Monday 10 May 2021

ஜாதகத்தில் பலன் அளிக்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.

 ஜாதகத்தில் பலனளிக்கும் போது கவனிக்க வேண்டியவை விதிமுறைகள்.

                        


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஜாதகம் பார்க்க வருபவர்கள் கேட்கும் கேள்விக்கு ஜாதகத்தில் பதிலளிக்க வேண்டுமாயின்,

 அந்த ‌ஜாதகத்தில் ஜாதகர்  கேட்கும் குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க ஜோதிடர்களாகிய நாம் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  1) ஜாதகர் கேட்கும் குறிப்பிட்ட கேள்விக்கு தொடர்புடைய "பாவகம்",


2) அந்த குறிப்பிட்ட "பாவகத்தின் அதிபதி",


3) அந்தக் குறிப்பிட்ட கேள்விக்கு தொடர்புடைய "காரகன்",


  ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். இவ்வாறாக பார்க்கப்படும்  மூன்று வழிமுறைக்கும் மொத்தமாக  120 மதிப்பெண் அளித்தால், ஒரு வகைக்கு  40 மதிப்பெண் வீதம் மதிப்பெண் வழங்கி,

 அந்த கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைக்கும் மொத்த மதிப்பெண்களை பொறுத்து தரக்கூடிய பதிலின் வீரியம் அமைகிறது.


  உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் தந்தையின் நிலை தொடர்பான கேள்விகளை சாதகர் எழுப்பும்போது பதிலளிக்க கீழ்க்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.


     1)தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம்,


    2) ஒன்பதாம் இட அதிபதி 


         மற்றும் 


    3)தந்தைக்கு காரகனான சூரியன் 


ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.


  1) ஒன்பதாம் இடம்


      ஒன்பதாமிடத்தில் கீழ்க்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.


அவையாவன,


      a) முதலில்  ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்களை கவனிக்கப்பட வேண்டும். அந்த இடத்தில் உள்ள கிரகங்கள் இயற்கை சுப கிரகமா? அல்லது இயற்கை பாவக்கிரகமா ? என பார்க்கப்பட வேண்டும்.ஒன்பதாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் இடம் பெறுவது நல்லது ஆகும்.


     b ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்கள் பெற்ற நட்சத்திர சாரம் மற்றும் சாரநாதன் ஜாதக கட்டத்தில் உள்ள நிலை.


‌   c ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்களின் ஸ்தான நிலை மற்றும் ஒன்பதாம் பாவத்துடன் அந்த கிரகத்தின் உறவு நிலை போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


     d  ) ஒன்பதாம் இடத்தில் எந்த கிரகங்கள் பார்வை செய்கிறது. இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறைச் சந்திரன் மற்றும் தனித்த புதன்  ஆகியோரின் பார்வை அந்த இடத்தில் உள்ள கிரகங்களையும் மற்றும் அந்த ஒன்பதாம் இடத்தையும் சுபத்துவபடுத்தி வலிமையுடைய கிரகமாக மாற்றி நற்பலன்களை தர செய்கிறது. 


     மாறாக இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய் போன்றவை பார்வை செய்யும்போது அந்த இடத்தையும் மற்றும் அந்த இடத்தில் உள்ள கிரகங்களையும் பாவத்துவமாக்கி கெடுபலனைத் தர வைக்கிறது.


    e ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்கள் ஷட்பலம்  வரிசையில் திக்பலம் பெற்று உள்ளதா? என்றும் வர்கோத்தமம் அடைந்து உள்ளதா? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.


  மேற்கண்ட எல்லா வகையிலும் பலம் பெற்று இருப்பின் அந்த ஒன்பதாம் இடத்திற்கு 40 மதிப்பெண் தரப்பட வேண்டும்.


 2) ஒன்பதாம் இட அதிபதி


   ஒன்பதாம் வீட்டு அதிபதி தந்தை ஸ்தானாதிபதி அல்லது பிதுர் ஸ்தானாதிபதி என்றும் அழைக்கப்படுகிறது.


   ஒன்பதாம் இட அதிபதியினை கீழ்க்கண்டவாறு  ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


      a ) ஒன்பதாம் வீட்டு அதிபதி இயற்கை பாவ கிரகமா ? அல்லது இயற்கை சுப கிரகமா ? அந்த ஒன்பதாம் இட அதிபதி ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ளதா? அல்லது வேறு எங்கேனும் கேந்திரத்தில்(1,4,7,10) அல்லது கோணத்தில் (1,5,9) அல்லது மறைவிடங்களில் (3,6,8,12) அல்லது உபஜெய ஸ்தானத்தில் (3,6,11 ) ஆகிய எந்த ஸ்தான நிலையில் உள்ளது என்று பார்க்கப்பட வேண்டும்.


        b )  ஒன்பதாம்  இட அதிபதி உடன் இணைந்து மற்றும் பார்க்கும் கிரகங்களுடைய தன்மையைப் பொருத்தும், அதன் வலிமை உறுதி செய்யப்படுகிறது.

இயற்கை சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை கிரகத்தின் வலிமையை உயர்த்துகிறது .

இயற்கைப் பாவக்கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை அந்த கிரகத்தின் வலிமையை குறைக்கிறது.


  மேற்கண்ட வகையில் ஒரு கிரகம் முழு வலிமை பெற்றிருப்பின் அந்த கிரகத்திற்கு நாப்பது மதிப்பெண் அளிக்கப்படுகிறது.


3) காரகன்


  கேட்கப்பட்ட கேள்வி தந்தை ஸ்தானம் என்பதால் தந்தைக்குக் காரகன் சூரியன் பகவான் ஆவார். எனவே சூரிய பகவானுடைய வலிமை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  a) சூரியன் சாதக கட்டத்தில் எங்கு உள்ளார்(கேந்திரமா, கோணமா, மறைவிடமா மற்றும் உபஜெய ஸ்தானமா) 


   b)  எந்த ஸ்தான நிலையில் (உச்சமா, மூலத்திரிகோணம், ஆட்சியா, நட்பா, பகையா மற்றும் நீசமா) இருக்கிறார்.


  c ) சூரியனை எந்த கிரகங்கள் பார்க்கிறது. எந்த கிரகங்கள் சூரியனுடன் இணைந்து உள்ளது என்பதைப் பொருத்தும் சூரியனுடைய வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது. 


 ஒளி கிரகமான சூரியனுடன் இருள் கிரகமான சனி பகவான் மற்றும் சாயா கிரகமான ராகு மற்றும் கேது சேர்க்கை பெறுவது உகந்தது அல்ல .

அது அந்த கிரகத்தின் வலிமையை குறைக்கும்.


   சூரியபகவானை இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை செய்வது அந்த கிரகத்தின் வலிமையை உயர்த்தும்.

அதிலும் குறிப்பாக சூரியனை வளர்பிறைச் சந்திரன் சமசப்தமமாக பார்வை செய்யும் பொழுது பௌர்ணமி யோகம் பெற்று அந்த சூரியன் முழு வலிமை பெறுவார்.


   மேற்கண்ட வகையில் சூரியன் முழு பலம் பெற்றிருப்பின் அதற்கு மதிப்பெண் நாற்பது ஆகும்.


     மேற்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து  பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்து தந்தை பற்றிய வினாவிற்கு விடையளிக்க வேண்டும். விடையளிக்கும் போது லக்னாதிபதியின் வலிமை , நடப்பு தசை புத்தி மற்றும் கோச்சார பலன்களை வைத்தும் பலன் அளிக்க வேண்டும்.


