"குரு பலம்"- தரும் திருமணம் யோகம்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் " என்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் "திருமணம் என்பது ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது".என் விதண்டாவாதம் பேசினாலும் உண்மையிலேயே பார்த்தால் "திருமணம் என்பது சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது.
"Marriage made heaven" என்பார்கள்.
ஒருவருக்கு அழகு, அந்தஸ்து மற்றும் படிப்பு ஆகிய எல்லாம் நிறைந்திருந்தும் பொண்ணுக்கு ஏற்ற வரன் அமையாமல் பருவ வயதை கடந்தும் கல்யாண பத்திரிக்கை அடிக்க முடியாமல் அணல் மூச்சை அடி வயிற்றில் சுமந்துகொண்டு துயர்படும் பெற்றோர்கள் எத்தனை? எத்தனை?
இதுபோன்ற பெற்றோர்களின் துயரங்களை எல்லாம் நீக்குபவர் யார்?
" இப்பூவுலகில் மனிதர்களை பரிபாலனம் செய்து வரும் ஸ்ரீ நவக்கிரகங்களில் ஒருவரான ஸ்ரீ குரு பகவானே முக்கிய பங்கு வகிக்கிறார் "என்று சொன்னால் அவை மிகையல்ல.
ஸ்ரீ குரு பகவானுடைய திருவருளாலும், கருணையாலும் பெற்றோர்களின் பெருந்துயர் தீரும், இளசுகளின் இன்பக் கனவுகள் இனிதே நிறைவேறும்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குரு பகவான் கால புருஷ லக்கனப்படி புத்திர காரகராகவும் ,தனகாரகனாகவும் ,பாக்கியாதிபதியாகவும் மற்றும் அயன ,சயன மற்றும் போக பாக்கியத்திற்கு அதிபதியாகவும் வருகிறார்.
ஒருவரது இல்லற இன்பத்தையும் மற்றும் படுக்கை சுகத்தையும் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரது ஜாதகத்தில் 12-ஆம் இடத்தையும் அதன் அதிபதியையும் கவனிக்க வேண்டும்.
குரு பகவானுடைய கருணை இல்லாமல் புத்திர பாக்கியத்தை எளிதில் யாரும் பெற்றுவிட முடியாது. எனவே தான் குரு பகவான் புத்திரகாரகன் என்கிற காரகத்தை தன்னிடத்தில் வைத்துள்ளார்.
ஒரு மனிதன் திருமணம் என்கின்ற பாக்கியத்தை பெறவும் ,அதன்மூலம் இல்லற சுகத்தை அனுபவித்து மக்கள் செல்வத்தைப் பெற்று பெருமையுடன் வாழவும் நம் அனைவரது வாழ்விலும் குருபகவானுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது ஒப்பில்லா உண்மையாகும்.
பாரம்பரியமான இக்கருத்தை மனதில் கொண்டுதான் பல பெற்றோர்கள் குருப்பெயர்ச்சிக்குப் பின் திருமண வயதில் உள்ள பெண்களையும், ஆண்களையும் வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண காலத்தினை தெரிந்து கொள்ளவும், பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்கவும் திறமையான சோதிடர்களை நாடிச் சென்று நன்மை அடைகின்றனர்.
"ஜாதகத்தில் குருபகவான் சந்திரனுக்கு 2, 5 ,7 ,9, 11-ஆம் இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் வந்து விட்டது என்பது பொருளாகும். இது பொது விதி என்பது அனைவரும் அறிந்ததே.
ஒருசிலருக்கு குருபலம் நடைமுறைக்கு வந்தும் திருமணம் நடைபெறாமல் காத்திருப்பதும் ,சிலருக்கு குரு பலம் இல்லாமல் திருமணம் இனிதே நடந்து முடிவதும் நாம் நடைமுறையில் பார்க்கிறோம் .
ஏன் இந்த முரண்பாடு? திருமணத்தில் குருபலம் மட்டும் போதுமா? திருமணத்திற்கு குரு பலம் எந்தவகையில் பயன்படுகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக திருமணத்திற்கு ஜாதகத்தில் இலக்கனம் ஆகிய சாதகர், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவை மட்டுமல்லாது களத்திரகாரகன் சுக்கிரனையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
திருமண காலத்தினை ஆய்வு செய்யும்போது 1,2,7 மற்றும் 8 ஆம் பாவகத்தை பார்க்கின்ற மற்றும் சேர்ந்து இருக்கின்ற கிரகங்கள்,1,2,7,8 ஆம் அதிபதிகள் இடம்பெற்றுள்ள இடம் ,இணைவு மற்றும் பார்வை பெறும் கிரகங்கள்.
களத்திர காரகன் சுக்கிரன் வலிமை முதலியவை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
மேலும் நடக்கின்ற திசை மற்றும் கோச்சார பலன்கள் திருமணத்திற்கு உகந்ததாக உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
ஒருவரது திருமணத்தை பற்றிய பாடல் "ஜாதக பாரிஜாதம்'',எனும் ஜோதிட நூலில் உள்ள பாடலை பகிர்ந்து கொள்வது சால சிறந்த ஒன்றாகும்.
"ஏழினுக்குடையோன் தன்னோ டேகிய கிரகம் ஏழின் வாழ்வெனும் கிரகமின்னோர் வருதிசை அபகாரத்தில் ஊழ்வினையான பெண்டீர் உதவுமாம் இரண்டிற்கோளான் சூழ்திசை அபகாரத்தில் சுபகல்யாணஞ் சொல்லே"என பாடியுள்ளார்.
பாடல் விளக்கம்
திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏழாம் இடத்து அதிபதி, ஏழில் உள்ள கிரகம் மற்றும் ஏழாம் இடத்து அதிபதியோடு கூடியவர்கள், இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி மற்றும் இவர்களுடன் கூடியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மையாகும்.
ஒரு சாதகருக்கு
சுப கல்யாணம் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களை பார்ப்போம்.
ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற 1, 2, 4 ,5 ,9 11 ஆம் அதிபதிகள் ஆகிய இவர்களுடைய திசையில் கல்யாணம் நடக்கும் போதும் அல்லது சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏழில் நின்று அதன் தசை நடத்தினாலும் சுப கல்யாணம் தருவார்கள் என்பது திண்ணம்.
மாறாக எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற மறைவிட ஸ்தானாதிபதியான 3, 6, 8, 12-ம் அதிபதியின் திசை நடந்தால் திருமணத்தில் வில்லங்கம் விவகாரம் வழக்கு வீண் விரயம் போன்ற துர்ப்பாக்கிய நிலையை பெற்று துயர்படவேண்டும்.
ஒருவருக்கு குரு பெயர்ச்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் ஜனன கால ஜாதகத்தில் குரு தசையோ, புத்தியோ அல்லது குருவின் சாரம் பெற்றவர் தசையோ, புத்தியோ நடைபெற வேண்டும் என்பது நடைமுறை விதியாகும்.
குரு பகவான் என்ன ஆதிபத்தியம் பெற்று தசை நடத்துகிறார் அதற்கு ஏற்ற பலனை தருவார் சுப ஆதிபத்தியம் பெற்றிருந்தால் சுப பலனையும், அசுப ஆதிபத்தியம் பெற்று இருந்தால் அசுப பலனும் தவறாமல் தருவார்.
ஒருவருக்கு திருமணத்தை நிர்ணயிக்க குருபகவான் இலக்கனம் அல்லது ராசிக்கு இரண்டாம் அதிபதியாகவோ அல்லது ஏழாம் அதிபதியாக வரவேண்டும்.
குரு பகவான் இரண்டாம் அதிபதி யாகவோ அல்லது 7ம் அதிபதியாகவும் அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் இரண்டாம் இடத்தை அல்லது ஏழாம் இடத்தைப் பார்க்கும் போது குடும்ப உறவையும் களத்திர சுகத்தை தவறாமல் தருவார்.
குரு பகவான் ஐந்தாம் அதிபதியாகவும், ஒன்பதாம் அதிபதியாகவும் அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் ஐந்தாம் இடத்தையும், 5ஆம் அதிபதியும் ,9ஆம் இடத்தையும் ,9ஆம் அதிபதியும் பார்க்கும்போது புத்திர பாக்கியத்தை கொடுப்பார் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு உரிய வாழ்க்கைத்
துணையையும் அமைத்துத் தருவார்.
குரு பகவான் 11-ஆம் அதிபதியாக வந்து லக்கனம் அல்லது ராசிக்கு பதினொன்றாம் இடத்தை அல்லது பதினொன்றாம் அதிபதியை பார்க்கும்போது சாதகரின் அபிலாசைகள் ,
நீண்டநாள் கனவுகளையும் மற்றும் புத்திர பாக்கியத்தையும் தருவார் . 11-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணைக்கு ஐந்தாம் இடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.
முக்கியமாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் தொடர்பு பெற்ற தசா புத்தி காலங்களில் மட்டுமே குரு பலம் திருமண பலத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
(M.Sc,M.A,BEd)
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com
..........