தையும் பார்க்க வேண்டும். வெறும் பத்து பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்கக்கூடிய திருமணங்கள் இன்று பெரும்பாலும் விவாகரத்து அல்லது பிரிவு நிலையில் கொண்டு சென்று விடுகிறததை பெரும்பாலான பிரச்சினைக்குரிய ஜாதகங்களில் பார்க்க நேரிடுகிறது.


    நிச்சயமாக உங்கள் குழந்தைகளுக்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது எத்தனை பொருத்தம் உள்ளது என்று கட்டாயம் கேட்காதீர்கள். அவ்வாறு வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யும்போது ஒருசில சாதகங்களை தவிர பெரும்பாலான ஜாதகங்கள் தோல்விகளில் முடிந்து விடுவது உண்டு. ஒரு காலகட்டத்தில் 

 "கல் ஆனாலும் கணவன்

 புல் ஆனாலும் புருஷன்"   என்ற மனநிலை இன்றைய இளைஞர்களிடம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை  இல்லாததால் மேலும் ஆணும் பெண்ணும் தனித்தனியாக அதிக அளவில் சம்பாதித்து தற்சார்பு  பெற்ற நிலை அதிகமாக இருப்பதாலும் சிறு பிரச்சனை கூட பெரிய பிரிவை தந்து விடக்கூடிய சூழல் இன்று உள்ளது. இதுபோன்ற நிலையில் வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யாமல் இருவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள அவர்களுடைய குணநலன்கள் ஆய்வு செய்து பார்ப்பதற்கும் அவருடன் அன்பாக இருப்பார்களா என்பதை பார்த்து நடக்கக்கூடிய தசா புத்தி கோச்சார பலன் நன்றாக உள்ளதா ? என்பதை எல்லாம் ஆய்வு செய்து பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.


 பரிகாரம், கடவுள் வழிபாடு இவை அனைத்தும் தேவையான ஒன்றுதான்.இவைகளால் கிரக பலன்களை முற்றிலும் மாற்றி விட இயலாது.ஆனால் அதேநேரத்தில்  பிரச்சினையை தாங்கி கொண்டு  எதிர் நீச்சல் போட கூடிய மன வலிமையை மற்றும் பிரச்சினையின் வீரியத்தை குறைக்க உதவும்.


 உங்களுக்கு எந்த கிரகத்தால் பிரச்சினையோ அதற்கு உரிய கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் தனிமையாக அமர்ந்து அகம் நோக்கி பிரச்சினை தீர வேண்டும் என்று மனமாற உருகி உருகி வேண்டி வந்தால் அந்த பிரச்சினையின் தன்மையை பிரபஞ்சம் மாற்றி தரும்.இதை தவிர்த்து ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து தான் பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே :  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)




அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email: masterastroravi@gmail.com


......

சனி , செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு

 சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ‌.     ஒரு ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று நின்றாலோ அல்லது ஏதாவது ஒரு கிரகம் நின்றிருந்தால் உடனே அந்த பாவகம் அல்லது அந்த கிரகம் பாதிப்பு அடைந்தது விட்டது என எண்ணி பலன் அளித்து விடக்கூடாது.


 அந்த கிரகம் இடம் பெறும் வீட்டின் அதிபதி வலுப்பெற்று சுபர் கிரக பார்வை பெற்று இருந்தாலோ அல்லது அந்த கிரகத்திற்கு சுபர் பார்வை அல்லது குரு பார்வை பெற்று இருந்தாலும் அல்லது இயற்கை சுப கிரகங்கள் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த குறிப்பிட்ட ஸ்தானம் அல்லது கிரகம் பாதிப்பு அடைந்து விடாது.


  பாவ கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக இணையும் போது மட்டும் தான் கூடுதலான பாவ தன்மையை அடைந்து பாதிப்பை தருகிறது.ஆதிபத்திய பாதிப்பை அந்த தசை நடைபெறும் காலங்களிலும் மற்றும் காரக பலனை வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது.


 அந்த குறிப்பிட்ட பாவ கிரகங்களுக்கு இடையே பதிமூன்று பாகை வித்தியாசத்தில் இருப்பின் ஐம்பது சதவீதம் மட்டுமே பாதிப்பை தருகிறது.


 இருபத்து மூன்று பாகை வித்தியாசத்தில் இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.எனவே இணைந்து இருக்க கூடிய கிரகங்களை சிறிதளவு கூட பாதிப்பை அடைய விடுவதில்லை.


சனி , செவ்வாய் மற்றும் ராகு இணைவு பெற்று இருந்தால் அந்த தசை வரக்கூடிய காலங்களில் மட்டுமே அதிகமான பாதிப்பை தந்து விடுகிறது.


 புத்திர காரகன் குருவுடன் இந்த சனி, செவ்வாய் மற்றும் ராகு தொடர்பானது புத்திர பாக்கிய தோஷத்தை தருகிறது.

புத்திர தோஷம் தரும் பாதிப்பை உறுதி செய்ய ராசி மற்றும் லக்கனத்திற்கு ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதி, கோச்சார மற்றும் நடப்பு தசா ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து தோஷத்தின் சதவீதம் தெரிந்து கொள்ள வேண்டும்.


     செவ்வாய்,சனி மற்றும் ராகு ஆகிய பாவ கிரகங்கள் திருமண ஸ்தானமான லக்கனம் மற்றும் ராசிக்கு 1,2,7,8  ஆம் இடம்,அதன் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் உடன் பார்வை அல்லது சேர்க்கை வகையிலான தொடர்பு திருமண தடையை உருவாக்குகிறது.அதற்கு உரிய பாவ கிரக தசையில் திருமணம் கால தாமதம் ஆகி கொண்டு செல்கிறது.


 சகோதர ஸ்தானத்துடன் தொடர்பு சகோதரர் தோஷத்தை தருகிறது.சகோதர  உறவு நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள அந்த வீட்டின் அதிபதி,சகோதர காரகன் செவ்வாய் ஆகிய நிலைகளை ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரு வழிகளிலும் ஆய்வு செய்து பார்த்து தான் பலன் அளிக்க வேண்டும்.


தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி, செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு கொண்டு இருந்தால் உடனே தந்தை இறந்து விடுவார் என முடிவு கட்டி பலன் சொல்லி விட கூடாது.லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் தந்தை ஸ்தான அதிபதி மற்றும் தந்தையின் கார்கள் சூரியன் ஆகியவற்றின் நிலை மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்ட கிரகம் போன்றவற்றை ஆராய்ந்து நடக்கக்கூடிய தசையை பொறுத்தும் தான் ஜாதகரின் தந்தை நிலையினை பற்றி ஆய்வு செய்து பலன் அளிக்க வேண்டும்.


 பொதுவாக சூரியன் உடன் சனி சேர்க்கை அல்லது சம சப்தம பார்வை அதிலும் குறிப்பாக மேசத்தில் சூரியன் உச்சம், துலாத்தில் சனி உச்சம் பெற்ற நிலை ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை பார்த்தால்  அதன் தசா புத்தி நடந்தால் நிச்சயமாக தந்தை உயிருக்கு பங்கம் உண்டாகும்.


 சந்திரன் உடனான சனி செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு தாயின் குணத்தை பாதிக்கும். இதற்கு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒரு ஏழு வயது குழந்தையின் ஜாதகமே சாட்சி ஆகும்.


  சிம்மத்தில்  சந்திரன் அதாவது சிம்ம ராசி , விருச்சிகம் லக்கனம் மற்றும் பூரம் நட்சத்திரம்.


இங்கு தாய் பற்றி ஆய்வு செய்து பார்ப்போம். மாதுர் காரகன் மற்றும் மன நிலை காரகன் சந்திரன் ஆவார். சந்திரன் உடன் ராகு சேர்ந்த நிலையில் சந்திரன் பாவத்துவம்  அடைந்து உள்ளது. 

