சாதகப்படி என்ன தொழில்
நீங்கள் செய்யலாம் ?- ( 2 )
"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 144 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒரு மனிதன் வாழ்வதற்கு பொருள் வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் மனிதன் வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
" இறை தேடலோடு இரையும் தேடு "
" இறை தேடலோடு இரையும் தேடு "
"அருளிள்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை "
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை "
எனவே ஒரு மனிதன் ஏதாவது வழிமுறையில் தொழில் செய்தே அல்லது பிறரிடம் ஏதாவது தொழிலில் சேர்ந்தோ பிழைப்பு நடத்தவேண்டியிருக்கிறது.
"எந்த பாதையில் சென்றாலும் ரோட்டையும் மற்றும் பாதையையும் சமாளித்து இழுத்து செல்லும் மாட்டினைப்போல இறைவன் கிரகங்களால் இழுத்து செல்லும் பாதையில் எவ்வித மன துவசமின்றி கடந்து செல்லவேண்டியது மானிடனின் பொறுப்பாகும் "
இழுத்து செல்லும் பாதை- சென்ற பதிவின் தொடர்ச்சி
பத்தாம் அதிபதியுடன் நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டு செவ்வாய்பகவான் தொடர்பு உண்டாக சிலர் ரியல் எஸ்டேட் ,கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரர்,மருத்துவம் தொடர்பான பணிகள்,விவசாயம்,தானியம் தொடர்பான தொழில்கள் மேற்கொள்ள வழிவகை உண்டு.
அதேநேரத்தில் சுக்கிரபகவான் மேற்கண்ட அமைப்புடன் தொடர்பு கொள்ள வாகன யோகம் உருவாகி அவை சார்ந்த தொழிலில் ஈடுபட தூண்டும்.மற்றும் பர்னிச்சர் ,உணவுவிடுதி போன்ற தொழில் உருவாகலாம்.
சந்திரபகவான் தொடர்பு நீர் சார்ந்த தொழில்,கிணறு தோண்டுதல் போன்றவற்றில் சாதகரை ஈடுபட வைக்கும்.
பத்தாம் அதிபதியானது ஐந்தாம் அதிபதியோடு சம்பந்தம் ஏற்பட்டு குரு,புதன் மற்றும் சூரியன் போன்ற கிரகங்களின் தொடர்பு ஒருவருக்கு உருவானால் முன்னோர்களது தொழிலில் தொடர்ந்து ஈடுபடவைக்கும். ,பூர்வீக சொத்தால் வருமானம் உருவாதல் ,பந்தயத்துறை ,பங்குமார்க்கெட்,சாஸ்திரதொழில்,பெரிய மனிதர்களது தொடர்பால் வருமானம் உருவாகுதல் போன்றவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவார்.
பத்தாம் அதிபதியுடன் ஆறாம் அதிபதி சம்பந்தப்பட்டு இவர்களுடன் செவ்வாய்,சூரியன் மற்றும் சனிபகவான் தொடர்பு உருவானால் ஒருவர் தனது உடல் வலிமையைக்கொண்டு பொருள் ஈட்டுவார்.சிலர் ரொளடியாக இருந்து மறைமுக வழியில் பொருள் ஈட்டுவர்.அரசு விரோத செயல்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவார்.
அதேநேரத்தில் மேற்கண்ட அமைப்புக்கு சுபர் பார்வை உண்டாக தனது உடல் பலத்தே நேரிய வழியில் பயன்படுத்தி சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை அடக்கும் போலிஸ்,இராணுவம்,ஸ்டண்ட்மாஸ்டர் ,கராத்தே வீரர் போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.
கிரிமினல் வழக்கறிஞர்,இரத்தம் பார்க்கும் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணிகள் முதலியன உருவாகலாம்.
பத்தாம் அதிபதியுடன் , ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டு இவர்களுடன் சுக்கிரபகவான் தொடர்பு பெற வஸ்திரதுறை ,பயணதுறை ,அரசு ஒப்பந்தம்,சாலைப்பணித்துறை ,கூட்டுதொழில்,திருமணம் தொடர்பான திருமண அமைப்பாளர்,திருமணமண்டபம் மற்றும் மனைவி வர்க்க தொழில் உருவகலாம்.
தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்..
(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன்வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டணமுறையில் பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
தொடர்புக்கு
செல் 740 257 08 99 97 151 89 647
வாட்ஸ்அப் எண் 97 151 89 647
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC , MA ,BEd.
சோதிட ஆய்வாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@