Thursday 30 November 2017

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி ?

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி ?

                           

                                    
கிரகங்கள் படுத்தும் பாடு   -( 95 )

                ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           "காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது
மனமே"
   என்றார் கவிஞர் கண்ணதாசன்
ஆம் வான்புகழ் கொண்ட வள்ளுவரும்
"அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை
பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை"
                            என்றார்.


                  எனவே இவ்வுலகில் இன்பமுற வாழ பணம் என்பது முக்கியம்.அதேபோல் அவ்வுலகில்(மேல் உலகில்) இன்பமுடன் வாழ நாம் செய்யும் புண்ணியம் அவசியம் ஆகும்.

             ஒருவருடைய ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் அந்த யோக தசைகள் அவன் வாழ்விலே வராமலே போய்விடும்.இவ்வாறு யோக கிரகங்கள் எவ்வித பலனுமில்லாமல் அவன் வாழ்வு கழிந்துவிடுவதை நாம் ஒரு சிலருக்கு பார்க்கிறோம்.

                ஒரு சிலருக்கு அனுபவிக்கவேண்டிய உரிய பருவத்தில் யோக திசைகள் வராமல் அந்திம காலத்தில் வந்து அந்த யோக பலனை அவர் அனுபவிக்காமல் அவரது குடும்ப அங்கத்தினர்கள் அனுபவிக்கும்படியாக வரும்.

     .            ஒரு மனிதனுக்கு யோக தசை என்பது
குழந்தை பருவம் அல்லது முதுமை பருவத்தில் வருவதில்  எவ்வித பயனுமில்லை.


              வாழும் இளைஞர் காலத்தில் யோக தசை நடந்தால்தான் நல்லது.அந்த யோகத்திற்கும் மதிப்பு உண்டு.

              ஒரு மனிதனின் மூன்றுவித பொருளாதரநிலை;-

                  1) ஏழையாக பிறந்து ஏழையாக வாழ்ந்து
     மடிவது.
                 2) சாதாரண ஏழையாக பிறந்து தனது கடின உழைப்பால் கோடீஸ்வரனாக மாறுவது.


                   3) கோடீஸ்வரனாக பிறநது கோடீஸ்வரனாக வாழ்வது.

                   மேற்கண்ட மூன்று நிலைகளில் இரண்டாவது நிலையில் உள்ளவரை
ஆய்வுககு எடுத்துக்கொள்வோம்.


                   ஒருவரின. ஜாதகத்தில் லக்கனாதிபதி  மற்றும் ராசி அதிபதி நல்ல பலம் பெற்று இருப்பின் எல்லாவித பயன்களையும்.,
யோகங்களையும் இளம்வயதில் அனுபவிக்க முடியும்.

             மாறாக லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி பலமிழப்பின்
அந்த ஜாதகனுக்கு எல்லாவித யோகங்கள் இருப்பினும் பயனல்லை.


                         



                 ஒருவரின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை நடைமுறைக்கு கொண்டு வர பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் இடம் பலம் பெற வேண்டும்.இதனுடன் பாக்கியாதிபதியும் சம்பந்தப்பட்டால் யோகம் பல மடங்கு
விருத்தியாகும்.


               எனவே இந்த பிறவியில் கோடீஸ்வரர் ஆக  வேண்டுமெனில் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இதனைத்தான் சிலப்பதிகார புலவர் இளங்கோவடிகள்
*ஊழ்வினை வந்து உறுத்துட்டும்* என சூசகமாக தெரிவிக்கிறார்.

               ஒருவரின் ஐனன ஜாதகத்தில்
அடிப்படை பொருளாதர அதிபதி=இரண்டாம் அதிபதி
லாப அதிபதி=பதிரொண்டாம் அதிபதி
பாக்கியாதிபதி(வருமானம்)=ஒன்பதாம் அதிபதி
ஜீவன அதிபதி(தொழில்)=பத்தாமிட அதிபதி
      ஆகிய மேற்கண்ட தன,பாக்கிய ,ஜீவன மற்றும் லாபாதிபதி 
 (2,,9,10 ,11)மிட அதிபதிகள் பலம் பெற்று இவர்கள் இணைந்தோ அல்லத ஒருவருக்கொருவர் பரிவர்தனையோ பெற்று சுப நட்சத்திர சாரம் ,சுபர் பார்வை மற்றும் சேர்க்கை பெற்று இவர்களின்  தசை இளம் வயதில் வரும்போது நீங்களும் கோடீஸ்வரர்தான்.

        இதேபோல் திரிகோண அதிபதிகள் என அழைக்கப்படும்  1 ,5 ,9 ஆம் அதிபதிகள் பலம் பெற்று தங்களுக்குள் பரிவர்தனை பெற்று இருந்தால் இவர்களுடைய தசை காலத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவிர்கள். 


                           தன காரகர் குரு பகவான் நல்ல இடத்தில் இருந்து(கேந்திராதிபதியாக இருப்பில் கேந்திர ஸ்தானத்தில் இல்லாமல் இருத்தல் நலம்.இல்லை கேந்திரத்தில் இருப்பின் கேந்திராதிபதி தோஷம் பெற்று பலன் மாறி தரும்) பலம் பெறல் நலம்.

                       




அன்புடன்,

சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.


வாட்ஸ்அப்: 9715189 647

                                   செல்
   
                             740 257 08 99
                                 9715189647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)

My Email ; masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com


AstroRavichandran .blogspot .com

ஒருவரது சாதகம் எவ்வாறு இருந்தால் நல்லது ?

ஒருவரது சாதகம் எவ்வாறு இருந்தால் நல்லது ?--( 1 )

                        


கிரகங்கள் படுத்தும் பாடு - ( 87 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

            "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும்
உமக்கு கீழே உள்ளவர்கோடி நினைத்து  பார்த்து நிம்மதி தேடு "
ஒருவரது சாதகம் என்பது நூறு சதவீதம் முழுவதும் நல்ல முறையில் அமையாது.

              அதேநேரத்தில்  ஒவ்வொறு சாதகங்களிலும் சில கிரகங்கள் பலமான அமைப்பையும்,ஒரு சில கிரகங்கள் பலவீனமான அமைப்பையும் வைத்து இறைவன் நமது வாழ்வில் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்.    


                    எல்லோருடைய சாதகங்களும் முழுவதும் நல்லபடியாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில  சுவை இல்லாது போய்விடும்.

                 எனவே ஒவ்வொறுவரும் தனது சாதகத்தில் பலமான அமைப்பு எது என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வாழ்வினை தேர்ந்தெடுத்து நகர்த்தி செல்லவேண்டும்.எந்த கிரகங்களால் பலவீனம் என்பதை    நாம் தெரிந்து எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் நடந்துகொண்டு அதற்குரிய பரிகாரங்களையும்,கடவுள் வழிபாடுகளை செய்துகொள்ளவேண்டும்.

                   எல்லாம் விதிப்படிதான் நடக்கும்  எனினும் கிரகங்கள் படுத்தும் பாட்டை நல்ல சோதிட ஞானம் உள்ளவர்களிடம் ஆய்ந்தறிந்து இறைவனை இறுக பிடித்துகொள்ளும்போது "கோளறுபதிகத்தில் கூறியபடி "கோள்கள் என்ன செய்யும்'"என நீங்களும் பாடலாம்.

               எனவே தியான வலிமை பெற்றவர்களை கிரக கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருக்காது..இலங்கையை ஆண்ட ராவனன் தனது தவவலிமையால் கிரகங்களை தனது கட்டுக்குள் வைத்தான் என்பதை ராமாயணத்தில் படித்திருப்பீர்கள்.அவன் செய்தது தவறு எனினும் தனது தவ வலிமையால் கட்டுக்கொள் கொண்டு வரும் சக்தி கிடைத்ததை பார்க்கிறோம்.

                ஒவ்வொறு சாதகங்களின் பலனும் அவனது பூர்வபுண்ணியப்படியே இந்த ஜென்மத்தில் அமைகிறது.ஒருவருக்கு அழகு,அந்தஸ்து ,கல்வி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அவனது வாழ்வில் திருமண வாழ்வில் இன்னல்களை கொடுத்து அதனால் அவனது வாழ்வையே திசை மாற்றிவிடுகிறான்.

                    


                இவனது சாதகத்தை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் அவனது சாதகத்தில் லக்கனாதிபதி,தனாதிபதி ,ஜீவனாதிபதி மற்றும் சுகாதிபதி எல்லாம் நன்றாக அமைந்து அவனது சாதகத்தில் குடும்பஸ்தானம்,களஸ்திரஸ்தானம் மற்றும் ஆயுள்ஸ்தானங்களில் பாவிகள் தொடர்பு பெற்று களஸ்திரஸ்தானதிபதி மற்றும் சுக்கிரன் இதுபோன்ற அமைப்புகளில் பாதிப்படைய வைத்து அவனது தகுதிக்கேற்ற மனைவி அமையாமல் சிக்கல்களை உருவாக்கி விளையாடுகிறான்.

               மேற்கண்ட நல்ல மனைவி அமையதற்கான எல்லா விதிகளும் பாதிப்படைந்து உள்ளது என்பதை முழுவதும் முன்பு ஆராய்சி செய்து தெரிந்துகொண்டால் அதற்கேற்றாற்போல் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

                   ஒருவன் தனது சாதக விதிப்படி நல்ல அன்யோன்யமுள்ள நல்ல மனைவி அமைவதில் சிக்கல் என்பதை முன்னரே சாதக ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொள்ளும்போது அதற்கேற்றால்போல மனதை பக்குவடுத்தி எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு மனசஞ்சலங்களிலிருந்து ஒரு மனிதன் விடுபடலாம்.

                         


                  இதைவிடுத்து நமக்கு இறைவன் ஏன் இவ்வளவு கஷ்டங்களை தருகிறான் என வருத்திக்கொள்ள தேவையில்லை.உனக்கு இதுபோன்ற கஷ்டம் எனில் மற்றோருக்கு வேறுவிதமான கஷ்டம் இருக்கும்.

              ஒரு சிலருக்கு இறைவன் தனஸ்தானம்,வருமானஸ்தானம்,தொழில்ஸ்தானம்  எல்லாம் நல்ல முறையில் அமைந்து அவனது களஸ்திரஸ்தானமும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் நல்ல முறையில் அமைந்து அழகான அறிவுள்ள மனைவியும் அமைந்து செல்வ வளங்கள் நிறைந்திருக்கும் ஆனால் அவரது இல்லத்தில் "கட்டில் ஆடியும் தொட்டில் ஆடாமல் இருக்கும் " .
ஆண்டுகள் நகர நகர வீடு நிறைந்த செல்வங்கள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லாததால் மிகுந்த வேதனைக்கு உள்ளாவார்கள்.இறைவன் சில நேரங்களில் மனிதர்களிடம் விளையாடிதான் பார்க்கிறான் என சொல்லவேண்டும்.வீடு நிறைய குழந்தைகளை தந்து உண்ணும் உணவிற்கும் ,உடுத்தும் உடைக்கும் கஷ்டப்பட வைக்கிறான்.

                மாறாக வீடு நிறைய செல்வம் தந்து அதை அனுபவிக்கும் குழந்தை செல்வத்தை தராமல் கஷ்டப்பட வைக்கிறான்.

              குழந்தை பாக்கியம் இல்லாததற்கு காரணம்  தம்பதிகள் இருவருக்கும்  பால் இல்லாத மரம் வந்து பால்பொருத்தம் இல்லாமல் இருக்கவேண்டும்.மேலும் அவர்களது இருவரது சாதகங்களிலும் புத்திரஸ்தானமான ஐந்தாமிடமும் அதன் அதிபதியும் மற்றும் புத்திரகாரகன் குருவும் பாதிக்கப்பட்டிருக்கும்.தம்பதிகள் இருவரது சாதகங்களில் யாராவது ஒருவருக்கு புத்திரதோஷமிருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்தால் ஒருவரது யோகத்தில் குழந்தை பாக்கியம் இருக்க வாய்ப்பு உண்டு..
இருவரது சாதகங்களும் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் ஒவ்வொறு சோதிடரா தேடி சாதகம் பார்க்க அவர்களும் கிரக பலனையே மாற்றிவிடும் சக்தி கடவுளிடம் உண்டு என்பதால் குழந்தை இருக்காது என உறுதியாக சொல்ல முடியாமல் ஓவ்வொறுவரும் ஒரு பரிகாரங்களை செய்ய சொல்லியும்,ஒரு குறிப்பிட்ட கோவில்களுக்கு போக சொல்லி விடுவார்கள்.இவ்வாறாக பல கோவில் ,குளம் அழைந்து பல ஆண்டுகள் விரயமாகி விரக்தியின் உச்சத்திற்கு சிலர் சென்றுவிடுவதுண்டு.முழுநம்பிக்கையோடு முழுமனதோடு சந்தேகமில்லாமல் சரணகதியோடு செய்யப்படும்  பரிகாரத்திற்கு பலனுன்டு என்பதால் அவ்வாறு எல்லா சோதிடர்களும் செய்ய சொல்வதுண்டு.

               இதன்பிறகு குழந்தைபிறப்பு காலதாமதம் ஆகுபவர்கள் விஞ்ஞான யுகத்தில் செயற்கை கருத்தரிப்பு,குழந்தைகளை தத்துஎடுத்து வளர்த்தல் மூலம் வாழ்வினை மாற்றி கொள்ளத்தான் வேண்டுமெயொழிய மனதை  வருத்தியும்,உயிரை மாய்த்துக்கொள்ளவும் தேவையில்லை.

(புத்திர தடைக்கான காரணங்களை விரிவாக அறிய கீழ்கண்ட எனது வெப்சைடை கிளிக் செய்து படிக்க )


---தொடரும்

                            



அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை யாவட்டம்.


mail id
masterastroravi@gmail.com


தொடர்புக்கு

செல்
97 151 89 647
740 257 08 99


     வாட்ஸ்அப்
97 151 89 647


எனது வெப்சைட்..
AstroRavichandransevvai.blogspot.com
.......
.......
( போன் வழியாக தங்களது சாதகபலன் மற்றும் விவாக பொருத்தங்கள் கணித்து நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவொஅகளை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும் )

கிரகங்கள் படுத்தும் பாடு--( 1 )

கிரகங்கள் படுத்தும்பாடு -(1)


                            

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
                     ஒரு மனித வாழ்வில் அவனது குண                                                                 நலன்களுக்கும்,புத்திசாலிதனத்துக்கும் கிரகங்களின் பங்கு அலாதியானது.பல மனிதர்களை உற்றுநோக்கி பார்க்கும் போது ஒவ்வொறுவருக்கும் ஒரு விதமான குணங்கள் உண்டு. இவற்றிற்கு காரணம் அவனது /அவளது ஜாதக கட்டங்களில் அரசாட்சி புரியும் கிரகங்களே ஆகும்.

            சிலர் பார்ப்பதற்கு முரடனாக ,யார் சொல்லுக்கும் அடங்காதவனாக இருக்கிறன் என்றால் அவனது ஜாதகத்தில் செவ்வாய்,சூரியன் பலம் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் சுப சாரம் பெற்றிருந்தால் நியாயவான்களாக இவர்களது கோபத்தில் நியாயம் இருக்கும்.பாவ சாரம் பெற்று ஆறாம் இட தொடர்பு பெறின் அக்கிரம காரர்களாக இருப்பர்.

            சிலர் அதிக கோபகாரர்களாக இருக்கிறார்கள் எனில் அவர்களது வாக்கு ஸ்தானத்தில் பெரும்பாலும் பாவ கிரகங்களான செவ்வாய்,சனி இவர்கள் இருவரும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஆகும்.

              சிலரது வாக்கு சொன்னபடியே பலித்துவிடுகிறது எப்படி என பார்க்கும் போது வாக்கு ஸ்தானத்தோடு குரு,கேது இவர்கள் இருவரில் ஒருவர்  அல்லது சேர்ந்து
இருந்தாலோ அல்லது பார்த்தாலோ பலிதம் ஏற்படுவதை பார்க்கிறோம்.


             சிலரது பேச்சிலும்,செயலிலும் வஞ்சகதன்மை ஒளிந்து கொண்டிருக்கும் ,இரு பொருள்பட பேசுவதில் வல்லவராக இருப்பார்.அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் ராகுவின் தொடர்பு இருக்கும்.

                            


          சில பெண்களோ /ஆண்களோ கட்டிய துணை அழகாக இருந்தாலும் கட்டிலுக்கு துணையை வேறு ஒருவரோடு பங்கு போடும் பெண்களையோ/ஆண்களையோ பார்த்திக்கிறேன்.

         இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த குணம் வந்தது என ஆராய்ந்து பார்க்கும் போது காமக்கிரகங்களான செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பங்கும்,மனதிற்காரகன் எனப்படும் சந்திரனின் பங்கும் அலாதியானது .ட
             மனதுக்காரன் சந்திரன் உடன் இந்த காம எண்ணத்தை தூண்டும் செவ்வாயோ அல்லது சுக்கிரனோ இணைந்து ஏழாமிட தொடர்பு கொள்வதால்தான் அந்த பெண்ணோ /ஆணோ பல பூவில் மது அருந்தும் வண்டினைப்போல காம சுகம் தேடி அலைகின்றனர்.

         இதேபோல செவ்வாய் மற்றும் சுக்கிரன் உடன் அசயர்களான ராகு தொடர்பு கொண்டு அந்த திசை புத்தியோ நடந்தால் அந்த பெண்ணோ /ஆணோ தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் காதல் வயப்பட வைத்து விடுகிறது.மேலும் இக்கிரகங்களோடு சுபர்களான குரு,சந்திர தொடர்பு பெறின் தன்னிலும் உயர் வர்க்க ஆண்/பெண்ணிடம் காதல் வயப்படும் வாய்ப்பு ஏற்படும்.

             இதே போல ஜாதக கட்டங்களில் இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமும்,செக்ஸ் வீரியத்தை தரக்கூடிய மூன்றாமிடமும், காம கற்பனை மற்றும் கற்பு நிலை காட்டும் நான்காமிடமும்,படுக்கை ஆசையை தூண்டும் மனைவி ஸ்தானமான ஏழாமிடமும் மற்றும் படுக்கை சுகத்தை தரக் கூடிய பணிரெண்டாமிடத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

             மூன்றாமிடம்,ஏழாமிடத்துடன் தொடர்பு பெறுபவர்கள் அவர்களது காம வீரியத்தின் காரணமாக கட்டிய துணையைத்தாண்டியும் சுகம் தேட வைத்து விடுகிறது.

            பணிரெண்டாமிடத்தை வலுவாக பெற்றவர்கள் சயன சுகத்தை அடைவார்கள்.இவர்களோடு நான்காம் அதிபதியும்  சேரல் பலம் அதிகம்.

          3-4-7-12 போன்ற இடங்களோடு செவ்வாய்,சுக்கிரன் போன்ற கிரக வலு பெற்றவர்கள் காம எண்ணம் மேலோங்கி இருக்கும்.இக்கிரகங்கள் சுப சாரம் பெறின் மனதால் கற்பனையோடு வாழ்ந்தாலும்,செயலால் தவறு செய்ய பயப்படுவார்கள் .ஆனால் அதே நேரத்தில் பாவ சாரம் பெறின் எதற்கும் அஞ்சாதவர்களாகவும்,சமூக வரண்களிலிருந்து மீறியும் நடப்பர்.

           சிலர் மன சாட்சி அஞ்சாதவர்களாக பழி பாவங்களை செய்வார்கள் எனில் அவர்களது ஜாதகத்தில் பாவிகள் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதுடன் இவை பத்தாமிட தொடர்பு பெற்றிருக்கும்.ஆறாம் அதிபதி பத்தில் வலுப்பெற்றிருக்கும்.

                             



அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோடடை மாவட்டம்.


செல் ; 97 151 89 647
              740 257 08 99


  WhatsApp
  97 151 89 647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

My email
  masterastroravi@gmail.com



My blogspot
AstroRavichandransevvai.blogspot.com


Wednesday 29 November 2017

சாதக பலன் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை --(1)

சாதக பலன் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை -( 1 )


                               
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 132 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                  ஒரு மனித வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாட்டினை ஆராய்ச்சி முறையில் ஆராய்ந்து பலன் சொல்லும் முறையை சோதிட ஆர்வலர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலான பதிவு.

             ஒருவரது சாதகத்தில் பலன் பார்க்கும் போது முதலில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியை கவனிக்க வேண்டும். லக்கனாதிபதிதான் ஒருவருடைய சாதகத்தில் ஒரு மனிதனை வழிநடத்தும் கேப்டன் ஆவார்.லக்கனாதிபதியானது உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் ,வர்க்கோத்தமம் மற்றும் நட்பு என்ற வகையில் பலம் பெற்றிருக்கிறதா ? என கவனிக்கப்படவேண்டும்.

                 அவை மட்டுமல்லாது அவை என்ன நட்சத்திர சாரம் வாங்கி உள்ளது.அந்நட்சத்திர சாரத்தின் அதிபதியானது லக்கனாதிபதிக்கு நட்பாக உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டும்.

                சார அதிபதி லக்கனாதிபதிக்கு  நட்பாக இருக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்.மேலும் லக்கனாதிபதியோடு சேர்ந்துள்ள மற்றும் பார்க்கும் கிரகங்களையும் கவனிக்கப்பட வேண்டும்.

             மேலும் லக்கனத்தில் உள்ள கிரகங்களின் தன்மையையும் கவனிக்கப்படவேண்டும்.இந்த லக்கனத்தில் இருக்கும் மற்றும் லக்கனாதிபதியோடு சேர்ந்திருந்த மற்றும்,பார்க்கும் கிரகங்கள் யாவும் லக்கனாதிபதிக்கு நட்பாக இருக்கவேண்டும்.

                  லக்கனாதிபதியானவர் அம்சத்தில் எவ்வாறு இருக்கிறார் என்ற வகையில் லக்கனாதிபதியின் வலிமையானது நிர்ணயிக்கப்படுகிறது.ராசியில் லக்கனாதிபதியானது பலவீனப்பட்டு இருந்தாலும் அம்சத்தில் பலமடைந்து இருந்தால் அந்த லக்கனாதிபதியானது பலமடைந்துள்ளது என பொருள்படும்.
இதேபோல ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் வர்கோத்தமம் ஆகும்.இதனால் அக்கிரகமானது உச்ச பலனை பெறும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

                லக்கனாதிபதியானது சில நேரங்களில் நீசமடைந்து இருந்தாலும் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சபலம் பெற்று நின்றால் நீசபங்கம் பெற்றிருக்கும்.மேலும் லக்கனாதிபதியானது சந்திர கேந்திரமடைந்து இருந்தாலும் அவை நீசபங்கமடைந்து பலமடைந்து இருக்கும்.எந்த ராசியில் நீசமடைந்து இருந்தாலும் அந்த வீட்டு அதிபதியானது உச்சமடைந்து இருந்தாலோ அல்லது ராசியில் நீசமடைந்த அதே கிரகம் அம்சத்தில் பலமடைந்து இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் பெற்று பலமடைந்துவிடும்.

           இதுபோன்ற பல விவரங்களை கவனிககப்ப்டவேண்டும்.
லக்கனாதிபதி நிற்கும் ஸ்தானத்தை கவனிக்கப்பட வேண்டும்.லக்கனாதிபதியானது சுபராக இருப்பின் அவை கேந்திரங்களில் நிற்க கூடாது.ஏனேனில் கேந்திராதிபதி சுபராக இருந்து கேந்திரங்களில் நின்றால் "கேந்திராதிபத்தித தோஷத்தை "தந்து அதன் பலனை குறைத்துவிடும்.

                  எனவே கேந்திர சுபர் மறைவிடங்களில் அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது நல்லது எனினும் லக்கனாதிபதி மறைவுஸ்தானமேறுவது நல்லதல்ல.
இதேபோல பல விஷயங்களை கவனித்து லக்கனாதிபதியின் பலம் நிர்ணயிக்கப்படவேண்டும்.இதன்பிறகு நடைபெறும் ஜெனன கால திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக இருப்பின் நற்பலனை தரும் .

            இதற்கு அடுத்தப்படியாக சந்திரன் இருக்கும் ஸ்தானமான ராசியையும் லக்கனாதிபதியாகவே கொண்டு பலனறிய முயலவேண்டும்.லக்கனாதிபதிக்கு பார்த்த அதே விதிமுறைகளையே ராசிக்கும் மற்றும் ராசியாதிபதிக்கும் கவனிக்கப்படவேண்டும்.

             ஒருவருக்கு சாதகபலன் கணிக்கும்போது லக்கனம் மற்றும் ராசி இரண்டையையும் அடிப்படையாக வைத்து சாதகபலன் கவனிக்கப்படவேண்டும்.லக்கனம் மற்றும் ராசி இரண்டையும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு திசைபலன் பார்க்கும்போது நடைபெறும் திசையானது ராசிக்கட்டத்தில் என்ன ஸ்தானம் ? என்பதையும் மற்றும் நடைபெறும் திசையின் கிரகமானது சாதகத்தில் எவ்வாறு பலமடைந்திருக்கிறார் ? என்பதையும் கவனிக்கபடவேண்டும்.

              மேலும் நடைபெறும் திசைக்குரிய கிரகமானது என்ன நட்சத்திர சாரம் பெற்றுள்ளது ? என்பதையும் நட்சத்திர அதிபதியானது நடைபெறும் திசைக்கும் மற்றும் லக்கன அதிபதிக்கும் நட்பாக உள்ளதா ? என்பதை போன்ற பல விவரங்கள் ஆராய்ச்சி முறையில் கவனிக்கப்படவேண்டும்.

              அடுத்தபடியாக தனம் ,வாக்கு மற்றும் நேத்திர ஸ்தானமான இரண்டாமிடத்தை எவ்வாறு ஆராய்ந்து பலனளிக்கவேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பலனறியும் முறை தொடரும்...

(தங்களது குடும்ப அங்கத்தினருக்கு ஜெனன சாதகம் கணித்தல் , சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் போன்ற சேவைகளை கட்டண முறையில் #போன்வழியாகவே பலன் பெறலாம்.
தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )

தொடர்புக்கு

செல்
740 257 08 99
     97 151 89 647

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

                           
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
      M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My website
  AstroRavichandransevvai.blogspot.com

Tuesday 28 November 2017

"கிரகங்கள் படுத்தும் பாடு--(12 )

கிரகங்கள் படுத்தும் பாடு-(12) 


                       
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு எனும் தொடர்பதிவில்
"  இன்று ஒரு சாதகரின்  தந்தையின் நிலை அவரால் சாதகருக்கு உயர்வு உண்டா ?
சிலருக்கு தந்தையின் பெயரை சொல்லி இவர் இன்னார் பிள்ளை என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதகரை விட அவர்களது பெற்றோர்கள் புகழுடையவர்களாக இருப்பார்கள்.எவ்வளவு கஷ்டப்பட்டு புகழ் பெற முயன்றாலும் அவர்களின் புகழை விஞ்ச முடியாது.
ஒருவரின் தந்தை பற்றி அறிந்து கொள்ள நவகோள்களில் முதன்மையான சூரிய பகவானின் பலத்தையும்,ராசிக்கட்டங்களில் மூன்றாவது திரிகோணமான ஒன்பதாம் இடத்தின் நிலையைப் பற்றியும் பார்க்க வேண்டும்.

ஒருவரின் சாதகத்தில் சூரிய பகவான் பலம் பெற்று சுப ஸ்தானமேறினாலும் மற்றும் ஒன்பதாம் இடத்தில் சுபர் நின்று ஒன்பதாமாதிபதி கேந்திர ஸ்தானமேறி ஆட்சி உச்சம் போன்ற பலம் பெற்று சுபர் சேர்க்கை,சாரம் மற்றும் பார்வை பெற்றால் தந்தையால் சாதகர் புகழடைவார்கள்.

ஒரு சிலருக்கு தந்தையால் எவ்வித பலனுமின்றியும்,இ
தந்தையை இழக்கும் நிலையோ ஏற்படுகிறது.மீறி இருந்தாலும் பிணி பீடையுடன் இருப்பார்கள்.இதற்கு காரணம் ஒருவரின் சாதகங்களில்
பின்வரும் அமைப்பை பெற்றிருப்பதே காரணமாகும்.
ஒருவரின் சாதக கட்டங்களில் சூரிய பகவான் நீசம் ,அஸ்தமம் மறைவு மற்றும் பகை பெற்று ஒன்பதாமாதியும பலமிழந்து ஒன்பதாமிடத்தில் பாவிகள் சூழ்ந்திருப்பின் தந்தையால் சாதகருக்கு எவ்வித பலனும்மில்லை.ஒரு சிலருக்கு  இளவயதில் தந்தை இழக்கும் சூழ்நிலையோ ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தந்தை அமைந்துவிடுவதற்கு தமது சாதகத்த்தில் உள்ள" கிரகங்கள்
படுத்தும்  பாடு" தான் காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கவலை மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் விதிப்பலனை என்ன செய்ய முடியும்
சூரியனின் மைந்தனான சனிபகவானும் ,சூரிய பகவானும் சேர்ந்தோ அல்லது சம சப்தமாக பார்த்துக்கொள்பவர்களுக்கு
தந்தை -மகன் உறவு அன்பாக அமைவதில்லை.இதைப்போல
தந்தை-மகன் உறவு நிலையை பாதிக்க கூடிய கிரக சேர்க்கைகளாவன
சூரியன்+ராகு,சூரி+கேது,சூரி+சனி,மற்றும் சூரியன்+செவ்வாய் முதலிய சேர்க்கை மற்றும் பார்வைகளும் தந்தை -மகன்
உறவுநிலைகளை அன்பாக இருக்கவிடுவதில்லை.
இதேபோல ஒன்பதாமிடத்தையும் சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்பட்டாலும்,அந்த ஸ்தானம் பலமின்றி சுபர் பார்வையற்று பாவிகள் கூடினாலும் இவர்களுக்கு இடையேயான உறவுநிலையோ அல்லது அவர்களால் எவ்வித பலனும் ஏற்படுவதில்லை.

                            

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
Teacher & Astrologer
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் :97 151 89 647
                 740 257 08 99

        வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
My Email
masterastroravi@gmail.com

Monday 27 November 2017

"கிரகங்கள் படுத்தும் பாடு--( 11 )

கிரகங்கள் படுத்தும் பாடு -(11)


                                
ஸ்ரீபத்ரகாளியம்மன்துணை!

               ஒருவர் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் வினாவாகவும் அதன் விடையாகவும் இருந்து வழிநடத்தும்  கிரகங்களால் உண்டாகும் விளைவுகளைப்பற்றிய தொடர் பதிவு.
ஒரு சிலர் என்னதான் காசு பணம் ஈட்டினாலும் எப்பொழுதும் கடன் தொல்லை அவர்களை வாட்டி வதைக்கும்.
"கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினார் இலங்கை வேந்தன்" என கம்பர் தனது ராம காவியத்தில ராவனன் படும் சொல்ல முடியாத வேதனைக்கு ஈடாக என்ன வேதனை என சிந்தித்தபோது அதனை கடன்பட்டவரின் மனநிலையோடு ஒப்பிடுவார்.அந்த அளவுக்கு வேதனை தரக்கூடிய கடன்காரர்களாக ஒருவர் இருப்பதற்கு அவரது சாதகங்களில் சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம் வலுப்பெற்றிருப்பதே முதன்முதல் காரணமாகும்.

          சிலராது சாதகங்களில் தனாதிபதி,தனஸ்தானம் மற்றும் தனக்காரகர் குரு போன்றவை பலவீனமடைந்து சத்ரு ஸ்தானமான ஆறாமிட வலிமையானால் அவன் தனம் ஏதும் ஈட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருப்பர்.இவர்கள் கடன்காரர்களாக இருப்பது நன்று.இல்லையெனில் பிணியாலோ அல்லது சத்ருக்களால் தொல்லைகள் மிகலாம்.

          ஆனால் தனம்,தன ஸ்தானம் மற்றும் தனகாரகர்குரு பகவான் போன்றவை வலுப்பெறுப்பெறுவதோடு எதிரி ஸ்தனமான ஆறாமிடமும் வலுப்பெற்றால் சொத்து பெருகும் அளவிற்கு கடனும் பெருகும்.

              ஒரு சிலருக்கு சம்பாத்தியமும் இல்லை ,எவ்வித கடனும் இல்லை என இருப்பார்கள் இவ்வித அமைப்புடையவர்களது சாதகத்தில் தனம் எனப்படும் இரண்டாமிடம் மற்றும் இதன் அதிபதி ,தன காரகர் குரு பகவான் மற்றும் ஆறாமிடமும் பலவீனப்பட்டிருக்கும்.

           ஒருவரின் சாதகத்தில் ஆறாமிடம் நீசம் பெற்றிருந்தால் அவருக்கு எதிரி கிடையாது.அவ்வாறு இருப்பதால் அவர்களுக்கு எதிரியால் செய்யப்படும் எதிர்மறையான செயல்கள்(திட்டுதல்,ஏவி விடுதல் ,புள்ளி வைத்தல்.....) சாதகரை வந்து தாக்குவதில்லை.மாறாக திரும்ப அவர்களையே தாக்கிவிடுகிறது.
இவை மட்டுமல்லாமல் பிணி (நோய்) தொல்லை அதிகம் இருப்பதில்லை.எல்லாவற்றிர்க்கும் மேலாக கடன் தொல்லையும் இருப்பதில்லை.

              ஆறாமாதிபதியை லக்கனத்தில் கொண்டவர்கள் பிணியுடையவர்களாக  இருப்பார்கள்.மேலும் கிரிமினலாக சிந்திக்கும் முரட்டுக்குணம் கொண்டிருப்பார்கள்.

          இரண்டாமிடத்தில் கொண்டவர்கள் எதிரியின் சொத்து தனக்கு சேரும்.எதிர்ப்பவரின பலம் பாதி கிடைக்கும்.குடும்ப வாழ்க்கை பாதிக்கும்,வாக்கு சுத்தம் இல்லாது போகும்,கல்விநிலை பாதிக்கலாம் அல்லது வழக்கறிஞர் போன்ற கிரிமினலாக சிந்திக்கும் கல்வி பெறலாம்.

          மூன்றாமிடத்தில் ஆறாமாதிபதி இடம்பெற்று அந்த வீட்டிற்குரியவனும் மறைவு ஸ்தானத்திற்கு சென்றால் "கெட்டவன் கெட்டில் ராஜயோகம்"
என்ற வகையில் "விபரீத ராஜயோகத்தை "கொடுக்கும்.மேலும் சாதகரது சகோதர ஸ்தானம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.சாதகர் வீரியம் மிக்கவராகவும் ,பலம்மிக்கவராகவும் இருப்பர்.

            நான்காமிடத்தில் இருந்தால் தன் சுகம் தாய் சுகம் பாதிப்பதோடு வண்டி வாகனயோகமும் பாதிக்கப்படலாம்.கல்விநிலையில் தடை ஏற்படலாம்.

               ஐந்தாமிடத்தில் இருந்தால் தனது புத்தியானது எதிர்மறையாக இருப்பதோடு புத்திரம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க வாய்ப்பு உண்டு.

                 ஆனால் அதேநேரத்தில் ஆறாமிடத்தில் ஆறாமாதிபதி வலுப்பெற்று அந்த இடத்தில் ராகு போன்ற அசயர்கள் வலுப்பெற்றிருந்தால் யாருக்கும் அஞ்சாத பலவானாக இருப்பான் .
ஏழாமிடத்தில் இருந்தால் மனைவி ஸ்தானம் பாதிக்கப்படலாம்.தாமத திருமணம் ஏற்படும்.

              எட்டாமிடத்தில் இருந்தால் விபரீத ராஜயோகம் ஏற்படலாம்.எதிரியால் கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒன்பதாமிடத்தில் இருந்தால் தந்தை ஸ்தானம் பாதிக்கப்படலாம்.தான தர்ம குணம் ஏற்படாது.பாக்கியம் தடைபடலாம்.

             பத்தாமிடத்தில் இருந்தால் சிறந்த வழக்கறிகராக இருப்பான்.இதற்கு அந்த ஸ்தானமும் வலுப்பெற்றிருக்க வேண்டும்.மாறாக பலவீனப்பட்டால் அரசுக்கு விரோதமான தொழிலில் ஈடுபடுவான்.

              பதினொறாமிடத்தில் ஆறாமாதிபதி இடம்பெற்றால் எதிரியால் லாபம் அடையலாம்.மூத்த சகோதரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.மறைமுக லாபம் பெறலாம்.

               பணிரெண்டாமிடத்தில் ஆறுக்குடையவன் ஏறினால் மாளிகை போன்ற வீடு அமையும்.மேலும் விபரீத ராஜயோகம் ஏற்படலாம்.வெளிநாட்டு யோகம் உண்டு..

            ஆறாமாதிபதி பணிரெண்டு ராசிகளில் அமரும்போது ஏற்படும் நன்மை தீமைகளைப் பார்த்தோம்.ஆனால் அதேநேரத்தில் ஆறாமதிபதி இருந்த ஸ்தானாதிபதி வலுப்பெற்று சுபர் பார்வை பெற்றிருப்பின் ஆறாமதிபதியால் ஏற்படும் பாதிப்பு குறைய வாய்ப்பு உண்டு.

நன்றி.வாழ்க நிறைவுடன் !

                                


        அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
Teacher & Astrologer
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்

செல் :97 151 89 647
Cell : 740 257 08 99

    Whatsup no
97 151 89 647

(சோதிடம் போன் வழியாக பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை  மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )

My email
masterastroravi@gmail.com

My website address
AstroRavichandransevvai.blogspot.com
++++++++++++++++++++++++++++

Sunday 26 November 2017

"விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் "

விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்»»


                           
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

          அன்பிற்காக ஏங்காத உயிர்களே இல்லை.அது போல அங்கீகாரத்திற்காகவும்,தான் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.

  ஆதலால்  ஒவ்வொறு மனிதனும் பிறர் தரும் விமர்சனங்களை வைத்தே தன்னை எடை போடுகிறான்.பிறர் தரும் விமர்சனங்கள் உண்மையான அக்கறை உணர்வோடு தமது வளர்ச்சிக்காக தருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

          ஆனால் பிறர் தரும் விமர்சனங்களில் பெரும்பாலானவை  பொறாமை உணர்வோடு அல்லது வளர்ச்சி தடுக்கும் நோக்கில்தான் இருக்கும்.அதற்கு அவர்களை குறை கூறுவதில் பயனில்லை.

          மனித உளவியல்படி மனித மனம் "ஒவ்வொருவரும் தான் பிறரை விட சிறந்தவன் "என எண்ணுமாம்.அவ்வாறு தன்னை விட சிறந்த ஒரு நபரை பழகும் நபர்களிடமோ அல்லது வேலை பார்க்கும் அலுவலங்களிலோ பார்க்கின்றபோது அவர்கள் தன்னைவிட சிறந்தவர்கள் இல்லை என்பதை செயலிலும்,அறிவிலும் போட்டி போட போதிய திறனில்லாதவர்கள் அவர்களிடம் ஏதாவது குறையோ அல்லது சிறு தவறோ எப்பொழுதாவது நடக்குமா ? என எதிர்பார்த்து காத்திருப்பார்கள் ஆனால் "தவறு செய்வது மனித இயல்பு" .எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை பெரிதாக விமர்சனம் செய்வார்கள்.

            எனவே எல்லாருடைய விமர்சனங்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

       இவ்வாறு விமர்சனங்களையோ அல்லது கெட்ட எண்ண உணர்வோடு தாக்கும் நோக்கோடு வெளியிடப்படும் வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவோ அல்லது அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து மனதிற்குள் அனுமதிக்காமல் செய்யவோ மனப்பயிற்சி அவசியம்.

                               

          கொளதம புத்தர் ஒரு முறை வீதியில் உலாவரும்போது அவரது கருத்துக்களை பிடிக்காத ஒருவன் அவர் எதிரில் வந்து முகத்தில் எச்சில் துப்பி விட்டான்.இவர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டோ துடைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.இதனை பார்த்த அவனது சீடர்கள் "ஏன் அவனை எதுவும் செய்யாமல் விட்டீர்கள்?" என வினவ "அவன் ஏதோ சொல்ல வந்தான் சொல்வதற்கு அவனுக்கு வார்த்தை கிடைக்காததால் அவ்வாறு செய்துவிட்டான்.இது அவனது பிரச்சினை அதைப்பற்றி நாம் ஏன் வருத்தப்பட வேண்டும் ? "
என்றார்.

      "புத்தர் தான் துப்பியும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டே  துடைத்துவிட்டு சென்றது அவனது உள்மனதை ஆழமாக பாதித்து அவனுக்குள் உள்மாற்றம் நிகழ்ந்தது.மறுநாள் அந்த வீதிவழியாக கொளதம புத்தர் வருவாரா ? என எதிர்பார்த்து காத்திருந்தான்.அவன் எண்ணியதுபோல அவ்வீதி வழியாக வருவதை கண்ட அவன்"புத்தரது காலை கட்டி பிடித்து அழுதான்.இப்பொழுதும் அவர் எந்தவித வார்த்தைகளும் சொல்லாமல் செல்வதை கண்ட சீடர்கள் மனது பொறுக்கமுடியாமல் புத்தரிடம் "நேற்றுதான் அவன் தவறாக நடந்து கொண்டான் எதுவும் பேசாமல் சென்றீர்கள்.அதில் நியாயம் இருந்தது ஆனால் இன்றோ அவன் தான் தவறை உணர்ந்து மன்னித்துவிடுங்கள் ? என கதறுகிறான்.நீங்கள் எந்த ஆறுதலும் சொல்லாமல் வருகிறீர்களே? " என ஆதங்கத்துடன் வினவ இப்பொழுதும் கொளதம புத்தர் மாறாத புன்னகையுடன் "அவன்  என்னிடம் இன்றும்  ஏதோ ஒன்று சொல்ல வருகிறான் ஆனால் அவனிடம் வார்த்தைகள்  கிடைக்கவில்லை ?"  என்கிறார் .

