Sunday 30 July 2017

உங்களது சாதகங்களை முன் ஆய்வு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

"உங்களது சாதகங்களை முன் ஆய்வு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன ? "

                                                     

கிரகங்கள் படுத்தும் பாடு-( 158 )

செவ்வாய்ப்பட்டிஅருள்மிகுதேவி  ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் துணை!

              சில நேரங்களில் ஆறறிவு படைத்த மனிதன் அ்்றினையான விலங்குகளிடமிருந்தும், பறவைகளிடமிருந்தும் பல பாடங்களை கற்றுக்தொள்ளவேண்டிய அவசியம் நேரிடுகிறது.
ஒற்றுமை உணர்வினை காகங்களிடமிருந்தும்,நன்றி உணர்வினை நாய்களிடமிருந்தும்,உழைப்பையும்,சேமித்து வைக்கும் தன்மையினை எறும்புகளிடமிருந்திம்,சுறுசுறுப்பினையும்,
கூடிவாழும் சமூகத்தன்மையினையும், தேனீக்கள் இடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

          அதேபோல தமக்கு என வாய்ப்பும்,உரிய காலமும் வரும்வரை காத்திருத்தல் என்பது அவசியமான ஒன்றாகும்.இதற்கு "பொறுமையும்,சகிப்பு தன்மையும் மிக மிக அவசியமாகும்.இப்பண்பிணை கொக்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள லேன்டியுள்ளது.

            இதனை  ஒளவை மூதாட்டியார் தனது மூதுரை -5 ம் பாடலின் வழியாக கடைசி இரண்டு வரியில்
" ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு ' என்கிறார்.

          கொக்கானது எப்படி சிறு குஞ்சு மீன்களையெல்லாம் ஒட விட்டுவிட்டு தவநிலை முனிவரைப்போல ஒற்றைக்காலில் தனக்கு தேவையான பெரிய மீன் வரும்வரை காத்திருப்பதுபோல மனிதர்களாகிய நாமும் உரிய நேரம் வரும்வரை காத்திருக்க பழகிக்கொள்ளவேண்டும்.

உரிய காலம்

        மனிதனாக பிறப்பு எடுக்கும் ஒவ்வொறு மனிதனையும் வழிநடத்தி செல்லுவதில் நவகோள்களுக்கு  முக்கியமான பங்கு உண்டு.எனவே மனிதன் ஆக பிறப்பு எடுத்த நாம் நமது சாதகத்தினை கோளாராய்ச்சி செய்து தம்மை பலப்படுத்தக்கூடிய கிரகங்கள் எவை ? எவை ? எனவும்,அதேபோல எக்கிரகங்கள் நமது வளர்ச்சியை பலவீனப்படுத்தும் எனவும் அறிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு தெரிந்துகொண்ட பின் தம்மை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லக்கூடிய திசையானது வரும்வரை பொறுமை காக்க பழகவேண்டும்.

கோணாதிபதிகள்

           பொதுவாக ஒருவருக்கு அதிக யோகங்களை தந்து வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதில் கோணாதிபதிகளுக்கு ( 1,5,9 ) அதிக பங்கு உண்டு.இதனால்தான் ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதி,ஐந்தாமிட அதிபதி மற்றும் ஒன்பதாமிட அதிபதிகளை லக்கன யோகராக எடுத்துக்கொண்டு அவர்களது திசைகள்.  Thisaigal ஆனாது மானிடருக்கு நன்மை பயக்கும் திசைகளாக கருதப்படுகிறது.இக்கோணாதிபதிகள் பலவீனப்படாத சூழலில் யோகங்களை தந்து குப்பையில் இருப்பவனையும்,கோபுர கலசமாக உச்சத்தில்  வாழவைக்கும்.

கேந்திர அதிபதிகள்

             கேந்திராதிபதிகளுத்கு கோணாதிபதியை அடுத்துதான்  பங்கு உண்டு.கேந்திர அதிபதிகள் கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெறும்போது "கேந்திராதிபத்திய தோஷத்தை " தந்து தரக்கூடிய பலனில் பங்கத்தை உண்டாக்கிவிடுவதால்தான் கேந்திர அதிபதிகளை (1,4,7,10 ) லக்கன யோகர்களாக கருதுவதில்லை.

        கேந்திராதிபதிகள் யோகங்களை தர இவைகள் திரிகோண நிலைகளையோ அல்லது மறைவிட ஸ்தாளங்களிலோ நின்று திசையானது நடப்பின் யோகங்களை தரக்கூடிய நிலை உருவாகும்.

        கேந்திர ,கோணாதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று அத்திசையானது நடைபெறும் காலங்களிலும் யோகங்களை வாரி வழங்கும்.கேந்திர ஸ்தானங்களில் பாப கிரகங்கள் இடம்பெறுவதும்,திரிகோணங்களில் சுப கிரகங்கள் இடம்பெறுவதும் நல்லது.

பணபர ஸ்தானங்கள்

       2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானங்களில் தன,லாபதிகளின் (2,11) திசைகள் நடைபெறும் காலங்களிலும் யோகங்களை வழங்கும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலங்கள்;-

          ஒருவர் தனது லக்கன ,ராசிக்கு பாதக,மாரகாதிபதிகள் மற்றும் மறைவுஸ்தானத்தில் (6,8,12 ) இடம்பெற்ற மற்றும் அதன் அதிபதிகளின் திசைகளில் சற்று எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு புதிய முயற்ச்சிகள் செய்யாமல் இருத்தல் நலம் பயக்கும்.

         இதுபோன்ற தருணங்களில் அக்கிரகங்களின் அதிபதிகளுக்கு உரிய தெய்வங்களுக்கு பரிகார பூஜைகள் மற்றும் மந்திர உச்சாடனங்கள் செய்வது நல்லது.

          அதிலும் குறிப்பாக ஆறாம் இடம் என்பது ருண,ரோக மற்றும் கடன் பிரச்சினைகளை தரும் திசை என்பதால் அத்திசை காலங்களில் கொடுக்கல்,வாங்கல் மற்றும் புதிய தொழில் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

            அத்தருணங்களில் பரிகார பூஜைகள் அவசியம் ஆகும்.உதாரணமாக ஆறாமிடத்தில் ராகுபகவான் நின்று அத்திசையானது நடப்பில் இருப்பின் ஆஞ்சநேய வழிபாடு ராகுகாலத்தில்  செய்யலாம்.வடைமாலை சாத்தி வழிபடலாம்.அனுமான் ராமபக்தர் என்பதால்  ராம ஜெயம் ஆயிரம் தடவை எழுதி மாலையாக கட்டி ஆஞ்சநேயகருக்கு சாத்தலாம்.சனிக்கிழமை வழிபட உகந்த நாட்களாகும்.

           இவை மட்டுமல்லாது துர்க்கை வழிபாடு,காலபைரவருக்கு மிளகு தீபம ஏற்றி வழிபட்டு கஷ்டங்களிலிருந்து விலகலாம்.
திருநாகேஷ்வரம்,பேரையூர் ,திருப்பாள்புரம் மற்றும் காளஹஸ்தி போன்ற ராகுஸ்தலங்களுத்கு சென்று வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புபடம் அடித்துவைத்து பரிகார பூஜைகள் செய்யலாம்.

          சனிபகவான் ஆக இருக்கும் பட்சத்தில் காகத்திற்கு சோறுவைத்தல்,ஒரு கைப்பிடி அரிசியினை துணியில் கட்டி இரவு படுக்கும்போது தலையனை அடியில் வைத்து காலையில் எழுந்து பொடிசெய்து விநாயக வழிபாடு செய்து கோலமிட அவ்வரிசியினை எறும்புகள் பொறுக்கி செல்ல சகலபாவங்களும் விலகும்.

