பரிகாரங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டா?--(1)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
பிரச்சினை இல்லாத மனிதனே உலகத்தில் இல்லை.பிரச்சினைகளை எதிர்கொண்டு மனம் தளராமல் போராடி வெற்றி பெறுபவனுக்கே சரித்திரத்தில் இடம் உண்டு.
சரித்திரத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் உண்டு.பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவனுக்கும் ,தோல்வி பெற்றவனுக்கும் மட்டும்தான்.
பிரச்சினைகளை கண்டு மனம் வெதும்பி,ஒதுங்கி வாழ்ந்தவனுக்கு சரித்திரத்தில் இடம் இல்லை.அவர்கள் இந்த பூமியில் வந்து போயிருப்பார்கள்.
அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் இன்றி மறைந்து விடுவார்கள்.
இப்ப சொல்லுங்க அன்பார்களே ! பிரச்சினைதான் மனிதனை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.
பிரச்சினையிலிருந்து மீண்டு சாதித்தவனைதான் சாமானிய மனிதனால் போற்றப்படுகிறான்.
பிரச்சினைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1) தீர்க்கவேமுடியாத பிரச்சனை .
2) நம்மால் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சனை.
உதாரணமாக
ஒருவர் கருப்பாக இருப்பது ,குட்டையாக இருப்பது,.....இது போன்ற பிரச்சினைகளை நம்மால் தீர்க்கவே முடியாது என்பதால் இதை பற்றி கவலைப்படுவதால் பயனில்லை என்ற மனநிலையோடு கவலையில்லாமல் இருத்தல்.
ஒரு சிலர் இது போன்ற பாதகமான அமைப்பையே சாதகமாக பயன்படுத்தி வெற்றி கொள்வது உண்டு. உதாரணமாக பார்வைதிறன் மற்றும் கேட்கும் திறனை இழந்தபோதிலும் சாதித்த ஹெலன்ஹில்லர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
2) நம்மால் தீர்க்க கூடிய பிரச்சினைகள் உகந்த திசை அமைப்புக்கள் சாதகத்தில் வரும்போது அல்லது உகந்த பரிகாரம் பூஜைகள் செய்யும் போது அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து விட இயலும் என்பதால் இது குறித்தும் கவலை கொள்ள தேவையில்லை.
உங்களை கவலையில் ஆழ்த்தும் நம்மால் தீர்த்துக் கொள்ள இயலும் ஒரு சில பிரச்சினைகளை அதற்குரிய பரிகார முறைகளையும் விரிவாக பார்ப்போம்.
1) கால தாமத திருமணம்
ஒரு சிலருக்கு அழகும், அந்தஸ்தும் மற்றும் அறிவும் நிரம்ப பெற்றிருந்தாலும் திருமணம் கால தாமதமாகிக் கொண்டே செல்வதற்கும் அல்லது திருமணமானாலும் அவர்களுக்கிடையே எப்பொழுதும் ''எலியும் பூனையும் போல" சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அவர்களின் ஜாதகத்தில் திருமண ஸ்தானமான நான்கு இடங்களில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
அதாவது
1) சாதகர் என்னும் இலக்கனம் ,
2)குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,
3) களத்திர ஸ்தானமான ஏழாம் இடம்
4) மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம்
மற்றும் களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் பகவான் ஆகியவற்றை பாவிகளான சனி செவ்வாய் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டாலும் , அல்லது நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெற்றாலும் ஜாதகருக்கு காலதாமத திருமணத்தையும் அல்லது திருமணமானாலும் அவர்களுக்கிடையே பிரிவுகள் மற்றும் பிரச்சனைகளையோ தந்து கொண்டிருப்பதை உறுதியாக நாம் பார்க்கிறோம்.
கால தாமத திருமணத்திற்கும் அல்லது திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையிலான பிரிவினையும் போக்க எளிய பரிகாரம் முறையினை பதிவினை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. இப்பொழுது அதற்கான பரிகார முறைகளை விளக்குகிறேன்.
ஒரு ஜாதகத்தில் எவ்வளவுதான் திருமண தடையினை உருவாக்கும் அமைப்புக்கள் இருந்தாலும் வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்றுள்ள அமைப்பு பெற்றவர்கள் சுபத்துவ நிலையினை அடைந்து தடை விலகி எளிதில் திருமணம் நடைபெறுவதற்கும் அல்லது பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு இடையிலான சிறு பிரச்சினை "சூரியனை கண்ட பனி போல விலகிவிடுவதற்கும் காரணமாக அமைகிறது.
சில நேரங்களில் இது போன்ற சுபத்துவமான அமைப்பைப் பெறாத மேற்கண்ட நிலையில் பரிகாரத்தை தேடி போக வேண்டிய சூழலுக்கு ஆட்படுகிறோம்.
திருமணம் நடைபெற "வியாழன் நோக்கம் "அவசியம் என்பதால் குருபகவான் உங்களது சாதக கட்டத்தில் கோச்சாரப்படி 2,5,7,9,11 போன்ற இடங்களை குரு பார்க்கும் நிலையில் குரு ஸ்தலமாக விளங்கும் சூரனை வதம் செய்து பிறகு திருக்கல்யாணம் நடைபெறும் திருச்செந்தூர்ஸ்ரீ முருகப் பெருமான் வியாழனன்று சென்று வழிபட சகல தடைகளும் விலகி திருமணம் நடைபெறும் என்பதை பெற்றோர்களாகிய உங்களுக்கு விளக்குகிறேன்.
திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடங்களில் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெறும் அமைப்பு பெற்றவர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் அதாவது காலை 9 --10.30 கும்ப கோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் , புதுக்கோட்டை அருகில் உள்ள பேரையூர் மற்றும் ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வெள்ளியால் செய்யப்பட்ட நாக படம் செய்து வைத்து பாலாபிஷேகம் செய்ய சகல தடைகளும் விலகி விரைவில் திருமணம் அரங்கேறும்.
புத்திர தடை
ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் உருவாகாத நிலை அல்லது பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் நிலை போன்றவற்றிற்கான காரணம் பற்றி ஆய்வு செய்ய ஜாதக கட்டத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் , புத்திர ஸ்தானாதிபதியான ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு முதலியவற்றின் வலிமை முதலியவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இடம்பெற்று சுபத்துநிலை அடையாமல் ஐந்தாம் அதிபதியும் பலமிழந்து புத்திர காரகன் குரு பகவான் ராகுவின் தொடர்பு பெற்று அல்லது நீசம் , மறைவு மற்றும் அஸ்தங்கம் அடைந்து நிற்கின்ற அமைப்பை புத்திர தோஷம் என்கிறோம்.
பரிகாரம்
ஐந்தாம் இடத்திலோ அல்லது புத்திர காரகன் குரு பகவானுடனோ ராகு பகவான் தொடர்பு பெற்ற அமைப்பு உடைய பெண்கள் ஷஷ்டியில் விரதமிருந்து அன்று அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் வஸ்திரம் வைத்து ஏதாவது ஐந்து சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்து அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
"ஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் குழந்தை உருவாகும் "என்பது ஐதீகம் ஆகும். இந்த பழமொழி மறுவி நமது கிராம மக்களால் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று சொல்லப்பட்டு வருகிறது.
பரிகாரம் தொடரும்...
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email ; masterastroravi@gmail.com
........ ..... ........ ............ ...