Wednesday 30 May 2018

பூர்வீக சொத்து-சாதக அடிப்படையில் ஓர் பார்வை

பூர்வீக சொத்து-சாதக அடிப்படையில் ஓர் பார்வை.


                                   
கிரகங்கள் படுத்தும் பாடு--( 215 )

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

                 என்னிடம்  சாதகம் பார்க்க வரும் வெகு சிலர் பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிக்கலாமா ? என்றும்,பூர்வீக சொத்தால் பலன் உண்டா ? என்றும்,ஒரு சிலர் எனது பூர்வீக சொத்து வழக்கில் உள்ளது வெற்றி பெறுவேனா ? என்றும்,பூர்வீக சொத்து என்பது தந்தை தேடிய சொத்தா அல்லது தாத்தா தேடிய சொத்தா ? என விதவிதமாக பூர்வீகம் சார்ந்த வினாக்கள் அதிகமாக உள்ளதால் இதுபோன்ற வினா எழுப்பியவர்கள் மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையிலே இப்பதிவினை கொண்டு செல்கிறேம்.

                       முதலில் பூர்வீக சொத்து என்பது யார் தேடிய சொத்து ? என்பதை தெளிவாக விளக்குகிறேன்.

                       ஒருவருக்கு பூர்வீக சொத்து என்பது அவரது பாட்டனால்  சாம்பாரிக்கப்பட்ட  சொத்து ஆகும். இதேபோல பாட்டன்  வாழ்ந்த ஊரினையே பூர்வீக இடமாக கருதவேண்டும்.

                    ஒருவரது சாதக கட்டத்தில் பூர்வீகம் பற்றி ஆராய்ச்சிக்கு அவரது சாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தினை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

             இதேபோல பூர்வீக ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடத்தினையும் ஆய்ந்து பார்க்க வேண்டும் .

                           

                            யாருடைய சாதகத்தில் ஐந்தாம் இடமும் ,அதன்அதிபதிகளும் பலமடைந்து  பாவர் நட்சத்திர சாரமின்றி இயற்கை சுபரால் சேர்க்கை மற்றும் பார்வை பெற சாதகர் தனது பாட்டன் தேடிய மனையில் வசிக்கின்ற யோகமும்,அவர் தேடிய சொத்தால் பலன் அடையும் யோகமும் ஒருவருக்கு கிட்டும்.

                   ஒருவரது சாதகத்தில் ஐந்தாம் இடத்தில் அரவுகளான ராகு,கேது இடம்பெற்று ஐந்தாம் அதிபதி நீசம், அஸ்தங்கம் மற்றும் பகை போன்ற அமைப்பினை பெற்றவர்கள் பாட்டானால் தேடிய சொத்து சிறிதளவு கூட இருக்காது.பூர்வீக இடத்தில் வசிக்கும் யோகம் இருக்காது.

                     "  ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து இருந்தும் பயனில்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?  " என ஆராய்ந்து பார்த்தால் ஐந்தாம் அதிபதி பலம் பெற்று இருப்பினும் ஐந்தாம் அதிபதி உடன் அரவுகளான ராகு,கேது சேர்க்கை அல்லது நட்சத்திர சாரம் பெற்றிரு்ப்பதே காரணம் ஆகும்.

                          "  ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து இருந்தும் வம்பு,வழக்குகளுக்கு உட்பட்டு பல காலங்கள் நீதிமன்ற வாசலை நாடி செல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ? "என ஆய்ந்து நோக்கினால் ஐந்தாம் அதிபதி பலமடைந்து இருந்தாலும் எதிரி மற்றும் வம்பு,வழக்கு ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதிகள் ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதிகளுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.

        இதுபோன்ற மேற்கண்ட  அமைப்பினை கொண்டவர்களுக்கு ருண,ரோக மற்றும் கடன்கார அதிபதியான ஆறாம் அதிபதியும் பலம் பெற்று நிற்க அதாவது சத்ரு ஸ்தானம் பலமடைந்து நிற்க தனது பூர்வீக சொத்து தனது எதிரிக்கு சென்றடையும்.அதேநேரத்தில் சத்ரு ஸ்தானம் பலமிழந்து நிற்பின் சாதகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்து பூர்வீக சொத்தை பெறுவார்.

                      

                         பொதுவாக வம்பு,வழக்கு என வந்து விட்டால் யாருடைய சாதகத்தில் ஆறுக்குடையவன் இரண்டாம் இடம் சேர எதிரியை வெல்லலாம்.இரண்டாம் அதிபதி சத்ரு ஸ்தானமான ஆறாம் இடம் அடைந்தால் தனது பூர்வீக சொத்து முழுவதும் எதிரியை சென்றடையும்.
  பூர்வீக ஸ்தான அதிபதி ஐந்துக்கு ஐந்தாம் இடமான பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஏறி நிற்க தனது பாட்டான் தேடிய சொத்தால் தனது வாழ்நாள் முழுவதும் பலன் பெற்று திகழ்வரார்.

நன்றி !

  வாட்ஸ் அப்
  97 151 89 647
       செல்
    740 257 08 99
      97 151 89 ,647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                                                                

  அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email
  masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
...................

Monday 28 May 2018

மணமாலை சூடும் வேளை -கிரகங்கள் ஆற்றும் பங்கு

மணமாலை சூடும் வேளை- கிரகங்கள் ஆற்றும்தொடரும்


                           


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

'"கிரகங்கள் படுத்தும் பாடு -( 213 )

      "திருமணம் என்பது
ஆயிரம் காலத்து பயிர் "

     "திருமணம் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்பர்.ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ரொக்கத்தில்தான் நிர்ணயிக்ப்படுகிறது "

       ஒரு சோதிடர் ஆனவர் திருமணத்திற்கு
பொருத்தம் பார்க்கும்போது
வெறும் நட்சத்திர பொருத்தங்களை
மட்டும் வைத்துக்கொண்டு
திருமணம் செய்ய கூடாது.

          இரண்டு ஜாதக கட்டங்களை
நன்கு ஆராய்ச்சி செய்து ,கட்ட ரீதியாக பொருத்தம் இருந்தால்
மட்டுமே விவாகம்  செய்யலாம்
என கூற வேண்டும்.

          நட்சத்திர அடிப்படையில் நிறைய
பொருத்தங்கள் இருப்பினும்
தினம்,கணம்,ராசி,ரட்சு,யோனி,பால்
என ஆறு பொருத்தங்கள் அவசியம்.

         என்னைபொருத்தவரை நட்சத்திர
பொருத்தம் இல்லாவிட்டாலும்,
கட்ட அடிப்படையில்
இருவருடைய ஜாதகத்திலும்
வாக்குஸ்தானம்(2ம் இடம்),கற்புஸ்தானம் அல்லது சுகஸ்தானம்(4-மிடம்),களஸ்திரஸ்தானம்(7-மிடம்) ,ஆயுள்ஸ்தானம்(8-மிடம்) போன்ற
மேற்கண்ட இடங்கள் வலுப்பெற்று இருக்கவேண்டும்.

           மேலும் இவை மட்டும் இல்லாது   புத்திரஸ்தானம் என அழைக்கப்படும் ஆண்களுக்கு ஐந்தாமிடம் பெண்களுக்கு ஐந்தாமிடத்தோடு பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடங்கள் மற்றும் புத்திரகாரகனான குருபகவான்
வலுப்பெற்று இருக்கவேண்டும்.

           ஏனைய தோஷங்களுக்கு தோஷத்திற்கு இணையான தோஷம் இருந்தால்தான் மணம் புரிவேண்டும்.உதாரணமாக ஒருவருக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை இணைக்கவேண்டும்.ஆனால் புத்திரதோஷம் உள்ள ஒரு நபருக்கு புத்திரதோஷம் உள்ள நபரையையே இணை சேர்க்ககூடாது.அவ்வாறு இருப்பின் புத்திரபாக்கியமே இல்லாமல் போய்விடும்.

            புத்திரதோஷம் உள்ள ஒரு நபருக்கு தோஷமில்லா நபரை இணைக்கும்போது யாரோ ஒருவரது யோகத்தில் புத்திரபாக்கியம் அமைந்துவிடும்.

            களத்திரஸ்தானதிபதி சுக்கிரன் நல்ல இடத்திலும் இருந்து
செவ்வாய் தோஷம்,களத்திர தோஷம்,புத்திரதோஷம்
இல்லாமல் இருந்தால்
நட்சத்திரபொருத்தம்
இல்லாவிட்டாலும்
திருமணம் செய்யலாம்
என்பது என் கருத்து.

           இது தொடர்பாக
இனிவரும் கட்டுரைகளில்
நீள் ஆய்வு செய்யலாம் என
உள்ளேன் எனவே முகநூல்
நண்பர்கள் லைக்,கமாண்ட்
மூலமாக தொடர் ஆதரவு
தரும்படி அன்புடன்  கேட்டுக்
கொள்கிறேன்.

முதலில் அமங்கலியோகம்
சூரியனும்,செவ்வாயும் ஒன்றுசேர்ந்து நின்றாலும்,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும்,பரிவர்தனை செய்து நின்றாலும்,நட்சத்திர காலில் நின்றாலும்
பெண்ணாணனவள் இளமையிலேயே  விதவை.

"இடுசெவ்வாய் கதிர் கூடி
எங்கு நின்றாலும் இவளும்
வாலிபம்தன்னில் அமங்கலியாவாள்.
லக்கனத்திற்கு ஏழில்
சூரியனும்,ராகுவும்
நின்றால் விதவை.

லக்கனத்திற்கு ஏழில் சனி,செவ்வாய்,ராகு இருப்பின் ஒருவருக்கு எத்தனை திருமணம் செய்தாலும் ஒருவருக்கு மனைவி நிலைக்காமல் போகும்.

      ஒருவருக்கு சாதகத்தில் திருமணம் தொடர்பான முழு தகவல்களை பெற அவர்களது சாதகத்தில் நான்கு ஸ்தானங்களை ஆய்வு செய்து பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழப்படும் லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழான் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய நான்கு இடங்களை கட்டாயம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  இந்த நான்கு ஸ்தானண்களுடன் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பு கொள்வது கூடாது அல்லது இந்த ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களுக்கும் செல்ல கூடாது.

  இந்த நான்கு  ( 1,2,7,8 ) ஸ்தான அதிபதிகள் நீசம்,வக்ரம்,பகை போன்ற வகைகளில் பலமிழக்ககூடாது.

இந்த நான்கு ஸ்தான அதிபதிகளுடன் அரவுகளான ராகு,கேது மற்றும் பாவிகளான சனி,செவ்வாய் தொடர்பின்றி இருத்தல் அவசியம் ஆகும்.
  களத்திர காரகர் சுக்கிரன் மற்றும் மங்களகாரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களை பொறுத்தும் திருமண வாழ்வு அமைகிறது.இவ்விரு கிரகங்கள் சேர்ந்தோ அல்லது சனி,ராகு ஆகிய இரு கிரகங்கள் சேர்ந்தோ இல்லாமல் இருத்தல் சுபம் ஆகும்.

  ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து பதினொன்றாம் இட அதிபதி பலமடைந்து இருப்பின் தாரதோஷம் ஆகும்.

"சட்டமாய் சனி ஏழாம் இடம் இருந்தால் தாரம் இரண்டு தப்பாமல் கிட்டுமே"

"சுக்கிரன்தான் கேந்திரத்தில்
          இருந்தாலப்பா சொல்லுகிறேன்
சாதகருக்கு தாரம் இரண்டு"

  ஏழாம் இட அதிபதி உடன் சனி,ராகு,செவ்வாய் சேர்க்கை கால தாமத திருமணத்தினை தருகிறது.

(தங்களது சாதகங்களை ஆய்வு செய்து பலனை போன்வழியாகவே தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன்பெறலாம்.பலன்பெற விரும்புவோர் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணவிபரங்களை பெறலாம்.)

.....தொடரும்


                            

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
    M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.


அலைபேசி :9715189647
                       740 257 08 99


வாட்ஸ்அப் எண்
  97 151 89 647


My email
masterastroravi@gmail.com

Sunday 27 May 2018

காம வாழ்வில் கிரகங்களின் பங்கு-(2)

காம  வாழ்வும்,கிரகங்களின் பங்கும் -(2)

                            

(கிரகங்கள் படுத்தும்பாடு -(68)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை'

"காமம் மட்டும் போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும்!
ஒரு காதல் மட்டும் போதும் என்றால் ஒரு செல்ல பிராணியை வளர்த்தால் போதும் !
எங்கு காதலும்,காமமும் சம அளவில் சந்திக்கிறதோ அதுதான்
உண்மையான வாழ்வு !"

           கவிஞர் வைரமுத்துவின் கவிதை புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.
உண்ணுதல்,உறங்குதல் போன்று காமமும் ஒருவகை உணர்வு.வாழ்வின் சுழற்சியே காமத்தால் அடுத்த தலைமுறைகளுக்கு அழைத்து செல்கிறது.

          உனது காமத்தை முறையான சமூக அங்கீகாரத்துடன் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய கொள்கையோடு வெளிப்படுத்த சமூக அங்கீகாரம் கிடைக்கிறது.

             ஒரு சிலர் இந்த சமூக வரம்பை உடைத்தெறிய அவனது சாதகத்தில் உள்ள கிரக அமைப்பு ஒரு காரணமாகிறது.

          ஒருவனது காம உறவின் வீரியத்தன்மையை அவனது மூன்றாம் வீட்டிலிருந்து அறியப்படுகிறது.சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாமைக்கு காரணம் அவனது மூன்றாமிடமும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டிருப்பது ஒரு காரணமாகிறது.

          சிலரது அந்தரங்க வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள நான்காமிடம் முக்கியமானதாகும்.ஒருவரது சாதகத்தில் நான்காமிடம் மற்றும் அதிபதிகளை ஆராய்சி செய்து பார்த்தாலே அவரது கற்புநிலை பற்றி தெளிவாக சோதிடரால் ஆராய்ந்துவிடலாம்.

           நான்காமிடத்தில் சனி+செவ்வாய்,செவ்வாய்+சுக்கிரன் ,செவ்வாய்+ராகு ,சுக்கிரன்+ராகு இதுபோன்ற சேர்க்கைகள் ஆகாது எனினும் இதுபோன்று நான்காமிடத்தில் இணைந்துள்ளதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை தவறாக எடைபோடக்கூடாது.நான்காமாதிபதி சுபராக இருக்கும்பட்சத்திலோ அல்லது சுபர் பார்வைபெறின் பலன் மாறுபடலாம்.

          இந்த நான்காமிடத்தை காமசுகம் முறையாக பெறுவானா? அல்லது முறைதவறிய நிலையா?என்பதை அறியலாம்.

         பொதுவாக சாதக கட்டத்தில் உள்ள நான்காமிடத்தைக் கொண்டு காம சுகத்தை பெறக்கூடிய யோகத்தையும் மற்றும் அவனது அந்தரங்க வாழ்வினையும் சோதிடரால் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள முடியும்.

         ஒருவரது சிற்றின்பம்,காமம் மற்றும் காதல் போன்ற கற்பனை உணர்வை வளர்க்க கூடிய இடம் அவனது சாதக கட்டத்தில் ஐந்தாமிடமே ஆகும்.
ஒருவன் அழகுணர்ச்சியோடு காதல் கவிதைகள் ,கதைகள் மற்றும் பாடல்கள் இயற்றும் கவிஞராவதற்கும்,
        "காமம் ததும்பும் கதைகள்,கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதும் கவிஞனாவதற்கும் ,
         ஒரு சிலர் உடல் கவர்ச்சியால் காதலில் விழுவதற்கும்,
           காமமிகுதியால் ஒரு பெண்ஆணிற்கோ /ஆண் பெண்ணிற்கோ அடிமையாகி இழப்பதற்கும்,
            மனைவி சொல்லோ மந்திரம் என பெண்டாட்டிதாசர்களாகி உறவுகளையும்,பெற்றோர்களையும் மதிக்காமல் போவதற்கும்
            இந்த ஐந்தாமிட கிரகநிலைகளே காரணமாகும்.

                ஒருவனது கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையே உள்ள தாம்பத்யு உறவுநிலையும்,தொடுவதால் உண்டாகும் ஸ்பரிச நிலையும்,ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொள்ளும் நிலையும் அவரது சாதககட்டத்தில் ஏழாமிடத்தை கொண்டு அறியலாம்.

              ஒருவருக்கு படுக்கை சுகத்தை பற்றி அறிந்து கொள்ள பணிரெண்டாமிடத்தை கொண்டும் அறியலாம்.

           எனவே ஒருவரது காம வாழ்க்கையைப்பற்றி அறிய நமது சித்தர்களால் உருவாக்கபட்ட கட்டங்கள் முன்றாமிடம்,நான்காமிடம்,ஐந்தாமிடம்,
ஏழாமிடம் மற்றும் பணிரெண்டாமிடம் போன்றவை ஆகும்.

              இதேபோல காமநிலைகள் பற்றி அறிய        கிரகங்களில் மங்களகாரகன் செவ்வாயும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் ஆகும்.

             ஒருவனது அலித்தன்மையைப்பற்றி அறிய புதன் பகவான் முக்கியம் ஆகும்.புதனும்,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொண்டால் சாதகருக்கு அலிதன்மை உண்டு  என படித்திருக்கிறேன்..ஆனால் இதில் விதிவிலக்கு உண்டு.நான் பார்த்த பல சாதகங்களில் சனியும்,புதனும் சமசப்தாமாக பார்த்துக்கொண்டுள்ள பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

               புதன்,சனி சமசப்தம பார்வை அலித்தன்மையை ஏற்படுத்தும் உண்மை என்றாலும் ஏனைய காமஸ்தானங்களும்,காமகிரகங்களும் பலம்பெற்றிருப்பதால் இந்த சமசப்தம பார்வை பலனளிக்கவில்லை.இருநிலைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சாதகர் அலியாகிவிடுவார்.

                  .எனவே பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் இதுபோன்ற நிலைகளை நல்ல சோதிட ஞானம்
நிறைந்த சோதிடர்களை கொண்டு விவாக பொருத்தம் பார்க்கும்போது அறிந்துகொண்டு தம்பதிகளை இணைக்கவேண்டும்.

இந்த காம உறவு நிலைகளை பற்றி அறிய #விவாகதசவதப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்,வசியப்பொருத்தம் மற்றும் பால்பொருத்தம் என மூவித பொருத்தநிலைகள் உள்ளது.

            இதுபோன்ற பலவிஷயங்களை நமது ஞானிகள் சூட்சும வடிவில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.இவைகளை முறையான பயபக்தியோடு படிக்க படிக்க தெய்வகடாட்ஷம் இருப்பின் புலப்படும்.
குரு வாழ்க !குருவே துணை!!

(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து சோதிட பலன்கள் மற்றும் பொருத்தம் போன்ற விவரங்களை வீட்டிலிருந்தபடியே போன் வழியாக பலன்பெறலாம்.கட்டணம் உண்டு.விவரங்களுக்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு "பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

                            
                                    
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்.
புதுக்கோட்டை மாவட்டம்.

செல்: 97 151 89 647
            740 257 08 99
வாட்ஸ் அப்
97 151 89 647

Email id
masterastroravi@gmail.com

My website.
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
@@@@@22@@2@22222@@@@@@@@@@

Saturday 26 May 2018

எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருடைய சாதகத்தில் உண்டு ?

எதிர்பாராத அதிர்ஷடம் யாருடைய சாதகத்தில் உண்டு?

                               
      
கிரகங்கள் படுத்தும் பாடு--(212 )

செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன்
துணை!

                சாதாரன நிலையில் சராசரிக்கு கீழ் வாழும் ஒரு சிலருக்கு தமது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கை தரத்தினையே ( Life Style ) உயர்த்தி சமூகத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நபர்களில் தானும் ஒருவராக உயர்வடையக்கூடிய அளவிற்கு கிரக நிலைகள்  அமைந்து  இருப்பதை சாதகத்தில் காணலாம்.

விபரீத ராஜயோகம்

  ஒருவரது சாதகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தனது தசையில் தந்து மற்றவர்கள் பார்த்து பொறாமையும்,ஆச்சர்யமும் படும் அளவிற்கு ஒரு சிலரை "குப்பையில் இருப்பவர்களை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று விடுவதுண்டு". இவ்வகையில் ஒருவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் விபரீத ராஜயோகத்திற்கு அலாதியான பங்கு உண்டு.

                  " விபரீத ராஜயோகம் என்பதை "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்பார்கள்.அதாவது ஒருவரது சாதகத்தில் கெட்ட ஸ்தானமான மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் அதிபதிகள் தனது திசையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சாதகருக்கு தரவேண்டும் எனில் இந்த கெட்ட ஸ்தான அதிபதிகள் கேந்திர ,கோணங்களில் ஏறி பலப்பட்டு நிற்காமல் மறைவிடங்களில் சென்று கெட்டுவிட்டால் யோக பலன்களை தனது திசையில்  தந்துவிடும் என்பது சோதிட ஆராய்ச்சியின்பால் கண்டறியப்பட்ட முடிவாகும்.

                மூன்றாம் அதிபதி ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் மறைந்திருக்க வேண்டும்.ஆறாம் அதிபதி மூன்று, எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்திலும் ,இதேபோல எட்டாம் அதிபதி மூன்று, ஆறு மற்றும் பணிரெண்டாம் இடத்திலும் ,பணிரெண்டாம் அதிபதி மூன்று, ஆறு மற்றும் எட்டாம் இடத்திலும் மறைந்திருக்க தனது திசையில் திடீர் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

                  இன்னும் விளக்கமாக சொல்லபோனால் அதாவது உதாரணமாக மீன லக்கனத்திற்கு மூன்று மற்றும் எட்டுக்குரிய சுக்கிரன் ஆறாம் இடமான சிம்ம வீட்டிலோ அல்லது பணிரெண்டாம் வீடான கும்பத்திலோ நின்றால் தனது திசை காலங்களில் யோக பலன்களை தந்துவிடுகிறது.

               எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் ஒருவருக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஸ்தானங்கள் இரண்டு,ஐந்து ,ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடங்கள் ஆகும்.
இந்த ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் பலம் பெற்று தங்களுக்குள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு பலமடைந்து சுபர் தொடர்பு பெற்று நின்று அதன் தசை நடைபெறும் காலங்களில் சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

            சாதகருக்கு திடீர் பணவரவு தரும் ஸ்தானங்களாக கருதப்படுபவை மூன்று, ஆறு,பத்து மற்றும் பதினொன்றாம் இடங்கல் ஆகும்.இந்த ஸ்தானங்கள் பலம்பெற்று தனது திசை நடைபெறும் காலங்களில் லாட்டரி,ரேஸ்.... போன்ற வகையிலோ தான் மேற்கொண்ட தொழில் மூலமாகவோ சாதகருக்கு திடீர் எதிர்பாராத பண வரவுகளை தந்துவிடுகிறார்.

               சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் நவகிரகங்களில் குருபகவான் மற்றும் சுக்கிரனபகவான் ஆகிய இரு கிரகங்களுக்கும் உரிமை உண்டு.இதில் குருபகவான் தனது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை நேரிய வழிகளில் சாதகருக்கு ஈட்டி தருவார்.

               ஆனால் சுக்கிரன் பகவான் சாதகருக்கு மறைமுகமான வாழிகளில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சாதகருக்கு வாரி வழங்குவதில் வல்லவர் ஆவார்.

                 சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் திரிகோண அதிபதிகளான லக்கனம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் ஆகிய அதிபதிகள் பலமடைந்து நிற்க தனது திசை காலங்களில் எதிபாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

               ஒன்பதாம் மற்றும் பத்தாம் இட அதிபதிகள் பலமடைந்த தங்களுக்குள் பரிவர்தனை, சேர்க்கை ,சார பரிவர்தனை மற்றும் பார்வை பெறின் "தர்ம-கர்மாதிபதி யோகம் " அளிக்கிறது.தர்ம-கர்மாதிபதி யோகம் சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

நன்றி

(தங்களது சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

   வாட்ஸ்அப்
  97 151 89 647

      செல்
   740 257 08 99
      97 151 89 647

                                    
அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
        M.Sc,MA,BEd
ஆய்வாளர்,சோதிட ஆசிரியர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My blogspot
AstroRavichandran. blogspot. Com
astroravichandransevvai.blogspot. com

Friday 25 May 2018

காம வாழ்வில் கிரகங்களின் பங்கு-(1)

காம வாழ்வும்,கிரகங்களின் பங்கும் - (1)     

                                    
   கிரகங்கள் படுத்தும் பாடு-( 67 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                  இந்த லொளகீக உலகில் வன்முறைகளும்,யுத்தங்களும் இரண்டே காரணங்களினால்தான் இருக்கும்.இதில்  ஒன்று
அதிகாரம் செய்யும் ஆசை  இதனுள் பொன்,பொருள் மற்றும் சொத்து சேர்த்தல் அடங்கும்.

              மற்றொன்று காமத்தால் வரும் ஆசை.(பெண்ணாசை)
"வேதம் எல்லாம் காதலை மறுப்பதில்லையே-அவை வேதம் செய்யும் முனிவரையும் விடுவதில்லையே"
சொல்லி தோன்றுமோ மன்மதக்கலை அள்ளிப்பருக வேண்டும்.
         
               ஒருவருக்கு காம எண்ணத்தை தூண்டி வேடிக்கை பார்ப்பதில் மங்களகாரகன் செவ்வாய் பகவானுக்கும்,களஸ்திரகாரகன் சுக்கிரபகவானுக்கும் அதிக பங்கு உண்டு.

                  இந்த சுக்கிரனும்,செவ்வாய்யும் முப்பது பாகைக்குள் ஒரு ராசி கூடியிருந்தாலும் அல்லது இருவரும் 180 பாகைக்குள் சம சப்தமாக பார்த்துக்கொண்டாலோ ஒரு ஆடவரோ /பெண்டீரோ காம எண்ணம் மிகுந்து பல மலரில் தேன் சுவைக்கும் வண்டாவர்.சுபர் பார்க்க பலன் மாறுபடலாம்.

                   சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஏழாம் பாவகத்தில் இருப்பின் கிழவனுக்கு மாலையிட்டு மதனத்தால் பல பேரை கூடி தனது ஸ்தானம் குலுங்க நடந்து வருவாள்.யாருக்கோ பிள்ளையை பெற்று தொட்டில் இட்டு தாலாட்டுவாள் என புலிப்பாணி சித்தர் தனது புலிப்பாணி சோதிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

               இதேபோல சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்து சுபர்   பார்வையற்று    மனதுக்காரகன் சந்திரனுடன் ராகு,கேது தொடர்போ அல்லது நீசம்,மறைவு பெற்றிருந்தாலும் காம எண்ணம் மிகுந்து காணப்படுவர்.

                     பொதுவாக மங்களக்காரகன் செவ்வாய்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் சனி அல்லது ராகு அல்லது சனி,ராகு சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ காம எண்ணத்தை உருவாக்கும்.

               இதுபோன்ற பல காரணங்களை படித்திருந்தாலும் இவை எந்த அளவுக்கு உண்மையாக உள்ளன என்பதை என்னிடம் சாதக ஆய்வுக்கு வந்த சாதகத்தை பார்த்து அதை ஊர்ஜிதப்படுத்தியபோது எந்த அளவுக்கு நமது சித்தர்களின் தனது ஞானத்தால் அனைத்து ஆசையும் துறந்த அவர்களால் எவ்வாறு காம எண்ணத்தை உருவாக்கும் கிரகநிலைகளை கண்டறிய முடிந்தது என வியந்ததுண்டு.
இப்பொழுது காம மிகுதியால் தவறு செய்த ஒரு நபரின் சாதகத்தை இங்கே பகிர்கிறேன்.

மீன லக்கனம்
துலாம் ராசி

2-ல் மாந்தி
4-ல் குரு(வக்கிரம்)
5-ல் கேது
10-ல் செவ்,சனி
11-ல் புதன்,சுக்,ராகு
12-ல் சூரியன்

இந்த நபரின் சாதகத்தில் ஆய்வுக்குரிய விஷயங்கள்

1) மனதுக்காரகன் சந்திரன் எட்டாமிடத்தில் மறைவு.தேவையில்லாத மனகுழப்பங்கள்

2)களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் ,கற்புஸ்தானம் எனப்படும் நான்காமிட அதிபதி புதனுடனும் ராகு,கேது தொடர்பு.

3)மங்களகாரகன் செவ்வாயுடன் சனி சேர்க்கை பெற்று அந்த ஸ்தான அதிபதி கற்பு ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று வக்கிர பார்வை.

4)நபரின் சாதகத்தின் காம கற்பனை உருவாக்கும் இடமான ஐந்தாம் இடமும் கெட்டிருக்கிறது.ஐந்தில் கேது ஐந்துக்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிட அதிபதி செவ்வாய் ஜென்ம விரோதியான சனியுடன் சேர்க்கை பெற்று தவறான எண்ணத்தை தூண்டும்.மேலும் புத்திரதோஷத்தையும் உருவாக்கியுள்ளது.புத்திரகாரகன் குருவும் வக்கிரம் பெற்று  உள்ளது.எனவே புத்திரபாக்கியம் அமையாது.அப்படியே பிறந்தாலும் தனது கணவனுக்கு பிறந்த பிள்ளையாக அமையாது.

5)இவரது சாதகத்தில் திருமணத்திற்கு உகந்த இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடமும்களஸ்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மணவாழ்வு சிறக்காது.

6) குடும்பாதியான செவ்வாய் உடன் விரோதியான சனி சேர்க்கை,ஏழாம் அதிபதியான புதன் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரன் இவர்களோடு ராகு,கேது தொடர்பு.இவருக்கு திருமணவாழ்வு சிறக்காது.இவரது சாதகமே தனது துணைவரையும் பாதிக்கவைக்கும்.