ராசிக்கு  ஏழாம் இடத்தில் சம சப்தமாக கேது உடன் இணைந்த செவ்வாய் பகவான். உள்ளார்.இந்த பாவ கிரக செவ்வாய் பார்வையானது சந்திரன் மற்றும் ராகு மீது  விழுந்து உள்ளது.


     விருச்சிகம் லக்கினத்தில் சனி மற்றும் புதன் சேர்க்கை.சனி தனது பத்தாவது பார்வையால் சிம்மத்தில்  உள்ள

சந்திரன் மற்றும் ராகு வின் மீது பார்வை.


   லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் ,கேது பாவத்தன்மை அடைந்து  உள்ளது. ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் கேது இணைவு சூட்சும வலு என்பதால் தாயின் உயிருக்கு பாதிப்பு இல்லை.


    மனநிலை மற்றும் தாய்க்கு காரகராக விளங்கக்கூடிய சந்திரன் உடன் ராகு ,சனி மற்றும் செவ்வாய் தொடர்பு கொள்ள  தாய் குணம் கெட்டவளாக தந்தையிடம் இருந்து குழந்தையை  பிரித்து  வாழ்கிறார்.  விவாகரத்து வழக்கு தொடுத்து உள்ளார்.


  நான்காம் இடம்,அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் சந்திரன் ஆகிய மூன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் தாயின் குணங்களும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனை நடக்கக்கூடிய நேரத்தில் அந்த குழந்தைக்கு சுக்கிர திசையில் சனி புத்தியும் நடப்பில் இருக்கிறது. 


   கோச்சார  அடிப்படையில் சிம்ம ராசிக்கு கண்டக  சனி வேறு நடப்பில்  உள்ளது. .அதனை தொடர்ந்து அஷ்டம சனி.


      இவ்வாறு பாவத்துவ  கிரக சேர்க்கை ,கோச்சார பலன் மற்றும் தசாபுத்தி  அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்ட  நிலையில் வரும் பொழுது தான் இது போன்ற பாதிப்பை தந்து விடுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email: masterastroravi@gmail.com

கிரகங்கள் காட்டும் மாறுபட்ட பலன்கள்

 கிரகங்கள் காட்டும்  மாறுபட்ட பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தில் என்ன கிரகம் நிற்கின்றது ? லக்கனாதிபதி யார்? அவர் எங்கு இருக்கிறார்.லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக உள்ளதா ?அல்லது இயற்கை பாவ கிரகமாக உள்ளதா?என்பதை எல்லாம் ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.


  ஒருவருக்கு யோக தசையே நடப்பில் இருந்தாலும் அந்த யோக தசையின் முழுமையான பலன்களை நீங்கள் அனுபவிக்க லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 லக்கனம் அல்லது லக்கனாதிபதி பாவ கிரக தொடர்பு பெற்ற நிலையில் நடப்பு தசையின் முழுமையான யோக பலன்களை முழுமையாக அனுபவிக்க இயலாது போய்விடும்.


    லக்கனத்தில் இயற்கை சுப கிரகம் இருந்தாலும் அல்லது லக்கனத்தை சுப கிரகம் பார்வை செய்தாலும் அல்லது லக்கனாதிபதியை  இயற்கை சுப கிரகம் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்புகளை பெற்று இருந்தாலும் லக்கன பாவகம் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது.


லக்கனம் மற்றும் அதன் அதிபதி வலுப்பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் நடப்பு தசை யோக தசையாக இருந்தால் அந்த யோகம் முழுவதும் அனுபவிக்க கூடிய தன்மையை பெற்றவராக ஜாதகர் விளங்குவார்.


அதுவே அவ யோக தசையாக இருந்தால் அந்த கஷ்டங்களை தாங்கி எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற கூடிய உறுதியான மனநிலையினை நிரம்ப பெற்றவராக இருப்பார்.


 உதாரணமாக  என்னிடம் ஜாதக பலன் பெற்ற ஒரு நபரின் ஜாதகத்தில்

கடக லக்னம் லக்கனாதிபதி சந்திரன் உச்சம் பெற்று லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருந்தாலும் லக்கனாதிபதி உடன் அதாவது ராசியில் ராகு நின்று துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் பெற்ற நிலையில் இருந்து தனது பத்தாவது பார்வையால் லக்கனத்தை பார்த்து பாவத்துவம் அடைய வைத்துள்ளது.


 இது போன்ற லக்கனம் மற்றும் அதன் அதிபதி பாவ தன்மை அடைந்த நிலையில் கடக லக்கனத்திற்கு வந்த ஆறு மற்றும் ஒன்பதாம் இட அதிபதி குரு பகவான் தசை லக்கன யோக தசையாக இருந்த பொழுதும் ஜாதகருக்கு கடனை தந்ததே தவிர ஜாதகருக்கு யோகத்தை தரவில்லை.


எனவே இவருக்கு யோக திசையே நடப்பில் இருந்தாலும் லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் அந்த யோகத்தை ஜாதகரால் அனுபவிக்க முடியவில்லை. எனவே ஒருவர் யோகத்தை அனுபவிக்க யோக தசை நடந்தால் மட்டும் போதாது லக்கனாதிபதி உடைய வலிமையும் அவசியம் ஆகும் .லக்கனாதிபதி வலிமை பெற்ற நிலையில் அவ யோக தசையே நடப்பில் வந்தாலும் அதனை தாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் போடக்கூடிய அமைப்பு சாதகரிடம் காணப்படும்.


  சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு ஒளி  கிரகங்களுக்கு சிம்மம் மற்றும் கடகம் ஆகிய ஒரே ஒரு வீட்டையே தன் சொந்த வீடாக உள்ளது.  ஏனைய கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், புதன்,குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் அனைத்தும் இரண்டு வீட்டை சொந்த வீடாக கொண்டுள்ளது. எனவே இரு ஆதிபத்தியங்களை ஒரு கிரகங்கள் பெற்றிருக்கிறது .லக்கினத்தை பொறுத்து இரு ஆதிபத்திய பெற்ற கிரகங்கள் அதன் தசையில் அந்த கிரகம் எந்த வீட்டோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பொறுத்து பலனை தருகிறது.


 உதாரணமாக மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் மூன்று மற்றும்  ஆறு ஆகிய இரண்டு அவ யோக ஆதிபத்தியத்தை பெற்ற கிரகமாக உள்ளது. மேலும் லக்னத்திற்கு பகைத்தன்மை பெற்ற கிரகமும் புதன் பகவான் ஆகும்.

இவ்வாறு இரண்டு ஆதிபத்தியமும் அவயோக அமைப்பில் உள்ள கிரகம் அதன் தசையில் நல்ல பலனை தர வேண்டும் என்றால் புதன் பகவான் ஆறுக்கு எட்டாம் இடமான லக்னத்தில் அமர்ந்து இருந்தால் அவை ஆறாம் இடத்து பலனை தருவதற்கு பதிலாக மூன்றாம் இடமான கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


கடக லக்கினத்திற்கு குரு பகவான் லக்கன யோகராகவும் உள்ளார். இவை ஆறு மற்றும் ஒன்பது இட ஆதிபத்தியத்தை பெற்றுள்ளது குருபகவான் ஆறாம் இடத்தில் இருப்பதை விட ஒன்பதாம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் அவை திரிகோண ஸ்தானத்தில்  இருந்து லக்னத்தை பார்க்கும் என்பதால் அந்த மாதிரியான அமைப்பில் உள்ள குரு பகவான் ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை கொடுப்பார். ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை நடக்கும் பொழுது பாக்கியஸ்தானாதிபதி  ஆன யோக பலனை தருவதற்கு பதிலாக அதிகமாக ஆறாம் இட பலன் ஆன வம்பு சண்டை ,வழக்கு ,கடன், பிணி  மற்றும் எதிர்ப்பு போன்ற பலனை அதிகமாக தரக்கூடும்.


     சில லக்கனங்களுக்கு  ஒரு கிரகமானது  கேந்திர மற்றும் கோண அதிபதிகளாக வரும். அவை லக்கின யோகராகவும் இருக்கும் .

இவ்வாறு கேந்திர, கோண அதிபதிகளாகவும் லக்கன யோகராகவும் உள்ள கிரகங்கள் அந்த ஸ்தானத்திற்கு கேந்திரங்களிலோ அல்லது கோணங்களிலோ இருந்தால் அவை அந்த ஜாதகருக்கு யோகத்தை மிகுந்து கொடுக்கும் .மாறாக கேந்திர கோண அதிபதிகள் எந்த ஸ்தானத்திற்கு மறைவிடத்தில் இருக்கிறதோ அந்த ஸ்தான ஆதிபத்திய பலனை அதன் தசையில் அதிகமாக தராது.


 அதாவது  கேந்திர மற்றும் கோண இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள்     இரு ஆதிபத்தியத்தில் எந்த ஸ்தானத்துக்கு மறைவிடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து அதன் பலன் தரும் மறைவிடத்தில் இருக்கிறதை விட கேந்திர குணங்கள் உள்ள இருக்கக்கூடிய கிரகங்கள் தான் மிகுந்த பலவானாகும்.அதன் தசையில் அந்த ஸ்தான ஆதிபத்திய பலனை ஜாதகருக்கு அதிகமாக கொடுக்கும்.


  உதாரணமாக மகர லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்ன யோகர் ஆவார் .இவர் ஐந்து  மற்றும் பத்து ஆகிய இரு கேந்திர மற்றும் கோண ஆதிபத்தம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளது.


மகர லக்னத்திற்கு சுக்கிர பகவான் மீன வீட்டில் உச்சம் பெற்று நின்ற நிலையில் பத்தாம் இடமான கேந்திர ஸ்தானத்திற்கு மறைவிடத்தில் நின்று திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு லாப ஸ்தானத்தில் நிற்கும் போது சுக்கிரன் பகவான் கேந்திர பலனை விட திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இட பலனை அதிகமாக கொடுப்பார்.


அதேநேரத்தில் சுக்கிரன் பகவான் பத்தாம் இடமான துலாத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அந்த சுக்கிர பகவான் ஐந்தாம் இடத்திற்கு மறைவிட ஸ்தலமான பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று நின்ற நிலையில் கோண ஸ்தானமான ஐந்தாம் இட பலனை விட கேந்திர ஸ்தனமான பத்தாம் இடத்தின் பலனையே அதிகமாக சாதகருக்கு கொடுப்பார்.


ஜோதிட நுணுக்கங்கள் தொடரும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே 

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

       



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்), கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்?


 தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தினை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம் .இவர் பிறப்பிலிருந்து தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்பதை தெளிவாக இந்த ஜாதகம் காட்டிக் கொடுத்து விடும்.


  இவ்வாறு தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்க கூடிய ஜாதகத்தில் ராசி, லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகிய மூன்றும் மிகவும் பலவீனமான நிலையில் பாவ தன்மை அடைந்து இருக்கும்.


 இவர்கள் ஜாதகத்தில் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்து காட்டக் கூடிய தசா புத்தி மிகவும் கஷ்டங்களை தரக்கூடிய நிலையில் இருக்கும்.


இது போன்ற அமைப்பை கொண்டுள்ள ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் பாவர் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


இவர்கள் ஜாதகத்தில் சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற மிகவும் கஷ்டமான சூழ்நிலையினை தரக்கூடிய கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை தனித்தனியாக அல்லது சேர்ந்த நிலையில் தொடர்பு கொண்டிருக்கும்.