          பிராமணர்களுக்கு கறுப்பு வஸ்திரம தாளம் செய்தல்.திருநள்ளாறு சென்று ஆயில்குளியல் செய்து சனீஸ்வரபகவானை வழிபடல் மூலம் அக்கிரகங்களால் உண்டாககூடிய கஷ்டங்களை தங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தினை மனிதர்களுக்கு தரும்.

          இதேபோல அஷ்டமாதிபதி திசையானது நடப்பில் இருக்கும் காலங்களில் வம்பு,வழக்கு,பிரச்சினை ,ஆயுள்பங்கம்
,வாகனவிபத்து மற்றும் சிறை செல்லல் போன்ற கஷ்டங்களை தரும் என்பதால் பொதுவாக பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்க பயிற்ச்சி மேற்கொள்ள பழகவேண்டும்.

              முடிந்தவரை வீண்விவாதங்களில் விலகி நிற்க பழகவேண்டும். கூடுமானவரை ஒதுங்கி வாழ முயற்ச்சி மேற்கொள்ளவேண்டும்.
பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நாக்குதான் காரணம் என்பதால் இதுபோன்ற தருணங்களில் "நாகாத்தல் அவசியமாகும்.

             எனவேதான் லான்புகழ் கொண்ட வள்ளுவர் கூட
" யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
 சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
என்கிறார்.நாக்குக்குதான் நரம்பு இல்லையென பேச ஆரம்பித்தால் இறுதியில் சொற்குற்றத்தில் அகப்பட நேரிடும் என இறுதியாககூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி!நன்றி!

      (தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
 
    97 151 89 647

           செல்

  97 151 89 647
     740 257 08 99
                                                       
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastrorav@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Saturday 29 July 2017

திருமண வாழ்வில் கிரகங்களின் பங்கு

        திருமண வாழ்வில் கிரகங்களின் பங்கு

                                                          "கிரகங்கள் படுத்தும் பாடு -( 157 )


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
.
        இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களது பேச்சும்,கிண்டலும் அவர்களது கல்யாணம் சார்ந்த பேச்சாகவே இருக்கும்.தனக்கு வரக்கூடிய மனைவி /கணவன் எப்படி இருக்கவேண்டும் ? என்ற கற்பனையும்,ஆசையுமே அவர்களுக்கு இடையேயான பேச்சில் தென்படுவதை காணலாம்.

                இவ்வாறு எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டவர்களுக்கு ,அவர்களது  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல அமையாதபோது அவர்களுக்குள் பிரச்சினை முற்றி பிரிந்து வாழும் சூழல் உருவாகி விடுகிறது.மேலும் இக்காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்டீரும் கல்வியிலும்,சாம்பாத்தியத்திலும் சரிநிகர் ஆக திகழ்வதால் தனித்து வாழும் மனநிலை மேலோங்கி எளிதாக இவர்களது மனதில் புரையோடிவிடுகிறது.

            என்னிடம் போன்வழியாக சாதக Councelling - ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் இவை சார்ந்த பிரச்சினைக்கு உட்பட்டோர் அதிகம் என்பதால் இவை அவர்களது பெற்றோர்களுடைய மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவினை இட்டு செல்கிறேன்.

                ஒரு ஆணுக்கோ/பெண்ணிற்கோ திருமணம் செய்ய நினை்க்கும் பெற்றோர்கள் அவர்களது சாதகங்களை நன்கு ஆய்வு செய்து பார்க்கவேண்டும் .அவர்களது சாதகத்தில் லக்கனம்,இரண்டாமிடம்(குடும்ப ஸ்தானம்),
ஏழாமிடம் (களத்திரஸ்தானம் )மற்றும் எட்டாமிடம் (மாங்கல்யஸ்தானம்)/போன்ற இடங்களையும் மற்றும் களத்திர காரகனான சுக்கிரனின் நிலை முதலியவைகளை  நல்ல திறம் வாய்ந்த சோதிடரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

               ஓருவரது சாதகத்தில் விதி கெட்டால் மதி , மதியும்  கெட்டால் கதி என்பார்கள்.
இங்கு
                விதி என்பது லக்கனம்

                 மதி என்பது ராசி

                கதி என்பது சூரியன் 

                 இம்மூன்று வகையில்  மேற்கண்ட ஸ்தானங்களை  ஆய்வு செய்து பார்க்கும்போது மூன்று பரிமாணங்களிலும் பாதிக்கப்பட்டு இருந்தால் அவை பலவீனமான சாதகம் ஆகும்.எனவே இவ்வகையான  சாதகங்களுக்கு ஏற்றார்போல ஜோடி சேர்க்கும்போது அவர்களுக்கு இடையே கருத்து மாறுபாடு உருவாகமல் இருக்க வாய்ப்பு உருவாகிறது.

             லக்கன அடிப்படையில் மேற்கண்ட ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ராசி அடிப்படையில் பாதிக்கப்படாமல் இருப்பின் அதற்கு தகுந்தாற்போல பொருத்தம் போடும்போது அவர்களது இல்வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

              மேற்கண்ட ஸ்தானங்கள் எவ்வாறு இருந்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம்.
(லக்கனம், இரன்டு,ஏழு,எட்டு மற்றும் சுக்கிரன்)

              1) மேற்கண்ட ஸ்தானங்கள் நீசம், பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பெறக்கூடாது.

             2)   மேற்கண்ட ஸ்தானங்கள் மறைவிடங்களான ஆறு,எட்டு அதிபதிகள் தொடர்பின்றியோ அல்லது இவ்வதிபதிகள் மறைவிடங்கள் செல்வதோ கூடாது.

         3) மேற்கண்ட ஸ்தான மற்றும் கிரகங்கள் உடன் பாவிகளான ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.

புத்திரதோஷம்

           இவை மட்டுமன்றி தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருக்ககூடாது.ஏனைய செவ்வாய், களத்திர,மாங்கல்ய தோஷங்களுக்கு  , தோஷம் உள்ளவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை ஜோடி சேர்க்கவேண்டும்.ஆனால் புத்திரதோஷம் உடையவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை இணைக்கும்போது புத்திரபாக்கியம் உருவாவதில் சிக்கல் உருவாகிவிடுகிறது.

புத்திரதோஷம் என்பது மூன்று வகையில் தோஷங்களை தருகிறது.

          1)புத்திரமே உருவாகாத நிலை

         2)ஆண் குழந்தையின்றி பெண்குழந்தை மட்டும் உருவாகும் நிலை.

         3)புத்திரர்கள் உருவாகி இருந்தாலும் அவர்களால் பயனற்ற நிலை

இதுபோன்ற மூன்று நிலைகளில் பாதிப்பு தருகிறது.இதில் முதல் இரன்டு நிலை மட்டுமே திருமணவாழ்வில் பாதிப்பு உருவாக வாய்ப்பு உருவாகி விடுகிறது.

           இதற்கு தம்பதிகளது சாதக கட்டத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் புத்திரகாரகனான குருபகவான் ஆகியவற்றின் நிலைகளை விதி, மதி மற்றும் கதி என முப்பரிமாணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.இம்மூன்று வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்காமல் இருத்தல் நல்லது.

புத்திரதோஷம் உருவாக


         1) புத்திரஸ்தானம்,புத்திரகாரகனான குருபகவான் நீசம்,பகை,வக்கிரம் ,அஸ்தமனம் பெறக்கூடாது.

         2) புத்திர ஸ்தானம் மற்றும் குரு பகவான் உடன் அரவுகளான ராகு. கேது சேர்க்கை கூடாது.

         3)ஐந்தாமாதிபதி மற்றும் குருபகவான் அரவுகளான ராகு,கேது நட்சத்திர சாரம் பெறக்கூடாது.

        4) புத்திரஸ்தானாதிபதி,குருபகவான் ஆகிய இரு கிரகங்களுடன் ஆறு,எட்டு ஆம் அதிபதிகளோடு சம்பந்தமோ அல்லது ஆறு மற்றும் எட்டாமிடம் சேர்வதோ நல்லதல்ல.

          இதுபோல அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் அமையும் பட்சத்தில் விவாக பொருத்தம் போடக்கூடாது.

        இவை மட்டுமல்லாமல் தம்பதிகள் இருவரது சாதகத்திலும் களத்திர ஸ்தானத்திற்கு சனி,செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.
இதேபோல 3,4,5,7,12 ஆம் இடங்களில சுபர் பார்வையற்ற
 சுக்கிரன்+செவ்வாய் ,சனி+ராகு
,சுக்கிரன் +சனி ,செவ்வாய் மற்றும் சுக்கிரன் உடன் ராகு சேர்க்கை  மற்றும் சந்திரன்+சுக்கிரன் சேர்க்கை போன்ற அமைப்பை பெற்றவர்கள் சாதகங்களை இணைக்கும்போது நன்கு ஆய்வு செய்து பொருத்தம் போடப்படவேண்டும்.

          எல்லாவற்றிற்கும் மேலாக தம்பதிகளை இணைக்கும்போது நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்த்து பொருத்தம் போடாமல் கட்ட அடிப்படையிலான பொருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

நன்றி.தொடரும்.....

         (தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து ஜெனன சாதக பலன், திருமணபொருத்தம், மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

          வாட்ஸ்அப் எண்
           97 151 89 647

            செல்
          740 257 08 99
                97 151 89 647

                                     
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc,MA,BEd,
  சோதிட  ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் கன்சல்டிங் சென்டர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
---------------------------------------------------------------------------

Thursday 27 July 2017

ஒருவரது சாதகம் எவ்வாறு இருந்தால் நல்லது ? - ( 1 )

        திருமண வாழ்வில் கிரகங்களின் பங்கு

                                                          "கிரகங்கள் படுத்தும் பாடு -( 157 )


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
.
        இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களது பேச்சும்,கிண்டலும் அவர்களது கல்யாணம் சார்ந்த பேச்சாகவே இருக்கும்.தனக்கு வரக்கூடிய மனைவி /கணவன் எப்படி இருக்கவேண்டும் ? என்ற கற்பனையும்,ஆசையுமே அவர்களுக்கு இடையேயான பேச்சில் தென்படுவதை காணலாம்.

                இவ்வாறு எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டவர்களுக்கு ,அவர்களது  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல அமையாதபோது அவர்களுக்குள் பிரச்சினை முற்றி பிரிந்து வாழும் சூழல் உருவாகி விடுகிறது.மேலும் இக்காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்டீரும் கல்வியிலும்,சாம்பாத்தியத்திலும் சரிநிகர் ஆக திகழ்வதால் தனித்து வாழும் மனநிலை மேலோங்கி எளிதாக இவர்களது மனதில் புரையோடிவிடுகிறது.

            என்னிடம் போன்வழியாக சாதக Councelling - ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் இவை சார்ந்த பிரச்சினைக்கு உட்பட்டோர் அதிகம் என்பதால் இவை அவர்களது பெற்றோர்களுடைய மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவினை இட்டு செல்கிறேன்.

                ஒரு ஆணுக்கோ/பெண்ணிற்கோ திருமணம் செய்ய நினை்க்கும் பெற்றோர்கள் அவர்களது சாதகங்களை நன்கு ஆய்வு செய்து பார்க்கவேண்டும் .அவர்களது சாதகத்தில் லக்கனம்,இரண்டாமிடம்(குடும்ப ஸ்தானம்),
ஏழாமிடம் (களத்திரஸ்தானம் )மற்றும் எட்டாமிடம் (மாங்கல்யஸ்தானம்)/போன்ற இடங்களையும் மற்றும் களத்திர காரகனான சுக்கிரனின் நிலை முதலியவைகளை  நல்ல திறம் வாய்ந்த சோதிடரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

               ஓருவரது சாதகத்தில் விதி கெட்டால் மதி , மதியும்  கெட்டால் கதி என்பார்கள்.
இங்கு
                விதி என்பது லக்கனம்

                 மதி என்பது ராசி

                கதி என்பது சூரியன் 

                 இம்மூன்று வகையில்  மேற்கண்ட ஸ்தானங்களை  ஆய்வு செய்து பார்க்கும்போது மூன்று பரிமாணங்களிலும் பாதிக்கப்பட்டு இருந்தால் அவை பலவீனமான சாதகம் ஆகும்.எனவே இவ்வகையான  சாதகங்களுக்கு ஏற்றார்போல ஜோடி சேர்க்கும்போது அவர்களுக்கு இடையே கருத்து மாறுபாடு உருவாகமல் இருக்க வாய்ப்பு உருவாகிறது.

             லக்கன அடிப்படையில் மேற்கண்ட ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ராசி அடிப்படையில் பாதிக்கப்படாமல் இருப்பின் அதற்கு தகுந்தாற்போல பொருத்தம் போடும்போது அவர்களது இல்வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

              மேற்கண்ட ஸ்தானங்கள் எவ்வாறு இருந்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம்.
(லக்கனம், இரன்டு,ஏழு,எட்டு மற்றும் சுக்கிரன்)

              1) மேற்கண்ட ஸ்தானங்கள் நீசம், பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பெறக்கூடாது.

             2)   மேற்கண்ட ஸ்தானங்கள் மறைவிடங்களான ஆறு,எட்டு அதிபதிகள் தொடர்பின்றியோ அல்லது இவ்வதிபதிகள் மறைவிடங்கள் செல்வதோ கூடாது.

         3) மேற்கண்ட ஸ்தான மற்றும் கிரகங்கள் உடன் பாவிகளான ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.

புத்திரதோஷம்

           இவை மட்டுமன்றி தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருக்ககூடாது.ஏனைய செவ்வாய், களத்திர,மாங்கல்ய தோஷங்களுக்கு  , தோஷம் உள்ளவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை ஜோடி சேர்க்கவேண்டும்.ஆனால் புத்திரதோஷம் உடையவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை இணைக்கும்போது புத்திரபாக்கியம் உருவாவதில் சிக்கல் உருவாகிவிடுகிறது.

புத்திரதோஷம் என்பது மூன்று வகையில் தோஷங்களை தருகிறது.

          1)புத்திரமே உருவாகாத நிலை

         2)ஆண் குழந்தையின்றி பெண்குழந்தை மட்டும் உருவாகும் நிலை.

         3)புத்திரர்கள் உருவாகி இருந்தாலும் அவர்களால் பயனற்ற நிலை

இதுபோன்ற மூன்று நிலைகளில் பாதிப்பு தருகிறது.இதில் முதல் இரன்டு நிலை மட்டுமே திருமணவாழ்வில் பாதிப்பு உருவாக வாய்ப்பு உருவாகி விடுகிறது.

           இதற்கு தம்பதிகளது சாதக கட்டத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் புத்திரகாரகனான குருபகவான் ஆகியவற்றின் நிலைகளை விதி, மதி மற்றும் கதி என முப்பரிமாணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.இம்மூன்று வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்காமல் இருத்தல் நல்லது.

புத்திரதோஷம் உருவாக


         1) புத்திரஸ்தானம்,புத்திரகாரகனான குருபகவான் நீசம்,பகை,வக்கிரம் ,அஸ்தமனம் பெறக்கூடாது.

         2) புத்திர ஸ்தானம் மற்றும் குரு பகவான் உடன் அரவுகளான ராகு. கேது சேர்க்கை கூடாது.

         3)ஐந்தாமாதிபதி மற்றும் குருபகவான் அரவுகளான ராகு,கேது நட்சத்திர சாரம் பெறக்கூடாது.

        4) புத்திரஸ்தானாதிபதி,குருபகவான் ஆகிய இரு கிரகங்களுடன் ஆறு,எட்டு ஆம் அதிபதிகளோடு சம்பந்தமோ அல்லது ஆறு மற்றும் எட்டாமிடம் சேர்வதோ நல்லதல்ல.

          இதுபோல அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் அமையும் பட்சத்தில் விவாக பொருத்தம் போடக்கூடாது.

        இவை மட்டுமல்லாமல் தம்பதிகள் இருவரது சாதகத்திலும் களத்திர ஸ்தானத்திற்கு சனி,செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.
இதேபோல 3,4,5,7,12 ஆம் இடங்களில சுபர் பார்வையற்ற
 சுக்கிரன்+செவ்வாய் ,சனி+ராகு
,சுக்கிரன் +சனி ,செவ்வாய் மற்றும் சுக்கிரன் உடன் ராகு சேர்க்கை  மற்றும் சந்திரன்+சுக்கிரன் சேர்க்கை போன்ற அமைப்பை பெற்றவர்கள் சாதகங்களை இணைக்கும்போது நன்கு ஆய்வு செய்து பொருத்தம் போடப்படவேண்டும்.

          எல்லாவற்றிற்கும் மேலாக தம்பதிகளை இணைக்கும்போது நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்த்து பொருத்தம் போடாமல் கட்ட அடிப்படையிலான பொருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

நன்றி.தொடரும்.....

         (தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து ஜெனன சாதக பலன், திருமணபொருத்தம், மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

          வாட்ஸ்அப் எண்
           97 151 89 647

            செல்
          740 257 08 99
                97 151 89 647

                                     
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc,MA,BEd,
  சோதிட  ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் கன்சல்டிங் சென்டர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
---------------------------------------------------------------------------

Monday 24 July 2017

சமூகம் விரும்பி மதிக்கும் மனிதராக திகழ-கிரகநிலைகள் எவ்விதமாக அமையவேண்டும்?

சமூகம் விரும்பி மதிக்கும் மனிதராக திகழ -கிரகநிலைகள் எவ்விதமாக அமையவேண்டும் ?


                                       

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 155 )

              ஓருவரை சமூகம் விரும்பும் மனிதராக மாற்றுவதில் சாதக கட்டத்தில் திரிகோண இடங்களான ஓன்று, ஐந்து மற்றும் ஓன்பதாமிடங்களாகும்.

லக்கனம்


             சாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் லக்கனமும் அதன் அதிபதியும் ஆகும்.இலக்கினாதிபதியை கொண்டே ஒருவரது எண்ணம், மனநிலை போன்ற உளவியல் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள இயலும்.

           "எண்ணம் போல் வாழ்வு " என்பதால் ஒருவருக்கு சமூகம் விரும்பதக்க எண்ணங்களையும் ,மனநிலைகளையும் தருவதில் லக்கனத்திற்கும் அதன் அதிபதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு என்பதால் இவை சாதகருக்கு பலப்படவேண்டும்.

ஐந்தாமிடம்


                  ஒருவருடைய சாதகத்தில் ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானமாகும்.ஒரு சாதகருக்கு நல்ல புத்திசாலிதனம்  தருவதில் ஐந்தாமிடத்திற்கு அதிக பங்கு உண்டு.அதேபோல கற்பனை உணர்வுகளை தருவதிலும் இந்த இடத்திற்கே முழு பங்கு உண்டு.

              ஒரு மனிதனிற்கு நல்ல புத்திசாலித்தனமும் , நல்ல கற்பனை உணர்வும் இருந்தாலே சமூகம் விரும்பதக்க மனிதராக விளங்க முடியும்.
எனவே இந்த ஐந்தாமிடம் உச்சம் ,ஆட்சி என்ற வகையில் பலமடைந்தோ அல்லது 1.4.7.10.5.11  ஆகிய இடங்களில் நின்று பலமடைந்து நின்று சுப கிரகம் பார்வை பெற்றால் சமூகம் விரும்பதக்க மனிதராக மாறிவிடுவார்.

ஓன்பதாமிடம்


               ஒரு மனிதனை பெருந்தன்மை பெற்றவனாகவும் , தான தர்ம குணம் நிறைந்த   கொடையாளியாகவும் மாற்றுவதில் ஒன்பதாம் இடத்திற்கு பெரும் பங்கு உண்டு.

             எனவே ஒருவரது சாதகத்தில் ஒன்பதாமிடம் பலமடைந்து  பாவ கிரக சேர்க்கையின்றி சுப கிரகங்கள் சம்பந்தப்பட்டவர் தனக்கென வாழாமல் பிறர்கென வாழும் தகைமை பெற்றவர்களாகிறார்கள்.
புகழ் பெற்ற Arasiyal - அரசியல் தலைவர் ஆவதற்கும் ,பெரிய தொழில்முனைவோர்/Entrepreneur ஆவதற்கும் , அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரிகளாக மாறுவதற்கும் இந்த ஒன்பதுக்குடைய கிரகம் வலுவாக இருந்தால்தால்தான் இயலும்.

           பல சாதனைகள் செய்து சாதனையாளர்கள் ஆவதற்கு இந்த ஒன்பதுக்கு உரிய கிரகம் பலமடைந்து இருக்க வேண்டும்.

            கிரகங்களில் சமூகம் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் பெரும் பங்கு ஏனைய கிரகங்களைவிட  சனி , குரு மற்றும் கேது போன்ற கிரகங்களுக்கு அதிகம் உண்டு எனது அனுபவத்தில் உணர்கிறேன்.

            கர்ம காரகனான சனி பகவான் கர்மஸ்தானமான பத்தாம் இடத்தில் பலமடைந்து நின்றால் அதன் திசை , புத்தி காலங்களில் மக்கள் போற்றும் மகத்தான தலைவா் ஆக மாற்றி அழகு பார்க்கிறது.இதனை "அமலயோகம் " எனலாம்.

சனி -கேது சேர்க்கை


              சனி பகவான் ஆனவர் ஞானக்காரகன் கேதுபகவானோடு சேர்ந்து வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இணையும்போது அப்படிப்பட்ட அமைப்பை பெற்றவர்கள் ஒருவிதமான ஈர்ப்பு சக்தியை பெற்று மக்களிடம் பெரும் செல்வாக்கையும் பெற்று மக்களிடம் ஒரு தெய்வீக அமைப்பை உருவாக்கிவிடுவார்கள்.

            உலக வாழ்க்கைக்கு தேவையான பொருட்செல்வத்தை வழங்குபவர் ராகுபகவான்  என்றால் அருட்செல்வத்தை வாரிவழங்குபவர் கேதுபகவான் ஆவார்.

            வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
    "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
  அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை " என்கிறார்.


              இவ்விரு கிரகங்களில் மக்கள் மதிக்கதக்க மனிதராக மாற்றுவதில் ராகுவைவிட கேதுபகவானே முக்கியத்துவம் பெறுகிறார்.கேதுவிற்கு மற்ற எல்லா கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.கேது ஒரு சாதனைக்கு வித்தான கிரகம் ஆகும்.

குருபகவான்


               குருபகவான் லக்கனத்தில் இருந்தாலும் அல்லது லக்கனத்தை பார்த்தாலும் மக்கள் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் தனது பங்கை ஆற்றுகிறது.

               மக்கள் விரும்பதக்க மனிதராக மாற்றுவதில் குருபகவான் கிரகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. குருபகவான் லக்கனத்தையோ அல்லது ராசியையோ பார்வை பெறும் அமைப்பை பெற்றவர்கள் மக்கள் விரும்பதக்க மனிதராக திகழ்வார்கள்.

             எனவே லக்கனம், ஐந்தாமிடம், ஒன்பதாம் இடம் ,குரு ,சனி மற்றும் கேது ஆகிய ஐந்து அம்சங்களை பலமாக பெற்றவர்கள் மக்கள் விரும்பதக்க மனிதராக மாறுவது உறுதி ஆகும்.

