Sunday 25 February 2018

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு ?

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு ?                                               


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 125 )


செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

அழகுள்ள பெண்


           ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்தில் சந்திரபகவான் அல்லது சுக்கிரபகவான் நின்றால் அவள் "வதனமே சந்திரபிம்பமே "என போற்றும் பேரழகியாக இருப்பாள்.
பெண் ராசியில் அழகு காரக கிரகமான சந்திரபகவான் நின்றாலோ அல்லது இலக்கினத்தில் இருந்து மூன்று வீடுகளில் தொடர்ந்தாற்போல தொடர்ச்சியாக சுபகிரகங்கள் நின்றால் அந்த பெண் பேரழகுடையவளாக இருக்க வாய்ப்பு உண்டு.


          ஒரு ஆடவனின் சாதகத்தில் சந்திரபகவான் ஆனவர் களஸ்திரஸ்தானமான  ஏழாமாதிபதியாகவோ அல்லது ஏழாம் இடத்திலோ இருந்தால் அவனுக்கு வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளாக இருப்பாள்.

மாலையிட்ட கணவனின் உயிருக்கு ஆபத்து

              ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சுக்கிரபகவான்,சனிபகவான் மற்றும் செவ்வாய்பகவான் மூன்று கிரகங்களும் கூடி  நிற்க அந்த பெண்ணிற்கு கட்டிய கணவன் நிலைக்க மாட்டான்.உயிருக்கு ஆபத்து ஏற்படும்.


பரிகாரம்;


   
      
   சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடல்.
வெள்ளிகிழமை தோறும் வெள்ளிவிரதமிருந்து அம்பாளை வழிபடல் மற்றும் விநாயகருக்கு தீபய் ஏற்றுதல்.இவை கணவனின்  ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது.
திருமணத்திற்கு பிறகு அலைச்சலை தரும் பெண்:-
             ஒருவரது சாதகத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் களஸ்திரகாரகர் சுக்கிரபகவான் இம்மூவரும் இணைந்து லக்கனத்தில் இருந்தாலோ அல்லது சூரியனும்,சந்திரனும் லக்கனத்தில் இருந்து சுக்கிரன் மூன்றில் இருந்து சூரியன் பார்த்தாலோ அந்த சாதகர் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வேறு பல ஊர்களுக்கு அடிக்கடி இடம்பெயர்ந்து அலைச்சல் மற்றும் திரிச்சலை தரும் மற்றும் தரக்கூடிய சாதகமாகும்.

                                                               


காம சுகம் தர விரும்பாத மனைவி


            ஒருவருடைய சாதகத்தில் களஸ்திரஸ்தானாதிபதி ,களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் இவ்விரண்டும் ஒன்று கூடி ஆறில் மறைந்தால் காமசுகம் தர விரும்பாத மனைவி அமைவாள்.

             ஒருவரது சாதகத்தில் கேந்திரஸ்தானத்தில் ( 1,4,7,10 )
 சூரியன் +சுக்கிரன் இணைந்து இருந்துவிட்டால் அவர்கள் இல்லற வாழ்வில் இன்பம் அடைவதில்லை.
அல்லது ஏழாமிடத்தில் இருந்தால் இருவருக்கும் சண்டை வந்துகொண்டிருக்கும்.


                                                           


தாமத திருமணம்

         1). ஏழில் செவ்வாய் மற்றும் சனியை கொண்டவர்களுக்கு கால தாமத திருமணம்..

            2)     லக்கனம் அல்லது ராசிக்கு ஒன்று,இரணடு ,ஏழு மற்றும் எட்டாமிடத்தில் பாவகிரகங்கள் இடம்பெற்று
இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு பெற்றிருப்பின் தாமததிருமணம் நடைபெறும்.


            3).  களத்திரஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதி களத்திரஸ்தானங்களில் நின்றாலோ அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசம்,பகை மற்றும் பாவிகளோடு சேர்ந்திருந்தாலும் தாமத திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

           4). இரண்டு,எட்டில் ராகு ,கேது தொடர்பு பெறுவது
சந்திரனுக்கு ஏழில் அல்லது இரண்டில் சனிபகவான் இடம்பெறுவது
லக்கனம் மற்றும் ராசி மற்றும் ஏழாமிடத்தில் ராகு மற்றும் கேது தொடர்பு முதலியவை தாமத திருமணத்தை தரும்.


            5) குடும்பாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரபகவான் போன்றவை நீசம்,பகை ,அஸ்தமனம் பெறுவது போன்றவை.சுபர் இவர்களை பாராதிருப்பது.
இதுபோன்ற பல காரணங்கள் உள்ளது.
மேற்கண்ட காரணங்களினால் உண்டாகும் கால தாமத திருமணத்தினை போக்க சோதிடரின் ஆலோசனையை பெற்று பரிகாரத்தினை முடிவு செய்யவேண்டும்.

பரிகாரம்

             திருமண தடையை தவிர்க்க ராகு ,கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம,திருபாள்புரம்,பேரையூர் ,காளஹஸ்தி மற்றும் கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்கள் சென்று ராகுகாலங்களில் பாலபிஷேகம் செய்து வரல்.
திருமண தடையை போக்க பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபடல்.இதுபோல பல பரிகாரங்கள் உள்ளது.



(எந்த நாட்டில் நீங்கள்  இருந்தாலும் போன் வழியாக சாதகபலன்,திருமண பொருத்தம் ..போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை  ஆராய்ச்சி செய்து பலனை போன் வழியாக பெறலாம்.தங்களது
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை  கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம்.)


எனது வாட்ஸ்அப் எண்97 151 89 647


    செல்740 257 08 9997 151 89 647


                                                      


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

Friday 23 February 2018

கிரகங்கள் படுத்தும் பாடு

கிரகங்கள் படுத்தும் பாடு -(44)


                                                            
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

               மனித நலனில் கிரகங்களின் பங்கு என்ன என்பதை எல்லோருக்கும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தின் துணைகொண்டு தொடர்ந்து எழுதிவருகிறேன்.

