கிரகங்கள் படுத்தும் பாடு-( 65 )
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையப்பா"
"கத்தும் குயிலோசை என் காதில் விழ வேண்டும்"
----கவிஞர்பாரதியார்.
இசைஞானம் என்பது எல்லோருக்கும் வருவதில்லை.அது ஒரு தெய்வீக கலை ஆகும்.இந்த ஞானத்தை பெற்றவர்கள் தெய்வ அம்சம் நிரம்பியவர்கள் எனலாம்.
இசைஞானம் பெறுவதற்குரிய பொதுவான கிரகவிதிகள்:-
1) இசைஞானம் பெறுவதற்கு அவரது சாதக கட்டங்களில் இசைக்கு காரகனான #சந்திரபகவானும்,கலைக்கு அதிபதியான #சுக்கிரபகவானும் பலம் அடைந்திருக்க வேண்டும்.
2) இசைஞானத்தை அளிக்ககூடிய #சரஸ்வதியோகம் மற்றும் #புதனாதிக்கயோகம் என்று சொல்லக்கூடிய சூரியனும்,புதனும் இணைந்து இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ பலம்பெற்றிருக்கவேண்டும்.
3)குரு பகவான் பலம்பெற்று சுப பார்வை பார்க்கவேண்டும்.
இதுபோன்ற பலம்பெற்றுள்ள மூன்று இசை மேதைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
முதலில் கர்நாடக இசை உலகில் சாம்பவனாக திகழ்ந்த "இசை உலகின் முடிசூடா மன்னன்"தியாகராஜ பாகவதர்" அவர்களின் சாதக நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.அவருடைய சாதக கட்டத்தில் இசையில் சாதித்தற்கு உகந்த கிரகங்கள் பலம் பெற்று அமைந்தனவா ?என பார்ப்போம்.
தியாகராஜ பாகவதர் சாதக கிரகநிலை விபரம்
கடக லக்கனம்
கடக ராசி
1) ல்-சந்திரன்,கேது
2)-ல் குரு
7)ல்-ராகு
10)ல் சூரியன்,புதன்
11)ல்-சுக்கிரன்,சனி
12)-ல் செவ்வாய்
இசைஞானம் தந்த பலன்களை மட்டும் ஆராய்வோம்.
இவரது சாதக கட்டத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக இருந்து லக்கனத்திலே இசைக்கு காரகனான சந்திரபகவான் ஆட்சி பெற்று ஞானக்காரகன் கேது பகவானோடு இணைந்திருப்பது இசைஞானத்தோடு தெய்வ அணுக்கிரகமும் சேர்ந்திருந்து.பொதுவாக கடக கேதுவும்,மகர ராகுவும் ஆன்மீகநிலையின் உச்சநிலைகள் தரும் என்பதால் தனது இசைஞானத்தால் கடவுள்மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
மேலும் வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்து வாக்காதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி மற்றும் புகழை தரக்கூடிய மூன்றாமிடம் மற்றும் விரயஸ்தானதி புதனுடன் (வித்தைக்காரகன்) இணைந்து லக்கனத்திற்கு பத்தில் அமர்ந்து திக் பலம் பெற்றுள்ளார்.இவை இசை அறிவை தரக்கூடிய "புத ஆதித்யயோகம் மற்றும் சரஸ்வதியோகமாகும்.இந்த இணைவிற்கு குருவின் ஒன்பதாம் பார்வையையும் பெற்று முழுப்பலம் பெற்றதால்தான் பிறவியிலே இசைஞானத்தோடு பிறந்துள்ளார்.
மேலும் இந்த அமைப்பு(சூரி-புதன் இணைவு)வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு திரிகோணஸ்தானமான ஒன்பதாம் இடம் ஆகும்.
இத்துடன் சினிமா மற்றும் கலைக்காரகனான சுக்கிரன் லாபஸ்தானத்தில் ஆட்சியும் பெற்று இருப்பதால் சினிமா உலகிலும் பல சாதனைகளை சாதிக்கமுடிந்தது.
*************************************
அடுத்தப்படியாக இசை என்பது மேல்தட்டு மக்களுக்கு உரிய ஒன்று என்பதை உடைத்தறிந்தவர்.கிராமத்துவாசிகளையும் ,கிராமத்து பக்கம் தமிழக ரசிகர்களை திரைதிருப்பிவிட்டவர்.கலைஞர் முதல்வராக இருந்தபோது "இசைஞானி"இவருக்கு வழங்கி கொளரவித்தார்.