7)நான்காமிடம் எனப்படும் கற்புஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற குரு,நான்காமாதி சந்திரன் எட்டில் மறைவு.தாய் உடனான உறவும் ,கற்புநிலையும் பாதிக்கப்படும்.

8) தந்தைகாரகன் சூரியன் பணிரெண்டில் மறைவு மற்றும் தந்தை ஸ்தானதிபதி செவ்வாய் அதன் எதிரி சனியோட சேர்க்கை.இவரது தந்தையும் இறந்துவிட்டார்.

மேற்கண்ட நபரின் வாழ்வில் விதி எவ்வாறு விளையாடி உள்ளது.இவருக்கு சாதக கிரக பலனால் தாய்,தந்தை மற்றும் வாழ்க்கை துணைவர் மேற்கண்ட இம்மூவராலும் எவ்வித உதவியின்றி செய்து இவளை விபச்சார நிலைக்கு தள்ளியது.

மேற்கண்ட அமைப்பால் அந்த நபரின் வாழ்வானது மாறிப்போனது.
எல்லாம் விதிப்பயன் .
"ஆட்டுபவர் ஆட்டுவித்தால்
ஆடாதாரோ கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதார் யார் கண்ணா ?"
---------தொடரும்

(தங்களது சாதகங்களில் உள்ள பலனை தெளிவாக ஆராய்ந்து போன் வழியாக எங்கு  இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.மேலும் விபரத்திற்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 என்ற எண்ணிற்கு மெஸேஸ் செய்யவும்)

                                 
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆலோசகர்.
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ சென்டர்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் :97 151 89 647
செல்: 740 257 89 647.

Email;
masterastroravi@gmail.com

My website address.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
 AstroRavichandran. blogspot. com
**********************************
Online Astro consult,conduct my cell and whatsup or Email or messenger

Saturday 19 May 2018

தனது பிள்ளைகளுக்கு திருமணம் முயற்சி செய்யும் பெற்றோர்களுக்கு சிறப்பு ஆலோசனை பதிவு -( 5 )

தனது பிள்ளைகளுக்கு திருமணம் முயற்சி செய்யும் பெற்றோர்களுக்கு சிறப்பு ஆலோசனை - ( 5 )

                                  
கிரகங்கள் படுத்தும் பாடு

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
         தனது பிள்ளைகளுக்கு வரன்தேடும்போது கடைபிடிக்கவேண்டிய விபரங்களை ஆலோசனையாக தொடர்பதிவாக எழுதி வருகிறேன்.இது ஐந்தாவது பதிவாகும்.

          தம்பதிகள் இருவரும் ஒரே நட்சத்திரமாகவும்,அதே நேரத்தில் ஒரே ராசியாகவும் வரும்போது (சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகள் வரும் ) அவர்களுக்கு ஜெனன காலத்தில் ஒரே திசையாகவும் இருக்கும்.விவாக பொருத்தம் பார்க்கும்போது இருவருக்கும் ஒரே திசையாக இருக்கும்பட்சத்தில் அவ்விரண்டு திசைகளும் யோகதிசையாக இருந்து கோசரப்படி ஏழரை மற்றும் அட்டமசனி இல்லாதபட்சத்தில் வேண்டுமானால் திருமணம் செய்துவைக்கலாம்.

               ஆனால் அதேநேரத்தில் இருவருக்கும் சித்திரை மூன்றாம் பாதமாக இருந்து திருமண நேரத்தில் குரு திசை நடப்பில் இருப்பின் குருவானவர் துலாராசிக்கு மூன்று மற்றும் ஆறுக்குடையவனாக இருப்பதால் இருவருக்கும் குருவானவர் பலம் பெற்றிருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இருவரும் ஒத்து வாழமாட்டார்கள்.எனவேதான் நமது முன்னோர்கள் "ஒத்த ராசி,ஒத்ததிசை நடந்தால் ஒத்துவாழ நியதியில்லை"என்றார்கள்.

                  மேலூம் இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் கோசாரப்படி வரக்கூடிய அட்டம சனி மற்றும் ஏழரை சனி  இருவருக்கும ஒரே நேரத்தில்  நடக்கூடிய சூழல் இருப்பதால் அளவுக்கதிகமான கஷ்டங்கள் தரும் என்பதால் பெரும்பாலும் ஒத்த ராசியில் விவாகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.

           ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் தம்பதிகள் இருவருக்கும் மேஷம்,விருட்சகம் மற்றும் சிம்மம் போன்ற ராசிகளாக இருக்கும்போது இருவருக்கும் ஆதிக்ககுணமும்,போராட்ட குணமும் மிகுந்து இருப்பதால் அவர்களுக்கிடையே இனிமையான இல்லறம் அமைய வாய்ப்பில்லை.தம்பதிகளாகுவதற்கு மட்டுமல்ல வியாபார கூட்டணிக்கு கூட சரியாக அமைவதில்லை.

          அதேநேரத்தில் இருவருக்கும் யோகதிசை நடைபெறும் காலங்களில் அதிக வளர்ச்சியை தரும்.எனவே திருமண காலத்திலிருந்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குமேல் யோக திசை நடைபெறுவதாக இருந்தால் ஒத்த திசையாக இருந்தாலும் விவாகம் செய்து வைக்கலாம்.

           .அதற்கு பிறகு வரும் திசை கெட்ட திசையாக இருப்பினும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.பிறந்த குழந்தைகளது சாதகங்களின் திசையமைப்பும் இவர்களது வாழ்வை மாற்றிவிடும்.

         திருமணமாக கூடிய ஆடவருக்கோ /பெண்டீருக்கோ அவர்களது சாதகங்களில் களத்திரதோஷம்,மங்கல்யதோஷம் இருப்பவர்களுக்கோ அல்லது ஒருவருக்கு லக்கனம்,இரண்டாமிடம் (குடும்பஸ்தானம்) ,ஏழாமிடமான களஸ்திரஸ்தானம் மற்றும் மாங்கல்யஸ்தானமான எட்டாமிடம் போன்ற ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் பலமிழந்து காணப்பட்டாலோ இவர்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்து  வைக்ககூடாது என ஜோதிடர்களாகிய நாங்கள் கூறுவதன் உள்நோக்கம் "இன்றைய இளைஞர்களிடம் அறிவும்,திறமையும் இருக்கும் அளவிற்கு பொறுமையும்,சகிப்பு தன்மையும் குறைவு.எதையும் உழைக்காமல் குறுகியகாலத்தில் பெற்று அதனை மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும் என்ற உந்துதலே மேல்நோக்கி உள்ளது.

      எனவே இதுபோன்ற திருமணயோகமில்லாத தம்பதிகள் திருமண பந்தத்தத்தில் இணையும்போது அளவுகதிகமான எதிர் பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு அவ்வாறு இல்லாத பட்சத்தில் பொறுத்துக்கொண்டு விட்டு கொடுத்து போகும் தன்மை இளவயதில் காணப்படாததால் குடும்ப வாழ்வில் பூகம்பம் உண்டாகி விவாகரத்துவரை சென்றுவிடுகிறார்கள்.ஆதலால் காலம் தாழ்த்தி திருமணம் செய்து வைக்கும்போது ஒருவித மனபக்குவம் அடைந்து எதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டு விட்டு கொடுத்து வாழ்ந்துவிடுவார்கள் என்பதே ஜோதிடர்கள் கூறும் உள்நோக்கம் ஆகும்.

நன்றி.தொடரும்....

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                             
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் நிலையம்.
புதுக்கோட்டை மாவட்டம்..

வாட்ஸ்அப்
97 151 89 647.

எனது செல்  : 97 151 89 647
செல்: 740 257 08 99

My email
masterastroravi@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு சாதகம் எப்படி இருக்கவேண்டும் ?

ஒரு சாதகம் எப்படி இருக்கவேண்டும் ?

                       
செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு--( 211 )

         ஒரு சிலரது சாதகங்களை பார்த்தவுடனே பலன் சொல்வதற்கு ஒருவித மன திருப்தி ஏற்பட்டு பலன் சொல்வதற்கு தயங்காமல் முழுப்பலன்களையும் நிறைவாக சொல்லும்படியாகவே அமைகிறது.

  இதுபோன்ற சாதகங்களில் சாதகரை வழிநடத்த கூடிய தலைவன் என்று அழைக்கக்கூடிய லக்கன அதிபதியும்,ராசி அதிபதியும் பலமடைந்து நின்று வாழ்வில் எவ்வளவு ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் எதிர்நீச்சல் இட்டு முன்னேறி செல்வர்.

           இவை மட்டுமன்றி இயற்கை சுபரான குருபகவான் லக்கனம் மற்றும் அதன்அதிபதி இதேபோல ராசி மற்றும் அதன் அதிபதி ஆகிய இவைகளில் ஏதாவது ஒன்றை பார்க்கப்பட்டிருக்கவேண்டும்.

    ஒருவரது சாதகத்தில் லக்கன யோகர்கள் பலம் பெற்று நிற்பதும்,லக்கன அசுபர்கள் பலமிழந்து நிற்பதும் சாதகரை யோக வழியில் வழிநடத்தி செல்லும்.

   லக்கன பாவிகள் மற்றும் மறைவிட அதிபதிகள் ஆனவர்கள் லக்கன சுப ஸ்தான அதிபதிகளுடன் சேராமலோ அல்லது பார்வை பெறாமலே இருக்கும் சாதகங்கள் சாதகரை மேன்மையான வழியில் அழைத்து செல்லும்.

  ஒரு சாதகத்தில் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் ஆன அமைப்புகள் பெற்ற கிரகங்கள் பாவர் பார்வை மற்றும் சேர்க்கை பெறாமல் சாதகத்தில் இருந்தும் அதன் திசைகள் வாழும் காலங்களில் சாதகருக்கு யோக பலனை தரக்கூடிய வகையில் அமையக்கூடிய சாதகமாக இருப்பின் சோதிடர் பலன் அளிக்குமபோது மகிழ்வாக இருக்கும்.

              சாதகத்தில் பாவ கிரகங்கள் உச்சம்,ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் மறைமுக வலு பெறும் அமைப்பினை பெற்றிருக்கும் சாதகங்களும் சிறப்பு உடையதாக திகழும்.

          இவை மட்டுமன்றி சாதக கட்டத்தில் எந்த ஸ்தானங்கள் பலமடைந்து நிற்பதால் எவ்வித பலன்கலை பெற்று  சாதகர் மேன்மையடைவார் என்பதையும் தொடர்ந்து படித்து மனதில் நிறுத்துங்கள்.

   தன ஸ்தானமான இரண்டாம் இடம்  பாவிகள் இடம்பெறாமல்  தனகாரகன் குருபகவானும் பலம் பெற்று நிற்பவர்கள் கையில் காசு பணம்  தராளமாக புலங்க கூடிய "தனயோகத்தினை " உகந்த திசை காலங்களில் சாதகர் பெறுகிறார்.

  வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம்,சுக ஸ்தானமான நான்காமிடம்,கற்பனை திறன்,படைப்பாற்றல் வளர்க்கும் ஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் கிரகங்களில் குரு பகவான், வித்தைகாரகன் புதன் பகவான் ஆகிய கிரகங்கள் ஒருவரது சாதகத்தில் பலம்பெற்று நிற்க கல்வியாலும்,பெற்ற தாயாலும் சிறப்படைவான்.

  சுக ஸ்தானமான நான்காம் இடத்தினை பலமாக பெற்றவர்கள் தன்சுகம்,தாய்சுகம்,கல்வியால் சுகம்,வண்டி வாகனயோகம் (வாகனகாரகன் சுக்கிரன் பலம் அவசியம்),சொந்த வீடு அமைதல் போன்ற பலமான யோகத்தினை அதன் உகந்த திசை வரும் காலங்களில் பெறுகிறார்கள்.
மூன்றாம் இடம் பலம்பெற்று நிற்க தான் பெற்ற மற்றும் கற்ற வித்தையால் கீர்த்தி மற்றும் புகழடையும் யோகத்தினை உகந்த திசை வரும் காலங்களில் பெறுகிறார்கள்.

  பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் பலமடைந்து நிற்பது பூர்வ புண்ணியத்தால் பலன் ,புத்திரத்தால் பலன் மற்றும் பெற்ற புத்தியால் பலன் என சாதகர் உகந்த திசை வரும் காலங்களில் பெறுகிறார்கள்.

  ஏழாம் இடம் பலம் பெற்று நிற்பதால் சாதகர் மனைவி வழியால் அன்பும்,ஆதரவும் பெற்று சிறப்பர்.மனை மற்றும் மனையால் யோகங்களை இப்பாவ வலிமையால் சாதகர் பெறுகிறார்.உற்ற நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.

  ஒருவர் தான தர்ம சிந்தனையினை பெற்று பிறர் உதவும் தாரள குணத்தையும்,வருமானம் சேர்க்கும் திறமையும் மற்றும் தந்தையால் ஆதரவினையும் ஒன்பதாம் இடம் பலம் பெற்று நிற்க சாதகர் பெறுவார்.

    ஒருவர் தாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலால் புகழ் பெற்று நிற்க பத்தாம் இடம் பலமடைந்த இருக்க வேண்டும்.

  ஒருவர் தான் மேற்கொள்ளும் தொழிலால் லாபத்தினையும்,மூத்த சகோதரத்தினால் ஆதரவும் இப்பாவம் பலம் பெறுவதால் சாதகர் பலன் பெறுவார்.

  ஒருவருக்கு அயன,சயன மற்றும் படுக்கை சுபம்,வெளிநாடு யோகம் மற்றும் முக்தியோகம் போன்றவற்றினை பணிரெண்டாம் இடம் பலம் பெறுவதன் மூலம் உகந்த திசையில் சாதகர் பெற இயலும்.

நன்றி

  வாட்ஸ் அப்
   97 151 89 647

     செல்
740 257 08 99
  97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                  

  அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandran. blogspot. com
  AstroRavichandransevvai.blogspot. com

Thursday 17 May 2018

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு-( 2 )

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு - ( 2 )

                      


செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன்
துணை!


"திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்"


        திருமணம் ஆன தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து விடுவதற்கு காரணம் "கிரகங்கள் படுத்தும் பாடே" என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் தேவையில்லாத பல பிரச்சினைகள் எழுந்து தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு உருவாதல்,பிரிந்துவாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற பிரச்சினைகள் வருவதை அறிவுபூர்வமாக ஆராய்ந்து முன்னரே வராமல் தவிர்த்துவிடலாம் என்பதை திருமணம் ஆனவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும்,நமக்கு மட்டும் இவ்வாறு ஏன் நடக்குது ! என வருத்தப்பட்டு மனம் நொந்துவிடாமல் இருக்கவும்,பிரச்சினைக்கு மற்றவர்களை குறைகூறி பெரிதாக்காமல் இருக்கவும் மற்றும் அதற்குரிய பரிகார வழிபாடுகளை மேற்கொள்ளவும் தொடர்ந்து இரண்டாம் பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்.


             ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் ஆட்சி அல்லது உச்சம் போன்ற பலமான அமைப்பை பெறும்போது கிரகயுத்தம் ஏற்பட்டு அவர்களுக்கிடையே ஈகோ தன்மை ஏற்பட்டு நீ பெரியவனா?நான் பெரியவளா ?வினா எழும்பி ஒருவரைவிட தான் பெரியவராக எண்ணி அன்யோன்யம் குறைந்து கருத்து வேறுபாடுகளுடன் வாழவைக்கும்.


            உதாரணமாக மேஷம்,ரிஷப லக்கனங்களுக்கு லக்கனாதிபதி செவ்வாயாக இருக்கும் பட்சத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதியாக வரும்.அதேபோல லக்கனாதிபதி சுக்கிரானாக இருக்கும் பட்சத்தில் ஏழாம் அதிபதி செவ்வாயாக வருவதால் இருவரும் ஆட்சி சமசப்தமாக பார்த்துக்கொள்ளும  தம்பதிகள் கருத்து ஒற்றுமையாக வாழ்ந்ததில்லை.இது என் அனுபவ கருத்து.


            இதேபோல சிம்ம லக்கனத்திற்கு லக்கனாதிபதி சூரியனுக்கு ஏழாம் அதிபதி சனிபகவான் ஆகாதவர் என்பதால் இருவரும் ஆட்சி பெறும் பட்சத்தில் தம்பதிகளுகிடையே மட்டுமல்லாமல் தந்தை-மகன் உறவும் சரியாக அமைவதில்லை.


             உபய லக்கனகாரர்கள் அதிலும் குறிப்பாக உயய லக்கனத்தையே ராசியாக கொண்டவர்கள் (மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம்) இவர்களுக்கு லக்கனாதிபதி குருபகவான் எனில் ஏழாம் அதிபதி புதன்பகவான் ,புதனாக இருக்கும் பட்சத்தில் ஏழாம் அதிபதி குருபகவான்.இவர்கள் இருவரும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பின் தம்பதிகள் இருவரும் கற்றவர்களாகவும்,அறிவு நிரம்பியவர்களாகவும் ,
அழகானவர்களாகவும் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருவர் மீது அன்பு ஏற்பட வாய்பில்லை.சில நேரங்களில் இவர்களின் வளர்ச்சியை இவர்களது துணைவியார்/துணைவர்களுக்கே பிடிக்காமல் முட்டுகட்டையாக இருப்பார்கள்.
      .காரணம் அவர்களை குறைகூறி பயனில்லை.அதாவது லக்கனாதிபதிக்கு ஏழாம் அதிபதியானவர் மூன்றுவிதங்களில் பாதிப்பை தருகிறார்.


1)பாதகாதிபதியாக வருகிறார்.
2) மாரகாதிபதியாகவும் உள்ளார்.
3) ஏழாம் இடத்து அதிபதி கேந்திர அதிபதி என்பதால் அவை ஏழாமிடத்தில் ஆட்சிபெற்று அமரும்போது "கேந்திராதிபதி தோஷத்தை"தருகிறார்.


          இதுபோன்ற மூன்றுவித பாதிப்பை தருவதால் ஏழாம் அதிபதி திசையே நடைபெறும் காலங்களில் அவர்களுக்கிடையே பிரிவினையும் தருவார்.


          மேற்கண்டவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் இருவரும் நேர்வலு பெறாமல் சூட்சும வலு பெறல் உகந்தது.
எனவேதான் "ஏழாமிடம் சுத்தமானால் எல்லோருக்கும் நல்லவள்"என்கிறோம்.
இதில் ஏழாமாதிபதி பலமுடன் லக்கனாதிபதி பலமிழப்பின் பெண்டாட்டிதாசர்களாகி" மனைவி சொல்லே மந்திரம் " என சிலர் மாறிவிடுவார்கள்.


       ஏழாமாதிபதி பலமிழந்து லக்கனாதிபதி வலுப்பெற மனைவியானவள்"கல்லானலும் கணவன்,புல்லானாலும் புருஷன்"என அன்போடு கணவன் பேச்சை கேட்டு நடப்பாள்.


         பொதுவாக நமது முன்னோர்கள் "ஊடலில் தோற்றவர் வென்றார்"என்ற அடிப்படையில் லக்கனாதிபதியோ அல்லது ஏழாமாதிபதியோ நேர்வலு பெறாமல் தோற்று சூட்சும வலு பெற்றவர்களது இல்லறம் இனிக்கும்.


++++++++++++++++++++++++++
(குறிப்பு;தங்களுடைய சாதகங்களை ஆராய்சி செய்து பார்த்து பலனை போன் வழியாகவே பெறலாம்.திருமணபொருத்தம் பார்க்கப்படும்.கட்டணம் உண்டு.நீங்கள் தங்களுடைய பிறந்ததேதி,நேரம்,பிறந்த இடம் போன்ற தகவலை வாட்ஸ்அப்பில் அனுப்பினால் கட்டண தகவல்கள் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும்.)
""""""""""""""""""""""""""""""""""""""""""


                                

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்
ஓம்சக்தி சோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.


வாட்ஸ்அப் எண் : 97 151 89 647


   செல்
            740 257 08 99
                97 151 89 647.


My email
  masterastroravi@gmail com


My blogspot
  AstroRavichandran. sevvai blogspot. com
   AstroRavichandransevvai.blogspot. com
..........

இசை ஞானத்தால் சினிமாவில் சாதித்தவர்கள்.

இசை ஞானத்தால் சினிமாவில் சாதித்தவர்கள்-(5)


கிரகங்கள் படுத்தும் பாடு-( 65 )
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையப்பா"
"கத்தும் குயிலோசை என் காதில் விழ வேண்டும்"
       ----கவிஞர்பாரதியார்.

          இசைஞானம் என்பது  எல்லோருக்கும் வருவதில்லை.அது ஒரு தெய்வீக கலை ஆகும்.இந்த ஞானத்தை பெற்றவர்கள் தெய்வ அம்சம் நிரம்பியவர்கள் எனலாம்.

இசைஞானம் பெறுவதற்குரிய பொதுவான கிரகவிதிகள்:-

1)  இசைஞானம் பெறுவதற்கு  அவரது சாதக கட்டங்களில் இசைக்கு காரகனான #சந்திரபகவானும்,கலைக்கு அதிபதியான #சுக்கிரபகவானும் பலம் அடைந்திருக்க வேண்டும்.

2)  இசைஞானத்தை அளிக்ககூடிய  #சரஸ்வதியோகம் மற்றும் #புதனாதிக்கயோகம் என்று சொல்லக்கூடிய சூரியனும்,புதனும் இணைந்து இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ பலம்பெற்றிருக்கவேண்டும்.

3)குரு பகவான் பலம்பெற்று சுப பார்வை பார்க்கவேண்டும்.

            இதுபோன்ற பலம்பெற்றுள்ள மூன்று இசை மேதைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

                முதலில் கர்நாடக இசை உலகில் சாம்பவனாக திகழ்ந்த "இசை உலகின் முடிசூடா மன்னன்"தியாகராஜ பாகவதர்" அவர்களின் சாதக நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.

                   அவருடைய சாதக கட்டத்தில் இசையில் சாதித்தற்கு உகந்த கிரகங்கள் பலம் பெற்று அமைந்தனவா ?என பார்ப்போம்.

                                       
தியாகராஜ பாகவதர் சாதக கிரகநிலை விபரம்
கடக லக்கனம்
கடக ராசி
1) ல்-சந்திரன்,கேது
2)-ல் குரு
7)ல்-ராகு
10)ல் சூரியன்,புதன்
11)ல்-சுக்கிரன்,சனி
12)-ல் செவ்வாய்

இசைஞானம் தந்த பலன்களை மட்டும் ஆராய்வோம்.

           இவரது சாதக கட்டத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக இருந்து லக்கனத்திலே இசைக்கு காரகனான சந்திரபகவான் ஆட்சி பெற்று ஞானக்காரகன் கேது பகவானோடு இணைந்திருப்பது இசைஞானத்தோடு தெய்வ அணுக்கிரகமும் சேர்ந்திருந்து.பொதுவாக கடக கேதுவும்,மகர ராகுவும் ஆன்மீகநிலையின் உச்சநிலைகள் தரும் என்பதால் தனது இசைஞானத்தால் கடவுள்மீது பல  கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

                 மேலும் வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்து வாக்காதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி மற்றும் புகழை தரக்கூடிய மூன்றாமிடம் மற்றும் விரயஸ்தானதி புதனுடன் (வித்தைக்காரகன்) இணைந்து லக்கனத்திற்கு பத்தில் அமர்ந்து திக் பலம் பெற்றுள்ளார்.இவை இசை அறிவை தரக்கூடிய "புத ஆதித்யயோகம் மற்றும் சரஸ்வதியோகமாகும்.இந்த இணைவிற்கு குருவின் ஒன்பதாம் பார்வையையும் பெற்று முழுப்பலம் பெற்றதால்தான் பிறவியிலே இசைஞானத்தோடு பிறந்துள்ளார்.

                 மேலும் இந்த அமைப்பு(சூரி-புதன் இணைவு)வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு திரிகோணஸ்தானமான ஒன்பதாம்
இடம் ஆகும்.

              இத்துடன் சினிமா மற்றும் கலைக்காரகனான சுக்கிரன் லாபஸ்தானத்தில் ஆட்சியும் பெற்று இருப்பதால் சினிமா உலகிலும் பல சாதனைகளை சாதிக்கமுடிந்தது.
*************************************

                          

              அடுத்தப்படியாக இசை என்பது  மேல்தட்டு மக்களுக்கு உரிய ஒன்று என்பதை உடைத்தறிந்தவர்.

          கிராமத்துவாசிகளையும் ,கிராமத்து பக்கம் தமிழக ரசிகர்களை திரைதிருப்பிவிட்டவர்.கலைஞர் முதல்வராக இருந்தபோது "இசைஞானி"இவருக்கு வழங்கி கொளரவித்தார்.

இவர் இசைஞானியானதற்கான கிரகநிலை விபரமும் விளக்கமும்

ரிஷபலக்கனம் மற்றும் ரிஷபராசி

1)-ல் சூரியன்,புதன்,சந்திரன்,சனி
3)-ல் குரு,சுக்கிரன் மற்றும் ராகு
9)ல் கேது
11)-ல் செவ்வாய்

             இவருடைய சாதகத்தில் பாருங்கள் இசைக்காரகனான சந்திரன் மூன்றாமிட ஆதிபத்தியம் பெற்று லக்கனத்தில் உச்சம் பெற்றும் மற்றும் லக்கனாதிபதியான சுக்கிரன் மூன்றில் பரிவர்தனை பெற்று பலம் பெற்றிருப்பதை கவனியுங்கள்..

        மேலும் கீர்த்திஸ்தானத்தில் குருபகவானும் உச்சம்பெற்று தனது லாபஸ்தானத்தை பார்த்து தான் சார்ந்த தொழில் பேரும்புகழும் அடைய காரணமாகியது.

            மேலும் குரு உச்சம்பெற்று ஞானக்காரகன் கேதுவை பார்த்தது "ஜனனி ஜனனி  ஜகம்நி "போன்ற தெய்வீக பாடல்களை தானே இசையமைத்து பாடவைத்தது.

              தொழில்காரகன் சனிபகவான் லக்கனத்தில் நின்று தன்ஸ்தானத்தை பார்ப்பது தொழிலில் சிறந்துவிளங்கவும் காரணமாகிறது.இசைக்கு பல கருவிகளை பயன்படுத்தும் யோகத்தை வழங்கியது.

               மேலும் லக்கனத்தில் சூரியனும்,புதனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தையும் பெற்றுள்ளது.

***********************/*******/**

                               

          தமிழக திரைப்படத்தை உலகமே வியந்து பார்க்கவைத்தவர். தமிழ்திரைப்படத்தை தனது நவீன தொழில்நுட்ப திறமையால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியதில் இவரை விஞ்சியவர் யாருமில்லை.
ஆஸ்கார் அவாடு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.இவர் ஒரே படத்தின் மூலம் இரு ஆஸ்கார்விருதை தட்டியவர்.ஆஸ்கார் மேடையில் ஏறிய முதல்தமிழன்.அங்கு "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் பேசி தமிழரின் புகழை அகிலம் உணர செய்த     திருவாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது சாதகநிலையை ஆராய்வோம்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சாதகம்

ரிஷப லக்கனம் மற்றும் ரிஷபராசி

1)-ல் சந்திரன்
3)ல்-குரு
4)-ல் செவ்வாய்
6)-ல் கேது
10)-ல் சூரியன்,புதன்
11)-ல் சுக்கிரன்,சனி
12)-ல் ராகு

              இவருடைய சாதகத்தில் லக்கனாதிபதி கலைக்காரகன் சுக்கிரன் உச்சம் பெற்று லாபஸ்தானமேறி அதில் கணிப்பொறிகாரகன் சனி பகவானும் சேர்ந்து குரு மனையேறி உச்ச குருவின் ஒன்பதாம் பார்வை பெற்றதால் கனிப்பொறியை இசைக்குள் புகுத்தி பல புதிய சாதனை புரிந்துள்ளார்.

            மேலும் மூன்றுக்குரியவரும் இசைக்காரகருமான சந்திரபகவான் லக்கனத்தில் உச்சம் பெற்று அந்த வீட்டு அதிபர் சுக்கிரனும் உச்சம் பெற்று மேலும் சுக்கிரன் உச்சம் பெற்ற வீட்டின் அதிபர் குருபகவானும் உச்சம்பெறுவது "டிரிபிள் டெபாஸிட்டர்"முறையில் பலம்பெற்றதால்தான் இளவயதிலே அகில உலகமும் வியக்கும் வகையில் இசையும்,பாடலும் பாடி ஆஸ்கர்நாயகனாக சாதனையாளக கிரகங்கள் மாற்றியிருக்கிறது என ஆய்ந்து விளக்குகினேன்.

          இவரது சாதகத்திலும் பாருங்கள் "சூரியனும்,புதனும் "இணைந்து #புதயாதிக்கயோகமான சரஸ்வதியகமானது தொழில்ஸ்தானமான பத்தில் அமர்ந்து திக்பலம் பெற்றும் உள்ளார்.
மேற்கண்ட மூவரும் இசையில் சாம்பவனாக திகழ்வதற்கு உகந்த கிரகநிலைகள் ஆரம்பத்தில் கூறிய பொது மற்றும் சிறப்பு விதிகளோடு ஒத்திருக்கிறது என்பதை எனது சோதிட அனுபவத்தோடு ஆராய்சி செய்து விளக்கியிருக்கிறேன்.எல்லாம் பரம்பொருளின் சித்தம் .நான் என்பது ஒரு கருவியே.

                            


இப்படிக்கு
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

(தங்களது சாதகங்களை ஆய்வுசெய்து உங்களது சாதகத்தில் எவை பலம் உடைய கிரகங்கள் மற்றும் பலவீனமான கிரகங்கள் அவற்றால் உண்டாகும் பலன்களை போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவலை எனது வாட்ஸ்அப் எண்ணான
97 151 89 647 க்கு தெரிவிக்கவும்.)
Online Astro consult conduct my cell

செல்: 97 151 89 647
செல்: 740 257 08 99

What's up
  97 151 89 647

My Email
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
******************************