Tuesday 8 November 2022

2023 ல் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

 2023 ல் சனி பெயர்ச்சி (Saturn displacement) எப்படி இருக்கும்?

                    


  கோள்களில் மெதுவாக நகரும் கிரகம் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை  ஆண்டு காலம் வாசம் செய்கிறார். எனவே சனி பகவான் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்வதைதான் நாம்

 "சனி பெயர்ச்சி"(Saturn displacement)  என்கிறோம்.


    ஏனைய பெயர்ச்சிகளை விட சனி பெயர்ச்சி மிக முக்கியமாக அனைத்து மக்களாலும் கவனிக்கப்படுவதற்கு காரணம் இது மிக நீண்ட காலமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கியிருப்பதே காரணமாகும்..


இந்தச் சனிப்பெயர்ச்சி ஆனது  வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இரண்டு விதமான காலகட்டங்களில் நடக்கிறது.இரண்டு முறைப்படியான சனி பெயர்ச்சிக்கான இடைப்பட்ட கால அளவு வித்தியாசம் ஒரு ஆண்டு உள்ளது என்பதால் இந்த சனி பெயர்ச்சியில் எந்த சனி பெயர்ச்சி தேதியினை எடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.


 திருநள்ளாறு போன்ற முக்கியமான சனி பகவானுக்கு உரிய ஸ்தலங்களில் வாக்கிய முறைப்படி வரும் சனி பெயர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது.


 வாக்கிய முறைப்படி கடந்த சனி பெயர்ச்சியானது அதாவது சனி பகவான் தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 27.12.2020 ல் நடை பெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு மார்ச் -2023 ல் பெயர்ச்சி அடைகிறார்.


ஆனால் திருக்கணித முறையில் கடந்த சனி பெயர்ச்சியானது அல்லது தனுசு வீட்டில் இருந்து மகர வீட்டிற்கு 24.01.2020 அன்று நடைபெற்றது.தற்போது மகர வீட்டில் இருந்து கும்பம் வீட்டிற்கு 17.01.2023 ல் நடைபெறுகிறது.கும்ப வீட்டில் சனி பகவான் ஏப்ரல் 2025 வரை வாசம் செய்கிறார்.


தனுசு ராசி -விட்டு விலகும் ஏழரைச்சனி


  கடந்த ஏழரை ஆண்டுகளாக விரய சனி, ஜென்ம சனி மற்றும் பாதச்சனி என்ற வகையில் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான தனுசு ராசி அன்பர்களே இந்த சனி பெயர்ச்சி ஆனது உங்களுக்கு நல்ல விடி மோட்சம் தரும் சனி பெயர்ச்சியாக அமைய போகிறது.இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு முற்றிலுமாக ஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபட போகிறீர்கள்.


 இதுவரை குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவில் சிக்கல், குழந்தை பிறப்பதில் தாமதம் , திருமணத்துக்கு காத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்களுக்கு

 திருமணத்தடை  ,படிக்கக் கூடிய இளைஞர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இல்லாத தன்மை , வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் இல்லாத தன்மை போன்ற வகையிலான  இன்னல்களை அனுபவித்து கொண்டு இருந்திருப்பீர்கள்.


 சனி பெயர்ச்சி மூலமாக இனிமேல் தனுசு ராசிக்காரர்கள் மேற்கண்ட வகையில் அனுபவித்த அனைத்து துன்பங்களும் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வை அவர்களது தசா புத்திகளுக்கு ஏற்ப அமையும்.


 ஆபத்தான கால கட்டத்தை தாண்டும் மகர ராசி காரர்களே!

   

இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக விரயம் மற்றும் ஜென்மச்சனி பாதிப்புகளுக்கு உள்ளாகி பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த நீங்கள் இனி  கஷ்டமான காலகட்டங்களை தாண்டிவிட்டீர்கள் இனி வரும் பாத சனி உங்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் தில்லை.


 ஜென்ம சனி பாதிப்புக்கு உள்ளாகும் கும்ப ராசி அன்பர்களே!


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய சனி  பாதிப்பிலிருந்து பலவிதமான விரயங்களை அனுபவித்து வந்த நீங்கள் இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி என்னும் ஏழரை சனி உங்களை முழுமையாக சரியாக எண்ண  விடாமல் செய்யும். குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்தில் சனி நகரக்கூடிய காலங்களில் தேவையில்லா மன அழுத்தத்தை தந்து மிகுந்த வேதனைக்கு உங்களை உண்டாக்கும்.


ஏழரைச் சனி பாதிப்புக்கு உள்ளாகும் மீன ராசி அன்பர்களே!


  இந்த சனி பெயர்ச்சி மூலம் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. பெரும்பாலும் இயற்கை சுப கிரகமான குருவிற்கு சனி பகவான் சமம் தன்மை உடைய கிரகம் என்பதால் பெருமளவு ஏழரைச் சனி பாதிப்பிலிருந்து விலகுவீர்கள்.


   சிலருக்கு இரண்டாவது முறையாக வலம் வரும் ஏழரை சனியானது  பொங்கு சனியாக இருப்பதால் அந்த நேரங்களிலும் பெருமளவு பாதிப்பை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.


 அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடும் மிதுன ராசிக்காரர்கள்


     கடந்த இரண்டரை ஆண்டுகளாக 

 அஷ்டம சனி  தொல்லைகளை அனுபவித்து வந்த மிதுன ராசிக்காரர்கள் தற்போது அஷ்டம சனி  பாதிப்பிலிருந்து விலகுவார்கள்.


அஷ்டம சனி பிடிக்கும் கடக ராசி நண்பர்களே!


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக கண்ட சனி பாதிப்புக்கு உள்ளாகி தண்டச் செலவை அனுபவித்த நீங்கள் அடுத்த இரண்டரை  ஆண்டுகளும் வம்பு, சண்டை, வழக்கு ,வீண் வாதம் ,கொடுத்த பணம் கிடைக்காமல் அவமானம் சிறை செல்லல்,ஒற்றுமை குறைவு போன்ற வகையிலான ஏதாவது இன்னல்களுக்கு உள்ளாகும் துர் பாக்கிய நிலை உண்டாகும்.


அர்த்தாஷ்டம சனி விலகும் துலாம் ராசி


  கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனி பாதிப்புக்கு உள்ளாகி இருந்த துலாம் ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி சிறப்பாக அமைய இருக்கிறது.


அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புக்கு உள்ளாகும் விருச்சிகம் ராசி அன்பர்களே.


  விருச்சக ராசி காரர்கள் இப்பொழுது அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்புக்கு உள்ளாக இருக்கிறார்கள் . நாலாமிடத்திற்கு  சனி வருவதால்

 தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகும்.


யோகத்தை அனுபவிக்க இருக்கும் மேஷ ராசி அன்பர்களே !


    உங்களது ராசிக்கு உபஜெய ஸ்தானமான 11ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எல்லா நலன்களையும் தரக்கூடிய பெயர்ச்சியாக அமைய கூடிய வாய்ப்புகள் அதிகம்.


தொழில் முன்னேற்றம் அடைய இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!


  உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு சனி பகவான் வருவதால் எதிர்பாராத முன்னேற்றங்களை உங்களுக்கு நடைபெறும் தசா புக்திகளுக்கு ஏற்ப அடைய இருக்கிறீர்கள்.


கன்னி ராசிக்கு  உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சனி பகவான் வருவதால் உங்களுடைய லக்னாதிபதியின்  வலிமைக்கு  ஏற்ப நல்ல பலனைத்  இந்த சனி பெயர்ச்சி மூலமாக அடைய இருக்கிறீர்கள்.


  சனிபகவானால் வரும் தொல்லையில் இருந்து விடுபட 


தினந்தோறும் சனியின் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.


காக்கைக்கு சோறு வைத்தல், 

ஐயருக்கு கருப்பு  வஷ்திரம் தானம்   செய்தல் , 

எள் விளக்கு போடுதல்  ,

தினம் தோறும் காலையில் விநாயகர் வழிபாடு செய்தல், 

திருநள்ளாறு சென்று சனி பகவான் வழிபாடு போன்ற பரிகாரங்களின் மூலம்  சனியின் பாதிப்புகளிலிருந்து இருந்து விலகலாம்.


ஒருவருக்கு என்னதான் யோக தசைகள் நடந்தாலும் ஏழரை சனி, அஷ்டமி சனி காலங்களில் அந்த யோக தசையும் சிறப்பாக செயல்படாது.


   ஒரு குடும்பத்தில் இரண்டு ,மூன்று நபர்களுக்கு  ஏழரை சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பில் இருந்து அந்த  கால கட்டங்களில் ஆறு மற்றும் எட்டுக்குடைய தசைகளோ அல்லது சந்திரன் மற்றும் ராகு தசைகளோ நடப்பில் இருந்தால் மிகுந்த இன்னல்களை சாதகர் அனுபவிக்க நேரிடும்.


    சந்திரனுக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் வந்தால் அர்த்தாஷ்டம சனி, சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் வந்தால் கண்டகச் சனி, 

சந்திரனுக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் வந்தால் அஷ்டமச்சனி ஆகும்.


     சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12ஆம் இடத்திற்கு சனிபகவான் வரும்போது ஒருவருக்கு" ஏழரை சனி" ஆரம்பமாகிறது. 12ஆம் இடத்தில் சனி வந்தால்" விரயச் சனி" ,,  ராசிக்கு சனி இருந்தால் ஜென்ம சனி, ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு சனி வந்தால் "பாதச் சனி "ஆகும்.


 ஏழரை சனி மூன்று சுற்று வருகிறது. முதல் எழரை "மங்கு சனி", இரண்டாவது ஏழரை "பொங்கு சனி" , மூன்றாவது ஏழரை 

"மரண சனி" ஆகும்.


  ஏழரை சனி ஆனது அந்த ஏழரை ஆண்டும் இன்னல்களை தந்து விடுவதில்லை .ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதாவது ஏழரை மாதமோ, ஏழரை நாளோ  அல்லது ஏழரை நாழிக்குள்ளோ தரக்கூடிய துன்பம் பெரிய துன்பமாக மரணத்துக்கு நிகரான துன்பமாக அமைந்துவிடும்.


 சில நேரங்களில் சனி பகவான் அவரது ஜாதகத்தில் சுபத்துவமான முறையில் அமைந்துவிடக் கூடிய நிலையில் அந்த ஏழரை சனி காலங்களில் முக்கியமான பதவிகளுக்கு சாதகனை கொண்டு சென்று அதே நேரத்தில் அந்த காலகட்டம் வரை ஒரு மன அழுத்தத்தோடு அந்த பதவியில் நீடிக்க வைக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

      ( All in one cell)

   9715189647

 மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


E-mail; masterastroravi@gmail.com

                        



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை

 ஸ்ரீ ராகு பகவான் தரும் மாறுபட்ட பார்வை.    




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான  ராகு மற்றும் கேது  பகவான் மட்டுமே ஜாதக பலனில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பெரிய அளவில் மாற்றங்களை தர வைப்பவர் ஆவார்.


 ஜாதகத்தில் ராகு பகவான் மட்டும் நல்ல முறையில் அமைந்து விட்டால் அதன் தசை காலங்களில் அவை தரும் ஆடம்பரமான, பிரம்மாண்டமான  ஐஸ்வர்யங்களை  வேறு எந்த கிரகமும் தர இயலாது.


  ராகு என்றாலே மாற்றங்களை தருபவர் ஆவார்.மேலும் எதிர்பாராத அளவு பெரிய பிரமாண்டமான மாற்றங்கள் அல்லது மிகவும் கீழினும் கீழான நிலையினை தருபவராக இருப்பார்.


ராகு பகவான் " கெடுத்து கொடுப்பார் என்றும் அல்லது கொடுத்து கெடுப்பார்" என்று அழைக்கப்படுகிறது.

*ராகுவை  போல கொடுப்பாரில்லை

 கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்றும் சொல்வது சொலவடை ஆகும்.


  ராகு பகவான் தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் பலனை மாற்றி தருவதில் வல்லவர் ஆவார்.


 இயற்கை சுப கிரகங்கள் மற்றும் லக்கன யோகியுடன் எட்டு பாகைக்குள் நெருக்கமாக  சேரும் ராகு பகவான் தன்னுடன் சேரும் கிரகத்தை பாவத்துவ படுத்தி தான் மட்டும் சுபராக மாறி அதன் தசையில் நல்ல பலன் தருவார்.


 ராகு பகவான் உடன் சனி , செவ்வாய் சேர்க்கை பெற்ற நிலையில் அல்லது ராகு பகவான் உடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்த அமைப்பு அல்லது ராகு பகவானுடன் செவ்வாய் சேர்ந்து சனி பார்த்து அமைப்பு அல்லது

ராகு பகவான் சனியின் வீடுகளான மகர கும்பத்தில் நின்று செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்ட அமைப்பு அல்லது ராகு பகவான் செவ்வாய் பகவான் வீடான மேஷ ,விருச்சகத்தில் நின்று சனி பகவானால் பார்க்கப்பட்ட தன்மை 

மேற்கண்ட இது போன்ற அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் இருந்தால் அவை எந்த ஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானமானது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்.இத்துடன் சந்திரன் 🌙 பகவான் சேர்ந்த நிலையில் சந்திரன் பகவான் மனநிலை காரகன் என்பதால் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


இவை மட்டும் அல்லாமல் ராகு பகவான் தொடர்பு கொண்ட சனி செவ்வாய் பகவான் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும்.


மேற்கண்ட வகையில் கூறப்பட்ட அமைப்புக்கள் எனது ஜாதகத்தில் உள்ளது ஆனால் தாங்கள் கூறியது போல பெரும் பாதிப்பை எனக்கு தரவில்லை என நீங்கள் கருதினால் அதற்கான விளக்கம் என்னவென்றால் அந்த ராகுவின் பாவத்துவமான அமைப்புடன்  பங்கப்படாத குரு , சுக்கிரன் அல்லது தனித்த புதன் ஆகியவற்றின் தொடர்பை பெற்றிருக்கும்.


    ராகு பகவான் ஒரு அந்நிய தேசத்தையும் மற்றும் அந்நிய மதத்தையும் குறிக்கும் கிரகம் ஆகும்.


 ராகு பகவான் மட்டும் ஒருவர் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் ஒன்றில் அமர்ந்து அவை ராசி அல்லது லக்கினத்திற்கு அயன ஸ்தானமான பன்னிரண்டாம் இடமாக அல்லது மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் இருந்து லக்கனத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து அதாவது உதாரணமாக குரு பகவான் எட்டில் அமர்ந்து பன்னிரெண்டாம் இடத்தை பார்வை செய்யும் நிலை.


மேற்கண்ட இது போன்ற அமைப்பில் இருந்து ராகு தசை நடப்பில் இருப்பின் ஜாதகர் நாடு கடந்து பல லட்சங்களை சம்பாதித்து புகழ் பெறுவார்.


ராகு பகவான் திருமண ஸ்தானங்களான 1,2,7 ,8 ஆம் இடத்தில் நின்று வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் திருமண தடையை உண்டாக்குவார்.


மூன்றாம் இடத்தில் சகோதர தோஷத்தையும், நான்காம் இடத்தில் மாதுர் தோஷத்தையும், ஐந்தாம் இடத்தில் புத்திர தோஷத்தையும்   மற்றும் ஒன்பதாம் இடத்தில் பிதுர்தோஷத்தையும் உண்டாக்குவார்.


 பௌர்ணமி அமைப்பில் சூரியன் அல்லது சந்திரனுடன் ராகு பகவான் 8 பாகைக்குள்ளாக நெருக்கமாக இணையும்போது கிரகண தோஷத்தை ஏற்படுத்துவார். இதனால் அந்த பௌர்ணமி யோகம் முழுமையாக சாதகருக்கு செயல்படாது.


ராகு பகவான் ஒளிக்கிரகமான சூரியனுடன் நெருக்கமாக இணையும்போது தந்தை உறவு நிலையையும், சந்திரனுடன் நெருக்கமாக இணையும்போது தாயின் உறவு நிலையும்  மற்றும் மனநிலை பாதிப்பை உண்டாக்குவார்.


செவ்வாய் பகலுடன் ராகு பகவான் நெருக்கமாக இணையும்போது சகோதர தோஷத்தையும் ,சுக்கிலுடன் நெருக்கமாக இணையும்போது தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய தன்மை மாறுபட்ட நிலையிலும், திருமண தடையையும் உண்டாக்குவார்.மேலும் மேலும் மாறுபட்ட காம எண்ணங்களையும் விதவையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையையும் சாதகர்கருக்கு கொடுப்பார்.


 ராகு பகவான் ஆனவர்  புதன் பகவான் உடன் இணைந்து பாவத்துவமாகி தனது மூளையை தவறான வழியில் பயன்படுத்தக் கூடியவராக இருப்பார். பொது இடங்களில் நாசம் விளைவிக்க கூடிய அளவிற்கு அல்லது பொது சொத்துக்களை திருடும் அளவிற்கு தனது மூளையை எதிர்மறையாக பயன்படுத்துவார்.அம்மான் வர்க்கத்திற்கு ஆகாத நிலையினை தருபவராக இருப்பார்.


  ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது .இருக்கும் வீட்டை சொந்த வீடாக கொண்டிருக்கும். 

    ராகு பகவான் தனது தசையில் இருக்கும் வீட்டின் பலனையும், தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் ராகுவுக்கு நான்கு கேந்திர ஸ்தானங்களில் உள்ள கிரக பலனையும் அவை பெற்ற நட்சத்திர சாரம் ஆகியவை பொறுத்து பலன் தரும் என்பதால் பலனை கணிப்பதில் சிக்கல்களை கொண்ட தசையாக ராகு தசை அமைகிறது.


  ராகு பகவான் நிற்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது  ராகு நிற்கும் வீட்டின் அதிபதி ராகு இருந்த வீட்டில் ஆட்சி பெறாமல் மற்றொரு ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் யோகத்தை தருகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

மற்றொரு செல்

  7402570899


E-mail address

  masterastroravi@gmail.com

    


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

  M.SC,M.A, BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்) கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

யோகங்கள் நிறைந்த ஜாதகம் எது?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  ஒருவருக்கு நல்ல யோகங்களை அள்ளி தரக்கூடிய ஜாதகம்  எது என்று  நன்கு கணித்து ஆராய்ந்து  பார்த்தால் அதில் லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் எவ்விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்கும்.


   ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் முழு ஒளியளவு கொண்டிருக்க வேண்டும்.அதாவது முழு பொளர்ணமி அல்லது வளர்பிறை அமைப்பில் இருக்கும்.


நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான்  தனித்த நிலையில் ஆறு மற்றும் பண்ணிரெண்டாம் இடத்தில் நிற்கும்.


ஜாதகத்தில் தொடர்ந்து வரக்கூடிய தசைகள் நல்ல யோக தசைகளாக இருக்கும்.கோச்சார அடைப்படையில் கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்து இருக்கும்.


  லக்கன அவ யோக கிரகங்கள் மற்றும் பகைக்கிரகங்கள் பலமிழந்தும் லக்கன யோக கிரகங்கள் மற்றும் இயற்கை சுபகரங்கள் வலுவடைந்து ஜாதகத்தில் காணப்படும்


 சாதகத்தில் வீடு கொடுத்தவன் வலு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு கிரகத்திற்கும் அதாவது பாவ கிரகமாக இருந்தாலும் அந்த கிரகம் இருக்க கூடிய வீட்டோட அதிபதி உச்சம் பெற்றால் அது தசை காலங்களில் நல்ல பலனைத் தரும்.


இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது.பாவத் பாவ அமைப்பின்படி அந்த இடமானது லக்கனத்தில் இருந்து கேந்திர கோணமாக இருப்பின் அந்த தசை காலங்களில் சொல்லொண்ணாத மகிழ்ச்சிகளையும் மற்றும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுக்கும்.


சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் ஆறாம் இடத்தில் இருப்பது அல்லது ஆறாம் இடத்தில் பார்வை செய்து இருப்பது ஆறாம் இடத்தை வலு இழக்க செய்வது நல்ல யோக அமைப்பு ஆகும். ஏனெனில் ஆறாம் இடம் என்பது சத்ரு ஸ்தானமாகும் இங்கு கடன் பிணி எதிர்ப்பு வம்பு சண்டை வழக்கு மான அவமானம் போன்ற கெடுதல் தரும் விஷயங்களை தரக்கூடிய இடமாகும்.. எனவேதான் இந்த இடம் பலமிழந்து லக்கனாதிபதி வலுப்பெற்று இருப்பதும் யோக ஜாதகமாக கருதப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் யோகத்தை அள்ளி தரக்கூடிய கோண அதிபதிகள் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று அதன் தசை தொடர்ந்து நடப்பில் இருப்பின் அது யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்கன அவ யோகி மற்றும் பாவ கிரகங்கள் பலமிழந்து நின்று லக்கன யோகர் மற்றும் சுப கிரகங்கள் வலுப்பெற்று சுப மனை ஏறி நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


சில நேரங்களில் ராசியில் பலம் இழந்து நிற்கும் கிரகம் அம்சத்தில் சுப மனை ஏறி நிற்பதும் மற்றும் சுப கிரகங்கள் சேர்க்கை பெற்று நிற்பதும் யோகம் நிறைந்த ஜாதகமாக கருதப்படுகிறது.


ஒருவர் ஜாதகத்தில் யோகம் நிறைந்த ஜாதமாக திகழ பிறந்ததிலிருந்து யோகம் நிறைந்த தசை நடப்பில் இருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    9715189647


 மற்றொரு செல்

   7402570899


Email masterastroravi@gmail.com

   


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

கிரகங்கள் -மாறுபட்டட பார்வை

 கிரகங்கள் - புதிய பார்வை



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் தசா புக்தி பலன்களை லக்கனத்தை அடிப்படையாக கொண்டும் மற்றும் கோச்சார பலன்களை ராசியை அடிப்படையாக கொண்டும் கணக்கிடப்படுகிறது.


 கோச்சார பலன்களில் வருட கிரகம் எனப்படும் சனி(இரண்டரை ஆண்டுகள்) ,ராகு,கேது ஒன்றரை ஆண்டுகள்)மற்றும் குரு (1 ஆண்டு) ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியானது ஜாதகரை பெருமளவு பாதிக்கப்படுகிறது.ஏனைய பெயர்ச்சிகளான‌ சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரிங்களின் பெயர்ச்சி பெரிய அளவில் பேசப்படுவதில்லை.காரணம் சந்திரன் இரண்டேகால் மட்டுமே ஒரு ராசியில் வாசம் செய்வார்.எனவே இவை நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


 மாத கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதமும் மற்றும் செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் வீதமும் வாசம் செய்கிறது.


 சந்திரன் பெயர்சியை கொண்டே வளர்பிறை மற்றும் தேய்பிறை கணக்கிடப்படுகிறது.


     பொதுவாக அமாவாசை காலத்தில் இருந்து பொளர்ணமி காலம் வரை நகரும் சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.இக்கால கட்டத்தினை சுக்ல பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த தருணங்களில் சந்திரன் 🌙 முழூ ஒளி அளவினை கொண்டு இருப்பதால் இயற்கை சுபராக கருதப்படுகிறது. இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் இரண்டாம் வீடு முதல் ஏழாம் வீடு வரை ஆகும்.


  இதேபோல பொளர்ணமி காலத்தில் இருந்து அமாவாசை நோக்கி நகரும் சந்திரனை தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது.இக்கால கட்டத்தினை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.இந்த கால கட்டங்களில் சந்திரன் ஒளி அளவு குறைந்து கொண்டே வருவதால் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது.

இவை பெரும்பாலும் ஜாதக கட்டத்தில் எட்டாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை ஆகும்.


  ஒளி அளவினை கொண்டு துல்லியமாக ஆய்வு செய்து நோக்கினால் அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பிரதமை திதி முதல் பஞ்சமி திதி வரை நகரும் சந்திரன் பகவானை தேய்பிறை சந்திரனாகவே மட்டும் கருதப்பட வேண்டும்.எனவே அமாவாசை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை தேய்பிறையாக கணக்கில் எடுத்துக் கொண்டு சுப விஷயங்கள் செய்ய கூடாது.


 இதேபோல பொளர்ணமியை விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரையிலும் அதாவது பஞ்சமி திதி வரை சந்திரன் பகவானை வளர்பிறை சந்திரனாக மட்டுமே கருதப்பட வேண்டும்.பொளர்ணமி விட்டு விலகிய சந்திரனை முதல் நான்கு நாட்கள் வரை வளர்பிறையாக கணக்கில் எடுத்து கொண்டு சுப வைபோகங்கள் செய்யலாம்.


 எனவேதான் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் மட்டுமே சந்திர அதியோகம் பெறுகிறது.பாவ கிரகங்களான சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு கிடையாது.


இதேபோல தேய்பிறை சந்திரனுக்கு ஆறு ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் இயற்கை சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதியோகம் கிடையாது.மற்றொரு இருள் கிரகமான சனி பகவான் பார்த்ததற்கு சமம் ஆகும்.


எனவே ஒரு ராசியில் தேய்பிறை சந்திரன் இருந்து பார்ப்பதும் மற்றும் இயற்கை பாவ கிரகமான சனி பகவான் பார்வை செய்வதும் ஒரு ராசியினை இரண்டு சனி பகவான் பார்வை செய்வதற்கு சமமானது ஆகும்.வளர்பிறை சந்திரன் மற்றும் குரு பகவான் பார்ப்பது இரண்டு குரு பகவான் பார்ப்பதற்கு சமமானது ஆகும்.


 கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானை தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகர்கிறது.சில நேரங்களில் அதாவது சூரியன் பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு வரும்போது சனி ,குரு மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டும் பின்னோக்கி நகர்வது போல் தெரிகிறது.இதனையே" வக்ர கதி "என்று அழைக்கிறோம்.ஆனால் நிழல் கிரகமான ராகு, கேது மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு வக்ர கதி கிடையாது.


 வக்ரம் பெறும் கிரகங்கள் அனைத்தும் இயல்புக்கு மாறான நிலையினை பெறுகிறது. இந்த வகையில் உச்சம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான நீசத்திற்கு நிகரான பலன்களை தருகிறது இதே போல நீசம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான உச்ச பலனை தருகிறது.


   சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் ஆகும்.சூரியனுக்கு அருகிலே சுக்கிரன் மற்றும் புதன் பகவானது இருப்பதால் இதனை உள் வட்ட கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.


 புதன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் ஒரு ராசி தள்ளி காணப்படும்.சுக்கிரன் பகவான் சூரியன் உடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகள் தள்ளி காணப்படும்.ஆதலால் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்ளாக சூரியனை நெருங்கும் போது வக்ரம் அடைகிறது.


 மாபெரும் சூரிய ஒளிக்கு முன்பாக செல்லும் கிரகங்கள் தனது சுய ஒளியை இழந்து அஸ்தமனம் அடைகிறது.நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைவதற்கு பதிலாக கிரகண தோஷத்தை தருகிறது .அதாவது சூரிய மற்றும் சந்திர ஒளியினை பூமியில் விழ விடாமல் மறைக்கிறது.


 ராகுவால் உண்டாகும் கிரகணத்தை போல கேதுவால் உண்டாகும் கிரகணம் வெகுவாக ஒளியை மறைப்பது கிடையாது.


பொதுவாக நிழல் கிரகமான ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு ஏழாவது வீட்டில் அதாவது 180 பாகை அளவில் கேது பகவான் வாசம் செய்கிறார்.

 இவற்றிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கருதிக் கொள்ள வேண்டும்.


 பொதுவாக புதன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் கிடையாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


பொதுவாக உச்சம் பெற்ற கிரகங்கள் அந்த வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நீசம் அடைகிறது. நீசம் அடைதல் என்பது தனது ஸ்தான பலத்தை இழந்து நிற்கிறது என்று அர்த்தம்.


 இவ்வாறு ஸ்தான பலத்தை இழந்து நிற்கும் கிரகங்கள் நீசம் பங்கம் பெறும் போது அவை உச்சத்தை விட வலிமை பெற்ற கிரகமாக மாறுகிறது.


   1)நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் அடைந்தாலும் ,

    2)நீசம் பெற்ற கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்து நின்றாலும் ,


      3)நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும்


      4) நீசப் பெற்ற கிரகத்தின் சொந்த வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றாலும் ராசியிலும் வம்சத்திலும் ஒரே ராசியில்,


      5) நீசம் பெற்ற கிரகங்கள் ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டிலும் ஒரே ராசியில் நின்று வர்கோத்தமம் என்ற அடிப்படையில் நீச பங்கம் பெறுகிறது.


    அதேபோல ஜாதகத்தில் திக்பலம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.அதே திக் பலம் பெற்ற‌ கிரகம் ஆனது திக் பலம் பெற்ற வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு வரும் பொழுது நிஷ் பலம் பெறுகிறது.நிஷ் பலம் என்பது தன் பலம் இழந்த நிலையை அடைகிறது.


 லக்னத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் திக் பலம் பெறுகிறது. நான்காம் இடத்தில் சந்திரன் பகவானும் மற்றும் சுக்கிர பகவானும் திக்பலம் அடைகிறது. ஏழாம் இடத்தில் சனி பகவான் திக்பலம் அடைகிறார் .பத்தாம் இடத்தில் சூரியனும் மற்றும் செவ்வாயும் திக்பலம் பெறுகிறது.


  ஏழாம் இடத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் நிஷ் பலம் பெறுகிறார்கள். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் நிஷ் பலமடைகிறார். நான்காம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் திக் பலம் இழக்கிறார்.பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் திக் பலம் இழக்கிறார்.


      ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் திக்பலம் பெரும்பொழுது அவை இழந்த வழுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தமாகும். எல்லாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீசம் பெற்று இருந்தாலும் அதை திக்பலம் என்ற ராசியில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.

 சில நேரங்களில் ஒரே ராசியில் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறது என்று அர்த்தம்.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  (All in one cell)

 97151 89 647

Cell

9715189647

   7402570899..


Email masterastroravi@gmail.com



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

Wednesday 21 September 2022

துல்லியமான ஜாதக பலன்களை பெற...

 துல்லியமான ஜாதக பலன்களை பெற...

                 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகத்தில் துல்லியமாக பலன்களை கணிப்பதற்கு ஏராளமான மூல  விதிகள் தெரிந்து இருக்க  வேண்டும்.ஒரு  ஜாதக பலன் பார்க்கும் போது அத்தனை விதிகளும் ஜோதிடரின் மனதில் நினைவுக்கு வர வேண்டும் . சாதகம் பார்க்க வருபவருடைய கர்ம வினையுடன் இது தொடர்பு கொண்டது ஆகும்.


    ஒருவருக்கு அவயோக தசை மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகர் சந்திக்கும் ஜோதிடர் சரியான முறையில் கணித்து பலனளிக்க தெரியாத நபராகவோ அல்லது எல்லா விதிகளும் மற்றும் விதி விலக்குகள் நினைவுக்கு வராமல்  கணிக்க தவறிய நிலை உண்டாகும்


ஒரு ஜாதக பலன் துல்லியமாக பெற வெறும் விதிகளை மட்டும் நம்பிக்கொண்டு பலனை அளித்தோம் என்றால்  அதன் பலன் தவறாகி போய்விடும். எனவே ஒவ்வொரு 

விதிகளுக்குள்ளும்  உள்ளே உள்ள விதிவிலக்குகளை  கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.


  பொதுவாக கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நற்பலன்களை தரும் என்றாலும் ,  விதிவிலக்காக மேஷ லக்கனத்திற்கு புதன் பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நல்ல பலனைத் தருவதில்லை.


 ராகு பகவான் பற்றிய யூடியூப் லைவ் நிகழ்ச்சியில் ராகு பகவான்  ஒரு இடத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்டால் ராகு தசை நல்ல பலனைத் தராது என்று விளக்கி கொண்டு இருந்தேன்.


 அதில் சொளந்தர பாண்டியன் என்ற யூடியூப் சப்ஸ்க்ரைபர் எனது ஜாதகத்தில் பண்ணிரெண்டாம் இடத்தில்  ராகு இருந்து சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பில் இருந்தாலும் எனக்கு நீங்கள் கூறியது போல அல்லாமல் ராகு தசை சிறப்பாக உள்ளது என்று கூறினார்.


12ஆம் இடத்தில் உள்ள ராகு பகவானை சனி மற்றும் செவ்வாய் பார்த்தால் அந்த ராகு தசை நல்ல பலனை தராது என்பது விதியாக இருந்தாலும் அந்த விதிகளுக்குள்ளும் சில விதிவிலக்குகள் இருந்திருக்க வேண்டும். எனவே நிச்சயமாக விதிவிலக்குகள் இருந்ததால் தான் உங்களது ஜாதகத்தில் 12-ல் உள்ள ராகு  பகவானை சனி மற்றும் செவ்வாய் பாவிகளால்  பார்க்கப்பட்டாலும் நல்ல பலனை தருகிறது என்று கூறினேன். அதன் பிறகு அவர் ஏனைய பிற அமைப்புகளை என்னிடம் கூறினார்.அதில் உள்ள விதிவிலக்குகள் இருந்தது. அதை உங்களோடு விளக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


   அவரது ஜாதகம் மகர லக்கனம் இரண்டாம் இடத்தில் சூரியன்  மற்றும் குரு (இங்கு குரு சூரியன் உடன் அஸ்தமனம் என்றார்.), ரிஷபத்தில் செவ்வாய்  ,

மிதுனத்தில் சனி கேது மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் தனுசு ராசியில் ராகு பகவான் வாசம் செய்கிறார்.


இவரது ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் உள்ள ராகு பகவானை மிதுனத்தில்  உள்ள சனி பகவான் தனது ஏழாவது பார்வையாலும் மற்றும்  ரிஷபத்தில் உள்ள செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து பாவத்துவம் அடைந்து இருந்தாலும் இந்த ராகு பகவான் தனது தசையில் நல்ல யோக பலனை சாதகருக்கு வழங்கிக் கொண்டு உள்ளார் இது எப்படி சாத்தியம் என்று விதிவிலக்குகளை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம்.


  பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குருவின் மனை ஏறி உள்ளார்.மேலும் மிதுனத்தில் உள்ள சனி பகவான் ஶ்ரீ கேது பகவான் உடன் இணைந்து சூட்சும வலுவினை பெற்று கும்ப வீட்டில் இருந்து தனது ஐந்தாவது பார்வையால் பார்த்து சனி பகவானின் தீய சக்தி வடிகட்டப்பட்டு பார்வை செய்வதால் சனியின் பார்வையால் எவ்வித பங்கமும் ராகு பகவான் அடையவில்லை.மேலும் லக்கன யோகரான இயற்கை சுப கிரகமான சுக்கிரன் வீட்டில் அமர்ந்து பார்வை செய்யும் செவ்வாயின் எட்டாம் பார்வையும் ராகு பகவானை பாதிப்பது கிடையாது.


 எனவே குரு மனை ஏறியிருந்த ராகு பகவான் குரு பகவானை போல செயல்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு தரும் அமைப்பில் இருக்கிறார்.


  எனவே ஜாதகத்தில் நாங்கள் தரும் விதிகளை அப்படியே எடுத்து கொண்டு எல்லா ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரி பலன் அளிக்க முற்பட்டால் ஜோதிடரால் தரப்படும் பலன்கள் கட்டாயம் தவறிவிடும்.


 எனவே ஒவ்வொரு பொது விதிகளுக்குள்ளும் பொது விதி மற்றும் சிறப்பு விதி என்று உள்ளது.அதனை கட்டாயம் அறிந்து கொண்டால்தான் துல்லியமான பலன்களை ஜாதகருக்கு தர இயலும்.


நன்றி.


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  (All in one cell no)

 9715189647


   Cell

 7402570899

   9715189647


Email masterastroravi@gmail.com


               



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

‌.  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..

ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

 ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

                        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு இன்பங்களை அல்லது துன்பங்களை அதாவது ஏற்ற/இறக்கங்களை அனுபவித்து இருப்பான் என்பதை

 அவன்/அவள் ஜாதகத்தில் ஜெனன காலத்தில் இருந்து ஜாதகம் பார்க்கும் காலகட்டம் வரை நடைபெற்ற தசா புக்திகளையும் மற்றும் கோச்சார பலன்களை  கொண்டும் எளிதாக கணித்து விடலாம்.


 மனித வாழ்வில் முக்கியமான காலகட்டங்களை தசாபுத்தி கொண்டு நடந்தவை மற்றும் நடக்க இருக்கும் சம்பவங்களை உறுதி செய்து கொள்ள முடியும்.


     ஒரு மனிதனுக்கு எவ்வளவு இன்னல்கள் அல்லது எவ்வளவு யோகங்கள் வந்தாலும்  அதிலிருந்து விடுபட அல்லது அதை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய வலிமை மிகவும் அவசியமானதாகும்.


  சிலருக்கு லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் கெட்டு இருந்தாலும் ராசியும், ராசியாதிபதியும் கெடாத நிலையில் ஓரளவு சமாளிக்க கூடிய தன்மையை சாதகருக்கு கொடுக்கும்.


  லக்கனம் மற்றும் ராசி அதன் அதிபதிகள் பலம் இழந்த நிலையில் எவ்வளவு யோகம் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை அற்றும் காணப்படுவர்.


   ஒருவருக்கு லக்கனாதிபதி கெடாது நிலையில் இள வயதில் உகந்த யோக தசைகள் வந்து இண்டு ,நான்கு, ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம்  மற்றும் குருவும், புதனும் கெடாத நிலையில் உயரிய கல்வி நிலை அடைந்து அதன் வழியில் பொருளீட்டி புகழ் பெறுவார்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று தன-பாக்கிய-லாப ஸ்தானமும் மற்றும் அதன் அதிபதியும் பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை  மூலமாக வலுப்பெற்ற நிலையில் இதில் ஏதாவது ஒரு தசை அல்லது யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் பல கோடிக்கணக்கான பொருள் ஈட்டி கோடீஸ்வரர் ஆகலாம்.


இதேபோல ஒருவர் ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து ஏதாவது ஒரு தசை நடத்தினால் கடல் கடந்து அந்நிய தேசத்தில் பொருளீட்டி வாழக்கூடிய நிர்பந்தம் உண்டாகும்.


 திருமண ஸ்தானங்களான லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் போன்றவற்றுடன் சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு ஏற்படுமாயின் கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.மேலும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


மேற்கண்ட ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் வலுப்பெற்று சுபத்துவ நிலையில் நின்று தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரு கிரகங்களும் சுபத்துவ நிலையில் வலிமை அடைந்து இருப்பின் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று நிறைவான தாம்பத்திய சுகத்தை அனுபவித்து புத்திர பாக்கியத்தை பெற்று நிறைவான வாழ்க்கை வாழக்கூடிய நல்ல யோகத்தை பெற்று இருப்பார்கள்.


  சில ஜாதகங்களில் மேற்கண்ட 1,2,7,8 ஆம் இடங்களும் அதன் அதிபதிகள் ,களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குருபகவான் போன்றவற்றுடன் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு கொள்ளும் போது பாவத்துவ படிநிலைகளுக்கு ஏற்ப கால தாமதம் திருமணம், திருமணத்திற்கு பிறகு பிரிந்து வாழும் நிலை மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.


ஒருவருக்கு மறைவிட ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெற்று சுபத்துவ நிலையினை அடைந்து எட்டு மற்றும் பன்னிரண்டாம் இட தசை நடப்பில் உள்ள காலங்களில் அந்நிய தேசத்தில் பொருளீட்டல், லாட்டரி, ரேஸ் ,ஷாக்பாட் ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் பொருளீட்டி புகழ் பெறும் யோகம் உண்டாகும்.


 ஒருவரது எண்ணங்களும் மற்றும் செயல்களும் எதை நோக்கி நகரும் என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள அதிக சுபத்துவமான கிரகம் எது ? என கண்டறிந்தால் எளிதாக கண்டறிய இயலும்.


  எந்த கிரகம் சுபத்துவ படிநிலையில் முதலாவதாக உள்ளது என்று கண்டறிந்து பிறகு துணை நிலை சுபத்துவ கிரகங்களை கண்டறிய ஒருவர் மேற்கொண்டு இருக்கும் தொழில்நிலையை அறியலாம்.பிறகு அவருக்கு நடப்பில் இருக்கும் தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களை கொண்டு அந்த தொழிலில் எந்த அளவுக்கு உயர்ந்து இருப்பார் என்பதை கண்டறியலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

      செல்

  9715189647

   7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிடத்தில் மாறுபட்ட பார்வை

 ஜோதிடத்தில் மாறுபட்ட பார்வை

                      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


    ஜோதிடம் என்பது பரந்து விரிந்த மகா சமுத்திரம் ஆகும். அதில் மூழ்கி ஜோதிட முத்தை எடுப்பதற்கு ஆழ்ந்த புலமையும் மற்றும் நீண்ட அனுபவமும்  மிகவும் தேவைப்படுகிறது.


 ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானமும் மற்றும் தெளிவான புலமையும் நிரம்ப பெறாதவர்கள் சில மேலோட்டமான அடிப்படை விதிகளையும், மற்றும் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள சில விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்படுவார்கள்.


   பலன் கூற முற்படும் போது ஒவ்வொரு விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விதிகளுக்குள்  உள்ள விதிவிலக்குகள் தெரிந்து கொள்வதற்கு நிறைய பல ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்து பலன் சொல்லும் நபருக்கே இந்த சூட்சும உண்மை புலப்படும்.ஜோதிட

மூல விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்பட்டால் பலன் தவறாக போய் முடிந்து விடும்.


 திருமண பொருத்தம் பார்க்கும் போது தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.பொருத்தம் பார்க்கும் போது வெறும்   நட்சத்திர பொருத்தங்களை மட்டுமே வைத்து கொண்டு பொருத்தம் உள்ளது //இல்லை என்று ஜோதிடர்களால்  தரப்படும் திருமண பொருத்தம் பெரும்பாலும் தவறாக சென்று விட கூடும்.


 பெரும்பாலான ஜாதகத்திற்கு நட்சத்திரம் பொருத்தம் சிறப்பாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலை அமைப்புகள்,தசா அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் நல்லபடியாக அமைந்தால் கட்டாயம் அந்த தம்பதிகளுக்கு விவாகம் செய்யலாம்.


 சில நேரங்களில் நட்சத்திர பொருத்தம் 10/12  உத்தமம் என்று இருக்கும் ஆனால் இருவரது ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் நல்ல அமைப்புகளில் இல்லாமல் தசா புக்தி சந்திப்பு மற்றும் கோச்சார பலன்கள் ஒத்ததாக இல்லாமல் இருக்கும் போது நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஜோதிடர் விவாகம் செய்யலாம் என திருமணம் செய்து கொள்ள செய்வார்கள்.திருமணம் ஆன சில மாதங்களில் ஒத்த கிரக அமைப்புகள் மற்றும் தசாபுத்தி அமைப்புக்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவுகள் வந்து விட வாய்ப்பு உண்டு.


 ஜோதிடத்தை தொழில் முறையாக கொண்டுள்ள ஜோதிடர்கள் பரந்து விரிந்து கிடக்கும் ஜோதிடவியலில்  தினந்தோறும் படித்தும், ஆராய்ந்து பார்த்தும் மற்றும் பல வகையான ஜாதகங்களை பார்த்து ஆய்வு செய்து பலன் சொல்ல பழகியும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இருக்க வேண்டும் (update). இவ்வாறாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சோதிடர்களால் தான் கால பரிமாணத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பலன் அளிக்க முயல வேண்டும்.


இவ்வாறாக தன்னை அப்டேட் செய்து கொள்ளாத நிலையில் தான் ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம்  மற்றும் மூல நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது.  ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை நட்சத்திரம் கேட்டவர்களுக்காகாது , அல்லது மூத்த மைத்துனருக்கு ஆகாது,.விசாகம் நட்சத்திரம் இளைய  மைத்துனருக்கு  ஆகாது போன்ற விஷயங்களையும் எடுத்துக் கொண்டு கிரக ஆராய்ச்சி செய்யாமல் பொருத்தம் பார்த்து பலன் சொல்லும் போது பலன் துல்லியமாக இல்லாமல் போய் விடுவதுண்டு.


  மூலம் நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது என்றால் அவரது மாமனார் ஜாதகத்தில் அவரது ஆயுள் பலமாக இருக்கும் பட்சத்தில் மூல நட்சத்திரம் குறித்து பயம் கொள்ள தேவையில்லை.


       செவ்வாய் பகவான் ஜாதகத்தில் 2,4,7,8, 12 ஆம் இடத்தில் நிற்ப்பின் செவ்வாய் தோஷம் ஆகும்.செவ்வாய் தோஷம் உயிரை கொல்லும் அளவிற்கான மோசமான தோஷம் அல்ல.

இங்கு விதிவிலக்காக அதேநேரத்தில் செவ்வாய் பகவான் உச்சம் , ஆட்சி மற்றும் நீசம் பெற்று இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவதும் சரியானது அல்ல.


பாவ கிரகம் நேர்வலு பெறக்கூடாது என்ற வகையில் 1, 2,4,7,8 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நின்றால் செவ்வாய் தோஷம் இல்லை என்றாலும் பாவ கிரகம் என்ற வகையில் ஸ்தான வலுப்பெற்று திருமண ஸ்தானங்களான 1,2,7,8 உடன் தொடர்பு கொண்டு பாவத்துவமடைய செய்யும் என்ற வகையில் செவ்வாய் பகவான் மேற்கண்ட ஸ்தானங்களில் உச்சம், ஆட்சி பெற்று நிற்க கூடாது.


ஜோதிடத்தில் மூல நூல்களில் தரப்பட்ட கருத்துக்கள்  அந்த அந்த காலகட்டங்களுக்கு ஏற்ப தனி நபர் வாழ்வில் நடந்த சோதிட கருத்துக்கள் பாடலாக்கி தந்து உள்ளார்கள்.அப் பாடல் கருத்துக்கள் இந்த காலத்தில் அப்படியே பலன் தரும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.


 ஜோதிடத்தில் பலன் கூற முற்படும் போது ஸ்தான வலு ,கிரக சேர்க்கைகள், பார்வை, இருக்கும் இடம்  மற்றும் நட்சத்திர சாரம் போன்றவற்றை பாகை அடிப்படையில் ஆய்வு செய்து நிறைவாக சுபத்துவ மற்றும் சூட்சும வலுவிற்கு ஏற்பவே பலன் அமையும் 


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  9715189647


   செல்

 9715189647

 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                   


அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.SC,M.A,BEd

ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,.

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..

கிரக பார்வை நுணுக்கங்கள் -(2)

 கிரக பார்வை நுணுக்கங்கள்-(2)

                        


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு ஜாதகத்தில் குரு பகவான்

 மற்றும் வளர்பிறை சந்திரன் எந்த ஸ்தானங்களை பார்க்கின்றோதோ, அவை தொடர்புடைய ஆதிபத்தியம் வலுப்பெற்று நல்ல பலனைத் தருகிறது.இவை எந்த கிரகத்தினை பார்க்கின்றதோ , அந்த கிரகம் தரும் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை அதிகரிக்க செய்கிறது.


  சில நேரங்களில் ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்பு எந்த ஸ்தானங்களில் அமைகின்றதோ அந்த  ஸ்தானமானது பலமாக பாதிக்கப்படுகிறது.


    ஒரு ஜாதகத்தில் எந்த ஸ்தானங்களில் எல்லாம் சனி, ராகு மற்றும் சனி, செவ்வாய்  சேர்க்கை அல்லது சனி , ராகு  சேர்ந்து செவ்வாயால் பார்க்கப்படும் அமைப்பு  செவ்வாய், ராகு  சேர்ந்து சனியால் பார்க்கப்படும் அமைப்பு.


  மேற்கண்ட வகையில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்களில் இருந்தாலும் அவை தொடர்புடைய கிரக தசைகள் நடப்பில் இருக்கும் காலங்களில் மட்டுமே அதிக பாதிப்பை ஜாதகருக்கு தருகிறது.


   சில நேரங்களில் மேற்கண்ட வகையில் ஜாதக அமைப்புகள் இருந்தும்  அவை தொடர்புடைய தசை புக்திகளில் எவ்வித கெடுபைனை தரவில்லை எனில் அவ்விரு கிரகங்கள் குறிப்பிட்ட இருபத்திரண்டு பாகை தள்ளி இணைந்து இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் அடைந்து இருந்தாலும் நல்ல பலனைத் தந்து விடுவதுண்டு.


  ஒட்டுமொத்த பாவத்துவத்தை குரு பகவானது ஒற்றை பார்வை எல்லாவற்றையும் ‌சுபத்துவமாக்கி விடுகிறது.


 ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று சுப கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் சனி பகவானின் ஒற்றை பார்வை முழுமையாக மொத்த  அமைப்பையும் பாவத்துவமாக்கி கெடு பலன்களை செய்ய வைத்து விடுகிறது.


 இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களை சனி பகவான் தனது 3,7,10 ஆம் பார்வையால் பார்க்கப்பட்டாலும் , இவ்வாறு பார்க்கப்படும் சனி பகவானை ,குரு பகவான் பார்த்தால் சனியின் பார்வையில் தீய சக்தி குரு பகவானது பார்வையால் வடிகட்டப்பட்டு  நல்லதை தராவிட்டாலும் கெடுப்பலனை தர இயலாமல் போய்விடுகிறது.


  ஒரு சில ஜாதகங்களில் சனி பகவானோ   அல்லது குரு பகவானோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மேலோட்டமாக   பார்க்கும்போது பார்ப்பது போல் தோன்றினாலும் பாகை (degree) அடிப்படையில் பார்க்கும்போது அவை அந்த கிரகத்தை பார்த்து பாவத்துவம் செய்யாமல் இருந்து விடுவதும் உண்டு.


  செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு பகவான், சந்திரன்,சூரியன் மற்றும் கேது பகவானை பார்க்கும் போது பாவத்துவம் அடைய செய்ய மாட்டார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஒரு ஸ்தானத்தையோ அல்லது ஒரு கிரகத்தையோ பார்வை செய்தால் மிகுந்த பாவத்துவத்திற்கு உள்ளாகிறது.


 சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு மிகுந்த பாவத்துவம் நிறைந்த ஜாதகமாகும்.உதாரணமாக மகர வீட்டில் ஆட்சி நிலையில் உள்ள சனியை துலாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக பார்க்கிறது.இதேபோல மகரத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் துலாத்த்தில் உள்ள சனி பகவானை பார்வை செய்கிறது.


இதேபோல மகரத்தில் உச்சம் நிலையில் உள்ள செவ்வாய் பகவான் மேஷத்தில் உள்ள நீச நிலையில் உள்ள சனி பகவானை நான்காம் பார்வையாக பார்க்கின்றது.மேஷத்திவ் நீச நிலையில் உள்ள சனியை பத்தாம் பார்வையாக மகரத்தில் உள்ள உச்சம் பெற்ற செவ்வாய் பகவானை பார்க்கிறது.


 மேற்கண்ட இது போன்ற ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் சனி மற்றும் செவ்வாய் எந்த ஸ்தானத்தை அல்லது கிரகத்தை பார்க்கின்றதோ அவை மிகுந்த பாவத்துவ நிலையை அடைந்து விடுகிறது.


 இதேபோல செல்வாராம்  பார்க்கப்பட்ட சனியின் பார்வையோ அல்லது சனியால்  பார்க்கப்பட்ட செவ்வாயின் பார்வையோ பார்க்கின்ற ஸ்தானத்தையோ அல்லது கிரகத்தையோ மிகுந்த பாவத்துவமாக்கி கெடு பலனை  சாதகருக்கு தர வைத்து விடுகிறது.


 குரு பகவானால் பார்க்கப்பட்ட வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.இதேபோல வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் மற்றும் குரு பகவான் ஆகியவற்றால் பார்க்கப்பட்ட எந்த கிரகம் மற்றும் ஆதிபத்தியம் இரண்டும் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & டெலிகிராம் & கூகுள் பே (All in one cell.)

    9715189647


   Cell : 7402570899

              9715189647


Email masterastroravi@gmail.com


              



By

Astro Ravichandran

  M.Sc,M.A,BEd

Teacher & Astrologer

Omsakthi online Astro consulting centre,,

Karambakkudi, Pudukkottai District.

Tuesday 19 July 2022

லக்கனம் முதலாக 12 பாவகம் தரும் பலன்கள்

 லக்கனம் முதலாக 12 பாவகம் தரும் பலன்கள்.

             


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒரு மனிதன் எப்படி இருப்பான்?, 

எப்படி நடந்து கொள்வான் ? மற்றும் அவனது வாழ்வின் வழி நிலையையும் ,செயல் திறனையும் லக்கனத்தை கொண்டு அறியலாம்.


 ""எத்தனை பெரிய மனிதனிடம் எத்தனை சிறிய குணம் இருக்கு !

எத்தனை சிறிய மனிதனிடம் எத்தனை பெரிய குணம் இருக்கு!""


  ஒருவரது நல்ல குணநலன்களுக்கும் மற்றும் குண கேடுகளுக்கும் அவரது  ஜாதகத்தில் லக்னாதிபதி,  லக்கனத்தில் உள்ள கிரகம் மற்றும் லக்கனத்தை பார்க்கின்ற கிரகங்கள் இவற்றை பொறுத்து அமைகிறது.


  ஒருவரது புகழ், அந்தஸ்து, கௌரவம் மற்றும் தேஜஸ் போன்றவற்றை லக்கின பாவகமே முடிவு செய்கிறது


  லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து லக்னத்தை குரு பார்த்த சாதக அமைப்பு அல்லது லக்கனத்தில் குரு இருக்கும் ஜாதக அமைப்பு உடையவர் நல்ல குணம் உடையவராகவும், நல்லவற்றை எண்ணக் கூடியவராகவும், சிந்திக்க கூடியவராகவும் மற்றும் நற்செயல் புரிபவராகவும் இருப்பார். அடுத்தவர் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுபவராகவும் இருப்பார். பொருளாதய உலகில் மற்றவரை வஞ்சித்து பொருள் ஈட்ட தெரியாத நல்ல குணங்கள் உடையவர்.  மற்றவரை வஞ்சித்து சம்பாதிக்க தெரியாத ஏமாளி ஆவார்.


  லக்கனாதிபதி சனியாக இருந்து லக்னத்தில் இருந்தாலும், லக்கனத்தை சனி பார்த்தாலும்   ஜாதகர் சோம்பேறி, சுறுசுறுப்பு இல்லாத மந்த குணம் உடையவராகவும் மற்றும் மற்றவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் குணம் கொண்டவராக திகழ்வார்.

 மற்றவருடைய துன்பத்தை கண்டு ரசிக்கும் கொடூர குணம் இருக்கும். எப்படியாவது பிறரை வஞ்சித்து  சொத்து சேர்க்கும் குணம் உடையவராக விளங்குவார்.


  அருள் அணி என்று அழைக்கப்படும் குரு பகவானை தலைவனாக கொண்ட சந்திரன், செவ்வாய் ,சூரியன்  மற்றும் கேது ஆகியவற்றை அடக்கிய அருள் அணியை சேர்ந்த லக்கனங்களான தனுசு, மீனம், மேஷம், விருச்சகம் , கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கணங்களை  லக்கணமாக கொண்டவர்கள்   பொருள் ஈட்டும் எண்ணத்தை விட உள்ளதைக் கொண்டு நல்லது என்னும் பெருந்தன்மை உடையவர் என்பதால் இதனை "அருள் அணி "என்கிறோம்.


  பொருள் அணி என்று அழைக்கப்படும் சனி, புதன் ,சுக்கிரன்  மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் கொண்ட மிதுனம் ,கன்னி, ரிஷபம் ,துலாம் ,மகரம்  மற்றும் கும்பம் ஆகிய ஆறு அணியைச் சேர்ந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் , அனைத்து ஆடம்பர வசதிகளையும் அனுபவிக்கும் எண்ணம் உடையவராகவும் அதே நேரத்தில் மனதளவில் என்றும் அமைதி இல்லாதவராகவும் திகழ்வார்கள்.


ஒருவர்  மேற்கண்ட எந்த அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அதாவது  அருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது பொருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் சுபத்துவம் ஒன்றே விதிவிலக்கு ஆகும். ஒரு ஜாதகர் எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்தை குருபார்த்த அமைப்பு சாதகரை நல்வழியில் இட்டுச் செல்லும்.


   ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் இயற்கை பாவ கிரகங்களான சூரியன், தேய்பிறை சந்திரன், சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது இருந்தாலும் அல்லது சனி அல்லது செவ்வாய் தனித்தனியாக பார்த்தாலும் அல்லது சேர்ந்து பார்த்தாலும் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும் அல்லது அந்த கிரகமும் பாவத்துவமாகி  பாதிக்கப்படும்.


 இவ்வாறாக பாதிக்கப்பட்ட ஸ்தானம் எந்த ஸ்தானமான இருந்தாலும் அவை தொடர்புடைய ஆதிபத்தியம் பலன்கள் அதன் தசையில் பாதிக்கப்படும்.இதேபோல பாவத்துவமான கிரக காரக பலன்களும் ஜாதகருக்கு பெருமளவு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை தரும்.


  ஒருவரது  ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனை கொண்டவர்கள் ஜாதகத்தில் இரண்டு சனி பகவானை ஜாதகத்தில் கொண்டவர் ஆவார்.அதேபோல வளர்பிறை சந்திரனை கொண்டவர்கள் இரண்டு குரு பகவானை சாதகத்தில் கொண்டவர்கள் ஆவார்கள்.


 ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் பாவத்துவம் பெறாமல்

சுப கிரகங்களான குரு , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை தொடர்பாக கொண்ட ஸ்தானமும் மற்றும் கிரகமும் அதன் தசையில் சுபத்துவமாகி நல்ல பலனைத் தருகிறது.


   பொதுவாக லக்கனாதிபதி வலுப்பெற்று பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள், வளர்பிறைச் சந்திரனுக்கு ஆறு, ஏழு எட்டில் இயற்கை சுப கிரகங்களை குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஐ பெற்றவர்கள் , ராசி, லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகிய ஏதாவது ஒன்றை குரு பார்த்த அமைப்பை பெற்றவர்கள்.ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் குரு அல்லது வளர்பிறை சந்திரன் பார்க்கின்ற அமைப்பை பெற்றவர்களும் யோகசாலிகள் ஆவார்.


 லக்கன ஆதிபத்திய  காரகராக சூரிய பகவான் விளங்குகிறார்


    ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடத்தைக் கொண்டு தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றையும்,


  இரண்டாம் இடத்தை கொண்டு ஒருவருக்கு வரக்கூடிய தன வரவையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம்.

இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இரண்டாம் இடத்தை இயற்கை சுபகரங்களால் பார்க்கப்பட்ட அமைப்பை பெற்றவர்கள் நேரிய வழியில் தனம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.


 அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் ராகு, சனி, செவ்வாய் இருந்தாலும் தனஸ்தானத்தை சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நேரிய வழி அல்லாத வகையில் பணம் சம்பாதிப்பவராக இருப்பார்.


    பனிரெண்டாம் இடத்திலிருந்து  சனி பகவான்  மூன்றாம் பார்வையாக வாக்கு ஸ்தானத்தை பார்க்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் பொய் சொல்லி பிழைக்கும் தொழிலான வழக்கறிஞர் போன்ற துறைகளில் ஈடுபடுவார்.


  ஒருவருடைய கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை இரண்டாம் இடத்தைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.


   வீட்டை விட்டு வெளியில் சென்று பொருளீட்டி வீடு செல்லும் ஆடவர்க்கு மன அமைதியை தேடும் இடம் குடும்பமாகும் அந்த ஒரு குடும்பம் ஒரு கோவிலாக ஒரு மன அமைதி மிக்க இடமாக மாற இரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்க வேண்டும்.


 இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அவை களத்திர ஸ்தானத்திற்கு அதாவது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணைக்கு எட்டாம் இடம் என்பதால் அதில் இருக்கும் கிரங்கம் அதன் தசா புத்திகளில் சா

அதாவது வாழ்க்கை துணைக்கு கெடுபுலனை தரும்.


   தனக்காரகனாக குரு பகவான் திகழ்கிறார். ஒருவருக்கு பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி, ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தருபவர் குரு பகவானே ஆவார்.


 தனக்காரகன் ஆன குருபகவான் தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்வது காரகோ பாவ நாஸ்தி என்றாலும் இரண்டாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனத்தை தவிர ஏனைய பிற அமைப்பான குடும்ப, வாக்கு, கல்வி மற்றும் நேத்திரம் ஆகியவற்றை பாதிக்க மாட்டார்.


  

  மூன்றாம் இடத்தைக் கொண்டு கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து ,கற்பனை உணர்வு, காம வீரியம், எழுத்து, இசை ஆர்வம் , இளைய சகோதர ஸ்தானம், செவி ,செவி வழி செய்திகள்,இளைய சகோதரர்களை பற்றி அறிந்து கொள்ளுதல்,


  "  தம்பி உடையான்  படைக்கு அஞ்சான்" என்பார்கள். ஒருவருக்கு அமைந்த சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள உதவுகிறது.


    நான்காம் இடத்தை கொண்டு தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் , வண்டி வாகன சுகம் , வீடு  ,கல்வி நிலை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


  நான்காம் இடத்தைக் கொண்டும் மற்றும் மாதுர்காரகனான சந்திரன் பகவானை கொண்டும் டி ஒருவருக்கு அமையக்கூடிய தாய் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. நான்காம் இடம் அதன் காரகரான சுக்கிர பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து வண்டி வாகனம் மற்றும் தனக்கு அமையக்கூடிய வீடு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். தனக்கு அமையக்கூடிய வீடு மாளிகை போன்ற வீடா மச்சி வீடா, ஓட்டு வீடா என்பது போன்ற விவரங்களையும் இதிலிருந்து அறியலாம். 


    ஆடி கார், பிஎம்டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்களின் வலம் வரக்கூடிய யோக  அமைப்பையும் நான்காம் இடத்தை கொண்டும் மற்றும் வாகனக்காரன் சுக்கிரனை கொண்டும் முடிவு செய்யப்படுகிறது.


 ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம், புத்திர பாக்கியம், புத்தி, அம்மன் வர்க்கம் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


 ஒருவர் தனது புத்தியை நேர்வழியில் பயன்படுத்துகிறாரா ? அல்லது குறுக்கு வழியில் பயன்படுத்துகிறாரா ?

 என்பது போன்ற விவரங்களை ஐந்தாமிடத்தின்  சுபத்துவம் அல்லது பாவத்துவ நிலை கொண்டு ஆராயப்படுகிறது.


 ஐந்தாம் இடத்திற்கு காரகராக குரு பகவான் திகழ்கிறார் ஐந்தாம் இடத்தை கொண்டும் மற்றும் அதன் புத்திர காரகன் குருபகவானை கொண்டும் தனக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


 ஆறாம் இடம் ருணம் ,ரோகம், கடன் ,பிணி எதிர்ப்பு ,மானம் ,அவமானம் ஆள் அடிமை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


  ஆறாம் இடம் சனி , செவ்வாய்  போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அல்லது ஆறாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் போன்றார்கள் இடம்பெற்றாலோ தனக்கு தேவையில்லா கடன், பிணி , எதிர்ப்புகள் இல்லாமல் போய்விடும் .ஆனால் அதே நேரத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்த சனி அல்லது செவ்வாய் தசைகள் வரும் பொழுது கடினமான வேதனையை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.


 ஆறாம்  இடம் கெட்டால் எந்த வேலையும் கிடைக்காது. ஆறாம் இடம் என்பது ஆள் அடிமைத்தனமாகும் .ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் கெட்டு அதேநேரத்தில் ஆறாம் இடம் வலுத்தால் பிறரிடம் சென்று வாழ்நாள் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.


  ஆறாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் பார்த்து வலு பெறக்கூடாது.


 ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும்.

தனக்கு வரும் வாழ்க்கைத் துணை பற்றி அறிந்து கொள்ளவும் ,தனக்கும் வாழ்க்கை துணைக்கும் உள்ள அந்தரங்க உறவு நிலைகளை அறிந்து கொள்ளவும் நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.


எட்டாம் இடம் ஆயுள், வம்பு, சண்டை, வழக்கு, வீண் விவாதம் , மறைபொருள் உண்மைகள் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் ஆகும். பாக்கிய நிலை பற்றி அறிந்து கொள்ளவும் , தந்தை வழி உறவுகளை அறிந்து கொள்ள ,தந்தையை பற்றி அறிந்து கொள்ள ,தனக்கு வரக்கூடிய வருமானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, தான தர்ம குணங்கள் மற்றும் மேல்நிலைக் கல்வி போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படுகிறது.


  தனக்கு அமையக்கூடிய தந்தை எப்படிப்பட்டவர்? தந்தை வழி ஆதரவுகள் உண்டா? தந்தை வழி உறவுகளால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்குமா? போன்ற விஷயங்கள் ஆராய பயன்படுகிறது


 ஒருவருடைய ஜீவனம் ,தொழில் நிலை மற்றும் கர்ம நிலைகள் பற்றி அறிந்து கொள்ளப்படுகிறது.


 தொழிற் ஸ்தானமாக பத்தாமிடத்தை கருதினாலும் பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்களை மட்டும் வைத்து அல்லது பத்தாமிட அதிபதியினை பொறுத்து ஒருவருடைய தொழில் நிலையை முடிவு செய்து விட முடியாது. அவ்வாறு பார்க்கும் போது பெரும்பாலான சாதகர்கள் தான் செய்யும் தொழிலுக்கும் , தொழில் ஸ்தானாதிபதிக்கு  உரிய தொழிலுக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடுகிறது .


    அதிக சுபத்துவமாக எந்த கிரகம் ராசி அல்லது லக்கனத்திற்கு  தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அல்லது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில்  தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த தொழில் சாதகருக்கு அமையும்.


 பதினொன்றாம் இடம் ஒருவருக்கு லாப ஸ்தானமாகும். வாழ்வில் அவர் அடையக்கூடிய லாப நிலைகளையும், மூத்த சகோதரன் ,மறுதாரம் போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படும் இடமாகும்.

 

   ஒரு  மனித வாழ்வின் இறுதி நிலையையும் மற்றும் அவரது முக்தி நிலையையும் பன்னிரெண்டாம் இடத்தை கொண்டும் அறியப்படுகிறது. அயன், சயன மற்றும்  முக்தி நிலை பற்றி அறிந்து கொள்ள பயன்படுகிறது ஒரு நாளின் இறுதி நிலை அறிந்து கொள்ளப்படுகிறது.ஒரு நாளின் இறுதியான இரவில் நிகழும் அந்தரங்க நிலைகளையும் மற்றும் படுக்கை சுகத்தையும் அறிந்து கொள்ள பயன்படுகிறது.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & gpay

   9715189647

         Cell

 9715189647

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                       


 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com