Friday 30 March 2018

சுக்கிரன் பகவான் தரும் சுகமான பலன்கள்

சுக்கிரபகவான் தரும் சுகமான பலன்கள்.


                                    

கிரகங்கள் படுத்தும் பாடு -(199)

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

          ஒரு மனிதனுக்கு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை தந்து வாழ்வின் சகல வசதிகளையும் அனுபவிக்க வைப்பதில் நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

          ஒரு சிலர் விதவிதமான சொகுசு கார்களை சொந்தாமாக வைத்திருக்கக்கூடிய யோக பலன்களை அளிப்பதில் சுக்கிரபகவானுக்கு முக்கியமான பங்கு உண்டு.நல்ல பலமான சுக்கிரபகவான் பலமடைந்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு ஒருவரை பல பேருந்துகளை வைத்திருக்ககூடிய வாகன உரிமையாளர்களாக இருப்பர்.

        விதவிதமான நவநாகரிக உடைகளை அணியும் பழக்கவழக்கங்களை உடையவராக இருப்பின் அவரது சாதகத்தில் சுக்கிரபகவானின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்.பலமடைந்த சுக்கிரன் தொழில் ஸ்தான தொடர்பு ஐவுளி மற்றும் ரெடிமேட் கடை உரிமையாளராக திகழ்வர்.

       ஒரு சிலர் சிகையலங்கரத்தில் அதிக கவனம் செலுத்தி மாறுபட்ட வகையில் முடி வளர்ப்பவராக இருக்ககூடிய தன்மையினை சுக்கிரபகவான் வழங்ககூடியவராக இருப்பார்.பலமடைந்த சுக்கிரன் தொழில் ஸ்தான தொடர்பு அழகு நிலையங்கள் ,சிகையலங்காரம்,
மணப்பெண் அலங்காரம் போன்ற தொழில் நடத்தி பிழைப்பர்.

  தன்னை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்ள விரும்பும் நபரா நீங்கள் நிச்சயம் உங்களது சாதகத்தில் சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.


                                     

        சினிமா,நடிப்பு,இசை,பாடல் இயற்றுதல் மற்றும் கவிதை புனைதல் போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருந்து அத்துறைகளில் ஒன்றில் இறங்கி தனது புகழை உலகோர் அறியும் வண்ணம் திறமையை வெளிப்படுத்துவோரின் சாதகத்தில் சுக்கிரபகவானின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

       சாப்பாட்டு பிரியரா ? நீங்கள் நிச்சயம் சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.சுக்கிரன் பலமடைந்த பத்தாம் பாவத்துடன் இடன் தொடர்பு கொள்ள உணவகங்கள் வைத்து நடத்தகூடிய முதலாளிகள் ஆவார்.

    சிற்பம் செதுக்குதல்,ஓவியம் வரைதல் ,கதை ,கட்டுரை,கவிதை மற்றும் சினிமா பாடல்கள் எழுதுதல்  இவைகளில் ஆர்வமூடையவர்களாக மற்றும் நிபுணத்துவம் நிறைந்தவர்கள் எனில் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.
  கலைப்பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகி அது சார்ந்த பொருட்களை வாங்கி சேகரிக்ககூடிய நபர்களின் சாதகத்திலும் சுக்கிரன் பலடைந்து இருக்கவேண்டும்.

        நகைகடைகள் நடத்தும் முதலாளி,ஜவுளிகடை,பேன்ஸி ஸ்டோர் போன்ற தொழில்களில் ஈடுபட்டு லாபம் பெறும் முதலாளிகள் சாதகத்திலும் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.

                   
 கொடுக்கல்,வாங்கல்,பைனான்ஸ்,நிதி நிறுவனங்கள் போன்றவை நடத்தி பொருள் ஈட்டுபவரின் சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும.
எதனையும் வித்தியாசமாக சிந்திக்கும் படைப்பாற்றல் மிக்கவர் எனில் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.

           காதல் உணர்வு,கலை உணர்வு,மாறுபட்ட சிந்தனை,,படைப்பாற்றல் போன்றவற்றிற்கு சுக்கிரனே காரகர் ஆவான்.பாவிகளால் சூழப்பட்ட சுக்கிரன் காம உணர்வு மிக்கவர்களாக்கி தடம் மாறக்கூடிய தன்மை,பெண்களால் அவமானம் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் சாதகத்தில் சுக்கிரன் பலவீனமடைந்து இருக்கவேண்டும்.

         கூடை முடைதல்,பாய் பின்னுதல்,எம்ப்ராய்டிங் போடுதல்,கோலம்போடுதல்,பெண்களின் கையில் மொகந்தி போடுதல் ,டைலரிங் மற்றும் கணிப்பொறி இயக்குதல் போன்ற செயல்களை கொண்டவர்கள் எனில் நிச்சயம் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
      97 151 89 647

        செல்
740 257 08 99
    97 151 89 647

                              
  அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
  M.Sc,MA,BEd
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்ச்சியாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot
   AstroRavichandran. blogspot. Com
AstroRavichandransevvai.blogspot. com
............

Monday 26 March 2018

சாதக கட்டத்தில் நான்காம் பாவம் தரும் நலமான பயன்கள்

நான்காம் பாவம் தரும் நலமான பயன்கள்.

                              


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 54 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

          ஒருவருடைய சாதகத்தில் இரண்டாவது கேந்திர ஸ்தானமாக இந்த  நான்காம் இடம் அமைகிறது.இயற்கை சுபர்கள் கேந்திரத்திற்கு அதிபதியாகி இந்த கேந்திர ஸ்தானத்தில் (1,4,7,10 ) அமரும்போது அவை "கேந்திராதிபத்திய தோஷத்தை தந்துவிடுவதால் அவை யோகங்களை தருவதற்கு பதிலாக தோஸங்களை தந்துவிடுகிறது.

        நாம் பொதுப்பலனாக நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலம் பெறுவது நல்லது என படித்திருப்போம்.

            உதாரணமாக தனுசு லக்கனத்திற்கு ஒன்று மற்றும் நான்காமிட அதிபதியான இயற்கை சுபரான குரு நான்காமிட கேந்திரத்தில் அமராமல்
இருத்தல் நலம்.

          ஒருவர் சாதகத்தில் நான்காமிடத்தில் பாவி தொடர்பின்றி நான்காமிட அதிபதி பலம் பெற்று சுபர் பார்வை பெறும் ஒருவருக்கு கல்வியால் மேன்மையை அடைய முடியும்.

            ஒருவருக்கு பெற்ற தாயால் சுகம் அடையும் யோகம் உள்ளதா ? என்பதையும் மற்றும் தாயின் கற்புநிலை பற்றியும் அறிந்து கொள்ள இப்பாவகம் உதவுகிறது.இதற்கு நான்காமிடத்தின் சந்திரனின் வலிமையையும் அறியவேண்டும்.

            நான்காமாதிபதி நீசம் ,பகை ,அஸ்தமனம் மற்றும் மறைவு ஸ்தானமேறி மாதுர்காரன் சந்திரனுடனும் அசயர்களான ராகு கேது சேர்க்கை தாய் அன்பு கடைசிவரை கிடைப்பது அரிது.அவ்வாறு உயிரோடு இருந்தாலும் பிணியோடு   இருக்க வாய்புண்டு.இவை அதன் தசை காலங்களில் உண்டாக்கும்.

          நான்காமிடத்தில் ராகு இருந்து  நான்காமாதிபதி சனி ,செவ்வாய் சேர்க்கை பெற்று மனதிற்காரகன் சநதிரனும் கெட்டுவிட்டால் தாயின்  கற்புநிலையில் பங்கம் உண்டாவதோடு தன் சுகமும் கெடும்.இதில் சுப கிரக பார்வை பெறின் பலன் மாறுபடும்.

        நான்காமிடத்தில் சனி ,செவ்வாய் சேர்க்கை பெறுவதும் ,சந்திரனுடன் ராகு ,கேது மற்றும் சனி சேர்க்கை கற்பு நிலையில் பங்கம் உண்டாகலாம்.இதில் நான்காம் அதிபதியின் தன்மை மற்றும் சுப கிரக பார்வை இவற்றை பொறுத்தும் பலன் மாறுபடும்.எனவே சனி ,செவ்வாய் சேர்க்கை பெற்ற எல்லா பெண்களும் மனதால் கெட்டவர்கள் எடுத்துக்கொள்ளகூடாது.

         இதேபோல சுக்கிரன்,செவ்வாய் சேர்க்கையும் காம மிகுதியை உண்டாக்கும்.வழி தவறி மற்றும் தகுதிக்கு கீழான நிலையில் உறவு கொள்ள ஆசையை உண்டாக்கும்.

           நான் சாதக ஆராய்சியில் ஈடுபடாத காலத்தில் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பல பெண்கள் தைரியமாக அடாவடியான செயலில் ஈடுபடுவதை பார்த்திருக்கிறேன்.எப்படி இந்த பெண்களுக்கு/ஆண்களுக்கு மன தைரியம் வந்தது என எண்ணிப்பார்த்ததுண்டு.

          .இப்பொழுதுதான் அவை அனைத்தும் இது போன்ற கிரகங்கள் சேர்க்கையால் உண்டான பலன் என்பதை தெளிவாக எனக்கு சோதிட ஆராய்சியில் ஈடுபட்டு அதே போன்ற சாதகங்களுக்கு பலன்கூற முற்பட்டதன் விளைவாக உணரமுடிந்தது.எல்லாம் கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்.

.         இதனால் சில முதுநிலை பெறியியல் போன்ற உயர் கல்வி படித்த மாணவிகள் கூட உடலியல் கவர்ச்சியால் கிரகங்கள் உண்டாக்கும் விளைவால் தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் குறைவான நபர்களோடு வீட்டைவிட்டு ஓடி போவதற்கு காரணமாகிறது.மேலும் அழகான மனைவி வீட்டில் இருந்தும் மனைவியைவிட எந்தவிதத்திலும் அழகில் ஈடுசெய்ய முடியாத நபரோடு தவறாக நடந்து மானபங்கம் உண்டாவதும் இந்த கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்.

          நான்காமிடத்தின் அதிபதியை பொறுத்தும் சுபர்பார்வை படும்போது பலனில் மாறுபட்டு குணவாதியாக/குணவானாக இருக்கலாம்.

         நான்காமிடத்தை பொறுத்து ஒருவருக்கு வண்டி வாகனயோகங்களையும் பார்க்கலாம்.நான்காமிடமும் ,வாகனகாரகன் சுக்கிரன் பகவானும் பலம் பெற்று சனி சம்பந்தம் பெறுவதை பொறுத்து வாகன யோகம் உண்டா ? என அறியலாம்.

          நான்காமிடத்தை பொறுத்து சொந்த வீடு உருவாகும் யோகத்தை அறியலாம்.நான்காமாதிபதி நீசம்,மறைவு,பகை மற்றும் அஸ்தமனம் பெற்று நான்காமிடத்தில் கேது மற்றும் மாந்தி இருப்பின் கோலுன்றிய ஒழுங்கான வீடு அவனுக்கு இல்லை எனலாம்.சிலர் சொந்த வீட்டில் வசிக்காமலே கடைசி வரை வாடகை வீட்டிலோ அல்லது ஒண்டு குடித்தனமாக இருப்பதற்கு நான்காமிடமே காரணமாகும்.

          அதேநேரத்தில் நான்காமிடம் பலம்பெற்று சுபர் பார்வை பெற்றவருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு.மேலும் நான்காமிட அதிபதியோடு எத்தனை கிரகம் தொடர்பு  பெறுகிறதோ அத்தனை வீடுகள் ஒருவருக்கு அமையும்.

        பொதுவாக நான்காமதிபதி பலவீனமாக பெற்றவர்கள் எவ்வளவதான் பணம் ஈட்டினாலும் அந்த சுகத்தை தான் அனுபவிக்க முடியாமல் யாரோ அனுபவிப்பார்கள்.

          அதேநேரத்தில் தான் சரியாக சாம்பாரிக்காவிட்டாலும் சுகாதிபதியான நான்காமாதிபதி பலம் பெற்றிருந்தால் அந்த கிரகங்களின் சேர்க்கையை பொறுத்து அடுத்தவர் வீட்டில் சொத்தில் சுகமாக  வாழும் யோகம் உண்டு.

        உதாரணமாக ஏழாமாதி சுகாதிபதியோடு  தொடர்பு பெறின் மனைவி வழி சொத்தால் சுகம் பெறலாம்.இது அவரவர் கிரகசேர்க்கையை பொறுத்து பலனில் மாறுபடலாம்.

          நான்காமாதிபதியும் ,பத்தாம் அதிபதியோடு தொடர்பு கொள்ள கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யலாம்.என்ன கோவில் கட்டி குடமுழுக்கு செய்யலாம் என்பதும் அவரவர் கிரகநிலையை பொறுத்தது.

        சிலர் பால் பசு மாடுகள் வைத்துக்கொள்வதும் இந்தபாவகத்தை பொறுத்தது.நான்கில் பாவிகள் தொடர்பும் மற்றும் நான்காமாதி ராகு ,கேது சேர்க்கை ஆடு,மாடு ஜீவசந்துகளை வளர்க்கும் யோகமில்லை.மாறாக சுபர் தொடர்பு பெறின் கால்நடைகள் வைத்திருக்கலாம்.

        தோட்டம் மற்றும் பயிர் நிலங்களை வைத்துக்கொள்ளும் (நன்செய்,புன்செய் நிலங்களை ) யோகமறிய இந்த பாவகமும்,பூமிக்காரன் செவ்வாயின் நிலையை பொறுத்துதான் முடிவு எடுக்கப்படவேண்டும்.

          விவசாய நிலங்கள் வாங்கலமா? இல்லை       வீடு கட்டும் நிலங்களை வாங்கலமா ? என்பதையும் இந்த பாவகத்தில்தான் ஆராய்சி செய்யவேண்டியதாய் உள்ளது.

         சிலர் மந்திர மாயஜால வித்தைகளில் ஈடுபட்டு பணம் ஈட்டுவதற்கு இந்த பாவகத்தையும்,ராகு பகவானையின் நிலை அறியவேண்டும்.நான்காமிடத்தில் ராகு தொடர்பு இருப்பவர்களுக்கு இந்த அமைப்பு உருவாகலாம்.