  தந்தையை மட்டும் உதாரணமாக எடுத்து நான் விளக்கியது ஒரு உதாரணம் மட்டுமே இதேபோன்று கேட்கப்படும் கேள்வியை பொருத்து வினாவிற்கு விடை அளிக்க வேண்டும்.


  தாய் பற்றிய கேட்கப்படும் கேள்விக்கு தாய் ஸ்தானமான நான்காம் இடம் ,அதன் அதிபதி மற்றும் மாதுர்காரகன் சந்திர பகவான் மூவரையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


   சகோதரனைப் பற்றி அறிய மூன்றாமிடம், அதன் அதிபதி மற்றும் சகோதர காரகன் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.


   தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி ஆராய்ந்து பார்க்க லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம்  மற்றும் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள், களத்திர காரகன் சுக்கிரன் போன்றவற்றை செய்து பார்க்க வேண்டும்.


  மேற்கண்ட இந்த ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதி ,களத்திர காரகனான சுக்கிரன் பகவானுடனும் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் தொடர்பு மற்றும் ராகு ,கேது சேர்க்கை காலதாமதம் திருமணத்தை அல்லது இளவயது திருமணம் நடந்தால் அவருடைய இல்லற வாழ்வின் சில அன்யோன்யம் இல்லாத தன்மையை தருகிறது.


  மாணவனின் கல்வி நிலை பற்றி கேட்கப்படும் கேள்விக்கு வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் , கல்வி ஸ்தானமான நான்காம்  இடம், புத்தி ஸ்தானமான 5-ஆம் இடம், ஞான ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் கல்வி காரகனாக திகழக்கூடிய குரு மற்றும் புதன் பகவானை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  புத்திரபாக்கியம் பற்றி ஆய்வு செய்து பார்க்க புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் ,புத்திர காரகன் குரு மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


   நிறைவாக ஒரு வீட்டில் இணைந்து உள்ள கிரகங்களின் பாகை நிலை அடிப்படையில் அக்கிரக வலிமை முடிவு செய்யப்படுகிறது.

உதாரணமாக தந்தைக்குக் காரகனான சூரியன் உடன் இயற்கை பாவ கிரகமான சனி அல்லது ராகு எத்தனை பாகையில் இணைந்து உள்ளது என்பதை பொறுத்து அதன் பாவத்துவம் முடிவு செய்யப்படுகிறது.


   ஒரு ராசிக்கு 30 பாகை வீதம் ஒன்பது நட்சத்திர பாதங்களை கொண்ட ஒரு  ராசிக்கு ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலைகள் ஆகும்.


   சூரியன் உடன் இணையும் சனி அல்லது ராகு மூன்று நட்சத்திர பாதத்திற்குள் இருப்பின்(10 பாகைக்குள்) சூரியன் உடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமடைய  செய்துள்ளது என்றும், ஒரு நட்சத்திர நான்கு முழு பாதம் கடந்து இருப்பின் (13 பாகை 20 கலைகள்)  50 சதவீதத்திற்கு சூரியனை பாவத்துவம்  அடையச் செய்கிறது.

நட்சத்திரத்தின் ஏழு பாதம் கடந்து இருப்பின் 22 பாகை 20 கலைகள் தாண்டி இருப்பின் இணையும் பாபக் கிரகமான சனி, ராகு சூரியனை பாவத்துமடைய செய்யாது என எடுத்துக் கொண்டு பலன் அளிக்க வேண்டும்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647


        செல்

    9715189647

‌.    7402570899


My website

  www.astroravichandransevvai.in


                           



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய ?

 உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய..?


                              


      செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      ஒரு ஜாதகர் மிகுந்த கோடீஸ்வரராக அல்லது ஆட்சி அதிகாரத்தில் உயர் நிலையை அடையவோ அல்லது வியாபாரத்தில் உச்சநிலையை தொடவும் அவரது ஜாதகத்தில் இயற்கை சுப மற்றும் இலக்கன யோகர்கள் எவ்விதத்திலும் பங்கப்படாமல் இருக்க வேண்டும்.


   ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானும் மற்றும் சந்திர பகவானும் சம சப்தமாக 180 பாகையில் சந்தித்துக் கொள்வது பௌர்ணமி யோகம் ஆகும்.


  பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த ஒளி பொருந்தியவர்கள் அவர்களை சுற்றி ஒளி வட்டம் இருந்து கொண்டே இருக்கும் .

இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே கைதூக்கி கும்பிடத் தோன்றும்.

 நல்ல தேஜஸ் உடையவர்களாகவும் இருப்பார்கள். அதிகாரத் தோரணை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.


    சிலர் பௌர்ணமி யோகத்தில் பிறந்தாலும் மேற்கண்டவாறு நீங்கள் கூறியதுபோல இருப்பதில்லேயே என நீங்கள் கேள்வி கேட்பது என் காதில் விழுகிறது.


  இதற்கு பதில் கூற வேண்டுமாயின் பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்களுக்கு பொளர்ணமி யோகம் எவ்விதத்திலும் பங்கப்படாமல் இருக்க வேண்டும்.


குறிப்பாக ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரனுடன் இருள் கிரகமான சனி மற்றும் சாய கிரகமான ராகு மற்றும் கேது சேர்க்கை கூடாது.


 இதேபோல சந்திர 

அதியோகத்தில் பிறந்தவர்களும்   

யோகசாலிகள் ஆவார். பொதுவாக சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் இயற்கை சுப கிரகமான குரு புதன் சுக்கிரன் நின்று அதன் தசை தொடர்ந்து வரும் அமைப்பினை உடைய சாதகத்தை பெற்றவர்கள் மிகுந்த யோக சாலிகள் ஆவார்.


  சந்திராதி யோகம் நல்ல பலனைத் தர வேண்டுமாயின் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பின் மிகுந்த நல்ல‌ யோக பலனைத்தரும். சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டில் உள்ள இயற்கை சுப கிரங்களான குரு,புதன் மற்றும் சுக்கிரன் உடன் இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, ராகு கேது  தொடர்பு பெறாமல் இருப்பது நல்லது.


    பொதுவாக இலக்கனம் , ராசி  மற்றும் அதன் அதிபதிகள் பலம் பெற்ற நிலையில் பெரும்பாலான கிரகங்கள் பங்கப்படாத குரு பார்வை பெற்ற நிலையிலிருந்து தொடர்ந்து குரு பார்த்த கிரகங்களின் தசை நடப்பில் இருப்பினும் அந்த ஜாதகம் யோக மிகுந்த ஜாதகம் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கன நட்பு மற்றும் யோகர்கள் ஒன்றுக்கொன்று கேந்திர மற்றும் கோணங்களில் அமர்ந்து,

 அந்த ஜாதகத்தில் பாவர்கள் மற்றும் இலக்கன அவ யோகிகள் ஒன்றுக்கொன்று மறைவிடங்களில் அமர்ந்து ,

கேந்திர மற்றும் கோணங்களில் அமைந்துள்ள இலக்கன யோகர்கள் தசைகள் தொடர்ந்து நடப்பில் இருப்பினும் அந்த ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாக அமையும் ஆகும்.


  சில நேரங்களில் பாவ கிரகங்கள் அல்லது இலக்கன அவயோக கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களான 

3 ,6 ,11-ஆம் இடங்களில் அதிலும் குறிப்பாக 3,11 ஆம் இடங்களில்  நட்பு நிலையில் அமர்ந்து அதன் தசை நடப்பில் தொடர்ந்து இருப்பினும் இதுபோன்ற சாதகங்ளை உடைய பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களும் மிகுந்த பாக்கியவான்கள் ஆவார்.


 பாவ கிரகங்கள் இடம் பெற்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நின்றாலும் அல்லது பாவ கிரகங்கள் கேந்திர மற்றும் கோண அதிபதியுடன் தொடர்பு பெற்ற நிலையில் அதன் தசை உரிய வயதில் நடப்பில் இருப்பின் அந்த ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாகும்.


  நாட்டில் பல கட்சிகள் இருப்பது போல ஜாதக கிரகங்களிலும் இரண்டு கட்சி ஒன்று  அருள் அணி மற்றொன்று பொருள் அணி ஆகும்.


  பொருள் அணியின் தலைவன் சுக்கிரனாவார் இந்த அணியில் அங்கத்தினர்களாக புதன், சுக்கிரன் ,சனி, ராகு உள்ளார்.இதேபோல அருள் அணியின் தலைவர் குரு பகவானாவார். இந்த அணியில் குரு, சந்திரன் சூரியன், செவ்வாய் மற்றும் கேது உள்ளார்.


   குரு அணியை சேர்ந்த இலக்கனங்கள் ஆன தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு சூரிய சந்திர, செவ்வாய் மற்றும் கேது பகவான் திசை மிகுந்த யோக பலனை தரும். இந்த தசைகள் தொடர்ந்து நடப்பிலிருக்கும் அமைப்பு பெற்ற சாதகத்தை உடையவர்கள் மிகுந்த யோகசாலிகள் ஆவார்.


   இதேபோல சுக்ரன் அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம், மிதுனம் கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி ,புதன், ராகு ஆகிய தசைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகம் இருந்த யோக ஜாதகம் ஆகும்.


  குரு அணியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகத்தின் தசைகள் வந்தாலும்,

 சுக்கிரன் அணியில் பிறந்தவர்களுக்கு  குரு அணியை சேர்ந்த கிரகங்கள் தசைகள் வந்தாலும் அந்த கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களான  3,6, 11 ஆமிடங்களில் நட்பு நிலையில் இருப்பின் அதன் தசைகளும் யோகத்தைத் தனது தசையில் தந்து ஜாதகரை யோக மிகுந்தவராக ஆக்கிவிடும் .


   மேற்கண்ட எல்லாவற்றிற்கும் மேலான விதியான "சுபத்துவ தன்மை" என்ற விதி எடுத்துக் கொண்டும் சாதகத்தில் யோக பலனை கணிக்கலாம்.


   ஒரு கிரகமானது நீசம் அடைந்து இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றிருந்தாலும் அல்லது இயற்கைப் பாபக் கிரகமான சனி ,செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் உடன் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகமானது இயற்கை சுப கிரகங்களான  வளர்பிறைச் சந்திரன், குரு பகவான், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்ற நிலையில் இருப்பினும் அந்த கிரகங்கள் சுபத்துவம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பு கொண்ட ஜாதகர்களும் மிகுந்த யோக பலனை தந்து யோகசாலிகளாக மாற்றிவிடும்.


  நன்றி.


வாட்ஸ் அப்

   9715189647


     செல்

   9715189647

     7402570899


My website

  www.astroravichandransevvai.in


                            



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Friday 7 May 2021

ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வதில் காண வேண்டிய விதிவிலக்குகள்.

ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வதில் காண வேண்டிய விதிவிலக்குகள்.


               ‌‌.                   


செவ்வாய்பட்டி 

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


     ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிப்பதில் பல்லாயிரக்கணக்கான விதிகள் இருந்தாலும், பலனை துல்லியமாக நிர்ணயம் செய்வதில் விதிகளை விட விதிவிலக்குகள் பேருதவி புரிகின்றன.


  உதாரணமாக ஒரு கிரகமானது பாவ கிரங்களான சனி,ராகு மற்றும் கேது உடன்

 8 -பாகைக்குள் மிக நெருக்கமாக இணைந்து நிற்கும் போது பாவத்துவமான அமைப்பை பெற்று நின்றால் அதன் தசை காலங்களில் அதிக கெடுபலன்களை தரும் என்றாலும் விதிவிலக்காக இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு கொண்டு இருப்பின் பாவத்துவம் விலகி சுபத்தன்மை பெற்று நற்பலன்களை தரும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகமானது ஸ்தான பலத்தை இழந்தால் அதன் வலிமை குறைந்து தரக்கூடிய பலனிலும் குறைவு ஏற்படும் என்பது பொது விதியாக இருந்தாலும் , ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் அனைத்தும் நல்ல பலனைத் தராது என்று முடிவுக்கு வந்து விட முடியாது. உதாரணமாக மிதுன லக்னத்திற்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்று  ஸ்தான‌ பலத்தை இழந்தாலும் திக் பலம் பெற்றிருப்பதால் அதன் தசை காலங்களில் மிகுந்த நல்ல பலனைத் தரக்கூடிய நிலையை அடைகிறது.


  அதனால் சோதிடத்தில் ஆயிரக்கணக்கான விதிகள் இருந்தாலும் அந்த ஒவ்வொரு விதிக்குள்ளும் பல விதிவிலக்குகள் உண்டு ‌என்பதை அனுபவத்தின் வாயிலாக பல வருடங்களை கடந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.

  

ஒரு ஜாதக கட்டத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் அதிக நன்மையைத் தரும் என்றும், நீசம் பெற்ற கிரகங்கள் பலன்களை குறைவாக தரும் என்றும் கருதிவிட முடியாது.


   உச்சம் பெற்ற கிரகமானது வக்கிரம் பெற்றால் இயல்பு நிலைக்கு மாறான பலன்களை தருகிறது.

அதேபோல நீசம் அடைந்த கிரகமானது வக்கிரம் பெற்றிருந்தாலும் இயல்பு நிலைக்கு மாறான பலன்களை தருகிறது.


  நீசம் பெற்ற கிரகங்கள் நீசபங்கம் அடைந்து உள்ளதா ?  என்றும், சந்திர கேந்திரத்தில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்து பார்த்த பின்னரே  பலனை முடிவு செய்ய முடியும். பாவ கிரகமான சனிபகவான் உச்சம் பெறுவதைவிட நீசம் பெற்று நிற்பதே அதிக நல்ல பலனைத் தரும். எனவே விதிகளை விட விதிவிலக்குகள் அவசியம்.


  இயற்கை சுப கிரகமான குரு பகவானும், புதன் பகவானும் லக்கனத்தில் திக்பலம் என்ற வகையில் இலக்கனத்திற்கு மறைவிட ஸ்தானமான  12ஆம் இடத்தில் அமர்வது திக் பலத்திற்கு அருகில் அமைந்து உள்ளது என்ற வகையில் அதிக நல்ல பலனை தருகிறது.


  இயற்கை சுப கிரகங்களுடன் பாவ கிரகங்களான சனி ,ராகு மற்றும் கேது இணைந்து பவத்துவம் அடைந்து தீய பலனை தருமென்று விதி இருந்தாலும், அல்லது மறைவிடங்களில் நின்று பலமிழந்து இருந்தாலும் சந்திர கேந்திரத்தில் அல்லது குருவின் பார்வை பெற்று நின்றாலோ இந்த பாவத்தன்மை  நீக்கி நல்ல பலனைத் தரும் என்பதும் விதிவிலக்காகும்.


 ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு ராசி என்பது  30 பாகை வீதம் பன்னிரெண்டு ராசிகளுக்கு 360 பாகைகள் ஆகும்.

ஒரு ராசியில் உள்ள இரண்டிற்கு மேற்பட்ட  கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும்,அவை எத்தனை பாகை வீதத்தில் இணைந்து உள்ளது என்பதை பொறுத்து அக்கிரக இணைவானது நிர்ணயம் செய்யப்படுகிறது.


  ஒரு நட்சத்திரத்தினை நான்கு பாதம் வீதமாக பிரிக்கப்படுகிறது.ஒரு பாதத்திற்கு 3 பாகை 20 கலை ஆகும். 

ஒரு கிரகமானது  ஒரு நட்சத்திரம் பாகைக்குள் அதாவது 4 × 3°.20'=

13 °.20' இருந்தால் மட்டுமே அக்கிரகம் நெருக்கமாக இணைந்து உள்ளதாக கருத்தில் கொண்டு பலன் எடுக்கப்படுகிறது.


 13 பாகைக்கு மேல் இருந்தால் ஒரே ராசியில் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிய ஆரம்பிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு பலன் கிடைக்க வேண்டும்.


 22 பாகைக்கு மேல் இருந்தால் அந்த கிரகம் ஒரு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.


 இது போன்ற விதிவிலக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டு கிரகங்களின் இணைவு மற்றும் சேர்க்கை பலனை கையில் எடுக்க வேண்டும்.


  இதேபோன்று பார்வையை கணக்கில் எடுக்கும் பொழுதும் மேலோட்டமாக ஒரு ராசியைக் குரு பார்ப்பது போல் தோன்றினாலும் அவை உண்மையில் பார்ப்பதாக இருப்பதில்லை.


 உதாரணமாக மீன ராசியில் 29 டிகிரிக்கு மேல் இருக்கும் குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக கடக ராசியை பார்ப்பதைவிட சிம்ம ராசியையே  அதிகமாக பார்வை செய்யும் என்ற விதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 ஒரு ஸ்தானத்தினை இயற்கைப் பாபக் கிரகமான சனி மற்றும் செவ்வாய் பார்வை செய்யும் பொழுது அந்தப் பாவ கிரகத்தினை இயற்கை சுப கிரகமான குருவின் பார்வை படும் பொழுது அந்த பாவ கிரகத்தின் கொடூர பாவ தன்மை வடிகட்டப்பட்டு  அதன் பார்வையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்: 9715189647

     செல்

 9715189647

  7402570899


My website

 www.astroravichandransevvai.in


                           


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்,

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதகத்தில் கிரகங்கள் காட்டும் உறவு நிலை

 ஜாதகத்தில் கிரகங்கள் காட்டும் உறவு நிலை


                        


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


       நவக்கிரகங்களை உறவுகளோடு தொடர்புபடுத்தி பார்க்கும் உன்னத கலை ஜோதிடவியல் ஆகும். 


      ஒரு குடும்பத்தின் தலைவன் தந்தையைப் போல,

 நவகிரகங்களின் தலைவன் சூரியன் ஆகும். 


 சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும், புதனை மாமன் வர்க்கமாகவும், செவ்வாய் பகவானை

 சகோதரனாகவும், சுக்கிரனை மனைவியாகவும் கருதப்பட்டு அக்கிரகங்களின் வழியாக அவ்வுறவுகளை பற்றி அறிந்து கொள்ள உதவியது.


   அதேபோல சாதக கட்டத்தில் இலக்கனத்தைக் கொண்டு சாதகரை பற்றியும் , மூன்றாம் மற்றும் பதினொன்றாம் இடங்களை கொண்டு சகோதரனையும், நான்காம் இடத்தைக் கொண்டு தாயையும், மற்றும் ஐந்தாம் இடங்களைக் கொண்டு மாமன் வர்க்கங்களையும் மற்றும் அவனுக்கு  பிறக்கும் புத்திரரை  பற்றியும், ஏழாம் இடத்தை கொண்டு மனைவியையும் மற்றும்  ஒன்பதாம் இடத்தைக் கொண்டு தந்தையையும் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.


  மூன்றாம் இட அதிபதியினை சகோதர ஸ்தானாதிபதியாகவும், நான்காம் இட அதிபதி மாதுர் ஸ்தானாதிபதியாகவும், ஐந்தாம் இட அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாகவும், ஏழாம் இட அதிபதி களத்திர ஸ்தானாதிபதி ஆகவும், ஒன்பதாம் இட அதிபதியை பிதுர் ஸ்தானாதிபதியாகவும் கருதப்படுகிறது.


  ஒருவரது ஆயுளை கணிக்க எட்டாமிடம் அதன் அதிபதி மற்றும் நவகிரங்களில் சனிபகவான் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்து அறியப்படுகிறது.


  ஒருவர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை பற்றிய இலக்கனம் ,

இரண்டாம் இடமான குடும்பஸ்தானம்,

 ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான ஆயுள் ஸ்தானம் அதனதனுடைய அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய ஆராய்ந்து அறிய வேண்டும்.


  ஒருவன் தன் வாழ்க்கையில் பொருள் ஈட்டக்கூடிய நிலை பற்றி அறிய தன ஸ்தானமான 2-ஆம் இடம், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடம், லாப ஸ்தானமான 11-ஆம் இடம் மற்றும் லக்கினாதிபதியின் நிலையை கொண்டும் ஆராய்ந்து அறியப்படுகிறது.


 ஒருவர் கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பற்றி அறிய மறைவு ஸ்தானமான எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களை அறிய வேண்டும்.


  ஒருவர் வாழ்வில் 

எட்டு மற்றும்  பன்னிரண்டாம் இடம் சுபத்துவமான அமைப்பைப் பெற்றவர்கள் கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளீட்டி  பெரும் செல்வந்தராக வாழக்கூடிய யோகம்  உரிய தசையில் அமையும்.


 ஒருவரது தொழில் நிலை பற்றி அறிய அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தும் தொடர்பில்  இருக்கிறதோ,

 அதன் தொழில் அமையும் அந்த தொழிலானது அதற்குரிய தசையில் மட்டும் சிறப்பாக இருக்கும்.


  ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறதோ, அது சார்ந்த தொழில் அவரது வாழ்வில் அமையும்.


   ஒருவருக்கு ஒரு தொழில் அமைய சுபத்துவம் அடைந்த அந்த கிரகத்தின் சுபத்துவ வலிமையின் படிநிலையை பொருத்தே அந்த துறை சார்ந்த தொழிலில் உயரிய நிலையில் அமையுமா ?  அல்லது கடைநிலையில் அமையுமா?  என்பதை கண்டறிய முடியும்.


  அதேபோல ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமாயின், அவரது ஜாதகத்தில் சிம்ம லக்கினமும் அதன் அதிபதியும் மற்றும் சூரியனும் வலுப்பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெற்று இருப்பின் அதற்குரிய தசையில் அரசு வேலை அமையும்.


  ஒருவர் தனக்கு பிறக்கும் புத்திர பாக்கியம்  பற்றி அறிய புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம், புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவற்றை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.


  ஒருவர் தன் வாழ்வில் கடன், பிணி, எதிர்ப்பு போன்ற நிலைகளை ஆராய்ந்து அறிய அவரது ஜாதக கட்டத்தில் சத்ரு ஸ்தானம் என்றழைக்கப்படும் ஆறாம் இடத்தினை கொண்டு ஆராயப்பட வேண்டும்.


  ஒருவர் தான் வாழ்வில் அடையக்கூடிய லாபத்தை பற்றி அறிய 11-ஆம் இடத்தையும், விரயத்தை பற்றி அறிய 12-ஆம் இடத்தையும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.


  ஒருவர் தன் வாழ்வில் அடையக்கூடிய அயன, சயன, படுக்கை சுகங்களை அறிய மோட்ச ஸ்தானமான 12-ஆம் இடத்தை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.


  ஒருவரது ஆன்மீக நிலை பற்றி அறிய அவரது ஜாதகத்தில் சனி, குரு கேது ஆகிய மூன்று கிரகங்களை ஆராய்ந்து அறிய வேண்டும்.ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சனி அல்லது கேதுவோடு தொடர்புகொள்ள ஆன்மிகத்தின் உயரிய நிலையை அவர் அடைய முடியும்.


  ஜோதிடத்தில் சிறந்து விளங்க அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமும், புதன் பகவானும் பலம் பெற்றிருக்க வேண்டும்.  ஒருவர் ஜாதகத்தில் சந்திர கேந்திரத்தில் புதன் பலமடைந்து இருக்கிறதோ அவர்கள் புகழ்மிக்க சோதிடர் ஆவார்.


  ஒருவர் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க செவ்வாய் பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் அதன் தசை நடப்பில் வரவேண்டும் செவ்வாய் பகவானது சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப மருத்துவரா, போலீஸ் ,ராணுவம், கசாப்பு கடைக்காரரா, நடுத்தெருவில் நின்று சுடும் ரவுடியா என்பது முடிவு செய்யப்படும்.


  மருத்துவம், விவசாயம்,காவல்  மற்றும் கட்டிட கலை ஆகிய இத்துறையில் செவ்வாய் பகவானது சுபத்துவ படிநிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது.


  ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க அவரது ஜாதக கட்டத்தில் 2,4, 5 9ஆம் இடங்களையும், நவக்கிரங்களில் கல்விக்கான காரகரான குரு மற்றும் புதன் பகவானையும் ஆய்ந்து அறிய வேண்டும். அதன் உரிய தசை நடப்பில் இருக்கும் காலங்களில் மட்டும் நன்றாக படிக்கக்கூடிய யோக பாக்கியம் அமையும் கோச்சார பலனும் ஒத்துழைப்பு அளிக்கப்படவேண்டும்.


 இரண்டாமிடம் ஆரம்பக் கல்வியையும், நான்காமிடம் உயர் கல்வியையும் மற்றும் ஒன்பதாமிடம் மேல்நிலை கல்வி நிலைகளை குறிக்கிறது.


  ஒருவர் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உடையவரா என்பதை இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தை கொண்டும் மற்றும் அதன் அதிபதியை கொண்டு ஆய்ந்து அறியப்படுகிறது.


  ஒருவர் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகனம் சுகம்,வீட்டு சுகம் போன்றவற்றை அறிய

 சுக ஸ்தானமான 4-ஆம் இடத்தையும் மற்றும் அதன் அதிபதியையும் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.


  ஒருவர் தனக்கு பிறக்கப்போகும் புத்திரத்தை பற்றி அறிய புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம் புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திர காரகனாகிய குருபகவான் ஆகியவற்றை  ஆய்ந்து அறியப்பட வேண்டும்.


  ஒருவரது வீர, தீர பராக்கிரமங்களை அறிய மூன்றாம் இடமும், வெற்றி நிலையை அறிய ஆறாம் இடமும், மறைமுக மறைபொருளை அறிய எட்டாம் இடமும்,ஒருவரது வாழ்வின் படுக்கை சுகம் மற்றும் ஞான நிலையை அறிய 12-ஆம் இடமும் உதவுகிறது.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

  9715189647


  செல்

   9715189647

    7402570899

 My website

www.astroravichandransevvai.in


                        



  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம்.

 உங்கள் ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமா எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி ?

                  


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒரு  ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாக அமைய கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.


  ஜாதகம் யோக மிகுந்த சாதகமாக அமைய கிரகங்கள் ஜாதக கட்டத்தில் பலமான அமைப்பை பெற்று இருந்தாலும் அதன் தசைகள் நடப்பில் வரக்கூடிய அமைப்பை பெற்ற ஜாதகங்களே யோகம் மிகுந்த ஜாதகமாக அமையும்.


    ஒரு ஜாதகத்தை தொட்டவுடன் அதில் மிக மிக அவசியமான , அதே நேரத்தில் நன்கு பலமடைந்து இருக்கவேண்டிய கிரகம் எது?   என ஆராய்ந்து  பார்த்தால் அந்த ஜாதகத்தில் இலக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் ஆகும்.


 நான் அடிக்கடி கூறியதுபோல ஒருவருக்கு யோகமான தசா அமைப்புகள் வந்தாலும் அந்த தசா யோகத்தை அனுபவிக்க கூடிய வாய்ப்பை தருபவர் லக்னாதிபதியே ஆகும். அதே நேரத்தில் ஒருவருக்கு கஷ்டமான தசா அமைப்புகள் நடந்தாலும் அந்த கஷ்டங்களை எல்லாம் மீறி வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கொடியை வாழ்வில் ஏற்றி தன்னம்பிக்கை மிக்கவராக வாழ்வில் ஜொலிக்க  லக்னாதிபதியே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.


   ஒரு ஜாதகத்தில் பௌர்ணமி யோகம், சந்திராதி யோகம் மற்றும் தர்மகர்மாதிபதி யோகம் போன்றவை எவ்வித பங்கமும் உட்படாமல் இருந்து அதன் தசை வாழ்வில் உரிய வயதில் வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்.


  அதேபோல இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்புடைய கிரகங்கள் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் திரிகோண அதிபதிகள் திசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பு பெற்றவர்களும் பாக்கியவான்கள் ஆவார் .


  ஒரு சாதகத்தில் உள்ள அதிகமான கிரகங்களை குரு பார்த்து அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பு பெற்றவர்களும் யோகம் மிகுந்த சாதகமாகும்.


   ஒரு ஜாதகத்தில் யோகிகளை எவ்வித பாவக்கிரகங்கள் தொடர்பில் இல்லாமல் அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய கூடிய அமைப்பை பெற்றவர்களும் யோக மிகுந்த சாதகமாகும்.


  ஒரு ஜாதகத்தில் லக்ன நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்து அவர்களுடைய எவ்வித பாவகிரக தொடர்பும் இல்லாமல் இருப்பின் அது யோகமுள்ள சாதகமாகும்.


  ஒருவர் ஜாதகத்தில் மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அதாவது தங்களுக்குள்  பரிவர்த்தனை ஆகி அதன் தசை நடக்க கூடிய அமைப்பை தொடர்ந்து பெற்றவர்களும் யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.


       குரு அணியை சேர்ந்த குரு ,சந்திரன் ,செவ்வாய் மற்றும் சூரியன் போன்றவற்றை இலக்கன நாதனாக கொண்டவர்கள் இதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பு பெற்றவர்களும் யோக மிகுந்த சாதகமாகும் .


 இதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த சுக்கிரன், சனி மற்றும் புதன் போன்றவற்றை இலக்கனாதிபதியாக உடையவர்கள் அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் யோக மிகுந்த சாதகம் ஆகும்.


  குரு அணியை சேர்ந்தவர்களுக்கு அதன் எதிர் தன்மையுள்ள சுக்கிரன் அணி சேர்ந்த கிரகங்கள் தசைகள் தொடர்ந்து வந்தால் அந்த கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3,6,10 ,11 போன்ற இடங்களில் அமர்ந்து நட்பு நிலையில் இருப்பின் அதன் தசைகள் தொடர்ந்து வந்தாலும் யோகம் மிகுந்த சாதகமாகும்.


  அதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்தவர்களுக்கு குரு அணியைச் சேர்ந்த கிரகங்களுடைய தசைகள் தொடர்ந்து வந்தாலும் அந்த கிரகங்கள் உபஜெயஸ்தானமான 3,6,10,11 ஆம்  இடங்களில் நின்று நட்பு நிலையில் இருப்பின் அதுவும் யோக மிகுந்த சாதகமாகும்.


  ஒரு ஜாதகத்தில் இலக்கன யோகருடைய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பு பெற்றவர்கள் யோகம் மிகுந்த சாதகமாகும்.


                         



இலக்கன யோகர்


    மேஷ லக்னத்திற்கு சூரியன் மற்றும் குரு தசை கள் ஆகும்.


     ரிஷப லக்கினத்திற்கு புதன் மற்றும் சனி பகவான் தசை ஆகும்.


     மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் மற்றும் சனி பகவான் ஆகும்.


     கடக லக்கினத்திற்கு செவ்வாய் மற்றும் குரு தசைகள் ஆகும்.


     சிம்ம லக்கினத்திற்கு குரு மற்றும் செவ்வாய் திசைகள் ஆகும்.


     கன்னி லக்னத்திற்கு சனி மற்றும் சுக்கிர திசைகள் ஆகும்.


     துலா லக்னத்திற்கு சனி மற்றும் புதன் திசைகள் ஆகும்.


    விருச்சக லக்கினத்திற்கு குரு மற்றும் சந்திர 

தசைகள் ஆகும்.


   தனுசு லக்கினத்திற்கு செவ்வாய் மற்றும் சூரிய தசைகள்


மகர லக்கினத்திற்கு சுக்கிரன் மற்றும் புதன் தசைகள் ஆகும்.


கும்ப லக்கினத்திற்கு புதன் மற்றும் சுக்கிரன் தசைகள் ஆகும்.


மீன லக்கினத்திற்கு சந்திரன் மற்றும் செவ்வாய் தசைகள் ஆகும்.


   ஒரு கிரகம் இருக்கக்கூடிய வீட்டு அதிபதி உச்சம் போன்ற நிலைகளில் பலம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து  நடப்பில் இருக்கக்கூடிய அமைப்பினைப் பெற்றவர்களும் யோகம் மிகுந்த ஜாதகம் ஆகும்.


  ஒரு கிரகம் யோகத்தை தரக்கூடிய நிலையில் உள்ளதா ? என்பதை ஆராய அந்த கிரகம் இடம்பெற்ற வீடு, அதன் அதிபதி ,

 அந்த கிரகத்துடன் சேர்ந்துள்ள மற்றும் பார்க்கின்ற கிரகங்கள் மற்றும் அந்த கிரகம் பெற்ற நட்சத்திர சார நாதன் ஜாதகத்தில் எங்கு அமைந்துள்ளார் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து அந்தக் கிரகம் யோகம் தருமா? தராதா ? என்பதை முடிவு செய்யப்பட வேண்டும்.அவ்வாறு யோகம் தரும் எனில் அதன் தசைகள் சாதகருக்கு அனுபவிக்க வேண்டிய உரிய வயதில் வருமா?  என்பதை பொறுத்தும் அந்த ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமா என்பது முடிவு செய்யப்படும்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  Whats app

    9715189647


     Cell

 9715189647

   7402570899


My website

  www.astroravichandransevvai.in

                             


 அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை நிலையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிட விதிகளுக்குள் ஜோதிடர் அறிய வேண்டிய விதிவிலக்குகள்.

 "ஜோதிட விதிகளுக்குள் ஜோதிடர் அறிய வேண்டிய விதிவிலக்குகள்".

                         


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      ஒரு ‌ ஜோதிடர் ஆனவர் தன்னிடம் ஜாதக பலன் பார்க்க வரும்  ஜாதகருக்கு, அவரது ஜாதகத்தினை பார்த்து பலன் சொல்லுதல் என்பது எளிதான விஷயமன்று. 


   ஜோதிடம் என்பது தாம் கற்ற அறிவினை அப்படியே மற்றவருக்கு ஒப்படைக்கும் சாஸ்திரம் அல்ல. ஒருவர் பல்வேறு சோதிட நூல்களில் இருந்து தான் பெற்ற ஜோதிட அறிவை தம்மிடம் பலம் பார்க்க வரும் நபர்கள் மற்றும் தம்மைச் சுற்றி உள்ள வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் பலவற்றின் ஜாதகங்களை  ஆய்வுசெய்தும், அனுபவ அறிவைக் கொண்டும் மற்றும் தெய்வ சக்தி கொண்டும் பலன் அளிக்கும் ஒரு உன்னத சாஸ்திரமாகும். 


     பெரும்பாலும்  ஜோதிட நூல்களில் கூறப்பட்ட விதிகளையும் மற்றும் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக்களையும் அப்படியே எடுத்துக்கொண்டு பலன் சொல்ல முற்படும் பொழுது ஜோதிடப் பலன்கள் நிச்சயம் தவறுதலாக போய்விடும்.


  பெரும்பாலான ஜோதிட நூல்கள் மற்றும் மூல நூல்களில் பாடப்பட்ட பாடல்களாக இருந்தாலும் சரி மற்றும் ஜோதிட கருத்துகளாக இருந்தாலும் சரி, அவை

  ஜோதிட வித்வான்கள் அவர்கள்  வாழ்ந்த காலத்தில் அவர்களால்  பல ஜாதகங்களை ஒப்பீடு செய்து அவர்களது அனுபவத்தை கொண்டு வெளியிட்ட கருத்தாகும். அந்த கருத்து தற்பொழுது நாம் பார்க்கும் ஜாதக பலனோடு ஒத்துப் போக வேண்டும் என்கின்ற  சாத்தியக்கூறு அல்ல.


  பல்வேறு ஜோதிட நூல்களில் இருந்து நாம் விதிகளை கற்று அவ்வாறு கற்ற விதிகளை   பயிற்சிக்கு உட்படுத்தி ,ஆய்வு நோக்கில் பலன் சொல்ல முற்படும் போது "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற வகையில் நம்மை அறியாமலே அந்த விதிகளுக்குள்  சில விதிவிலக்குகள் உருவாகி நமது மூளையில்  ஒரு புதிய ஜோதிட நுணுக்கம் ஒன்று நம்மை அறியாமலே நாம் சிந்தனையை தட்டும். அதனை தன்னுடைய அனுபவ விதியாக மாற்றி பலன் சொல்லும்பொழுது முற்றிலும் சரியான பதிலை நம்மிடம் பலன் பார்க்க வரும் நபருக்கு  தர இயலும்.


 இவ்வாறு  பலதரப்பட்ட துறைசார்ந்த நபர்களது ஜாதகத்தை ஆராய்ந்து அறியும் பொழுது கடவுள் அருளாலும்,  பெற்ற ஞானத்தாலும் நமக்குள் ஒரு சிறிய ஒரு மின்னல் உருவாகும்(sparkle).இந்த அனுபவ அறிவால் பெற்ற சிறு கீற்று ஜாதகருக்கு சரியான பலனை அளிக்க வைக்கும்.


 எனவே ஒரு நல்ல அனுபவமுள்ள சோதிடர் ஒவ்வொரு விதிகளுக்கும் விதிவிலக்கை கண்டறிந்து தம்முடைய ஞான அறிவால் தான் பெற்ற சூட்சும உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பலனளிக்கும் பழக்கம் அவர்களிடம் ஒட்டிக்கொள்ளும்.


  ஒன்பது கோள்கள் பன்னிரெண்டு ராசிகளில்  360 பாகையில் வான் வீதியில் திரும்பத் ,திரும்ப சுற்றி வந்தாலும் ஒரு கிரகம் முப்பது பாகை கொண்ட   ஒரு ராசிக்குள் ஒரு இடத்தில் சுழற்சி செய்து வந்த ஒரு கிரகம் மீண்டும் அதே ராசியில் அதே இடத்திற்கு வருவது இல்லை எனும்போது ஜாதக பலன்களும் காலத்திற்கு ஏற்றார் போலும் அடிப்படை விதிக்கு உட்பட்டு சிறு மாற்றம் செய்து அந்தக் காலத்தில் அவர் பெற்ற அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் பலாபலன் அளிப்பதற்கு பயிற்சி எடுத்தல் ஜோதிடர்களுக்கு அவசியமான ஒன்றாகும். இறுதி உண்மை என்று எந்த உண்மையும் இல்லை.


 பரந்த இந்த பிரபஞ்சத்தில் பரவியுள்ள பல்வேறு விதிகளுகளுக்குள் பரவியுள்ள காற்றை தன் அனுபவம் எனும்  வாயால் பலதரப்பட்ட நபரால் ஊதி பெரிதாக்கி பறக்கவிடப்பட்ட விஞ்ஞானபூர்வமான வித்தைதான் ஜோதிடவியல் ஆகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647

       செல்

  9715189647

    7402570899


My website

www.astroravichandransevvai.in


                       



அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சூரியன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்.

          


சூரியன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்!


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  உலக ஜீவ ராசிகள் அனைத்தும் உயிருடன் நன்றாக வாழ சூரியன் பகவான் மிக முக்கியமான காரண கர்த்தாவாக செயல்படுகிறார்.


 சூரியன் பகவானே நவ கிரகங்களில் முழு முதற் ஒளி கிரகம் ஆகும்.சூரியன் பகவான் நெருக்கமாக குறிப்பிட்ட பாகைக்குள் தன்னுடன் இணையும் கிரகத்தை அஸ்தங்கம் அடைய செய்கிறது.


  தன்னால் அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலனை தனது தசை காலங்களில் தரும்.


   ஒளி கிரகமான சூரியன் பகவானுடன் இருள் கிரகமான சனி மற்றும் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் இணைவு சூரியன் பகவானது வலிமையை குன்ற செய்கிறது.


 சூரியன் பகவான் உடன் சந்திரன் பகவான் இணையும் போது அமாவாசை யோகத்தை தருகிறது.


சூரியன் பகவானை சந்திரன் பகவான் சமசப்தமாக சந்திக்கும் வேளையில் பொளர்ணமி யோகத்தை சந்திக்கிறது.


 அமாவாசை மற்றும் பொளர்ணமி காலங்களில் ராகு மற்றும் கேது பகவான் இணையும்போது கிரகண தோஷத்தை தருகிறது.


 சூரியன் பகவான் சந்திரன் ,ராகு மற்றும் கேது பகவானை அஸ்தங்கம் அடைய செய்கிறது.புதன் பகவானுக்கும் அஸ்தங்கம் தோஷம் கிடையாது.


  சூரியன் இயற்கை ஒளி மூலம் ஆகும்.ஆனால் சந்திரன் பகவான் ஆனவர் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று இரவில் ஜொலிக்கிறது.


  "வக்ரம் அடைதல்" என்பது கிரகங்கள் இயல்புக்கு மாறான நிலை ஆகும்.


 பஞ்ச மஹா கிரகங்களில் சுக்கிரன் மற்றும் புதன் பகவான் உள் வட்ட கிரகங்கள் ஆகும்.இந்த கிரகங்கள் மட்டும் சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட பாகையில் நெருங்கி வரும் போது வக்கிரம் அடைகிறது.


 ஏனைய பஞ்ச மஹா கிரகங்களில் குரு, சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள்  இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு  வரும் போது வக்கிரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி ஆகிறது.


 சூரிய பகவான் ஜாதகத்தில் வலுப் பெறும் பொழுது தந்தைக்குக் காரகன் என்ற வகையில் ஒன்பதாம் இட அதிபதியும் வலுப்பெற்ற நிலையில் புகழ் பெற்ற தந்தை ஜாதகருக்கு அமையும்.


 சூரிய பகவான் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று அல்லது சுபத்துவம பெற்ற நிலையில் அவரை அறியாமலேயே அவருக்கு ஆணையிடும் அதிகாரம் அவரது ரத்தத்தில் ஊறி விடும். இவர்கள் மற்றொரு கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள்.


 ஒருவருடைய ஜாதகத்தில் சிம்மமும், சூரியனும் வலுப்பெற்ற நிலையில் உரிய தசா புத்தி காலங்களில் அரசு வேலை கிடைக்கும்.


  சூரிய பகவானுடன் நட்பு கிரகங்களான குரு, சந்திரன் ,செவ்வாய் மற்றும் கேது இணைவு  கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்தி நற்பலன்களை அதன் தசா புக்தி காலங்களில் தரும்.


  சூரிய பகவான் தனது அதி நட்பு கிரகமான புதன் பகவானுடன்   இணைவு "புத ஆதித்ய யோகம்" "சரஸ்வதி யோகம்" பல பட்டங்களை பெறக்கூடியவராக திகழ்வார்.


  சூரியன் பகவான் உடன் கேது பகவான் மற்றும் குரு பகவான் இணைவு ஆன்மீகத்தின் உயரிய எல்லையை அடையக்கூடிய யோகத்தை தரும்.


   சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதம் 12 ராசியையும் ஓராண்டிற்குள் சுற்றிவருகிறது .

சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் வாசம்  தொடங்கி பங்குனி மாதத்தில் மீன ராசியில் சூரிய பகவான் வந்து சேருகிறது.


 சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் உச்சம் பெற்ற நிலையினையும்,ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ஆட்சி நிலையையும் மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவான் நீசம் பெற்ற நிலையினை பெறுகின்றது.


  சூரிய பகவான் சம சப்தமாக தனக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் பாவத்தையும் பார்வை செய்கிறது.


சூரியன் பகவானுக்கு சுக்கிரன்,சனி , ராகு மற்றும் கேது பகை கிரகங்கள் ஆகும்.


 சூரியனுக்கு குரு, சந்திரன் மற்றும் செவ்வாய் நட்பு கிரகங்கள் ஆகும்.


 சூரியன் பகவான் புதன் பகவானிடம்  சம தன்மையை கொண்டுள்ளது.


  சூரியன் பகவான் தனது எதிர் தன்மை கொண்ட கிரகங்களான சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது பகவான் உடன் சேர்ந்து பாவத்தன்மை பெற்று தனது வலிமையை இழந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் மற்றும் தனித்த புதன் ஆகிய கிரகங்கள் தொடர்பு கொள்ள பாவத்தன்மை நீங்கி பலமடைந்த கிரகமாக சூரியன் செயல்படுகிறது.


  சூரியன் பகவான் பொதுவாக தலைமையேற்று நடத்தக்கூடிய பதவிகளையே ஜாதகருக்கு வழங்குவார்.அதாவது இந்திய ஆட்சிப் படியான ஐபிஎஸ் மற்றும் வைரஸ் போன்ற துறைகளில் பதவியில் அமர்வார். ராணுவம், மின்துறை பொறியாளர்,பொன் நகை வியாபாரி,கம்பளி வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட வைப்பார்.


