Wednesday 21 September 2022

துல்லியமான ஜாதக பலன்களை பெற...

 துல்லியமான ஜாதக பலன்களை பெற...

                 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகத்தில் துல்லியமாக பலன்களை கணிப்பதற்கு ஏராளமான மூல  விதிகள் தெரிந்து இருக்க  வேண்டும்.ஒரு  ஜாதக பலன் பார்க்கும் போது அத்தனை விதிகளும் ஜோதிடரின் மனதில் நினைவுக்கு வர வேண்டும் . சாதகம் பார்க்க வருபவருடைய கர்ம வினையுடன் இது தொடர்பு கொண்டது ஆகும்.


    ஒருவருக்கு அவயோக தசை மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகர் சந்திக்கும் ஜோதிடர் சரியான முறையில் கணித்து பலனளிக்க தெரியாத நபராகவோ அல்லது எல்லா விதிகளும் மற்றும் விதி விலக்குகள் நினைவுக்கு வராமல்  கணிக்க தவறிய நிலை உண்டாகும்


ஒரு ஜாதக பலன் துல்லியமாக பெற வெறும் விதிகளை மட்டும் நம்பிக்கொண்டு பலனை அளித்தோம் என்றால்  அதன் பலன் தவறாகி போய்விடும். எனவே ஒவ்வொரு 

விதிகளுக்குள்ளும்  உள்ளே உள்ள விதிவிலக்குகளை  கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.


  பொதுவாக கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நற்பலன்களை தரும் என்றாலும் ,  விதிவிலக்காக மேஷ லக்கனத்திற்கு புதன் பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தால் நல்ல பலனைத் தருவதில்லை.


 ராகு பகவான் பற்றிய யூடியூப் லைவ் நிகழ்ச்சியில் ராகு பகவான்  ஒரு இடத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாய் பகவானால் பார்க்கப்பட்டால் ராகு தசை நல்ல பலனைத் தராது என்று விளக்கி கொண்டு இருந்தேன்.


 அதில் சொளந்தர பாண்டியன் என்ற யூடியூப் சப்ஸ்க்ரைபர் எனது ஜாதகத்தில் பண்ணிரெண்டாம் இடத்தில்  ராகு இருந்து சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பில் இருந்தாலும் எனக்கு நீங்கள் கூறியது போல அல்லாமல் ராகு தசை சிறப்பாக உள்ளது என்று கூறினார்.


12ஆம் இடத்தில் உள்ள ராகு பகவானை சனி மற்றும் செவ்வாய் பார்த்தால் அந்த ராகு தசை நல்ல பலனை தராது என்பது விதியாக இருந்தாலும் அந்த விதிகளுக்குள்ளும் சில விதிவிலக்குகள் இருந்திருக்க வேண்டும். எனவே நிச்சயமாக விதிவிலக்குகள் இருந்ததால் தான் உங்களது ஜாதகத்தில் 12-ல் உள்ள ராகு  பகவானை சனி மற்றும் செவ்வாய் பாவிகளால்  பார்க்கப்பட்டாலும் நல்ல பலனை தருகிறது என்று கூறினேன். அதன் பிறகு அவர் ஏனைய பிற அமைப்புகளை என்னிடம் கூறினார்.அதில் உள்ள விதிவிலக்குகள் இருந்தது. அதை உங்களோடு விளக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


   அவரது ஜாதகம் மகர லக்கனம் இரண்டாம் இடத்தில் சூரியன்  மற்றும் குரு (இங்கு குரு சூரியன் உடன் அஸ்தமனம் என்றார்.), ரிஷபத்தில் செவ்வாய்  ,

மிதுனத்தில் சனி கேது மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் தனுசு ராசியில் ராகு பகவான் வாசம் செய்கிறார்.


இவரது ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் உள்ள ராகு பகவானை மிதுனத்தில்  உள்ள சனி பகவான் தனது ஏழாவது பார்வையாலும் மற்றும்  ரிஷபத்தில் உள்ள செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து பாவத்துவம் அடைந்து இருந்தாலும் இந்த ராகு பகவான் தனது தசையில் நல்ல யோக பலனை சாதகருக்கு வழங்கிக் கொண்டு உள்ளார் இது எப்படி சாத்தியம் என்று விதிவிலக்குகளை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம்.


  பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குருவின் மனை ஏறி உள்ளார்.மேலும் மிதுனத்தில் உள்ள சனி பகவான் ஶ்ரீ கேது பகவான் உடன் இணைந்து சூட்சும வலுவினை பெற்று கும்ப வீட்டில் இருந்து தனது ஐந்தாவது பார்வையால் பார்த்து சனி பகவானின் தீய சக்தி வடிகட்டப்பட்டு பார்வை செய்வதால் சனியின் பார்வையால் எவ்வித பங்கமும் ராகு பகவான் அடையவில்லை.மேலும் லக்கன யோகரான இயற்கை சுப கிரகமான சுக்கிரன் வீட்டில் அமர்ந்து பார்வை செய்யும் செவ்வாயின் எட்டாம் பார்வையும் ராகு பகவானை பாதிப்பது கிடையாது.


 எனவே குரு மனை ஏறியிருந்த ராகு பகவான் குரு பகவானை போல செயல்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு தரும் அமைப்பில் இருக்கிறார்.


  எனவே ஜாதகத்தில் நாங்கள் தரும் விதிகளை அப்படியே எடுத்து கொண்டு எல்லா ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரி பலன் அளிக்க முற்பட்டால் ஜோதிடரால் தரப்படும் பலன்கள் கட்டாயம் தவறிவிடும்.


 எனவே ஒவ்வொரு பொது விதிகளுக்குள்ளும் பொது விதி மற்றும் சிறப்பு விதி என்று உள்ளது.அதனை கட்டாயம் அறிந்து கொண்டால்தான் துல்லியமான பலன்களை ஜாதகருக்கு தர இயலும்.


நன்றி.


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  (All in one cell no)

 9715189647


   Cell

 7402570899

   9715189647


Email masterastroravi@gmail.com


               



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

‌.  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..

ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

 ஜோதிடம் காலம் காட்டும் கண்ணாடி

                        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு இன்பங்களை அல்லது துன்பங்களை அதாவது ஏற்ற/இறக்கங்களை அனுபவித்து இருப்பான் என்பதை

 அவன்/அவள் ஜாதகத்தில் ஜெனன காலத்தில் இருந்து ஜாதகம் பார்க்கும் காலகட்டம் வரை நடைபெற்ற தசா புக்திகளையும் மற்றும் கோச்சார பலன்களை  கொண்டும் எளிதாக கணித்து விடலாம்.


 மனித வாழ்வில் முக்கியமான காலகட்டங்களை தசாபுத்தி கொண்டு நடந்தவை மற்றும் நடக்க இருக்கும் சம்பவங்களை உறுதி செய்து கொள்ள முடியும்.


     ஒரு மனிதனுக்கு எவ்வளவு இன்னல்கள் அல்லது எவ்வளவு யோகங்கள் வந்தாலும்  அதிலிருந்து விடுபட அல்லது அதை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய வலிமை மிகவும் அவசியமானதாகும்.


  சிலருக்கு லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் கெட்டு இருந்தாலும் ராசியும், ராசியாதிபதியும் கெடாத நிலையில் ஓரளவு சமாளிக்க கூடிய தன்மையை சாதகருக்கு கொடுக்கும்.


  லக்கனம் மற்றும் ராசி அதன் அதிபதிகள் பலம் இழந்த நிலையில் எவ்வளவு யோகம் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை அற்றும் காணப்படுவர்.


   ஒருவருக்கு லக்கனாதிபதி கெடாது நிலையில் இள வயதில் உகந்த யோக தசைகள் வந்து இண்டு ,நான்கு, ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம்  மற்றும் குருவும், புதனும் கெடாத நிலையில் உயரிய கல்வி நிலை அடைந்து அதன் வழியில் பொருளீட்டி புகழ் பெறுவார்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று தன-பாக்கிய-லாப ஸ்தானமும் மற்றும் அதன் அதிபதியும் பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை  மூலமாக வலுப்பெற்ற நிலையில் இதில் ஏதாவது ஒரு தசை அல்லது யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் பல கோடிக்கணக்கான பொருள் ஈட்டி கோடீஸ்வரர் ஆகலாம்.


இதேபோல ஒருவர் ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையில் இருந்து ஏதாவது ஒரு தசை நடத்தினால் கடல் கடந்து அந்நிய தேசத்தில் பொருளீட்டி வாழக்கூடிய நிர்பந்தம் உண்டாகும்.


 திருமண ஸ்தானங்களான லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் போன்றவற்றுடன் சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு ஏற்படுமாயின் கால தாமத திருமணத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.மேலும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


மேற்கண்ட ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் வலுப்பெற்று சுபத்துவ நிலையில் நின்று தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரு கிரகங்களும் சுபத்துவ நிலையில் வலிமை அடைந்து இருப்பின் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று நிறைவான தாம்பத்திய சுகத்தை அனுபவித்து புத்திர பாக்கியத்தை பெற்று நிறைவான வாழ்க்கை வாழக்கூடிய நல்ல யோகத்தை பெற்று இருப்பார்கள்.


  சில ஜாதகங்களில் மேற்கண்ட 1,2,7,8 ஆம் இடங்களும் அதன் அதிபதிகள் ,களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் புத்திர காரகன் குருபகவான் போன்றவற்றுடன் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பு கொள்ளும் போது பாவத்துவ படிநிலைகளுக்கு ஏற்ப கால தாமதம் திருமணம், திருமணத்திற்கு பிறகு பிரிந்து வாழும் நிலை மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.


ஒருவருக்கு மறைவிட ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெற்று சுபத்துவ நிலையினை அடைந்து எட்டு மற்றும் பன்னிரண்டாம் இட தசை நடப்பில் உள்ள காலங்களில் அந்நிய தேசத்தில் பொருளீட்டல், லாட்டரி, ரேஸ் ,ஷாக்பாட் ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் பொருளீட்டி புகழ் பெறும் யோகம் உண்டாகும்.


 ஒருவரது எண்ணங்களும் மற்றும் செயல்களும் எதை நோக்கி நகரும் என்பதை அவரது ஜாதகத்தில் உள்ள அதிக சுபத்துவமான கிரகம் எது ? என கண்டறிந்தால் எளிதாக கண்டறிய இயலும்.


  எந்த கிரகம் சுபத்துவ படிநிலையில் முதலாவதாக உள்ளது என்று கண்டறிந்து பிறகு துணை நிலை சுபத்துவ கிரகங்களை கண்டறிய ஒருவர் மேற்கொண்டு இருக்கும் தொழில்நிலையை அறியலாம்.பிறகு அவருக்கு நடப்பில் இருக்கும் தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களை கொண்டு அந்த தொழிலில் எந்த அளவுக்கு உயர்ந்து இருப்பார் என்பதை கண்டறியலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

      செல்

  9715189647

   7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிடத்தில் மாறுபட்ட பார்வை

 ஜோதிடத்தில் மாறுபட்ட பார்வை

                      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


    ஜோதிடம் என்பது பரந்து விரிந்த மகா சமுத்திரம் ஆகும். அதில் மூழ்கி ஜோதிட முத்தை எடுப்பதற்கு ஆழ்ந்த புலமையும் மற்றும் நீண்ட அனுபவமும்  மிகவும் தேவைப்படுகிறது.


 ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானமும் மற்றும் தெளிவான புலமையும் நிரம்ப பெறாதவர்கள் சில மேலோட்டமான அடிப்படை விதிகளையும், மற்றும் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள சில விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்படுவார்கள்.