         சிலர் குதிரை வளர்ப்பதும் ,குதிரை சவாரி செய்யும் யோகமும் இப்பாவகமே காரணமாகும்.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                  
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
           M.SC,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்சி மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
Email
  masterastroravi@gmail.com

Friday 23 March 2018

சாதக கட்டத்தில் மூன்றாம் பாவம் எதை ஆய்ந்தறிய உதவுகிறது ?

சாதக கட்டத்தில் மூன்றாம் பாவம் எதை ஆராய்ந்தறிய உதவுகிறது ?


                                                 
                          
கிரகங்கங்கள் படுத்தும் பாடு- ( 53 )

      ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு மனிதன்  கீர்த்தி மற்றும் புகழை அடைவானா ?  அல்லது அடைந்துள்ளானா ?என்பதை அறிய இந்த மூன்றாம் ஸ்தானம் உதவுகிறது.
     
           இந்த மூன்றாம் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற ஸ்தானங்களை பெற்று  வலுப்பெற்று சுபர் பார்வை பெற்று அதன் தசை நடைபெறும் காலங்களில் பெயரும் புகழும் அடையவைக்கிறது.

           ஒருவருடைய  உடன்பிறந்த சகோதர/சகோதரிகளின் நிலைகளை பற்றி அறிந்துகொள்ள இந்த மூன்றாம் ஸ்தானத்திலிருந்து அறியலாம்.

       மூன்றாம் ஸ்தானத்திலும் மற்றும் அதன் அதிபதி ஆகிய கிரகங்கள் சுபகிரகங்களாக இருந்து உச்சம் ஆட்சி பெறும்போது நல்ல உடன்பிறந்த சகோதரர்களை பெறலாம்.

         சிலர் உடன்பிறந்த சகோதரர்களை பெறாமல் இருப்பதற்கும்/அப்படியே பெற்றிருந்தாலும் அவர்களால் எவ்வித பலனும் பெறாமல் இருப்பதற்கு மூன்றாம் இடத்தில் அசயர்களான ராகு ,கேது இருந்து அதன் அதிபதி பலமிழப்பதும் காரணமாகும்.

          மூன்றாம் அதிபதியானது ஆறு மட்டும் எட்டுக்குடையவர்களுடன் தொடர்புபெறும்போது உடன் பிறந்தவர்களே எதிரியாகிவிடுகிறார்கள்.

                           

         ஒருவர் எழுத்து துறையில் புகழ்பெறவேண்டுமாயின் இந்த மூன்றாம் ஸ்தானம் முக்கியமானது.

         மூன்றாம் ஸ்தானத்தில் சகோதரகாரகன் செவ்வாய் இருந்தால் "காரகபாவநாஸ்தியை "உண்டாக்குகிறது.இது ஒரு சகோதரதோஷத்தை உண்டுபண்ணுகிறது.

            மூன்றாமிடம் என்பது ஒருவருக்கு புகழை ஈட்டி தரும் ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் கலைக்காரகன் சுக்கிரன் இருந்து பலம்பெறும்போது ஒருவரை ஓவியம்,ஆடல் மற்றும் பாடல் போன்ற கலைசார்ந்த விஷயங்களில் ஈடுபடவைக்கும்.

            மூன்றாம் இடத்தில் புதன் இருப்பின் எழுத்து,கணிதம் மற்றும் சோதிடம் சார்ந்த துறைகளில் நாட்டத்தை உண்டாக்கும்.

            மூன்றாமிட சூரியன் துணிச்சலை உண்டாக்கும்.சாதகர் வீரியமிக்கவராகவும் பலமிக்கவராகவும் இருப்பர்.

       இந்த மூன்றாமிட அதிபதி ஆறு,எட்டு  மற்றும் பணிரெண்டாமிடங்களில் அமர்ந்தால் அதாவது மறைவுஸ்தானத்தில்  அமர்ந்தால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்"எனும் அடிப்படையில் அதன் தசைகாலங்களில் யோகத்தை அளிக்கும்.

                                  

         இதுவரை நான் கூறி வந்தது     பொதுப்பலனே ஆகும்.அவரவர் சாதகத்தை பொறுத்து மாறுபடும்.
நான் மூன்றாம் அதிபதி பலப்படுவது கீர்த்தி ,புகழ் மற்றும் சகோதரஸ்தானத்திற்கு நல்லது என்றாலும் ஒரு சில ராசிகளை பொறுத்து இந்த கருத்து மாறுபடும்.

           மேஷ லக்கனகாரர்களுக்கு மூன்றுக்குரிய புதன் பகவானே ஆறாம் இடத்திற்கும் அதிபதியாகவும் வருவதால் ஆட்சி மற்றும் உச்சம் போன்ற ஸ்தானம்பெற்று இருப்பது நல்லதல்ல. இந்த ராசிகாரர்களுக்கு மூன்றுக்குரியவர் பலன்பெறக்கூடாது.அவ்வாறு பலம்பெறும்போது கீர்த்தி மற்றும் புகழை தந்தாலும் எதிரியாலோ அல்லது கடன் மற்றும் நோயால் பாதிப்பை உண்டாக்கும்.

            இதேபோல துலாம் லக்கனத்தாருக்கும் மூன்று மற்றும் ஆறுக்குடையவராக இயற்கை சுபரான குருவாக இருந்தாலும் ஆறாம் இடத்தில் ஆட்சியோ ,பத்தாம் இடமான கடகத்தில் உச்சமோ பெறுதல் நல்லதல்ல.எனவே இந்த ராசிக்காரர்களுக்கு மூன்றாமிட பலம்பெறுதல் நல்லதல்ல.
கன்னி லக்கனத்திற்கும்,  மூன்றுக்குடைய சுக்கிரபகவானே அட்டமாதியாக வருவதால் சுக்கிரன் பலம் பெறாமல் இருத்தல் நல்லது.

          மூன்றாம் இடம் கீர்த்தி மற்றும் புகழை தரும் என்பது உண்மைதான் என்றாலும் அவையே இன்னொரு ஸ்தானத்திற்கு ஆதிபத்தியமாக வரும்போது அவை கெட்ட ஸ்தான (6-ம் இடம்) ஆதிபத்தியமாக வரும்போது அவை சார்ந்த கெடுதலையும் தரும் என்பதால் நாம் பொதுப்பலனான மூன்றாம் இடம் பலம் பெறவேண்டும் என்ற விதிவிலக்கிலிருந்து (சிறப்பு காரணம்) சற்று மாறுபட வேண்டியுள்ளது.எனவே இது போன்ற அமைப்பை பெற்றவர்களுக்கு மூன்றாம் இடம் பலம் பெறாமல் இருத்தல் நலம்.

      இதேபோல ரிஷப ராசிக்கு மூன்றாம் இடம்( ஸ்திர ராசிக்கு -3,8 ஆம் அதிபதி மாரகஸ்தானம்) மாரகஸ்தானமாகவும் வருவதால் அந்த திசை நடைபெறும் காலங்களில் மாரகத்திற்கு ஈடான பாதகங்களை தரும் என்பதால் இந்த ராசிக்கும் பொதுவிதியிலிருந்து மாறுபடவேண்டும்.

                              

         மீன ராசிக்கு சுக்கிர பகவான் மூன்றாமிட ஆதிபத்தியத்தோடு அட்டமாதிபத்திய ஆதிக்கம் பெற்றிருப்பதால் சுக்கிர பகவான் பலம் பெறாமல் இருத்தல் ( 3-ம் பாவம்) நலம்.

           கடக ராசிக்கு புதன் பகவான் மூன்று மற்றும் பணிரெண்டாம் இட ஆதிபத்தியம் ஆகும்.மறைவு ஸ்தானங்களில் மூன்று மற்றும் பணிரெண்டாம் நன்மையையே அதிகம் தரும் என்பதால் இங்கு புதன் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது கீர்த்தி மற்றும் புகழோடு வெளிநாடு செல்லும்யோகம் ,சயன சுகத்தை தரும்.

        எனவே மூன்றாம் இடத்திற்கு உரிய கிரகத்தின் மற்றொரு ஸ்தானம் மறைவுஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட ஆதிபத்தியமோ அல்லது பாதக,மாரகஸ்தானமோ பெறும் நிலைவரின் அப்பொழுது மூன்றாமிடம் பலப்படாமல் இருத்தல் நலம்.

  நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                   

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்.

வாட்ஸ் அப்
  97 151 89 647

செல் : 740 257 08 99
             97 151 89 647
My email
  masterastroravi@gmail.com

My blogspot
   AstroRavichandran. blogspot. Com
    AstroRavichandransevvai.blogspot. com

............

Wednesday 14 March 2018

சாதகம் பார்க்க வருபவர்களுக்கான சிறப்பு பதிவு

சாதகம் பார்க்க வருபவர்களுக்கான சிறப்பு  பதிவு


                         
கிரகங்கள் படுத்தும் பாடு-( 197 )

செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

           சாதகம்  பார்க்க வரும் அன்பர்களுக்காக இந்த பதிவை செலவிடலாம் என என் மனதில் எழுந்ததன் விளைவாக உங்களோடு என் அறிவுக்கு எட்டிய விஷயங்களை உற்ற நண்பனாக உங்களோடு பகிர ஆரம்பிக்கிறேன்.

        சோதிடம் என்பது குறி கூறும் வித்தையல்ல. இது மை வைத்துக்கொண்டு மந்திர வித்தை செய்யும் இடமல்ல. இது மனித வாழ்வில் நடக்ககூடிய விஷயங்களை
கோளாராய்ச்சி செய்து தமது சோதிட ஞானத்தோடு தெய்வ அனுகூலத்தின் உதவியுடன் முற்றிலும் கணித அறிவோடு தமக்கு நடந்த , நடக்கின்ற மற்றும் நடக்கக்கூடிய விஷயங்களை காரண காரியத்தோடு விளக்கும் அறிவியல் ஆகும்.

          இதில் தவறேதும் நடப்பின் அது சோதிடரின் குறைவான ஞானமும்,அரைகுறை கணித அறிவாக இருக்கலாம்.பிறந்த நேரம் சரியாக இல்லாதபட்சத்திலும் தரக்கூடிய சோதிட பலன் தவறாக  வாய்ப்பு உண்டு.

                               

        சாதகம்  பார்க்கவரும் நபர்கள் முதலில் கேட்கும் கேள்வி உடன்பிறப்புகள்,சாதகரின் அம்மா மற்றும் அப்பாவோடு பிறந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய கேள்விதான் முதலானதாக இருக்கிறது.

           இந்த கேள்விக்கு ஒரு சோதிடர் சரியாக பதில் வழங்கி விட்டால் பிறகு எந்த பலனையும் சரியாக சொல்லாவிட்டாலும் அந்த சோதிடர் தலை சிறந்த சோதிடராக கொடிகட்டி பறக்கிறார்.

       உடன் பிறந்த பிறப்புகளை சரியாக கணித்து கூறலாம் என்றால் அதில் சில நடைமுறை சிக்கல் அதாவது மறைமுக விஷயங்கள் பல உள்ளது.

         ஒரு பிறந்த குழந்தையின் உடன்பிறப்பு பற்றி தம்பதிகள் இருவரும் இணைந்து வந்து சாதகம் பார்க்கும்போது அவர்கள் சோதிடரிடம் "ஐயா எத்தனை குழந்தை பிறந்து உள்ளது " என வினா எழுப்புவது உண்டு.அவ்வாறு அவர்கள்  கேட்ட வினாவிற்கு விடையாக சோதிடர்  "இரண்டு ஆண்,ஒரு பெண் இருக்கலாம்" என கூறும்போது இல்லை எங்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண்தானே உள்ளது என எதிர்வாதம் புரியும் பெண்ணிடம் இன்றைய அறிவியல் உலகில் இன்னொரு குழந்தை பிறப்பதற்குள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டாய்   அதனால்தான் இருக்கும் என உண்மையை கூறாமல் சொல்லி மழுப்ப வேண்டியுள்ளது.

      ( இந்த பையனின் தந்தைக்கு இரண்டு ஆண் குழந்தை என்பது உண்மை .ஒரு ஆண் குழந்தை மனைவியோடும்,மற்றோரு ஆண் குழந்தை வேறொரு பெண்ணோடு கொண்ட தகாத உறவால் உருவாகியிருககும் வாய்ப்பு உண்டு
இதை அந்த பெண்ணிடம் கூறி வம்புமூட்டிவிடக்கூடாது.இது சோதிட ரகசியம்.இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளது எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச முடியாது.)


                                 

      இன்றைய பல கிராம சோதிடர்கள் பலருக்கு இது பிறப்பு எண்ணிக்கை சரியாக சொல்லிவிட்டால் கூட்டம் கலைகட்டி நல்ல வசூல் வேட்டை ஆரம்பித்துவிடுகிறது.இந்த பிறப்பு வளர்ப்பு பற்றி கூற சில தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் அறியாததே காரணம் ஆகும்.

        இன்னும் வரன் தேடும் சிலர் குறி கேட்பதுபோல் பெண் வீட்டிற்கு முன் என்ன மரம் இருக்கும் ? ,வீடு எந்த திசையில் இருக்கும ?   ,பெண்ணுடன் பிறந்த உடன்பிறப்புகள் எத்தனை ?இதுபோன்ற பல கேள்விகள் கேட்டு இதற்கு பல சோதிடர்கள் பலவிதமான பதில்களை கூறியதும் என்ன சோதிடர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க என அலட்டிக்கொள்வதை பார்க்கிறோம்.

         வரன்தேடும பெற்றோர்கள் தனக்கு வரக்கூடிய மருமகள்/மருமகன் அறிவானவளா?நல்ல கற்புநிலை உடையவளா?  உள்ளூரா அல்லது வெளியூரா?குடும்பத்தை அனுசரித்து நடப்பாளா ? எப்பொழுது கல்யான நேரம் வரும் ? இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கேள்விகளுகு சோதிடத்தில் விடையளிக்கமுடியும்.

       இதை தவிர்த்து சோதிடரை ஒரு சாமியார்போல் நினைத்து கேள்விகேட்காதீர்கள்.

                             

        மேலும் சாதகத்தில் சாதகமான விஷயங்களை மட்டும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.பாதகமான விஷயங்களையும் சொல்லும்போது ஏற்றுக்கொண்டு இது விதிப்பயன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார்போல் மனதை பக்குவப்படுத்தி வாழ பழகுங்கள்.அதைவிட்டு விட்டு நிறை குறை இரண்டையும் கூறும் சோதிடரை தவிர்க்காதீர்கள்.

