சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரனின் கேள்வி-பதில்கள்
செவ்வாய்ப்பட்டி. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
எனது முகநூல் பக்கத்தில் முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது "சோதிடர் சோ.ப ரவிச்சந்திரன் "
என்ற முகநூல் பக்கம்(facebook page) வழியாக பதிலளிக்கலாம் என்ற ஆர்வத்தில் என் பதிவை தொடங்குகிறேன்.
முதலில் சேலத்தை சேர்ந்த P. பார்த்திபா என்ற முகநூல் நண்பர் கேட்ட கேள்விக்கு விடையளிக்கலாம் .
அவர் கேட்ட கேள்வி
இனி வருங்காலத்தில் அரசியலில் பதவி உயர்வு உண்டுங்களா, வாய்ப்பிருந்தால் அது எந்த காலகட்டம் அதாவது திசை புத்தியை குறிப்பிடவும்?
பிறந்த தேதி ; 03.10.1973
பிறந்த நேரம்:4.50 am
பிறந்த இடம்: சேலம்
(சிம்ம லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம்)
அரசியலில் ஒருவர் ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெற வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சிம்ம லக்கினமும், சூரியனும் பலம் பெற்றிருக்க வேண்டும் .
அந்த வகையில் இவரது ஜாதகத்தில் லக்கனம் சிம்மாகி லக்னாதிபதி சூரியன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து மற்றொரு அரசாங்க காரக கிரகமான சந்திர பகவானின் நட்சத்திர சாரம் பெற்று ,
ராசியில் நீசம் பெற்று இருந்தாலும் அம்சத்தில் உச்சம் பெற்ற குரு பகவானின் பார்வையை பெற்றிருப்பதும், லக்கனத்திற்கு 9-க்குடைய அதாவது தர்மாதிபதியான செவ்வாய் பகவானும், 10-க்குடைய கர்மாதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும்.
மேற்கண்ட இவ்விரு சாதக அமைப்புகளும் சாதகர் அரசியலில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்த கிரக அமைப்புகள் ஆகும்.
தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்
"சொல்லுமையா பாக்கியத்தோன்,
பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !
தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர் பல பேரும் உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையோடு வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"
அதனால் இவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் இவருக்கு தனம் நிறைந்திருப்பதோடு , இவர் இட்ட ஏவல்களுக்கு தட்டாமல் செய்யக்கூடிய ஆள்பலம் இவரைச் சுற்றி இருக்கும்.
சாதகருக்கு தற்பொழுது கோசரப்படி ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பில் இருப்பதாலும், செவ்வாய் திசையில் சனி புத்தி 05.01.2019 முதல் 14.02.2020 வரை நடப்பில் உள்ளது. பொதுவாக செவ்வாய் திசையில் சனி புத்தி சனி திசையில் செவ்வாய் புத்தி ஒருவருக்கு சிறப்பாக அமையாது. எனவே அரசியல் யோகம் இருந்தும் தற்சமயம் அரசியலில் ஜொலிக்க இயலாத நிலையில் உள்ளார்.
சாதாகர் கேட்ட கேள்விப்படி அரசியலில் உயர்பதவியில் அமர செவ்வாய்திசை ஆனது தர்ம-கர்மாதிபதி திசையாக இருப்பதால் செவ்வாய் திசையில் சுக்கிரன் புத்தியில்(09.07.2021 முதல் 09.09.2022 வரை ) அரசியலில் உயர் இவரை பதவிகள் தேடிவரும்.
..........................................
இரண்டாவது நபர் ஈரோட்டிலிருந்து வேலவன் சின்னச்சாமி கேட்ட கேள்வி
எனக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.திருமணம் எப்பொழுது நடக்கும்? திசை புத்தியை குறிப்பிடவும்.
பிறந்த தேதி; 09.08.1989
பிறந்த நேரம்; 8.30 pm
பிறந்த இடம்: ஈரோடு
(ஜென்ம லக்கனம் : கும்பம் ஜென்ம ராசி: துலாம்
ஜென்ம நட்சத்திரம்: விசாகம்)
(1-ல் ராகு,5-ல் குரு,6-ல் சூரியன்,7-ல் செவ்வாய், சுக்கிரன், புதன்,கேது ,9-ல் சந்திரன் 11-ல் சனி)
பொதுவாக ஒருவருக்கு திருமணம் காலதாமதமாக தள்ளிக்கொண்டே செல்வதற்கான காரணம் சோதிட அடிப்படையில் என்ன ? என ஆராய்ச்சி செய்து பார்த்தால் "ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் ,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் இந்த இடங்களில் அரவுகளான ராகு ,கேது மற்றும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம்பெற்றிருப்பது முக்கிய காரணமாக இருக்கலாம். இவை மட்டுமல்லாது களத்திரகாரகன் சுக்கிரனும் மேற்கண்ட வகையில் பாவ கிரகங்கள் தொடர்பு இருப்பின் திருமணம் கால தாமதமாகிக் கொண்டே செல்லும்.
இவைதவிர லக்கனம், இரண்டாம் இடம், ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இட அதிபதிகள் பலமிழந்து இருந்தாலும் திருமணம் காலதாமதமாகி கொண்டுசெல்லும்.
மேற்கண்ட அமைப்புக்கள் பெற்று கோசாரப்படியும் மற்றும் நடக்கும் திசையும் உகந்ததாக இல்லை எனினும் திருமணம் ஒருவருக்கு கால தாமதம் ஆகிக் கொண்டே செல்லும்.
இவரது ஜாதகத்தில் லக்கனத்தில் ராகுவும், ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது என்ற இரண்டு பாவ கிரகங்கள் தொடர்பு, இலக்கனத்தையும் லக்கினத்தில் அமர்ந்த ராகுவையும் , குடும்ப அதிபதியான குருவையும் சனி பகவான் தன்னுடைய மூன்றாவது மற்றும் ஐந்தாம் பார்வையால் பார்வை செய்கிறார் . மாங்கல்ய ஸ்தானாதிபதி புதன் பகவானும் ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களான கேது, செவ்வாய் சேர்க்கை பெற்று உள்ளது.
ஏழாம் அதிபதி ஆறில் மறைந்து, அஷ்டமாதிபதி புதன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளது.
ராசிப்படி பார்த்தாலும் ராசியாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதியான சுக்கிரனும் , குடும்ப மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான செவ்வாய் பகவானும் அரவான ராகு,கேது பிடியில் மாட்டிக் கொண்டனர்.
மேற்கண்ட இதுபோன்ற திருமணம் கால தாமதமாகிக் கொண்டு செல்கிறது.
26.08.2016 விருந்து 03.07.2019 வரை சனி திசையில் ராகு புத்தியும் நடப்பில் இருந்தது.தற்பொழுது நடைபெறும் சனி திசையில் குரு புத்தி 13.01.2022 வரை நடப்பில் இருப்பதால் இந்த குரு புத்தி தங்களுக்கு மணவாழ்வினை அமைத்து தரும். நன்றாகப் பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொள்ளுங்கள்.
..............................................
மூன்றாம் நபர் முருகன் தியா முருகன் தியா கேட்ட கேள்வி
"சொந்தத் தொழில் எப்பொழுது தொடங்கலாம்?"
பிறந்த தேதி: 10.06.1987
பிறந்த நேரம்; 8.50 am
(2-ல் மாத்தி,3-ல் கேது,5-ல் சந்திரன்,சனி ,9-ல் குரு, ராகு,11-ல் சூரியன், சுக்கிரன்,12-ல் புதன், செவ்வாய்)
ஒருவரது ஜாதகத்தில் சொந்த தொழிலை தெரிந்து கொள்ள அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தையும் அதன் அதிபதியும் நன்கு ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். இதனை இலக்கனம் மற்றும் ராசி என்ற இருவகையிலும் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.
பத்தாம் இடத்தை பார்க்கின்ற , சேர்ந்துள்ள மற்றும் பத்தாம் அதிபதி பெற்றுள்ள இடத்தையும் அதன் சாரநாதன் பெற்றுள்ள இடத்தையும் நன்கு ஆராய்ந்து ஒருவரது தொழிலை முடிவு செய்ய வேண்டும்.
இவை மட்டுமல்லாது பத்தாம் அதிபதி அம்சத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்தும் ஒருவரது ஜீவனை நிலை அமையும். மேலும் பத்துக்கு பத்தாம் இடமான ஏழாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
இவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாமிடமான செவ்வாய் லக்கனத்திற்கு விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்திலும், ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திலும் மறைந்து உள்ளது. ஆதலால் இவருக்கு இன்னும் சரியாக தொழில் அமையவில்லை.
அத்துடன் தற்பொழுது லக்னத்திற்கு மூன்று மற்றும் விரய ஸ்தானமான புதன் திசையில் ராகு புத்தி 30.07.2018 முதல் 16.02.2021 வரை நடப்பில் உள்ளது.
லக்கனத்திற்கு 11-க்குடைய சுக்கிரனும் மற்றும் 12 உடைய புதன் பகவானும் ஆட்சி பெற்று ராகு பகவான் லக்கனத்திற்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்து இருப்பதால் தற்பொழுது இவர் சுயதொழில் செய்யாமல் வெளிநாடு சென்று பணம் ஈட்டலாம்.
.......................................
நான்காம் நபர் முகநூல் நண்பர் அம்பாள் சரவணன் கேட்ட கேள்வி
ஐயா எனக்கு பொருளாதார நிலை எப்போது சீராகும்?
பிறந்த தேதி; 20.01.1970
பிறந்த நேரம் : 8.20 am
(லக்கனம் கும்பம் ,
ராசி : மிதுனம்
நட்சத்திரம்: திருவாதிரை)
(1-ல் ராகு,2-ல் செவ்வாய்,3-ல் சனி,4-ல் மாத்தி,5-ல் சந்திரன்,7-ல் கேது,9-ல் குரு,11-ல் புதன்,12-ல் சூரியன், சுக்கிரன்)
பொதுவாக ஒருவரது பொருளாதார நிலையை கண்டறிய "தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் ,தனகாரகன் குருவும் கெடாமல் இருக்க வேண்டும்".
மேலும் நடக்கும் திசையும் மற்றும் கோச்சார பலன் உகந்ததாக இல்லை எனில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது.
அதாவது ருண ரோகாதிபதி, அஷ்டமாதிபதி போன்ற மறைவிட அதிபதிகளின் திசையோ அல்லது நடக்கும் திசையானது நீசம் அஸ்தமனம் பகை மற்றும் மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தாலும்
அல்லது நடக்கும் திசையானது லக்கனாதிபதிக்கு பகையாக இருந்தாலும் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும்.
ஏழரை, அஷ்டமச்சனி காலங்களிலும், பாதகாதிபதி திசையிலும் ஒருவருக்கு பொருளாதார இறக்கங்கள் உண்டாகலாம்.
ஜாதகருக்கு தனாதிபதியும், தனகாரகனுமான குருபகவான் ராசியில் பகை பெற்ற இடத்தில் அமர்ந்து அம்சத்தில் நீசம் அடைந்து பலம் இழந்துள்ளது
ஜாதகருக்கு தனாதிபதியும், தனகாரகனும் ஆன குரு லக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பகை பெற்ற இடத்தில் அமர்ந்து நீசம் பெற்ற சனியினை தனது சம சப்தமாக பார்வை செய்வதால் 26.09.2018 க்கு முன்பு நடந்த சனி திசையின் 19 ஆண்டுகளும் சிறப்பாக அமையவில்லை.
இவருக்கு பொதுவாக பிறந்ததிலிருந்து ராகு திசை, அடுத்து அம்சத்தில் நீசம் பெற்று பலம் இழந்த குரு திசை மற்றும் நீசம் பெற்ற சனி திசை என தொடர்ந்து வந்து ஜாதகருக்கு பொருளாதார நிலை சரியாக அமையவில்லை.
எப்பொழுது இவருக்கு பொருளாதார நிலை சரியாகும்? என ஆய்வு செய்தால் 26.09.2018 க்கு பிறகு புதன் திசை ஆரம்பித்து உள்ளது.
ஒருவருக்கு யோகத்தை தர வேண்டும் எனில் அவரது வாழ்வில் 1 ,5 ,9 க்கு உரிய திசை நடப்பில் இருக்கவேண்டும் .அந்த வகையில் புதன் திசை இவருக்கு லக்கனத்திற்கு 5-க்குடைய யோக தசையாக வருவதால் மேலும் புதன் லக்னத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திலும், ராசிக்கு ஏழாம் இடத்திலும் அமைந்துள்ளதால் இந்த புதன் திசை இவருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற நிலை உருவாக்கும் .
எந்த ஒரு தசையும் அதன் சுய புத்தியில் யோகத்தை தராது.அந்த வகையில் இவருக்கு புதன் திசை புதன் புத்தி 21.02.2021 வரை நடப்பில் இருப்பதால் அதன் பிறகு சாதகருக்கு பொருளாதார நிலை சீராகும்.
..........................................
நிறைவாக முகநூல் நண்பர் ரா. குணசேகரன் கேட்ட கேள்வி
எனக்கு எப்பொழுது சொந்தவீடு அமையும்?
பிறந்த தேதி: 14.03.1981
பிறந்த நேரம்: 3.45 am
(லக்னம் ; மகரம்
ராசி :மிதுனம்
நட்சத்திரம் :திருவாதிரை)
(1-ல் கேது,2-ல் சூரியன், புதன், சுக்கிரன்,3-ல் செவ்வாய்,6-ல் சந்திரன்,7-ல் ராகு,9-ல் குரு,சனி மற்றும் 12-ல் மாந்தி)
ஒருவருக்கு நான்காம் அதிபதி பலமிழந்து நான்காம் இடத்தில் கேது, மாந்தி போன்ற பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு சொந்த வீடு அமையாது.
ஜாதகருக்கு நான்காம் அதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் மறைந்து சனிபகவான் பார்வை பெற்றதால் சொந்த வீடு அமைவது காலதாமதம் ஆகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்பொழுது வீடு யோகத்தை தரக்கூடிய சனி திசையில் சுக்கிர புத்தி நடப்பில் (14.11.2016 முதல் 15.01.2020 வரை) இருப்பதால் இந்த சுக்கிர புத்தியில் சொந்த வீடு அமையும்.
நன்றி.
தொடர்ந்து முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவில் பதில் அளிக்கப்படும்.
வாட்ஸ் அப் 9715189647
செல் 9715189647 7402570899
My blog.Click here
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
My email
masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.