Sunday 31 October 2021

ஜோதிடம் தரும் பதில் தான் என்ன? " யாருக்கு எதன்மீதும் நாட்டம்"

 ஜோதிடம் தரும் பதில்தான் என்ன? 

""யாருக்கு  எதன் மீது நாட்டம் உண்டாகும்?"


                               


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   முகநூலில் ஒரு வாசகர் "ஜோதிடத்தை மற்றவர்கள் மீது. ஏன் திணிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.


  ஜோதிடத்தை யார் மீதும் திணிக்க முடியாது.

 ஒரு பேருந்து நிலையத்தில் எத்தனையோ பேருந்துகள் வந்து போகின்றன. ஒரு ஊருக்கு பயணப்பட்டு செல்பவருடைய கவனம் முழுவதும் எல்லா பேருந்துகளிலும் இருப்பதில்லை. தனக்குரிய பேருந்து வரும்போது அதனைக் கண்டு ஏறி பிரயாணம் செய்கிறார்கள். அதேபோல முகநூலில் பலதரப்பட்ட விஷயங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் எழுதுகிறார்கள். விருப்பமுடையவர்கள் மற்றும் அதில் ஆர்வம் உடையவர்கள் அதனை படித்து விருப்ப குறியீடு அல்லது பின்னூட்டம் இடுகிறார்கள். மற்றவர்கள் அதனை ஸ்கிப் செய்து விட்டுப் போகிறார்கள்.


  பெரும்பாலும் முகநூலில் ஜோதிட பதிவுகளை விரும்பி படித்து விருப்ப குறியீடு மற்றும் பின்னூட்டம் இடுபவர்களுடைய ஜாதகத்தில் 

புதன் பகவான்  வலிமை பெற்றதாக இருக்கும்.


  ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் சனி, செவ்வாய், மற்றும் ராகு போன்ற பாவர் கலப்பின்றி இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள்  தொடர்பு பெற்று சுபத்துவம் ஆன நிலையில் அல்லது மூலதிரிகோணம்,

உச்சம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் ஸ்தான பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷம் பெறாமல் கேந்திர, கோணங்களில் நின்று சுபத்துவம் பெற்ற நிலையில் உள்ள நபர்  ஜோதிட பதிவுகளை விரும்பி படிப்பவராகவும் அல்லது முழு நேர தொழில் முறை சோதிடர் ஆகவும் இருப்பர்.


  எவரொருவர் ஜாதகத்தில் ஆன்மீக கிரகம் குரு ,சனி, கேது ஆகிய மூன்றும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்று புதன் பகவானும் வலிமை பெற்ற நிலையில் சந்திர கேந்திரத்தில் இருப்பின் அவருக்கு ஜோதிடம் தொடர்பான சூட்சும உண்மைகள் அவரது ஞானதிருஷ்டியால் உணர்வார்.


   அதேநேரத்தில் எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு, சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் நிழல் கிரகமான  ராகு சேர்ந்து பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவவானால் பார்க்கப்படும் அமைப்பினை  பெற்றவர்கள் ஜோதிடத்தைப் பழிப்பவராகவும் மற்றும் விதண்டாவாதம் ஆன கேள்வி கேட்பவராகவும் இருப்பர்.


  கிரகங்கள் யாரை பாதிப்பதில்லை? என வினா எழுப்பினால் மனதளவில் எண்ணமற்ற நிலையில் மனதைக் கடந்துள்ள நிலையில் உள்ள ஞானிகளை கிரகங்கள் பாதிப்பதில்லை.


 மற்ற படி சோதிடத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரபஞ்சத்தில் இந்த கிரக அதிர்வுகள் தாக்கம் உண்மையில் நிச்சயம் உங்களை வந்தடையும்.


  ஒருவரது ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவம் ஆன நிலையில் உள்ளதோ அது தொடர்புடைய அதாவது அந்த கிரக தொடர்புடைய ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களுக்கு ஏற்ப ஒரு நபரின் நாட்டம் நிச்சயம் அவரை வந்தடையும்.


  அவரது மனதில் எழும் மாற்றத்திற்கு ஏற்ப அந்த தசாபுத்திகள் வந்து ஒத்துழைக்கும் போது அவர் அந்தத் துறையில் ஈடுபட்டு அத்துறை தொடர்பான விஷயங்களில் கொடி கட்டி பறப்பார்.


   ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தொழில் அமையும் என்றாலும் அந்த கிரகத்தின் சுபத்துவ வலிமைக்கு ஏற்றார்போல தொழில் அமையும் .


  அதே போல சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் பலம் அடைந்து அதிகமான  சுபத்துவ நிலையில்  ஒரு நபர்  ஜோதிடம் தொடர்பான நாட்டம் ஏற்பட்டு முறையான குரு அமைந்து அதன் மூலமாக அந்தத்துறையில் அவர் சாதிப்பார்.


நவக்கிரகங்களும் அவை தரும் தொழில்களும்.


  உதாரணமாக

 செவ்வாய் பகவானுக்கு காரக தொழிலான டாக்டர் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள்,

 போலீஸ் ,ராணுவம், கசாப்புக் கடைக்காரர் சமையல்காரர் ,

வீடு கட்டித் தருபவர், விவசாய மேற்பார்வையாளர் இது போன்ற இன்னும் பல தொழில்கள் உண்டு.

செவ்வாய் பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மருத்துவராகவும் ,

அதற்கு அடுத்த நிலையில் மருத்துவம் சார்ந்த படிப்பைப் படிப்பவராகவும், சுபத்துவம் குறைந்த நிலையில் சமையல்காரர் ஆளாகவும் வேலை பார்ப்பார் ஆகும்.


   சுபத்துவம் ஆன செவ்வாய் பகவானை பெற்றவர்கள் பொது நலத்திற்காக பிறரை சுட்டு வீழ்த்த கூடிய போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரியாக வேலை பார்ப்பார் . அதேநேரத்தில் பாவத்துவமான நிலையில் கறி வெட்டும் கசாப்புக் கடைக்காரராக வேலை பார்ப்பார் அல்லது பலரை சுட்டு வீழ்த்தும் ரொளடியாகவும், தீவிரவாதியாகவும் திகழ்வார்.


