Wednesday 13 May 2020

டிகிரி அடிப்படையில் சாதக பலன்களை கணிப்பது எப்படி?

டிகிரி அடிப்படையில் சாதக பலன்களை கணிப்பது எப்படி?


                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     "சாதக கட்டத்தில் ஒரு கிரகமானது எந்த ராசியில் இடம் 
பெறப்போகிறது ? " என்பதனை நட்சத்திர பாத சாரமே முடிவு செய்கிறது.

    அதேபோல ஒரு கிரக வலிமையினை முடிவு செய்ய அந்த கிரகமானது எத்தனை பாகையில் (degree) ராசி சக்கரத்தில்  அமைந்துள்ளது என்பதனை பொறுத்தே அமைகிறது.

    முப்பது பாகை மற்றும் ஒன்பது பாதம் கொண்ட(21/4 நட்சத்திரம்) ஒரு ராசியில் ஒரு கிரகமானது ஒரு பாதம் கடக்க 3 பாகை 20 கலை (3°20') கடக்க வேண்டும்.

    முப்பது பாகை 
கொண்ட  ஒரு ராசியில் ஒரு கிரகமானது எத்தனையாவது பாகையில் நிற்கின்றன என்பதனை பொறுத்தே அக்கிரகமானது அதே ராசியில் மற்ற கிரகங்களுடன் கொண்ட தொடர்பினை அளந்தறிய இயலுகிறது.

     ஒரு ராசியில்
 8 - பாகைக்குள் நிற்கின்ற கிரகமானது மிகவும் நெருங்கிய நிலையில் நிற்பதாக கருதப்படுகிறது.

 ஒரு கிரகமானது ராசி சக்கரத்தில் 
13 -பாகைக்குள் இருக்கும் போது மட்டும் நெருங்கி இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 ஒரு ராசி சக்கரத்தில் ஒரு கிரகமானது 
23 -பாகைக்கு மேல் மற்ற கிரகத்திலிருந்து விலகி  நிற்பின் அக்கிரகமானது ஒரே ராசியில் இரு கிரகங்கள் இணைந்து காணப்பட்டாலும் இணைவாக கருதப்படவில்லை.

   உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் இரண்டு பாகையில் நின்று ராகு பகவான் முதல் எட்டு பாகைக்குள் நிற்கின்ற அந்த ராகு பகவான் சூரியனின் காரக பலனை பாதிக்க செய்வார்.கிரகண தோஷத்தை உண்டாக்குவார்.

   அதே நேரத்தில் 
22 -பாகை
 விலகி நிற்கின்ற ராகு பகவான் சூரியனின் காரக பலன்களை பாதிப்பதில்லை.

  சூரியனை நெருங்கி செல்லும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகின்றன.

    ஸ்தான அடிப்படையில் நீசம் பெற்ற கிரகங்கள் சூரியனை நெருங்கி செல்லும் போது அஸ்தமனம் அடைகின்றானவே  ? என நீங்கள்  கேள்வி எழுப்பினால் அஸ்தமனம் அடைகின்றது என்பதே சரியான பதிலாக அமையும்.

 சூரியனில் இருந்து குறிப்பிட்ட பாகைக்குள் இருக்கின்ற கிரகங்கள் அஸ்தமனம் அடைகின்றன. அஸ்தமனம் அடைந்த கிரகம் பலம் குன்றிப் போகும் .

செவ்வாய்- 17 பாகைக்குள்,

 புதன்- 11 பாகைக்குள்

குரு- 15 பாகைக்குள்,

 சுக்கிரன்- 9 பாகைக்குள்

சனி -17 பாகைக்குள்

 சந்திரனுக்கும், ராகு கேதுக்களுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை. ஒரு சிலர் சூரியனுக்கு 12 பாகைக்குள் சந்திரன் இருந்தால் அஸ்தங்கம் அடையும் என்று சொல்லுகிறார்கள். அது யுக்திக்கும் பொருந்தவில்லை மற்றும் அனுபவத்துக்கும் ஒத்துவரவில்லை. சந்திரன் சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும் கிரகம் அதற்கென்று தனி ஒளி இல்லை . அது சூரியனை நெருங்கும்போது இன்னும் அதிகமாக ஒளியை வாங்கிப் பிரதிபலிக்குமே தவிர ஒளி குன்றிவிட வாய்ப்பில்லை. எனவே சந்திரன் தன் ஒளி மங்கி அஸ்தங்கம் அடைந்து விட்டது என்று சொல்வது பொருந்தாது.

    இதேபோல புதனுக்கும் அஸ்தங்க தோசம் இல்லை என்பது ஒரு சிலரின் கருத்தாகும். எனக்கும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமைகிறது.

     ஒவ்வொரு கிரகமும் எந்த ராசியில் எத்தனை பாகையளவில்  மூலதிரிகோணம் மற்றும் உச்சநிலை  அடைகிறது என்ற விவரத்தை பின்வருமாறு பார்ப்போம்.

 சூரியன்- சிம்ம ராசியில் முதல் 20 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். அடுத்துள்ள 10 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  சந்திரன்- ரிஷப ராசியில் பின்னுள்ள 27 பாகையில் மூலத்திரிகோணம்  ஆகும்.
முதல் 3 பாகைகள் வரை உச்ச நிலையில் இருப்பார்.

  செவ்வாய்- மேஷ ராசியில் முதல் 12 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். அடுத்துள்ள 18 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  புதன்- கன்னி ராசியில் நடுவில் உள்ள ஐந்து பாதைகள் மூலத்திரிகோணம் ஆகும். இதற்கு முன் 15 பாகைகள் வரை உச்சம் ஆகும்.அதற்குப் பின் பத்து பாகைகள் வரை ஆட்சி நிலையில் இருப்பார்.

  குரு தனுசு ராசியில் முதல் 10 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். பின்னுள்ள 20 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  சனி- கும்ப ராசியில் முதல் 20 பாகைகள் மூலத்திரிகோணம் ஆகும். பின் உள்ள பத்து பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

   செல்
    9715189647
      7402570899

                     


      அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை.

Email : masterastroravi@gmail.com

..........

பலனைக் கணிப்பதில் சவாலான நிழற் கிரகங்கள்

பலனை கணிப்பதில்    சவாலான 
நிழற்கிரகங்கள்!

                                

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     ஒரு ஜாதகத்தில் ஜோதிடருக்கு பலன்களை கணிப்பதில்  மிக சவாலாகவே அமையக்கூடிய கிரகங்கள் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கின் நவகோள்களில்
  "நிழற் கிரகங்கள்" என்றும்,  "சாயா கிரகங்கள் " என்றும் அழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராகு மற்றும் ஸ்ரீ கேது பகவானை குறிக்கும்.

   ஸ்ரீ ராகு பகவான் எதையும்  பெரிதுபடுத்திக் காட்டுபவர் பிரம்மாண்ட நாயகன் ஆவர்.

 ஸ்ரீ கேது பகவான் எதையும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் தான் என்ற அகங்காரத்தை விடுத்து தன்னை சுருக்கிக் கொள்ளும்  மணநிலையை மனித குலத்துக்கு தருபவர் ஆவார்.

  ஸ்ரீ ராகு பகவான் கண்ணுக்குத் தெரியாத சிறிய நுண்ணியதாக அல்லது நுண்ணுயிரியாக இருந்தாலும் அதை பெரிதுபடுத்தி காட்டுபவர்.

    ஸ்ரீ கேது பகவான் கண்ணுக்குத் தெரியாத பல சூட்சும உண்மைகளை தன் அகக் கண்ணால்  சுருக்கமாக கண்டு துய்ப்பவர் ஆவார்.

   நவகோள்களில் 
ஸ்ரீ ராகு மற்றும் ஸ்ரீ கேது பகவான் மட்டுமே இணைந்து இருக்காத ஒரு கிரகங்களாகும்.
விதிவிலக்காக ஹோரா சக்கரத்தில் மட்டுமே இணைந்து காணப்படும்.

    ஸ்ரீ ராகு மற்றும் கேது பகவான் மட்டுமே கிரகங்களில் பின்னோக்கி நகரக்கூடிய கிரகமாகும் . இவ்வாறு இயற்கையாகவே பின்னோக்கி நகர கூடிய தன்மை நிழல் கிரகங்களுக்கு உண்டு என்பதால் அவற்றுக்கு வக்ர கதி கிடையாது.

 எல்லா ஜாதகக் கட்டங்களிலும்  இராகு பகவான் இருக்குமிடத்திற்கு 180 டிகிரியில் ஸ்ரீ கேது பகவான் அமர்ந்து சஞ்சாரம் செய்வார்.

 சாதகருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாக பொருள் சேர்ந்து கோடீஸ்வரனாக்கும் யோகங்களை தருவதில் ஸ்ரீ ராகு பகவான் முதன்மை முக்கிய கிரகம் ஆகும்.

  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் சுபத்துவ அமைப்பில் ஆறு மற்றும் எட்டாம் இடத்து உடன் தொடர்புகொண்டு அதன் தசை நடக்கும் காலங்களில் வெளிநாடு சென்று பல கோடிகளை சம்பாதிக்கக்கூடிய யோகத்தைச் சாதகருக்கு வழங்குவார்.

  ஸ்ரீ ராகு பகவானைப் போல ஸ்ரீ கேது பகவான் அந்த அளவுக்கு மிகுந்த எதிர்பாரத அதிர்ஷ்டத்தை சாதகருக்கு தந்து விடுவதில்லை.

 போக மற்றும் ஆடம்பர வாழ்வில் தருவதில்  ஸ்ரீ ராகு பகவானுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஜாதகருக்கு யோக வாழ்வின் பலன்களை தருவததில் ஸ்ரீ கேது பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு.

     நிழல் கிரகங்களுக்கு என சொந்த வீடு ஜாதக கட்டத்தில் கிடையாது.இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் அமர்ந்து உள்ளதோ அந்த வீட்டையே சொந்த வீடாக கொள்ளும் நிலைமை உள்ளது.

    நிழல் கிரகங்கள் எந்த வீட்டில் அமர்கிறதோ அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தருகிறது. மாறாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்ற கிரகத்துடன் ராகு மற்றும் கேது இணையும் பொழுது அந்த பலமடைந்துள்ள‌ கிரகங்களின் வலிமையை பங்கபடுத்துகிறது.

  ஸ்ரீ ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய வீடுகளில் நின்று அதன் திசையை நடத்தும் போது யோக பலனை ஜாதகருக்கு வாரி வழங்குகிறது.

  ஏனைய இடங்களில் ஸ்ரீ ராகு பகவான் இருப்பின் அது நற்பலனைத் தர வேண்டுமாயின் வளர்பிறை சந்திரன் பார்வை,சுபத்துவம் பெற்ற குரு, சுக்கிரன் தொடர்பு சாதகருக்கு சாதகமான பலனைத் தருகிறது.

 இதேபோல ஸ்ரீ கேது பகவான் சாதக கட்டத்தில் தனுசு,மீனம், மேஷம், விருச்சிகம் மற்றும் சிம்மம் ஆகிய இடங்களில் நின்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு யோக பலன்களை அளிக்கிறது.

  நிழல் கிரகங்கள் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை பார்க்கின்ற , அந்த ராசியில் இணைந்துள்ள மற்றும்  நிழற் கிரகங்கள் பெறும் சாரநாதன் ஆகிய இவர்களது பலன்களை உறிஞ்சி தனது திசையில் கிரக பலன்களை அளிக்கிறது. எனவேதான் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் நிழல் கிரகங்களுக்கு தசா பலன்களை அளந்து எடுப்பது மிக சவாலாகவே சோதிடருக்கு உள்ளது.

   நிழற்கிரகங்களுடன் இணைந்த மற்றும் பார்க்கின்ற கிரகங்கள்  கொண்டிருக்கும் உறவு நிலை அடிப்படையிலும்,
நிழற்கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் எத்தனை பாகை வித்தியாசத்தில் ஒரு ராசியில் இணைந்துள்ளன ? என்பதை பொருத்தும் நிழல் கிரகங்கள் தரும் திசை பலன் அமையும் என்பதாலும் நிழல் கிரகங்கள் தரும் சாதக பலன்களை கணிப்பது சாதகருக்கு சவாலாக அமைகிறது.

  ஒரு ஜாதக கட்டத்தில் 
ஸ்ரீ ராகு பகவான் மற்ற கிரகங்களுடன் 8 பாகை வித்தியாசத்தில் இணைந்திருப்பின் மிக நெருக்கமான நிலையில் அவ்விரு கிரகங்கள் பிணைந்து உள்ளன என கணக்கில் கொண்டு இணைந்து உள்ள கிரகத்தில் தனது ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தும் தன்மையை பெறுகிறது.

   அதே நேரத்தில் நிழல் கிரகங்கள் உடன் இணைந்து உள்ள கிரகமானது  22 பாகை வித்தியாசத்தில் ஒரு ராசியில் இருந்தாலும் அவ்விரு கிரகங்களையும் இணைந்து உள்ள கிரகமாக கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.
இணைந்துள்ள கிரகத்தின் மீது நிழல் கிரகங்கள் தனது ஆதிக்கத்தை செலுத்துவதில்லை.

  மேலே குறிப்பிட்ட இது போன்ற நுணுக்கமான விஷயங்களை ஆய்வு செய்து நிழல் கிரகங்கள் தரும் பலனை கணிப்பது மிக சிரமமாகவே ஜோதிடர்களுக்கு உள்ளது.

     ஒரு ராசியில் நிழல் கிரகங்கள் உடன் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரக தொடர்பு அதன் தசா புத்தியில் சாதகருக்கு இணைந்து உள்ள கிரகங்களின் காரக பலன்களை  அதிகமாக பாதிக்கிறது.

  ஒரு ராசியில் நிழல் கிரகங்கள்  இயற்கை சுப கிரகங்கள் மற்றும் ஸ்தான அடிப்படையில் சுப கிரகங்கள் உடன் கொண்டு உள்ள தொடர்பு யோக பலன்களை தனது தசா புத்தியில் தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
     செல்
    9715189647
‌‌.     7402570899

                     

    அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blog

www.
astroravichandran.blogspot.com

www astroravichandransevvai.blogspot.com

........

மறைந்திருக்கும் உண்மைகள்

மறைந்திருக்கும் உண்மைகள்


                         

 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     சோதிடம் என்பது மறை பொருள் ஆகும்.மறை என்பது வேதம் என்றும் அல்லது மறைவான உட்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.

  நம்  கண்ணுக்கும் மற்றும் அறிவுக்கும் புலப்படாத பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் மறைந்துள்ளது.

  எவ்வளவு பெரிய தத்துவங்களும், கொள்கைகளும் ,
பல்துறை ரகசியங்களும் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இப்புவியில் மனித மூளைக்கும் அப்பாற்பட்ட தியான நிஷ்டையால் கண்டறியப்பட்டுள்ளது.

  பல உண்மைகள் சாதாரண கண்களுக்கும் மற்றும் ஏனைய புலன்களுக்கும் புலப்படுவதில்லை.

 மெய்,கண் ,காது ,நாக்கு மற்றும் மூக்கு போன்ற ஐம்பொறிகளையும் ஞானேந்திரியங்கள் என அழைக்கப்படுகிறது.

 இந்த ஐம்புலன்கள்( Five Sence organ) வழியாக பெறப்படும் தொடுதல் ,பார்த்தல் ,
கேட்டல் ,சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற ஐந்து உணர்வுகளிலிருந்து(five sence) பெறப்படும் அறிவுகளை தொகுத்து மற்றும் பகுத்து பெறப்படும் அறிவு "பகுத்தறிவு " என்று அழைக்கப்படுகிறது.

 ‌  இந்த மறைபொருள் உண்மைகள்  என்பது ஐம்புலன்களால் உணர முடியாத ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

  மறைபொருள் உண்மையானது
 "  ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரிக்க பெறப்படும் உண்மையாகும்.

 ஐம்புலன்களை உள்ளடக்கியாளும் சித்த தன்மை கொண்ட  மாமனிதர்களாலே ஜோதிடம் போன்ற பிரபஞ்ச உண்மைகள் வெளிப்படுகின்றன.

  சோதிடம் சித்தர்களால் அருளப்பட்ட மூலநூல்களை தேடி படித்தாலும் அவர்களால் உணரப்பட்டு அருளப்படும்  கருத்துக்களை அப்படியே இக்காலத்திற்கு பதிலீடு செய்யாமல் கால நேரத்திற்கு ஏற்றார் போல்  பயன்படுத்தும் அனுபவத்தினை பெற முயல வேண்டும்.

  ஜோதிடம் என்பது ஆன்மீகமா ?
விஞ்ஞானமா ? நாத்திகமா ? என நம்மில் பலருக்கு எழும் சந்தேகம் ஆகும்.

  நிறைய ஆன்மீக கருத்துக்கள் விஞ்ஞானம் தழுவியவை ஆகும் ஆனால் அக்கருத்துக்களை விஞ்ஞானமாக போதித்தால் மக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை.

 அதனால்தான் நமது மூதாதையர்கள் பல விஞ்ஞான உண்மைகளை ஆன்மிகத்திற்கும் திணித்து தந்தார்கள்.

  "அதிகாலை எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவதை நம் வீட்டிற்குள் கிருமிநாசினி அண்டாது" என சொல்லியிருந்ததால் பெரும்பாலான மக்கள் செய்திருக்க மாட்டார்கள்.

இந்த அறிவியல் உண்மைகள் பயன்பட அதிகாலை எழுந்து சாணம் தெளித்து வாசலில் பூ போட்டு படைக்க வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரம்பி வழியும் என்பதால்தான் இன்றும் பல பெண்கள் எழுந்து அதிகாலை கோலம் இடுகிறார்கள்.

  இதுபோல நம் கண்ணிற்குத் தெரியாத பல மைல்களுக்கு அப்பாலுள்ள நவ கோள்களையும் தனது ஞானதிருஷ்டியால் சாதக கட்டத்தில் எந்த இடத்தில் சாதக கட்டத்தில் அமரும்போது என்னென்ன பலன்களை தரும்?" என்பதை தனது பாடல்கள் மூலம் எழுதி வைத்து விட்டுச் சென்றார்கள்.

  ஒவ்வொரு கோள்களையும் நமது மனித வாழ்வோடு இணைத்து உறவு முறைகள் சொல்லி அதற்காக ஒரு புராண உண்மைகளையும் அதில் உள்ளடக்கினார்கள்.

   பார்கடலில் வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு மேரு மலையை மத்தாக கொண்டு தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடையும் புராண கதையை கூறி இக்கதை மூலமாக சுவர்பாணு என்னும் அசுரன் தேவர்களான சூரியன் மற்றும் சந்திரனால் அடையாளம் காட்டப்பட்டு வெட்டுப்பட்டு ,
அந்த வெட்டுப்பட்ட மனித உடம்பும் பாம்பு தலையும் கொண்டது ராகு பகவான் என்றும், மனித தலையும் பாம்பின் வால் பகுதி கொண்டது கேது பகவான் என்றும் அழைக்கப்படுகிறது.

    நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுக்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் எவ்வாறு பகை கிரகங்களாக ஆனது என்பதை விளக்க இது போன்ற ஆன்மீக கதைகளுக்குள் உள்ளடக்கி அதாவது  "சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களால் சுவர்னபானு  என்னும் அசுரன்  காட்டி கொடுக்கப்பட்டதால் ராகு மற்றும் கேதுக்களுக்கு  சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் பகை கிரகங்களாக வந்தது என்ற உண்மையை உறவு முறைகள் கொண்டு விளக்கினார்கள்.

  இதேபோல சந்திரனுக்கு புதன் மகன் என்றும் ஆனால் சந்திரன் பகவான் ஆனவர் புதனை பகையாக கருதுவதில்லை .ஆனால் புதன் பகவான் ஆனவர் சந்திரனை பகை கிரகமாக கருதியது ஏன் என்பதற்கு ஆன்மீக உறவுமுறை கதைகளை வானவியல் சாஸ்திர பிரிவான சோதிடவியலோடு பிண்ணி பிணையபட்டது.

  சந்திரன் பகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கிரக அந்தஸ்தை பெற்றார் யாகத்தில் புகழ்பெற்ற தட்சனின் புத்திரர்களான இருபத்தெழு நட்சத்திரங்களையும் மணந்தார்.

 சந்திரபகவான் தேவ குருவான பிரகஸ்பதியிடம் வித்தை கற்க சென்ற பொழுது அங்கு குருவின் மனைவியான தாரையிடம் நடந்துகொண்ட அன்பு பரிமாற்றத்தால் தாரை கர்ப்பவதியானாள்.தனது மனைவி கர்ப்பவதியானதற்கு யார் ? என்பதை அறிந்து கொண்ட குரு பகவான் தாரையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

 தாரைக்கு சந்திரன் உடன் கொண்ட தொடர்பால் அழகும் ,அறிவும் நிறைந்த புதன் பகவான் மகனாக பிறந்தார்.

  பின்னால் வளர்ந்த புதன்பகவான் தனது பிறப்பின் ரகசியத்தை உணர்ந்த பின்பு தனது தவறான பிறப்பிற்க்கு காரணமான தாயான சந்திரனை தனது பகையாக கருதுகிறது. ஆனால் சந்திர  பகவானோ  தாய் என்பதால் தனது மகனான புதன் பகவானை பகையாக கருதுவதில்லை.

  ஒரு ஜாதக கட்டத்தில் இரண்டு மூன்று கிரகங்கள் இருக்கும்பொழுது அந்த கிரக வலிமையைக் கண்டறிய இதுபோன்ற பகை, நட்பு ,உச்சம்  மற்றும் ஆட்சி போன்ற விஷயங்கள் உதவும் என்பதால் அவற்றை ஆன்மிக கதைகளுடன்  கிரகங்களை உறவு முறையாக தந்து மக்கள் மனதில் நிலைக்கச் செய்தார்கள்.

  இதேபோல பல சோதிட உண்மைகளை உறவுமுறைகள் ஆக்கி மக்களிடம் விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானம் கலந்து தந்தார்கள்.

 இதுபோன்ற கதைகளை படிக்கின்ற இன்றைய நவ நாகரீக இளைஞன்  அதனை நாத்திகமாக கருதுகின்றான்.ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு ஆன்மீக கதைகளும் சோதிட உண்மைகளுக்கு ஒரு மறைமுக குறியீடு ஆகும்.

 விஞ்ஞான அடிப்படையில் ஒவ்வொரு மனித மனத்திற்கும் நவகோள்களில் சந்திர பகவானுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது.
முழுமதி காலங்களில் வைத்தியத்தை அதிகரிப்பதை வைத்து மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு கொண்டு என்பது நிருபணம் ஆக்கப்பட்டது.

 வானவியலில் ஏற்படக் கூடிய சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்திகும் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இதனைதான் நமது முன்னோர்கள் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என கதையாக எனது பிள்ளை பருவத்தில் எனது பாட்டன் மற்றும் பாட்டிகளால் கூறப்பட்டது.

 எனவே ஜோதிடவியலை அறிவியல் அறிந்தவர்களால் விஞ்ஞானம் என்றும் அல்லது மெய்ஞானிகளால் ஆன்மீகம் என்றோ அல்லது நவநாகரீக இளைஞனால்  நாத்திகம் என்றோ கருதப்படுகிறது.

  அவரவர் ஜாதகத்தில் உள்ள புதன் பகவான் வலிமையைப் பொறுத்து ஜோதிடத்தின் உண்மையான அடியாழம் அறியப்படுகிறது.

ஒவ்வொரு ஜோதிட விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகளையும் , சுபத்துவ  மற்றும் மறைபொருள் உண்மைகளையும் அவரவர் ஜாதகத்தில் உள்ள புத்த பகவானுடைய வலிமையைப் பொருத்து அறிந்து கொள்ளப்படுகிறது.

    புவியை மையமாக கொண்டே எல்லா கோள்களும் சுற்றி வருகிறது என்ற புவி மையகோட்பாட்டை தவிர்த்து கெப்ளர் என்ற விஞ்ஞானி சூரியனை மையமாகக் கொண்டு எல்லா கோள்களும் இடைவிடாமல் சுற்றி வருவதாக கூறியபோது அக்கால மதவாதிகள் எதிர்ப்பு காட்டினார்கள்.

 ஆரம்பகால விஞ்ஞானிகளுக்கு மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
விஞ்ஞானிகள் தமது புலமையால் கண்டறியப்படும் அறிவியல் உண்மைகளை இயற்கைக்கும், இறைவனுக்கும் ‌மாறாக செய்ய நினைப்பதாக எண்ணி மதவாதிகள் தமது பிழைப்புக்கு பங்கம் வந்து விடக்கூடும் என்பதாலே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
 9715189647

   செல்
   9715189647
     7402570899

                         


                           

அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email; masterastroravi@gmail.com
......