             ஒரு மனிதனுக்கு கேது பகவான் லக்கனம் ,இரண்டாமிடம் மற்றும் ஐந்தாமிடங்களில் கேது பகவான் இருந்து குருவின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தாலோ அல்லது சந்திரனுடன் கேது பகவான் சேர்ந்திருந்தாலோ அல்லது சனிபகவான் மீது குருவின்  பார்வை விழுந்தாலோ அவர்கள் ஆன்மீகவாதிகளாக இருப்பர்.இவர்களுக்கு முன்னுணர்வு இருக்கும்.ஆனால் அதேநேரத்தில் லொளகீக வாழ்வில் சிறக்க மாட்டார்கள்.

                                                               

          வாக்கினில் குரு பகவான் பெற்றவர்கள் வாக்கு வன்மை  மிக்கவர்களாக இருப்பர்.அதேநேரத்தில் தனகாரகன் குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்வது "காரக பாவ நாஸ்தியை "உண்டுபண்ணி தனம் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.அதிலும் குரு பகவான் எந்த ஸ்தானத்திலும் தனித்து இல்லாமல் இருத்தல் நலம்."அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும"என்ற வகையில்  குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும் இருக்கும் இடத்திற்கு நல்லது செய்யாது.பார்க்கும் இடத்திற்குதான் நல்லது செய்யும்.

            "குரு பார்த்தால் கோடி நன்மை ".சாதக கட்டத்தில் உள்ள சகல தோஷங்களையும் நீக்கும் வல்லமை குரு பகவானுக்கு உண்டு."பானு கண்ட பனிபோல -குரு பகவான் பார்வை பட்டவர்கள் எல்லா தோஷங்களும் விலகி ஒரு மனிதனுக்கு பணம்,பட்டம்,பதவி,வேலைவாய்ப்பு,புத்திரபாக்கியம் மற்றும் கல்வி போன்ற அனைத்தையும் வாரி வழங்குவார்.

             இதேபோல குரு பகவான் ஐந்தில் இருப்பின் உயர்கல்வி,ஞானம் மற்றும் ஆன்மீக நாட்டம் இவற்றை வழங்கினாலும் குரு பகவான் புத்திரகாரகன்  ஆதலால் ஐந்தில் உள்ள குரு பகவான் காரக பாவ நாஸ்தியை வழங்கி குழந்தை பாக்கியத்தை தடை செய்வார்.

             சனி பகவான் இயற்கை பாவி எனினும் அவர் இருக்கும் இடத்திற்கு அதிகம் கெடுதல் செய்ய மாட்டார்.பார்க்கும் இடத்தை ஆட்டி படைப்பார்.ஒருவருக்கு மெய்ஞானத்தை வழங்குவதில் சனி பகவானின் பங்கு அலாதியானது.

                  ஒரு மனிதனுக்கு கோசாரா ரீதியாக சனி பகவான் சந்திரனுக்கு பணிரெண்டு,ராசி மற்றும் இரண்டாம் இடத்திற்கு வரும்போது ஒரு ராசிக்கு இரண்டரை வருடம் மொத்தம் ஏழரை வருடமும் விரய சனி,ஜென்ம சனி மற்றும் பாத சனி என்ற அடிப்படையிலும்,நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனி,ஏழாமிடத்தில் கண்ட சனி மற்றும் எட்டாமிடத்தில் அஷ்டம சனி எனும் அடிப்படையில் வந்து சாதகருக்கு பலவிதமான இன்னல்களை தந்து உறவுகள் என்றால் என்ன ? யார் உண்மையான நண்பர்கள் மற்றும் பல்வேறு மனிதர்களின் குணதிசயங்கள் போன்றவற்றை அறிய வைப்பதோடு வாழ்வு பற்றிய தெளிவான அனுபவத்தை வழங்கி அவனை தெளிவான ஞானமுள்ளவனாக சோதனைகள் மூலமாக  அறிய வைக்கிறது.

              .எனவே ஞானத்தை அனுபவ அடிப்படையில் மனித குலத்திற்கு அறிய வைப்பதில் சனி பகவான் நவகிரகங்களில் முக்கியமானவர் ஆவார்.எனவேதான் சனியை நாம் சனீஸ்வர பகவான் என அழைக்கிறோம்.

              ஆதலால் குரு பகவான் ஆனது நமக்கு கல்வியையும்,அறிவையும் தந்து அதன் மூலம் வாழ்வின் அம்சங்களை அறியவைக்கிறார்.ஆனால் சனி பகவான் வாழ்வில் சொல்ல முடியாத வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல கஷ்டங்களை தந்து அறியவைத்து வாழ்வில் ஞானத்தை புகட்டுவதில் நன்று.

                                                                     

            குருபகவான் ஆனவர் யோக மற்றும் ஞான நிலையை வழங்குவதில் வல்லவர்.இவர் தான் பெற்ற மற்றும் கற்ற ஞானத்தால் தம்மை வழிநடத்தி செல்கிறார்.இது ஒருவிதமான மேம்பட்ட நிலை ஆகும்.இவை எல்லோறுக்கும் வாய்ப்பதில்லை.அவ்வாறு குருவருள் பெற்றவர்கள் பாக்கியசாலிகளே.

          குருவருள் பெற்றவர்கள் நீதியின் வழியில் வழிநடத்தி செல்வார்கள்.இவர்கள் வேத,தததுவ மற்றும் சாஸ்த்திர உண்மைகளை குருவழியாக கற்று அதன்மூலம் ஞானம் பெற்று சிறந்த தத்துவவாதிகளாக ,ஆன்மீகவாதிகளாக மற்றும் போதகராக திகழ்வர்.இவர்கள் லொளகீக வாழ்வில் தாமரை இலையில் தண்ணீர்போல பற்றற்ற வாழ்வினை அதாவது ஞான வாழ்வினை மேற்கொள்வார்கள்.

            ஆனால் சனிபகவான் ஆனவர் "கர்மக்காரகன் " மற்றும் கர்மயோகி ஆவார்.இவர் தனது அன்றாட லொளகீக வாழ்வில் அடிபட்டு  அதன்மூலம் வாழ்வின் தத்துவார்த்தமான உண்மைகளை அறிந்துகொள்ள செய்வார்..இவர் சாதரண மனிதனையும் இவர் தரும் பலவிதமான இன்னல்கள்கள் மூலமாக ஒருவரை வாழ்வின் உண்மைநிலையை அறிய வைப்பர்.

