Tuesday 31 October 2017

கிரகங்களின் சேர்க்கையினால் மாறுபடும் பலன்கள்

கிரகங்களின் சேர்க்கையினால் மாறுபடும் பலன்கள்.

                           

                                      
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 127 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

              நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடுவதுபோல கிரகங்களும் சேரக்கூடிய இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறும் மற்றும் சேர்ந்துள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலனில் மாறுபாடு ஏற்படுகிறது.

                 கிரகங்களில் தலையாய கிரகமான சூரியபகவானை எடுத்துக்கொண்டால் இதனுடன் சந்திரபகவான் சேரும் சூழலில் ஒருவருக்கு அமாவாசையோகத்தை வழங்குகிறார்.சாதகரானவர் அமாவாசையில் ஜெனித்திருப்பார்.

               அதேநேரத்தில் சூரியனோடு அவரின் புதல்வரான சனிபகவான் சேரும்போது தந்தை -மகன் உறவுநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சூரியனுக்கு சனிபகவான் பகை பெறுவதால் தந்தைக்கு ஆகாது என்பதால் இதுபோன்ற அமைப்பு உடையவர்களுக்கு அவரது சாதகத்தில் தந்தைஸ்தானமான ஒன்பதாம் இடமும் கெட்டு சாதகருக்கு இருந்தால் தந்தையால் எவ்வித லாபமும் இல்லாத சூழலும் மற்றும் இவன் பிறந்த பிறகு தந்தைக்கு எவ்வித யோகமில்லாத சூழலும் உருவாகிவிடுகிறது.

            இவை பிதுர்தோஷத்தை உருவாக்கிவிடுகிறது.இதற்கு பரிகாரமாக குழந்தையை தத்து கொடுத்தல் நல்லது.

                                

             சூரியனோடு குருபகவான் சேர்ந்து பலப்படும்போது ஆன்மீக தலைவராக ஒருவரை மாற்றிவிடுகிறது.

             சூரியனோடு செவ்வாய் பகவான் சேர்க்கையான ஒருவரை கபடு,சூது மற்றும் சூழ்ச்சி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது.
சூரியனோடு அரவுகளான ராகு மற்றும் கேது சேர்க்கை தந்தைஸ்தானத்திற்கு பாதிப்பையும் மற்றும்  அரசாங்கயோகமும் கிடையாது.

               சூரியபகவானோடு புதன் பகவான் இணைந்து பலப்பட "புத ஆதித்ய யோகத்தையும் மேலும் இவ்விரு கிரகங்களும் எட்டு,நான்கு மற்றும் ஒன்றில் சேர "அரசாளும் யோகத்தை "அளிக்கிறது.

            
           இதேபோல ஒருவரது சாதகத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரபகவானும் மற்றும் மங்களநாயகன் செவ்வாய்பகவானும் ஒருவரது சாதகத்தில் இணைவு பெறாமல் இருப்பது பொதுவாக நல்லதுஂஇது ஒரு சிலரை காம எண்ணத்தை மிகுதியாக தந்து வேலி தாண்டிய வெள்ளாடு போல ஆக்கிவிடுகிறது.

          இதேபோல சுக்கிரனுடன் சனிபகவான் சேர்க்கை மற்றும் அரவுகளான ராகு மற்றும் கேது பகவான் சேர்க்கையானது ஒரு சிலருக்கு திருமண தடையை உருவாக்கிவிடுகிறது.சிலநேரங்களில் திருமணம் நடைபெற்று இருந்தாலும் தம்பதிகளிடம் அன்யோன்ய தன்மை குறைந்து அதன் விளைவாக தவறான வழிகளில் ஈடுபட வைக்கிறது.

                           

           ஒருவரது சாதகத்தில் சனிபகவானின் ஜென்ம விரோதியான செவ்வாய்பகவானும் சேர்ந்து பார்க்கும் இடத்தை கெடுத்துவிடும்.ஒருவித சூழ்ச்சிதன்மையே மிகுந்திருககும்.

            ஒருவரது சாதகத்தில் குருபகவானோடு சந்திரன்,செவ்வாய்,சனி மற்றும் கேதுபகவானின் இணைவு நன்மையை தரும்.மாறாக ராகு,சுக்கிரன் இணைவு நல்லதல்ல.
குருவோடு இணைந்த ராகுபகவான் புத்திர தடையை உருவாக்குகிறார்.குருபகவானின் எதிர்தன்மை உடைய சுக்கிரபகவான் இணைவு பெறாமல் இருத்தல் நலம்.

                   
வித்தைகாரகன் புதன்பகவானோடு சனி,ராகு மற்றும் கேதுபகவான் கற்ற வித்தையில் பூர்ணத்துவம் அடையவிடாமல் தடைபெறலாம்.

              செவ்வாய் பகவானோடு சேர்ந்த ராகு மற்றும் கேதுபகவான் சகோதரதோஷத்தை தருகிறது.பூமியோகத்தை தடைபடுத்துகிறதுஂ.விவசாய யோகத்தை குறைக்கிறது.

            பொதுவாக ராகு மற்றும் கேதுபகவான் சேர்க்கையானது அந்தஸ்தான பலத்தையும் மற்றும் காரகபலத்தையும் குறைக்கிறது.
மேலே குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கையினால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே ஆகும்.இந்த பலன்களில் மாற்றம் ஏற்படலாம்.

               சிலநேரங்களில் பார்வை ,நட்சத்திரசாரம் மற்றும் இருக்கும் ராசியாதிபதியின் வலு மற்றும் ஸ்தான பலம்...இதுபோன்ற பல்வேறு காரண்களினால் பொதுபலனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.இதுபோன்ற அமைப்பு தாங்களுக்கு இருப்பின் சோதிடரின் ஆலோசனை பெற்றே பலனை முடிவு செய்து கொள்ளவேண்டும்.

நன்றி!
------
(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருணபொருத்தம் மற்றும் பரிகாரவழிபாடு போன்ற பல்வேறு சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதகபலனை #போன்வழியாக பெறலாம்.
பிறந்த தேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்.)

தொடர்புக்கு

வாட்ஸ்அப்
97 151 89 647

  செல்
740 257 08 99
97 151 89 647


                              

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

My email
masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com

Friday 27 October 2017

விதியை மதியால் வெல்ல முடியுமா ?

விதியை மதியால் வெல்ல முடியுமா ?


ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருளாசியுடன்....