காலம் காட்டும் கண்ணாடி

காலம் காட்டும் கண்ணாடி.

                         

    செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!


      ஒருதிசை ஆரம்பிக்கும்போது அந்த திசையில் முதலில் திசை நாதனே  புத்தி நாதனாக  வருவார்கள்.இதனை" சுய புத்தி" என்பார்கள்.


  ஒருதிசை யோக தசையாக இருந்தாலும் முதலில் அந்த சுய புத்தி நல்ல பலனைத் தருவதில்லை.


   ஒரு புத்தியானது யோக புத்தியாகவே இருந்தாலும் அதன் திசையில் தரும் யோகம் அளவிற்கு ஏற்றார் போல் அதன் புத்தியில் தருவதில்லை.


  ஒரு திசையில் திசை நாதனே கேப்டன் என்பதால் நடக்கும் புத்தியானது  திசை நாதனுக்கு நட்பாகவும் ,நல்ல ஸ்தானம் பெற்று , சுப நட்சத்திர சாரம் மற்றும் சுபர் பார்வையினை பெற்றிருந்தால் மட்டுமே அந்த புத்தியானது‌ யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.


   திசை நாதனுக்கு புத்தி நாதன் யோகர் என்ற வகையில் ஒத்திசைவாக இருக்கின்ற பொழுது யோக பலன்களை சாதகருக்கு சிறப்பாக வாரி வழங்குகிறது.


  திசை நாதனுக்கு புத்தி நாதன் பாவர் என்ற வகையில் ஒத்திசைவாக இல்லாத பட்சத்தில் திசைநாதன் யோகர் திசை எனும் வகையில் பெரியதாக கெடுபலன்கள் எதனையும் கொடுத்து விடுவதில்லை.


 எந்த ஒரு திசையிலும் சுய புத்தி நல்ல பலனை தந்தால் அந்த திசையில் ஏனைய  புத்திகள் நல்ல பலனைத் தந்து விடுவதில்லை.


  எந்த ஒரு திசையில் அதன் சுய புத்தி நல்ல பலனைத் தரவில்லை என்றால் ஏனைய புத்திகள் அந்ந தசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.


  ஒரு சாதகருக்கு கோணாதிபதிகள் மற்றும் கேந்திர ஆதிபத்திய திசைகள்‌ மட்டுமே யோக பலன்களை தரும் என நாம்‌ தவறாக முடிவு செய்துவிட கூடாது


 கோணாதிபதி மற்றும் கேந்திராதிபதி தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இருக்கும் போதோ அல்லது கோணாதிபதிகள் திசையிலோ அல்லது‌ மறைவிட ஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்கும் போதும்‌ அதன் திசை நடப்பில் உள்ள போது யோகபலன்களை சாதகருக்கு யோக பலன்களை தருகிறது.


 சில நேரங்களில் சாதகருருடைய லக்னாதிபதிக்கு பகை பெற்ற கிரகங்களின்‌ திசையில் கூட நல்ல பலனைத் தந்து விடுகிறது.எவ்வாறு என ஆய்ந்து நோக்கின் அந்தக் கிரகங்கள் உபஜெய ஸ்தானம் 3 ,6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு பெற்று நிற்க்கும் போது அது அதன் தசா புத்திகளில் யோக பலன்களை தந்து விடுகிறது.


  ஒரு சில சாதகத்தில் சாதகருக்கு யோகாதிபதிகளின் திசையினை விட   அந்த லக்கினாதிபதிக்கே பகை பெற்ற கிரகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் சுபத்துவம் பெற்று அந்த திசை நடத்தும் பொழுது யோகபலன்களை சாதகருக்கு  அதிகமாக  வழங்குகிறது.


   லக்கனாதிபதிக்கு பகை பெற்ற கிரகமாக இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது  போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன் பார்வை பெற்றாலும் அல்லது ஏதேனும் ஒரு வகையில் குரு ,சுக்கிர பகவான் தொடர்பு   அந்த கிரகத்திற்கு கிடைத்தாலும் அப் பகை கிரகமே சுபத்தும் பெற்று யோகாதிபதியாக மாறி 

நல்ல பலனைத் அந்த திசையில் தந்து விடுகிறது.


  எந்த ஒரு திசை நாதனும் அதன் சுய நட்சத்திர சாரம் பெற்று இருந்தாலும் அல்லது சுபருடைய நட்சத்திர சாரம்  பெற்று இருந்தாலும் அதன் தசா புத்திகளில் யோக பலனை சாதகருக்கு தருகிறது.


 ஒரு திசையானது அதனுடைய ஓளி அளவைக் கொண்டே அதன் யோகம் பலன் கணக்கிடப்படுகிறது.


