Wednesday 2 December 2020

வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?-ஜோதிட அடிப்படையில் ஒரு தீர்வு.

வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?- சோதிட அடிப்படையிலான ஒரு தீர்வு

                                                


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   எல்லாவற்றிற்கும் கால நேரம் வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.


" நாள் செய்வதை போல நல்லோர்கள் செய்ய மாட்டார்கள்'.


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து"


காலம் வரும் வரை கொக்கு எவ்வாறு அமைதியாக காத்திருக்கிறதோ அவ்வாறு காத்திருந்து அதற்குரிய இரையை கிடைத்ததும் விரைந்து சென்று கொத்தி செல்வதுபோல் வாய்ப்புகளை எட்டிப்பிடிக்க வேண்டும்.


இந்த  ஒத்த கருத்தினையே ஒளவையார் தனது  மூதுரை நூலில்


"ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வாடி காத்திருக்குமாம் கொக்கு"


 கொக்கானது  சிறிய மீன்கள் ஓடும் வரை வாட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தது பெரிய மீன் வந்தவுடன் திடீரென்று பாய்ந்து சென்று கொத்தி செல்வது போல்"


  இல்லறத் துணையைத் தேடும் இன்றைய இளைஞர்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கொள்கையுடன்  உரிய கால நேரம் வரும் வரை, அதாவது தனக்குரிய வாழ்க்கைத்துணையை காணும் வரை அமைதியாகக் காத்திருந்து முறைப்படி பெற்றோருடைய ஆதரவோடு சமூக முறைப்படியான சடங்குகளுடன் கொத்திக் கொண்டு வரவேண்டும்.


  ஒரு ஜாதக கட்டத்தில் திருமணத்திற்குரிய தசை வருகிறதா? என்பதை நன்கு ஆராய்ந்து அதற்குரிய தசை காலம்  வரும் நேரத்தில் முறையான ஜோதிடரை அணுகி நீடித்த தாம்பத்தியம் சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவானையும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய  குருபகவானையும் ஆராய்ச்சி செய்து அதற்குரிய

அமைப்பு எந்த தசை காலங்களில் வருகிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்குரிய நேரத்தில் ஏற்பாடு செய்வது நல்லது.


  தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு விவாகம் செய்ய முடிவு செய்யக்கூடாது.  நட்சத்திரப் பொருத்தம் என்பது  திருமணம் செய்வதற்கான நுழைவுவாயிலே அன்றி அதுவே முடிவான ஒன்றாக  ஆகாது (The star matching is the entry point of the marriage life).


  நட்சத்திர பொருத்தம் சரியாக இல்லாவிட்டாலும் கட்ட அடிப்படையிலான பொருத்தங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம்.


ஒரு சிலர் "சோதிடர்களிடம் சென்று பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தோம் ஆனால் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அவர்களுக்கிடையே பிரச்சனை முற்றி விவாகரத்து வரை சென்று விட்டது" . "ஜோசியர் என்னதான் சாதகம் பார்த்தாரோ?"- என ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் குறை சொல்வதற்கு காரணம் அந்த ஜோதிடர் வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு தம்பதிகள் இருவரது சாதக  கட்டங்களை ஆராய்ந்து பார்க்காமல் ஒருசில ஜோதிடர்கள்  பொருத்தம் உள்ளதாக சொல்லி அதன்படி திருமணம் நடப்பதே காரணமாகும்.


  திருமணப் பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகளுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாங்கி அவர்களது சாதகம் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா? என்பதை முதலில் கவனிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரது ஜாதகமும் ஏதேனும் ஒரே கணித முறையில் உள்ளதா? எனவும் கவனிக்கப்பட  வேண்டும்.


   சாதகத்தில் வாக்கிய முறை மற்றும் கணித முறை ஆகிய இரு முறைகளில் கணக்கீடு செய்யலாம்.இருவரது ஜாதகமும் ஏதேனும் ஒரு கணித முறையில் கட்டாயம் இருக்கப்பட வேண்டும்.. பொதுவாக என்னைப்பொருத்தவரை வாக்கியம் முறையைவிட திருக்கணித முறையில் கணக்கீடு செய்து சரியான முறையில் ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்பட்ட  தம்பதிகளுக்கிடையே பிரிவினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது எனது தனிப்பட்ட அனுபவம் ஆகும். திருக்கணித முறையில் கணக்கீடு செய்து பொருத்தம் செல்லும்பொழுது துல்லியமாக கணக்கிடாக இருப்பதால் பலனில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை.


  பிறகு தம்பதிகள் இருவருடைய ஜாதகத்திலும் தாம்பத்திய சுகத்தை அளிக்கக் கூடிய தசாபுத்திகள் உள்ளதா ? என்பதை கவனிக்க வேண்டும். அதாவது சுக்கிரன் அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசாபுத்திகள் நடப்பில் இருக்கும் பொழுது திருமணத்திற்கு உகந்த காலமாகும்.


அடுத்தபடியாக புத்திரபாக்கியம் அவர்கள் கைகளில் ஏந்தி நிற்கும் தசா அமைப்புகள் இருவரது ஜாதகத்திலும் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  இதற்கு புத்திரகாரகன் குரு ,புத்திர ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 அடுத்தபடியாக அவர்களுக்கு திருமணத்தின் போது நடைபெறும் தசைகள் மற்றும் கோச்சார பலன்கள் திருமணத்திற்கு உகந்த தசை அமைப்பா ? எனவும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  தம்பதிகள் இருவருக்கும் சுக்கிரன் அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசாபுத்திகள் நடப்பில் இருப்பின் திருமணம் செய்யலாம்.


  திருமண காலத்தின் பொழுதும் மற்றும் திருமண காலத்திற்குப் பிறகும் நடைபெறும் தசைகளையும் நன்கு ஆய்வு செய்து பார்த்து உகந்த நல்ல தசை அமைப்பு உள்ளதா? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களுக்கிடையே மறுதார அமைப்பு உண்டா? என்பதையும் அதை செய்து பார்க்க வேண்டும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கெட்டு ,லாபாதிபதியான பதினொன்றாம் இட அதிபதி வலுத்து இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மறுதாரம் யோகம் உண்டா ? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.


  இதற்கு அடுத்தாற்போல்

திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான இலக்கனம் என்னும் ஜாதகர்,

 குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம்(1,2,7,8)

ஆகியவற்றையும் களத்திரகாரகன் சுக்கிரனையும் ஆய்வுசெய்து பார்க்கப்படவேண்டும்.


  மேற்கண்ட ஸ்தானங்களில் சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது தொடர்பு இருப்பின் கால தாமத திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


  இவ்வாறு 1,2,7,8 ஆகிய ஸ்தானங்களூடன்  

சனி, செவ்வாய் தொடர்பு இருக்கும்பொழுது அல்லது அல்லது களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டு அதிபதி கெட்டு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி ,செவ்வாய், ராகு இடம்பெற்றிருக்கும் சூழலிலும், கோசார அடிப்படையில் ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களிலும் அதிலும் குறிப்பாக ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலங்களிலும் இளவயதில் சரியாக பொருத்தம் பார்க்காமல் செய்யும் பட்சத்தில் தம்பதிகளுக்கிடையே ஒருவித அன்யோன்யம் இல்லாத தன்மை அல்லது புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகுதல் அல்லது உகந்ததாக அமைப்புகளும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகி விவாகரத்து வரை சென்று விடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஜாதகம் பார்க்கும்போது இவற்றை எல்லாம் நன்கு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பொருத்தம் பார்க்க வருபவர்கள் மேற்கண்ட வகையிலான தொடர்புடைய கேள்விகளை கேட்காமல் தனக்கு வரும் வாழ்க்கை துணையோடு உடன் பிறந்த நபர்களின்  எண்ணிக்கை மற்றும் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையின் திசை எது? இது போன்ற கேள்விகளைக் கேட்டு முக்கியமாக கேட்க வேண்டிய கேள்விகளை தவிர்த்து வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு சில நேரங்களில் திருமணம் செய்து விடுவதும் உண்டு.


    பொதுவாக ஒருவருக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் திசையை கேட்கும்போது ஜோதிடர் அவரவர் ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்து அதிபதி உடைய திசையை கூறுவார்கள்.


ஏழாம் இடத்து அதிபதி

சூரியன் எனில் கிழக்கு திசை,


சனி -மேற்கு திசை,


குரு- வடகிழக்கு திசை,


 சந்திரன்-  வட மேற்கு திசை,


சுக்கிரன்-தென் கிழக்கு திசை,


செவ்வாய்-தெற்கு திசை,


புதன்-வடக்கு திசை,


ராகு/கேது -தென்மேற்கு அல்லது அவை இருக்கும் வீட்டின் அதிபதி தசை


 ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டில் இல்லாத பட்சத்தில் ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகத்தின் திசை குறிப்பிடலாம்.ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருப்பினும் அந்த கிரகத்தின் சுபத்துவ தன்மை அடிப்படையில் அதன் திசையை கணக்கிடலாம்.