           இவர் லொளகீக வாழ்வில் அதிக ஆசைபெற்று அதன் வழியாக செல்வம் ஈட்டி உறவுகளோடு வாழ்ந்துகொண்டே வாழ்வின் அர்த்தத்தை உணர்வார்கள்.இவர்கள் தான் பெற்ற அனுபவத்தாலே ஞானமடைந்தவர்கள்.உயர்ந்த கல்வியறிவோ அல்லது கேள்வியறிவோ பெற்றிருக்க மாட்டார்கள்.சாதரனமாக வாழ்ந்துகொண்டு வாழ்வின் உண்மைநிலையை அனுபவத்தின் மூலம் பெறுவர்.

நன்றி.தொடர்ந்து அடுத்த பதிவில் சந்திப்போம்.

(தங்களது குடும்ப உறுப்பினர்களின் சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

                                                                              

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராயாசியாளர்.
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி.


செல் ; 97 151 89 647
                740 257 08 99

வாட்ஸ்அப் : 97 151 89 647


My Email
masterastroravi@gmail.com

My Website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
*@@@@@@@@@@@@@@@@@@@@*

,

Tuesday 20 February 2018

சாதக அடிப்படையில் நல்ல உறவும்,நட்பும் அமைவது எப்படி ?

சாதக அடிப்படையில் நல்ல உறவும்,நட்பும் அமைவது  எப்படி ?


                         

கிரகங்கள் படுத்தும் பாடு -(43)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

        நாம் அன்றாட வாழ்வில் வேலை பார்க்கும் இடத்திலும் ,படித்த நண்பர்களுடனும்,முதலாளிகளுடனும் ..இப்படியாக பல நபர்களுடன் பழக வேண்டியிருக்கும்.பழகும் அனைத்து நபர்களிடமும் ஒருவித ஈர்ப்பு நிலை வந்துவிடுவதில்லை.

          சிலநேரங்களில் வேறுவழியில்லாமல் பணி நிமித்தம் காரணமாக அவர்களை பிடிக்காவிட்டாலும் அவர்களிடம் மனரீதியாக ஒட்டாமல் வேலை பார்க்கவேண்டியிருக்கும்.

          ஒரு சிலரிடம் எவ்வளவுதான் அன்பாக பழகி நல்லது செய்தாலும் அவர்கள் நம்மிடம்  உள்ள பொறாமை காரணமாக நம்மிடம் நேரடியாக  சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் நமக்கு எதிராகவே செயல்படுவார்கள்.

       பலரிடம் பல ஆண்டு பழகியும் மனதை கவராதவராகவே இருப்பர்.ஒரு சிலரை பார்த்த மற்றும் பழகிய சில மணி நேரங்களில் நம் உள்ளத்தை கவர்ந்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டு கடைசிவரை இணைபிரியாத நண்பர்களாக இருப்பதை பார்க்கிறோம்.

                                   

         ஏன் இவ்வாறு ஏற்படுகிறது ?/ எனில் "கோள்கள் நடத்தும் கோளாட்டமே" காரணம் ஆகும்.ஒவ்வொறு கிரகத்திற்கும் ஒரு அதிர்வெண் உண்டு.

        ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.அந்த அலைவரிசையை கண்டறிநது புரோகிராம் செய்து ஆக்டிவேட் செய்ய ரிமோட் வழியாக ஒரு எண்ணிற்கு ஒரு சேனல் என்ற வகையில் நாம் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடிகிறது.

         அதேபோல நமது லக்கனம் மற்றும் ராசியின் அதிபதிகளுக்கு ஏற்ப நாம் ஒருவித அதிர்வெண்களை பெற்றுவிடுகிறோம்.இவை இயல்பு அதிர்வுகள் ஆகும்.இந்த இரண்டு இயல்பு அதிர்வுகளை முடுக்கி ஆக்டிவேட் செய்யும் பணியை நமது மூளையானது ஒரு ரிமோட் போல செயல்பட்டு  நட்பு கிரகங்களை அதிபதியாக பெற்ற இருவர் சந்திக்கும்போது ஒத்ததிர்வு ஏற்பட்டு அவர்களுக்குள் நட்பும்,காதலும் பலப்படுகிறது.ஒனறுக்கு ஒன்று ஜென்ம பகை பெற்ற கிரகங்களை பெற்றவர்கள் சந்திக்கும்போது என்னதான் ஒட்டியே இருந்தாலும் ஒத்ததிர்வு ஏற்பட வாய்ப்பில்லை.

        சில நேரங்களில் முகத்திற்கு முகம் சந்திக்காமல் முகநூல் நட்பு  தாம் கொண்ட கருத்தின் அடிப்படையில் நட்பு ஏற்படுவதற்கும் ,பகைமை ,பொறாமை,
வயதிலும் ,அனுபவத்திலும் சிறியவனாக இருந்தாலும் நல்ல கருத்துக்கள் பகிர்ந்தாலும் அதை வெளிபடையாக பாராட்டும் தன்மை ஏற்படாமை உண்டாகுவதற்கும் அவர்களது லக்கனம் மற்றும் ராசியோடு தொடர்பு உண்டாகியிருக்கும் அனைத்து கிரக கதிர்வீச்சே காரணம் ஆகும்."காரணமின்றி காரியமில்லை".இந்த காரணத்தையும்,காரியத்தையும் ஜெனனகால கிரகங்கள் வழியாக திருவிளையாடல் புரிபவன் இறைவன்.

                             

        பார்த்தால்  பசு போல இருந்துகொண்டு படுபாதாள விஷயங்களை  செய்வதற்கும்,
பார்க்க ரொளடிபோல இருந்தாலும் நன்மைகள் பல செய்ய வைப்பதும் கிரக கதிரின் தாக்கமே.

       உதாரணமாக மீனம் மற்றும் மேஷ ராசி இருவரையும் எடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் நண்பர்களாகவோ அல்லது முதலாளி,தொழிலாளியாகவோ அல்லது தம்பதிகளாகவோ இருந்தாலும் அவர்களிடம் ஒருவித ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
         காரணம் மீனத்தின் அதிபதி குரு பகவான் தனது ராசிக்கு பெருந்தான்மை,எளிமை,
விட்டுகொடுக்கும் தன்மை,ஞானம்.......இதுபோன்றவற்றை சாதகருக்கு வழங்கியிருக்கும்.

      இதேபோல மேஷத்தின் அதிபதி செவ்வாய் பகவான் இதற்கு நேர்மாறாக ஆடம்பரம்,வீம்பு,விட்டுக்கொடுக்காத தன்மை மற்றும் போர்க்குணம்......இதுபோன்ற தன்மைகளை வழங்கியிருக்கும்.

        எனவே இவர்களிடம் நட்போ அல்லது உறவோ ஏற்படவாய்ப்பில்லை.மீறி ஊழ்வினைப்பயனால் ஏற்பட்டாலும் உறவு இனிக்காது.

        இதேபோல "சிம்மம் ராசி மற்றும் கும்ப ராசி இவர்கள் இடையே ஏற்படும் எவ்வித தொடர்பும் அன்பாக இருப்பதில்லை.

     காரணம் சூரிய பகவானும் அவரது மைந்தனான சனிபகவானும் பகை பெற்றுவிடுவதால் ஆகும்.

        சாதக கட்டத்தில் கூட சனியும்,சூரியனும் சமசப்தமாகவோ அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு ஏற்படும்போது தந்தை மற்றும் மகன் உறவு அன்போடும்,ஆதரவாகவும் அமைவதில்லை.

        என்ன செய்வது விதிப்பயனை நாம் ஏற்று அனுபவித்துதான் ஆகவேண்டும்.

         எனவே நல்ல உறவும்,நட்பும் அமைவதும் கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்."பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் "எனும் கருத்துப்படி நல்ல சோதிடரை நாடி தனது கிரகங்களின் பாடறிந்து வாழ்க்கை துணையையோ அல்லது தொழில் பங்குதாரர்களையோ அமைத்துக்கொண்டு மகிழ்சியாக வாழுங்கள்.

  நன்றி,நன்றி,நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                              

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி சோதிட நிலையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blogspot
  AstroRavichandransevvai.blogspot.com


சாதகத்தில் நடக்கும் திசையானது நல்லது செய்யுமா ? கெடுதல் செய்யுமா ?

சாதகத்தில் நடக்கும் 

திசையானது நல்லது 

செய்யுமா ? கெடுதல் செய்யுமா ?


                         

கிரகங்கள்  படுத்தும் பாடு -(42 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

        மனிதனுக்கு ஒரு திசையானது நல்லது செய்யுமா ? அல்லது கெடுததல் செய்யுமா ? என்பதை லக்கனம் மற்றும் ராசி இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

         லக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்களுக்கு லக்கனத்திற்கு கெட்ட ஸ்தானம் வாங்கிய ஒரு கிரகம் ராசிக்கு சுபராக வந்தால் லக்கனத்தின் அடிப்படையில் வரும் கெடுதல் பலனை ,ராசிப்படி வரும் சுபர் ஸ்தானம் குறைக்க வாய்ப்பு ஏற்படும்.

         உதாரணமாக துலாம் லக்கம்,விருட்சக ராசியை ஒருவர் பெற்றிருப்பாராயின் லக்கனப்படி மூன்று மற்றும் ஆறாம் ஸ்தானம் வாங்கிய குரு பகவான் திசை நடக்கிறது எனில் அவர் ருண ரோகம்  மற்றும் கடன் தொல்லைகளை தர வேண்டிய ஸ்தானதிபதியாக குரு இருந்தாலும் ராசிக்கு குரு பகவான் தனம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதோடு ராசிக்கு யோகராகவும் இருப்பதால் லக்கனப்படி தரவேண்டிய தொல்லைகள் குறைந்துபோகும் வாய்ப்பு உண்டாகும்.

         அதேநேரத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக இருந்தால் இரண்டிற்கும் ஒரே ஸ்தானமாக ஆகிவிடுவதால் நல்லது என்றால் மிகுதியான நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் தீயது என்றாலும்  மிகுதியாகவே தீங்கு நடக்கும்.

            உதாரணமாக மீன லக்கனம் மற்றும் மீன ராசியை எடுத்துக்கொண்டால் இரண்டிற்கும் சூரிய திசை ஆறாம் அதிபதி திசையாக வருவதால் அதன் திசை காலத்தில்  தொல்லைகள் அதிகம் நடக்க வைப்பு உண்டு.

                            

          ஆதலால் பொதுவாக லக்கனமும் மற்றும் ராசியும் வெவ்வேறாக இருப்பது நல்லது.

        இதேபோல உபய ராசியைவிட சர மற்றும் ஸ்திர ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு ஸ்தானம் கேந்திரமாக இருந்தாலும் மற்றொரு ஸ்தானமும் கேந்திரமாக இருக்க வாய்ப்பில்லை.அதாவது அவை மறைவு ஸ்தனமாகவோ அல்லது திரிகோணமாக இருக்க வாய்ப்புண்டு.எனவே  கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை.

        அதே பாதகாதிபதியாக வந்தாலும் அவை இரண்டு ஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால் ஒரு ஸ்தானம் பாதகாதி ஆதிபத்தியம் பெற்றாலும் மற்றொரு ஸ்தான பலனால் நன்மை நடக்க வாய்ப்புண்டு.

        உதாரணமாக மேஷ ராசிக்கு இவை சர ராசியாக இருப்பதால் பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி சனி பகவான் ஆவார்.அதேநேரத்தில் சனிபகவான் பத்தாம் அதிபதியாகவும் வருவதால் இவை பாதகம் செய்தாலும் பத்தாம் ஆதிபத்திய நன்மையையும் செய்யும்.

                                

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc, MA, BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்.
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்ச்சி மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

                   செல் 

             97 151 89 647
              740 257 08 99

வாட்ஸ்அப் எண்

  97 151 89 647

(தங்களது சாதகங்களை ஆய்வுநோக்கில் பார்த்து பலன்பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு .தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை தெரிந்து கொள்ளவும்.நன்றி )

Saturday 17 February 2018

திருமண யோகம் தள்ளிக்கொண்டே போகிறதா ? என்ன பரிகாரம்..

