Friday 7 July 2023

நடக்கும் தசை உங்களை உச்சத்துக்கு கொண்டு போகிறதா?-சிறு அலசல்

 நடக்கும் தசை உங்களை உச்சத்துக்கு கொண்டு போகிறதா ?-சிறு அலசல்.

   


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்கும் போது  அந்த தசை ஜாதகருக்கு யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தால் நடந்து முடிந்த தசையின் கடைசி புத்தியிலே அதற்கான ஆயத்தம் தந்து விடுகிறது..வருகின்ற யோக தசையின் சுய புத்தியிலே யோகத்திற்கு அடித்தளத்தை அமைத்து தருகிறது.


  மீன லக்னத்திற்கு சூரிய தசை முடிந்து அடுத்து யோக தசையான சந்திர திசை வர இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் மீன லக்னத்திற்கு  வரக்கூடாத சுக்கிர தசையில் 20 வருஷமும், சூரிய தசை 6 வருடம் ஆக  இந்த  26 ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கான ஒரு விடுதலையாக அந்த சூரிய தசையில் இறுதி புத்தியிலே அதற்கான நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விடும் .பிறகு  சந்திர தசை வரும்பொழுது அந்த சந்திரன் எவ்விதத்திலும் பலவீனப்படாமல் இருந்தால் அதற்கான அந்த யோகத்திற்கான அடித்தளத்தை சுய புத்தியில் தந்து பிறகு படிப்படியாக ஏத்தி விடும் இதனை தொடர்ந்து வரக்கூடிய செவ்வாய் தசையுமே யோக  தசையாகவே ஜாதகருக்கு அமையும்.


இதேபோல ஜாதகருக்கு  ஒரு யோக தசை நடந்து கொண்டிருக்கையில் அடுத்து வரும் தசை அவயோக தசையாக இருப்பின் அந்த யோக தசையின் கடைசி புத்தியிலே அவயோக தசைக்கு உரிய கஷ்ட காலம் ஆரம்பமாகி சுய புத்தியில் அந்த கஷ்டத்தை அந்த தசை முழுவதும் அனுபவிக்க கூடியதற்கான செயல் அல்லது சம்பவங்கள் அந்த அவயோக தசை சுய புத்தியிலே கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.


 உதாரணமாக சிம்மம் லக்கனத்திற்கு யோகரான குரு தசை பதினாறு அள்ளி கொடுக்கும் தசையாக அமைந்து அடுத்து வரும் சிம்மம் லக்கனத்திற்கு அவயோகரான சனி தசை வருகிறது என வைத்துக் கொண்டால் யோக தசையான குரு தசையின் நிறைவு புத்தியான ராகு புத்தியிலே சனி தசையில் கஷ்டப்பட இருப்பதற்கான காரண காரியங்களை ஆரம்பித்து வைத்து விடுகிறது.சனி தசை சுய புத்தியில் அரங்கேறி அந்த தசை காலம் முழுவதும் கஷ்டப்படும்படியாக செய்து விடுகிறது.


ஒரு தசை அவயோக தசையின்னா அந்த  தசை முழுவதும் கஷ்டப்படுற மாதிரி இருக்குமா ?  அல்லது ஒருவருக்கு யோகத்தை தரும் தசையாக இருந்தால் அந்த தசை முழுவதும் யோகத்தை அனுபவிக்க கூடிய மாதிரி  இருக்குமா‌ ? அப்படின்னு நீங்க கேட்கிற கேள்வி எனக்கு காதிலே விழுகிறது.


இதற்கான பதிலை தெளிவாக தருகிறேன்.சற்று பொறுமையாக வேறு எந்த கவனமும் இல்லாமல் கூர்ந்து கவனித்து படிங்க தெளிவாக பதில் தருகிறேன்.


  எப்போதுமே ஒரு தசை நடந்தா , 

அந்த தசை தான் அந்த சாதகருக்கு "முதலாளி "மாதிரி ஓகேங்களா!. இந்த தசை நல்ல தசையா இருந்தா,

 முதலாளி நல்ல முதலாளியா இருப்பாரு ?  ஆனால் அந்த தசை கெட்ட தசையா இருந்தா அந்த முதலாளி நம்ம உழைப்பை உறிஞ்சி வேலை வாங்கக்கூடிய முதலாளியா  இருப்பாரு.


 இதுல புத்தி என்பது அந்த முதலாளிக்கு கீழே நம்முடன் சேர்ந்து வேலை பார்க்க கூடிய நம்மள போன்ற ஒரு தொழிலாளியாக முடிவு பண்ணிக்கங்க.


   ஒருவருக்கு  அவ யோக தசை அல்லது ஆறு  அல்லது எட்டுக்கு உடைய தசையாகவோ இருந்தா உங்க முதலாளி நல்ல முதலாளி இல்லைன்னு நீங்கள் முடிவு பண்ணிக்க வேண்டியதுதான். எவ்வளவு தான் உழைத்தாலும் உங்கள் உழைப்பை உறிஞ்சக்கூடிய முதலாளியாத்தான் அந்த தசை இருக்கும். அதே நேரத்தில் ஜீவனத்துக்குரிய ஒரு வழிவகை இருக்கும்.


 உங்கள் முதலாளிக்கு (நடக்கும் தசை) உங்களை பிடிக்கலை உங்களை அடித்து இழுத்து கொண்டு வர சொன்னால் அழைக்க வருகிறவனுக்கும் (புக்தி) உங்களை பிடிக்காதவனா இருந்தால் (பகை புக்தி) நன்றாக முதலாளி சொன்னதை விட கூடுதலாக அடித்து இழுத்து கொண்டு போவான்.ஆனால் உங்களை அழைக்க வருகிறவர் உங்களுக்கு நண்பராக  இருந்தால் (நட்பு புக்தி) முதலாளி சொல்வதையும் கேட்டுதான் ஆகனும் அடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணிட்டு கவுரவமாக உன்னை அழைத்து கொண்டு முதலாளியாடம் கொண்டு போய் சேர்ப்பார்.


 அவயோக தசை முழுவதும் கஷ்டப்படக்கூடிய நிலை இருந்தாலும் உங்கள் நட்பு புத்திகளில் உங்களுக்கு உகந்த நல்ல பலனைத் தரும்.அதேபோல யோகம் தரும் தசையாக இருந்தாலும் அவ யோக புக்தி காலங்களில் சில தாங்கி கொள்ளக்கூடிய அளவுக்கு சில கஷ்டங்களை கொடுத்து விடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


 ஒரு தசைக்கு எந்த புக்தி கெடுதலை தரக்கூடிய புக்தி என்பதை தெரிந்து கொண்டாலே ஏனைய புத்திகள்  நன்மையையோ அல்லது சமமாகவோ செயல்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


சூரியன் தசையில் சுக்கிர புத்தி,சனி புத்தி மற்றும் ராகு புத்தி 


சந்திரன் தசையில் சனி ,புத்தி,புதன் புக்தி மற்றும் ராகு புத்தி


செவ்வாய் தசையில் சனி ,ராகு மற்றும் புதன் புக்தி


ராகு தசையில் சூரியன்,சந்திர மற்றும் சனி புத்தி


குரு திசையில் சுக்கிர புத்தி மற்றும் புதன் புத்தி


சனி தசையில் சூரிய புத்தி ,சந்திர புத்தி, செவ்வாய் புத்தி மற்றும்  ராகு புத்தி


புதன் திசையில் குரு புத்தி மற்றும் செவ்வாய் புக்தி


கேது தசையில் சூரிய மற்றும் சந்திர மற்றும் ராகு புத்தி


சுக்கிர திசையில் குரு புத்தி ,சூரிய புத்தி மற்றும் சந்திர புத்தி.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com

     


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பன்னிரண்டு பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் சனி மற்றும் கேது சேர்க்கை

 பன்னிரண்டு பாவகங்களுடன் தொடர்பு கொள்ளும் சனி மற்றும் கேது சேர்க்கை பலன்கள் .



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகத்தில் சனி பகவான் இருள் கிரகம் ஆகும் இதனாலே அதனை இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது. சனிபகவான் இருக்கும் இடமும் மற்றும் பார்க்கக் கூடிய இடத்தையும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்தி பலவீனப்படுத்தும்.


  சனி பகவான் உடன்‌ செவ்வாய் , தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் இணையும் போது அல்லது சனி மற்றும் செவ்வாய் பகவானால் பார்க்கப்படும் போது அந்த  ஸ்தானம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. அதாவது சனி உடன் ராகு  சேர்ந்த நிலையில் இருக்கும் மற்றும் பார்க்கும் இடமும் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகிறது.இன்னும் இந்த சனி மற்றும் ராகு உடன் செவ்வாய் சேர்ந்து அல்லது பார்க்கின்ற நிலையில் இருந்தால் அவை இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.


 சில நேரங்களில் சனியுடன் இதுபோன்ற பாவ கிரகங்கள் இணைந்தும் அல்லது  அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பு தரவில்லை எனில்  சனியுடன் இணைந்த கிரகங்களின்  பாகை அடிப்படையில் 13 பாகை அளவில் ஐம்பது சதவீதம் பாதிப்பையும் மற்றும் 22 பாகைக்கு மேல் இருப்பின் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் பாதிப்பை தராது. மேலும் அவற்றுக்கு வேறு ஏதேனும் வகையில் சுபத்துவ பார்வை கிடைத்துள்ளதா ?  என்பதையும் பொறுத்து பலன் மாறுபடும்.


  சனி பகவான் ஆனவர்  பார்க்கும் இடத்தை சர்வ நாசம் செய்யும் என்றாலும் சில நேரங்களில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறைச்சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கை ஆகிய தொடர்பு பெற்ற நிலையில் அவை சுபத்துவமாக மாறி நல்ல பலனை தருவதும் உண்டு அவை பார்க்கும் மற்றும் இருக்கும் இடத்தை கெடுப்பதும் இல்லை.அதே நேரத்தில் அள்ளி கொடுத்து விடுவதும் இல்லை.


 நிழல் கிரகமான கேது பகவானை இயற்கை பாவக்கிரக வரிசையில் பெரும்பாலும் சேர்த்து விட முடியாது. இவை தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரித்து தரச் செய்வார்.

ராகு பகவானை போல கேது பகவான் தனுடன் இணைந்த கிரகத்தில் பலனை கெடுத்து விடுவதுமில்லை.


 கேது பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் உடன் இணைந்த நிலையில் கேள யோகம் என்ற கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை வழங்குகிறார்.


 சூரியன் உடன் கேது பகவான் இணையும் போது மிகப் பெரிய ஆன்மீக யோகத்தை தருகிறார்.


 சுக்கிரன் உடன் கேது இணையும்போது கூட இல்லற வாழ்வினை பெரிதும் பாதித்துவிடவில்லை.


புதன் பகவானுடன் கேது இணையும் போது வித்தையில் சாதுரியத்தை ஜாதகருக்கு அள்ளி வழங்குகிறார்.


  சந்திரனுடன் கேது இணையும் போது யூகித்து அறியும் உள்ளுணர்வை சாதகருக்கு வழங்குகிறார்.


இயற்கை பாவ கிரகமான சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானுடன் சேது பகவான் இணையும்போது  கூட ராகு பகவான் அளவிற்கு கெடுதலான பலனை ஜாதகருக்கு தந்து விடுவதில்லை இவை மறைமுக வலுவை  பாவ கிரகங்களுக்கும் அள்ளி வழங்குகிறது.


 சனி பகவான் கேதுவுடன் இணைந்து குருபகவான் பார்க்கின்ற நிலையில் ஆன்மீகத்தில் உயரிய நிலையை சாதகரை அடைய வைக்கிறது. 


ஜாதகத்தில் குரு, சனி மற்றும் கேது தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் ஜாதகர் ஆன்மீக எண்ணம் மிகுதியாக உடையவராக அதைப்பற்றிய எண்ணங்களும் மற்றும் சிந்தனைகளும் கொண்டவராக விளங்குவார்.


   இனி பன்னிரெண்டு பாவங்களுடன் சனி மற்றும் கேது பகவான் இடம்பெறும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.


 லக்கனம் என்பது சாதகரை பற்றி ஒருவர் தெளிவாக தெரிந்து கொள்ள உதவக்கூடிய ஸ்தானமாகும் அதாவது ஒருவருடைய அழகு ஆரோக்கியம் பண்பு நாட்டம், எண்ணம் ,சிந்தனை ,செயல் மற்றும் ஆயுள் ஆகியவற்றை ஆராய்ந்து அறியக்கூடிய இடமாகும்.


 ஆகையால் இந்த இடத்தில் அதாவது லக்னத்தில் சனி மற்றும் கேது இணையும் போது பெரும்பாலும் அவர் லெளகீக வாழ்வியல் சிந்தனையை விட ஆன்மீக சிந்தனை மேலோங்கி நிலையில் இருக்கும். அதே நேரத்தில் லக்னத்தில் உள்ள சனி  மற்றும் கேது லக்னத்தையும் ஏழாம் இடத்தையும் சனி பகவான் பார்வை செய்கிறார்  என்ற வகையில் லெளகீக வாழ்க்கைக்கு தேவையான திருமண உறவில் பெரிதும் நாட்டம் இல்லாமல் அதாவது சிற்றின்ப நாட்டம் இல்லாமல் பேரின்ப நாட்டம் பெரிதும் உடையவராக இருப்பார். அதிலும் குறிப்பாக லக்னத்தில் உள்ள சனி ,கேது பகவானை குரு  பகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படக்கூடிய நிலையில் அவர் எண்ணம் ,சொல்  மற்றும் செயல் அனைத்தும் 

இறை சிந்தனை உடையவராக இருப்பார். இவருக்கு பகட்டு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இருக்காது.


   வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி ,கேது சேர்க்கை கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் வாக்குப் பழிதம் உடையவராகவும் இருப்பார். இந்த அமைப்பை குரு பகவான் பார்த்த நிலையில் ஆன்மிக பேச்சாளராகவும் சாஸ்திரங்களை சம்பிரதாயங்களை பற்றி எடுத்துரைப்பவராகவும் திகழ்வார்.


மூன்றாம் இடத்தில் சனி மற்றும் கேது பகவான் அதன் தசை காலங்களில் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கும் போது யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.இன்னும் குரு பகவான் பார்வை செய்தால் நற் புகழை அடைய செய்கிறது.


நான்காம் இடத்தில் சனி கேது இணைந்த நிலையில் நான்காம் அதிபதியும் வலிமை அடைந்து இருப்பின் எதையும் ஆன்மீக அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து விடை காண செய்யும்.


  லக்கனத்தில் சனி மற்றும் கேது  இணைந்தால் எந்த அளவுக்கு ஆன்மீகத் தேடல் இருக்குமோ அதே போல ஐந்தாம் இடத்தில் சனி ,கேது இணைவு மனிதனை ஆன்மீக நோக்கிய  தேடல் பயணத்தில் மேற்கொள்ள வைக்கும்.ஐந்தாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்த நிலையில் பாவத்துவம் அடையாத குரு பகவான் பார்வை செய்தால் ஆன்மீக ஞான தேடலில் ஆர்வம் உண்டாகும்.


 இவர்களது பக்தி என்பது அக  தேடல் கொண்ட பக்தியாக இருக்கும் . நான் யார்? என்ற வினாவிற்கு விடை தேடுவார்கள்.சித்தர்கள் மீது நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.


 ஆறாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்த நிலையில் எதிரிக்கு கூட இவர்களை பிடிக்கும்.தன்னை சுற்றி அன்பானவர்களை வைத்து கொள்வார்கள்.


 ஏழாம் இடத்தில் சனி கேது இணைவு திருமண உறவில் பெரிதும் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.இவர்கள் "தாமரை இலை தண்ணீர் போல" லெளகீக வாழ்வில் மட்டும் படாமல் இருப்பார்கள்.


 எட்டாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைவு பெரிய அளவில் மாற்றம் இல்லை.ஆயுள் தீர்க்கம் ஆகும்.


தர்ம ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்து உள்ள நிலையில் சித்த புருஷர்கள் தொடர்பு உண்டாகும்.ஆன்மீக குரு கிடைப்பார்கள்.தணியாத ஆன்மீக தேடல் ,தர்ம சிந்தனை மற்றும் பரந்த மனம் உடையவராக இருப்பார்.இன்னும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் மேற்கண்ட பலனில் நேரிய வழியில் ஆன்மீக தேடல் இருக்கும்.


   "பத்தாமிடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் "என்ற நிலையில் 10-ஆம் இடத்தில் சனி +கேது இணைவு ஆன்மீக சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு அதன் மூலமாக  கிடைக்கும் ஜீவிதத்தில் வாழ்க்கை நகரும்.


   உப ஜெய ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சனி +கேது இணைவு சாதகரை நல்ல வழியில் நேரிய வழியில் நல்ல சிந்தனையில் நோக்கி நகர வைக்கும். 


  முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படும் பனிரெண்டாம் இடத்தில் சனி+ கேது இணைவு மறு பிறப்பற்ற முக்தி நிலையை அடைக்க வைக்கும்.சனி கேது இணைந்து குரு பார்வை செய்கின்ற நிலையில் அவருடைய அந்திம காலம் இறை நாமத்தை ஜெபித்து கொண்டு நல்ல மகிழ்ச்சியான நிலையில் மரணத்தை அதாவது சித்தி நிலையை அடைவார்கள்.


நன்றி.!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com

 


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் கர்மா உங்களை வழி நடத்துகிறது.(KNOW YOUR KARMA)

 உங்கள் கர்மா  உங்களை வழி நடத்துகிறது- (KNOW YOUR KARMA)



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சிலருக்கு கோடிக்கணக்கான பணம் சேர்ந்து இந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு வருமான வரித்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு நகையாக மாற்றி மறைத்து வைப்பது , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் சொத்து வாங்கி போடுவது என்ற வகையில் இந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் நபர்கள் உள்ள அதே உலகத்தில் தான் அன்றாட அடிப்படை தேவைக்கு அல்லாடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.


 இந்த மாதிரியான மாறுபட்ட நிலைக்கு அதாவது ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் கடவுளின் படைப்பே காரணம் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது.ஒருவருக்கு நடக்கும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு அவர்களது ஊழ்வினை பயனே காரணம் ஆகும்.


 ஒருவர் அவருடைய ஊழ்வினை பயன் காரணமாக இந்த உலகில் பிறப்பு எடுக்கிறார்.எனவே நாம் கர்ம பலனை அனுபவிக்கவே இந்த உலகில் பிறப்பாக பிறக்கின்றோம்.


  மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடலில் "மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி" என்கிறார்.


 இவ்வுலகில் மண்ணில் அவதரிப்பதையே மாய பிறப்பு என்கிறார்.இந்த மாய பிறப்பை அறுக்கும் மன்னன் ஆக சிவபிரானை போற்றுகிறார்.மனிதன் பிறந்து வளர்ந்து மறைந்து மறு பிறப்பை பெறுகிறான்.பிறப்பற்ற பெரு நிலை எய்த மனிதன் ஆசைகளற்ற நிலையில் இறக்க வேண்டும்.எந்த ஆசைகள் நிறைவேறாமல் ஏக்கத்துடன் இறக்க பயந்து இறக்கிறானோ அதுவே மறுபிறப்புக்கு வழி வகுக்கிறது.


 ஒரு குழந்தை பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்க சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியான நிலையில் வரவேற்பார்கள்.அதே போல அந்த மனிதன் இறக்கும் போது முழுமனதுடன் மனநிறைவோடு மகிழ்ச்சியான மனநிலையில் உயிர் போக சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அழுது புலம்புவார்கள்.


 கண்ணதாசன் தான் சொல்லுவார் தனது அர்த்தமுள்ள இந்து மதம் நூலில்" மூன்று பக்கம்  நீர் நிறைந்த கடலை தந்து குடிக்க முடியாமல் செய்து விட்டு ஒரு பக்கம் தண்ணீருக்கு அல்லாடும் நிலையினை தந்தது யார் ? என்று நம்மிடம் கேள்வி கேட்கிறார்.


 காசு பணம் இல்லாத காலங்களில் கூழ் குடித்து கொண்டு மீன் ,கறி போன்ற விதமான உணவுக்கு ஏங்கி அதற்காக கஷ்டப்பட்டு உழைத்துப் போராடி பணத்தை சேர்த்த பிறகு நீரிழிவு நோய், குறை  இரத்த அழுத்தம் வந்து மருத்துவர்கள் கறி ,மீன் சாப்பிடக்கூடாது .கூழ் மட்டுமே குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிய பிறகு எதற்காக ஏங்கி உழைத்தோமோ அந்நிலை அடைந்த பிறகு அதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையை பாருங்கள்.


 உங்களுடைய ஜாதகத்தினை பார்த்து  நீங்கள் இந்த பிறப்பில் எந்த மாதிரியான வாழ்வினை வாழ சிருஷ்டிக்கபட்டிருக்கிறீர்கள்  என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


 எந்த கிரகம் உங்களை அதிகமாக வழிநடத்த போகிறது என்பதை வைத்து நீங்கள் எவ்வித வாழ்வினை வாழ போகிறீர்கள் என்பதை சொல்லி விடலாம்.எவ்வித சவாலை சந்திக்க போகிறீர்கள் என்பதை கண்டறியலாம்.


பிறப்பின் நோக்கத்தை உங்கள் ஜாதகத்தில் 12 ராசிகளில் 9 கிரகங்கள் 27 நட்சத்திர பாதத்தில் கொண்டு அமர்ந்திருக்கக் கூடிய விதத்தை வைத்து உங்கள் பிறப்பின் ரகசியத்தை துல்லியமாக கண்டறிய இயலும்.


 முன் பிறப்பில் அவரவர் செய்த நல்வினை மற்றும் தீய வினைக்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் பிறப்பாக பிறப்பு எடுக்கிறோம்.இதற்கு ஏற்ற அமைப்பில் கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்ற வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெற்றோருக்கு பிள்ளையாக பிறக்கின்றோம்.


 ஒருவர் எதை நோக்கிப் பயணமாக இருக்கும் என்பதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களும் , தசை  புக்தி மற்றும் கோச்சார பலன்களும் முடிவு செய்கிறது.


ஒரு மனிதன் வாழ்வில் எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டிருக்கும்.வாழ்வின் கடைநிலை வாழ்வியல் பொருளாதார வீடுகளில் படிக்காத பெற்றோர்களுக்கு பிறந்து பிறந்து உகந்த தசா மற்றும் கோச்சார பலன்களை தக்க சமயத்தில் தந்து வாழ்வின் உச்ச நிலைக்கு கொண்டு செல்வதும் உண்டு.


 "இறைவன் எப்பொழுதும் பாதை முழுவதும் பூக்களே நிறைந்து இருக்கும் என்று வாக்கு தரவில்லை.". வாழ்வில் ஏற்ற , இறக்கங்கள் இரண்டும் கலந்தே தான் இருக்கும்.


  ஏதோ லட்சத்தில் ஒருவருக்கு தான் பிறப்பிலிருந்து இறக்கும் வரை ராஜ யோக அமைப்பில் வாழ்ந்து மறைவார்கள்.


 கிராமத்தில் பழமொழி ஒன்று உண்டு.


"மூன்று தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை.மூன்று தலைமுறை அழிந்துவனும்  இல்லை".


 எனவே ஒவ்வொருவரும் நமது கர்ம வினையை அனுபவிக்கவே பிறந்து இருக்கிறோம்.கர்ம வினை கண்டு நொந்து கொள்ளாமல் மற்றும் கர்ம வினையால் உயர்ந்த நிலையில் இருந்தால் ரொம்ப ஆடிவிடாமல் சீராக வாழ்ந்து சிறப்பாக அடுத்த பிறவிக்கு தயாராகுவோம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றும் ஒரு செல் ; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண 💒 பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    


அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email  masterastroravi@gmail.com

யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் வேலை செய்யாததற்கு காரணம் என்ன?

 யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் வேலை செய்யாததற்கு காரணம் என்ன?

         


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஜாதகம் பார்க்க வரக்கூடிய பல நபருடைய ஜாதகங்களை  ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு ஜாதகத்தில் யோக அமைப்புகள் நிறைய இருந்தும் அவை தக்க சமயத்தில் பயன்படாமல் இருந்து விடுகிறது. இவ்வாறு இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கான விடையைத் தருவதே இந்த பதிவினுடைய நோக்கமாகும்.


  அதாவது ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தர வேண்டுமாயின் அந்த சாதகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற அதிக ஸ்தான வலிமை பெற்று இருக்க வேண்டும் என்பது கிடையாது.


 சில நேரங்களில் அதிக ஸ்தான வலிமை பெறாத கிரகங்கள் கூட சாதாரண அமைப்பில் இருந்து மிகப்பெரிய யோகங்களை சாதகருக்கு தந்து விடுவது உண்டு. இது போன்ற அமைப்பை பல ஜாதகங்களில்  கண்கூடாக பார்க்க முடிகிறது.


  ஒருவருக்கு கிரகங்கள் நடக்கும் தசை அதிக யோகத்தை தந்து வாழ்வின் உயரிய நிலைக்கு இட்டு செல்ல வேண்டுமாயின் அவர்கள் ஜாதகத்தில் அச்சாணியாக விளங்கும் இலக்கனமும்‌ மற்றும் லக்கனாதிபதியும்  பாவத்துவம் அடையாத நிலையில் பலமடைந்து இருக்க வேண்டும். ஏனெனில் தசை நடத்தும் கிரகம் கொடுக்கக்கூடிய யோகத்தை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய பலம் என்பது மிக மிக அவசியமாகும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் பௌர்ணமி யோகம் பெற்றவர்கள் அரசின் உயரிய பதவிகளில்,  ஆட்சி கட்டிலில் மற்றும் ஆளுமை தன்மை மிக்கவராக இருப்பார்கள் என்பது சோதிட முக்கிய விதி என்றாலும் சில நிலைகளில் பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்களும் சாதாரண கீழ்மட்ட நிலையில் இருந்து விடுகிறார்கள். இதற்கான காரணங்களை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அவருடைய ஜாதகத்தில் அந்த பௌர்ணமி யோகத்தை தரக்கூடிய அந்த சூரியனுடைய அல்லது சந்திரனோடோ நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுக்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து கிரகண தோஷத்தை அதாவது சந்திர கிரகணம் போன்றவற்றை தந்து விடுவதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.


  இதே பொளர்ணமி யோக அமைப்பில் வேறு வகையில் பார்த்தால்

சில நேரங்களில் சூரியனுடன்  சனி பகவான் அல்லது சந்திரனுடன் சனி பகவான் இணைந்து அந்த யோக அமைப்பை தவிடு பொடி ஆக்கி  விடுவதும் உண்டு. சூரியனுடன் சனி எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து விடும் பொழுது அவை சூரியனையும் பலமிழக்க செய்வதுடன் சந்திரனையும் பார்வை செய்து பலமிழக்க செய்து விடுகிறது. அதேபோல சந்திரன் உடன் சனி நெருக்கமாக இணையும் பொழுது சந்திரனை பலமிழக்க செய்வதுடன் தனது ஏழாவது பார்வையால் சூரியனை பலமிழக்க செய்து விடுகிறது.


  சில ஜாதகங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் போது உச்சத்தை உச்சம் பார்க்கின்ற  நிலையில் அவை பெரிய அளவுக்கு யோகத்தை தந்து விடுவதில்லை. உதாரணமாக மேஷத்தில் சூரியன் உச்சம் மற்றும் துலாத்தில் சளி உச்சம் என்ற நிலையில் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது சனி வக்கிரம் பெறுவதோடு  சூரியன் மற்றும் சனி சம சப்தம பார்வையால் 

தந்தை- மகன் உறவு நிலை ,அரசு வேலை கிடைப்பதில் தாமதம் போன்ற கெடு பலனை ஜாதகருக்கு கொடுத்து விடும்.


 கடகத்தில் குரு உச்சம் பெற்று மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் ஒன்றுக்கொண்று பார்த்துக்கொண்ட சாதகங்கள் பலவற்றை பார்க்கும் பொழுது அதன் தசைகளில் அவை ஜாதகருக்கு யோகத்தை தந்து விடுவதில்லை.


  பல நேரங்களில் நீசம் பெற்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளும்போது கூட அதன் தசைகளில் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு கொடுத்துள்ளது.


   உதாரணமாக கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் மகரத்தில் குரு நீசம் என்ற வகையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பொழுது அவை நீச பங்கம் பெற்று குரு தசை மற்றும் செவ்வாய் தசையில் சாதகருக்கு நல்ல பலனை தந்து விடுகிறது.


  ஒரு உச்சம் பெற்ற கிரகம் நீசம் பெற்ற கிரகத்தோடு இணையும் பொழுது அந்த உச்சம் பெற்ற கிரகம் தனது வலிமையின் அல்லது ஒளி அளவின் சதவீதத்தை சற்று நீசம் பெற்ற கிரகத்திற்கு கொடுத்து விடுவதால் உச்சம் பெற்ற அந்த கிரகம் அதன் தசையில் சாதகருக்கு எதிர்பார்த்த அளவைவிட குறைவான யோகத்தை கொடுக்கிறது.


  எல்லாவற்றிற்கும் மேலாக  ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் ஸ்தான வலிமை,

  திக்பலம் மற்றும் திருக் பலம்  போன்ற அனைத்தும் பெற்று இருந்தாலும் அந்த தசை அந்த சாதகருக்கு வாழ்நாளில் வராத பல ஜாதகங்களாலும் அந்த யோகம் அவருக்கு செயல்படாமல் போய்விடும்.


ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ஸ்தான பலம், திக்பலம் மற்றும் திருக் பலம் போன்ற பலம் பெற்ற அமைப்பு இல்லாத கிரகங்கள் பல இருந்தாலும் ஒரு சில கிரகங்கள் மட்டும் நல்ல முறையில்  அமைந்து சுபத்துவம் பெற்ற நிலையில் இருந்து அதன் தசை அவருக்கு தக்க சமயத்தில் வந்து அவரை பெரும் புகழை அடையச் செய்வதும் உண்டு.


 இங்கு ஸ்தான பலம் என குறிப்பிடுவது  உச்சம், மூலதிரிகோணம், ஆட்சி , நட்பு மற்றும் நீசம் போன்ற நிலையில் கிரகங்கள் இருப்பது ஆகும். சில நேரங்களில் ஒரு கிரகங்கள்  ஸ்தான வலிமை இல்லாவிட்டாலும்  அதாவது நீசம் பெற்ற நிலையில் திக்பலம் பெற்று இருந்தாலும் அதனை வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது. திருக் பலம் என்று குறிப்பிடுவது கிரகங்களுடைய பார்வை பலமாகும். அதாவது இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர் பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்த்தால் அந்த பார்க்கப்படும் ஸ்தானமும் மற்றும் அந்த கிரகமும் அதிக சுபத்துவம் அடையும். அதே நேரத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்வை செய்தால் அவை பார்க்கப்படும் ஸ்தானமும்  மற்றும் கிரகமும் பாவத்துவத்துக்கு உட்படும்.இங்கு சுபத்துவம் பெற்ற கிரகங்கள் தசை ஜாதகருக்கு யோக பலனை தருகிறது.ஆனால் பாவத்துவம் அடைந்த கிரகங்கள் தசை கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு சில நேரங்களில் ராசியில் தசை நடத்தும் கிரகங்கள் சுபத்துவம் அடைந்து பலம் பெற்று இருந்தாலும்  நல்ல பலனைத் தராமல் இருப்பதற்கு அவை அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி மற்றும் பாவ கிரகங்கள் உடன் இணைந்து வலிமை இழந்து இருக்கும்.


 இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை  மற்றும் சேர்க்கை பெற்ற கிரகங்கள் அதன் தசையில் அதிக யோகத்தை கொடுக்கும் என்றாலும் சில நேரங்களில் அவை பாகை அடிப்படையில் நெருக்கமாக இணையாமலோ அல்லது பார்வையை செய்யாமலோ  உள்ளது . அது போன்ற நிலையில் யோகத்தை சாதகருக்கு அந்த தசைகள் கொடுக்காமல் இருந்து விடுகிறது.


   இது போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில சாதகங்கள் பார்ப்பதற்கு அதிக யோக அமைப்பில் இருப்பது போல் தோன்றினாலும் அந்த யோக அமைப்புகள் சாதகருக்கு தக்க சமயத்தில் பயன்படாமல் அல்லது வாழ்நாளில் வராமல் இருந்து விடுவது உண்டு.


   " எல்லாம் அவன் செயல் ".


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 

மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

      


அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

   ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்களுக்கு வரக்கூடாத தசை எது?

 உங்களுக்கு வரக்கூடாத தசை எது ? தெரிந்து கொள்வது எப்படி?

           


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு மனிதனுக்கு வரக்கூடிய வாழ்வியல் இன்ப துன்பங்களை முடிவு செய்வது அவருக்கு நடக்கக்கூடிய  தசா புத்திகளே ஆகும்.


  மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவது புதன் தசையாகும். புதன் பகவான் மேஷ லக்னத்திற்கு மூன்று மற்றும் ஆறுக்கு உடையவராக இருப்பதால் இந்த தசை மேஷ லக்னத்திற்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.


  ரிஷப லக்னத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவது  குரு பகவான் தசையாகும். அசுர குரு  அணி தலைவரான சுக்கிரனுக்கு தேவ குரு அணிக்கு தலைவரான குரு பகவான் எதிர் தன்மை வாய்ந்த கிரகம் ஆகும்.


ரிஷப லக்னத்திற்கு குரு பகவான் அஷ்டம மற்றும் லாப அதிபதியாக வரக்கூடிய குரு பகவான் தசையானது ரிஷபம் லக்கனத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவது.


மிதுனம் லக்கனத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவது செவ்வாய் பகவான் தசை ஆகும்.மிதுன லக்கனத்திற்கு சத்ரு ஸ்தானமான ஆறாம் இட அதிபதியாகவும் இவை செயல்படுவதால் இவை மிதுனம் லக்கனத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுகிறது.


  ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனை லக்கனாதிபதிகள் கொண்ட  சிம்மம் மற்றும் கடக  லக்கனங்களுக்கு இருள் கிரகமான சனி பகவான் தசை வரக்கூடாது தசையாக கருதப்படுகிறது.


 சிம்மம் மற்றும் கடகம்  லக்னங்களுக்கு சனி பகவான் ஆறு மற்றும் எட்டுக்குடைய தசையாக வருவதால் சனி பகவான் அவயோகத்தசையாக கருதப்படுகிறது.


கன்னி லக்னத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவது செவ்வாய் பகவான் தசையாகும். செவ்வாய் பகவான் மூன்று மற்றும் ஆறாம் இட தசையாக கருதப்படுவதால் இவை அவ யோகத்தை தரக்கூடிய தசையாக  கருதப்படுகிறது.


  துலாம் லக்னத்திற்கு குரு பகவான் மூன்று மற்றும் ஆறுக்குடைய தசையாக கருதப்படுவதால் குரு பகவான் தசை அவ யோகத் தசையாக கருதப்படுகிறது.


விருச்சிக லக்னத்திற்கு புதன் பகவான் தசை வரக்கூடாத தசையாக கருதப்படுவது.இவை எட்டு மற்றும் பதினொன்றாம் இட அதிபதி என்பதால் இவை யோகத்தை தராத தசையாக கருதப்படுகிறது.


 தனுசு லக்கனத்திற்கு எதிர் அணியாக அழைக்கப்படும் சுக்கிரன் பகவான் தசை அவ யோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.சுக்கிரன் ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதி ஆகும்.


இருள் கிரகமாக கருதப்படும் சனி பகவானின் லக்னாதிபதியாக கொண்ட மகர லக்கினத்திற்கு  சூரிய தசையும்‌ மற்றும் கும்ப லக்னத்திற்கு சந்திர தசையும் வரக்கூடாது தசையாக கருதப்படுகிறது. சனி பகவான் இவ்விரு லக்கனத்திற்கு எட்டு மற்றும் ஆறுக்கு உடையவராக செயல்படுவார் அவயோகத் தசையாக கருதப்படுகிறது.


குரு பகவானை லக்கனாதிபதி  கொண்ட மீன லக்னத்திற்கு அசுர குரு அணியை சேர்ந்த சுக்கிரன் தசை அவயோக தசையாக ஜாதகருக்கு கருதப்படுகிறது மேலும் சுக்கிரன் மீன லக்னத்திற்கு மூன்று மற்றும் எட்டுக்குடையவராகவும் வருகிறார்.


