"கோள்களும் அவற்றின் தன்மைகளும்"
செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு
கோள் (planet ) என்ற சொல்லுக்கு வடமொழியில் க்ரஹம் என்று பெயர்.க்ரஹனம் என்றால் பிடித்தல் என்று பொருளாகும்.உதாரணமாக சூரிய க்ரஹனம் என்றால் சூரியன் பிடிபடுதல் என்று பொருள் படும்.இவ்வாறே பாணிக்ரஹனம் என்று திருமணத்திற்குப் பெயர்.பாணிக்ரஹனம் என்பதற்கு கையைப் பிடித்தல் என்று பெயர் ஆகும்.
ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்கள் அல்லது தீயபலன்கள் துய்க்க செய்வதற்காக இவைகள் அவர்களை பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி க்ரஹனம் என்று பெயரிட்டனர்.இதனைதான் சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை என்ற பதத்தினை இளங்கோவடிகள் பயன்படுத்தினார்.அதாவது
"ஊழ்வினை வந்து உறுத்துவந்தூட்டும்" ".என்கிறார். அதாவது முற் பிறப்பில் செய்த நன்மை,தீமைகளுக்கு ஏற்ப இப்பிறப்பிில் பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.
ஒரு சிலர் " எவ்வளவு அநியாயம் ,அக்கிரமம் செய்கிறான் ஆனால் அவன் நல்லாதானே இருக்கிறான் .இந்த லோகம் கெட்டு போய்டுச்சு ,கெட்டவர்களுக்குதான் காலமாய் போச்சு " என புலம்ப கூடும் இது அவனது ஒரு பகுதியை மட்டுமே பார்த்து முழு முடிவாக எடுக்க கூடாது.அவன் பல கெடுதல் விளைவித்தும் நன்றாக இருப்பதற்கு முற்பிறப்பில் செய்த நல்வினையின் தெடர்ச்சியே ஆகும்.இப்பிறப்பின் பாவ பலன் அவனை அடுத்த பிறவிக்கு இட்டு சென்று சமநிலை செய்துவிடும்.
இதுபோன்ற வாழ்வின் கிரக தத்துவங்களை அறியாமல் முடியாமல் முடிவு செய்வது "குருடன் தும்பிக்கையை மட்டும் பிடித்து பார்த்துவிட்டு யாணை உருண்டையான குச்சி போன்றது " என முடிவு செய்வது போல் ஆகும்.
வாழ்க்கை சுழற்சியி்யில் வாழ்வின் ஒரு பகுதியினை கொண்டு முழு வாழ்வினை தீர்மாணிக்க இயலாது.
இந்திய சோதிடவியலில் முதலில் ஏழுகோள்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த ஏழு கோள்களுடன் பிற்காலத்தில் நிழற்கிரகங்களான ராகு,கேதுவினையும் சேர்த்து ஒன்பது கோள்களாக கொண்டு சோதிட பலன் கூறத் தலைப்பட்டனர்.இதனையே வடமொழியில் "நவகிரஹம்" என்று போற்றுகின்றனர்.
இராமாயணத்தில் இராமன் பிறந்ததை கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமன் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும்,குருபகவான் சந்திரன் உடன் சேர்ந்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.அதனை கருத்திலர கொண்டு ,சைத்ர மாதம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் பிறந்து உள்ளார் என்பதன் வாயிலாக பார்க்கும்போது சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் என முடிவில் எடுத்துக்கொண்டு ஒரு கிரகம் உச்சத்தினை எளிதாக கண்டறிய முடிந்தது.
சூரியன் உடனும் அல்லது முன்பின் ஒரு ராசிக்குள் புதன் பகவானும் ,சுக்கிரன் பகவான் ஆனவர் சூரியன் உடனும் அல்லது முன்,பின் இரண்டு ராசிகள் தள்ளி சஞ்சாரம் செய்வார் என்ற கிரக விதியின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்பொழுது புதன் பகவான் கன்னியில்தான் உச்சம் என்ற வகையில் கிரக விதிப்படி புதன்பகவான் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் சுக்கிரன் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு உண்டு.
இராமன் பிறந்தது புணர்பூசம் நட்சத்திரம் என்பதால் இராமன் உடைய ராசியானது மிதுனம் அல்லது கடகமாகத்தான் இருக்க வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது சந்திரன் பகவான் ரிஷபத்தில்தான் உச்சம் அடைகிறது.ஆதலால் சந்திரன் பகவானும் உச்சமடைந்திருக்க வாய்ப்பு இல்லை.
இராமாயண காலத்தில் நிழற்கிரகங்களை தவிர்த்து ஏனைய ஏழு கோள்கள் இருந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளன்படுகிறது.ஆதலால் புதன் மற்றும் சந்திரன் பகவானை தவிர்த்து ஏனைய ஐந்து கோள்களான சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி பகவான் உச்சமடைந்து இருக்கமுடியும் என யூகிக்க இயல்கிறது.
