Tuesday 28 May 2019

                        



ஜாதகத்தில் எந்த திசையானது சாதகருக்கு யோக பலனைத்தரும்?


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

   ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு இன்னல்கள் தராமல் சந்தோஷங்களை வாரி வழங்கக்கூடிய தசையானது எந்த தசையாக சாதகருக்கு இருக்கும்? என பலர் கேள்வி கேட்டதின்‌விளைவாக பலருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

   ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை அள்ளி தருவதில்  மிக முக்கியமாக கோணாதிபதியின்(1,5,9) திசையே ஆகும்.

     லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி தசையானது ஒருவருக்கு நடப்பில் இருக்கும் காலங்களில்  யோக பலன்களை  சாதகருக்கு வழங்குகிறது.

     சில நேரங்களில் சாதகருக்கு இந்த கோணாதிபதிகள் திசைகள் நடப்பில் இருப்பினும் அதன் யோக பலன்களும் சற்று குறைந்து விடுவதை காணலாம். எந்த வகையில் அந்த யோக பலனில் பங்கம் ஏற்படுகிறது என்பதை கீழ்க்கண்ட வகையில் பார்ப்போம்.

 ‌   ஒரு சில கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் இருப்பதால் அதில் ஒன்று கோணாதிபதியாக  இருந்து மற்றொன்று மறைவிட ஸ்தான அதிபதியாக வரும் பட்சத்தில் இந்த யோக பலனில் சற்று பங்கம் உண்டாகிறது.

     உதாரணமாக கும்ப லக்கினத்திற்கு புதன் ஐந்தாம் அதிபதியாக இருப்பதால் அது யோக திசை என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதனுடைய மற்றொரு ஸ்தானம் அஷ்டம ஸ்தானமாக வருகிறது.

 அதனால் ஒருவருக்கு புதன் தசை முழுவதும் யோக பலனை தந்துவிடும் என்று கணக்கிட முடியாது. குழந்தைகளுடைய 17 ஆண்டுகளில் ஒரு எட்டரை ஆண்டுகள் பஞ்சமாதிபதியாக செயல்பட்டு யோக பலனை தந்து , அடுத்து எட்டரை ஆண்டுகள் அஷ்ட‌மாதிக்குரிய பலனை தந்துவிடும்.

   அதுவும் சில நேரங்களில் கும்ப லக்னத்திற்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பது ,எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி என்ற  மும்மை வகையில் பலம் பெற்றிருந்தாலும் அவை அஷ்டமஸ்தானத்தில் பலம் பெற்றிருப்பதால் எட்டாம் இடத்தில் பலம் பெற்ற புதன் பகவானை விட ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற புதன் பகவானே யோக பலனை சிறப்பாக செய்கிறது .

  சந்திர பகவான் ஆனவர் மீன ராசிக்கு ஐந்தாம் அதிபதியாக வருவதோடு ஒரே ஸ்தானமாக இருப்பதாலும், இதேபோல சூரிய பகவான் ஆனவர் மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதியாக மட்டுமே இருப்பதால் சந்திரன் மற்றும் சூரியன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருக்கும்போது இவ்விரு ராசிகளுக்கும் மிகுந்த யோக பலனை தருகிறது அதன் தசையில் முழுவதும் தருகிறது.

  அடுத்து கேந்திர அதிபதிகள் என அழைக்கப்படும் 1 ,4, 7, 10 ஆகிய ஸ்தான அதிபதிகளின் திசைகள் யோக பலனை தருகிறது.

 இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் கேந்திர அதிபதிகள் கேந்திர ஸ்தானத்தில் இடம்பெற்றிருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் வகையில் அந்த ஸ்தான அதிபதிகள் அந்த ஸ்தானத்திற்கு மறைமுக வழியில் பலம் பெற்று நிற்கும்போதோ அல்லது திரிகோணங்களில் நிற்கும் போதோ  யோக பலனை தருகிறது.

 உதாரணமாக தனுசு லக்கினத்திற்கு லக்னாதிபதியான குரு பகவான் நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று நிற்பதைவிட லக்கினத்திற்கு எட்டாம் இடமான மறைவிட ஸ்தானங்களில் உச்சம் பெற்றிருப்பது கேந்திராதிபத்திய தோஷம் நீங்கி யோக பலனை தருகிறது.

   அடுத்து தன மற்றும் லாபம் ஸ்தான அதிபதிகள் என்று அழைக்க கூடிய 2 ,11 க்கு உரிய திசைகளும் யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது. அதில்  ஸ்திர ராசிக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்ற வகையில் சில நேரங்களில் யோகபங்கம்  உண்டாகிறது.

  ஜாதகத்தில் பாவ கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3 ,6 ,10 மற்றும் 11-ஆம் இடங்களில் நின்று பலம் பெற்றிருக்கும் போது அந்தத் திசை நடப்பில் உள்ள காலங்களில்  சாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குகிறது.

நன்றி!
(தங்களது ஜாதகப் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)

  வாட்ஸ் அப்
    9715189647
       செல்
  9715189647
‌.  7402570899
                        

அன்புடன்
 சோதிடர்
 சோ.ப. ரவிச்சந்திரன்.
   (எம் எஸ், சி எம்ஏ ,பிஎட்)
 ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் 
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .
கரம்பக்குடி 
புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday 9 May 2019

சாதகம் காட்டும் காலக் கண்ணாடி

                               

சாதகம் காட்டும் காலக் கண்ணாடி


செவ்வாய்ப்பட்டி பத்திரகாளி அம்மன் துணை

     ஒரு ஜாதகத்தில் லக்னத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து பார்க்கும்பொழுது  அந்த லக்கனாதிபதி ஆனது ஜாதகத்தில் எந்த கட்டத்தில் அமைந்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  லக்கினாதிபதி ஆனது ஸ்தான அடிப்படையில் கேந்திர ஸ்தானமா ? அல்லது திரிகோணம் அல்லது மறைவு ஸ்தானமா ? என்று ஆய்வு  செய்து பார்க்கப்பட  வேண்டும்.

 மேலும் லக்னாதிபதி எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது ? சாரநாதன் லக்கனாதிபதிக்கு  நட்பா ? அல்லது பகையா? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். 

    லக்னத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் , லக்னத்தை பார்க்கும் கிரகங்கள் , மற்றும் லக்கனத்தில் சேர்ந்துள்ள கிரகங்கள் முதலியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

லக்கனத்தில் பாவ கிரகங்களை விட சுபக் கிரகங்கள் இடம் பெறுவது நல்லது. இலக்கனத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும்.

      இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம், ஆரம்ப நிலை கல்வி மற்றும் நேத்திரம் ஆகியவற்றை குறிக்கும்.

   இரண்டாம் இடத்தில் தன ஸ்தானத்தை  பற்றி ஆய்வு செய்யும் போது தனக்க்காரகன் குரு‌பகவானையும்  இணைத்து ஆய்வு  செய்து பார்க்க வேண்டும்.

  இரண்டாம் இடத்தில் குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும்போது, சுக்கிரனையும்  இணைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    இரண்டாம் இடத்தில் கொடுத்த வாக்கு  பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது இரண்டாம் இடத்தில் இடம்பெறும் சுபக்கிரகங்கள் மற்றும் பாவ கிரகங்கள் பொறுத்து வாக்கு ஸ்தானம் அமையும்.

  இரண்டாம் இடம் என்பது ஒருவரது ஆரம்ப நிலைக் கல்வியை குறிப்பதால் இவ்விடத்தில் ஆரம்ப கல்வி நிலை பற்றி ஆராய இரண்டாம் இடத்துடன் கல்விகாரகன் குரு பகவான் மற்றும் புதன் பகவானையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

     இரண்டாம் இடத்தில் பார்வையைப்  (நேத்திரம்) பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது சூரிய பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

      முக்கியமாக இரண்டாம் இடம் என்பது சாதகருக்கு குடும்ப ஸ்தானம் என்பதால் இவ்விடத்தில் பாவக்கிரகங்களும் அல்லது உச்சம் பெற்ற கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .
எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டாமிடம் சுத்தமாக இருப்பது நல்லது.

    மூன்றாம் இடம் என்பது சகோதரம், கீர்த்தி, புகழ், அந்தஸ்து, கற்பனை உணர்வு மற்றும் வீரியத் தன்மை முதல் வெற்றிக்கு முக்கிய ஸ்தானம் ஆகும்.

   மூன்றாம் இடத்தில் சகோதரனைப் பற்றி ஆய்வு செய்ய மூன்றாமிடத்தையும் சகோதர காரகன் செவ்வாய் பகவானையும் இணைத்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

  மூன்றாம் இடத்தில் கீர்த்தி ,புகழ் ,அந்தஸ்து பற்றி ஆய்வு செய்யும் பொழுது மூன்றாம் இடத்தோடு ஆன்மீக செம்மல்  குரு , மக்கள் காரகன் சனி  முதலியவற்றை சேர்த்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 மூன்றாம் இடத்தில் கற்பனை உணர்வு, எழுத்தாற்றல் முயற்சி முதலியவற்றை ஆய்வு செய்து  பார்க்க மூன்றாம் இடத்துடன், வித்தைக்காரகன் புதன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

    ஒருவரின் வீரியத் தன்மையை மூன்றாம் இடத்தில் ஆய்வு செய்து பார்க்க மூன்றாம் இடத்துடன், காம காரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  நான்காம் இடம் என்பது முக்கியமாக தன் சுகம், தாய் சுகம்,  கல்வியால் சுகம், வண்டி வாகனத்தால் சுகம் ,வீடு முதலியவற்றை அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  நான்காம் இடத்தை கொண்டு தாயின் நிலை பற்றி அறிய நான்காம் இடத்தையும், மாதுர்காரகன் சந்திரனையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  வண்டி வாகனம் மற்றும் வீடு பற்றி அறிய நான்காம் இடத்துடன், சுக்கிரன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

   உயர்நிலைக் கல்வி பற்றி அறிய நான்காம் இடத்தையும் குரு பகவான் மற்றும் புதன் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் மற்றும் புத்தியைக் கொண்டு பிழைக்கும்‌ ஸ்தானம் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் அடையும் புகழ் பற்றி அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  பூர்வீக இடம் பற்றி அறிய ஐந்தாமிடத்துடன், பூமிகாரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

 ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய புத்திரர் பற்றி அறிய இந்த ஸ்தானம் பயன்படுவதால் புத்திரகாரகன் குரு பகவானையும் சேர்த்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது கடன், பிணி எதிர்ப்பு மற்றும் வெற்றி முதலியவற்றை பற்றி அறிய உதவும் சாதனமாகும். ஆறாம் இடத்தைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது ஆறாமிடத்து உடன் லக்னாதிபதியையும் மற்றும் யுத்த காரகர் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

     7-ஆம் இடம் என்பது தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை பற்றியும் அவர்களது கற்பு நிலை பற்றியும் மற்றும் நட்பு நிலை பற்றியும் அறிய உதவும் சாதனமாகும் .

  ஏழாம் இடத்தை கொண்டு களத்திர ஸ்தானத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கும்பொழுது களத்திரகாரகன் சுக்கிரன் பாகவானையும் ஆராய்ந்து  பார்க்கப்பட வேண்டும்.

   ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதால் இவ்விடத்தில் பாவக் கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது. அதிலும் குறிப்பாக எந்த கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தல் மேலான நன்மை தரும். "ஏழாமிடம் சுத்தமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லவன்(ள்)  ஆகும்.

  எட்டாம் இடம் என்பது ஒருவருக்கு வரக்கூடிய விபத்து ,வம்பு ,சண்டை வழக்கு மற்றும் ஆயுள் நிலை பற்றியும் அறிய உதவும் ஸ்தானம் ஆகும். இவை மட்டுமல்லாமல் மறைபொருள் உண்மைகளை அறிய இவ்விடம் பலம் பெற்றிருப்பது நன்மை தரும்.

  ஒருவரது ஆயுள் நிலை பற்றி ஆய்வு செய்யும் பொழுது எட்டாமிடத்தில் எட்டாம் இடத்துடன் தான் ஆயுள்காரகன் சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  எட்டாம் இடம் ஒரு மாங்கல்ய ஸ்தானமாக அமைவதால் இவ்விடத்திலும் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .இதேபோல உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம். எட்டாம் இடத்தில் சுத்தமாக இருப்பது நலம் பயக்கும்.

