Monday 3 January 2022

அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமைய..?

 அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமைய ?


                        


செவ்வாய்ப்பட்டி 

ஸ்ரீபத்திரகாளி அம்மன் துணை!


   திருமணம் செய்ய துடிக்கும் இன்றைய இளைஞர்களின் பெரும்பாலான எதிர்பார்ப்பு   தனக்கு வரக்கூடிய மனைவியானவள் 

நல்ல அழகாக இருக்க வேண்டும் என்பதே முதல் கோரிக்கையாக இருக்கும்.


  "அழகு என்பது மனது சம்பந்தப்பட்ட ஒன்றாகும்". இது தான் அழகு என்று வரையறுத்துக் கூற முடியாது". 


     ஒருவருக்கு அழகாகத் தெரியும் பெண் மற்றவர் பார்வைக்கு அழகாக தெரியாமல் போகலாம் அல்லது தெரிய  வேண்டிய அவசியமுமில்லை. 

அழகு என்பது அவர்களது ஆத்மாவின் தாளமாகும்.


  பொதுவாக 

சராசரி மனிதன் எதிர்பார்க்கும் அழகு என்பது " வெளிப்புற அங்க அவய வடிவங்கள், நிறம், நளினம், நடை, உடை ,பாவனை அனைத்தையும் சேர்த்துதான் ஆகும்".


 சோதிடவியல் அடிப்படையில் தனக்கு வரக்கூடிய மனைவியின் அழகு நிலை பற்றி அறிந்து கொள்ள இயலும்.

ஒருவருக்கு அழகுடைய மனைவி வாய்க்க 

"அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் வீடு இயற்கை சுபக்கிரகத்தின் வீடாகவும் அமைந்து , ஏழாம் அதிபதி

கேந்திர, கோண வீடுகளில்

(1-4-7-10-5-9) அமர்ந்து

சுபக் கிரகங்களாகிய குரு , தனித்த புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரன் பார்வை பெறும் அமைப்பில் காணப்பட்டாலும் அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவியாக அமைவாள்.


      ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் வீடு சனியின் வீடாக அமைந்து சனி ஏழாம் வீட்டிலே ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து வேறு ஏதேனும் சுப கிரக பார்வை  பெறாமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் அல்லது ஏழாம் வீட்டிலோ சனி அமர்ந்து ஏழாம் அதிபதியும் சனியின் தொடர்பு பெற்ற அமைப்பை பெற்று இருந்தாலும் அழகற்ற மனைவி அமைவாள்.


 அதேநேரத்தில் களத்திரகாரகன் ஆகிய சுக்கிர பகவான் உடன் பாவக்கிரகங்கள் (சனி ,செவ்வாய், ராகு ) இணைந்து காணப்பட்டாலும், சுக்கிரன் பகவான் நிற்கும் ராசியில் இருந்து ஏழாம் ராசியில் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு அமர்ந்து இருந்தாலும் விகார முகமுடைய அழகற்ற மனைவி அமைவாள்.


   களத்திர காரகனான சுக்கிரனும் மற்றும்  புத்திர காரகனான குருவும் சேர்ந்து களத்திர ஸ்தானத்தில் வலுப் பெற்று காணப்பட்டால் ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி அழகாகவும் அந்தஸ்தாகவும மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.


   ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மீனம் இலக்கனமாகவும் அதில் சுக்கிரன் அமர ,

குருவின் பார்வையை தவிர மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தால் அந்த பெண் கண்டவர் மயங்கும் பேரழகு வாய்ந்தவளாகவும், கவர்ச்சி கன்னியாகவும் திகழ்வாள் .இதே ஆணின் சாதகமாக இருந்தால் பல கலைகள் கற்றவராகவும், மனைவியின் தாசனாகவும் வாழ்க்கையில் ஒரு குறைவின்றி வாழ்வார்.


    ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும் இருந்து இதே சந்திரன் நவாம்சத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ சப்த வர்க்கத்தில் நல்ல முறையில் பலம் பெற்று காணப்படுகின்ற நிலையில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்து விட்டால் இந்த அமைப்பில் பிறந்த பெண் குடிசையில் பிறந்தாலும் அல்லது எந்த குடியில் பிறந்தாலும் இப் பெண்ணிற்கு வாய்க்கின்ற கணவன் ஓர் அரசனுக்கு நிகரான ராஜயோக வாழ்க்கை வாழ்கின்ற சுக அனுபவம் பெற்ற செல்வந்தனாக இருப்பான்.


  ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கும் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கும், இதேபோல

 ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து 5-ஆம் இடத்திற்கும் மற்றும் ஏழாம் இடத்திற்கும் குருபார்வை அமைந்து இருக்குமேயானால் அவர்களுக்கு நல்ல மனைவியும் மனைவியின் மூலம் பொருள் சேர்க்கையும், புகழ், கவுரவம் மகிழ்ச்சியும் ஏற்படும். அறிவு மிகுந்த குழந்தைகள் பிறப்பார்கள் குழந்தைகள் அழகு, கல்வி, தொழில், வாழ்க்கை மற்றும் ஆயுள் ஆகியவை பரிபூரணமாக பெற்றிருப்பார்கள். 


    இந்த யோகம் பெற்ற சாதகரின்  குழந்தைகள் பிற்காலத்தில் தந்தையிடம் அளவுகடந்த பாசத்தை பொழிவார்கள். இது முதல்தரமான யோகமாகும்.ராசிஅல்லது இலக்கினத்திற்கு ஏதேனும் ஒன்றிற்கு கிடைத்து இருந்தால் இந்த யோகம் உண்டு.


   களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அமர்ந்து ஏழாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து பாவ கிரக தொடர்பு பெறாமல் இருப்பின் அழகு வதனம் உடைய மனைவி அமைவாள்.


நன்றி.


My website

  www.astroravichandransevvai.in


வாட்ஸ் அப்

   9715189647


   செல்

 9715189647

  7402570899


                          



அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

ஒரு கிரகம் யோகத்தை அள்ளி தர..?

                         

ஒரு கிரகம் யோகத்தை அள்ளி தர ?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு தசை நடத்தும் கிரகமானது யோகத்தை அள்ளி தர வேண்டுமாயின் ஜோதிடவியலில்

 சில பொதுவான விதி முறைகளை  கொண்டுள்ளது.


1) தசை நடத்தும் கிரகமானது உச்சம், மூலதிரிகோணம், ஆட்சி , நட்பு மற்றும் நீசபங்கம்  போன்ற நிலைகளில் ஸ்தான வலிமை பெற்றிருக்க வேண்டும்.


2) தசை நடத்தும் கிரகமானது  கேந்திரம்(1,4,7,10) மற்றும் கோணங்களில்(1,5,9) அமர்ந்திருக்க வேண்டும். மறைவு ஸ்தானமான இடங்களுக்கு(3,6,8,12) செல்லக்கூடாது.


3) தசை நடத்தும் கிரகமானது இயற்கை சுப கிரகமாக இருக்க வேண்டும்.

(குரு வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்களாக கருதப்படுகிறது.

 சனி, செவ்வாய், பாவியோடு சேர்ந்த புதன், தேய்பிறை சந்திரன், நிழல் கிரகங்களான ராகு, கேது  மற்றும் சூரியன் போன்றவை பாவ கிரகங்களாக கருதப்படுகிறது. இங்கு சனி பகவான் ஆனவர் முழு பாவர் , செவ்வாய் பகவான் முக்கால் பாவர் மற்றும் சூரியன் அரை பாவர் ஆவார்.)


4) வர்கோத்தமம், 

சுப பரிவர்த்தனை மற்றும் கிரகத்திற்கு வீடு தந்தவன் உச்சம் போன்ற நிலைகளில் வலுப்படுத்தல் போன்ற நிலைகளிலும் தசை நடத்தும் கிரகம் வலுப்பெற்று இருக்கும்.


5)தசை நடத்தும் கிரகத்துடன்  பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு   மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு பெறாமலும் மற்றும் இயற்கை சுப கிரகங்களுடன் சேர்க்கை மற்றும் பார்வை பெற்ற அமைப்பும் ஒரு கிரகம் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது.


6) தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நிற்பின் அதன் தசை காலங்களில் யோக பலன்களை தரும்.


 இவ்வாறு மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் பொதுவான விதிமுறைகள் ஆகும்.


 இந்த விதிமுறைகளை அப்படியே எடுத்துக்கொண்டு பலன் பார்க்க சென்றால்  துல்லியமான பலன்களை ஜாதகருக்கு தருவதில் நீங்கள் தவறி விட நேரிடலாம்.


 இந்த விதிமுறைகள் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை ஆகும்.


 தசை நடத்தும் கிரகம் இயற்கை சுப கிரகமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது ரிஷபம் மற்றும் துலாம் லக்கனங்களுக்கு இயற்கை சுப கிரக தசையான குரு மற்றும் தனுசு மற்றும் மீனம் லக்கனங்களுக்கு புதன் ஆகியவை உகந்த. யோக தசையாக அமையவில்லை.இங்கு குரு பகவான் மற்றும் புதன் பகவான் ஆனவர் இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் ஸ்தான அடிப்படையில் அவயோகியாக இருப்பதால் யோகக் பலன்களை அதன் தசையில் தருவதில்லை.


 ஒரு கிரகம் ஆனவர் உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தால் நல்ல பலன்களை தரும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் இயற்கை பாவ கிரகங்களான சனி , செவ்வாய்  போன்றவை உச்சம், ஆட்சி போன்ற நேர்வலு அடையக்கூடாது என்ற விதி அடிப்படையிலும் சில விதிவிலக்குகள் உண்டு.


 தசை நடத்தும் கிரகமானது கேந்திர மற்றும் கோணங்களில் நின்று தசை  நடத்தும் போது யோகத்தை தரும் என்பது பொது விதியாக இருந்தாலும்,

 தனுசு , மீனம் போன்ற உபய லக்னங்களுக்கு இயற்கை சுப கிரகமான புதன் மற்றும் குரு பகவான் கேந்திரங்களில் நின்று உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து நின்ற பொழுதும் அவை "கேந்திராதிபத்திய தோஷத்தை "  பெற்று அதன் காரணமாக பொதுவிதியில் குறிப்பிட்டதை போல அதன் தசைகளில் யோகம் பலன்களை தருவதில்லை. 


 இந்த இடங்களில் ஒரு கிரகமானது கேந்திர கோணங்களில் நின்றால்  நல்ல யோக பலனை தரும் என்ற பொது விதி மாறி மறைவிடங்களிலும் அல்லது கோணங்களிலும் சென்றால்தான் யோக பலனை தரும் என்ற விதிவிலக்கு உட்படுகிறது.


  ஆதலால் ஒரு நடக்கும் தசைக்கு பலனளிக்க முற்படும் பொழுது முதலில் விதிகளை பார்த்துக்கொண்டு அந்த விதிகளுக்குள்  விதிவிலக்கு ஏதாவது உண்டா? என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகே அவருக்கு பலனளிக்க முயல வேண்டும் .


நன்றி வணக்கம்.


வாட்ஸ் அப்

  9715189647


     செல்

  9715189647

    7402570899

                    



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்.

 "எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்"


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


"எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்"

 என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இந்த வார்த்தை ஒருவருடைய மனதின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு ஏக்க சிந்தனையாகும். 


  வாழ்வின் அடிமட்டத்தில் இருந்த ஒரு மனிதன் புயலின் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கும் போது அவரது இளம் பிராயத்தை அடிக்கடி பார்த்த நபர்கள் நாமும் அவ்வாறு ஆக முடியவில்லையே என்பதோடு மட்டுமல்லாமல்

அவன் என்னைவிட அறிவும், திறமையும் குறைந்தவன் தான் ஆனால் அவன் இன்றோ மேல் மட்ட நிலையில் உயர்ந்து இருக்கிறான் இது அவனது உழைப்பா? அல்லது அறிவா? 

அல்லது திறமையா? அல்லது அவர் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டமா ?என்று ஒரு வழக்காடு மன்றம்  அவர் மனதுக்குள் நித்தம் நித்தம் நடக்கும் அதன் முடிவாக வெளியிடப்படும் வார்த்தை தான் மேற்கண்ட வாசகம்.


 ஆமா உண்மைதான்.

ஒரு மனிதன் என்னதான் அறிவும், திறமையும் மற்றும் உரிய கல்வியும் பெற்றிருந்தாலும் இந்த மூன்றையும் தொடர்புபடுத்தி வெற்றி பெறக்கூடிய அதிர்ஷ்டம் அடையக் கூடிய வாய்ப்பை தருவது அவர்கள் ஜாதக கட்டத்தில் நல்ல முறையில் அமைந்த கிரகங்களும் மற்றும் அந்த கிரகத்திற்குரிய தசைகள் உரிய காலத்தில் வந்து விடுவதுமே ஆகும்.


 எனவேதான் ஒரு அன்னை பட  பாடலில் கவிஞர் கண்ணதாசன் தத்துவார்த்தமாக எழுதியிருப்பார்.


"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"


மேற்கண்ட இந்த பாடல் வரிகள் சோதிடம் தொடர்புடைய தத்துவ உன்னத வார்த்தையாகும்.


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்களே இவருக்கு என்ன தான் யோகம் வந்தாலும் யோகத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் உயிர் என்று அழைக்கக்கூடிய லக்கினாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும்.


 யோக ஜாதகங்களை எடுத்து கையில் பார்க்கும்போது அந்த கட்டங்கள் ஜெகஜோதியாக ஜொலிப்பதை காணலாம்.


 அவரது ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய கிரகங்கள் சனி, ராகு, கேது,தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த புதன் போன்ற எவ்வித பாவர்கள் கலப்பின்றி தனித்துவமாக நின்று இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றால் பார்க்கப்பட்டு தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு பெற்று இருக்கும்.


 சாதகர் வாழ்வில் கெடுதல் தரக்கூடிய கிரகங்கள் அவரது ஜாதகத்தில் பலவீனம் அடைந்து இருக்கும்.


 உரிய வயதில் அவர்கள் ஜாதகங்களில் தொடர்ச்சியாக குரு பார்த்த யோக தசைகளோ  அல்லது வளர்பிறை சந்திரனுடைய பார்வையில் பட்ட கிரகங்கள் தசைகளோ அல்லது தர்மகர்மாதிபதிகள் தசைகள் அல்லது குரு அணியை சேர்ந்த இலக்கனங்களுக்கு குரு அணியைச் சேர்ந்த சூரிய, சந்திர ,செவ்வாய் மற்றும் குரு தசைகளும் அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்கள் தசைகளும் எவ்வித பங்கமமும் அடையாத நிலையில் தொடர்ந்து வந்து சாதகரை உயர்த்தி பிடிக்கும் வாழ்வில் கொடிகட்டி பறக்க வைக்கும்.


  ஒருவரது வாழ்வின் யோக தசை நடக்க கூடிய காலகட்டங்களில் கோச்சார அடிப்படையில் ஏழரை , அஷ்டம சனி போன்றவை நடப்பில் வராமலும் இருக்கும்.


  ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனம் அடையக்கூடாது என்று அடிக்கடி சொல்லி வருகிறோம் அவ்வாறு பலம் இழப்பதற்கும் அல்லாது பலவீனம் அடைவதற்கும் அல்லது பங்கமடைந்து நிற்பதற்கும் உரிய விதிமுறைகளை பின்வருமாறு பார்ப்போம்.


 1) கிரகங்கள் மறைவு இடங்களுக்குச் செல்லுதல்.

விதிவிலக்காக அவ்வாறு மறைவிடங்களில் சென்றாலும் இயற்கைச் சுபக்கிரகங்களது தொடர்பு பெறாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை பலவீனமடைகிறது.


  சில நேரங்களில் மறைவிட ஸ்தானங்களில் மூன்றாம் இடமும் பன்னிரெண்டாம் இடமும் மிகப்பெரிய மறைவு ஸ்தானமாக கருதப்படுவதில்லை. இதில் விதிவிலக்காக சுக்கிரனுக்கு மட்டும் ஆறாமிடம் மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் மிகப்பெரிய மறைவிடமாக கருதப்படுவதில்லை.


2) கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் இருத்தல். இதில் விதிவிலக்காக கிரகங்கள்

நீசபங்கம் அடையாத நிலையில் இருந்தால் மட்டுமே பலவீனமாக கருதப்படுகிறது.


(நீசம் பெற்ற கிரகத்தை நீச்சம் பெற்ற கிரகம் பார்ப்பது,

 நீசம் பெற்ற வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் இருப்பது,

 ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் நீசம் பெற்ற கிரகம் இருப்பது,

 நீசம் பெற்ற கிரகத்தின் வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெற்று நிற்பது

நீசம் பெற்ற வீட்டின் கிரகம் சந்திர கேந்திரத்தில் இருப்பது,

 போன்றவை   நீசபங்கம் அடைவதற்கான விதிமுறைகள் ஆகும்.)


3) ஒரு கிரகத்துடன் இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய் ,ராகு  கேது, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து இருப்பின்,

(இதில் விதிவிலக்காக இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித புதன் சுக்கிரன் ஆகிய சுபர் தொடச பெறாமல் இருப்பது)


மேற்கண்ட காரணங்களால் ஒரு கிரகம் பலவீனமடைந்து விடுகிறது.


மேற்கண்ட காரணங்களால் ஒரு கிரகம் பலவீனம் அடையாமல் இலக்கண யோகராகக இருந்து உச்சம் ,ஆட்சி மற்றும்  நட்பு போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்றோ அல்லது மறைவிடங்களில் நின்றாலும் சுபத்துவம் பெற்று பலம்பெற்று நின்று இயற்கை சுப கிரக தொடர்பு பெற்று இருந்து அவ்வாறு பெற்ற கிரகத்தின் தசை உரிய காலத்தில் நடப்பில் இருக்கும் போது ஒருவர் வாழ்வில் நினைத்ததெல்லாம் மற்றும் தொட்டதெல்லாம் பொன்னாக மாறி சாதனையாளராக திகழ்வார்கள்.


நன்றி!


வாட்ஸ் அப்; 9715189647


     செல்

  9715189647

  7402570899


Email; masterastroravi@gmail.com


                  



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(Teacher & Astrologer)


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                                  


 "இந்து லக்கனம்" என்பது......


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு ராசி கட்டத்தில் இடம்பெறக்கூடிய நவகிரகங்களது நிலைமையைக் கொண்டும் மற்றும் லக்னாதிபதியின் வலிமையைக் கொண்டும்  பல்வேறு வழிமுறையை பயன்படுத்தி 

 விதிகள் மற்றும் விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில்  மானிட வாழ்வின் எதிர்கால பலனை துல்லியமாக அறிய முற்படுகிறோம்.


   துல்லியமான பலனை அறிய பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் அதன் துணை அமைப்புகளாக

திதி சூனியம், புஷ்கர நவாம்சம், தாரா பலன் ... போன்றவைகளின்  வரிசையில் 

"இந்து லக்னம் "

பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


  இந்து லக்னம் பற்றி அறிவதற்கு முன்பாக கிரகங்களில் ஒளி அளவை முதலில் தெரிந்து கொள்வோம் இந்த ஒளி அளவைக் கொண்டுதான் 

"இந்து இலக்கனத்தை" கணக்கிட பேருதவியாக அமைகிறது.


  ஒளி அளவைக் கொண்டு தான் கிரகங்களை இயற்கை சுபர் மற்றும் இயற்கை பாவர் என்று வகுத்து இருக்கிறோம். இந்த கருத்து  ஒளி அளவை கொண்டே  உறுதி செய்யப்படுகிறது.


கிரகங்களில் சூரியனே முதன்மையானது ஆகும். சூரியனுடைய ஒளியை வாங்கி பிரதிபலிக்கக் கூடிய கிரகம் சந்திரன் ஆகும். அதாவது சூரியனுடைய ஒளியை வாங்கி அதிகமாக பிரதிபலிக்கக் கூடிய கிரகம் இயற்கை சுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒளியை வாங்கி குறைவான அளவு பிரதிபலிக்கக் கூடிய கிரகங்களை "இயற்கை பாவ கிரகம்" என்று அழைக்கிறோம்.


கிரகங்களில்  சூரியனையும், சந்திரனையும் ஒளி கிரகங்களாக கருதப்படுகிறது. 

இருள் கிரகமாக சனியையும் மற்றும் சாய கிரகங்களாக ராகு மற்றும் கேதுவும் அழைக்கப்படுகிறது.


சூரியனனால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 30 ஆகும்.


சந்திரனால் பூமிக்கு கிடைக்கக்கூடிய உடைய ஒளி அளவு 16 ஆகும்.


   சுக்கிரனால் புவிக்கு கிடைக்கும் ஒளி அளவு 12 ஆகும்.


இதற்கு அடுத்தபடியாக குருபகவானால் கிடைக்கும் ஒளி அளவு 10 ஆகும்.


புதன் பகவானால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 8 ஆகும்.


செவ்வாய் பகவானால் பூமிக்கு  கிடைக்கும் ஒளி அளவு 6 ஆகும்.


நிறைவாக சனிபகவானால் புவிக்கு கிடைக்கும் ஒளியளவு 1 ஆகும்.


இந்து லக்கனம் கணக்கிடும் முறை


லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய அதிபதியின் ஒளி அளவு மற்றும் ராசிக்கு ஒன்பதாம் இடம் அதிபதியின் ஒளி அளவு ஆகிய இரண்டின் ஒளி அளவினை கூட்டி அவ்வாறு

கூட்டி வரும் எண்ணை பன்னிரெண்டால் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்து கிடைக்கும் மீதியை ஒருவரது ராசியில் இருந்து எண்ணி வரவேண்டும்.


  உதாரணமாக தனுசு லக்னம்  மற்றும் கடக ராசி என்று வைத்துக்கொண்டால் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சூரியன் ஆகும் அதன் ஒளி அளவு 30 ஆகும். கடக ராசிக்கு ஒன்பதாம் இட அதிபதி குரு பகவானாவார் .

அதன் ஒளி அளவு 10 ஆகும். ஆக இரண்டின் கூட்டுத்தொகை 

 30+10= 40 ஆகும்.


 இந்த நாற்பதை பன்னிரெண்டால் வகுக்க கிடைக்கும் மீதி 4 ஆகும். சாதகரது ராசி கடக ராசி என்பதால் கடகத்தில் இருந்து எண்ணி வர வேண்டும். இவ்வாறு எண்ணி வர  நான்காவது ராசியாக வருவது துலாம் ராசி வருகிறது. ஆகவே துலாம் ராசியை

" இந்து இலக்கனமாக" கருதப்படவேண்டும்.


  சார்  ஒரு சமயம் 

மீதியானது

 பூஜ்ஜியம் என்று வந்தால் என்ன சார் செய்வதது ? என நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது.


இதற்கு ஒரு உதாரணம் மூலமாக விளக்குவோம்..


  சாதகர் தனுசு இலக்கனம்  மற்றும் 

 மீன ராசி  என வைத்துக் கொண்டால், லக்னத்திற்கு 9ம் இட அதிபதியான சூரியனின் ஒளி அளவு எண் 30 ஆகும்.


 மீன ராசிக்கு 9-ஆம் இடம் அதிபதியான செவ்வாயின் ஒளி அளவு 6 ஆகும்.


ஆக 30+6 ஆகிய இரண்டையும் கூட்டினால் கிடைப்பது முப்பத்தி ஆறு ஆகும்.


 இவ்வாறு கிடைக்கும் 36 ஐ 12  ஆல் வகுக்க 

மீதி 0 வருகிறது.


இப்பொழுது என்ன செய்வது என்றால் 

மீதி பூஜ்ஜியம் என வந்தால் ஜாதகருடைய ராசிக்கு முந்தைய ராசியை இந்து லக்கினமாக எழுதப்படவேண்டும். இந்த விதிப்படி மீன ராசிக்கு முந்தைய ராசியான கும்ப ராசியை இந்து லக்கினமாக கருதப்படுகிறது.