        (தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக  நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற ,தங்களது பிறந்ததேதி, நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஜ்ஜேஷ் ( message ) செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்.)

தொடர்புக்கு

   வாட்ஸ்அப் எண்

  97 151 89 647


                 செல்
             740 257 08 99

                  97  151 89 647

                                                  
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC , MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.


          My email
masterastroravi @gmail.com


My website
astroravichandransevvai. Blogspot.com.
----------------------------------------------------------------------------

சுகம் அடையும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா ?

                                    சுகம் அடையும் யோகம்     உங்களது சாதகத்தில் உண்டா ?

                                                             
                                                            
                        கிரகங்கள் படுத்தும் பாடு - ( 85 )

                     ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                 ஒருவர் தன் வாழ்வில்  சுகம் பெறுதல் என்பது முக்கியமான ஒன்றாகும்.சுகம் பெறுவது என்னும் நிகழ்வு அவரவர் மனநிலையோடு சம்பந்தப்பட்ட செயலாகும்.


               தன்னிடம்  உள்ளதை கொண்டு மனநிறைவோடு சுகமாக எண்ணி வாழ்வது உண்டு.ஒரு சிலருக்கு எல்லாவித சுகங்களும் அவருக்கு கிடைத்தாலும் மனநிறைவு இல்லாததால் சுகமின்றி வாழ்வபர் உண்டு.எனவே சுகம்பெறுதல் மனநிறைவோடு தொடர்புடைய ஒன்று ஆகும்.

            ஆதலால் ஒருவருடைய சாதகத்தில் மனதிற்காரன் எனப்படும் சந்திரன் எவ்வித பாவிகளது சேர்க்கை மற்றும் பார்வையின்றி பலப்படவேண்டும்.
அடுத்து முக்கியமாக ஒருவர் தனது சுக நிலையை ஆராய அவரது சாதகத்தில் இரண்டாவது கேந்திரமான நான்காமிடத்தையும் அதன் அதிபதியையும் நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

              இந்த நான்காமிடத்தின் மூலமாக ஒருவருடைய தன் சுகம்,தாய் சுகம்,வண்டி வாகனங்களால் பெறும் சுகம்,வீட்டால் பெறும் சுகம் ,காம சுகம் மற்றும் கல்வியால் அடையும் சுகம் முதலியவற்றை அறியும் ஸ்தானமாகும்.
இந்த நான்காமிடத்தில் பாவிகள் இல்லாது அந்த வீட்டு அதிபதி உச்சம்,ஆட்சி ,மூலதிரிகோணம் போன்ற நிலையை அடைந்து சுப குருவின் பார்வை விழ ஒருவருக்கு தன் வாழ்வில் மேற்கண்ட நான்காமிடத்திற்கு உரிய சுகங்களை அவர் தன் வாழ்வில் பெறுவார்.

            இதில் சில விதிவிலக்கு என்னவெனில் நான்காமிடத்து அதிபதி சுபராக இருக்கும்பட்சத்தில் அவர் கேந்திராதிபதி தோஷத்தை தந்து சுகத்தில் நிறைவில்லாமல் செய்வார்.அதாவது நன்கு கற்று தேர்ந்தவராக இருந்தாலும் அவர் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அதனால் பெறும் சுகத்தை தடைபடுத்துவார்.எனவே இதுபோன்ற அமைப்புடையவர்களுக்கு சுகாதிபதியானது திரிகோண ஸ்தானத்திலோ அல்லது மறைவு ஸ்தானங்களிலோ அமர்வது நல்லது.

கேந்திராதிபதி சுபராக இருக்கும் பட்சத்தில் மறைவுநிலையோ அல்லது திரிகோண நிலையோதான் சுகம் அடைய வைக்கிறது.இங்கு வழக்கமாக சோதிடர்ஙள் பயன்படுத்தும் விதி மாறுபாடு அடைகிறது.பொதுவாக சுகாதிபதி மறைந்ததால் சுகம் குறைவு என எடுத்துக்கொள்ளக்கூடாது.
சுக கேந்திராதிபதிகள் பாவிகளாக இருக்கும் பட்சத்தில் அவை திரிகோண ஸ்தானமேறினாலும் சுகத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடுகிறது.இங்கும் பொதுவான விதி அடிப்படையில் சுகாதிபதி திரிகோணமேறியாதால் சுகம் அதிகம் கிடைக்கும் என புகழ்ந்து கூற முடியாது.
இதுபோன்ற சூட்சும உண்மைகள் பல சோதிடத்தில் உள்ளது .எனவே ஒருவருக்கு சுகம் பற்றி பலனளிக்கும்போது சுகாதிபதி கேந்திரம் திரிகோணம் ஏறினால் சுகம் அதிகம் பெறுவர் எனும் பொதுவான விதிகளை எடுத்துக்கொண்டு பலனளிக்ககூடாது.
சோதிடம் எனும் சமுத்திரத்தில் பயபக்தியோடு முத்து எடுக்க முயற்சி செய்ய பகவான் அருளாலும் ,நல்ல குருவருளாலும் பல சூட்சும உண்மைகள் மனதிற்கு புலப்படும்.
சுகம் பெறுதல் யாரல் :-
ஒருவர் சுகம் பெறுதல் யாரால் ? எதன் மூலம் ? என்பதை அவர்களது சாதகத்தில் சுகாதிபதி கொண்டுள்ள தொடர்பின் மூலம் அறியலாம்.
சுகாதிபதியானது பலம்பெற்று ஏழாம் அதிபதியோடு  தொடர்பு கொள்ள மனைவி வழியாகவோ அல்லது மனைவி மூலமாகவோ சுகம் பெறலாம்.அதிக பொருள் ஈட்டும் மனைவி அமையலாம் அல்லது மனைவி வழியாக சொத்து கிடைக்கலாம்.இங்கு களஸ்திரகாரகன் சுக்கிரனும்,ஏழாம் அதிபதியும் பலப்பட்டிக்கவேண்டும்.
சுகாதிபதி குரு,புதன்,சுக்கிரன் போன்ற சுபராக வந்து ஜீவனாதிபதியும் சுபராகி ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள நேரிய வழியில் பொருள்  ஈட்டி சுகம்பெறலாம்.தனக்கு கிடைக்கும் வேலை வழியாக நேர்மையாக உழைத்து சுகம் பெறலாம்.அதேநேரத்தில் இருவரும் (சுக,ஜீவன) பாவியாக இருந்து ஒன்றுக்கொன்று தொடர்புபெற மனசாட்சிக்கு விரோதமாக தனது பணியில் நடந்து குறுக்கு வழியில் ஈட்டி அதன் மூலம் சுகம் பெறலாம்.
சுகாதிபதியும் ,பூர்வ புண்ணியஸ்தானதிபதியும் ஒன்றுக்கொன்று பார்வை மற்றும் சேர்க்கை மூலம் தொடர்பு கொள்ள பாட்டான் தேடிய சொத்தால் சுகம் பெறலாம்.இங்கு பூர்வ புண்ணியஸ்தானதிபதியும்,குருவும் பலப்பட்டிக்கவேண்டும்.
சுகாதிபதியும்,பாக்கியாதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள தந்தை தேடிய சொத்தின் மூலம் சுகம் அடையலாம்.
இங்கு ஒன்பதாம் அதிபதியும்,சூரியனும் பலப்படவேண்டும்
ஒருவரது சுகாதிபதியும் ,குரு ,புதன் ,சூரியன் மற்றும் சுக்கிரன் பலப்பட தான் பெற்ற மற்றும் கற்ற  கலைகளால் சுகம் அடையலாம்.
சுகாதிபதி விய ஸ்தானமான பணிரெண்டாமிடம் ஏறி பலப்பட (உச்சம்,ஆட்சி போன்ற..) வெளிநாடு சென்று அதாவது "திரைகடல் ஓடி திரவியம் தேடி " சுகப்படலாம்.
சுகாதிபதியும்,சகோதர ஸ்தானமான மூன்றாமிடமும் தொடர்பு கொண்டு பலப்ட்டு சகோதரகாரகன் செவ்வாயும் பலப்பட தனது சகோதரர்களால் சுகம் பெறலாம்.
நான்காமாதிபதியும்,சந்திரனும் பலப்பட தாய்மூலம் சுகத்தை பெறும் யோகம் உண்டு.பொருள் ஈட்டுவதன் மூலமோ அல்லது அம்மா வழியாக சொத்து பெறலாம்.
இப்படியாக ஒருவர் தன் வாழ்வில் பெறும் சுகங்களை பார்க்கலாம்.
அதேநேரத்தில் சுகாதிபதி நீசம்,அஸ்தமனம் மற்றும் பகை பெற்று சுக ஸ்தானத்தில் பாவி நிற்க தன் வாழ்வில் சுகம் என்பது குறைவு.எவ்வளவு பொருள் ஈட்டினாலும் அதை மகிழ்சியாக அனுபவிக்கும் சுகம் அடைவதில்லை.
நான்காமிடத்தில் கேது மற்றும் மாந்தி கூடி நான்காமாதிபதியும் நீசமடைய கடைசிவரை சொந்த வீட்டில் படுத்துறங்கும் சுகம் அவனுக்கு கிடைக்காது.
******************************************
(தங்களது சாதகங்களில் எந்தவிதமான சுகங்களும் மற்றும் யோகங்களும் உள்ளது என்பதை ஆராய்ந்து போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பலன் பெறலாம்.மேலும் சாதக பொருத்தம்,திருமணதடை மற்றும் புத்திர தடைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ற பரிகார விவரங்கள் அளிக்கப்படும் )
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
செல் ; 97 151 89 647
செல்; 740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டணம் உண்டு)
My Email
masterastroravi@gmail.com
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
******************************8****8**