இராமயண காலத்தில் மேற்கண்ட ஏழு கோள்கள் மட்டுமே வழக்கத்தில் இருந்ததாக கருதப்படுகிறது.ஆனால் அதேநேரத்தில் சுந்தர காண்டத்தில் பலவிடங்களில் " இராகுவின் வாயினின்று வெளிப்பட்ட சந்திரன்போல் " என்ற உவமை காணப்படுவதால் நிழல் கிரகங்களான ராகு,கேதுவும் இருந்திருக்க வேண்டும்.
கோள்களின் அமைப்பு
வளிமண்டலத்தில் சூரியன் மையமாகவும்,சூரியனை சுற்றி பிற கோள்களும் சுழன்று வருகின்றன.புதன் பகவான் முதல் சுற்று வட்ட பாதையிலும்,சுக்கிரன் இரண்டாவது சுற்று பாதையிலும்,நாம் வசிக்கும் பூமியானது மூன்றாவது வட்ட பாதையிலும் சுழன்று வருகின்றன.சந்திரன் பகவான் பூமியினை சுற்றும் துணைக்கோள் ஆகும்.
செவ்வாய் நான்காவது சுற்று பாதையிலும், குரு ஐந்தாவது சுற்று வட்ட பாதையிலும், சனி ஆறாவது சுற்று வட்ட பாதையிலும் சூரியனை சுற்றி வருகின்றன.
சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் புதன் மற்றும் சுக்கிரன் சுற்று வட்ட பாதை அமைந்துள்ளதால் இவற்றை உள்வட்ட கோள்கள் என்றும்,செவ்வாய,குரு, சனி ஆகியவை சூரியன் வட்ட பாதைக்கு பின் சுற்றி வருவதால் இவற்றை "வெளிவட்ட கோள்கள் என்று கூறப்படுகிறது.
நிழற்கிரகங்களான இராகு,கேதுக்களுக்கு உருவம் கிடையாது.சோதிடவியலில் பூமியை மையமாக கொண்டு பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கு ஏற்படும் சுப-அசுப பலன்களை ஆராய்து கூறுவதால் ஒன்பது கோள்களும் பணிரெண்டு இராசிகளில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
சூரியனின் தன்மைகள்;-
ஒன்பது கோள்களுள் முதன்மையானவர் சூரியன் ஆவார். அனைத்து கோள்களும் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றன.
சூரியன் ஆத்மாகாரகன்,ஆண்கிரகம்,நெருப்பு கோள்,அரசாங்க காரகர்,தந்தை ,தன்னம்பிக்கை,புகழ் மற்றும் கொளரவத்திற்கு காரகர் ஆவார்.
சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,30,00,000 மைல்கள் தூரத்தில் உள்ளது.இதன் குறுக்களவு சுமார் 8,70,000 மைல்கள் ஆகும். இதன் கன அளவு பூமியைப்போல 13,00,000 மடங்குகளாகும்.
சூரியன் ஒரு ராசியினை கடக்க ஒரு மாதம் கால அளவாகிறது.பன்னிரெண்டு ராசிகளையும் 365 நாள் ,15 நாழிகை,32 வினாடிகளில் சுற்றி வருகிறது.
1) காரகம் ; பிதா
2)ஷேத்திரம் ;-ஆடுதுறை
3) தேவதை; சிவன்
4)ஆட்சி: சிம்மம்
5)தசா ஆண்டுகள் ; ஆறு ஆண்டுகள்
6) பிஷ்பம் ;-செந்தாமரை
7)தானியம்;-கோதுமை
8)இரத்தினம்;-மாணிக்கம்
9) உலோகம்: தாமிரம்
10)நிறம் :-சிவப்பு
11)வஸ்திரம்; -சிவப்பு
12)குணம்:-தாமஸம்
13)சுபாவம்;-குரூரர்
14)சுவை:-காரம்
15சமித்து;-எருக்கு
16)வாகனம்;-தேர்,மயில்
17)வடிவம் ;-சமன்
18) திக்கு!-நடு
19)அங்கம்;- மார்பு
20)தாது;-எலும்பு
21)பிணி;-பித்தம்
22)பஞ்சபூதம்;-நெருப்பு
23)பாலினம்;- ஆண்
24)ஆசனம்;-வட்டம்
25)இராசியில் சஞ்சரிக்கும்
காலம் ;- ஒரு மாதம்.
26)உபகிரகம் ;-காலன்
27)தேசம் ;-கலிங்கம்
28) பிற பெயர்கள்;-ரவி,ஆதித்தன்,பரிதி,பானு,தினகரன்,கதிரவன்,மார்த்தான்டன்.
29)பார்வை;-ஏழாம் பார்வை
30) நட்சத்திரங்கள் ; - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்.
தொடரும்....
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஷ்அப் 97 151 89 647
செல் 740 257 08 99 97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc, MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனஐ மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
MY EMAIL
masterastroravi@gmail.com
MY BLOG.SEARCH IT
Astroravichanransevvai.blogspot.com
astrosmartnotes.blogspot.com
...........................................................................................................................................................