Monday 27 July 2020

பரிகாரங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டா?

பரிகாரங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டா?--(1)



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  பிரச்சினை இல்லாத மனிதனே உலகத்தில் இல்லை.பிரச்சினைகளை எதிர்கொண்டு மனம் தளராமல் போராடி வெற்றி பெறுபவனுக்கே சரித்திரத்தில் இடம் உண்டு.

    சரித்திரத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் உண்டு.பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவனுக்கும் ,தோல்வி பெற்றவனுக்கும் மட்டும்தான்.
பிரச்சினைகளை கண்டு மனம் வெதும்பி,ஒதுங்கி வாழ்ந்தவனுக்கு சரித்திரத்தில் இடம் இல்லை.அவர்கள் இந்த பூமியில் வந்து போயிருப்பார்கள்.
அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் இன்றி‌ மறைந்து விடுவார்கள்.

  இப்ப சொல்லுங்க அன்பார்களே ! பிரச்சினைதான் மனிதனை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.
பிரச்சினையிலிருந்து மீண்டு சாதித்தவனைதான் சாமானிய மனிதனால் போற்றப்படுகிறான்.

பிரச்சினைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
  1) தீர்க்கவேமுடியாத பிரச்சனை .
   2) நம்மால் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சனை.

    உதாரணமாக  
ஒருவர் கருப்பாக இருப்பது ,குட்டையாக இருப்பது,.....இது போன்ற பிரச்சினைகளை நம்மால் தீர்க்கவே முடியாது என்பதால் இதை பற்றி கவலைப்படுவதால் பயனில்லை என்ற மனநிலையோடு கவலையில்லாமல் இருத்தல்.

  ஒரு சிலர் இது போன்ற பாதகமான அமைப்பையே சாதகமாக பயன்படுத்தி வெற்றி கொள்வது உண்டு. உதாரணமாக பார்வைதிறன் மற்றும் கேட்கும் திறனை இழந்தபோதிலும்  சாதித்த‌ ஹெலன்ஹில்லர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

2) நம்மால் தீர்க்க கூடிய பிரச்சினைகள் உகந்த திசை அமைப்புக்கள் சாதகத்தில் வரும்போது அல்லது உகந்த பரிகாரம் பூஜைகள் செய்யும் போது அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து விட இயலும் என்பதால் இது குறித்தும் கவலை கொள்ள தேவையில்லை. 

  உங்களை கவலையில் ஆழ்த்தும் நம்மால் தீர்த்துக் கொள்ள இயலும் ஒரு சில பிரச்சினைகளை அதற்குரிய பரிகார முறைகளையும் விரிவாக பார்ப்போம்.

  1) கால தாமத திருமணம்

    ஒரு சிலருக்கு அழகும், அந்தஸ்தும் மற்றும் அறிவும் நிரம்ப பெற்றிருந்தாலும் திருமணம் கால தாமதமாகிக் கொண்டே செல்வதற்கும் அல்லது திருமணமானாலும் அவர்களுக்கிடையே எப்பொழுதும் ''எலியும் பூனையும் போல" சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அவர்களின் ஜாதகத்தில் திருமண ஸ்தானமான  நான்கு இடங்களில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். 
அதாவது  
1) ‌சாதகர் என்னும் இலக்கனம் ,

2)குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,

3) களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் 

4) மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் 

மற்றும் களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் பகவான் ஆகியவற்றை  பாவிகளான சனி செவ்வாய் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டாலும் , அல்லது நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெற்றாலும் ஜாதகருக்கு காலதாமத திருமணத்தையும் அல்லது திருமணமானாலும் அவர்களுக்கிடையே பிரிவுகள் மற்றும் பிரச்சனைகளையோ தந்து கொண்டிருப்பதை உறுதியாக நாம் பார்க்கிறோம்.

   கால தாமத திருமணத்திற்கும் அல்லது திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையிலான பிரிவினையும் போக்க எளிய பரிகாரம் முறையினை பதிவினை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. இப்பொழுது அதற்கான பரிகார முறைகளை விளக்குகிறேன்.

  ஒரு ஜாதகத்தில் எவ்வளவுதான் திருமண தடையினை உருவாக்கும் அமைப்புக்கள் இருந்தாலும் வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்றுள்ள அமைப்பு பெற்றவர்கள்  சுபத்துவ நிலையினை அடைந்து தடை விலகி எளிதில் திருமணம் நடைபெறுவதற்கும் அல்லது பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு இடையிலான சிறு பிரச்சினை "சூரியனை கண்ட பனி போல விலகிவிடுவதற்கும் காரணமாக அமைகிறது.

 சில நேரங்களில் இது போன்ற சுபத்துவமான அமைப்பைப் பெறாத மேற்கண்ட நிலையில் பரிகாரத்தை தேடி போக வேண்டிய சூழலுக்கு ஆட்படுகிறோம்.

  திருமணம் நடைபெற "வியாழன் நோக்கம் "அவசியம் என்பதால் குருபகவான் உங்களது சாதக கட்டத்தில் கோச்சாரப்படி  2,5,7,9,11 போன்ற இடங்களை குரு பார்க்கும் நிலையில் குரு ஸ்தலமாக விளங்கும் சூரனை வதம் செய்து பிறகு திருக்கல்யாணம் நடைபெறும் திருச்செந்தூர்ஸ்ரீ முருகப் பெருமான் வியாழனன்று சென்று வழிபட சகல தடைகளும் விலகி திருமணம் நடைபெறும் என்பதை பெற்றோர்களாகிய உங்களுக்கு விளக்குகிறேன்.

  திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடங்களில் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது இடம் பெறும் அமைப்பு பெற்றவர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் அதாவது காலை 9 --10.30 கும்ப கோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் , புதுக்கோட்டை அருகில் உள்ள பேரையூர் மற்றும் ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வெள்ளியால் செய்யப்பட்ட நாக படம் செய்து வைத்து பாலாபிஷேகம் செய்ய சகல தடைகளும் விலகி விரைவில் திருமணம் அரங்கேறும்.

புத்திர தடை

  ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் உருவாகாத நிலை அல்லது பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் நிலை போன்றவற்றிற்கான காரணம் பற்றி ஆய்வு செய்ய ஜாதக கட்டத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் , புத்திர ஸ்தானாதிபதியான ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு முதலியவற்றின் வலிமை முதலியவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும்.

   ஒருவரது ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இடம்பெற்று சுபத்துநிலை அடையாமல் ஐந்தாம் அதிபதியும் பலமிழந்து புத்திர காரகன் குரு பகவான் ராகுவின் தொடர்பு பெற்று அல்லது நீசம் , மறைவு  மற்றும் அஸ்தங்கம் அடைந்து நிற்கின்ற  அமைப்பை புத்திர தோஷம் என்கிறோம்.

  பரிகாரம்
     ஐந்தாம் இடத்திலோ அல்லது புத்திர காரகன் குரு பகவானுடனோ ராகு பகவான் தொடர்பு பெற்ற அமைப்பு உடைய பெண்கள் ஷஷ்டியில் விரதமிருந்து அன்று அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் வஸ்திரம் வைத்து ஏதாவது ஐந்து சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்து அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
"ஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் குழந்தை உருவாகும் "என்பது ஐதீகம் ஆகும். இந்த பழமொழி மறுவி நமது கிராம மக்களால் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று சொல்லப்பட்டு வருகிறது.

பரிகாரம் தொடரும்...

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
     9715189647
        செல்
        9715189647
         7402570899

                           

   அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email ; masterastroravi@gmail.com

........  .....     ........   ............ ...

Sunday 26 July 2020

வெற்றி பெறுவதற்கும் ,ஜோதிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் பதிவு

வெற்றி பெறுவதற்கும், ஜோதிடத்திற்கும உள்ள தொடர்பை விளக்கும் பதிவு.


                         

கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லையே!
 புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெறுவதில்லையே!"

          - என்ற சினிமா பாடலை கேட்டபோது எனக்குள்ளும் ஒரு ஆதங்கம் இருந்தது .
       ஆம் .
நிறைய படித்திருந்தும்,
திறமையிருந்தும் ,
நேர்மையுள்ளவனாக இருந்தும் அடிப்படை செலவுக்கே சம்பாதிக்க முடியாமல் கஷ்டப்படும் பல நபர்களை பார்த்திருப்போம்.

      ஆனால் மேற்குறிப்பிட்ட எவ்வித திறமையில்லாமல் பணம் நிறைய ஈட்டும் ஒரு சில மனிதர்களை (வெளிநாடு செல்வதன் மூலமோ,தொழில் செய்வதன மூலமோ) பார்த்த போது இறைவன் மீது கூட எனக்கு கோபம் இருந்தது உண்மைதான் சோதிட ஞானம் பெறுவதற்கு முன்புவரை.

        கடந்த பதினெழு ஆண்டுகள் இத்துறைக்கு வந்து ஒரு ஆராய்ச்சி ரீதியாக அணுகியபோது பல உண்மைகள் கிடைத்தது

      அழகே இல்லாதவனுக்கு அழகிய மனைவி கிடைப்பதும்,
அழகிய ஆடவருக்கு அழகில்லாத மனைவி கிடைப்பதும்,(நான் உள்ளம் அழகை  குறிப்பிடவில்லை)
படித்த பெண்ணிற்கு படிக்காத  கணவன் அமைவதும் இது போன்ற பல முரண்பாடுகளுக்கு விடை கிடைத்தது.

    திருவள்ளுவர் அழகாக தனது ஒன்றே முக்கால் அடியால் விடை கண்டு இருப்பர்.

"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்"

விளக்கம்:
ஒருவனது பெருமைக்கும், சிறுமைக்கும் அவன் செய்த கர்மமே உரைத்தல் ஆகும்.

       இங்கு கர்மம் என்பது அவன் இப்பிறப்பிலும்,முற்பிறவியிலும் செய்த செயல்(Deed).

      எனவே ஓருவன் இப்பிறப்பில் மாறுபட்ட பலனை அனுபவிப்பதற்கு முன்ஜென்ம தொடர்புதான் காரணமாக உள்ளது.
இதனைத்தான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
"ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்"
அதாவது இப்பிறப்பிலே நல்லவனாக இருப்பினும் முன்ஜென்ம பந்தம் காரணமாக இருக்கலாம்.

         இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் இருக்கிறது.
அறிவியலில் மரபியல்(genetics) என்ற ஒரு பிரிவு உள்ளது.

         பிள்ளைகளது குணநலம்,நிறம்,தோற்றம் மற்றும் அறிவுநிலைகள்
பெற்றோரையும்,
அவர்களது தந்தை மற்றும் தாய்வழி பட்டனார்களை பொறுத்தும் அமைகிறது.

          இது எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கும் மற்றும் அடுத்த தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது .

         தாய் , தந்தையார் மேற்கண்ட கலவியின் மூலம் வெளிப்படும் விந்து செல்,அண்ட செல் இணைந்து கருவுறுதல் மேற்கொள்ளும் போது அதில் உள்ள ஜீன்களான டி.என்.ஏ மூலமாக கடத்தப்படுகிறது.

       தாய் மற்றும் தந்தை இருவரும் குட்டையாக இருந்தாலும், நெட்டையான பையன் பிறப்பதற்கு அவரது தாத்தா நெட்டையாக இருந்தாதே காரணம்.இதுபோல் முதல் தலைமுறையில் வெளிப்படாத பண்பு அடுத்த தலைமுறைக்கு வெளிப்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிருபிக்கபட்ட ஒன்று.

           எனவே விஞ்ஞானமும்,மெய் ஞானமும் பூர்வ ஜென்ம தொடர்பால்தான் இந்த முரண்பட்ட நிலை ஏற்படுகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

      இதனால்தான் ஜாதகத்தின் பணிரெண்டு கட்டத்தில் ஐந்தவாது கட்டத்தை பூர்வ புண்ணிய ஸ்தானமாக வைத்துள்ளார்கள்.

           இப்பிறப்பில் செய்யும் நல்வினை தீவினை யாவும் அடுத்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவு செய்யப்படும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.

         ஓருவனது வெற்றிக்கும் மற்றும் தோல்விக்கும் ஜோதிடத்திற்கு நிறைய தொடர்பு இருக்கிறது.

"எப்படி சிறு விதைக்குள் அவை எப்படி வளர வேண்டும்(உயரமாகவா,குட்டையாகவா),எது மாதிரியான இலை,காய்,கனி இது போன்ற பல தகவல்கள் விதைக்குள் ரெக்கார்ட் இறைவன் செய்திருப்பதுபோல் (உதாரணமாக மா மர விதை ஆப்பிள் பழத்தை தருவதில்லை)

      அதேபோல்  மனிதன் தாயின் கருப்பையிலே உருவாகும் போதே இவன் இந்த நிறத்தில் பிறக்க வேண்டும்.உயரம்,அங்க அவயங்கள்,உடல் ஆரோக்கியம் மற்றும் புத்திசாலிதனம் அனைத்தும் மறைந்திருக்கிறது.

        அந்த கரு தோன்றுவதற்கான கூடலும்,கர்ப்பமும் நிகழும் காலத்தில் வீண்மீன்களின் அமைப்பு குறிப்பிட்ட நிலையில் இருந்திருக்கும் அந்த அமைப்புதான் குறிப்பிட்ட வகை குழந்தை பிறக்கிறது.

           குழந்தை பிறந்த நேரத்தில் ,ஒரு நட்சத்திரம் பூமியின் தொடுவானத்தில் தோன்றும்.அவைதான் அவன்/அவளது ஜென்ம நட்சத்திரமாக கொள்ளப்படுகிறது.அதை வைத்தே அவனது ராசி கணக்கிடப்படுகிறது.
அதிலிருந்து அவனது தசை கணக்கிடப்படுகிறது.

            உதாரணமாக ரேவதி நட்சத்திரம் எனில் மீனம் ராசி எனவும்.அவனது தொடக்க தசை புதன் தசை எனவும்,
மீன ராசியாக இருப்பவர்கள் பெண் ராசியாக இருப்பதால் அமைதியான குணம் படைத்து மென்மையாக இருப்பார்கள்.ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் கற்றறிந்த பண்டிதர்களாகவும் இருப்பார்கள் என அந்த கருவில் பதிய வைக்கப்படுகிறது.
 
     நான் முதலில் கூறிய முரண்பட்ட நிலைக்கான ஜாதக விளக்கத்தை இப்போது கூறினால் இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

        அழகற்றவனுக்கு அழகிய மனைவி கிடைக்க காரணம்
அவனது ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தாலும்,   லக்கனத்தில் சந்திரன்,சுக்கிரன் நின்றாலும்
ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்தாலும் கிடைக்கிறது.

          அதேபோல் கற்ற பெண்ணிற்கு படிக்காத கணவன் அமைவது அந்த பெண்ணின் லக்கன ராசியோடு ராகு,கேது தொடர்பு
ஏழாமிடத்திபதி பாவ கிரகமாக இருந்தும் பாவிகள் தொடர்பு (சனி மற்றும் செவ்வாய்) பார்வை பெறினும்,ஏழாமிடத்திற்கு இரண்டு,நான்காமிட பாவிகள் தொடர்பு இருப்பின் அந்த பெண் டாக்டராகவே இருப்பினும் படிக்காத கணவனே கிடைப்பான் இது அனுபவ உண்மை விதிப்பயனை என்ன செய்ய.

           அதேபோல் திறமையில்லாதவனும்,படிக்காதவனும் வெற்றி பெற காரணம்
  அவனது ஜாதகத்தில் வெற்றி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் வலுப்பெற்றிருப்பதோடு 9,10,11 இடங்கள் வலுப்பெற்றிருக்கும்

           எனவே வாழ்வியலோடு பிண்ணிபிணைந்தது ஜோதிடம்.

மீண்டும் ஒன்றை கூறி நிறைவு செய்யலாம் என உள்ளேன்.

          எல்லாம் முன் கூட்டியே செய்யப்பட்டதென்றால் பிறகு எதற்கு இந்த தெய்வ வழிபாடு,பூஜை புணர்ஸ்காரங்கள் மற்றும் முயற்சிகள் என தோன்றலாம்.

            தெய்வத்தால் முற்பிறப்பின் கர்ம வினைகளை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஒருவித ஒலியை அதாவது ஓம் ரீங்காரத்தை தொடர்ந்து எழுப்பும் உடல் நோய்,மன நோய்களை குணப்படுத்துவதோடு மரபியல் பண்பையே மாற்றலாம் என விஞ்ஞான பூர்வமா ஆய்ந்திருக்கிறார்கள்.ஒலிக்கு வலிமை உண்டு .இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

.நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                                             


அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
               M.Sc,MA,BEd
  முதுநிலை வேதியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை நிலையம்,
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


Cell:


      9715189647        740 257 08 99


 What's up    97 151 89 6


My blogspot. Search on Google


AstroRavichandransevvai.blogspot.com


AstroRavichandran. blogspot. com


My email  masterastroravi@gmail.com

திருமண வாழ்வில் சுக்கிரன் பகவானின் பங்கு

திருமண வாழ்வில் சுக்கிரன் பகவானின் பங்கு.

                         
             

                       செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள  மிக முக்கியமாக கருதப்படும் நவகோள்களில் சுக்கிர பகவானுக்கு முன்னுரிமை உண்டு .அதனால் தான் சுக்கிர பகவானை களத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.

  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் இடம்பெறும் ஸ்தானத்தையும் , ஸ்தான பலத்தையும் , பார்வை, சேர்க்கை மற்றும் நட்சத்திர சார பலம் ஆகியவற்றை பொறுத்து திருமண நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.

     சுக்கிரன் பகவான் ஒருவரது இல்லற வாழ்வையும் அதனால் கிடைக்கும் இல்லற சுகத்தையும்  அறிந்து கொள்ள வைக்கிறது.

    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர, கோணங்களில் பலம் பெற்று இயற்கை சுப கிரகங்களால் அல்லது வளர்பிறை சந்திரனால் பார்க்கப்படும் அமைப்பை பெற்றவர்கள் நல்ல வாழ்க்கை துணை இளம் வயதிலேயே அமையக் கூடிய யோகம் உண்டு.

                                                                 


  திருமண விஷயங்களில் ஏமாற்றங்களை சந்தித்து அல்லல்படும் நிலை.கீழ்கண்ட காரணங்களால் அமைகிறது.

  ‌ 1) ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் எந்த வீட்டில் நிற்கிறதோ அந்த வீட்டின் அதிபதி ஜெனன லக்னத்திற்கு மறைவு ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பன்னிரண்டில் நிற்பதும்  இதனுடன் ராகு மற்றும் கேது பகவான் சேர்ந்தல்.

   2) சுக்கிரன் நின்ற வீட்டதிபதி நீசம், அஸ்தமனம்  மற்றும் வக்கிரம் பெற்ற நிலை.

  3) சுக்கிரன் நின்ற ராசிக்கு மறைவிட ஸ்தானமான 6, 8 ,12 க்குரிய கிரகம் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமையப் பெற்ற நிலை.

  இல்லற வாழ்வில் இன்ப சுகத்தை அனுபவிக்க கூடிய யோகம் சுக்கிரன் பகவானை பொறுத்து அமைகிறது.

    சுக்கிரன் பகவான்
நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவிடங்களுக்கு செல்லும் அமைப்பு பெற்றவர்கள் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க  தகுதியற்ற நிலை அல்லது தாம்பத்திய சுகத்தை தர மறுக்கும் மனைவி அமையக் கூடிய நிலை உருவாகும்.

   சுக்கிரன் பகவான் மனைக்கும், மனையாளுக்கும் காரகர் ஆவார்.

  சுக்கிரபகவான் வளர்பிறைச் சந்திரன் மற்றும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் அமைப்பு பெற்றவர்கள் நல்ல குடும்பப் பாங்கான மனைவி அமையக் கூடிய சூழல் உருவாகும்.

     மாறாக சுக்கிர பகவான் உடன் சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வை பெறும் அமைப்பு பெற்றவர்கள் இல்லற வாழ்வில் இன்ப நிலை எய்தும் தகுதியான மனைவி அமைவதில் சிக்கல் உண்டாகும்.இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் அமைப்பு பெற்றவர்கள் நற்பலன்களை தரக்கூடிய நிலை உண்டாகும்.

  சுக்கிரன் பகவானுடன் ராகு பகவான் சேர்க்கை பெற்று சனி பகவானின் பார்வை பெறும் அமைப்பு பெற்றவர்கள் காதல் மற்றும் கலப்பு மணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

    சுபத்துவம் பெறாத சுக்கிரன் சாதகரை காம மிகுதியால் தடம்மாற வைக்கிறது அல்லது கேவலப்பட வைக்கிறது. சுக்கிர பகவான் சனி, செவ்வாய் ,ராகு  போன்ற  கிரகங்களுடன் சேர்க்கை, பார்வை மற்றும் நட்சத்திர சாரம் பெறுவது தரங்கெட்ட கேவலமான சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம செயலை சாதகருக்கு தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
     9715189647

      செல்
    9715189647
     7402570899



    அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Email

யோகம் என்பது உண்மையில் என்ன?

   யோகம் என்பது உண்மையில் என்ன ?


                       
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   யோகம் என்றால் என்ன ? என வினா எழுப்பினால் கிடைக்கப்பெறும் விடையானது
" கிரகங்களின் இணைவு அல்லது கிரக சேர்க்கை " என்று பெயர்.

  அவ்வாறு ஓர் ராசி கட்டத்தில் இணையும் கிரகங்கள்  ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்களாக இருந்து அந்த கிரகங்கள் இடம்பெற்றிருக்கும்‌ வீடானது சுப வீடாக அமையும் பட்சத்தில் அந்த கிரக இணைவானது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை தரக்கூடிய அமைப்புகளை பெறுகிறது.இதனையே யோகம் என அழைக்கிறோம்.

  ஒரு ராசி கட்டத்தில் இணையும் கிரகங்களின் நட்பு மற்றும் பகை உறவு நிலைகளை பொறுத்து அது தரும் கெடு பலன்கள் அல்லது நல்ல பலன்கள் அமைகிறது.

  ஒரு ஜாதகத்தில் ஒரு ராசி கட்டத்தில் ராகு பகவான் இடம் பெற்றிருக்கும் போது அவை அந்த வீட்டின் அதிபதி ஆகவே செயல்படும்.

ராகுபகவான் தரும் பலன்கள் ராகு பகவான் உடன் இணையும் கிரகங்கள்,அந்த ஸ்தான அதிபதிகள் ‌, பார்க்கின்ற கிரகங்கள் மற்றும் அக்கிரமம்  பெறும் நட்சத்திர சாரம் ஆகிய அனைத்து பலன்களையும் இணைத்தே அதன் திசை நடப்பில் இருக்கும் போது தரும்.அதனால்  நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தரும் பலன்களை கண்டறிவது மிகவும் துல்லியமான ஜோதிட அறிவு தேவைப்படுகிறது.

  உதாரணமாக மீன லக்கனத்துக்கு  5-ஆம் இடமான கடகத்தில் ராகுவுடன் குரு பகவான் இணையும் போது உச்சம் பெற்ற நிலையில் உள்ள குருபகவான் ராகு பகவானை சுபத்துவபடுத்தும் மற்றும் ராகு பகவான் ஆனவர் குரு பகவானை பாவத்துவப்படுத்துவார்.

  இத்துடன் சனி பகவான் இணைய மேலும் பாபத்துவ படுத்தப்படும்.சனி இணைவுக்கு பதிலாக சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவானது அந்த பாவக அமைப்பினை வலுப்படுத்தும்.இன்னும் மகர வீட்டில் இருந்து வளர்பிறை சந்திரன் சம சப்தமாக பார்க்க இந்த பாவகம் மேலும் சுபத்துவம் பெற்று அந்த கிரகங்கள் திசையில் மிகுந்த யோக பலனை சாதகர்களுக்கு வழங்குகிறது இதுவே யோக பலனாகும்.

  குருவின் அணியில் உள்ள வளர்பிறை சந்திரன், செவ்வாய் , சூரியன் மற்றும் கேது பகவான் போன்ற கிரகங்கள் நட்பு ஸ்தானங்களான தனுசு,மீனம், மேஷம், விருச்சிகம் , கடகம் மற்றும் சிம்மம் போன்ற இடங்களில் சேர்க்கை பெற்று நிற்கும் பொழுது மிகுந்த யோக பலன்களை அதன் திசைகளில் தருகிறது.

  இதேபோல சுக்கிரன் அணியில் சனி,பாவியோடு சேராத புதன் பகவான் , சுக்கிரன் மற்றும்  ராகு பகவான் தனது நட்பு வீடுகளான ரிஷபம், துலாம், மிதுனம்,கன்னி , மகரம் மற்றும் கும்பம் போன்ற வீடுகளில் கேது பகவான் ,சனி, சுக்கிரன் போன்ற கிரகங்கள் சேர்க்கை பெற யோக பலன்களை தருகிறது.

 குரு அணியில் உள்ள கிரகங்கள் சுக்கிரன் அணி வீடுகளில் அமர  உபஜெய ஸ்தானத்தில் (3,6,10,11)நட்பு நிலையில் சேர்க்கை பெற்று அமர யோக பலன்களை தருகிறது.

  இதேபோல சுக்கிரன் அணியில் உள்ள கிரகங்கள் குரு அணி வீடுகளில் அமரும் போது நட்பு நிலையில் உபஜெய ஸ்தானமாகிய 3,6,10,11 வீடுகளில் நட்பு நிலையில் சேர்க்கை பெற்று அமர யோக பலன்களை தருகிறது.

  பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவானுடன் ராகு பகவான் இணைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் போது அல்லது வளர்பிறை சந்திரனால் பார்க்கப்படும் போது அந்த சேர்க்கை பலனானது அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை தருகிறது.மாறாக சுப கிரக பார்வை மற்றும் வளர்பிறை சந்திரனின் பார்வை அற்ற நிலையில் கெடு பலன்களை தருகிறது.

  இயற்கை பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவான் உடன் கேது பகவான் இணைவானது மறைமுக முறையில் வலுப்பெறுகிறது. கேது பகவானுடன் இணையும் கிரகங்கள் ராகுபகவானை போல கெடுப்பதில்லை .
இவற்றை இயற்கை சுப கிரகங்களாலோ அல்லது வளர்பிறை சந்திரானாலோ பார்க்கப்படும் அமைப்பு மிகவும் யோக பலனை தருகிறது.



நன்றி.


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்   9715189647


     செல் 9715189647   7402570899


             

  அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
            M.Sc,M.A,BEd
 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email
 masterastroravi@gmail.com
My blog
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandran.blogspot.com

புஷ்கர் நவாம்சம் தரும் யோக பலன்களை

புஷ்கர நவாம்சம் தரும் யோகப் பலன்கள்.


                               

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!

    ஒரு ஜாதகத்தில் சோதிடர்களின் கணிப்பு பலன்களையே மாற்றிவிடும் தன்மை புஷ்கர நவாம்சத்தில்  அமைந்துள்ள கிரகங்களுக்கு உண்டு.

  "புஷ்கர" என்றால் "தாமரை" என்று பொருள்படும். இதனை "புஷ்கராம்சம்" என்றும் அழைக்கிறோம்.

   ஒரு சில கிரகங்கள் ஜாதகத்தில் நீசம், பகை மற்றும் அஸ்தமனம் பெற்ற நிலையில் இருக்கின்ற பொழுது ஜோதிடர்களாகிய நாம்  கெடுபலன்களை தரும் என கூறி இருப்போம்.ஆனால் அதன் திசையில் யோக பலன்களை சாதகர் அனுபவித்து இருப்பார். அவர் மீண்டும் உங்களை சந்திக்கும் பொழுது நீங்கள் கெடுபலன்கள் நடக்கும் என்ற நிலையில் எனக்கு அக்கிரக திசையில்தான் அதிக யோக பலனை தந்துள்ளது என கூறும் போது,  எப்படி தந்தது ?என நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் அந்த கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைந்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

  அதாவது புஷ்கர நவாம்சத்தில் நின்ற கிரகங்கள் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் அதன் தசையில் மிகுந்த யோக பலனை அதிகம் தருகிறது.

  புஷ்கர நவாம்சத்தில் அமைந்துள்ள கிரகங்கள் நவாம்சத்தில் சுபர்களின் வீடுகளில் மட்டுமே அமைகிறது.

    சுப வீடுகளான தனுசு, மீனம், ரிஷபம், துலாம் மற்றும் மிதுனம் ஆகிய வீடுகளில் மட்டுமே அமைகிறது.

                        


   சாதக கட்டத்தில் உள்ள  பனிரெண்டு ராசிகளில் ஒன்பது கிரகங்களும்  மற்றும்
 இருபத்து ஏழு நட்சத்திரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் (9- பாதங்கள்) வீதம்
பன்னிரெண்டு ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர காலில் நின்று மேலே குறிப்பிட்டுள்ளபடி உரிய ராசிக்கட்டத்தில் அமைகிறது.

  மேஷ ராசி
அசுபதி, பரணி முழுவதும் மற்றும் கார்த்திகை முதல் பாதம் மட்டும்.

  ரிஷப ராசி

கார்த்திகை 2,3,4 மாதம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் முதல் இரண்டு பாதம்,

   மிதுன ராசி

மிருகசீரிடம் 3,4-ஆம் பாதம் ,திருவாதிரை மற்றும் புனர்பூசம் முதல் மூன்று பாதம்.

கடக ராசி

புனர்பூசம் 4ம் பாதம் , பூசம் மற்றும் ஆயில்யம் முழுவதும்.

சிம்ம ராசி

 மகம் மற்றும் பூரம் முழுவதும், உத்திரம் முதல் பாதம் மட்டும்.

 கன்னி ராசி

 உத்திரம் 2, 3, 4 ,அஸ்தம் முழுவதும் மற்றும் சித்திரை முதல் இரண்டு பாதம் .

  துலாம் ராசி

சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி முழுவதும் மற்றும் விசாகம் முதல் மூன்று பாதம்.

   விருச்சிகம் ராசி

 விசாகம் 4-ம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை முழுவதும்,

  தனுசு ராசி

 மூலம், பூராடம் முழுவதும் மற்றும் உத்ராடம் முதல் பாதம்.

 மகரம் ராசி

உத்ராடம் 2,3,4 மாதம், திருவோணம் முழுவதும் மற்றும் அவிட்ட முதல் இரண்டு பாதம்.

  கும்ப ராசி

அவிட்டம் 3 ,4 ம் பாதம், சதயம் முழுவதும் பூரட்டாதி முதல் மூன்று பாதம்.

மீனம் ராசி

பூரட்டாதி- 4 ம்- பாதம், உத்திரட்டாதி, ரேவதி முழுவதும்.

ஒவ்வொரு கிரகங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் வீதம், 2
7 நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டவாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

                       

சூரியன்-

 கார்த்திகை, உத்திரம் உத்திராடம்

சந்திரன்

 ரோகிணி, அஸ்தம் திருவோணம்

செவ்வாய்

 மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

ராகு

 திருவாதிரை, சுவாதி சதயம்

  குரு
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
 சனி
 பூசம் ,அனுஷம் உத்திரட்டாதி

புதன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

கேது
 அசுவதி ,மகம், மூலம்

 சுக்கிரன்

பரணி, பூரம், பூராடம்.

இணை 🌟 நட்சத்திரங்கள்

(ஜென்ம நட்சத்திரம்-அசுபதி எனில்

அனுஜென்ம நட்சத்திரம்-மகம்

திரி ஜென்ம நட்சத்திரம்-மூலம்.)

மேற்கண்ட நவகோள்களின் கேது பகவான், செவ்வாய் பகவான் மற்றும் புதன் பகவான் நட்சத்திரங்களுக்கு புஷ்கர நவாம்சம் கிடையாது.

  27 நட்சத்திரங்களில் இந்த ஒன்பது நட்சத்திரங்கள் தவிர ஏனைய 18 நட்சத்திரங்களுக்கும் புஷ்கர நவாம்சம் உண்டு.

  ஏனைய ஆறு கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்களில் ( 18 நட்சத்திரங்கள்)   ஒரு சில குறிப்பிட்ட பாதங்களுக்கு மட்டுமே புஷ்கர நவாம்சம் உண்டு.

                          

அவையாவன

1)சூரியனின் நட்சத்திரங்களுக்கு
 1 மற்றும் 4ஆம் பாதம் மட்டும்,

2) குருவின் நட்சத்திரங்களுக்கு இரண்டு மற்றும் நான்காம் பாதம் மட்டும்.

 3)சந்திரனின் நட்சத்திரங்களுக்கு இரண்டாம் பாதம் மட்டும்.

4) சனியின் நட்சத்திரங்களுக்கு இரண்டாம் பாதம் மட்டுமே.

5) சுக்கிரனின் நட்சத்திரங்களுக்கு மூன்றாம் பாதம் மட்டும்.

6) ராகுவின் நட்சத்திரங்களுக்கு நான்காம் பாதம் மட்டுமே.

 கீழ்க்கண்ட கிரகங்கள் தரும் புஷ்கர நவாம்சம் சுபரின் ராசியாகவே அமைகிறது.

சூரியன் தரும் புஷ்கர நவாம்சம்- தனுசு, மீனம்

 குரு தருவது ரிஷபம், கடகம்

 சந்திரன் தருவது ரிஷபம்,

 சனி தருவது  கன்னி,

 சுக்கிரன்  தருவது துலாம்

 ராகு. தருவது  மீனம் ஆகும்.

 ஒரு ஜாதகருக்கு இலக்கனமானது புஷ்கர நவாம்சத்தில் அமைந்து லக்கினாதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று நிற்பின் வாழ்நாள் முழுவதும் யோகப் பலன்களை அனுபவிக்கும் யோக பலனை பெற்றிருப்பார்.

  ஜாதகத்தில் கேந்திர, திரிகோணாதிபதிகள் மற்றும் தன, லாபாதிபதி உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் அமைந்து அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகருக்கு கிரகங்கள் மிகுந்த பலம் பெற்று அதிக யோகம் தரும் அமைப்பை பெறுகிறது.

  ஜாதக கட்டத்தில் மிகுந்த யோக பலனை தரக்கூடிய பெரும் கோணம் எனப்படும் ஒன்பதாம் அதிபதியும் மற்றும் பெரும் கேந்திரம் என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியும் சேர்க்கை, பார்வை மற்றும் பரிவர்த்தனை என்ற நிலையில் "தர்மகர்மாதிபதி யோகம்" பெற்று மேலும் புஷ்கர நவாம்சமும் பெற்று அமர்ந்துவிட்டால் கூடுதல் பலமடைந்து சாதகருக்கு அதன் திசையில் சிறப்பான யோக பலன்களை தருகிறது.

  ஒரு சாதக கட்டத்தில் இரண்டு, மூன்று கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைந்துவிட்டால் தலைமை ஏற்று நடத்தக்கூடிய உயரிய அரசு பதவிகளிலும் மற்றும் அரசாட்சி அமைப்புகளிலும் நின்று புகழ் பெறக்கூடிய யோகங்களை சாதகனுக்கு தருகிறது.

 ஒருவரது ஜாதகத்தில் அரசு கிரகமான சூரியன் மற்றும் சந்திரனின் நட்சத்திரங்கள் அமர்ந்த கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமர அரசு வேலை கிடைக்கும்.
 
 ஆனால் அதே நேரத்தில் ஜாதக கட்டத்தில் கெடுதல் தரும் கிரகங்கள் அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து பலம் பெறக்கூடாது.

    பொதுவாக சாதகத்தில் பலம் பெற வேண்டிய கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைய அது சாதகருக்கு மிகுந்த யோக பலனை அள்ளித் தருகிறது.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

   செல்
    9715189647
     7402570899


                             

  அன்புடன்
 சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My google pay no : 7402570899
Acc name ; omsakthi online astro consulting centre.

AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran.blogspot.com

.............

தசை காட்டும் பாதை

தசை (Dasha) காட்டும் பாதை


                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    " ஒரு ஜாதகத்தில் திரிகோணதிபதிகள் (1,5,9) திசைகள் மிகுந்த யோக பலன்களை தரும்  என்றும் ,மறைவிட ஸ்தானாதிபதிகள் அல்லது மறைவிட ஸ்தானங்களில் இடம்பெற்ற கிரகங்களின் திசைகள் கெடுபலன்களை தரும்." என்பது தான் விதி ஆகும்.

   இதில் "ஏதாவது மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா ?"
என பதிவை படிக்கிற உங்களைத்தான் கேட்கிறேன்.

நீங்க என்ன சொல்லப்போறீங்க ? "மாற்றம் இல்லைனுதான் சொல்வீங்க".

     ஆமாங்க அப்படிதான் ஆரம்ப நிலையிலே நானும் நினைத்து இருந்தேன்.ஆனால் "அப்படி இல்லை" என்பது மெல்ல, மெல்ல
 பல ஜாதகங்களை
பார்க்க, பார்க்க பலன்களை
சொல்லச் சொல்ல எனது முடிவு மாறியது.

    "அப்போ மறைவிட ஸ்தான அதிபதிகள் அல்லது மறைவிட ஸ்தானங்களில் இடம்பெற்ற கிரகங்கள் மிகுந்த நல்ல பலனைத் தரும் ?!" என்று நீங்கள் சொல்றீங்களான்னு சந்தேக கண்ணுடன் கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது.

     "எந்த ஒன்றில் விதி என்று ஒன்று இருக்கிறதோ? அங்கே விதிவிலக்கு என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்". என்ன நான் குழப்புகிறேன்னு நீங்கள் நினைத்திருக்கலாம்". உதாரணத்துடன் விளக்குறேன் சற்று பொறுமையாக படியுங்கள்.

     ஒரு இருசக்கர வாகனத்தை( two wheeler) ஓட்ட கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளும் வரைதான் விதிமுறைகள் தேவைப்படும். பிறகு நன்றாக கற்றுக் கொண்டு, நல்ல அனுபவம் கிடைத்த பிறகு விதிமுறைகளை விட்டுவிட்டு அவர்களுக்கே உரியமுறையில்  சைக்கிளை ஓட்ட ஆரம்பிப்போம்.

  அதேபோல சாதக கட்டத்தில் மிகுந்த அனுபவம் மற்றும் ஞானம் கிடைத்த பிறகு லக்கனத்திலிருந்து எண்ணி வரும் 1,2,3 ... என்ற ஸ்தான அடிப்படையினை விட்டு விட்டு பலன்களை எடுக்க ஆரம்பித்து விடுவோம்.

  அதாவது "சந்திர அதியோகம் "என்ற யோக பலன்களை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். வளர்பிறை
சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் குரு, சுக்கிரன் மற்றும் புதன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் இருப்பின் அதனை "சந்திர அதியோகம்" என்கிறோம்.

   இந்த இடங்களில் ஆறு மற்றும் எட்டாம் இடங்கள்  மறைவிட ஸ்தனமாக இருந்தாலும் இந்த இடங்களில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் அதன் தசைகளில் மிகுந்த யோக பலன்களை தருகிறது.

  மறைவிட ஸ்தான அதிபதிகள் வளர்பிறை  சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் மற்றும் இயற்கை சுப கிரகமான குரு ,சுக்ரன்  தொடர்பு பெற்றாலும் மிகுந்த யோக பலனைத்  அதன் தசைகளில் தருவதை நாம் பார்க்கிறோம்.

  மறைவிட ஸ்தானாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகங்கள் இடம் பெற்றுள்ள வீட்டின் அதிபதி உச்சம் ..போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அதன் தசைகளில் மிகுந்த யோக பலனை தருகிறது.

  மறைவிட ஸ்தான அதிபதிகள் கேந்திர, கோணாதிபதிகளின் நட்சத்திர சாரம் பெற்று அந்த கேந்திர, கோண அதிபதிகள் உச்ச,ம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அதன் தசைகளை மிகுந்த யோக பலனைத் தருகிறது.

  இதேபோல" ஜாதகருக்கு யோக பலன்களை  தரும்  என புகழப்படும் கோண அதிபதிகள் (1,5,9)சில நேரங்களில் கெடு பலன்களையும் தரும்" என நான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?.இதோ அதற்கு உரிய விளக்கத்தை இப்பொழுதே தருகிறேன் .

   கோண அதிபதிகள், மறைவிட ஸ்தானமேறி பாவ கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலும் யோக பலன்களை தருவதில்லை.

 கோண அதிபதிகள்  நீசம் பெற்று வக்கிரம் பெற்று வக்கிரம் அடையாமலோ அல்லது நீச பங்க ராஜயோகம் பெறாமல் இருப்பின், அஸ்தமனம் மற்றும் பகை பெற்று நின்று இருப்பினும் அதன் திசை காலங்களில் மிகுந்த யோகத்தை தருவதில்லை.

  கோண அதிபதிகள் மறைவிட ஸ்தானாதிபதியின் சாரம்(6,8,12) அல்லது பாவ கிரகங்களான சனி, செவ்வாய் மற்றும் ராகு பகவான் நட்சத்திரசாரம் பெற்றாலும் அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருவதில்லை.

மீண்டும் ஒரு புதிய குழப்பத்தை தெளிவாக்கும் முயற்சியுடன் அடுத்த சந்திக்கிறேன்.


(தங்களது ஜாதக பலன் , திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி,
பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்
     9715189647

      செல்
   9715189647
    7402570899

My google pay cell no : 7402570899
Acc name ; omsakthi online astro consulting centre

                                 
                                               

     அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்).
  ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email
 masterastroravi@gmail.com

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandran.blogspot.com

திருமண வாழ்வில் இன்ப நிலை எய்திட--(3)

திருமண வாழ்வில் இன்ப நிலை எய்திட...(3)


                      

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

பொருத்தம் பார்க்கும்போது திருத்தம் செய்ய வேண்டியது

       தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்க்க வரும்போது தம்பதிகள் இருவருடைய பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை வாங்கி முதலில் சாதகம் சரியா ? என்று மென்பொருள் உதவி கொண்டு சரிபார்த்துக் கொள்வது ஆகும்.

  தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்க்க வரும்போது நட்சத்திர அடிப்படையான பொருத்தம் என்பது
( Star matching) பொருத்தம் பார்க்க கூடிய சோதிடர்களுக்கு ஒரு நுழைவு வாயிலை அன்றி அதுவே முடிவான நிலை அன்று.

  சாதக கட்ட அடிப்படையான பொருத்தங்களானது நட்சத்திரப் பொருத்தத்தை விடச் சிறந்தது என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.

  கட்ட பொருத்தம் சிறப்பாக அமைந்து, நட்சத்திர பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட விவாகம் செய்யலாம்.

  நட்சத்திரப் பொருத்தத்தை விட, ஒருவருக்கு கட்ட பொருத்தம், தசா சந்திப்பு மற்றும் கோசார அடிப்படையில் உகந்த நிலை  இவையே மிக முக்கியமான ஒன்றாகும்.

 நட்சத்திர அடிப்படையிலான பொருத்தத்தில் கிட்டத்தட்ட பதிமூன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருப்பினும், கீழ்க்கண்ட ஆறு பொருத்தங்களே நட்சத்திர பொருத்தங்களில் இன்றியமையாத ஒன்றாகும்.

அவையாவன-
  1)தினப் பொருத்தம் ,

       இது நட்சத்திர பொருத்தம் ஆகும்.

  2)கணப் பொருத்தம்,

         தம்பதிகள் இரண்டு பேருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனித கணம் ஆனாலும் உத்தமம்.

     ஆன் ராட்சஷ கணமும், பெண் தேவ கணமும் ஆனால் மத்திபம்.

       ஸ்திரி ராட்சஷ கணமும் புருஷன் மனித கணமானால் பாவம் செய்யக்கூடாது.

    பெண் நட்சத்திரத்தில் இருந்து 14க்கு மேல் ஆண் நட்சத்திரம் இருந்தால் பெண் ராட்சஷ கண மானாலும் தோஷமில்லை. விவாகம் செய்யலாம் என்பது பலர் கருத்து.

   3 )ராசிப் பொருத்தம் அல்லது ராசி அதிபதி பொருத்தம் ,

      தம்பதிகள் இருவரும் ஒரே ராசியானாலும், ஒருவருக்கொருவர் சமசப்தமாயினும்  பெண் ராசிக்கு ,ஆண் ராசி ஆறுக்கு மேற்படின் உத்தமம் .3,4 மத்திபம். 2,5,6,8 பொருந்தாது.

 குறிப்பாக ஒரு ராசிக்கு மற்றொரு ராசிஆறு மற்றும் 8-க்குடையவர் ஆயின் ராசிப் பொருத்தம் இல்லை.

 இதேபோல ராசி அதிபதி பொருத்தத்தில் ஒரு கிரகத்துக்கு ,மற்றொரு கிரகம் பகை கிரகம் எனில் ராசி அதிபதி பொருத்தம் இல்லை.

  4)ரஜ்ஜூப் பொருத்தம்   ,

    இந்த பொருத்தமானது தம்பதிகளுக்கு இடையேயான ஆயுள் பொருத்தமாகும். இதனை கயிறு பொருத்தம் என்றும், சரடு பொருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

  இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக வந்தால் விவாகம் செய்யக் கூடாது என்பது பொது விதியாகும்.

  நட்சத்திரப் பொருத்தங்களில் ஏனைய பொருத்தங்கள் விட ரச்சுப் பொருத்தம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இது கணவன் மற்றும் மனைவியின் உயிர் பொருத்தமாகும்.

   தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாக வந்தாடும் ஆரோகணம்(ஏறுமுகம்) மற்றும் அவரோகணம் ( இறங்குமுகம்) என மாறி வந்தால் விவாகம் செய்யலாம் .இவ்வாறு செய்யும்போது சாதாக கட்டத்தில் இருவரது ஆயுள் பலத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாகவும்  இருந்து அது  ஆரோகணம் எனில் புருஷ நாசம், அவரோகணம் எனில் ஸ்திரி நாசம் ஆகும்.

  அதே நேரத்தில் தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்து ஆரோகணம் , அவரோகணம் என இருவருக்கும் மாறி வந்தால் விவாகம் செய்யலாம் உத்தமமாகும்.

   இந்த விதி விலக்கிலும் மற்றொரு விதிவிலக்கு உண்டு . அதாவது இருவருக்கும் கண்ட ரஜ்ஜுவும், சிரசு ரஜ்ஜுவும் வந்தால் ஆரோகணம், அவரோகணம் என அவர்களுக்கு இடையே மாறி வந்தாலும் விவாகம் செய்யக் கூடாது.

        5)பால் பொருத்தம்,

       இங்கு பால் பொருத்தம் என்பது தம்பதிகள் இருவருக்கும் பாலுள்ள மரம் வந்தால் உத்தமம் ஆகும் .
இருவரில் ஒருவருக்கு பாலுள்ள மரம் வந்தால் மத்திமம் ஆகும் .இருவருக்கும் பாலுள்ள மரம் வரவில்லை என்றால் பால் பொருத்தம் இல்லை.

    நட்சத்திர அடிப்படையில் பால் பொருத்தம் இல்லாவிட்டாலும், இருவரது ஜாதகத்திலும் புத்திர தோஷம் இல்லை எனில் பொருத்தம் போடலாம்.

   6) யோனி பொருத்தம்.
   
        யோனிப் பொருத்தம் என்பது தம்பதிகள் இருவருக்கும் இடையேயான தாம்பத்திய சுகம் தரும் பொருத்தத்தை குறிப்பது ஆகும் (Sex matching).

   பூனைக்கு -எலி பகை சிங்கத்திற்கும்,புலிக்கும் - பசு பகை...இதேபோல ஒன்றுக்கொன்று பகையோனிகள் வந்தால் சோதிடர்களாகிய நாம்  ஜாதக கட்டத்தில் கிரகங்களான செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் சனி, ராகு இணைவு மற்றும் பார்வை உண்டாகி சுபத்துவம் அற்று காம ஸ்தானங்களில்  குடியேறி இருப்பின் நாம்
 யோனிப் பொருத்தம் இல்லை என கருத்தில் கொண்டு விவாகம் செய்வதை தவிர்க்கலாம்.

  இந்தக் கிரக அமைப்பு சாதக கட்டத்தில் இருந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் அல்லது மேற்கண்ட அமைப்பு சாதக கட்டத்தில் இல்லை என்றால் யோனி பொருத்தம் இல்லை எனினும் விவாகம் செய்யலாம்.

   மேற்கண்ட ஆறு பொருத்தங்கள் இன்றியமையாத ஒன்றாகும்.

                      


தோஷங்களும், பரிகாரங்களும்
 
  செவ்வாய் தோஷம்

      செவ்வாய் தோஷம் என்பது லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு அல்லது சுக்கிரனுக்கு 2, 4 ,7 ,8 ,12 ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் அது செவ்வாய் தோஷம் ஆகும் இதில் பல விதிவிலக்குகள் உள்ளது.

 இதில் பல விதிவிலக்குகள் உள்ளன.

   1) செவ்வாய்  உச்சம், உச்சம், நீசம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

   2) செவ்வாய் பகவான் குரு, சுக்கிரன் தொடர்பு மற்றும் வளர் பிறைச் சந்திரனை பார்வை பெறின் தோஷம் இல்லை.

  3) சூரியன், சனி, புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் தோஷம் இல்லை.

 4) செவ்வாய் குரு மனை ஏறி இருந்தாலும் ,
சிம்மம் வீடு ஏறினாலும் தோஷம் இல்லை.

    பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது உயிரைக் கொல்லும் அளவுக்கு பயப்படவேண்டிய தோஷம் இல்லை.

    செவ்வாய் பகவான் 1,2,7 ,8 ஆம் இடங்களில் நிற்கும்போது உச்சம் மற்றும் ஆட்சி பெற்று இருந்தால் தோஷம் இல்லை என்றாலும்,பொதுவாக பாவ கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வலு பெறக்கூடாது. மேலும் திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான இலக்கனம், குடும்பம், களத்திரம் மற்றும் மாங்கல்யம் ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம் பெற்றிருப்பின் சாதகருக்கு காலதாமதம் திருமணத்தை தரும்.மீறி இளவயதில் திருமணம் நடந்து இருந்தாலும் செவ்வாய் திசை நடைபெறும் காலங்களில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை அல்லது பிரிவினைகளையோ சுபத்துவமற்ற செவ்வாய் தசை நிச்சயமாக தரும்.

செவ்வாய் தோஷம் அல்லது செவ்வாய் பகவானால் உண்டாகும் திருமணத் தடை அகல கீழ்க்கண்ட கோவிலுக்கு சென்று வழிபட உகந்ததாகும்.

1) வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி.

2) திருச்செந்தூர் முருகன் கோவில்

3)ஆலங்குடி தட்சிணாமூர்த்தி.

   ராகு, கேது தோஷம்

     லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு 1,2 ,7,8 ஆம் இடங்களில் ராகு மற்றும் கேது இடம் பெற்றிருப்பின் திருமணத் தடையை ஏற்படுத்துகிறது.

  இவ்வாறு நிழற்கிரகங்கள் இடம் பெற்று நிற்பின் இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன் தொடர்பு மற்றும் வளர்பிறை சந்திரனின் பார்வையானது  ராகு மற்றும் கேதுவினால் உண்டாகும் தோஷங்களை போக்குகிறது.

   நாக தோஷம் போக்க வழிபட வேண்டிய ஸ்தலங்கள்.

   ஸ்ரீ  ராகு பகவான் ஸ்தலங்கள்;-

1) தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி திருக்கோவில்.

2) திருவாரூர் மாவட்டம் திருபாம்புரம் என்ற இடத்தில் அமைந்துள்ள சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

3)புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.

 ஸ்ரீ கேது பகவான் ஸ்தலங்கள்;-

1) நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி திருக்கோவில்.

2) ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீகாளகஸ்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள காளத்தியப்பர் திருக்கோயில்.

                   


திருமணத் தடை அகல எளிய பரிகாரம்.

  திருமணத் தடை அகல பரிகாரம், பிராயசித்தம் என அதிக செலவில்லாமல் இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.

 வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.

   பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள் , சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு, முக்கூட்டு எண்ணெய் சேர்த்து கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.

   தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர்
ஊதுபத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கின் முன்பு அருகம்புல் ,துளசி கலந்த தீர்த்தம் மற்றும் பழுத்த எலுமிச்சைப்பழம் வைக்க வேண்டும்.

 இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.

     அறுத்துப் பிழிந்த எலுமிச்சை பழத்தோல் வெளிப்புறத்தை உட்புறமாக மாற்றி மொத்தம் மூன்று அகல் விளக்குகள் போல் செய்து  ராகு காலத்தில் (குறிப்பாக சனிக்கிழமை எனில் 9.00 முதல்  10:30 க்குள்)  கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து மங்களகரமாக திருமணம் நடைபெறும்.

மந்திரம்

ஓம் ஸரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!
ஓம் லட்சுமி நாராயணாயா நமஹ!
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமண்ய நமஹ!
ஓம் ஜய ஹ்ரீம் யோகினி!
சித்தி சுந்தரி கொளரி அம்பிகே! யோக பயங்கரி
சில ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருத!

   இவை தவிர உங்களுக்கு என்ன தசை நடக்கிறதோ, அந்த தசைக்கு உரிய நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வழிபட திருமணத் தடை அகலும்.
 அவை பின்வருமாறு

1) சூரியன் பகவான்
       தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்ற இடத்தில் உள்ள சூரியனார் கோவில்.

2) சந்திரன் பகவான்
      தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் என்ற இடத்தில் உள்ள சந்திரன் கோவில்.

3) செவ்வாய் பகவான்

     நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில்.

4) புதன் பகவான்
    நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு.

5) குரு பகவான்

      -  திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள குரு ஸ்தலம் ,

    -  தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர்,

    - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில்.

6) சனி பகவான் 

     -காரைக்கால் மாவட்டம்   திருநள்ளாறு என்ற இடத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்.

       - திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஸ்தலம்.

  7) ஸ்ரீ ராகு மற்றும் கேது பகவானுக்கு உரிய நவக்கிரக கோயில் ராகு கேது தோஷம் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

   திருமணத் தடை அகல கீழே குறிப்பிட்டுள்ள பொதுவான கோவிலுக்கு சென்று வழிபட திருமணத் தடை அகலும்.

1) நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரி என்ற இடத்தில் அமைந்துள்ள உத்வாகநாதர் கோயில்.

2) தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் என்ற இடத்தில் அமைந்துள்ள முல்லைவன நாதர் கோவில்.

3) தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள பிராணநாதேசுவரர் கோயில் .

 4) நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் .

 5) காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில்.

6)  காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்ற இடத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில்.

7) திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ் ரீபீலிஸ்வரர் கோவில்.

 8) நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் .

  9)சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சௌமிய நாராயண பெருமாள் கோயில்.

  10) காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரகுப்தன் கோவில்,

   11) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில்.

 12) மதுரையில் அமைந்துள்ள அழகர் கோயில்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647
      செல்
 9715189647
  7402570899


                         


 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email:
masterastroravi@gmail.com

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com

..............................................

Monday 13 July 2020

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் தாராபலன்

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தாராபலன்.

                        

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!

தாரை அல்லது தாரா என்பது நட்சத்திரத்தை குறிப்பதாகும்.

    மனநிலை காரகன் என அழைக்கப்படும் சந்திர பகவான் இடம்பெற்றுள்ள நட்சத்திரத்தையே 
" ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரம் இடம்பெறும் ராசியே சாதகருக்கு "ஜென்ம ராசியாக" எடுத்துக் கொள்ளப்படுகிறது.

   சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் வாசம் செய்கிறார். அதாவது 54 மணி நேரம் ஒரு ராசியில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

  ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் ஆகும். அதாவது 9 பாதங்கள் ஆகும். எனவே சந்திர பகவான் ஒருபாதம் கடக்க 6 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

  ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண் 1, 2, 3, 4 ,5 ,6 ,7, 8, 9 வரை உள்ள எண்களுக்கு தாரைகளின் பெயர்களை வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.

   நட்சத்திரங்கள்  மொத்தம் இருபத்து ஏழு என்பதால்  
ஒன்பதுக்கு மேல் வந்தால் ஒரு ராசிக்குரிய மொத்த பாதமான ஒன்பதால் வகுக்கப்பட வேண்டும் வகுத்து வரும் மீதியைக் கொண்டு தாரா பலன் காணப்பட வேண்டும்.

  உதாரணமாக ஒருவருக்கு மகம் நட்சத்திரம் சிம்மராசி என வைத்துக்கொண்டால் தற்பொழுது அவருக்கு கோச்சார அடிப்படையில் சந்திரன் பகவான் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் வாசம் செய்கிறார் எனில் திருவோணம் நட்சத்திரமானது மகத்திற்கு 13 -வது நட்சத்திரம் ஆகும்.

            13
        =  -----  = 1.4
             9

   (இங்கு ஈவு-1 , மீதி -4.   ஆதலால் மீதி 4 வருவதால் சேமதத்தாரை ஆகும்.

        கோச்சார அடிப்படையில் சந்திரன் பகவான் மகர ராசியில் வாசம் செய்யும் கால அளவு.
உத்ராடம் -2,3,4 பாதங்கள்                      
            3×6=18 மணி நேரம்
திருவோணம் 1,2,3,,4 பாதங்கள்
            4×6= 24 மணி நேரம்
அவிட்டம் 1,2 பாதங்கள்
             2×6=12 மணி நேரம் ஆகும்.ஆக மொத்தம் ஒரு ராசிக்கு 54 மணி நேரம் வாசம் செய்கிறார்.

  ஆதலால் சந்திரன் பகவான் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் வாசம் செய்யும் இருபத்து நான்கு மணி நேரமும் புதிய காரியங்களில் ஈடுபட்டு ஷேமத்தை (வெற்றியை) அடையலாம்.

  மாறாக அதே ஜென்ம நட்சத்திரத்திற்கு கோச்சாரப்படி உத்திராடம் நட்சத்திரம் எனில் 
          12/9=1.3 
 இங்கு மீதி 3 என்பதால் விபத்து தாரை ஆகும்.

  ஆதலால் சந்திர பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் வாசம் செய்யும் 18 மணி நேரமும் அசுப பலன்களே நடக்கும்.எனவே புதிய பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

                          



 தாரைகளின் பெயர்;-



      1) ஜென்ம தாரை:-


          மனக்குழப்பம் தரும், தொழில் தொடங்க உகந்த காலம் இல்லை.

    ஒருவரது ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரத்திலிருந்து வரும் 10 வது நட்சத்திரம் மற்றும் 19 வது நட்சத்திரம் ஆகும்.

  அசுபதிக்கு ஜென்ம தாரை
  அசுபதி, மகம், மூலம் ஆகும் .

இணை நட்சத்திரங்கள்

அசுபதி- ஜென்ம நட்சத்திரம் 
மகம்- அனு ஜென்மம் நட்சத்திரம்
 மூலம் -திரி ஜென்மம் நட்சத்திரம் ஆகும்.

                          



 2) சம்பத்து தாரை:-


        செல்வம் பெருகும், தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய உகந்த காலமாகும்.

    ஜென்ம நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை ஆகும். அதாவது 2, 11 மற்றும் 20 ஆவது நட்சத்திரமாகும்.

  உதாரணமாக மேஷ ராசிக்கு எடுத்துக்கொண்டான் அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதமாகும்.

 அசுபதிக்கு சம்பத்து தாரை பரணி ஆகும்.
இணை நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்.

பரணிக்கு சம்பத்து தாரை கார்த்திகை, உத்திரம், உத்திராடம் .

கார்த்திகை சம்பத்து தாரை 
ரோகிணி ,அஸ்தம், திருவோணம்

ஆதலால் அசுபதி அல்லது அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு நியமிக்கப்படும் பரணி பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் சுப காரியங்களையும்,புதிய முயற்சிகளையும் செய்யலாம்.

                      



 3) விபத்து தாரை:-


    இந்த நட்சத்திர தாரை அன்று புதிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

  ஜென்ம நட்சத்திரத்துக்கு மூன்றாவது நட்சத்திரம் ஆகும்.அதாவது 3,11,21 வது நட்சத்திரம் ஆகும்.

  உதாரணமாக அஸ்வினிக்கு மூன்றாவது நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.

  கார்த்திகை ,உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் அன்று அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் புதிய பயணங்களை தவிர்ப்பது நல்லது ஆகும்.


 4) சேமத் தாரை


       ஒருவர் மேற்கண்ட முயற்சியில் நன்மை அடையவும் மற்றும் புதிய காரியங்களில் ஈடுபடவும் சேம தாரையை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறலாம்.

  ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து நான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது 4 ,13 ,22 வது நட்சத்திரம் ஆகும்.

  உதாரணமாக மகம் நட்சத்திரம் வெளியில் நான்காம் நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.

   அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் மகம் நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளிலும் மற்றும் சுப காரியங்களிலும் ஈடுபடலாம்.

                     



 5) பிரத்யக்கு தாரை:-


       வீண் அலைச்சல், மன குழப்பம் மற்றும் கவனச்சிதறல் போன்றவை இந்த நட்சத்திர தாரையை பயன்படுத்தும்போது சாதகருக்கு  தரும் என்பதால் அந்த நட்சத்திரத்தின் போது ஒருவர் மேற்கொள்ள வேண்டிய புதிய செயல்களை தள்ளிப்போட வேண்டும்.

  அவரது ஒருவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் ஆகும் .அதாவது 5 ,14, 23 வது நட்சத்திரம் ஆகும்.

  உதாரணமாக பரணி நட்சத்திரத்திற்கு பிரத்யக்கு தாரை திருவாதிரை ஆகும்.

 திருவாதிரை சுவாதி சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு செயல்களை தள்ளிப் போட வேண்டிய நட்சத்திரமாகும்.


6) சாதக தாரை;-


    ஒரு செயலை செய்ய சரியான சந்தர்ப்பத்தை காத்திருப்பவர்கள் சாதக தாரையை பயன்படுத்தி புதிய முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம்.

    உதாரணமாக புதிய சொத்து வாங்க,வீடு வாங்க, தேர்தலில் நின்று வெற்றி பெற... இது போன்ற சந்தர்ப்பங்களை பார்த்து காத்திருப்பவர்கள் புதிய முயற்சிகளுக்கு உகந்த தாரை ஆகும்.

 ஜென்ம நட்சத்திரத்திற்கு 6-ஆவது நட்சத்திரம் ஆகும் .அதாவது 6 ,15 ,24 வது நட்சத்திரம் ஆகும்.

  உதாரணமாக மகம் நட்சத்திரம் எனில் ஆறாவது நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் ஆகும்.

  மகம் நட்சத்திரத்திற்கு சாதக தாரை: திருவாதிரை, சுவாதி, சதயம் .

   எனவே மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நட்சத்திரத்தில்  ஒரு செயலைச் செய்ய மற்றும் புதிய முயற்சிகள் செய்ய உகந்த காலமாகும்.

                          



 7) வதை தாரை:-


      வதை தாரையின் போது கடுமையான கெடுபலன்கள் மற்றும் தீய பலன்கள் நடைபெறும்.

    ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரமாகும். அதாவது 7 ,16, 25 ஆவது நட்சத்திரமாகும்.

   உதாரணமாக சதயம் ஜென்ம நட்சத்திரம் எனில் ஏழாவது நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.

    சதய நட்சத்திரத்திற்கு வதை தாரை
 கார்த்திகை, உத்திரம் உத்திராடம் ஆகும். சதயம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நட்சத்திரங்களில் கடுமையான கெடுபலன்கள் நடக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.


  8) மைத்திர தாரை அல்லது மித்திரர் தாரை:-


    மைத்திர அல்லது மித்திரர் என்பது நட்பு நிலை ஆகும்.நன்மை செய்யக்கூடிய நட்சத்திர தாரை ஆகும் ஆதலால் புதிய முயற்சிகள் செய்வதற்கு உகந்த தாரை ஆகும்.

   ஜென்ம நட்சத்திரத்திற்கு 8-ஆவது நட்சத்திரம் மைத்ர தாரை ஆகும் .அதாவது 8, 17 ,26 வது நட்சத்திரம் ஆகும்.

   உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். 
  ஆதலால்  அசுபதி அல்லது அஸ்வினி நட்சத்திரத்திற்கு மைத்ரி தாரை ; பூசம் ஆகும்.
 பூசம் அனுஷம் உத்திரட்டாதி அஸ்வினி நட்சத்திரத்திற்கு மைத்ரி தாரை ஆகும்.


9) பரம மைத்ர தாரை அல்லது பர மித்திரர் தாரை:-


   பரம மித்திரர் என்பது அதிநட்பு நிலை ஆகும். அனைத்து செயல்களும் செய்வதற்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

   ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 9-வது நட்சத்திரம் ஆகும். அதாவது 9 ,18, 27 வது நட்சத்திரம் ஆகும்.

‌  உதாரணமாக கேட்டை நட்சத்திரம் எனில் மரம் மைத்ர தாரை  உத்திரட்டாதி ஆகும்

   இணை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பூசம், அனுஷம்  ஆகும்.
கேட்டை நட்சத்திரத்திற்கு மேற்கண்ட நட்சத்திரங்கள் எல்லா செயல்களும் செய்வதற்கும் உகந்த நட்சத்திரம் ஆகும் .

                         



  தாராபலன் தேர்ந்தெடுப்பது ஏன்?


  "நாள் செய்வதை போல நல்லோர்கள் செய்ய மாட்டார்கள்" என்பது சொலவடை ஆகும். எனவே எந்த ஒரு காரியத்தையும் நாம் தொடங்கும் போது அதில் வெற்றி பெற வேண்டுமாயின் நல்ல நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து செய்யும் போது உகந்த சூழல் உருவாகி அதில் முழு வெற்றியை ஈட்ட முடியும்.

  புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தாலும் ,
அதேபோல புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதாக இருந்தாலும் ,
வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும்,
இவை போல புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் தக்க நட்சத்திரத்தை பயன்படுத்தி புதிய முயற்சி செய்ய அதில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் .

    ஒருவர் புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறவும் மற்றும்  சுப காரியங்கள் செய்யவும் 2 ,4 ,6 ,8, 9 ஆம் தரைகளை தேர்வு செய்து செயலில் ஈடுபடுங்கள். அதே நேரத்தில் 1,3,5,7 ஆம் தாரைகளில் புதிய முயற்சிகள் மற்றும் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்து விடுதல் உத்தமம் ஆகும். நன்றி வணக்கம்.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

    வாட்ஸ் அப்
    9715189647

     செல்
    9715189647
     7402570899
                        

  அன்புடன்
   சோதிடர் 
சோ.ப. ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Email
  masterastroravi@gmail.com

My blog
www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com

...... ......... ...