  கீழ்க்கண்ட தசைகளும், அதனுடைய வருடமும்


சூரிய திசை 6 வருடம்


 சந்திர தசை 10 வருடம்


 செவ்வாய் திசை 7 வருடம்


 ராகு திசை 18 வருடம்


 குரு தசை 16 வருடம் 


சனி திசை 19 வருடம்


 புதன் திசை 17 வருடம்


 கேது திசை 7 வருடம்


 சுக்கிர திசை 20 வருடம்


 ஆக மொத்தம் 120 ஆண்டுகளாகும்.


 ஒவ்வொரு திசைக்கும் , அதன் புத்தியை கணக்கிடும்‌ எளிய கணித‌முறை பின்வருமாறு பார்ப்போம்.


 சூரிய திசை சூரிய புத்தி


சூரிய தசை ஆறு வருடம்


திசை× புத்தி

6×6= 36


  இங்கு முதல் இலக்கம் மாதங்கள் . கடைசி இலக்கம் நாட்களாகும். இதனை மூன்றால் பெருக்க வேண்டும்.

6×3=18


  முதல் இலக்கம் 3 என்பது மூன்று மாதங்கள் ஆகும்.


சூரிய திசை சூரிய புத்தி (வ.மா.நா)


இதேபோல வேறு ஒரு புத்தி கணக்கியல்


  சனி திசையில் ராகு புத்தி

சனி திசை=19

ராகு திசை=18

  19×18 =342


  இங்கு முதல் இரண்டு இலக்கம் மாதங்கள் ஆகும்.

கடைசி இலக்கம் நாள்கள் ஆகும்.


   34 மாதங்கள் =2 வருடங்கள் 10 மாதங்கள்

கடைசி இலக்கம் மூன்றாம் பெருக்க 2×3=6


ஃ   சனி திசையில் ராகு புத்தி


2 வருடங்கள் 10 மாதங்கள் 6 நாள்


 ( 02-10-06 )


    மேற்கண்ட எளிய முறை மூலம் சோதிடம் தெரியாதவர்கள் கூட தனக்கு  நடக்கக்கூடிய புத்தியின் கால அளவை எளிதாக கண்டறிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளேன்.


நன்றி.


(தங்களது சாதக பலன் திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்

    9715189647

    செல்

   9715189647

    7402570899

                  


  அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

சந்திராதி யோகம்

சந்திராதி யோகம்


                  


செவ்வாய்ப்பட்டிஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    கிரகங்களில் சந்திர பகவான் இருக்கும் இடத்தையே ராசியாக எடுத்து கொள்ளபடுகிறது.


    கோச்சார பலன்கள் அனைத்தும் சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.


    ஜெனன காலத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாக கொண்டு  கணக்கிடப்படுகின்ற யோகங்களை

" சந்திராதி யோகங்கள்" என அழைக்கப்படுகிறது.


    சுனபா யோகம்


'இந்துவுக்(கு) இரண்டாம் வீட்டில்

இனியகோள் இருந்த காலை

முந்திய சுனபா யோகம்

இதன்பலன் மொழியும் காலை

சந்ததம் தனவான் ராஜ்

சன்மானம் புத்தி யுள்ளார்

சுந்தரமப் புவிகள் எங்கும்

துதித்திடு‌ கீர்த்தி மானாம் '

பொருள் ;-


        சந்திரன் இருக்கின்ற ராசிக்கு இரண்டாமிடத்தில் சுப கிரகங்களில் ஒன்றோ அல்லது பலவோ நின்று இருந்தால் அது சுனபாயோகம் என்று பெயர்.


    சுனபா யோகத்தில் பிறந்தவன் எந்நாளும் செல்வ வசதி உள்ளவனாய் இருப்பான். வேந்தர்களிடம் வெகுமானம் பெறுவான். அறிவாளி. பூமி முழுவதும் போற்றுகின்ற புகழுடையவனாக வாழ்வான்.


      சந்திரனுக்கு 2-ல் சுப கிரகங்கள் நின்றால் தான் சுனபாயோகம் ஏற்படும். ஆனால் செவ்வாய் ,புதன், குரு ,சுக்கிரன்  மற்றும் சனி என்னும் பஞ்ச மகா புருஷ கிரகங்களில் எவ்வாறிருப்பினும் அதாவது ஒரு கிரகங்கள் இருக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் கூட இருக்கலாம் அதுவும் சுனபா யோகம் தான்.


 அனபா யோகம்


     சந்திரனுக்கு 12  ஆம் இடத்தில் பஞ்சமஹா புருஷ கிரகங்களில்  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் நின்றிருந்தால் அது அனபா யோகம் எனப்படும்.


துருதரா யோகம்


  சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் பஞ்சமகா கோள்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தால் அது "துருதரா யோகம்" எனப்படும்.


  சந்திரனுக்கு இரண்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் குரு, புதன், சுக்கிரன் போன்ற இயற்கைச் சுபக்கிரகங்கள் நின்று இருப்பின் 'துருதரா யோகம் ' சிறப்பாக செயல்படுகின்றன


  சில சமயங்களில் சந்திரனுக்கு இரண்டு புறமும் (2,12 ல்) பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தால் ''சந்திர பாபகர்த்தாரி'' என்னும் அவயோகம் ஆகும்.இவை இராசிகளின் வலிமையை குறைக்கும்.