 

     இந்து லக்னம் காண்பதற்கு இத்துடன் இந்த பிரச்சனை தீர்ந்து விடவில்லை .


     ஒரு சில ராசி மற்றும் இலக்கனங்களுக்கு 

இந்து லக்னம் காணும்போது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் ஒளி அளவை கூட்டி வரும் எண்ணானது  பன்னிரன்டை விட குறைவாக வந்து பன்னிரண்டால் வகுக்க இயலவில்லை எனில்

"அப்போ என்ன செய்வீங்க?

" அப்போ என்ன செய்வீங்க?

 என மனதிற்குள் நீங்கள் கேட்கும் கேள்வி மைண்ட் வாய்ஸ் ஆக என் காதில் விழுகிறது.


  பன்னிரண்டால் வகுக்க முடியாத அளவிற்கு 12 விட குறைவாக இருந்தால் ஜாதகருடைய ராசியிலிருந்து அந்த குறைவான எண் எதுவோ அதுவரை  எண்ண வேண்டும் .எண்ணி வரும் ராசி எதுவோ,

அதுவே   இந்து இலக்கனமாகக் கொள்ளப்படுகிறது.


   உதாரணமாக மிதுன லக்கனம் மற்றும் மீன ராசியாக இருந்தால்,


மிதுன லக்னத்திற்கு ஒன்பதாம் இட அதிபதி சனி பகவான் ஆகும். அதன் ஒளி அளவு ஒன்று ஆகும். அதேபோல மீன ராசிக்கு ஒன்பதாம் இட அதிபதி செவ்வாய் ஆகும். அதன் ஒளி அளவு ஆறு ஆகும்.


  இரண்டையும் கூட்ட

1+6=7 ஆகும். 

எண்  ஏழு ஆனது பன்னிரெண்டை விட குறைவாக இருப்பதால் , இதனைப் பன்னிரண்டால் வகுக்க தசம எண் வரும் என்பதால் ஜாதகருடைய ஜென்ம ராசியான 

மீன ராசியிலிருந்து எண்ணி வர  ஏழாவது ராசியான கன்னி ராசியை இந்து லக்கினமாக கருதப்படுகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் தசையோ அல்லது இந்து இலக்கனத்தை பார்க்க கூடிய கிரகங்களின் தசை வரும் போது ஒருவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் அல்லது உயரிய வேலையில் அமரக்கூடிய யோகம் போன்றவை கிடைக்கும் என்பது உண்மையாக இருந்தாலும் வெறும் இந்து இலக்கணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சாதகர் உடைய யோக பலனை முடிவு செய்து விட முடியாது.ஏனைய பிற அமைப்புகளையும் கவனிக்கப்பட வேண்டும்.


 ஒரு ஜாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழக்கூடியவர் லக்கனமும் மற்றும் லக்கனாதிபதியுமே ஆகும். இவர்கள் இருவரது கிரக வலிமை மற்றும் யோக திசைகள் மற்றும் கோச்சார பலன்கள் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்பட வேண்டும்.


 ஒரு சில நேரங்களில் ஒரு சில நபருக்கு அவரது ஜாதக கட்டத்தில் மேற்குறிப்பிட்ட எந்த ஒன்றும் நல்லபடியாக அமையாத பட்சத்திலும் ஒருவர் செல்வம் கொழிக்கும் நிலையில் சிறப்பாக வாழ்வதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆராய்ந்து பார்த்தால், ஏனைய பிற அமைப்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்து லக்னத்தில் உள்ள கிரகம் அல்லது இந்து லக்கனத்தை பார்க்க கூடிய கிரகங்களின் தசை நடப்பில் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

  9715189647


   செல்

    9715189647

      7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

இண்டர்நெட் (internet) முலம் அதிக பணம் ஈட்டுபவர் யார

இன்டர்நெட் (Internet) வழியாக அதிக பணம் ஈட்டுபவர்  யார்?


                         


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஆரம்ப காலத்தில் முகநூல்( face book), டிவிட்டர்(Twitter), யூடியூப்(youtybe) வாட்ஸ்அப் (whats app) மற்றும் இன்ஸ்டாகிராம்(instagram) போன்ற சமூக  ஊடகங்களை(Social media) பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது .


எப்பொழுது அன்லிமிட்டட் டேட்டா பிளான்(unlimited data plan)  நடைமுறைக்கு வந்த பின் மேற்கண்ட இணையவழி பயன்பாடுகள் அனைத்தையும்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன.


சமையல், ஜோதிடம், சினிமா விமர்சனம், கதை சொல்லல், இலக்கியம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்,

நூல் விமர்சனம், நாடகங்கள், ஷேர் மார்க்கெட்...... போன்றவற்றை யூடியூப் சேனலில் வழியாக மக்களிடம் மனம் கவரத்தக்க வகையில் வேறு யாரோ ஒருவருடைய உதவியை நாடாமல் தானாகவே அல்லது பிறரை சார்ந்திருக்காமல் மக்களிடம் கொண்டு சென்று லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணத்தை ஈட்டும் படியாக யூடியூப் சேனல் மற்றும் டிவி நிறுவனங்கள் வந்துவிட்டது.


    இன்றைய இணைய வழி பயன்பாட்டிற்கு மிக முக்கியமாக காரகராக திகழக்கூடிய கிரகம் நவக்கிரகங்களில் ராகு பகவானே முதன்மைப் பங்கு வகிப்பார். 


      கணினி துறையில் வன்பொருள்(hardware) மற்றும் மென்பொருள்(Software) போன்றவற்றிற்கு மூளையாக திகழக்கூடிய நவகிரகங்களில் காரகராக திகழ்பவர் புதன் பகவானே முதன்மையானவர் ஆவார்.


  எவர் ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் வேறு எந்த வகையிலும் பங்கமடையாமல்

வளர்பிறை

 சந்திர கேந்திரத்தில் நின்று தொழில் ஸ்தானத்துடன் அதிக சுபத்துவ நிலையில் தொடர்பு கொள்ளும்பொழுது அவர் கணினித்துறையில் கொடி கட்டி பறக்க கூடிய ஞானம் பெற்றவராக திகழ்வார்.


  சில நேரங்களில் 

ஒருவர் ஜாதகத்தில் 

புதன் பகவான் ,

ராகு பகவானுடன் நெருக்கமாக இணைந்து நின்று இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், மற்றும் சுக்கிரன் 

ஆகியவருடைய தொடர்பு பெற்று நிற்கும் நிலையில் தனது கல்வி அறிவால் இண்டர்நெட்டை பயன்படுத்தி அதிகமாக பொருளீட்டும் தன்மை பெற்றவராக எடுத்துக் கொள்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் ராகு பகவானுடன் இணைந்து அந்த ஜாதகர் அந்த ஜாதகத்திற்கு தர்மகர்மாதிபதிகளின் தொடர்பை பெற்றிருந்தாலும் அல்லது

புதன் அல்லது ராகு பகவான் நிற்கும் வீட்டின் அதிபதி  அதிபதி உச்சம் பெற்ற நிலையில்  ராகு தசை புதன் புத்தி அல்லது புதன் தசை ராகு புத்தி  போன்ற காலங்களில் இணையம் வழியாக அதிக பொருளீட்டும் நபராக திகழ்வார்.


  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு தொடர்புகொண்டு அந்த வீட்டு அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அந்த ஜாதகர் இணைய வழியாக பொருளீட்டும் யோகம் பெற்றவராவார்.

மேற்கண்ட இந்த அடிப்படையில் பார்த்தால் தனுசு லக்கினத்திற்கு ராகு பகவான் மிதுன வீட்டில் இருந்து பத்தாம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவான் தனுசு வீட்டிலோ அல்லது கும்ப வீட்டிலோ அல்லது துலாம் வீட்டிலோ இருந்து ராகு பகவானை பார்க்கின்ற அமைப்பையும் பெற்றிருப்பின் இந்த யோகம் கூடுதலாக வேலை செய்யும்.


நன்றி.


வாட்ஸ் அப்

   9715189647

        செல்

   9715189647

     7402570899

                     


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்

 ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.