Friday 26 June 2020

குரு பலம் தரும் திருமணம் யோகம்

"குரு பலம்"- தரும் திருமணம் யோகம்.

                                
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் " என்பார்கள். 
இன்றைய காலகட்டத்தில் "திருமணம் என்பது ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது".என் விதண்டாவாதம் பேசினாலும் உண்மையிலேயே பார்த்தால் "திருமணம் என்பது சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது.
"Marriage made heaven" என்பார்கள்.

     ஒருவருக்கு ‌அழகு, அந்தஸ்து மற்றும் படிப்பு ஆகிய எல்லாம் நிறைந்திருந்தும் பொண்ணுக்கு ஏற்ற வரன் அமையாமல்‌ பருவ வயதை கடந்தும் கல்யாண பத்திரிக்கை அடிக்க முடியாமல் அணல் மூச்சை அடி வயிற்றில் சுமந்துகொண்டு துயர்படும் பெற்றோர்கள் எத்தனை? எத்தனை?

இதுபோன்ற பெற்றோர்களின் துயரங்களை எல்லாம் நீக்குபவர் யார்?
" இப்பூவுலகில் மனிதர்களை பரிபாலனம் செய்து வரும் ஸ்ரீ நவக்கிரகங்களில் ஒருவரான ஸ்ரீ குரு பகவானே முக்கிய பங்கு வகிக்கிறார் "என்று சொன்னால் அவை மிகையல்ல.

   ஸ்ரீ குரு பகவானுடைய திருவருளாலும், கருணையாலும் பெற்றோர்களின் பெருந்துயர் தீரும், இளசுகளின் இன்பக் கனவுகள் இனிதே நிறைவேறும்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

   குரு பகவான் கால புருஷ லக்கனப்படி புத்திர காரகராகவும் ,தனகாரகனாகவும் ,பாக்கியாதிபதியாகவும் மற்றும் அயன  ,சயன மற்றும் போக பாக்கியத்திற்கு அதிபதியாகவும் வருகிறார்.

 ஒருவரது இல்லற இன்பத்தையும் மற்றும் படுக்கை சுகத்தையும் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரது ஜாதகத்தில்  12-ஆம் இடத்தையும் அதன் அதிபதியையும் கவனிக்க வேண்டும்.

  குரு பகவானுடைய கருணை இல்லாமல் புத்திர பாக்கியத்தை எளிதில் யாரும் பெற்றுவிட முடியாது. எனவே தான் குரு பகவான் புத்திரகாரகன் என்கிற காரகத்தை தன்னிடத்தில் வைத்துள்ளார்.

 ஒரு மனிதன் திருமணம் என்கின்ற பாக்கியத்தை பெறவும் ,அதன்மூலம் இல்லற சுகத்தை அனுபவித்து மக்கள் செல்வத்தைப் பெற்று பெருமையுடன் வாழவும் நம் அனைவரது வாழ்விலும் குருபகவானுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது ஒப்பில்லா உண்மையாகும்.

  பாரம்பரியமான இக்கருத்தை மனதில் கொண்டுதான் பல பெற்றோர்கள் குருப்பெயர்ச்சிக்குப் பின் திருமண வயதில் உள்ள பெண்களையும், ஆண்களையும் வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண காலத்தினை தெரிந்து கொள்ளவும், பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்கவும் திறமையான சோதிடர்களை நாடிச் சென்று நன்மை அடைகின்றனர்.

   "ஜாதகத்தில் குருபகவான் சந்திரனுக்கு 2, 5 ,7 ,9, 11-ஆம் இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் வந்து விட்டது என்பது பொருளாகும். இது பொது விதி என்பது அனைவரும் அறிந்ததே.

 ஒருசிலருக்கு குருபலம் நடைமுறைக்கு வந்தும் திருமணம் நடைபெறாமல் காத்திருப்பதும் ,சிலருக்கு குரு பலம் இல்லாமல் திருமணம் இனிதே நடந்து முடிவதும் நாம் நடைமுறையில் பார்க்கிறோம் ‌‌.

  ஏன் இந்த முரண்பாடு? திருமணத்தில் குருபலம் மட்டும் போதுமா? திருமணத்திற்கு குரு பலம் எந்தவகையில் பயன்படுகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

  பொதுவாக திருமணத்திற்கு ஜாதகத்தில் இலக்கனம் ஆகிய சாதகர், குடும்ப ஸ்தானமான இரண்டாம்  இடம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவை மட்டுமல்லாது களத்திரகாரகன் சுக்கிரனையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 திருமண காலத்தினை ஆய்வு செய்யும்போது 1,2,7 மற்றும் 8 ஆம் பாவகத்தை பார்க்கின்ற மற்றும் சேர்ந்து இருக்கின்ற கிரகங்கள்,1,2,7,8 ஆம் அதிபதிகள் இடம்பெற்றுள்ள இடம் ,இணைவு மற்றும் பார்வை பெறும் கிரகங்கள்.

களத்திர காரகன் சுக்கிரன் வலிமை முதலியவை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 மேலும் நடக்கின்ற‌ திசை மற்றும் கோச்சார பலன்கள் திருமணத்திற்கு உகந்ததாக உள்ளதா ? என‌ கவனிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

 ஒருவரது திருமணத்தை பற்றிய பாடல் "ஜாதக பாரிஜாதம்'',எனும் ஜோதிட நூலில் உள்ள பாடலை பகிர்ந்து கொள்வது சால சிறந்த ஒன்றாகும்.

"ஏழினுக்குடையோன் தன்னோ டேகிய‌ கிரகம் ஏழின் வாழ்வெனும் கிரகமின்னோர் வருதிசை அபகாரத்தில் ஊழ்வினையான‌ பெண்டீர் உதவுமாம் இரண்டிற்கோளான் சூழ்திசை அபகாரத்தில் சுபகல்யாணஞ் சொல்லே"என பாடியுள்ளார்.

பாடல் விளக்கம்

திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏழாம் இடத்து அதிபதி, ஏழில் உள்ள கிரகம்  மற்றும் ஏழாம் இடத்து அதிபதியோடு கூடியவர்கள், இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி மற்றும் இவர்களுடன் கூடியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மையாகும்.

ஒரு சாதகருக்கு 
சுப கல்யாணம் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களை பார்ப்போம்.

  ஏழாம்  அதிபதியுடன் தொடர்பு பெற்ற 1, 2, 4 ,5 ,9 11 ஆம் அதிபதிகள் ஆகிய இவர்களுடைய திசையில் கல்யாணம் நடக்கும்  போதும் அல்லது  சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள்  ஏழில் நின்று அதன் தசை நடத்தினாலும்  சுப கல்யாணம் தருவார்கள் என்பது திண்ணம்.

மாறாக எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத  ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற மறைவிட ஸ்தானாதிபதியான 3, 6, 8, 12-ம் அதிபதியின் திசை நடந்தால் திருமணத்தில் வில்லங்கம் விவகாரம் வழக்கு வீண் விரயம் போன்ற துர்ப்பாக்கிய நிலையை பெற்று துயர்படவேண்டும்.

ஒருவருக்கு குரு பெயர்ச்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் ஜனன கால ஜாதகத்தில் குரு தசையோ, புத்தியோ அல்லது குருவின் சாரம் பெற்றவர் தசையோ, புத்தியோ நடைபெற வேண்டும் என்பது நடைமுறை விதியாகும்.

 குரு பகவான் என்ன ஆதிபத்தியம் பெற்று தசை நடத்துகிறார் அதற்கு ஏற்ற பலனை தருவார் சுப ஆதிபத்தியம் பெற்றிருந்தால் சுப பலனையும், ‌அசுப ஆதிபத்தியம் பெற்று இருந்தால் அசுப பலனும் தவறாமல் தருவார்.

ஒருவருக்கு திருமணத்தை நிர்ணயிக்க குருபகவான் இலக்கனம் அல்லது ராசிக்கு இரண்டாம் அதிபதியாகவோ அல்லது ஏழாம் அதிபதியாக வரவேண்டும்.

குரு பகவான் இரண்டாம் அதிபதி யாகவோ அல்லது 7ம் அதிபதியாகவும் அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் இரண்டாம் இடத்தை அல்லது ஏழாம் இடத்தைப் பார்க்கும் போது குடும்ப உறவையும் களத்திர சுகத்தை தவறாமல் தருவார்.

குரு பகவான் ஐந்தாம் அதிபதியாகவும், ஒன்பதாம் அதிபதியாகவும்  அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் ஐந்தாம் இடத்தையும்,  5ஆம் அதிபதியும் ,9ஆம் இடத்தையும் ,9ஆம் அதிபதியும் பார்க்கும்போது புத்திர பாக்கியத்தை கொடுப்பார் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு உரிய வாழ்க்கைத்
துணையையும் அமைத்துத் தருவார்.

  குரு பகவான் 11-ஆம் அதிபதியாக வந்து லக்கனம் அல்லது ராசிக்கு பதினொன்றாம் இடத்தை அல்லது பதினொன்றாம் அதிபதியை பார்க்கும்போது சாதகரின் அபிலாசைகள் ,
நீண்டநாள் கனவுகளையும்  மற்றும் புத்திர பாக்கியத்தையும் தருவார் . 11-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணைக்கு ஐந்தாம் இடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

முக்கியமாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் தொடர்பு பெற்ற தசா புத்தி காலங்களில் மட்டுமே குரு பலம் திருமண பலத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
   9715189647

  செல்
   9715189647
.    7402570899

                                

   அன்புடன் 
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  (M.Sc,M.A,BEd)
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email
masterastroravi@gmail.com
..........

Saturday 20 June 2020

உங்கள் ஜாதகப்படி சிறந்த வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாகும் யோகம் உண்டா?

                                                     

உங்கள் சாதகப்படி சிறந்த வழக்கறிஞர் மற்றும் நீதிபதி  ஆகும் யோகம் உண்டா ?


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                 ஓரு மனிதன் என்றும்  நிலைத்திருக்கும் வழக்கறிஞர்
ஆக வியாழன்(குரு) நீதி துறையைக்
குறிக்கும் கிரகம்,சனி,சுக்கிரர் சட்டதுறைக்கு காரகர்.மிதுனம்,துலாம், கும்பம்,தனுசு சட்ட துறையைக்குறிம் ராசிகள் ஆகும்.
மூன்றாம் பாவம் நீதி மன்றத்தை குறிக்கும்.

                                       ஒன்பதாம் பாவம் மற்றும் ஒன்பதாம் அதிபதி நீதி துறையைக்கும்.ஐந்தாம் பாவம் மற்றும் அதன்  அதிபதி சட்டத்துறையைக்குறிக்கும்.


           1,செவ்வாய் நான்காம் அதிபதியாகி ஆட்சிபெற்று குருவால் பார்க்கபடுவது.

            2,செவ்வாய் 9,10 ஆம் அதிபதியாகி குருவின் பார்வை பெறுவது.சுக்கிரன் கடகத்தில் சனி சம்பந்தம் பெறுவது.


                                             3,செவ்வாய்,புதன் பலம்பெற்று 5- ம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொள்வது.


                                       4,செவ்வாய்,புதன் இணைந்து 4,9-ம் பாவத்திற்கு சம்பந்தம் பெறுவது.


                                      5,குருவும்,சனியும் 6,10 ஆம் பாவத்திற்கு சம்பந்தம் பெற்று தொடர்பு கொள்வது,


                                     6,செவ்வாய்,சூரியனுடன் இணைந்து இரண்டாம் பாவத்தில் இருப்பது.


                                    7,குருவும்,சூரியனும் இருவரில் ஒருவர் 4,6,8,12 ல் பலமாக அமைவது,சனி பகவான் 10 இடத்து அதிபதியாக பலன் பெறுவது.


                                  8,குரு,சூரியன்,புதன் இணைந்திருப்பது


                                   9,குரு,புதன்,செவ்வாய் இணைந்து 2-3-4-9-10 ஆம் இடங்களுக்கு தொடர்பு கொள்வது


                                                                


           10-) ,குரு,சனி ,புதன் இணைந்திருப்பது பிரபலமான வக்கில் யோகமாகும்.


           11),பத்தாம்   அதிபதி பலன் பெற்று
       3,6.11 ல்இருப்பது.


            12,)    10 அதிபதி 6-ல் இருப்பது.


              13),சந்திரன் லக்கனாதிபதியாகி ஆட்சி,உச்சம் பெற்றும் குரு ஓன்பதாம் அதிபதியாகி உச்சமாக லக்கனத்தில் இருப்பது.


           14, இரண்டாம் இடம் கடக லக்கனம் மற்றும் ராசியாகி குரு உச்சம் பெருவது  மற்றும் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவது,


           15,இரண்டாம் பாவத்திற்கும்,புதனுக்கும் தொடர்பு பெறுவது வழக்கறிஞர் துறையில் புகழ் பெறலாம்


            16,சனி பகவான் நில ராசி தொடர்பு
கொண்டு பலம் பெற்று இருப்பின் சிவில் சம்பந்தமான வக்கில் ஆவார்.


             17,குரு பகவான் யுரேனஸ் சம்பந்தம் பெற கிரிமினல் வக்கில் ஆவார்,


             18,சனி,புதன் பலம் பெற்று இருப்பில்
பெரிய நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருப்பார்.


              19,சூரியன் பலம் பெற்று பத்தாம் இடத்தோடு செவ்வாய் தொடர்பு கொண்டோ அல்லது பார்வை பெற்றோ இருந்தால் அரசு வழக்கறிஞர்.         

    
                                                              

      இவை மட்டுமன்றி எனது அனுபவப்படி ''ஒருவர் வழக்கறிஞராக சிறந்த முறையில் தொழில் புரிய உதவிபுரியக்கூடிய கிரகங்கள் சட்ட நிலையில் முதல் நிலை காரக கிரகம் சனி பகவான் ஆவார்.இதேபோல நீதித்துறையின் முதல்நிலை காரக கிரகம் குருபகவான் ஆவார்.

   சனிபகவானுக்கு உரிய தொழில்கள் பெரும்பாலும் கீழ்மட்ட நிலையில் நீச தொழிலாக அமையும் மெக்கானிக்,சுரங்க தொழில்,பழைய இரும்பு சாமான்கள்,பழைய காகிதங்கள் வாங்குபவர்,கழிவிடங்களை சுத்தம் செய்பவர்,கொலை புரியும் அளவிற்கான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்,பஞ்சாயத்து தலைவர்,பொறியாளர்,நீதி வழங்கும் வழக்குறைஞர்,மின்சார பணியாளர்கள்....முதலியன.

  இவ்வாறு பலவித சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய தொழில்களை தரக்கூடிய சனி பகவான் பொய் சொல்லி பிழைக்க வைக்க கூடியவராகவும் உள்ளார்.

ஒருவர் வழக்கறிஞர் ஆக வைப்பதற்கு சனிபகவான் சுபத்துவ ,சூட்சும வலுப்பெறவேண்டும்.

  தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் "குருபகவான் ,சுபத்துவ சூட்சும வலுப்பெற்ற சனிபகவான் ஆகிய இருவரும் லக்கனம்,ராசி ,இரண்டாம் இடம் மற்றும் பத்தாம் இடத்தினை பார்க்கப்படவேண்டும்  அல்லது தொடர்பு பெற வேண்டும்.".




ஜெயமுனி முனிவரின் கருத்துப்படி வழக்கறிஞர் ஆவதற்கான கிரக நிலைகள்;

1.சந்திரன் பார்வை சுக்கிரனுக்கு கிடைப்பது,

2, செவ்வாய்,குரு ,புதன் இவர்களில்
ஓருவர் நவாம்சத்தில் ஆட்சி,உச்சம் பெறுவது அல்லது இவர்களுக்குள் பார்வை மற்றும் தொடர்பு 5-ம் பாவத்தில் பெறுவது.


3,காரகாம்சத்திற்கு ஐந்தாம் பாவம் குரு,புதன் இருந்து ஆட்சி,உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய் சம்பந்தம் பெறுவது,


4, காரகாம்சத்தில் குரு,புதன் செவ்வாய் இருந்து அவர்களில் ஓருவர் ஆத்மாகாரனாக அமைவது


சூரியன் அம்சத்தில் உச்சம் பெறுவது


நீதிபதி ஆகும் அமைப்பு:


1, பத்தாம் பாவம் குரு,சனியால் பார்க்கப்படுவது,

2, லக்கனாதிபதி ஆறில் பலம் பெற்று
பத்தாம் பாவம் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்பு கொள்வது,


3,பத்தாம் அதிபதி புதனாகி இரண்டாம் பாவத்தில் சனியுடன் இருந்து குருவுடன் தொடர்பு கொள்வது,


4, குரு பகவான் ஆறாம் பாவத்தில்
பத்தாம் அதிபதியின் சாரம் வாஙுகி
இருப்பது


குறிப்பு; இதில் அவரவர் ஜாதகப்படி அந்த நேரத்தில் நடைபெறும் தசை ,புத்திப்படி ,கோசாரத்திற்கு தகுந்தபடியும்,கிரக பார்வை மற்றும்
நட்சத்திர சாரப்படியும் பலன்களில் ஏற்ற இறக்கம் .


நன்றி!

(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)




என்றும் அன்புடன்
சோதிட பணியில்
ரவிச்சந்திரன் M.SC,MA,BEd
   ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


அலைபேசி:

                     9715189647
                          740 257 08 99
வாட்ஸ் அப்; 97 151 89 647

My email
 masterastroravi@gmail.com

My blogspot, Google search

 AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com
......................

(Online Astro consult conduct
 my cell and whats up no- 97 151 89 647  message my whatsup no ,your details of date of birth,time and place and also get paid detail)

உங்களுடைய ஜாதகத்தில் தன யோகம் உண்டா?

                                                   

உங்களுடைய சாதகத்தில் தனயோகம் உண்டா ?


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!


                            1)      இரண்டாம் அதிபதி ஆட்சி,உச்சம் ,மூலதிரிகோணம் மற்றும் கேந்திரம்
பெற்று ,சுபர் நட்சத்திர சாரம் பெற்று
சுபர் பார்வை பெற வேண்டும்.
 பெற்று ,சுபர் நட்சத்திர சாரம் பெற்று சுபர் பார்வை பெற வேண்டும


                          2)       2-க்கு உடைய கோள் 5-ம் வீட்டிலோ,5-க்கு உடைய கோள் 2-ம் வீட்டிலோ பரிவர்தனைபெறுறு இருந்தால்இதேபோல் 2-11 க்குடைய கோள் பரிவர்தனை பெற்றாலும்


                          3)               2-11க்குடைய கோள் 5 அல்லது 9 க்குடைய கோள்களுடன் சேர்க்கை பெற்றால்2- ம் வீட்டுக்கோளுடன் குரு,புதன் சேரில் தனயோகம் உண்டு.


                         4)     2,11 குடைய கோள்கள் லக்கனத்தில் இருப்பது
                            சந்திரன் 7-க்குடைய  கோளாகி 2-ம் வீட்டில இருப்பின்

                  5) ஜாதகத்தில் தனாதிபதியான இரண்டாம் அதிபதியும்,பாக்கியாதிபதியான ஒன்பதாமிட அதிபதியும் மற்றும் லாபாதிபதியான பதினொன்றாம் இட அதிபதி பதியும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு லக்கனத்திலோஅல்லது 2,9 மற்றும் 11 ஆம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் பார்வையைப் பெற்று மற்றும் தனகாரகன் குருபகவானும் பலமான நிலையில் நின்று, மேற்கண்ட ஸ்தானங்களில் (1,2,9,11 ) ஆம் இடங்களின் திசை நடப்பில் இருக்கும் காலங்களில் மகாதனம் சேரும் யோகம் சாதகருக்கு ஏற்படும்.


சில விதிவிலக்குகள்;



                                 தனாதிபதியும்,லாபதிபதியும் பரிவர்தனை தனயோகத்தை தந்தாலும் சில லக்கனங்களுக்கு மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி
ஆகிவிடுவதால் சில கெடுதல்களை செய்து விடுகிறதுஂ
உதாரணமாக தூலாம் லக்கனத்தை பொறுத்த வரை சர ராசியாக இருப்பதால் 2- மிடம் மாரகஸ்தானம்,11-மிடமு பாதகஸ்தானம் .எனவே  இவ்விரு கிரகங்களும் பரிவருதனை தனயோகத்தை கொடுத்தாலும் சில
கெடுதல்களை செய்துவிடுகிறது.


எனவே கொடுக்கப்பட்ட தகவல்களை அப்படியே பயன்படுத்தாமல் பலவித ஆராய்சி செய்து பயன்படுத்த வேண்டும்
இதற்கு அனுபவ அறிவுடன்,தெய்வபக்தியும் அவசியம்.
வாழ்க பல்லாண்டு.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
    9715189647

   செல்
       9715189647
          7402570899



அன்புடன்
   சோதிடர்  சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம்..

My email;
 masterastroravi@gmail.com

....... ......   ......    ........    ......   ......

உங்கள் ஜாதகப்படி அரசு வேலைக்கு செல்லும் யோகம் உண்டா?


உங்கள் சாதகப்படி அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டா ?

                                              
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                               1)     பத்தாம் அதிபதி எந்த கிரகத்தில் சாரத்தின் அமர்ந்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.


                               2)  அரசு கிரகமாகி சூரியன் அல்லது சந்திரனின் நிலையையும்  கவனிக்க வேண்டும்.


                                 3)      பத்தாம் அதிபதி சூரியன் அல்லது சந்திரனின் நட்சத்திர சாரத்தில் இருப்பது.சூரியன் அல்லது சந்திரன் பத்தாம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது.


                               4)  பத்தாம் இடத்தில் சூரியன் அல்லது சந்திரன் ஆட்சி ,உச்சம் பெறுவதுஒன்பது அல்லது பத்தாம் இடத்தில்ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் இருப்பது.


                             5)   ஒன்பது அல்லது பத்தாம் அதிபதி பரிவர்தனை அல்லது தொடர்புகொண்டு தர்ம-கர்மாதிபதி
யோகம் பெறுவது.
 யோகம் பெறுவது.


                             6)    பத்தாம் அதிபதி செவ்வாய் சாரத்தில் இருப்பது.


                             7)   சூரியன்,புதனுடன் சேர்ந்து புத ஆதித்யயோகம் பெற்று சுபர் பார்வை பெறுவது.குரு மற்றும் புதன் வலுப்பெற்று பத்தாம் இடத்தைடன் தொடர்பு கொள்வது.


                          8)    பத்தாம் அதிபதி சனியின் சாரம் பெறுவது -இவை அரசு துறையில்
 கடைநிலை ஊழியர் வேலைதான் கிடைக்கும்.


                  9) பொதுவாக  சிம்மமும் அதன் அதிபதியான சூரியன் ஆகிய இரண்டும் பலம் பெற்று வளர்பிறை சந்திரன்,குரு , சுக்கிரன் தொடர்பு பெற்று அதன் திசை  நடைபெறும் காலங்களில் அரசாங்க வேலை பெறும் யோகத்தை அடைவ

                                மேற்கூறிய அமைப்புகளில் ஏதாவதுஒன்று இருந்தால் அரசு துறையில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

னியார் துறையில் வேலை கிடைக்க:


                          1)     ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையை பொறுத்து சுய தொழில் அமைகிறது. புதன் பலம் பெற்று 2-7-10-11 ஆம் இடங்களில் இருந்தால் சுயதொழில்வெற்றிகரமாக அமையும்.


                           2)    சூரியன் மூலதிரிகோண  ராசிகளாகிய 1,5,9 ல் பலம் பெற்றுஇருந்தால் அரசு கடன் உதவி பெற்று சுயதொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு அல்லது உறபத்தி பொருட்களை அரசு நிறுவனங்களுக்கு விற்று அதனால் பயன் அடையும் யோகம் உண்டு.


                          3)     சனி  கிரகம் ஆட்சி,உச்சம் ,மூலதிரிகோணம் மற்றும் கேந்திரம் முதலான ஸ்தான பலம் பெற்றால்சனியின் பலத்திற்கு ஏற்ப சிறிய தொழில் முதல் பெரிய தொழிற்சாலை வரை சொந்தத்தில் நடக்கும் வாய்ப்பு உண்டு.


                          4)    ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று  1,4,9,11 ஆம் இடங்களில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும்நேர்மையான  நாணயமான தொழில்செய்து பொருள் ஈட்ட முடியும்.       


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)                                                      


அன்புடன்
     சோதிடர் ரவிச்சந்திரன

M.sc,MA,BEd(Teacher)

ஓம்சக்தி ஜோதிட நிலையம்,

கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்


அலைபேசி:      9715189647                                       740 257 08 99

WHATSUP ; 97 151 89 647



மனைவி அமைவதெல்லாம்....

மனைவி அமைவதெல்லாம் .........


.ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                                            கிரேக்க தத்துவஞானி சாக்கரடீஸிடம் திருமணம் செய்துகொள்வது நல்லதா?திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லதா? என குசும்புக்கார இளைஞன் கேட்க அவர் "இந்த இரண்டில் எதை செய்தாலும் பின்னால் நீ வருத்தப்படுவாய் தம்பி"
என பதில் கூறினாராம்.


                                         ஆம்  அன்பர்களே திருமணம் செய்தவர்களிடம் கேட்டால் அவர்கள் அந்த வட்டத்திலிருந்து வெளிய வரவே விரும்புகிறார்கள்.திருமணம்
செய்யாதவர்கள் அதை பற்றிய பலவித கற்பனை நிலையோடு அந்த
வட்டத்திற்குள் நுழைய ஆசைபடுகிறார்கள்.


                                       இந்த இளைஞர்களின் உன்னதநிலையை பயன்படுத்தி கவிஞர்களும்,கலைஞர்களும் கற்பனைநிலையில் மிதக்கசெய்துவிடுகிறார்கள்.

                            ""வெறும் காமம் மட்டுமே போதும் என்றால் ஓரு விலைமகளிர் போதும்,
வெறும் அன்புமட்டும் போதுமெனில்
ஓரு நாயை வளர்த்தாலே பெற்றுவிட முடியும்
எங்கே காமமும் காதலும் சரிபாதியாக இணைசேருகிறதோ அங்கேதான் நல்ல தாம்பத்யம் மலரும்"என கவிபேரரசுவின் கவிவரிகளை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்.


                                 ஓரு ஜாதகத்தில் வாழ்வின் சமபாதியாக கருதப்படும் மனைவி ஸ்தானத்தை பற்றி தெரிந்துகொள்ள
லக்கனத்திலிருந்து இரண்டாமிடம்,ஏழாமிடம் மற்றும் ஆணாக இருப்பின
களஸ்திரகாரகன் சுக்கிரன் ,பெண்ணாக இருப்பின் செவ்வாய் நிலைகளை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.


                            

நல்ல மனைவி அமைவது எப்படி;.................................................

                       ஓரு மனிதனின் வாழ்வில் மனைவி என்பவள்"" ஆலோசனை கூறுவதில் மந்திரிபோலவும்,   உணவுபரிமாறுவதில் தாயைபோலவும்,   படுக்கையில் வேசியைப்போலவும்"இருக்கவேண்டும்.எனவே  நல்ல மனைவி அமைவது என்பது அவரவர்ஜாதகத்தில் உள்ளபடியே அமைகிறது.


                             நல்ல மனைவி அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும், ஏழாமிட அதிபதியும் கேந்திரம்(1,4,7,10)  மற்றும் கோணமேறி(1,5,9) ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் பார்வையற்று சுப நட்சத்திரசாரம் பெற வேண்டும்.


( இதில் சில விதிவிலக்கு: மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளான உபயராசிகளில் ஏழாம் அதிபதி  ஆட்சி,உச்சம் பெறாமல் வேறு மாதிரியான சூட்சும வலு பெறுதல் சுகம்.ஏனெனில் இந்ராசிகாரர்களுக்கு பாதகாதிபதியாகவும், அதேநேரத்தில்கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றுவிடுகிறது.உதாரணமாகமீன ராசிக்கு ஏழாமிடத்தில் புதன்ஆட்சி உச்சம் பெற்றாலும் திருமணவாழ்வில் சில பாதிப்பு இருக்கவே செய்கிறது) )


                             அதேபோல் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் மற்றும் சுக்கிரனுடனும் பாவிகள் இணைவு,சேர்க்கை அற்று இருக்க வேண்டும்.பெண்ணாக இருப்பின் செவ்வாயும்பாவிகள் சேர்க்கை அற்றும் இருக்கவேண்டும்.



                      

                            அழகுடைய மனைவி  அமைய


                                      ஓருவர்  எவ்வளவுதான் அழகற்றவராகவும் இருந்தாலும்தனக்கு வரும் மனைவி /கணவன் மட்டும் அழகுடையவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.


                               அழகற்றவர்களுக்கு அழகான மனைவி அமைவதும்,அழகானவர்களுக்கு அழகற்ற மனைவி அமைவதும் ஜாதகத்தில்உள்ளபடியே நடக்கிறது.


                                    ஒருவரின் முகதோற்றம், அழகு,நிறம்  இவற்றை நிர்ணயிப்பது லக்கனம்,ராசி மற்றும் இரண்டாம்பாவம்  அதில்  இருக்கும் கிரகம், அதன் அதிபதி  அந்த இடத்தை பார்க்கும்  கிரகம்.  8-ம் பாவத்தில் ஆட்சி,உச்சம் பெற்றகிரகம் ,8-ம்  அதிபதி ஆட்சி,உச்சம்பெற்றாலும்,எட்டாமிடத்தை ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும்அழகான மனைவி அமைவாள்.


                                      ஏழாம் வீடு சுப கிரகத்தின் வீடாகவும்,1,4,7,10,5,9  வீடுகளில் சுப கிரகமாகிய சுக்கிரன்,புதன்,குரு,வளர்பிறை சந்திரன்  அமர்ந்து காணப்பட்டால் அழகுடைய மனைவிஅமைவாள்.                         

அழகற்ற மனைவி அமையக்காரணம்;


சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்தாலும்,அவை நிற்கும் ராசிக்கு
ஏழாமிடத்தில் பாவிகள் நின்றாலும்
அழகற்ற மனைவி அமைவாள்.


அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்யும் யோகம்
+++++++++++++++++++++++++++++


  மூன்றாம் அதிபதி லக்கனத்திற்கு
6 அல்லது 8 அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்தாலும்,6,8-ம் பாவங்களை பார்த்தாலும்
அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்துகொள்ளும் யோகமாகும்.
           
                        




திருமணத்திற்கு பிறகு அயல்நாடு

செல்லும் யோகம்:

  

திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட காரணம்2-ம் அதிபதி  11- மிடத்திலும், 11 ம் அதிபதி 2-ல் இருந்தாலும்,8-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் ,பார்த்தாலும்எட்டாம்  அதிபதி  ஏழில் இருந்தாலும்,பார்த்தாலும்  ஏற்படுகிறது.


                   



ஊனமுற்ற மனைவி வாழ்க்கை துணையாக காரணம்


   ஓரு பெண்  அல்லது ஆண் ஜாதகத்தில் 5,7,9  ம் வீடுகளில் சூரியன்,சுக்கிரன் அமர்ந்து காணப்பட்டாலும் அல்லது சுக்கிரன்,செவ்வாய் அமர்ந்து காணப்பட்டாலும் வாழ்க்கை துணை ஊனமாக அமைய வாய்ப்பு அமைகிறது.



செல்வந்தர் வீட்டுப்பெண் அல்லது ஏழை வீட்டுப்பெண் மருமகளாக வரக்காரணம்:

                               ஏழாம் வீட்டு அதிபதி  மிகவும் பலம் பெற்று காணப்பட்டால் தன்னிலும்அதிக செல்வாக்கு பணமுடைய பெண் மனைவியாக அமைவாள்.அதேநேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதிபலம் குறைந்து காணப்பட்டால்தனக்கு அமையும் மனைவியானவள்தன்னை விட கீழ் நிலையில் உள்ளவளாகவும்,அதேநேரத்தில் ஏழையாகவும் இருப்பாள்.


                



விதவையை திருமணம் செய்யும் யோகம்

ஏழில் செவ்வாய்,சுக்கிரன் அமர்ந்து
காணப்பட்டாலும்,ஏழாம் வீட்டு அதிபதி சனியாகி 6,8,12 ல் அமர்ந்தாலும் விதவையையோ அல்லது பிறரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மனைவியாக
அமைவாள்.



கால தாமத திருமணம் யாருக்கு?

           லக்கனம் ,ராசி ,இரண்டாமிடம் மற்றும் அதன் அதிபதியுடனும்,களஸ்திரகாரகன்
சுக்கிரன் உடனும் அசயர்களான
ராகு,கேது,சனி ,செவ்வாய் கூடியிருப்பின் கால தாமத திருமணம் ஏற்பட வாய்ப்புண்டு.


                        


தார தோஷம்;


     "சட்டமாய் சனி ஏழாம் வீட்டிலிருப்பின் 

தாரம் இரண்டு தப்பாமல் செய்யுவான்""


"சுக்கிரன்தான் கேந்திரத்தில்

இருந்தாலப்பா சொல்லுகிறேன்

ஜாதகருக்கு தாரம் இரண்டு"


சனி இரண்டாம் வீட்டிலும்,ராகு ஏழாம் வீட்டிலும் இருந்தாலும் தார தோஷம் ஏற்படவாய்ப்புண்டு.
ஏழாம் வீட்டு அதிபதி பலமிழந்து
லக்கனாதிபதியும்,லாபாதிபதியும்
பலம் பெற்றால் தார தோஷம் ஏற்பட
வாய்ப்புண்டு.


ஏழாம் வீட்டு அதிபதி தனது வீட்டில் தீயகோளுடன் சேர்ந்து இருந்தாலும்  அல்லது இரண்டாம் வீட்டில் அமர்ந்தாலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு.

சுக்கிரன் பதினொன்றாம் வீட்டிலோ அல்லது நீசம் பெற்றோ இருந்து
ஏழாம் வீட்டின் அதிபதி 6,8,12 ஆம் இருந்தாலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.


பதினொன்றாம் வீட்டு அதிபதி  ஏழாம் வீட்டிலோ  அல்லது இரண்டாம் வீட்டிலோ இருப்பின் தார தோஷமோ அல்லது இரண்டு குடும்ப வாய்ப்பு ஏற்படும்.

                       



தார தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம்

தார தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருப்பின்  வாழை மரத்துக்கு தாலி கட்டி வெட்டி போடுவார்கள். இழ்வாறு செய்வதன் மூலம் தார தோஷம் நீங்க வாய்ப்பு இருப்பதாக நமது முன்னோர்களால் அருளப்பட்ட
முறையாகும்.இருப்பினும் இம்முறையால் ஓரு மரத்தை வெட்டும் நிலை ஏற்படுவதால்
இம்முறை தவிர்த்து ஓரு பெண் பதுமைக்கு (பொம்மை) ஐதீக முறைப்படி தாலி கட்டி பிறகு அதனை நீரில் கரைத்து விடலாம்.
பெண்ணிற்கு இவ்விதமான தார தோஷம் இருப்பின் ஓரு சுமங்கலி பெண்ணை தாலி கட்டி பிறகு அவர்கள் கையாலை கழட்டி விடச்செய்வதன் இத்தோஷம் விலக வாய்ப்புண்டு.அல்லது
திருமணத்தன்று கட்டிய தாலியை அம்பாளுக்கு சாத்திவிடல்.


கட்டாய திருமணம்

  சிலருக்கு திருமணத்தின் விருப்பம் இல்லாத நிலையில் இவ்வித திருமணம் ஏற்பட வாய்ம்புண்டு.

  மேஷம்,மகரம்,கும்பம்,விருச்சிகம்
ஏழாம் பாவமாகி,சுக்கிரனுக்கு பாவ கிரகத்தின் பார்வையும்,இரண்டாமிடத்தில் பாவகிரகங்கள் இருப்பின் கட்டாய திருமணம் ஏற்பட
வாய்ப்புண்டு.



திருமணம் அருகிலா அல்லது தொலைவிலா.

லக்கனத்திற்கு ஏழாம்  ராசி  சர ராசியாக இருந்து ஏழாம் அதிபதி  மேற்கண்ட ராசிகளில் ஏதாவது ஓன்றில் இருந்தால் தனக்கு வரும் மனைவி தொலைவிலும்,          ஏழாம்  ராசி ஸ்திர ராசியாக இருந்து
ஏழாம் அதிபதி மேற்கண்ட ராசிகளில்
ஒன்றில் இருந்தால் உள்ளூரிலோ அல்லது வெகு அருகாமையில் திருமணம் ஏற்படும்.


சர ராசி:மேஷம்,கடகம்,துலாம்,மகரம்.
ஸ்திர ராசி,:ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்.



                                                        



திருமண யோகம் இல்லாத ஜாதகம்

***********************************
லக்கனத்திற்கும்,ராசிக்கும் ஏழாம் வீடு எந்த கிரகத்தின் பார்வையின்றியும்,லக்கனாதிபதியும்,ஏழாம் பாவாதிபதியும் லக்கனத்திற்கு 6,8,12 ல் அமர்ந்தாலும்,


    சுக்கிரனும்,சந்திரனும் ஒரு ராசியில் அமர்ந்து அதற்கு ஏழாம் ராசியில் சனி,செவ்வாயும் காணப்பட்டாலும் மேற்கண்ட அமைப்புடையோர் திருமணம் செய்துகொள்வதில்லை.



காம சுகம் தரும் காம திரிகோணம்

************************************
3,7.11 ஆகிய மூன்றும் காம திரிகோணமாகும்
மூன்றாம் பாவம் காம ஆசையை தூண்டும் பாவமாகும்.இவை 7-ம் பாவத்திற்கு 9-ம் இடமாகும்.இவை 1,4,7 ம் பாவத்துடன் தொடர்புகொள்ளும் போது காம எண்ணத்தை தூண்டி தவறாக நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஏழாம் இடம் 


          இவை உடல் உறவு ஆசையை தூண்டுமிடம் ஆகும்.இதில் சந்திரனும்,சுக்கிரனும் 180 டிகிரியில் சம சப்தம பார்வை காம எண்ணத்தை கூட்டும்.இதேபோல் சந்திரன்,சனி,செவ்வாய்  ஏழில் இருப்பினும் தவறான எண்ணம் ஏற்படும் மன ஒருமைப்பாடு அவசியமாகும்.


11 ம் இடம்


     இவை ஏழாமிடத்திற்கு ஐந்தாமிடம் .இவை துணைவரை இழக்கும் நிலை,இரண்டாம் திருமணம்,பிரிவினை ,விவாகரத்து மற்றும் ஒருவரின் எண்ணம் நிறைவேறும் நிலை.இந்த பாவம் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு சிறப்படையாதுஂ


மேலும் சந்திரன் உடல் உறவு எண்ணத்தை உண்டாக்கும் கிரகம்
பணிரெண்டாம் இடம் பெண் இன்பம்,உடல் உறவு சுகம் தரும் பாவம் ஆகும்.


5-ம் பாவம் காதல் ,பிற பெண்களின் தொடர்பு


4-ம் பொதுமகளிர் தொடர்பு,கற்பு நிலை
       4 ம் பாவம் கெட்டு பாவிகள் தொடர்பு கற்புநிலை பாதிக்க வாய்ப்பு.மேலும் சந்திரன்,சுக்கிரன்
பத்து பாகைக்குள் இணைவு தவறான
பெண் தொடர்பு ஆசை.


                             


அன்புடன்

சோதிடர்சோ.ப.ரவிச்சந்திரன்

M.Sc,MA,BEd சோதிட ஆராய்சியாளர்,

வாழ்வியல் ஆலோசகர்,

முதுநிலை வேதியியல் ஆசிரியர்

ஓம் சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,

கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.



தொடர்புக்கு
CELL

97 151 89 647

740 257 08 99



WHATSUP NO
97 151 89 647


(போன் வழியாக தங்களது சாதக பலன், ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் மற்றும் விவாக பொருத்தம் போன்ற விவரங்களை போன் வழியாக எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.
whatsup ; 9715189647 )

Friday 19 June 2020

உங்கள் ஜாதகப்படி புத்திர பாக்கியம் உண்டா? - எப்படி தெரிந்து கொள்வது


உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா ?-நீண்ட தொடர்


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           "செல்வம் எனறு செல்லப்படும் செல்வம் அனைத்தையும் படைத்து பல்லோறுடன் உண்டு மகிழும் செல்வந்தராயினும் சின்னஞ்சிறு கைகளை நீட்டியும் ,குறுகுறுவென நடந்தும் ,தட்டில் இட்ட சோற்றை தரையில் கொட்டியும்,கைகளால் பிசைந்தும், நெய்யிட்ட சோற்றை உடம்பின்கண் படச்செய்தும்,இன்பமயக்கத்தில் ஆழச்செய்யும் புதல்வரை பெறாதவர்க்குப் பயனால் முடிக்கப்படும் பொருள் யாதுமில்லை என்பதால் பிள்ளைப்பேறு எவ்வளவு முதன்மையானது.

ஓருவன் பெறும் செல்வங்களுள் நன்மக்களை பெறுதலே சிறப்பானது.
பிள்ளையில்லாத பாக்கியம் எவ்வளவு பெற்றாலும் பிள்ளை பாக்கியத்திற்கு நிகராகது.


இக்கருத்தை மக்களின் புறவாழ்வுபற்றி கூறும் "புறநானூறு"
அழகாக எடுத்துரைக்கிறது.


""படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ்செல்வராயினும் மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்துத் மயங்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம் வாழும் நாளே""



                                                            



புத்திர ஸ்தானம் என்பது:

***************************
ஓரு மனிதனுக்கு புத்திர ஸ்தானம் என்பது அவனது ஜாதகத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் ஐந்தாவது கட்டமாகும்.இதே கட்டம் தான் பூர்வபூண்ணியஸ்தானமுமாகும்.இதிலிருந்து முற்பிறப்பில் நல்ல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டிருந்தால் இப்பிறப்பில் நல்ல புத்திரம் கிடைக்கும் என்பதனை சூட்சுமமாக தெரிவிக்கும் பொருட்டே வைத்துள்ளார்கள்.

ஐந்தாமிட அதிபதியை புத்திரஸ்தானாதிபதி என்போம்.

பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு
பகாவானை புத்திரகாரகன்  என அழைக்கப்படுகிறது.
பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                                                   



புத்திரபாக்கியம் பற்றி அறிய நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை:

***********************************
             5 ம் இடம் ,9 ம் இடம் மற்றும் அதன் இரு அதிபதிகள் மேலும் நவகோள்களில் புத்திரகாரகன் என அழைக்கப்படும் குரு பகவான்
மேற்கண்ட இவர்களின் நிலையை கவனிக்கவேண்டும்.


புத்திரபாக்கியம் அமைய எனது அனுபவ ரீதியான  கிரக நிலை விளக்க:-

1)  புத்திர ஸ்தானாதிபதி சுப நட்சத்திர  சாரம் பெற்று  ஆட்சி,உச்சம்,கேந்திரம்(1,4,7,10),கோணம்(1,5,9),மற்றும்  நட்பு பெற்று
சுபர் பார்வை பெற வேண்டும்.மறைவு ஸ்தானங்களில் (6,8,12)  இடம் பெற கூடாது.
இங்கு சுபர் என குறிப்பிடபடுவது  குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,பாவியோடு சேராத புதன்.


2)  புத்திரஸ்தானத்தில் அசயர்களான ராகு,கேது,சனி(செவ்வாய் தவிர ஏனெனில் காம காரகன் என்பதால்)  போன்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.

3)  புத்திரகாரகன் குரு நீசம் அஸ்தமனம்,பகை பெறாமல்  பலம் பெற்று (ஆட்சி,உச்சம்,கேந்திரகோணம்)  மறைவு ஸ்தனங்களாகிய 6,8,12 இடம் 
பெறாமல் சுப சாரமும்,பார்வையும் பெற்றிருக்கவேண்டும்.


4)  ஐந்துக்கு ஜந்தாமிடமாக ஒன்பதாமிடம்  அமைவதால் 
பாக்கிய ஸ்தானத்தையும் கவனித்தல் நலம்.


5) ராசிக்கு ஐந்தாமிடத்தையும் மேற்கண்ட அமைப்புபடி உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும்


மேற்கண்ட அடிப்படையில் கிரகங்கள் இருப்பின் அவர்களுக்கு பார்போற்றும் புத்திரன் அமைவான்.

                                                            



குழந்தை பாக்கியம் அமைய நான் கற்ற பல்வேறு ஜோதிடநூல்களின் கருத்து;-

          1)  கடக லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு  குரு லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

           2)  குரு பகவான் 9 -ல் ஆட்சி பெற்றிருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

       3 )  குரு பகவான் 2 அல்லது 11 -ல் இருப்பின் புத்திர பாக்கியம் ஏற்படும்.

       4 )  குருவுடன் சந்திரன் இணைந்து  லக்கினம் 9  அல்லது 11 ல் இருந்தால் ஜாதகருக்கு சுட்டிதனமுள்ள புத்திசாலிதனமான குழந்தை பிறக்கும்.

      5)   குரு பகவான் துலாத்தில்  சுக்கிரனுடன்  இருப்பின் ஆண்,பெண் குழந்தைகள் பிறக்கும்.

   6)  செவ்வாய் 11-ல் சுக்கிரனுடன் இணைந்திருப்பின் ஜாதகருக்கு ஆண் பெண் வாரிசு ஏற்படும்.

7)  செவ்வாய்  4-ல் சுக்கிரனுடன் இணைந்து காணப்படின் தாமத குழந்தை பாக்கியம் ஏற்படும்.

8 ) குருவும், செவ்வாயும் இணைந்து 9  அல்லது  10- ல் இருப்பின் ஆண் குழந்தைபாக்கியம் ஏற்படும்.

9 )  குருவும்,செவ்வாயும் இணைந்து 
இரண்டு அல்லது நான்கில் இருந்தாலும புத்திரபாக்கியம் ஏற்படும்..குருவும்,ஜந்தாம் வீட்டிற்குரிய கோளும் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும் புத்திர பாக்கியம் உண்டு.


10 ) குரு நின்ற இடத்திலிருந்து  5- மிடத்தில் சுபகோள் நின்றாலும் புத்திரபாக்கியம் உண்டு.

                                                                


அதிக புத்திர பாக்கியம்  ஏற்பட
++++++++++++++++++++++++,+,
1) ஐந்தாமாதிபதியும்,ஒன்பதாமாதிபதியும் சுபஸ்தானம் பெற்று கேந்திர,திரிகோணம் பெற்று சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் வெகு புத்திரர்கள் உண்டு.


2 )கன்னி லக்கனமாகி ஐந்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெற்றால்  ஜந்து குழந்தை