   அதேபோல தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் எண்ணிக்கையை கண்டறிய ஜாதகரது ஏழாம் இடத்திற்கு மூன்றாம் இடம் அதாவது லக்கனத்திற்கு ஒன்பதாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் உடன் பிறப்புகள் சொல்லப்படுகிறது.


   சாதகர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின்  மாமியார் மற்றும் மாமனார் பற்றி அறிந்துகொள்ள ஜாதகரது ஏழாம் இடத்திற்கு நான்காம் இடமான லக்கனத்திற்கு 10-ஆம் இடத்தை கொண்டு மாமியார் நிலை பற்றியும் மற்றும் மாமனார் நிலை பற்றி அறிய ஏழாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமான, லக்னத்திற்கு 3ஆம் இடத்தைப் பற்றிய ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   என்னை பொருத்தவரை தம்பதிகள் இருவருக்கும் சாதக அடிப்படையில் நல்ல பொருத்தம் இருக்கும் பட்சத்தில் பெண்ணானது  எந்ததிசையில் வந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பெண்ணுடன் எத்தனை பிறப்புகள் இருந்தாலும் செய்துகொள்ளலாம்.

மாமனார் மற்றும் மாமியார்கள் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.


   இதுபோன்ற கேள்விகளுக்கு சாதகர் மாப்பிள்ளை ஜாதகத்தில் உள்ள சில சங்கேத குறியீடுகளை கொண்டு அவருடைய உடன் பிறப்பு மாமன் மற்றும் மாமி வழி உறவுகள் பிறப்பு எண்ணிக்கையினை சரியாக சொல்லுவதை வைத்துக்கொண்டு அவர் பார்க்கக்கூடிய திருமண பொருத்தம் சரியாக இருக்கும் என்று நம்பி விவாகம் செய்து விடுவதும் பின்னர் திருமண வாழ்வு  தோல்விகளை சந்திப்பதற்கு காரணமாக அமைகிறது.


  நட்சத்திர பொருத்தத்தில் 13-க்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருப்பினும் முக்கிய பொருத்தமாக தினம், கணம், ராசி, ரஜ்ஜு,பால் மற்றும் யோனி ஆகிய பொருத்தங்கள் இருக்க வேண்டும். மேற்கண்ட இவற்றில் ஏதாவது ஒரு சில பொருத்தங்கள் இல்லை  என்றாலும், தம்பதிகள் இருவரது சாதக கட்டத்தினை  ஆய்வு செய்து பார்க்கும்போது கட்ட அடிப்படையில் சிறப்பாக பொருத்தம் இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 நன்றி!


வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


      செல்

   9715189647

    7402570899


My website

 www.astroravichandransevvai.in


                                   


     அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நீடித்த தாம்பத்திய சுகம் பெற?

                                     


  

                   நீடித்த தாம்பத்திய சுகம் பெற...?

                                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  " ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்"

      -  திருக்குறள்


 இங்கு வள்ளுவர் குறிப்பிடும்

" ஊடல்" என்பது 

கணவன்- மனைவிக்கு இடையே உருவாகும் கருத்து வேறுபாடு அல்லது பிணக்கு ஆகும். இந்த  பிணக்கில் யார் விட்டுக் கொடுக்கிறார்களோ ? அவர்களே வெற்றி பெற்றவர்" என்கிறார் வான்புகழ் கொண்ட தெய்வப்புலவர்.


   அது எப்படி வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று  உங்கள் மனதில் எழும் கேள்வி புரிகிறது. கணவன்- மனைவிக்கு இடையே எழும் கருத்து வேறுபாட்டில் ஒருவர் விட்டுக் கொடுக்கும் பொழுது அவர் தோற்றது போன்று தெரிந்தாலும் விட்டுக்கொடுத்தல் விளைவாக மற்றவருடைய மனம் இறங்கி வருத்தப்பட்டு,தனது மனதுக்கு எதிராளி தோன்றாதபட்சத்தில் அன்றிரவு நடக்கும் கூடலில் அதிக இன்பத்தை அகம் மலர அல்லி பருக செய்வார். இப்பொழுது நீங்கள் கூறுங்கள் இங்கு வெற்றி பெற்றவர் யார் விட்டுக் கொடுத்தவர் தானே.


இதனையே மற்றொரு குறளில் 


"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்"


  என்கிறார்.


கணவன் மனைவிக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு அல்லது சிறு சிணுங்கல் உருவாகி பிறகு அன்றிரவு கூடும்போது உருவாகும் காதல் இன்பம் மிகப்பெரிய இன்பமாகும்.


 சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் மீது கொண்ட காதல் உணர்வால் இவ்வாறு கவி பாடுகிறார்.


" மாசறு பெண்ணே! வலம்புரி முத்தே!

 காசறு விரையே!

 கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே ! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ !

தாழிருங் கூந்தல் தையாள்!  நின்னை.."


  என்று தன் கூடல் பொழுதில் தனது மனைவியை வர்ணிக்கின்றார்.


  கணவன் மனைவியின் மீதும், மனைவி கணவன் மீதும் காதல் உணர்வோடு காம ரசம் ததும்பி மகிழ அவர்களது ஜாதகத்தில் களத்திரகாரகன் என்று  என்று அழைக்கப்படும் சுக்கிரபகவான் உடைய நிலையை ஆராய்ந்து அறிய வேண்டும்.


  ஒருவருக்கு காதல் உணர்வு ,கவிதை உணர்வு தன் இணை அழகை ரசிக்கும் கற்பனை சக்தி, தனக்கு வரும் இணையை தாம்பத்தியத்தில் நீடித்த சுகத்தை தரும் சக்தி அனைத்திற்குமே காரகராக விளங்கக்கூடியது நவ கிரகங்களில்

 "சுக்கிர பகவானே" முதன்மை கிரகமாக திகழ்கிறது. அதனை அடுத்து மங்கள காரகன் அல்லது காம கிரகம் என்று அழைக்க கூடிய "செவ்வாய் பகவான்" துணைநிலை கிரகமாகும்.


  ஒருவரது ஜாதகத்தில் "களத்திரஸ்தானம்"  என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடமே கணவன் -மனைவி கட்டித்தழுவும் நிலை, இல்லற சுகத்தில் இன்பம் பெறும் நிலை மற்றும் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலை போன்றவற்றை அறிய பயன்படும் ஸ்தானமாகும். ஏழாம் இடமே தனக்கு வரும் வாழ்க்கைத் துணையைப் பற்றி விரிவாக அறிய உதவும் பாவகம் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிட அதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று, இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு சுபத்துவம் பெற்ற நிலையில், களத்திரகாரகன் என்று அழைக்கப்படும்  சுக்கிர பகவானும் எவ்விதத்திலும் பாவத்துவம் பெறாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி அல்லது சுக்கிரன் தொடர்புடைய தசா புத்தியில்  நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகம் ஒருவருக்கு உண்டாகும்.


 யார் ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடமும் மற்றும் அதன் அதிபதி , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியவை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய உகந்த தசா புக்தி நடைபெறாத காலங்களில் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகம் அற்றவராக திகழ்வார்.


    ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க நட்சத்திர பொருத்தத்தில் 

"யோனி பொருத்தம்" மிக அவசியமான ஒன்றாகும். ஒன்றுக்கொன்று நட்பு யோனிகள் ஒருவருக்கு வரும்பொழுது அவர்களுக்கிடையே நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகம் பெறும்.


  உதாரணமாக

 மானுக்கு- பசு நட்பு ஆட்டிற்கு -குதிரை நட்பு நாய்க்கு- மனிதன் நட்பு


     இதுபோன்று தம்பதிகள் இருவருக்கும் இடையே நட்பு யோனிகள் வரும்பொழுது அவர்களுக்கு இடையே பொருத்தம் ஏற்பட்டு நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டு .


  மாறாக தம்பதிகள் இருவருக்கும் இடையே பகை யோனிகள் வரும்பொழுது அவர்களுக்கு இடையே நீடித்த தாம்பத்திய சுகத்தை அளிக்கக் கூடிய யோகம் வராது.


உதாரணமாக 


யானைக்கு- சிங்கம்,மனிதர் பகை


 குதிரைக்கு- பசு, எருமை


 புலிக்கு- பசு, எருமைக்கடா, மான், நாய்


 குரங்குக்கு- ஆடு பகை


எலிக்கு- பூனை பாம்பு பகை

 பாம்புக்கு- கீரி, ஆடு


 பூனைக்கு- நாய் புலி


  நமது சங்க கால இலக்கியத்தில் முறையான காமத்திற்கு ஐந்து திணைகளை வகுத்தார்கள்.

 அவையாவன

 "குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை" ஆகும். இதேபோல முறையற்ற காமத்திற்கு இரண்டு திணைகளை வகுத்துள்ளனர்.

 ஒன்று" பெருந்திணை", மற்றொன்று" கைக்கிளை" ஆகும்.


 பெருந்திணை என்பது "பொருந்தாக் காமம்" ஆகும்.

 கைக்கிளை என்பது

" ஒரு தலை காதல்" ஆகும்.


  முறையான காமத்தினை குறிக்கும் ஐந்திணையில் தலைவனும்- தலைவியும் புணர்தல், பிரிதல், காத்திருத்தல், ஊடல் மற்றும் வருந்துதல் போன்ற நிலைகள் இருந்தன.


 ஒருவர் ஜாதகத்தில் பொருந்தாக் காமம் மற்றும் ஒருதலை காதலை தரக்கூடிய கிரக நிலைகள் பின்வருமாறு;


    ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய இவர்களுடன் இயற்கை பாவ கிரகமான சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் பார்வை, சேர்க்கை மற்றும் நட்சத்திர சார தொடர்பு மற்றும் ஆறு மற்றும் எட்டாமிட தொடர்பு கொள்ள மேற்கண்ட வகையிலான பொருந்தாக் காமம் அல்லது ஒருதலைக் காதலும் உருவாகி சமூகத்திற்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் இன்னல்களைத் தருகிறது.


"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்"


காமம் மலரை விட  மென்மை உடையதாகும். அதன் உண்மையை அறிந்து நல்ல பயனை அடையக் கூடியவர் வெகுசிலரே ஆவார்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


   செல்

   9715189647

      7402570899


   My website

   www.astroravichandransevvai.in


                            


என்றும் அன்புடன்


 சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் ,தமிழ்நாடு, இந்தியா.

ஊழ்வினை பற்றி அறிய....

                                 


ஊழ்வினை பற்றி அறிய.....


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    மனித வாழ்வினை செப்பனிடவும் மற்றும் வடிவமைக்கவும் கிரகங்களின் பங்கு அலாதியானது.


  ஒரு மனிதன் என்னவாக ?யாராக ? எப்படியாக மாற வேண்டும் என்பதை கிரகங்கள்தான் முடிவு செய்கிறது.


  அதேபோல ஒரு மனிதன் பிறக்கும் இடம் , நபர் மற்றும் சூழ்நிலையை முடிவு செய்வதும் ஊழ்வினைப் பயனே முதல் முக்கிய காரணமாகும்.


எனவேதான் சிலப்பதிகாரம்

"ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்" என்கிறது.


 இக்காலகட்டத்தில் நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும், கெட்டவர்கள் நன்றாக இருப்பதற்கும் ஊழ்வினை பயன் ஒரு மிக முக்கிய காரணமாக அமைகிறது.


    ஒருவரது ஊழ்வினை பயனை முழுவதும் அறிந்து கொள்ள அறிந்து கொள்ள முயல்வது என்பது அமானுஷ்ய செயல் ஆகும். இதனை  ஜாதக கட்டத்தில் ஓரளவு புரிந்து கொள்ள பூர்வ புண்ணிய ஸ்தானமான "ஐந்தாமிடம்" பேருதவி புரிகிறது.


""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்"

          ---திருக்குறள்

   ஒருவர் தன் வாழ்வில் அடையக்கூடிய பெருமைக்கும் மற்றும் சிறுமைக்கும் அதாவது உயர்வுக்கும் மற்றும் தாழ்வுக்கும் அவன் செய்யும் செயலே உரைகல்லாக அமைகிறது.


   ஒருவர் செய்யும் செயலே அவரது வினைப் பயனாக அமையும் .அது மறுபிறப்பை தொடர்கிறது என்பதை வள்ளுவரும், இளங்கோ அடிகளும் அழகுபட எடுத்தியம்புகிறார்கள்.


    ஒருவர் வினைப் பயனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இப்பிறப்பில் நாம் பிறந்தாலும் வாழ்வினை முற்றிலும் முடிவு செய்வது ஊழ்வினை பயன் மட்டும் என்று கருதிவிட முடியாது.


   இப்பிறப்பில் நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்ப ஒரு வினைப்பயனை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்துகொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது.


   பொதுவாக ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம், புத்திரஸ்தானம்,

 புத்தி ஸ்தானம், உயர்கல்வி பெறும் ஸ்தானம் மற்றும் அம்மான் வர்க்கங்களை (மாமன்) தெரிந்துகொள்ள உதவும் ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


   பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் சுபத்துவம் பெறாத நிலையில் நின்று , ஐந்தாம் இட அதிபதியும் பலவீனமாகி நின்றால் பூர்வ புண்ணிய பலன் கெட்டு விட்டது எனலாம்.


   பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் 

சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது... போன்ற பாவ கிரகங்கள் நின்று வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத நிலையில் அதாவது இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறைச் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் போன்றவை தொடர்பு இல்லாத நிலையில், ஐந்தாம்  இட அதிபதி மறைவு ஸ்தானமான 6, 8 போன்ற இடங்களில் நின்றாலோ அல்லது நீசம் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் போன்ற நிலையில் பலவீனப்பட்டு சுபத்துவம் பெறாத நிலையில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு விட்டது எனலாம்.


  பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு விட்டால் ஒரு நபர் அவரது பூர்வீக இடத்தைவிட்டு குறைந்தபட்சம் 300 கிலோ மீட்டர்  தள்ளிச் சென்று வசிப்பது உகந்த சூழலை ஏற்படுத்தித் தரும்.


  பூர்வபுண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு கெட்டுவிட்டால் பூர்வீகத்தில் மனையில் வசிக்கும் யோகம் கிடையாது. பூர்வீகச் சொத்துக்கள் ஒரு சிலருக்கு அழிந்துவிடும் அல்லது பூர்வீக சொத்து இருந்தாலும் வம்பு ,வழக்கு மற்றும் பிரச்சனையை தரும் அல்லது பூர்வீக சொத்து இருந்தும் பயனில்லாத நிலையில் இருக்கும்.


  ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் என்பதால் அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய மிக உன்னத பணியை செய்யும் ஸ்தானம் புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம் ஆகும்.எனவே ஜாதகத்தில் ஐந்தாமிடம் மிக முக்கியமான ஒரு ஸ்தானமாகும்.


  புத்திர நிலையினை கணிக்க லக்கினம் மற்றும் ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அதனுடன் தொடர்புடைய கிரகங்கள்(பார்வை மற்றும் சேர்க்கை)  ஐந்தாம் இட அதிபதியான புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  புத்திர ஸ்தானத்தை ஆய்வுசெய்ய தம்பதிகள் இருவரது ஜாதகத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.


  ஒருவருக்கு புத்திரபாக்கியம் பற்றி ஆய்வு செய்ய மேற்கூறிய மூன்று வகைகளில் ஒரு வகைக்கு 33.33 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


     பொதுவாக புத்திர தோஷம் என்பது பெண் குழந்தைகளே பிறக்கும் நிலை, 

புத்திரம் பிறவாத நிலை மற்றும் புத்திரர் பிறந்ததும் அவர்களால் பயன் பெற இயலாத நிலை.


   மேற்கண்ட மூன்று வகை எந்த நிலை என்பது அவர்களது ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷத்தின் வலிமையைப் பொருத்து அமைகிறது.


  மூன்று நிலைகளில் ஏதேனும் இரண்டு நிலைகள் பாதிக்கப்படாமல் இருந்தால் கட்டாயம் புத்திர பாக்கியம் உண்டு.


  மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து ஏனைய இரண்டு நிலைகள் பாதிக்கப்பட்டு இருப்பின் பெண் குழந்தைகளே பிறக்கும் நிலை உருவாகும்.


 மூன்று நிலைகளும் பாதிக்கப்பட்டு இருந்தால் புத்திர பாக்கியம் இல்லாத நிலை உருவாகும்.


  பொதுவாக ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று

கேந்திர கோணங்களில் அமர்ந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் புத்திரர்களாலும், பூர்வீக சொத்தாலும் மற்றும் புத்தியாலும் பிழைக்க கூடிய யோகம் பெற்றவர்கள் ஆவார்கள்.


  பூர்வீக ஸ்தானத்தில் சனி அமர்ந்தால் புத்திர தடை, பூர்வ புண்ணியத்தில் வசிக்க முடியாத சூழல், அல்லது பூர்வபுண்ணிய சொத்துக்களை இழக்க கூடிய சூழல், புத்தியில் கலக்கம், மாமன் வர்க்கத்திற்கு ஆகாது.

"ஐந்தில் சனி இருந்தால் அழைத்து வைக்கவே மாமன் இல்லை 

மிஞ்சியே இருந்தாலும் மீள்வான் ஒரு மாமன்" என்ற சொல்லோடை உள்ளது . மேற்கண்ட பலன்கள் இயற்கை சுப கிரகங்கள் பார்க்கப்பட பலன் மாறுபடும்.


   ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம், புத்தியில் சூழ்ச்சித் தன்மை, பூர்வீக சொத்து வசிக்க முடியாத சூழல் அல்லது பூர்வீக சொத்தில் வில்லங்கம் போன்றவை ஆகும்.


 ஐந்தாம் இடத்தில் குருபகவான் இருப்பின் "காரகோ பாவ நாஸ்தி" என்ற வகையில் உகந்தது அல்ல. ஏனைய வகையில் ப புத்தியால் கிடைக்கக்கூடிய ஆன்மீகத் தன்மை, பூர்வபுண்ணிய சொத்து லாபம் உண்டாகும் முதலியன.


  ஐந்தில் வித்தைக்காரன் புதன் இருந்தால் கதை கவிதை, கட்டுரை, நாடகம், திரைக்கதை மற்றும் வசனம் போன்றவை எழுதும் சூழல் உண்டாகும். அவ்வாறு எழுதி புகழ் வரும் வாய்ப்பும் கிடைக்கும்.


 ஐந்தில் சுக்கிரன் இருப்பது கலைத்தன்மையான நடனம், நாட்டியம், ஓவியம் மற்றும் சிலைவடித்தல் அழகாக எழுதுதல்,  ஹோட்டல் போன்ற விஷயங்களில் நாட்டம் , வண்டி வாகன யோகம் மற்றும் வீடு கட்ட யோகம் உண்டாகும் .


 ஐந்தாம் இடத்தில் சூரிய பகவான் அமர்ந்திருப்பது ஆட்சி செய்யும் அதிகாரம், ஆணையிடும் தன்மை, மற்றவர்களை வழி நடத்திச் செல்லக்கூடிய தன்மை ,ஆன்மீகத் தன்மை  மற்றும் சான்றோர்களுக்கு நிகரான பண்புகளைப் பெற்று விளங்குதல் போன்றவை உருவாகும்.


  ஐந்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்து சுபத்துவம் பெற்ற நிலையில் மருத்துவராக கூடிய வாய்ப்பு, வீரதீர பராக்கிரம செயல்களில் ஈடுபாடு விவசாயத்தில் நாட்டம்  மற்றும் சகோதர உடைய ஆதரவு கிட்டும்.


 ஐந்தாம் இடத்தில் கேது அமைந்திருப்பது ஆன்மீகத் தன்மை ,புத்திர தடை உருவாகும் , புண்ணிய சக்திகள் , மற்றும் குலதெய்வ வழிபாடு உருவாகும்.


 ஐந்தாம் இடத்தில் சந்திரன் அமர்ந்திருப்பது, நல்ல மனநிலை, கற்பனை உணர்வு , மற்றும் காதல் உணர்வு போன்றவை உண்டாகும்.


 மேற்கண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்.


  ஐந்தாம் வீடு அதிபதி லக்கனத்தில் அமர்ந்தால் பூர்வ புண்ணிய யோகம், புத்திர பலன் பெறக் கூடிய யோகம், புத்தியால் பிழைக்கக்கூடிய யோகம் உருவாகும்.லக்னாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி இலக்கனத்திலும் அமர்வது நல்ல சுப பரிவர்த்தனை ஆகும். இதனால் லக்கனயம் மற்றும் ஐந்தாம் இடம் பலம் பெற்று சாதகர் ஐந்தாம் இடத்துக்குரிய பலன்கள்  அனைத்தும் சிறப்பாக கிடைக்கும்.


  பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் புத்திரர்களால் தனலாபம் உண்டாகும்.தான் கொண்ட புத்தியால் பிழைக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். வாக்கு சாதுர்யம் உண்டாகும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய யோகம் உண்டாகும் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.


இரண்டாம் இட அதிபதி மற்றும் ஐந்துக்குடையவர்கள் பரிவர்த்தனை பெற்று இருப்பது "சுப யோக பரிவர்த்தனை" ஆகும்.


மூன்றாம் இடம் மறைவு ஸ்தானம் ஆக இருந்தாலும் அது முழு மறைவிடமாக கருதப்பட முடியாது. இதனை வீரிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. 5-க்குடையவர் மூன்றாமிடத்தில் அமரும்பொழுது தன் கொண்ட புத்தி கற்பனை உணர்வுகளால் கதை கவிதை கட்டுரை எழுதி தலையங்கம் எழுதி புகழ் அடைய கூடியவற்றை பெறுவர்.3 மற்றும் 5 ம் இட  பரிவர்த்தனையும் மிகுந்த யோக பலனை மேற்கண்ட வகையிலான நற் பலன்களை வழங்குகிறது.


 5-க்குடையவர் நாலாம் இடத்தில் அமரும் போது தன் சுகம் கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம், பூர்வபுண்ணிய சுகம் மற்றும் புத்திர சுகம் போன்றவை அடையக்கூடிய யோகத்தை பெற வேண்டும் இவ்வித பரிவர்த்தனை கேந்திர, கோண பரிவர்த்தனை ஆகும்.அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு வழங்குகிறார்.


 நான்கு மற்றும் ஐந்துக்கு உடையவரது பரிவர்த்தனை

" கேந்திர கோண பரிவர்த்தனை" ஆகும். 


 5-க்குடையவர் ஆனவர் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் அமரும்பொழுது மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு வழங்குகிறது.


 ஐந்துக்குடையவர் மறைவிட ஸ்தானமான ஆறாமிடத்தில்  அமரும்பொழுது புத்திர தடை பூர்வபுண்ணிய இல்லாத சூழல், பூர்வீக சொத்தில் பிரச்சனை மற்றும் எதிர்ப்புகளை உருவாக்கும்.


   ஐந்து மற்றும் ஆறாம் இடத்து அதிபதி பரிவர்த்தனை பெறுவது "அவயோக பரிவர்த்தனை" ஆகும். இந்த பரிவர்த்தனை ஐந்தாமிடத்தின் ஆதிபத்திய பலன்களை கெடுதல் செய்கிறது.


  ஐந்தாம் இட அதிபதி, ஏழாம் இடத்தில் அமர்வது காதல் மணம் மற்றும் கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யமான சூழல், நல்ல மனைவி அமைதல் மற்றும் நன்மக்களைப் பெறுதல் போன்ற நற்பலன்களை தரும்.


  5 மற்றும் 7-ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை ஆனது கேந்திர கோண பரிவர்த்தனை ஆகும். இது சுப பரிவர்த்தனை ஆகும்.


   5-க்குடையவர் எட்டாம் இடத்தில் அமரும்போது பூர்வீக சொத்தில் வில்லங்கம், வம்பு, வழக்கு மற்றும் பிரச்சனைகளைத் தரும், புத்திரர்களால் தடைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும்.


 ஐந்து மற்றும் 8-க்குடையவர் பரிவர்த்தனை " அவயோக பரிவர்த்தனை" ஆகும்.


   5-க்குடையவர், ஒன்பதாம் இடத்தில் அமரும் பொழுது பூர்வபுண்ணிய யோகம் ,புத்திரத்தால் யோகம் ,தான தர்ம குணம் மற்றும் புத்தியால் பிழைக்கும்  யோகம் உண்டாகும்.


 5 மற்றும் 9 குடைவர் பரிவர்த்தனை 

"கோண பரிவர்த்தனை" ஆகும் .இது சுப பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது.


  5-க்குடையவர் பத்தாமிடத்தில் அமரும்போது  புத்திரத்தாலும், பூர்வ புண்ணியத்தாலும் பலன் பெறும் யோகம்.தான் பெற்றுள்ள புத்தியால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


 5 மற்றும் 10 க்கு உடையவர் பரிவர்த்தனை "கேந்திர கோண பரிவர்த்தனை" ஆகும்.


  5-க்குடையவர் பதினோராம் இடத்தில் அமரும் பொழுது புத்திரத்தால் லாபம் பெறும் சூழல் உருவாகும்.பூர்வ புண்ணிய சொல்லால் லாபம் அடையும் சூழல் உருவாகும்.


  ஐந்து மற்றும் பதினொன்றாம் இட  அதிபதி பரிவர்த்தனையானது யோக பரிவர்த்தனை ஆகும்.


 5-க்குடையவர் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் அமரும்போது முத்திரைத்தாள் ஆதரவு தரவில்லை பூர்வ புண்ணிய சக்தியை இழக்கும் சூழல் புத்தியால் பிழைக்க இயலாத நிலை போன்றவை உருவாகலாம்.