உதாரணமாக பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகரின் ஜாதகத்தில் பிறந்ததிலாருந்து  தொடர்ந்து நடக்கும் தசா புக்தி அவ யோகத்தை தரக்கூடிய நிலையிலே இருக்கும்.


ஒரு உதாரண ஜாதகம்


கன்னி லக்கனம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்


2-ல் ராகு

3-ல் குரு

6-ல் சனி 

8-ல் சுக்கிரன் மற்றும் கேது

9-ல் சூரியன், சந்திரன் மற்றும் புதன்

12-ல் செவ்வாய் 


  தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து கெட்டு போனதுடன் தன அதிபதி சுக்கிரன் மேஷ வீட்டில் அதாவது எட்டில் மறைந்து கேது  பகவான் உடன் சேர்ந்து லக்கனத்திற்கு ஆறாம் வீட்டில்  கும்ப வீட்டில் இருந்து மூன்றாம் பார்வை பார்த்து கெட்டு விட்டது.


தன காரகன் குரு பகவான் லக்கனத்திற்கு மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் அமர்ந்து  சனியின் பத்தாம் பார்வை , சனியின் சம சப்தம பார்வையை பெற்ற செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை மற்றும் தேய்பிறை சந்திரன் அதாவது பாவரான அமாவாசை சந்திரன் பகவானின் சம சப்தம பார்வை ஆகிய முக்கூட்டு தாக்குதல் நிலையில் தன காரகன் குரு பகவான் மிகவும் பலவீனம் அடைந்து விட்டார்.ஆக மொத்தத்தில் தன ஸ்தானம்,தன அதிபதி மற்றும் தன காரகன் குரு ஆகிய மூன்றும் கெட்ட நிலையில் பிறந்ததிலிருந்து எவ்விதமான சாம்பாத்தியத்தை செய்யவில்லை.


லக்கன அதிபதி புதன் சூரியன் உடன் பின்னோக்கிய அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய நிலையை அடைந்து தேய்பிறை சந்திரன் உடன் சேர்க்கை இவை மட்டும் அல்லாமல் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரின் பார்வை பெற்று மிகவும் பங்கம் அடைந்த குரு பகவான் பார்வை ஆனது லக்கன அதிபதி மற்றும் ராசியையும் பாவத்துவம் அடைய செய்து விட்டது.ராசி அதிபதி சுக்கிரன் சனி பார்வை பெற்று பாவ நிலை அடைந்து விட்டது.


 இவர் சுக்கிரன் அணியை சேர்ந்த கன்னி லக்கனம் என்பதால் சுக்கிரன்,சனி மற்றும் புதன் தசை யோகம் தரும் திசையாக வரும்.சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு தசை அவ யோக தசையாக அமைகிறது.


இவருக்கு பிறப்பிலிருந்து தொடந்து நடைபெறும் தசைகளும் அவ யோக தசையாக அமைந்து உள்ளது.

ஜெனன கால சந்திரன் தசை  எதிர் அணியின் தசை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அதனை தொடர்ந்து கன்னி லக்கனத்திற்கு வர கூடாது என்று அழைக்கப்படும் செவ்வாய் தசை இவ்விரு தசைகளும் பதினான்கு ஆண்டுகள் ஆகும்.


இதனை தொடர்ந்து வந்த ராகு தசை சுக்கிரன் அணியை சேர்ந்த கன்னி லக்கனத்திற்கு யோகத்தை தரக்கூடிய தசை என்றாலும் ராகு பகவான் சுக்கிரன் வீட்டில் இருப்பதால் சுக்கிரனை போல செயல்படுவார்.ஆனால் இவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் எட்டில் கேது உடன் இணைந்து சனியின் பார்வை பெற்று பாவத்துவ நிலைக்கு தள்ளப்பட்டாதால் ராகு தசையிலும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.ராகு தசை முப்பத்திரண்டு வயது வரை நீடிக்கும்.


