பேரரறிஞர் அண்ணா சாதகம் ஓர் ஆய்வு
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 63 )
சினிமாவில் சாதித்தவர்கள்-(4)
செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
ஒருவர் எழுத்துத்துறையில் சிறந்து விளங்க அவரது சாதக கட்டத்தில் மூன்றாம் பாவமும் மற்றும் ஒன்பதாம் பாவமும் பலம் பெற்றிருக்கவேண்டும்.கிரகங்களில் புதன் பலம்பெற்றிருக்கவேண்டும்.அதிலும் சினிமாவில் கதை,திரைகதை ,பாடல்கள் மற்றும் நாடகத்துறையில் சிறந்துவிளங்கவும் மேற்கண்ட அமைப்போடு சுக்கிரன் பகவானும் பலன்பெற்றிருக்கவேண்டும்.
இதற்கு தகுந்த உதாரணமாக யாருடைய சாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணியதில் என் மனதில் தோன்றியது தமிழகத்தின் முன்னால் முதல்வர் "பேரறிஞர் அண்ணா"அவர்களது சாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் சாலச்சிறந்தது.
இவர் எழுத்தாளர்,நாடகம்,சினிமாவில் பாடல்கள்,கதை மற்றும் கட்டுரை என பல்கலை வித்தகர் ஆவார்.
பேரறிஞர் அண்ணா அவர்களது சாதக கிரகநிலை.
மகர லக்கனம்
சிம்ம ராசி
3-ல் சனி (வக்கிரம்),செவ்வாய்(வக்கிரம்)
5-ல் ராகு
8-ல் சூரியன்,சந்திரன்
9-ல் புதன்,குரு
10-ல் சுக்கிரன்
11-ல் கேது
சிம்ம ராசி
3-ல் சனி (வக்கிரம்),செவ்வாய்(வக்கிரம்)
5-ல் ராகு
8-ல் சூரியன்,சந்திரன்
9-ல் புதன்,குரு
10-ல் சுக்கிரன்
11-ல் கேது
சகோதர தோஷம்
சுக மற்றும் லாபாதிபதியான அதேநேரத்தில் சகோதரகாரகனான செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று சகோதர ஸ்தானத்தில் அமர்ந்தது காரக பாவ நாஸ்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் லக்கன மற்றும் சனி பகவானும் வக்கிரம் பெற்று சகோதரஸ்தானமான மூன்றாம் பாவத்தில் சனி-செவ்வாய் சேர்க்கை பெற்று அமர்ந்தது இளைய சகோதர தோஷத்தை அளித்திருக்கிறது.
எழுத்து துறையில் ஜொலிக்க
இவரது சாதகத்தில் ஆறு மற்றும் ஒன்பதாம் அதிபதியான வித்தைகாரகர் புதன் பகவான் உச்சம்,ஆட்சி மற்றும் திரிகோணம் என்ற முப்பெரும் பலம் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.மேலும் மூன்று (கீர்த்தி) மற்றும் பணிரெண்டாம் அதிபதியான குரு பகவான் புதனுடன் இணைந்து மூன்றாம் ஸ்தானமான தனது சொந்தவீட்டை பார்த்ததால் மூன்றாமிடம் பலம்பெறுவதோடு அதில் உள்ள கிரகங்களான சனி,செவ்வாய் வக்கிரத்தன்மை நீங்கி நற்பலனை அளித்தது.
இப்ப புரிகிறதா ?இவர் எதனால் எழுத்து துறையில் சாதித்தார் என புரிந்திருக்கும்.சாதிப்பதற்கு தேவையான மூன்று மற்றும் ஒன்பதாம் பாவம் மற்றும் புதன்பகவான் பலம்பெற்றதால் ஆகும்.
சினிமாவில் சாதனை
கலைக்காரகனும் சாதககட்டத்தில் பூர்வபுண்ணிய மற்றும் தொழில்ஸ்தான அதிபதியான சுக்கிரன் பகவான் தனது தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்றதால் ஆரம்ப கட்டத்தில் நாடகங்களுக்கு கதை எழுதுவதும் ,நடிப்பதும் தொழிலாக இருந்து பிறகு திரைப்படத்திற்கு கதை ,வசனம் எழுதினார்.ஓர் இரவு,வேலைக்காரி முதலியவை இவரது புகழ்பெற்ற நாடகங்களாகும்.மேலும் தனது பேச்சாலும் புதுமையை புகுத்தக்கூடிய தன்மையை மேற்கண்ட கிரக அமைப்புகள் இவருக்கு வழங்கியது.
நாத்தீக கொள்கை
மூன்றாம் இடத்தில் உள்ள சனிபகவானும்,செவ்வாய்பகவானும் சேர்ந்து வக்கிரம் பெற்று ஒன்பதாம் இடத்தையும் குருபகவானையும் பார்த்ததால் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்தார்.
இளைஞர் ஆதரவு
சந்திரனுக்கு பத்தாம் இடத்தினை சனி பகவான் பார்த்ததும்,சிறந்த பேச்சு மற்றும் எழுத்து திறமையும் இளைஞர்களின் பேராதரவை பெற்று தந்தது.
அரசியல் யோகம்.
சந்திரனுக்கு பத்தில் ராகு இருப்பது அரசியலில் ஈடுபடும் யோகத்தை தந்தது.
அரசாளும் யோகம்.
ஒன்பதாம் அதிபதி புதன் ஒன்பதிலே ஆட்சி,பத்தாம் அதிபதி சுக்கிரன் பத்திலே ஆட்சி பெற்று இருப்பது #தர்மகர்மாதிபதியோகமாகும்.இதனால்தான் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டிருந்தாலும்"ஏழையின் சிரிப்பிலேதான் இறைவனை காண முடியும்"எனும் கொள்கையையும்"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"எனும் உயரிய கொள்கையை கொண்டிருந்தார்.
மேலும் சூரியனும் ,சந்திரனும் சேர்ந்திருந்து அமாவாசை யோகம் பெற்று அதில் சூரியன் ஆட்சி பெற்றதும் தமிழக முதலமைச்சராக்கி கிரகங்கள் அழகு பார்த்தது.அதேநேரத்தில் சூரியனும்,சந்திரனும் சேர்ந்திருந்தது இளமையில் தந்தையை இழந்த நிலையையும் இவரது வளர்ச்சியை தந்தை காணமுடியாத நிலையை தந்தது.
இவர் நாடகம்,எழுத்து,சினிமா மற்றும் அரசியல் என எல்லா துறையிலும் புகழ்பெற்று விளங்கினார்.
இவரது சாதகத்தில் ஆறாம் அதிபதியாகவும் புதன் பகவான் இருப்பதால் இவை ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்றதால் இவர் இறப்பு பிணியால்(புற்றுநோய்) முடிந்தது.அதே புதன் பலம்பெற்றதால் டாக்டர்கள் அண்ணாவிடம்" ஆப்ரேஷனுக்கு நேரமாகிவிட்டது "என அழைத்தபோதும் அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை படித்து முடித்துவிட்டுதான் வருவேன்"என மறுத்துவிட்டாரம்.அவர் இறந்தபிறகு" சிறிது நேரத்திற்கு முன் அறுவைசிகிச்சை செய்திருந்தால் பிழைத்திருப்பார்"என்றார்களாம்.எனவே இறுதிவரை உயிரைவிட படிக்கும் பழக்கத்தை முக்கியமாக கொண்ட அவதார புருஷர் ஆவார்.
-----தொடரும் சாதனையாளர்கள்----
தங்களது சாதகங்களை ஆய்வு செய்து பார்க்கவும்,விவாகபொருத்தம் முதலியவையை கணித்து போன் வழியாக பலன்பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்தேதி,நேரம் மற்றும் பிறந்த இடத்தை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு
( 97 151 89 647 ) அனுப்பிவைக்கவும்.கட்டணவிபரம் அதில் தெரிவிக்கப்படும்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647
செல்: 740 257 08 99
செல்: 740 257 08 99
My Email
masterastroravi@gmail.com
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
********************************
Online Astro consult conduct my cell and whatsup.
Online Astro consult conduct my cell and whatsup.
No comments:
Post a Comment