Tuesday 16 November 2021

சொத்து சேர்க்கும் யோகம்

                          


**சொத்து சேர்க்கும் யோகம்**


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   என்னிடம் சாதகம் பார்க்க வரும் மிகப் பலர் "எப்பொழுது சார் என் வாழ்வில் சொத்து சேரும்?" என்ற 

கேள்வியை கேட்டு  கொண்டதற்கிணங்க அவற்றுக்கு தரும் விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில் இந்த பதிவை தொடங்குகிறேன்.


 " நான் பார்க்க 

நேத்து வர என்ன மாதிரி  கஷ்டப்பட்டுகிட்டு இருந்தான்."  

குப்பையில் கிடந்தவன் இன்னைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டான்.

 எல்லாம் அவனோட

 கால நேரம். நானும் தான் இருக்கிறேன்". என 

சுய பச்சாதாபம் கொள்ளும் மனிதர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.


   "நான் பார்க்க அவன். ஒன்னும் பெரிய அறிவாளி  இல்ல சார். ஏதோ ஒன்னு முயற்சி பண்ணினான்  அதுல அதிர்ஷ்டம் அவனுக்கு கிளிக் ஆயிடுச்சு . இந்த உலகத்தில் எவ்வளவு தான் அறிவு , திறமை இருந்தாலும் 

 சாதித்து காட்டுறவனதான் சாதனையாளன் என்று உலகம் போற்றும். சாதிக்காமல் அறிவும், திறமையும் இருந்து என்ன புண்ணியம்?" எனப் புலம்பும் மனிதர்களை பார்க்கிறோம்.


ஒருவன் அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் இருந்தும் எதையும் சாதிக்க முடியாத சூழல் அமைவற்கும்,

   ஒருவருக்கு சரியான பொருத்தமான அறிவும் மற்றும்  திறமையும்  இல்லாவிட்டாலும் சாதித்து காட்டுவதற்கும்,

  அறிவும் மற்றும் திறமையும் இருந்து அதைப் பயன்படுத்தி சாதித்து காட்டுவதற்கும் எல்லாம் அவனது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.


  ஒருவன் அறிவாளியாகவும் மற்றும் திறமைசாலியாகவும் இருந்தும் அவன் வாழ்வில் சாதிக்க முடியாமல் போனதற்கு சோதிட அடிப்படையில் காரணங்களை ஆழ்ந்து நோக்கினால் அவனது வாழ்வில் யோகம் தரக்கூடிய உகந்த தசை அமைப்புகள்  வராமல் போய் விடுவதே காரணமாக அமைகிறது.


   பெரிய அறிவும், திறமையும் இல்லாவிட்டாலும் ஒரு சிலர் சாதித்து புகழ் பெறுவதற்கு அவனது வாழ்வில் உரிய காலத்தில் யோக தசைகள் வந்து அவனை உயர்த்திக் காட்டுவது காரணமாக அமைகிறது.


  ஒருசிலர் மட்டும் 

"அத்தி பூத்தார் போல் அறிவும் திறமையும் நிரம்பப் பெற்று அதன் வழியே பொருளீட்டி புகழும்,சொத்தும் சேர்க்கும் பாக்கியவவனாக திகழ்கிறார்கள்.இதற்கு காரணம் நல்ல கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் யோக தசைகள் உரிய காலத்தில் வருவதும் காரணமாக அமைகிறது


   ஒருவருக்கு பூமி சார்ந்த சொத்து சேர வேண்டிய நிலை அறிய அவரது ஜாதகத்தில் நான்காம் இடம் மற்றும் அதன் அதிபதி, பூமிக்கு காரகனாகிய செவ்வாய் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும்.


  செவ்வாய் பகவான் சுபத்துவமாக இருந்து அதனுடைய காரக பலனான

 பூமி வாங்கி சேர்க்கும் அமைப்பு நிலையில் பலம் உடையதாக இருக்க வேண்டும். இதற்கு உரிய உகந்த தசைகளும் வாழ்வில் நடப்பில் வர வேண்டும்.


    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடைய சுபத்துவ நிலையை அடையும் பொழுது அதனுடைய காரக  பலனான மருத்துவம், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சேர்ந்து சொத்து சேர்க்கும் யோகமும் உண்டாகும்.


   பாவத்துவ நிலையில் உள்ள செவ்வாய் பகவான் ரொளடியாகவும் ,

 கசாப்பு கடைக்காரர் மற்றும் சமையல்காரராக  இருந்து சம்பாதித்து சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 வண்டி,, வாகனம் ஹோட்டல், ஆடை, ஆபரணம், சினிமா, கலை, ஓவியம், நடனம், நடிப்பு கணிப்பொறி, பைனான்ஸ், கொடுக்கல்-வாங்கல், ஆடை அலங்காரம்,

 சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம், ஆர்ட் டைரக்டர், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலமாக சொத்துக்கள் பெருக ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற நிலையில் உகந்த யோக தசை அமைப்பு வரும் காலங்களில்மேற்கண்ட வகையில் ஒருவருக்கு சொத்து சேரும் யோகம் உண்டாகும்.


 ஒருவருக்கு சூரிய பகவான் சுபத்துவமான நிலையில் இருந்து அவை தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு அதன் தசை வரும் காலங்களில் ஒருவர் ஆட்சி, அதிகாரம் அரசியல்,, அரசாங்க உயர் அதிகாரி மற்றும் தலைமையேற்று செல்லும் பொது மேலாளர் போன்ற வகையில் ஒருவருக்கு சொத்து மற்றும் புகழ் சேரும் யோகம் உண்டாகும்.


புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து சுபத்துவமான நிலை பெற்றிருக்கும் போது கணிதம், கம்ப்யூட்டர்,  ஓவியம்,, இசை,

 புள்ளி விவரங்களை சேகரித்தல், ஆலோசனை கூறும் மந்திரியாக இருத்தல், செய்தித்தாள்களிலும் தலையங்கம் எழுதுதல், கதை,, கவிதை, கட்டுரை பாடல்கள் எழுதுதல், பட்டிமன்ற மேடைகளில் பேசுதல் ,பிரசங்கம் செய்தல், கணிதப் பேராசிரியராக இருத்தல், சிலை, சிற்பம், கூடை முடைதல், பாய் பின்னுதல, போன்ற நுண்கலை மூலமாகவும், ஆராய்ச்சி மேற்கொண்டு புதியன கண்டுபிடிப்பும் கண்டுபிடிப்பாளர் போன்றவற்றின் மூலம் உகந்த தசை யோக காலங்களில் ஒருவருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.


குருபகவான் உச்சம், ஆட்சி  போன்ற. நிலையில் பலம் பெற்று சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது ஆசிரியராகவும், பேராசிரியராகவும் மேடையில் ஏறி பேசக்கூடிய பட்டிமன்றப் பேச்சாளராகவும், நகைக்கடை முதலாளி மற்றும் நீதிபதியாகவும் உகந்த தசை அமைப்பு செயல்படும்போது சொத்து சேர்க்க கூடிய யோகம் உண்டாகும்.


 ஒருவரது ஜாதகத்தில் சந்திர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று அதிக சுபத்துவமான. நிலையில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது பால்

ஐஸ்கிரீம்,கூல்டிரிங்ஸ் மற்றும் குடிக்க இயலும் திரவங்கள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு (🎏. மீன், இறால், 🦀 நண்டு,மட்டி,சிப்பி..)  மூலமாக உகந்த தசா அமைப்புகள் வரும்பொழுது சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


ஒருவரது ஜாதகத்தில் சனி சுபத்துவம் ஆன நிலையில் பொறியியல் வல்லுனர்,, பஞ்சாயத்து தலைவர், டெக்னிசியன் போன்றவற்றின் மூலமாகவும் பாவத்துவமான நிலையில் மெக்கானிக் சாக்கடை சுத்தப்படுத்துதல், கழிவுநீர் கழிப்பிடம், செப்டிக் டேங்க் பிணவரை, பிணம் எரித்தல், பாரில் வேலை செய்தல்,

கனரக வாகனங்களை இயக்குதல், குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனை மற்றும் அவைகளை ஏற்றிச்செல்லும் இடங்களில் வேலை செய்தல், லாரி டிரைவர், கிளீனர், உடல் முழுவதும் மசகு அப்பிக்கொண்டு வேற்றுடையில் வேலை செய்தல் போன்றவற்றின் மூலமாக உகந்த தசை அமைப்புகளில் ஒருவருக்கு சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