 சூரியன் பகவான் கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களின் சார நாதனாக திகழ்கிறார்.சூரியனது தசை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.


  நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 Whats app

   9715189647

      Cell

  9715189647

    7402570899


My website

 www.astroravichandransevvai.in


By

                           


Astro Ravichandran

  M.Sc,M.A,BEd,

(Teacher & Astrologer)

Omsakthi Online astro consulting centre,

Karambakkudi,Pudukkottai (Dt)

குழந்தையின் பிறக்கும் நேரம் குறித்தல்

 குழந்தையின் பிறந்த நேரம் குறித்தல்.

                     


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    முற்காலத்தில் திருமணமான பெண்கள் எல்லா வேலைகளையும், மின்சாதன உதவியின்றி தானே  செய்யவேண்டிய கால கட்டாயம் இருந்ததாலும் மற்றும் ஆரோக்கியமான விஞ்ஞான கலப்பில்லாத உணவு முறைகள் இருந்ததாலும் மங்கையர்கள் ஆரோக்கியம் மற்றும் வீரியம் மிக்கவர்களாகவும் திகழ்ந்தார்கள். இதனால் ஒரு பெண் ஏழு ,எட்டு குழந்தைகளை  கூட தொடர்ந்து பிரசவிக்கும் வலிமை மிக்கவர்களாகவும் அதே நேரத்தில் எல்லா குழந்தைகளையுமே வீட்டிலேயே சுகப்பிரசவமாக பிறக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் அமைந்திருந்தது.


   ஆனால் இக்காலகட்டத்தில் உடலுழைப்பு இன்றி  பெண்களும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் காலம் வந்ததாலும் அவர்கள் தேவையில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாலும் பெரும்பாலானோருக்கு ஒரு குழந்தை பெறுவதே கஷ்டமான காரியமாக வந்துவிட்டது. அவ்வாறு பிறக்கும் ஒரு குழந்தையும் சுகப்பிரசவம் ஆக பிறக்கும் சூழல் அரிதாகவே காணப்படுகிறது.அதிலும் பெரும்பாலான குழந்தைகளை அறுவைசிகிச்சை செய்தே எடுக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.


  இதுபோன்ற அறுவைச் சிகிச்சை செய்து குழந்தைகளை பெற்று எடுக்கக்கூடிய கூடிய சூழல் வந்த தருணம் இக்காலகட்டத்தில் அதிகமாக இருப்பதால் பிறக்கும் நேரத்தில் வானவீதியில்  உள்ள கிரக நிலைகள் சிறப்பாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு நல்ல நேரத்தை சோதிடரிடம் சென்று குறிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.


   சோதிடர்கள்  ஒரு குழந்தை பிறக்கும் நேரம் குறித்து கேட்கும் பொழுது அன்றைய காலகட்டத்தில் காலண்டரில் உள்ள நல்ல நேரத்தை குறித்து கொடுக்கக்கூடாது.

காலண்டர் மற்றும் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள அந்த நல்ல நேரம் என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு செயலைச் செய்ய உகந்த காலமாகும்.


   குழந்தை பிறக்கும் நேரத்தை முடிவு செய்ய அவரது ஜாதக கட்டத்தில் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளையும் , ஜென்ம நட்சத்திரம் மற்றும் 

தசாபுத்திகளையும் ஆராய்ச்சி செய்து பார்க்கப்பட வேண்டும்.


   ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் குறிக்கும் போது அந்த கிரகத்தின் சஞ்சார நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


     ஒரு ஜாதக கட்டத்தில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு வீதமும், குருபகவான் ஒரு ராசியில் ஓராண்டு வீதமும், நிழல் கிரகங்களான ராகு  மற்றும் கேது ஒன்றரை ஆண்டுகள் வீதமும் சஞ்சாரம் செய்வார்கள்.

அடுத்தபடியாக செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வீதம் வாசம் செய்வார்.


   எனவே குழந்தை பிறக்கும் நேரத்தை உள்ள கிரக நிலைகளை ஆய்வு செய்து நேரம் குறிப்பது என்பது குறைந்தபட்சம் ஒரு பதினைந்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் இருக்கும். எனவே மேற்கண்ட காலங்களில் மேற்கண்ட கிரகங்கள் ஒரே இடத்தில் தான் இருக்கும்.மாற்றி அமைக்க இயலாத ஒன்று ஆகும்.


   ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் வீதம் இலக்கனம் மாறுபடும்.


   அதேபோல ராசி என்று அழைக்கப்படும் சந்திரன் பகவான் வாசம் செய்யும் காலம் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் வீதம் ஆகும்.


  சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய முக்கூட்டு கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு மாதம் வாசம் செய்வார்கள்.


 சித்திரை மாதத்தில் சூரியன் பகவான் மேஷ ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப ராசியிலும்... இவ்வாறாக பங்குனி மாதத்தில் சூரிய பகவான் மீன ராசியில் வாசம் செய்வார்.


   குழந்தை ஜெனிக்கும் நேரத்தில்  ஒரு ஜாதக கட்டத்தில் நல்ல கிரக அமைப்பு வரும்படி அமைக்க இலக்கனம், ராசி மற்றும் ஒரு மாதம் மட்டும் இடம்பெயரக்கூடிய சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை ஆராய்ந்து பிறக்கும் நேரத்தினை குறித்து கொடுக்கப்பட வேண்டும்.


  கிரகங்கள் கட்டத்தில் இடம்பெறும் போது பாவ கிரகங்கள் மற்றும் பகை கிரகங்கள் வலிமை இழந்த அமைப்பில் இருக்கும்படியும் மற்றும் சுபகிரகங்கள் மற்றும் நட்பு கிரகங்கள் வலிமை பெற்றும் அமைந்திருக்கும் படி பார்க்கப்பட வேண்டும்.


 ஒரு ராசியில் கிரக சேர்க்கை மற்றும் பார்வை போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டும்.


  குழந்தை பிறக்கும் நேரத்தில் இருந்து அவருடைய தசை அமைப்பு நல்லபடியாக யாருக்கும் ஓரளவு பாதிப்பு இல்லாமல் வருவதற்கு உகந்த ஜென்ம நட்சத்திரத்தை தேர்வு செய்யப்பட வேண்டும்.


  யாராலும் 100% நல்ல அமைப்புடைய நேரத்தை தேர்வு செய்து கொடுக்க இயலாது. ஏதாவது ஒன்றை சரிசெய்ய மற்றொன்று வந்து அங்கே இடிக்கும்.

 ஏதோ ஒரு சில குழந்தைகள் மட்டும் அந்த அமைப்பு வரும்படி கோடியில்  அல்லது லட்சத்தில் ஒருவர் பிறக்கிறார்கள்.


    நாம் என்னதான் பிறந்த நேரத்தை நம் மதிநுட்பம் கொண்டு கணித்தாலும் ஒரு குழந்தை தன்னுடைய பிறந்த நேரத்தை முன்பே முடிவு செய்து இந்த ஊரில் எந்த பெற்றோருக்கு, எந்த நாளில் ,எந்த நேரத்தில் மற்றும் எப்படி பிறக்க வேண்டும் என்பதை அவர்களது ஊழ்வினைப் பயன்கொண்டு முன்பே முடிவு செய்துகொண்டு பிறப்பு எடுக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.


நன்றி.


My website

  www.astroravichandransevvai.in


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


    செல்

  9715189647

   7402570899


   அன்புடன் 


                



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.