 பொதுவாக லக்னத்திற்கு  ஆறு மற்றும் எட்டுக்கு  கூடியவராக வரக்கூடிய தசைகள் அவயோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக கருதப்படுவதால் இந்த தசைகள் சாதகர்களுக்கு வந்தால் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வேதனையை அனுபவிக்க நேரிடும்.  விதி விலக்காக சில நேரங்களில் இந்த அவயோகத் தசைகள் உப ஜெய ஸ்தானமான  மூன்று, ஆறு, பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களில் நட்பு நிலையில் இருந்து சுபத்துவம் பெற்ற நிலையில் அந்த  மறைவிட  ஆதிபத்திய வழியாக நல்ல பலனையும் சாதகருக்கு தந்து விடுவது உண்டு.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

      


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

காசேதான் கடவுளப்பா....!?

 காசேதான் கடவுளப்பா..?!

        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  இன்றைய கால கட்டத்தில் பணம் சம்பாதிக்கிறது  என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அடுத்தவர் பையில் இருக்கும் பணத்தை நம் கைக்கு கொண்டு வர  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.


"கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!!"


  ஒரு சிலர் ஒரு நாள் முழுவதும் உழைத்து குறைந்த பட்ச தொகையாக ரூ 300 கூட சாம்பாதிக்க இயலாத சூழலில் இருப்பார்கள்.உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.


 ஒரு சிலர் குளிர் பதன அறையில் அமர்ந்து கொண்டு வினாடி கணக்கில் பல லட்சக்கணக்கான பணத்தை சம்பாதிக்கிறார்கள்.


மேற்கண்ட இந்த மாறுபட்ட தன்மைக்கு நீங்கள் அறிவு, அனுபவம் மற்றும் அந்தஸ்து என குறிப்பிட்டாலும் முக்கியமான உண்மை அவர்கள் கால நேரம் தான் முக்கிய காரணமாக அமைகிறது என்பது ஜோதிடராகிய எனது அசைக்க முடியாத புள்ளி விவரங்கள் ஆகும்.


  பணம் சம்பாதிக்கிற அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நிச்சயம் அவர் தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வின் உயரிய நிலையில் அடைய முடியும்.உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக அமைந்து தன-பாக்கிய-லாப அதிபதிகள் வலுப்பெற்று நல்ல ஸ்தான நிலையில் நல்ல வலிமை பெற்று உகந்த தசா அமைப்புக்கள் பிறக்கும் போதிலிருந்து தொடர்ந்து இருந்தால் நிச்சயமாக பண கஷ்டம் இருக்காது.


2,9,11 ஆம் அதிபதிகளும் மற்றும் தன் காரகன் குரு பகவானும் வலிமை பெற்று ஒன்றுக்கொன்று பார்வை, சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை போன்ற முறைகள் வழியாக வலு பெற்று அதன் ஏதாவது தசை நடப்பில் உள்ள காலங்களில் யாரும் எதிர் பார்க்காத உயரத்திற்கு வாழ்க்கை தரம் உயர்ந்து செல்லும்.


மேற்கண்ட அமைப்பை பெற்று வித்தைக்காரர் புதன் பகவான் மற்றும் குரு பகவான் வலுப்பெற்று நின்றால் மேற்கண்ட தசாபுத்தி நடக்கும் போது தனது மூளையினை பயன்படுத்தி உடல் உழைப்பு இன்றி பெரும் தனம் ஈட்டுவார்கள்.


  ஒரு சிலர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று தன-பாக்கிய -லாப அதிபதிகள் மற்றும் தன் காரகன் குரு பகவான் போன்றோர் இயல்பான நிலையில் அமைந்த நிலையில் உகந்த தசா அமைப்புக்கள் வராத நிலையில் கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து நடுத்தரமான வருமானத்தில் வாழ்க்கை நடத்துவார்கள்.


ஒரு சிலர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்தோ  அல்லது இருள் கிரகமான சனி பகவான்,ராகு ,தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் லக்கனத்தில் நின்றிருந்த நிலையில் தன -பாக்கிய -லாப அதிபதிகள் மற்றும் தன காரகன் குரு பகவான் போன்றோர் பலம் இழந்த நிலையில் உள்ளவர்கள் தனது உடல் உழைப்பால் கடினமாக உழைத்து உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறாதவர்களாக இருப்பார்கள்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஆன்மீக அனுபவங்கள்

 ஆன்மீக அனுபவங்கள்.

 


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  இன்றைய கால கட்டத்தில் எல்லாமே வெளி வேஷமாக போய் விட்டது.நெற்றி நிறைய திருநீறு பூசி கொண்டு கழுத்தில் உத்திராட்ஷ மாலை அணிந்து கொண்டு இருப்பதனாலேயே அவரை பக்திமான் என முடிவு செய்து விட முடியாது.அவரை நெருக்கமாக பழகி பார்த்தால் அவரது இருளான மற்றொரு முகம் தெரிய வருகிறது.


  யோகா , தியானம் செய்தால் மனதை அடக்கி ஆள கூடிய தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள் என நெருங்கி பழகி பார்த்தால் அவர்களிடம் எவ்வித பயிற்சியும் செய்யாத மனிதன் பராவாயில்லை என எண்ண தோன்றுகிறது.இவர்கள் செய்யக்கூடிய தியானம் ,யோகா மற்றும் முத்திரை எல்லாம் மற்றவர்களின் பார்வைக்கு காட்டி கொள்ளவதற்காக செய்வது போல் தெரிய வருகிறது.


தினமும் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்பவராக வெளியில் காட்டிக்கொண்டு சிவனின் சொத்தை பாதி அபகரித்து வைத்து இருப்பார்.


 சிலரது பக்தி கூட வெற்று வெளி பகட்டாக இருக்கும்.பக்தர்களே பார்த்து வியக்கும் படியாக பெரிய ஆளுயர மாலை , எலுமிச்சை பழ மாலை ,பலவித அபிஷேக ஆராதனைகள் மற்றும் கிடா பூஜை  என மற்றவர் பார்த்து வியக்கும் படியான பெரிய பணக்காரர் என எண்ணும்படியாக பக்தி வழிபாடு எல்லாம் செய்து கலக்குவார்கள்.


 சிலர் கோயில் பூசாரியிடம்

 "என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள்? நான் சாமிக்கு செய்கிறேன்" என்பார்கள்.சாமிக்கு செய்யும் அளவுக்கு நாம் பெரிய ஆட்கள் இல்லை என்பதை உணராமல் சொல்லுவார்கள்.சாமி தனக்கு வேண்டியதை யாரிடம் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து  தனக்கு வேண்டியதை அவர் மூலமாக நிறைவேற்றி கொள்ளும்.


  ஊருக்கு பெரிய மனிதனை போல காட்டி கொள்வதற்காக பிறர் அறிய அண்ணசத்திரம், தான தர்மங்கள், நன்கொடை கொடுத்தல் போன்றவற்றை சிறப்புற செய்து தன்னை புகழும் படியான தோரணையை உருவாக்கி கொள்வார். ஆனால் அடுத்தவர் சொத்தை அவருக்கே தெரியாமல் அபகரித்து கொள்வார்.


 பெண்களை கண்டாலே எட்டி நிற்பவர் போல எட்டடி தள்ளி நிற்பார்.பணிவாக பேசுவார்.பல அப்பாவி அபலை பெண்களின் கற்பை சூரையாடி இருப்பார்.


நல்லவர்கள் பிறர் அறியும் படியான எந்த செயலை செய்ய நினைக்க மாட்டார்கள்.பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதவன் போல இருப்பார்.பார்வைக்கு தெரியும் படியான பகட்டான விஷயங்களை செய்ய மாட்டார்கள்.இவர்கள் கடலின் ஆழத்தில் இருக்கும் முத்து போல இருப்பார்கள்.


இவர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பார்.இவர்கள் செய்யும் எந்த நற்காரியங்களும் வெளியில் யாருக்கும் தெரியும் படியாக இருக்காது.


 "கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்"


   உண்மையான இறை பக்தி என்பது தன்னுள் இறையை அறிய முயல்வது.இவ்வாறு அறிய செய்யும் முயற்சியில் பல ஜென்மங்கள் ஈடுபடலாம்.ஒரு சிலருக்கு வெகு விரைவாக அந்த நிலையை அடைந்து விடுகிறார்கள்.அவ்வாறு அந்த நிலையை அடைந்தவர்கள் வெளியில் யாரிடமும் காட்டி கொள்ள மாட்டார்கள்.பார்ப்பதற்கு சாதாரண மனிதர்கள் போல நம்முடன் வாழ்வார்கள்.இவர்கள் கடலின் அடி ஆழத்தில் இருக்கும் முத்து போன்றவர்கள்.ஒரு சிலர் முக்தி நிலையை அடைந்தது போல பெரிதாக அலட்டிக் கொள்வார்கள்.அவர்கள் நிச்சயமாக இல்லை.


அந்த சிறப்பு நிலையை அடைய கல்வி, அந்தஸ்து,சாதி போன்ற எதுவும் உதவி செய்யாது.இன்னும் சொல்லபோனால் நாம் இதுவரை கற்ற‌ மற்றும் பெற்ற  பல விஷயங்கள் கூட ஞானம் அடைய பெரிய தடையாக இருக்கும்.இறைவனிடம் சரணாகதி ஒன்றே சிறப்பான தகுதி நிலை ஆகும்.