       உலகில் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என உறுதியாக யாராலும் கூற முடியாது.விதிப்படிதான் நடக்குமெனில் கல்விக்கூடங்கள் எதற்காக ? ஆசிரியப்பெருமக்கள் எதற்காக ?
வியாதியைப்போக்கும் மருத்துவர்கள் மருத்துவக்கூடங்கள் எதற்காக ?
நடப்பவை அனைத்தும் விதிப்படி எனில் முயற்சிகள் எதற்காக ?
விதியை பணிரெண்டு கட்டம் வழியாக தந்த இறைவன் விதியை மதியால் வெல்லும் தந்திரத்தை தந்து பிறப்பெடுக்க வைக்கிறான்.

            விதியை  எவ்வித முயற்சியுமில்லாமல் எல்லோராலும் வென்று விட முடியுமா ?
என்றால் முடியாது.
விதியை வெல்லும் மார்க்கங்கள்தான் பரிகாரங்கள்,இறை வழிபாடு,மந்திர உச்சாடணங்கள்,தியாணம் மனப்பயிற்சிகள்,தூய்மையான எண்ணம்,ஜீவகாருண்யம் மற்றும் தான தர்மங்கள் போன்றவை விதியை வெல்ல பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.

       விதியை மதியால்  இறை வழிபாட்டால்
வெல்லவாம்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்.எனவே இறைவழிபாட்டுக்கு தேவை நம்முடைய மனம்தான் அவசியம் ஆகும்.


            மேலும் விதியை மதியால் வெல்ல மதியாகி சந்திரனும் ,அறிவுக்காரனான குருவும் ,நுண்ணறிவை தரும் புதனையையும் பலமாக பெற்றவர்களும் விதியை வென்று விடுகிறார்கள்.

             ஒரு ரோட்டில் இரவில் பயணம் செய்யும்போது பள்ளத்தை வைத்து விபத்தை தருவது விதி எனில்
பள்ளம் இருக்கு என காட்டி கொடுப்பது மதி .விதியை மதியால் வெல்லலாம் என்ற யோகம் இருப்பவர்கள் வென்றுவிடுகிறார்கள்.


                 ஒரு மனிதனின் பிறப்பு என்பது ஆணின் விந்தனுவும் பெண்ணின் அண்ட அணுவும் இணைந்து சைகோட் எனும் கருமுட்டை உருவாகும்போது
தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் பண்புகள் , தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் பண்பு நலன்கள்(நிறம்,வடிவம்,குணம்,அறிவு) அவ்விரு செல்களின் உட்கருவில் உள்ள குரோமோசோமில் உள்ள ஜீன்களின் வழியாக கடத்தப்படுகிறது என்கிறது .


          உயிரியியலின் ஒரு பிரிவான "மரபும் பரிணாமமும்" என்ற துறை.
சோதிடத்தில் உள்ள பணிரெண்டு ராசிகளில் ஒன்றான ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது இந்தஸ்தானம் நமது தந்தையும் அவர் வழி உறவுகளும்,தாயும் அவர் வழி உறவுகளும் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே ஒருவர் இப்பிறப்பு எடுக்கிறார்.அதன் பாவ புண்ணியங்களுக்கு அவர்களுக்கு புத்திரர்களும் விதியெடுத்து பிறப்பெடுக்கிறார்கள் என்பதால்தான் புத்திரஸ்தனமும்,பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒரே ஸ்தானமாக வைத்திருக்கிறார்கள் பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தால் விளக்குகிறேன்.

                    இதேபோல் லக்கனத்தில்
ஒரு மனிதனின் குணநலன்களையும்,உடல் அழகும்,வடிவமும்,வயிறு,தலை,உடலில் உள்ள இதர அங்கங்களையும்,எண்ணம்,கவலை,புகழும்,உடலில் ஏற்படும் தழும்பும்,மகிழ்வும் ,ஆயுளையும் காணலாம்.


                     இரண்டாம் இடத்தில் தனம்,நேத்திரம்,வாக்கு,குடும்பம் மற்றும் கல்விநிலைகளையும்,வலது கண்,சாத்திரம்,நடை,மனம்,மறுத்து பேசுதல்,பொன்,அதிர்ஷ்டம் மற்றும் நவரத்தினம் போன்றவை அறியலாம்.

