லக்கனம் முதலாக 12 பாவகம் தரும் பலன்கள்.
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனிதன் எப்படி இருப்பான்?,
எப்படி நடந்து கொள்வான் ? மற்றும் அவனது வாழ்வின் வழி நிலையையும் ,செயல் திறனையும் லக்கனத்தை கொண்டு அறியலாம்.
""எத்தனை பெரிய மனிதனிடம் எத்தனை சிறிய குணம் இருக்கு !
எத்தனை சிறிய மனிதனிடம் எத்தனை பெரிய குணம் இருக்கு!""
ஒருவரது நல்ல குணநலன்களுக்கும் மற்றும் குண கேடுகளுக்கும் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, லக்கனத்தில் உள்ள கிரகம் மற்றும் லக்கனத்தை பார்க்கின்ற கிரகங்கள் இவற்றை பொறுத்து அமைகிறது.
ஒருவரது புகழ், அந்தஸ்து, கௌரவம் மற்றும் தேஜஸ் போன்றவற்றை லக்கின பாவகமே முடிவு செய்கிறது
லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து லக்னத்தை குரு பார்த்த சாதக அமைப்பு அல்லது லக்கனத்தில் குரு இருக்கும் ஜாதக அமைப்பு உடையவர் நல்ல குணம் உடையவராகவும், நல்லவற்றை எண்ணக் கூடியவராகவும், சிந்திக்க கூடியவராகவும் மற்றும் நற்செயல் புரிபவராகவும் இருப்பார். அடுத்தவர் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுபவராகவும் இருப்பார். பொருளாதய உலகில் மற்றவரை வஞ்சித்து பொருள் ஈட்ட தெரியாத நல்ல குணங்கள் உடையவர். மற்றவரை வஞ்சித்து சம்பாதிக்க தெரியாத ஏமாளி ஆவார்.
லக்கனாதிபதி சனியாக இருந்து லக்னத்தில் இருந்தாலும், லக்கனத்தை சனி பார்த்தாலும் ஜாதகர் சோம்பேறி, சுறுசுறுப்பு இல்லாத மந்த குணம் உடையவராகவும் மற்றும் மற்றவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் குணம் கொண்டவராக திகழ்வார்.
மற்றவருடைய துன்பத்தை கண்டு ரசிக்கும் கொடூர குணம் இருக்கும். எப்படியாவது பிறரை வஞ்சித்து சொத்து சேர்க்கும் குணம் உடையவராக விளங்குவார்.
அருள் அணி என்று அழைக்கப்படும் குரு பகவானை தலைவனாக கொண்ட சந்திரன், செவ்வாய் ,சூரியன் மற்றும் கேது ஆகியவற்றை அடக்கிய அருள் அணியை சேர்ந்த லக்கனங்களான தனுசு, மீனம், மேஷம், விருச்சகம் , கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கணங்களை லக்கணமாக கொண்டவர்கள் பொருள் ஈட்டும் எண்ணத்தை விட உள்ளதைக் கொண்டு நல்லது என்னும் பெருந்தன்மை உடையவர் என்பதால் இதனை "அருள் அணி "என்கிறோம்.
பொருள் அணி என்று அழைக்கப்படும் சனி, புதன் ,சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் கொண்ட மிதுனம் ,கன்னி, ரிஷபம் ,துலாம் ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு அணியைச் சேர்ந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் , அனைத்து ஆடம்பர வசதிகளையும் அனுபவிக்கும் எண்ணம் உடையவராகவும் அதே நேரத்தில் மனதளவில் என்றும் அமைதி இல்லாதவராகவும் திகழ்வார்கள்.
ஒருவர் மேற்கண்ட எந்த அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அதாவது அருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது பொருள் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் சுபத்துவம் ஒன்றே விதிவிலக்கு ஆகும். ஒரு ஜாதகர் எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்தை குருபார்த்த அமைப்பு சாதகரை நல்வழியில் இட்டுச் செல்லும்.
ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் இயற்கை பாவ கிரகங்களான சூரியன், தேய்பிறை சந்திரன், சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது இருந்தாலும் அல்லது சனி அல்லது செவ்வாய் தனித்தனியாக பார்த்தாலும் அல்லது சேர்ந்து பார்த்தாலும் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும் அல்லது அந்த கிரகமும் பாவத்துவமாகி பாதிக்கப்படும்.
இவ்வாறாக பாதிக்கப்பட்ட ஸ்தானம் எந்த ஸ்தானமான இருந்தாலும் அவை தொடர்புடைய ஆதிபத்தியம் பலன்கள் அதன் தசையில் பாதிக்கப்படும்.இதேபோல பாவத்துவமான கிரக காரக பலன்களும் ஜாதகருக்கு பெருமளவு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை தரும்.
ஒருவரது ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனை கொண்டவர்கள் ஜாதகத்தில் இரண்டு சனி பகவானை ஜாதகத்தில் கொண்டவர் ஆவார்.அதேபோல வளர்பிறை சந்திரனை கொண்டவர்கள் இரண்டு குரு பகவானை சாதகத்தில் கொண்டவர்கள் ஆவார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் எந்த ஸ்தானமாக அல்லது கிரகமாக இருந்தாலும் வேறு வகையில் பாவத்துவம் பெறாமல்
சுப கிரகங்களான குரு , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை தொடர்பாக கொண்ட ஸ்தானமும் மற்றும் கிரகமும் அதன் தசையில் சுபத்துவமாகி நல்ல பலனைத் தருகிறது.
பொதுவாக லக்கனாதிபதி வலுப்பெற்று பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள், வளர்பிறைச் சந்திரனுக்கு ஆறு, ஏழு எட்டில் இயற்கை சுப கிரகங்களை குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஐ பெற்றவர்கள் , ராசி, லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகிய ஏதாவது ஒன்றை குரு பார்த்த அமைப்பை பெற்றவர்கள்.ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் குரு அல்லது வளர்பிறை சந்திரன் பார்க்கின்ற அமைப்பை பெற்றவர்களும் யோகசாலிகள் ஆவார்.
லக்கன ஆதிபத்திய காரகராக சூரிய பகவான் விளங்குகிறார்
ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடத்தைக் கொண்டு தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றையும்,
இரண்டாம் இடத்தை கொண்டு ஒருவருக்கு வரக்கூடிய தன வரவையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம்.
இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இரண்டாம் இடத்தை இயற்கை சுபகரங்களால் பார்க்கப்பட்ட அமைப்பை பெற்றவர்கள் நேரிய வழியில் தனம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் ராகு, சனி, செவ்வாய் இருந்தாலும் தனஸ்தானத்தை சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நேரிய வழி அல்லாத வகையில் பணம் சம்பாதிப்பவராக இருப்பார்.
பனிரெண்டாம் இடத்திலிருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக வாக்கு ஸ்தானத்தை பார்க்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் பொய் சொல்லி பிழைக்கும் தொழிலான வழக்கறிஞர் போன்ற துறைகளில் ஈடுபடுவார்.
ஒருவருடைய கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை இரண்டாம் இடத்தைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியில் சென்று பொருளீட்டி வீடு செல்லும் ஆடவர்க்கு மன அமைதியை தேடும் இடம் குடும்பமாகும் அந்த ஒரு குடும்பம் ஒரு கோவிலாக ஒரு மன அமைதி மிக்க இடமாக மாற இரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்க வேண்டும்.
இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அவை களத்திர ஸ்தானத்திற்கு அதாவது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணைக்கு எட்டாம் இடம் என்பதால் அதில் இருக்கும் கிரங்கம் அதன் தசா புத்திகளில் சா
அதாவது வாழ்க்கை துணைக்கு கெடுபுலனை தரும்.
தனக்காரகனாக குரு பகவான் திகழ்கிறார். ஒருவருக்கு பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி, ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தருபவர் குரு பகவானே ஆவார்.
தனக்காரகன் ஆன குருபகவான் தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்வது காரகோ பாவ நாஸ்தி என்றாலும் இரண்டாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனத்தை தவிர ஏனைய பிற அமைப்பான குடும்ப, வாக்கு, கல்வி மற்றும் நேத்திரம் ஆகியவற்றை பாதிக்க மாட்டார்.
மூன்றாம் இடத்தைக் கொண்டு கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து ,கற்பனை உணர்வு, காம வீரியம், எழுத்து, இசை ஆர்வம் , இளைய சகோதர ஸ்தானம், செவி ,செவி வழி செய்திகள்,இளைய சகோதரர்களை பற்றி அறிந்து கொள்ளுதல்,
" தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பார்கள். ஒருவருக்கு அமைந்த சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
நான்காம் இடத்தை கொண்டு தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் , வண்டி வாகன சுகம் , வீடு ,கல்வி நிலை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.
நான்காம் இடத்தைக் கொண்டும் மற்றும் மாதுர்காரகனான சந்திரன் பகவானை கொண்டும் டி ஒருவருக்கு அமையக்கூடிய தாய் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. நான்காம் இடம் அதன் காரகரான சுக்கிர பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து வண்டி வாகனம் மற்றும் தனக்கு அமையக்கூடிய வீடு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். தனக்கு அமையக்கூடிய வீடு மாளிகை போன்ற வீடா மச்சி வீடா, ஓட்டு வீடா என்பது போன்ற விவரங்களையும் இதிலிருந்து அறியலாம்.
ஆடி கார், பிஎம்டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்களின் வலம் வரக்கூடிய யோக அமைப்பையும் நான்காம் இடத்தை கொண்டும் மற்றும் வாகனக்காரன் சுக்கிரனை கொண்டும் முடிவு செய்யப்படுகிறது.
ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம், புத்திர பாக்கியம், புத்தி, அம்மன் வர்க்கம் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.
ஒருவர் தனது புத்தியை நேர்வழியில் பயன்படுத்துகிறாரா ? அல்லது குறுக்கு வழியில் பயன்படுத்துகிறாரா ?
என்பது போன்ற விவரங்களை ஐந்தாமிடத்தின் சுபத்துவம் அல்லது பாவத்துவ நிலை கொண்டு ஆராயப்படுகிறது.
ஐந்தாம் இடத்திற்கு காரகராக குரு பகவான் திகழ்கிறார் ஐந்தாம் இடத்தை கொண்டும் மற்றும் அதன் புத்திர காரகன் குருபகவானை கொண்டும் தனக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆறாம் இடம் ருணம் ,ரோகம், கடன் ,பிணி எதிர்ப்பு ,மானம் ,அவமானம் ஆள் அடிமை போன்றவற்றை அறிய பயன்படுகிறது.
ஆறாம் இடம் சனி , செவ்வாய் போன்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அல்லது ஆறாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் போன்றார்கள் இடம்பெற்றாலோ தனக்கு தேவையில்லா கடன், பிணி , எதிர்ப்புகள் இல்லாமல் போய்விடும் .ஆனால் அதே நேரத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்த சனி அல்லது செவ்வாய் தசைகள் வரும் பொழுது கடினமான வேதனையை ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.
ஆறாம் இடம் கெட்டால் எந்த வேலையும் கிடைக்காது. ஆறாம் இடம் என்பது ஆள் அடிமைத்தனமாகும் .ஒருவருக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் கெட்டு அதேநேரத்தில் ஆறாம் இடம் வலுத்தால் பிறரிடம் சென்று வாழ்நாள் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.
ஆறாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் பார்த்து வலு பெறக்கூடாது.
ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும்.
தனக்கு வரும் வாழ்க்கைத் துணை பற்றி அறிந்து கொள்ளவும் ,தனக்கும் வாழ்க்கை துணைக்கும் உள்ள அந்தரங்க உறவு நிலைகளை அறிந்து கொள்ளவும் நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.
எட்டாம் இடம் ஆயுள், வம்பு, சண்டை, வழக்கு, வீண் விவாதம் , மறைபொருள் உண்மைகள் போன்றவற்றை அறிய பயன்படுகிறது.
ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் ஆகும். பாக்கிய நிலை பற்றி அறிந்து கொள்ளவும் , தந்தை வழி உறவுகளை அறிந்து கொள்ள ,தந்தையை பற்றி அறிந்து கொள்ள ,தனக்கு வரக்கூடிய வருமானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, தான தர்ம குணங்கள் மற்றும் மேல்நிலைக் கல்வி போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
தனக்கு அமையக்கூடிய தந்தை எப்படிப்பட்டவர்? தந்தை வழி ஆதரவுகள் உண்டா? தந்தை வழி உறவுகளால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்குமா? போன்ற விஷயங்கள் ஆராய பயன்படுகிறது
ஒருவருடைய ஜீவனம் ,தொழில் நிலை மற்றும் கர்ம நிலைகள் பற்றி அறிந்து கொள்ளப்படுகிறது.
தொழிற் ஸ்தானமாக பத்தாமிடத்தை கருதினாலும் பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்களை மட்டும் வைத்து அல்லது பத்தாமிட அதிபதியினை பொறுத்து ஒருவருடைய தொழில் நிலையை முடிவு செய்து விட முடியாது. அவ்வாறு பார்க்கும் போது பெரும்பாலான சாதகர்கள் தான் செய்யும் தொழிலுக்கும் , தொழில் ஸ்தானாதிபதிக்கு உரிய தொழிலுக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடுகிறது .
அதிக சுபத்துவமாக எந்த கிரகம் ராசி அல்லது லக்கனத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் அல்லது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த தொழில் சாதகருக்கு அமையும்.
பதினொன்றாம் இடம் ஒருவருக்கு லாப ஸ்தானமாகும். வாழ்வில் அவர் அடையக்கூடிய லாப நிலைகளையும், மூத்த சகோதரன் ,மறுதாரம் போன்றவற்றை அறிந்து கொள்ள பயன்படும் இடமாகும்.
ஒரு மனித வாழ்வின் இறுதி நிலையையும் மற்றும் அவரது முக்தி நிலையையும் பன்னிரெண்டாம் இடத்தை கொண்டும் அறியப்படுகிறது. அயன், சயன மற்றும் முக்தி நிலை பற்றி அறிந்து கொள்ள பயன்படுகிறது ஒரு நாளின் இறுதி நிலை அறிந்து கொள்ளப்படுகிறது.ஒரு நாளின் இறுதியான இரவில் நிகழும் அந்தரங்க நிலைகளையும் மற்றும் படுக்கை சுகத்தையும் அறிந்து கொள்ள பயன்படுகிறது.
நன்றி!
வாட்ஸ் அப் & செல் & gpay
9715189647
Cell
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email masterastroravi@gmail.com