இவர் இசைஞானியானதற்கான கிரகநிலை விபரமும் விளக்கமும்
ரிஷபலக்கனம் மற்றும் ரிஷபராசி
1)-ல் சூரியன்,புதன்,சந்திரன்,சனி
3)-ல் குரு,சுக்கிரன் மற்றும் ராகு
9)ல் கேது
11)-ல் செவ்வாய்
இவருடைய சாதகத்தில் பாருங்கள் இசைக்காரகனான சந்திரன் மூன்றாமிட ஆதிபத்தியம் பெற்று லக்கனத்தில் உச்சம் பெற்றும் மற்றும் லக்கனாதிபதியான சுக்கிரன் மூன்றில் பரிவர்தனை பெற்று பலம் பெற்றிருப்பதை கவனியுங்கள்..மேலும் கீர்த்திஸ்தானத்தில் குருபகவானும் உச்சம்பெற்று தனது லாபஸ்தானத்தை பார்த்து தான் சார்ந்த தொழில் பேரும்புகழும் அடைய காரணமாகியது.
மேலும் குரு உச்சம்பெற்று ஞானக்காரகன் கேதுவை பார்த்தது "ஜனனி ஜனனி ஜகம்நி "போன்ற தெய்வீக பாடல்களை தானே இசையமைத்து பாடவைத்தது.
தொழில்காரகன் சனிபகவான் லக்கனத்தில் நின்று தன்ஸ்தானத்தை பார்ப்பது தொழிலில் சிறந்துவிளங்கவும் காரணமாகிறது.இசைக்கு பல கருவிகளை பயன்படுத்தும் யோகத்தை வழங்கியது.
மேலும் லக்கனத்தில் சூரியனும்,புதனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தையும் பெற்றுள்ளது.
***********************/*******/**
தமிழக திரைப்படத்தை உலகமே வியந்து பார்க்கவைத்தவர். தமிழ்திரைப்படத்தை தனது நவீன தொழில்நுட்ப திறமையால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியதில் இவரை விஞ்சியவர் யாருமில்லை.
ஆஸ்கார் அவாடு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.இவர் ஒரே படத்தின் மூலம் இரு ஆஸ்கார்விருதை தட்டியவர்.ஆஸ்கார் மேடையில் ஏறிய முதல்தமிழன்.அங்கு "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் பேசி தமிழரின் புகழை அகிலம் உணர செய்த திருவாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது சாதகநிலையை ஆராய்வோம்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சாதகம்
ரிஷப லக்கனம் மற்றும் ரிஷபராசி
1)-ல் சந்திரன்
3)ல்-குரு
4)-ல் செவ்வாய்
6)-ல் கேது
10)-ல் சூரியன்,புதன்
11)-ல் சுக்கிரன்,சனி
12)-ல் ராகு
இவருடைய சாதகத்தில் லக்கனாதிபதி கலைக்காரகன் சுக்கிரன் உச்சம் பெற்று லாபஸ்தானமேறி அதில் கணிப்பொறிகாரகன் சனி பகவானும் சேர்ந்து குரு மனையேறி உச்ச குருவின் ஒன்பதாம் பார்வை பெற்றதால் கனிப்பொறியை இசைக்குள் புகுத்தி பல புதிய சாதனை புரிந்துள்ளார்.
மேலும் மூன்றுக்குரியவரும் இசைக்காரகருமான சந்திரபகவான் லக்கனத்தில் உச்சம் பெற்று அந்த வீட்டு அதிபர் சுக்கிரனும் உச்சம் பெற்று மேலும் சுக்கிரன் உச்சம் பெற்ற வீட்டின் அதிபர் குருபகவானும் உச்சம்பெறுவது "டிரிபிள் டெபாஸிட்டர்"முறையில் பலம்பெற்றதால்தான் இளவயதிலே அகில உலகமும் வியக்கும் வகையில் இசையும்,பாடலும் பாடி ஆஸ்கர்நாயகனாக சாதனையாளக கிரகங்கள் மாற்றியிருக்கிறது என ஆய்ந்து விளக்குகினேன்.
இவரது சாதகத்திலும் பாருங்கள் "சூரியனும்,புதனும் "இணைந்து #புதயாதிக்கயோகமான சரஸ்வதியகமானது தொழில்ஸ்தானமான பத்தில் அமர்ந்து திக்பலம் பெற்றும் உள்ளார்.
மேற்கண்ட மூவரும் இசையில் சாம்பவனாக திகழ்வதற்கு உகந்த கிரகநிலைகள் ஆரம்பத்தில் கூறிய பொது மற்றும் சிறப்பு விதிகளோடு ஒத்திருக்கிறது என்பதை எனது சோதிட அனுபவத்தோடு ஆராய்சி செய்து விளக்கியிருக்கிறேன்.எல்லாம் பரம்பொருளின் சித்தம் .நான் என்பது ஒரு கருவியே.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
தங்களது சாதகங்களை ஆய்வுசெய்து உங்களது சாதகத்தில் எவை பலம் உடைய கிரகங்கள் மற்றும் பலவீனமான கிரகங்கள் அவற்றால் உண்டாகும் பலன்களை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவலை எனது வாட்ஸ்அப் எண்ணான
97 151 89 647 க்கு தெரிவிக்கவும்.
97 151 89 647 க்கு தெரிவிக்கவும்.
Online Astro consult conduct my cell
செல்: 97 151 89 647
செல்: 740 257 08 99
My Email
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
******************************