Tuesday 19 July 2022

லக்கனம் முதலாக 12 பாவகம் தரும் பலன்கள்

 லக்கனம் முதலாக 12 பாவகம் தரும் பலன்கள்.

             


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒரு மனிதன் எப்படி இருப்பான்?, 

எப்படி நடந்து கொள்வான் ? மற்றும் அவனது வாழ்வின் வழி நிலையையும் ,செயல் திறனையும் லக்கனத்தை கொண்டு அறியலாம்.


 ""எத்தனை பெரிய மனிதனிடம் எத்தனை சிறிய குணம் இருக்கு !

எத்தனை சிறிய மனிதனிடம் எத்தனை பெரிய குணம் இருக்கு!""


  ஒருவரது நல்ல குணநலன்களுக்கும் மற்றும் குண கேடுகளுக்கும் அவரது  ஜாதகத்தில் லக்னாதிபதி,  லக்கனத்தில் உள்ள கிரகம் மற்றும் லக்கனத்தை பார்க்கின்ற கிரகங்கள் இவற்றை பொறுத்து அமைகிறது.


  ஒருவரது புகழ், அந்தஸ்து, கௌரவம் மற்றும் தேஜஸ் போன்றவற்றை லக்கின பாவகமே முடிவு செய்கிறது


  லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து லக்னத்தை குரு பார்த்த சாதக அமைப்பு அல்லது லக்கனத்தில் குரு இருக்கும் ஜாதக அமைப்பு உடையவர் நல்ல குணம் உடையவராகவும், நல்லவற்றை எண்ணக் கூடியவராகவும், சிந்திக்க கூடியவராகவும் மற்றும் நற்செயல் புரிபவராகவும் இருப்பார். அடுத்தவர் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுபவராகவும் இருப்பார். பொருளாதய உலகில் மற்றவரை வஞ்சித்து பொருள் ஈட்ட தெரியாத நல்ல குணங்கள் உடையவர்.  மற்றவரை வஞ்சித்து சம்பாதிக்க தெரியாத ஏமாளி ஆவார்.


  லக்கனாதிபதி சனியாக இருந்து லக்னத்தில் இருந்தாலும், லக்கனத்தை சனி பார்த்தாலும்   ஜாதகர் சோம்பேறி, சுறுசுறுப்பு இல்லாத மந்த குணம் உடையவராகவும் மற்றும் மற்றவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் குணம் கொண்டவராக திகழ்வார்.

 மற்றவருடைய துன்பத்தை கண்டு ரசிக்கும் கொடூர குணம் இருக்கும். எப்படியாவது பிறரை வஞ்சித்து  சொத்து சேர்க்கும் குணம் உடையவராக விளங்குவார்.


  அருள் அணி என்று அழைக்கப்படும் குரு பகவானை தலைவனாக கொண்ட சந்திரன், செவ்வாய் ,சூரியன்  மற்றும் கேது ஆகியவற்றை அடக்கிய அருள் அணியை சேர்ந்த லக்கனங்களான தனுசு, மீனம், மேஷம், விருச்சகம் , கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கணங்களை  லக்கணமாக கொண்டவர்கள்   பொருள் ஈட்டும் எண்ணத்தை விட உள்ளதைக் கொண்டு நல்லது என்னும் பெருந்தன்மை உடையவர் என்பதால் இதனை "அருள் அணி "என்கிறோம்.


  பொருள் அணி என்று அழைக்கப்படும் சனி, புதன் ,சுக்கிரன்  மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் கொண்ட மிதுனம் ,கன்னி, ரிஷபம் ,துலாம் ,மகரம்  மற்றும் கும்பம் ஆகிய ஆறு அணியைச் சேர்ந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் , அனைத்து ஆடம்பர வசதிகளையும் அனுபவிக்கும் எண்ணம் உடையவராகவும் அதே நேரத்தில் மனதளவில் என்றும் அமைதி இல்லாதவராகவும் திகழ்வார்கள்.


ஒருவர்  மேற்கண்ட எந்த அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அதாவது  அருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது பொருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் சுபத்துவம் ஒன்றே விதிவிலக்கு ஆகும். ஒரு ஜாதகர் எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்தை குருபார்த்த அமைப்பு சாதகரை நல்வழியில் இட்டுச் செல்லும்.


   ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் இயற்கை பாவ கிரகங்களான சூரியன், தேய்பிறை சந்திரன், சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது இருந்தாலும் அல்லது சனி அல்லது செவ்வாய் தனித்தனியாக பார்த்தாலும் அல்லது சேர்ந்து பார்த்தாலும் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும் அல்லது அந்த கிரகமும் பாவத்துவமாகி  பாதிக்கப்படும்.


 இவ்வாறாக பாதிக்கப்பட்ட ஸ்தானம் எந்த ஸ்தானமான இருந்தாலும் அவை தொடர்புடைய ஆதிபத்தியம் பலன்கள் அதன் தசையில் பாதிக்கப்படும்.இதேபோல பாவத்துவமான கிரக காரக பலன்களும் ஜாதகருக்கு பெருமளவு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை தரும்.


  ஒருவரது  ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனை கொண்டவர்கள் ஜாதகத்தில் இரண்டு சனி பகவானை ஜாதகத்தில் கொண்டவர் ஆவார்.அதேபோல வளர்பிறை சந்திரனை கொண்டவர்கள் இரண்டு குரு பகவானை சாதகத்தில் கொண்டவர்கள் ஆவார்கள்.


 ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் பாவத்துவம் பெறாமல்

சுப கிரகங்களான குரு , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை தொடர்பாக கொண்ட ஸ்தானமும் மற்றும் கிரகமும் அதன் தசையில் சுபத்துவமாகி நல்ல பலனைத் தருகிறது.


   பொதுவாக லக்கனாதிபதி வலுப்பெற்று பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள், வளர்பிறைச் சந்திரனுக்கு ஆறு, ஏழு எட்டில் இயற்கை சுப கிரகங்களை குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஐ பெற்றவர்கள் , ராசி, லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகிய ஏதாவது ஒன்றை குரு பார்த்த அமைப்பை பெற்றவர்கள்.ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் குரு அல்லது வளர்பிறை சந்திரன் பார்க்கின்ற அமைப்பை பெற்றவர்களும் யோகசாலிகள் ஆவார்.


 லக்கன ஆதிபத்திய  காரகராக சூரிய பகவான் விளங்குகிறார்


    ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடத்தைக் கொண்டு தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றையும்,


  இரண்டாம் இடத்தை கொண்டு ஒருவருக்கு வரக்கூடிய தன வரவையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம்.

இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இரண்டாம் இடத்தை இயற்கை சுபகரங்களால் பார்க்கப்பட்ட அமைப்பை பெற்றவர்கள் நேரிய வழியில் தனம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.


 அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் ராகு, சனி, செவ்வாய் இருந்தாலும் தனஸ்தானத்தை சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நேரிய வழி அல்லாத வகையில் பணம் சம்பாதிப்பவராக இருப்பார்.


    பனிரெண்டாம் இடத்திலிருந்து  சனி பகவான்  மூன்றாம் பார்வையாக வாக்கு ஸ்தானத்தை பார்க்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் பொய் சொல்லி பிழைக்கும் தொழிலான வழக்கறிஞர் போன்ற துறைகளில் ஈடுபடுவார்.


  ஒருவருடைய கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை இரண்டாம் இடத்தைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.


   வீட்டை விட்டு வெளியில் சென்று பொருளீட்டி வீடு செல்லும் ஆடவர்க்கு மன அமைதியை தேடும் இடம் குடும்பமாகும் அந்த ஒரு குடும்பம் ஒரு கோவிலாக ஒரு மன அமைதி மிக்க இடமாக மாற இரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்க வேண்டும்.


 இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அவை களத்திர ஸ்தானத்திற்கு அதாவது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணைக்கு எட்டாம் இடம் என்பதால் அதில் இருக்கும் கிரங்கம் அதன் தசா புத்திகளில் சா

அதாவது வாழ்க்கை துணைக்கு கெடுபுலனை தரும்.


   தனக்காரகனாக குரு பகவான் திகழ்கிறார். ஒருவருக்கு பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி, ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தருபவர் குரு பகவானே ஆவார்.


 தனக்காரகன் ஆன குருபகவான் தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்வது காரகோ பாவ நாஸ்தி என்றாலும் இரண்டாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனத்தை தவிர ஏனைய பிற அமைப்பான குடும்ப, வாக்கு, கல்வி மற்றும் நேத்திரம் ஆகியவற்றை பாதிக்க மாட்டார்.


  

  மூன்றாம் இடத்தைக் கொண்டு கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து ,கற்பனை உணர்வு, காம வீரியம், எழுத்து, இசை ஆர்வம் , இளைய சகோதர ஸ்தானம், செவி ,செவி வழி செய்திகள்,இளைய சகோதரர்களை பற்றி அறிந்து கொள்ளுதல்,


  "  தம்பி உடையான்  படைக்கு அஞ்சான்" என்பார்கள். ஒருவருக்கு அமைந்த சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள உதவுகிறது.


    நான்காம் இடத்தை கொண்டு தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் , வண்டி வாகன சுகம் , வீடு  ,கல்வி நிலை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


  நான்காம் இடத்தைக் கொண்டும் மற்றும் மாதுர்காரகனான சந்திரன் பகவானை கொண்டும் டி ஒருவருக்கு அமையக்கூடிய தாய் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. நான்காம் இடம் அதன் காரகரான சுக்கிர பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து வண்டி வாகனம் மற்றும் தனக்கு அமையக்கூடிய வீடு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். தனக்கு அமையக்கூடிய வீடு மாளிகை போன்ற வீடா மச்சி வீடா, ஓட்டு வீடா என்பது போன்ற விவரங்களையும் இதிலிருந்து அறியலாம். 


    ஆடி கார், பிஎம்டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்களின் வலம் வரக்கூடிய யோக  அமைப்பையும் நான்காம் இடத்தை கொண்டும் மற்றும் வாகனக்காரன் சுக்கிரனை கொண்டும் முடிவு செய்யப்படுகிறது.


 ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம், புத்திர பாக்கியம், புத்தி, அம்மன் வர்க்கம் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


 ஒருவர் தனது புத்தியை நேர்வழியில் பயன்படுத்துகிறாரா ? அல்லது குறுக்கு வழியில் பயன்படுத்துகிறாரா ?

 என்பது போன்ற விவரங்களை ஐந்தாமிடத்தின்  சுபத்துவம் அல்லது பாவத்துவ நிலை கொண்டு ஆராயப்படுகிறது.


 ஐந்தாம் இடத்திற்கு காரகராக குரு பகவான் திகழ்கிறார் ஐந்தாம் இடத்தை கொண்டும் மற்றும் அதன் புத்திர காரகன் குருபகவானை கொண்டும் தனக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


 ஆறாம் இடம் ருணம் ,ரோகம், கடன் ,பிணி எதிர்ப்பு ,மானம் ,அவமானம் ஆள் அடிமை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


  ஆறாம் இடம் சனி , செவ்வாய்  போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அல்லது ஆறாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் போன்றார்கள் இடம்பெற்றாலோ தனக்கு தேவையில்லா கடன், பிணி , எதிர்ப்புகள் இல்லாமல் போய்விடும் .ஆனால் அதே நேரத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்த சனி அல்லது செவ்வாய் தசைகள் வரும் பொழுது கடினமான வேதனையை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.


 ஆறாம்  இடம் கெட்டால் எந்த வேலையும் கிடைக்காது. ஆறாம் இடம் என்பது ஆள் அடிமைத்தனமாகும் .ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் கெட்டு அதேநேரத்தில் ஆறாம் இடம் வலுத்தால் பிறரிடம் சென்று வாழ்நாள் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.


  ஆறாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் பார்த்து வலு பெறக்கூடாது.


 ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும்.

தனக்கு வரும் வாழ்க்கைத் துணை பற்றி அறிந்து கொள்ளவும் ,தனக்கும் வாழ்க்கை துணைக்கும் உள்ள அந்தரங்க உறவு நிலைகளை அறிந்து கொள்ளவும் நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.


எட்டாம் இடம் ஆயுள், வம்பு, சண்டை, வழக்கு, வீண் விவாதம் , மறைபொருள் உண்மைகள் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.


ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் ஆகும். பாக்கிய நிலை பற்றி அறிந்து கொள்ளவும் , தந்தை வழி உறவுகளை அறிந்து கொள்ள ,தந்தையை பற்றி அறிந்து கொள்ள ,தனக்கு வரக்கூடிய வருமானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, தான தர்ம குணங்கள் மற்றும் மேல்நிலைக் கல்வி போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படுகிறது.


  தனக்கு அமையக்கூடிய தந்தை எப்படிப்பட்டவர்? தந்தை வழி ஆதரவுகள் உண்டா? தந்தை வழி உறவுகளால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்குமா? போன்ற விஷயங்கள் ஆராய பயன்படுகிறது


 ஒருவருடைய ஜீவனம் ,தொழில் நிலை மற்றும் கர்ம நிலைகள் பற்றி அறிந்து கொள்ளப்படுகிறது.


 தொழிற் ஸ்தானமாக பத்தாமிடத்தை கருதினாலும் பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்களை மட்டும் வைத்து அல்லது பத்தாமிட அதிபதியினை பொறுத்து ஒருவருடைய தொழில் நிலையை முடிவு செய்து விட முடியாது. அவ்வாறு பார்க்கும் போது பெரும்பாலான சாதகர்கள் தான் செய்யும் தொழிலுக்கும் , தொழில் ஸ்தானாதிபதிக்கு  உரிய தொழிலுக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடுகிறது .


    அதிக சுபத்துவமாக எந்த கிரகம் ராசி அல்லது லக்கனத்திற்கு  தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அல்லது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில்  தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த தொழில் சாதகருக்கு அமையும்.


 பதினொன்றாம் இடம் ஒருவருக்கு லாப ஸ்தானமாகும். வாழ்வில் அவர் அடையக்கூடிய லாப நிலைகளையும், மூத்த சகோதரன் ,மறுதாரம் போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படும் இடமாகும்.

 

   ஒரு  மனித வாழ்வின் இறுதி நிலையையும் மற்றும் அவரது முக்தி நிலையையும் பன்னிரெண்டாம் இடத்தை கொண்டும் அறியப்படுகிறது. அயன், சயன மற்றும்  முக்தி நிலை பற்றி அறிந்து கொள்ள பயன்படுகிறது ஒரு நாளின் இறுதி நிலை அறிந்து கொள்ளப்படுகிறது.ஒரு நாளின் இறுதியான இரவில் நிகழும் அந்தரங்க நிலைகளையும் மற்றும் படுக்கை சுகத்தையும் அறிந்து கொள்ள பயன்படுகிறது.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & gpay

   9715189647

         Cell

 9715189647

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                       


 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

பாவ கிரகங்கள் மற்றும் லக்கன அவ யோகி எப்போது நன்மை செய்யும்?-கோடீஸ்வர யோகம்

 பாவ கிரகங்கள் மற்றும் லக்கன அவ யோகி எப்போது நன்மை செய்யும்?-கோடீஸ்வர உதாரண ஜாதக விளக்கம்.


                          


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 இயற்கைப் பாவக் கிரகங்கள் சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் பாவியுடன் சேர்ந்த புதன்  மற்றும் தேய்பிறைச் சந்திரன் ஆகும்.


  இங்கு சனி முழுப்பாவர்,

 செவ்வாய்- முக்கால் பாவர்,

 சூரியன் அரை பாலர் ஆகும்.


     நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தான் சேரும் இடத்தை பொருத்து பாவ தன்மை அமைகிறது. 


       சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்தால் முழு பாவர் ஆவார். வளர்பிறை சந்திரனாக இருந்தால் முழுச் சுபர் ஆவார்.எனவே சந்திரபகவான் ஒரு மாதத்தில் பாதி நாட்கள் சுபராகவும் மற்றும் மீத பாதி நாட்கள் பாவராகவும் செயல்படுவார்.


  சனி ,செவ்வாய் ,ராகு மற்றும் கேது உடன் சேர்ந்த புதன் பாவியாக செயல்படுகிறார்.


  பொதுவாக பாவர்கள் நல்லது தர வேண்டும் எனில் அவை  வலிமை இழந்து விட வேண்டும்.அதாவது நேர் வலு  பெறக்கூடாது.


  உதாரணமாக துலாம் லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று நிற்பதை விட,.  ஏழாம் இடமான மேஷத்தில் நீசம் பெற்று அதே நேரத்தில் ஸ்தான பலத்தை இழந்தாலும் திக்பலம் என்ற வகையில் மறைமுக வலுப்பெற்று நிற்கின்ற போது அதன் தசையில் யோகத்தைத் தரும்.துலா லக்கனத்திற்கு உச்சம் பெற்ற சனி ஜாதகரை  அடிமை வேலை பார்க்க வைத்துவிடும்.


 இலக்கண அவ யோகியானவர்  நன்மைகளைத் தர உப ஸ்தானமான 

3, 6, 10 ,11 ஆம்  இடங்களில் நட்பு நிலை பெற்று அமர்ந்து இருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் நன்மையைத் தரும்.


  ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி, மகரம் கும்பம் ஆகிய ராசிகளுக்கு குரு, சூரியன், சந்திரன் , செவ்வாய்  மற்றும் கேது 

தசைகள் அவ யோகத்தை தரும்.


  தனுசு ,மீனம், மேஷம் ,விருச்சிகம், கடகம், மற்றும் சிம்மம் ஆகிய ராசிகளுக்கு சுக்கிரன், சனி, புதன் மற்றும் ராகு தசைகள் அவ யோகத்தைத் தரும்.


 உதாரணமாக துலாம் லக்னத்திற்கு இலக்கண பாவிகளான குரு மூன்று மற்றும்  ஆறாம் இடத்தில்  ஆட்சி பெறுவதோ அல்லது பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று வலுப்பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல.மாறாக குரு பகவான் உபஜெய ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து நட்பு நிலையில் இருப்பது அதன் தசை காலங்களில் யோகத்தை தரும்.அதாவது பாவத்பாவ அமைப்பின் படியும் ஆய்ந்து நோக்கினால்  துலா லக்கினத்திற்கு ஆறாம் இடத்திற்கு , ஆறாம் இடமான  மறைவிட ஸ்தானமான  பதினொன்றாம் இடத்தில் நிற்பது குரு நல்லதைத் தரும்.துலா லக்கனத்திற்கு  குருபகவான் வேறு  எந்த இடத்தில் நின்றாலும் பாவியாவார்.


உதாரணமாக கோடீஸ்வரர் ஜாதகம்.

(பிறப்பு விவரம் குறிப்பிடவில்லை.

மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜி ஐயா நண்பர் ஜாதகம்)


                        



 துலாம் லக்கனம்

கன்னி ராசி


 கீழே உதாரணமாக எடுத்துக் கொண்ட கோடீஸ்வரர் யோக ஜாதகம்

 லக்கன அவ யோகி குரு பகவான்  மற்றும் பாவ கிரகமான சனி பகவான் தனது  தசையில் மேற்கண்ட அனைத்து விதி அமைப்புகளையும் பெற்றிருக்கும் தன்மையால் குரு தசையிலும்  மற்றும் அதை தொடர்ந்து வரும் சனி தசையில் ஜாதகரை பெரிய கோடீஸ்வரராக மாற்றியது.


 இவரது ஜாதகத்தில்

 துலா லக்கினத்திற்கு  மூன்று மற்றும் ஆறாம் இட அதிபதியும் லக்கன அவ யோகியான குருபகவான் பாவத் பாவ அமைப்பின் படி ஆறாம் வீட்டிற்கு ஆறாம்   இடத்தில் மறைந்து இலக்கணத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அதாவது உப ஜெய ஸ்தானத்தில் (3,6,10,11)  நட்பு நிலையில் இருப்பதால் குரு பகவான் யோகம் அதன் தசையில் ஜாதகரை கோடீஸ்வரராக ஆகிவிட்டார்.


  அடுத்து வரக்கூடிய சனி தசை  துலா லக்கினத்திற்கு யோகர் ஆவார்.  பாவ கிரகம் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வழி பெறக்கூடாது என்ற வகையில்

துலா லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்து அதே நேரத்தில் ஸ்தான பலத்தை இழந்த கிரகம் திக்பலம் பெறும்பொழுது மறைமுக வலுப்பெறும் என்ற வகையில் சனி பகவான்  ஏழாம் இடத்தில் திக் பலம் அடைந்து  குரு பகவானின் ஒன்பதாம் பார்வையினை பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் தனது தசையில் மிகுந்த கோடீஸ்வரர் யோகத்தை கொடுத்தது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல்

  9715189647

   செல்

 9715189647

  7402570899


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Email masterastroravi@gmail.com

ஜோதிட சூத்திரங்கள் -(6) 🌙 சந்திரன் பகவான்

 ஜோதிட சூத்திரங்கள் -(6)

  (சந்திரன் 🌙 பகவான்)

                


செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நவகிரகங்களில் சந்திர பகவானை ஒளி கிரகமாக கருதப்படுகிறது. சந்திர பகவானை மனநிலை காரகன் என்றும் மற்றும் மாதுர் காரகன் என்‌றும் அழைக்கப்படுகிறது.


  கடகத்தை சொந்த ஆட்சி வீடாகவும், ரிஷபத்தில் உச்சம் மற்றும் மூலதிரிகோணம்  வீடாகவும் மற்றும் விருச்சிகத்தில் நீசம் என்ற ஸ்தான பலத்தை பெற்றுத் திகழ்கிறது. சந்திரன் பகவான் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தவிர  எல்லா கிரகங்களையும் நட்பு கிரகமாக கருதுகிறது.


 சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் தாங்குவார் எனவே சந்திரன் நாள் கோள்  வரிசையில் வருவார். சந்திரன் பகவானுக்கு வக்கிரம் மற்றும் அஸ்தமனம் கிடையாது .


சந்திரன் சூரியனைப் 12 பாகைக்குள்ளாக நெருங்கும் போது அமாவாசை யோகம் பெறுகிறது. சந்திரன் பகவான் சூரியனுக்கு சம சப்தமாக வருகின்ற வேளையில் பௌர்ணமி யோகம் தருகிறது.


 வளர்பிறை மற்றும் தேய்பிறை போன்ற அமைப்புகள் சந்திரனுடைய நகர்வை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்படுகிறது.


 பொதுவாக அமாவாசை விட்டு விலகி அதாவது அஸ்தமன கதியிலிருந்து விலகி உதய கதிக்கு வரும் சந்திரன் இரண்டாம் பாவத்தில் இருந்து ஏழாம் பாவம் வரை உள்ள சந்திரன் வளர்பிறைச் சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. இதனை சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என அழைக்கப்படுகிறது.

 

    அதே போல பொளர்ணமி நிதியிலிருந்து விலகி அமாவாசையை நோக்கி  அதாவது ஜாதக கட்டத்தில் எட்டாம் பாவம் முதலாக பன்னிரெண்டாம் பாவம் வரை வரும் சந்திரன் தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது. கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்றழைக்கப்படுகிறது.


 பொதுவாக விதிகளுக்குள் சில விதிவிலக்குகள் உண்டு என்ற வகையில் அமாவாசை விட்டு விலகிய சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தாலும் சஷ்டி திதி வரை அதனை தேய்பிறைச் சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 அதேபோல பௌர்ணமி விட்டு விலகிய சந்திரனை தேய்பிறை சந்திரன் ஆகவே கருதினாலும் சஷ்டி திதி வரை வளர்பிறைச் சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் சுபமுகூர்த்தங்கள் வைக்கலாம்.


 வளர் பிறைச் சந்திரனை இயற்கை சுபராகவும் மற்றும் தேய்பிறைச் சந்திரன் இயற்கை பாவராகவும்  கருதப்படுகிறது .


  சந்திரன் பகவான் குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம் , கடகம் மற்றும்  சிம்மம் ஆகிய லக்கனங்களுக்கு வளர்பிறை சந்திரனாக இருக்கும் பட்சத்தில் நல்லதை தரக் கூடிய கிரகமாக கருதப்படுகிறது.


 சந்திர பகவான் ஒரு ராசியில் இடம்பெறும்போது அதனையே "ஜென்ம ராசியாகக்" கருதப்படுகிறது. சந்திர பகவான் இடம்பெறும் நட்சத்திரத்தை "ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தின் தசை நாதனை ஜாதகரின் துவக்க தசையாக கருதப்படுகிறது.


  சந்திர பகவான் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் தசா நாதன் ஆக  திகழ்கிறார். மனித வாழ்வில் சந்திர தசை வரும்போது 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.


 சந்திர பகவானுடன் நிழல் கிரகமான ராகு பகவான் அல்லது இருள் கிரகமான சனிபகவான் இணைவது மனதளவில் உறுதி இல்லாத நிலையினை ஜாதகருக்கு தரும். சந்திரனுடன் ராகு பகவான் எட்டு  பாகை அளவில் நெருக்கமாக இணைந்து சனி பார்க்கின்ற அமைப்பு அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு தருகிறது  தாய்க்கு  பாதிப்பு உண்டாகிறது. சுபத்துவம் ஒன்றே மாற்று வழியாகும் இந்த அமைப்பில் குரு பகவான் ,தனித்த புதன் மற்றும்  சுக்கிரன் ஆகியவற்றின்  தொடர்பு வரும் பொழுது இந்த பாதிப்பில் இருந்து சாதகர் விடுபடுகிறார்.


  குருவுடன் இணையும்போது "குருச்சந்திர யோகத்தையும் "

சந்திர பகவான் செவ்வாய் உடன் இணையும் போது "சசிமங்கள யோகத்தையும்"

 சந்திரன் பகவான் சுக்கிரன் உடன் இணைந்து  "பிருகு மங்கள யோகத்தையும்" தருவார்.


  சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் இயக்கும் பொழுது சோதிட  ஞானத்தைச்  தருவார்.


 சந்திர பகவானுக்கு கேந்திரத்தில் குரு பகவான் இருந்தால் கஜ-கேசரி யோகத்தை தருகிறார்.


 சந்திர பகவான் சம சப்தமாக சனி பார்க்கும் அமைப்பு புணர்பூ தோஷத்தை தருவார்.சந்திரனுக்கு மறைவிட ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது 

"சகடை யோகம்" ஆகும் இது ஏற்ற, இறக்கம் நிறைந்த வாழ்வு தரும்.


  சந்திரனுக்கு 6, 7 மற்றும் 8ஆம் இடங்களில் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன், சுக்கிரன் அமர்ந்து இருப்பது சந்திராதி யோகம் ஆகும். 

சந்திராதி யோகம் பெற்ற கிரக தசைகள் யோகத்தையும் அள்ளித் தரும்.


  ராசிக்கு அதாவது சந்திரனுக்கு  இரண்டு புறங்களிலும் சுப கிரகங்கள் அமர்ந்து இருந்தால்  அது "சுப கர்த்தாரி யோகம்" ஆகும்..


 சந்திரனுக்கு  இரண்டில் சுப கிரகங்கள் இருப்பது" அனபா யோகம் "என்றும், சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுப கிரகங்கள் இருப்பது" சுனபா யோகம்" என்றும் அழைக்கப்படுகிறது.


 கும்பம் லக்கனத்திற்கு சந்திர பகவான் ஆறாம் அதிபதி என்ற வகையில் அதன் தசை காலங்களில் ‌கடன் , பிணி, எதிர்ப்பு, அசிங்கம் ,கேவலம்  மற்றும் அவமானம் போன்றவற்றை தருவார.


 ஜெனன கால ஜாதகத்தினை வைத்து பலனறிவதற்கு இலக்கணம் முதன்மையானது. அதே நேரத்தில் கோச்சர அடிப்படையில் பலன்களை அறிய ராசியே முதன்மையானது ஆகும்.


  லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் அறிவதே "விதி "என்றும், ராசியை அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு பலனறிவது  மதி என்றும் மற்றும் சூரியனை அடிப்படையாக கொண்டு பலனை அறிவது "கதி "என்றும் அழைக்கப்படுகிறது.


 ஒருவருக்கு சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி வரும் காலங்கள் ஏழரை சனி ஆரம்பமாகிறது.

பனிரெண்டாம் இடம் சனியை 

"விரயச் சனி" என்றும், 

ராசியில் இருக்கும் சனியை

 "ஜென்ம சனி "என்றும்  மற்றும் இரண்டாம் இடத்தில் வரும் சனியை "பாதச்சனி" என்றும் அழைக்கப்படுகிறது.


   இதேபோல் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் வரும் சனியை" அர்த்தாஷ்டமச் சனி" என்றும், 

ஏழாமிடத்தில் வரும் சனியை 

"கண்டச் சனி" என்றும் மற்றும் எட்டாம் இடத்திற்கு வரக்கூடிய சனியை

 " அஷ்டமச் சனி" என்றும் அழைக்கப்படுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


   செல்

  9715189647

   7402570899


Email :  masterastroravi@gmail.com


                          



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd,

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Tuesday 5 July 2022

சம்பாதிக்கும் கணவன் -மனைவியா நீங்கள்?

 சம்பாதிக்கும் கணவன் /மனைவியா நீங்கள்?


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
   ஆரம்ப காலங்களில்   "சம்பாதிப்பது என்பது புருஷ லட்சணம்"ஆக இருந்து வந்தது .ஆனால் பொருள் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றும் தன்மை கணவன் -மனைவி ஆகிய இருவருக்கும்
சமமான நிலை என்ற அளவில் வந்து விட்ட இக்கால கட்டத்தில் ஜாதகத்தில் இருவரது கிரக நிலைகளையும் , தசை புக்தி அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் ஆகியவற்றை  ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
 தற்போது திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இதுபோன்ற சம்பாதிக்கும் அமைப்புகளையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
 இன்றைய காலகட்டங்களில் தம்பதிகளாக கூடிய இருவரும் படித்து திருமணத்திற்கு முன்பே  வேலை பார்க்கக் கூடிய நிலையில் உள்ளார்கள் . அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கக் கூடிய நபர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  சிலர் வெளிநாடுகளில் வேலை பார்த்து அயல் தேச பெண்ணை  அல்லது இந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடிய பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளக் கூடிய அமைப்பில் வந்து விடுகிறார்கள்.
  இவ்வாறு சம்பாதிக்கும் நிலையில் உள்ள இருவரும் திருமண பந்தத்தில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனையின் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் அவர்களது ஜாதக அமைப்பில் அதற்கு ஏற்றார்போல் கிரகநிலைகள் உள்ளதா? என ஆராய்ந்து பார்த்து திருமண பொருத்தம் போட வேண்டும்.
  இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று சிலர் living together என்ற அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வித உடன்பாடு இல்லாமல் இணைந்து வாழும் சூழல் வந்து விட்டது.எவ்வளவு நாட்கள் அவர்களுக்குள் புரிந்துணர்வு இருக்கும் வரையில் தொடரலாம்.கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில்  அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரிந்து சென்று விடலாம் என இதுபோன்ற நிலைகளும் பரவலாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது நகர்புறங்களில் வசிக்கும் இளைஞர்களது மனநிலையாக அமைகிறது.
 பொதுவாக சினிமா மற்றும் மீடியாக்களில் ஈடுபடும் தம்பதிகள் இருவரிடம் அதிகமான மணவிலக்கு ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 பொருளாதார தற்சார்புநிலை எளிதாக வந்து விட்ட நிலையில்  ஆண்களும் ,பெண்களும் குடும்ப அமைப்புகளுக்கு உரிய வரம்புகளிலிருந்து எல்லை மீறும்போது இதுபோன்ற மண விலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 தமிழகத்தின் மிகப்பெரிய பலமே குடும்ப அமைப்புகள் தான்..இவை காலப்போக்கில் நவநாகரீகம் என்ற நிலையில் சீரழிவது துர்பாக்கிய நிலை ஆகும்.
 இன்றைய இனையத்தில் அபரீதமான வளர்ச்சியால் அதிகமாக  சமூக ஊடகங்களை நள்ளிரவு வரை பயன்படுத்துவது ( IT field ) , சரியான தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஒருவிதமான தாம்பத்திய உறவில் செயலின்மை உருவாகி தங்களது வாழ்க்கை துணையினை திருப்தி படுத்த இயலாத நிலை மற்றும் தன்னை இளமையாக வைத்து கொள்ளும் பொருட்டு குழந்தை உடனடியாக பெற விரும்பாமல் காலம் தாழ்த்தி பிறகு விருப்பப்படும் நேரத்தில் குழந்தை பாக்கியம் பெற இயலாத நிலை மாற்றம் ஒரே குழந்தை போதும் என்ற மனநிலையில் ஒரு பெண்குழந்தை உடன் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டு பிறகு காலம் தவறிய பிறகு ஒரு ஆண் குழந்தைக்கும் விருப்பப்படும் நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் இது போன்ற பல்வேறு சூழல்களை ஆய்வு செய்து பொருத்தம் பார்க்க வேண்டும்.
x

திருமணம் ஆகாத நிலை (நோ marriage)

 திருமணம் ஆகாத நிலை

 (No marriage)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவரது ஜாதகத்தில் திருமணம் தொடர்பான விவரங்களை ஆராய்ந்து பெற இலக்கணம் என்ற சாதகர் ,
குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் 
ஆகிய நான்கு ஸ்தாணங்களை லக்கனம் மற்றும் ராசி என இரண்டு வகைகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
  இவை தவிர கிரகங்களில் களத்திர காரகன் என்று அழைக்கப்படக்கூடிய நீடித்த தாம்பத்திய சுகத்தை அள்ளித் தரக்கூடிய சுக்கிரன் பகவான் பற்றியும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகியவற்றின் நிலை மற்றும் வலிமையை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
கால தாமதம திருமணமா அல்லது திருமணமே ஆகாத நிலையா ?
பின்வரும் வகையில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்

.
    1) எவர் ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெறுவது. 
   
      2) மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களை இயற்கை சுப கிரக பார்வை இல்லாமல் சுபத்துவம பெறாத சனி மற்றும் செவ்வாய் தனித்தனியாக அல்லது சேர்ந்தோ பார்க்கின்ற அமைப்பு


    3) மேற்கண்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் அதிபதிகள் பகை, நீசம் , அஸ்தமனம் , மறைவிடம் ஏறி நிற்றல் அல்லது சனி , செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் தொடர்பை பெறல் போன்ற விதிகள் திருமணம் காலதாமதம் ஆக காரணமாகிறது.


     4) இதேபோல நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரனும் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தரக்கூடிய புத்திரகாரகன் குரு பகவானும் ஜாதக கட்டத்தில் எவ்வித நிலையில் அமைந்து உள்ளார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்கப்பட வேண்டும். பொதுவாக இவ்விரு கிரகங்கள் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் பாவிகளான சனி, செவ்வாய், ராகு கேதுவுடன் தொடர்பு கொள்ளல் மற்றும் மறைவிடம் செல்லல் போன்ற வகைகளில் பலம் இழக்க கூடாது.


    5) இதற்கு மேலாக தசா புக்தி அடிப்படையில் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகமும் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய நேரமும் ஜாதகருக்கு வந்து விட்டதா? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

.
     6) திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறைந்த பட்சம் ஒரு முப்பது ஆண்டுகளாக நல்ல முறையாக வாழக்கூடிய தசா அமைப்புகள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


     7) மேற்கண்ட வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் திருமண பாவங்களும்(1,2,7,8) திருமணத்திற்கு உரிய காரக கிரகமான சுக்கிரன் மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவை எவ்விதத்தில் பலம் இழந்துள்ளது என்ற நிலையை வைத்து திருமணம் கால தாமதம் ஆகுமா ?அல்லது திருமணம் நடக்க வாய்ப்பில்லையா ? என்பதை கண்டறியலாம்.
திருமணம் ஆக இயலாத ஜாதகம்
பிறந்த தேதி :26.02.1984
பிறந்த நேரம்: 1.25
பிறந்த நாடு : ஜெர்மனி
  ஜாதக கட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
                       

லக்கன அடிப்படையில் ஆய்வு
  லக்னத்தில் கேது பகவான் அமர்ந்து, லக்னாதிபதியான செவ்வாய் பகவான் மறைவிட ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் சேர்ந்து பாவத்துவம் அடைந்த நிலை.


     குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று நிலையில் இருந்தாலும் அவருடன் பாவரான தேய்பிறை சந்திரன் நெருக்கமாக அமர்ந்து,
விரய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள உச்சம் பெற்ற சனி பகவான் ஆனவர், செவ்வாயுடன் நெருக்கமான பாவத்துமான நிலையில் மூன்றாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் அதில் உள்ள குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களையும் பார்த்து குடும்ப ஸ்தானத்தை கெடுத்து விட்டார்.


    ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, விரய ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து பாவத்துவமான செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் உள்ள ராகுவையும் பார்த்து 7-ஆம் இடத்தையும் பலவீனம் அடைய செய்து உள்ளார். மேலும் தனது நான்காம் பார்வையால் அந்த வீட்டு அதிபதியும் ,
 களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகனான சுக்கிரனை பார்த்து ஏழாம் இடத்தை மிகுந்த பாவத்துவம் ஆக்கிவிட்டார்.
  மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இட அதிபதியான புதன் பகவான் ராசிக்கு மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்தில் மறைந்து சூரியனுடன் நெருக்கமாக இணைந்து அஸ்தமனம் அடைந்து விட்டார் .
  ராசி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தால்,
சந்திரன் தேய்பிறைச் சந்திரன் ஆகிய நிலையில் ராசியை செவ்வாய் பகவான் உடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமான உச்சம் பெற்ற சனி பகவான் பார்த்து, மேலும்
, ராசிக்கு இரண்டாமிடத்தை சனியுடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமான செவ்வாய் பார்த்து , ராசிக்கு ஏழாம் இடத்தின் அதிபதி புதன் பகவான் ராசிக்கு மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் உடன் அஸ்தங்கம் அடைந்து விட்டார்.


     எட்டாம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய் உடன் நெருக்கமாக இணைந்து பவத்துவமான உச்சம் பெற்ற சனி பகவான் பத்தாம் பார்வையாக பார்த்துவிட்டார்.
புத்திரபாக்கியம் ஒரு ஆய்வு
   லக்னத்திற்கு 5ஆம் அதிபதியும் மற்றும் புத்திர காரகனான குரு பகவான் லக்னத்திற்கு இரண்டில் ஆட்சி பெற்று இருந்தாலும் தேய்பிறைச் சந்திரன் உடன் இணைந்து பவத்துவமான செவ்வாயுடன் இணைந்து உச்சம் பெற்ற சனி பகவான் பார்த்து மிகுந்த பாவத்துவம் அடைந்து விட்டது.


ராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பகவான் பார்த்தாலும் அந்த பார்வையானது செவ்வாயுடன் நெருக்கமாக இணைந்து உச்சம்பெற்ற சனியால் முன்றாம் கெட்ட பார்வையினை பெற்ற குருவின் பார்வை என்பதாலும் , மேலும் ஐந்தாம் அதிபதி செவ்வாய் பகவான் சனியுடன் நெருக்கமாக இணைந்து 5ஆம் இடத்தையே சனி மற்றும் செவ்வாய் சம சப்தமாக பார்த்து அதிக பாவத்துவம் அளித்துவிட்டார்.


 நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் இணைந்த செவ்வாயின் பார்வையை பெற்றதும் இதுவரை திருமணம் நடக்காததற்கான காரணமாக உள்ளது.


 ஜாதகத்தில் லகன அதிபதி மறைந்து உச்சம் பெற்ற சனியுடன் விரயத்தில் சேர்ந்து லக்கினத்தில் கேது அமர்ந்த நிலையில் லக்னமும் மற்றும் லக்னாதிபதியும் கெட்டுவிட்டது.


 ராசி அதிபதி குரு ஆட்சி பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் இணைந்த சனியும் மூன்றாம் பார்வையும் மற்றும் தேய்பிறை சந்திரன் இணைவும் வலிமை இழக்கச் செய்துவிட்டது.
 தசா அமைப்புகளே வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது என்ற வகையில் இருபத்தி ஆறு வயதில் ஆரம்பித்த சந்திரதசை தேய்பிறை சந்திரனாகி செவ்வாய் உடன் இணைந்து பாவத்துவமான சனி முன்றாம் பார்வையை பெற்ற பாவத்துவ தசை என்பதாலும்,அதனை தொடர்ந்து முப்பத்து ஆறு வயதில் வந்த செவ்வாய் தசை விரயத்தில் மறைந்து உச்சம் பெற்ற சனியால் இணைந்த தசை செவ்வாய் தசை முடியும் வரை திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அடுத்து வரக்கூடிய ராகு பகவான் தசையும் சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெற்ற அமைப்பு இருப்பதால் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.


பாதசாரம்


லக்கனம்-அனுஷம் நான்காம் பாதம்,


சூரியன் சதயம் இரண்டாம் பாதம்,


சந்திரன் மூலம் 4ஆம் பாதம்,


 செவ்வாய் விசாகம் 3ஆம் பாதம்,

 புதன்-அவிட்டம் நான்காம் பாதம் 


குரு பூராடம் 1ஆம் பாதம் 


சுக்கிரன் திருவோணம் 2ஆம் பாதம்

 சனி விசாகம் 1ஆம் பாதம் 


ராகு ரோகிணி 1ஆம் பாதம் 


 கேது பகவான் கேட்டை 1ம் பாதம்


 சாதகக கட்டத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்கள் தனது எதிர் தன்மையான கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் பெற்றுள்ளது.
விருச்சிக லக்கின அதிபதியான செவ்வாய்க்கு சனி பகை ஆகும்.லக்கினாதிபதி அனுஷ நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் . 


     ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகை கிரகங்கள் ஆகும்.
 சூரியன் சதய நட்சத்திரத்தில் இருக்கிறார்..


 சந்திரனுக்கு எந்த கிரகமும் பகை கிரகம் இல்லை ராகு கேதுவை தவிர சந்திர பகவானும் கேது சாரத்தில் அமர்ந்துள்ளார் .
புதன் பகவான் தனது பகை கிரகமான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் நிற்கிறான். குருபகவான் தனது எதிரியான சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் நிற்கிறார். சுக்கிரன் தனக்கு எதிரான சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் இருக்கிறார். ராகு பகவான் தன்னை எதிர்க்கும் சந்திரனுடைய நட்சத்திரமான ரோகிணியில் நிற்கிறார்.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல்
  9715189647
   செல்
 9715189647
‌ 7402570898
Email masterastroravi@gmail.com
                           

அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
Om sakthi online Astro consulting centre,
Karambakkud, Pudukkottai District

துல்லியமான ஜாதக பலனைப் பெறுவது எப்படி? உதாராண ஜாதக விளக்கம்.

 துல்லியமான சாதகப் பலனைப் பெறுவது எப்படி?-உதாரண ஜாதகம் விளக்கம்.

                 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவரது ஜாதகத்தில் பன்னிரெண்டு ராசி கட்டத்தில் ஒன்பது கிரகங்கள்  

எந்த நட்சத்திர சாரம் வாங்கி எத்தனையாவது பாகை மற்றும் கலையில் எவ்வித ஷட் பலம் பெற்று அமர்ந்து உள்ளது என்பதை ஆராய்ந்து நடக்கின்ற தசா புக்தி மற்றும் கோச்சார பலா பலன்களுக்கு ஏற்ப இறை அருளுடன் தற்போது எந்த விஷயத்திற்காக ஜாதகர் ஜாதகம் பார்க்க வந்திருப்பார் என்பதனை யூகித்து கண்டறியக்கூடிய திறமையை ஜோதிடர்களாகிய நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


  ஒரு கிரகம் தனித்து நிற்கும் போது, அந்த கிரகம் நிற்கின்ற வீட்டிற்கும் மற்றும் அவரவர் லக்கனத்திற்கு ஏற்பவும் ஒருவிதமான பலனையும் மற்றும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அல்லது பார்வை பெறும் அமைப்பில் நிற்கின்ற பொழுது ஒருவிதமான பலனையும் மற்றும் நிற்கின்ற வீடு , அதன் அதிபதி மற்றும் அவை பெற்ற சார நாதன் வலிமை ஆகியவற்றை பொறுத்து பலன் தருகின்ற அமைப்பை பெறுகிறது.


 ஒரு கிரகமானது தனது ஆதிபத்திய பலன்களை அதன் தசை நடக்கும் போது மட்டுமே தரக்கூடிய தகுதியை பெறுகிறது.ஆனால் அதன் காரக பலன்களை வாழ்நாள் முழுவதும் தருகிறது.


  ஒரு கிரகம் தனித்து நின்றாலும், பாவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் மற்றும் மறைவிடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெரும் பொழுது அவை சுபத்துவ நிலையை அடைந்து நல்ல பலனைத் தர ஆரம்பிக்கிறது.


  சில ஜாதகங்களை மேம்போக்காக பார்க்கின்ற பொழுது அவ யோகம் நிறைந்த ஜாதகமாக தெரிந்தாலும் நன்றாக உற்று நோக்கி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது ஏதோ ஒருவிதமான சுபத்துநிலையில் பலமடைந்து அந்த கிரகத்திற்கு உரிய காரக மற்றும் ஆதிபத்தியம் பலன்களை சிறப்பாக தந்துவிடுகிறது.


   ஒரு சில ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது முக்கிய ஸ்தானங்களில் 

பாவ கிரகங்கள் இணைந்து நின்று அந்த பாவத்தையும் மற்றும் அதற்குரிய காரக பலனையும் பாவத்துவமாக்கி கெடுப்பது போல தோன்றினாலும் ஒற்றை குரு பார்வை அல்லது சுப கிரக தொடர்பானது அந்த பாவத்தையும் மற்றும் கிரகத்தையும் சுபத்துவம் ஆக்கி நல்ல பலனைத் தர வைத்துவிடுகிறது.


 என்னிடம் சாதம் பார்க்க வந்த ஒரு நபருடைய ஜாதகத்தில் துலா லக்னம் மூன்றாம் இடத்தில் சனி பகவான் ஐந்தாமிடத்தில் செவ்வாய் இராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து பாவத்துவ நிலையை அடைந்த நிலையில் உள்ளார்.


  லக்கனத்திற்கு ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ராகு இணைந்து பாவத்துவ நிலையை அடைந்து தனுசில் உள்ள சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஐந்தாம் இடத்தைப் பார்த்து மிகுந்த பாவத்து நிலையை அடைந்து உள்ளார்.இந்த நிலையை மட்டுமே பார்த்து புத்திர தோஷம் என பலன் அளித்தால் நாம் கூறும் பலன் தவறாகப் போய்விடும்..இவர் திருமணமானவுடன் காலதாமதம் ஆகாமல் இரண்டு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.


 எப்படி இவை சாத்தியம் என ஆராய்ந்து பார்த்தால் இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் லக்னத்துக்கு ஏழாம் இடமான மேஷத்தில் நட்பு நிலையில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் இடத்தில் உள்ள புத்திர ஸ்தானாதிபதியான சனியை பார்த்துள்ளார். இதனால் சனி சுபத்துவம் அடைந்து தன்னுடைய கெட்ட பார்வை நீங்கி அதாவது தீய சக்தி வடிகட்டப்பட்ட சனியின் பார்வை ஐந்தாம் இடத்தில் விழுந்து உள்ளது.


   ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகம் இருந்தாலும் ஐந்தாம் அதிபதியும் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியான சனியை, புத்திரகாரகன் குருவால் பார்க்கப்பட்ட நிலையில் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டாலும் , ஜாதகத்தில் புத்திர ஸ்தானதிபதியும் மற்றும் புத்திர காரகன் குரு பகவானும் பாதிக்கப்படாத நிலையில் 80 மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் மேற்கண்ட புத்திர தடை நீங்கி உள்ளது.


  என்னுடன் ஜாதகம் பார்க்க வந்த மற்றொரு உதாரண ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்குவோம்.


  இவரது ஜாதகத்தில் மேம்போக்காக பார்க்கும்போது திருமணம் செய்வதற்கு உகந்த ஸ்தானமான இலக்கணம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானமான ஏழாம் இடம்,, மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பாவ கிரகங்கள் உடைய தொடர்பினை அதிலும் குறிப்பாக சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது தொடர்பு பெற்றிருந்து திருமண ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் ஒற்றை குருபார்வை அனைத்தையும் சுபத்துவம் நிலையை அடைய வைத்து விட்டது.


  இவரது ராசி கட்டத்தில் மேஷ லக்கினம் மற்றும் துலாம் ராசி மற்றும் சுவாதி நட்சத்திரம்

   கிரக நிலைகள்

இரண்டாம் இடத்தில் கேது , ஏழாம் இடத்தில் குரு சந்திரன், எட்டாம் இடத்தில் ராகு, பத்தாம் இடத்தில் புதன் மற்றும் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய நான்கு கிரகங்கள் சேர்ந்து அமர்ந்துள்ள நிலை.


 இவரது ஜாதகத்தில் லக்கனப்படி பார்த்தால் கும்பத்தில் உள்ள சனி மூன்றாம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறது. அதேபோல கும்பத்தில் உள்ள செவ்வாய் நான்காம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவானை பார்க்கிறது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவான் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் இடையே நெருக்கமான தொடர்பை பெற்றுள்ளது. எட்டாம் இடத்தில் ராகு பகவான் அமைந்துள்ளது.


  ராசி அடிப்படையில் பார்த்தால் 

ராசி நாதன் சுக்கிரன் ஆனவர் 

 சனி பகவான் மற்றும் செவ்வாயுடன் இணைந்து பாவத்துவம் அடைந்து உள்ளது. இரண்டில் ராகு அமர்ந்து இரண்டாம் இடத்தை செவ்வாய் உடன் இணைந்து பாவத்துவமான சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் பார்த்து குடும்ப ஸ்தானத்தை பாவத்துவமாக்கி மேலும்

குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் சனியுடன் நெருங்கிய தொடர்பு , மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து உள்ள‌ நிலை.


    களத்திர காரகனான சுக்கிரனும்

பாவ கிரகங்களான சனி , செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களுடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவ நிலையை அடைந்துள்ளது.


  திருமணம் தொடர்பான கேள்விக்கு 

ராசி மற்றும் லக்கினம் ஆகிய இரண்டு வகைகளிலும் குருபகவானை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மிகுந்த பாவத்துவத்தை அடைந்துள்ளதால் இவருக்கு இளவயதில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. திருமணம் 35 வயதுக்கு மேல் காலதாமதம் ஆகலாம் என பதில் அளித்து விடலாம் .ஆனால் இவரது ஜாதகத்தில் குரு பகவானுடைய ஒற்றை பார்வை அனைத்தையும் சுபத்துவ படுத்தி இளவயதிலேயே திருமணத்தையும் மற்றும் புத்திர பாக்கியத்தையும் தந்துள்ளது.


  மேஷ லக்கினத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தனது மூன்றாம் மற்றும் நான்காம் பார்வையால் லக்கனம் மற்றும் குடும்பத்தை பார்த்தாலும்,

 குருபகவான் இலக்கணத்தையும், இந்த பாவ கிரகங்களான செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் பார்த்ததினால் சுக்கிரனும் சுபத்துவம் ஆகி அந்த பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் குரு பார்வையால் இலக்கணம் மற்றும் இரண்டாம் இடமும் சுபத்துவம் ஆகிவிட்டது.


 ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு அமர்ந்து செவ்வாய் உடன் நெருக்கமாக அமர்ந்த சனி பகவானால் பார்க்கப்பட்டாலும் குருவால் பார்க்கப்பட்டால் சனி என்பதால் அதன் தீய சக்தி வடிகட்டப்பட்டு பார்க்கப்படும் என்பதால் எவ்வித கெடுதலும் இல்லை.குடும்ப மற்றும் களத்திர ஸ்தானாதிபதியும் மற்றும் களத்திர காரகனுமான சுக்கிர பகவானை குரு பகவான் பார்த்தாலும் சுபத்துவம் அடைந்து விட்டது.


    மேற்கண்ட வகையிலான ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரண்டு வகையிலான பாவத்துவமானது ஒற்றை குரு பார்வையால் நீங்கி சுபத்துவம் அடைந்து இளவயதில் திருமணத்தை கொடுத்துவிட்டது.


 எந்த ஒரு ஜாதகத்தையும் மேம்போக்காக பார்க்காமல் அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் அதன் பலாபலன் மாறுவதை காணலாம். இதில் கிரகங்கள் பெற்றுள்ள பாகை (degree) அடிப்படையிலும் ஆய்வு பார்வயினை நாம் திருப்பினால் துல்லியமான பலனை பெறலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

   9715189647

      செல்

   9715189647

     7402570899


                           



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My gmail : masterastroravi@gmail.com

ஜாதக பலன் கணிக்கும் போது கவனிக்க வேண்டியவை விஷயங்கள்

 ஜாதக பலன் கணிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

                ‌‌‌‌.     

 

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதக பலன் பார்க்கும் போது இரண்டு முக்கிய விஷயங்களை ஆய்வுகள் செய்து பார்க்கப்பட வேண்டும்.அவையாவன

1) பாவக சுபத்துவம் 

 2) கிரக சுபத்துவம் 

ஆகிய இரண்டையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


1) பாவக சுபத்துவம்


  ஜாதக கட்டத்தில் 12 பாவங்களையும் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.

  1)கேந்திர ஸ்தானம் -1,4,7,10

  2) திரிகோணம்  1,5,9

  3)மறைவிட ஸ்தானம் -3,6,8,12

  4) உபஜெய ஸ்தானம்-3,6,10,11

  5) பணபர ஸ்தானம்-2,5,8,11

  6) அபோக்லியம்-3,6,9,12


    ஜாதக கட்டத்தில் திரிகோண ஸ்தானமே முதன்மையான ஸ்தானம் ஆகும்.வலிமை அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் திரிகோண ஸ்தானத்தில் உள்ள கிரகமாக இருந்தாலும் அல்லது திரிகோணதிபதியாக இருந்தாலும் பாவிகளுடன் சேர்த்து பாவத்துவம் அடையாமல் இருந்தால் அதன் தசை காலங்களில் மிகுந்த யோக பலனை தருகிறது.


 திரிகோண ஸ்தானமான 1,5,9 ஆம் இடத்தில் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது இடம்பெறாமல் இந்த ஸ்தாணங்களை பாவிகளான சனி ,செவ்வாய் பார்க்கப்படாமல் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்க்கப்படும் அமைப்பில் இருந்தாலும் அந்த பாவகம் சுபத்துவம் அடைந்துள்ளது என கூறலாம்.


  பொதுவாக திரிகோணத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் சுபகிரகங்கள் இடம்பெறுதல் நல்லது ஆகும். எனவே கோண அதிபதிகள் இயற்கை சுப கிரகங்களாக இருப்பின் தங்களது வீடுகளில் ஆட்சி பெற்று நிற்பது அதன் தசையில் யோக பலனை தருகிறது.


  திரிகோண ஸ்தானமான 1,5,9 ஆகிய மூன்று ஸ்தானங்கள் பெறக்கூடிய நட்சத்திரம் சாரத்தை ஆய்வு செய்து பார்த்தால் மூன்று திரிகோண ஸ்தானங்களும் ஒரே விதமான நட்சத்திர நாதனை கொண்டு இருப்பார்கள்.


 உதாரணமாக 


   மேஷ ராசியை எடுத்துக் கொண்டால் லக்கண ஸ்தானமான ஒன்றாம் இடம் அசுபதி முழுவதும் (கேது ) ,

பரணி முழுவதும் ( சுக்கிரன் ) மற்றும் கார்த்திகை முதல் பாதம் (சூரியன்) ஆகும்.


   மேஷ ராசிக்கு இரண்டாம் திரிகோணம் ஆன ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும்.இதில்

மகம் முழுவதும் (கேது)  

 பூரம் முழுவதும்( சுக்கிரன் )

உத்திரம் முதல் பாதம்( சூரியன்) மட்டுமே.


 மேஷ ராசிக்கு மூன்றாம் திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடம் தனுசு ஆகும். இதில் மூலம் முழுவதும் (கேது ), பூராடம் முழுவதும் (சுக்கிரன் )

 உத்திராடம் முதல் பாதம் மட்டுமே(சூரியன்)


  மூன்று  திரிகோண ஸ்தானங்கள் உடைய நட்சத்திர நாதன் கேது ,சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும்.


கேந்திர ஸ்தானம்


  ஜாதக கட்டத்தில் நான்கு தூண்களாக விளங்குவது கேந்திர ஸ்தானங்கள் ஆகும். அதாவது 1, 4 ,7, 10 ஆகிய நான்கு இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் என செல்லப்படுகிறது இங்கு ஒன்றாம் இடமான லக்கணம் கேந்திரம் ஸ்தானத்திற்கும் மற்றும் திரிகோண ஸ்தானத்திற்கும் பொதுவான ஸ்தானமான வருகிறது.  எனவே தான் மனித வாழ்வை வழி நடத்திச் செல்வதில் லக்கனாதிபதியின் பங்கு  மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது ஒரு ஜாதகத்தில் லக்ன பாவம் சுபத்துவம் பெற்று இருப்பின் அவை ஜாதகருக்கு நல்ல பலனைத் தருகிறது.


   கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இடம் பெறுவது நல்லது.அதேநேரத்தில்  சுப கிரகங்கள் இடம்பெறுவது கேந்திராதிபத்திய தோஷத்தை தருவதற்குரிய சூழல் உடண்டாகிறது.


 கேந்திரத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் நட்சத்திர  தொடர்ச்சியைப் பெற்றிருக்கும். உதாரணமாக மேஷ ராசிக்கு அசுவதி, பரணி, கார்த்திகை முதல் பாதம். பத்தாம் இடமான மகரத்தில் உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் மற்றும் அவிட்டம் முதல் இரண்டு பாதங்கள்

ஏழாம் இடமான துலாமில் சித்திரை 3,4 பாதங்கள்,சுவாதி மற்றும் விசாகம் 1,2,3 பாதங்கள்.

நான்காம் பாவகமான கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் 


  கேந்திர ஸ்தானத்தில் நட்சத்திர தொடர்ச்சியை தொடர்ந்து காணலாம்.


3) மறைவிட ஸ்தானங்கள்


  பொதுவாக மறைவிட ஸ்தானங்களில்  கிரகங்கள் இடம் பெறுவதோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் கேந்திர கோணங்களில் இடம்பெறுவது நல்லது அல்ல பொதுவாக பாவக்கிரகங்கள் நேர் வலு  பெறக்கூடாது என்ற வகையில் மறைவிடங்களில் பாவக்கிரகங்கள் இடம் பெறுவது நல்லது ஆகும்.


4) உப ஜெய ஸ்தானம்

   

  லக்கன அவ யோகி மற்றும் பாவ கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் அமரும் போது அதன் தசை காலங்களில் யோக பலனை ஜாதகருக்கு தருகிறது.


5. தன யோகம் தரும் ஸ்தானம்


   தன ஸ்தானமான 2-ஆம் இடம் ,பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடம், ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடம்  மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் அதன் தசைகளில் மிகுந்த யோகத்தை தருகிறது.

பொதுவாக தன ,பாக்கியம் மற்றும்  லாப அதிபதிகள் (2,9,11) தங்களுக்குள் சேர்ந்து  அல்லது பார்க்கும் அல்லது பரிமாறி நின்று அதன் தசா புக்தி நடக்கும் போது மிகுந்த யோகத்தை தருகிறது.


  பொதுவாக ஒரு பாவகத்தில் எந்த பாவ கிரகங்களும்  இடம் பெறாமல் மற்றும் பாவர்களால் பார்க்கப்படாமல் இயற்கைச் சுபக்கிரகமான குருவும், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை பார்க்கின்ற பொழுது அந்தப் பாவகம் சுபத்துவம் நிலையை அடைகிறது.


கிரக சுபத்துவம்


  பொதுவாக கிரகங்கள் இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது ஆகியோரின் தொடர்பைப் பெறாமல் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெரும்பொழுது கிரக சுபத்துவம் தன்மை அடைகிறது இவ்வாறு சுபத்துவம் அடைந்த  கிரகங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவை நல்ல பலனைத் தந்து விடுகிறது.


   இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் சில நேரங்களில் சந்திரனுடன் சேரும் பொழுது சசிமங்கள யோகத்தையும், குருவுடன் சேரும் பொழுது குரு மங்கள யோகத்தையும் மற்றும்  சுக்கிரனுடன் சேரும்பொழுது பிருகு மங்கள யோகத்தையும் தந்துவிடுகிறது.


  பொதுவாக இயற்கைச் சுபக்கிரகங்கள் நிழல் கிரகங்களான ராகுவுடன், இருள் கிரகமான சனி மற்றும் பாவ கிரகமான செவ்வாய் உடன் சேரும் போது பாவத்துவம் அடைகிறது. இவ்வாறு பாவத்துவம அடைந்த கிரகத்தை  இயற்கைச் சுபக்கிரகங்கள் பார்த்தால்  அவை மீண்டும் சுபத் தன்மை அடைகிறது.


 வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு, புதன் மற்றும் சுக்கிரன் அமர்ந்து  இருப்பதும் சந்திராதி யோகத்தை தருகிறது.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல்

  9715189647


    செல்

   9715189647

    7402570899

                     



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email:  masterastroravi@gmail.com

Monday 4 July 2022

திருமணத்திற்கும் மற்றும் புத்திர பாக்கியத்திற்கும் காரகனான குரு பகவான் மற்றும் சுக்கிரன் பகவான்

 திருமணத்திற்கும்  மற்றும் புத்திர பாக்கியத்திற்கும் காரகனான சுக்கிரன் மற்றும் குரு பகவான் .

                              


செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தில் குருபகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை  படைத்த கிரகங்கள் மட்டுமே ஆகும்.பகை தன்மை படைத்த கிரகங்கள் அல்ல.


  குருபகவான் இப்படித்தான் வாழவேண்டும் என்று போதிப்பவர்  ஆவார்.. மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கும் தன்மை இருக்காது நேரிய வழியில் நடக்கக்கூடிய தன்மை படைத்தவர் ஆவார் .


   வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக ஆக்குவதில் சுக்கிர பகவான் பங்கு அலாதியானது. சுக்கிர பகவான் எப்படியும் வாழலாம்  எனும் வாழும் எண்ணம் கொண்டவர் ஆவார்.


   குரு  பகவான் ஒரு வரையறைக்குட்பட்ட வேலைகளை மட்டும் அதாவது ஒயிட் காலர் ஜாப் என்று அழைக்கக்கூடிய மேதாவித்தனமாக வேலைகளை மட்டும் செய்ய விரும்பும் எண்ணம் படைத்தவராக இருப்பார்.


   சுக்கிர பகவான் பணம் ஈட்டும் எந்த தொழிலையும் செய்வதில் தயக்கம் காட்டாதவர் ஆக இருப்பார். மற்றவர் பையிலிருக்கும் பணத்தை தன் கைக்கு மாற்றும் வியாபார தந்திரம் மிக்கவராக திகழ்வார்.


  குரு பகவான் அருள் அணியை சேர்ந்தவர் ஆவார். தேவர்களின் தலைவன் ஆவான். சந்திரன், செவ்வாய் சூரியன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் குரு அணியை சேர்ந்த கிரகங்களாக கருதப்படுகிறது.


  சுக்கிர பகவான் பொருள் அணியைச் சேர்ந்தவர் ஆவார் .அசுரர்களின் தலைவன் ஆவான். சனி, புதன மற்றும் ராகு இப்பிரிவினை சேர்ந்தது ஆகும்.


   குருபகவான் அணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு நிறைவுபெற்ற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் சுக்கிரன் அணியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவுதான் பொருள் ஈட்டி இருந்தாலும் ,  இன்னும் வேண்டும் வேண்டும் என்ற மனநிலையோடு மனதளவில் அமைதி அற்றவராக மன அழுத்தத்துடன் திகழ்வார்கள்.


 சுக்கிர பகவான் களத்திர காரகன் என்றும் மற்றும் குரு  பகவானை புத்திர காரகன் என்றும் அழைக்கிறோம். திருமணத்தின் விளைவால் கிடைப்பது புத்திர பாக்கியம் ஆகும்

 அந்த வகையில் சுக்கிரனுக்கும் குருபகவானுக்கும் நெருங்கிய ஒரு உறவு உண்டு.


     சுக்கிர பகவான் மனைக்கும் மற்றும் மனையாளுக்கும் காரகர் ஆவார். இல்லற வாழ்வில் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகத்தை தரக்கூடிய வரும் சுக்கிர பகவானை ஆவார்.. அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகம் கொண்டவராக திகழ்வார். ஆனால் அதே நேரத்தில் மன நிறைவு பெறாதவராக  இருப்பார்.


 குருபகவான் அறிவுக்கும் மற்றும் ஞானத்திற்கும் காரகர் ஆவார் .இவர் உள்ளதைக் கொண்டு நிறைவுபெறும் மனப்போக்கு கொண்டவர் எல்லாவற்றிலும் பெருந்தன்மையும் மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் கொண்டவர். சில நேரங்களில்  வாழ்வில் பிழைக்கத் தெரியாத ஏமாளி என்று பெயர் வாங்க கூடியவராகவும் இருப்பார்.


   இவ்வாறு இரண்டு எதிரெதிர் தன்மையுள்ள கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்ளும் பொழுதோ அல்லது சேர்ந்து இருக்கும் போதோ அந்த ஸ்தானத்தை பாதிக்குமா? அல்லது உயர்த்துமா ? என வினா எழுப்பினால் நிச்சயம் அவை பாதிக்காது என்றே சொல்ல வேண்டும்.


  ஒரே ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைந்திருக்கும் போதோ அல்லது  ஒன்றுக்கொன்று  சம சப்தமாக பார்த்து கொள்ளும் பொழுதோ இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று

எதிர் தன்மை உள்ள கிரகம் என்பதால் இவ்விரு கிரகங்களின் ஸ்தான வலிமையை முதலில் கவனிக்க வேண்டும்.


 இணைய கூடிய இரண்டு கிரகங்கள் உடைய ஸ்தான வலிமை அடிப்படையிலே எவை முதலில் பாதிக்கப்படும் என்பதை கவனிக்க வேண்டும். குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டில்  சுக்கிரன் பகவான் வலிமையாக இருக்கும் பட்சத்தில் தாம்பத்திய சுகம் கொடுத்தும் புத்திரத்தால் பலன் இல்லாத நிலை உண்டாகும். குருபகவான் வலுவாக இருந்து சுக்கிர பகவான் பலமிழந்து இருப்பின் புத்திர பாக்கியத்தை பெற்றிருந்தாலும் தாம்பத்திய சுகத்தால் பயனில்லை..


  மேஷ லக்கினம் ஏழாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் இங்கு சுக்கிரன் தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கும் மற்றும்  குரு பகவான் பகை வீடு ஏறி இருப்பார் என்ற வகையில் தாம்பத்திய சுகத்தை கொடுத்து புத்திர தடை உருவாகும்.


லக்கனத்தில் குரு பகவான் திக்பலம் பெறுவார் சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக்  பலம் பெறுவார்.


 சுக்கிரன் மற்றும் சுக்கிரன் பகவான் தொடர்புடைய வீடுகளில் உள்ள கிரகங்களின் தசா புத்தி காலங்களில் ஒருவருக்கு திருமண பாக்கியத்தை கொடுப்பார்.குரு பகவான் மற்றும் குரு பகவான் தொடர்பு கொண்ட வீடுகளில் உள்ள கிரகங்கள் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை கொடுப்பார்.


   சுக்கிர பகவானுக்கு ஏழாம் பார்வை மட்டுமே ஆகும். மேலும் மறைவிடங்களில் சுக்கிரனுக்கு  6, 12ஆம் இடம் மறைவிடம் கருதமுடியாது. 3 மற்றும் எட்டாம் இடங்களே சுக்கிரனுக்கு அதிக மறைவிட ஸ்தானமாகும்.


 குரு பகவான் தனது ஏழாவது பார்வை மட்டுமல்லாமல் 5 மற்றும் 9 சிறப்பு பார்வையாக கொண்டுள்ளது. குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை அதிக வலுப்படுத்தும். குரு பார்த்த  தசாபுத்திகள் வாழ்வில் உயர்நிலையை அடைய வைக்கிறது.

 குரு பகவான்  லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள்  பார்த்த ஜாதக அமைப்பு யோகமான ஜாதக அமைப்பாகும்.


   ஒரு சிலர் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம உறவுகளை கொண்டவராகவும் தரம் தாழ்ந்த காம மிகுதியான வக்கிர எண்ணங்களை கொண்டவராகவும் திகழ்வதற்கு சுக்கிர பகவான் உடனாக  சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவர்களின் சேர்க்கையால் உண்டாகிறது.


 குரு பகவானுடன் சனி ,செவ்வாய் ,ராகு  போன்ற பாவிகள் சேர்க்கை புத்திரதோஷம் உடையவராகவும் ஆன்மிக தன்மைக்கு எதிர் தன்மை கொண்டவராக திகழ்வார்.


ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சுபத்துவம் அடைந்து ராசி லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஆசிரியராக போதிக்கும் தொழில் கொண்டவராக திகழ்வார்.  அதேநேரத்தில் ஒருசிலர் வங்கி துறைகளிலும் வேலை பார்ப்பவராகவும் திகழ்கிறார்..இதில் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க கூடிய விதி என்னவென்றால வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் அதிக சுபத்துவமாக  இருப்பின் நிச்சயமாக போதிக்கும்  ஆசிரியராகவே தொழில் செய்வார்.


 குருபகவான் வலுவாக பெற்றவர்கள் ஆசிரியர் மற்றும் பேராசிரியராகவும், பட்டிமன்ற பேச்சாளர்களாகவும்  மற்றும் ஆன்மீக வேத விசாரணைகளை அளிப்பவராகவும் நகைக்கடை முதலாளி ஆகவும் தொழில் செய்வார்கள்.


   சுக்கிர பகவான் சுபத்துவ மனநிலையை வலுப்பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் தொடர்புகொள்ள சினிமா, நடனம் ,போக்குவரத்து, ஹோட்டல் ,பேன்சி ஸ்டோர் ,பைனான்ஸ், கொடுக்கல் வாங்கல் ,கம்ப்யூட்டர் சினிமா தொடர்புடைய வீடியோக்கள்,பாவத்துவ நிலையில் பாலியல் தொழில்,நுண்கலை , சிற்பம்,சிலை அமைத்தல், ஆடைகள்,ஆபரண தொழில் ,நகை கடை போன்ற தொழில்களை  உகந்த  தசா அமைப்புக்கள்  நடைபெறும்போது செய்ய வைக்கிறது.


 சுக்கிரன் மற்றும் குருபகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் தன்னோடு சேர்ந்து உள்ள கிரக அமைப்புகளையும் மற்றும் தன்னால் பார்க்கக்கூடிய கிரக அமைப்புகளையும் சுபத்துவ படுத்தக்கூடிய ஆளுமைத் தன்மை உண்டு.


   குரு பகவான் தன்னுடைய இணைந்து உள்ள பாவக் கிரகங்களான சனி, ராகு ,கேது, செவ்வாய் போன்ற  பாவ கிரகங்களை சுபத்துவ படுத்தி தான் பாவத்துவ  நிலையை அடைவார்கள். இவ்வாறு இயற்கை  சுபக் கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் உடன் இணைந்த பாவர்கள் அதன் தசையில் யோக பலனை தரும். மாறாக தனது தசையில் இணைந்த கிரகத்தின்  பாவத்துவத்தின் விளைவாக கெடு பலனைத் தருகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் கேந்திரங்களில் சுக்கிர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இருக்கும்பொழுது  பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான 

"மாளவிகா யோகத்தை" தருகிறது இதன் பலன் வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.


 ஜாதகத்தில் கேந்திர மற்றும் கோணங்களில் குருபகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்றிருக்கும் போது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான 

"ஹம்ச யோகம் "உருவாகிறது. விதிவிலக்காக லக்னத்தை தவிர்த்து ஏனைய கேந்திர ஸ்தானங்களில் குருவானது சொந்த வீடாக அமையும் பொழுது அவை கேந்திராதிபத்திய தோஷத்தை தந்துவிடுகிறது.


தனுசு லக்னத்திற்கு குரு பகவான் நான்காமிடத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் மற்றும் மிதுனம்  இலக்கணங்களுக்கு  ஏழு மற்றும் பத்தாம் இடத்தில் குருபகவான்  ஆட்சி பெற்று இருந்தாலும் மற்றும் கன்னி இலக்கணங்களுக்கு நான்கு , ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும்  கேந்திராதிபத்திய தோஷத்தை தருகிறது. இந்த கேந்திராதிபத்திய தோஷம் நீங்க இந்த குரு பகவானை சனி, செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் பார்த்தாலோ அல்லது வக்கிரமாய் இருந்தாலும் அந்த கேந்திரா திபெத்திய தோஷம் நீக்கப்படுகிறது.


  புத்திரகாரகன் குரு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திலும் மற்றும்  தனஸ்தானமான 2-ம் இடத்திலும் நின்றால் காரகோ பாவ நாஸ்தி தருகிறது.


 குருபகவானை போல சுக்கிர பகவான் கேந்திராதிபத்திய தோஷத்தை அதிக அளவு தரமாட்டார்..

 களத்திர ஸ்தானமான 7-ம் இடத்தில் களத்திர காரகனான சுக்கிரன் நின்றால் காரகோ பாவ நாஸ்தி தருகிறது. இதை சில நேரங்களில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பின் அந்த தோஷம் நீக்கப்படுகிறது. அல்லது பாவ கிரகங்கள் பார்க்கக் கூடிய சூழலும் அந்த தோஷம் நீங்க கூடிய வாய்ப்பு உண்டு.


நன்றி ஐயா.


வாட்ஸ் அப் & செல்

   9715189647


  செல்

   9715189647

    7402570899


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.