சாதகம் நமக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?
கிரகங்கள் படுத்தும் பாடு-( 177 )
செவ்வாய்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
ஒரு மனிதனுக்கு வெற்றி மேல் வெற்றியாக வந்து குவியும்போது,
அந்த வெற்றியானது தன்னுடைய அறிவு,திறமை மற்றும் கெட்டிகாரதனத்தால் நடந்ததாக மண்டைக்கணமாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் தனது வெற்றிக்கு "தான் மட்டுமே காரணம் " என பெருமையாக பீற்றிக்கொள்வார்கள்.
"நான் எப்படி உழைத்தேன் தெரியுமா ?நான் எப்படியெல்லாம் எனது மூளையை use பண்ணி தொழில் செய்தேன் புரியுமா ? ".....என எல்லா வெற்றிக்கும் தான் மட்டுமே காரணம் என பீற்றிக்கொள்பவர்கள் பலர் உண்டு.
ஆனால் அதேநேரத்தில் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்த மனிதன் சிறு சிறு தோல்விகளாக தொழிலானது சரிவை நோக்கி செல்லும்போது மட்டும் ஒருவன் "கிரகம் சரியில்லை " என குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
உடனே சாதகத்தினை தூக்கி கொண்டு சோதிடர் ,சோதிடராக அலைய ஆரம்பித்து அவரகள் தரும் பரிகாரங்களை கோவில்,கோவிலாக அலைந்து பூஜை,புணர்ஸ்கரங்கள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
இவ்வாறாக பல கோவில்கள் அலைந்து பரிகாரங்கள் செய்தும் கஷ்டங்களும்,நஷ்டங்களும் குறையாதபோது சோதிடர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்."சார் நீங்க சொல்ற எல்லா கோவிலுக்கும் போயிட்டோம்,எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம்.ஆனால் கஷ்டம் சிறு கடுகு அளவு கூட குறையவில்லை " என புலம்புபவர்கள் பலர் உண்டு.
ஒருவர் வெற்றி வந்தால் தான் மட்டுமே காரணம் என எண்ணிக்கொள்ளும் சராசரி மனிதன் தோல்வி வந்தால் மட்டுமே கிரகபலன் சரியில்லை என ஏன் வருத்தப்படுகிறீர்கள்?.
ஒருவர் என்னவாக ஆக வேண்டும் ? எப்படியெல்லாம் நடக்கவேண்டும் ? என்பதனை அவரது ஜெனிக்கும் நேரம் முடிவு செய்யப்படுகிறது.ஒரு விதையின் வளர்ச்சியினை அந்த வித்தின் வீரியம் முடிவு செய்யப்படுகிறது.விதையின் வித்தானது வீரியம் உடையதாக இருந்தால் அந்த விதை மலை மீது விழுந்தாலும் மண்ணிற்குள் போராடி வேர் விட்டு நிற்கும்.எவ்வளவு பலமாக காற்று வீசினாலும் எதிர்த்து நிற்கும்.
இவ்வாறு மண்ணிற்குள்ளும்,விண்ணிலும் போராடி பலமான வேரினையும்,தண்டையும் பெற்று செழித்தோங்கி நிற்பதை பார்க்கலாம்.
ஆனால் அதேநேரத்தில ஒரு சில விதையானது நல்ல பண்பட்ட நிலத்தில் விழுந்தாலும் வாடி வதங்கி கருகிபோவதும் உண்டு.
மனிதன் மட்டும் அல்ல எந்த உயிரினமாக இருந்தாலும் ஜெனிக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரகங்களின் நிலைகளே அதன் வாழ்வியலையும்,வெற்றி மற்றும் தோல்விகளையும் முடிவு செய்கிறது.
"தீதும்நன்றும் பிறர்தரவாரா " என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி ஒருவருக்கு கிடைக்கும் பெருமைகளுக்கும்,சிறுமைகளுக்கும் மற்றும் தோல்விகளுக்கும்,வெற்றிகளுக்கும் அவரது ஜெனன காலத்தில் சாதக கட்டத்தில் அமைந்திருக்கும் கிரகநிலைகளே முழுக்காரணமாக அமைகிறது.