                 மூன்றாம் பாவத்தில் வெற்றி, ஆளடிமை,எண்வகைபோகம்,சங்கீதம்,தேகபலம்,இளைய சகோதரம்,காதில் ஏற்படும்நோய்,காதில் அணியும் அணிகலன்கள்,உண்ணும் பாத்திரம்,பராக்கிரமம்,தொழிலில் மேன்மை,ஊக்கமுடைமை,பூமி பலம் போன்றவை ஆகும்
நான்காம் பாகத்தில் மூலம்
கல்வி,வாகனம்,மங்கள காரியமும்,வியாபாரமும்,வீடும்,தாய்,வெற்றியால் அடையும் புகழ்,உறவினர்கள் நலமும்,பால் தரும் பசுக்களும்,திருக்கோயில் பணி மற்றும் வழிபாடுமநட்பு வட்டம்,ஒப்பனை பொருட்கள்,அவமானம்,மாய மந்திரங்கள்,நீர்,பால் ,உணவு,குதிரைகள்,எருமைகள்,பயக மற்றும் தோட்டங்கள் முதலியன அறியலாம்.
ஐந்தாம் இடத்தில் மேலும் தந்தையை பெற்ற பாட்டனையும்,முற்பிறவியில் உண்டான ஊழின் பயனும்,நற்றமிழ் புலவர்களால் பாடல் இயற்றலும்,மந்திரங்களும்,வேதங்கள் கற்றலும்,ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு
ஆறாம்பாவம் மூலம்
பிணி,பீடை,கடன்,எதிரியால் உண்டாகும் துன்பம்,ஆயுதங்களால் ஏற்மடும் ரணமும்,தண்ணீரால் ஏற்படும் கண்டம்,பால்வினை நோய் முதலியவை அறியலாம்
ஏழாம் பாவகம்
திருமணத்தை பற்றி சொல்லுதலும்,ஆடவர்,மகளிர் இருவருககும் உணட்டாகும் நல் இன்பமும்,உறவினர்களுடன் சேர்ந்து இருத்தல் மற்றும் அதன் தொடர்பான விவகாரங்களும்,வறியவர்க்கு ஈனும் தானமும்,அளவறிந்து செலவு செய்யும் வரவு-செலவ் விவரங்களும்,வியாபாரமும்,திருமணம் நடைபெறும் காலமும்,மனைவியின் ஆயுளும்,கூட்டு பற்றியைம்,மானம் முதலியவை அறியலாம்.
எட்டாம் பாகம்
ஆயுதங்களால் உண்டாகும் தீங்கும்,மலையிலிருந்து கீழே விழுதலும்,சண்டையிட்டு கொண்டிருப்பதையும்,மனிதனின் ஆயுளும்,நீடித்த நோயால் வரும் துன்பமும்,மனக்கவலை,நீடித்த பல வகையான துன்பங்களும்,அதனால் உருவாகும் வருத்தங்களும்,ரணத்தினால் உண்டான நோயும்,வீண் செலவு செய்தலும்,நீங்காத பகையோடு இருத்தலும் அறியலாம்.
ஒன்பதாம் பாவகம்
தன்னை ஈன்ற தந்தையைப்பற்றியும்,தந்தை வர்க்கத்தின் மேன்மையையும் அவர்களால் உண்டாகும் செல்வம் பற்றியும்,தான தர்மம் செய்தலும்,ஊருணி,தண்ணீர் பந்தல் அமைத்தல்,துறவிகள் மறறும் அறவோர்கள் தங்க மாடலாயம் அமைத்தல்,தான்விரும்பிய செல்வத்தை சம்பாரித்தல் முதலியவை..
பத்தாம் பாவகம்
ஒருவர் செய்யும் தொழில் மற்றும் அதனால் உண்டாகும் வருமணம்,,தந்தை செய்த தீ வினைப்பயனை போக்க இறை வழிபாடும்,மெய்ஞானமும் வசிப்பதற்கும் வழிபடுவதற்குமா ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட வீடும்,புகழை அடைவதற்காக செய்யும் காரியமும்,சாத்திரங்களில் கூறியபடி பல்வேறு தர்மங்கள் செய்தலும்,நகரங்களை அமத்தல் முதலியவை.
பதினொன்றாம் பாவகம்
இளைய மனைவி, மூத்த சகோதரம்,தான் கற்ற கல்வியாலும்,பெற்ற பொன் மற்றும் பொருளாலும் மதிப்பு பெறல்.ஊதியம் பெறல்,பயிரிட்டு வேளாண்மை செய்தல்,குதிரை ,யானை ,தெளிந்ந அறிவும்,பல்லாக்கும,ஆடையும் மனிதன் மனதில் ஏற்படும் துவக்க நிவரத்தி.
பணிரெண்டாம் பாவகம
வெளி நாட்டிலா தொழில் செய்தல்,தீய காரியங்களுக்கும்,பாவ காரியஙாகளுக்கு செலவு செய்தாலும்,மறுமையில் சிறப்பை எய்தலுமா,படுக்கை சுகம்,விவாதம் செய்தல் ,பிறருக்குக்கு தானம்,புண்ணியம்,மறுமையில் சிறப்பு எயதலும்,பிறருக்கு தானமபுண்ணியம் ,தருமம்,பிறருக்ககு தானம்,அன்பளிப்பு  முதலிய சுப காரியங்களும்,யாகம் செய்தல்
முதலிய பணிரெண்டு வகையான ராசிகளின் வழியாக ஒவ்வொறு குழந்தைகளுக்கும் பண்பினை அழகாக விளக்குகிறார்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd.
ஆசிரியர் ,ஜோதிடர்
ஓம் சக்தி சோதிட  ஆன்லைன் ஆலோசனை நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
  தொடர்புக்கு
வாட்ஸ்அப்
  97 151 89 647
செல் :
   97 151 89 647
      740 257 08 99

Thursday 26 October 2017

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு?

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு ?

                        
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 125 )

                   செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

அழகுள்ள பெண்


            ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்தில் சந்திரபகவான் அல்லது சுக்கிரபகவான் நின்றால் அவள் "வதனமே சந்திரபிம்பமே "என போற்றும் பேரழகியாக இருப்பாள்.

       பெண் ராசியில் அழகு காரக கிரகமான சந்திரபகவான் நின்றாலோ அல்லது இலக்கினத்தில் இருந்து மூன்று வீடுகளில் தொடர்ந்தாற்போல தொடர்ச்சியாக சுபகிரகங்கள் நின்றால் அந்த பெண் பேரழகுடையவளாக இருக்க வாய்ப்பு உண்டு.

                ஒரு ஆடவனின் சாதகத்தில் சந்திரபகவான் ஆனவர் களஸ்திரஸ்தானமான  ஏழாமாதிபதியாகவோ அல்லது ஏழாம் இடத்திலோ இருந்தால் அவனுக்கு வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளாக இருப்பாள்.

                            

மாலையிட்ட கணவனின் உயிருக்கு ஆபத்து


             ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சுக்கிரபகவான்,சனிபகவான் மற்றும் செவ்வாய்பகவான் மூன்று கிரகங்களும் கூடி  நிற்க அந்த பெண்ணிற்கு கட்டிய கணவன் நிலைக்க மாட்டான்.உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

பரிகாரம்;

                 சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடல்.
வெள்ளிகிழமை தோறும் வெள்ளிவிரதமிருந்து அம்பாளை வழிபடல் மற்றும் விநாயகருக்கு தீபய் ஏற்றுதல்.இவை கணவனின்  ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது.

                         


திருமணத்திற்கு பிறகு அலைச்சலை தரும் பெண்:-

                  ஒருவரது சாதகத்தில் சூரியன்,சந்திரன்   மற்றும் களஸ்திரகாரகர் சுக்கிரபகவான் இம்மூவரும் இணைந்து லக்கனத்தில் இருந்தாலோ அல்லது சூரியனும்,சந்திரனும் லக்கனத்தில் இருந்து சுக்கிரன் மூன்றில் இருந்து சூரியன் பார்த்தாலோ அந்த சாதகர் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வேறு பல ஊர்களுக்கு அடிக்கடி இடம்பெயர்ந்து அலைச்சல் மற்றும் திரிச்சலை தரும் மற்றும் தரக்கூடிய சாதகமாகும்.

காம சுகம் தர விரும்பாத மனைவி

                            
               ஒருவருடைய சாதகத்தில் களஸ்திரஸ்தானாதிபதி ,களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் இவ்விரண்டும் ஒன்று கூடி ஆறில் மறைந்தால் காமசுகம் தர விரும்பாத மனைவி அமைவாள்.

                 ஒருவரது சாதகத்தில் கேந்திரஸ்தானத்தில் ( 1,4,7,10 ) சூரியன் +சுக்கிரன் இணைந்து இருந்துவிட்டால் அவர்கள் இல்லற வாழ்வில் இன்பம் அடைவதில்லை.