திருமண யோகம் தள்ளிக்கொண்டே போகிறதா ? என்ன பரிகாரம்.


                           

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 192 )

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

    ஒரு சிலருக்கு அழகு, அறிவு மற்றும் அந்தஸ்து எல்லாம் நிரம்ப பெற்றிருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறதே என வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மன வேதனையில் இருக்கும் பெற்றோர்களுக்கு பயன்படும் வகையினில் அடிப்படை சோதிட அறிவு இல்லாதவர்கள் கூட பயன்படும் வகையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

     ஒரு சாதகருக்கு திருமணம் தொடர்பான ஆராய்ச்சிக்கு சோதிடர்கள் ஆராய்ந்து பார்க்கின்ற இடம் சாதகத்தில் லக்கனம் எனும் ஒன்றாம் இடம்,குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் இரண்டாமிடம் ,களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய இடங்களை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.

      இவ்வாறு ஆராய்ந்து பார்க்கின்றபொழுது விதி எனப்படும் லக்கனம் இவற்றினை முதலாக கொண்டு  ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும்.விதி கெட்டால் மதி என அழைக்கப்படும் சந்திரனை லக்கனமாக கொண்டு 1,2,7,8 போன்ற இடங்களை ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும். இவ்விரு வகையிலும் 1,2,7,8 ஆம் இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற பட்சத்தில் கதி என அழைக்கப்படும் சூரியனை லக்கனமாக கொண்டு ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும் என்பார்கள்.ஆனால் திருமண அடிப்படையிலான ஆராய்ச்சிக்கு ஒரு விதிவிலக்கு என்னவெனில்  களத்திர காரகர் என அழைக்கப்படும் சுக்கிரன் இருக்கும் இடத்தினை லக்கனமாக கொண்டு 1,2,7,8 ஆம் இடங்களை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.

     இம்மூவகையான ஆராய்சியிலும் ஒரு சாதகர் பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவு.ஒரு சில விதிவிலக்காக குறைவான சதவீதத்தினர் இம்மூன்று வகையிலும் பாதிக்கப்பட்டு இருப்பர்.இதுபோன்ற அமைப்பு சாதகத்தில் இருப்பின் அது அவருக்கு திருமணயோகம் அற்றவராக திகழ்வர்
இம்மூவகையான ஆராய்ச்சியில் ஏதேனும் ஒரு கோண ஆராய்ச்சியில் பாதிக்கப்படாமல் இருப்பின் உரிய சோதிட பரிகாரம் செய்து திருமணம் செய்து கொள்ளலாம்.

                             

திருமணயோகத்தினை பாதிக்கப்படக்கூடிய அம்சங்களும் அதற்குரிய பரிகாரமுறைகளும் :-

             1) லக்கனம், ராசி மற்றும் களத்திரகாரகர் சுக்கிரன் இம்மூன்று ஸ்தானங்களுடன் அரவுகளான ராகு அல்லது சேர்க்கை கொள்ளும்போது களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் கேது அல்லது ராகு இடம்பெறும் என்பதால் அது களத்திரம் அமைவதில் தடையை தரக்கூடிய களத்திர தோஷத்தினை தருகிறது.

            மேற்கண்ட வகையில் "களத்திர தோஷத்தினை " பெற்றவர்கள் லக்கனாதிபதியும்,களத்திர ஸ்தானாதிபதியும் பலம்பெற்ற நிலையிலோ அல்லது சுபகோளின் பார்வை களத்திர ஸ்தானத்தில் விழுவதன் மூலம் அதிக பாதிப்பினை தராது என்ற வகையில் பயப்பட தேவையில்லை.

           மாறாக லக்கனம் மற்றும் களத்திரஸ்தானம் இவ்விரண்டும் பலமிழந்த சூழலில் ராகு,கேது சேர்க்கை கடுமையான களத்திர தோஷம் ஆகும். திருமணம் அமைவதில் தடையினை உண்டாக்கும்.இதுபோன்ற அமைப்பினை பெற்றவர்கள் கட்டாயம் உகந்த பரிகார வழிபாட்டினை செய்வதன் மூலம் திருமண தடையை தவிர்க்கலாம்.

               2)  இதேபோல லக்கனம், ராசி மற்றும் சுக்கிரன் இருக்கும் இடம் ஆகிய மூன்று வகையிலும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இடம்பெற்றவர்களுக்கு மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அல்லது ராகு இடம்பெறுவதால் குடும்பத்தில் வீண் வம்பு ,வழக்குகள்,குடும்பதோஷம் மற்றும் மங்கல்ய தோஷத்தினை உண்டு பண்ணுகிறது .

              இதற்கு குடும்பாதிபதி எனப்படும் இரண்டாம் இட அதிபதி,மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இட அதிபதி பலமிழக்காமல் இருந்தாலோ அல்லது இவ்விரு ஸ்தானங்களை சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ இவ்வித மாங்கல்ய தோஷம் கண்டு பயப்பட தேவையில்லை.

             மாறாக 2,8 ஸ்தான அதிபதிகளும் பலம் இழந்த சூழலில் ஆன்மீக பரிகாரங்கள் மூலமாகதான் விடுபட இயலும்.இந்த  ஜோதிட பரிகாரா பூஜைகள் முழு நம்பிக்கை உடன் செய்யும் பட்சத்தில்தான் முழுப்பலனை பெற முடியும்.

                            

              மேற்கண்ட வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போவதை காணலாம்.திருமண தடை விலக செய்யவேண்டிய பரிகாரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

  1)   திருக்கண்டியூர் கோவில் ;-

               தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு - Thiruvaiyaru வட்டத்தில் கண்டீயூர் உள்ளது. இது தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ திருவையாறுலிருந்து 3 கி.மீ  ஆகும். அங்கு சென்று அங்கு அமைந்து அருள்ளபாலிக்கும் பிரம்மாவினை வழிபடுவதன் மூலம் திருமண தடை விலகும்.

              2) திருச்சி அருகே சுமார் 12 கி.மீ தொலைவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியில்  திருப்பைஞ்ஞீலி  சென்று அங்கு உள்ள ஸ்ரீ லிவனேஸ்வர்-விசாலாட்சி அம்பாளை  தெய்வ வழிபாடு செய்ய திருமண தடை அகன்று திருமணம் நடைபெறும்.