ஒருவன் காசு,பணத்திற்கு கஷ்டப்படாமல் எந்நாளும் வளமுடையவனாக இருப்பதற்கு அவனது சாதக கட்டத்தில் தனாதிபதியும்,தன காரகன் குருபகவானும் பலம் அடைந்து இருப்பதோடு அவனது இளவயதில் இருந்து அவருக்கு நடைபெறும் திசையும் உகந்ததாக இருக்கவேண்டும்.
ஒருவன் கார்,பங்களா போன்ற வசதிகளோடு என்றும் வளமாக வாழ்கிறார் என்றால் அவரது சாதக கட்டத்தில் ஆடம்பர வசதிகளை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான் சுபஸ்தானத்தில் பலமடைந்து நின்று வாலிப வயதில் சுக்கிரபகவானின் திசையினை பெற்றவர்களாக இருப்பார்கள்.
சிலர பிறந்தது முதல் எந்நாளும் பிணி,பீடை ,கடன் மற்றும் எதிரிகளால் கஷ்டப்பட்டே தமது வாழ்வினை கழிப்பதற்கு அவரது சாதகத்தில் தன,சுக (2,4) ஸ்தானம் பாதிக்கப்பட்டு ருணரோக ஸ்தானமான ஆறாம் இடம் வலுவடைந்து இருந்திருக்கவேண்டும்.
சிலர் தொட்டது எல்லாம் துலங்குவதற்கு அவரது முயற்ச்சி ஸ்தானமான மூன்றாமிடம் பலமடைந்து துணை நிற்பதோடு தன,லாப,பாக்கிய மற்றும் ஜீவன ஸ்தானங்கள் பலமடைந்து நின்று இந்த சுபஸ்தான திசைகள் நடப்பில் இருக்கவேண்டும்.
ஒரு சிலர் நிலையான தொழில் அமைந்து பொருளீட்டி தொழில் அதிபர் ஆவதற்க்கும்,சிலர் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிராயுத பாணியாக நின்று இறுதியில் சாவோமா ?,பிழைப்போமா ? என கஷ்டங்களை அனுபவிப்பதற்கு அவரது தன,பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்களை பொறுத்து ( 2.9.10.11 ) அமைகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு அழகு,அந்தஷ்து மற்றும் கல்விநிலையை பெற்றிருந்தாலும் மணவாழ்வில் வெற்றி பெற அவரது சாதக கட்டத்தில் லக்கன,குடும்ப,களஸ்திர மற்றும் மாங்கல்ய ஸ்தனங்களை ( 1,2,7,8 )யும் ,களஸ்திரகாரகன் சுக்கிரனையும் பொறுத்து அமைகிறது.இவ்விடங்கள் ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெறாமல் இவ்விடங்களின் அதிபதி வலுப்பட்டு உரிய திசா நடப்பில் இருக்க யோகமான ,தங்கமான மனைவி அமைந்துவிடுகிறது.மாறாக மேற்கண்ட ஸ்தானங்கள் பலமிழக்க கால தாமத திருமணம் அமைகிறது.
ஒரு சிலர் புத்திரர்களால் புகழடைய அல்லது புகழுடைய புத்திரம் பிறக்க அவரது சாதக கட்டத்தில் புத்திரகாரகன் குருபகவான் மற்றும் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடமும் பாவிகள் சேர்க்கையற்று பலமடைந்து நிற்க வேண்டும்.
ஒருவர் காதல் மணம் புரிகிறார் எனில் அவரது சாதக கட்டத்தில் ஐந்து மற்றும் ஏழாமிட தொடர்பு எவ்வகையிலாவது பெற்றிருக்கவேண்டும்.
திருமணம் நடந்து பலர் நீண்ட நெடிய ஆயுளோடு வாழ ,ஒரு சிலர் இளமையிலே விதவையாக ஆகிவிடுவதும் கிரகநிலைகளே காரணம் ஆகிறது.இதற்க்கு அவளது ஏழாம் அதிபதியுடன் சனி,செவ்வாய், ராகு தொடர்பு பெற்றிருப்பதே காரணமாகிறது.