        அதி யோகம்


  சந்திரன் இருக்குமிடத்திற்கு ஆறு, ஏழு மற்றும் எட்டில் சுப கிரகங்கள் தொடர்ந்து நின்றால் லக்கின "அதியோகம்"  எனப்படும்.


      கஜகேசரி யோகம்


"வருசசி கேந்தி ரத்தில்

மன்னவன் நிற்க அந்த

அரசன்தன் கேந்தி ரத்தில்

அம்புலி தானும் நிற்கில்

விரவுமற் றிடத்தில் மற்றோர்

மேவிய தோடம் யானை

ஒரு சிங்கம் கண்ட வாறாம்

ஒதுகே சரியாம் யோகம் !"


பாடல் விளக்கம்


சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு நின்றிருக்க அந்த குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் நின்றிருந்தால் அது கேசரி யோகம் ஆகும்.


 கேசரி யோகம் ஒரு ஜாதகத்தில் அமையப் பெற்றிருந்தால் அதில் இதர கிரகங்களால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்கள் எல்லாம் சிங்கத்தைக் கண்ட யானை கூட்டம் சிதறி ஓடுவதைப் போல விலகிப் போய்விடும்.


     சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பது இயல்பாகவே அமைந்து விடும் .

எனவே இவ்விதம் மாற்றிச் சொல்லத் தேவையில்லை.


   ஒருவேளை இருவரும் ஒருவருக்கொருவர் சமசப்தமதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லி இருக்கலாம் என எண்ண வேண்டியிருக்கிறது.


   சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரங்களில் (1,4,7,10) குரு பகவான் நின்றால் கஜகேசரியோகம் .


சந்திர மங்கள யோகம், கஜகேசரி யோகம்  மற்றும் துணை ராஜ யோகம்


 "சந்திரன்செவ் வாய்கூடிச் சத்தமத்தில் இருக்கச்

சந்திரமங் களயோகம் தரணிஅர சாள்வன்!

இந்திருக்கும் லக்கினகேந் திரத்தில்பொன் இருக்க

இருங்கசகே சரியோகம் !எழில்நிறைந்த மதிக்கும்

சுந்தரம்சேர் விதமாய்ஆ(று) ஏழெட்டா மிடத்தில்

சுபக்கிரகம் பார்க்கநிற்க துரைராச யோகம்!

பந்தமுறும் லக்கினத்தில் சசிசெவ்வா‌ யிருக்கப்

பானுகுரு பத்தொன்ப துறில்ராச யோகம் !"


பாடல் விளக்கம்


    சந்திரனும் ,செவ்வாயும் இணைந்து லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் இருந்தால் அது" சந்திரமங்கள யோகம்" எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவன் பூமியை ஆளும் வேந்தன் ஆவான்.


 சந்திரனுக்கு அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திரத்தில் குரு அமர்வதால் கஜகேசரி யோகமாகும்.


வளர்பிறைச் சந்திரனாக இருந்து அந்தச் சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் இடங்களை சுபகிரகங்கள் பார்வையிட்டாலும் அல்லது அந்த இடங்களில் அவை இடம் பெற்றிருந்தாலும் அது "துரை ராஜயோகம் "ஆகும்.


   லக்கனத்தில் சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து இருக்க சூரியனும், குருவும் ஒன்பது அல்லது பத்தாம் இடத்தில் சேர்ந்திருந்தால் அது ராஜயோகம் ஆகும்.


   சோதிட பாடலில் குறிப்பிட்டுள்ளபடி  சசிமங்கள யோகம் என்பது சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஏழாம் இடத்தில் இருந்தால் மட்டுமல்ல கேந்திர ,கோண மற்றும் தன, லாப ஸ்தானத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் சந்திரனும் அல்லது செவ்வாயும் வேறு எந்த வகையிலும் பலம் இழக்காமல் இருப்பின் சசிமங்கள யோகத்தினை தரும்.


சகட யோகம்


''அகடின் மன்னனுக் (கு) ஆறெட் டொடுவியத்(து)

இகடி லாமதி எய்தி இருந்திடின்

சகட யோகம் இதில்பிறந் தார்க்கெல்லாம்

விகட துன்பம் விளையும் அரிட்டமே !''


பாடல் விளக்கம்.


    குரு இருக்கும் வீட்டிற்கு மறைவு ஸ்தானமான

 6 ,8, 12 ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால் அது "சகட யோகம்" என்று பெயர்.

 சகட யோகத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம் பிறர் நகைக்கும் படியான அவமானகரமான துன்பங்களும், உயிர் ஆபத்து ஏற்படும்.


 சகடை யோகத்தில் பிறந்தவர்களுக்கு

 ஏற்ற- இறக்கமான வாழ்க்கை அமையும்.


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647


     செல்

   9715189647

‌.    7402570899

                    

    அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)  ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email

masterastroravi@gmail.com


My blog


AstroRavichandran.blogspot.com


AstroRavichandransevvai.blogspot.com.


...............................