   பலன் கூற முற்படும் போது ஒவ்வொரு விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விதிகளுக்குள்  உள்ள விதிவிலக்குகள் தெரிந்து கொள்வதற்கு நிறைய பல ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்து பலன் சொல்லும் நபருக்கே இந்த சூட்சும உண்மை புலப்படும்.ஜோதிட

மூல விதிகளை அப்படியே எடுத்து கொண்டு பலன் கூற முற்பட்டால் பலன் தவறாக போய் முடிந்து விடும்.


 திருமண பொருத்தம் பார்க்கும் போது தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.பொருத்தம் பார்க்கும் போது வெறும்   நட்சத்திர பொருத்தங்களை மட்டுமே வைத்து கொண்டு பொருத்தம் உள்ளது //இல்லை என்று ஜோதிடர்களால்  தரப்படும் திருமண பொருத்தம் பெரும்பாலும் தவறாக சென்று விட கூடும்.


 பெரும்பாலான ஜாதகத்திற்கு நட்சத்திரம் பொருத்தம் சிறப்பாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலை அமைப்புகள்,தசா அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் நல்லபடியாக அமைந்தால் கட்டாயம் அந்த தம்பதிகளுக்கு விவாகம் செய்யலாம்.


 சில நேரங்களில் நட்சத்திர பொருத்தம் 10/12  உத்தமம் என்று இருக்கும் ஆனால் இருவரது ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் நல்ல அமைப்புகளில் இல்லாமல் தசா புக்தி சந்திப்பு மற்றும் கோச்சார பலன்கள் ஒத்ததாக இல்லாமல் இருக்கும் போது நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஜோதிடர் விவாகம் செய்யலாம் என திருமணம் செய்து கொள்ள செய்வார்கள்.திருமணம் ஆன சில மாதங்களில் ஒத்த கிரக அமைப்புகள் மற்றும் தசாபுத்தி அமைப்புக்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவுகள் வந்து விட வாய்ப்பு உண்டு.


 ஜோதிடத்தை தொழில் முறையாக கொண்டுள்ள ஜோதிடர்கள் பரந்து விரிந்து கிடக்கும் ஜோதிடவியலில்  தினந்தோறும் படித்தும், ஆராய்ந்து பார்த்தும் மற்றும் பல வகையான ஜாதகங்களை பார்த்து ஆய்வு செய்து பலன் சொல்ல பழகியும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இருக்க வேண்டும் (update). இவ்வாறாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சோதிடர்களால் தான் கால பரிமாணத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பலன் அளிக்க முயல வேண்டும்.


இவ்வாறாக தன்னை அப்டேட் செய்து கொள்ளாத நிலையில் தான் ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம்  மற்றும் மூல நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது.  ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை நட்சத்திரம் கேட்டவர்களுக்காகாது , அல்லது மூத்த மைத்துனருக்கு ஆகாது,.விசாகம் நட்சத்திரம் இளைய  மைத்துனருக்கு  ஆகாது போன்ற விஷயங்களையும் எடுத்துக் கொண்டு கிரக ஆராய்ச்சி செய்யாமல் பொருத்தம் பார்த்து பலன் சொல்லும் போது பலன் துல்லியமாக இல்லாமல் போய் விடுவதுண்டு.


  மூலம் நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது என்றால் அவரது மாமனார் ஜாதகத்தில் அவரது ஆயுள் பலமாக இருக்கும் பட்சத்தில் மூல நட்சத்திரம் குறித்து பயம் கொள்ள தேவையில்லை.


       செவ்வாய் பகவான் ஜாதகத்தில் 2,4,7,8, 12 ஆம் இடத்தில் நிற்ப்பின் செவ்வாய் தோஷம் ஆகும்.செவ்வாய் தோஷம் உயிரை கொல்லும் அளவிற்கான மோசமான தோஷம் அல்ல.