         அமைதியாக.அவர் திட்டி உமிழப்பட்ட எச்சிலையும்,மனம் திருந்தி அழுத கண்ணீரையும் ஒரே மாதிரியாகவே எடுத்துக்கொண்டார்.ஆனால் அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றதே அவனது ஆழ்மனதில் ஒருவித இரசாயன மாற்றத்தை  உண்டாக்கியிருக்க வேண்டும்.

        எனவேதான் இயேசுநாதர் கூட "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்று கூறியிருப்பார்.ஒரு கன்னத்தில் அறையும்போது பதிலுக்கு அறைய ஆரம்பித்தால் அங்கே வன்முறை விதைக்கப்படுகிறது மாறாக மறு கன்னத்தை காட்டும்போது அவனது மிருககுணம் மிரள்கிறது.அந்த மிருககுணமானது வஞ்சக எண்ணத்தோடு அடிக்கும்போது அங்கே அந்த மிருகதன்மைக்கு எதிர்ப்பில்லாமல் போனவுடன் அங்கே சிந்திக்க ஆரம்பிக்கிறது.ஆஹா ! நாம் தவறு செய்து விட்டோம்? என சிந்திக்க ஆரம்பிக்கிறது.சிந்திக்க ஆரம்பித்த அடுத்த கணமே அவனிடம் தெய்வீக குணம் மேலோங்க ஆரம்பித்துவிடுகிறது.

          அவனிடம் அவ்வித தெய்வீக தன்மை மேலோங்க செய்யும் நோக்கமே .மேற்கண்ட இரு மகான்களின் செயலும்,கருத்தும் ஆகும்.

             ஆம் இவர்களைப்போல நாம் நடந்து கொள்வது சாதரண மனிதர்களால் இயலாத காரியம்தான்.அதனால்தான் அவர்களை மகான்கள் என அழைக்கிறோம். கொளதம புத்தரை பின்பற்றி புத்த மதம் இந்தியாவில் உருவானது என்றாலும் சீனா,ஜப்பான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விருட்சமாக வளர்ந்துள்ளது.அதேபோல இயேசுநாதரின் கருத்துக்களை பின்பற்றி கிறிஸ்தவமும் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது.

                            


             இதே போல ஒரு துறவி எல்லாவற்றையும் துறந்து விட்டு வயல்வெளியில் படுத்திருந்தார்.அவர் அவ்வாறு படுத்திருக்கும்போது தலைக்கு தலையனையாக வரப்பின் மீது தலையை வைத்து படுத்திருந்தார்.அந்த வழியாக தண்ணீர் தூக்க சென்ற துடுக்குதனமான இளம்பெண்கள் " இங்கே பாராடி எல்லாவற்றையும் துறந்த துறவிக்கு தலையனை சுகத்தை விட மனசு வரவில்லை ? " என கிண்டலடித்து கொண்டு சென்றார்கள்.

        இதைக்கேட்ட அந்த துறவி"   ஆஹா ! அந்த பெண்கள் சொல்வது உண்மைதான் எல்லாவற்றையும் துறந்த நமக்கு எதுக்கு தலையனை சுகம்  எதுக்கு ? என தனக்குள்ளே கேள்விக்கேட்டுக் கொண்டு தலையை வரப்பிலிருந்து எடுத்துவிட்டு தரையில் தலை வைத்து படுத்திருந்தார்.

          தண்ணீர் தூக்கிக்கொண்டு திரும்பி வந்த பெண்கள் இவர் தரையில் தலை வைத்து படுத்திருந்ததை பார்த்த அந்த பெண்கள் " இவரெல்லாம் ஒரு துறவியா ? அடுத்தவங்க என்ன சொல்றாங்க ? என காது கொடுத்து கேட்டுக்கொண்டு அதுப்படி தன்னை மாற்றிக்கிறாரே ? இவருக்குனு ஒரு சுய புத்தி இல்லையா ? என பேசிக்கிட்டு போனாங்க ? "

        இப்படி அடுத்தவர்கள் பேசுவதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் அந்த துறவி நிலைதான் ஆகும்.எனவே அடுத்தவர் விமர்சனங்களை முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னைப்பற்றிய ஒரு சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.இதற்கு அதிக பயிற்சியும்,அனுபவமும் தேவைப்படுகிறது.நல்ல சுய முன்னேற்றம் தரும் நூல்களை தேடிப்படிக்க வேண்டும்.கற்றறிந்த சான்றோர்களின் சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்களை கேட்க வேண்டும்.யோகா,தியானம் , மூச்சுப்பயிற்சி மற்றும் நாடிச்சுத்தி போன்றவைகளை அன்றாட தினசரி வாழ்வில் நேரத்தை ஒதுக்கி செய்ய வேண்டும்.நல்ல நண்பர்களை துணையாக கொள்ள வேண்டும்.இறை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

           ஒரு சிலர் தாம் வேலை பார்க்கும் இடங்களிலோ அல்லது உறவினர்கள் மற்றும் அண்டை அயலார் செய்யும் விமர்சனங்களை பெரிதாக மனதிற்குள் போட்டு குழப்பிக்கொண்டு நோய்வாய்படும் அளவிற்கோ அல்லது தற்கொலை வரைககோ சென்றுவிடுகிறார்கள்.

                          


            எனவே "வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ?" என எடுத்துக்கொண்டு நாம் உயிரோடு வாழ்வதைவிட பிறரின் விமர்சனங்கள் முக்கியமில்லை.

    "இன்று தவறாக இருக்கும் ஒன்று நாளை சரியாக மாறலாம்."
நாம் சில விஷயங்களை அல்லது பிரச்சினைகளை கற்பனை செய்து பெரிதாக நினைத்து பயப்பட்டுக்கொண்டு இருப்போம்.ஆனால் ஆந்த பிரச்சினை நம்மை துன்பப்படுத்தாமல் எளிமையாக கடந்திருக்கும்."ஆஹா ! இதுக்கு போய் இவ்வளவு மனதை உழட்டிக்கிட்டோம் ?" என நினைத்து வருத்தப்பட தோன்றும்.எனவே நடிகர் விஜய் ஒரு படத்தில் கூறும் வசனம்போல " எவ்வளவோ பார்த்திட்டோம் ,இதுவா பார்க்க முடியாது ? 'என்பார்.அதுபோல "எதுவும் நிரந்தரமல்ல இந்த நிலையும் மாறும் ?" என்ற மனநிலையோடு "கிடைக்கப்போகும் பலனை பற்றி பெரிதும் எண்ணாமல் அதை இறைவனிடம் விட்டு நமது கடமையைச்செய்வோம்.


      கவிஞர் கண்ணதாசன் கூறியதுப்போல
" நாளையப்பொழுதை இறைவனுக்கு அளித்துவிட்டு நடக்கும் வாழ்விலே அமைதியைத்தேடு
உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதியைத்தேடு
எதையும் தாங்கும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி நிலவும்
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் "
என்ற கவி வரிகளோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

     மன அடிப்படையில் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவை இப்பதிவிற்கு பல மணிநேரங்களை செலவழித்திருக்கிறேன்.நீங்கள் சில விநாடிகள் செலவழித்து படித்த இப்பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யுங்கள்.