  புதன் பகவானுக்கு கணிதம் பேராசிரியர், புள்ளியியல் நிபுணர், எழுத்தாளர் ,பேச்சாளர், கவிஞர், இசை அமைப்பாளர், செய்திகளை சேகரிப்பவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சோதிடர் ,கணிப்பொறி நிபுணர், ஆலோசனை வழங்கும் மந்திரி இது போன்ற பல தொழில்கள் அமையும்.


 குருபகவானுக்கு ஆசிரியர் பேராசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, போதகர், நகை கடை விற்பனையாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் போன்றவை அடங்கும்.


  சுக்கிர பகவானுக்கு  கேட்டரிங், அழகு கலை நிபுணர், நடிகர் ,நாட்டியம், ஆர்ட் டைரக்டர், நுண்கலை வித்தகர், சிற்பம், சிலை மற்றும் ஓவியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், உணவு விடுதி மற்றும் ஹோட்டல் நடத்துபவர், பலசரக்கு கடை பல்பொருள் அங்காடி


சனிபகவானுக்கு  

பாவத்துவமான நிலையில்

ஆள் அடிமை, அலுவலகங்களில் வாட்ச்மேன்,, இரவு காவலர் போன்ற கீழ்மட்ட பணிகள், சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய தொழில்கள் அதாவது சாக்கடை அள்ளுதல் அதாவது செப்டிக் டாங் வேலை, கழிப்பறை,

பெட்ரோல்,, டீசல் கடைகளில் வேலை,

உடல்முழுவதும் அழுக்காக்கி கொள்ளக்கூடிய மெக்கானிக் ,

கிரீஸ், மசகு போன்றவற்றை அபப்அபி கொள்ளக்கூடிய வேலை, ஒருவர் வேலைக்கு போட்டுக்கொண்டு செல்கின்ற உடையை அவுத்து வைத்துவிட்டு பபிரவுன்  கலர் உடைய  வேஏறற்றுடடை அணிந்து பார்க்கக்கூடிய வேலைகள், மிசினரி இயக்கும் வேலை, குடிக்க இயலாத திரவங்களை சுமந்து செல்லுதல், மதுபான கடைகளில் வேலை ,பார்களில் வேலை போன்றவை.


சனிபகவான்

 சுபத்துவமான நிலையில் பொறியியல் வல்லுநர், பஞ்சாயத்து தலைவர்,

 நீதி வழங்கக்கூடிய வழக்கறிஞர் போன்ற தொழில்கள் அமையும்.


   சந்திர பகவானுக்கு குடிக்கக்கூடிய திரவ வகையைச் சேர்ந்த பால், குடிநீர், கூல் ட்ரிங்ஸ் ஐஸ்கிரீம் போன்றவை.

கடல்வாழ் உயிர்கள் வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, வெண்ணிறமான அரிசி கடை போன்றவை அடங்கும்.


    சூரிய பகவானுக்கு சூரியன் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் போன்ற உயரிய பதவியில் அமரக்கூடியவராக யோகம் அமையும் அல்லது ஜனாதிபதி, பிரதமர் ,முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் போன்ற ஏனைய அரசு பதவிகள் சூரியனுடைய வலிவுக்கு ஏற்றார்போல அடுத்த அடுத்த நிலையில் அமையும்.


சூரிய பகவான் மற்றும் சிம்ம லக்னமும் வலிமையடைந்து இருந்தால் அதற்குரிய தசாபுத்திகள் வரும்பொழுது அரசின் உயரிய பதவிகளிலும் அல்லது அரசாட்சியின் உயரிய பதவிகளிலும் அமரக் கூடிய யோகம் அமையும்.


   சூரிய பகவானுடைய வலிமைக்கு ஏற்ப அடுத்த பதவியான தாசில்தார் ,ரெவின்யு இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகள் அமையும்.


சூரியனுக்கு பொதுவாக தலைமை ஏற்று நடத்தக்கூடிய பண்பே மேலோங்கி நிற்கும் எலக்ட்ரிக்கல் கடைகள் வைத்து நடத்த கூடிய யோகமும் அமையும்.


 ராகு பகவானை சுபத்துவமான. விலையில் பெற்றவர்கள் அதன் தசை காலங்களில் வெளிநாடு செல்லுதல், ஷேர் மார்க்கெட்டில் ஈடு,படுதல், லாட்டரி, குதிரை ரேஸ் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், கணிப்பொறி தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்,, இணையத்தை பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகம் செய்தல், மருந்து பொருட்கள் மூலம் பொருளீட்டல் போன்றவையாகும்.


 கேது பகவானை சுபத்துவம் ஆன பெற்றவர்கள் சோதிடர் குறி சொல்லும் பூசாரி, பேய் பிசாசு விரட்டுதல், நல்வாக்கு சொல்பவர், கோவில்களில் அருகே கடை வைத்து நடத்துபவர் போன்றவை.


   எனவே ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அது சார்ந்த எண்ணங்களும் மற்றும் செயல்களும் மனதில் தோன்றி அந்த கிரகம் தொடர்பான தொழில்களில் ஆர்வம் உண்டாகி அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவ  நிலையில் அதன் தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் ஈடுபட்டு அதிக  செல்வ வளம் பெருக்கம் ஏற்படும்.


 அதனால் எந்த ஒரு தனிநபரும் யார் மீதும் அவருடைய எண்ணத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட வைக்க முடியாது.

 ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒருவர் மீது திணிக்கவும் முடியாது. எல்லாம் இறைவனின் பிராப்தம் ஆகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647

       செல்

  9715189647

‌. 7402570899

                             


அன்புடன்

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகம் பெற முடியுமா?

 மனைவியிடம் நீண்ட தாம்பத்ய சுகம் பெற முடியுமா?

                             


   செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவருக்கு தாம்பத்திய சுகத்தை அள்ளித் தரக்கூடிய கிரகம் எதுவாக இருக்க வேண்டும்?  என ஆராய்ந்து பார்த்தால் நவகிரகங்களில் சுக்கிரன் பகவான் மற்றும் செவ்வாய் பகவானுக்கு உண்டு.


  குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பலம் இழக்கக்கூடாது.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் நீசம், அஸ்தமனம் , வக்கிரம் மற்றும் பகை போன்ற நிலைகளில் நின்று வலுவிழந்து நிற்கக்கூடாது.


   மேலும் சுக்கிரனுடன் சனி ,ராகு போன்ற பாவ கிரகங்கள் நெருக்கமான நிலையில் இணைந்து இருக்கவும் கூடாது.


    மேற்கண்ட வகையில் சுக்கிரன் பலமிழந்த நிலையில் அந்த சுக்கிர பகவான் தன் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், போன்றவற்றின் தொடர்பு பெரும் பொழுது அவை மீண்டும்  பலம் அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


    ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனம் அடைந்த நிலையில் அவர் மனைவியின் மூலமாக நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுகிறார்.


   ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை மனைவியின் மூலம் பெறக்கூடிய அமைப்பை தெரிந்து கொள்ள சுக்கிரபகவான் தவிர காம திரிகோணமான மூன்றாம் இடம் , ஏழாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


   ஒருவரது ஜாதகத்தில் மூன்றாமிடம் அவர் செயல்படும் காம வீரியத்தையும்,

 ஏழாமிடம் கணவன் மனைவி உறவு நிலையையும் மற்றும் அவர்களது கற்பு நிலையையும் காட்டுகிறது. மேலும் 12-ஆம் இடம் ஒருவருக்கு நித்திரை சுகம் காமசுகம் போன்றவற்றில் திருப்தி அடையும் நிலையை தரும்.


  மேற்கண்ட மூன்று ஸ்தான அதிபதிகளையும் அவற்றில் இடம்பெறக்கூடிய கிரகங்களையும் பொருத்தம் ஒருவர் தாம்பத்திய சுகத்தை அல்லது காமசுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகத்தை அளந்து அறிய முடியும்.


  எனவே ஒருவர் தனது மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவானும் மேற்கண்ட 

3 ,7, 12-ஆம் இடங்கள் நல்ல நிலையில் நிற்க வேண்டும்.


  குறிப்பாக ஒருவர் படுக்கை சுகத்தை அனுபவிக்க அவரது சாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் மிக முக்கியமானதாகும். அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின்படி  ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்கின்ற பொழுது புதன் நீசம் அடைந்து நிற்கிறது. அதாவது எவரொருவர் மனதில் காமம் மிகுதியாக இருக்கும் பொழுது அறிவு குன்றும் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டுகிறது.


  நித்திரை சுகம் மற்றும் படுக்கை சுகம் ஆகிவற்றை அனுபவிக்க ஒருவருடைய  ஜாதகத்தில் 12ஆம் இடம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


  ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் சுபத்துவம் பெற்று களத்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்படாத நிலையில் இருப்பின் அவர் மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை பெற்றவராவார்.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவானுடன் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெற்று பலவீனம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது காம திரிகோண ஸ்தானமான மூன்று,,ஏழு மற்றும் -பன்னிரெண்டாம் இடத்தையும் கவனிக்கப்பட. வேண்டும்.


   மேற்கண்ட மூன்று இடங்களில் சனி,ராகு செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறும் பொழுது அல்லது அந்த வீட்டின் அதிபதிகளுடன்  தொடர்பை பெரும்பொழுது பிறகு களத்திரகாரகன் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் பாவர்களுடன் தொடர்பை பெரும்பொழுது நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுவார்.


   களத்திரகாரகன் சுக்கிரனும் மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் நல்ல நிலையில் இருக்க திருமணமான புதிதில் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி மற்றும். மறைவிடஆறு மற்றும் எட்டாம் ஸ்தானத்துடன்  கூடிய தசை நடப்பில் இருப்பினும் அதையும் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் தடை உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்; 9715189647


செல் : 7402570899

             9715189647


                         



அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

 ஜாதகத்தில் லக்கனம் மற்றும் லக்னாதிபதியின் முக்கியத்துவம் என்ன?


                                          

                                     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தினை பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காலபுருஷ தத்துவத்தின்படி மேஷலக்னம் முதலாவது இலக்கனமாக கொண்டு , நிறைவான இலக்கனமாக மீனம் வைக்கப்படுகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இலக்கனத்தை "உயிர்" என்பார்கள். ராசியை "உடல்" என்று அழைக்கப்படுகிறது. உயிரின்றி உடல் வாழ முடியாது. வெறும் உயிரை மட்டும் கொண்டு ஒரு உயிர் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடியாது. உடலின்றி உயிர் வாழ்ந்தால் அதை ஆவி பேய் என்று அழைத்து விடுவார்கள்.


 உடலும், உயிரும் போல லக்னமும், ராசியும் அவசியமான ஒன்றாகும்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை "ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அவரது ஜென்ம தசை கண்டறியப்படுகிறது. ஆனால் அந்த ஜென்ம தசை யோக தசையா? அல்லது அவயோகத்தை அள்ளித்தரும் தசையா? என்பதை இலக்கனத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.


    ஜாதகத்தில் நடைபெறும் ஜென்ம தசையானது பாவத் பாவ விதிப்படி சொந்த வீட்டிற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது  என்பதையும், லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டும்.


 அந்த தசை நாதன் எந்தப் பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களுக்கு  பலாபலன் தரப்படுகிறது.


 இரண்டு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் முதலில் எந்த பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளதோ அதன் பலாபலன் முதலில் நடக்கும் .

பிறகுதான் மற்ற ஆதிபத்திய  பலனைத் தரும்.


   பன்னிரெண்டு  ராசி கட்டங்களில் இலக்கனமும் அதன் அதிபதியும் பலமடைந்து நின்றாலே, ஏனைய பிற அமைப்புகள் பலம் பெறவில்லை என்றாலும் அதாவது வலு பெறவில்லை என்றாலும் அந்த சாதகர் தன் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம். ஆனால் இலக்கனத்தை தவிர ஏனைய பிற கட்டங்கள் வலுப்பெற்று இலக்கனமும் அதன் அதிபதியும் பலம் இழந்த சூழலில் எவ்வளவுதான் யோகங்கள் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை சாதகருக்கு இருக்காது.


  ஒருவர் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்து அதன் தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது இலக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் இழந்துள்ள  சூழலில் அந்த யோகம் ஜாதகருக்குத் ஜொலிக்காது.


  லக்னத்திலேயே லக்னாதிபதி ஆட்சி பெறுவது நல்லது என்று கூறினாலும் லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருந்து லக்கனத்தில் வலுப்பெற்று நிற்பது நல்லது அல்ல.


  பொதுவாக லக்னாதிபதி 6 ,8 ,12 போன்ற இடங்களில் மறைவதோ அல்லது லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இணைவது நல்லதல்ல எனக் கூறினாலும் லக்னாதிபதியானவர் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை லக்னாதிபதியாக கொண்ட மகர, கும்ப மற்றும் மேஷ, விருச்சிக லக்கனங்களுக்கு லக்கனத்திலே நின்று ஆட்சி பெறுவதோ அல்லது உச்ச வீடுகள் நின்று பலம் பெறுவதோ நல்லதல்ல. 


     லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருப்பின்  உதாரணமாக 

மகர, கும்பம் லக்கனங்களுக்கு சனி, செவ்வாய் லக்னத்தில் இருந்து ஆட்சி பெறுவதைவிட மறைவிடங்களில் நின்று மறைமுகமாக வலுப்பெற்று இருப்பதே நல்லது ஆகும்.


  பொதுவாக லக்னாதிபதி மறைவிட ஸ்தானமேறி நிற்பின் அவர்கள் வாழ்வு சிறக்காது .வாழ்க்கையில் அடிப்படையான தேவைக்கே போராடி கஷ்டப்பட்டு வாழவேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.


 ஆனால் அதே நேரத்தில் லக்னாதிபதி மறைவிடங்களில் நின்றாலும், நீசம் அல்லது அஸ்தமனம் அடைந்திருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவர்களது தொடர்பினை பெறுகின்றபொழுது சுபத்துவ நிலையை அடைந்து அவை அப்படியே நேர்வழி பெற்று நல்ல பலனை சாதகருக்கு தந்துவிடும்.


  பொதுவாக லக்கனத்தில் பாவக்கிரகங்கள் இடம் பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அல்லது பார்வை அல்லது சேர்க்கை பெறும் பொழுதும் அவை நல்லதாகும்.


     இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் லக்னாதிபதி பாவ கிரகங்களாக இருப்பின் லக்கனத்தில் இடம்பெறாமல் இருப்பது நல்லது. லக்கனாதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து அவை இலக்கனத்தில் இடம்பெற்று இலக்கனத்தை வலுப்படுத்துகிறது.


      லக்கனத்தில் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் இருப்பது ஜாதகருக்கு முரட்டுத் தனத்தை தரும். செவ்வாயுடன்  ராகு சேர்ந்து சனி பார்க்கின்ற அமைப்பை பெற்று இருப்பின் சாதகர் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற குணம் உடையவராக இருப்பார் பிற உயிர்களை வஞ்சித்து ரசிக்கும் குணமுடையவராக திகழ்வார்.


   பொதுவாக லக்கனத்தில் இருள் கிரகமான சனி பகவானும் மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது இடம்பெறாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இடம் பெற்றிருப்பின் அதனை இயற்கை சுப கிரகங்கள் பார்த்து சுபத்துவம் படுத்தினால் கெடு பலனை தருவதில்லை.


 பொதுவாக இலக்கனம் பலம்பெற லக்னத்திற்கு இருபுறமும் (2,12)  இயற்கை சுப கிரகங்கள் இருப்பது "சுப கர்த்தாரி யோகம்" ஆகும்.இவ்வாறு இருப்பின் சாதகர் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ கூடிய யோக அமைப்பு உருவாகும்.


      லக்கனத்திற்கு இரு புறமும் இயற்கை பாவ கிரகங்கள் இடம் பெறுவது அவை "பாபகர்த்தாரி யோகம்" எனப்படும். இதனால் சாதகர் மிகவும் கீழான நிலையில் போராடி வாழ வேண்டிய சூழல் உருவாகும்.வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் மேற்கண்ட பலன் நடைபெறும்.


  லக்னாதிபதி  லக்கனத்தில் அல்லது கேந்திர கோணங்களில் நின்று உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெறுவது நல்லது எனினும் பாவ கிரகங்களாக இருப்பின் மறைமுக இடங்களில் நின்று உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வழி பெறாமல் மறைமுகமாக வலுப் பெறுவது நல்லது. ஆகும்.


  லக்னாதிபதி நீசம் பெற்றிருந்தாலும், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்து இருந்தாலும் லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெறும்போது லக்கினாதிபதி ஆனவர் மறைமுகமாக நேர் வலுப்பெறுகிறது.


  லக்கனத்தில் குரு மற்றும் புதன் பகவான் நிற்கும் பொழுது அவை திக் பலம் பெறுகிறது.

லக்னாதிபதியாக

 குரு மற்றும் புதன் பகவானாக இருந்து ஏழாம் இடத்தில் இடம்பெறும் போது அவை நிஷ் பலம் பெறுகிறது.


  ஜென்ம லக்கனம் எந்த நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் அதன் பலாபலன் அமைகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

   9715189647

     செல்

  9715189647

    7402570899

                                        


அன்புடன் 

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

((M..Sc,M.A,BEd)

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

 ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய?...
                                     


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நமது ஜாதகத்தில் ஏதாவது ஒரு யோகம் அமைந்து அது நம் வாழ்வின் தக்க  தருணத்தில் வந்து  நமது பொருளாதார அந்தஸ்தினை உயர்த்தி  விடாதா ?!" என்று ஏங்குபவர்கள் பல பேர் உண்டு.


