அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமைய ?
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீபத்திரகாளி அம்மன் துணை!
திருமணம் செய்ய துடிக்கும் இன்றைய இளைஞர்களின் பெரும்பாலான எதிர்பார்ப்பு தனக்கு வரக்கூடிய மனைவியானவள்
நல்ல அழகாக இருக்க வேண்டும் என்பதே முதல் கோரிக்கையாக இருக்கும்.
"அழகு என்பது மனது சம்பந்தப்பட்ட ஒன்றாகும்". இது தான் அழகு என்று வரையறுத்துக் கூற முடியாது".
ஒருவருக்கு அழகாகத் தெரியும் பெண் மற்றவர் பார்வைக்கு அழகாக தெரியாமல் போகலாம் அல்லது தெரிய வேண்டிய அவசியமுமில்லை.
அழகு என்பது அவர்களது ஆத்மாவின் தாளமாகும்.
பொதுவாக
சராசரி மனிதன் எதிர்பார்க்கும் அழகு என்பது " வெளிப்புற அங்க அவய வடிவங்கள், நிறம், நளினம், நடை, உடை ,பாவனை அனைத்தையும் சேர்த்துதான் ஆகும்".
சோதிடவியல் அடிப்படையில் தனக்கு வரக்கூடிய மனைவியின் அழகு நிலை பற்றி அறிந்து கொள்ள இயலும்.
ஒருவருக்கு அழகுடைய மனைவி வாய்க்க
"அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் வீடு இயற்கை சுபக்கிரகத்தின் வீடாகவும் அமைந்து , ஏழாம் அதிபதி
கேந்திர, கோண வீடுகளில்
(1-4-7-10-5-9) அமர்ந்து
சுபக் கிரகங்களாகிய குரு , தனித்த புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரன் பார்வை பெறும் அமைப்பில் காணப்பட்டாலும் அழகு மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த மனைவியாக அமைவாள்.
ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் வீடு சனியின் வீடாக அமைந்து சனி ஏழாம் வீட்டிலே ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து வேறு ஏதேனும் சுப கிரக பார்வை பெறாமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் அல்லது ஏழாம் வீட்டிலோ சனி அமர்ந்து ஏழாம் அதிபதியும் சனியின் தொடர்பு பெற்ற அமைப்பை பெற்று இருந்தாலும் அழகற்ற மனைவி அமைவாள்.
அதேநேரத்தில் களத்திரகாரகன் ஆகிய சுக்கிர பகவான் உடன் பாவக்கிரகங்கள் (சனி ,செவ்வாய், ராகு ) இணைந்து காணப்பட்டாலும், சுக்கிரன் பகவான் நிற்கும் ராசியில் இருந்து ஏழாம் ராசியில் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு அமர்ந்து இருந்தாலும் விகார முகமுடைய அழகற்ற மனைவி அமைவாள்.
களத்திர காரகனான சுக்கிரனும் மற்றும் புத்திர காரகனான குருவும் சேர்ந்து களத்திர ஸ்தானத்தில் வலுப் பெற்று காணப்பட்டால் ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி அழகாகவும் அந்தஸ்தாகவும மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மீனம் இலக்கனமாகவும் அதில் சுக்கிரன் அமர ,
குருவின் பார்வையை தவிர மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தால் அந்த பெண் கண்டவர் மயங்கும் பேரழகு வாய்ந்தவளாகவும், கவர்ச்சி கன்னியாகவும் திகழ்வாள் .இதே ஆணின் சாதகமாக இருந்தால் பல கலைகள் கற்றவராகவும், மனைவியின் தாசனாகவும் வாழ்க்கையில் ஒரு குறைவின்றி வாழ்வார்.
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும் இருந்து இதே சந்திரன் நவாம்சத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ சப்த வர்க்கத்தில் நல்ல முறையில் பலம் பெற்று காணப்படுகின்ற நிலையில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்து விட்டால் இந்த அமைப்பில் பிறந்த பெண் குடிசையில் பிறந்தாலும் அல்லது எந்த குடியில் பிறந்தாலும் இப் பெண்ணிற்கு வாய்க்கின்ற கணவன் ஓர் அரசனுக்கு நிகரான ராஜயோக வாழ்க்கை வாழ்கின்ற சுக அனுபவம் பெற்ற செல்வந்தனாக இருப்பான்.
ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கும் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கும், இதேபோல
ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து 5-ஆம் இடத்திற்கும் மற்றும் ஏழாம் இடத்திற்கும் குருபார்வை அமைந்து இருக்குமேயானால் அவர்களுக்கு நல்ல மனைவியும் மனைவியின் மூலம் பொருள் சேர்க்கையும், புகழ், கவுரவம் மகிழ்ச்சியும் ஏற்படும். அறிவு மிகுந்த குழந்தைகள் பிறப்பார்கள் குழந்தைகள் அழகு, கல்வி, தொழில், வாழ்க்கை மற்றும் ஆயுள் ஆகியவை பரிபூரணமாக பெற்றிருப்பார்கள்.
இந்த யோகம் பெற்ற சாதகரின் குழந்தைகள் பிற்காலத்தில் தந்தையிடம் அளவுகடந்த பாசத்தை பொழிவார்கள். இது முதல்தரமான யோகமாகும்.ராசிஅல்லது இலக்கினத்திற்கு ஏதேனும் ஒன்றிற்கு கிடைத்து இருந்தால் இந்த யோகம் உண்டு.
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அமர்ந்து ஏழாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து பாவ கிரக தொடர்பு பெறாமல் இருப்பின் அழகு வதனம் உடைய மனைவி அமைவாள்.
நன்றி.
My website
www.astroravichandransevvai.in
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.