Friday 28 April 2023

மனம் -எண்ணம்-செயல்}~ நடத்தை

 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 

{ மனம் -எண்ணம் -செயல் ]~ நடத்தை 

 {Mind -Thought -Action }~Character

            


    ஒருவரது நடத்தையை  (character) முடிவு செய்வதில் முதன்மை வகிப்பது மனம் (mind) ஆகும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்"..

மனதின் செயல்பாடு "எண்ணம் "(Thought) ஆகும் .

எண்ணங்கள் இரண்டு வகைப்படும்.

அவையாவன:

 1)  நேர்மறை எண்ணங்கள் (Positive thought)

  2)  எதிர்மறை எண்ணங்கள் (Negative thought)  ஆகும்.

எண்ணத்தின் வலிமையை பொறுத்து எண்ணம் செயலாக (action) மாறுகிறது.


 ஜோதிட அடிப்படையில் மனம் என்பதை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும் மனதிற்கும், சந்திரனுக்கும் நீண்ட நெருங்கிய தொடர்பு ஒன்று. மனதில் தோன்றியதெல்லாம் எண்ணங்களாக மாறும் அந்த எண்ணங்கள் தான் செயலாக மாறுகிறது.. அனைத்து எண்ணங்களும் செயலாக மாறி விடுவதில்லை.


  மனமானது வலிமையாக இருந்தால் மனதில் தோன்றியதை செயலாக மாறிவிடுகிறது ஒரு ஜாதகத்தில் மனநிலைகாரகன் என்று அழைக்கக்கூடிய சந்திர பகவான் வலிமை பெற்று இருக்க வேண்டும் சந்திர பகவான் வலிமை பெறுவது என்பது வளர்பிறைச் சந்திரனாக இருக்க வேண்டும். அடுத்து சந்திரனுடன் சனி அல்லது ராகு 8 பாகைக்குள் நெருக்கமாக இணையாமல் இருக்கப்பட வேண்டும் சந்திரன் நீசம் ,பகை  போன்ற நிலைகளில் வலு இழக்கக்கூடாது.இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒரு சில கிரகங்கள் வழியாக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.


        ஜாதகத்தில் சந்திர பகவான் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும். இயற்கை சுப கிரகமான குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்று சுபத்துவமாக இருந்தால் அவரது மனதில் தோன்றும் அனைத்தும் நேர்மறை எண்ணங்களாக இருக்கும். இந்த நேர்மறை எண்ணத்தின் விளைவாக  நல்ல செயல்கள்  வழியாக நன் நடத்தைகள் நடப்பு  தசா புத்திகள் மற்றும் கோச்சார பலனுக்கு ஏற்ப நடக்கும்.


         மாறாக சந்திரன் பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்து இயற்கை பாவ கிரகமான சனி,செவ்வாய் ,ராகு ,கேது ,

பாவியுடன்  சேர்ந்த புதன் மற்றும் அரை பாவரான சூரியன் ஆகிய கிரகங்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டிருக்க அவரது மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களாக அமைந்து அவருக்கு நடக்கக்கூடிய தசாபுத்தி மற்றும் கோச்சார பலன் ஏற்ப எதிர்மறையான செயல்கள் வழியாக கெட்ட நடத்தைகள் அவரது வாழ்வில் வெளிப்படும்.


 மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் செயலாக மாறுவதற்கு லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை அவசியமான ஒன்றாகும்.

"எண்ணியது எண்ணி யாங்கு  செயல்பட லக்கனாதிபதியின் வலிமை மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது.

லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் மனதில் தோன்றும் எண்ணங்கள் செயலாக மாறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும்  போராட்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு அந்த செயலை செயல்படுத்தி வாழ்வில் உயர்வடைவார்.


 மனதில் எண்ணிய எண்ணங்கள் செயலாக மாறி நல்ல முறையில் வெளிப்பட யோக தசைகள் அவரது வாழ்வில் உரிய காலத்தில் வரவேண்டும்.கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடப்பில் இல்லாது இருக்க வேண்டும்.


  ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் தொடக்க காலத்தில் ஆறு மற்றும் எட்டாம் அதிபதி  அவ யோகத் தசைகள் மற்றும் லக்கன அவ யோக தசைகள் நடப்பிலிருந்தால்  அந்த காலத்தில் பொறுமையாக போராடி எதிர்நீச்சல் போட்டு உகந்த நல்ல தசைகள் வரும் பொழுது அந்த எண்ணத்தின் செயலை நிறைவேற்றி விடுவார்கள்.


ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை குன்றி நடக்கக்கூடிய தசைகளும் தொடர்ந்து அவயோக தசைகளாக அல்லது ஆறு எட்டுக்குடைய தசைகளாக இருந்து கோச்சார அடிப்படையிலும் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி ஆகியவை நடப்பில் இருந்தால் அவர்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு முயற்சித்தும்  எண்ணியபடி அடைய முடியாமல் மனதளவில் பெரிய பாதிப்புக்கு உள்ளார்கள்.


  உங்களுடைய மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி அந்த நல்ல எண்ணத்தின் விளைவாக நல்ல செயல்கள் தோன்றி அவர்கள் மனதில் தோன்றிய நல்ல எண்ணத்தில் விளைவாக நேர்மறை எண்ணங்கள் தோன்றி அதன் விளைவாக சமூகத்தில் நல்ல  செயல்கள் வெளிப்படுத்தி நன் நடத்தைகள் உடையவனாக திகழ அவரது ஜாதகத்தில் உயிர் மற்றும் உடல் என்றும் அல்லது விதி மற்றும் மதி என்று அழைக்கப்படும் லக்கனம்,லக்கனாதிபதி , ராசி , ராசி அதிபதி ஆகியவை பலம் இழக்க மால் வலிமை பெற்று சுபத்துவமான நிலையில் இருந்து தொடர்ந்து லக்கன யோக தசைகள் நடப்பில் இருக்க வேண்டும்.


நன்றி..


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


           



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd,

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Tuesday 25 April 2023

துலாம் ♎ முதல் மீனம் வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்

 துலாம் முதல் மீனம் வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்.

               


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர்  வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது அவருக்கு நடக்க கூடிய தசா புத்திகளே ஆகும்.


 ஒருவர் ஜாதகத்தில் யோக தசைகள் தான்  நல்லது தரும் என்றும் அவ யோக தசைகள் கெட்டதை தரும் என்றும் உறுதியாக  கூறிவிட முடியாது.


  ஒரு சிலருக்கு லக்கன அவயோக தசைகள் உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு ,பத்து  மற்றும் பதினொன்றில் நட்பு நிலை நின்று சுபத்துவமான நிலையில் இருக்க அதிக நல்ல பலனை தந்து விடுவது உண்டு. அதேபோல லக்கன யோகராக கருதக்கூடியவை பாவ கிரகங்கள் உடன் சேர்ந்து பாவத்துவமான நிலையில் இருக்க அந்த யோக தசையே கெட்ட பலனை  தந்து விடுவது உண்டு.


 துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் ,சனி மற்றும் புதன் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசைகளாக விளங்குகிறது.அதே நேரத்தில் குரு, சூரிய ,சந்திர  மற்றும் செவ்வாய் தசைகள் எதிர் தன்மை உடைய தசைகளாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி , மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் நிற்க அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது. துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் மிகுந்த யோகத்தை தர வேண்டுமாயின் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்தில் நிற்காமல் லக்னத்தில் நின்றால் மிகுந்த நல்ல பலனை தருகிறது. துலா லக்னத்திற்கு முக்கியமாக குரு தசையே அவயோக தசையாகும்.


 விருச்சிகம் லக்னத்திற்கு செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ஆகியவை யோக தசைகளாக கருதப்படுகிறது சுக்கிரன் புதன் சனி ஆகியவை  எதிர் அணி  தசைகளாக கருதப்படுகிறது. பொதுவாக விருட்சகத்திற்கு புதன் திசையை அவயோகத் தசையாக கருதப்படுகிறது.

செவ்வாய் பகவான் லக்னத்திற்கும் ஆறாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் லக்னத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது என்ற நிலையில் லக்கினத்திற்கு ஆறாம் இடமான இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது ஒரளவு நல்லது.


 விருச்சிக லக்னத்திற்கு லக்ன யோக அல்லது அவயோக தசையாக இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகமான குரு  வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு வரும்பொழுது அவை யோக தசையாக மாறி நல்ல பலனைத் தருகிறது.


 விருச்சிக லக்னத்தை பொருத்தவரை தர்ம கர்மாதிபதிகள் என்று சொல்லக்கூடிய சூரியன் மற்றும் சந்திரன் பௌர்ணமி யோகத்தில் அமர்ந்து அதன்  தசை நடத்தும் பொழுது பௌர்ணமி யோகம் மற்றும் தர்ம-கர்மாதிபதிகள் சம சப்தமாக  தொடர்பு பெற்று அரசு கட்டிலில் அல்லது ஆட்சி கட்டிலில் அல்லது அரசாங்கத்தின் உயரிய பதவி இல்ல அபரவக்கிறது.


 தனுசு லக்னத்திற்கு குரு, 

வளர் பிறைச்சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியவை இலக்கண யோக தசையாக கருதப்படுகிறது.உபய லக்கனத்திற்கு சுப கிரகங்கள் கேந்திரத்தில் அமர்வது கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தந்து விடுவதுண்டு. அந்த வகையில் குரு பகவான் நான்காம் இடமான மீனத்தில் அமராமல் லக்னத்தில் அமர்ந்து இருப்பது கேந்திர ஆதிபத்தியம் தோஷத்திலிருந்து விலக வைத்து விடும்.

சுக்கிரன் புதன் சனி தசைகள் எதிரணியை சேர்ந்த தசையாக கருதப்படுகிறது .பொதுவாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் மற்றும் புதன் தசைகள் அவையக தசையாக கருதப்படுகிறது.ராகு மற்றும் கேது பகவான் குரு அணியை  சேர்ந்த தனுசு, மீனம்,மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் யோகத்தை அளித்த தரும்.


மகர லக்கனத்திற்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் பாவ கிரகங்களுடன் சேராமல் நல்ல ஸ்தான வலிமையை பெற்று நிற்கும்போது சாதகருக்கு யோகத்தை அள்ளித் தருகிறது. சூரியன் சந்திரன் செவ்வாய் மற்றும் குரு ஆகியவை எதிரணியை சேர்ந்த தசைகள் ஆகும்.இங்கு சனிக்கு குரு சம தன்மை பெற்ற கிரகம் என்பதால் குரு தசையில் பெரிய அளவுக்கு பாதிப்பு நடந்துவிடும் தில்லை. பொதுவாக மகர லக்கினத்திற்கு சூரிய தசை ஆகாத தசையாகும்.ராகு மற்றும் கேது சுக்கிரன் அணியை சேர்ந்த ராசியில் நிற்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


 கும்பம் லக்கனத்திற்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் நல்ல ஸ்தான வலிமையை பெற்று சுபத்துவமான நிலையில் நிற்கும் பொழுது அதிக அளவில் நல்ல யோக பலனை லக்கனாதிபதியின் வலிமையை பொறுத்து தருகிறது. சூரிய சந்திர செவ்வாய் மற்றும் குரு தசைகள் எதிர் தன்மையை கொண்ட தசையாக கருதப்படுகிறது. பொதுவாக கும்ப லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான சந்திர தசை அவயோக தசையாகும்.

நிழல் கிரகங்கள் சுக்கிரன் அணியை சேர்ந்த ராசிகளில் நிற்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


 மீன் லக்னத்திற்கு குரு, சூரிய, சந்திரன் மற்றும் செவ்வாய் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசையாக கருதப்படுகிறது இங்கு சூரிய தசை ஆறாம் அதிபதி தசை என்பதால்  யோக பலனை தந்து விடுவதில்லை.சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் எதிர் அணியை சேர்ந்த தசைகளாகும். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை அவ யோகத் தசையாக கருதப்படுகிறது.


நன்றி


Cell & What's app & Google pay

  097151 89647 


My another cell no : 7402570899


My email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                     


அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பன்னிரெண்டு பாவகங்களுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய் மற்றும் சனி பகவான்

 பன்னிரெண்டு பாவகங்களுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய் மற்றும் சனி பகவான் 

       


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பாவகத்தையையோ சனி மற்றும் செவ்வாய் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அல்லது சேர்ந்த நிலையிலோ அல்லது தனி தனியாகவோ பார்த்தால் அந்த பார்க்கப்படும் அல்லது சேர்ந்து நிற்கும் கிரகங்கள் மிகவும் பாவத்துவ நிலைக்கு உட்படும்.


இதேபோல செவ்வாய் சனியை நான்காம் பார்வையாக பார்த்து அதேபோல சனி தனது பத்தாவது பார்வையால் செவ்வாய் பகவானை பார்த்து ஒன்றையொன்று பார்வை செய்து மிகவும் பாவத்துவமாகி இருக்கும் இடத்தையும் அவை பார்க்கும் இடத்தையும் அதிக பாவத்துவ நிலைக்கு உட்படுத்துகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்ந்து லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்த்தாலோ அல்லது வேறு ஏதாவது இடத்தில் தனித்தனியாக அல்லது சேர்ந்து நின்று  லக்னத்தை பார்த்தாலோ அந்த லக்கன பாவம் கெட்டு விட்டது. லக்கனாதிபதி உடைய வலியைப் பொறுத்து ஜாதகருடைய ஆளுமை தன்மை.அமைகிறது.


   வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் செவ்வாய்  மற்றும் சனி சேர்ந்திருந்தாலும் அல்லது செவ்வாய் மற்றும் சனி தனித்தனியாக  அல்லது சேர்ந்த நிலையில் இரண்டாம் இடத்தை பார்வை செய்தாலும் அல்லது செவ்வாய் மற்றும் சனி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நிலையில் இரண்டாம் இடத்துக்கு தொடர்பு கொள்ளும்போது  கூடுதல் பாவத்துவ நிலையை அடைகிறது. இரண்டாம் இடம் அதிகமாக வலிமை இழந்து விட்டது.


 இது திருமண தடையை உண்டாக்குகிறது.கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை அற்றவராக இருப்பார்.


 மூன்றாம் இடத்தில் செவ்வாய் மற்றும் சனி இணைந்து இருந்தாலும் அல்லது சேர்ந்து நின்று வேறு இடத்திலிருந்து பார்த்தாலும் சகோதர தோஷத்தை உருவாக்குகிறது.


கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து போன்ற வகையில் பாதிப்பை உண்டாக்குகிறது.

காம எண்ணம் மிகுதியாகி சுபத்துவம் இல்லாத நிலையில் தவறான நிலையில் மனிதனை நகர்த்தி வைக்கும்.


 நான்காம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் போது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாக்கிறது. இந்த பலன் மாறுபாடு சுபத்துவம் பெற்ற நிலையிலையோ அல்லது அந்த வீட்டு அதிபதி மற்றும் அதற்குரிய காரக நிலையைப் பொருத்தம் பலன் மாறுபடும்.


ஐந்தாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறது‌ பூர்விக சொத்தில் வசிக்க இயலாத நிலையும் , பூர்வீக செத்தால் வில்லங்கம் போன்றவற்றையும் உண்டாக்குகிறது. இந்த பலன் ஐந்தாம் இடத்திற்கு சுபத்துவம் கிடைக்காத நிலையிலும், மேலும் ஐந்தாம் இடம் அதிபதி மற்றும் புத்திரகாரன் குரு ஆகியவற்றை பொறுத்தும் பலன் அமைகிறது.


சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் சனி, செவ்வாய் அமர்ந்திருப்பது கடன் ,பிணி, எதிர்ப்பு ஆகியவற்றை தடுக்கும் நிலையையும், எதிரியை வெல்லக்கூடிய நிலையை தருகிறது..


    களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் அமர்ந்திருப்பது திருமண தடை உருவாக்குகிறது. ஏழாம் அதிபதியும் மற்றும் களத்திரக்காரர்கள் சுக்கிரனும் கெட்டுப் போன நிலையில் மிகுந்த பாதிப்பை உருவாக்குகிறது. திருமணமே நடக்காத நிலையில் அல்லது அவ்வாறு நடந்தால் ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்க இயலாத நிலையில் தருகிறது. நட்பு நிலையில் கெடு பலனை அனுபவிக்க கூடிய நிலையை தருகிறது.


  எட்டாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் நிற்கும் போது அதன் தசை காலங்களில் மரணத்திற்கு நிகரான தொல்லைகளை கொடுக்கிறது.சனி தசை செவ்வாய் பத்தி மற்றும் செவ்வாய் தசை சனி புக்தி போன்ற காலங்களில் விபத்து,வெட்டு காயம் போன்றவை உண்டாகிறது.


 ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் நிற்பது தந்தை மற்றும் தந்தை வழி ஆதரவு கிடைக்காத நிலை, கஞ்சத்தனம் மற்றும் எந்த வகை பாக்கியங்களும் அனுபவிக்க இயலாத தன்மை உண்டாக்குகிறது.


பத்தாம் இடத்தில் பாவியாவது இடம் பெற வேண்டும் என்ற விதிப்படி பத்தாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் அமர்வது நல்ல யோக நிலையை தரக்கூடிய அமைப்பாக கருதப்படுகிறது.


  லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருப்பது உப ஸ்தானம் என்ற வகையில் நட்பு நிலையில் அமரும்போது மட்டும் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும். இளையதரம், மூத்த சகோதரன் போன்ற அமையாது நிலையை தரும்.


 12ஆம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்ந்து பாவத்துவமான நிலையில் இருப்பவர் கஞ்சத்தனம் உடையவராகவும், செலவு செய்ய மனமில்லாதவராகவும்  மற்றும் அதே நேரத்தில் மாறுபட்ட காம எண்ணங்களை உடையவராகவும் திகழ்வார்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் ; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                   


அன்புடன்

‌ சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

  M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக காட்டும் தசா புத்தி பலன்கள்

 வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக காட்டும் தசா புத்தி பலன்கள்.

         


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் இதுவரை நடந்த இப்பொழுது நடக்கின்ற மற்றும் இனிமேல் நடக்க இருக்கின்ற ஆகிய முக்கால பலன்களையும்  கூறுவதற்கு ஒருவர் ஜாதகத்தில் ஜனன காலத்தில் இருந்து இதுவரை நடந்த  மற்றும் 

இனி நடக்கப் போகின்ற தசா புத்திகளை வைத்துக் கொண்டே துல்லியமாக பலன்களை கூறிவிட முடியும்.


  ஒவ்வொரு தசா புத்தி பலன்களை கூறும்பொழுதும் அக்காலகட்டத்தில் அந்த தசா புத்தி கிரகங்கள் கோச்சார அடிப்படையில் எந்த இடத்தில் இருந்திருக்கும் என்ன மாதிரியான நிலையில் இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து ஜனன கால சாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தும் பலனை கூற வேண்டும்.


  ஒருவர் ஜனன காலத்திலிருந்து இதுவரை நடந்திருக்க கூடிய தசாபுத்தி பலன்களை சொல்வது எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பதை பொறுத்தே இனி நடக்க இருக்கின்ற பலனை ஜோதிடர்களாகிய  நாம் சொல்லும் பொழுது அது நிச்சயமாக அது போல் நடக்கும் என்ற நம்பிக்கைக்கு வருவதற்கு உகந்ததாக இருக்கும்.


   உங்களுடைய ஜாதகத்தில் தற்பொழுது நடக்க இருக்கும் அல்லது நடக்கின்ற பலனை துல்லியமாக சொல்ல வேண்டுமாயின் அவருடைய தசை, புத்தி மற்றும் அந்தாரம் ஆகிய மூன்றையும் கணக்கிட்டு பிறகு நடப்பு தசை நாதன் மற்றும் புத்தி நாதன் ராசி கட்டத்தில் எப்படி உள்ளார் என்பதையும்,

.அதன் ஷட் பல பலனை ஆராய்ந்து பார்த்து பலன் அறிய முயல்வார்.தசை நாதன் மற்றும் புத்தி நாதன் ஆகிய இருவரும் எந்த வகையில் செயல்படுவார்  என்பதை பின்வரும் உதாரணம் மூலமாக எளிதாக புரிந்து கொள்ளலாம்.


      ஒருவர் ஜாதகத்தில்

 தசா நாதனே முதலாளி ஆவார்.

அவர் இட்ட வேலைகளை செய்ய பணிக்கப்பட்டவராக புத்தி நாதன் செயல்படுவார்.ஒரு வேளை புத்தி நாதன் உங்களுக்கு நண்பராக இருந்தால் முதலாளி இட்ட வேலையையும் நிறைவேற்றுவார்.அதே நேரத்தில் உங்களையும் பெரிய அளவுக்கு தொந்தரவு படுத்தி காரியத்தை செய்யாமல் இலகுவாக செயல்படுவார்.ஆனால் புத்தி நாதன் உங்களுக்கு பகை எனில் முதலாளி இட்ட பணியை உங்களிடம் முரட்டுத்தனமாக காட்டி செயல்படுத்துவார்.


 தற்பொழுது அந்தரநாதன் கோச்சார் அடிப்படையில் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் உள்ளார் என்பதையும், எத்த கிரகத்துடன் தொடர்பு கொண்டு உள்ளார் , என்பதையும், எந்த ஆதிபத்திய தன்மையை பெற்றுள்ளார் என்பதை பொறுத்து மற்றும்  சுபத்துவ‌ம் அல்லது பாவத்தன்மையும் ஒப்பிட்டு பார்த்து பலன் கூற வேண்டும்.


 ஒரு தசை சிறப்பாக நல்ல பலனை தர உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை பெற்று கேந்திர , கோணங்களில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அவை பெற்ற ஸ்தான அடிப்படையில் நல்ல பலனைத் தர அந்த தசை நடத்தும் கிரகம் அதிக சுபத்துவமாக இருந்தால் மட்டுமே போதுமானது ஆகும்.


  ஒரு கிரகம் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் அந்த கிரகம் 3,6,10,11 போன்ற உப ஜெய ஸ்தானத்தில் நட்பு நிலையில் இருந்தால் மட்டும் போதுமானது.அவ்வாறு இருந்தால் கூட அந்த கிரகம் யோக பலனை தந்து விடுகிறது.


     மேஷம் மற்றும் துலா லக்னத்திற்கு புதன் மற்றும் குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மூன்று மற்றும் ஆறாம் இடத்திற்கு உடையவன்  என்ற வகையில் நல்ல பலனை சாதகருக்கு தருவதில்லை. மாறாக ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு சனி பகவான் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  மேஷ மற்றும் விருச்சிகம் லக்கனத்திற்கு புதன் தசை,சனி தசை,

ரிஷபம் மற்றும் துலாம் லக்கனத்திற்கு குரு தசை, சூரியன் மற்றும் சந்திரன் தசை,

மிதுனம் மற்றும் கன்னி லக்கனத்திற்கு செவ்வாய் தசை,

தனுசு மற்றும் மீனம் லக்கனத்திற்கு சுக்கிரன் தசை மற்றும் புதன் தசை

மகரத்திற்கு சூரியன் தசை,

கும்பத்திற்கு சந்திரன் தசை,

ஆகிய தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசைகள் ஆகும்.

இந்த அவயோகத்தை தரக்கூடிய தசைகள் மிகுந்த நல்ல பலனை தர மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நட்பு வலிமை பெற்று திகழ வேண்டும்.


நன்றி.


Cell & What's app & Gpay 

   097151 89647 


Another cell ; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

               



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

                             M.SC,M.A, BEd 

        (Teacher & Astrologer)

Omsakthi online astro consulting centre

Karambakkudi, Pudukkottai District.

ஜோதிட பலன் பார்க்கும் போது..

 ஜோதிட பலன் பார்க்கும் போது.....



              
          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஜோதிடத்தில் பலன் கூறும் போது பல்வேறு ஜோதிட உட் கூறுகளை ஆய்வு செய்து பார்த்து பலன் சொல்ல வேண்டும்.எண்ணற்ற விதிகளை மனதிற்குள் கொண்டு வந்து தனது சுய மனதை கழட்டி வைத்து விட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து நாம் படித்த விதிகளை கொண்டு மட்டுமே பலன் தேட முயலாமல்  விதிகளுக்குள் உள்ள விதி விலக்குகளை ஆராய்ந்து பலன் கூற முயல வேண்டும்.


  இருபது நிமிடத்திற்குள் பலன் கேட்க வரும் ஒருவரது குண நலன்களை அவரது லக்கனம் மற்றும் அதிபதி உடன் ஏனைய கிரகங்கள் கொண்ட பார்வை , சேர்க்கை மூலமாக கொண்ட தொடர்பின் அடிப்படையில் ஜாதகரை பற்றி புட்டு புட்டு வைத்து அவரை ஜோதிடத்தின் மேலே முழு நம்பிக்கை வரும்படியாக சில நேரங்களில் கண்களில் கண்ணீர் மல்கி இருகரம் கொண்டு கை தொழ செய்திட வேண்டும்.


அடுத்தபடியாக நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் அடிப்படையில் தற்போது உங்கள் ஜாதகப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக எடுத்து கூறி பாராட்டை பெற்று விட வேண்டும்.


   நிச்சயமாக  நடந்த ,நடக்கும்  மற்றும் நடக்க இருக்கும் தசா புக்தி கொண்டு ஜாதகர்  முழு வாழ்வில் உள்ள  வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக கணித்து விடலாம்.


    பன்னிரெண்டு ராசிகள் ,ஒன்பது கிரகங்கள் மற்றும் இருபத்து ஏழு நட்சத்திரங்கள் ஆகிய எல்லாமே மனித வாழ்வினை வழி நடத்த கூடியவை.

இவைகளை கொண்டு இவை இருக்கும் இடம் , பார்வை மற்றும் சேர்க்கை மற்றும் அதற்கு உரிய காரகன் கிரகம் ஆகிய எல்லாவற்றையும் பாவகம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்று வழிகளில் ஒரு வழிக்கு 40 மதிப்பெண் வீதம் கொடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஆதிபத்தியம் பலனை எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பலனை கணிக்க வேண்டும்.‌


    பலன்  பார்க்க வரும் ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தின் அடிப்படையில் எந்த ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மை தரக்கூடிய நிலையில் உள்ளது என்பதை அறிய அந்த கிரகம் இருக்கும் ஸ்தானம் அதாவது வீடு கொடுத்தவன் வலு, அவற்றுடன் சேர்த்து உள்ள கிரகங்கள் அவை டிகிரி அடிப்படையில் எவ்வளவு நெருக்கமாக இணைந்து உள்ளது .எட்டு பாகைக்குள் இருந்தால் முழுமையாக பாதிக்கப்படும்.இணைந்த கிரகம் சுபராக இருப்பின் அதிக சுபத்துவ படுகிறது.பாவ கிரகமாக இருந்தால் அதிக பாவத்துவ படுத்துகிறது.


பதின்மூன்று பாகை அதாவது ஒரு நட்சத்திர பாகை அளவு விலகி இருப்பின் பாதி அளவு பாதிக்கப்படுகிறது.இருபத்து மூன்று பாகை தாண்டி இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் முழுவதுமாக பாதிக்கப்படுவதில்லை.


இதே போல ஒரு கிரகம் இயற்கை சுப  கிரகமான குரு , வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியை பார்க்க   சுபத்துவ படுகிறது .மாறாக இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய்  மற்றும் தேய்பிறைச்சந்திரன் பார்க்க அந்த கிரகம் பாவத்துவ நிலையினை அடைகிறது.ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை பார்த்து சுபத்துவ படுத்துகிறதா ? அல்லது பாவத்துவ படுத்துகிறதா ? என்பதையும் அந்த கிரகங்கள் பெற்ற பாகை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.


 ஒரு கிரகத்துடன் பாவ கிரக சேர்க்கை மற்றும் பார்வை பாவத்துவ படுத்துகிறது.பகை, நீசம், அஸ்தமனம் அந்த கிரகத்தை பலவீன படுத்துகிறது.


இவ்வாறாக ஒரு கிரகம் ராசியிலே பலவீனப்பட்டு நின்னாலும் அல்லது பாவத்துவப்பட்டு நின்றாலும் அவை அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் நல்ல‌ பலனை தருகிறது .பாவ வர்க்கம் ஏறி இருந்தால்  பாவத்துவம் அடைகிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

          

     


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் பிள்ளைகளுக்கு திருமண 💒 வரன் தேடும் பெற்றோர்களுக்கு -சிறப்பு விழிப்புணர்வு பதிவு


 உங்கள் பிள்ளைகளுக்கு திருமண 💒 வரன் தேடும் பெற்றோர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு பதிவு.

          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   உங்களது பிள்ளைக்கு திருமண முயற்சி மேற்கொள்ள எண்ணும்போது முதலில் அவனது /அவளது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு நன்கு ஆராய்ந்து பார்க்கும் ஜோதிடரிடம் சென்று உங்களுடைய பிள்ளையின் ஜாதகத்தில் திருமணம் செய்வதற்கு உரிய காலம் வந்து விட்டதா ? என்பதை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.


 திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான லக்கனம் என்னும் ஜாதகர் , குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் , மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் இவர்களின் அதிபதி ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் நிலைமையும் மற்றும் அந்த சுகத்தை தரக்கூடிய தசா புத்திகளும் வந்துவிட்டதா? என்று கவனிக்க வேண்டும். புத்திர தோஷம் ஏதாவது உள்ளதா ?  என்பதையும் ஆய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.


   தனிப்பட்ட முறையில் பார்க்க சென்றால் உங்கள் பிள்ளைக்கு காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டா ? அவ்வாறு இருப்பின் பெற்றோரின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்காத வகையிலும் மற்றும் பெற்றோரின் சம்மதத்துடனும் நடக்குமா ? இது போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் கொளரவம் குறைக்கின்ற வகையிலான தவறான பழக்கம் (மது,மாது மற்றும் சூது) உள்ளதா?  அல்லது இல்லையா? இது போன்ற பயன்படக்கூடிய தகவல்களை பெற்று கொண்டு அதற்கு ஏற்றார் போல் திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.


 உங்கள் பிள்ளைக்கு இளமை திருமணமா ? கால தாமதம் திருமணமா ?  சொந்தமா? அந்நியமா? படித்த நபரா ?,வேலையா ? தொழிலா ? வேலை எனில் அரசு வேலையா ? தனியார் வேலையா ?அடிமை வேலையா ? , தொழில் எனில் சொந்த தொழிலா ?  இது போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை ஜாதகத்தில் ஜோதிடரிடம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  குழந்தை பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் மற்றும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடியவ சுக்கிரன் பகவான் ஆகிய கிரக வலிமையை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.உங்கள் பிள்ளை தாம்பத்திய சுகத்தை கொடுக்கக்கூடிய அல்லது பெறக்கூடிய செக்ஸ் வலிமை உள்ளதா? அல்லது அலி தன்மை உள்ளதா ? போன்ற விவரங்களை கேட்டு பெற வேண்டும்.


  மேற்கண்ட இந்த விஷயங்களை விடுத்து நீங்கள் சோதிர்களிடம் உங்களது பிள்ளையோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள்.ஆண் எத்தனை மற்றும் பெண் குழந்தை எத்தனை , பிள்ளையின் அப்பாவோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள், பிள்ளையின் அம்மாவோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள், மாமன்கள் எத்தனை? இதே போல கட்டிக்கிற போற வாழ்க்கைத் துணை உடைய பெண் அல்லது ஆணுடைய திசை எந்த பக்கம் அமையும்.  அந்த வாழ்க்கை துணையோடு பிறந்துள்ள ஆண் எத்தனை ? பெண் எத்தனை?  அவங்க அம்மாவோடு கூட பிறந்தவங்க எத்தனை பேர் ?  உங்க அப்பாவோடு கூட பிறந்தவங்க எத்தனை பேர் ?  இது போன்ற திருமணத்திற்கு தேவையில்லாத கேள்விகளை கேட்டு அதை சரியாக சொல்லும் பட்சத்தில் திருமணம் தொடர்பாக ஆய்வு செய்து நன்கு ஆழமாக பார்க்காமலே  அவர் கூறும்   திருமண பொருத்தம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்து விடுகிறீர்கள்.


  இவற்றை சரியாக சொல்லி விட்டால் அந்த ஜோதிடர் சிறப்பான ஜோதிடர் ஆகும். இதனை  சரியாக சொல்வதற்கு காரணம் நீங்கள் ஜாதகம் பார்க்க கொண்டு செல்லக்கூடிய நோட்டில் சோதிடர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் சாதகத்தை எழுதியவர் பிறப்பு துருவக் கணிதத்தை போட்டு விடுவது தான் காரணம் ஆகும்.இந்த உண்மையை முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


  இவ்வாறு தேவையில்லா கேள்விகளை தவிர்த்து மேற்குறிப்பிட்ட ஆழாமான வினாக்களை கேட்டு உங்கள் பிள்ளையின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்து திருமணத்திற்கு உரிய காலம் வந்து விட்டது என்று சொன்னால் பிறகு உங்கள் பிள்ளைக்கு வரன் தேடிய ஆண் அல்லது பெண் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்க சொல்ல வேண்டும்.


 ஜோதிடர்களாகிய நாம் இருவரது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாங்கி இருவரது ஜாதகத்தையும் ஏதாவது ஒரு முறையில் (வாக்கியம்/திருக்கணித முறை) கணித்து பலன் அறியவேண்டும்.


ஜாதக பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம் என்னும் நட்சத்திரம் பொருத்தத்தை மட்டுமே வைத்து கொண்டு முடிவு செய்து விட கூடாது.தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.திருமண தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக் கூடிய குரு பகவான் போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்.


 திருமணம் பொருத்தம் பார்க்கும் போது லக்கன அவயோக தசைகள்,ஆறு மற்றும் எட்டுக்கு உடைய தசைகள் திருமணம் நடக்கும் காலத்தில் அல்லது திருமணம் நடந்த பிறகு வர இருக்கிறதா? கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடப்பில் அல்லது திருமணம் நடந்த சில மாதங்களில் வருகிறதா ? இது போன்ற விவரங்களை ஆய்வு செய்து பார்த்து அதற்கேற்ப பொருத்தம் போட வேண்டும்.


திருமணம் செய்ய இருக்கும் தம்பதியினருக்கு தார தோஷம் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


இவை தவிர்த்து 1,7 ல் ராகு மற்றும் கேது உள்ளவர்களுக்கு 2,8 ராகு மற்றும் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற விதிகளை தவிர்க்கப்பட வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்பது உயிரை கொல்லும் அளவிற்கு பெரிய தோஷம் இல்லை அவற்றை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.இந்த செவ்வாய் திருமண ஸ்தானமான 1,2,7 மற்றும் 8 ஆம் இடங்களில் சுபத்துவமின்றி இருப்பதோ அல்லது அந்த இடத்தை பார்ப்பதோ பாவத்துவம் ஆகும்.அது திருமண தடையை கொடுக்கும் அவ்வளவுதான்.


பிறகு மூலம் மாமனுக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது.விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது.இது போன்ற ஜோதிட பழமொழிகளை நம்ப வேண்டாம்.


  இவ்வாறு உங்கள் பிள்ளைக்கு திருமண பொருத்தம் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஜோதிட விழிப்புணர்வு அவசியம் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்களின தடவினால் ஜோதிடம் தொடர்பான அடிப்படை அறிவு தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 திருமணம் ஒருவருக்கு கால தாமதமாகி கொண்டு செல்வதற்கு திருமண ஸ்தானமான லக்கனம் மற்றும் ராசிக்கு ஒன்று , இரண்டு,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன், சனி செவ்வாய், ராகு மற்றும் கேது  போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறுவது அல்லது சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் பார்ப்பது ,1,2,7,8 ஆம் அதிபதி பலவீனம் அல்லது பாவத்துவம் அடைந்த நிற்பது.

களத்திர சுகம் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய தசாபுத்தி வராமல் இருப்பதும் காரணமாக அமைகிறது.


இவ்வாறு கால தாமதம் ஆகி கொண்டே சென்றால் இவற்றிற்கு உரிய பரிகாரம் செய்யும் முறைகளை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு உரிய பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

‌. 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

            



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

சூரியன், புதன் மற்றும் சுக்கிரன்

சூரியன் -புதன்-சுக்கிரன்


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

         


   ஜோதிடத்தில் கோள்களில் தலைவன் என்று அழைக்கப்படுபவர் சூரிய பகவான்  ஆவார். சூரியனை மையமாக வைத்து எல்லா கோள்களும் சுழன்று வருகின்றன.


 சூரியன் ஒளி  கிரகமாகும்.ஆளுமை தன்மை வாய்ந்த ஆண் கிரகமாக திகழ்கிறது. லக்ன பாவகத்துக்கு காரகராவார். இதனை ஆத்மா காரகன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் தலைவனான தந்தைக்கு காரக கிரகமாக சூரிய பகவானை ஆவார். ஒருவர் ஜாதகத்தில் தந்தை மற்றும் தந்தை  வழி உறவுகளை பற்றி தெரிந்து கொள்ள சிம்மமும் அது அதிபதியான சூரிய பகவானும் மிக முக்கியமாக காரண கர்த்தாவாக திகழ்கிறார்.


 ஒருவர் ஜாதகத்தில் விதியும் (லக்கனமும்) ,  மதியும் (ராசியும் ) 

கெட்டு விட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியனை மையமாக வைத்து சோதிட பலன் கணிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சூரியனையே அதாவது  சூரியன் இருக்கும் இடத்தையே லக்னமாகக் கொண்டு ஜாதக பலன் கணிக்கப்படுகிறது.


  சூரியன் ,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும்" மாத கிரகம்" என்று அழைக்கப்படுகிறது .அதாவது ஒரு ராசியை ஒரு மாத கால அளவு தங்கி இருக்கும் கிரகங்கள் ஆகும்.


   சித்திரை மாதத்தில் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனத்தில் வந்து சேர்கிறது..ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு அவர் எந்த தமிழ் மாதத்தில் பிறந்திருப்பார் என்பதை சுலபமாக கணித்து விடலாம்.


  சூரியனை மிக அருகில் சுற்றி வரக்கூடிய கிரகம் சுக்கிரன் மற்றும் புதன் பகவான் ஆவார்.எனவே இவற்றை 

"உள் வட்ட கிரகம்" என்று அழைக்கிறோம்.

புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிக்குள் மட்டுமே பிரேவேசம் செய்வார்.

 சுக்கிரன் பகவான் சூரியனுடன் சூரியனுக்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் வாசம் செய்வார்.பெரும்பாலான நேரங்களில் ஒரே ராசியில்  சூரியன், புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே அதிகமாக இணைந்த நிலையில் காணப்படும்.


     சுக்கிரனும் , புதனும்  உள்வட்ட கிரகம் என்பதால் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் மற்றும்  வக்கிரம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்திலும் மற்றும் தனித்தனியாகவும் அடைகிறது.


  சூரியனுக்கு ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் மற்றும் குரு பகவான் வரும் போது வக்கிரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறது.


   மகர லக்கனத்திற்கு சூரியன் பகவான் மட்டும் எட்டாம் இடத்தில் நின்றாலும் அஷ்டம தோஷம் கிடையாது.

  

    மாபெரும் சூரிய ஒளிக்கு முன்னால் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 8,11,13 ,15 ,17 பாகை அளவுகளில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறது.


     வலிமை மற்றும் ஒளி மிகுந்த சூரியனின் வலிமையை குறைக்கும் தன்மை நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுகளுக்கு உண்டு. இவை சூரியனை அமாவாசை நேரத்தில் நெருங்கும்போது சூரிய கிரகணத்தையும் மற்றும் பௌர்ணமி நேரத்தில் நெருங்கும் போது சந்திர கிரகணத்தையும் தருகிறது.


 புதன் மற்றும் சுக்கிரன் பகவான் ஆகிய இரு கிரகங்களும் நெருக்கமாக சூரிய பகவானை நெருங்கி அஸ்தமனப்படுத்தும் பொழுது புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் பலனை சூரியன் தனது தசையில் தருகிறது.


 சூரியனால் அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் மற்றும் புதன் பகவான் இழந்த வலுவை மீண்டும் பெற இயற்கை சுப கிரகமான குரு பார்வை , வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நிற்பது மற்றும் திக் பலம், உச்சம்,மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையினை அடையும் போது பெறுகிறது.


  சூரிய பகவானுடன் புதன் சேர்ந்து நிற்பது "புத ஆதித்ய யோகம் "ஆகும். சூரியனும் புதனும் சேர்ந்து எட்டு, நான்கு மற்றும் ஒன்று ஆகிய இடங்களில் சுபத்துவமான நிலையில் நிற்கும் பொழுது அரசனுக்கு நிகராகவ விளங்குவான்.


  சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து நிற்பது தாம்பத்திய சுகத்தை கெடுக்கும்.


  சூரியன் புதன் சுக்கிரன் ஆகிய மூன்று முக்கூட்டு கிரகங்களும் ஒரு ராசியில் சேர்ந்து நிக்கும் பொழுது இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை மற்றும் வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் நிற்பின் அவரவர் லக்னத்தை பொறுத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.மாறாக இயற்கை பாவ கிரகமான தேய்பிறை சந்திரன், சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்து  நிற்கும் போது அல்லது சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தாலோ லக்கனத்தை பொறுத்து கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


    சூரியன், புதன் ,சுக்கிரன் சேர்ந்து நிற்கும் போது தரக்கூடிய பலனை பார்க்க வேண்டும் எனில் அவரவர் லக்னத்தை பொறுத்து அவை தரும் பலனில் மாறுபாடு இருக்கும். மேலும் சுபத்துவ மற்றும் பாவத்துவ  நிலையை பொருத்தும் பலனில் மாறுபாடலாம்.


  மேஷ லக்னமாக இருந்து லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும் சேர்ந்து இருப்பது இங்கு சூரியன் உச்சம், புதனுக்கு அந்த வீடு பகை வீடு மேலும் 3 மற்றும் 6 க்குடைய அவ யோகி ஆவார் .சுக்கிரன் 2 மற்றும் 7 கூடியவர் ஆவார்.


 மேஷ லக்னத்தில் இந்த முக்கூட்டு கிரகம் நன்மையை பயக்க அவர் சித்ரா பௌர்ணமியில் அல்லது பொளர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகிய நிலையில் இருப்பின் நல்ல பலனைத் தரும்.


  சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து நிற்பது என்பது அவரவர் லக்னத்தில் அடிப்படையில் வைத்து பலன் அமையும்.பலன் தரும் தன்மை மாறுபடும்.


 சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் பத்தாமிடத்தில் இருக்கும் பொழுது இயற்கை சுப கிரகமான குரு பகவானோ அல்லது வளர்பிறைச்சந்திரன் கேந்திரத்தில் அதாவது பௌர்ணமி  அமைப்பில் இருக்கும் பொழுது பிறந்த சாதகர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவார்.


    மேஷம் மற்றும் ரிஷப லக்னங்களுக்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்து நிற்பது என்பது புதன் மற்றும் சுக்கிரனுக்கு அது நட்பு வீடாக இருந்தாலும் சூரியனுக்கு இருள் கிரகமான சனி வீடு பகை வீடு என்பதால் மிகுந்த நல்ல பலனை தருவதில்லை. மாறாக பௌர்ணமி யோகத்திலோ அல்லது குரு பகவான் பார்வையில்  இருக்கக்கூடிய அமைப்பில் நல்ல பலனை தரக் கூடிய வகையில் இருக்கும்.


தனுசு லக்கனமாக இருந்து பத்தாமிடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது ஒன்பது மற்றும் 10க்குடையவர் சேர்ந்து இருப்பது கர்ம கர்மாதிபதி யோகம் என்றாலும் கூட பத்தாம் இடத்தில் புதன் இருப்பது சில நேரங்களில் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற வகையில் சிறிது பலத்தை இழக்க நேரிடும். இங்கு சூரியனும் புதனும் பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருக்கும் போது கூடுதலான பலனை தரும்.


 மிதுன லக்னமாக இருந்து பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது மிகுந்த யோகத்தை சாதகருக்கு கொடுக்கும். அரசின் உயரிய பதவிகளையோ அல்லது எழுத்து, சோதிடம் இது போன்ற துறைகளில் இணைய வழி பொருளீட்டல் போன்ற வகையில் மல்டிபிள் டேலண்டராக சாதகர் இருப்பார்.


 கடக லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது இங்கு சூரியன் உச்சம் மற்றும் திக் பலம் பெற்ற நிலையில்  வலுப்பெற்ற நிலையில் இதுவே சித்ரா பௌர்ணமியாக இருக்கும் போது அரசின் உயரிய பதவி அல்லது அரசியலில் உயரிய பதவி கிடைக்கும்.


சிம்மம் லக்கனமாக இருந்து பத்தாம் இடத்தில் சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது சூரியன் திக் பலம், சுக்கிரன் ஆட்சி மற்றும் புதன் நட்பு போன்ற நிலைகளில் முக்கூட்டு கிரகங்கள் வலுப்பெற்று ஜாதகர் அரசின் உயரிய அல்லது அரசியலில் ஆட்சி கட்டிலில் அமரும் யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


கன்னி லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது நல்ல பலனை சுபத்துவ நிலையில் இருக்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் அதாவது கடக வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து நின்று நல்ல பலனை தர வேண்டும் எனில் வீடு கொடுத்த சந்திரன் நல்ல ஸ்தான வலிமையை இழந்த நிலையில் அல்லது தேய்பிறை சந்திரனாகவோ இருக்க கூடாது.


 விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் இடத்தில்  சிம்மம்  வீட்டில் சூரியன் (ஆட்சி), புதன் (அதி நட்பு)  , சுக்கிரன் (பகை)  சேர்ந்து இருப்பது மிகப்பெரிய நல்ல யோகத்தை தருகிறது .அதாவது அரசாங்கத்தில் மற்றும் அரசியலில் உயரிய பதவியை சுப கிரக தொடர்பு ஏற்படும் போது ஜாதகருக்கு கொடுக்கிறது.


 மகர வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்திருப்பதும் இங்கு துலா வீட்டில் சுக்கிரன் ஆட்சி என்ற நிலையிலும் சூரியன் நீசமாகி பங்கம் அடைவதால் புதன் அந்த வீட்டுக்கு நட்பு என்ற வகையில் மூவரும் சேர்ந்து சுபத்துவமான நிலையில் நல்ல யோக பலனை சாதகருக்கு கொடுக்கும்.


  கும்ப வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் விருச்சிக வீட்டில் சேர்ந்து நிற்பது இங்கு சூரியன் மட்டும் நட்பு பெற்ற நிலையில் புதன் மற்றும் சுக்கிரனுக்கு எதிர் தன்மையான வீடு என்ற வகையில் சுபத்துவ நிலையை அடையும் போது மட்டும் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


 மீனம் வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் குருமனை ஏறி நின்று குருவால் பார்க்கக்கூடிய நிலையில் அரசின் மற்றும் அரசியலின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகமும், போதகர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் ஆசிரியர் போன்ற துறைகளில் ஈடுபட வைக்கும்.


இதை அடிப்படையில் மேஷத்திலிருந்து மீனம் வரை எல்லா ஸ்தானங்களுக்கும் பலன் பார்க்க ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால் மேற்கண்ட உதாரணம் அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு   லக்கனத்திலிருந்து பன்னிரண்டாம் வீடு வரை சூரியன்,சுக்கிரன்,புதன் சேர்ந்து நின்றால் தரும் பலனை  பார்க்க பழகிக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் 7402570899


Email ; masterastroravi@gmail.com


         


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday 24 April 2023

திருமணம் எப்பொழுது நடக்கும்?

 திருமணம் எப்பொழுது நடக்கும்?

           


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


        ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் திருமணம் நடக்கவில்லையா? 

அல்லது திருமணம் எப்பொழுது நடக்கும்? 

அல்லது நடந்து பிரிந்து இருக்கிறார்களா ? குழந்தை பாக்கியம் கால தாமதம் ஆகி கொண்டிருக்கிறதா ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தர முடியுமா? என கேட்டால் கட்டாயம் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தர முடியும்.


  சரியான பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை கொண்டு சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தினை கொண்டு ஜோதிடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடை தர முடியும்.


 ஒருவருக்கு திருமணம் இன்னும் நடக்க வில்லை என்பதை அவருடைய ஜாதகத்தில் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்களை லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.இவை தவிர திருமண ஸ்தானத்திற்கு அதாவது தாம்பத்திய சுகத்திற்கு காரகரான களத்திர காரகன் என அழைக்கப்படும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.லக்கனம் மற்றும் லக்கனாதியின் வலிமை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய இரண்டும் என்பதால் இவைகளுக்கு ஏற்பவே திருமணம் நடந்து இருக்கிறதா ? அல்லது எப்போது நடக்கும்? திருமணம் நடந்து பிரச்சினை அல்லது பிரிவினை ஏதாவது உண்டா? புத்திர பாக்கியம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு துல்லியமாக பதில் தர இயலும்.


 ஒருவருக்கு திருமணம் இதுவரை நடக்க வில்லை என்பதையும் அதே நேரத்தில் திருமணம் எப்பொழுது நடக்கும் அல்லது திருமணமே நடக்காது என்பதையும் மேற்குறிப்பிட்ட (1,2,7,8) ஸ்தானங்களுடனும் , அதன் அதிபதிகளுடனும் மற்றும் கார்க் கிரகங்களுடனும் சுப கிரக அல்லது பாவ கிரக தொடர்பு அடிப்படையில் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்.


 இயற்கை பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் அல்லது காரக கிரகங்கள் உடன் நின்றாலும் அல்லது அந்த ஸ்தானங்களை மற்றும் கிரகங்களை சனி மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் பார்வை செய்து லக்கன அவயோக அல்லது ஆறு ,எட்டுக்குடைய தசை நடப்பில் இருந்தாலும் அல்லது கோச்சார அடிப்படையில் தென்மச்சலியின் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலம் அஸ்தம சனி காலம் நலத்தில் இருந்தாலும் அவருக்கு திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்லும் எனவே அவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதியாக கூறிவிட முடியும்.


உதாரண ஜாதகம்-(1)

 இவருக்கு 47 வயது வரை இன்னும் திருமணம் நடைபெறவில்லை.


பிறந்த தேதி 13.03.1976 , பிறந்த நேரம் 6.30 am

மீன லக்னம், கடக ராசி ,

பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம்.


 இவருடைய ஜாதகத்திலே லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய் ,சனி ஆகிய இரண்டு கிரகங்கள் பார்வை செய்கிறது.அதாவது செவ்வாய் மிதுன வீட்டில் இருந்து நான்காம் பார்வையாகவும், சனி கடக ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாகவும் பார்வை செய்கிறது.


 ஏழாம் இடத்திற்கு வேறு எந்தவிதமான சுபத்துவமும் இல்லாத நிலையில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனித்தனியாக பார்த்தால் அல்லது சேர்ந்து பார்த்தாலோ அந்த இடம் சர்வ நாசம் ஆகும் என்பது விதியாகும்.


 மேலும் ஏழாம் அதிபதி புதன் 12 இல் மறைவு, களத்திரகாரகன் சுக்கிரனும் 12ஆம் இடத்தில் மறைந்துள்ளார். லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் உடன் கேது இணைந்த நிலையில் சனி தனது பத்தாவது பார்வையால் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்ப ஸ்தானமுமும் கெட்டு விட்டது. மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் ராகு தொடர்பு.


  திருமண வயதை நெருங்கிய இருபத்தைந்தாவது வயதில் மீன லக்கனத்திற்கு அவயோக தசையான மூன்று மற்றும் எட்டுக்குரிய சுக்கிர தசை அதனைத் தொடர்ந்து ஆறுக்குடைய சூரிய தசை 50 வயதை நெருங்கும் அதற்கு அடுத்து வரக்கூடிய சந்திர தசையோ யோக தசையாக இருந்தாலும் தசைநாதன் சந்திரனும் சனி சேர்ந்து நிலையில் திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.


 ராசிநாதன் சந்திரனுடன் சனி பகவான் இணைந்து ஏழாம் இடத்தை பார்வை செய்கிறார். ராசிக்கு ஏழாம் இடத்தை சனி ஏழாம் பார்வையாகவும் , செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து ராசிக்கு ஏழாம் இடமும் மிகுந்த பாவத்துவ நிலை அடைந்து விட்டது.


உதாரண ஜாதகம் -2


 திருமணம் நடைபெற்றுவிட்டது .ஒரே வீட்டில் இருந்தாலும் 6 வருடமாக பேசி கொள்ளாமல் இருக்கும் ஜாதகம்.பிரிவு ஜாதகம் 


பிறந்த தேதி: 08.10.1978

பிறந்த நேரம்: 7.03 pm

ஜென்ம லக்னம்; மேஷம்

ஜென்ம ராசி: தனுசு

ஜென்ம நட்சத்திரம்: மூலம் -4 ம் பாதம்


  இவருடைய ஜாதகத்திலே‌ ஏழாம் இடத்தில் தன மற்றும் களத்திர ஸ்தானாதிபதியும் மற்றும் களத்திரக்காரனுமான சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் திருமணம் இவருக்கு நடைபெற்று விட்டது.


  ஆனால் இந்த சுக்கிரன் உடன் இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சேர்ந்து நின்ற நிலையில் சனிக்கு பகை வீடான சிம்மம் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சனி பார்வை செய்து ஏழாம் இடம், ஏழாம் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் பாவத்துவ மாக்கி விட்டது.சனி தனது பத்தாவது பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து விட்டது. திருமணம் நடைபெற்ற சில வருடங்களிலே செவ்வாய் தசை ஆரம்பித்து விட்டது.தனுசு ராசிக்கு கோச்சார படி ஏழரை சனியும் நடப்பில் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக மனம் ஒத்து இல்லை.பேசி கொள்வது இல்லை.சனி பெயர்ச்சி நடைபெற்று விட்டதாலும் செவ்வாய் தசை முடியும் வரை இந்நிலை தொடரும்.அடுத்து வரும் 4,9 பரிவர்த்தனை பெற்ற சந்திரன் தசையில் இணைந்து விடுவார்கள்.


உதாரண ஜாதகம் -3


புத்திர பாக்கியம் கால தாமதமாகி கொண்டிருக்கும் ஜாதகம்


பிறந்த தேதி 28/29 .03.1984

பிறந்த நேரம் 4.55 am

ஜென்ம லக்னம் மற்றும் ராசி: கும்பம்

ஜென்ம நட்சத்திரம்: அவிட்டம் -4-ம் பாதம்


  ஜாதகத்தில் ராசி லக்னத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி புதன் பகவான் தனது பகை வீடான செவ்வாய் வீடு ஏறி நின்று உச்சம் பெற்ற சனி பகவானுடைய சமசப்தம பார்வையை பெற்றுள்ளது. ஐந்தாம் அதிபதி புதனுக்கு குரு பகவான் உடைய பார்வை கிடைத்தாலும் அந்த குரு பகவானையும் சனி மூன்றாம் பார்வையாக பார்த்து பாவத்துவப்படுத்திவிட்டது.


 கோச்சார அடிப்படையில் கும்ப ராசிக்கு தற்பொழுது ஏழரைச் சனியும் நடப்பில் உள்ளது. நடப்பு தசையும் சனி திசையில் சனி புத்தி நடைபெறுவதால் புத்திர பாக்கியம் காலதாமதம் ஆயிக் கொண்டு செல்கிறது.

      




    ஒருவருடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் சரியாக நீங்கள் தரக்கூடிய பட்சத்தில் உங்களுடைய வாழ்க்கையிங நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கணித்து பலன் தரலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.SC,M.A, BEd

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சுக்கிரன் மற்றும் செவ்வாய் காட்டும் குடும்ப வாழ்வு

 சுக்கிரன் மற்றும் செவ்வாய் காட்டும் குடும்ப வாழ்வு .

             


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் என்பவர் நளினத்திற்கும்,பெண் தன்மைக்கும்  மற்றும்  அழகுக்கும் காரகன்  ஆவார். செவ்வாய் பகவான் முரட்டுத்தனத்திற்கும் ஆண் தன்மைக்கும் மற்றும் வீரத்திற்கும் காரகன் ஆவார்.


 ஒரு ஆணின் ஜாதகத்தில்  சுக்கிரன் பகவான் லக்னத்தில் அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது லக்கனத்தை பார்த்தாலோ அவர் ஆணாகப் பிறந்திருந்தாலும் பெண்ணிற்குரிய குணங்கள் அதாவது பெண் தன்மை மிகுந்திருக்கும்.


 இரக்கக் குணம் கொண்டவராகவும், தாய்மை தன்மை மிக்கவராகவும் ,மற்ற பெண்களை மதிக்க கூடிய தன்மை உடையவராகவும் இருப்பார்.


 ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னத்தில் அல்லது லக்கனாதிபதியாக அல்லது லக்கனத்தை செவ்வாய் பார்த்தால் அவர் பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆணிற்குரிய முரட்டுத்தனம், துணிச்சல்  போன்ற தன்மைகள் மிகுதியாக இருக்கும்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டும் சேர்ந்து லக்கனத்தில் நின்றாலும் மற்றும் லக்கனத்தில் சுக்கிரன் நின்று செவ்வாய் பார்த்தாலும் மற்றும் லக்கனத்தில் செவ்வாய் நின்று சுக்கிரன் பார்த்தாலும் பெண்ணிற்குரிய நளினமும் அதேபோல ஆணிற்கு உரிய வீரமும் நிறைந்த பெண்ணாக அல்லது ஆணிற்கு உரிய வீரமும் மற்றும் பெண் தன்மை நிறைந்த ஆணாக இருப்பார்.

எளிதில் காதல் வயப்பட கூடியவராக இருப்பார்.பாவத்துவ நிலையை அடையும்  முரண்பட்ட காமத்தை துய்க்கும் எண்ணம் உடையவராக இருப்பார்.

 ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் இளமைக்கும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும் காரகன் ஆவார்.மனைக்கும் மற்றும் மனையாளுக்கும் காரகன் ஆவார்.அனைத்து ஆடம்பர கார் ,பங்களா ,  , படுக்கை சுகம், நித்திரை சுகம் மற்றும் தாம்பத்திய சுகம் போன்ற அனைத்திற்கும் காரகனாக சுக்கிரன் பகவான் திகழ்கிறார்.


 செவ்வாய் பகவான் மாறுபட்ட காம எண்ணத்திற்கும், இரத்தம் வகைக்கும் மற்றும் காமத்தை அனுபவிக்க கூடிய தன்மைக்கும் காரகன் ஆவார்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் சுபத்துவ நிலையில் ஜாதக கட்டத்தில் நெருக்கமாக நிற்க கூடிய அமைப்பு  முறையாக ஏற்றுக்கொள்ள கூடிய காதல் திருமணம் நடைபெறும்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்த நிலையில் காம திரிகோண ஸ்தானமான மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் நின்று இவற்றுடன் ராகு இணைந்து சனி பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அதிகமான  காம எண்ணம் உடையவராக தன்னை விட வயது முதிர்ந்த அல்லது தரம் தாழ்ந்த அல்லது விதவை பெண் அல்லது சொல்லி கொள்ள வெட்கப்பட கூடிய உறவுநிலைகளில் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பார்.


 சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று ராகு சேர்ந்த நிலை விதவை பெண்,

சனி சேர்க்கை அழுக்கான கீழ்நிலை பெண்கள் மற்றும் செவ்வாய் சேர்க்கை வாட்ட சாட்டமான பெண் தொடர்பு.


 சுக்கிரன்+சனி+செவ்வாய்+ ராகு சேர்ந்து நின்ற நிலை அல்லது சுக்கிரன்+செவ்வாய்+ ராகு சேர்ந்து நின்ற  நிலையில் சனி பார்வை அல்லது சுக்கிரன்+சனி+ ராகு சேர்ந்து நின்ற நிலையில் செவ்வாய் பார்வை ஜாதகர் வக்ர எண்ணம் மாறுபட்ட காம எண்ணம் உடையவராக மற்றவரை அழ வைத்து இன்பம் துய்க்கும் மனநிலை அல்லது குழந்தை பாலியல் தொல்லை போன்ற குற்றங்களில் அகப்பட்டு மேற்குறிப்பிட்ட சேர்க்கை பெற்ற ஏதாவது ஒரு கிரக தசையில் அவமான நிலைக்கு ஜாதகர் தள்ளுபடுவார்.


 சுக்கிரன் காம இன்பம் மற்றும் செவ்வாய் வீரியம், ரத்த முஷ்டி இவை இரண்டும் நல்ல முறையில் சுபத்துவமான நிலையில் பாவத்துவமடையமால் நல்ல நிலையில் அமர்ந்து உரிய சுக்கிரன் தசை அல்லது புத்தி அல்லது சுக்கிரனின் வீடுகளாக ரிஷபம் மற்றும் துலாம் வீடுகளில் உள்ள கிரகங்கள் தசா புக்தி நடப்பில் இருக்கும் முறையான சமூகம் ஏற்கும் திருமணத்தை நற்குணம் நிறைந்த பெண்ணுடன் நடைபெற்று தெய்வீக சேர்க்கை ஏற்பட்டு நல்ல குணம் நிறைந்த புகழுடைய பிள்ளைகளை பெற்று எடுத்து வளர்ப்பார்கள்.இவர்கள் மற்றவர்களுக்கு உதாரண தம்பதிகளாக திகழ்வார்கள்.இவை 1,2,7 மற்றும் 8 ஆம் இடம் மற்றும் அதிபதிகளை பொறுத்து பலனில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.


  பொதுவாக சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை வாய்ந்த கிரகம் ஆகும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் ; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

              



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.