        அல்லது ஏழாமிடத்தில் இருந்தால் இருவருக்கும் சண்டை வந்துகொண்டிருக்கும்.

கால தாமத திருமணம்


                           


        ஏழில் செவ்வாய் மற்றும் சனியை கொண்டவர்களுக்கு கால தாமத திருமணம்..

            லக்கனம் அல்லது ராசிக்கு ஒன்று,இரணடு ,ஏழு மற்றும் எட்டாமிடத்தில் பாவகிரகங்கள் இடம்பெற்று
இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு பெற்றிருப்பின் தாமததிருமணம் நடைபெறும்.

        களத்திரஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதி களத்திரஸ்தானங்களில் நின்றாலோ அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசம்,பகை மற்றும் பாவிகளோடு சேர்ந்திருந்தாலும் தாமத திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

             இரண்டு,எட்டில் ராகு ,கேது தொடர்பு பெறுவது
சந்திரனுக்கு ஏழில் அல்லது இரண்டில் சனிபகவான் இடம்பெறுவது
லக்கனம் மற்றும் ராசி மற்றும் ஏழாமிடத்தில் ராகு மற்றும் கேது தொடர்பு முதலியவை தாமத திருமணத்தை தரும்.

            மேலும் குடும்பாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரபகவான் போன்றவை நீசம்,பகை ,அஸ்தமனம் பெறுவது போன்றவை.சுபர் இவர்களை பாராதிருப்பது.
இதுபோன்ற பல காரணங்கள் உள்ளது.சோதிடரின் ஆலோசனையை பெற்று முடிவு செய்யவேண்டும்.

                       

பரிகாரம்



                 திருமண தடையை தவிர்க்க ராகு ,கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம,திருபாள்புரம்,பேரையூர் ,காளஸ்தி மற்றும் கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்கள் சென்று ராகுகாலங்களில் பாலபிஷேகம் செய்து வரல்.

            திருமண தடையை போக்க பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபடல்.இதுபோல பல பரிகாரங்கள் உள்ளது.

(தங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாக சாதகபலன்,திருமண பொருத்தம் ..போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை  ஆராய்ச்சி செய்து பலனை போன் வழியாக பெறலாம்.கட்டணம் உண்டு)
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை  கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம்.)

எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647

    செல்
740 257 08 99
97 151 89 647

                     

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

  My email
    masterastroravi@gmail.com

My blogspot
  AstroRavichandransevvai.blogspot.com

Wednesday 25 October 2017

சாதகம் நமக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?

சாதகம் நமக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?

                           
கிரகங்கள் படுத்தும் பாடு-( 177 )

  செவ்வாய்பட்டி
  அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
             ஒரு மனிதனுக்கு வெற்றி மேல் வெற்றியாக வந்து குவியும்போது,
அந்த வெற்றியானது  தன்னுடைய அறிவு,திறமை மற்றும் கெட்டிகாரதனத்தால் நடந்ததாக  மண்டைக்கணமாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் தனது வெற்றிக்கு "தான் மட்டுமே காரணம் " என பெருமையாக பீற்றிக்கொள்வார்கள்.

                     "நான் எப்படி உழைத்தேன் தெரியுமா ?நான் எப்படியெல்லாம் எனது மூளையை use பண்ணி தொழில் செய்தேன் புரியுமா ? ".....என எல்லா வெற்றிக்கும் தான் மட்டுமே காரணம் என பீற்றிக்கொள்பவர்கள் பலர் உண்டு.

                   ஆனால் அதேநேரத்தில் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்த மனிதன் சிறு சிறு தோல்விகளாக தொழிலானது சரிவை நோக்கி செல்லும்போது மட்டும் ஒருவன்   "கிரகம் சரியில்லை " என குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

                   உடனே சாதகத்தினை தூக்கி கொண்டு சோதிடர் ,சோதிடராக அலைய ஆரம்பித்து அவரகள் தரும் பரிகாரங்களை கோவில்,கோவிலாக அலைந்து பூஜை,புணர்ஸ்கரங்கள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
இவ்வாறாக பல கோவில்கள் அலைந்து பரிகாரங்கள் செய்தும் கஷ்டங்களும்,நஷ்டங்களும் குறையாதபோது சோதிடர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்."சார் நீங்க சொல்ற எல்லா கோவிலுக்கும் போயிட்டோம்,எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம்.ஆனால் கஷ்டம் சிறு கடுகு அளவு கூட குறையவில்லை "  என புலம்புபவர்கள் பலர் உண்டு.

                             

                 ஒருவர் வெற்றி வந்தால் தான் மட்டுமே காரணம் என எண்ணிக்கொள்ளும் சராசரி மனிதன்  தோல்வி வந்தால் மட்டுமே கிரகபலன் சரியில்லை என ஏன் வருத்தப்படுகிறீர்கள்?.

             ஒருவர் என்னவாக ஆக வேண்டும் ? எப்படியெல்லாம் நடக்கவேண்டும் ? என்பதனை அவரது ஜெனிக்கும் நேரம் முடிவு செய்யப்படுகிறது.ஒரு விதையின் வளர்ச்சியினை அந்த வித்தின் வீரியம் முடிவு செய்யப்படுகிறது.விதையின் வித்தானது வீரியம் உடையதாக இருந்தால் அந்த விதை மலை மீது விழுந்தாலும் மண்ணிற்குள் போராடி வேர் விட்டு நிற்கும்.எவ்வளவு பலமாக காற்று வீசினாலும் எதிர்த்து நிற்கும்.

இவ்வாறு மண்ணிற்குள்ளும்,விண்ணிலும் போராடி பலமான வேரினையும்,தண்டையும் பெற்று செழித்தோங்கி நிற்பதை பார்க்கலாம்.

ஆனால் அதேநேரத்தில ஒரு சில விதையானது நல்ல பண்பட்ட  நிலத்தில் விழுந்தாலும் வாடி வதங்கி கருகிபோவதும் உண்டு.

                            

           மனிதன் மட்டும் அல்ல எந்த உயிரினமாக இருந்தாலும் ஜெனிக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரகங்களின் நிலைகளே அதன் வாழ்வியலையும்,வெற்றி மற்றும் தோல்விகளையும் முடிவு செய்கிறது.
"தீதும்நன்றும் பிறர்தரவாரா " என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி ஒருவருக்கு கிடைக்கும் பெருமைகளுக்கும்,சிறுமைகளுக்கும் மற்றும் தோல்விகளுக்கும்,வெற்றிகளுக்கும் அவரது ஜெனன காலத்தில் சாதக கட்டத்தில் அமைந்திருக்கும் கிரகநிலைகளே முழுக்காரணமாக அமைகிறது.