   நாயான்மார்களில் எவ்வித படிப்பறிவும் இல்லாத கண்ணப்ப நாயனார் தான் விரைவில் இறைநிலையை அடைய முடிந்தது.அவனது எந்த வித சந்தேகமும் இல்லாத சரணாகதி அவனை இறையின் முக்தி நிலையை அடைய முடிந்தது.


  கோயிலுக்கு சென்று சாமி கும்படுதல் என்பது பக்தி வழிபாட்டின் துவக்க நிலை ஆகும்.இது ஒரு குழந்தை கல்வி பயில பாலர் பள்ளிக்கு (kindergarten) செல்வது போன்றது.பக்தியின் உயரிய நிலையை அடைய இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டி இருக்கும்.


  தனக்குள் தான் யார் ? என்பதை கண்டறிய இயன்றால் அவர்கள் கோயிலுக்கு செல்ல தேவையில்லை.அவர்கள் இருக்கும் இடமே கோயிலாக மாறிவிடுகிறது.தன்னை அறிதல் கலையை உடையவர்கள் சந்தை கூட்டத்தில் இருந்தாலும் அந்த கூட்டத்தில் இருந்து விலகி தனிமை நிலை அடைவார்.


 தனிமை நிலையில் இருப்பது என்பது தான் பலருடன் சேர்ந்து இருக்காமல் இருப்பது என முடிவு செய்து விடாதீர்கள்.நீங்கள் தனிமையில் அமர்ந்து கொண்டு உங்கள் அகத்தை உற்று நோக்குங்கள் மனதிற்குள் பலவித இரைச்சல்கள் இருப்பதை காணலாம்.உங்கள் மனதினுள் பலவித இரைச்சல்கள் சந்தை கூட்டத்தை போல காணப்படும்.


 அதற்குள் கடந்த காலத்தில் நிகழ்ந்த மான அவமானங்கள்,பழி வாங்கும் எண்ணம், ...இது போன்று மனது ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பலவித எண்ண அலைகள் எழுந்து ஓய்வதை காணலாம்.


இன்னும் கூர்ந்து மனதை அடக்க நினைத்தால் அது இன்னும் முன்னிலும் கூடுதலாக துள்ளி குதித்து கொண்டு ஓடுகிறது.ஒருவரை நினைத்தவுடன் பலிவாங்க பலவித கற்பிதங்களை வடிவமைக்கிறது.ஒரு சிலரை கட்டி உறவாட நினைக்கிறது.


 சில நேரங்களில் கடந்த காலத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறது.அதில் நிகழ்ந்த வெற்றிகளை கண்டு சந்தோஷ் படுகிறது.ஏமாற்றங்களை எண்ணி துக்கப்பட வைக்கிறது.அவமானங்களை எண்ணி கோபப்பட வைக்கிறது.


சில நேரங்களில் எதிர் காலத்தில் தன்னை வெற்றி வீரனாக எண்ணி சந்தோஷப்பட வைக்கிறது.அவமானபடுத்தியவனை அல்லது தோற்க செய்தவனை தோற்கடித்து வெற்றி பெற்றது போல் சந்தோஷ பட வைக்கிறது.


ஆனால் மனம் நிலையாக நிகழ்காலத்தில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இடத்தில் நிற்க வைக்க முடியவில்லை.


எனவே மனதை அடக்க நினைக்காமல் அதன் போக்கிலே போக விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடும் மாட்டை அதன் போக்கிலே கயிற்றை பிடித்து கொண்டு ஓடி பிறகு கொஞ்ச தூரத்தில் இறுக்கி நிறுத்தி பிறகு மாடு தானாகவே தனது பிடிக்குள் வந்து சொல்வதை கேட்பது போல மனதை அதன் போக்கில் ஓட விட்டு வேடிக்கை காட்டி மூச்சு எனும் கயிற்றால் மெல்ல மெல்ல இறுக்கி கடைசியில் அது நாம் சொற்படி நடக்கும் படியாக செய்ய வேண்டும்.


இவ்வாறு இறைந்து கிடக்கும் மனதை பலவித பயிற்சியால் தியா ஒருமுகப்படுத்த பலவித சக்திகள் மனதிற்கு உண்டாகும்.


இதன் பிறகு ஒருவருக்காக மனதார வேண்டிக்கொண்டால் அவரது வேண்டுதல் பழிக்கும்.இவரது பக்தியில் எவ்வித ஏமாற்றுவதும் இருக்காது.


"உள்ளமே பெருங்கோவில்

ஊனுடம்பு ஆலயம் 

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளந்தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம் 

கள்ள புலனைந்தும் காளா மணி  விளக்கு"


 மனதை உற்று நோக்கி மூச்சு பயிற்சி உடன் மன பயிற்சியும் செய்தால் நமது மெய்,வாய்,கண்,காது, மூக்கு ஆகிய ஐந்து புலன்களும் நாம் சொற்படி நடக்கும். ஐந்து  புலன்களையும் கள்ள புலன்கள் என்கிறார்.ஏனெனில் நம் சொற்படி கேட்காமல் செயல்படும் என்பதால் ஆகும். சிலரைப் பார்க்காதே என்றால் மீண்டும் பார்க்கும். கேட்காத மற்றும் கேட்க கூடாத விஷயங்களை கேட்கும். ஆனால் இந்த ஐந்து புலன்களும் மனதின் வழியாக இயங்குவதால் மனதை அடக்க இந்த ஐந்து திருட்டுப் புலன்களும் நாம் சொல்படி கேட்கும். இப்போது  ஐம்புலன்கள் மூலம் பெறப்பட்ட அறிவை பகுத்து அறியக்கூடிய பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட   ஏழாம் அறிவு( seventh sence) எனப்படும் 

 பகுத்தறிவுக்கு எட்டாத அப்பாற்பட்ட விஷயங்களும் நம் கண்ணிற்கு புலப்படும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உனது கர்மாவை முடிவு செய்யும் தசைகள்

 உமது கர்மாவை முடிவு செய்யும் தசைகள் .

      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் நல்ல தசை அமைப்புகள் வரும்பொழுது அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் அனைத்துமே நல்ல முறையில் அமைந்து அவர்கள் யாரும் தொடாத அளவிற்கு உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள்.


  "உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்".


   மாறாக அவர்களுக்கு கெட்ட நேரம் நடந்தால் அதாவது அவர்களுக்கு உகந்த யோக தசைகள் நடக்காமல் அவ யோக திசைகள் மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை  மற்றும் அஷ்டம சனி போன்ற கெட்ட கோச்சார பலன்கள் நடக்கக்கூடிய காலங்களில் அவர்கள் சந்திக்கக்கூடிய மனிதர்கள் ,அவர்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களும் நல்ல முறையில் அமையாமல் அவர்கள் கீழ்நோக்கி தள்ளப்படுவார்கள்.


 கொட்டும் மழை நேரம் உப்பு விற்க போனேன்!

 காற்றடிக்கும் நேரம் பொறி விக்க போனேன் !

தப்பு கணக்கை போட்டு தவித்தேன்!

பட்ட பிறகே  புத்தி தெளிந்தேன்!


 என்றவாறு புலம்பி திரிவார்கள்.


   ஒருவருக்கு வெற்றி மேல் வெற்றி வரும்பொழுது அந்த வெற்றிக்கு வித்தாக தான் மட்டுமே காரணம் என்று இறுமாப்பு கொள்வார்கள்.அந்த கால கட்டத்தில் அவர்களுக்கு கால நேரம்,ஜாதகம் இவற்றில் நம்பிக்கை வருவதில்லை.இந்த மாதிரியான தருணங்கள் அவர்கள் ஜோதிடர்களை நாடி செல்வதில்லை.


 இதே போன்ற மனிதர்கள் சில நேரங்களில் தனது புத்திசாலித்தனத்தால்  எவ்வளவு முயன்றாலும் தோல்வி மேல்  தோல்வியை தழுவும் போது மட்டும் நின்று நிதானித்து யோசிப்பார்கள்.ஓகோ  ஜாதகத்தில் கெட்ட நேரம்/நல்ல நேரம் என்று சொல்கிறார்களே ஒரு தடவை போய்தான் பார்ப்போம் என ஜாதகத்தை தேடுவார்கள்.


 அங்கே போய் பார்த்தால்தான் தெரியும் தனக்கு கஷ்டமான சூழல் ஆரம்பித்த நேரத்தில் தான் ஆறு அல்லது எட்டு தசைகள் அல்லது லக்கன அவயோக தசைகள் கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி போன்றவை நடப்பில் இருக்கும்.இவ்வாறு வாழ்வில் உயர்வுக்கு தான் மட்டுமே காரணம் என ஆணித்தரமாக நம்பிய இவர்களால் தாழ்வுக்கும் தான் மட்டுமே காரணம் என இவர்களால் ஆணித்தரமாக நம்ப முடியவில்லை.அப்போது மட்டும் கால நேரத்தின் மீது தனது தாழ்வுக்கான காரணத்தை ஏற்றி விடுவார்கள்.


