சுக்கிரபகவான் தரும் சுகமான பலன்கள்.
கிரகங்கள் படுத்தும் பாடு -(199)
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
ஒரு மனிதனுக்கு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை தந்து வாழ்வின் சகல வசதிகளையும் அனுபவிக்க வைப்பதில் நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.
ஒரு சிலர் விதவிதமான சொகுசு கார்களை சொந்தாமாக வைத்திருக்கக்கூடிய யோக பலன்களை அளிப்பதில் சுக்கிரபகவானுக்கு முக்கியமான பங்கு உண்டு.நல்ல பலமான சுக்கிரபகவான் பலமடைந்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு ஒருவரை பல பேருந்துகளை வைத்திருக்ககூடிய வாகன உரிமையாளர்களாக இருப்பர்.
விதவிதமான நவநாகரிக உடைகளை அணியும் பழக்கவழக்கங்களை உடையவராக இருப்பின் அவரது சாதகத்தில் சுக்கிரபகவானின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்.பலமடைந்த சுக்கிரன் தொழில் ஸ்தான தொடர்பு ஐவுளி மற்றும் ரெடிமேட் கடை உரிமையாளராக திகழ்வர்.
ஒரு சிலர் சிகையலங்கரத்தில் அதிக கவனம் செலுத்தி மாறுபட்ட வகையில் முடி வளர்ப்பவராக இருக்ககூடிய தன்மையினை சுக்கிரபகவான் வழங்ககூடியவராக இருப்பார்.பலமடைந்த சுக்கிரன் தொழில் ஸ்தான தொடர்பு அழகு நிலையங்கள் ,சிகையலங்காரம்,
மணப்பெண் அலங்காரம் போன்ற தொழில் நடத்தி பிழைப்பர்.
மணப்பெண் அலங்காரம் போன்ற தொழில் நடத்தி பிழைப்பர்.
தன்னை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்ள விரும்பும் நபரா நீங்கள் நிச்சயம் உங்களது சாதகத்தில் சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.
சினிமா,நடிப்பு,இசை,பாடல் இயற்றுதல் மற்றும் கவிதை புனைதல் போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருந்து அத்துறைகளில் ஒன்றில் இறங்கி தனது புகழை உலகோர் அறியும் வண்ணம் திறமையை வெளிப்படுத்துவோரின் சாதகத்தில் சுக்கிரபகவானின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
சாப்பாட்டு பிரியரா ? நீங்கள் நிச்சயம் சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.சுக்கிரன் பலமடைந்த பத்தாம் பாவத்துடன் இடன் தொடர்பு கொள்ள உணவகங்கள் வைத்து நடத்தகூடிய முதலாளிகள் ஆவார்.
சிற்பம் செதுக்குதல்,ஓவியம் வரைதல் ,கதை ,கட்டுரை,கவிதை மற்றும் சினிமா பாடல்கள் எழுதுதல் இவைகளில் ஆர்வமூடையவர்களாக மற்றும் நிபுணத்துவம் நிறைந்தவர்கள் எனில் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.
கலைப்பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகி அது சார்ந்த பொருட்களை வாங்கி சேகரிக்ககூடிய நபர்களின் சாதகத்திலும் சுக்கிரன் பலடைந்து இருக்கவேண்டும்.
நகைகடைகள் நடத்தும் முதலாளி,ஜவுளிகடை,பேன்ஸி ஸ்டோர் போன்ற தொழில்களில் ஈடுபட்டு லாபம் பெறும் முதலாளிகள் சாதகத்திலும் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.
கொடுக்கல்,வாங்கல்,பைனான்ஸ்,நிதி நிறுவனங்கள் போன்றவை நடத்தி பொருள் ஈட்டுபவரின் சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும.
எதனையும் வித்தியாசமாக சிந்திக்கும் படைப்பாற்றல் மிக்கவர் எனில் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.
காதல் உணர்வு,கலை உணர்வு,மாறுபட்ட சிந்தனை,,படைப்பாற்றல் போன்றவற்றிற்கு சுக்கிரனே காரகர் ஆவான்.பாவிகளால் சூழப்பட்ட சுக்கிரன் காம உணர்வு மிக்கவர்களாக்கி தடம் மாறக்கூடிய தன்மை,பெண்களால் அவமானம் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் சாதகத்தில் சுக்கிரன் பலவீனமடைந்து இருக்கவேண்டும்.
கூடை முடைதல்,பாய் பின்னுதல்,எம்ப்ராய்டிங் போடுதல்,கோலம்போடுதல்,பெண்களின் கையில் மொகந்தி போடுதல் ,டைலரிங் மற்றும் கணிப்பொறி இயக்குதல் போன்ற செயல்களை கொண்டவர்கள் எனில் நிச்சயம் உங்களது சாதகத்தில் சுக்கிரன் பலமடைந்து இருக்கவேண்டும்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்ச்சியாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்ச்சியாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandransevvai.blogspot. com
............