                              ஒருவன் காசு,பணத்திற்கு கஷ்டப்படாமல் எந்நாளும் வளமுடையவனாக இருப்பதற்கு அவனது சாதக கட்டத்தில் தனாதிபதியும்,தன காரகன் குருபகவானும் பலம் அடைந்து இருப்பதோடு அவனது இளவயதில் இருந்து அவருக்கு நடைபெறும் திசையும் உகந்ததாக இருக்கவேண்டும்.

                      ஒருவன் கார்,பங்களா போன்ற வசதிகளோடு என்றும் வளமாக வாழ்கிறார் என்றால் அவரது சாதக கட்டத்தில் ஆடம்பர வசதிகளை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான் சுபஸ்தானத்தில் பலமடைந்து நின்று வாலிப வயதில் சுக்கிரபகவானின் திசையினை பெற்றவர்களாக இருப்பார்கள்.

                  சிலர பிறந்தது முதல்  எந்நாளும் பிணி,பீடை ,கடன் மற்றும் எதிரிகளால் கஷ்டப்பட்டே தமது வாழ்வினை கழிப்பதற்கு அவரது சாதகத்தில் தன,சுக (2,4)  ஸ்தானம் பாதிக்கப்பட்டு ருணரோக ஸ்தானமான ஆறாம் இடம் வலுவடைந்து இருந்திருக்கவேண்டும்.

                          

                  சிலர் தொட்டது எல்லாம் துலங்குவதற்கு அவரது முயற்ச்சி ஸ்தானமான மூன்றாமிடம் பலமடைந்து துணை நிற்பதோடு தன,லாப,பாக்கிய மற்றும் ஜீவன ஸ்தானங்கள் பலமடைந்து நின்று இந்த சுபஸ்தான  திசைகள் நடப்பில் இருக்கவேண்டும்.
ஒரு சிலர் நிலையான தொழில் அமைந்து பொருளீட்டி தொழில் அதிபர் ஆவதற்க்கும்,சிலர் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிராயுத பாணியாக நின்று இறுதியில் சாவோமா ?,பிழைப்போமா ? என கஷ்டங்களை அனுபவிப்பதற்கு அவரது தன,பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்களை பொறுத்து   ( 2.9.10.11 ) அமைகிறது.

                   ஒரு மனிதன் எவ்வளவு அழகு,அந்தஷ்து மற்றும் கல்விநிலையை பெற்றிருந்தாலும்  மணவாழ்வில் வெற்றி பெற அவரது சாதக கட்டத்தில் லக்கன,குடும்ப,களஸ்திர மற்றும் மாங்கல்ய ஸ்தனங்களை ( 1,2,7,8 )யும் ,களஸ்திரகாரகன் சுக்கிரனையும் பொறுத்து அமைகிறது.இவ்விடங்கள் ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெறாமல் இவ்விடங்களின் அதிபதி வலுப்பட்டு உரிய திசா நடப்பில் இருக்க யோகமான ,தங்கமான மனைவி அமைந்துவிடுகிறது.மாறாக மேற்கண்ட ஸ்தானங்கள் பலமிழக்க கால தாமத திருமணம் அமைகிறது.

           ஒரு சிலர் புத்திரர்களால் புகழடைய அல்லது புகழுடைய புத்திரம் பிறக்க அவரது சாதக கட்டத்தில் புத்திரகாரகன் குருபகவான் மற்றும் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடமும் பாவிகள் சேர்க்கையற்று பலமடைந்து நிற்க வேண்டும்.

                         

                ஒருவர் காதல் மணம் புரிகிறார் எனில் அவரது சாதக கட்டத்தில் ஐந்து மற்றும் ஏழாமிட தொடர்பு எவ்வகையிலாவது பெற்றிருக்கவேண்டும்.
திருமணம் நடந்து பலர் நீண்ட நெடிய ஆயுளோடு வாழ ,ஒரு சிலர் இளமையிலே விதவையாக ஆகிவிடுவதும் கிரகநிலைகளே காரணம் ஆகிறது.இதற்க்கு அவளது ஏழாம் அதிபதியுடன் சனி,செவ்வாய், ராகு தொடர்பு பெற்றிருப்பதே காரணமாகிறது.

            நிறைந்த ஞானமும்,கல்வி அறிவும் பெற்றிருந்தும் ஒரு சிலர் எளிமையாக,இளமையில்  அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கோ அரசாங்க வேலை கால தாமதம் ஆக அவரது சாதகத்தில் அரசாங்க யோகத்தினை தரக்கூடிய சூரியபகவான் பலம் இழப்பதே காரணமாக அமைகிறது.

               ஒரு சிலருக்கு தந்தை மூலமாக புகழடைய ,தந்தை தேடிய சொத்தால் ஆதாயம் பெற தந்தைஸ்தானமான ஒன்பதாம் இடமும்,தந்தைகாரகன் சூரியபகவானும் பலமடைந்து நிற்க வேண்டும்.

                   இதேபோல தாய் மூலம் ஆதாயம் பெற மாதர்ஸ்தானமான நான்காம் இடம்,மாதர்காரகன் சந்திரபகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.

                   ஒருவர் வண்டி,வாகனங்களால் லாபம் பெற நான்காம் இடமும்,சுக்கிரபகவானும்,பூமியால் லாபம் அடைய அதே நான்காம் இடமும், பூமிகாரகன் செவ்வாய் பகவானும் பலம் பெற்று திகழவேண்டும்.
கல்வி அறிவும்,ஞானமும் பெற வாக்குஸ்தானம்,நான்காம் இடம், ஐந்தாம் இடம்,ஒன்பதாம் இடம் மற்றும் குருபகவான்,வித்தைகாரன் புதன் பலமடைந்து திகழவேண்டும்.

                           

            நடன நாட்டிய மங்கையாக திகழ கலைக்காரகன் சுக்கிரபகவானும்,இசைஞானம் பெற புதன் பகவானும்,கதை,கவிதை,கட்டுரை மற்றும் சினிமா பாடலாசியர் போன்ற துறைகளில் சிறக்க புதன்பகவான் மற்றும் சந்திரபகவான் ஆகிய பலம் பெற்ற நிலைகளில் புகழ் பெறுவார்கள்.மொத்தத்தில் கனவு தொழிற்சாலையான சினிமாவில் கோலோச்சி நிற்க சுக்கிரன்,புதன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் அனுக்கிரகமும்,ஆதரவும் தேவை.கீர்த்தி,புகழ் தரும் ஸ்தானமான மூன்றாமிடமும்,கற்பனை திறன் தரும் ஐந்தாமிடமும் பலம் பெற்றிருக்கவேண்டும்.

                   ஒருவர தான் மேற்கொள்ளும் தொழிலில் புகழடைய தன, பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்கள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறி நிற்கவேண்டும்.
ஒரு சிலர் வாக்கு பலிதம் உடையவராக திகழ வாக்குஸ்தானத்தில் உள்ள கேதுபகவானே காரணமாக அமைகிறது.இவரகளுக்கு புதன்பகவானும் பலப்பட அருள்வாக்கு சோதிடராகவும் திகழ்வர்.

                வாக்கில் ராகுபகவான் அல்லது வாக்குஸ்தானத்தை சனி,செவ்வாய் சேர்ந்தோ அல்லது தனித்தனியாக பார்க்க தந்திரம் மிக்கவர்களாக,தனது பேச்சில் ஒருவித பொய்மைதன்மை மிக்கவர்களாக காணப்படுவர்.இவர்களை போன்றோர் சனிபகவான் பலப்பட்டு நிற்க வழக்கறிஞராக வழக்குரைப்பர்.பலம் குறைந்த சனி பஞ்சாயத்துகாரர் ஆக மாற்றி விடும்.

              செவ்வாய் பகவானை பலமாக பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் புகழ்மிக்க மருத்துவர்களாக,இராணுவம்,போலிஸ் போன்றவற்றில் பணிபுரிபவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.பலமான செவ்வாய் பகவானை பெற்றிருந்தாலும் பாவர் தொடர்பு பெற்றிருக்க ரொளடிகளாக ,பிறருக்கு அடியாளாக மாற்றி விளையாடுகிறது.

                                

                               புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்று கொள்பவர்களாக ,கணித அறிவு சம்பந்தப்பட்ட துறைகளில் புகழ்பெறுபவர்களாக,சோதிட ஞானம் மிக்கவர்களாக மற்றும் இசையில் புலமை பெற்றவர்களாக மாற்றி அழகு பார்க்கிறது.ஒரு சிலரை கதை,கவிதை,கவிதை மற்றும் எழுத்தாளராக மாற்றி அழகு பார்க்கிறது.

            இன்றைய நவீன தொழில்நுட்பமான கனிப்பொறி,இனையம் போன்றவற்றில் புகழடையவும்,பங்குமார்க்கெட் போன்றவற்றில் புகழடைய வைக்க ராகுபகவானின் ஆதரவு தேவைப்படுகிறது.அரதியல்,மாந்திரிகம் போன்றவற்றில் புகழ்பெற வைக்கிறது.
ஆடை,ஆபரணம்,,அழகுசாதனப்
பொருட்கள்,ஹோட்டல்,ஜவுளி,சினிமா,
,வாகனம்,பேஷன் டெக்னாலஜி,நடனம் போன்றவற்றில் திறமை மிக்கவனாக சுக்கிரபகவானின் அருள் தேவை.

              சகோதரர்களின் அன்பும்,ஆதரவும் பெற மூன்றாமிடம்,பதினொறாமிடம் மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் பகவானின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

                                                                      ஆத்மாக்காரகனான சூரியபகவான் கண் பார்வைக்கும்,எலும்பு பலத்திற்கும்,தந்தைக்கு காரகராகவும்,அரசு வேலைக்கு காரகராகவும் மற்றிம் அரசியல் யோகம் பெறுவதற்கும் காரகர் ஆவார்.

                              

                நீர் சார்ந்த கூல்டிரிங்ஸ்,பால் ,தண்ணீர் போன்ற தொழிலில் பலன் பெறுபவர் சந்திரனை பலமாக பெற்றவர்கள் ஆவார்.சந்திரன் மாதர்காரகனாகவும்,மனநிலைக்கு காரகனாகவும் உள்ளார்.
ஒருவர் உறுதியான மனநிலை பெறுவதற்க்கும்,அடிக்கடி தன்னை குழப்பிக்கொள்வதற்க்கும் சந்திரபகவானே காரணம் ஆகும்.

               இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம் .கடல் போன்றது சோதிட பலன் ஆகும்.ஒரு மனிதனின் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகங்கள் படுத்தும் பாடே காரணம் ஆகும.

              என்னதான் அழகு,அறிவு,அந்தஸ்து இருந்தும் திருமணம் கால தாமதம் ஆவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என உற்றுநோக்க  லக்கனம்,இரண்டாமிடம,ஏழாமிடம்,
எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களுடன் மறைவு ஸ்தான அதிபதிவுகள் சேர்ந்து நிற்பது, அல்லது மேற்கண்ட அதிபதிகள் மறைவிடங்கள் செல்வது அல்லது மறைவு ஸ்தானத்திற்கு 1,2,7,8 ஆம் இட அதிபதிகள் பரிவர்த்தனை,அல்லது களத்திர காரகன் சுக்கிரபகவான் பலமிழந்து நிற்ப்பது.மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் உடன் அரவுகளான ராகு,கேது சேர்வது காரணம் ஆகும்.

                   ஒரு சிலர் மறுபிறப்பற்ற முக்தி நிலை அடைய விரயஸ்தானத்தில் கேதிபகவான் நின்று,ஒன்பதாம் இட அதிபதி வலுப்பெறவேண்டும்.
  ஒரு சிலர் காம மிகுதியால் தவறு்பவர்களாக இருப்பதற்க்கு காரகம் மனோகாரகன் சந்திரன் பலமிழந்து நிற்க்க,3,5,12 போன்றவற்றில் சுக்கிரன் ,செவ்வாய் ,சனி,ராகு சேர்க்கை மற்றும் சுக்கிரன் + சனி சேர்க்கை தகாத உறவுநிலையை தந்துவிடுவதே காரஙம் ஆகிறது.

                                                                 (தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம்,
ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கி மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும விபரம் பெறலாம்.)

   தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்
   97 151 89 647

   செல்
  740 257 08 99
      97 151 89 647

                          
    அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
       M.Sc.,MA,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
    masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com

............................

யோகம் உள்ள ஜாதகமா எப்படி தெரிந்து கொள்வது ?

யோகம் உள்ள ஜாதகமா எப்படி தெரிந்துகொள்வது?


                             
            
கிரகங்கள் படுத்தும் பாடு

          மனிதராக பிறந்த அனைவருக்கும் தன்னுடைய சாதகமா ? என தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.யோக சாதகத்திற்கான கிரக அமைப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை சோதிட கவி வாயிலாக இப்பதிவில் விளக்கலாம் என எண்ணத்தில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

யோக விளக்கங்களும்,பாடல்களும்

கவி விளக்கம்-1

            ஜெனன ராசிக்கு இரண்டாம் வீட்டோனும்,10-ஆம் அதிபதி மற்றும் லாபத்தோன் எனப்படும் 11-ம் வீட்டோன் இம்மூவர்களில் ஒருவர் சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திர ஸ்தனங்களில் நின்றிருக்க (1,4,7,10),
மேற்சொன்ன ஜெனன லக்கனத்திற்கு 5 அல்லது 1 அல்லது 5,9 இவ்விரண்டிற்க்கும் ஆட்சிநாதன் குருவாகவும் இருந்தால் அந்த ஜாதகனுக்கு ராஜயோகம் உண்டு.
இதன் பலன் அவனுதித்த 15 வருடத்திற்கு மேல் அந்த ராஜயோகத்தை அனுபவிப்பான்.


சோதிட கவி-1

'மதிக்கு தனம் ஜீவன லாபத்தோன்
மூவரில் யாரோருவர் சந்திரகேந்திரமேற
உதயவன் புண்ணியன் இல்லை பூர்வபுண்ணியன் தர்மத்தோன்
இவ்விரண்டிற்கும் ஆட்சிநாதன் அரசனாக ராஜயோகம் அவனுதித்து மூவந்தை அகவை தாணாடியூண்டோன்டு சொல் தோழி"


                            

அடுத்த கவிக்கான விளக்கம்-2

       ஒன்பதாம் வீட்டனோனான பாக்கியிதிபதி எவர் அங்கிசம் பெறுகிறானோ அந்த அங்கிசாதிபதி குருவுடன் சேர்ந்து ஜெனன ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் இருக்க 2,9-ஆம் வீட்டிற்குடையோனும் குருவாக இருப்பாராகில் அந்த ஜாதகனுக்கு அவனுத்த 15 வயதிற்குமேல் ஆயுளாகாலம் வரை ராஜ யோகத்தை அனுபவிப்பான்.

சோதிட கவி-2

"தர்மத்தோன் பெற்ற சாரத்தின் நாயகன்
அரசனுடன் சேர்ந்து வாக்கினிலிருக்க
தனபாக்கியத்தோனும் பிரகஸ்பதியானல் ஆயுள் உள்ளவரை
அனுபவிப்பான் ராஜயோகம்
இதை பத்ரகாளி அருளாலே பகர்கிறேன் கேள் தோழா"
---------------------------------

                                
கவி விளக்கம்- 3

         கரும்பாம்பாகிய ராகு பகவான் நின்ற வீட்டிற்குரியவன் உச்சத்தில்வாது,ஆட்சி மற்றும் திரிகோணங்களிலாவது
இருந்து செவ்வாய் ஆட்சி உச்சம் போன்று பலம் பெற்றிருக்க அவனுத்த பதினைந்து ஆண்டிற்குமேல் யோகம் உண்டு.

"கரும்பாம்பு குடியேறிய குடிநாதன்
நலமுடன் ஆட்சியுச்சதிரிகோண மேற
யாருக்கும் அடங்காத அங்காரகனும்
ஆட்சியுச்ச பலம்பெற்று அரசாட்சிபுரிய
ராஜயோகம் உண்டென உரை நண்பா"
----------------------------

                            
கவி விளக்கம்-4

          நான்காம் அதிபதி எனப்படும் சுகத்தோன் நின்ற ராசிக்குடையோன் பத்தாம் வீடான தொழில்  ஸ்தானத்தில் நிற்க அவனுடன் புதன் கூடி இருந்தால் அல்லது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் ராஜயோகம் உண்டு.

சோதிட கவி-4

"சுகத்தோன் நின்ற வீட்டிற்குடையோன்
ஜீவன ஸ்தானமேற அன்புடனே இவர்ஙளோடு கணக்கன் உறவுகொண்டாடியோ ஒருவருக்கொருவர் பார்வைகொள்ள
சாற்றிடு ராஜயோகம் மெத்தவுண்டேன்று"
----------------------------------

                            

கவி விளக்கம்-5

             பலத்தை உடைய ஸ்திர ராசியொன்றில்
ஜெனனம் ஆகி அஸ்திர ராசியால் சுக்கிரனிருக்க ஜெனன லக்கனத்தில் குருவும் அந்த ஜாதகன் ராஜயோகம் உள்ள ஜாதகம் ஆகும்.

சோதிட கவி-5

"ராசியொன்று ஸ்திரமாகி சுக்கிரனும் குடியேற லக்கனத்தில் வியாழனும்
நலமுடன் அமர்திருக்க ராஜயோகம்"
--------+--------------------

                          

           ஒருவரது சாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும் ஒன்று,ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகளும் ,கேந்திராதிபதிகளான ஒன்று,நான்கு,ஏழு மற்றும் பத்தாம் அதிபதிகளும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருக்க மறைவு ஸ்தான அதிபதிகளான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டுக்குரிய அதிபதிகள் சேர்க்கையோ அல்லது பரிவர்த்தனை அற்று இருப்பின் அவை யோக சாதகம் ஆகும்.

             தன,பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் பலமடைந்து தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நின்று அவை லக்கனாதிபதிக்கு நட்பாக இருப்பின் அவை யோக சாதகம் ஆகும்.

                              

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிடர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி.புதுக்கோட்டை மாவட்டம்.

வாட்ஸ்அப்
  97 151 89 647

செல் : 97 151 89 647
             740 257 08 99

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

Saturday 21 October 2017

காதலில் வெற்றி பெறுபவர் யார் ?_சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு

காதலில்  வெற்றி  பெறுபவர் யார் ?

                           

                       
கிரகங்கள் படுத்தும் பாடு--( 124 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                 கா-காண்பது
            ஒருவர் எத்தனையே பெண்களை பார்த்தாலும் மற்றும் பழகினாலும் அவர்கள் அனைவரிடம் காதல் உருவாவதில்லை.யாரோ ஒருவரை பார்த்தவுடன் தன்னையறியாமலே அவனது மனதில் ஒரு தவிப்பு ஏற்படும்.மின்னல் மின்னி மறைவதுபோல மனதிற்குள் ஒரு யுத்தம் உண்டாகும்.இதைபோல இருவருக்கும் உருவாவது.கம்பர் கூறியது "அன்னளும் நோக்கினாள் ,அவனும் நோக்கினான் "என்பது போல இது இரு ஆத்மாக்களின் சங்கீதம் ஆகும்.

        த-தவிப்பது

              பிறகு அவனை பார்க்க முடியாவிட்டாலும் அவனும் மற்றும் அவளை பார்க்காவிட்டால் அவனும் தவிப்பது.

        ல்-இனி அவர்களுகளுக்கு இடையே காதல் இல்லாமல் செய்ய எவர் தடுத்தாலும் எதிர்த்தாலும் எதிர்த்துநிற்றல்.இல்லாமல் போக செய்தால் உயிரே போனாலும் எதிர்த்து போராடல்.

                         

           எல்லோருக்கும் காதல் என்ற உணர்வும் மற்றும் ஆசையும் இருந்தாலும் அனைவரும் காதலித்துவிடுவதில்லை.ஆனால் வெகு சிலரோ இந்த உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.ஏன் அவர்களுக்கு மட்டும் இவ்வித உணர்வு உருவாகிறது ?

         அவ்வாறு  உருவாவதற்கு அவர்களது  சாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளே காரணமாகும்.எனவேதான் காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் ஒரு பாடலில்
"காதலிக்க நேரமில்லை காதலிக்க நேரமில்லை !
வாலிபத்தில் காதலிக்க சாதகத்தில் யோகமில்லை !
என வரும் ஒரு பாடலை நினைவுபடுத்துகிறேன்.

         ஒருவருக்கு காதல் உணர்வை தருவதில் களஸ்திரகாரகன்  சுக்கிரபகவானுக்கும் மற்றும் காம உணர்வை தருவதில் மங்களகாரகன் செவ்வாய்பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு.

ஒரு மனிதன் காம உணர்வு மிகுந்து தவறுகள் மிக செய்வதற்கும் மற்றும் காதல் உணர்வு மிகுந்து கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை விட்டு ஓடுவதற்கும் இவ்விரு கிரகங்களின் கலப்பும் மற்றும் இவ்விரு கிரகங்களோடு அசயர்களான சனி,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் சேர்கையாகுமே ஆகும்.

                                    

        "இருபது வயதுவரை என் பெற்றோர் வசமிருந்தேன் இருபது நிமிடத்திலே உன்வசம் வந்தேனடா?

           என்ற சினிமா பாடலில் அழகாக சிறுவயதிலிருந்து பாலூட்டி சோறு போட்டு வளர்த்த பெற்றோரையே சற்று முன் வந்த நீ ஓடி வரசெய்து விட்டியடா ?என அழகான தனது பாடல் வரிகளில் படம் போட்டு காட்டியிருப்பார்.

              ஆமாம்.ஒருவரது சாதகத்தில் களஸ்திரஸ்தான ஏழாம் அதிபதி மறைவுஸ்தான இடமான ஆறு மற்றும் எட்டாமிடத்தில் நின்று பாபர் சேர்க்கை (சனி,ராகு,செவ்வாய் ,கேது) பெற்றிருந்தால் ஜாதகர் தனது பிள்ளையை படிக்க வைத்து சான்றோனாக்கி/சான்றோளாக்கி ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிவைக்கவேண்டும் என கலர் கலராய் கற்பனை செய்துகொண்டிருக்கும் பெற்றோரை எதிர்த்தோ அல்லது அவர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடியோ தன்னைவிட கல்வியிலும் மற்றும் பொருளாதர வசதியிலும் தாழ்ந்த சமூகத்தில் திருமணம் செய்துகொள்வாள்(ன்)..

         இதேபோல களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் ஆறு அல்லது எட்டில் இருந்து இரண்டு அல்லது பாவகிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ சாதகர் பெற்றோரை மட்டுமல்ல ஊரே தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலுமே போராடி வெற்றி பெறுவார்.

                             

         சிலர் கலப்புமணம் புரிவதற்கான காரணத்தை ஆய்ந்தோமானால் அவரது சாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் கேந்திரஸ்தான  இணைவு பெறுவது  ஆகும். மேலும்  கலப்புமணம் தருவதற்கு களஸ்திரஸ்தான  ஏழாமிட அதிபதி மற்றும் அட்டமாதிபதி இணைந்து மறைவுஸ்தானமான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடங்களில் மறைந்து அதனை சனி பார்ப்பதும் கலப்பு திருமணம் நடைபெற வாய்ப்பாக அமைகிறது.

         எல்லாம் கர்மபலன் ஆகும்.
ஒருவருக்கு காதல் வருவதற்கு அவரது சாதகத்தில் ஐந்தாமிடம் மறறும் ஏழாமிட தொடர்பு பெறுவதே காரணமாகும். இவ்விரண்டு வீட்டு கிரகங்களும் சுப கிரகங்களாக பாவர் சாரம் பெறாமல் இருப்பது.ஒருவருக்கு காதல் திருமணம் உறுதியாகும்.இவை மட்டுமல்லாமல் களஸ்திரகாரகன் சுக்கிரபகவான பாவர் சேர்க்கையற்று சுபஸ்தானமேற அவ்வித காதல் ,  காமம் மட்டுமே தேடும் காதலாக இல்லாமல் எவ்வித எதிர்ப்பு வந்தாலும் வெற்றி பெறும் காதலாக அவை அமையும்.

            "காதல் மட்டுமே போதும் என்றால் ஒரு செல்ல பிராணியிடம் கூட அதை பெற்றுவிடலாம்.
காமம் மட்டுமே போதும் எனில் ஒரு விலைமகளிரிடம் பெற்றுவிடலாம்-எங்கு
காதலும் காமமும் ஒன்றுடன் ஒன்று சரிபாதியாக இணைகிறதோ அதுவே உண்மையான காதல்".

  பொதுவாக ஒருவர் காதலில் வெற்றி பெற ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பு எவ்வகையிலாவது இருக்கவேண்டும்.

-------------------------------------
(தங்களது குடும்ப உறுப்பினரின் சாதகத்தை விரிவாக ஆராய்ச்சி செய்து தெளிவாக பலனை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் செலுத்தும் விவரங்களை பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற விவரங்களை எனது பின்வரும் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து விவரங்களை பெறவும்.)

எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
97 151 89 647
740 257 08 99

                         
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com