இங்கு விதிவிலக்காக அதேநேரத்தில் செவ்வாய் பகவான் உச்சம் , ஆட்சி மற்றும் நீசம் பெற்று இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவதும் சரியானது அல்ல.


பாவ கிரகம் நேர்வலு பெறக்கூடாது என்ற வகையில் 1, 2,4,7,8 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நின்றால் செவ்வாய் தோஷம் இல்லை என்றாலும் பாவ கிரகம் என்ற வகையில் ஸ்தான வலுப்பெற்று திருமண ஸ்தானங்களான 1,2,7,8 உடன் தொடர்பு கொண்டு பாவத்துவமடைய செய்யும் என்ற வகையில் செவ்வாய் பகவான் மேற்கண்ட ஸ்தானங்களில் உச்சம், ஆட்சி பெற்று நிற்க கூடாது.


ஜோதிடத்தில் மூல நூல்களில் தரப்பட்ட கருத்துக்கள்  அந்த அந்த காலகட்டங்களுக்கு ஏற்ப தனி நபர் வாழ்வில் நடந்த சோதிட கருத்துக்கள் பாடலாக்கி தந்து உள்ளார்கள்.அப் பாடல் கருத்துக்கள் இந்த காலத்தில் அப்படியே பலன் தரும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.


 ஜோதிடத்தில் பலன் கூற முற்படும் போது ஸ்தான வலு ,கிரக சேர்க்கைகள், பார்வை, இருக்கும் இடம்  மற்றும் நட்சத்திர சாரம் போன்றவற்றை பாகை அடிப்படையில் ஆய்வு செய்து நிறைவாக சுபத்துவ மற்றும் சூட்சும வலுவிற்கு ஏற்பவே பலன் அமையும் 


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  9715189647


   செல்

 9715189647

 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                   


அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.SC,M.A,BEd

ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,.

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..

கிரக பார்வை நுணுக்கங்கள் -(2)

 கிரக பார்வை நுணுக்கங்கள்-(2)

                        


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு ஜாதகத்தில் குரு பகவான்

 மற்றும் வளர்பிறை சந்திரன் எந்த ஸ்தானங்களை பார்க்கின்றோதோ, அவை தொடர்புடைய ஆதிபத்தியம் வலுப்பெற்று நல்ல பலனைத் தருகிறது.இவை எந்த கிரகத்தினை பார்க்கின்றதோ , அந்த கிரகம் தரும் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை அதிகரிக்க செய்கிறது.


  சில நேரங்களில் ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்பு எந்த ஸ்தானங்களில் அமைகின்றதோ அந்த  ஸ்தானமானது பலமாக பாதிக்கப்படுகிறது.


    ஒரு ஜாதகத்தில் எந்த ஸ்தானங்களில் எல்லாம் சனி, ராகு மற்றும் சனி, செவ்வாய்  சேர்க்கை அல்லது சனி , ராகு  சேர்ந்து செவ்வாயால் பார்க்கப்படும் அமைப்பு  செவ்வாய், ராகு  சேர்ந்து சனியால் பார்க்கப்படும் அமைப்பு.


  மேற்கண்ட வகையில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்களில் இருந்தாலும் அவை தொடர்புடைய கிரக தசைகள் நடப்பில் இருக்கும் காலங்களில் மட்டுமே அதிக பாதிப்பை ஜாதகருக்கு தருகிறது.


   சில நேரங்களில் மேற்கண்ட வகையில் ஜாதக அமைப்புகள் இருந்தும்  அவை தொடர்புடைய தசை புக்திகளில் எவ்வித கெடுபைனை தரவில்லை எனில் அவ்விரு கிரகங்கள் குறிப்பிட்ட இருபத்திரண்டு பாகை தள்ளி இணைந்து இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் அடைந்து இருந்தாலும் நல்ல பலனைத் தந்து விடுவதுண்டு.


  ஒட்டுமொத்த பாவத்துவத்தை குரு பகவானது ஒற்றை பார்வை எல்லாவற்றையும் ‌சுபத்துவமாக்கி விடுகிறது.


 ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று சுப கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் சனி பகவானின் ஒற்றை பார்வை முழுமையாக மொத்த  அமைப்பையும் பாவத்துவமாக்கி கெடு பலன்களை செய்ய வைத்து விடுகிறது.


 இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களை சனி பகவான் தனது 3,7,10 ஆம் பார்வையால் பார்க்கப்பட்டாலும் , இவ்வாறு பார்க்கப்படும் சனி பகவானை ,குரு பகவான் பார்த்தால் சனியின் பார்வையில் தீய சக்தி குரு பகவானது பார்வையால் வடிகட்டப்பட்டு  நல்லதை தராவிட்டாலும் கெடுப்பலனை தர இயலாமல் போய்விடுகிறது.


  ஒரு சில ஜாதகங்களில் சனி பகவானோ   அல்லது குரு பகவானோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மேலோட்டமாக   பார்க்கும்போது பார்ப்பது போல் தோன்றினாலும் பாகை (degree) அடிப்படையில் பார்க்கும்போது அவை அந்த கிரகத்தை பார்த்து பாவத்துவம் செய்யாமல் இருந்து விடுவதும் உண்டு.


  செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு பகவான், சந்திரன்,சூரியன் மற்றும் கேது பகவானை பார்க்கும் போது பாவத்துவம் அடைய செய்ய மாட்டார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஒரு ஸ்தானத்தையோ அல்லது ஒரு கிரகத்தையோ பார்வை செய்தால் மிகுந்த பாவத்துவத்திற்கு உள்ளாகிறது.


 சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு மிகுந்த பாவத்துவம் நிறைந்த ஜாதகமாகும்.உதாரணமாக மகர வீட்டில் ஆட்சி நிலையில் உள்ள சனியை துலாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக பார்க்கிறது.இதேபோல மகரத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் துலாத்த்தில் உள்ள சனி பகவானை பார்வை செய்கிறது.


இதேபோல மகரத்தில் உச்சம் நிலையில் உள்ள செவ்வாய் பகவான் மேஷத்தில் உள்ள நீச நிலையில் உள்ள சனி பகவானை நான்காம் பார்வையாக பார்க்கின்றது.மேஷத்திவ் நீச நிலையில் உள்ள சனியை பத்தாம் பார்வையாக மகரத்தில் உள்ள உச்சம் பெற்ற செவ்வாய் பகவானை பார்க்கிறது.


 மேற்கண்ட இது போன்ற ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் சனி மற்றும் செவ்வாய் எந்த ஸ்தானத்தை அல்லது கிரகத்தை பார்க்கின்றதோ அவை மிகுந்த பாவத்துவ நிலையை அடைந்து விடுகிறது.


 இதேபோல செல்வாராம்  பார்க்கப்பட்ட சனியின் பார்வையோ அல்லது சனியால்  பார்க்கப்பட்ட செவ்வாயின் பார்வையோ பார்க்கின்ற ஸ்தானத்தையோ அல்லது கிரகத்தையோ மிகுந்த பாவத்துவமாக்கி கெடு பலனை  சாதகருக்கு தர வைத்து விடுகிறது.


 குரு பகவானால் பார்க்கப்பட்ட வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.இதேபோல வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் மற்றும் குரு பகவான் ஆகியவற்றால் பார்க்கப்பட்ட எந்த கிரகம் மற்றும் ஆதிபத்தியம் இரண்டும் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & டெலிகிராம் & கூகுள் பே (All in one cell.)

    9715189647


   Cell : 7402570899

              9715189647


Email masterastroravi@gmail.com


              



By

Astro Ravichandran

  M.Sc,M.A,BEd

Teacher & Astrologer

Omsakthi online Astro consulting centre,,

Karambakkudi, Pudukkottai District.