  இவ்வாறு ஏங்குபவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பயனுள்ள பதிவாக அமையும்.


  ஒரு மனிதன் இவ்வுலக வாழ்வை சுகபோகமாக அணுபவிப்பதற்கும், வாழ்வின் இளவயதில் கஷ்டப்பட்டு பிறகு முன்னேறுவதற்கும் மற்றும்  பிறந்ததில் இருந்து கடைசி வரை கஷ்டப்படுவதற்கும் காரணமாக அமைகின்ற ஒன்று ஊழ்வினைப் பயன்   என்ற உண்டு. இதனை வள்ளுவர் தனது "ஊழ்" என்ற அதிகாரத்தில் அழகுபட விளக்கி இருப்பார்.


  ஊழ் என்பது தலைவிதி என்று பரவலாக பேசப்படுகிறது. அதாவது பிறக்கும்போதே பிரம்மன் தலையில் எழுதிவிட்டான் . இதனைதான் திருவள்ளுவர் 

"வகுத்தான் வகுத்த வகை" அல்லது "வல்லான் வகுத்த வழி" என்றும் குறிப்பிடுகிறார். இங்கு வகுத்தான் மற்றும் வல்லான் என்று குறிப்பிடுவது விதியின் கர்த்தா(இறைவன்) ஆகும்.


   படைக்கும் போதே பிரம்மா தலையில் எழுதி விட்டது. எல்லாம் தலைவிதிப்படி தான் நடக்கும் என்றால் பிறகு படிப்பது எதற்கு? 

கடவுள் வழிபாடு எதற்கு?

முயற்சி செய்வது எதற்காக?

 எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். பிறக்கும்போதே தலையில் எழுதியதை மாற்ற முடியாது என்றால் அதற்குப் பிறகு மனிதன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீண் என்றுதானே அர்த்தம். இருப்பினும் விதியே என்று யாரும் இருந்து விட முடியாது.

 அந்த விதியையும் மாற்றும் வல்லமை மதிக்கும் உண்டு .


  "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".அதனால் விதியை எண்ணி முடங்கி விடக்கூடாது. முடங்கி கிடந்தால் சிலந்தி கூட உன்னை வலை பிடிக்கும்.


  சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து கொண்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் .

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.


  ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமாக அமைய வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலமடைந்து வேறு எந்த விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பங்கம் அடையாத  அந்த தசை உரிய காலத்தில் வரும் பொழுது அதிலும் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தசைகள் யோக தசையாக அமையும் போது லக்கினாதிபதியும் வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் அது யோகமான ஜாதகம் ஆக அமைந்து விடுகிறது.


   ஒருவர் ஜாதகத்தில் இலக்கனமும், ராசியும் மற்றும் அதன் அதிபதிகளும் பாவ தன்மை மற்றும் பலவீனம் அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று லக்னத்தையும், ராசியையும்  மற்றும் அதன் அதிபதிகளையும்  குரு பார்த்த அமைப்பிலுள்ள ஜாதகம் ஒரு விதமான யோக ஜாதகம் ஆகும்.


   மேற்கண்ட அமைப்பை பெற்று யோக தசைகள் தொடர்ந்து வரவேண்டும். (அதாவது கீழ்க்கண்ட அமைப்பை பெற்றுள்ள கிரகங்கள்  தசைகள் தொடர்ந்து வரப்பட வேண்டும்.)


     1) எவ்விதத்திலும் பங்கப்படாத குரு பார்த்த கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வருமாயினும் அவை யோக ஜாதகம் ஆகும்.


  2) தர்ம-கர்மாதிபதிகள் எவ்விதத்திலும் பங்கப் படாமல் முழுமையான சுபத்துவ நிலையில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான ஜாதகம் ஆகும்.


 3)ஒருவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்து சந்திரனுக்கு ஆறு ,ஏழு, எட்டில் இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் நின்று எவ்விதத்திலும் பங்கப்படாத நிலையை அடைந்து சந்திர அதியோகத்தில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் சாதக அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதகத்தினை உடையோன் ஆவார்.


4) சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம்,, கன்னி, மகரம் மற்றும் கும்ப லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி, புதன் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று அதன் தசைகள்  தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதத்தை உடையவர்கள் ஆவார்கள்.


5) இதேபோல குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம் இலக்கனத்தை சேர்ந்தவர்களுக்கு குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையை பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோக ஜாதகம் ஆகும்.


6) ஒருவர் ஜாதகத்தில் உள்ள அவ யோக கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3, 6 ,10, 11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் அமர்ந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்ற ஜாதகம் ஓரளவு யோக ஜாதகமாக கருதப்படுகிறது.


7) ஒருவரது ஜாதகத்தில் மகாதன யோகம் என்று சொல்லக்கூடிய யோகத்தை தரக்கூடிய ஸ்தானங்களாஆன

 தன ஸ்தானமான இரண்டாம் இடம்,

 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகிய மூன்று இடங்கள் வலுப்பெற்று மற்றும் லக்னாதிபதியும் வலுவடைந்து நிலையில் இவைகள் தங்களுக்குள் ஏதாவது ஒரு நிலையில் தொடர்பு பெற்று சுபத்துவ நிலையில் நிற்கும் பொழுது அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்களும் யோக ஜாதக அமைப்பை பெற்றவர் ஆவார்.


ஒரு சிலருக்கு யோகமான அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் அதன் தசைகள் வாழ்வில் வராத சூழலில் அது யோக பங்கம் ஆகிவிடுகிறது. எனவே ஒருவர் யோகத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த யோகத்தை தரக்கூடிய தசைகளும் வலுவடைந்து உரிய தருணத்தில் வரவேண்டும். அந்த யோகத்தை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்கினாதிபதியும் வலுவடைந்து இருக்கவேண்டும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


    செல்

  9715189647

    7402570899


                            

 அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அதிஷ்டம் நிறைந்த மனிதன் யார்?

 அதிர்ஷ்டம் நிறைந்த மனிதன் யார்?

                              


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    " மனிதனாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தை பெற மாட்டோமா? "என ஏங்குவது மனித இயல்பாகும்.


  அதிர்ஷ்டம் என்பது ""அவரவர் எண்ணத்தோடும் மற்றும் வாழ்வியல் சூழ்நிலையயோடும் தொடர்புகொணட ஒன்றாகும்.


 அடிப்படைத் தேவைக்கே கஷ்டப்படக் கூடிய ஒருவர் "தினந்தோறும் ஒருவேளை சோறாவது எதிர்பாராத வகையில். அதிர்ஷ்டவசமாக கிடைக்குமா?" என  ஏங்குவதும் உண்டு.


  உழைக்காமல் பல லட்சங்களை லாட்டரி சீட்டில் அல்லது ஷேர் மார்க்கெட்டில்  அல்லது சூதாட்டத்தில் கிடைக்குமா? என எதிர்பார்ப்பதும் ஒருவகை நிலையாகும்.

  


 ஒரு சிலர் கடுமையான உழைப்பையும் மற்றும் முதலீட்டையும் போட்டு அந்த உழைப்புக்கேற்ற உயர்வு நிலை கிடைக்குமா ? என ஏங்குவதும் உண்டு.


    சிலர் இருந்த இடத்திலிருந்து  முதலீட்டைப் போட்டுவிட்டு உடலுழைப்பு இல்லாமல் தனது மூளையை பயன்படுத்தி பல கோடிகளை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாகவும் இருப்பர்.


  ஒருசிலர் கற்ற கல்வியால் அல்லது பெற்ற வித்தையால் அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஆக முடியுமா? என எதிர்பார்ப்பதும் உண்டு.


 சிலர் அறிவும், திறமையும் இருந்தும் மற்றும் கடுமையாக உழைத்தும் தோல்வி அடைபவர்களும் உண்டு .ஒரு சிலர் அந்த தொழில் சார்ந்த எந்தவிதமான அதிகப்படியான திறமை இல்லாமல் அந்த தொழிலை ஆரம்பித்து தக்க நேரத்தில் அதிர்ஷ்டம் நிறைந்த தசா அமைப்புகளால் வாழ்வில் முதலாளிகளாக ஆகி. விடுவதும் உண்டு.


   எல்லாம் அவரவர் ஜாதகத்தில் உள்ள கோள்களின் கலப்பினால் உண்டாகும் அதிர்வலைகளே அவரது அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது.


   வாழ்வில் உயர்வடைந்து வெற்றி பெற்றவர்களது ஜாதகங்களை உற்றுநோக்கும் போது அவை பார்ப்பதற்கு கிரக அமைப்புகள் கண்ணில் ஜொலிப்பதை காணலாம். உரிய யோக தசை அமைப்புகள் வாழக்கூடிய வயதில் வந்து அவரை வாழ்வின் உயரிய நிலைக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம்.


  இது போன்றவர்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து வரக்கூடிய தசைகள் யோக தசை காலமாக அமைந்து அந்த யோகத்தை அனுபவிக்க  கூடிய இலக்கனம் மற்றும் ராசி ஸ்தானங்களும் மற்றும்  அதன் அதிபதிகளும் வலுவடைந்து இருப்பதைக் காணலாம்.


   ஒருவர் ஜாதகம் அதிர்ஷ்டம் நிறைந்த சாதகமாக அமைய வேண்டுமாயின் அவருடைய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதியும் கெடாமல் இருக்க வேண்டும்.


ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதிகள் வலுப்பெறாமல் லக்கினாதிபதி வலுவடைந்து இருக்க வேண்டும்.


 ஒருவர் ஜாதகத்தில் இலக்கன யோகர்கள் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணங்களில் நின்று , இயற்கை சுப கிரகங்கள் தொடர்பு பெற்றும் அதே நேரத்தில் இயற்கை பாவ கிரகங்களான சனி செவ்வாய், ராகு மற்றும் கேது அல்லது  லக்கன அவ யோகிகள் தொடர்புகளை பெறாமல் இருக்க வேண்டும். யோகத்தினை கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வர வேண்டும்.அதிலும் குறிப்பாக குரு பார்த்த தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.


     கோச்சார அடிப்படையில் ஏழரை சனி மற்றும்  அஷ்டமச்சனி வருங்காலங்களில் மட்டும் யோக தசைகள் நடப்பில் இருப்பினும் அதிர்ஷ்டம் அல்லது யோக நிலை மட்டுப்படுத்தப்படும்.


  ஒருவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்து வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன் சுக்கிரன் அமர்ந்து அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்.


   நவ கிரகங்களில்  சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது ஆகியவை குரு அணியை சேர்ந்ததாகும்.


  சனி, புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் சுக்கிரன் அணியைச் சேர்ந்ததாகும்.


   லக்னம் மற்றும் ராசியை குரு அணியாக கொண்டவர்கள் குரு அணியின் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாவர்.


 லக்னம் மற்றும் ராசியை சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களாக இருப்பின் தொடர்ந்து சுக்கிரனை  அணியினை சேர்ந்த. கிரக  தசைகள் வருமாயின் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆவார்கள்.


   குரு அணியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த கிரக திசைகள் வந்தாலும்,

 சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களுக்கு குரு அணியை சேர்ந்த கிரக தசைகள் நடந்தாலும் அந்த கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3, 6, 9 ,10, 11 ஆகிய இடங்களில் நட்பு நிலையில் இருப்பின் அதன் தசைகள் தொடர்ந்து வரும் போதும் யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது.


  குறிப்பாக மேஷ லக்னக்காரர்களுக்கு அவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்று உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.இதற்கு குரு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் எவ்விதத்திலும் பாவத்ததுவம் அடையாமல் இருக்க வேண்டும்.


 ரிஷப லக்னகாரர்களுக்கு சனி, புதன் மற்றும் சுக்கிரன் திசைகள் தொடர்ந்து வருமாயின் அதிர்ஷ்டசாலிகள் ஆவார். இங்கும் அதே போல சுக்கிரன், சனி ,புதன் ஆகியவை பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலைபெற்றிருக்க வேண்டும்.


 மிதுன லக்கினகாரர்களுக்கு புதன், சனி மற்றும் சுக்கிரன் பாவத்துவம் அடையாமல் சுபத்துவம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.


  கடக லக்கின காரர்களுக்கு சந்திரன், குரு மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.


  சிம்ம லக்கின காரர்களுக்கு சூரியன் குரு , செவ்வாய் தசைகள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.


  கன்னி லக்கின காரர்களுக்கு புதன், சனி மற்றும் சுக்கிரன் தசைகள் சுபத்துவம் பெற்ற நிலையில் தொடர்ந்து வருமாயின் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.


   விருச்சிக லக்கின காரர்களுக்கு குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவம் அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.


 தனுசு லக்கின காரர்களுக்கு குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் பாவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.


   மகர மற்றும் கும்பம் லக்கினக்காரர்களுக்கு சனி, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆவார்கள்.


மீன லக்ன காரர்களுக்கு குரு ,சந்திரன் மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவம்  அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.


    எல்லா  லக்கின காரர்களுக்கு மேற்கண்ட தசைகள் மட்டுமல்லாமல் அவர்களது  தனம் மற்றும் லாபாதிபதிகளது  தசைகளும் அவர்களது வாழ்வினை அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஆக்குகிறது.


நன்றி.


Whats app

   9715189647

    Cell

9715189647

 7402570899


அன்புடன் 

சோதிடர் சோ.ப ரவிச்சந்திரன் 

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்)

 ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர், கரம்பகுடி, புதுக்கோட்டை மாவட்டம்..

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்.


                                   


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !


   பழையன கழித்து புதியன புகுதலும், புதுமையை படைக்கவும் மற்றும் இல்லாத ஒன்றை பிரபஞ்சத்திலிருந்து கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தவும் வித்தை காரகன் புதன் பகவானது ஆசியும் மற்றும் ஆதரவும் தேவைப்படுகிறது.


   மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளவும்  மற்றும் புதுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் புதன் பகவான் அருள் ஆசி தேவைப்படுகிறது.


    புதன் பகவானை வலுப்படுத்த அவரோடு  நட்பு கிரகமான சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் அவரது சேர்க்கை வித்தையை அதிகரிக்கச் செய்து வாழ்வில் உயரிய நிலையை அடைய வைக்கும். இதேபோல தனித்த புதன் பலம் அடைந்த நிலையில் பலமடைந்துள்ள கிரகமாக கருதப்படுகிறது இவ்வாறு தனித்த புதன் பாதகாதிபதியாக வரும் பொழுது தனித்து உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருப்பது நல்லதல்ல. அவ்வாறு உச்சம், ஆட்சி பெற்ற கிரகத்தை இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ஆகியவற்றின் பார்வை  அல்லது சேர்க்கை மிக நல்லது. இவை கேந்திராதிபத்திய தோஷத்தையும் மற்றும் பாதக தன்மையும் மட்டுப்படுத்தும்.


  புதன் பகவானுடன் 

சனி, ராகு சேர்க்கை புதன் பகவானது பலத்தை குறைக்கும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.


  புதன் பகவான் மிதுனம், கன்னி ,ரிஷபம், துலாம் மகரம் மற்றும் கும்பம் வீடுகளிலிருந்து அதன் தசை நடைபெறும் காலங்களில் யோக பலன்களை வழங்குகிறது.


   புதன் பகவானுடைய அணியை சேர்ந்த கிரகங்களாக சுக்கிரன்,, சனி, மற்றும் ராகு பகவான் போன்றவை ஆகும்.


  புதன் பகவானை சொந்த வீடாக கொண்ட மிதுனம் மற்றும் கன்னி இலக்கனங்களுக்கு சனி, புதன்  மற்றும் சுக்கிரன் தசை தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்.


  இவ்வாறு யோக தசைகள் வரிசையாக வந்து புதன் பகவான் பலம் பெற்று மற்றும் லக்னாதிபதியும் வலுவடைந்த நிலையில் அதிக சுபத்துவம் 

பெற்றுள்ள நிலையில் புதன் பகவான் இருக்கக்கூடிய பட்சத்தில் புதன் சார்ந்த தொழில் அவரது வாழ்க்கையில் அமையும்.


  புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் கன்னியில் உச்சம் பெற்ற நிலையைவிட மீனத்தில் நீச்சம் பெற்று உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் இந்த நிலையில் மிகுந்த யோக பலனை தருகிறது.

இதேபோல கன்னியில் உச்சம் பெற்ற புதனை விட சூரியன் மற்றும் புதன் பரிவர்த்தனை நிலையில் அதாவது சிம்ம வீட்டில் புதனும் கன்னி வீட்டில் சூரியனும் அமைந்த நிலையில் மிகுந்த யோக பலனை தந்து விடுகிறது.

இதற்கான காரணம் கன்னியில் புதன் பகவான் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் ஆகிய நிலையில் பலம் பெற்று இருப்பினும் கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் கன்னியில் இருப்பது நல்லதல்ல.


  புதன் பகவானுடன் கேது இணைவு மற்றும் புதன் பகவானுடன் சூரிய பகவான் இனைவு ஆகியவை நல்ல பலனைத் தருகிறது.புதன் பகவானுடன் சனி அல்லது ராகு இணைந்துள்ள நிலையில் இயற்கை சுப கிரகமான பார்வை பெறும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகருக்கு கொடுக்கிறது.


  புதன் பகவானுக்கு  செவ்வாய் இணைவு மற்றும் பார்வை உகந்ததல்ல.சந்திர பகவான் புதனை நட்பாக கொண்டாலும், புதனுக்கு சந்திரன் பகை என்ற வகையில் புதன், சந்திரன் இணைவு நல்ல பலனைத் தராது.