   ஒன்பதாம் இடத்தை கொண்டு ஒருவரது தான தர்ம நிலை ,பாக்கிய நிலை மற்றும் தந்தையின் நிலை மேலும் ஐந்துக்கு ஐந்தாம் இடமாக இந்த ஒன்பதாம் இடம் அமைவதால் புத்திர ஸ்தானத்தையும் ஆய்வுசெய்த பார்க்க உதவும் சாதனமாகும்.

    ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தை கொண்டு ஒருவரது பாக்கிய நிலையை அதாவது வருமான நிலையை அறிய ஒன்பதாம் இடத்து உடன் தனகாரகன் குரு பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.

   ஒன்பதாம் இடத்தை கொண்டு தந்தையின் நிலையை பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது ஒன்பதாம் இடத்துடன் தந்தைகாரகன் சூரிய பகவானையும் சரிபார்க்கப்பட வேண்டும்.

    ஒன்பதாம் இடத்தில் சுபகிரகங்கள் அமையும்போது தான தர்ம நிலை மேலங்கி இருப்பதையும் ,பாவ கிரகங்கள் இடம் பெறும் பொழுது கஞ்சத்தனம் மேலோங்கி நிற்பதை காணலாம்.

    பத்தாம் இடத்தை கொண்டு ஒருவரது தொழில் நிலையை மற்றும் கர்மஸ்தானத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டிய ஸ்தானம் ஆகும்.

  ஒருவர் கர்ம நிலை பற்றி அறிய 10-ஆம் இடத்தையும் கர்மகாரகன் சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

    ஒருவரது தொழில் நிலை பற்றி அறிய 10-ஆம் இடத்தையும், பத்துக்கு பத்தாமிடமான  7ஆம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   பத்தாம் அதிபதி அம்சத்தில் இடம்பெறும் நிலையைப் பொறுத்து ஒருவரது  தொழில் எப்படி அமையும் என்பதனையும்  முடிவு செய்யப்பட முடியும்.

   பத்தாம் அதிபதி மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் கிரகநிலை பொருத்தும் ஒருவரின் தொழில் நிலை அறிந்து கொள்ளப்படுகிறது.

  11-ஆம் இடம் என்பது ஒருவரது லாபஸ்தானம் ஆகும். இவ்விடத்தை கொண்டு மூத்த சகோதரர்களின் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

   ஒருவரது லாப நிலையைப் பற்றி ஆய்வு செய்ய பதினொன்றாம் இடத்துடன் தனகாரகன் குரு பகவானையும் இணைத்து ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  ஒருவரது மூத்த சகோதரன் பற்றி ஆய்வு செய்து பார்க்க பதினொன்றாம் இடத்தில்,
பதினொன்றாம்
 இடத்துடன் சகோதரகாரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   பன்னிரண்டாம் இடம் என்பது ஒருவரது விரய ஸ்தானம் ஆகும். மேலும் ஒருவரது அயன, சயன மற்றும் படுக்கை சுகங்களை அறிந்துகொள்ள உதவும் ஸதானமாகும். மேலும் முக்தி நிலை பற்றி அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.

  ஒருவரது அயன, சயன படுக்கை சுகம் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் பொழுது பன்னிரண்டாம் இடத்துடன் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காம காரகன் செவ்வாய் பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    ஒருவர் தனக்கு கிடைக்கக்கூடிய விரய நிலையை பற்றி ஆராய பன்னிரண்டாம் இடத்துடன், தனகாரகன் குரு பகவானையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

  ஒருவர் தனக்கு கிடைக்கக்கூடிய முக்தி நிலை பற்றி அறிய பன்னிரண்டாம் இடத்தில்  அமர்ந்துள்ள கேது பகவானையும் மற்றும் ஒன்பதாமிட அதிபதியையும் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.

நான்!

(தங்களது ஜாதகப் பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி , பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்த வழிமுறையை பெறலாம்)

வாட்ஸ் அப்
   9715189647

  செல்
  9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் 
சோ.ப ரவிச்சந்திரன்
  M.Sc,MA,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்சியாளர்)
 ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஒரு ஜாதகம் யோக ஜாதகமா அமைய.....

                         

ஒரு ஜாதகம் யோக ஜாதகமாக அமைய......



செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை

    ஒரு ஜாதகம் யோகமான ஜாதகமாக அமைய லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி ஆகிய இரண்டும் பலம் பெற்று அமைய வேண்டும்.

    லக்கினாதிபதியும், ராசியாதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

 லக்கனம், லக்னாதிபதி ராசி மற்றும் ராசியாதிபதி ஆகிய இவற்றுள் ஏதாவது ஒன்றின் மீது குருவின் பார்வை விழ வேண்டும்.

  ஒரு ஜாதகம் யோக சாதகமாக என்பதை அறிய வேண்டின்   அந்த ஜாதகத்தில் 1, 5 ,9  மற்றும் 10 ஆகிய நான்கு  ஸ்தானங்களும் வலுவுடன் இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் .

    இந்த ஸ்தானாதிபதிகள் பலவீனப்படாமல்  இந்த ஸ்தானங்களில் பாவர்கள் மற்றும் பகைவர்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாது இருக்க வேண்டும்.

    இந்த ஸ்தானங்களில் இலக்கன பகைவர்கள் அமராமல் ஒரு ஜாதகம் அமைந்திருக்குமானால் அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் நினைத்ததெல்லாம் அடைய கூடியவராகவும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து எதிர்நீச்சல் போட்டு நிம்மதியான வாழ்க்கையை  வாழக் கூடியவராகவும்,  சுகபோகங்களை அனுபவிக்க கூடியவராகவும் வாழ்வார்.

    இப்படி ஒரு ஜாதகம் அமைவது மிக அபூர்வம் ஆகும். ஏதாவது ஒன்றோ இரண்டோ பாதிக்கவே செய்யும்.    வாழ்க்கையின் அடிமட்டத்திலேயே கிடந்து உழள்பவர்களின் ஜாதகத்தினை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்கண்ட நான்கு ஸ்தானங்களும் பாதிப்படைந்து இருப்பதை காணலாம்.

