Wednesday 28 November 2018

கோள்களும் அவற்றின் தன்மைகளும்

"கோள்களும் அவற்றின் தன்மைகளும்"


                      

                         செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

                                       கிரகங்கள் படுத்தும் பாடு

          கோள் (planet ) என்ற சொல்லுக்கு வடமொழியில் க்ரஹம் என்று பெயர்.க்ரஹனம் என்றால் பிடித்தல் என்று பொருளாகும்.உதாரணமாக சூரிய க்ரஹனம் என்றால் சூரியன் பிடிபடுதல் என்று பொருள் படும்.இவ்வாறே பாணிக்ரஹனம் என்று திருமணத்திற்குப் பெயர்.பாணிக்ரஹனம் என்பதற்கு கையைப் பிடித்தல் என்று பெயர் ஆகும்.

  ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்கள் அல்லது தீயபலன்கள் துய்க்க செய்வதற்காக இவைகள் அவர்களை பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி க்ரஹனம் என்று பெயரிட்டனர்.இதனைதான் சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை என்ற பதத்தினை இளங்கோவடிகள் பயன்படுத்தினார்.அதாவது

 "ஊழ்வினை வந்து உறுத்துவந்தூட்டும்" ".என்கிறார். அதாவது முற் பிறப்பில் செய்த  நன்மை,தீமைகளுக்கு ஏற்ப இப்பிறப்பிில் பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.

  ஒரு சிலர் " எவ்வளவு அநியாயம் ,அக்கிரமம் செய்கிறான்  ஆனால் அவன் நல்லாதானே  இருக்கிறான் .இந்த லோகம் கெட்டு போய்டுச்சு ,கெட்டவர்களுக்குதான் காலமாய் போச்சு " என புலம்ப கூடும் இது அவனது ஒரு பகுதியை மட்டுமே பார்த்து முழு முடிவாக எடுக்க கூடாது.அவன் பல கெடுதல் விளைவித்தும் நன்றாக இருப்பதற்கு முற்பிறப்பில் செய்த நல்வினையின் தெடர்ச்சியே ஆகும்.இப்பிறப்பின் பாவ பலன் அவனை அடுத்த பிறவிக்கு இட்டு சென்று சமநிலை செய்துவிடும்.


இதுபோன்ற வாழ்வின் கிரக தத்துவங்களை அறியாமல் முடியாமல் முடிவு செய்வது "குருடன் தும்பிக்கையை மட்டும் பிடித்து பார்த்துவிட்டு யாணை உருண்டையான குச்சி போன்றது " என முடிவு செய்வது போல் ஆகும்.


 வாழ்க்கை சுழற்சியி்யில் வாழ்வின்  ஒரு பகுதியினை கொண்டு முழு வாழ்வினை தீர்மாணிக்க இயலாது.


                      


                              இந்திய சோதிடவியலில் முதலில் ஏழுகோள்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த ஏழு கோள்களுடன் பிற்காலத்தில் நிழற்கிரகங்களான ராகு,கேதுவினையும் சேர்த்து ஒன்பது கோள்களாக கொண்டு சோதிட பலன் கூறத் தலைப்பட்டனர்.இதனையே வடமொழியில் "நவகிரஹம்" என்று போற்றுகின்றனர்.

                             இராமாயணத்தில் இராமன் பிறந்ததை கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமன் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும்,குருபகவான் சந்திரன் உடன் சேர்ந்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.அதனை கருத்திலர கொண்டு ,சைத்ர மாதம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் பிறந்து உள்ளார் என்பதன் வாயிலாக பார்க்கும்போது சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் என முடிவில் எடுத்துக்கொண்டு ஒரு கிரகம் உச்சத்தினை எளிதாக கண்டறிய முடிந்தது.


                         சூரியன் உடனும் அல்லது முன்பின் ஒரு ராசிக்குள் புதன் பகவானும் ,சுக்கிரன் பகவான் ஆனவர் சூரியன் உடனும் அல்லது முன்,பின் இரண்டு ராசிகள் தள்ளி சஞ்சாரம் செய்வார் என்ற கிரக விதியின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்பொழுது புதன் பகவான் கன்னியில்தான் உச்சம் என்ற வகையில் கிரக விதிப்படி புதன்பகவான் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் சுக்கிரன் உச்சம் அடைந்திருக்க வாய்ப்பு உண்டு.


  இராமன் பிறந்தது புணர்பூசம் நட்சத்திரம் என்பதால் இராமன் உடைய ராசியானது மிதுனம் அல்லது கடகமாகத்தான் இருக்க வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது சந்திரன் பகவான் ரிஷபத்தில்தான் உச்சம் அடைகிறது.ஆதலால் சந்திரன் பகவானும் உச்சமடைந்திருக்க வாய்ப்பு இல்லை.


  இராமாயண காலத்தில் நிழற்கிரகங்களை தவிர்த்து ஏனைய ஏழு கோள்கள் இருந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளன்படுகிறது.ஆதலால் புதன் மற்றும் சந்திரன் பகவானை தவிர்த்து ஏனைய ஐந்து கோள்களான சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி பகவான் உச்சமடைந்து இருக்கமுடியும் என யூகிக்க இயல்கிறது.


                           

                இராமயண காலத்தில் மேற்கண்ட ஏழு கோள்கள் மட்டுமே வழக்கத்தில் இருந்ததாக கருதப்படுகிறது.ஆனால் அதேநேரத்தில் சுந்தர காண்டத்தில் பலவிடங்களில் " இராகுவின் வாயினின்று வெளிப்பட்ட சந்திரன்போல் " என்ற உவமை காணப்படுவதால் நிழல் கிரகங்களான ராகு,கேதுவும் இருந்திருக்க வேண்டும்.



                                 கோள்களின் அமைப்பு


                           வளிமண்டலத்தில் சூரியன் மையமாகவும்,சூரியனை சுற்றி பிற கோள்களும் சுழன்று வருகின்றன.புதன் பகவான் முதல் சுற்று வட்ட பாதையிலும்,சுக்கிரன் இரண்டாவது சுற்று பாதையிலும்,நாம் வசிக்கும் பூமியானது மூன்றாவது வட்ட பாதையிலும் சுழன்று வருகின்றன.சந்திரன் பகவான் பூமியினை சுற்றும் துணைக்கோள் ஆகும்.

                        செவ்வாய் நான்காவது சுற்று பாதையிலும், குரு ஐந்தாவது சுற்று வட்ட பாதையிலும், சனி ஆறாவது சுற்று வட்ட பாதையிலும் சூரியனை சுற்றி வருகின்றன.

                         சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் புதன் மற்றும் சுக்கிரன் சுற்று வட்ட பாதை அமைந்துள்ளதால் இவற்றை உள்வட்ட கோள்கள் என்றும்,செவ்வாய,குரு, சனி ஆகியவை சூரியன் வட்ட பாதைக்கு பின் சுற்றி வருவதால்  இவற்றை "வெளிவட்ட கோள்கள் என்று கூறப்படுகிறது.

                    நிழற்கிரகங்களான இராகு,கேதுக்களுக்கு உருவம் கிடையாது.சோதிடவியலில் பூமியை மையமாக கொண்டு பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கு ஏற்படும் சுப-அசுப பலன்களை ஆராய்து கூறுவதால் ஒன்பது கோள்களும் பணிரெண்டு இராசிகளில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

                         


                             சூரியனின் தன்மைகள்;-


                          ஒன்பது கோள்களுள் முதன்மையானவர் சூரியன் ஆவார். அனைத்து கோள்களும் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றன.

                        சூரியன் ஆத்மாகாரகன்,ஆண்கிரகம்,நெருப்பு கோள்,அரசாங்க காரகர்,தந்தை ,தன்னம்பிக்கை,புகழ் மற்றும் கொளரவத்திற்கு காரகர் ஆவார்.


                       சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,30,00,000 மைல்கள் தூரத்தில் உள்ளது.இதன் குறுக்களவு சுமார் 8,70,000 மைல்கள் ஆகும். இதன் கன அளவு பூமியைப்போல 13,00,000 மடங்குகளாகும்.


                     சூரியன் ஒரு ராசியினை கடக்க ஒரு மாதம் கால அளவாகிறது.பன்னிரெண்டு ராசிகளையும் 365 நாள் ,15 நாழிகை,32 வினாடிகளில் சுற்றி வருகிறது.



1) காரகம் ; பிதா



2)ஷேத்திரம் ;-ஆடுதுறை



3) தேவதை; சிவன்



4)ஆட்சி: சிம்மம்



5)தசா ஆண்டுகள் ; ஆறு ஆண்டுகள்



6) பிஷ்பம் ;-செந்தாமரை



7)தானியம்;-கோதுமை



8)இரத்தினம்;-மாணிக்கம்



9) உலோகம்: தாமிரம்



10)நிறம் :-சிவப்பு



11)வஸ்திரம்; -சிவப்பு



12)குணம்:-தாமஸம்



13)சுபாவம்;-குரூரர்



14)சுவை:-காரம்



15சமித்து;-எருக்கு



16)வாகனம்;-தேர்,மயில்



17)வடிவம் ;-சமன்



18) திக்கு!-நடு



19)அங்கம்;- மார்பு



20)தாது;-எலும்பு



21)பிணி;-பித்தம்



22)பஞ்சபூதம்;-நெருப்பு



23)பாலினம்;- ஆண்



24)ஆசனம்;-வட்டம்



25)இராசியில் சஞ்சரிக்கும் 

காலம் ;- ஒரு மாதம்.


26)உபகிரகம் ;-காலன்



27)தேசம் ;-கலிங்கம்



28) பிற பெயர்கள்;-ரவி,ஆதித்தன்,பரிதி,பானு,தினகரன்,கதிரவன்,மார்த்தான்டன்.



29)பார்வை;-ஏழாம் பார்வை



30) நட்சத்திரங்கள் ; - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்.



தொடரும்....



நன்றி



(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


  வாட்ஷ்அப்     97 151 89 647

      செல்  740 257 08 99    97 151 89 647




                        



     அன்புடன்

 சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc, MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனஐ மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

MY EMAIL
masterastroravi@gmail.com

MY BLOG.SEARCH IT
Astroravichanransevvai.blogspot.com
astrosmartnotes.blogspot.com
...........................................................................................................................................................

செவ்வாய் -சனி சேர்க்கை தரும் பலன்கள்,

செவ்வாய்-சனி  சேர்க்கை தரும் பலன்கள்,  


             

செவ்வாய்பட்டி பத்ராளியம்மன் துணை !


கிரகங்கள் படு்த்தும் பாடு


          ஒருவரது சாதகத்தில் செவ்வாய் -சனி இருவரும் சேர்ந்து இருந்தோ அல்லது வெவ்வேறு ஸ்தானங்களில் இருந்தோ இவர்களது பார்வை ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்ளி்ல் விழுந்தால் அந்த பாவத்தின் பலன்களை நாசமடைய செய்கின்றன.இது அனுபவ பூர்வமான உண்மையாகும்.


