Friday 24 June 2022

வாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வது எது?

வாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வது எது?

                

                               


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     மனிதவாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வதில் பெரும்பங்கு ஆற்றுவது அவரது ஜாதகத்தில் வரக்கூடிய தசாபுத்திகளும் மற்றும் கோச்சார பலன்களுமே  முதன்முதல் காரணமாக அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் எவ்வளவுதான் யோகமான  நிலையில் கிரகங்கள் நின்று இருந்தாலும் அந்த யோகமான தசாபுக்திகள் வராத நிலையில் இருந்தும் பயனில்லாத நிலையே.


  சில நேரங்களில் யோகத்தை தரக்கூடிய அமைப்புகள் அனுபவிக்க இயலாத குழந்தை பருவத்தில் அல்லது அந்திம வயதில் வரும் ஜாதக அமைப்பை பெற்றவர்களும் துரதிஷ்டவாளிகளே ஆவார்.


    ஒருவர் ஜாதகத்தில் யோகாதிபதிகள் என்று சொல்லக்கூடிய கோண அதிபதிகள் தசைகளும் அனைத்தும் நல்லவையே தந்துவிடும் என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.


   சில நேரங்களில் கோண அதிபதிகள் நீசம்,பகை, அஸ்தங்கம் மற்றும் மறைவிடம் போன்ற நிலைகளில் இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் தொடர்பினை பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த யோக அதிபதிகள் நற்பலனை தந்துவிடுவதில்லை.


 சிலருக்கு அவ யோகத்தை தரக்கூடிய கிரகங்களாக இருந்தாலும் அவை இயற்கை சுப  கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பை பெறும்பொழுது அதன் தசை காலங்களில் எதிர்பார்க்காத அளவுக்கு யோகங்களை அள்ளித் தந்து விடுவது உண்டு.


   ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தருவதில் கேந்திர மற்றும் கோண அதிபதிகள் (யோகர்கள்) மட்டும் என்று முடிவு செய்து விட முடியாது. அதேபோல மறைவு இட  ஸ்தானாதிபதி  எல்லாம் தனது தசையில் இன்னல்களை மட்டுமே தரும் என்பதை அறுதியிட்டு கூறிவிட முடியாது .


  ஒரு கிரகம் நடத்தும் தசை யோகத்தை அள்ளித் தர சுபத்துவ நிலையே மேலோங்கி நிற்கிறது.


  ஒருவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரக அமைப்புகள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் இருந்தாலும் அந்த தசா அமைப்புகள் அவரது வாழ்வில் வராத நிலையில் இருந்தால் அதனாலும் அந்த யோக அமைப்புகள் இருந்தும் பயனில்லாத நிலையே மேலோங்கி நிற்கிறது.


  எனவே ஒரு கிரகம் நடத்தும் தசை லக்கன யோகராக இருந்தாலும் அல்லது சுபத்துவம் பெற்று நின்றாலும் அந்த தசையானது அவரது வாழ்வில் உரிய வயதில் வந்தால்தான் அந்த ஜாதகத்தை யோக ஜாதகம் வரிசையில் சேர்க்கலாம்.


ஒரு கிரகம் தனது ஆதிபத்தியம் தரும் பலனை அதன் தசை காலங்களில் மட்டுமே தருகிறது.ஆனால் அதன் காரக பலன்களை தனது வாழ்நாள் முழுவதும் தருகிறது.


  ஒரு கிரகம் நடத்தும் தசை யோகத்தை தர அவை இயற்கை சுப கிரகமாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் யோகத்தை தரும் என்பது பொதுவான விதி ஆகும்.


 ஆனால் இந்த விதிகளுக்குள்ளும்  விதி விலங்குகள் சில உண்டு.


1) இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும் கேந்திரத்தில் நின்று உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் கேந்திராதிபத்த்திய தோஷ அமைப்பால் பாதிக்கப்பட்டு விடும்.


2) பாவ கிரகங்களாக இருந்தாலும் அவை நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இல்லாமல் மறைமுக வலுப்பெற்று இருந்தால் தான் அதன் திசை காலங்களில் யோகத்தைத் தரும்.


3) ஒரு கிரகம் ஆனது பாப கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவற்றுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றிருந்தாலும் யோகத்தை தராது என்பது பொது விதியாக இருந்தாலும்  ,  

விதி விலக்குகளாக சுபத்துவ  தன்மையின் அடிப்படையில் அவற்றை இயற்கைச் சுபக்கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்புகளை பெரும்பொழுது அவை பாவ தன்மை நீங்கி அதன் தசை காலங்களில் யோக பலனை தந்து விடுகிறது.