    ஜாதகத்தில் இந்த நான்கு ஸ்தானங்களும் பலமடைந்து இருந்தால் மட்டும் போதாது ,அதன் திசைகள் உரிய பருவத்தில் வந்து அவர்களுக்கு யோக பலனை தருவதாக அமைய வேண்டும்.

 இள வயதிலிருந்து அவர்களுக்கு இலக்கனப் பகைவர்களின் திசையோ அல்லது பாவர்களின் திசையோ வந்து கொண்டிருந்தால் இந்த யோகங்கள் ஜாதகத்தில் இருந்தும் பலன் இல்லை.

 தாண்டவமாலை என்னும் சோதிட நூலில் மேற்கண்ட இக்கருத்தை வலியுறுத்தும் ஒரு ஜோதிட பாடல் உள்ளது.

''ஒப்பரிய யோகத் துடனே பிறந்தோர்க்கும் தப்புசுபர் யோக திசை தானில்லையேல்-எப்பயனாம் ? கொத்தலரும் செங்குங் குமப்பூ  பொதிசுமக்கும் கத்தபத்தை ஒப்பர்அவர் காண்"

பாடல் விளக்கம் 

   ஒரு ஜாதகத்தில்   1 ,5 ,9 மற்றும் 10 ஆகிய இடங்கள் பலமடைந்து நின்று அதே நேரத்தில் அத்திசைகள் உரிய வயதில் வராமல், ஜெனன காலத்தில் இருந்து பாவர்களின் திசையோ அல்லது  பகைவர்களின் திசையோ நடப்பில் இருப்பின் அந்த உயரிய யோக பலன்கள் இருந்தும் பலன் இல்லை. 

  இதனை கழுதையானது வாசனையான குங்குமத்தை முதுகில் சுமந்தது போல் ஆகும். வாசனையான குங்குமப்பூவை முதுகில் சுமந்தாலும்  அப்பூவின் அருமை, பெருமை கழுதைக்கு தெரியாது அதேபோல இந்த யோக பலன்கள் இருந்தும் பயனில்லை.

  அதன் புத்திகளில்  நன்மையை தராதா ? என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதாவது பாவர்கள் அல்லது பகைவர்களின் திசையில் யோக புத்திகள் அந்த அளவுக்கு யோக பலனை தருவதில்லை.

 யோக திசையில் அதன் யோக புத்திகள் மட்டுமே அதிக யோக பலன்களை தருகிறது.

நன்றி!

(தங்களது சாதகப்பலன், திருமணப்பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

வாட்ஸ் அப்

   9715189647

    செல்
  9715189647
    7402570899

  அன்புடன்
 சோதிடர் 
சோ.ப. ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம்

                             


லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம்


செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை !

     சாதகங்களில்  பணபர ஸ்தானங்கள் என அழைக்கப்படுவது 2,5,8,11 ஆகும் .இந்த பணபர தானங்களில் பதினோராம் இடமே தலைமைப் பண்பு வகிக்கிறது.

   ஒரு சிலருக்கு தொழில் எந்த வகையிலும் சிறப்பாக அமையாது போனாலும் , வருமானம் மட்டும் எந்த வகையிலாவது வந்து கொண்டே இருக்கும்.

 அவர் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் அவருடைய தொழில் ஸ்தானம் கெட்டுப்போய், லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம் பலம் பெற்று காணப்படும்.

   பதினொன்றாம் இடத்து அதிபதி நல்ல வலு பெற்றவர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

  பொதுவாக கேந்திரங்களில் பாவ கிரகம் இடம்பெறுவதும், திரிகோணங்களில் சுப கிரகங்கள் இடம்பெறுவதும் நன்மை பயக்கும் என்பது பொதுவான ஜோதிட விதியாகும்.

    சில கிரகங்கள் கேந்திரங்களிலும் ,சில கிரகங்கள் திரிகோணங்களில் நன்மை அளிக்கின்றன.

     ஆனால் பாபக் கிரகமாக இருந்தாலும், சுப கிரகமாக இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில் எல்லா கிரகங்களும் நன்மையே தரும் என்பது ஜோதிட விதியாகும். இது ஒரு பொதுவிதிதான். இவை கிரகங்கள் பெற்ற பலம் ,அதனுடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும்  பார்த்த கிரகங்கள் அதன் ஆதிபத்தியம் அதற்கேற்ப பலன் மாறுபடலாம்.

  பதினோராம் இடத்தைக் கொண்டு நாம் அறிய முயல்வது

1) மூத்த சகோதர ,சகோதரிகள்,

 2) சாதகனை போற்றி வனங்குபவர்கள், 

3) இளைய தாரம் 

4)பொன் பொருளை சேர்ப்பதற்கான கலையறிவு

 5) லாப வரவு 

 6)வேளாண்மை 

 7)குதிரை 

  8)யானை 

  9) சிறந்த உத்தமமான அறிவு,  

 10)பல்லக்கு ஏறுதல்

 11)மனக்கவலை தீரும் வழிகள்,

 12) மேலாடைகள் 

 13)வாகன வசதி 

 14)கவுரவம் 

 15)செய் தொழில் மேன்மை 

 16)பலதாரமணம் 

17)பூமி விருத்தி

18) சங்கீத தொழில் 

19)நாடக தொழில் 

 20)அயல்நாட்டுப் பயணங்கள் மேன்மை

 21) மின்சாரம் 

 22)நண்பரின் வீடு 

 23)சபை

 24) சமூகத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்கள்

 25) இடது காது 

 26)வலது பாதம் 

 27) இடது கை 

28 )இருகால்கள் 

 29)அமைச்சர் பொறுப்பு 

 30)பொன் பொருள் சேர்க்கை மற்றும் கிணறு போன்றவற்றை ஆராய்ந்து அறியலாம்.

     அதிலும் குறிப்பாக பதினோன்றாம் இடத்தை லாப ஸ்தானம் என்று சொல்லலாம். எனவே லாபத்தை பற்றி அறிய பதினொன்றாம் இடத்து அதிபதியும், குரு பகவானையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் .

     பதினொன்றாம்  இடம் என்பது இளைய தாரத்தை பற்றி குறிப்பதாகும் .எனவே ஒரு ஜாதகருக்கு ஏழாம் இடம் வலுவிழந்து, பதினோராம் இடம் வலுப்பெற்று நிற்கும் பொழுது அவருக்கு தார யோகத்தை தருகிறது.

   எனவே தார யோகத்தைப் பற்றி அறிய போன்ற பதினொன்றாம் இடத்து அதிபதியும், கிரகங்களில் சுக்கிரனையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

   பதினொன்றாம் இடம் என்பது மூத்த சகோதரனைப் பற்றி அறிய உதவும் இடமாதலால் ,மூத்த சகோதரன் பற்றி ஆய்ந்து அறிய பதினொன்றாம் இடத்தையும் , சகோதர காரகனான செவ்வாயையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    எனவே பதினொன்றாம் இடத்து காரக கிரகங்கள் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகும்.

  பதினோராம் இடத்தை சிலர் துர் ஸ்தானத்தின் வகையில் சேர்க்கிறார்கள்.
 சில சந்திர காவியம் போன்ற பழைய நூல்களில் துர் ஸ்தானத்தை 3, 6 ,8 ,12 என்பதற்கு பதிலாக 3,6,8,11  என்றும் குறிக்கின்றனர் .

ஆனால் பதினோராம் இடத்தினை பொருத்தவரை அவை எந்த தீமையையும் சாதகருக்கு தருவதில்லை. அவை ஒரு நல்ல ஸ்தானமாகவே செயல்படுகிறது. எனவே பதினோராமிடத்தில் அமர்ந்த கிரகங்களும் சரி, பதினோராம் வீடு அதிபதிகளும் சரி ஜாதகருக்கு நன்மையே பயக்கிறது .

   ஒருவகையில் சர லக்னங்களுக்கு (மேஷம் கடகம் ,துலாம் மற்றும் மகரம்)  போன்றவற்றிற்கு பதினொன்றாம் இடம் பாதக ஸ்தானமாக வருவதால் அந்த லக்கினக்காரர்களுக்கு பதினொன்றுக்குடையவர் சில பாதகங்களை தர வேண்டியவராகிறார்.

   பாதக ஸ்தானம் என்றாலும் அவர் லாபஸ்தானம் என்ற வகையில் நன்மையை நிச்சயம்  தனது தசையில்  சாத்துக்குடி  தருவார்.

 சர லக்கனங்களுக்கு பதினொன்றாம் இடம் பாதக ஸ்தானம் என்ற போதிலும் அதிலும் பல  சூட்சும உண்மைகள் இருக்கிறது.அதாவது  மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ,கடக லக்கினத்திற்கு பாதகாதிபதி சுக்கிரன், துலா லக்னத்திற்கு பாதகாதிபதி சூரியன், மற்றும் மகர லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி  ஆவார்.

 இதில் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியான சுக்கிரன் அதிக பாதகங்களை சாதகருக்கு தந்து விட மாட்டார். ஏனெனில் கடக லக்கின அதிபதியான சந்திரனுக்கு சுக்கிரன் நண்பர் ஆவார்.இது மட்டுமல்லாமல் லக்கினாதிபதியான சந்திரன்   உச்சம் அடையும் இடமும் ஆகும்.

    ஆனால் அதே நேரத்தில் மற்ற சர ராசியான மேஷம், துலாம் மற்றும்  மகர லக்னங்களுக்கு அந்த லக்னாதிபதியான செவ்வாய், சுக்கிரன் மற்றும்  சனி ஆகிய கிரகங்களுக்கு பாதகாதிபதியாக வரக்கூடிய கிரகங்களான சனி ,சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள்  அந்த சர லக்னாதிபதிக்கு பகை கிரகங்கள் ஆகும். இவ்வாறு பகை கிரகங்களாக வருவதால் பாதகத்தன்மை அதிகமாக தருவதற்கான வாய்ப்புகள் உண்டு .

     பதினொன்றாம் இடத்தை கொண்டு லாபம் பற்றி ஆராயும் போது குருவையும், இளைய மனைவியை பற்றி ஆராயும் போது சுக்கிரனையும் , மற்றும் மூத்த சகோதரனைப் பற்றி ஆராயும்போது செவ்வாயையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் .

பதினொன்றாம் இடத்தை லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், மற்றும் இளைய தார ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

நன்றி
(தங்களது சாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம் .)

வாட்ஸ் அப்
  9715189647

   செல்
    9715189647
  7402570899

                         
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd
 (ஆசிரியர் &ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

Friday 3 May 2019

சொந்தத் தொழில் தொடங்கும் யோகம்

சொந்தத் தொழில் தொடங்கும் யோகம்.

                     

 செவ்வாய்ப்பட்டி 
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

     ஒருவரது ஜாதகத்தில் சுயதொழில் தொடங்க யோகம் உள்ளதா? என்பதை அறிய அவரது ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் என்று அழைக்கக்கூடிய தொழில் ஸ்தான அதிபதியான பத்தாம் அதிபதியையும், 10-ஆம் இடத்தையும் மற்றும் பத்தாம் இடத்தை பார்க்கும் மற்றும் சேர்ந்துள்ள கிரகங்கள், பத்தாம் அதிபதியின் நட்சத்திர சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து சுயதொழில் தொடங்கலாமா ? என்ற வினாவிற்கு விடைகாண முயல வேண்டும்.

   ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆட்சி ,உச்சம் கோணம் ,கேந்திரம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று இயற்கைச் சுபர்களின் பார்வை பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சொந்தத் தொழில் தொடங்கி பெரிய வெற்றிகரமான முதலாளி ஆகலாம் .
தொழில் ஸ்தானத்தினை பற்றி அறிய ஜாதகத்தில் லக்கனம் அல்லது ராசிக்கு பத்தாம் அதிபதியையும் மேலும் பத்தாம் இடத்திற்க்கு பத்தாமிடமான ஏழாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

     பத்தாம் அதிபதி இடம் பெறும் ராசி பார்க்கின்ற மற்றும் சேர்ந்துள்ள கிரகங்கள் மற்றும் பத்தாம் அதிபதியின் நட்சத்திர சாரம்  ஆய்வு செய்து பார்த்து ஒருவர் செய்ய வேண்டிய தொழிலை முடிவு செய்யலாம்.

      பத்தாம் அதிபதியானது அம்சத்தில் இடம்பெறும் நிலையினை பொருத்தும் ஒருவர் என்ன தொழில் மேற்கொள்ளலாம் என்பதை கண்டறியலாம்.

     ஒருவரது ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆனது இயற்கை சுபராக அமைந்து பலம்பெற்று நிற்கும்போது அவருக்கு அமையும் தொழிலானது நேரிய வழியில் பொருளீட்டும் ஒயிட் காலர் ஜாப் ஆக அமையும். மாறாக சனி போன்ற பாவ கிரகமாக தொழில் ஸ்தானாதிபதியானது அமையும் போது கீழ்மட்ட நிலையில் சட்டை கசங்கிய நிலையில் இருக்கக்கூடிய தொழிலாக அமையும்.

  ஒருவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தான அதிபதி ஆனது தன ,பாக்கிய லாபாதிபதிகளுடன் (2,9,11 ) சேர்ந்திருக்கும்போது அல்லது தங்களுக்குள் பரிவர்த்தனை பெறும் பொழுதோ அல்லது தங்களுக்குள் பார்த்துக் கொண்டாலும் இது போன்ற அமைப்புகளிலிருந்து இவர்களில் யாராவது ஒருவரது திசை நடப்பில் உள்ள காலங்களில் உரிய தொழிலை ஜாதக அடிப்படையில் கண்டறிந்து மேற்கொள்ளும்பொழுது அந்த தொழிலில் வெற்றி பெற்று சாதனை  படைக்கலாம்.

என்ன தொழில் செய்யலாம் நீங்கள் ?

கிரக சேர்க்கையினால் உண்டாகும் தொழில்கள் ;-

1) அலங்கார பொருட்கள் ; சுக்கிரபகவான், புதன்பகவான்,குருபகவான்

2) பலசரக்கு வணிகம் மேற்கொள்ள குருபகவான், சுக்கிரபகவான், சந்திரன்,சூரியன் சேர்க்கை.

3)ஜெனரல் ஸ்டோர் ;குருபகவான், சுக்கிரபகவான், புதன்பகவான்,செவ்வாய்பகவான்

4)துணிக்கடை : சந்திரன்,புதன்,சுக்கிரபகவான்

5)மின்சாதனங்கள் ; புதன்,செவ்வாய்,சூரியன்,இராகு

6)மின்னனு சாதனங்கள்;
    புதன்பகவானை ்செவ்வாய்,சுக்கிரபகவான், ராகு

7)வாகன உதிரிபாகங்கள்
  சுக்கிரபகவான், செவ்வாய்

8)பெட்ரோல் பங்க்
சூரியன், செவ்வாய்,சுக்கிரபகவான்

9,,போக்குவரத்து
சுக்கிரபகவான், செவ்வாய், புதன்பகவான்

10):கடிகாரம்
புதன்பகவான்,செவ்வாய்

11,நகைகள்,வெள்ளி வியாபாரம்
சுக்கிரபகவான், சூரியன் மற்றும் சந்திரன்

12)தொழிற்சாலை
செவ்வாய், சனிபகவான், புதன்பகவான்

13)எண்ணெய் தொழில்
செவ்வாய், சனிபகவான், சந்திரன், புதன்பகவான்

14)புத்தகம்,ஸ்டேஷனரி சாமான்கள்
குருபகவான், புதன்பகவான்

15)அச்சகம்
புதன்பகவான்,குருபகவான், செவ்வாய்

16)விஞ்ஞான கருவிகள்
சுக்கிரபகவான், செவ்வாய், புதன்பகவான, இராகு

17)மருந்து கடை
சூரியன் மற்றும் புதன்பகவான்

18,பூ,காய்கறி,பழக்கடை
குருபகவான், சந்திரபகவான், சுக்கிரபகவான்

20,கெமிக்கல்
சுக்கிரபகவான், செவ்வாய்

21,கட்டிட சாமான்
சுக்கிரபகவான், சனிபகவான், செவ்வாய்

22)இயற்க்கை உரம் மற்றும் இரசாயன உரம்
செவ்வாய், சனிபகவான், சுக்கிரபகவான்

23)பர்னிச்சர்
சுக்கிரபகவான், செவ்வாய், சனிபகவான்

24,விவசாய கருவிகள்
செவ்வாய், சுக்கிரபகவான், புதன்பகவான்,
சனிபகவான்

25) ஏர்கன்டிஷன்
சனிபகவான், செவ்வாய், சுக்கிரபகவான்

26,ஹோட்டல்
சுக்கிரபகவான், செவ்வாய், சந்திரன்

27,குளிர்பானங்கள்
சந்திரன், செவ்வாய், சுக்கிரபகவான், சனிபகவான்

28,தையற்கலை
சுக்கிரபகவான், செவ்வாய், சனிபகவான்

29,புகைப்படகலை
சுக்கிரபகவான், சூரியன், சந்திரன்

30)ரெடிமேட் ஆடைகள்
சுக்கிரபகவான், புதன்பகவான்,செவ்வாய்

31)விளையாட்டு கருவிகள்
சூரியன், செவ்வாய், சுக்கிரபகவான்

      மேற்கண்ட கிரகங்கள் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திலோ அல்லது பத்தாமாதிபதியுடனோ தொடர்பு பெற்று உரிய திசை நடைபெறும் குறிப்பிடப்பட்ட தொழிலை தொடங்கி  பணம் ஈட்டலாமே .

(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)

  தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
 9715189647

 செல்
     9715189647
           7402570899

நன்றி !

                  

  அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 
   M.Sc,MA,BEd
(ஆசிரியர் &ஜோதிட ஆராய்ச்சியாளர் )
  ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday 2 May 2019

காலதாமத திருமணத்திற்கும் மற்றும் மறு மணத்திற்கும் காரணம் என்ன?

காலதாமத திருமணத்திற்கும் மற்றும் மறுமணத்திற்கு காரணம் என்ன ? ஜோதிட ரீதியான உதாரண ஜாதகத்துடன் விளக்கம்?

                     

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

    " தனது மகனுக்ககோ அல்லது மகளுக்கோ  உரிய வயதில் நல்ல இடத்தில் திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் அவ்வாறு செய்ய இயலாமல் காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதற்க்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கான பதிவு ."

   ஒருவருக்கு திருமணம் சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அவரது ஜாதகத்தில் லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை இலக்கனம் மற்றும் ராசியிலிருந்து கவனிக்கப்பட வேண்டும் .

  லக்கனம்

         ஒரு சாதகரை  வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் இலக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகும். இங்கு லக்கனம் என்பது சாதகரை குறிக்கும். எனவே இலக்கனத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது.  அவ்வாறு இடம் பெற்று இருப்பின் அவை தனக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வை செய்யும் என்பதால் திருமணத்தை தடை செய்கிறது.

         லக்கனத்தில் ராகு அல்லது கேது இருப்பது களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் கேது அல்லது ராகு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது .இது களத்திர தோஷத்தினை சாதகருக்கு தர  வாய்ப்புயிருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுவதற்கு மனதுக்கு பிடித்த மனைவி அல்லது கணவன் அமைவதற்கும் தடையாக இருக்கிறது.

  இவை மட்டுமல்லாமல் லக்கனத்தில் மறைவிட ஸ்தானாதிபதியான 6 மற்றும் 8ஆம் இட அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது .

     இவையும் திருமணத்தை தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

    லக்னாதிபதியானவர் கேந்திர திரிகோணங்களில் இடம்பெற்று உச்சம் ,ஆட்சி, நட்பு போன்ற வகையில் பலம் பெற்று இருப்பின் நல்லது. ஏனெனில் ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி பலம் பெற்றிருந்தால் அவரது வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய தகுதி சாதகரிடம் இருக்கும் .

    ஆனால் லக்கனாதிபதி ஆனது மறைவிட ஸ்தானமான 
6, 8 போன்ற இடங்களில் மறையாமல் இருந்தால் நல்லது .லக்னாதிபதி பலம் இழப்பின் ஜாதகர் தனது வாழ்வில் சில அடிப்படையான தேவைகளுக்கே போராடி வாழக்கூடிய சூழலில் அவரால் இல்ல துணையை எவ்வாறு பாதுகாக்க முடியும் என கேள்விக்குறி எழுகிறது.

இரண்டாம் இடம் ( குடும்ப ஸ்தானம்)

  ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் ஆகும். எனவே குடும்பஸ்தானத்தில் ராகு, கேது, சனி மற்றும் செவ்வாய் போன்ற நவக்கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது .

    அவ்வாறு இடம்பெறும் போது அதற்கு ஏழாம் பார்வை உண்டு என்ற வகையில் மாங்கல்ய ஸ்தானத்தை பார்வை செய்வதால் குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் பாதிக்கப்படுகிறது .இந்த வகையில் கால தாமதமாக  திருமணத்தை தர வழி இருக்கிறது.

  இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பின் அதுவே எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இது மாங்கல்ய தோஷத்தை தரும் என்பதால் காலதாமதம் திருமணத்தையும் , மனதிற்குப் பிடித்த அன்யோன்யமான வாழ்க்கைத் துணை அமைவதில் சிக்கல்கள் எழுகிறது.

   குடும்ப ஸ்தானாதிபதி பகை ,நீசம் ,அஸ்தமனம் மற்றும் மறைவு  போன்ற இடங்களில் இடம் பெறாமல்  உச்சம் ஆட்சி மற்றும் கேந்திர கோணங்களில் இடம் பெற்றிருப்பின் நல்லது.

  குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இடம்பெறாமல் இருப்பது நல்லது.

ஏழாம் இடம்

    ஒருவரது சாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனது வாழ்க்கைத் துணையை குறிக்கும் இடமாகும். எனவே ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் கேந்திர, கோணம் மற்றும் நட்பு நிலையில் இருக்கும்போது மனைவியால்  வாழ்க்கை தரம் உயர வாய்ப்பு உண்டு .

     மாறாக ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருப்பது நல்லது. அதேபோல ஏழாமிடத்தில் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம் பெறாமல் இருத்தலும் 
 நல்லது  ஆகும்.

      ஏழாம் அதிபதி ,ஆறு எட்டு போன்ற மறைவிட வீடுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மறைவிட ஸ்தான அதிபதிகள் ஏழாமிடத்தில் அமராமல் இருத்தல் நன்று ஆகும்.

 அதேபோல ஏழாம் இடத்து அதிபதிகள் மறைவிட  ஸ்தானாதிபதியுடன் சேராமல் இருக்க வேண்டும்.

 ஏழாமிடத்தில் எந்த  கிரகங்களும்  இடம்பெறாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லவராக இருப்பர்.

 ஏழாமிடத்தில் சனி, ராகு கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்லும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏழாம் பார்வையால் அவை இலக்கனத்தையும் பாதிப்படைய  செய்துவிடுகிறது.

 ஏழாமிடத்தில் சனி, ராகு செவ்வாய் ,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இடம் பெற்று இருப்பின் எத்தனை தாரம் வந்தாலும் நிலைக்காது.

எட்டாம் இடம்

  ஒரு ஜாதகரின் எட்டாம் இடத்தினை மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இடம் பெற்றிருப்பின் அவை ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் கால தாமத திருமணத்திற்கு வழிவகுக்கிறது.

  சுக்கிரன்

 மகிழ்ச்சியான மண வாழ்விற்கு களத்திரகாரகன் சுக்கிரனின் பங்கு அளப்பரியது . ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம், மறைவு, நீசம், பகை , சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவிகளுடன் சேர்க்கை கூடாது.

உதாரண ஜாதகம் 1

 ( மிதுன லக்னம் துலாம் ராசி ,சுவாதி நட்சத்திரம்.   லக்கனத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சனி சந்திரன், ஆறாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, பத்தில் சூரியன் புதன், 11-ல் செவ்வாய் சுக்கிரன் ,12ல் மாந்தி)

 மேற்கண்ட உதாரணமாக  ஜாதகத்தில் கால தாமத திருமணம் தந்ததோடு, திருமணம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் ஆகிவிட்டது. காரணம் என்னவாக இருக்கும் என்று ஜோதிட அடிப்படையில் விளக்கமாக ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

  மேற்கண்ட ஜாதகத்தில யான் அடிக்கடி குறிப்பிட்டதுபோல இலக்கனம், 2-ம் இடம், 7-ம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவை இலக்கணம் மற்றும் ராசிப்படி பார்க்கும் பொழுது பலவீனமடைந்து இருப்பதைக் காணலாம்.