நிறைந்த ஞானமும்,கல்வி அறிவும் பெற்றிருந்தும் ஒரு சிலர் எளிமையாக,இளமையில் அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கோ அரசாங்க வேலை கால தாமதம் ஆக அவரது சாதகத்தில் அரசாங்க யோகத்தினை தரக்கூடிய சூரியபகவான் பலம் இழப்பதே காரணமாக அமைகிறது.
ஒரு சிலருக்கு தந்தை மூலமாக புகழடைய ,தந்தை தேடிய சொத்தால் ஆதாயம் பெற தந்தைஸ்தானமான ஒன்பதாம் இடமும்,தந்தைகாரகன் சூரியபகவானும் பலமடைந்து நிற்க வேண்டும்.
இதேபோல தாய் மூலம் ஆதாயம் பெற மாதர்ஸ்தானமான நான்காம் இடம்,மாதர்காரகன் சந்திரபகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.
ஒருவர் வண்டி,வாகனங்களால் லாபம் பெற நான்காம் இடமும்,சுக்கிரபகவானும்,பூமியால் லாபம் அடைய அதே நான்காம் இடமும், பூமிகாரகன் செவ்வாய் பகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.
கல்வி அறிவும்,ஞானமும் பெற வாக்குஸ்தானம்,நான்காம் இடம், ஐந்தாம் இடம்,ஒன்பதாம் இடம் மற்றும் குருபகவான்,வித்தைகாரன் புதன் பலமடைந்து திகழவேண்டும்.
நடன நாட்டிய மங்கையாக திகழ கலைக்காரகன் சுக்கிரபகவானும்,இசைஞானம் பெற புதன் பகவானும்,கதை,கவிதை,கட்டுரை மற்றும் சினிமா பாடலாசியர் போன்ற துறைகளில் சிறக்க புதன்பகவான் மற்றும் சந்திரபகவான் ஆகிய பலம் பெற்ற நிலைகளில் புகழ் பெறுவார்கள்.மொத்தத்தில் கனவு தொழிற்சாலையான சினிமாவில் கோலோச்சி நிற்க சுக்கிரன்,புதன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் அனுக்கிரகமும்,ஆதரவும் தேவை.கீர்த்தி,புகழ் தரும் ஸ்தானமான மூன்றாமிடமும்,கற்பனை திறன் தரும் ஐந்தாமிடமும் பலம் பெற்றிருக்கவேண்டும்.
ஒருவர தான் மேற்கொள்ளும் தொழிலில் புகழடைய தன, பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்கள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறி நிற்கவேண்டும்.
ஒரு சிலர் வாக்கு பலிதம் உடையவராக திகழ வாக்குஸ்தானத்தில் உள்ள கேதுபகவானே காரணமாக அமைகிறது.இவரகளுக்கு புதன்பகவானும் பலப்பட அருள்வாக்கு சோதிடராகவும் திகழ்வர்.
வாக்கில் ராகுபகவான் அல்லது வாக்குஸ்தானத்தை சனி,செவ்வாய் சேர்ந்தோ அல்லது தனித்தனியாக பார்க்க தந்திரம் மிக்கவர்களாக,தனது பேச்சில் ஒருவித பொய்மைதன்மை மிக்கவர்களாக காணப்படுவர்.இவர்களை போன்றோர் சனிபகவான் பலப்பட்டு நிற்க வழக்கறிஞராக வழக்குரைப்பர்.பலம் குறைந்த சனி பஞ்சாயத்துகாரர் ஆக மாற்றி விடும்.
செவ்வாய் பகவானை பலமாக பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் புகழ்மிக்க மருத்துவர்களாக,இராணுவம்,போலிஸ் போன்றவற்றில் பணிபுரிபவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.பலமான செவ்வாய் பகவானை பெற்றிருந்தாலும் பாவர் தொடர்பு பெற்றிருக்க ரொளடிகளாக ,பிறருக்கு அடியாளாக மாற்றி விளையாடுகிறது.
புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்று கொள்பவர்களாக ,கணித அறிவு சம்பந்தப்பட்ட துறைகளில் புகழ்பெறுபவர்களாக,சோதிட ஞானம் மிக்கவர்களாக மற்றும் இசையில் புலமை பெற்றவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.ஒரு சிலரை கதை,கவிதை,கவிதை மற்றும் எழுத்தாளராக மாற்றி அழகு பார்க்கிறது.
இன்றைய நவீன தொழில்நுட்பமான கனிப்பொறி,இனையம் போன்றவற்றில் புகழடையவும்,பங்குமார்க்கெட் போன்றவற்றில் புகழடைய வைக்க ராகுபகவானின் ஆதரவு தேவைப்படுகிறது.அரதியல்,மாந்திரிகம் போன்றவற்றில் புகழ்பெற வைக்கிறது.
ஆடை,ஆபரணம்,,அழகுசாதனப்
பொருட்கள்,ஹோட்டல்,ஜவுளி,சினிமா,
,வாகனம்,பேஷன் டெக்னாலஜி,நடனம் போன்றவற்றில் திறமை மிக்கவனாக சுக்கிரபகவானின் அருள் தேவை.
சகோதரர்களின் அன்பும்,ஆதரவும் பெற மூன்றாமிடம்,பதினொறாமிடம் மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் பகவானின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ஆத்மாக்காரகனான சூரியபகவான் கண் பார்வைக்கும்,எலும்பு பலத்திற்கும்,தந்தைக்கு காரகராகவும்,அரசு வேலைக்கு காரகராகவும் மற்றிம் அரசியல் யோகம் பெறுவதற்கும் காரகர் ஆவார்.
நீர் சார்ந்த கூல்டிரிங்ஸ்,பால் ,தண்ணீர் போன்ற தொழிலில் பலன் பெறுபவர் சந்திரனை பலமாக பெற்றவர்கள் ஆவார்.சந்திரன் மாதர்காரகனாகவும்,மனநிலைக்கு காரகனாகவும் உள்ளார்.
ஒருவர் உறுதியான மனநிலை பெறுவதற்க்கும்,அடிக்கடி தன்னை குழப்பிக்கொள்வதற்க்கும் சந்திரபகவானே காரணம் ஆகும்.
இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம் .கடல் போன்றது சோதிட பலன் ஆகும்.ஒரு மனிதனின் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகங்கள் படுத்தும் பாடே காரணம் ஆகும.
என்னதான் அழகு,அறிவு,அந்தஸ்து இருந்தும் திருமணம் கால தாமதம் ஆவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என உற்றுநோக்க லக்கனம்,இரண்டாமிடம,ஏழாமிடம்,
எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களுடன் மறைவு ஸ்தான அதிபதிவுகள் சேர்ந்து நிற்பது, அல்லது மேற்கண்ட அதிபதிகள் மறைவிடங்கள் செல்வது அல்லது மறைவு ஸ்தானத்திற்கு 1,2,7,8 ஆம் இட அதிபதிகள் பரிவர்த்தனை,அல்லது களத்திர காரகன் சுக்கிரபகவான் பலமிழந்து நிற்ப்பது.மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் உடன் அரவுகளான ராகு,கேது சேர்வது காரணம் ஆகும்.
ஒரு சிலர் மறுபிறப்பற்ற முக்தி நிலை அடைய விரயஸ்தானத்தில் கேதிபகவான் நின்று,ஒன்பதாம் இட அதிபதி வலுப்பெறவேண்டும்.
ஒரு சிலர் காம மிகுதியால் தவறு்பவர்களாக இருப்பதற்க்கு காரகம் மனோகாரகன் சந்திரன் பலமிழந்து நிற்க்க,3,5,12 போன்றவற்றில் சுக்கிரன் ,செவ்வாய் ,சனி,ராகு சேர்க்கை மற்றும் சுக்கிரன் + சனி சேர்க்கை தகாத உறவுநிலையை தந்துவிடுவதே காரஙம் ஆகிறது.
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம்,
ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கி மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும விபரம் பெறலாம்.)
தொடர்பு கொள்ள
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc.,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
............................