                   3) தஞ்சாவூர் மாவட்டம்   கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில்  6 கி.மீ தொலைவில்  திருநாகேஸ்வரம் எனும்
ராகு ஸ்தலம் உள்ளது அங்கு  இடம்பெற்றிருக்கும் நாகநாத சுவாமியை ராகு காலத்தில் வழிபட திருமண தடை விலகும்.

                           

             புதுக்கோட்டை மாவட்டத்தில்  திருமயம் வட்டத்தில் உள்ள பேரையூரில் இருந்து அருள்பாலிக்கும் நாகநாத சுவாமி மற்றும் Chennai சென்னை அருகில் உள்ள காளஹஸ்தி போன்ற ராகு ஸ்தலங்களுக்கு சனிக்கிழமை காலை 9--10.30 ராகு காலத்தில் வெள்ளியால் அடித்து செய்யப்பட்ட நாகபடம் செய்து வைத்து பூஜை செய்து பாலாபிஷேக அபிஷேகம் செய்யவும்.
ராகு காலத்தில் சனிக்கிழமை 9-10.30 மணியளவில்  பதினொரு வாரம் துர்கை அம்மன் கோவில் சென்று வழிபட்டு பதினொறாவது வாரத்தில்  மஞ்சள், பூ, தாலிகயிறு ,வெற்றிலைபாக்கு ,
பழவகைகள் ,முழுத்தேங்காய் போன்றவற்றைஸ்ரீ  துர்கை அம்பாள் முன் வைத்து  சர்க்கரை பொங்கல் இட்டு வழிபாடு செய்து இயன்ற அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்ய அம்மன் அருளால் திருமண தடை விலகும்.

              இதேபோல பஞ்சமி திதி ராகு காலத்தில் புற்றுள்ள ஶ்ரீ அம்மன்  ஆலயம் சென்று புற்றுக்கு பால் ஊற்றி வைத்து அம்மன் முன்பாக தமது நட்சத்திரம் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து விட்டு வெளியில் வரும்போது விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டு உளுந்த வடை சாத்த திருமண தடை விலகும்.

         பைரவர் வழிபாடு


                            
             ஞாயிறு கிழமை ராகு காலமான மாலை 4.30 -6.00 மணி அளவில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய சர்வதோஷ நிவாரணம் உண்டாகும்.மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட கம்பியில் உளுந்தவடை கோர்த்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

      திருவாதிரை வழிபாடு

                            
         ஒவ்வொரு மாதமும வரக்கூடிய் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் கலந்துகொண்டு பூஜை செய்து வர தோஷம் அகலும்.இதேபோல திருவாதிரை நட்சத்திரம் அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்ற வழிபடலாம்.திருச்சி சீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் வழிபாடு செய்யலாம்.

       குரு வார விரதம்

                                   
              வியாழக்கிழமை வரும் ராகு காலத்தில் பகல் மணி 1.30-3.00 மணி அளவில் துர்கை அம்மனுக்கு சந்தனகாப்பு செய்து மஞ்சள் நிற புடவை சாற்றி அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல் இட்டு வர கடுமையான தோஷம் விலகும்.திருமண தடை நீங்கும்,சகல சுபிட்ஷங்களும் உண்டாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக திருமண தடை அகல கரூர் அருகில் உள்ள தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராம கோவில் சென்று வெள்ளிக்கிழமை தினத்தில் நெய் தீபம் இட்டு,துளசி மாலை சாத்தி இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்திலும் கலந்துகொள்ள திருமண தடை அகலும்.

  நன்றி,நன்றி,நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

வாட்ஸ்அப்
97 151 89 647

  செல்
   740 257 08 99
     97 151 89 647

                                 
  அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
  masterastroravi@gmail.com
My blogspot click here
AstroRavichandransevvai.blogspot.com
........................................................................

Friday 9 February 2018

உங்களது சாதகத்தில் புதன் செய்யும் அதிகாரம் என்ன ?

உங்களது சாதகத்தில் புதன் செய்யும் அதிகாரம் என்ன ?

                           

       கிரகங்கள் படுத்தும் பாடு - (38 )


ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளாசியுடன்

        கிரகங்கள் மனித வாழ்வில் மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் அதற்கான காரணங்களையும் அறிவியல் வழியில் நின்று ஆராய்து அதற்கு விடைகாணும் தொடர்பதிவு.
இப்பதிவில் கணிதவல்லோன் என அழைக்கப்படும் புதன் பகவானை பற்றி யான் அறிந்த தகவல்களை இப்பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

            "கற்றது கை மண்ணளவு
                  கல்லாதது உலகளவு "
         ஒரு மனிதன் சாதகத்தில் புதன் பகவான் பலப்பட்டிருந்தாலே போதும் அவன் எப்படியாவது தான் கற்ற கல்வியாலும் அல்லது பெற்ற வித்தையாலும் பிழைத்துக்கொள்வான்.
கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூறியிருப்பார்.

              "ஒருவன் கணிதத்தில் சிறந்த விளங்கினாலே போதும் அவன் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான்." -என்பார்.

                              
                 எனவே "ஒருவரது சாதகத்தில் புதன் பலம் பெற்றிருந்தால் அவன் கணிதத்தில் சிறந்து விளங்குவான்.சிக்கலான கணிதங்களையும்,பிரச்சினைகளையும் தீர்வு காண்பதில் வல்லவனாக்கிவிடும்.
சில மறைபொருளான சூட்சுமங்களை அறியும் திறன் பெற்றிருப்பதால் ஒருவனை சிறந்த ஞானமுள்ள சோதிடராக மாற்றுவதில் புதன் பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

              புதன் பகவான பலம் பெற்று வாக்கு ஸ்தான தொடர்பு பெற்று உச்சம் ,ஆட்சி ,திரிகோணம் போன்ற பலம்பெறும் போது புகழ்பெற்ற சோதிடராக்கிவிடும்.

