துல்லியமான ஜாதக பலன்களை பெற...
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகத்தில் துல்லியமாக பலன்களை கணிப்பதற்கு ஏராளமான மூல விதிகள் தெரிந்து இருக்க வேண்டும்.ஒரு ஜாதக பலன் பார்க்கும் போது அத்தனை விதிகளும் ஜோதிடரின் மனதில் நினைவுக்கு வர வேண்டும் . சாதகம் பார்க்க வருபவருடைய கர்ம வினையுடன் இது தொடர்பு கொண்டது ஆகும்.
ஒருவருக்கு அவயோக தசை மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகர் சந்திக்கும் ஜோதிடர் சரியான முறையில் கணித்து பலனளிக்க தெரியாத நபராகவோ அல்லது எல்லா விதிகளும் மற்றும் விதி விலக்குகள் நினைவுக்கு வராமல் கணிக்க தவறிய நிலை உண்டாகும்
ஒரு ஜாதக பலன் துல்லியமாக பெற வெறும் விதிகளை மட்டும் நம்பிக்கொண்டு பலனை அளித்தோம் என்றால் அதன் பலன் தவறாகி போய்விடும். எனவே ஒவ்வொரு
விதிகளுக்குள்ளும் உள்ளே உள்ள விதிவிலக்குகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நற்பலன்களை தரும் என்றாலும் , விதிவிலக்காக மேஷ லக்கனத்திற்கு புதன் பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நல்ல பலனைத் தருவதில்லை.
ராகு பகவான் பற்றிய யூடியூப் லைவ் நிகழ்ச்சியில் ராகு பகவான் ஒரு இடத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்டால் ராகு தசை நல்ல பலனைத் தராது என்று விளக்கி கொண்டு இருந்தேன்.
அதில் சொளந்தர பாண்டியன் என்ற யூடியூப் சப்ஸ்க்ரைபர் எனது ஜாதகத்தில் பண்ணிரெண்டாம் இடத்தில் ராகு இருந்து சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பில் இருந்தாலும் எனக்கு நீங்கள் கூறியது போல அல்லாமல் ராகு தசை சிறப்பாக உள்ளது என்று கூறினார்.
12ஆம் இடத்தில் உள்ள ராகு பகவானை சனி மற்றும் செவ்வாய் பார்த்தால் அந்த ராகு தசை நல்ல பலனை தராது என்பது விதியாக இருந்தாலும் அந்த விதிகளுக்குள்ளும் சில விதிவிலக்குகள் இருந்திருக்க வேண்டும். எனவே நிச்சயமாக விதிவிலக்குகள் இருந்ததால் தான் உங்களது ஜாதகத்தில் 12-ல் உள்ள ராகு பகவானை சனி மற்றும் செவ்வாய் பாவிகளால் பார்க்கப்பட்டாலும் நல்ல பலனை தருகிறது என்று கூறினேன். அதன் பிறகு அவர் ஏனைய பிற அமைப்புகளை என்னிடம் கூறினார்.அதில் உள்ள விதிவிலக்குகள் இருந்தது. அதை உங்களோடு விளக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
அவரது ஜாதகம் மகர லக்கனம் இரண்டாம் இடத்தில் சூரியன் மற்றும் குரு (இங்கு குரு சூரியன் உடன் அஸ்தமனம் என்றார்.), ரிஷபத்தில் செவ்வாய் ,
மிதுனத்தில் சனி கேது மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் தனுசு ராசியில் ராகு பகவான் வாசம் செய்கிறார்.
இவரது ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் உள்ள ராகு பகவானை மிதுனத்தில் உள்ள சனி பகவான் தனது ஏழாவது பார்வையாலும் மற்றும் ரிஷபத்தில் உள்ள செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து பாவத்துவம் அடைந்து இருந்தாலும் இந்த ராகு பகவான் தனது தசையில் நல்ல யோக பலனை சாதகருக்கு வழங்கிக் கொண்டு உள்ளார் இது எப்படி சாத்தியம் என்று விதிவிலக்குகளை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம்.
பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குருவின் மனை ஏறி உள்ளார்.மேலும் மிதுனத்தில் உள்ள சனி பகவான் ஶ்ரீ கேது பகவான் உடன் இணைந்து சூட்சும வலுவினை பெற்று கும்ப வீட்டில் இருந்து தனது ஐந்தாவது பார்வையால் பார்த்து சனி பகவானின் தீய சக்தி வடிகட்டப்பட்டு பார்வை செய்வதால் சனியின் பார்வையால் எவ்வித பங்கமும் ராகு பகவான் அடையவில்லை.மேலும் லக்கன யோகரான இயற்கை சுப கிரகமான சுக்கிரன் வீட்டில் அமர்ந்து பார்வை செய்யும் செவ்வாயின் எட்டாம் பார்வையும் ராகு பகவானை பாதிப்பது கிடையாது.
எனவே குரு மனை ஏறியிருந்த ராகு பகவான் குரு பகவானை போல செயல்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு தரும் அமைப்பில் இருக்கிறார்.
எனவே ஜாதகத்தில் நாங்கள் தரும் விதிகளை அப்படியே எடுத்து கொண்டு எல்லா ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரி பலன் அளிக்க முற்பட்டால் ஜோதிடரால் தரப்படும் பலன்கள் கட்டாயம் தவறிவிடும்.
எனவே ஒவ்வொரு பொது விதிகளுக்குள்ளும் பொது விதி மற்றும் சிறப்பு விதி என்று உள்ளது.அதனை கட்டாயம் அறிந்து கொண்டால்தான் துல்லியமான பலன்களை ஜாதகருக்கு தர இயலும்.
நன்றி.
வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்
(All in one cell no)
9715189647
Cell
7402570899
9715189647
Email masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
. M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..