    மேற்கண்ட வகையில் ஒவ்வொரு விதிக்குள்ளும் சில விதிவிலக்குகள் மற்றும் சூட்சும உண்மைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.


   இதேபோல் ஒருவருக்கு யோக தசை நடக்க கூடிய காலங்களில் கோசார அடிப்படையில் அஷ்டமச் சனி ஏழரைச் சனி நடப்பில் இருப்பின் அந்த யோகம் அதன் தசை காலங்களில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தர இயலாமல் போய் விடுகிறது அதிலும் குறிப்பாக ஜென்ம ராசியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகக்கூடிய காலங்களில் சாதகருக்கு மிகுந்த தொல்லைகளையும் தந்து விடுவது உண்டு.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & செல்

    9715189647


      செல்

  9715189647

    7402570899


Email

   masterastroravi@gmail.com


  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Thursday 23 June 2022

கவர்ந்து இழுக்கும் தேஜஸ் கொண்ட நபர் யார்?-ஜோதிடவியல் வழி நின்று தரும் விளக்கம்.

 கவர்ந்து இழுக்கும் தேஜஸ் கொண்ட நபர் யார்??-ஜோதிடவியல்  வழி நின்று தரும் விளக்கம்.

                             


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சிலரைப் பார்க்கும்போது மட்டும் படைப்புக்குக் காரணமான பிரம்மா மீது கோபம் வந்துவிடுகிறது. வைத்த கண் எடுக்காமல் பார்க்க வைக்கும் அளவிற்கு பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் வசீகர தேஜஸ் கண்டு அசந்து ஏக்க பெருமூச்சு விடத்தான் செய்து விடுகிறது . 

ஏன் இந்த ஓரவஞ்சனை  என எல்லோருக்கும் எழும் கேள்வி தான் என்னுள்ளும் எழுவது உண்டு.ஆனால் இந்த

தேஜஸ் என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது.தேஜஸ் என்பதன் விளக்கம் ஒளி பொருந்திய பிரகாசமான முகம் ஆகும்.இவை இரு பாலருக்கும் பொருந்தும் பதிவு ஆகும்.


   உளவியல் அடிப்படையில் இந்த தேஜஸ் உடைய தோற்றத்திற்கு அவர்களது ஆளுமை தன்மையே காரணமாக அமைகிறது. ஒரு சிலரது நல்லஎண்ணம், நல்லசெயல், மனதை அலைபாயவிடாமல்  

ஒருமுகப்படுத்தக்கூடிய திறமை போன்றவை காரணமாகவும் அமைகிறது .


 அழகு என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று நீங்கள் வியாக்கியானம் செய்தாலும் உங்களையும் அறியாமல் உங்கள் கண் வம்படியாக இழுத்து பார்க்க வைத்து விடுவதுண்டு.


 நீங்கள் சொல்லும் விளக்கம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.இந்த வசீகர  தோற்றத்திற்கு என்ன காரணம் அதை முதலில் சொல்லி புட்டு அப்புறம் உன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்து என மனதுக்குள் குமைவது புரிகிறது.


 ஒருவரது தேஜஸ் உடைய வசீகரமான தோற்றத்தை தருவதில் லக்கனம் , ராசி ,லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி ஆகியவை முழூ முதல் காரணமாக அமைகிறது.நவகிரகங்களில் கவர்ச்சி நாயகன் சுக்கிரன் பகவான் மற்றும் அழகு நாயகி சந்திரன் பகவான் ஆகிய இரு கிரகங்களும் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கனம்  ஆகிய இரண்டையும் சனி பகவான் பார்வை செய்யகூடாது.மாறாக வளர்பிறை சந்திரன், சுக்கிரன் மற்றும் குரு பகவான் போன்ற இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பை பெற்று இருக்க வேண்டும்.


 ராசி அல்லது லக்கனத்தில் சனி பகவான் அல்லது நிழல் கிரகமான ராகு, கேதுக்கள் அமரக்கூடாது.


  ராசி அல்லது லக்கினத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன், இடம் பெறுவதோ அல்லது பார்க்கப்படுவது வசீகரமான தோற்றத்தை தருவதற்கு ஏதுவான ஜாதக அமைப்பாகும்.


   ஒருவரது வசீகரமான கவர்ந்து இழுக்கும் தோற்றம் உடையவராக இருப்பதற்கு சுக்கிரன் பகவான் பங்கு அலாதியானது. சுக்கிரன்  ராசி மற்றும் இலக்கணத்தோடு தொடர்பு கொண்ட அமைப்பு பெற்றவர்கள் தன்னை அழகாக மற்றவருடன் காட்டிக் கொள்வதில் அக்கறை கொள்வார்கள். தங்களது நடை, உடை ,நளினம் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.அவர்களது அங்க அவயங்கள் ஒரு நல்ல ஒரு சிற்பியை கொண்டு செதுக்கியது போல இருப்பார்கள்.இவர்கள் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருப்பார்கள்.


 பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு நல்ல தேஜஸ் உடையவர்களாக இருப்பதற்கு அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி  குருவாக இருந்து லக்கனத்தில் நின்றாலும்  அல்லது லக்கினத்தில் குரு அல்லது இலக்கணத்தை குரு பார்க்கும்  அமைப்பு பெற்றவர்கள் மற்றவர்கள் வணங்கும்படியான ஒரு ஒளிவட்டம் அவரைச் சுற்றி இருக்கும்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரகனான புதன் பகவான் வலுப்பெற்று லக்கினத்தில் இருந்தாலும் அல்லது இலக்கணத்தோடு தொடர்பு கொண்டாலும் என்றும் மனதை இளமையாக வைத்து புதுமையை நோக்கி தன்னை அப்டேட் செய்து கொள்ளும் நபராக அறிவு திறன் மிக்கவராக ஒருவர் திகழ்வார்.


  ஒருவரது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி உடன் பார்வை மற்றும் சேர்க்கை போன்ற அமைப்பில் தொடர்பு கொள்ளும்பொழுது அழகு வதனம் கொண்ட நபராக ஜொலிக்க காரணமாக அமைகிறது.


     ஒருவரது ஜாதகத்தில் சிம்மமும் மற்றும் சூரியனும் வலுவான அமைப்பை பெற்று அவை ராசி மற்றும் இலக்கணத்துடன் தொடர்பு கொண்டுள்ள அமைப்பை உடையவர்கள்    நல்ல நேர்மையான நிர்வாகம் திறன் கொண்ட ஆளுமை மிக்கவர்களாக திகழ்வார்.உடல் ,பொருள் ,ஆவி அனைத்தையும் தன்னை சார்ந்தவர்களுக்கு அர்ப்பணிக்கும் நல்ல குணம் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி நல்ல ஒரு ஒளிவட்டம் இருக்கும்.


      ஒரு நாட்டையே  நிர்வாகிக்கும் நேர்மையும் நாணயம் மிக்கவராக மற்றவர் போற்றும் படியான, அவரது பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அடங்கிப் போகும் தன்மை கொண்ட தோற்றமாக மற்றும் ஆளுமை தன்மை கொண்டவராக திகழ்வார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

   9715189647


  செல்

  9715189647

‌‌.  7402570899


Email ;  masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                  



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்) கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Wednesday 22 June 2022

தொழில் மேன்மை பெற தேவையான கிரக அமைப்புகள்.

 தொழில் மேன்மை பெற தேவையான கிரக அமைப்புகள்.


                               



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    சம்பாதிப்பது என்பது புருஷ லட்சணம் ஆகும்.சம்பாரித்து குடும்பத்தை வழி நடத்துவதில் குடும்ப தலைவனுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.தான் ஈட்டிய பொருளாதரத்திற்கேற்ப குடும்பத்தை வழிநடத்தி செல்வதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக வந்து விட்டார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


 ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று நிற்க வேண்டும். எந்த கிரகம்  அதிக சுபத்துவம் பெற்று ராசி ‌மற்றும் லக்கினத்திற்கு  இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்கிறபோது அவை சார்ந்த தொழில் ஜாதகருக்கு அமையும்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான பத்தாமிடம் வலுவிழந்து ஆறாம் இடம் வலுப்பெற்று நிற்கின்ற அமைப்பை பெற்றவர்கள் கடைசி வரை பிறரிடம் வேலை செய்தே பிழைக்க கூடியவர்களாக உள்ளார்கள்.


 மாறாக எவர் ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இடம் வலுவிழந்து பத்தாமிடம் வலுப்பெற்ற அமைப்பைப் பெற்றவர்கள் அவர்கள் தன் வாழ்வின் தொழில் செய்து பிழைப்பை உயர்த்திக் கொள்பவர்களாக இருப்பார்கள்.


 ஒருவரது ஜாதகத்தில் அதிக சுபத்துவ பெற்ற கிரகம் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு தொழில் ஸ்தான அதிபதிகள் தன, லாப ,பாக்கிய மற்றும் இலக்கணத்துடன் தொடர்பு கொண்டுள்ள  நிலையில் தொடர்ந்து யோக தசா புக்தி அமைப்புகள் வரும் அமைப்பை பெற்றவர்கள் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


    பெருங் கேந்திரம் என்று அழைக்கப்படும் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் அதிபதியும்  மற்றும் வருமானம்  அல்லது  பாக்கியத்தை அள்ளித் தருகின்ற  ஸ்தானமான பெரும் கோணம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாம்  இட அதிபதியும் பரிவர்த்தனை பெற்று நின்றோ அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பை அல்லது சேர்ந்துள்ள நிலையில்  1,2,9,10 இடங்களில் இருந்து அவை தொடர்புடைய தசை வரும் பொழுது தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


‌ ஒரு சிலருக்கு தொழில் ஸ்தான அமைப்புகள் வலுப்பெற்று இருந்தாலும் உகந்த தசா அமைப்புகள் வராத நேரத்திலோ அல்லது கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஆரம்பித்த தொழில்  நஷ்டத்தில் முடிந்து விடுவது உண்டு.


 "ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"


  கொக்கு ஆனது சிறுமீன் குஞ்சுகளை எல்லாம் ஓட விட்டு விட்டு  வாடி நின்று காத்திருக்குமாம் ஏன் கொக்குக்கு மீன் பிடிக்கவா தெரியாது.பிறகு ஏன் வாடி நிற்கிறது என்றால் அதன் பசியை போக்க கூடிய பெரிய மீனுக்காக காத்திருக்கிறதாம்.


  ஒருவரது ஜாதகத்தில் தொழில் ஸ்தான அமைப்புகள் வலுப்பெற்று  கீழ் கண்ட ஏதேனும் ஒரு வகையான சுபத்துவம் பெற்ற தசைகள் நடப்பில் இருந்தால் ஒருவர் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


 1)லக்கன யோக தசைகள் நடப்பில் இருக்கும் காலங்களிலும்,


2) பங்கப்படாத குரு பகவான் பார்வை பெற்ற தசை அமைப்புகள் நடப்பில் இருக்கும் காலங்களிலும்,


3) எவ்விதத்திலும் பங்கப்படாத தர்ம-கர்மாதிபதிகள் தசைகள் நடப்பில் உள்ள காலங்களிலும்,


4) வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு, தனித்த புதன் மற்றும் சுக்கிரன் இருந்து அதன் தசை நடப்பில் உள்ள காலங்களிலும்,


5) குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசைகளோ அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த தசைகளே நடப்பில் இருந்தாலும்,


  காலத்தை போல சிறந்த உபாயம் இல்லை.எனவே ஒருவர் வாழ்வில் உயர்வடைய தங்களது மனதிற்கு பிடித்த ஒரு துறையினை தேர்வு செய்து முனைப்புடன் விடாமுயற்சி செய்தால் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைய இயலும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


   செல்

‌ 9715189647

. 7402570899


Email : masterastroravi@gmail.com


                                  



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிட சூத்திரங்கள் -(5) (சூரியன் பகவான்)

 ஜோதிட சூத்திரங்கள்-( 5 )

(சூரியன் பகவான்)

                            


  நவக்கிரகங்களுக்கு தலைவனாகவும், ஒளிமிகுந்த கிரகமாகவும் திகழ்பவை சூரிய பகவானாவார்.


  சூரிய பகவான் லக்கண பாவத்துக்கு காரகராகவும் மற்றும் ஆத்மா காரகராகவும் திகழ்பவர் ஆவார்.


  சிம்மம் வீட்டினை ஆட்சி வீடாகவும் மற்றும் மூல திரிகோண வீடாகவும் சூரிய பகவான் கொண்டு உள்ளார்.


சூரியன் பகவான் ஒரு மாதம் ஒரு ராசியில் வாசம் செய்வார்.சித்திரை மாதம் மேஷ வீட்டில் துவங்கி பங்குனி மாதம் மீன வீட்டிற்கு வருகிறார்.


