Tuesday 28 February 2017

சாதகப்படி என்ன தொழில் நீங்கள் செய்யலாம் ?



             சாதகப்படி என்ன தொழில்

         நீங்கள் செய்யலாம் ?- ( 2 )



"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 144 )

             செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

           ஒரு மனிதன் வாழ்வதற்கு பொருள் வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் மனிதன் வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
" இறை தேடலோடு இரையும் தேடு "
"அருளிள்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை "

             எனவே ஒரு மனிதன் ஏதாவது வழிமுறையில் தொழில் செய்தே அல்லது பிறரிடம் ஏதாவது தொழிலில் சேர்ந்தோ பிழைப்பு நடத்தவேண்டியிருக்கிறது.
"எந்த பாதையில் சென்றாலும்    ரோட்டையும் மற்றும் பாதையையும் சமாளித்து இழுத்து செல்லும் மாட்டினைப்போல இறைவன் கிரகங்களால் இழுத்து செல்லும் பாதையில் எவ்வித மன துவசமின்றி கடந்து செல்லவேண்டியது மானிடனின் பொறுப்பாகும் "

இழுத்து செல்லும் பாதை- சென்ற பதிவின் தொடர்ச்சி

            பத்தாம் அதிபதியுடன் நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டு செவ்வாய்பகவான் தொடர்பு உண்டாக சிலர் ரியல் எஸ்டேட் ,கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரர்,மருத்துவம் தொடர்பான பணிகள்,விவசாயம்,தானியம் தொடர்பான தொழில்கள் மேற்கொள்ள வழிவகை உண்டு.

          அதேநேரத்தில் சுக்கிரபகவான் மேற்கண்ட அமைப்புடன் தொடர்பு கொள்ள வாகன யோகம் உருவாகி அவை சார்ந்த தொழிலில் ஈடுபட தூண்டும்.மற்றும் பர்னிச்சர் ,உணவுவிடுதி போன்ற தொழில் உருவாகலாம்.

          சந்திரபகவான் தொடர்பு நீர் சார்ந்த தொழில்,கிணறு தோண்டுதல் போன்றவற்றில் சாதகரை ஈடுபட வைக்கும்.

           பத்தாம் அதிபதியானது ஐந்தாம் அதிபதியோடு சம்பந்தம் ஏற்பட்டு குரு,புதன் மற்றும் சூரியன் போன்ற கிரகங்களின் தொடர்பு ஒருவருக்கு உருவானால் முன்னோர்களது தொழிலில் தொடர்ந்து ஈடுபடவைக்கும். ,பூர்வீக சொத்தால் வருமானம் உருவாதல் ,பந்தயத்துறை ,பங்குமார்க்கெட்,சாஸ்திரதொழில்,பெரிய மனிதர்களது தொடர்பால் வருமானம் உருவாகுதல் போன்றவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவார்.

           பத்தாம் அதிபதியுடன் ஆறாம் அதிபதி சம்பந்தப்பட்டு இவர்களுடன் செவ்வாய்,சூரியன் மற்றும் சனிபகவான் தொடர்பு உருவானால் ஒருவர் தனது உடல் வலிமையைக்கொண்டு பொருள் ஈட்டுவார்.சிலர் ரொளடியாக இருந்து மறைமுக வழியில் பொருள் ஈட்டுவர்.அரசு விரோத செயல்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவார்.

          அதேநேரத்தில் மேற்கண்ட அமைப்புக்கு சுபர் பார்வை உண்டாக தனது உடல் பலத்தே நேரிய வழியில் பயன்படுத்தி சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை அடக்கும் போலிஸ்,இராணுவம்,ஸ்டண்ட்மாஸ்டர் ,கராத்தே வீரர்  போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.

               கிரிமினல் வழக்கறிஞர்,இரத்தம் பார்க்கும் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணிகள் முதலியன உருவாகலாம்.
பத்தாம் அதிபதியுடன் , ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டு  இவர்களுடன் சுக்கிரபகவான் தொடர்பு பெற வஸ்திரதுறை ,பயணதுறை ,அரசு ஒப்பந்தம்,சாலைப்பணித்துறை ,கூட்டுதொழில்,திருமணம் தொடர்பான திருமண அமைப்பாளர்,திருமணமண்டபம் மற்றும் மனைவி வர்க்க தொழில் உருவகலாம்.

தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்..

        (தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன்வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டணமுறையில் பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )

தொடர்புக்கு

                                   செல்                              740 257 08 99                                       97 151 89 647


                                 வாட்ஸ்அப் எண்                                               97 151 89 647


அன்புடன்


சோதிடர்ரவிச்சந்திரன்
  M.SC , MA ,BEd.
     சோதிட ஆய்வாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.

My email
masterastroravi@gmail.com

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday 26 February 2017

சாதகப்படி என்ன தொழில் செய்யலாம் நீங்கள் ? - ( 1 )


                         சாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ?



                                                   கிரகங்கள் படுத்தும் பாடு ( 143 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை 


                  "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு "
 என்ற வாக்கிற்கு இணங்க ஒரு மனிதன் பல நாடுகள் கடந்து தொழில் செய்து பொருளீட்டல் என்பது அவசியமாகிறது.

                    ஒரு மனிதன் எந்த தொழிலை தேர்ந்து எடுத்து செய்தால் வெற்றி பெறலாம்.அதற்கு சாதக கட்டத்தில் எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் அத்தொழிலில் நிபுணத்துவம் பெற்று முன்னேறலாம்.இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.தொடர்ந்து இப்பதிவினை படித்து பயன்பெறுங்கள்.

                ஒருவரது தொழில்ஸ்தானத்தை பற்றி அறியவேண்டுமாயின் அவரது சாதககட்டத்தில் பத்தாம் இடத்தினை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.இதனை எநாத வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும் என்பதனை உங்களோடு வெளிப்படையாக சோதிடம் அறியாத நபர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறேன் நன்றாக கவனியுங்கள்.

            
பத்தாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளும் லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்குமான பத்தாம் அதிபதி அம்சத்தில் எவ்விதம் அமர்ந்துள்ளார் என்பதையும் கவனித்து பலனளிக்கப்படவேண்டும்.
ஒருவரை குறிப்பிட்ட தொழிலை செய்ய சொல்லும் பொழுது அப்பொழுது நடை பெறும் திசையினையும் மற்றும் கோசாரபலனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனளிக்கப்படவேண்டும்.

            தற்கால திசைநாதனின் காரகதொழிலையும் மற்றும் அந்த ஆதிபத்திய காரக தொழிலையும் இணைத்து தொழிலைக்கூற வேண்டும்.
ஒருவர் தாம் செய்யக்கூடிய தொழிலில் சிறப்படைவாரா ? என்பது போன்ற விவரங்களினை பெற பத்தாம் அதிபதியின் வலிமையினை அறியவேண்டும்.அதாவது ராசி மற்றும் அம்சத்திலும் பத்தாம் அதிபதியின் வலிமையினை கொண்டே முடிவு செய்யப்பட முடியும்.

                பத்தாம் அதிபதி ஒருவரது சாதகத்தில் பலமடைந்து ஏதாவது ஒரு யோக தொடர்பு பெற்றிருக்கவேண்டும் அல்லநு தற்சமயம் நடைபெறும் திசைநாதன் பலம்பெற்று சுபரின் பார்வையினை பெற்று ஏதாவது ஒரு யோகத்தினை பெற்று வலிமை பெற்று அவை பத்தாம் அதிபதியின் சம்பந்தப்பட்டாலும் சாதகன் தான் மேற்கொள்ளும் தொழிலில் மேன்மையடைந்து பிற்காலத்தில் பிரபலமும் பெரும் செல்வபலமும் பெற்று திகழ்வார்.

என்ன தொழில் செய்யலாம் ?


                பத்தாம் அதிபதியோடு வாக்காதிபதி தொடர்பு கொள்ள போதகராக தனது தொழிலை மேற்கொள்வார்.இத்துடன் குரு கூடினால் ஆசிரியனாகவும் ,கேது தொடர்பு கொண்டால் ஆன்மீக பேச்சாளராகவும் ,இறை தொண்டாற்றுபவராகவும் ,புதன் கூடினால் நல்ல பேச்சாளர் ,எழுத்தாளர் ,இசைபுலமை மற்றும் சோதிடராகவும் ஆகும் வாய்ப்பு உண்டு.சுக்கிரன் தொடர்பு கொண்டால் நகைகடை ,ஹோட்டல் ,ஜவுளி ,வட்டிதொழில் புரிபவராகவும் இருப்பர்.செவ்வாய் தொடர்பு நிலபுரோக்கராகவும்,பத்திரபதிவு புரிபவராகவும் திகழ்வர்.

               பத்தாம் அதிபதியுடன் மூன்றாம் அதிபதியானது தொடர்புகொண்டு இத்துடன் சனி,புதன் ,செவ்வாய் மற்றும் ராகுபகவான் தொடர்புகொள்ள சாதகர் அச்சகம்,விளையாட்டுதுறை,பத்திரிக்கை துறை,செய்திதுறை,தொலைக்காட்சி ,கேபிள் தொலைபேசி மற்றும் தூதரகம் போன்ற தொழிலில் நாட்டம் உருவாகலாம்.

தொடரும் ..

              தொடர்புக்கு


                  செல்

                          97 151 89 647

                                                  740 257 08 99


                           வாட்ஸ்அப் எண்



                                    97 151 89 647



(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து சாதகபலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் உண்டுஂ
கட்டணம் செலுத்தும் விவரங்களை பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து பெற்றுக்கொள்ளவும்)

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

MY EMAIL
masterastroravi@gmail.com

My website.Click hear

AstroRavichandransevvai.blogspot.com

@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday 25 February 2017

கிரகங்கள் படுத்தும் பாடு -( 44 )


                                                 கிரகங்கள் படுத்தும் பாடு -(44)



ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

            மனித நலனில் கிரகங்களின் பங்கு என்னவென்பதை எல்லோருக்கும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தின் துணைகொண்டு தொடர்ந்து எழுதிவருகிறேன்.

              ஒரு மனிதனுக்கு கேது பகவான் லக்கனம் ,இரண்டாமிடம் மற்றும் ஐந்தாமிடங்களில் கேது பகவான் இருந்து குருவின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தாலோ அல்லது சந்திரனுடன் கேது பகவான் சேர்ந்திருந்தாலோ அல்லது சனிபகவான் மீது குருவின்  பார்வை விழுந்தாலோ அவர்கள் ஆன்மீகவாதிகளாக இருப்பர்.இவர்களுக்கு முன்னுணர்வு இருக்கும்.ஆனால் அதேநேரத்தில் லொளகீக வாழ்வில் சிறக்க மாட்டார்கள்.

                 வாக்கினில் குரு பகவான் பெற்றவர்கள் வாக்கு வன்மை மிக்கவர்களாக இருப்பர்.அதேநேரத்தில் தனகாரகன் குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்வது "காரக பாவ நாஸ்தியை "உண்டுபண்ணி தனம் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.அதிலும் குரு பகவான் எந்த ஸ்தானத்திலும் தனித்து இல்லாமல் இருத்தல் நலம்."அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும்.குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும் இருக்கும் இடத்திற்கு நல்லது செய்யாது.பார்க்கும் இடத்திற்குதான் நல்லது செய்யும்.

"குரு பார்த்தால் கோடி நன்மை ".சாதக கட்டத்தில் உள்ள சகல தோஷங்களையும் நீக்கும் வல்லமை குரு பகவானுக்கு உண்டு."பானு கண்ட பனிபோல -குரு பகவான் பார்வை பட்டவர்கள் எல்லா தோஷங்களும் விலகி ஒரு மனிதனுக்கு பணம்,பட்டம்,பதவி,
வேலைவாய்ப்பு, புத்திரபாக்கியம் மற்றும் கல்வி போன்ற அனைத்தையும் வாரி வழங்குவார்.

             குரு பகவான் ஐந்தில் இருப்பின் உயர்கல்வி,ஞானம் மற்றும் ஆன்மீக நாட்டம் இவற்றை வழங்கினாலும் குரு பகவான் புத்திரகாரகன்  ஆதலால் ஐந்தில் உள்ள குரு பகவான் காரக பாவ நாஸ்தியை வழங்கி குழந்தை பாக்கியத்தை தடை செய்வார்.