            ஒரு உயிரியின் அடிப்படை அலகு செல் ஆகும்.இந்த செல்லின் உட்கருவில் உள்ள "ஜீன்கள்"தான் மரபு பண்புகளுக்கு காரணம்.இந்த ஜீன்கள் தாயின் அண்ட செல்லும்,தந்தையின் விந்து செல் இரண்டாம் அவர்கள் மேற்கொள்ளும் கலவியின் மூலம் இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது.இந்த கருவுற்ற முட்டைக்கு "சைகோட்"என்று பெயர்.

           இந்த சைகோட்டில் ஜீன்களின் மூலம் ஒருவரின் உடல்வாகு, புத்திசாலித்தனம் ,படைப்பாற்றல் மற்றும் நுண்ணறிவு போன்றவை பொதிக்கப்பட்டுள்ளது.இந்த ஜீன்கள் எனப்படும் மரபு பொருளை ஆளுமை செய்வதில் புதன் பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

                          


           தலைசிறந்த ஆடிட்டர்,புள்ளியல் வல்லுணர்கள்,வங்கி ஊழியர்கள்,கணிதப்போராசிரியர்கள்,அறிவியல் விஞ்ஞானிகள்,சோதிடர்கள் போன்றவர்களை தொழில் ஸ்தானத்தில் பலம்பெற்ற புதன் பகவான் உருவாக்குகிறார்.

          ஒருவர் எழுத்து துறையில் சிறந்து விளங்கவும்,புகழ்பெற்ற எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அளிப்பதில் புதன் பகவானின் பங்கு அளப்பறியது.இப்புதன் பகவானை சந்திரன் பார்க்க ஒருவரை வேடிக்கையாகவும்,சாதுர்யமாகவும் பேசவும்,எழுதவும் செய்கிறது.

        புதன் பகவான் ஒருவரை புகழ் பெற்ற பாடல் ஆசிரியராக மாற்றுகிறது.புதன் பகவான் செவ்வாய்,ராகு சாரம் வாங்க காமம் ததும்பும் பாடல்களை எழுத செய்துவிடுகிறது.குரு ,கேது சாரம் வாங்க பக்தி பாடல்களை எழுதவைக்கிறது.

         ஒருவர் நுண்ணிய விஷயங்களை படிக்காமலே ஒருவர் செய்வதை ஒரு முறை பார்த்தவுடனே எளிதில் கற்றுக்கொள்ளும் படிக்காத மேதையாக்குவதிலும் புதன் பகவானின் பங்கு பாராட்டக்கூடியது.

           ஆம் ஒருவர் படிக்காமலே தொலைக்காட்சி,வானொலி,ரெப்ரிஜிரேட்டர்,அலைபேசி  எலக்ட்ரீசியன்...போன்றவற்றை கற்றுக்கொண்டு அத்தொழில் புகழடைய புதன் பகவானே காரணமாதலால் இதனை வித்தைக்கு அதிபதி எனவும் அழைக்கப்படுகிறது.

                           


           புதன் பகவான் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் ஒன்று.இக்கோள் சூரியன் இருக்கும் ராசிக்கு ஒரு ராசி முன்பின் இருக்கும்.இவை சூரியனுடன் சேர்ந்து அஸ்தம் பெறாத நிலையில் "புத ஆதித்ய யோகம்"எனும் சரஸ்வதியோகத்தை தருகிறது.இவை  இரண்டும் சேர்ந்து எட்டு,நான்கு மற்றும் ஒன்றில் இணைத அரசாளும் யோகத்தை அளிக்கிறது.

            ஒருவருடைய மாமன் வர்க்கத்தினரை பற்றி அறிய  புதன் பகவான் அவசியமாகும்.

           ஒருவருடைய நரம்பு சம்பந்தமாக அறிந்து கொள்ளவும் புதன் பகவான் அவசியம்.

            புதன் பகவானை நீசம்,அஸ்தமனம் ,மறைவு மற்றும் பகையாக பெற்றவர்கள் புத்திசாலித்தனம்,நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல் தன்மை குறைந்து சோம்பேறிதனமிக்கவராக்கி
விடுகிறது.

இதுபோன்ற புதன் பகவானை பலவீனமாக பெற்றவர்கள் தினம்தோறும் புதன் சுலோக் சொல்லுதல்,விஷ்ணு வழிபாடு மற்றும் சரஸ்வதி வழிபாடு செய்தல் நலம்.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                        


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.sc,MA,BEd.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம் சக்தி சோதிட நிலையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

         வாட்ஸ்அப்
  97 151 89 647

செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99.

email; masterastroravi@gmail.com

My blogspot
 AstroRavichandransevvai.blogspot.com

Monday 5 February 2018

சாதக அடிப்படையில் அடிக்கடி தன்னை குழப்பிக்கொண்டு கஷ்டப்படுபவர் யார் ?

சாதக அடிப்படையில் அடிக்கடி தன்னை குழப்பி கொண்டு கஷ்டப்படுபவர் யார் ?


                                        

       கிரகங்கள் படுத்தும் பாடு--( 191 )

செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

           "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " என்பார்கள்.மனமே மனிதனை வழி நடத்தும் மந்திரக்கோல் ஆவார்.ஆகவேதான் "மனசே நம்மை திறக்கும் மந்திர சாவி எனலாம்.

          ஒரு மனிதனுக்குள் புதைந்திருக்கும் அற்புத புதையலை வெளிக்கொண்டு வரும் அற்புத சக்தி மனமே ஆகும்.எனவேதான் பெரியோர்கள்                   " மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்றார்கள்.மார்க்கம் என்பது வழி ஆகும்.

          மனதிதில் இருந்து உதிக்கும் எண்ணங்கள் ஒருவரது வாழ்வினை  வழிநடத்தி செல்கிறது.மனதின் குழந்தையே எண்ணங்கள் ஆகும்.ஒருவர் தனியாக இருந்தாலும் பலவித எண்ணங்கள் அவனது மனதில் தோன்றி அலக்கழிக்கிறது.மனமானது சில நேரங்களில் துள்ளி குதிக்கிறது.சில நேரங்களில் எவ்வித காரணம் இன்றி கவலை கொள்கிறது.

         மனமானது தன்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகளை எண்ணியே கவலை கொள்கிறது.