 ஐந்து மற்றும் பன்னிரண்டாம் இட பரிவர்த்தனை "அவயோக பரிவர்த்தனை ஆகும்.


  மேற்கண்ட அனைத்தும் ஒரு விதமான பொதுப் பலன்களே ஆகும்.சில நேரங்களில் இயற்கை சுபகிரக பார்வையைப் பொறுத்து பலன்களில் மாறுபடலாம்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப் & டெலிகிராம்

    9715189647


    செல்

   7402570899

      9715189647


My website

www.astroravichandransevvai.in


                            



    அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

நீங்கள் எப்படிப்பட்டவர் ?

                                  


நீங்கள் எப்படிப்பட்டவர் ?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    எல்லாத்துறைகளிலும் நல்லவர்களும் உண்டு,

கெட்டிக்காரர்களும் உண்டு. அதே நேரத்தில் அந்தத்துறையினையே கெடுக்க கூடிய கெட்டவர்களும் உண்டு.


   ஒரு துறையில் மிகுந்த துல்லியமான அறிவு படைத்தவர்கள் தன்னை அலட்டிக் கொள்வதும் இல்லை, பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

இதனையே ஆங்கிலத்தில் "Empty vessle no make noice" அதாவது

 "நிறை குடம் தழும்பாது,

குறைகுடம் கூத்தாடும்"என்பார்கள்.


   "Sometime Duplicate things show is the most attractive than real one." "ஒரு சில நேரங்களில் துறை சார்ந்த மிகுந்த ஞானம் மற்றும் உண்மையான திறமை படைத்த மனிதர்களை விட அரை வேக்காட்டு மனிதர்கள் தான் திறமையான மனிதர்களாக வெளிப்படுத்தி கொள்ள சில நுட்பங்களை பயன்படுத்தி அவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு அந்த இடத்தினை தக்க வைத்துக் கொள்வார்கள்."


 இது போன்ற குணநலன் கொண்ட மனிதர்கள் தங்களது முழுநேரத்தையும் பயன்படுத்தி அறிவு படைத்த மற்றவர்களை வீழ்த்தி தன்னை முதன்மை படுத்திக்கொள்ள எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள்.


   தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அரைகுறை அறிவாளிகள் தங்களது பணியினை திறம்பட செய்யும் திராணியற்றவர்கள் நிர்வாகத்தினை காக்காபிடித்து கொண்டு மற்றவர்களை போட்டுகொடுத்து  அதில் தன்னை முதன்மை படுத்திக்கொள்ள முயல்வார்கள்.


   இது போன்ற தருணங்களில் நேர்மையான மனம் படைத்த மனிதர்கள் மனதால் பாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால் அவர்களை எதிர்க்கும் திராணியற்றவர்கள் என்று கூறிவிடமுடியாது. "துஷ்டரைக் கண்டால் தூர விலகு" என்ற உன்னத கொள்கையை உடையவர்களாக விலகி இருப்பார்கள்.


   இந்த கருத்தை விளக்க ஒரு எளிய கதை ஒன்றை தருகிறேன்.

" ஒரு யானை நன்றாக  குளித்துவிட்டு கோயில் பூஜையை தரிசிக்க தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையிலே ,  எதிரே சாக்கடையில் புரண்டு விளையாடிய ஒரு பன்றி கூட்டம் ஒன்று அந்தப் பாதை வழியாக வந்தது .


    சாக்கடைடையில் உருண்டு பிரண்டு  உடல் முழுவதும் சாக்கடை சேற்றை அப்பிக் கொண்டு வந்த பன்றியை பார்த்த யானை பின்னோக்கி சென்று வழிவிட்டது.பன்றி கூட்டத்தில் தலைமை தாங்கி வந்த ஒரு பன்றி சக தோழர்களிடம் பேசி கொண்டு சென்றதாம்    "யானை நம்மள பார்த்து  பயந்து வழிவிடுகிறது பார்த்தாயா ! " என்று பெருமை பீற்றிக் கொண்டு சென்றதாம்.


    இதுபோன்ற திறமையற்ற துர்குணம் படைத்தவர்கள்  நற்குணம் மிகுந்த நல்ல உழைப்பாளிகளை இன்னல்களுக்கு உட்படுத்தி அதாவது அவர்களை வேதனைக்கு உட்படுத்தி வேடிக்கை பார்த்து தனக்கு தெரியாதது போல் நடித்து ஆதரவாகப் பேசி மனதுக்குள் மகிழ்ச்சி பெறுவோரும் உண்டு. 


    இது போன்ற குணாதிசயம் கொண்ட மனிதர்கள் எவ்வாறு ஜோதிடத்தின் உதவி கொண்டு கண்டறிவது என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.


    ஒருவரது ஜாதகத்தில் இலக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள்

 சனி மற்றும் ராகு அல்லது சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இணைந்து நின்றாலும்,

இலக்கனத்தில் நிழல் கிரகங்களான ராகு பகவான் அமர்ந்து  இயற்கை பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு அன்றி தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து பார்க்கும் அமைப்பு பெற்றவர்கள் இது போன்ற குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள்.


  லக்னத்தையும், ராசியையும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன் பார்வை அல்லது  வேறு எந்த வகையிலும் தொடர்பு பெறாத அமைப்பு. ஆனால் அதே நேரத்தில் லக்னத்தை சனி, செவ்வாய் ,ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் சுபத்துவம் பெறாத நிலையில் தொடர்பு பெற்ற அமைப்பை பெற்றிருக்கும் பொழுது 


   ஜாதக கட்டத்தில் இலக்கன அவயோகிகள் பலம்பெற்று ,

இலக்கன யோகர்கள் பலவீனப்பட்ட நிலையிலும்,


  ஜாதகத்தில் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது இயற்கை சுப கிரகங்களான குரு , தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் உடன் தொடர்பை  பெரும் அமைப்பு உடையவர்கள்.


  ஜாதகத்தில்  மறைவிட ஸ்தான அதிபதிகளான ஆறு மற்றும் எட்டுக்கு உரியவர்கள் இலக்கனம் மற்றும் ராசிகளிலோ அல்லது அதிபதிகளுடன் தொடர்பு பெறும் அமைப்பை பெற்றிருக்கும் போதும் 


     ஒருவர்  துர்குணம் படைத்த மனிதர்களா என்பதை கண்டறிய மூன்று கோணங்களில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  1) லக்கனம் மற்றும் ராசியில் உள்ள கிரகங்கள்,


  2) லக்கனம் மற்றும் ராசி அதிபதியின் நிலை


 3) லக்கனத்தை பார்க்கும் கிரகங்கள்


   மேற்கண்ட மூன்று வகையிலும் சனி, ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரக தொடர்பினை பெற்று சுபத்துவம் பெறாத நிலையில்  மட்டுமே மேற்கண்ட தன்மை படைத்தவர்கள் காணப்படுவார்கள்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப் & டெலிகிராம்

     9715189647


    செல்

    9715189647

      7402570899


My website

  www.astroravichandransevvai.in

.

                          


   அன்புடன் 

சோதிடர் 

சோ.ப ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,

புதுக்கோட்டை மாவட்டம்.

எதிர்காலம் அறிதல்

                                 

எதிர்காலம் அறிதல்


    செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


       எதிர்காலம் அறிதல் என்பது ஒருவகை கலை. இதற்கு சோதிடவியல் மிக முக்கியமாக பயன்படுகிறது.


    "எவர் ஒருவருக்கும் தனது எதிர்காலம் பற்றிய கனவு அடிக்கடி எழுவதுண்டு ". "எதிர்காலத்தில் தாம் எவ்வாறு இருப்போம்?" என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உண்டு.


   கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் கூட  எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உடையவர்களகவே இருப்பார்கள்.


 ஜெனன காலத்தில் 

வான வீதியில் உலாவரும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு நடக்கும் தசா புத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப எதிர்காலம் கணித்து சோதிடர்களால் தரப்படுகிறது.


   பொதுவாக ஒருவருக்கு நடக்க இருக்கும் தசைகள் யோக தசையாக அமைய லக்கின யோகருமான திரிகோணாதிபதிகள் (1,5,9) தசைகள் யோகத்தை தரும் என்றபோதிலும்,  சரியான முறையில் ஆய்வு செய்து பார்த்தால் அதிலும் குறிப்பாக சுபத்துவ தன்மையின் அடிப்படையில் ஜாதகரது ஜாதக கட்டத்தினை ஆய்வு செய்து பார்க்கப்படும் போது " இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியோருடைய தொடர்பு பெற்ற அமைப்புடைய தசாபுத்திகள் வாழ்வில் வரும்பொழுது அவரது வாழ்க்கை வண்ண பூங்கொத்தாக மகிழ்ச்சியாக அமைகிறது.


   தசாபுத்திகள் நல்ல பலனைத் தர வேண்டுமாயினும் , அவ்வாறு தரும் பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டுமானால், அவரது ஜாதகத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டன் எனப்படும் "லக்னாதிபதியும்" பலம் பெற்றிருக்க வேண்டும்.


    ஒருவர் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமாயின் அவர் மேற்கொள்ளும் முயற்சியும் மற்றும் தொழிலும் மேன்மை அடைய வேண்டும்.


   ஒருவருடைய வாழ்வில் லட்சியம், அவர் மேற்கொள்ள இருக்கும் தொழிலும்  மற்றும்அதன் மூலம் பெறக்கூடிய வருமானமும் அவரது 25 வயதுக்குள் முடிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒருவர் எந்த தொழிலில் மேற்கொண்டு அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பதை அவருடைய கிரக கர்மபலன் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை கண்டறிவதே சோதிடரின் முக்கியமான கடமையாகும்.


   ஒருவர் அவரது ஜாதகத்தில் உள்ள அதிக சுபத்துவம் பெற்ற கிரகங்களின் தொழிலையே வாழ்வில் மேற்கொள்வார்.அந்தக் கிரகம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் ஆர்வம் அவரது மனதில் இயற்கையாகவே அமைந்திருப்பதையும் காணலாம். எனவே அந்த தொழில் தொடர்பான முயற்சியில் அவரது மனம் ஈடுபடும்.


 ஒரு சிலர் தாம் படித்ததற்கும் , அவர்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதையும் காணலாம். இதற்கான காரணங்களை ஆய்வு செய்தால் அவரது ஜாதகத்தில் அந்த படிப்பு சார்ந்த கிரகம் அதிக சுபத்துவம் இருப்பதால் படித்திருப்பார் .ஆனால் படித்து முடித்தவுடன் உகந்த தசாபுத்திகள் சரியாக அமையாத பட்சத்தில்  அவர் கற்ற படிப்பு சார்ந்த தொழிலில் ஈடுபடாமல் செயல்பட வைக்கும்.


  உதாரணமாக மிதுனம் அல்லது கன்னி ராசியில் பிறந்தவர்கள் அவரது ஜாதகத்தில் ஜாதகத்தில் செவ்வாய் அதிக சுபத்துவமாக இருப்பதால் மருத்துவர் படிப்பு படித்திருப்பார் எனினும் அவர் மருத்துவ படிப்பு முடித்தவுடன் அவருக்கு நடப்பில் இருக்கும் செவ்வாய் தசை காலங்களில் அவரால் அவரது மருத்துவப் பணியில் ஈடுபட முடியாமல் வேறு வேலைக்குப் சென்று இருப்பார் . மருத்துவ படிப்புக்கு  காரணமான கிரகமான செவ்வாய் ஜாதகரை மருத்துவராக ஆக்கி இருந்தாலும் அவரது தசாபுக்தி காலங்களில் அந்த செவ்வாய்க்குரிய காரக பலனைத் தராமல் ஆதிபத்திய பலனையே தரும் என்கின்ற வகையில் மிதுனம் , கன்னி லக்கினத்திற்கு ஒவ்வாத செவ்வாய் திசை நடப்பில் வரும் காலங்களில் அவர் மருத்துவத் தொழிலை விட்டு வேறு தொழில் ஈடுபடுவார்.


   எனவே ஒருவர் செய்யும் தொழிலுக்கு அவரது ஜாதகத்தில் அதிக சுபத்தன்மை பெற்ற கிரகம் காரணம் எனினும் அதனை முடிவு செய்வது அவருக்கு நடக்க இருக்கும் தசா புத்திகளே ஆகும்.உகந்த தசாபுத்திகள் நடக்காத காலங்களில் அவர் அந்த தொழிலை மேற்கொள்ளும் போது அதனால் அவர் பல இன்னல்களுக்கு உள்ளாவதை காணலாம்.


  ஒருவரது ஜாதகத்தில் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது தசா புத்திகள் மற்றும் கோச்சார பலன்களே ஆகும்.


   ஒருவருக்கு என்ன தான் யோகமான அமைப்புகள் சாதகத்தில் இருந்தாலும், அதன் அதன் தசா காலங்களில் மட்டுமே அந்த யோகத்தை அனுபவிக்க முடியும். அவ்வாறு அனுபவிப்பதற்கும் அவரது ஜாதகத்தில் உள்ள லக்னாதிபதி வலுவோடு இருக்க வேண்டும்.


    ஒரு சிலரது சாதகத்தில் பார்க்கும்போது யோகமான அமைப்புகள் அதிகமாக இல்லை என்றாலும், அவருக்கு நடப்பிலிருக்கும் தசை நல்ல சுபத்துவம் பெற்ற தசையாக இருக்கக்கூடிய பட்சத்தில் உரிய வயதிலும் வரும் பொழுது அதனை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேறி விடுவது உண்டு.


   உச்சம், ஆட்சி போன்ற நிலைகளிலும், சுபத்துவம் பெற்ற நிலையிலும் கேந்திர மற்றும் கோணாதிபதி இருப்பினும் அதற்குரிய தசை அமைப்புகள் வாழ்வில் உரிய காலத்தில் வராததால் கஷ்டப்படுவோரும் உண்டு.


  கீழ்க்கண்ட ராசிகளுக்கு கீழ்க்கண்ட தசைகள் உரிய காலத்தில் பங்கப்படாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் நிற்கும் பொழுது சாதகருக்கு மிகுந்த யோக பலன்களை தருகிறது.

  

    மேஷ ராசிக்கு உரிய காலத்தில்  சூரிய மற்றும் குரு தசை மற்றும் லக்னாதிபதி என்ற வகையில் செவ்வாய் தசை,


  ரிஷப ராசிக்கு சனி மற்றும் புதன் திசை, மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் சுக்கிரதசை,


    மிதுன ராசிக்கு சுக்கிரன் ,சனி மற்றும் லக்கனாதிபதி என்ற வகையில் புதன் தசை


    கடக ராசிக்கு சந்திரன் செவ்வாய் மற்றும் குரு தசை,


  சிம்ம ராசிக்கு சூரியன், குரு மற்றும்  செவ்வாய் தசை,


  கன்னி ராசிக்கு சனி சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் புதன் தசை,


 துலா ராசிக்கு சனி, புதன் மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் சுக்கிரதசை,


  விருச்சக ராசிக்கு குரு, சந்திரன் மற்றும் லக்னாதிபதி என்ற வகையில் செவ்வாய் தசை,


  தனுசு ராசிக்கு செவ்வாய்,  சூரிய தசை, லக்னாதிபதி என்ற வகையில் குருதசை 


  மகர ராசிக்கு சுக்கிரன், புதன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் சனிதசை,


 கும்ப ராசிக்கு புதன், சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி என்றவகையில் சனிதசை,


 மீன ராசிக்கு சந்திரன், செவ்வாய் தசை மற்றும் லக்கனாதிபதி என்றவகையில் குருதசை.


  இவை அல்லாது மற்ற கிரகங்கள் தசை நடப்பில் வரும்பொழுது அது யோகத்தை தர வேண்டுமாயின் அக்கிரகங்கள்  3, ,6 ,10, 11 ஆகிய இடங்களில் நட்பு நிலையில் அமர வேண்டும் அல்லது இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன்,  தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்று அதன் தசை நடத்தப்பட வேண்டும்.


  நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


    செல்

 9715189647

   7402570899



My website

www.astroravichandransevvai.in


                          


   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா.                     

பில்லி, சூனியம், பேய், பிசாசு மற்றும் கண்திருஷ்டி பற்றி ஜோதிடவியல் கருத்து என்ன?

 

                              


பில்லி சூனியம், பேய்  பிசாசு மற்றும் கண்திருஷ்டி பற்றி ஜோதிடவியலின் கருத்து என்ன?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   எதிரிகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நேர்மையாக தத்தம் வேலையை செய்துகொண்டு யாருக்கும் கெடுதல் இல்லாமல் வாழ்பவர்களுக்கும்  எதிரிகள் உண்டு. 


   "தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் தன்னலமற்ற மனிதர்களுக்கும்" இவ்வுலகில் அவர் புகழ் கண்டு பொறாமை அடைந்த  எதிரிகள் உண்டு.


  மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேக்களுக்கும் உண்டு.

 உலகையே உய்விக்க வந்த இறைதூதர் என்று அழைக்கப்படும் இயேசு நாதரை சிலுவையில் அறைந்த யூதர்களும் உண்டு.


   "தான் உண்டு,

 தன் வேலை உண்டு" என்று இருப்பவருக்கும் எதையும் கண்டுக்காம இருக்கிறானே என்று நினைத்து பொறாமைப்படும் மனிதர்களும் உண்டு.