கனியன் பூங்குன்றனார் தனது 

"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்று  பாடலில் 

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று குறிப்பிடுகிறார்.இதேபோல முழு நம்பிக்கை கொண்டவர்கள் பாராட்டதக்கவர்கள்.


 ஒருவர் உறுதியான மனநிலை கொண்டு எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத சமநிலை தன்மை கொண்ட மனிதர்களை  கோள்கள் தாக்குவதில்லை.இவர்கள் லொளகீக ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.இவர்களை பொறுத்த மட்டில் எது வந்தாலும் ஒன்றே ஆகும்.

இவர்கள்

 கோளறு பதிகம் பாடலில் உள்ள கருத்துப்படி உறுதியான மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

  "நாள் என்ன செய்யும் ? வினைதான் என்செயும் ?என்னை நாடி வந்த கோள் என்ன செயும் ? கொடுங்கூற்று என செயும் குமரேசா இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் 

தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடுமே ?"


 மேற்கண்ட வகையில் உறுதியான மனநிலையோடு 


"ஏழை மனதை மாளிகை ஆக்கி 

இரவும் பகலும் காவியம் பாடு!

"நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு ,

உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!


 மயக்கமா கலக்கமா  

வாழ்விலே   நடுக்கமா 

வாழ்க்கையிலே கலக்கமா 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் 

வந்த துன்பம் எதுவென்றாலும்

 வாடி நின்றால்  ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும்."


இதேபோல இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்களை இறைவன் கைவிடுவதில்லை.கோள்களின் தாக்குதல் அவர்களை நிலை குலைய செய்வதில்லை.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையான அமைப்பை பெற்றவர்கள் எந்த நிலையிலும் தன்நிலை குலைவதில்லை.அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று விடுவார்கள்.


 இன்றைக்கு என்னிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்து இருந்தார் .அவர் தன் மகனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் என்னிடம் ‌ ‌‌ஜாதகம் பார்க்க வந்திருந்தார்.

அவர் கன்னி லக்கனம் துலாம் ராசி லக்கனத்திற்கு மறைவிட ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சூரியன்,சனி , சுக்கிரன்,ராகு ,புதன் இரண்டாம் இடத்தில் சந்திரன், மூன்றாம் இடத்தில் குரு பகவான், ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் 

இவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதியான புதன் 12 இல் மறைந்து சனி ,செவ்வாய் ,ராகு,கேது  சூரியன் போன்ற பாவர்களுடைய தொடர்பை பெற்றுள்ளது.மிருகசீரிஷ நட்சத்திரம்  தொடக்க மூன்று ஆண்டுகள் செவ்வாய் தசை  அடுத்து மூன்றாம் வயதிலிருந்தே ராகு தசையும் ஆரம்பம்.லக்கன மற்றும் ராசி அதிபதி மறைவிடத்தில் பாவத்துவமாகி பலவீனமான ராகு தசையில் எதிர்த்து போராடி ஜெயிக்கும் யோகம் இல்லை.பார்ப்பதற்கும் பிள்ளை நோஞ்சானாக இருப்பார்.பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தோல்வியை தழுவி விட்டார்.


ஆனால் ராகு தசை இருபத்தொரு வருடம் படிக்கும் காலம் முழுவதும் இருப்பதால் பெரிய அளவில் படிப்பில் கவனம் இருக்காது.ஆனால் அதன் பிறகு வரும் குரு  தசையில் நன்றாக இருப்பார் என்று ஆறுதல் தந்து அனுப்பி வைத்தேன்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

‌. 097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்), ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தசைகள்

 அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தசைகள். 

     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு திரிகோண அதிபதிகள் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசையாக அமைகிறது.திரி கோண அதிபதிகள் என்பது ஒன்றாம் இட அதிபதி, ஐந்தாம் இட அதிபதி மற்றும் ஒன்பதாம் இட அதிபதி ஆகும்.இந்த மூன்று இடங்களையும் திரிகோணங்கள் என்று அழைக்கப்படுகிறது.


 கோண அதிபதிகள் லக்கனத்திற்கு நட்பு கிரகமாக அமைகிறது.

உதாரணமாக மேஷ லக்னம் என வைத்துக் கொண்டால் லக்கன அதிபதி செவ்வாய் ஆகும்.லக்கன அதிபதியான செவ்வாய் பகவானுக்கு ஐந்தாம் இட அதிபதியான சூரியன் நட்பு கிரகமாக அமைகிறது.ஒன்பதாம் இட அதிபதியான குரு நட்பு கிரகமாக அமைகிறது .


      இவை மட்டுமல்லாது லக்கன நட்சத்திர சாரம் தரும் சார நாதனே 1,5,9 ஆகிய திரி கோணங்களுக்கும்  வரும்.

மேஷ லக்கன நட்சத்திர சாரம் 

அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை ஆகும்.இதன் நட்சத்திர நாதன் கேது , சுக்கிரன் மற்றும் சூரியன் பகவான் ஆகும்.

    ஐந்தாம் இடமான சிம்மம் ராசிக்கு நட்சத்திர சாரம் மகம், பூரம் மற்றும் உத்திரம் ஆகும்.சார நாதன் முறையே கேது , சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும்.

 

    ஒன்பதாம் இடமான தனுசு ராசிக்கு

நட்சத்திரம் சாரம் மூலம், பூராடம் மற்றும் உத்திரம் ஆகும்.இதன் சார நாதன் கேது, சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும். 


     மேஷ லக்னத்திற்கு திரி கோண ஸ்தானமான 1,5,9 ஆகிய மூன்று இடத்திற்கும் நட்சத்திர சார நாதன் கேது, சுக்கிரன் மற்றும் சூரியன் பகவானே ஆகும்.


    இதேபோல எந்த லக்கனத்தை எடுத்து கொண்டாலும் திரிகோண அதிபதிகள் மேற்குறிப்பிட்ட வகையிலே அமைகிறது.இதனால் தான் திரி கோண அதிபதிகள் தசை யோகம் தரும் தசையாக அமைகிறது.


 திரி கோண அதிபதிகள் தசையிலே ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரும் தசையாக அமைகிறது.இந்த தசை காலங்களில் புதிய முயற்சிகள்,புதிய தன வரவு , சொத்து சேர்க்கை, மகிழ்ச்சி தரும் செய்திகள், முன்னேற்றம் தரும் சம்பவங்கள் , குடும்ப உறவுகளில் சந்தோஷம் மற்றும் உறவுகள் மூலம் உதவிகள் போன்ற பல நல்ல விஷயங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.

  


    வேறு வகையிலும் ஜாதகருக்கு யோகத்தை தரும் தசைகளை கணக்கிடலாம்.


   ஜாதகத்தில் அருள் அணி மற்றும் பொருள் அணி  ஆகிய இரண்டு அணிகள் உள்ளன. அருள் அணிக்கு குருபகவான் தலைவனாகவும் மற்றும் பொருள் அணிக்கு சுக்கிர பகவான் தலைவராகவும் கருதப்படுகிறது.


  குரு அணியைச் சேர்ந்த லக்கனங்களான தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம் ஆகும். இதன் அதிபதிகள் குரு ,செவ்வாய், சந்திரன் மற்றும் சூரியன் ஆகும்.


 சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களான ரிஷபம், துலாம் ,மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும். இதன் அதிபதிகள்  சுக்கிரன் , புதன் மற்றும் சனி பகவான் ஆகும்.


 குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு யோகம் தரும் தசைகளாக சூரியன், சந்திரன், குரு மற்றும் செவ்வாய் பகவான் தசை கருதப்படுகிறது.


சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனி பகவான் யோகம் தரும் தசைகளாக கருதப்படுகிறது.


 நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் இருக்கும் இடத்தை சொந்த வீடாக கருதப்படுகிறது. 

எனவே குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு நிழல் கிரகங்கள் யோகத்தை தர வேண்டுமாயின் குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம்  லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது.


   இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி மகர மற்றும் கும்பம்  போன்ற லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் ஜாதகருக்கு யோகத்தை அள்ளித்தரும் தசையாக கருதப்படுகிறது.


 குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிர அணியை சேர்ந்த தசைகளும், அதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு  குரு அணியை சேர்ந்த தசைகளும் யோகத்தை தர வேண்டுமாயின் அந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் உப செய்ய ஸ்தானமான 

3 ,6 ,10 மற்றும் 11ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருக்க வேண்டும் அல்லது இயற்கை சுபகிரங்கான குரு வளர் பிறை சந்திரன் போன்றவற்றின் பார்வையை பெறக் கூடியதாக இருப்பின் விதிவிலக்காக யோகத்தை  தருகிறது.


பொதுவாக சுருக்கமாக தர வேண்டுமானால் ஒருவருக்கு ஒரு தசை யோகத்தை அள்ளித் தர வேண்டுமாயின் அவை சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பதே மேலான முடிவான செய்தியாகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.,)



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 


        M SC,M.A,BEd

    (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு ஜோதிடம் தரும் பதில் என்ன?

 ஆரோக்கியமான வாழ்விற்கு... ஜோதிடம் தரும் பதில் தான்  என்ன?






செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"என்பார்கள். 


  A sound body  gives you sound mind"  உடம்பு நன்றாக இருந்தால்தான் உள்ளம் நன்றாக இருக்கும்.