  நிழல் கிரகங்களான ராகு பகவான் ஒருவரது ஜாதகத்தில்  சுபத்துவமான நிலையில  குறிப்பாக சர ராசிகள் அல்லது விரய ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் நிற்கும் பொழுது

அதன் தசை காலங்களில் வெளிநாடு சென்று பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 ராகு பகவான் சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானமான பத்தாமிட தொடர்பு பெற்றுள்ள நிலையில் அதன் தசை நடப்பில். வரும் காலங்களில் அந்நிய மொழி, அந்நிய தேசம் ,அந்நிய நாட்டுடன் தொடர்பு, கடல் கடந்து சென்று வாணிபம் ,திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் கடல் கடந்து சென்று பொருளீட்டும் யோகம், ஷேர் மார்க்கெட், ஷாக்பாட், சூதாட்டம் ,

குதிரை ரேஸ், போன்றவற்றில் பொருள் சேர்த்தல், மருந்துப்பொருட்கள் மாந்திரீகம் , எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,

நகை கடத்தல் அரசியல் போன்றவற்றில் பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 ஜாதகத்தில் கேது பகவான் சுபத்துவ  நிலையில் உகந்த திசை காலங்களில் குறி சொல்லுதல் ,சோதிடம், ஆன்மீகத்தில் நாட்டம், சூட்சும உண்மைகளைக் கண்டறிந்து எழுதுதல் கோயில் அருகில்  கடை வைத்து நடத்துதல் போன்றவற்றின் மூலமாக சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


   ஒருவர் ஜாதகத்தில் மிதமிஞ்சிய சொத்துகளை சேர்ப்பதற்கு அவரது ஜாதகத்தில் லக்கனாதிபதி ,

தனாதிபதி, பாக்கியாதிபதி,

 ஜீவன ஸ்தானாதிபதி,, மற்றும் லாபாதிபதி மற்றும் இந்த ஸ்தானங்களும் வலுப்பெற்று மேற்கூறிய கிரகங்களில் எந்த கிரகம் அதிகமான சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தான தொடர்பு கொண்டுள்ள கிரகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு  சொத்துக்களை சேர்க்கும் யோகம் உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

9715189647


    செல்

  9715189647

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும்  பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                         


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் 

அஸ்ட்ரோ கன்சல்டிங்  சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலை பெற காரணம் என்ன?

                        


 பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலைமையை பெற காரணம் என்ன?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!!


   வாழ்வில் ஒரு சிலர் மட்டும் ஏழ்மையான நிலையில் பிறந்து கடைசிவரையில் ஏழையாகவே வாழ்ந்து மரிப்பதற்கான  காரணம் என்ன ? என்பதை ஆழ்ந்து நோக்கினால் அவரது ஜாதகத்தில் முதலில் இலக்கனத்திலும் மற்றும் ராசியிலும்  இயற்கைப் பாபக் கிரகம் ஏதேனும் வகையில் தொடர்பு பெற்று, வேறுவகையில் சுபத்துவம் பெறாத நிலையில்  லக்னாதிபதியும்   மற்றும் ராசி அதிபதியும் பலம் இழந்து காணப்படும்.


  மேலும் இலக்கன யோகர்கள் பாவர்கள் பிடியில் சிக்கி காணப்படும்.


 சாதகத்தில் சில நேரங்களில் ஏதேனும் யோக அமைப்புகள் இருந்தாலும் அந்த யோக . அமைப்பு கிரக திசைகள் அவரது வாழ்வில் வருவதற்கான வாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமாக அமைகிறது.


 நீசம் ,அஸ்தமனம், மறைவிடம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்த கிரக தசைகள் அல்லது பாவர்கள் பிடியில் சிக்கிய கிரக தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழையாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.


 ஒரு சிலர்  ஜாதகத்தில் லக்கனாதிபதி, தனாதிபதி பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி பலமிழந்த சூழலில் 

சத்ரு ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்ற நிலையில் உகந்த தசா அமைப்புகளும் நடக்க இயலாத சூழலில் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை பெறுவதற்கு காரணமாக அமைகிறது.