                                     


                                  
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc ,MA, BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்


செல் : 97 151 89 647
                 740 257 08 99


  எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647.


(தங்களது சாதகத்தினை போனின் வழியாக பார்க்க விரும்புவோர்கள் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு )

Saturday 25 November 2017

**யோனி பொருத்தம்--ஓர் ஆய்வு **

**யோனிப்பொருத்தம் -ஓர் ஆய்வு **

                                

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 183 )

செவ்வாய்பட்டி,  அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

          இரு மனங்கள் இணையும் திருமணம் எனும் பந்தத்திற்க்கு பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகள் இருவரும் தாம்பத்ய உறவினை சமபோகமாக ஒருவரை ஒருவர் மனநிறைவினை தரக்கூடிய வகையில் தாம்பத்திய உறவு சுகமாக அவர்களுக்கு இடையில் இருக்குமா ? என்பதை அறிந்து கொள்ள "யோனி பொருத்தம் " எனும் ஒரு வித விவாகதசவித பொருத்தம் பார்க்கப்படுகிறது.

          இல்லற வாழ்வில் ஈடுபடும் தம்பதிகளுக்கு இடையே அவர்களது அந்தரங்க வாழ்வில் அவர்களுக்கு இடையே உடன்பாடும்,அன்னியோன்யமும் இல்லாதபோது அவர்களுக்கு இடையே மெல்ல ஒருவித பிரிவினை வர வாய்ப்புகள் உள்ளது.இதன் விளைவாக அவர்களுக்கு இடையே மன அடிப்படையில்  சிறு விரிசல் வந்து பிரிவினையை நோக்கியோ அல்லது தடம் மாறி செல்வதற்கான வாய்ப்புகளோ உள்ளது.

        இன்றைய நவ நாகரிக அபரிதமான தொழில்நுட்ப வளர்ச்சியில் மனம் அடக்க தெரியவில்லை எனில் பிரச்சினைகள் விபரீதத்திற்க்கு இழுத்து சென்றுவிடுவதால் யோனிபொருத்தம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய பொருத்தங்களில் ஒன்றாகும்.

                         

    யோனி பொருத்தத்திற்க்கு ஒவ்வொரு நட்சத்திற்க்குரிய விலங்குகளின் யோனிகளை ஓப்பிட்டு பார்த்து பொருத்தம் செய்யப்படுகிறது.

    யோனி பொருத்தம் இல்லாதபட்சத்தில் அவர்களது சாதக கட்டத்தில்  தாம்பத்திய உறவில் திருப்தி அடையக்கூடிய கிரகநிலைகள் இருக்கும்பட்சத்தில் விவாகம் செய்து கொள்ளலாம்.

எலிக்கு --பூணை ,பாம்பு
யானைக்கு--சிங்கம்,மனிதர்
புலிக்கு--மான்,பசு,நாய்,எருமைக்கடா
குரங்குக்கு--ஆடு
பாம்புக்கு--கீரி,ஆடு
பூணைக்கு--நாய்,புலி

மேற்கண்டவை ஒன்றுக்கொன்று பகையோனிகள் ஆகும்.

  இது போன்ற அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் நட்சத்திர பொருத்தத்தில் இருந்தால் யோனி பொருத்தம் இல்லை எனலாம்.

     காரணத்தை விளக்க முற்பட இயற்கையில் எலி ,பூணைகளுக்கு இடையே ஒருவித பகைமை தனமை இருக்கும் என்பதால் இவ்வித அமைப்பு  உடைய தம்பதிகளை திருமன பந்தத்தில் இணைத்தால் வாழ்க்கை பயணம் சிறக்காது.

     இதேபோல புலி உள்ளவர்களுக்கு ,மானை மிருகமாக கொண்ட நட்சத்திரத்தினை இணை சேர்க்ககூடாது. புலியானது மானை எளிதில் வேட்டையாடிவிடும். அவர்களுக்கு இடையே தாம்பத்ய திருப்தி ஏற்படாது என்பதால் பொருத்தம் போடக்கூடாது என முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

      இவ்வாறு நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் இல்லாத தம்பதிகளை  கட்ட அடிப்படையில் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது பாதிப்பு வராது எனும் சூழலில் விவாகம் செய்யலாம்.

       கட்ட அடிப்படையில் தம்பதிகளது சாதக கட்டத்தில் காமக்காரகன் செவ்வாய்,சுக்கிரன் மற்றும் காமநிலைகளை கண்டறிய உதவும் மூன்று, நான்கு,ஐந்து,ஏழு மற்றும் பணிரெண்டாம் இட அதிபதிகளை ஆராய்ந்து பார்த்து அவை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லாத சூழலிலும் அவர்கள் விவாகம் செய்து கொள்ள பரிந்துரைக்கலாம்.

                            

       காமத்தின் களம் மனமே ஆகும்.மனம் செய்யும் கற்பனைகளைப்போல உண்மைநிலையில் அவ்விதம் அமைவதில்லை.எனவே மனோகாரகன் சந்திரன் பலமாக அமையும் பட்சத்தில் தன்னை கட்டுபடுத்தி ஆளும் தன்மை படைத்தவர்களாக இருப்பர்.

  ஒருவரது காமத்திற்க்கு நல்ல வடிகாலாக அமையும் வீரியகாரகன் எனப்படும்  செவ்வாய்பகவானின் பலம் அவசியம்.செவ்வாய் இரத்தத்திற்க்கும்,இரத்தத்தில் உள்ள எலும்பு மஞ்சைகளுக்கு மற்றும் விந்து,அண்ட அணுக்களுக்கும் காரகர் ஆவார்.

  இந்த காம காரகர் செவ்வாய்பகவானைப்போலவே அந்தரங்க இன்பங்களை அள்ளிதரும் மன்மதன் சுக்கிரபகவான் ஆவார்.

        சாதக கட்டத்தில் சுபர் பார்வை பெறாத சுக்கிர பகவான் உடன் சனி அல்லது ராகு சேர்க்கை பெற்ற அமைப்பை பெற்றவர்கள்,

         இதேபோல சுபர் பார்வை அற்ற செவ்வாய் பகவான் உடன் ராகு அல்லது சனி சேர்ந்திருக்கும் அமைப்பை பெற்றவர்கள்,

          சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவானை சாதக கட்டத்தில் நான்கு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் பெற்பவர்கள்,

      சனி,செவ்வாய், சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்று இருப்பவர்கள்,

     சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்ற அமைப்பை பெற்றவர்கள்,

இதுபோன்ற மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு கட்டாயம் யோனி பொருத்தம் அவசியம் ஆகும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

தொடர்புக்கு

  வாட்ஸ்அப்
     97 151 89 647

        செல்
   740 257 08 99
      97 151 89 647

                             
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
      M.Sc ,MA ,BEd,
  ஆசிரியர் &  சோதிட ஆராய்ச்சியாளர்,
  ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.