Friday 31 August 2018

திருமணம் கால தாமதம் ஆக காரணம் என்ன?

திருமணம் கால தாமதம் ஆக காரணம் என்ன ?

                                               
செவ்வாய்பட்டி பநீ பத்ரகாளியம்மன் துணை !


கிரகங்கள் படுத்தும் பாடு !


         என்னிடம் சாதகம் பார்க்க வரும் ஒரு சிலரது சாதகங்களை பார்க்கும்போது அவர் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதிற்கு மேம்பட்டவராக இருப்பார் இருப்பினும் அவரது கிரகநிலை அடிப்படையில் அச்சாதகருக்கு நிச்சயம்  திருமணம்  நடந்திருக்காது என உறுதியாக சொல்லும் அளவிற்கு சாதகத்தில் கிரக நிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை எண்ணி பார்க்கும்போதுதான் இந்த சோதிட துறையில் மேற்கொண்டு இன்னும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது.


      ஒருவருக்கு திருமணம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட எண்ணும் சோதிடர்கள் கவனிக்கப்பட வேண்டிய ஸ்தான நிலைகள் நான்கும்  மற்றும் கிரகங்கள் இரண்டினையும்  ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.


 முதலில் ஸ்தான நிலையில் எந்த ஸ்தானங்களை ஆய்ந்து அறிய வேண்டும் என்பதனை ஆரம்ப நிலை சோதிட. அனுபவம் உள்ளவர்கள் கூட புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.


  சாதக கட்டத்தில் லக்கனம் என்பது மிக முக்கிய ஸ்தானம் ஆகும். சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய தலைவனாக இந்த லக்கனமும் அதன் அதிபதியும் செயல்படுகிறார்.எனவே லக்கனாதிபதி கட்டாயம் நேர்வலு பெற வேண்டியது அவசியம் ஆகும்.


 மேலும் லக்கனத்திற்கு ஏழாம் இடம் என்பது சாதகருக்கான இல்வாழ்க்கை துணைக்கான இடம் ஆகும்.எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் இட பார்வை உண்டு என்ற வகையில் லக்கனத்தில் சனி,செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவகிரகங்கள் இடம் பெறக்கூடாது.


        இவ்வாறு லக்கனத்தில் அமரும் பாவ கிரகம் ஏழாம் இடத்தினை பார்வை செய்யும் என்ற வகையில் இக்கிரக அமைப்புகளும் காலதாமத திருமணத்தினை உருவாக்கிவிடுகிறது.



   இவை மட்டுமல்லாமல் லக்கன அதிபதியும் பலம் இழந்து நிறக கூடாது.ஒரு கிரகம் பலம் இழந்து நிற்பது என்றால் என்ன ? என கவனித்து   பார்த்தால் ஒரு கிரகம் மறைவிடங்களில் நின்றாலோ அல்லது நீசம்,வக்கிரம்,மற்றும் பகை பெற்று நின்றிருந்தாலோ அக்கிரகம் பலம் இழந்து நிற்கின்றது எனலாம்.


      லக்கனத்தில் ராகு இருக்க அதன் ஏழாம் இடத்தில் கேது பகவான் இருக்க அது களத்திர தோஷத்தினை தந்து திருமண தடையை தரும் என உறுதிபடுத்தி கொள்ள ஏதுவாக அமைகிறது.இதனை உறுதிபடுத்தி கொள்ள இரண்டு,ஏழு மற்றும் எட்டாம் இட மற்றும் அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யப்படவேண்டும்.


       அடுத்தபடியாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தினை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்..இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் மட்டுமல்லாமல் தனம்,வாக்கு மற்றும் நேத்திரம் ஆகியவற்றினை குறிக்கும் ஸ்தானமும்  ஆகும்.


 ஆதலால் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சனி,செவ்வாய் ,,இராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம்பெற்று அந்த இட அதிபதிகள் பலவீனப்பட கால தாமத திருமணத்தினை சாதகருக்கு கொடுக்கும் எனவும் முடிவு செய்யப்பட வேண்டும்.


 இரண்டாம் இடத்தில் ராகு,கேது இடம் பெறுவது மாங்கல்ய தோஷத்தினை உண்டுபண்ணுகிறது.இவ்வித அமைப்பும் கால தாமத திருமணத்தினை உண்டு பண்ணுகிறது..


 மேலும் இரண்டாம் இடம் என்பது தனது வாழ்க்கை துணைக்கான மாங்கல்ய ஸ்தானமாகவும் அமைவதால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தலும் நலம்.அவ்வாறு இருப்பின் அந்த திசை நடைபெறும் காலகட்டங்களில் கணவன்,மனைவிக்கு இடையே மனசஞ்சலங்கள் உருவாக வாய்ப்பு உண்டு.பொதுவாக இரண்டாம் இடத்தில் எவ்வித கிரகங்களும் இடம் பெறாமல் இருத்தலே உத்தமம் ஆகும்.


  ஏழாம் இடம் என்பது கணவன்,மனைவிக்கு இடையேயான உறவுநிலையினையும்,தனது வாழ்க்கை துணைவரது தன்மையினையும் எடை போடும் இடம் ஆகும்.


  எனவே ஏழாம் இடத்தில் மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இட அதிபதிகள் இடம்பெறுவதோ அல்லது ஏழாம் அதிபதி நீசம்,மறைவிட ஸ்தானம் ஏறல் ஆகியவை அடையாமல் இருத்தல் நல்லது.


 ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து , லாப அதிபதி பலமடைந்த அமைப்பினை உடையவர் மறுதார யோகத்தினை உண்டாக்கிவிடுகிறது.
 "ஏழாம் இடம் சுத்தம் எனில் எல்லோருக்கும் நல்லவள் " எனும் சோதிட சொல்லோடைப்படி ஏழாம் இடத்தில் கிரகங்கள் இடம்பெறாமல் இருத்தல் நல்லது.



 பொதுவாகவே ஏழாம் இடத்தில் சனி,செவ்வாய்,ராகு இணைந்து நிற்பின் சாதகருக்கு திருமண வாழ்வு நிலைக்காது.
 ஏழாம் இடத்தில் களத்திர காரகன்  சுக்கிரன் இடம் பெற்றிருப்பது "காரக பாவ நாஸ்தியை 'உருவாக்கிவிடுகிறது.

ஏழாம் இடத்தில் தனித்த சனி அல்லது சுக்கிரன் நிற்பது சாதகருக்கு தார தோஷத்தினை உருவாக்கிவிடுகிறது.

   ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் சேர்க்கையும்,சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைகளும் திருமண வாழ்விற்கு உகந்த அமைப்பு நிலை அல்ல.  எட்டாம் இடம் என்பது கணவன் அல்லது மனைவிகான ஆயுள் ஸ்தானம் என்பதால் எட்டாம் இடத்திலும் பாவிகள் இடம் பெறாமல் இருத்தல் நல்லது.


 எட்டாம் அதிபதி பலமிழந்த அமைப்பினை பெற்று தசாவித விவாக பொருத்த்தில் ரஜ்ஜூ பொருக்தம் இல்லை எனில் தம்பதிகள் இருவரையும் இணை சேர்க்க கூடாது.


 இவ்வாறு ஸ்தான அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்த பிறகு களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் காமகாரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுடன் சனி,செவ்வாய், ராகு,சனி சேர்க்கையானது உள்ளதா என கவனிக்கப்பட வேண்டிம். இவ்வாறான அமைப்பினை உடையவர்களுக்கு கால தாமத திருமணத்தினை சாதகருக்கு வழங்குகிறது.


 மேற்கண்ட ஆய்வுகளை விதி எனப்படும் லக்கனப்படியும்,மதி என்றழைக்கப்படும் ராசிப்படியும் இருவேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதில் ஏதாவது ஒரு கோணத்தில் கெடாத சூழலில் இளமை திருமணத்தினை தந்துவிடுவதுண்டு.இருவித கோணநிலைகளிலும் கெட்ட நிலையில் கட்டாயம் கால தாமத திருமணத்தினை தந்தவிடுகிறது.
 விதி,மதி எனும் இருநிலைகளிலும் பலவீனப்பட்டவர் சுக்கிரன் பகவானை லக்கனமாக கொண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.


 நன்றி


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஜ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


  வாட்ஜ் அப்    97 151 89 647


      செல் 740 257 08 99  97 151 89 647



 அன்புடன் சோதிடர்ரவிச்சந்திரன்    M.Sc,MA,BEd, சோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


My email  masterastroravi@gmail.com


My blogspot  AstroRavichandran. blogspot. com
   AstroRavichandransevvai blogspot. com
.................................................

Monday 27 August 2018

 குலதெய்வ வழிபாட்டை தெரிந்து கொள்வது எப்படி?


                                      

கிரகங்கள் படுத்தும் பாடு -( 104 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*******************************
           ஒருவருக்கு குலதெய்வ வழிபாடு என்பது மிக அவசியம்.நாம் எவ்வளவு தெய்வத்தை வழிபாட்டாலும் முதலில் குலதெய்வ வழிபாடு என்பது அவசியம் ஆகும்.

      கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட நாம் முதலில் குலதெய்வ வழிபாடு செய்தாகவேண்டும்.நாம் பிறந்த மண்ணைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தாலும் நமது வீடுகளில் எந்த இன்பமான மற்றும் துன்பமான சூழல்களில் சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம் செய்துவரவேண்டும்.

          ஒருவரது சாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் பாதிகப்பட்டவர்கள் அவசியம் குலதெய்வத்தை கண்டறிந்து வழிபாட அதன் வழியாக உருவான பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஒருவருக்கு குலதெய்வம் என்பது வேறு ,இஷ்ட தெய்வம் என்பது வேறு.

           குலதெய்வங்களாக சிலருக்கு சப்பானி கறுப்பு,நொண்டி முனி,பேச்சியம்மாள்,சன்னாசியப்பச்சி,காவல்காரன்,எல்லைமுனி ,மதுரைவீரன் .....போன்ற பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு.

          நமது முன்னோர்கள் இதனால்தான் பிறந்தகுழந்தைக்கு முதல் முடி இறக்குவதை தனது குலதெய்வத்திற்கு உறவினர்கள் சூழ சென்று முடி இறக்குவதை முதல் விழாவாக குழந்தைக்கு வைத்தார்கள்.அவ்வாறு  இறக்கும்போது தாய்மாமன் மடியில் வைத்து முடி இறக்குவார்கள்.

           நமது குலதெய்வத்தை தெரிந்து வழிபடுவதுபோல நமது இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்யவேண்டும்.இதனை நமது சாதக கட்டங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
எனவே ஜாதகப்படி நமது இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொள்ள ஐந்தாமிடம்,அதிபதி மற்றும் ஐந்தில்
உள்ள கிரகம் முதலியவற்றின்மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஐந்தாமதிபதி சூரியன் ஆகில் சிவனையும்,

சந்திரனாகில் சக்தியையும்,

செவ்வாயாகில் முருகனையும்,

புதனாகில் விஷ்ணு எனப்படும் பெருமாளையும்,

குருவாகில் தெட்சிணாமூர்த்தியையும்

சனியாகில் விநாயகரையும்

ராகுவாகில் அனுமானையும்

கேதுவாகில் விநாயகரையும்

சுக்கிரனாகில் சக்தியையும்

வழிபடவேண்டும்.

                            


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்                   M.SC,MA,BEd
முதுநிலை ஆசிரியர்
Om sakthi jothida nillayam.

வாட்ஜ் அப்; 9715189647

Cell; 9715189647
செல்: 740 257 08 99

(போன் வழியாக சாதகபலன் பெற தொடர்பு கொள்ளவும்.பார்வை கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப் எண் 
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை தெரிவிக்கவும்)

My blogspot.

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com
................................................................

Sunday 19 August 2018

எழுத்தாளரா நீங்கள்?-சோதிட ஆய்வு.

எழுத்தாளரா நீங்கள் ? - சோதிட ஆய்வு

                           

"கிரகங்கள் படுத்தும் பாடு "

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

  ஒருவருக்கு கதை மற்றும் கவிதைகள் எழுத வேண்டும் என ஆசைபடுபவர்களாக நீங்கள் இருப்பின் உங்களது சாதகத்தில் கட்டாயம் புதன் பகவான் பலமடைந்து நிற்பார்.

 புதன் பகவான் உடன் சந்திரபகவான் பார்வை அல்லது சேர்க்கையை பெற்றவர்கள் ஜனரஞ்சகமாக ,நகைச்சுவையாக எழுத கூடியவராக இருப்பார்.

  புதன் பகவான் பலமடைந்து சுக்கிரன் மற்றும் செவ்வாய் தொடர்பினை காமரசம் ததும்ப கதை,கவிதைக் மற்றும் பாடல்கள் எழுதுவதில் வல்லவராக இருப்பர்

  பலமைந்த புதன்பகவான் உடன் பலமடைந்த ராகு பகவான் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொள்ள கிரைம் நாவல்கள் எழுதுவதில் வல்லவராக இருப்பர்.

 புதன் பகவான் பலம்பெற்று தனம் மற்றும் ஜீவன ஸ்தானத்துடன் உடனான தொடர்பு எழுத்தினையே தனது முழு நேர தொழிலாக கொள்வர்.

 சந்திர கேந்திரத்தில் பலமடைந்த புதன் பகவானை பெற்றவர்கள் சோதிட நூலில் சோதிட பதிவுகளை எழுதி புகழ் அடைவார்கள்.

         பலமடைந்த புதன் பகவான் உடன் ஆன்மீக செம்மல் குருபகவானி் தொடர்பு ஆன்மீக கதைகள் மற்றும் சூட்சும உண்மைகளை கண்டறிந்து எழுதும் எழுத்தாளராக திகழ்வர்.

 பலமடைந்த  புதன் பகவான் உடனான ஞான காரகர் கேதுபகவான் சேர்க்கை மறைபொருள் உண்மைகள்,தியானம்,யோகா பற்றி எழுதக்கூடியவராக திகழ்வர்.

  இரண்டாம் இடத்திலோ அல்லது ஐந்தாம் இடத்திலோ சூரியன், புதன் அல்லது குரு, சந்திரன் இணைந்து இருப்பின் சாஸ்திர விஷயங்களை எழுதுவதில் கரைகண்டவராக திகழ்வார்.

  பலமடைந்த புதன்பகவான் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்ட பலமடைந்த சுக்கிரன் பகவானை பெற்றவர்கள் சினிமா கதாயாசியராகவோ அல்லது சிறந்த வசனகர்த்தாவாகவே பெரும் புகழ் பெறுவார்.

  பலமடைந்த புதன் உடன் பூமிகாரகன் செவ்வாய் பகவான் தொடர்பு விவசாயம் சார்ந்த கருத்துக்களை கணித்து எழுதுவதில் வல்லவராக திகழ்வர்.

 இசை ஆர்வம் உடையவராகவும், இசை அமைப்பாளராகவும் ஒருவர் திகழ்ந்தால் அவரது சாதகத்திலும் புதன் பகவான் பலமடைந்து நிற்க வேண்டும்.

 வாட்ஸ் அப்
  97 151 89 647

  செல்
   740 257 08 99
     97 151 89 647
  
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                            


  அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
 M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My Blogspot.Google Search
AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com
..........

கிரகங்கள் படுத்தும் பாடு

          கிரகங்கள் படுத்தும் பாடு


                                  

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

     ஒருவரது சாதகத்தில் கோசார பலன்களை பார்க்கும்போது ஜெனன கால கிரக நிலைகளுடன் ஓப்பிட்டு பார்த்துதான் அக்கிரகங்கள் தரக்கூடிய பலன்களை முடிவு செய்யப்படவேண்டும்.

 கோசார பலன்கள் ,ஜெனன கால கிரகநிலைகள் மற்றும் நடப்பு திசைகள் ஆகிய மூன்றினையும் ஆய்வு செய்தே ஒரு சாதகருக்கு சாதக பலன் அளிக்கப்பட வேண்டும். 

 ஜெனன சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய ராசி ,அம்சம் மற்றும் பாதசாரம் என்ற வகையில் ஆராயப்படவேண்டும்.

  ஒரு சாதகம் யோக சாதகமாக அமைய அவரது சாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி அதிபதி  ஆகிய இருவர் பலமடைந்து தனாதிபதி மற்றும் சுகாதிபதி பலமடைந்து நிற்பின் அவரது சாதகத்தில் எவ்வித யோகம் இல்லை எனினும் அச்சாதகர் ஏதாவது ஒரு வழிமுறையில் பிறர் துணையின்றி வாழ்வில் வெற்றி பெறுவார்.

          ஒருவரது சாதகத்தில் கோசார பலன்களான சனி பெயர்ச்சி,ராகு, கேது பெயர்ச்சி ...போன்றவை  உகந்ததாக இல்லாதபட்சத்தில் நடைபெறும் ஜெனன கால திசை நல்ல திசையாக இருப்பின்  பெரிய பாதிப்புகள் எதனையும் சாதகர் அடைந்து விடுவதில்லை.

           ஒருவருக்கு நடைபெறும் திசையானது நல்ல திசையாக இல்லாத பட்சத்தில் கோசார பலன்கள் உகந்ததாக உள்ள காலங்களில்  ஜெனன கால திசையிலிருந்து கணக்கிடப்படும் திசையினால் தரப்படும் கெடுபலன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  ஒருவருக்கு நடைபெறும் கோசார பலன்கள்,,திசை பலன்கள் ஆகிய இரண்டும் நல்லதாக அமையும்பட்சத்தில் சாதகருக்கு யோக பலன்கள் சிறப்பாக அமைய வாய்ப்பு உண்டு.

  நமது ஜெனன லக்கனத்தினை லக்கனமாக கொண்டு அதில் உள்ள கிரகங்களின் காரக மற்றும் ஸ்தான பலன்களை ஆராய்ந்து பலன் பார்க்கப்படும் கால கட்டத்தில்  வானவீதியில உள்ள கிரகங்களின் நிலையோடு ஒப்பிட்டு அக்கிரகங்கள் தரக்கூடிய பலன்களை ஆராய்ந்து பலன் அறியப்படவேண்டும்.

  கோசாரபடி வரும் பொழுது சனிபகவான் செவ்வாய் வீடுகளில் வரும்பொழுது மிகுதியான கெடுபலன்களை தருகிறது.அதேநேரத்தில் மகர மற்றும் கும்ப வீடுகள் தனது சொந்த வீடுகள் என்பதால் அவை தரக்கூடிய கெடுபலன்கள் மிகவும் குறைவுபடும்.

 குரு,,சந்திரன்,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற சுபர்களோடு கோசாரப்படி ராகு, கேது,சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இணைவு உண்டாகக்கூடிய கால கட்டங்களில் அக்கிரகங்களுக்கு உரிய காரக மற்றும் ஸ்தான பலன்களில் பாதிப்பு உண்டாகிறது.

 கடந்த ஆடி மாதம் முழுவதும் (2018 ஆம் ஆண்டு) நீர் ராசியான கடக வீட்டில் அரசாங்க காரகன் சூரியன் அரவான ராகு பகவானது சேர்க்கை முக்கிய அரசியல் தலைவர்கள் உயிரிழப்பு ( மரியாதைகுரிய கலைஞர் ,வாஜ்பேயி ) ,நீரால் பாதிப்பு (குறிப்பாக கேரளா ) போன்றவை உருவானது.

  இப்புவியியல் நடைபெறும் இயற்கை சீற்றங்கள்,அரசியல் நிலை ,பொருளாதர ஏற்ற இறக்கங்கள்...போன்ற பல்வேறு காரணங்களுக்கு வான வீதியில் பணிரெண்டு ராசிக்குள் கிரகங்கள் இடம்பெறும் நிலையினை பொருத்து அமைகிறது என்பதை நன்கு ஆராய்ச்சி நோக்கில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு பரம்பொருளின் பேரருளால் சூட்சும உண்மைகள் புலப்படும்.

நன்றி!

வாட்ஸ் அப்
  97 151 89 647

   செல்
  740 257 08 99
   97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                               


 அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
  M.Sc, MA ,BEd,
ஆசிரியர் & கிரக ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My Blogspot , Google Search

AstroRavichandran. blogspot
com
AstroRavichandransevvai.blogspot. com

........

Sunday 5 August 2018

சினிமாவில் சாதித்தவர்கள்

சினிமாவில் சாதித்தவர்கள்


                                 

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 83 )

"பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடா !"

        என்றார் கவிஞர் பாரதியார்.

பாட்டு ஞானம் என்பது ஒரு தெய்வீக அம்சம் .அது எல்லோருக்கும் வருவதில்லை.இதற்கு அவர் பிறக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரகநிலைகள் அவசியமாகும்.ஒருவர் எவ்வளவுதான் முயற்சியும,பயிற்சியும் செய்தாலும் கடவுளின் அனுக்கிரகமும்,,கிரகங்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும்.

 சினிமாவில் பின்னனி பாடல் பாடி புகழ்பெறுவதற்கு அவர்களது சாதகத்தில் வாக்குஸ்தானம் எனப்படும் இரண்டாமிடம் பலம்பெற்று இருக்கவேண்டும்.வித்தைக்கு அதிபதியான புதன்பகவான் பலம்பெற்று இருக்கவேண்டும்.மேலும் கலைக்கு அதிபதியான சுக்கிரபகவானும் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.

சினிமாவில் பின்னனி பாடி பெரும்புகழ்பெற்ற பிரபல பின்னனி பாடகி #லதாமங்கேஷ்கர் சாதகத்தினை உதாரண சாதகமாக எடுத்து நாம் ஆய்வு செய்து பார்த்தால்  மேற்கண்ட  கிரக அமைப்புகள் அவரது சாதகத்தில் தெளிவாக காணப்படுகிறது.

லதாமங்கேஷ்கர் சாதகம்;-

கிரக நிலை விபரம்.

மகர லக்கனம்
விருட்சக ராசி

4)-ல் ராகு
5)-ல் குரு 
7)-ல் சுக்கிரன்
8)-ல் சூரியன்
9)-சூரியன்,புதன்
10)-ல் கேது
11)-ல் சந்திரன்
12)*ல் சனி 

சாதக விளக்கம்

 இவரது வித்தைக்காரகன் புதன் பகவான் வருமானத்தை தரும் பாக்கியாதிபதியாகி பாக்கியஸ்தானத்திலே உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் முப்பலமடைந்து கீர்த்தி,புகழ் தரும் ஸ்தான அதிபதியான குருவால் பார்க்கப்படுதல் பாடகராகும் யோகமாகும்.

கலைக்கு காரகன் சுக்கிரன் பகவான் தொழில்காரகராகி பத்துக்கு பத்தாம் இடமான ஏழாமிடகேந்திரஸ்தானமேறியது சினிமாவில் பாடுவது தொழில் ஆனது.

மேலும் வாக்காதிபதி சனிபகவான் வாக்குஸ்தானத்திற்கு லாப இடமான குருமனையேறி ராசிக்கு வாக்குஸ்தானமேறியதாலும்,வாக்காதிபதி சனிபகவான் தனது சொந்த வீடான வாக்குஸ்தானத்தை பார்த்து பலம்பெற்றதாலும்  சினிமாவில் 2500 க்கு மேற்பட்ட பாடல்களை பெயரும்,புகழும் மற்றும் செல்வாத்தையும் ஈட்டவைத்தது.

 ராசிக்கு மோட்ஷ ஸ்தானமான பணிரெண்டில் ஞானக்காரகன் கேதுபகவான் அமர்ந்திருப்பதால் தெய்வீக அருளும் இவருக்கு கிடைத்துள்ளது.

மனதுகாரகன் சந்திரன் நீசமடைந்து இருந்தாலும் குருவின் பார்வையை பெற்று பலமடைகிறது.

ஒருவர் சிறந்த இசைஞானம் பெற அவரது சாதகத்தில் சூரியன்,சந்திரன்,சனி,புதன் மற்றும் சுக்கிரன் பலம்பெற வேண்டும்.இவருடைய சாதகத்தில்

சூரியன்-ஆட்சி
புதன்-உச்சம்,உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் (குரு பார்வை )
சுக்கிரன்-கேந்திரம்
சனிபகவான்-ராசிக்கு இரண்டாமிடம்
சந்திரனுக்கு -குருபார்வை

எனவே மேற்கண்ட அமைப்பை பெற்றிருந்தால்தான் பிரபல பாடகியாக திகழமுடிந்தது.
*************************************
(தங்களது சாதக அமைப்பை விரிவாக ஆராய்ந்து போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாக பலன் அளிக்கப்படும்.விவாக பொருத்தம்,ஜெனனசாதகம் கணித்து அனுப்புதல் போன்றவற்றிற்கு தொடர்புகொள்ளவும்)

                             

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு
செல் ;97 151 89 647
செல் : 740 257 08 99

வாட்ஸ்அப்
97 151 89 647

வாட்ஸ்அப்பில் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை அனுப்பினால் போதும்.

கிரகங்கள் தரக்கூடிய கல்வி நிலைகள்

கிரகங்கள் தரக்கூடிய கல்வி நிலைகள்.


                               

கிரகங்கள் படுத்தும் பாடு -(8)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணையுடன்...

              கிரகங்கள் தரும் கல்வி நிலைகளையும் மற்றும் அவைகள் தரும் புலமைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம்.இப்பதிவில் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

     செவ்வாய் பகவான்

              ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பகவானை வலிமையாக பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் ஈடுபட வைக்கிறது.ஏனெனில் செவ்வாய் பகவான் ரத்தத்தின் காரகர்.செவ்வாய் பகவான் வலுப்பெற்று சுப சாரம் மற்றும் பார்வை பெற்றவர்கள் நேர்மையான சேவை மனப்பான்மை மிக்கவர்களாக மாற்றுகிறது.

           அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்றாலும் பாவிகளின் தொடர்பை பெற்றவர்கள் மருத்துவர்களாக இருந்தாலும் சேவை மனப்பான்மை குறைந்து பணநோக்கோடு பணிபுரிய வைத்துவிடுகிறது.

           செவ்வாய் பகவான் வலிமையின் காரகராக இருப்பதால் போலிஸ்,ராணுவம் போன்ற துறைகளில் ஆர்வமுடையவராக மாற்றுகிறார்.
செவ்வாய் பகவான் பூமி மற்றும் பூமி சார்ந்த விவசாயத்திற்கும் காரகராக இருப்பதால் விவசாய தொடர்பான அக்ரிகல்சர் போன்ற துறைகளில் ஈடுபட வைப்பார்.

             இவை மட்டுமல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் ,மெஷினரி மற்றும் என்ஜினிரியரிங் போன்ற கல்வி நிலைகளின் மீது ஆர்வத்தினை உண்டாக்குவார்.

புதன் பகவான்

  பலமடைந்த புதன் பகவானை தனது சாதகத்தில் பெற்றவர்கள் கணிதம் சார்ந்த துறைகளில் புகழ் பெற்றவர்களாகவும்,கணிப்பொறி இயக்கும் வல்லுணர்களாகவும்,கதை,கவிதை 
,கட்டுரை ,தலையங்கம் எழுதுவதில் வல்லவராகவும் இருப்பர்,தலை சிறந்த சோதிட ஞானம் பெற்றவராகவும் திகழ்வர்.

 ஒரு சிலர் தலைசிறந்த ஆசான்களாகவும்,கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களாகவும் விளங்குவார்.

      சூரியன் பகவான்

         சூரியன் பகவான் தரும் கல்விநிலைகளை பற்றி பார்ப்போம்.ஒருவர் ஜாதகத்தில் சூரிய பகவான் வலுப்பெற்றிருப்பின் மின்சாரம் சார்ந்த படிப்புகளை படிக்க வைப்பார்.

            " இவர் அரசாங்கத்தின் காரகர் அரசியல் சார்ந்த பெலிடிக்கலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிப்பதற்கு ஆர்வமூட்டுவார்.மேலும் மருந்துப்பொருட்கள் சார்ந்த படிப்புகளிலும் ஆர்வமூட்டுவார்.
இவை மட்டுமல்லாது ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில் ஈடுபடலாம்."

         சந்திரன் பகவான்

    அடுத்தப்படியாக சந்திர பகவான் மனதிற்கு காரகர் .மேலும் நீர்கிரகம்
மற்றும் பால் தொடர்பானவைகளுக்கும் காரகராகவும் உள்ளவர்.எனவே ஒருவருடைய சாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் கற்பனை சக்தியை தூண்டக்கூடிய ஆராய்சி படிப்புகள்,விவசாயம் தொடர்பான படிப்புகள் மற்றும் பால் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் அவை
சார்ந்த மருத்துவராகவும் இருப்பார்.

 குரு பகவான்

     பலமடைந்த குருபகவானை பெற்றவர்கள் ஆசிரியர்,பேராசிரியர்  போன்ற போதகர்களாக திகழ்வர் .ஆன்மீக சொற்பொழிவாளர்களாகவும்
வழக்கறிஞர்களாகவும்,,அருள் வாக்கு சோதிடர்களாகவும் இருப்பர்.

சுக்கிரன் பகவான்

   பொறியியல் நிபுணராகவும்,கலை ,இலக்கிய நாட்டம் உடையவராகவும் இருப்பர்.நடனம்,இசையில் நாட்டம் உடையவராகவும் திகழ்வர். சினிமாத்துறை ஆர்வம்  உடையவராகவும் இருப்பர்.
அழகு  கலை உடையவராகவும் இருப்பர்.

         சனி பகவான்

            இதனைத்தொடர்ந்து சனி பகவான் தரும் கல்விகளை பற்றி பார்ப்போம்.
இவர் இரும்புக்காரகர்.எனவே இவை வலுப்பெற்றிருப்பின் பொறியியல் வல்லுனர்களை உருவாக்குவார்.மெக்கானிக் மற்றும் மின்சாரம் சம்பந்தப்பட்ட என்ஜினியராக்கி விடுவார்.

        சனி பகவான் கீழ் மட்டநிலை தொழிலாளராகவும்,மசகு,எண்ணெய் பிசின்களை அப்பிகொண்டு வேலை பார்க்ககூடிய மெக்கானிக் வேலை பார்ப்பவர்களாகவும் இருப்பர்.தான் பார்க்கும்  வேலையினை மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட இயலாத பணிகளை புரிபவராகவும் இருப்பர்.

ராகு பகவான்

  " ராகு பகவான் பலம் பெற்றிருப்பின் விஷத்தை தரக்கூடிய உரம்,பூச்சி மருந்து மற்றும் மனிதர்களுக்கு உதவக்கூடிய மருந்தாக்க வேதியியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக மாற்றி அழகு பார்ப்பார்.
கணிப்பொறி இயக்குவதில் வல்லவராகவும்,இனையத்தினை றயன்படுத்தி செய்யப்படும் வணிகத்தில் புகழ்பெற்றவராகவும் திகழ்வர்.

 ஷேர் மார்க்கெட்,வெளிநாட்டு வாசம்,பி்ல்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவராகவும் விளங்குவார்.

கேது பகவான்

ஒரு மனிதரின் ஜாதக கட்டத்தில் இரண்டு ,ஐந்து மற்றும் ஒன்பது போன்ற ஸ்தானங்களில் கேது பகவான் பலம் பெற்றிருப்பின் ஜாதகரை சிறந்த ஜோதிடராக மாற்றுவதில் வல்லவர்.அது சார்ந்த நூல்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்.

மேற்கண்ட கிரகங்கள் கீழ்கண்ட ஸ்தானங்களில் நின்று பலம் பெறும்போது கல்வியில் உயர்நிலையை அடைய முடியும்.

இரண்டாமிடம் -ஆரம்ப கல்வி
நான்காமிடம் -உயர்கல்வி
ஐந்தாமிடம் -கல்வியில் புலமை
எட்டாமிடம் -ஆராய்சி படிப்பு
ஒன்பதாமிடம் -மேல்நிலைப்படிப்பு

போன்ற ஸ்தானங்களில் நவ கிரகங்கள் நின்று பலம்பெறும்போது அந்த கிரகங்கள் காட்டும் கல்வி நிலைகளில் திறமையுடையவனாக மாற்றி புகழ் பெற செய்யும் என்ற தகவலோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
(Teacher & Astrologer)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
Cell: 740 257 08 99

    Whatsup no
97 151 89 647

(போனின் வழியாக தங்களது சாதக பலனைப்பெறலாம்.கட்டணம் உண்டு.தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி ,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும் )
My email id
masterastroravi@gmail.com

My website.click hear

 AstroRavichandransevvai.blogspot.com

....AstroRavichandran. blogspot. com

                             

..................

விராயாதிபதி எனும் முக்தி யோகம்

விராயாதிபதி எனும் முக்தியோகம்

                           

கிரகங்கள் படுத்தும் பாடு

      "விரயத்தோன்  எனும் பணிரெண்டாமிடத்தோனின்
விவரங்களை சொல்லி வாரான்
கேளேன் அன்பா"

     "வெளிநாடு செல்லல் மற்றும் படுக்கைசுகம்,விநயமான கெட்டகாரியம்,தீய செலவு
தானத்தோடு அன்னதானம்
எனும் சுப செலவு,முக்தியோகம்
விவாதம் செய்தல் யாகம் செய்தல்
இவை யாவும் எனைக்கொண்டு
அறியலாமே.! "

    "பாரினிலே என் பலனை கூறவே
ஸ்ரீபத்ரகாளி உமதருளை வேண்டினேனே"

"ஆறுமி ஆறு தன்னில் அம்புலி
  கதிரோன் சேர கூறுவாய் ஈனம் என்று கொடும்பிணி விரோதனென்று சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு வேறு வேறு
ஆவாரேன்று வேதியர் உரைத்த வாக்கு"

(விளக்கம்:12-மிடத்தில் சூரியன்,சந்திரன் ஏற்படும் விளைவு)

"திங்களுக்கு வியத்தினில் லக்கனோத்தானிருக்க
லக்கனோத்தனுக்கு விரயத்தில்
திங்களிருக்க தாயுக்கும் பிள்ளைக்கும் தகராறு தரணியிலே
கோள்களாலே  வரலாறு."

"வெய்யோனுக்கு விரயத்தில் லக்கனோத்தோன் இவனுக்கு
வியத்தினில் வெய்யோனிருக்க
தந்தைக்கும பிள்ளைக்கும் ஆகாது
தனயா இதுவே உனது விதியாது"

(விளக்கம்:திங்கள்-சந்திரன்
                     வெய்யோன்-சூரியன்)
விரயம் ,வியம-12 ம் இடம்)

"விரயமும் தனமும் பரிமாற
லக்கனோத்தன் நீசமாக வீட்டினிலே
சேர்த்து வைத்த கால் பணமும்
வில்லங்கமாகி அரசு சப்தி செய்யும்.

"சுப விரயம். வெளிநாடு செல்வதற்கும சொல்லுகிறேன்
பலனைத்தான் கேளு நண்பா
விரயத்திலே சுபகிரகம் குடியேறி
விரயத்தோன் ஆட்சியுச்சமாய்
கேந்திர கோணமேறி நின்றால்
மெச்சப்பா பலனைத்தான் மேதினிலே மேலான சித்தர்களின்
அருளாளே"

"வியத்தினிலே அசயர்கள் ஆள
அல்லது சேர கணக்கோனும்
இவர்களோடு உறவு கொண்டாட
சேர்த்து வைத்த அவனது செல்லமேல்லாம் சிறிதுசிறிதாய்
அழியும் பாரே"

சொற்பொருள்:அசயர்கள் ;-
     -பாவிகள்(ராகு,கேது,சனி,செவ்வாய்)
கணக்கோன்-புதன்

"சுகத்தோனுக்கும் விரயோனுக்கும்
சொந்தமுண்டு தாய்சுகம் வாகனயோகம் மனைசுகம் தந்திடுவான் உலகினிலே நான்கோனே 

தரணியிலே யாரலும்
தரகூடாத தாரம் தரும் படுக்கைசுகம் தருபவனோருவன்தான்
வியத்தோனே"

"விரயோனும் சுகத்தோனும்
வீரியமாய் தானிருந்தால்
வீடு வாகண யோகமுண்டே
ஆறாமாதி விரயத்தில் குடியேற
அப்பா அவன் வீட்டை சுற்றி
பார்க்க அரைமணியும் போதாதப்பா"

"பாக்கியமும் விரயோனுடன்
வெய்யோன் கூட தந்தைக்கேற்ற
தனயனாய் தரணியிலே அமைவான் பாரே"

"வியத்தினிலே பாபரும் வன்
 பகையாய் கூடி திங்களும் சனி சேயும் ஈராரு சேர நோக்க 
ஆறுமி ஆறுதன்னில் 
அம்புலியும் கதிரோன் சேர
இருமூன்று இருநான்கு
ஈராரே
வியத்தே இந்நால்வர் உறவு கொண்டு வாழ
தகர்ந்திடும் நிலனோடு தனங்கள்யாவும் தானே"

கவி விளக்கம்:-

     " 12 ம் இடத்தில் பாவிகள் பகை கொண்டு இருந்து சந்திரன்,சனி,செவ்வாய் இம்முவரும் இருந்தாலும் பார்த்தாலும்,
12ல் சூரியன்,சந்திரன் இருந்தாலும்

சனி,செவ்வாய்,சந்திரன் மற்றும் சூரியன் இந்நான்கு கூடி ஓரு ராசியில் நின்றாலும்

நிலபுலன்கள்,வீடு வாசல் இழந்து 
ஜாதகர் நிற்பார்.

சொற்பொருள்

அம்புலி -சந்திரன்
வெய்யோன்-சூரியன்
சேய்-செவ்வாய்

"வியத்திலோ லாபத்திலோ
அந்தனனும் அறிவோன் கூட
அஷ்டலெட்சுமி யோகம்"

சொற்பொருள் 

அந்தனன்-குரு
அறிவன்-புதன்

"வியத்தினிலே ஞானகாரகன்
விதிதந்திடும் மோட்சம் முக்தி
முடிந்ததப்பா அவனது ஏழ்பிறப்பும்தானே"

(12-ல் கேது இருப்பின்)

"கடல் போல பலனுண்டு
நாணபா கேளு கரண்டிகொண்டு
கடல் நீரை அள்ள முயன்றேன்
அள்ள அள்ள குறையாத சமுத்திரத்தை என்னாறு அறிவு
கடவுளின் அருளைக்கொண்டு
சிறியேன் நான் ஏதோ கவியால்
சொல்ல முயன்றேன் குறையிருப்பின் நானே பொறுப்பாவேன் நிறையிருப்பின்
நீக்கமற நிறைந்திருக்கும்
பரம்பொருளுக்கே.

                           


அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
      M.SC,MA,BEd(Teacher)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

       செல்

9715189647
740 257 08 99

Whatsup no
97 151 89 647

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம்  போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran. blogspot. com

..............................................................

வெற்றி பெறுவதற்கும்,ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு

வெற்றி பெறுவதற்கும் ஜோதிடத்திற்கும உள்ள தொடர்பை விளக்கும் பதிவு

                               

கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லையே
 புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெறுவதில்லையே"

           என்ற சினிமா பாடலை கேட்டபோது எனக்குள்ளும் ஒரு ஆதங்கம் இருந்தது .ஆம் நிறைய படித்திருந்தும்,திறமையிருந்தும் ,நேர்மையுள்ளவனாக இருந்தும் அடிப்படை செலவுக்கே சம்பாதிக்க முடியாமல் கஷ்டப்படும் பல நபர்களை பார்த்திருப்போம்.

      ஆனால் மேற்குறிப்பிட்ட எவ்வித திறமையில்லாமல் பணம் நிறைய ஈட்டும் ஒரு சில மனிதர்களை (வெளிநாடு செல்வதன் மூலமோ,தொழில் செய்வதன மூலமோ) பார்த்த போது இறைவன் மீது கூட என்னிடம் கோபம் இருந்தது உண்மைதான் சோதிட ஞானம் பெறுவதற்கு முன்புவரை.

        கடந்த பதினைந்து ஆண்டுகள் இத்துறைக்கு வந்து ஒரு ஆராய்ச்சி ரீதியாக அணுகியபோது பல உண்மைகள் கிடைத்தது

      அழகே இல்லாதவனுக்கு அழகிய மனைவி கிடைப்பதும்,
அழகிய ஆடவருக்கு அழகில்லாத மனைவி கிடைப்பதும்,(நான் உள்ளம் அழகை  குறிப்பிடவில்லை)
படித்த பெண்ணிற்கு படிக்காத  கணவன் அமைவதும் இது போன்ற பல முரண்பாடுகளுக்கு விடை கிடைத்தது.

திருவள்ளுவர் அழகாக தனது ஒன்றே முக்கால் அடியால் விடை கண்டு இருப்பர்.

"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்"

விளக்கம்: ஒருவனது பெருமைக்கும் சிறுமைக்கும் அவன் செய்த கர்மமே காரணம் என்கிறார்.

       இங்கு கர்மம் என்பது அவன் இப்பிறப்பிலும்,முற்பிறவியிலும் செய்த செயல்.

          எனவே ஓருவன் இப்பிறப்பில் மாறுபட்ட பலனை அனுபவிப்பதற்கு முன்ஜென்ம தொடர்பு.
இதனைத்தான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
"ஊழ்வினை வந்து உறுத்தும்"
அதாவது இப்பிறப்பிலே நல்லவனாக இருப்பினும் முன்ஜென்ம பந்தம் காரணமாக இருக்கலாம்

         இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் இருக்கிறது.
அறிவியலில் மரபியல் என்ற ஒரு பிரிவு உள்ளது.

         பிள்ளைகளது குணநலம்,நிறம்,தோற்றம் மற்றும் அறிவுநிலைகள்
பெற்றோரையும்,அவர்களது தந்தை தாய்வழி பட்டனார்களை பொறுத்தும் அமைகிறது.