ஒருவர் ஜாதகத்தில் என்னதான் யோக தசைகள் நடந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் பலமிழந்து சூழலில் ஒரு சிலர் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் பிறந்ததிலிருந்து 

அவ  யோக தசைகள் தொடர்ந்து  நடப்பிலிருக்கும் அமைப்பு பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் சுகத்தை அனுபவிக்கக் கூடிய சுகாதிபதியும் பலமிழந்து உகந்த திசை அமைப்புகள் வாழ்நாள் முழுவதும் வர இயலாத அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


நன்றி!


  வாட்ஸ் அப்

   9715189647


      செல்

 9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்..)

                        


அன்புடன் 

சோதிடர் 

சோ.ப ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நோய் வரும் காலம் பற்றி ஜோதிட விரல் கருத்து என்ன?

                           


நோய் வரும் காலம் பற்றி அறிய சோதிடவியல் தரும் கருத்து என்ன? 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவரது ஜாதகத்தில் நோய் பற்றி தெரிந்து கொள்ள ருண , ரோக ஸ்தானமான ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதி பற்றி ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.


   ஜாதகத்தில் ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுப்பெற்று அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு அந்த கிரகம் சார்ந்த மற்றும் அந்த கிரகம் இடம்பெற்ற வீடு  தொடர்புடைய உடல் உறுப்புகளில் நோய்  உண்டாகும்.


  ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறாம் இட அதிபதி வலுப்பெற்றுள்ள நிலையில் அந்த தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த நோய் பாதிப்பிற்கு ஜாதகர் உள்ளாகுவார்.


  ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடமும் அதன் அதிபதியும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுவடைந்த  நிலையில் அதன் தசை காலங்களில் சாதகற்கு பிணி ,கடன்,சத்ரு போன்றவற்றால் பாதிப்பை தரும்.


  ரிஷபம் ,விருச்சிகம் லக்னங்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் லக்னாதிபதியாகவும் மற்றும் ஆறாம் இட அதிபதியாகவும்  வருவதால் அதன் தசை காலங்களில் பெரும் நோய் பாதிப்பை தந்து விடுவதில்லை. அதிலும் குறிப்பாக இலக்கனத்தில் அமரும்பொழுது முழுவதும் லக்கனாதிபதியாகவே அதிகம் செயல்படுவார். ஆறாமிட பாதிப்பை அதிகமாக தருவதில்லை. மாறாக ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெறும் பொழுது அவை இலக்கனாதிபதி பலனை விட அதிகமான ஆறாம் இட பாதிப்பான நோய், கடன் ,சத்ரு தொல்லைகளையே அதிகமாக ஜாதகருக்கு தருவார்.


  கும்ப லக்கினத்திற்கு ஆறாமிட அதிபதியாக வரும் சந்திரனுக்கு வேறு எந்த ஸ்தான ஆதிபத்தியம் கிடையாது. எனவே கும்ப லக்னத்திற்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய சந்திரதசை வந்து அதுவும் கடகத்திலே நின்று ஆட்சி பெற்ற நிலையில் தேய்பிறை சந்திரனாக இருக்கக் கூடிய நிலையில் அதிகமான பாதிப்பை சாதகருக்கு தருவார்.


 கும்ப லக்கினத்திற்கு சந்திரன் அதிக வலு பெறக்கூடாது என்று கூறினாலும் அதே நேரத்தில் சந்திரன் பலவீனம் அடைந்த நிலையில் சந்திரனுக்கு காரகனான தாய் மற்றும் மனநிலை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்கும்.


  மீன லக்கினத்திற்கு ஆறுக்குடையவர்  சூரிய பகவான் ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் அதிகமான நோய் பாதிப்புகளை சாதகற்கு தருவார் அதிலும் சூரியனுக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள்  உண்டாகும்.


  ஆறாம் இட அதிபதியான சூரியன் நீசம் போன்ற பலவீனமான நிலையில் இருப்பின் நோய் பாதிப்புகளை தராவிட்டாலும்,

ஜாதகரது தந்தை, அரசு வேலை கிடைப்பதில தாமதம் ,ஆளுமை தன்மை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்குவார் .


 பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி பலவீனம் அடைந்தால் நோய் பாதிப்பில் இருந்து ஜாதகர் தப்பித்தாலும், வேறு வகையில் பாதிப்படைவார்கள். அதாவது ஒருவர் மேற்கொண்ட தொழிலில் வெற்றி அடைய ஆறாமிட அதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும். ஆதலால் ஆறாமிட அதிபதி பலம் இழக்கும் போது தான் மேற்கொண்ட தொழிலில் வெற்றியடைய கூடிய நிலையில் பாதிப்பை உண்டாக்கும்.


 ஒருவரது ஜாதகத்தில் ஆறாமிட அதிபதியாக சூரியன் பகவான் வந்தால் ஜாதகருக்கு 

வயிறு வலி, அறையாப்பு, சொறிசிரங்கு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி போன்றவை உண்டாகும். 


   சந்திரனாக இருந்தால் அஜீரணம், சீதம், வயிற்றுப்போக்கு ,உதிரம் சம்பந்தப்பட்ட வியாதிகள்  உண்டாகும் .


செவ்வாய் பகவான் ஆக இருந்தால் 

வாந்தி தலைவலி, மண்டையிடி, புரடி வெட்டு, கத்தி காயம் போன்றவற்றால் பாதிப்பு உண்டாகும் .


ஆறாம் அதிபதி புதன் எனில் கை,கால் முடக்கம் எனும் வாயு சம்பந்தப்பட்ட வியாதி, கழுத்தில் புண் போன்றவை உண்டாகும்.


 குரு பகவானின் எனில் மர்மஸ்தான வியாதி, உதிரப்போக்கு, அரசர்களால் காயம், நெஞ்சிலிருந்து அடி, வயிற்று வலி போன்றவை உண்டாகும்.


 சுக்கிரன் பகவான் எனில் கட்டி பிளவை ஸ்ரீ மூலநோய்,

 பெண்களால் புருஷ நோய், சூலை நோய் போன்றவை உண்டாகும்.


 சனி பகவான் எனில் 

வாத நோய், சூலை நோய், எலும்புருக்கி நோய்,

 வாதம், வாதக் கடுப்பு, வாத நீர் போன்றவை உண்டாகும்.


  ஆறாமிடத்தில்  ராகு-கேது  தொடர்பு உண்டானால்  விஷம் பசித்தல், மயக்கம், பிசாசு, பீடை, துற் பிணி முதலியவை வரும்.


 பாதகாதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, மாரகாதிபதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, அஷ்டமாதிபதி தசையில் ஆறாமிட அதிபதி புத்தி அல்லது ஆறாம் இட அதிபதி தசையில் மாரக அல்லது பாதக அல்லது அஷ்டமாதிபதி புத்தி நடப்பில் இருக்கும் காலங்களில் ஜாதகர் நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கின்ற நிலை உண்டாகும். லக்கினாதிபதி வலுவாக இருக்கக் கூடிய சூழலில் உயிர் பாதிப்புகள் ஏதும் கிடையாது.


நன்றி.


     வாட்ஸ் அப்

     9715189647

        செல்

     9715189647

      7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில்  அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டண விவரங்களை பெறலாம்)

                             


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

யார் புகழ் பெறும் மனிதர்கள்?

                           


யார் புகழ் பெறும் மனிதர்கள்?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 புகழுக்கு மயங்காதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அதேபோல அங்கீகாரத்துக்கு ஏங்காத மனிதர்கள் இல்லை.

  

 எவரொருவர் நாள்தோறும் தன்னை பட்டை தீட்டிக் கொண்டு தனக்கான துறையில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் நிச்சயம் தனக்கான துறையில் அங்கீகாரம்  கிடைக்கும்.


   ஒருவரது ஜாதகத்தில் முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுவது மூன்றாம் இடமே ஆகும்.ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியினை பொருத்துத்தான் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி எத்தகைய தன்மை உடையதாக இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.


  முயற்சி செய்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட முடியாது. எவரொருவர் தான் கொண்ட செயலில் தொடர்ந்து 

விடா முயற்சியை சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்கின்றாரோ அவர் ஒருவரால் தான் புகழின் சிகரத்தை எட்டிப்பிடிக்க முடியும்.


 ஒரு மின் பல்பை கண்டறிய தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் தடவை முயற்சி செய்தார்.  ஆயிரமாவது முறையில் தான் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர் மின் பல்பை கண்டறிந்த பிறகு அவரை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம்" ஒரு மின் பல்பினை உருவாக்க  999 முறை நீங்கள் தோல்வி அடைந்து  ஆயிரமாவது முறையில்தான் உங்களால் வெற்றி பெற முடிந்தது. இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?" என கேட்டதற்கு அவர் கூறிய பதில்

" ஒரு மின் பல்பை எவ்வாறு எல்லாம் உருவாக்கக் கூடாது என்பதை  999 முறை கண்டறிந்த பின் தான் ஆயிரமாவது முறையில் ஒரு சரியான  மின் பல்பினை என்னால் உருவாக்க முடிந்தது"என்றாராம்.


 ஒருவரது கீர்த்தி, புகழ், அந்தஸ்து போன்றவற்றை கண்டறிய உதவும் ஸ்தானமும் ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடமே ஆகும்.


 மூன்றாமிடம், அதனுடைய அதிபதி மற்றும் ஆடம்பர காரகன் சுக்கிரன் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து ஒருவரது கீர்த்தி, புகழ்  மற்றும் அந்தஸ்து பெறும் நிலையை கண்டறியலாம்.


  ஒருவரது ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் எவ்வித பாவக்கிரகங்கள் இடம்பெறாமல், இயற்கை சுப கிரகங்களானகுரு வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பு பெற்று

 மூன்றாம் இட அதிபதி மற்றும் சுக்கிர பகவானும் நல்ல முறையில் பலம் பெற்று சுபத்துவ நிலையில் நின்று அதன் தசை நடக்கும் பொழுது அந்த தசை நடக்கின்ற அமைப்பை பெற்ற ஜாதகமானது  கீர்த்தி,புகழ் அந்தஸ்தை அடையக்கூடிய ஜாதகம் ஆகும்.


  எவரொருவர் ஜாதகத்தில்  எவ்வித பங்கப்படாத பௌர்ணமி யோகத்தில் பிறந்து இருக்கிறார்களோ, அவர்களும் கீர்த்தி, புகழ் அந்தஸ்து  பெறுகின்ற அமைப்பு பெற்றவர்கள் ஆவார்.


    சிம்மமும் , சூரியனும் வலுப்பெற்று நிற்க்கின்ற அமைப்பு பெற்றவர்களும்,

லக்னாதிபதி நன்றாக வலுப்பெற்ற நிலையில் கார்த்திகை மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் பெறும் அமைப்பை பெற்றவர்கள் ஆவார்கள்.


 விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒளிக்கிரகமான  சந்திரனும் மற்றும் சூரியனும் தர்ம மற்றும் கர்மாதிபதியான ஒன்பது மற்றும் பத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.எனவே இவர்களுக்கு சூரியனும் சந்திரனும் சமசப்தம பார்க்கக்கூடிய இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தொடர்பு பெறாத பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் சூரிய மற்றும் சந்திர தசையில் மிகப்பெரிய பிரபலம் அடையக்கூடிய யோகம் பெற்றவர்களாக அமைத்திருப்பார்கள்.


   ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் மூன்றாம் இடமும் பலம் பெற்ற நிலையில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப கிரகமான குரு ,புதன் மற்றும் சுக்கிரன் அமர்ந்து அதன் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் புகழ் பெறும் அமைப்பைப் பெற்றவர்கள் ஆவார்கள்.


  மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கீர்த்தி புகழ் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் உச்சமடைந்து நின்று வேறு எவ்வித பாவர்களுடைய தொடர்பின்றி தனுசு ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் உள்ள குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பார்க்கின்ற அமைப்பை பெற்ற சூரிய தசை நடைபெறும் காலங்களில் ஜாதகர் கீர்த்தி, புகழ்  மற்றும் அந்தஸ்தை அடைய கூடிய நபர் ஆவார்.


 தனுசு லக்கினத்திற்கு ஒன்பதுக்குடைய சூரியன், பத்தாம் இடத்திலும் பத்துக்குடைய புதன், ஒன்பதாம் இடத்திலும் பரிவர்த்தனை அடைந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று நின்று லக்கனத்தில் குரு பகவான் ஆட்சி பெற்ற நிலையில், மீன ராசியில் பிறந்த சாதகர் சூரியன், புதன் அல்லது குரு தசையில் புகழின் உச்சியை அடைவார்கள்.


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647

     செல்

  9715189647

    7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                         


அன்புடன்

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன்

அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.