திருமூலர் தனது திருமந்திரத்தில் 


  "உடம்பார் அழியின் உயிரார் அழிவார்    திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்!

 உயிர் வளர்த்தேனே !"


 இன்றைய கால கட்டத்தில் உடலால் வரும் நோய்களை விட மனதினால் வரும் நோய்களே அதிகம் ஆகும்.


  ரத்த அழுத்தம் சர்க்கரை இரத்த கொழுப்பு போன்றவை மனதினால் வரக்கூடிய நோய்கள் ஆகும் இவற்றை குறைபாட்டு நோய்கள் என்று அழைக்கப்படுகிறது.


  உணவினால் வரும் நோய்களை தக்க மருந்தினை பயன்படுத்துவதன் மூலமாக விடுபடலாம்.ஆனால்  இந்த மனதினால் வரும் நோய்கள் வர விடாமல் தடுக்க உடற் பயிற்சி,யோகா , தியானம் போன்றவற்றின் மூலமாகவும், சரியான உணவு முறைகள் மாற்றம் மற்றும் சரியான தூக்கம், போன்றவற்றின் மூலமாக அதிக பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் வெளி வர இயலும்.


 ஒருவர் ஜாதகத்தில் உயிர் மற்றும் உடல் என்று அழைக்கப்படும் லக்கனம், ராசி மற்றும் அதன் அதிபதி வலிமை பெற்று நின்றால் என்னதான் மனம் மற்றும் உடல் நோய்கள் வந்தாலும் அதிலிருந்து எதிர் நீச்சல் அடித்து அந்த நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்து உயர் பிழைக்க இயலும்.


 எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்று வலிமையை அடைந்து கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் அவர் உடல் வலிமை பெற்று எவ்வளவு வியாதிகள் எதிர் நீச்சல் போட்டு மனம் தளராமல் அந்த வியாதியிலிருந்து விடுபடுவார்.


ஒரு நோய் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் எனில் முதலில் நோயாளிக்கு அந்த நோயிலிருந்து விடுபடுவோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால்தான் மருத்துவர்களால் அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளி கொணர இயலும்.தன்னம்பிக்கை கைவிட்ட ஒரு நபரை என்னதான் மருத்துவ விஞ்ஞானம் பல்கி பெருகி இருந்தாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளி கொணர இயலாமல் போய் விடுகிறது. அந்த தன்னம்பிக்கை அளவீடு மிகவும் முக்கியமானது ( confident level is very important. ).


   தன்னம்பிக்கையை மட்டும் இழந்தால் மருத்துவர்கள் அவருடைய உயிரை அல்லது அந்த நோயை குணப்படுத்த இயலாது  ( One man who lose your confident level Doctors can not recover his disease  ).


  ஒரு மனிதனுக்கு அந்த தன்னம்பிக்கை அளவீட்டை நிர்ணயம் செய்வது லக்கனாதிபதி , லக்கனத்திற்கு காரகரான ஆத்மா காரகன் சூரியன் மற்றும் மனநிலை காரகன் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் வலிமையாக( பாவத்துவம் அல்லது பலவீனம் அடையாமல்)  இருப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட வகையான உறுதியான தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.


 கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் உடல் நலம் பேணல் பற்றிய அழகான பாடலை தந்துள்ளார்.


"காலை மாலை உலாவி

நிதம் காற்று வாங்கி வருவோரை

காலை தொட்டு கும்பிட்டு

காலன் ஓடி போவானே ! " என்கிறார்.

(இங்கு காலன் என்பது எமன் ஆகும்.)


 அதிகாலை எழுந்து வெற்று உடலில் மூச்சு பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவை செய்து விட்டு வெளிகாற்றை வாங்கி கொண்டு சிறிது நேர நடப்பயிற்சியை நாள்தோறும் செய்து வந்தால் நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறலாம்.


 ஒருவர் தனக்கு வரக்கூடிய வியாதியைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு ஜாதக கட்டத்தில் ருண ரோக மற்றும் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் இடத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஆறாம் இடத்திற்கு நோய்க்கு காரக கிரகம் சனி பகவான் ஆகும்.


   ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறாம் இட அதிபதி வலுப்பெற்று நிற்க  கூடாது. அவ்வாறு இருந்தால் அவர் நோய் நொடிக்கு ஆளாகுவார்.


  ஆறாம் இடத்தில் சனி அமர்வதும் ஆறாம் இடத்தை சனி பார்ப்பதும் ஜாதகருக்கு நல்லது. ஆறாம் இடத்துக்குரிய கெட்ட பலனை அவை குறைக்கும்.


 ஆனால் அதே நேரத்தில் ஆறாம் இடம் அதிக பாவத்துவமும் அடையக் கூடாது. அதாவது ஆறாம் இடத்தில் செவ்வாய் மற்றும் ராகு அமர்ந்து ஆறாம் இடத்தை சனி பார்த்தால் அதிக கெடுதலை உண்டு பண்ணும். இது அதன் தசை காலங்களில் கூடுதலான கெடுதலை தரக்கூடிய அமைப்பில்  இருக்கும்.


     ஆறாம் இட அதிபதி சூரியனாக இருந்தால் வயிற்று வலி, அரையாப்பு சொரி சிரங்கு ,உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள், தலை வலி போன்றவை ஆகும்.


  ஆறாம் இட அதிபதி சந்திரன் பகவானாக இருந்தால் அஜீரண கோளாறு, சீதம், வயிற்றுப்போக்கு  மற்றும் உதிரம் சம்பந்தப்பட்ட வியாதிகள்.ஆகும்.


 ஆறாம் விட அதிபதி செவ்வாய் பகவானாக இருந்தால் வாந்தி, தலைவலி, மண்டை இடி, புரடிவெட்டு மற்றும் வெட்டு காயம் போன்றவை ஆகும்.


ஆறாம் இட அதிபதி புதன் பகவானாக இருந்தால் கை, கால், முடக்கல் எனும் வாயு சம்பந்தப்பட்ட வியாதி கழுத்தில் புண், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள்.


ஆறாம் இட அதிபதி குரு பகவான் ஆக இருந்தால் யோகம், மர்மஸ்தான வியாதிகள், உதிரப்போக்கு ,அரசர்களால் காயம், நெஞ்சில் இருந்து மற்றும் அடி வயிற்று வலி போன்றவை வரும்.


ஆறமிட அதிபதி சுக்கிரன் பகவனாக இருந்தால் கட்டி ,பிளவை, மூல நோய், பெண்களால் புருஷநோய், சூலை நோய்,, மற்றும் பாலியல் நோய் போன்றவைகள் வரும்.


ஆறாம் இடம் அதிபதி சனி பகவான் எனில் வாத நோய், சூலை நோய் ,எலும்பு உருக்கி,வாத நீர் போன்றவை ஆகும்.


ஆறாம் இடத்தில் ராகு மற்றும் கேது பகவான் இருந்தால் விஷ பூச்சிகள் மயக்கம், பிசாசு ,பீடை  மற்றும் துற்பிணி முதலியவை  வரும்.


 எனவே ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி தசை அல்லது ஆறாம் இடத்தில் உள்ள கிரகங்களின் தசை நடக்கும் போது   ஒரு மனிதனுக்கு அவை சார்ந்த நோய் வரும்.இதே போல கோச்சார அடிப்படையில் அர்த்தாஷ்டம சனி , ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி போன்றவை வரும் பொழுதும் மனம் அழுத்தம் தரக்கூடிய வியாதிகள் சாதகருக்கு வரும்.இது போன்ற தருணங்களில் லக்கனாதிபதி வலுவாக இருந்தால் அந்த குறிப்பிட்ட தசை மற்றும் கோச்சார காலத்தில் அந்த வியாதிகள் வந்தாலும் அதிலிருந்து போராடி அந்த காலகட்டம் முடிந்த பிறகு மீண்டும் புத்தொளி பெறுவார்.லக்கனாதிபதி வலுவாக இல்லாமல் ஆறாம் இடம் அதிபதி வலுவாக இருந்தால் அந்த காலகட்டத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதனை தொடர்ந்தும் அந்த நோயின் தாக்கம் குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கிறது.


ஒருவர் நோயை குணப்படுத்தும் மருத்துவராக இருந்தால் அவரது கிரக நிலைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல் மருத்துவம் செய்தால் நோயாளியை நோயிலிருந்து வெளி கொணர முடியும்.


ஒரு மருத்துவர் நோயாளியை நோயிலிருந்து வெளி கொணர வான் புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகை சொல்லும் வழிமுறையை கையாள வேண்டும்.


"நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்"


   தனது குறட்பாவில் ஒரு மருத்துவர் நோய் இன்னதென்று ஆராய்ந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தையும் ஆராய்ந்து ,அந்த நோயை போக்கும் வழிமுறையை அந்த நோயாளியின் உடலின் தன்மைக்கு ஏற்ப வைத்தியம் செய்ய வேண்டும் என்கிறார்.


 நோய் - நோய்க்கான காரணம் -தீர்க்கும் வழிமுறை அவரவர் உடலுக்கு ஏற்றபடி வைத்தியம் இந்த நான்கு வழிமுறையை ஜோதிட மற்றும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து வைத்தியம் பார்க்கும் போது அதனால் கிடைக்கும் பலன் பயனுள்ளதாக இருக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    


அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.