             ஆனால் சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டிலும் அமையும் போது இவர்கள் இருவரது பார்வை ஒரு குறிப்பிட்ட பாவத்தில் விழாது.எனவே மேற்கண்ட அமைப்பு மட்டும் கெடுபலனை தராது.


        அதேநேரத்தில் செவ்வாய் பத்திலும்,

சனி இரண்டிலும் அல்லது  செவ்வாய் -சனி இருவரும் பத்திலும்  அமையும்போது இவை நான்காம் இடத்தை பார்வை  செய்வதால் நான்காம் இடத்திற்கு உரிய ஸ்தான பலத்தினை பாதிக்கிறது.

      இதே போல இவ்விருவரும் இரண்டில் அமர்ந்திருந்தால் இவர்கள் இருவரது பார்வையும் எட்டாம் இடத்தினை பார்வை செய்வாதால் அந் சாதகர் திடீர் மரணம் ,விபத்து,

மனைவியின் பிரிவு போன்ற பலன்களை சந்திக்க நேரிடும்.

  மேலே குறிப்பிட்ட இக்கருத்தினை ஒரு சில உதாரண சாதகங்ளோடு விளக்குவோம்.

                   



  ஜாதகம் -1


                            சனி பத்திலும் ,செவ்வாய் இரண்டி்லும் அமர்ந்து ராஜயோகம் தந்த சாதகம் ஒன்றினை காண்போம்.

                               இந்த சாதகம் மாநில அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரி ஒருவரின் 

ஜாதகமாகும்.இதி்ல் யோகாரகனான சனி பத்தில் அமர்ந்து குருவின் பார்வையை பெற்றார்.ஒன்பது ,
பணிரெண்டுக்குரிய புதன் உச்சம் மற்றும் ஆட்சி .லபாதிபதி சூரியன் , இரண்டு,ஏழுக்குரிய செவ்வாய்  ஆகியோர் ஆட்சி  ,
ஒன்பது ,பத்திற்குரிய புதன்,சந்திரன் சேர்க்கை சனியின் பார்வையை பெற்று உள்ளனர்.இவ்வித அமைப்பே இவரை உயர்ந்த பதவியில் அமர்த்தியது.


                                  ஜாதகம்-2



                     


                            அடுத்து இரண்டில் சனியும்,பத்தாம் இடத்தில் செவ்வாயும் அமர்ந்து பாதகம் செய்த ஒரு சாதகத்தினை இங்கு காண்போம்.


                              இந்த ஜாதகத்தி்ல் ஐந்திற்கு உரிய செவ்வாய் தசம கேந்திரம் , லக்கனாதிபதி குரு  நான்காம் இடத்தில் ஆட்சி ,தன ஸ்தானத்திற்கு அதிபதி சனி  ஆட்சி ,பத்தாம் இடத்திற்கு அதிபதி  புதன் ஒன்பதாம் இடத்தில் இருகிறார்.


                               சுப கிரகங்களான புதன் ,குரு ,சந்திரன் ஆகியோர் நல்ல ஸ்தானங்ளி்ல் உள்ளார்.ஆயினும் இரண்டில் அமர்ந்த சனியும்,பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள செவ்வாயும் நான்காம் இடத்தினை பார்வை நோக்குகிறார்கள்.


    நான்காம் இடம்  செல்வம்,வீடு,மனை,

தோட்டம்,துரவு,தயார்,
கல்வி,வாகனங்கள்,மாடு,கன்றுகள் ஆகியவற்றினை குறிக்கும் இடம் என்பதால் சாதகரது  சாதகத்தில் சனி ,செவ்வாய் ஆகிய இரண்டும் நான்காம் இடத்தினை பார்வை செய்வதால் இந்த ஜாதகர் தனது வீடு ,வாசல்,தோட்டம்,துரவு ஆகியவற்றினை இழந்து சுமாராக அரை கோடிக்கு மேல் நஷ்டப்பட நேர்ந்தது.

                                              ஜாதகம்-3



                      

                        அடுத்தபடியாக சனி ,செவ்வாய்  இரண்டில் அமர்ந்து கெடுபலன்களை தந்த ஒரு சாதகத்தினை காண்போம் .

                     இந்த ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி ,செவ்வாய் அமர்ந்து எட்டாம் இடத்தினை பார்வை செய்வதால் ஜாதகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின் இவரது மனைவி இவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டாள்.

இதற்கு காரணம் செவ்வாய் ,சனி ஆகியோரின் எட்டாம் இட பார்வையே ஆகும்.

 நன்றி !


(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)


  வாட்ஷ் அப் 



    97 151 89 647



  செல்



   740 257 08 99

    97 151 89 647


                  



அன்புடன் 



சோதிடர்ரவிச்சந்திரன்

    M.Sc.MA.BEd 
(சோதிட ஆராய்ச்சியாளர்& ஆசிரியர்)
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.


My email

  masterastroravi@gmail .com


My blogspot 

  AstroRavichandran .blogspot .com


  AstroRavichandransevvai .blogspot .com



 astrosmartnotes.blogspot .com



....................


உச்சி புகழ் அடையும் யோகம் யாருக்கு ?

உச்சி புகழ் அடையும் யோகம் யாருக்கு ?