Monday 10 July 2017

உங்கள் சாதகப்படி இல்லறத்தை நல்லறமாக அமைக்க...

       உங்கள் சாதகப்படி இல்லறத்தை         நல்லறமாக  அமைக்க....

                   
         

கிரகங்கள்  படுத்தும் பாடு- ( 80 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

உலகில் குறையில்லாத மனிதர்களே  கிடையாது."குற்றம் பார்க்கின சுற்றம் இல்லை.மனிதர்களை குறைகளோடு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.எனவே ஒரு சாதகத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தோமேயானால் ஒவ்வொறுவருடைய சாதகத்திலும் ஒவ்வொறுவிதமான குறையிருக்கும்.

                  சிலருக்கு தனமிருக்கும் சுகமிருக்காது.சிலருக்கு அறிவு ,ஞானம் இருக்கும் சாம்பாதிக்கும் திறமையிருக்காது.சிலருக்கு அழகு இருக்காது .ஆனால் அழகான மனைவி அமையும்.இப்படியாக சாதகத்தில் நிறைகள் பல இருந்தாலும்.,ஏதோ ஒரு குறையானது ஒட்டுமொத்த நிறைகளையும் குலைத்துவிடும்.அதேபோல குறைகள் பல இருந்தாலும் நாம் செய்யக்கூடிய ஏதோ ஒரு நிறைவான மாற்றம் ஒட்டுமொத்த குறைகளையும் நிறைகளாக்கிவிடலாம்.

                திருமண விஷயங்களிலும் குறைகள் இருந்தாலும் அந்த குறைகளுக்கு ஏற்றார்போல விவாகம் தேடும்போது அந்த குறைகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இனிய இல்லறமாக மாற்றிவிடலாம்.அதற்கு ஞானமும் ,அனுபவமும் மிக்க சோதிடர்கள் ஆலோசனை தேவை.

சில ஆலோசனைகள்;-

1) ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி மறைவுஸ்தானமாகிய ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடங்களில் இருந்தாலும் அதிலும் அந்த ஸ்தானதிபதிகளுடன் இணைந்திருக்கும் சாதகத்தை பெற்ற ஒரு பெண்ணை அவ்வித பாதிப்பிலிருந்து விடுபட அந்த பெண்ணை வீட்டில் அதிகம் தங்காத உத்யோகம் பார்க்கும் ஒருவருக்கு அல்லது வெளிநாட்டில் சம்பாதிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்களது இல்லறமானது கிரக பாதிப்புகளிலகருந்து விலகி நல்லறமாக அமைந்துவிடுகிறது.

2) செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு சம தோஷம் உள்ளவரையோ அல்லது போலிஸ்,இராணுவம் ,பொறியாளர் போன்றவற்றில் வேலை பார்க்கும் நபரை திருமணம் செய்யும்போது மகிழ்சியான மணவாழ்வு அமையும்.

3) சுக்கிரன் பாதிக்கப்பட்வர்கள் கலப்பு திருமணம் செய்து கொள்வதன் மூலம் மகிழ்சியான மணவாழ்வு அமையும்.

4) லக்கனம் மற்றும் ராசிக்கு ஒன்று ,ஏழு மற்றும் இரண்டு ,எட்டு போன்ற இடங்களில் ராகு,கேது (சுபர்பார்வை இன்றியும்,  அந்த  ஸ்தானதிபதிகள் பலமிழந்து இருந்தால் மட்டும் )  சம்பந்தப்பட்டவர்களுக்கு  களஸ்திர தடையை உருவாக்கி கால தாமத திருமணத்தை தருவதோடு மனதிற்கு பிடித்த மனைவி அமைவதில் தடை உருவாகலாம்.
இதற்கு திருநாகேஸ்வரம்,பேரையூர் மற்றும் காளஸ்தி போன்ற ராகுபகவான் ஸ்தலங்களுக்கும்,கீழ்பெரும்பள்ளம் போன்ற கேதுபகவான் ஸ்தாலங்களுக்கு சென்று பாலாபிஷேகம் வழிபாடு செய்துகொள்ளல்.

அல்லது

.திருமணத்தன்று கணவனால் கட்டப்பட்ட மாங்கல்யத்தை அம்பாளுக்கு போட்டுவிட்டு தாலி பெருக்கி போடும்போது மறுதாலி கோர்த்துக்கொள்ளச்செய்தல்
.இடைப்பட்ட காலங்களில் மஞ்சளை தாலியில் வைத்து கட்டிவிடவேண்டும்.

.அல்லது

வெளிநாட்டில் தங்கி சம்பாரிக்கும் கணவனாக பார்த்து திருமணம் செய்து வைக்கும்போது தினம் சந்திக்கும் வாய்ப்பு குறைவதால் அவர்களுக்கிடையே எவ்வித பிரச்சினையின்றி இல்லறம் நல்லறமாக அமைய வாய்ப்புகள் உண்டு.

5) லக்கனம் அல்லது ராசிக்கு ஏழாம் அதிபதி சனியாக இருந்து செவ்வாய் வீட்டிலிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து பலம்பெற்றிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து சனி வீடு இருந்தாலோ அவர்களுக்கு அமையும் ஜோடியானவர் மருத்துவராகவோஅல்லது பொறியாளரோ அல்லது வெளியில் தங்கி வேலை பார்ப்பவரூக இருத்தல் நலம்.

6) புத்திரதோஷமும் ,பால் பொருத்தமும் ஒரு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ அதே மாதிரி புத்திரதோஷம் உள்ளவரை ஜோடியாக இணைக்கூடாது.ஐந்தாமிடம் அல்லது ஐந்தாமாதிபதி யோடோ அல்லது  குரு பகவனோடு ராகு மற்றும் கேது தொடர்பு உண்டானால் புத்திரதோஷம் ஆகும்.

           இவை மூன்று வகையில் கிரக வலிமையைப்பொறுத்து தோஷத்தின் தன்மையானது அமைகிறது.இதுபோன்ற தோஷம் உடையஹர்களுக்கு தோஷம் இருந்தாலும் புத்திரம் பாக்கியம் உடனடியாக காலதாமதமின்றி அமையும்போது அந்த புத்திரத்தால் சுகமடையும் பாக்கியம் அமையாது அல்லது ஆண் வர்க்கமின்றி பெண்குழந்தைகள் மட்டும் பிறக்க வாய்ப்புண்டு.
அல்லது 
புத்திரபாக்கியமின்றி இருப்பர்.

பரிகாரம்


       தம்பதிகள் இருவரும் முழுபக்தியோடு விரதமிருந்து குளித்துவிட்டு அரச மர விநாயகரை வழிபட்டு அரசமரம் மூன்று முறை வலம் வந்து சுமங்கலி பெண்கள் ஐந்து பேருக்கு தங்களது வசதிக்கு ஏற்றார்போல பூ,பொட்டு ,மஞ்சள் கயிறு மற்றும் வஸ்திரம் வைத்து வசதிக்கு ஏற்றார்போல ஜந்து பேருக்கு தானம் செய்தால் சகல தோஷமும் நீங்கும்.

அல்லது

ஷஷ்டியில் விரதமிருக்க அகப்பையில் குழந்தை உருவாகும் என அழகாக விளக்குகிறார்கள்.

    மேற்கண்ட புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பின்பற்றி இறையருளை பற்றி நிற்க நமது வாழ்வானது இனிய இல்லறமாக அமைத்துக்கொள்ளலாம்.

நன்றி ! வாழ்க வளமுடன்

( தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருங்தாலும் ,தங்களது பிறந்ததேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது
வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )

அன்புடன்

         





சோதிடர்ரவிச்சந்திரன்
     M.SC,MA,BEd,(Teacher)
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

       செல் : 97 151 89 647,
         
செல் : 740 257 08 99

My mail
masterastroravi@gmail.com

My web.click hear
AstroRsvichandransevvvai.blogspot.com


மனைவி அமைவதெல்லாம்...கிரக அடிப்படையிலான ஆய்வு ?

மனைவி அமைவதெல்லாம் ......

                        

          கிரகங்கள் படுத்தும் பாடு -


       ஒரு வீட்டுக்கு இல்லாள் ஆக வரும் பெண்ணானவள் நன்கு சிரித்த முகமாக லட்சுமி கடாட்சமாக இருந்தால் அந்த குடும்பமே கோவிலாக மாறிவிடும்.ஒரு சில பெண்கள் அடி எடுத்த வைத்த வீடு கூரையாக இருந்தாலும் கோபுரமாக மாறிவிடும்.ஒரு சில பெண்கள் அடு எடுத்து வைத்த வீடு பெரிய கோபுரமாக இருந்தாலும் இவள் அடி பட்ட பிறகு அந்த குடும்ப சிதறிப்போய்விடும்.

ஒருவர் என்னதான் படித்திருந்தாலும் ,எத்தனை செல்வங்கள் தேடியிருந்தாலும் ,,  என்ன பதவி வகித்தாலும் மற்றும் எவ்வளவு புகழ் தேடியிருந்தாலும் திருமணம் இல்லாத வாழ்வு நிலவு இல்லாத வானம் போனறது..

ஒருவரது இல்லறம நல்லறமாக அமைய சமூகம் அவனைப்போற்ற மனைவியின் பங்கு முக்கியமானது.சமூகத்தில் ஒரு ஆடவனுக்கு கிடைக்கும் முதல் மரியாதை மனைவியிலிருந்தே ஆரம்பமாகிறது.

        சிலர் திருமணத்திற்கு பிறகு அவன் செய்யும் தொழில் மேன்மையுற்று திகழ்வதற்கு அவனது சாதக கட்டத்தில் ஏழாம் அதிபதியும் மற்றும் பத்தாம் அதிபதியும் நண்பர்களாக அமைந்து நல்லவர்களது மனையில் இருந்தாலும்,இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டாலும் (இவர்கள் வீட்டில் அவர்கள் வீட்டில் இவர்கள் என) இவர்களுடன் லக்கனாதிபதியும் தொடர்புபெற  மேற்கண்ட அமைப்பு உண்டாகிறது.

      அதேபோல இவர்களுடன் இரண்டாம் அதிபதியும் ,லாபாதிபதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டாலோ அல்லது பரிமாறிக்கொண்டாலோ அல்லது நட்சத்திர சார பரிவர்தனை பெற்றிருந்தாலும் குடிசையில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்கு பின் தாம் செய்யும் தொழிலால் மேன்மையுற்று கோபுரமாக மாறிவிடுவார்கள்.

  அதேநேரத்தில் ஒருவருக்கு சரியான மனைவி அமையாதபோது அவனது இல்லற வாழ்வு சரியாக அமையாமல் என்னதான் அழகு,திறமை ,அறிவு ,அந்தஸ்து பெற்றிருந்தாலும் அவனது வாழ்வானது திசை மாறி சென்றுவிடுகிறது.இதற்கு காரணம் என்னவாக இருக்கும் ஆராய்ந்து நோக்கில் கீழ்வரும் காரணங்கள் காரணமாகிறது.

         ஏழாம் அதிபதி ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டில் மறைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியோடு மேற்கண்ட அதிபதிகள் சேர்ந்திருந்தாலும்,
# களஸ்திரகாரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானமேறியிருந்தாலும் அல்லது அவர்களுடன் தொடரபு பெற்று அமைந்திருந்தாலும்,

      ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ இரண்டு மற்றும் ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் பாவிகளான ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் தொடர்பு பெற்றிருந்தாலும்,

       ஏழாம் அதிபதி மற்றும் குடும்பாதிபதி இருவரும் நீசம் மற்றும் அஸதமனம் பெற்றிருந்தாலும்,

       களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் அசயர்களான ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருந்தாலும்,மேலும் அவை நீசம் மற்றும் பெற்றிருந்தாலும் ,

மேற்கண்ட இதுபோல பல காரணங்கள் ஒருவரது சாதகங்களில் இருப்பின் மனைவி வந்த பிறகு அவனது வாழ்வு திசைமாறி குலைந்துவிடுகிறது.
எனவே தனது குடும்பத்திற்கு வரும் பெண்ணை தனது குலவிளக்கை ஏற்றிவைக்க வந்தவள் என்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக உபய லக்கனமோ அல்லது ராசியையோ அல்லது லக்கனமும் ராசியும் ஒன்றாக பெற்றவர்களுக்கு மட்டும் லக்கனாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் இருவரும் உச்சம் ,ஆட்சி என பலப்படும்போது கிரகயுத்தம் ஏற்படுவதால் கட்டியே மனைவியை எதிரியாகிவிடுவாள்.

அதேபோல ஒரு ஆடவர் /பெண்டிர் இருவரது சாதகத்திலும் சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் ,செவ்வாய் சேர்க்கை பெற்று சுபர் பார்வை பெறாமல் மனோகாரகன் சந்திரனும் கெட்டுவிட்டால் அவர்கள் கட்டிய இணையோடு தாம்பத்ய வாழ்வில் திருப்பி ஏற்படாமல் வரம்பு மீற வாய்ப்பு உண்டு.

எனவே ஒருவனுக்கு மனைவி அமைவதெல்லாம் நல்ல கிரகங்கள் தரும் வரம் எனக்கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

(தங்களது சாதக பலன் மற்றும் திருமணப்பொருத்தங்கள் போன்ற விவரங்களை போன் வழியாக எந்த நாட்டில் இருந்தாலும் பலன்பெறலாம்.எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு 97 151 89 647 பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பினால்போதும்.கட்டணம் உண்டு)

My Email:
masterastroravi@gmail.com

My  other website.click hear
AstroRavichandransevvai.blogspot.com

             




அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு

செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99.
நன்றி !

