ஜோதிடம் தரும் பதில்தான் என்ன?
""யாருக்கு எதன் மீது நாட்டம் உண்டாகும்?"
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
முகநூலில் ஒரு வாசகர் "ஜோதிடத்தை மற்றவர்கள் மீது. ஏன் திணிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஜோதிடத்தை யார் மீதும் திணிக்க முடியாது.
ஒரு பேருந்து நிலையத்தில் எத்தனையோ பேருந்துகள் வந்து போகின்றன. ஒரு ஊருக்கு பயணப்பட்டு செல்பவருடைய கவனம் முழுவதும் எல்லா பேருந்துகளிலும் இருப்பதில்லை. தனக்குரிய பேருந்து வரும்போது அதனைக் கண்டு ஏறி பிரயாணம் செய்கிறார்கள். அதேபோல முகநூலில் பலதரப்பட்ட விஷயங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் எழுதுகிறார்கள். விருப்பமுடையவர்கள் மற்றும் அதில் ஆர்வம் உடையவர்கள் அதனை படித்து விருப்ப குறியீடு அல்லது பின்னூட்டம் இடுகிறார்கள். மற்றவர்கள் அதனை ஸ்கிப் செய்து விட்டுப் போகிறார்கள்.
பெரும்பாலும் முகநூலில் ஜோதிட பதிவுகளை விரும்பி படித்து விருப்ப குறியீடு மற்றும் பின்னூட்டம் இடுபவர்களுடைய ஜாதகத்தில்
புதன் பகவான் வலிமை பெற்றதாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் சனி, செவ்வாய், மற்றும் ராகு போன்ற பாவர் கலப்பின்றி இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தொடர்பு பெற்று சுபத்துவம் ஆன நிலையில் அல்லது மூலதிரிகோணம்,
உச்சம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் ஸ்தான பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷம் பெறாமல் கேந்திர, கோணங்களில் நின்று சுபத்துவம் பெற்ற நிலையில் உள்ள நபர் ஜோதிட பதிவுகளை விரும்பி படிப்பவராகவும் அல்லது முழு நேர தொழில் முறை சோதிடர் ஆகவும் இருப்பர்.
எவரொருவர் ஜாதகத்தில் ஆன்மீக கிரகம் குரு ,சனி, கேது ஆகிய மூன்றும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்று புதன் பகவானும் வலிமை பெற்ற நிலையில் சந்திர கேந்திரத்தில் இருப்பின் அவருக்கு ஜோதிடம் தொடர்பான சூட்சும உண்மைகள் அவரது ஞானதிருஷ்டியால் உணர்வார்.
அதேநேரத்தில் எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு, சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் நிழல் கிரகமான ராகு சேர்ந்து பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவவானால் பார்க்கப்படும் அமைப்பினை பெற்றவர்கள் ஜோதிடத்தைப் பழிப்பவராகவும் மற்றும் விதண்டாவாதம் ஆன கேள்வி கேட்பவராகவும் இருப்பர்.
கிரகங்கள் யாரை பாதிப்பதில்லை? என வினா எழுப்பினால் மனதளவில் எண்ணமற்ற நிலையில் மனதைக் கடந்துள்ள நிலையில் உள்ள ஞானிகளை கிரகங்கள் பாதிப்பதில்லை.
மற்ற படி சோதிடத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரபஞ்சத்தில் இந்த கிரக அதிர்வுகள் தாக்கம் உண்மையில் நிச்சயம் உங்களை வந்தடையும்.
ஒருவரது ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவம் ஆன நிலையில் உள்ளதோ அது தொடர்புடைய அதாவது அந்த கிரக தொடர்புடைய ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களுக்கு ஏற்ப ஒரு நபரின் நாட்டம் நிச்சயம் அவரை வந்தடையும்.
அவரது மனதில் எழும் மாற்றத்திற்கு ஏற்ப அந்த தசாபுத்திகள் வந்து ஒத்துழைக்கும் போது அவர் அந்தத் துறையில் ஈடுபட்டு அத்துறை தொடர்பான விஷயங்களில் கொடி கட்டி பறப்பார்.
ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தொழில் அமையும் என்றாலும் அந்த கிரகத்தின் சுபத்துவ வலிமைக்கு ஏற்றார்போல தொழில் அமையும் .
அதே போல சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் பலம் அடைந்து அதிகமான சுபத்துவ நிலையில் ஒரு நபர் ஜோதிடம் தொடர்பான நாட்டம் ஏற்பட்டு முறையான குரு அமைந்து அதன் மூலமாக அந்தத்துறையில் அவர் சாதிப்பார்.
நவக்கிரகங்களும் அவை தரும் தொழில்களும்.
உதாரணமாக
செவ்வாய் பகவானுக்கு காரக தொழிலான டாக்டர் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள்,
போலீஸ் ,ராணுவம், கசாப்புக் கடைக்காரர் சமையல்காரர் ,
வீடு கட்டித் தருபவர், விவசாய மேற்பார்வையாளர் இது போன்ற இன்னும் பல தொழில்கள் உண்டு.
செவ்வாய் பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மருத்துவராகவும் ,
அதற்கு அடுத்த நிலையில் மருத்துவம் சார்ந்த படிப்பைப் படிப்பவராகவும், சுபத்துவம் குறைந்த நிலையில் சமையல்காரர் ஆளாகவும் வேலை பார்ப்பார் ஆகும்.
சுபத்துவம் ஆன செவ்வாய் பகவானை பெற்றவர்கள் பொது நலத்திற்காக பிறரை சுட்டு வீழ்த்த கூடிய போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரியாக வேலை பார்ப்பார் . அதேநேரத்தில் பாவத்துவமான நிலையில் கறி வெட்டும் கசாப்புக் கடைக்காரராக வேலை பார்ப்பார் அல்லது பலரை சுட்டு வீழ்த்தும் ரொளடியாகவும், தீவிரவாதியாகவும் திகழ்வார்.
புதன் பகவானுக்கு கணிதம் பேராசிரியர், புள்ளியியல் நிபுணர், எழுத்தாளர் ,பேச்சாளர், கவிஞர், இசை அமைப்பாளர், செய்திகளை சேகரிப்பவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சோதிடர் ,கணிப்பொறி நிபுணர், ஆலோசனை வழங்கும் மந்திரி இது போன்ற பல தொழில்கள் அமையும்.
குருபகவானுக்கு ஆசிரியர் பேராசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, போதகர், நகை கடை விற்பனையாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் போன்றவை அடங்கும்.
சுக்கிர பகவானுக்கு கேட்டரிங், அழகு கலை நிபுணர், நடிகர் ,நாட்டியம், ஆர்ட் டைரக்டர், நுண்கலை வித்தகர், சிற்பம், சிலை மற்றும் ஓவியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், உணவு விடுதி மற்றும் ஹோட்டல் நடத்துபவர், பலசரக்கு கடை பல்பொருள் அங்காடி
சனிபகவானுக்கு
பாவத்துவமான நிலையில்
ஆள் அடிமை, அலுவலகங்களில் வாட்ச்மேன்,, இரவு காவலர் போன்ற கீழ்மட்ட பணிகள், சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய தொழில்கள் அதாவது சாக்கடை அள்ளுதல் அதாவது செப்டிக் டாங் வேலை, கழிப்பறை,
பெட்ரோல்,, டீசல் கடைகளில் வேலை,
உடல்முழுவதும் அழுக்காக்கி கொள்ளக்கூடிய மெக்கானிக் ,
கிரீஸ், மசகு போன்றவற்றை அபப்அபி கொள்ளக்கூடிய வேலை, ஒருவர் வேலைக்கு போட்டுக்கொண்டு செல்கின்ற உடையை அவுத்து வைத்துவிட்டு பபிரவுன் கலர் உடைய வேஏறற்றுடடை அணிந்து பார்க்கக்கூடிய வேலைகள், மிசினரி இயக்கும் வேலை, குடிக்க இயலாத திரவங்களை சுமந்து செல்லுதல், மதுபான கடைகளில் வேலை ,பார்களில் வேலை போன்றவை.
சனிபகவான்
சுபத்துவமான நிலையில் பொறியியல் வல்லுநர், பஞ்சாயத்து தலைவர்,
நீதி வழங்கக்கூடிய வழக்கறிஞர் போன்ற தொழில்கள் அமையும்.
சந்திர பகவானுக்கு குடிக்கக்கூடிய திரவ வகையைச் சேர்ந்த பால், குடிநீர், கூல் ட்ரிங்ஸ் ஐஸ்கிரீம் போன்றவை.
கடல்வாழ் உயிர்கள் வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, வெண்ணிறமான அரிசி கடை போன்றவை அடங்கும்.
சூரிய பகவானுக்கு சூரியன் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் போன்ற உயரிய பதவியில் அமரக்கூடியவராக யோகம் அமையும் அல்லது ஜனாதிபதி, பிரதமர் ,முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் போன்ற ஏனைய அரசு பதவிகள் சூரியனுடைய வலிவுக்கு ஏற்றார்போல அடுத்த அடுத்த நிலையில் அமையும்.
சூரிய பகவான் மற்றும் சிம்ம லக்னமும் வலிமையடைந்து இருந்தால் அதற்குரிய தசாபுத்திகள் வரும்பொழுது அரசின் உயரிய பதவிகளிலும் அல்லது அரசாட்சியின் உயரிய பதவிகளிலும் அமரக் கூடிய யோகம் அமையும்.
சூரிய பகவானுடைய வலிமைக்கு ஏற்ப அடுத்த பதவியான தாசில்தார் ,ரெவின்யு இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகள் அமையும்.
சூரியனுக்கு பொதுவாக தலைமை ஏற்று நடத்தக்கூடிய பண்பே மேலோங்கி நிற்கும் எலக்ட்ரிக்கல் கடைகள் வைத்து நடத்த கூடிய யோகமும் அமையும்.
ராகு பகவானை சுபத்துவமான. விலையில் பெற்றவர்கள் அதன் தசை காலங்களில் வெளிநாடு செல்லுதல், ஷேர் மார்க்கெட்டில் ஈடு,படுதல், லாட்டரி, குதிரை ரேஸ் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், கணிப்பொறி தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்,, இணையத்தை பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகம் செய்தல், மருந்து பொருட்கள் மூலம் பொருளீட்டல் போன்றவையாகும்.
கேது பகவானை சுபத்துவம் ஆன பெற்றவர்கள் சோதிடர் குறி சொல்லும் பூசாரி, பேய் பிசாசு விரட்டுதல், நல்வாக்கு சொல்பவர், கோவில்களில் அருகே கடை வைத்து நடத்துபவர் போன்றவை.
எனவே ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அது சார்ந்த எண்ணங்களும் மற்றும் செயல்களும் மனதில் தோன்றி அந்த கிரகம் தொடர்பான தொழில்களில் ஆர்வம் உண்டாகி அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவ நிலையில் அதன் தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் ஈடுபட்டு அதிக செல்வ வளம் பெருக்கம் ஏற்படும்.
அதனால் எந்த ஒரு தனிநபரும் யார் மீதும் அவருடைய எண்ணத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட வைக்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒருவர் மீது திணிக்கவும் முடியாது. எல்லாம் இறைவனின் பிராப்தம் ஆகும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment