Tuesday 8 February 2022

தசை நடத்தக்கூடிய கிரகம் யோகத்தை அள்ளித் தர..?

                

தசை நடத்தும் கிரகம் யோகத்தை அள்ளித் தர...?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு தசை நடத்தக்கூடிய கிரகம் யோகத்தை தர வேண்டுமாயின் அந்த கிரகமானது எவ்விதத்திலும் பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும்.


 1) தசை நடத்தக்கூடிய கிரகமானது எவ்விதத்திலும் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய்,ராகு மற்றும் கேது இவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொள்ளாதிருக்க வேண்டும். மாறாக இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெற்றிருக்க வேண்டும்.


2) தசை நடத்தக் கூடிய கிரகம் சூரியனால் அஸ்தங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு அஸ்தங்கம் அடைந்து இருந்தால் பின் வேறு ஏதேனும் ஒரு வகையில் சுபத்துவம் பெற்று இருக்க வேண்டும்.


3) தசை நடத்தக் கூடிய கிரகம் ஒரு ராசியில் இயற்கை பாவ கிரகங்களுடன் சுமாராக எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணையாமல் இருக்க வேண்டும். 

எட்டு பாகைக்குள் இணைந்து பாவத்துவ நிலையை அடைந்து இருப்பின் அவை இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின்  பாவத்துவ  நிலையில் இழந்த பலத்தை மீண்டும் பெறும்.


3) தசை நடத்தக்கூடிய கிரகமானது கோணம் மற்றும் கேந்திராதிபதிகளாக இருந்து உச்சம்,மூலதிரிகோணம், ஆட்சி,நட்பு போன்ற நிலைகளில் ஸ்தான பலன் பெற்று இருக்க வேண்டும்.இவ்வாறு ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும்  சில நிலைகளில் திக் பலம் பெற்றுள்ள நிலையில் வலிமை பெறும் கிரகமாக கருதப்படுகிறது. மிதுனம் லக்கினமாக இருந்து நான்காம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் நான்காம் இடத்தில் சுக்கிரன் திக் பலம் என்ற வகையில் பலம் பெற்றதாக கருதப்படுகிறது.


4)தசை நடத்தக்கூடிய கிரகமானது மறைவிடங்களில் நின்றாலும் அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு ,வளர்பிறைச் சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ஏதாவது ஒரு தொடர்பை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்பினை பெற்ற நிலையில் அவை சுபத்துவம் நிலை பெற்று அதன் தசையில் யோகத்தை தரக்கூடிய கிரகமாக மாற்றமடைகிறது.


5) தசை நடத்தக்கூடிய கிரகமானது இருக்கும் வீட்டின் அதிபதி உச்சமடைந்து இருப்பின் அந்த கிரகம் அதன் தசையில் நல்ல பலனைத் தரக்கூடிய நிலையை அடைகிறது.


6) தசை நடத்தும் கிரகம் நீசம் அடையாது இருக்க வேண்டும் .அவ்வாறு  நீசம் அடைந்து இருப்பின் அவை நீசபங்கம் அடைந்து இருக்கவேண்டும். அதாவது நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் நின்றிருந்தாலும் அல்லது நீசம் பெற்ற கிரகத்தின் வீடுகளில் உச்சம்பெற்ற கிரகம் நின்றாலும் அல்லது நீசம் பெற்ற கிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் அல்லது நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை மற்றும் வர்க்கோத்தமம் பெற்று நின்றாலும் மீண்டும் வலிமை பெற்ற கிரகமாக மாற்றம் அடைகிறது.


7) தசை நடத்தும் கிரகம் சுப நட்சத்திர சாரம் பெற்று அவை லக்கன யோகராக அமைந்து அந்தக் கிரகம் லக்னத்திற்கோ அல்லது தசை நடத்தும் கிரகத்திற்கு கேந்திர கோணங்களில்  நின்று இயற்கை சுப கிரக தொடர்பு பெற அந்த கிரகம் தனது தசையில் யோகத்தை அள்ளி தரக்கூடிய நிலையை அடைகிறது.


8) தசை நடத்தும் கிரகம் அம்சத்தில் சுப வர்க்கமே ஏறி நின்றாலும் அல்லது சுப கிரகங்களுடன் சேர்ந்து நின்றாலும் அதன் தசையில் யோகத்தைத் தரும் அமைப்பை பெறுகிறது.


9) தகை நடத்தக்கூடிய கிரகமானது இந்து லக்கினத்தில் அமர்ந்த நிலையில் அல்லது புஷ்கர நவாம்சம் பெற்றிருந்தாலோ அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளி தரும் கிரகமாக மாறுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் எழுதி கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647

       செல்

  9715189647

  7402570899

                        


  அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர் )

கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சூரியன் காட்டும் சுகமான உண்மைகள்.

 சூரியன் காட்டும் சுகமான உண்மைகள்.


                              


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     சூரியன் எவ்வளவு தான் ஒளிமிகுந்த கிரகமாக இருந்தாலும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுக்கள் சூரியனையும் தீண்டி அதனுடைய ஒளி அளவை பூமியில் விழ விடாமல் கிரகண தோஷத்தை  தந்து விடுகிறது.


     இதேபோல சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் சந்திரன் அமாவாசை யோகத்தைப் தருகிறது.

     இந்த நிலையில் சந்திரன் பாவராக  செயல்படுகிறது.


    சூரியன் தனக்கு

 சம சப்தமாக சந்திக்கும் சந்திரன் பகவான் பொளர்ணமி யோகத்தை தருகிறது. இந்த நிலையில் சந்திரன் முழு சுபராக செயல்படுகிறார்.


   சூரியனை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கும் பஞ்ச மகா புருஷ கிரகங்களான குரு, செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகியவை அஸ்தமனம் அடைகிறது.


  சூரியன் பகவானால் அஸ்தமனம் அடைந்த கிரக பலன்களை சூரியன் தனது தசையில் எடுத்து செய்கிறது.


  சூரியபகவானை சுக்கிர பகவான்  முன் பின் எட்டு பாகையை நெருங்க அஸ்தமனம் அடைகிறது.


  இதேபோல குருபகவான் முன்பின் பதினோரு பாகைக்குள் நெருங்கும் பொழுது அஸ்த்தங்கமடைகிறது. புதன் பகவான் சூரிய பகவானை முன்பின் 13 பாகைக்குள் நெருங்க  அஸ்தங்கம் அடைகிறது. சனி பகவான் சூரிய பகவானை முன்பின் 15 பாகைக்குள் நெருங்க அஸ்தமனம் அடைகிறது. செவ்வாய் பகவான் சூரிய பகவானை முன்பின்17 பாகைக்குள் நெருங்க அஸ்தமனம் அடைகிறது.


    சூரியனை 12 பாகைக்குள்ளாக நெருங்கக் கூடிய சந்திரபகவான் அஸ்தங்க தோஷம் அடைகிறது என்பது பொதுவான விதியாக இருந்தாலும் சந்திரபகவான் அஸ்தங்கம் தோஷம் அடைவதில்லை என்பதே சரியான கருத்தாகும்.


  சூரியன் பகவானை நெருங்கும் புதன் பகவான் பெரும்பாலும் அஸ்தங்கம் அடைவதில்லை என்பதே சரியான கருத்தாகும்.


 சூரிய பகவான் உடன் புதன் பகவான் நெருக்கமாக இணையும்போது 

"புத ஆதித்ய யோகத்தை" தருகிறது.அதிலும் குறிப்பாக 1,4,8 ஆம் இடத்தில் இணையும் போது சாதகர் மிகுந்த நுண்ணறிவு படைத்தவராகவும் பல பட்டம் பெறக்கூடியவராகவும், கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்வார்.


 இக்கருத்தை வலியுறுத்தும் பின்வரும் பாடல்

 "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாம்."


  அஸ்தங்கம் அடையும் புதன் பகவான் நரம்புத்தளர்ச்சியை தருவார். மாமன் வர்க்கங்களுக்கு பாதிப்பை உண்டாக்குவார்.


  சூரியனால் அஸ்தங்கம் அடைந்த குருபகவான் புத்திர தடையை அடைவார்.  ஏனைய பிற அமைப்புகள் பொறுத்து தனயோகம் அமைகிறது.


  சூரியன் பகவான் உடன் இணைந்து அஸ்தங்கம் அடையும் செவ்வாய் பகவான் சகோதர தோஷத்தை தருவார்.இரத்தம் தொடர்பான பாதிப்புகளை தருவார்.


 சூரியன் பகவான் உடன் இணைந்து அஸ்தங்கம் அடையும் சனி பகவான் உடல் நிலை பாதிப்புகளை தருவார்.