Friday 7 July 2017

சாதகத்தில் உங்களை வழி நடத்தி செல்லும் கேப்டன் யார் ?

சாதகத்தில் உங்களை வழி நடத்தி செல்லும் கேப்டன் யார் ?


கிரகங்கள் படுத்தும் பாடு -


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

  ஒரு கப்பலை வழி நடத்தி செல்ல ஒரு நல்ல கேப்டன் அவசியம் ஆகும்.அதேபோல மனித வாழ்வினை நல்லபடியாக நடத்தி செல்ல கேப்டனாக செயல்படுபவர் அவரது லக்கனாதிபதியே ஆகும்.எப்படி ஒரு நல்ல கேப்டன் சிக்கலான சூழ்நிலையிலும் சமயோதிததனமாக செயல்பட்டு பிரச்சினையிலிருந்து காத்து செல்வதுபோல லக்கனாதிபதியானது அவரது சாதகத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து இருப்பினும் லக்கனாதிபதி மட்டும் பலமுடையதாக இருந்தால் அவரது வாழ்கை கடலில் எவ்வளவுதான் தத்தளித்தாலும் சரியாக அவரை அவராகவே வழிநடத்தி வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் எதிர்த்து போராடி வெற்றிபெற்றுவிடுவார்.

  லக்கனாதிபதியானது ஒருவருக்கு சுபராக இருக்கும் பட்சத்தில் நேரிய வழியிலும்,பாவராக இருக்கும் பட்சத்தில் நேரிய வழி அல்லாத நிலையிலாவது போராடி ஜெயிப்பார்.

  லக்கனாதிபதியானது ஆட்சி,உச்சம் ,கோணம் மற்றும்,கேந்திரம் போன்ற நிலைகளில் இருந்து பலமடைந்து இருந்தால் அவர் எவ்வித சூழலிலும் தாழ்ந்து போகமாட்டார்.

  லக்கனாதிபதியானது சுபராக இருக்கும் பட்சத்தில் கேந்திரம் மற்றும் கோணங்களில் பலமடைந்து இருத்தலும்,பாவியாக இருக்கும் பட்சத்தில் மறைவிடங்களில்(3,6,8,12 )இருந்து ஆட்சி,உச்சம் போன்ற பலமடைந்து இருப்பது நலம்.

  ஒருவருக்கு என்ன திசை நடந்தாலும் அவை லக்கனாதிபதி இருக்கும் இடத்திலிருந்து கேந்திர மற்றும் கோணங்களில் இருந்து லக்கனாதிபதிக்கு சுபராக இருக்கும் பட்சத்தில் அந்த திசையானது நல்லது செய்யும்.மாறாக மறைவிடம் மற்றும் பகை பெற்று இருப்பின் அந்த கிரகத்தின் திசையானது சாதகருக்கு நல்லது செய்யாது.

  ஒரு திசை நடத்தும் கிரகமானது லக்கனத்திற்கு மறைவிடமாக இருந்தாலும் லக்கனாதிபதிக்கு கேந்திர கோணங்களில் இருப்பின் அந்த திசை நன்மையையே செய்யும்.

  லக்கனத்திற்கு மறைவிடங்களில் லக்கனாதிபதி இருந்தாலும் அவை உசசம்,ஆட்சி போன்ற பலம் பெற்று இருந்து அந்த லக்கனாதிபதி இருந்த வீட்டிற்குரியவன் கேந்திர கோணங்களில் பலமாக நின்று லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியையோ குருபகவான் பார்த்தால் சாதகர் எந்த நிலையிலும் முன்னேறி செல்வான்.

  லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் கேந்திர கோணங்களில் நின்று இவர்களுக்கு இலக்கினாதிபதியின் சேர்க்கை,பார்வை மற்றும் சாரத்தொடர்பு இருந்தால் இவர்களின் திசா புத்தி காலங்களில் சாதகன் லக்கினாதிபதியின் ஆதரவு ஆதிபத்திய கிரகங்களுக்கு இருப்பதால் சாதகன் வாழ்வில் முன்னேறுவான்.

  ஒருவனுடைய சாதகத்தில் யோகம் தரும் கிரகங்கள் இலக்கினத்திற்கு கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து இருந்தாலும் அக்கிரகங்கள் இலக்கினாதிபதிக்கு மறைவிடங்களில் நின்றால் அக்கிரகங்கள் நடத்தும் திசையால் சாதகருக்கு நன்மைகள் ஏற்படுவதில்லை.

  லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் இலக்கினத்திற்கு மறைந்தாலும் அவை இலக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருந்தால் அவை முழு மறைவு அல்ல. அவ்வாதிபத்திய திசை காலங்களில் சாதகனுக்கு நன்மையே உண்டாகும்.
  லக்கினத்திற்கு சுப ஆதிபத்திய கிரகங்கள் லக்கினத்திற்கு ஆறு,எட்டு ,பணிரெண்டில் மறைந்து லக்கினாதிபதிக்கும் மறைந்தால் முழு மறைவே.சாதகனுக்கு அக்கிரக திசை காலங்களில் சாதகனுக்கு நன்மைகள் உருவாகுவதில்லை.

ஒரு சாதகத்தில் ஒரு கிரகம் அசுப ஆதிபத்தியம் பெற்று அவை லக்கினாதிபதிக்கு மறைவு ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினால் அந் கிரக ஆதிபத்தியத்திற்குரிய தீய பலன்களையே கொடுப்பான்.
  லக்கினாதிபதி நின்ற வீட்டோன் ஆட்சியே பெற்றிருந்தாலும் அவை இலக்கினத்திற்கும்,இலக்கினாதிபதிக்கும் மறைந்து விட்டால் அந்த சாதகனின் வாழ்க்கையில் பிரச்சினைகளும் ,போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கும்.

லக்கினத்திற்கு துர்ஸ்தானதிபதிகள் (6,8,12) அவரவர் வீட்டில் ஆட்சி பெற்று இலக்கினாதிபதி தொடர்பு பெறின் அவரது திசை காலங்களில் அந்த தொடர்பு பெற்ற துர்ஸ்தானதிபதியை பொறுத்து சாதகர் தீய பலனை அனுபவிப்பான்.

எனவே எந்த திசை நடந்தாலும் சோதிடராகிய நாம் அவை லக்கினத்திற்கும்,லக்கினாதிபதிக்கும் எவ்வித தொடர்பு உள்ளது என்பதை முதலில் நன்கு கவனித்த பின்பே சாதகருக்கு பலனளிப்பது அவசியமாகும்.இலக்கினத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத அந்த திசையானது சாதகனுக்கு நன்மையை உண்டாக்குவதில்லை.

உதாரணமாக லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி லக்கினாதிபதிக்கும் ஐந்து,ஒன்பது போன்ற கேந்திரகோண இடத்தில் பலம் பெற்றால் அவை நடத்தும் திசை பலன்தரும்.மாறக மறைவிடத்தில் நிற்பின் சாதகர் பலவித வேதனைகளுக்கு ஆட்படுவார் .

( தங்களுடைய சாதகங்களையும் இதுபோல கிரகம் நடத்தும் திசையானது லக்கினாதிபதியோடு தொடர்பு பெற்றுள்ளதா ?அவை நன்மை செய்யுமா ? தீமையை செய்யுமா ? என்பதை ஆராய்சி செய்து போன் வழியாக எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் பலன் பெறலாம்.தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை அனுப்பி பலன  பெறலாம்.கட்டணம் உண்டு )

அன்புடன்              
                        

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆராய்சி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

My Email
masterastroravi@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com

செல்; 97 151 89 647
செல்; 740 257 08 99

My what's up no
  97 151 89 647