தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர...?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு தசை நடத்தக்கூடிய கிரகம் யோகத்தை தர வேண்டுமாயின் அந்த கிரகமானது எவ்விதத்திலும் பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும்.
1) தசை நடத்தக்கூடிய கிரகமானது எவ்விதத்திலும் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய்,ராகு மற்றும் கேது இவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொள்ளாதிருக்க வேண்டும். மாறாக இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெற்றிருக்க வேண்டும்.
2) தசை நடத்தக் கூடிய கிரகம் சூரியனால் அஸ்தங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு அஸ்தங்கம் அடைந்து இருந்தால் பின் வேறு ஏதேனும் ஒரு வகையில் சுபத்துவம் பெற்று இருக்க வேண்டும்.
3) தசை நடத்தக் கூடிய கிரகம் ஒரு ராசியில் இயற்கை பாவ கிரகங்களுடன் சுமாராக எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணையாமல் இருக்க வேண்டும்.
எட்டு பாகைக்குள் இணைந்து பாவத்துவ நிலையை அடைந்து இருப்பின் அவை இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின் பாவத்துவ நிலையில் இழந்த பலத்தை மீண்டும் பெறும்.
3) தசை நடத்தக்கூடிய கிரகமானது கோணம் மற்றும் கேந்திராதிபதிகளாக இருந்து உச்சம்,மூலதிரிகோணம், ஆட்சி,நட்பு போன்ற நிலைகளில் ஸ்தான பலன் பெற்று இருக்க வேண்டும்.இவ்வாறு ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் சில நிலைகளில் திக் பலம் பெற்றுள்ள நிலையில் வலிமை பெறும் கிரகமாக கருதப்படுகிறது. மிதுனம் லக்கினமாக இருந்து நான்காம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் நான்காம் இடத்தில் சுக்கிரன் திக் பலம் என்ற வகையில் பலம் பெற்றதாக கருதப்படுகிறது.
4)தசை நடத்தக்கூடிய கிரகமானது மறைவிடங்களில் நின்றாலும் அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு ,வளர்பிறைச் சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ஏதாவது ஒரு தொடர்பை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்பினை பெற்ற நிலையில் அவை சுபத்துவம் நிலை பெற்று அதன் தசையில் யோகத்தை தரக்கூடிய கிரகமாக மாற்றமடைகிறது.
5) தசை நடத்தக்கூடிய கிரகமானது இருக்கும் வீட்டின் அதிபதி உச்சமடைந்து இருப்பின் அந்த கிரகம் அதன் தசையில் நல்ல பலனைத் தரக்கூடிய நிலையை அடைகிறது.
6) தசை நடத்தும் கிரகம் நீசம் அடையாது இருக்க வேண்டும் .அவ்வாறு நீசம் அடைந்து இருப்பின் அவை நீசபங்கம் அடைந்து இருக்கவேண்டும். அதாவது நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றிருந்தாலும் அல்லது நீசம் பெற்ற கிரகத்தின் வீடுகளில் உச்சம்பெற்ற கிரகம் நின்றாலும் அல்லது நீசம் பெற்ற கிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் அல்லது நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை மற்றும் வர்க்கோத்தமம் பெற்று நின்றாலும் மீண்டும் வலிமை பெற்ற கிரகமாக மாற்றம் அடைகிறது.
7) தசை நடத்தும் கிரகம் சுப நட்சத்திர சாரம் பெற்று அவை லக்கன யோகராக அமைந்து அந்தக் கிரகம் லக்னத்திற்கோ அல்லது தசை நடத்தும் கிரகத்திற்கு கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக தொடர்பு பெற அந்த கிரகம் தனது தசையில் யோகத்தை அள்ளி தரக்கூடிய நிலையை அடைகிறது.
8) தசை நடத்தும் கிரகம் அம்சத்தில் சுப வர்க்கமே ஏறி நின்றாலும் அல்லது சுப கிரகங்களுடன் சேர்ந்து நின்றாலும் அதன் தசையில் யோகத்தைத் தரும் அமைப்பை பெறுகிறது.
9) தகை நடத்தக்கூடிய கிரகமானது இந்து லக்கினத்தில் அமர்ந்த நிலையில் அல்லது புஷ்கர நவாம்சம் பெற்றிருந்தாலோ அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளி தரும் கிரகமாக மாறுகிறது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் எழுதி கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர் )
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.