சனி பகவான் இயற்கை பாவி எனினும் அவர் இருக்கும் இடத்திற்கு அதிகம் கெடுதல் செய்ய மாட்டார்.பார்க்கும் இடத்தை ஆட்டி படைப்பார்.ஒருவருக்கு மெய்ஞானத்தை வழங்குவதில் சனி பகவானின் பங்கு அலாதியானது.
ஒரு மனிதனுக்கு கோசாரா ரீதியாக சனி பகவான் சந்திரனுக்கு பணிரெண்டு,ராசி மற்றும் இரண்டாம் இடத்திற்கு வரும்போது ஒரு ராசிக்கு இரண்டரை வருடம் மொத்தம் ஏழரை வருடமும் விரய சனி,ஜென்ம சனி மற்றும் பாத சனி என்ற அடிப்படையிலும்,நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனி,ஏழாமிடத்தில் கண்ட சனி மற்றும் எட்டாமிடத்தில் அஷ்டம சனி எனும் அடிப்படையில் வந்து சாதகருக்கு பலவிதமான இன்னல்களை தந்து உறவுகள் என்றால் என்ன ? யார் உண்மையான நண்பர்கள் மற்றும் பல்வேறு மனிதர்களின் குணதிசயங்கள் போன்றவற்றை அறிய வைப்பதோடு வாழ்வு பற்றிய தெளிவான அனுபவத்தை வழங்கி அவனை தெளிவான ஞானமுள்ளவனாக சோதனைகள் மூலமாக  அறிய வைக்கிறது.

.எனவே ஞானத்தை அனுபவ அடிப்படையில் மனித குலத்திற்கு அறிய வைப்பதில் சனி பகவான் நவகிரகங்களில் முக்கியமானவர் ஆவார்.எனவேதான் சனியை நாம் சனீஸ்வர பகவான் என அழைக்கிறோம்.

ஆதலால் குரு பகவான் ஆனது நமக்கு கல்வியையும்,அறிவையும் தந்து அதன் மூலம் வாழ்வின் அம்சங்களை அறியவைக்கிறார்.ஆனால் சனி பகவான் வாழ்வில் சொல்ல முடியாத வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல கஷ்டங்களை தந்து அறியவைத்து வாழ்வில் ஞானத்தை புகட்டுவதில் நன்று.

குருபகவான் ஆனவர் யோக மற்றும் ஞான நிலையை வழங்குவதில் வல்லவர்.இவர் தான் பெற்ற மற்றும் கற்ற ஞானத்தால் தம்மை வழிநடத்தி செல்கிறார்.இது ஒருவிதமான மேம்பட்ட நிலை ஆகும்.இவை எல்லோறுக்கும் வாய்ப்பதில்லை.அவ்வாறு குருவருள் பெற்றவர்கள் பாக்கியசாலிகளே.
குருவருள் பெற்றவர்கள் நீதியின் வழியில் வழிநடத்தி செல்வார்கள்.இவர்கள் வேத,தததுவ மற்றும் சாஸ்த்திர உண்மைகளை குருவழியாக கற்று அதன்மூலம் ஞானம் பெற்று சிறந்த தத்துவவாதிகளாக ,ஆன்மீகவாதிகளாக மற்றும் போதகராக திகழ்வர்.இவர்கள் லொளகீக வாழ்வில் தாமரை இலையில் தண்ணீர்போல பற்றற்ற வாழ்வினை அதாவது ஞான வாழ்வினை மேற்கொள்வார்கள்.

ஆனால் சனிபகவான் ஆனவர் "கர்மக்காரகன் " மற்றும் கர்மயோகி ஆவார்.இவர் தனது அன்றாட லொளகீக வாழ்வில் அடிபட்டு  அதன்மூலம் வாழ்வின் தத்துவார்த்தமான உண்மைகளை அறிந்துகொள்ள செய்வார்..இவர் சாதரண மனிதனையும் இவர் தரும் பலவிதமான இன்னல்கள்கள் மூலமாக ஒருவரை வாழ்வின் உண்மைநிலையை அறிய வைப்பர்.
இவர் லொளகீக வாழ்வில் அதிக ஆசைபெற்று அதன் வழியாக செல்வம் ஈட்டி உறவுகளோடு வாழ்ந்துகொண்டே வாழ்வின் அர்த்தத்தை உணர்வார்கள்.இவர்கள் தான் பெற்ற அனுபவத்தாலே ஞானமடைந்தவர்கள்.உயர்ந்த கல்வியறிவோ அல்லது கேள்வியறிவோ பெற்றிருக்க மாட்டார்கள்.சாதரனமாக வாழ்ந்துகொண்டு வாழ்வின் உண்மைநிலையை அனுபவத்தின் மூலம் பெறுவர்.

நன்றி.தொடர்ந்து அடுத்த பதிவில் சந்திப்போம்.

(தங்களது குடும்ப உறுப்பினர்களின் சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

அன்புடன்

                


சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராயாசியாளர்.
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி.

செல் ; 97 151 89 647
                740 257 08 99
வாட்ஸ்அப் : 97 151 89 647

My Email

masterastroravi@gmail.com

My Website.click hear

AstroRavichandransevvai.blogspot.com


*@@@@@@@@@@@@@@@@@@@@*
,

Tuesday 21 February 2017

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 43 )

                             கிரகங்கள் படுத்தும் பாடு -(43)

                                                                                                                                                                        
  

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!


                      நாம் அன்றாட வாழ்வில் வேலை பார்க்கும் இடத்திலும் ,படித்த நண்பர்களுடனும்,முதலாளிகளுடனும் ..இப்படியாக பல நபர்களுடன் பழக வேண்டியிருக்கும்.பழகும் அனைத்து நபர்களிடமும் ஒருவித ஈர்ப்பு நிலை வந்துவிடுவதில்லை.

                     சிலநேரங்களில் வேறுவழியில்லாமல் பணி நிமித்தம் காரணமாக அவர்களை பிடிக்காவிட்டாலும் அவர்களிடம் மனரீதியாக ஒட்டாமல் வேலை பார்க்கவேண்டியிருக்கும்.

                    ஒரு சிலரிடம் எவ்வளவுதான் அன்பாக பழகி நல்லது செய்தாலும் அவர்கள் நம்மிடம்  உள்ள பொறாமை காரணமாக நம்மிடம் நேரடியாக  சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் நமக்கு எதிராகவே செயல்படுவார்கள்.

                   பலரிடம் பல ஆண்டு பழகியும் மனதை கவராதவராகவே இருப்பர்.ஒரு சிலரை பார்த்த மற்றும் பழகிய சில மணி நேரங்களில் நம் உள்ளத்தை கவர்ந்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டு கடைசிவரை இணைபிரியாத நண்பர்களாக இருப்பதை பார்க்கிறோம்.

              ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?  எனில் கோள்கள் நடத்தும் கோளாட்டமே காரணம் ஆகும்.ஒவ்வொறு கிரகத்திற்கும் ஒரு அதிர்வெண் உண்டு.
ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.அந்த அலைவரிசையை கண்டறிநது புரோகிராம் செய்து ஆக்டிவேட் செய்ய ரிமோட் வழியாக ஒரு எண்ணிற்கு ஒரு சேனல் என்ற வகையில் நாம் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடிகிறது.

              அதேபோல நமது லக்கனம் மற்றும் ராசியின் அதிபதிகளுக்கு ஏற்ப நாம் ஒருவித அதிர்வெண்களை பெற்றுவிடுகிறோம்.இவை இயல்பு அதிர்வுகள் ஆகும்.இந்த இரண்டு இயல்பு அதிர்வுகளை முடுக்கி ஆக்டிவேட் செய்யும் பணியை நமது மூளையானது ஒரு ரிமோட் போல செயல்பட்டு  நட்பு கிரகங்களை அதிபதியாக பெற்ற இருவர் சந்திக்கும்போது ஒத்ததிர்வு ஏற்பட்டு அவர்களுக்குள் நட்பும்,காதலும் பலப்படுகிறது.ஒனறுக்கு ஒன்று ஜென்ம பகை பெற்ற கிரகங்களை பெற்றவர்கள் சந்திக்கும்போது என்னதான் ஒட்டியே இருந்தாலும் ஒத்ததிர்வு ஏற்பட வாய்ப்பில்லை.

            சில நேரங்களில் முகத்திற்கு முகம் சந்திக்காமல் முகநூல் நட்பு  தாம் கொண்ட கருத்தின் அடிப்படையில் நட்பு ஏற்படுவதற்கும் ,பகைமை ,பொறாமை,வயதிலும் ,அனுபவத்திலும் சிறியவனாக இருந்தாலும் நல்ல கருத்துக்கள் பகிர்ந்தாலும் அதை வெளிபடையாக பாராட்டும் தன்மை ஏற்படாமை உண்டாகுவதற்கும் அவர்களது லக்கனம் மற்றும் ராசியோடு தொடர்பு உண்டாகியிருக்கும் அனைத்து கிரக கதிர்வீச்சே காரணம் ஆகும்."காரணமின்றி காரியமில்லை".இந்த காரணத்தையும்,காரியத்தையும் ஜெனனகால கிரகங்கள் வழியாக திருவிளையாடல் புரிபவன் இறைவன்.
பார்த்தால்  பசு போல இருந்துகொண்டு படுபாதாள விஷயங்களை  செய்வதற்கும்,பார்க்க ரொளடிபோல இருந்தாலும் நன்மைகள் பல செய்ய வைப்பதும் கிரக கதிரின் தாக்கமே.

                    உதாரணமாக மீனம் மற்றும் மேஷ ராசி இருவரையும் எடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் நண்பர்களாகவோ அல்லது முதலாளி,தொழிலாளியாகவோ அல்லது தம்பதிகளாகவோ இருந்தாலும் அவர்களிடம் ஒருவித ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

               காரணம் மீனத்தின் அதிபதி குரு பகவான் தனது ராசிக்கு பெருந்தான்மை,எளிமை,விட்டுகொடுக்கும் தன்மை,ஞானம்.......இதுபோன்றவற்றை சாதகருக்கு வழங்கியிருக்கும்.
மேஷத்தின் அதிபதி செவ்வாய் பகவான் இதற்கு நேர்மாறாக ஆடம்பரம்,வீம்பு,விட்டுக்கொடுக்காத தன்மை மற்றும் போர்க்குணம்......இதுபோன்ற தன்மைகளை வழங்கியிருக்கும்.
எனவே இவர்களிடம் நட்போ அல்லது உறவோ ஏற்படவாய்ப்பில்லை.மீறி ஊழ்வினைப்பயனால் ஏற்பட்டாலும் உறவு இனிக்காது.

               இதேபோல "சிம்மம் ராசி மற்றும் கும்ப ராசி இவர்கள் இடையே ஏற்படும் எவ்வித தொடர்பும் அன்பாக இருப்பதில்லை.
காரணம் சூரிய பகவானும் அவரது மைந்தனான சனிபகவானும் பகை பெற்றுவிடுவதால் ஆகும்.
சாதக கட்டத்தில் கூட சனியும்,சூரியனும் சமசப்தமாகவோ அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு ஏற்படும்போது தந்தை மற்றும் மகன் உறவு அன்போடும்,ஆதரவாகவும் அமைவதில்லை.

            
அன்புடன்  என்ன செய்வது விதிப்பயனை நாம் ஏற்று அனுபவித்துதான் ஆகவேண்டும்.

எனவே நல்ல உறவும்,நட்பும் அமைவதும் கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்."பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் "எனும் கருத்துப்படி நல்ல சோதிடரை நாடி தனது கிரகங்களின் பாடறிந்து வாழ்க்கை துணையையோ அல்லது தொழில் பங்குதாரர்களையோ அமைத்துக்கொண்டு மகிழ்சியாக வாழுச்கள்.

சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.


வாட்ஸ்அப் : 9715189647

செல் : 
  9715189647
   740 257 08 99
Email;
masterastroravi@gmail.com

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

My blog
AstroRavichandransevvai.blogspot.com