      மனமானது எப்பொழுதும் இறந்த காலத்தில் நடந்த கஷட,நஷடங்களையும்,அவமானம்,
தோல்விகளை எண்ணி வருத்தம் கொள்கிறது அல்லது எதிர்கால திட்டங்களை எண்ணி கவலை கொள்கிறது.மனமானது நிகழ்காலத்தில் நிற்பதற்க்கு மாறாக அது ஊசலாடிக்கொண்டிருக்கிறது.


                         

      ஒரு நேரத்தில் மனமானது தன்னை ஒரு வெற்றி வீரனாக எண்ணி மகிழ்கிறது.பல நேரங்களில் தனது குறைகளை தோல்வி அடைபவனாக எண்ணி கவலை கொள்கிறது.

     மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒன்றுக்கு ஒன்று  தொடர்பு இன்றி சிலந்தி வலை போல பிண்ணிக்கொள்கிறது.இந்த எண்ணங்களில் (thought ) இரு வகை உண்டு.

அவையாவன
1) நேர்மறை எண்ணங்கள்
  ( Positive Thoughts.)

2) எதிர்மறை எண்ணங்கள்
      (Negative thoughts )

          நேர்மறை எண்ணங்கள் நேர்மறையான வாழ்வினை தரும்.(positive thoughts give us positive life ).

      ஒருவரது சாதகத்தில் ஒருவரது மனநிலையினை அறிந்துகொள்ள அவரது சாதகத்தில் மனநிலைக்காரகன் சந்திர பகவானை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.சந்திரபகவான் இயற்கை சுபரா ? இயற்கை பாவரா ? என எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதனை முதலில் விளக்குகிறேன்.

                          

        வளர்பிறை சந்திரன் இயற்கை சுபராக செயல்படுகிறார்.ஆத்மாகாரகன் சூரிய பகவானும் ,மனநிலைக்காரகன் சந்திரபகவானும் ( 0 to 30 degree) ஒரே ராசியில் இருக்கின்ற காலத்தினை அமாவாசை காலமாகும்.இந்த அமாவாசை காலத்திலிருந்து அதாவது சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் வரும்போது பொளர்ணமி ஆகும்.இந்த அமாவாசையிலிருந்து பொளர்ணமி காலத்தில் பிறப்பவர்கள் வளர்பிறை சந்திரனை பெற்றிருப்பார்கள்.

       வளர்பிறை சந்திரனில் பிறந்தவர்கள் இயற்கை சுபராக இருப்பதால் சாதகரது சாதக கட்டத்தில் சந்திரபகவான் பலம்பெற்று நிற்கும்போது  நல்ல மனநிலை மிக்கவர்களாக திகழ்வார்கள்.திடமான முடிவு எடுப்பவர்களாகவும் ,அடிக்கடி ஏதாவது ஒன்றை எண்ணி தன்னை குழப்பிக்கொள்ளாமாலும் திகழ்வர்.

        இதேபோல பொளர்ணமிலிருந்து அமாவாசை வரை பிறப்பவர்கள் தேய்பிறை சந்திரன் ஆவார்.இவை இயற்கை பாவராக செயல்படுகிறது.

            தேய்பிறை சந்திரனை பெற்றவர்கள் அவரது மனநிலையில் ஒருவித பாதிப்பு மிக்கவர்களாக திகழ்வர்.திடமான முடிவு எடுக்க தயங்குபவர்களாக இருப்பர்.

        ஒருவரது மனநிலையினை கணிக்க அவரது கட்டத்தில் உள்ள சந்திரபகவான் வளர்பிறை சந்தினா ? தேய்பிறை சந்திரனா ? என கண்டறிந்து அவரது மனநிலையினை கணிக்கலாம் 
என்றாலும் சாதக கட்டத்தில் அதன் ஸ்தான வலு மற்றும் சந்திரனை பார்க்கின்ற அல்லது இணைகின்ற மற்றும் சந்திரபகவான் வாங்கிய நட்சத்திர சாரம் இவைகளை கொண்டே துல்லியமாக ஒருவரது மனநிலையினை கணிக்க இயலும்.

                          

        பொதுவாக ஒருவரது சாதக கட்டத்தில் சந்திரபகவான் உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் மற்றும் நட்பு நிலையில் இருந்து பாவரான சனி,ராகு சேர்க்கையோ,பார்வையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ அற்று வளர்பிறை சந்திரனை தனது சாதக கட்டத்தில் பெற்றிருப்பவர்கள் உறுதியான மனநிலையை பெற்று புத்திகூர்மையாக முடிவினை எடுத்து தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்று சாதனையாளர்கள் ஆக திகழ்வார்கள்.இதுபோன்ற அமைப்பினை பெற்றவர்கள் எதிலும் நேர்மறை எண்ணங்கள் உடையவராக திகழ்வர்.

     மாறாக சந்திரபகவான் நீசம்,பகை பெற்றோ அல்லது ஆறு,எட்டு போன்ற மறைவிடங்களில் நின்றிருந்தாலோ அல்லது சந்திரன் உடன் பாவிகளான சனி,ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் பாவிகளான சனி,ராகு சாரம் பெற்றிருந்தாலோ சாதகர் ஆனவர் திடமான முடிவு எடுக்க முடியாமல் அடிக்கடி தன்னை குழப்பிக்கொண்டு தன்னம்பிக்கை அற்றவராக திகழ்வர்.மேற்கண்ட ஏதாவது ஒரு அமைப்பினை பெற்று தேய்பிறை சந்திரனை பெற்றவர்கள் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களை கொண்டவராக திகழ்வார்.

         சந்திரபகவான் பலமிழந்த அமைப்பை பெற்றவர்கள் திங்களூர் சென்று சந்திரபகவானை வழிபட்டு வரவும்.பொளர்ணமி காலங்களில் சிவ ஆலயங்களில் கிரிவலம் வநது உமையவளை ஒரு பாகமாக கொண்டவனை வழிபாடு செய்யவும்.
மனநிலையினை ஒருமுகப்படுத்தக்கூடிய தியானம்,யோக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் பொன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ்அப்
  97 151 89 647

   செல்
  740 257 08 99
     97 151 89 647
    
                       

  அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
தறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.