 மிதுனம் லக்கனத்தில் ராகு,  ஏழாமிடத்தில் கேது அமர்ந்து களத்திர தோஷத்தை தருகிறார்.இவை மட்டுமில்லாமல் ஏழாம் அதிபதி குரு லக்னத்திற்கு மறைவிட ஸ்தானமான ஆறாமிடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் மறைந்துள்ள குருவை பாபக் கிரகமான செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்வை செய்து ஏழாம் இடத்தை பலம் இழக்க செய்துள்ளது.

     அடுத்து குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் அவருடன் உச்சம் பெற்ற பாவ கிரகமான சனி இணைந்து உள்ளது.

      இவை மட்டுமல்லாமல் பதினோராம் இடத்தில் உள்ள பாவ கிரகமான செவ்வாய் ஏழாம் பார்வையாக இந்த சனி மற்றும் சந்திரனை பார்வை செய்கிறது. இதனால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமும் கெட்டு விட்டது.

      மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் அதிபதி சனியே பாவகரமான செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்த்து விடுகிறது.

    ராசிப்படி பார்க்கும்போது துலாம் ராசியில்  உச்சம் பெற்ற சனி அமர்ந்து குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயை சனி தனது  உச்ச பார்வையால் பார்ப்பதோடு  செவ்வாய் , சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை தனக்கு வரக்கூடிய மனைவிக்கு காம மிகுதியால் தடம் மாறும் வாய்ப்பும் வாய்ப்பு இருப்பதால் இவர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கியது.

இவரது ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து, பதினோராம் அதிபதி பலம் பெற்று இருப்பின் அவருக்கு தாரம் தோஷம் உண்டு.

  தாரதோஷம்  உண்டு என்ற வகையில் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியான  குரு ஆறில் மறைந்து பலமிழந்து, பதினோராம் அதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் இவருக்கு  மறுமணம் உண்டு  என்ற வகையில் முதல் தாரம் விவாகரத்தில் முடிந்தது.

 உதாரண ஜாதகம் 2

(ரிஷப லக்னம் , துலாம் ராசி ,சித்திரை நட்சத்திரம்
 லக்கினத்தில் கேது மூன்றாம் இடத்தில் செவ்வாய் மாந்தி, ஐந்தாம் இடத்தில் குரு ,ஆறாம் இடத்தில் சந்திரன் ,ஏழில் ராகு ,பத்தில் சனி, 11ல் சுக்கிரன் மற்றும் பனிரெண்டில் சூரியன் புதன்)

  இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்த ஜாதகத்தில் லக்னத்தில் கேது,  7_ஆம் இடத்தில் ராகு அமர்ந்து களஸ்திர தடையை உண்டுபண்ணுகிறது.

      மேலும் களத்திர ஸ்தானமான ஏழாமிடம் அதிபதியான செவ்வாய் மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து உள்ளது .

   குடும்ப ஸ்தானாதிபதியான புதன்  லக்னத்திற்கு 12ல் மறைந்து உள்ளது.

   ராசிப்படி பார்க்கும் பொழுது ராசிக்கு 2ல் குடும்பஸ்தானத்தில் ராகு, எட்டாம் இடத்தில் கேது, ராசிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் நீசம் அடைந்து உள்ளது.  

  ராசிக்கு எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் மறைவு .

மேற்கண்ட பல காரணங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.

 உதாரண ஜாதகம் 3

இது ஒரு பெண்ணின் ஜாதகம் 
 (மகர லக்கனம் ,
மீனம் ராசி ,ரேவதி நட்சத்திரம் .
இரண்டில் குரு மூன்றில் சந்திரன் நான்கில் சூரியன் புதன் ராகு ஐந்தில் சுக்கிரன் பத்தில் கேது 11-ல் சனி மற்றும் 12 செவ்வாய்)

   லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில் மறைவு ,குடும்ப அதிபதியான சனிபகவான் ஜென்ம விரோதியான செவ்வாயின் வீட்டில் அமர்ந்து உள்ளது.

  பாவியான செவ்வாய் லக்னத்திற்கு 12ல் அமர்ந்து லக்கனத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை தனது எட்டாம்  பார்வையாலும், களத்திர ஸ்தானாதிபதியான சந்திரனை  தனது நான்காம் பார்வையாலும் பார்வை செய்து ஏழாம் இடத்தைப் பலம் இழக்கச் செய்கிறது.

மாங்கல்ய ஸ்தானாதிபதியான சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் ராகு கேது பிடியில் அகப்பட்டுள்ளது.

  ராசிப்படி பார்க்கும்பொழுது மீனராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு,
 மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அமர்ந்து மாங்கல்ய தோஷத்தை தருகிறது.

          இவை மட்டுமல்லாமல் களத்திர ஸ்தானாதிபதியான புதன் ராகு, கேது பிடியில் அகப்பட்டு உள்ளது. எனவே களத்திர தோஷத்தையும் இவை  உருவாக்கியுள்ளது.

  களத்திர காரகன் சுக்கிரனை  சனி பகவான்  சம சப்தமாக பார்வை செய்கிறது.  இது போன்ற அமைப்பு இருப்பதால் இந்த பெண்ணிற்கு கால தாமத திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளிலே விவாகரத்து ஆகிவிட்டது.

     மேற்கண்டவாறு ஜாதக அமைப்பு உள்ளவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தும் போது சோதிடர்களாகிய நாம் வெறும் நட்சத்திர அடிப்படையிலான பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது அவர்களுக்கு மேற்கண்ட வகையில் பாதிப்பு உண்டாகிறது.

   எனவே இது போன்ற அமைப்புகளை உடையவர்களை ஜாதகப் பொருத்தம் பார்க்க வரும் பொழுது கட்ட அடிப்படையிலும் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு இடையே நடைபெறும் திசையும் உகந்த திசையாக  உள்ளதா? என்பதையும் கோசார பலன்களையும் ஆராய்ந்து திருமணப் பொருத்தம் செய்ய வேண்டும்.

                      

நன்றி!

(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி , பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)

    வாட்ஸ் அப்
  9715189647

   செல்

 9715189647
   7402570899

                       


 அன்புடன் 
சோதிடர் சோ .ப.ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd
 (ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.