                       

செவ்வாய்பட்டி  பத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு

            ஒருவர் தமது வாழ்வி்ல் ஒரு சிலர் மட்டுமே அடையக்கூடிய உச்சி புகழ் எனும் உயரிய நிலையினை அடைய வேண்டுமாயின் அவரது சாதகத்தில்  கீர்த்தி,புகழ் மற்றும் அந்தஷ்து நிலையினை உயர்த்திதரக்கூடிய மூன்றாம் இடம் அவசியமானது.

            மூன்றாம் இட அதிபதியானது வேறு எந்த ஸ்தானாதிபத்தியம் பெறாமல் உச்சம் ,ஆட்சி ,கோணம்,கேந்திரம்  மற்றும் நட்பு நிலையினில் இருந்து சுபர் பார்வை பெற்று  அந்த திசையே இள வயதினில் வருமாயின் அந்த  திசையினில் உச்சி புகழ் அடையும் ஏற்படும்.


          சூரியன்,சந்திரன் பகவானை தவிர்த்து ஏனைய கிரகங்களுக்கு இரண்டு வீட்டிற்க்கு அதிபதியாக இருப்பதால் அதி்ல் மற்றொரு ஸ்தானத்தினை பொறுத்து யோக பலன் மாறுபட வாய்ப்பு இருக்கிறது.


           ரிஷப லக்கனத்திற்கு  மூன்றாம் இட அதிபதி சந்திரன் லக்கனத்தில் உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்று  வாலிப வயதினில் சந்திரன் திசை நடப்பில்  இருப்பின் அந்த ஜாதகன் உச்சி புகழ் பெறும் யோகம்  உண்டு .

          இதேபோல மிதுன லக்கனத்திற்கு  மூன்றாம் இட அதிபதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு  ஏறி உச்சம் அடைந்து  இயற்கை சுபர் பார்வை பெற ஜாதகன் உச்சி புகழ் அடையும் யோகம் உண்டு.


                         

         ஆறு கிரகங்கள் கூடி ஏதாவது ஒரு ராசியில் நிற்க ,அதற்கு மேல் மற்ற கிரகங்கள்  இருக்க பிறந்த ஜாதகன் சூரியன் பிரகாசிக்கும் தேசம் எங்கும் அரசாளும்படியான இராஜ யோகத்தினை அடைவான்.

       லக்கனத்திற்கு  பத்தாம் இடத்தின் அதிபதியும்,சந்திரனுக்கு நான்காம் இடத்தின் அதிபதியும் ஜெனன லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் கூடி நிற்க  பிறந்த ஜாதகர் உச்சி புகழ் அடையும் யோகத்தினை அடைந்து புகழடைவான்.


 லக்கனத்திற்கு ஐந்து,ஒன்பதாம் அதிபதி கூடியிருக்க,இராசிநாதன் சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10 ) மற்ற கிரகங்களுடன் கூடியிருக்க சூரியன் ,ராகு,குரு இவர்கள் கேந்திர ஸ்தானங்களில் இருக்க ,லக்கனாதிபதி கோண ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகர் வாலிப காலத்திலே தனதான்ய சம்பந்துடன் வாழ்ந்திருப்பான்.


 சந்திரன் ஆட்சி பெற்றிருக்க,

லக்கனத்துக்கு நான்கில் சுக்கிரனும்,பாம்பும் கூடியிருக்க ,லக்கனத்தி்ல் குருவுமிருக்க அவர்க்கு நான்கில் லக்கனாதிபதி ஆட்சியாயிருக்க,அஷ்டமாதிபதியும் ஆட்சியாகில் அந்த  ஜாதகருக்கு இராஜயோகம் தித்திக்கும்.

  தனஸ்தானாதிபதியும்,

குருவுக்கு லாபாதிபதியும்,
சந்திரனுக்கு லாபத்தில் இருக்க  ,பத்தாம் இடத்தின் அதிபதி சந்திரனுக்கு ஐந்தாம் இடத்தில் இருக்க ,பாக்கியாதிபதி சந்திரனுக்கு நான்கில் இருக்க பிறந்த ஜாதகருக்கு உச்சி புகழ் அடையும் யோகம் உண்டாகும் .

                       

                              சந்திரனுக்கு நான்கில் குரு நிற்க ,அதற்கு நான்கில் சுக்கிரன் இருக்க ஆயுள் ஸ்தானமாகிய எட்டாம்  இடத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன் ,புதன் கூடியிருக்க ,பத்தாம் இராசி்க்கு உடையவர் நான்கு,ஏழாம்  இடத்தில் இருக்க பிறந்த ஜாதகருக்கு நரயோகம் சித்திக்கும்.


                              ராகு,கேதுக்கள் இருந்த ஸ்தானத்திற்கு இருபுறமும் மற்ற கோட்கள் வலுப்பெற்று நிற்க ,சனிக்கு ஐந்து ,ஆறில் செவ்வாய் இருக்க ,லக்கனத்திற்கு நான்காம் இடத்தில் குரு இருக்க  பிறந்த ஜாதகர்க்கு பிரபமடையும் யோகம் உண்டு .


                        ஜென்ம லக்கனாதிபதி, சுக்கிரன் ,ராகு  இம்மூவரும் பத்தாம் இடத்தில் இருக்க ,குருவும்,

சந்திரனும் ஏழாம் இடத்தில் இருக்க ,சனி ,செவ்வாய் ,
புதன்,குரு  முதலானோர் லாபஸ்தானத்தில் இருந்தால் உச்சி புகழ் அடையும் யோகம் உண்டு .