அடுத்து வரும் குரு தசை லக்கனத்திற்கு எதிர் அணி தசை மட்டும் அல்லாமல் சனி மற்றும் செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய மூவரின் பார்வை பெற்று மிகவும் பலவீனமான நிலையில் குரு தசை பதினாறு ஆண்டுகள் நன்றாக இருக்காது.ஆக குரு தசை நாற்பத்தி எட்டு வயது வரை நீடிக்கும்.


தொடர்ந்து வரும் சனி தசை லக்கன யோக தசையாக இருந்தும் ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்று    செவ்வாய் பகவானின் சம சப்தம பார்வையை பெற்று உள்ளது.எனவே நாற்பத்தி எட்டு வயதில் தொடங்கி பத்தொன்பது ஆண்டுகள் அறுபத்தி ஏழு வயது வரை இந்த கஷ்டமான நிலை நீடிக்கும்.


   இவ்வாறாக பிறப்பிலிருந்து தொடந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நிலை சிலர் ஊழ்வினை பயனால் இப்பிறப்பில் அனுபவிக்க கூடிய கர்ம வினை தொடர்கிறது.


 இவருக்கு திருமணம் வாழ்க்கை என எடுத்துக் கொண்டால் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது.


  இவரது ஜாதகத்தில் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய ஏழாம் இடத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து பார்த்தால் களத்திர ஸ்தான அதிபதி என்று அழைக்கக்கூடிய ஏழாம் இட அதிபதி குரு பகவான் ஆவார் .இவரே புத்திர ஸ்தான அதிபதியும் ஆவார் .


     இங்கு குரு பகவான் இரண்டு சனியின் பார்வையை பெற்றதற்கு நிகரான சனி மற்றும் தேய்பிறை சந்திரனுடைய பார்வையும் மற்றும் சனி பார்த்த செவ்வாயின் பார்வையையும் பெற்று மிகவும் பலவீன நிலையை அடைந்துள்ளார். ஏழாம் இடத்திற்கு காரகரும் தாம்பத்திய சுகத்தை ஜாதகருக்கு கொடுத்து அனுபவிக்க கூடிய சுக்கிர பகவானும் எட்டாம் இடத்தில் கேதுவோடு இணைந்து செவ்வாய் பார்த்த சனியின் பார்வையை பெற்றுள்ளார்.ஆக ஏழாம் இடத்தை தவிர ஏழாம் இட அதிபதி மற்றும் காரகன் ஆகிய இரண்டும் கெட்டு விட்டது.


குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு ,குடும்ப அதிபதி சுக்கிரனும் பாவத்துவம் அடைந்து விட்டார்.


மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அமர்ந்து சனியின் பார்வையை பெற்று கெட்டுவிட்டது .எட்டாம் இட அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் பார்வையால் பாவத்துவம் அடைந்து விட்டது.


இதே போல ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது ராசி அதிபதி சுக்கிரன் கெட்டுவிட்டார் .சந்திரனோ தேய்பிறை சந்திரன் ஆவார் .ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி, செவ்வாயின் பார்வை ராசிக்கு எட்டாம் இட அதிபதி குருவும் சனி செவ்வாயின் பார்வையில் கெட்டுவிட்டார்.


இவ்வாறாக லக்கனம் மற்றும் ராசிக்கு திருமண ஸ்தானமான 1 , 2 ,7 ,8 ஆகிய இடங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.


தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரண்டும் பாவ தன்மையை அடைந்து இருப்பதால் மனைவியாலும்,பிள்ளைகளாலும் யோகத்தை அனுபவிக்க இயலாத நிலையில் உள்ளது.


ஆனால் இவர் சுக்கிரன் மீது சனி பார்வை மற்றும் சனி மற்றும் செவ்வாய் ஒன்றை ஒன்று சமசப்தமாக பார்த்து கொள்ளும் தன்மை உடையவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பை பெற விட்டாலும் பெண் காம சுகத்தை பெற்று இருப்பார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com.