  சூரியன் பகவானுக்கு முன்பாக மேற்குறிப்பிட்ட பாகைக்குள் நெருங்கி அஸ்தமனம் அடையக்கூடிய கிரகங்கள் தனது காரக மற்றும் ஆதிபத்தியம் பலன்களை இழந்து அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆனால் அதே நேரத்தில் சூரியனுக்கு பின்னாக அஸ்தங்கம் அடையக்கூடிய கிரகங்கள் அதாவது சூரியனை விட்டு விலக கூடிய கிரகங்கள் பெருமளவு ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களை இழப்பதில்லை.


  சூரிய பகவானை மேலே குறிப்பிட்ட  பாகைக்குள்ளாக நெருங்கி வரக்கூடிய கிரகங்களை அஸ்தங்கம் அடையச் செய்த சூரியபகவான் பலம் பெற்று அதன் தசையில், சிம்ம லக்கினமும் வலுப்பெற்ற நிலையில் அரசு உத்தியோகத்தை தருகிறார்.


    சூரியனால் அஸ்தங்கம் அடையச் செய்யும் சுக்கிர பகவான் தனது காரக பலனான நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை தடை செய்கிறார். பால்வினை நோய்களைத் தருகிறார்.


  இதேபோல சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு குரு, சனி மற்றும் செவ்வாய் வரும்பொழுது வக்கிரம் ஆரம்பமாகிறது. ஏழாம் இடத்திற்கு வரும்போது அதி வக்கிரமாகிறது. ஒன்பதாம் இடத்திற்கு வரும் போது வக்கிர நிவர்த்தி அடைகிறது.


  சூரியன் இருக்கும் இடத்திலிருந்து சந்திரன் நிற்கும் இடத்தினை பொருத்துதான் வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று வகைப்படுத்தப்படுகிறது.


  சூரியன் பகவான் உடன் அல்லது சூரியபகவான் நிற்கும் வீட்டிற்கு முன் பின் ஒரு ராசி வீதம் 60 பாகைக்குள்ளாக புதன் பகவான் வாசம் செய்கிறது.


 சூரியன் பகவான் உடன் அல்லது சூரிய பகவான் இருக்கும் ராசிக்கு முன் பின் இரண்டு ராசிக்குள் அதாவது 90 பாகை கொள்ளாத சுக்கிர பகவான் வாசம் செய்வார்.


 ஆதலால் சூரிய பகவானை சுற்றிவரும் உள்வட்ட கிரகங்களாக சுக்கிரன் மற்றும் புதன் பகவான் திகழ்கிறார்.


 சூரியன் பகவான் சித்திரை மாதத்தில் மேஷத்தில்  தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியினை வந்து அடைகிறது ஒரு மாதம் ஒரு ராசியில் சூரிய பகவான் வாசம் செய்கிறார்.


 சூரிய பகவானையும் அதன் வீடான சிம்த்தையும் பலம் பொருந்திய அமைப்பாக கொண்ட சாதக அமைப்பைக் கொண்டவர்கள் அரசு வேலைகளில் உயர் பதவியில் அமர்வார்கள். தந்தை வழியில் ஆதயத்தை பெறுகிறார்கள்.


  சூரிய பகவானுடன் இணைந்து அஸ்தமனம்  பெறும் கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், அல்லது உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் மற்றும் இயற்கை சுப கிரக பார்வை பெறும் அமைப்பை பெற்றிருந்தாலும் அஸ்தமனம் அடைந்த கிரகம் பெரிதளவு ஆதிபத்திய மற்றும் காரக பலன்கள் பாதிக்கப்படுவதில்லை.


சூரியன் பகவான் உடனான குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை ஆன்மீக தலைவர்களை உருவாக்குகிறது.


 சூரியன் உடன் கேது பகவான் இணைந்து குருவின் பார்வையினை பெறுகின்ற அமைப்பு ஆன்மீக யோகம் தரும் அமைப்பாக திகழ்கிறது.


   கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு நாதனாக சூரியபகவான் திகழ்கிறார். சிம்மத்தை ஆட்சி வீடாகவும், மேசத்தை உச்ச வீடாகவும் மற்றும் துலாத்தில் நீசம் பெற்ற அமைப்பை பெறுகிறார்.


 சூரிய பகவான் பத்தாம் வீட்டில்  திக் பலம் என்ற அமைப்பை பெறுகிறார்.நான்காம் வீட்டில் நிஷ் பலம் பெறுகிறார்.


  மகர லக்னத்திற்கு பத்தாமிடத்தில் சூரியன் பகவான் நீசம் அடைந்திருந்தாலும் திக்பலம் பெற்ற நிலையில் சூரிய பகவான் வலிமை பெற்றவராக திகழ்கிறார்.


 ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பகவானை அதிக சுபத்துவ நிலையில் பெற்றவர்கள் ஆணையிடும் அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார். அரசின் உயரிய பதவிகளிலும் மற்றும் அரசியலில் பெரும் தலைவர்களாக திகழ்வார்கள்.


சூரிய பகவான் எலும்புக்கு காரகன் மின்சாரத்திற்கும் காரகர் ஆவார். ஆதலால் அறுவைச் சிகிச்சை நிபுணர், மின்சாரம் தொடர்புடைய உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகம் போன்றவை உண்டாகும்.


   ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் ஒன்பதாம் இட அதிபதி, சிம்மம் ராசி மற்றும் சூரிய பகவான் ஆகியவற்றை வலிமையாக பெற்றவர்கள் பெரும்புகழ் பெற்ற தந்தையை பெற்றிருப்பார்கள். 


  சூரிய பகவானுடன் இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகமான ராகு பகவான் இணைந்த அமைப்பு சூரிய பகவான் பலமிழந்து அரசு வேலை கிடைப்பது  மற்றும் தந்தை மூலம் ஆதாயம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும்.


  சூரியன் பகவான் உடன் எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக சனிபகவான் இணைந்துள அமைப்பு அல்லது சூரியனும் மற்றும் சனிபகவானும் சம சப்தமாக பார்க்கின்ற அமைப்பு அல்லது சூரியன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் உச்சம்பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு மிகுந்த கெடுபலனை ஜாதகருக்கு தருகிறது குறிப்பாக தந்தை-மகன் உறவு நிலை பாதிப்பை உண்டாக்குகிறது.


 சூரிய பகவானை சனி சமசப்தம பார்க்கின்ற அமைப்பு வக்கிர நிலை பெறுகிறது.இத்துடன் ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பினை பெறும் போது சூரிய பகவான் மிகுந்த அளவு பாவத்தன்மையை வேறு ஏதேனும் வகையில் குரு பகவான், வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் சுக்கிரன் ஆகியவற்றை தொடர்பு பெறாத நிலையில் அடைகிறார்.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647


    செல்

  9715189647

    7402570899


Email

  masterastroravi@gmail.com

                                      


அன்புடன்

  ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன்  கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள்

 சோதனைகளை சாதனைகளாக மாற்ற "வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்".

                     


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்"-கவிஞர் கண்ணதாசன் கவி வரிகள் ஆகும்.


    வேதனைகளும், சோதனைகளும் இல்லாத மனித வாழ்வு ஏது.?

இந்த வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனில் 

" மனிதன் தன்னைச் சுற்றி வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகளை பயன்படுத்தி வாழ்வின் உயர்நிலையை எட்ட முடியும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்."


     பகவான் 

ஸ்ரீ கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆவார்.

 அவர் ரோகிணி  நட்சத்திர குறியீடான தேர் வாகனத்தினை எப்பொழுதுமே பயன்படுத்துவார்.


     மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருச்ஷோத்திரப் போரில் கூட பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்கள் பக்கம் தேரோட்டியாக கலந்து கொண்டதால் தான் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைத்தது. 


    அவதார கண்ணன் நட்சத்திர சின்னமான தேர் எப்பொழுதும் அவர் கூடவே இருந்ததால்

"அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கியது."


 ராமாயணத்தில்

பகவான் ஸ்ரீ ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .

இவர் எப்பொழுதும் தன் கையில் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உரிய "வில்' ஐ கையேந்தி சென்றதால் தான் " வில்லை உடைத்து சீதையை திருமணம் செய்துகொள்ள முடிந்தது."இலங்கையில் ராவண வதம் வெற்றிகரமாக நிகழ்ந்தது.


  ஸ்ரீவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமாக கருதப்படும் மிக முக்கியமான அவதாரம் வாமன அவதாரம் ஆகும்.

உலகையே மூன்று அடியால் அளந்த வாமனர் பிறந்தது திருவோணம் நட்சத்திரம்  ஆகும்.

அவரது நட்சத்திரம் சின்னம் மூன்று பாதச்சுவடு ஆகும். இதனால்தான் என்னவோ அவர் உலகையே மூன்று அடியால் அதாவது பாதசுவட்டால் அளக்க இயன்றது.


       ஸ்ரீராம பக்தரான 

ஸ்ரீ ஹனுமானுக்கு மூலநட்சத்திரம். நட்சத்திர சின்னம் சிங்கத்தின் வால் ஆகும். தனது வாலால் இலங்கையை தீமூட்டி அளிக்க நேர்ந்தது.


  சைவ சமயக் கடவுளான சிவபெருமான் அழித்தல் தொழில் புரிய உருவாக்கப்பட்டவர் ஆவார்.

ருத்திரன் என்றால் துன்பத்தை நீக்குபவர் என்று பெயர்.

 பிரம்மா அக்குழந்தைக்கு ருத்திரன் என்று பெயரிட்டார். 


    ருத்ரன் உடைய நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.

 திருவாதிரை நட்சத்திர சின்னம்: மண்டையோடு ஆகும். அதனால்தான் இவர் துன்பத்தை தரும் அரக்கர்களை அளித்து மண்டையோடு ஆக மாற்றும் தொழிலை மேற்கொண்டவர் ஆவர்.


     இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனவே ஒரு மனிதன் வாழ்வில் வெற்றிபெற அவருடைய நட்சத்திர குறியீடுகளை கண்டறிந்து அதனை தான் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய பொருள்களாகவோ அல்லது நட்சத்திர சின்னங்களை அடிக்கடி பார்க்கக்கூடிய வாய்ப்பை உண்டாக்கினால்.

அதாவது நம்மைச் சுற்றி அவை இருக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கும் பொழுது அது நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்ல முறையில் அமையும் என்பது ஜோதிட உண்மையாகும்.


நட்சத்திரங்களும் அவற்றிற்குரிய குறியீடுகளும்.


அசுபதி: 

குதிரை தலை


 பரணி : 

யோனி அடுப்பு மற்றும் முக்கோணம் முதலியன.


கார்த்திகை ;

கத்தி, கற்றை, வான், தீச்சுவாலை முதலியன,


ரோகிணி ;

தேர், வண்டி ,கோயில் ஆலமரம், ஊற்றல் ,சகடம் முதலியன,


மிருகசீரிடம் ;

மான்தோல், தேங்காய் கண் 


திருவாதிரை :

மனித தலை ,வைரம், கண்ணீர்த்துளி முதலியன,


 புனர்பூசம்:

       வில் 


பூசம்

   புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின் மடி முதலியன,


ஆயில்யம்;

 சர்ப்பம், அம்மி ,


மகம் ;.

வீடு, பல்லாக்கு, நுகம்


 பூரம்;

 கட்டில்கால், கண்கள், அத்தி மரம், சதுரம் மற்றும் மெத்தை முதலியன,


உத்திரம்;


 கட்டில் கால், கம்பு ,குச்சி மெத்தை முதலியன,


 அஸ்தம் :

     கை 


சித்திரை:

 முத்து புலிகண்


 சுவாதி;

    பவளம், தீபம்


விசாகம் :


முறம் ,தோரணம், குயவன் சக்கரம் முதலியன,


அனுஷம் :

குடை , முடப்பனை, தாமரை, வில்வளசல் முதலியன,


கேட்டை :

  குடை, குண்டலம், ஈட்டி முதலியன,


 மூலம்;

 அங்குசம், சிங்கத்தின் வால் ,பொற்களம், யானையின் துதிக்கை முதலியன,


பூராடம் ;

கட்டில்கால் 


உத்திராடம் ;

 கட்டில்கால் 


திருவோணம் : 

 முழக்கோல்,மூன்று பாதச்சுவடு ,அம்பு முதலியன,


 அவிட்டம்:

 மிருதங்கம், உடுக்கை


 சதயம் :

பூங்கொத்து, மூலிகை கொத்து 


பூரட்டாதி 

கட்டில் கால்


உத்திரட்டாதி 

கட்டில்கால் 


ரேவதி:

 மீன், படகு


மேற்கண்ட 27 நட்சத்திரங்களில் பூரம், பூராடம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய ஆறு நட்சத்திரங்களுக்கு கட்டில்கால் நட்சத்திர சின்னமாக வந்துள்ளது.


  நம் வாழ்வில் வெற்றி பெற மேற்கண்ட நட்சத்திர சின்னங்களை அதிகமாக பயன்படுத்துவது மூலமாகவோ அல்லது அந்த நட்சத்திர  சின்னங்களின் டையாள குறிகளை நம் கூடவே இருக்கும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாகனம், பேனா,பேக் , அலைபேசி, லேப்டாப் மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் அடிக்கடி பார்க்கும்படி யாகவும்  மற்றும் அடிக்கடி பார்ப்பதன் வழியாக மனதின் அடியாழத்தில் அந்த நட்சத்திர சின்ன குறியீடு பதியும் படியாகவும் செய்வதன் மூலம் வாழ்வில் வெற்றி அடையலாம் .


நன்றி!


வாட்ஸ் அப்

  9715189647


    செல்

    9715189647

     7402570899

                          



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

Teacher & Astrologer

Omsakthi astro online consulting centre,

Karambakkudi.


Email

masterastroravi@gmail.com


           


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday 7 February 2022

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

                               

 

   நடுநிலை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எப்படியாவது நன்றாக படித்தோ அல்லது கஷ்டப்பட்டு உழைத்தோ வாழ்வில் உயர்ந்து விடவேண்டும். 

சமூகத்தில் நான்கு பேர் மதிக்கும் அளவிற்கு வாழ்ந்து விட வேண்டும் என்பதே பேராவலாக  இருக்கும்.


  ஒரு முன்னேறத் துடிக்கும் சராசரி நடுத்தர இளைஞன்  ஜாதகத்தை ஆராய்ந்து உள்நோக்கி பார்த்தோம் என்றால் அவரது ஜாதகத்தில் உயிர் என்று அழைக்கப்படும் இலக்கனமும் அதன் அதிபதியும் மற்றும் உடல் என்று அழைக்கப்படும் ராசியும் அதன் அதிபதியும் பலம் அடைந்த நிலையில் இருக்கும்.


   இது மட்டுமல்லாமல் அவரது ஜாதகத்தில் முயற்சிக்கு உரிய ஸ்தானமான மூன்றாம் இடமும் அதன் அதிபதியும் முயற்சிக்கு காரணியான வித்தை காரகனான புதன் பகவானும் எவர் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கிறதோ அவரது முயற்சிக்கு நிச்சயமாக இகழ்ச்சி அடையாத அளவுக்கு வாழ்வில் உயர்வை அடைந்து விடுவார்.


"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"


    என்றார் வான்புகழ் கொண்ட வள்ளுவர்.


  ஒருவரது ஜாதகத்தில் உகந்த தசா அமைப்புகள் வரும்பொழுது இலக்கனதிபதியும் மற்றும் முயற்சி ஸ்தானமும் வலுப் பெற்று இருப்பின் அவரது ஜாதகத்தில் சரியான ஒரு துறையில் முயற்சியை மேற்கொண்டு அதில் அத்துறை சார்ந்த முன்னேற்றத்தை பெறுவார்.


 ஒருவரது ஜாதகத்தில் உகந்த தசா அமைப்புகள் நடைபெறாதபோது‌ அல்லது கோச்சாரப்படி ஏழரை மற்றும் அஷ்டமச்சனி நடக்கக்கூடிய காலங்களிலும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் என்னதான் முயற்சி செய்தாலும் தசா மற்றும் கோச்சார பலன்கள் ஒத்துழைக்காததால் மேற்கொண்ட முயற்சியில் சரிவுகள் உண்டானாலும் அந்த நேரத்தில் லக்னாதிபதி  வலுவாக இருப்பின் அந்த சரிவையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை ஜாதகருக்கு தந்து அந்த அவயோக தசா அமைப்புகள் முடிந்த பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று தான் சார்ந்த துறையில் கடுமையான முயற்சி செய்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள்.


லக்னாதிபதி வலுவான அமைப்பைப் பெற்றவர்கள்.

 "இந்த நிலையும் மாறும்" என்ற உறுதியான கொள்கையோடு போராடி அந்த கடினமான நேரத்திலும் மன உறுதியோடு எதிர்த்து நின்று போராடி தக்க காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தது வெற்றிக் கொடி ஏந்தி சமூகத்தில் உலா வருவார்கள்.


  வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் போராட்டங்கள் வந்தாலும் மனம் தளராது துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடி வெற்றி பெறும் மனப்பான்மை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேடை ஏறிப் பேசினாலும் அல்லது நீதிக் கதைகள் மூலம் விளக்கினாலும் அந்த மனப்பக்குவத்தை தருவதில் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய  பங்குகளும் அவசியமான ஒன்றாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

  9715189647

      செல்

 9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                                    



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.