                    ஜென்ம லக்கனத்திற்கு குரு  தனித்திருக்க ,சந்திரன் ஏழி்ல் வலுவாய் இருக்க ,லக்கனாதிபதி சுக்கிரன் கூடி பத்தாம் இடத்தில் இருக்க ,அவருடன் லாபாதிபதி  கூடியிருக்க ,பாவர்கள் திரிகோணத்தில் இருப்பின்  உச்சி புகழ் அடையும் யோகம் உடையவராக இருப்பார் .

நன்றி !

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

  வாட்ஷ் அப்   97 151 89 647      செல்  740 257 08 99

                                           97 151 89 647



               


   அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.SC.MA.BEd .
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
 ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


My email

  masterastroravi@gmail .com


My blogspot .click here



AstroRavichandran .blogspot .com.



AstroRavichandransevvai .blogspot .com.



............................................

Sunday 4 November 2018

சாதகம் நமக்கு சாதகமாக இருககவேண்டுமா ?

சாதகம் நமக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?

                     
               

கிரகங்கள் படுத்தும் பாடு-( 177 )

  செவ்வாய்பட்டி
 அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

       ஒரு மனிதனுக்கு வெற்றி மேல் வெற்றியாக வந்து குவியும்போது,

அந்த வெற்றியானது  தன்னுடைய அறிவு,திறமை மற்றும் கெட்டிகாரதனத்தால் நடந்ததாக  மண்டைக்கணமாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் தனது வெற்றிக்கு "தான் மட்டுமே காரணம் " என பெருமையாக பீற்றிக்கொள்வார்கள்.

       "நான் எப்படி உழைத்தேன் தெரியுமா ? நான் எப்படியெல்லாம் எனது மூளையை use பண்ணி தொழில் செய்தேன் புரியுமா ? ".....என எல்லா வெற்றிக்கும் தான் மட்டுமே காரணம் என பீற்றிக்கொள்பவர்கள் பலர் உண்டு.


        ஆனால் அதேநேரத்தில் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்த மனிதன் சிறு சிறு தோல்விகளாக தொழிலானது சரிவை நோக்கி செல்லும்போது மட்டும் ஒருவன்   "கிரகம் சரியில்லை " என குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.


          உடனே சாதகத்தினை தூக்கி கொண்டு சோதிடர் ,சோதிடராக அலைய ஆரம்பித்து அவரகள் தரும் பரிகாரங்களை கோவில்,கோவிலாக அலைந்து பூஜை,புணர்ஸ்கரங்கள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.


              இவ்வாறாக பல கோவில்கள் அலைந்து பரிகாரங்கள் செய்தும் கஷ்டங்களும்,நஷ்டங்களும் குறையாதபோது சோதிடர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்."சார் நீங்க சொல்ற எல்லா கோவிலுக்கும் போயிட்டோம்,எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம்.ஆனால் கஷ்டம் சிறு கடுகு அளவு கூட குறையவில்லை "  என புலம்புபவர்கள் பலர் உண்டு.


          ஒருவர் வெற்றி வந்தால் தான் மட்டுமே காரணம் என எண்ணிக்கொள்ளும் சராசரி மனிதன்  தோல்வி வந்தால் மட்டுமே கிரகபலன் சரியில்லை என ஏன் வருத்தப்படுகிறீர்கள்?.


        ஒருவர் என்னவாக ஆக வேண்டும் ? எப்படியெல்லாம் நடக்கவேண்டும் ? என்பதனை அவரது ஜெனிக்கும் நேரம் முடிவு செய்யப்படுகிறது.ஒரு விதையின் வளர்ச்சியினை அந்த வித்தின் வீரியம் முடிவு செய்யப்படுகிறது.விதையின் வித்தானது வீரியம் உடையதாக இருந்தால் அந்த விதை மலை மீது விழுந்தாலும் மண்ணிற்குள் போராடி வேர் விட்டு நிற்கும்.எவ்வளவு பலமாக காற்று வீசினாலும் எதிர்த்து நிற்கும்.

                     

   ஒரு சில விதைகள் மலை மீது விழுந்தாலும் வேரானது தன்னை நிலைநிறுத்தமண்ணிற்குள்ளும், தண்டானது காற்றிலிருந்து தக்க விண்ணிலும் போராடி பலமான வேரினையும்,தண்டையும் பெற்று செழித்தோங்கி நிற்பதை பார்க்கலாம்.
ஆனால் அதேநேரத்தில ஒரு சில விதையானது நல்ல பண்பட்ட  நிலத்தில் விழுந்தாலும் வாடி வதங்கி கருகிபோவதும் உண்டு.

         மனிதன் மட்டும் அல்ல எந்த உயிரினமாக இருந்தாலும் ஜெனிக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரகங்களின் நிலைகளே அதன் வாழ்வியலையும்,வெற்றி மற்றும் தோல்விகளையும் முடிவு செய்கிறது.


       "தீதும்நன்றும் பிறர்தரவாரா''                         --என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி ஒருவருக்கு கிடைக்கும் பெருமைகளுக்கும்,

சிறுமைகளுக்கும் மற்றும் தோல்விகளுக்கும்,வெற்றிகளுக்கும் அவரது ஜெனன காலத்தில் சாதக கட்டத்தில் அமைந்திருக்கும் கிரகநிலைகளே முழுக்காரணமாக அமைகிறது.

          ஒருவன் காசு,பணத்திற்கு கஷ்டப்படாமல் எந்நாளும் வளமுடையவனாக இருப்பதற்கு அவனது சாதக கட்டத்தில் தனாதிபதியும்,தன காரகன் குருபகவானும் பலம் அடைந்து இருப்பதோடு அவனது இளவயதில் இருந்து அவருக்கு நடைபெறும் திசையும் உகந்ததாக இருக்கவேண்டும்.மேலும் அவரது சாதகத்தில்  தன,பாக்கிய மற்றும் லாபாதிபதி பலம் அடைந்து திகழ வேண்டும்.


            ஒருவன் கார்,பங்களா போன்ற வசதிகளோடு என்றும் வளமாக வாழ்கிறார் என்றால் அவரது சாதக கட்டத்தில் ஆடம்பர வசதிகளை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான் சுபஸ்தானத்தில் பலமடைந்து நின்று வாலிப வயதில் சுக்கிரபகவானின் திசையினை பெற்றவர்களாக இருப்பார்கள்.

                           

              சிலர பிறந்தது முதல்  எந்நாளும் பிணி,பீடை ,கடன் மற்றும் எதிரிகளால் கஷ்டப்பட்டே தமது வாழ்வினை கழிப்பதற்கு அவரது சாதகத்தில் தன,சுக (2,4)  ஸ்தானம் பாதிக்கப்பட்டு ருணரோக ஸ்தானமான ஆறாம் இடம் வலுவடைந்து இருந்திருக்கவேண்டும்.

            சிலர் தொட்டது எல்லாம் துலங்குவதற்கு அவரது முயற்ச்சி ஸ்தானமான மூன்றாமிடம் பலமடைந்து துணை நிற்பதோடு தன,லாப,பாக்கிய மற்றும் ஜீவன ஸ்தானங்கள் பலமடைந்து நின்று இந்த சுபஸ்தான  திசைகள் நடப்பில் இருக்கவேண்டும்.


          ஒரு சிலர் நிலையான தொழில் அமைந்து பொருளீட்டி தொழில் அதிபர் ஆவதற்க்கும்,சிலர் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிராயுத பாணியாக நின்று இறுதியில் சாவோமா ?,பிழைப்போமா ? என கஷ்டங்களை அனுபவிப்பதற்கு அவரது தன,பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்களை பொறுத்து   ( 2.9.10.11 ) அமைகிறது.


           ஒரு மனிதன் எவ்வளவு அழகு,அந்தஸ்து மற்றும் கல்விநிலையை பெற்றிருந்தாலும்  மணவாழ்வில் வெற்றி பெற அவரது சாதக கட்டத்தில் லக்கன,குடும்ப,களஸ்திர மற்றும் மாங்கல்ய ஸ்தனங்களை ( 1,2,7,8 )யும் ,களஸ்திரகாரகன் சுக்கிரனையும் பொறுத்து அமைகிறது.

       மேற்குறிப்பிட்ட இவ்விடங்கள் ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெறாமல் இவ்விடங்களின் அதிபதி வலுப்பட்டு உரிய திசா நடப்பில் இருக்க யோகமான ,தங்கமான மனைவி அமைந்துவிடுகிறது.மாறாக மேற்கண்ட ஸ்தானங்கள் பலமிழக்க கால தாமத திருமணம் அமைகிறது.


          ஒரு சிலர் புத்திரர்களால் புகழடைய அல்லது புகழுடைய புத்திரம் பிறக்க அவரது சாதக கட்டத்தில் புத்திரகாரகன் குருபகவான் மற்றும் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடமும் பாவிகள் சேர்க்கையற்று பலமடைந்து நிற்க வேண்டும்.


                           

           ஒருவர் காதல் மணம் புரிகிறார் எனில் அவரது சாதக கட்டத்தில் ஐந்து மற்றும் ஏழாமிட தொடர்பு எவ்வகையிலாவது பெற்றிருக்கவேண்டும்.

           திருமணம் நடந்து பலர் நீண்ட நெடிய ஆயுளோடு வாழ ,ஒரு சிலர் இளமையிலே விதவையாக ஆகிவிடுவதும் கிரகநிலைகளே காரணம் ஆகிறது.இதற்க்கு அவளது ஏழாம் அதிபதியுடன் சனி,செவ்வாய், ராகு தொடர்பு பெற்றிருப்பதே காரணமாகிறது.

         நிறைந்த ஞானமும்,கல்வி அறிவும் பெற்றிருந்தும் ஒரு சிலர் எளிமையாக,இளமையில்  அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கோ அரசாங்க வேலை கால தாமதம் ஆக அவரது சாதகத்தில் அரசாங்க யோகத்தினை தரக்கூடிய சூரியபகவான் பலம் இழப்பதே காரணமாக அமைகிறது.

            ஒரு சிலருக்கு தந்தை மூலமாக புகழடைய ,தந்தை தேடிய சொத்தால் ஆதாயம் பெற தந்தைஸ்தானமான ஒன்பதாம் இடமும்,தந்தைகாரகன் சூரியபகவானும் பலமடைந்து நிற்க வேண்டும்.


          இதேபோல தாய் மூலம் ஆதாயம் பெற மாதர்ஸ்தானமான நான்காம் இடம்,மாதர்காரகன் சந்திரபகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.


           ஒருவர் வண்டி,வாகனங்களால் லாபம் பெற நான்காம் இடமும்,சுக்கிரபகவானும்,

பூமியால் லாபம் அடைய அதே நான்காம் இடமும், பூமிகாரகன் செவ்வாய் பகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.
                    
                           

             கல்வி அறிவும்,ஞானமும் பெற வாக்குஸ்தானம்,நான்காம் இடம், ஐந்தாம் இடம்,ஒன்பதாம் இடம் மற்றும் குருபகவான்,வித்தைகாரன் புதன் பலமடைந்து திகழவேண்டும்.

                நடன நாட்டிய மங்கையாக திகழ கலைக்காரகன் சுக்கிரபகவானும்,இசைஞானம் பெற புதன் பகவானும்,கதை,கவிதை,
கட்டுரை மற்றும் சினிமா பாடலாசியர் போன்ற துறைகளில் சிறக்க புதன்பகவான் மற்றும் சந்திரபகவான் ஆகிய பலம் பெற்ற நிலைகளில் புகழ் பெறுவார்கள்.மொத்தத்தில் கனவு தொழிற்சாலையான சினிமாவில் கோலோச்சி நிற்க சுக்கிரன்,புதன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் அனுக்கிரகமும்,ஆதரவும் தேவை.கீர்த்தி,புகழ் தரும் ஸ்தானமான மூன்றாமிடமும்,கற்பனை திறன் தரும் ஐந்தாமிடமும் பலம் பெற்றிருக்கவேண்டும்.

      ஒருவர தான் மேற்கொள்ளும் தொழிலில் புகழடைய தன, பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்கள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறி நிற்கவேண்டும்.

       ஒரு சிலர் வாக்கு பலிதம் உடையவராக திகழ வாக்குஸ்தானத்தில் உள்ள கேதுபகவானே காரணமாக அமைகிறது.இவரகளுக்கு புதன்பகவானும் பலப்பட அருள்வாக்கு சோதிடராகவும் திகழ்வர்.


      வாக்கில் ராகுபகவான் அல்லது வாக்குஸ்தானத்தை சனி,செவ்வாய் சேர்ந்தோ அல்லது தனித்தனியாக பார்க்க தந்திரம் மிக்கவர்களாக,தனது பேச்சில் ஒருவித பொய்மைதன்மை மிக்கவர்களாக காணப்படுவர்.இவர்களை போன்றோர் சனிபகவான் பலப்பட்டு நிற்க வழக்கறிஞராக வழக்குரைப்பர்.பலம் குறைந்த சனி பஞ்சாயத்துகாரர் ஆக மாற்றி விடும்.


 செவ்வாய் பகவானை பலமாக பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் புகழ்மிக்க மருத்துவர்களாக,இராணுவம்,போலிஸ் போன்றவற்றில் பணிபுரிபவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.பலமான செவ்வாய் பகவானை பெற்றிருந்தாலும் பாவர் தொடர்பு பெற்றிருக்க ரொளடிகளாக ,பிறருக்கு அடியாளாக மாற்றி விளையாடுகிறது.
                        


 புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்று கொள்பவர்களாக ,கணித அறிவு சம்பந்தப்பட்ட துறைகளில் புகழ்பெறுபவர்களாக,சோதிட ஞானம் மிக்கவர்களாக மற்றும் இசையில் புலமை பெற்றவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.ஒரு சிலரை கதை,கவிதை,கவிதை மற்றும் எழுத்தாளராக மாற்றி அழகு பார்க்கிறது.


 இன்றைய நவீன தொழில்நுட்பமான கனிப்பொறி,இனையம் போன்றவற்றில் புகழடையவும்,பங்குமார்க்கெட் போன்றவற்றில் புகழடைய வைக்க ராகுபகவானின் ஆதரவு தேவைப்படுகிறது.அரதியல்,மாந்திரிகம் போன்றவற்றில் புகழ்பெற வைக்கிறது.


ஆடை,ஆபரணம்,,அழகுசாதனப்

பொருட்கள்,ஹோட்டல்,ஜவுளி,
 சினிமா,
,வாகனம்,பேஷன் டெக்னாலஜி,நடனம் போன்றவற்றில் திறமை மிக்கவனாக சுக்கிரபகவானின் அருள் தேவை.

சகோதரர்களின் அன்பும்,ஆதரவும் பெற மூன்றாமிடம்,பதினொறாமிடம் மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் பகவானின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.


  ஆத்மாக்காரகனான சூரியபகவான் கண் பார்வைக்கும்,எலும்பு பலத்திற்கும்,தந்தைக்கு காரகராகவும்,அரசு வேலைக்கு காரகராகவும் மற்றிம் அரசியல் யோகம் பெறுவதற்கும் காரகர் ஆவார்.


 நீர் சார்ந்த கூல்டிரிங்ஸ்,பால் ,தண்ணீர் போன்ற தொழிலில் பலன் பெறுபவர் சந்திரனை பலமாக பெற்றவர்கள் ஆவார்.சந்திரன் மாதர்காரகனாகவும்,மனநிலைக்கு காரகனாகவும் உள்ளார்.


 ஒருவர் உறுதியான மனநிலை பெறுவதற்க்கும்,அடிக்கடி தன்னை குழப்பிக்கொள்வதற்க்கும் சந்திரபகவானே காரணம் ஆகும்.


இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம் .கடல் போன்றது சோதிட பலன் ஆகும்.ஒரு மனிதனின் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகங்கள் படுத்தும் பாடே காரணம் ஆகும.


                       



 என்னதான் அழகு,அறிவு,அந்தஸ்து இருந்தும் திருமணம் கால தாமதம் ஆவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என உற்றுநோக்க  லக்கனம்,இரண்டாமிடம,ஏழாமிடம்,

எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களுடன் மறைவு ஸ்தான அதிபதிவுகள் சேர்ந்து நிற்பது, அல்லது மேற்கண்ட அதிபதிகள் மறைவிடங்கள் செல்வது அல்லது மறைவு ஸ்தானத்திற்கு 1,2,7,8 ஆம் இட அதிபதிகள் பரிவர்த்தனை,அல்லது களத்திர காரகன் சுக்கிரபகவான் பலமிழந்து நிற்ப்பது.மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் உடன் அரவுகளான ராகு,கேது சேர்வது காரணம் ஆகும்.

 ஒரு சிலர் மறுபிறப்பற்ற முக்தி நிலை அடைய விரயஸ்தானத்தில் கேதிபகவான் நின்று,ஒன்பதாம் இட அதிபதி வலுப்பெறவேண்டும்.


  ஒரு சிலர் காம மிகுதியால் தவறு்பவர்களாக இருப்பதற்க்கு காரணம் மனோகாரகன் சந்திரன் பலமிழந்து நிற்க்க,3,5,12 போன்றவற்றில் சுக்கிரன் ,செவ்வாய் ,சனி,ராகு சேர்க்கை மற்றும் சுக்கிரன் + சனி சேர்க்கை தகாத உறவுநிலையை தந்துவிடுவதே காரணம் ஆகிறது.


(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம்,ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கி மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும விபரம் பெறலாம்.)



   தொடர்பு கொள்ள




 வாட்ஸ்அப்




   97 151 89 647




   செல்




  740 257 08 99

      97 151 89 647



                     




    அன்புடன்




  சோதிடர் ரவிச்சந்திரன்

       M.Sc.,MA,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.



 My email

    masterastroravi@gmail.com



My blogspot

AstroRavichandransevvai.blogspot.com

............................

         கால சக்கர 

      திசை        விளக்கம்-3


                         
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..

வலஞ்சுற்று நட்சத்திரங்கள்

இதில் மூன்று பிரிவுகள் உள்ளன
அவற்றுள் முதலாவது

முதல் சுற்று

அசுபதி,புனர்பூசம்,அஸ்தம்,மூலம்,பூரட்டாதி

மேற்கண்ட ஜந்து நட்சத்திரங்களும்
முதல் பாதம்-மேட செவ்வாய்
இரண்டாம் பாதம்-ரிஷப வெள்ளி
மூன்றாம் பாதம்-மிதுன புதன்
நான்காம் பாதம்-கடக திங்கள்

மேற்கண்ட வகையில் முதல் திசையாக வந்து வலஞ்சுற்றாக செல்லும்.

இரண்டாவதாக இடைச்சுற்று நட்சத்திரங்கள்

பரணி,பூசம்,சித்திரை,பூராடம்,உத்திரட்டாதி

முதல் பாதம் -சிம்ம சூரி
இரண்டாம் பாதம்-கன்னி புதன்
மூன்றாம் பாதம்-துலாம் வெள்ளி
நான்காம் பாதம்-விருட்சக செவ்வாய்

மேற்கண்ட ஐந்து நட்சத்திரங்களுக்கும் எந்த பாதம் வருகிறதோ அதன்.அடிப்படையில்.முதல் திசையாக வந்து வலஞ்சுற்றாக வரும்.

மூன்றாவதாக கடைச்சுற்று.நட்சத்திரங்கள்

கார்ததிகை,ஆயில்யம்,சுவாதி,உத்திராடம்,ரேவதி

முதல்.பாதம்-தனுசு குரு
இரண்டாம.பாதம்-மகர சனி
மூனுறாம்.பாதம்-கும்ப சனி
நான்காம் பாதம்-மீன குரு

இவை ஐந்தும் மேற்கண்டதுபோல முதல் திசையாக கொணாடு வலப்புறம் சுற்றும்.

அடுத்து இடஞ்சுற்று 12 நட்சத்திரங்களும்

முதல் சுற்று

ரோகினி,மகம்,விசாகம்,திருவோணம்

முதல் பாதம்-விரு செவ்வாய்
இரண்டாம் பாதம்-துலா சுக்
மூன்றாம்.பாதம்-கன்னி புதன்
நான்காம் பாதம்-சிம்ம ஞாயிறு

மேற்கண்ட நட்சத்திரங்கள் தனது பாதத்திற்கு ஏற்ப முதல்.திசையாக கொண்டு இடஞ்சுற்றாக சுற்றி வரும்.

இரண்டாவது இடைச்சுற்று

மிருகசீரிடம்,பூரம்,அனுஷம்,அவிட்டம்

முதல் பாதம்-கடக திங்கள்
இரண்டாம் பாதம்-மிதுன புதன்
மூன்றாம் பாதம்-ரிஷப ழெள்ளி
நான்காம் பாதம் -மேட செவ்வாய்

கடைச்சுற்று நட்சத்திரங்கள்

திருவாதிரை,உத்திரம்,கேட்டை,சதயம்

முதல் பாதம்-மீன குரு
இரண்டாம் பாதம்-கும்ப சனி
மூன்றாம் பாதம்-மகர சனி
நான்காம் பாதம்-தனுசு குரு

மேற்கண்ட நட்சத்திரங்களும்  அதன் பாதத்திற்கு ஏற்றார்போல முதல்            தசையாக கொண்டு இடந்சுற்றாக சுற்றி வரும்.
    

                       


அன்புடன் 
  சோதிடர் ரவிச்சந்திரன்
          M.Sc,MA,BEd 
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் : 97 151 89 647
             740 257 08 99

 வாட்ஷ் அப் ; 97 151 89 647
(நேரில் வர இயலாமல் போன் வழியாக ஜாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்புகொள்ளவும் கட்டணம் உண்டு.தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)