        எனக்குதெரிந்த சோதிட நண்பர் ஒருவர் கூறியது.ஜாதக பொருத்தம் பார்க்க வருபவர்கள் பொருத்தம் இருக்கிறது என்றால் மகிழ்சியாக கேட்கிற தொகையை தருகிறார்கள் . சாதக பொருத்தம் இல்லையென்றால் உரிய தொகைகூட தரமறுக்கிறார்கள் என வருததப்பட்டார்.(ஆதலால் பொருத்தம் இல்லாததற்குக்கு  கூட பொருத்தம் உள்ளது என கூற வாய்ப்பிருக்கிறது.).
ஒருவருக்கு பொருத்தம் இல்லை என கூறி உங்கள் பெண்ணைக்காப்பாற்றிய பெறும் பேறு அந்த சோதிடருக்கு உண்டு.  நிச்சயம் இதுபோன்ற நேரங்களில் தட்சணை தர யோசிக்கும்போது தவறு நடைபெற வாய்ப்பு உள்ளது.

      எனவே ஜாதகம் பார்க்க செல்லும் அன்பர்கள் கீழ்கண்டவை போன்ற நல்ல கேள்விகேட்டு பயன்பெறுங்கள்.

1)குழந்தையின் உடல்நலம்

2)அவர்களது கல்விநிலை

3)பொருளாதர நிலைஜ, வேலைவாய்ப்பு

4)உணவு ,உடை,உறைவிடம் பற்றிய நிலை

5)குழந்தையின் எதிர்காலம்

6)பெற்றோர்களின் நிலை

        மேற்கண்ட ஆக்கப்பூர்வமான கேள்விகளோடு சாதகம் பார்த்து பயனடையுங்கள்.

                                

             எல்லோருடைய சாதகங்களிலும் நிறைகளும்,குறைகளும் கலந்தே உள்ளது.

      சிலருக்கு தனமிருந்தும்,சுகமிருந்தும்,
திருமணம் நடந்தும் கொஞ்சி விளையாட குழந்தையில்லாமல் போய்விடுகிறது.(2,4,7 -மிடம் பலம் பெற்றிருந்தாலும்
  5-மிடத்தில் பாவிகள் சூழ்ந்து,ஐந்தாமிட அதிபதியும்,குருவும் நீசம்,பகை பெற்று பாதிக்கப்படுதல்).

        சிலருக்கு நிறைய குழந்தைகளையும்,சுகத்தை கொடுத்திருந்தாலும் அள்ளிதின்ன பருக்கையில்லாமல் கஷ்டம்( 5,4 ம் இடம் பலமடைந்தாலும்,தனஸ்தானம் பாதிக்கப்படல்).

பலருக்கு அழகானவர்களாகவும்,
கற்றவர்களாகவும் மற்றும் பண்பானவர்களாக இருந்தும் ராட்சசி போன்ற மனைவி அல்லது குணம் குறைந்த அழகற்ற மனைவி அமைந்துவிடுகிறது(ஏழாமிடம் கெட்டு,அதன் அதிபதி பாவிகளுடன் சேரல்).

                                 

               ஒரு சிலர் ஒரு பைசாகூட சம்பாரிக்காமல் யாரோட காசில் சுகமாக வாழ்வார்கள்( 2-மிடம் கெட்டு 4-மிடம் ஆட்சி உச்சம் சுபர் பார்வை)

        சிலர் இவர்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க யாரோ சுகம் அணுபவிப்பார்கள்( 2-மிடம் ஆட்சி உச்சம் சுபர் சாரம் மற்றும் பார்வை பெற்று 4-ம் இடம் நீசம் மற்றும் மறைவு ஸ்தானம் பெறல்.)

       சிலர் எவ்வளவு லட்சக்கணக்கில் சம்பாரித்தாலும் கடைசியில் கணக்கு பார்த்தால் எல்லாம் விரய செலவாகி கடன்காரராகும் நிலை (2-ம் அதிபதி ஆட்சி உச்சம் அது போல் 6-மற்றும் 12 -ம் அதிபதியும் வலுப்பெற்றதால்)

        சிலர் ஜாதகத்தில் அறிவுக்கூரிய குரு,புதன் வலுப்பெற்றதால் படித்து அறிவாளியாக இருந்தாலும் நல்ல தசை புத்தி உரிய நேரத்தில் நடக்காததால் அரசு போட்டித்தேர்வில் தோல்வியுற்று முட்டாளாகிவிடும் நிலை.

        சிலருக்கு குரு,புதன் போன்ற கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் அரசு கிரகமான சூரியன் வலுப்பெறுவதோடு உரிய நேரத்தில் நல்ல தசையும் நடைபெற்றதால்  அரசு போட்டித்தேர்வில் வெற்றிபெற்று அறிவாளி என சமுகம் பாராட்டும் நிலை.

                              

        சிலருக்கு எவ்வித தொழில்நுணுக்கம் தெரிந்தும் தொழிலில் தோல்வியுற்று கடன்காரர் ஆகும் நிலை( சரியான தசை நடைபெறாததாலும்,முயற்சிஸ்தானம் பலமுள்ளதாக இருந்தாலும் (3-மிடம்),தொழில் ஸ்தானம் கெடல்(10-மிடம்) )

        படிக்காதவனுக்கு படித்த அறிவுள்ள மனைவி(2 மற்றும்4-மிடம் கெட்டு இருந்தாலும் 7-மிடம் ஆட்சி உச்சம் சுபர் பார்வை)

               இதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிறைகளையும் ஏதாவது ஒரு குறைகளையும் இறைவன் வைத்து அதை அடையும் முயற்சியில் மனிதனை உட்படுத்தி வாழ்வை ருசியுள்ளதாக செய்கிறான்.

                  எனவே பற்றற்று இறைவன் பாதம் பணிந்தோர்க்கு இவை அனைத்தும் ஒரு வேடிக்கையாக, உலக,நாடகத்தின் ஒரு கதா பாத்திரமாக தெரியும்.

          எனவே வாழ்க்கை என்பது ஓரு கலை.அதை அழகாக ஒவ்வொறு கணமும் ரசிப்போம்.இந்த வாழ்க்கை கலை நமக்கு இன்ன பணி என்பதை அறியும் கலையே சோதிடம் என்ற நோக்கோடு சோதிடத்தை அணுகுவோம்.எனவே சோதிடர்களை பிரச்சினையை தீர்த்து வைக்கும் மந்திரவாதியாக எண்ணி கேள்விகேட்காமல் தனக்கு சாதகமாக அமையவில்லை என்பதால் சோதிட துறையை சபிக்காமல் வாழ்வோம்.இது எதிர்காலத்தில் எல்லோரும் அறிந்த கலையாக இளந்தலைமுறையை மாற்றுவதே எம்போன்ற சோதிடர்களின் உன்னத பணியாகும்.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு குல தொழிலாக இருந்தது.இன்று எல்லா குலத்தவரிடமும் பரவி காணப்படுகிறது.

                அரிய பல கலைகள் நம்மிடைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்தாலும்,இனி இருக்கின்ற கலைகளை தொழில்நுட்ப உதவியோடு உலகறியச்செய்வோம்.
நீங்களும் இம்முயற்சியில் பங்குபெற உளப்பூர்வமான மனமிருப்பின் இப்பதிவை பகிர்ந்து பலர் அறிய செய்யுங்கள்.

நன்றி !