  புதன் வீட்டில் செவ்வாய் இடம் பெறுவதோ அல்லது செவ்வாய் வீட்டில் புதன் பகவான் இடம்பெறுவது உகந்தது அல்ல .மீறி இடம்பெறும் போது அவை சுபத்துவம் பெற்று நிலையில் இருக்க வேண்டும்..


 புதன் மற்றும் ராகு சேர்க்கை மாறுபட்ட நிலையில் மாற்றி யோசிக்க வைத்து வித்தியாசமான அணுகு முறையில் அவரை வெற்றிபெற வைக்கும்.


  தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னியில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருப்பது பாதகாதிபதி என்ற வகையில் உகந்ததல்ல. மேலும் பாதகாதிபதி இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை மற்றும் சேர்க்கை பெற்று வலுப்பெறுவது மிகவும் மோசமான பலனை தசை காலங்களில் தரும். புதனின் பாதக தன்மை குறைய சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது போன்ற பாவிகள் சேர்க்கை அல்லது பார்வை இடம் பெற அதன் தசை காலங்களில் பாதக தன்மை குறையும்.


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647


     செல் & வாட்ஸ் அப்

      9715189647

        74402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.

புதன் பகவான் தரும் புத்திசாலித்தனம்

 


SUNDAY, 31 OCTOBER 2021

புதன் பகவான் தரும் புத்திசாலித்தனம்

 புதன் பகவான் தரும் புத்திசாலித்தனம்.

                     


செவ்வாய்படி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  

    ஒரு மனிதனை அறிவாளி ஆக்கக்கூடிய கிரகம் புதன் பகவானாவார் .


     புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்ற நிலையில் உடல் உழைப்பின்றி மூளையைப் பயன்படுத்தி அதிகமாக பொருளீட்டி வாழ்வில் உயர்வடைவார்கள்.


    தனது அறிவால் மனதை செலுத்தி உடல் உழைப்பின்றி ஒரு புதிய படைப்பை அதாவது படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பொருளீட்டி  புகழ்பெற வைக்கக்கூடிய கிரகம் புதன் பகவானாவார்.


   இந்த உலகிற்கு புதிய கண்டுபிடிப்பை தருபவரும் புதன் பகவானாவார்.


 தனது எண்ணத்தை குவித்து சிந்தனையால்  செயல்களை செய்ய வைப்பவர் புதன் பகவானாவார்.


  இந்த உலகம் போற்றக்கூடிய பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், தலையங்கம், நாவல்கள் சிறுகதைகள்,, இதிகாசங்கள் மற்றும் இசை போன்றவற்றை  படைக்கக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு தரக்கூடிய கிரகம் புதன் பகவானாவார்.


  எதிர்காலத்தை தனது ஆராய்ச்சியால் புள்ளி விவரமாக துல்லியமாக தரக்கூடிய ஆற்றல் படைத்த சோதிடரை உருவாக்க வல்ல கிரகம் புதன் பகவானாவார்.


  ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும், புள்ளிவிவரங்களை தருவதில் கெட்டிக் காரராகவும், சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லமை படைத்தவராகவும், மனதை இளமையாக வைத்து கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவரும்  புதன் பகவான் தனது ஜாதகத்தில் பலமாக பெற்றவர்களே ஆவார்.


  அழகிய கைவேலைப்பாடுகள், சித்திரம் வரைதல், 

சிற்ப வேலைப்பாடுகள், போன்றவற்றில் தனித்துவம் நிறைந்த நிபுணத்துவம் பெற்றவராக ஒருவரை திகழ வைப்பதும் புதன் பகவானாவார்.


  இன்றைய அபரிதமான இணைய வளர்ச்சியில் கணிப்பொறியை அதிகமாக பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய நிபுணத்துவம் பெற்றவரும் புதன் பகவான் பலமாக பெற்றவர்களே ஆவார்.


  புதன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றவர்கள் அனைவரும் மேற்கூறிய திறமை பெற்றிருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது சில நேரங்களில் தவறாகவும் கணித்து விடக்கூடும்.


  சில நேரங்களில் உபய லக்னத்திற்கு புதன் கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் எதிர்பார்த்த பலனைத் தராமல் போய் விடுவதும் உண்டு.


  மிதுன லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம், ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் என்ற நிலையில் பலம் பெற்றிருந்தாலும் அது கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் என்ற வகையில் நீங்கள் பெரிய கணித அறிவு பெற்றவளாக,, கம்ப்யூட்டர் அறிவு பெற்றவராக இருப்பார் என்று நீங்கள் விரிந்து உரைத்தால் கடைசியில் அவர் படிப்பறிவு இல்லாத 

ஆடு ,மாடு மேய்க்கும் சிறுவனாக இருக்கக்கூடும்.


  சில நேரங்களில் புதனுடன் சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்களுடைய நெருக்கமான இணைவு எதிர்பார்த்த பலனைத் தராமல் மாற்றிவிடக் கூடிய வாய்ப்பும் உண்டு. அதேநேரத்தில் மேற்கூறிய இயற்கை பாவ கிரகங்கள் இணைந்திருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றை தொடர்பு பெரும்பொழுது மீண்டும் அதன் பாவ தன்மை நீக்கி சுபத்தன்மை பெற்று எதிர்பார்த்த மேற்கூறிய பலனை அதன் தசை காலங்களில் சிறப்பாக தரும்.


  லக்கினாதிபதி பலமடைந்துள்ள நிலையில் உகந்த தசை அமைப்புக்கள் வரும் காலங்களில் புதன் பகவானை பலமாக பெற்றவர்களே அறிவாற்றலால் இருந்த இடத்தில் இருந்து அகில உலகத்தையும் ஆளக்கூடியவராகிறார்கள்.


வாட்ஸ் அப்

 9715189647


  செல்

  9715189647

    7402570899


  (தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                        



          அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம் சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: