தலைமை பண்பை தரும் சூரியன் பகவான்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனிதன் ஆளுமை நிறைந்து தலைமை ஏற்று நடத்தும் தன்மையுடன் தலைசிறந்து விளங்க சூரியன் பகவானே மிக முக்கியமானது.
ஒரு சின்ன கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்தை வழி நடத்தும் தைரியம் பலம் பெற்ற நிலையில் உள்ள சூரியன் பகவானுக்கு உண்டு என்பதை பார்க்கிறோம்.
தலை இருந்தால்தான் வால் ஆட முடியும். சூரியன் பகவான் நல்ல நிலையில் இருந்தால் தான் எல்லா கோள்களும் சிறப்பாக இயங்க முடியும். ஜாதகத்தில் கோள்களின் தலைவன் என்று "சூரியன் பகவான்" அழைக்கப்படுகிறது.மேலும் சூரியன் பகவான் லக்கன பாவத்திற்கும் காரகன் ஆவார்.ஆத்மா காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் பகவான் உயிர் காரணியான தந்தைக்கு காரகன் ஆவார்.
ஒருவர் தனது ஜாதகத்தில் தந்தையின் நிலை பற்றி அறிந்து கொள்ள சூரிய பகவானை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் நமக்கு எப்படிப்பட்ட தந்தை அமைவார் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதக கட்டத்தில் தந்தை ஸ்தானமாக ஒன்பதாம் இடம் விளங்குகிறது.ஒன்பதாம் இட அதிபதி தந்தை ஸ்தான அதிபதி என்று அழைக்கப்படுகிறது.
ஒருவர் தந்தை வழி உறவுகளை பற்றி சிறப்பாக தெரிந்து கொள்ள ஒன்பதாம் இடம், அதன் அதிபதி மற்றும் காரகன் சூரியன் ஆகிய மூவரையும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள உதவுகிறது.
விதி என்று அழைக்கப்படும் லக்கனத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக பலனை ஆய்வு செய்து பார்க்க படுகிறது. "விதி கெட்டால் மதி" என்று அழைக்கப்படும் ராசியை அடிப்படையாகக் கொண்டு பலன் ஆராய்ந்து பார்க்கப்படுகிறது.
விதி-மதி இரண்டும் கெட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு பலன் அறியப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம், மூல திரிகோணம் , ஆட்சி, நட்பு போன்ற நிலைகளில் வலு பெற்று இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சூரியன் தரும் காரக பலன்களையும் மற்றும் அவரவர் லக்கனத்திற்கு ஏற்ற ஆதிபத்தியம் பலன்களையும் ஜாதகருக்கு கொடுக்கிறது.
சூரியன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று நல்ல பலனைத் தர சூரியன் உடன் நட்பு கிரகங்களான குரு சந்திரன் செவ்வாய் மற்றும் அதி நட்பு கிரகம் புதன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை மூலமாக நெருக்கமாக தொடர்பு கொள்ள வேண்டும்.
சூரியன் உடன் நெருக்கமாக சுழன்று வரும் உள் வட்ட கிரகங்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஆகும்.சூரியன் உடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகளுக்குள் புதன் பகவானும் மற்றும் சுக்கிரன் பகவான் சூரியன் உடன் முன்பின் இரண்டு ராசிகளுக்குள் வலம் வருகிறது.
சூரியனை குறிப்பிட்ட பாகைக்குள்ளாக நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது.சூரியன் பகவானை புதன் , சுக்கிரன்,குரு போன்ற இயற்கை சுப கிரகங்களை அஸ்தமனம் அடைய செய்யும் போது சூரியன் பகவான் வலுப்பெற்று நிற்கிறது.தன்னால் அஸ்தமனம் அடைந்த கிரகத்தின் பலனை தான் வாங்கி தனது தசையில் ஜாதகருக்கு கொடுக்கிறது.
சூரியனால் அஸ்தமனம் ஆன கிரகங்கள் தனது ஒளி வலிமையை இழக்கும் போது அதன் தசையில் சிறப்பாக ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை தருவதில்லை.இழந்த ஒளி வலிமையை குரு பார்வை அல்லது வளர் பிறை சந்திரன் பார்வை போன்றவை மூலம் ஈடுசெய்யும் போது இழந்த ஒளியை மீண்டும் பெற்று நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சூரியன் பகவான் நன்றாக வலுப்பெற்று சுப கிரக பார்வை பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள மற்றும் சிம்மமும் வலுப்பெற்று நிற்க அரசியல் அல்லது அரசாங்க உயர் பதவியில் அமரும் வாய்ப்பு,தந்தை மூலமாக லாபம் போன்றவை உண்டாகும்.
சூரியன் பகவான் உடன் சனி அல்லது ராகு எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து நிற்கும் போது அல்லது சூரியனை சனி பகவான் பார்வை செய்யும் போது சூரியன் தனது வலியை இழக்கிறது.இந்த நிலையில் சூரியன் பகவான் தனது ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை இழக்கிறது.சூரிய தசை சிறப்பாக இருக்காது.
சூரியன் உடன் சனி இணைந்து நிற்பதோ அல்லது பார்வை செய்வதோ தந்தை -மகன் உறவு நிலையை பாதிக்கிறது.தந்தையின் நிலையை தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை கணித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சூரியன் உடன் சனி அல்லது ராகு தொடர்பு அரசு வேலை கிடைப்பதில் தாமதத்தை தருகிறது.இதற்கு சிம்மம் வீட்டினையும் கணித்து பலன் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொளர்ணமி அமைப்பில் சூரியன் தனது வலிமையை இரு மடங்கு பெறுகிறது.சூரியன் உடன் குரு இணைவு அல்லது பார்வை ஆனது சிவராஜ யோகத்தை அள்ளித் தருகிறது.
சூரியன் உடன் சந்திரன் பன்னிரெண்டு பாகை அளவில் நெருங்கும் போது அமாவாசை அமைப்பை பெறுகிறது.சூரியன் உடன் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் பொளர்ணமி யோகத்தை அள்ளித் தருகிறது.
சூரிய அல்லது சந்திரன் இணைவு அமாவாசை யோகத்தை தருகிறது.இத்துடன் ராகு கேது இணைவு சூரிய கிரகணத்தை தருகிறது.பொளர்ணமி காலத்தில் ராகு மற்றும் கேது இணைவு சந்திர கிரகணத்தை தருகிறது.
சூரியன் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் பொளர்ணமி யோகத்தை தருகிறது..இங்கு ராகு மற்றும் கேது இணைவு சந்திர கிரகணத்தை தருகிறது.
சூரியன் சிம்மத்தில் ஆட்சி, மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீசம், ஆகும்.சூரியன் நட்பு வீடுகள் தனுசு, மீனம், மேஷம் ,விருச்சகம் மற்றும் கடகம் ஆகும். சூரியனுக்கு பகை வீடுகள் ரிசபம், துலாம் மகரம் கும்பம் ஆகிய வீடுகளாகும்.
சூரியன் பத்தாம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்.சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்கிறார்.சூரியன் பகவான் சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் சூரியன் மீனம் வீட்டில் பயணம் செய்கிறது.
சூரியன் பகவான் இருக்கும் வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் குரு,சனி, செவ்வாய் வரும் போது வக்கிரம் அடைந்து ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறது.
கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சூரியன் பகவான் விளங்குகிறார். தசைகளில் சூரியன் மிக குறைந்த பட்சம் ஆண்டாக ஆறு ஆண்டுகள் சூரியன் பகவான் பெற்று உள்ளார்.
சூரியன் புதன் பகவான் உடன் இணைந்து நிற்பது" புதன் ஆதித்ய யோகம்" என்று அழைக்கப்படுகிறது.
சூரியன், புதன் இணைந்து 1,4,8 ஆம் இடத்தில் நின்றால் அந்த காலத்தில் மன்னன் ஆனால் இக்காலத்தில் அரசாங்கம் மற்றும் அரசியல் வழி நடத்தும் தலைவர் ஆக இருப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் சிம்மம் வீடு பாவத்துவம் இன்றி சிம்மம் அதிபதி சூரியன் வலுப்பெற்று பாவ தன்மை அடையாமல் இருக்க அரசாங்க வேலை கிடைக்கும்.
நன்றி
Cell & What's app :. 097151 89647
Other cell no :. 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email: masterastroravi@gmail.com