    ஒரு சில மனித மனம் "தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்" என்ற பெருந்தன்மை படைத்தவர்களும் உண்டு.


  எதிரியை நேர்மையாக களத்தில் சந்திக்க இயலாத திராணியற்றவர்கள் மறைமுக வழிகளில் தாக்க சில சூழ்ச்சிகளையும் அல்லது கெட்ட சக்திகளையும்(bad deeds) பயன்படுத்துவதும் உண்டு.


    கெட்ட சக்திகள் என்பது பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை அலைகளை மனிதர் மீது செலுத்தி அவர்களை நிலைகுலையச் செய்வது ஆகும் அல்லது மனதளவில் பொறாமை உணர்வோடும், ஏக்கத்தோடு பார்க்கும் பார்வை ஆகும்.


    அதே நேரத்தில் ஒரு மனிதரை தீயசக்திகள் கொண்டு ஏவி அவனது/அவளது வெற்றி வாய்ப்பை குறைத்துவிடலாம் என்றோ அல்லது 

நோய் நொடிகளை உண்டாக்கலாம் அல்லது உயிரை பறித்து விடலாம் எனில் இவ்வுலகில் அனைவரும் அவர்களது எதிரிகளுக்கு ஏவி விட எத்தனிப்பார்கள். எனவே எதிரிகளை கம்பு, கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கி  கொண்டு தாக்க முயலாமல் இது போன்ற கெட்ட சக்திகளை ஏவிவிட பார்ப்பார்கள். மந்திரவாதிகளுக்கும் சமூகத்தில் வெகு மதிப்பு இருக்கும். நல்ல வருமானமும் அவர்களுக்கு உண்டாகும்.ஆனால் அப்படி இறைவன் படைக்கவில்லை.


  ஆதலால் இந்த எதிர்மறை தன்மைகொண்ட கெட்ட சக்திகள் எல்லோர் மீதும் ஏவி விட முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த கெட்ட சக்திகள் இல்லை என்றும் தவிர்த்துவிட முடியாது.


   என்ன சார்  குழப்றீங்க?  ஒன்னு கெட்ட சக்திகள் இருக்கு  என்கிறீர்களா? அல்லது இல்லை என்கிறீர்களா? என வினா எழுப்ப தோன்றும்.


  ஆனா இந்த கெட்ட சக்திகள் உண்டுன்னும் சொல்லலாம் அல்லது  இல்லை என்றும் சொல்லலாம்.


  "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை என்பவர்களுக்கு இல்லை"


  என்னதான் சார் சொல்ல வாரீங்க? என என்னை பார்த்து கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது.


 ஏன் இப்படி சொல்றேன்னா இந்த கெட்ட சக்திகள் அவரவர் மனநிலை மற்றும் அவரவர் சாதகத்தில் உள்ள கிரக நிலையை சார்ந்தது.


   இல்லைன்னு சொல்லிக்கிட்டு தைரியமா உலா வருபவருடைடைய ஜாதகத்தில நல்ல நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய கிரக அமைப்புகள் அமைந்து மனநிலை காரகன் சந்திரபகவான் சனி, ராகு கேது போன்ற பாவ கிரக சேர்க்கை அற்று  அல்லது சனி, ராகு  போன்ற பாவ கிரக சேர்க்கை இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு ,சுக்கிரன் தனித்த புதன் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் மற்றும் சந்திரன் பகவான் உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் மற்றும் நல்ல உகந்த சுபத்துவம் அடைந்த கிரக தசைகளுடன் நடப்பில் இருப்பினும் மற்றும் கோச்சார பலன்களான அஷ்டம சனி, ஏழரைச்சனி வராமல் சிறப்பாக  இருக்கக்கூடிய பட்சத்தில் அவர் மீது எவ்வித தீய சக்தி ஏவினாலும் அவரை பாதிப்பதும் இல்லை. அவர் அதை நம்பும் மனநிலையில் இருப்பதுமில்லை. இது போன்றவர்கள் "பேயாவது, பூதமாவது

பில்லியாவது, சூன்யமாவது என்று எதிர் வாதம் செய்வார்கள். அவர்களுடைய வெற்றிக்கு அவர்களது தனிப்பட்ட திறமையை காரணம் என்று மார் தட்டிக் கொள்வார்கள். உண்மையில் இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கெட்ட சக்திகள் எதுவும் அவர்களை சென்று பாதிப்பதில்லை.


  அதே நேரத்தில் ஒருவருக்கு உகந்த நல்ல கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாத சூழலில் அவருக்கு கோச்சார அடிப்படை ஏழரை ,அஷ்டம சனி காலங்கள் நடப்பில் இருந்து சுபத்துவம பெறாத ராகு தசை , மறைவிட ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருக்கும் பட்சத்தில் அவரது மனநிலை காரகன் சந்திரனும் சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் உடைய தொடர்பில் பெற்றிருக்கக் கூடிய சூழலில்  அவர் மீது மற்றவர்கள் ஏவக்கூடிய கெட்ட சக்திகள் அந்த குறிப்பிட்ட காலம் வரை அவரை தாக்கி நிலைகுலையச் செய்வதும் உண்டு.


  இதுபோன்ற உகந்த தசா அமைப்புகள் இல்லாத காலங்களில் அவருடைய மன நிலையில் ஒருவிதமான மனஅழுத்தம்(Stress) ஏற்பட்டு அந்த மன அழுத்தத்தின் விளைவாக பேய் பிடித்தது போல் உலறி  திரிபவரும்  உண்டு. சில நேரங்களில் முழுவதும் நிறைவு பெறாத ஆசையோடு அற்ப ஆயுளில் இறந்தவர்களுடைய ஆவிகள் இதுபோன்ற அமைப்பு உடையவர்களை  உடலில் புகுந்து தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் அமைப்பும் உண்டு. 


  எனவே இந்த பேய், பிசாசு பில்லி மற்றும் சூனியம் போன்ற கெட்ட சக்திகள் என்பது அவரவர் ஜாதகத்தில் உகந்த நல்ல தசா அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் உள்ள காலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை அதே நேரத்தில் கோச்சார மற்றும் தசா பலன்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் சரியாக அமையாத பட்சத்தில் மேற்கண்ட கெட்ட சக்திகள் பாதிப்பு உண்டு .அதாவது சில நேரங்களில் மனமே நமக்குள் கற்பனையை அதாவது தேவையில்லாத கற்பனையை உண்டாக்கி பயம் கொள்ளச் செய்து நம்மை நிலைகுலைய செய்து விடுவதும் உண்டு.


  இதேபோல மற்றவருடைய பொறாமை மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகளும் மேற்கண்ட வகையிலான அடிப்படையில் அமைந்தது ஆகும்.


  மற்றவர்களுடைய ஏக்க பார்வை நம்மை பாதித்துவிடுவதும் உண்டு. இதனையே நாம் கண்திருஷ்டி என்கிறோம். கண் திருஷ்டியும் எல்லோரையும் ஒரே அளவில் பாதித்துவிடும் என்று சொல்வதற்கில்லை. எந்த பாதிப்பும் அவரவர் சாதக கோச்சார, தசா மற்றும் கிரக அமைப்பைப் பொறுத்தது.


 பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் மேற்கொண்ட வகையிலான பில்லி, சூனியம், பேய் ,பிசாசு மற்றும் கண் திருஷ்டி போன்ற வகையிலான பாதிப்பில் ஏதாவது ஒன்று அவரது ஜாதகத்திலுள்ள கிரக நிலை, கோச்சார மற்றும் தசா அமைப்புகள் சரி இல்லாத காலங்களில் வந்தாலும் அவரது ஜாதகத்தில் வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டனாக வழங்கக்கூடிய லக்கினாதிபதி வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவற்றையெல்லாம் இந்தக் குறிப்பிட்ட காலம் வரை தாங்கி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று விடுவார்கள்.


  யார் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து எதிரி ஸ்தானமான ஆறாமிடம் வலுப்பெற்ற சூழலில் மேற்கண்ட வகையில் பாதிப்புகள் உகந்த தசா அமைப்புகள், கோச்சார பலன் மற்றும் கிரக அமைப்புகள் இல்லாத சூழலில் வந்தால்  அதனை எதிர்த்துப் போராடும் திராணியற்று அந்த குறிப்பிட்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் தன்மையற்று நிலைகுலைந்து போவார்கள்.


   மேற்குறிப்பிட்ட அனைத்து தீயசக்திகள் பாதிப்பிலிருந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் வெளிவர அல்லது தாக்குப்பிடித்து நிற்க அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபடுதல் மிகச்சிறந்த ஒன்றாகும். 


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

    9715189647

       செல்

  9715189647

    7402570899


My website

www.astroravichandransevvai.in


                      



   அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதகத்தில் சுபத்துவநிலை காட்டும் சுப பலன்கள்.

 ஜாதகத்தில் சுபத்துவ நிலை காட்டும் சுப பலன்கள்?


                              



  ஒரு கிரகம் நன்மையான பலன்களை தர வேண்டுமாயின், 

"அந்த கிரகம் எந்த விதத்திலும் பாவத்துவம் அடையாத சூழ்நிலையை பெற்றிருக்க வேண்டும்".


 "பாவத்துவம் அடைதல் என்றால் என்ன?" என உங்களுக்கு வினா  மனதினில் எழுப்ப தோன்றும். இதற்கான விடையை நானே சொல்கிறேன்.

 " ஒரு கிரகம் இயற்கைப் பாபக் கிரகமான சனி ,செவ்வாய், ராகு மற்றும் கேதுவுடன் இணைந்த அல்லது பார்வை பெற்ற அல்லது பாவர் சாரம் பெற்ற அமைப்பு பெற்ற ஒரு கிரகம் பாவத்துவம் அடைந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது."


  பாவத்துவம் அடைந்த கிரகம் கோணம் மற்றும் கேந்திராதிபதிகளாக இருந்தாலும் அதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை  தந்து விடுவதில்லை.


  ஒரு கிரகம் மறைவிட ஸ்தானாதிபதிகளாக இருந்தாலும் அல்லது லக்கின பகை கிரகமாகவே இருந்தாலும்

சுபத்துவம் அடைந்த நிலையில் அதன் தசை காலங்களில் அதன் ஆதிபத்தியம் வழியான யோக பலனை தந்து விடுகிறது.


    உடனே"சுபத்துவம்  நிலை அடைதல் என்றால் என்ன?" என்ற மற்றொரு சந்தேக வினா உங்கள் மனதில் எழுவது எனக்குப் புரிகிறது.


  "சுபத்துவம் நிலையை பற்றி விளக்குவதற்கு ஜாதக கட்டத்தில் எண்கள் முக்கியமில்லை. லக்கினம் முதலாக எண்ணி வரத் தேவையும் இல்லை.


  ஒரு கிரகம் பாவ கிரகமாகவே இருந்தாலும் அல்லது ஒரு கிரகம் பாவ கிரகங்களுடன் இணைந்து இருந்தாலும் அல்லது ஒரு கிரகம் பவர் சாரம் பெற்றிருந்தாலும் அல்லது ஒரு கிரகம் லக்னத்திற்கு பகை கிரகமாகவே இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்ற கிரகம் சுபத்துவ நிலையினை அடைந்து தனது ஆதிபத்திய வழியாக சுப பலனைத் தருகிறது.


 இந்த சுபத்துவம் நிலையை விளக்க கீழ்க்கண்ட ஒரு உதாரண ஜாதகத்தை கையில் எடுத்துக்கொண்டு விளக்குகிறேன்.



.


 இவரது

 பிறந்த தேதி: 08.09.1979

பிறந்த நேரம்: 9.37 pm

பிறந்த இடம்: சென்னை

நட்சத்திரம் :ரேவதி


   இவரது ஜாதகத்தினை மேம்போக்கான நிலையில் ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலான கிரகங்கள் பாவத்துவமான‌ நிலையில் நிற்பது போல் தோன்றுகிறது.ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல.


   இவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் அதாவது ராசிக்கு மறைவிட ஸ்தானமான ஆறாம் இடத்தினில் ,

ஆறு கிரகங்களான குரு ,சனி, ராகு, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்துள்ளது.கேது பகவானும் 180 பாகை வித்தியாசத்தில் அமர்ந்து அந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறது.


 இயற்கை சுப கிரகமான குரு ,புதன்  மற்றும் சுக்கிரனுடன் இயற்கை பாவ கிரகமான சனி,ராகு மற்றும் அரை பாவரான சூரியன் உடன் இணைந்து பாவத்தன்மையினை குரு புதன் மற்றும் சுக்கிரன் அடைந்துள்ளது.


 இங்கு கிரகங்கள் ஜாதக கட்டத்தில் அமைந்துள்ள பாகை (degree) அளவு

இலக்கனம்-22°.12'

சூரியன் பகவான் ‌21°-17'

சந்திரன் பகவான் 23°.00

செவ்வாய்பகவான் 26°.30'

புதன் பகவான் 17°.36'

குரு பகவான்-2°.10'

சுக்கிரன் பகவான் 24°.52'

சனி பகவான் 23°.26'

ராகு 14°.23' 

கேது பகவான் 14°.23' 


  இங்கு சூரியனுக்கு பகை கிரகமான சனி பகவான் இரண்டு பாகை(டிகிரி) வித்தியாசத்தில் நெருங்கி இணைந்து பாவத்துவம் அடைந்துள்ளது.


      இதேபோல  அரை பாவரான சூரியன் உடன் ராகு பகவான் ஏழு  பாகை வித்தியாசத்தில் இணைந்து சூரிய பகவானை மேலும் பாவத்துவம் அடைய வைத்துள்ளது.


 இதேபோல இயற்கை சுப கிரகமான சுக்கிரன் பகவானை ஒன்று பாகை வித்தியாசத்தில் நெருங்கி சனி பகவானும் , 

பத்து பாகை வித்தியாசத்தில் ராகு பாகவானும் இணைந்து பாவத்துவமடைய செய்துள்ளது.


 மற்றொரு இயற்கை சுப கிரகமான குரு பகவானை 12 பாகை வித்தியாசத்தில் பாவத்துவம் அடைய செய்து உள்ளது. குரு பகவானும், சனி பகவானும் ஒரே ராசியில் இருந்தாலும் 21 பாகைக்கு மேல் இருப்பதால் சனிபகவானால் குருவை பாவத்துவம் அடைய செய்ய இயலாது.


    புதன் பகவானை மூன்று பாகை வித்தியாசத்தில் ராகு பகவானும்,ஆறு பாகை வித்தியாசத்தில் சனி பகவானும் இணைந்து பாவத்துவம் அடையச் செய்துள்ளது.


  இவருக்கு ஜெனன புதன் தசை இருப்பு 08.11.03


  இவர் ஜாதகத்தில் ராசிக்கு மறைவு ஸ்தானத்தில் பாவத்துவம் பெற்ற நிலையில் குரு,புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இருப்பதால் இவருக்கு பிறந்ததிலிருந்து வந்த புதன், கேது, சுக்கிரன் மற்றும் தற்பொழுது சூரியதசை நடந்து வந்துள்ளது. 


   மேற்கண்ட தசைகள் மறைவிட தானத்தில் பாவத்துவம் அடைந்த நிலையில் உள்ள கிரகம் அதன் தசை காலங்களில் இவரை அதிக இன்னல்களுக்கு உள்ளாக்கி இருக்கும் என்று நீங்கள் நினைத்து இருப்பீர்கள் என்றால் உங்களது உங்களது கணிப்பு தவறாகி விடும்.


   இவற்றில் கேது தசை தவிர ஏனைய  தசைகள் அனைத்தும் சிறப்பாக இருந்துள்ளது. பல லட்சக் கணக்கான பணத்தை சம்பாதித்து உள்ளார். இவர் ஜெராக்ஸ் மெஷின் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்து வருகிறார்.


  இந்த இடத்தில்தான் நாம்  சுபத்தன்மை என்ற ஒரு அமைப்பை கவனிக்க வேண்டியுள்ளது.


  ஜாதகத்தில் பௌர்ணமியை விட்டு சற்று விலகிய சந்திரபகவானுக்கு 

6 ,7 மற்றும் 8 ல் உள்ள கிரகங்கள் "சந்திராதி யோகம்" பெரும் என்ற வகையில் வளர்பிறைச் சந்திரன்  பார்வை பெற்ற அனைத்து கிரகங்களும் சுபத்தன்மை அடைந்து உள்ளது. ஆதலால்  புதன், சுக்கிரன் மற்றும் சூரியன்  தசை  காலம் முழுவதும் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்துள்ளது.


 கிரகங்கள் சிம்ம ராசிக்குள் ஒன்றுக்கொன்று பாவத்துவம் பெற்ற நிலையில் இருந்தாலும் வளர்பிறைக்கு அருகில் உள்ள சுப சந்திரனின் பார்வை  பெற்றதும் அனைத்து கிரகங்களும் சுபத்தன்மை அடைந்து அதன் தசை காலங்களில் யோக பலனை தரக்கூடிய கிரகங்கள் ஆக மாறியுள்ளது.


இதுவே சுபத்துவ தன்மையின் விளக்கமாகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

& டெலிகிராம்

   9715189647


    செல்

    9715189647

    7402570899


                           



    அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My website

  www.astroravichandransevvai.in


.......   .......  ....... ....... .....  .....