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்  M.Sc, MA ,BEd
சோதிடர்&ஆசிரியர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட  ஆராய்சி & சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
வாட்ஸ் ஆ ப் : 97 151 89 647
செல் :
               740 257 08 99
                         9715189647

Friday 9 March 2018

சூரிய பகவானின் சூட்சும உண்மைகள்.

சூரிய பகவானின் சூட்சும உண்மைகள்.


                                 


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 195 )

      சாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்தைக்கொண்டே அவன் பிறந்த தமிழ் மாதத்தினை எளிமையாக கண்டறிந்து விடலாம்.சூரிய பகவான் ஒரு ராசிக்கு சுமாராக 30 நாட்கள
( ஒரு மாதம் ) வீதம் பணிரெண்டு ராசிகளை கடக்க பணிரெண்டு மாதம் அதாவது ஒரு வருடம் ஆகிறது.

        சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தவரது சாதக கட்டத்தினை எடுத்து பார்த்தால்  மேஷராசியில் சூரியன் உச்சம் பெற்று காணப்படுவர்.இதேபோல பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மீன வீட்டில் சூரியன் இருக்கும்.

      சூரியன் இருக்கும் வீட்டினை சந்திரன் சென்று ஒரு ராசியில் சேரும்போது அமாவாசை உருவாகிறது.இதிலிருந்து சந்திர பகவான் நகர்ந்து சூரியனுக்கு நேர்எதிர் சந்திரன் வரும் காலம் பொளர்ணமி ஆகும்.
சூரியனை விட்டு விலகி நேர் எதிர் வரை( சூரியனுக்கு ஏழாம் வீடு) சந்திரன் சஞ்சரிக்கும் காலம் வளர்பிறை காலம் ஆகும்.

      சூரிய பகவானுக்கு ஏழாம் வீட்டிலிருந்து சூரிய பகவான் இருக்கும் வீட்டை நோக்கி நகரும் காலம் தேய்பிறை காலம் எனலாம்.

                             


            சந்திரன் ஒரு ராசியில் 21/4 நாள்கள் சஞ்சாரம் செய்யும். சூரியன் வாசம் செய்யும் இரண்டாவது வீட்டிலிருந்து ஆறாவது வீடு வரை சந்திரன் இருப்பின் அவை வளர்பிறை சந்திரன் ஆகும். இதேபோல எட்டாம் வீட்டிலிருந்து பணிரெண்டாம் வீடு வரை சஞ்சரிக்கும் காலத்தில் உள்ள சந்திரனை தேய்பிறை சந்திரன் ஆகும்.

             சூரியன் ஒரு ஆண்டிற்கு இரு வேறு விதமான சுழற்சிகளை மேற்கொள்கிறது.வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் காலம் "தட்சிணாயனம்"என்றும்,தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலம் " உத்தராயணம் " என்றும் அழைக்கப்படுகிறது.

                     தட்சிணாயணம்

                   சூரியபகவான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது. இச்சுழற்சி ஆடி மாதம் தொடங்கி ஆவணி்,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை மாதங்களை தொடர்ந்து மார்கழி மாதத்தில் நிறைவு பெறுகிறது.இந்த காலம் தேவர்களுக்கு ஓர் இரவு பொழுதாக கருதப்படுகிறது. 

                    இக்காலங்களில் சூரியனின் கதிர் வீச்சு பகலில் சற்று குறைவாக இருக்கும். இரவு காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும்.


                                   


                           உத்தராயணம்

                 தை,மாசி,பங்குனி,சித்திரை ,வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் சூரியபகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது.இக்காலம் தேவர்களுக்கு ஓர் பகல் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் இறப்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பது ஓர் ஐதீகம் ஆகும்.

                     சூரியனின் ஆட்சி வீடு-சிம்மம் ஆகும்.
உச்சவீடு-மேஷம் ஆகும்.சூரியன் மேஷ வீட்டில் இருக்கும் போது அது சித்திரை மாதம் என்பதால்தான் அக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி கோடை காலமாக உள்ளது.

                  அதேநேரத்தில் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் வீட்டிற்கு வருகிறார்.அது சூரியனுக்கு நீச வீடு என்பதால் வெயிலின் தாக்கம் அம்மாதத்தில் குறைவான குளிர்காலமாக உள்ளது.

                              

                  சூரியனுக்கு குரு,சந்திரன், செவ்வாய் நண்பர்கள் ஆவார்.சுக்கிரன்,சனி,ராகு,கேது ஆகியோர் பகை கிரகங்கள் ஆகும்.
  கோள்களில் முதன்மையானவர் சூரியபகவான் ஆவார்.சூரியன் இன்றி எந்த ஜீவராசிகளும் உயிர் வாழ முடியாது.

               தாவரங்கள எல்லா உயிர்களும்  உயிர் வாழ தேவையான உணவு தயாரித்தல் நிகழ்ச்சிக்கு சூரியன்தான் காரணகர்த்தா ஆகும். ஒளிச்சேர்க்கை மூலமாக உணவு தயாரிக்க சூரியன் இன்றி இயலாது.

         ஆரம்ப காலத்தில் பூமியை மையமாக கொண்டு கோள்கள் சுற்றுகிறது எனும் "புவி மையக்கோட்பாடு " நிலவி வந்தது.கெப்ளர்,கோபர் நிக்கஸ் போன்றவர்களின் வருகைக்கு பின்னர் கோள்கள் சூரியனை மையமாக கொண்டு நீள் வட்டத்தில் சுற்றிவருகிறது.இதற்கு "சூரியகுடும்பம்" என அழைத்தனர்.

                                    

நிறம் - COLOUR ;  சிவப்பு

குணம் ;     குரூரம்

வடிவம்  ; சமன்

திசை ;  கிழக்கு

ரத்தினம்  : மாணிக்கம்

தான்யம்  ; கோதுமை

உலோகம் ;  தாமிரம்

புஷ்பம் ; செந்தாமரை

வாகனம்  :தேர்

சுவை       ; காரம்

தேவதை  ; சிவன்

பாஷை  ; சமஷ்கிருதம்

ஜாதி ; சத்திரியன்

பிணி  ;  பித்தம்

திசை ; கிழக்கு

கிழமை ; ஞாயிறு

ஷேத்திரம் ;  ஆடுதுறை

திசை அளவு ; ஆறு ஆண்டுகள்

நட்சத்திரங்கள் ;     

       கார்த்திகை,உத்த்திரம்,உத்திராடம்.

சூரியனின் வேறு பெயர்கள் ;-

         திக்கறியோன்,தினகரன்,பகலோன்,
வெய்யோன்,பானு,மார்த்தாண்டன்,அருக்கன்,உதயன்,என்சூழ்,ரவி,பரிதி,
கோளரசன்,ஆதவன், ஞாயிறு, அரஉண்ஊர்தி,அரிபுண்டரியன்,
வெங்கதிர்,செங்கதிர்,பாஸ்கரன் முதலியன.


                                 

சூரியனின் அஸ்தங்க காலம்


            சூரியன் தன்னை நெருங்கும் கிரகங்களை பலம் இழக்க செய்கிறது.இதனைதான் "அஸ்தங்கம்" என அழைக்கப்படுகிறது.
சூரியனை 12 பாகைக்குள் சந்திரன் அஸ்தங்கம் அடைகிறது.இதனை அமாவாசை காலம் எனலாம்.

         சூரியனை 17 பாகைக்குள் சந்திக்கும் செவ்வாய் அஸ்தங்கம் அடைகிறது.இதனால் செவ்வாய் பகவான் தரக்கூடிய காரக மற்றும் ஸ்தான பலன்கள் பாதிக்கப்படுகிறது.

        சூரியனை 8 பாகைக்குள் இணையும் சுக்கிரனும்,15 பாகைக்குள் சூரியனுடன் இணையும் சனி பகவானும் அஸ்தங்கம் அடைகிறது.

         இவ்வாறு எல்லா கிரகங்களையும் தனனுடன் குறிப்பிட்ட பாகைக்குள் இணையும்போது அஸ்தங்கம் அடையசெய்யும் சூரியன் ராகு பகவான் உடன் மட்டும் இணையும் போது தனது பலத்தினை இழக்கிறது."வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் இருப்பான் " எனும் பழமொழிக்கு ஏற்ப சூரியன் தன் பலத்தினை அரவுகளுடன் இழக்கிறது.

                             

சூரியன் தரும் யோக பலயோகம்


                1) சுபவேசி யோகம்


          சூரிய பகவானுக்கு இரண்டாம் வீட்டில் சுப கிரகம் இருப்பதால் உருவாகும் யோகம் ஆகும்.இதனால் பெயர்,புகழ்,பெருமை,செல்வாக்கு உண்டாகும்.

                 2)  சுபவாசி யோகம்


            சூரிய பகவானுக்கு இரண்டாம் வீட்டில் சுபகிரகம் இருப்பதால் உருவாகிறது.இதனால் எழுத்தாற்றல்,பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.

                3) உபயசரி யோகம்


              சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருப்பது ஆகும்.சுகவாழ்வு,செல்வாக்கு உண்டாகும்.

               4) பாபவேசி யோகம்


           சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் அசுப கிரகம் இருப்பது ஆகும்.இதனால் சாதகர் பலவித இன்னல்களை பெறக்கூடும்.

  நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ்அப்
        
      97 151 89 647

   செல்
                        740 257 08 99
                                  97 151 89 647

                                         
  அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA, BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran.blogspot. in

Thursday 8 March 2018

நிழல் கிரகங்கள் தரும் நிலைத்த யோகங்கள்

நிழல் கிரகங்கள் தரும் நிலைத்த யோகங்கள்.


                                                                            
                                                         

                                                         கிரகங்கள் படுத்தும் பாடு- ( 50 )
                                         செவ்வாய்பட்டி   ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!


                       கிரகங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் .இந்த ஐம்பதாம் பதிவில்  " #நிழல்கிரகங்களான ராகு பகவான் மற்றும் கேது பகவானால் உண்டாகும் யோகங்களை பார்ப்போம்.

                         வான்புகழ் கொண்ட வள்ளுவர் தமது திருக்குறளில்
"அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" -என தமது குறட்பாவில் அழகுபட எடுத்துரைப்பார்.

                  எனவே லொளகீக உலகிற்கு (இவ்வுலகம்) தேவையான பொருளை தருவதில் முன்னிலை வகிப்பது #ராகுபகவான் .இதேபோல அருள் உலகைத் தருவதில் (அவ்வுலகம் ) முக்கிய வகிப்பது #கேதுபகவான் ஆவார்.

            சாய கிரகங்கள் என்றும் நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படும் ராகு கேதுக்கள் ஒருவரது ஊழ்வினை பயனை எடுத்து விளக்கும் கர்மாவின் நாயகர்கள் ஆவார்.

             மனித வாழ்வில் யோகங்களை பெறுவதில் முற்பிறவியில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்றார்போலதான் நவக்கிரகங்கள் யோகங்களை நமக்கு வாரிவழங்குகிறது.எனவேதான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அவர்கள் "ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்"என அழகுபட கூறியிருப்பார்.

                                                                      


                                                         

                            ஸ்ரீகேதுபகவான்

                                      ஒவ்வொரு  மானிட உயிரிலும் தெய்வீக தன்மையும்,சாத்தானின் ஆட்டமும் அடங்கியிருக்கிறது.
இதில் ஒருவருக்கு தெய்வீக தன்மையை முழுமையாகவும்,முறையாகவும் வெளிப்படுத்தவும்,தூய்மையான முறையில் அதன் நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,பலருக்கு நன்முறையில் வழிகாட்டி ஆன்மீக பாதையில் அழைத்து செல்லும் ஞானகுருவாக விளங்கவும் #கேதுபகவானின் பங்கு அளப்பரியது ஆகும்.

                                  ஒருவருக்கு லக்கனத்தில் கேது பகவான் அமரும்போது  எதையும் என்ன நடக்கப் போகிறது  முன்பே யூகிக்கும் தன்மையை ஒருவருக்கு வழங்குகிறது.

                               வாக்குஸ்தானங்களில் கேது பகவான் அமரும்போது வாக்கு பலிக்கிறது.சிலரை அருள் வாக்கு வழங்க செய்கிறது.ஒரு சிலரை புதன் பகவானும் பலப்பட்டிருக்கும் பட்சத்தில் புகழ்பெற்ற சோதிடராக ஒருவரை மாற்றிவிடுகிறது. 

                       மூன்றாம் இடத்தில் அமரும் கேதுபகவான் சகோதர தோஷத்தை தருகிறது.மூன்றாம் இடத்தில் உள்ள கேதுபகவான் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும்,எழுதுவதிலும் ஆர்வம் உருவாகிறது.
   நான்காம் இடத்தில் உள்ள கேதுபகவான் கல்வி ஞானத்தை வழங்குகிறது.நான்காம் இடத்தில் கேதுபகவான் உடன் மாந்தி சேர்ந்து நான்கம் இடத்ததிபதியும் கெட்டுவிட்டில் குடியிருக்க சொந்த வீடு இல்லை.

                        ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமரும்போது வேத நூல்களை ஆகம விதிப்படி கற்கும் உயர்கல்வி ஞானத்தை அளிக்கிறது.
  ஆறாமிடத்தில் உள்ள கேதுபகவான் எதிரிக்கும் பிடிக்ககூடிய நபராக திகழ்வர்.

                        ஏழாம் இடத்தில் உள்ள கேதுபகவான் களத்திரதோஷத்தினை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.

                      எட்டாம் இடத்தில் உள்ள கேதுபகவான் வம்பு,வழக்கு பிரச்சினைகள்,விஷபயம் போன்றவை தருவார்.

                      ஒன்பதாம் இடத்தில் உள்ள கேது பகவான் தந்தை வழி உறவுகளுக்கும்,சொத்தஇ ஆதரவும் கிடைப்பதில் சிக்கலை உண்டாக்குகிறார்.
பத்தாம் இடத்தில் உள்ள கேதுபகவான் ஆனமீக வாழ்வினை தருவார்.எலக்ட்ரிக்கல் ,மெடிக்கல்,மருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட வைக்கும்.

                    பதினோறம் இடம் உபஜெயஸ்தானம் என்பதால் சிறப்பினை தருவார்.

                       பணிரெண்டாமிடத்தில் அமையும் கேதுபகவான் ஒருவரை இளவயதில் பலவிதமான இன்னல்களை தந்து ,அந்த கஷ்டமான நேரங்களில் உறவுகளை பற்றியும்,வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன் மறுபிறப்பற்ற முக்திநிலையை ஒருவருக்கு வழங்குகிறது.

                                    ஸ்ரீராகுபகவான்


                                                                              
                          ஒருவன் உலகியல் வாழ்வில் உடலியல் இன்பங்களை அனுபவிப்பதற்கும்,அரசியலில் அதிகாரம் பெறுவதற்கும்,அரசாங்கத்தில் உயரிய பதவி வகிப்பதற்கும்,அயல்நாட்டு ஆதாயம் பெறுவதற்கும்,பங்குசந்தையில் ஈடுபட்டு பலன்பெறவும்,மாந்தீரிக செயலில் ஈடுபடவும்,அரசுக்கு விரோத நடவடிக்கைகளால் லாபம் பெறவுய்,அன்னியமொழி கற்பதற்கும்,அன்னியநாட்டு பெண்ணை திருமணம் செயதலும்,தன்னைவிட தரம்தாழ்ந்த மகளிரிடம் உறவு வைத்துக்கொள்ளுதலுக்கும் மற்றும் ஆடம்பர வாழ்வு மேற்கொள்ளவும் ராகுபகவானின் பங்கு குறிப்பிடத்தக்கது.

                        ராகுபகவானால் ஏற்படும் யோகங்கள்;-

                             ராகுபகவான் ஒருவரது சாதகத்தில் எங்கு அமர்ந்தால் யோகபலனை செய்வார் என பார்க்கின்றபோது லக்கனத்திற்கு மூன்று,ஆறு மற்றும் பதினொன்றாம் இடம் மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்து சுபகிரகங்களால் பார்வைபெறும்போது மேலான பலனை தரும் என பராசர் கூறுகிறார்.

                    இதேபோல 
                          "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்துநின்றால் பூமேடைதனில் படுத்துறங்கும் ராஜயோகமாகும்"-

                              எனவே ராகுபகவானாது மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி மற்றும் மகரம் என ஐந்து ராசிகளில் ராகுபகவான் நின்று லக்ன சுபர்களால் ராகுதிசையில் மிகுந்த யோகத்தை வாரிவழங்கும்.

                                 ராகு பகவான் கேந்திரகோணங்களில் நின்று வீடு கொடுத்தவன் பலம்பெற்றாலும் ராகு திசை யோகத்தை தரும்.

                           ராகு பகவான் மறைவு  ஸ்தானங்களில் நின்று (3,6,8,12) அவருக்கு சாரம் தந்தவர் லக்கன யோகராகி உச்சம்,ஆட்சி மற்றும் கோணங்களில் நின்றால் ராகுதிசை யோகத்தை வழங்கும்.

              ஒருவரது சாதகத்தில் இருள் கிரகமான ராகுபகவான் லக்கனத்தில் அமரமல் இருப்பது நலம் பயக்கும்.லக்கனத்தில் அமர்ந்த ராகு பகவான் களத்திர தடையையும் உருவாக்குவார்.லக்கனாதிபதி பலம்பெற்று இருப்பின் அதிக பாதிப்பு இல்லை.

        ராகு பகவான் வாக்குஸ்தானத்தில் அமரும்போது நல்ல பேச்சுவன்மையும்,மற்றவரை மறைமுகமாக இருபொருள்பட சாதுர்யமாக பேசக்கூடியவராக்குகிறது.

    மூன்றாம் இட ராகுபகவான் சாதகருக்கு நற்பலனை தருவார்.அதேநேரத்தில் சகோதரதோஷத்தினையும் தருவார்.மூன்றாம் இடத்தில் ராகுபகவான் அமர்ந்து தனது திசை நடைபெறும் காலங்களில் நல்ல முன்னேற்றங்களை வாழ்வில் தந்து புகழடைய செய்வார்.

      நான்காம் இடத்தில் அமர்ந்த ராகுபகவான் தன் சுகம்,தாய் சுகம் மற்றும் கல்வியால் அடையும் சுகம் குறையும்.சொந்த வீடு அமைவதில் காலதாமதம் ஆகலாம்.

          ஐந்தில் அமர்ந்த ராகுபகவான் புத்திரதோஷத்தினை தருவார்.ஐந்தாம் அதிபதியும்,புத்திரகாரகன் குரு பகவானும் பலப்படின் புத்திரதோஷத்திற்கு விதிவிலக்கு உண்டு.ஒரு சிலருக்கு பூர்வீக சொத்தால் பலம்பெறக்கூடிய யோகம் தடைபடும்.

         ஆறில் ராகு அமரும்போது எதிரியை வெல்லும் வல்லமை உடையவராக்குகிறது.

    ஏழில் அமரும் ராகுபகவான் அந்நிய உறவில் திருமணம்
நடை பெறும்.திருமணதடை ,மனதிற்கு பிடித்த மனைவி அமைவதில் சிக்கலை தரும்.கால தாமத மணம்,

கலப்பு மணம்,காதல் மணம் நடைபெறும் வாய்ப்பு உண்டு.
  எட்டில் அமரும் ராகுபகவான் மறைமுக உண்மைகள்,மாந்ரீக உண்மைகளை ஒருவருக்கு புலப்பட வைப்பர்.இதன் திசை காலங்களில் வம்பு,சண்டை,வழக்குகளை தருவார்.

ஒன்பதாம் இட ராகு தந்தை வழி ஆதரவு தடைபடும்.தந்தை வழி சொத்துகளால் பலன் இல்லை.தான,தர்ம குணம் அற்றவராக காணப்படுவார்.

     "பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும்" என்ற வகையில் பத்தாமிட ராகு ஒருவனை தலைசிறந்த அரசியல்வாதியாகவும்,கணிப்பொறி நிபுணராகவும்,ஷேர் மார்கெட்டில் கொடிகட்டி பறப்பவராகவும் திகழ்வார்.

தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாற்றுவார்.
  உபஜெய ஸ்தானமான பதினொறாம் இட ராகு சாதகருக்கு நன்மைகள் பலவற்றை தனது திசையில் தருவார்.

      பணிரெண்டில் ராகு அமரும்போது கடல்கடந்து செல்லும் யோகத்தை தருகிறது.

                          ஸ்ரீராகுபகவானால் உண்டாகும் யோகங்கள்


ராகுவால் உண்டாகும் யோகங்கள் பல உண்டு..அவையாவன;-

1,)பர்வதாயோகம்
2)மகாசக்தி யோகம்
3)சாம்ராஸ்யயோகம்
4)அஷ்ட லெட்சுமியோகம்
5)காலசர்ப்ப யோகம்
6)பீஜயோகம்
7)மகா கீர்த்தி யோகம்
8)கிளர்யோகம்

9)சண்டாள யோகம்
ஒவ்வொரு  யோகங்களையும் விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.நன்றி


(தங்களது சாதகப் பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


வாட்ஸ்அப்
  97 151 89 647
          செல்
   740 257 08 99
       97 151 89 647.


அன்புடன்,
Astro RsvichandranM.SC,MA,BEd,
PG Assistant(chemistry)
Astro Researcher.
Omsakthi jothida nillayam,
Pudukkottai-District.
Email : masterastroravi@gmail.com


My Blogspot
AstroRavichandransevvai.blogspot.com
  Astro Ravichandran.blogspot. com