 சூரியன் பகவான் மேஷ வீட்டில் உச்சம் பெற்று நிற்பதால் சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.மாறாக அதற்கு நேர் எதிர் வீடான துலாம் வீட்டிற்கு  ஐப்பசி மாதத்தில் சூரியன் பகவான் வரும்போது சூரிய பகவான் நீசம் அடைந்து விடுகிறார்.இப்பொழுது வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.


  சூரியன் இருக்கும் வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் குரு,சனி , செவ்வாய் வரும் போது வக்கிரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வரும் போது வக்கிரம் நிவர்த்தி அடைகிறது.


 புதனும் ,சுக்கிரனும் சூரியனை சுற்றி வரக்கூடிய உள்வட்ட கிரகமாகும். புதன் பகவான் சூரியன் இருக்கும் வீட்டிலேயோ அல்லது முன் பின் ஒரு ராசியில் வாசம் செய்வார். சுக்கிர பகவான் சூரியனுடன் அல்லது சூரியன் இருக்கும் வீட்டிற்கு

 முன் பின் இரண்டு ராசிகளுக்குள் வாசம் செய்யும் என்ற அமைப்பு உண்டு.


 சூரிய பகவான் குரு ,சந்திரன், செவ்வாய் ஆகியவற்றை நட்பு கிரகமாக கொண்டுள்ளது. சூரியன் நட்பு கிரகங்களுடன் சேரும் போதோ அல்லது பார்க்கப்படும் போதோ சூரியனுடைய வலிமை அதிகரிக்கிறது.


  சூரியன் உடன் 12 டிகிரிக்குள் சந்திரன் இணையும்போது அமாவாசை வருகிறது. இது சூரியனை வலுவிழக்கச் செய்யும் அமைப்பாகும். இங்கு சந்திரன் தேய்பிறைச் சந்திரன் ஆக செயல்படும். எனவே இங்கு சந்திரன் பாவ கிரகமாக செயல்படும்.சூரிய பகவானும் அரை பாவர் என்பதால் அமாவாசை யோகம் சூரியன் மற்றும் சந்திரனை வலுவிழக்கச் செய்யும் அமைப்பாகும்.


 சூரியனை சம சப்தமாக 180 பாகையில் சந்திக்கும் சந்திரபகவான் பௌர்ணமி  யோகத்தை தருகிறது. இங்கு சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக திகழ்கிறார்.

 சந்திர பகவான் சுபராக செயல்பட்டு தனது சம சப்தம பார்வையால்  சூரியனுடைய வலுவை அதிகரிக்கச் செய்யும்.


 சூரியனுடன் குரு சேர்ந்து இருப்பதும், சூரியன் குரு சமசப்தம பார்த்திருப்பதும் சிவராஜ யோகம் ஆகும். இது சூரியனுடைய வலுவினை அதிகரிக்க செய்யும்.


சூரியன் பகவான் லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்.

.மகர லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலும் இழந்த பலனை திக் பலம் வழியாக மீண்டும் பெறுவார்.


  சூரியன் பகவானை பாவ கிரகமும் சூரியனின் மைந்தனுமான சனி பகவான் எட்டு பாகைக்குள்ளாக நெருங்கமாக இணைந்து நிற்பதோ அல்லது பார்வை செய்வதும் சூரிய பகவானை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டது.


சூரியன் மற்றும் சனி சேர்க்கை மற்றும் பார்வை தொடர்பு சூரியனை மிகுந்த பாவத்துவமாக்குகிறது.இதன் பலன் தந்தை மகன் உறவு நிலைகளை பாதிக்கிறது.அரசு வேலை கிடைப்பதில் தாமதமாகி கொண்டே செல்கிறது.


  இதேபோல் ஒளி கிரகமான சூரியன் பகவான் உடன் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது இணைவு சூரியனை பாதிப்பதுடன் சில நேரங்களில் கிரகண தோஷத்தை தருகிறது.


  சூரியன் பகவான் உடன் அதி நட்பு கிரகமான புதன் இணைவானது "புத-ஆதித்ய யோகத்தை தருகிறது.பொதுவாக சூரியன் பகவான் புதன் பகவானுடன் இணைந்து எட்டு, நான்கு மற்றும் ஒன்றாம் இடங்களில் இருப்பது சிறப்பான கல்வி யோகத்தை தரும்.


 சூரியன் பகவான் கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு தசா நாதனுக்கு தசா நாதனாக ஆறு ஆண்டு காலம் தசை நடத்துகிறார்.


 ஒருவரது ஜாதகத்தில் சிம்மமும் மற்றும் சூரியனும் வலுப்பெற்று உகந்த தசா புக்தி அமைப்புகள் வரும் போது அரசு வேலை அல்லது அரசியலில் உயரிய பதவியில் அமரும் யோகம் உண்டாகும்.


 சூரியன் பகவான் பிதுர் காரகன் என அழைக்கப்படுகிறது.ஜாதகத்தில் ஒருவரது தந்தை வழி உறவுகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.


 சூரியன் உஷ்ணம்,கண் பார்வை,ஒளி, தன் நிலை,சுய உணர்வு, ஆளுமை தன்மை,தலைமை பதவி, எலக்ட்ரிக் வேலை போன்றவற்றிற்கு காரகனாக விளங்குகிறார்.


நன்றி


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & செல்

‌ 9715189647


  செல்

   9715189647

     7402570899


Email: masterastroravi@gmail.com

                              



 அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிட சூத்திரங்கள் -(4) (செவ்வாய் பகவான்)

         ஜோதிட சூத்திரங்கள்-(4 ) (செவ்வாய் பகவான்)

                   



ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    கிரகங்களில் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரு வீடுகளை ஆட்சி வீடாகவும் ,மேஷ வீடு மூல திரிகோண வீடாகும், மகர வீடு  செவ்வாய் பகவான் உச்ச  வீடாகவும், 

கடக வீட்டில் நீச வீடாகவும் கொண்டுள்ளது,


   செவ்வாய் பகவான் சூரியன் ,சந்திரன் மற்றும் குரு பகவானினை  நட்பாகவும், சுக்கிரனையும் சனி பகவானையும் சமமாகவும் மற்றும் புதன் ராகு கேது ஆகிய வற்றை பகை கிரகங்களாக கொண்டு உள்ளது.


 மிருகசீரிடம் சித்திரை, அவிட்டம் ஆகிய  மூன்று நட்சத்திரங்களுக்கு செவ்வாய் தசை நாதனாகவும் கொண்டு தனது தசை கால அளவு ஏழாக கொண்டுள்ளது.


 செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் தங்குவார்.செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு சகோதர காரகராகவும் செயல்படுகிறார்.


 செவ்வாய் பகவான் இரத்தத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.இரத்த வகைகளுக்கும் செவ்வாய் பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


 செவ்வாய் பகவான் " மங்கள காரகன்" என்று அழைக்கப்படுகிறது. காமத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் திகழ்கிறார். செவ்வாய் பகவானுடன் சனி ராகு மற்றும் சுக்கிரன் ஆகியோருடைய சம்பந்தம் ஒருவரை மாறுபட்ட காமம் உடையவராகவும் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம உணர்வு மற்றும் தொடர்பு கொண்டவராக இருப்பார் 


 செவ்வாய் பகவான் பாவத்துவ நிலையில் திருமண ஸ்தானமான லக்கனம்/ராசி , குடும்ப ஸ்தானமான  இரண்டாம் இடம் , 

களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான  எட்டாம் இடம் போன்றவற்றில் இருப்பதோ அல்லது அந்த ஸ்தானங்களை  பார்ப்பதோ அல்லது அந்த அதிபருடன் நெருக்கமாக இணைந்து இருப்பதும் திருமணத் தடையை உண்டாக்குகிறது.


ஒரு மனிதனுக்கு சுகமான திருமண வாழ்வை தருவதில் செவ்வாய் பகவான்  பங்கு மிக முக்கியமானது 


 ராசி/ லக்கனத்திற்கு 2, 4 ,7 ,8 ,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷம் என்னை பொறுத்தவரை உயிரை கொல்லும் அளவிற்கு பயப்படக்கூடிய தோஷமே அல்ல.


 செவ்வாய் பகவானை குரு சனி புதன் , வளர்பிறை சந்திரன், சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ தோஷம் இல்லை என்பதும் உச்சம் பெற்ற செவ்வாய் வீட்டில் இருந்தாலும் ,ஆட்சி பெற்ற மேஷம் மற்றும் விருச்சிகம் வீட்டில் இருந்தாலும் மற்றும் நீசம் பெற்ற கடக வீட்டில் இருந்தாலும் தோஷம் இல்லை என்பதும் , பொதுவான செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் ஆகும்.


   செவ்வாய் தோஷத்திற்கு பயப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் அவை இலக்கனத்தை கெடுப்பதோடு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்த்து பாவத்துவம் அடைய செய்கிறது.


     இரண்டாமிடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை குடும்ப ஸ்தானத்தை பாதிப்பு அடைய செய்வதுடன்  , அதன் பார்வையால் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார். ஏழாமிடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை  ஏழாமிடத்தை  பாதிப்பதோடு தன் பார்வையால் லக்கன பாவத்தையும்  மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்து பாதிப்படையச் செய்கிறார். மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் மாங்கல்ய ஸ்தானத்தை பாதிப்படையச் செய்கிறது மேலும் தன்  ஏழாம் இட பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்து பாதிப்படையச் செய்கிறார்.


 மேற்கண்ட இந்த அமைப்புகள் அனைத்தும் களத்திர தடையை உருவாக்கும் . இந்த பாதிப்பு விஷயங்களை உறுதியாக முடிவு செய்துவிட முடியாது. இவற்றை ஏனைய பிற அமைப்புகளை கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும்.


   லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்து வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்க்கின்ற செவ்வாய் பகவான் கடுமையான கோபக்காரர் ஆகவும்  எதிலும் விடாப்பிடியாக விதண்டாவாதம் பேசக்கூடியவர் ஆகவும் இருப்பார்.


     செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் இருப்பது காரகோ பாவ நாஸ்தியை  தருகிறது. அதாவது சகோதர காரகனான செவ்வாய் பகவான்  சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருப்பது சகோதரனை பாதிக்கும் என்பதே காரக பாவ நாஸ்தி ஆகும்.


     மிதுனம்  மற்றும் கன்னி  இலக்கனங்களுக்கு செவ்வாய் பகவான் தனது தசையில் சொல்ல முடியாத வேதனையை தருகிறது.


    ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலுத்து காணப்பட்டால் பூமி யோகம் உண்டாகும். இதனால் செவ்வாய் பகவானின் "பூமி காரகன்" என்று அழைக்கப் படுகிறது.


  செவ்வாய் பகவான் பாவ கிரகம் என்பதால் நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலு பெறக்கூடாது.செவ்வாய் பகவான் மறைமுக வலுப்பெற்று சுபத்துவமான நிலைகளில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பில் இருப்பின்  நாட்டைக் காக்கும் ராணுவம்  மற்றும் போலீஸ் போன்றவற்றில் பணிபுரிவார். நாட்டிற்காக தீவிரவாதியை சுட்டுக் கொலை பண்ணும் வலிமை படைத்த நெஞ்சுரம் படைத்தவராக இருப்பார். இதனால் இவருக்கு பதக்கங்களும், பட்டங்களும் கிடைக்கும்.


     உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ துறையில் இருந்து மருத்துவராக பிறரது ரத்தத்தை பார்த்து குணம் செய்யக் கூடியவராக சேவை புரிவார்.


   இதில் செவ்வாய் பகவான் நேரடியாக உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று பாவத்துவமாக இருந்தால் பொது இடங்களில் பலரை சுட்டுக் கொல்லும் மற்றும் வெடிவைத்து தகர்க்கும் தீவிரவாதியாக திகழ்வார்.


 செவ்வாய் பகவான் லக்னாதிபதியாக லக்கினத்தில் இருந்தாலும் அல்லது இலக்கணத்தை பார்த்தாலோ முரட்டுத்தனம் உடையவராக திகழ்வார் பள்ளிகளில் மற்ற மாணவர்கள் இவளன் என்னை அடிக்கிறான் என்று பலவேறு மாணவர்கள் ரிப்போர்ட் செய்யும் மாணவனாகவும் இருப்பான்.


 செவ்வாய் பகவான் வலுவாக பெற்ற நபர்களை விளையாட்டு போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தி மடைமாற்றம் செய்ய எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக திகழக்கூடிய வாய்ப்பையும் செவ்வாய் பகவான் தருவார்.


 செவ்வாய் பகவான் நேரடியாக வலுப்பெற்று இருந்தாலும் அல்லது  சுபத்துவ படிநிலைகளுக்கு ஏற்ற கசாப்பு கடையில் கறி வெட்டி ரத்தம் பார்ப்பவராகவும் மற்றும் சமையல்காரர் ஆகவும் திகழ்கிறார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


  செல்

   9715189647

    7402570899


Email  : masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                         



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.