           இது எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்றால்

         தாய் தந்தையார் மேற்கண்ட கலவியின் மூலம் வெளிப்படும் விந்து செல்,அண்ட செல் இணைந்து கருவுறுதல் மேற்கொள்ளும் போதே அதில் உள்ள ஜீன்களான டி.என்.ஏ மூலமாக கடத்தப்படுகிறது.

       தாய் தந்தை இருவரும் குட்டையாக இருந்தாலும் நெட்டையான பையன் பிறப்பதற்கு அவரது தாத்தா நெட்டையாக இருந்தாதே காரணம்.இதுபோல் முதல் தலைமுறையில் வெளிப்படாத பண்பு அடுத்த தலைமுறைக்கு வெளிப்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிருபிக்கபட்ட ஒன்று.

           எனவே விஞ்ஞானமும்,மெய் ஞானமும் பூர்வ ஜென்ம தொடர்பால்தான் இந்த முரண்பட்ட நிலை ஏற்படுகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

      இதனால்தான் ஜாதகத்தின் பணிரெண்டு கட்டத்தில் ஐந்தவாது கட்டத்தை பூர்வ புண்ணிய ஸ்தானமாக வைத்துள்ளார்கள்.

           இப்பிறப்பில் செய்யும் நல்வினை தீவினை யாவும் அடுத்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவு செய்யப்படும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.

         ஓருவனது வெற்றிக்கும் தோல்விக்கும் ஜோதிடத்திற்கு நிறைய தொடர்பு இருக்கிறது.

"எப்படி சிறு விதைக்குள் அவை எப்படி வளர வேண்டும்(உயரமாகவா,குட்டையாகவா),எது மாதிரியான இலை,காய்,கனி இது போன்ற பல தகவல்கள் விதைக்குள் ரெக்கார்ட் இறைவன் செய்திருப்பதுபோல் (உதாரணமாக மா மர விதை ஆப்பிள் பழத்தை தருவதில்லை)

      அதேபோல்  மனிதன் தாயின் கருப்பையிலே உருவாகும் போதே இவன் இந்த நிறத்தில் பிறக்க வேண்டும்.உயரம்,அங்க அவயங்கள்,உடல் ஆரோக்கியம் மற்றும் புத்திசாலிதனம் அனைத்தும் மறைந்திருக்கிறது.

        அந்த கரு தோன்றுவதற்கான கூடலும்,கர்ப்பமும் நிடழும் காலத்தில் வீண்மீன்களின் அமைப்பு குறிப்பிட்ட நிலையில் இருந்திருக்கும் அந்த அமைப்புதான் குறிப்பிட்ட வகை குழந்தை பிறக்கிறது.

           குழந்தை பிறந்த நேரத்தில் ,ஒரு நட்சத்திரம் பூமியின் தொடுவானத்தில் தோன்றும்.அவைதான் அவன்/அவளது ஜென்ம நட்சத்திரமாக கொள்ளப்படுகிறது.அதை வைத்தே அவனது ராசி கணக்கிடப்படுகிறது.அதிலிருந்து அவனது தசை கணக்கிடப்படுகிறது.

            உதாரணமாக ரேவதி நட்சத்திரம் எனில் மீனம் ராசி எனவும்.அவனது துவக்க தசை புதன் தசை எனவும்
மீன ராசியாக இருப்பவர்கள் பெண் ராசியாக இருப்பதால் அமைதியான குணம் படைத்து மென்மையாக இருப்பார்கள்.ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் கற்றறிந்த பண்டிதர்களாகவும் இருப்பார்கள் என அந்த கருவில் பதிய வைக்கப்படுகிறது.
   
     நான் முதலில் கூறிய முரண்பட்ட நிலைக்கான ஜாதக விளக்கத்தை இப்போது கூறினால் இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

        அழகற்றவனுக்கு அழகிய மனைவி கிடைக்க காரணம்

         அவனது ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தாலும்,   லக்கனத்தில் சந்திரன்,சுக்கிரன் நின்றாலும்
ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்தாலும் கிடைக்கிறது

          அதேபோல் கற்ற பெண்ணிற்கு படிக்காத கணவன் அமைவது

           அந்த பெண்ணின் லக்கன ராசியோடு ராகு,கேது தொடர்பு
ஏழாமிடத்திபதி பாவ கிரகமாக இருந்தும் பாவிகள் தொடர்பு பார்வை பெறினும்,ஏழாமிடத்திற்கு இரண்டு,நான்காமிட பாவிகள் தொடர்பு இருப்பின் அந்த பெண் டாக்டராகவே இருப்பினும் படிக்காத கணவனே கிடைப்பான் இது அனுபவ உண்மை விதிப்பயனை என்ன செய்ய.

           அதேபோல் திறமையில்லாதவனும்,படிக்காதவனும் வெற்றி பெற காரணம் 
  
          அவனது ஜாதகத்தில் வெற்றி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் வலுப்பெற்றிருப்பதோடு 9,10,11 இடங்கள் வலுப்பெற்றிருக்கும்

           எனவே வாழ்வியலோடு பிண்ணிபிணைந்தது ஜோதிடம்.

மீண்டும் ஒன்றை கூறி நிறைவு செய்யலாம் என உள்ளேன்.

          எல்லாம் முன் கூட்டியே செய்யப்பட்டதென்றால் பிறகு எதற்கு இந்த தெய்வ வழிபாடு,பூஜை புணர்ஸ்காரங்கள்  முயற்சிகள் என தோன்றலாம்.

            தெய்வத்தால் முற்பிறப்பின் கர்ம வினைகளை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஒருவித ஒலியை அதாவது ஓம் ரீங்காரத்தை தொடர்ந்து எழுப்பும் உடல் நோய்,மன நோய்களை குணப்படுத்துவதோடு மரபியல் பண்பையே மாற்றலாம் என விஞ்ஞான பூர்வமாகத ஆய்ந்திருக்கிறார்கள்.ஒலிக்கு வலிமை உண்டு .இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

.நன்றி.

                        
                                   
அன்புடன்
 சோதிடர் ரவிச்சந்திரன்
                  M.Sc,MA,BEd
  முதுநிலை வேதியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

Cell:
      9715189647
        740 257 08 99

 What's up
    97 151 89 647

My blogspot. Search on Google

AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran. blogspot. com

My email
  masterastroravi@gmail.com