Monday, 5 January 2026

கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்

 கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் கேது பகவானை ஞான காரகன் என்று அழைக்கிறோம்.செம் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. .பாம்பு தலையும்,மனித உடலும் கொண்ட ஒரு கிரகம் கேது பகவான் ஆகும்.


 அஸ்வினி,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக கேது பகவான் திகழ்கிறது.கேது பகவான் தசை காலம் ஏழு ஆண்டுகள் ஆகும்.


கேது பகவான் சிம்மம் , விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று வீடுகளில் கேது பகவான் மிகுந்த யோகத்தை தரும் பலன்களை அள்ளித் தருகிறது.‍‍


கேது பகவான் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி மற்றும் செவ்வாய் உடன் தனித்தனியாக இணையும் போது சூட்சும வலுவை ஜாதகருக்கு கொடுக்கிறது.


கேது பகவான் உடன் இணைந்த குரு பகவான் கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தருகிறது.


    கேது பகவான் உடன் குரு மற்றும் சனி பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆன்மீக வழியில் ஈடுபாடு அதிகமாக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.


கேது பகவான் சனி பகவான் உடன் இணைந்து 5,9 மற்றும் 12 ஆம் இடங்களில் நின்று குரு பகவான் பார்வையினை பெற்ற நிலையில் ஜாதகருக்கு சித்தர்கள் வழி பாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.


கேது பகவான் அதிக சுபத்துவமாக தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் குறி சொல்லும் பூசாரி ஆக இருப்பார்.கோயில் ஸ்தலங்களில் கடை வைத்து நடத்துபவராகவும், கோவில் வழிபாட்டு பொருட்களை விற்பனை செய்பவராக இருப்பார்.


 கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலன்களை அதிகரித்து நல்ல பலனை செய்ய வைப்பார்.ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் பாவ தன்மையை தரும் கிரகமாக செயல்படவில்லை.


 கேது பகவான் இயற்கை சுப மற்றும் பாவ கிரகங்கள் ஆகிய இரு வகையான கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் நல்ல பலனையே ஜாதகருக்கு அள்ளிக் கொடுப்பார்.


 கேது பகவான் திருமண ஸ்தானமான லக்கனம் என்று அழைக்கக்கூடிய ஒன்றாம் இடம், குடும்ப ஸாதானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில் நின்றால் நாக் தோஷம் என்னும் களத்திர தோஷத்தை தந்து திருமண தடையை உண்டு பண்ணுகிறார்.


புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தை தருகிறார்.


கேது பகவானால் உண்டாகும் தோஷத்தை போக்க கீழப்பெரும்பள்ளம் சென்று எம கண்டம் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வெள்ளியில் நாகபடம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட கேது பகவான் தரும் தோஷம் நீங்கி நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும் தன்மையை அடைகிறது.


 கேது பகவான் ஒரு நிழல் கிரகம் ஆகும்.பருப்பொருள் இல்லாத நிழல் கிரகம் ஆகும்.எனவே இவற்றிற்கு ஸ்தான வலிமை கிடையாது.பார்வை கிடையாது.சொந்த வீடு கிடையாது.திக் பலம் இல்லை.வாரத்தின் ஏழு நாட்களில் இவற்றிற்கு இடம் கிடையாது.


 எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகர இவை பின்னோக்கி நகரும் தன்மை உடையதால் வக்கிரம் கிடையாது.அஸ்தமன தோஷம் கிடையாது.


கேது பகவான் சூரியன் உடன் இணைய ஆன்மீக உலகில் தலைவராக ஆகும் தன்மை உண்டு.குரு பகவான் உடன் இணைய கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம்,கேது சுக்கிரன் உடைய இல்லற வாழ்வில் சிறக்க உதவுகிறது.புதன் பகவான் உடன் கேது இணைய வித்தையில் சாதுர்யம், சந்திரன் உடன் கேது இணைய முன்னாலே யூகித்து அறியும் சக்தி, செவ்வாய் உடன் கேது இணைவு வீரத்தை சரியான வழியில் பயன்படுத்தும் தன்மை போன்றவை உண்டாகும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


For another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: