Wednesday 11 October 2023

தலைமை பண்பை தரும் சூரியன் பகவான்

 தலைமை பண்பை தரும் சூரியன் பகவான்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு மனிதன் ஆளுமை நிறைந்து  தலைமை ஏற்று நடத்தும் தன்மையுடன்  தலைசிறந்து விளங்க சூரியன் பகவானே மிக முக்கியமானது.


     ஒரு சின்ன கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்தை வழி நடத்தும் தைரியம் பலம் பெற்ற நிலையில் உள்ள சூரியன் பகவானுக்கு உண்டு என்பதை பார்க்கிறோம்.


       தலை இருந்தால்தான் வால் ஆட  முடியும். சூரியன் பகவான் நல்ல நிலையில் இருந்தால் தான் எல்லா கோள்களும் சிறப்பாக இயங்க முடியும். ஜாதகத்தில்  கோள்களின் தலைவன் என்று "சூரியன் பகவான்" அழைக்கப்படுகிறது.மேலும் சூரியன் பகவான் லக்கன பாவத்திற்கும் காரகன் ஆவார்.ஆத்மா காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் பகவான்  உயிர் காரணியான தந்தைக்கு காரகன் ஆவார்.


       ஒருவர் தனது  ஜாதகத்தில் தந்தையின் நிலை பற்றி அறிந்து கொள்ள சூரிய பகவானை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் நமக்கு எப்படிப்பட்ட தந்தை அமைவார் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளலாம்.

           ஜாதக கட்டத்தில் தந்தை ஸ்தானமாக  ஒன்பதாம் இடம் விளங்குகிறது.ஒன்பதாம் இட  அதிபதி தந்தை ஸ்தான அதிபதி என்று அழைக்கப்படுகிறது.


        ஒருவர் தந்தை வழி உறவுகளை பற்றி சிறப்பாக தெரிந்து கொள்ள ஒன்பதாம் இடம், அதன் அதிபதி மற்றும் காரகன் சூரியன் ஆகிய மூவரையும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள உதவுகிறது.

          விதி என்று அழைக்கப்படும் லக்கனத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக பலனை ஆய்வு செய்து பார்க்க படுகிறது. "விதி கெட்டால் மதி" என்று அழைக்கப்படும் ராசியை அடிப்படையாகக் கொண்டு பலன் ஆராய்ந்து பார்க்கப்படுகிறது.

        விதி-மதி இரண்டும் கெட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு பலன் அறியப்படுகிறது.

       ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம், மூல திரிகோணம் , ஆட்சி, நட்பு போன்ற நிலைகளில் வலு பெற்று இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சூரியன் தரும் காரக பலன்களையும் மற்றும் அவரவர் லக்கனத்திற்கு  ஏற்ற ஆதிபத்தியம் பலன்களையும் ஜாதகருக்கு கொடுக்கிறது.


     சூரியன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று நல்ல பலனைத் தர சூரியன் உடன் நட்பு கிரகங்களான குரு சந்திரன் செவ்வாய் மற்றும் அதி நட்பு கிரகம் புதன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை மூலமாக நெருக்கமாக தொடர்பு கொள்ள வேண்டும்.


     சூரியன் உடன் நெருக்கமாக சுழன்று வரும் உள் வட்ட கிரகங்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஆகும்.சூரியன் உடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகளுக்குள் புதன் பகவானும் மற்றும் சுக்கிரன் பகவான் சூரியன் உடன் முன்பின் இரண்டு ராசிகளுக்குள் வலம் வருகிறது.


     சூரியனை குறிப்பிட்ட பாகைக்குள்ளாக  நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது.சூரியன் பகவானை புதன் , சுக்கிரன்,குரு போன்ற இயற்கை சுப கிரகங்களை அஸ்தமனம் அடைய செய்யும் போது சூரியன் பகவான் வலுப்பெற்று நிற்கிறது.தன்னால் அஸ்தமனம் அடைந்த கிரகத்தின் பலனை தான் வாங்கி தனது தசையில் ஜாதகருக்கு கொடுக்கிறது.


    சூரியனால் அஸ்தமனம் ஆன கிரகங்கள் தனது ஒளி வலிமையை இழக்கும் போது அதன் தசையில் சிறப்பாக ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை தருவதில்லை.இழந்த ஒளி வலிமையை குரு பார்வை அல்லது வளர் பிறை சந்திரன் பார்வை போன்றவை மூலம் ஈடுசெய்யும் போது இழந்த ஒளியை மீண்டும் பெற்று நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


    சூரியன் பகவான் நன்றாக வலுப்பெற்று சுப கிரக பார்வை பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள மற்றும் சிம்மமும் வலுப்பெற்று நிற்க அரசியல் அல்லது அரசாங்க உயர் பதவியில் அமரும் வாய்ப்பு,தந்தை மூலமாக லாபம் போன்றவை உண்டாகும்.


     சூரியன் பகவான் உடன் சனி அல்லது ராகு எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து நிற்கும் போது  அல்லது சூரியனை சனி பகவான் பார்வை செய்யும் போது  சூரியன் தனது வலியை இழக்கிறது.இந்த நிலையில் சூரியன் பகவான் தனது ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை இழக்கிறது.சூரிய தசை சிறப்பாக இருக்காது.


    சூரியன் உடன் சனி இணைந்து நிற்பதோ அல்லது பார்வை செய்வதோ தந்தை -மகன் உறவு நிலையை பாதிக்கிறது.தந்தையின் நிலையை தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை கணித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.


    சூரியன் உடன் சனி அல்லது ராகு தொடர்பு அரசு வேலை கிடைப்பதில் தாமதத்தை தருகிறது.இதற்கு சிம்மம் வீட்டினையும் கணித்து பலன் தெரிந்து கொள்ள வேண்டும்.


     பொளர்ணமி அமைப்பில் சூரியன் தனது வலிமையை இரு மடங்கு பெறுகிறது.சூரியன் உடன் குரு இணைவு அல்லது பார்வை ஆனது சிவராஜ யோகத்தை அள்ளித் தருகிறது.


    சூரியன் உடன் சந்திரன் பன்னிரெண்டு பாகை அளவில் நெருங்கும் போது அமாவாசை அமைப்பை பெறுகிறது.சூரியன் உடன் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் பொளர்ணமி யோகத்தை அள்ளித் தருகிறது.


   சூரிய அல்லது சந்திரன் இணைவு அமாவாசை யோகத்தை தருகிறது.இத்துடன் ராகு  கேது இணைவு சூரிய கிரகணத்தை தருகிறது.பொளர்ணமி காலத்தில் ராகு மற்றும் கேது இணைவு சந்திர கிரகணத்தை தருகிறது.


     சூரியன் சந்திரன் 180 பாகை வித்தியாசத்தில் பொளர்ணமி யோகத்தை தருகிறது..இங்கு ராகு மற்றும் கேது இணைவு சந்திர கிரகணத்தை தருகிறது.


 சூரியன் சிம்மத்தில் ஆட்சி, மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீசம், ஆகும்.சூரியன் நட்பு வீடுகள் தனுசு, மீனம், மேஷம் ,விருச்சகம்  மற்றும் கடகம் ஆகும். சூரியனுக்கு பகை வீடுகள் ரிசபம், துலாம் மகரம் கும்பம் ஆகிய வீடுகளாகும்.


     சூரியன் பத்தாம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்.சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்கிறார்.சூரியன் பகவான் சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் சூரியன் மீனம் வீட்டில் பயணம் செய்கிறது.


    சூரியன் பகவான் இருக்கும் வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் குரு,சனி, செவ்வாய் வரும் போது வக்கிரம் அடைந்து ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறது.


கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சூரியன் பகவான் விளங்குகிறார். தசைகளில் சூரியன் மிக குறைந்த பட்சம் ஆண்டாக ஆறு ஆண்டுகள் சூரியன் பகவான் பெற்று உள்ளார்.


 சூரியன் புதன் பகவான் உடன் இணைந்து நிற்பது" புதன் ஆதித்ய யோகம்" என்று அழைக்கப்படுகிறது.

சூரியன், புதன் இணைந்து 1,4,8 ஆம் இடத்தில் நின்றால் அந்த காலத்தில் மன்னன் ஆனால் இக்காலத்தில் அரசாங்கம் மற்றும் அரசியல் வழி நடத்தும் தலைவர் ஆக இருப்பார்.


 ஒருவர் ஜாதகத்தில் சிம்மம் வீடு பாவத்துவம் இன்றி சிம்மம் அதிபதி சூரியன் வலுப்பெற்று பாவ தன்மை அடையாமல் இருக்க அரசாங்க வேலை கிடைக்கும்.


நன்றி


Cell & What's app :. 097151 89647 

Other  cell no :.  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

        


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email: masterastroravi@gmail.com

குரு பகவான்

 குரு பகவான்




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதக பலன் எடுப்பதில் மிகவும் அவசியமாக பார்க்க வேண்டிய கிரகம் குரு பகவான் ஆகும்.குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் கவனிக்காமல் ஜாதக பலன் சொல்லிவிட முடியாது. 


   ‌ குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் சுப தன்மை அடைய வைக்கிறது. சில நேரங்களில் இருக்கும் இடத்தை விட பார்வை செய்யும் இடத்தை அதிக சுபத்துவ படுத்துகிறது.


    கிரகங்களில் குரு பகவான்  மட்டுமே திரிகோண ஸ்தானங்களுடன் தனது பார்வையின் மூலம்  தொடர்பு கொள்ள கூடிய ஒரே  ஒரு கிரகம் ஆகும். குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடம் , ஏழாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடத்தையும் பார்வை செய்கிறது.


   குரு பகவான் எந்த கிரகத்துடன் சேர்ந்து நின்றாலும் அந்த கிரகத்தை அதிக சுப தன்மை அடைய செய்கிறது.


     ஒரு கிரகமானது சனி , செவ்வாய், ராகு  போன்ற  பாவ கிரகங்கள் உடன் சேர்ந்து ‌பாவ தன்மை அடைந்த கிரகமாக இருந்தாலும் சரி,அவ யோகத்தை தரும் கிரகமாக இருந்தாலும் அல்லது அஸ்தங்கம் அடைந்த கிரகமாக இருந்தாலும் குரு  பகவான் பார்வை பட்டால்  அந்த கிரகம் தான் இழந்த வலுவை மீண்டும் பெற்று சுப தன்மையை அடைந்து அதன் தசை அல்லது புத்தியில் நல்ல பலனைத் தரும் அமைப்பை பெறுகிறது.


  குரு பகவான் தான் ஒருவருக்கு பணம்,பதவி, பட்டம், புகழ்,கல்வி,ஞானம்,செல்வம், குழந்தை பாக்கியம் அனைத்தையும் ஜாதகருக்கு வாரி வழங்ககூடியவர் ஆவார்.


 குரு பகவான் தன காரகன் மற்றும் புத்திர காரகன் ஆவார்.குரு பகவான் ஜாதக கட்டத்தில் தனம் ஸ்தானமான இரண்டாம் இடம்,பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகியவற்றிற்கு காரகன் ஆவார்.


  குரு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கும் காரகன் ஆவார்.ஒருவர் பிள்ளைகளால் சுகம் மற்றும் பெருமை பெறுவாரா ?  என்பதை புத்திர காரகன் குரு பகவானை கொண்டு அறியலாம்.


குரு பகவான் பார்வை செய்த ஸ்தானமாக இருந்தாலும் அல்லது குரு பகவான் பார்வை செய்த கிரகமாக இருந்தாலும் அதன் தசை யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணைந்து 8 பாகைக்குள்ளாக இருந்தால் குரு பகவான் பாவ தன்மையை அடைந்து விடுவார்.அதாவது குரு சண்டாள யோகத்தை தருகிறார்.இது  ஒரு அவ யோகத்தை தரும் அமைப்பு ஆகும்.


 குரு பகவானின் நட்பு கிரகம் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும்.

சூரியன் பகவான் குரு பகவான் உடன் இணையும் போது சிவராஜ யோகத்தை தருகிறார்.சந்திரன் உடன் இணையும் போது குரு சந்திர யோகத்தையும் மற்றும் செவ்வாய் பகவான் உடன் இணையும் போது குரு மங்கள யோகத்தையும் தருகிறார்.


 குரு பகவான் ஆனவர் சனி பகவான் உடன் சம தன்மையை அடைகிறார்.புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் குரு பகவானுக்கு எதிர் தன்மை வாய்ந்த கிரகம் ஆகும்.


 குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு வாசம் செய்வார்.சூரியன் பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் வரும் போது வக்கிரம் அடைந்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.


 வக்கிரம் என்பது இயல்புக்கு மாறான நிலையை குறிக்கிறது.உச்ச வக்கிரம் நீச நிலைக்கு சமமான பலனையும் மற்றும் நீச வக்கிரம் உச்சம் நிலைக்கு சமமான பலனையும் தருகிறார்.ஏனைய வக்கிரங்களை பற்றி கவலைபட தேவையில்லை.


குரு பகவான் லக்கனத்தில் திக் பலத்தை அடைகிறார்.ஏழாம் இடத்தில் தனது திக் பலத்தை இழந்து நிஷ் பலம் பெறுகிறார்.

குரு பகவான் லக்கனத்திற்கு மறைவு ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் நின்றால் திக் பலத்திற்கு அருகில் என்ற வகையில் பலம் பெற்று விடுவார்.


குரு பகவான் ஆனவார் சூரியன் பகவானை 11 பாகை அளவில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறார்.


   குரு பகவான் சனி அல்லது ராகு போன்ற பாவ கிரகங்கள் உடன் இணையும் அமைப்பில் குரு பகவான் தான் பாவ தன்மையை அடைந்து தன்னுடன் இணைந்த கிரகங்கள் சுபத்துவம் அடைய வைத்து விடுகிறது..


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.




தாம்பத்திய சுகத்தையும் மற்றும் சொகுசு வாழ்க்ஙதருனனனன

 தாம்பத்திய சுகத்தையும் மற்றும் சொகுசு வாழ்க்கையையும் தருபவர் யார்? 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஆடம்பர பங்களா, விதவிதமான சொகுசு கார்கள் மற்றும் புதிய ரக  அலைபேசி  முதலியவற்றை பயன்படுத்தும் யோகத்தை உங்களுக்கு வாரி வழங்கும் தன்மை கொண்டது சுக்கிரன் பகவான் ஆவார்.


  ஒருவர் சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் உடையவராக இருப்பதற்கும் மற்றும் சினிமா உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் update செய்து கொள்ளும் நபராக இருப்பதற்கும் சுக்கிரன் பகவான் காரண கார்த்தாவாக திகழ்கிறார்.


   சுக்கிரன் பகவான் ஆடம்பர காரகன் ஆவார்.ஒருவர் அனைத்து  விதமான ஆடம்பர பொருட்கனை பயன்படுத்தி வாழும் வாழ்க்கை என்பது சுக்கிரன் பகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி உள்ளது என்பதையும் பொறுத்து அமைகிறது.


 ஒருவர் எப்பொழுதும் ஆடம்பரமான மற்றும் நவீன ரக பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் உடையவராக இருத்தல்.ஒருவர் தனது நடை ,உடை மற்றும் பாவனை போன்ற விஷயங்களில் அதிக அக்கறை எடுத்து கொண்டு மற்றவரை கவரும் வகையில் உடை அலங்காரம்,சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் போன்றவற்றை மாறுபட்ட வகையில் செய்து கொள்ளும் ஆர்வம் உடையவராக இருத்தல் போன்ற பண்பு நலன்களுக்கு சுக்கிரன் பகவானே காரண கார்த்தாவாக திகழ்கிறார்.


 சிலர் கவர்ச்சியாக மற்றவரை கவரும் வண்ணம் போட்டோசூட் நடத்தி அதை சமூக ஊடகங்களில் விட்டு அதன் மூலம் சின்ன திரை மற்றும் பெரிய திரையில் நடனம், நடிப்பு போன்ற வகைகளில் வாய்ப்பை பெற்று சினிமா நட்சத்திரமாக ஜொலிப்பதற்கும்  சுக்கிரன் பகவானே காரணமாக அமைகிறது.


 ஒருவருக்கு திருமண யோகத்தை தரும் ஸ்தானமான ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சுக்கிரன் பகவான் காரகன் என்பதால் சுக்கிரன் பகவானை "களத்திர காரகன் " என அழைக்கப்படுகிறார்.


  சுக்கிரன் பகவான் நீசம் பெற்றால் கூட கட்டாயம் ஒரு வாழ்க்கை துணையை தந்து விடுவார்.ஆனால் பாவத்துவம் அடைய கூடாது.


  சுக்கிரன் பகவானை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் ஒருவர் பெண் சுகம்/ஆண் சுகத்தை தன் வாழ்க்கை துணையுடன் மட்டுமே பெற்று இருக்கிறாரா ? பலருடன் இன்ப சுகத்தை ஈடுபட்டு இருக்கிறாரா ? போன்ற பல விவரங்களை பெறலாம்.


 ஒரு சிலர் மன்மதனாக பலருக்கு பிடித்த நபராக இருப்பதற்கு சுக்கிரன் பகவானே காரணமாக அமைகிறது.ஒருவர் அதிக நேரம் காம களியாட்டங்களில் ஈடுபட்டு தனது இணையை திருப்தி படுத்தும் தன்மைக்கும் மற்றும் ஒரு சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாத சோர்வடைந்த நிலையை அடைவதற்கும் சுக்கிரன் பகவானின் பலத்தை பொறுத்து அமைகிறது.


 ஒருவர் தனது மனைவி உடனான உறவு நிலைகளை சுக்கிரன் பகவான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒருவர் முறையாக திருமணம் புரிந்து முறையாக சமூகம் ஏற்கும் படியான தாம்பத்திய சுகத்தை பெறுவாரா ? அல்லது முறையற்ற வழிகளில் சென்று தன்னை கெடுத்து கொள்வானா ? போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்க்க சுக்கிரன் பகவான் உதவுகிறார்.


ஒருவர் கட்டான மற்றும் கவர்ச்சியான உடல் வாகு உடையவராக திகழ்வதற்கும் சுக்கிரன் பகவானே காரண கர்த்தா ஆவார்.சிலர் அங்க அவயங்களை கவர்ச்சிகரமான உடை அணிந்து மற்றவர் பார்த்து கவரும் படியாக தன்மை கொண்டதற்கும் ,பாலியல் தொழில் புரியும் நபராக மாறுவதற்கும் சுக்கிரன் பகவானின் பாவத்துவ நிலையே காரணமாக அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் போன்ற நிலைகளில் பலம் இழந்து காமகாரகன் செவ்வாய்,சனி ,ராகு போன்ற மூவரின் தாக்குதல் ஒருவருக்கு ஏற்பட்டு காம திரிகோண ஸ்தானமான மூன்று,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் ஏற்படின் பலருடன் காம சுகத்தை பகிர்ந்து கொள்ள ஆசை உடையவராக திகழ்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடம் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய இரு நிலைகளில் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு ஏற்பட்டு பலம் பெற்ற அமைப்பை பெற்றவர்கள் நல்ல  அழகிய வாழ்க்கை துணை (கணவன்/மனைவி) ஏற்பட்டு அவர் மூலமாக மட்டுமே முறையான இல்லற சுகத்தை அனுபவித்து நல்ல புதல்வரை பெற்று எடுத்து சீரான மற்றும் சிறப்பான வாழ்க்கை நீடோடி வாழ்வார்கள்.


   கணிப்பொறி, நடனம்,ஆடை , ஆபரணங்கள்,நகைக்கடை , ஃபேன்ஸி, பைனான்ஸ்,வட்டி கடை ,பல சரக்கு கடை ,கொடுக்கல்-வாங்கல்,, டிரான்ஸ்போர்ட், டூரிஸ்ட் பஸ், டிராவல்ஸ்,ஹோட்டல் , பரதநாட்டியம், பியூட்டி பார்லர்,சிகை அலங்காரம் போன்ற வகையான தொழில்களில் ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட்டு அவை சார்ந்த தொழில் நடத்துபவராக இருந்தால் அவரது ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் சுக்கிரன் சுபத்துவமான நிலையில் தொடர்பு கொண்டிருக்கும்.


 ஒருவர் முறையான தாம்பத்திய சுகத்தை எப்பொழுது அனுபவிப்பார் என்பதை கண்டறிவதன் மூலம் ஒருவருக்கு திருமணத்திற்கு உகந்த காலத்தை எளிதாக கணிக்க இயலும்.


 சுக்கிரன் பகவானை பலமாக பெற்றவர்கள் வண்டி வாகன யோகம் பெற்றவராக திகழ்வார்.எனவே தான் சுக்கிரன் பகவான் வாகன காரகன் என்று அழைக்கப்படுகிறது.


 ஒருவர் வாகன யோகம் பற்றிய ஆராய்ச்சிக்கு நான்காம் இடம், அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


  ஒருவர் எப்படிப்பட்ட வீடு அமையும் மற்றும் எப்பொழுது அமையும் போன்ற விவரங்களை பெற அவரது ஜாதகத்தில் நான்காம் இடம் , அதன் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரையும் ஆராய்ந்து பார்த்து கண்டறிய இயலும்.


 சுக்கிரன் பகவான் பொருள் அணியை சேர்ந்த நவ கிரகம் ஆகும்.சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகமாக புதன் மற்றும் சனி பகவான் திகழ்கிறார்.


 சுக்கிரன் ரிஷபத்தை ஆட்சி வீடாகவும் மற்றும் துலாம் சுக்கிர பகவானுக்கு மூல திரிகோணம் மற்றும் ஆட்சி வீடாக கருதப்படுகிறது.மீனத்தில் சுக்கிரன் உச்சம் மற்றும் கன்னியில் நீசம் ஆகும்.சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்.


  பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சுக்கிரன் பகவான் விளங்குகிறார்.இருபது ஆண்டுகள் சுக்கிரன் தனது தசை காலமாக கொண்டு உள்ளது.


  சுக்கிரன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்கிறார்.சுக்கிரன் சூரியனை எட்டு பாகை அளவில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறார்.சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வரும் போது வக்கிரம் அடைகிறார்.


 சுக்கிரன் பகவான் சூரியன் உடன் அல்லது சூரியன் இருக்கும் இடத்திற்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குளாகவே இருப்பார்.சுக்கிரன் ஒரு உள் வட்ட கிரகம் ஆகும்.


 சுக்கிரன் பகவானை உடன் செவ்வாய் இணைந்து பாவத்துவ நிலையில் காதல் என்ற பெயரில் கற்பை இழக்க நேரிடும்.அதே நேரத்தில் சுபத்துவமான நிலையில் இருந்தால் அவர்கள் காதல் பெற்றோர்களால் முறையாக அங்கிகரிக்கப்பட்டு முறைப்படியான திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடக்கும்.


சுக்கிரன் பகவானுக்கு குரு எதிர் அணியை சேர்ந்த கிரகம் ஆகும்.சூரியன் மற்றும் சந்திரன் பகவான் முழுமையான பகை கிரகம் ஆகும்.


 சுக்கிரன் பகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் எந்த இடத்தில் இருந்தாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.சுக்கிரன் பகவானுக்கு மறைவிட ஸ்தானங்களில் ஆறு மற்றும் பன்னிரெண்டாம் இடம் மறைவிடம் கிடையாது..


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


E-mail: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     

அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

          M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Tuesday 10 October 2023

பலன் எடுப்பதில் மிகுந்த கஷ்டத்தை தரும் ஶ்ரீ ராகு பகவான்

 பலன் எடுப்பதில் மிகுந்த கஷ்டத்தை தரும்  ஶ்ரீ ராகு பகவான்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


         நிழல் கிரகங்களில் ராகு பகவானை கரும்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது பாம்பு தலையும்  மற்றும் மனித உடம்பும் கொண்டதாகும்.


         ராகு பகவான் உட் கூடு அற்ற மற்றும்  திடப்பொருள் அற்ற கிரகம் என்பதால் இவற்றிற்கு பார்வை பலம் கிடையாது.சொந்த வீடு கிடையாது.எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டையே  தனது சொந்த வீடாக கருத்தில் எடுத்துக் கொள்கிறது.


  எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்கிறது.குரு , சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு சிறப்பு பார்வைகளை கொண்டுள்ளது.ஆனால் ராகு பகவானுக்கு எவ்வித பார்வை பலன் கிடையாது. 


ராகு பகவானுக்கு உச்சம், ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது.


  ராகு பகவானுக்கு பலன் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.எனவே பலன் எடுக்கும் போது பின்வரும் வகையில் கவனிக்க பட வேண்டும்.

ராகு பகவானை எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி போல கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ராகு பகவான் உடன் பார்வை அல்லது சேர்க்கை மூலமாக தொடர்பு கொண்ட கிரக பலன்கள் மற்றும் ராகு பெற்ற சாரம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து கணித்து பலன் அளிக்க பழக்க பட வேண்டும்.எனவே ஏனைய கிரகங்களளை விட ராகு மற்றும் கேது பகவானுக்கு பலன் எடுப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது.


 ராகு பகவான் ஒரு பச்சோந்தி கிரகம்  என்பதால்  நல்லவர்களோடு இணையும் போது நல்லவராகவும்  மற்றும் பாவாருடைய வீட்டில் இருக்கும் பொழுது கெட்டவர் ஆகவும் செயல்படுவார்.


  வார கிழமைகளில் கூட ராகு பகவானுக்கு கிழமை கிடையாது.ஓரை கிடையாது.ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வீதம் ராகு காலம் மட்டுமே உள்ளது.


 ராகு பகவான் கடுமையான பாவ கிரகம் ஆகும்.இவை தன்னுடன் இணைந்த சுப கிரகத்தின் சுப தன்மையை குறைத்து தான் மட்டும் சுப நிலை அடைந்து விடுகிறது.


ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நின்றாலும் மற்றும் ராகு பகவான் உடன் கேந்திர அல்லது கோண அதிபதிகள் தொடர்பு பெற்று நின்றாலும் அல்லது குரு பகவான் உடன் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து அல்லது பார்வை பெறும் அமைப்பில் அல்லது சுக்கிரன் 'புதன் போன்ற சுப கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் நல்ல பலனை ஜாதகருக்கு ராகு தசை கொடுக்கிறது.


ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம் கடகம்  மற்றும் கன்னி ஆகிய ஆறு வீடுகளில் நின்று அந்த வீடு ராகு பகவானுக்கு 3, 6 ,10, 11 ஆக இருந்தால் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது அதாவது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை, எதிர்பாராத பண வரவு, ஷேர் மார்க்கெட் அன்னிய தேச ,அந்நிய மொழி  மற்றும் அந்நிய நாட்டோட தொடர்பு இது போன்ற வகையில் பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும்.


 ராகு பகவான் தசை நடக்கும் காலங்களில் ஒரு மனிதனை பெரிய அளவிற்கு உயர்த்தி அழகு பார்ப்பதும் உண்டு.அதே நேரத்தில் கோபுரத்தில் இருந்தவனை குப்பைக்கு கொண்டு வந்து விடுவது உண்டு.

எனவே தான் ராகுவை "கொடுத்து கெடுப்பார் "என்றும் சில நேரங்களில் "கெடுத்து கொடுப்பார்" என்றும் அழைக்கப்படுகிறது.


 ராகு தசை தொடக்கத்தில் யோகத்தை தருமாயின் கடைசி புத்திகளான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் புக்தி கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க தந்து விடும்.தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தால் கடைசியில் குறிப்பிட்ட சூரிய,சந்திர மற்றும் செவ்வாய் புக்திகள்  ஜாதகருக்கு நல்ல பலனை அள்ளித் தரும்.


லக்னத்தில் ராகு பகவான் இருந்தால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஜாதகருக்கு உருவாகும். திருமண தடை உருவாக்கும். மெல்லிய தேகம் கொண்ட நபராக ஜாதகர் இருப்பார். சுப கிரகங்கள் பார்வை பெற்றால் பலன் மாறுபடும்.


   இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பது குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க வைக்கும். குடும்பம் அமைப்பதில் காலதாமதம் ஆகும் .சூழ்ச்சியாக கபட தன்மையாக  பேசக்கூடிய தன்மை இருக்கும்.


  மூன்றாம் இடத்தில் ராகு பகவான் சகோதர தோஷத்தை கொடுக்கும்.அந்த வீட்டின் அதிபதி மற்றும் சகோதர காரகன் செவ்வாய் ஆகியவற்றை பொறுத்து சகோதர தோஷம் அமையும்.


நான்காம் இடத்தில் ராகு பகவான் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம்  போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்கும்.சுபர் பார்வை செய்வதை பொறுத்தும் மற்றும் அந்த வீட்டின் அதிபதியின் தன்மையை பொறுத்து பலன் மாறுபடும்.


ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் புத்திர தோஷத்தை தரும்., பூர்வீக சொத்தில் வசிக்க இயலாத தன்மை ஆகியவை உண்டாகும்.புத்திர காரகன் குரு மற்றும் புத்திர ஸ்தானாதிபதி அல்லது ஐந்தாம்  இட  சுபர் பார்வை ஆகியவற்றை பொறுத்து பலனில் மாறுபாடு உண்டாகும்


 ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்வார்.அதே நேரத்தில் அந்த ராகு பகவானை பாவ‌ கிரகமான சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தால் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுக்கும்.


 ஏழாம் இடத்தில் ராகு களத்திர தோஷத்தை கொடுக்கும். திருமண தடையை உண்டாக்கும். சுபர் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள தோஷம் விலகி நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


 எட்டாம் இடத்தில் ராகு பகவான் மாங்கல்ய தோஷத்தை கொடுக்கும்.திருண தடையை உண்டாக்கும்.

.சுபர்  பார்வை அல்லது சேர்க்கை பெற‌ மாங்கல்ய தடை விலகும்.


 ஒன்பதாம் இடத்தில் ராகு கஞ்சத்தனம்,தந்தை வழி உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.மேல்நிலை கல்வி பாதிப்பை ஏற்படுத்தும்.


பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் அந்த வகையில் பத்தாம் இட ராகு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


பதினொன்றாம் இட ராகு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.மூத்த சகோதரர் மற்றும் இளைய தாரம் போன்றவற்றை பாதிக்கும்.சுப கிரக தொடர்பு பலனை மாற்றி கொடுக்கும்.


பன்னிரெண்டாம் இட ராகு கஞ்சத்தனம்,கருமி தனம் உண்டாகும்.


ஒளிக்கிரகமான சூரியனுடன் ராகு சேர தந்தை மற்றும் அரசாங்க வேலை கிடைப்பதை தாமதம் போன்றவை உண்டாகும் .சந்திரனுடன் ராகு சேரும்பொழுது மன சஞ்சலம், தாய்க்கு பாதிப்பை கொடுக்கும் .செவ்வாயுடன் ராகு சேரும்போது சகோதரர்கள் பாதிக்கும். குருவோடு ராகு சேரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை உண்டாக்கும் . சுக்கிரன் உடன் ராகு திருமண தடை உருவாக்கும்.சனியுடன் ராகு கடுமையான கஷ்டங்கள் நஷ்டங்கள் கொடுக்கும் .செவ்வாயோட ராகு காம எண்ணங்களை கொடுக்கும்.இவை அனைத்தும் சுமார் பார்வை மற்றும் சேர்க்கை பெற பலனில் மாற்றம் உண்டாகும். மேற்குறிப்பிட்ட ஒவ்வொறு காரக பலனும் அந்த வீடு மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை பொறுத்து பலனில் மாறுபாடு உண்டாகும்.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பலன் எடுப்பதில் மறைமுக வலுவை கொடுக்கும் கேது பகவான்

 பலன் எடுப்பதில் மறைமுக வலுவை கொடுக்கும் கேது பகவான்.

   


செவ்வாய்பட்டி‌ ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நிழல் கிரகங்களில் கேது பகவான் என்பது செம் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. கேது பகவான் மனித தலையும் ,பாம்பு உடலையும் கொண்டது ஆகும்.


 கேது பகவான் பின்னோக்கி நகரும் கிரகம் என்பதால் இவற்றிற்கு வக்ர கதி  கிடையாது. ராகு  பகவானுக்கு சம சப்தமாக  ஏழாம் இடத்தில் 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் பின்னோக்கி நகர்ந்து செல்கிறார்.


ஒரு ராசியில் கேது பகவான் பதினெட்டு மாதங்கள் சஞ்சாரம் செய்கிறார்.

அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஒரே ராசியில் இருப்பார்.


   கேது பகவான் தான் இருக்கும் ஸ்தானத்தையும்  மற்றும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனையும் அதிகரித்து தர வைப்பார்.ராகு பகவானை போல தன்னுடன் இணைந்த கிரகத்தின்  பலனை பாதிப்படைய செய்ய மாட்டார். 

இவை மட்டும் அல்லாமல் பாவ கிரகங்கள் ஆன சனி  மற்றும் செவ்வாய் உடன் இணையும் போது மறைமுக வலுவை தந்து பலம் அடைய செய்வார்.


கேது பகவான் உடன் சனி மற்றும் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை போன்ற வகைகளில் தொடர்பு கொள்ள ஆன்மீக வழிகளில் சாதகரை ஈடுபட வைப்பார்.


 கேது பகவான் லக்னத்தில் இருக்க முன்கூட்டியே யூகிக்கும் தன்மை படைத்தவராக இருப்பார்.

 வாக்கு ஸ்தானத்தில் இருக்க வாக்கு பலிக்கும் தன்மை உண்டாகும்.ஐந்தாம் இடத்தில் கேது கடவுள் சிந்தனையை கொடுப்பார்.ஒன்பதாம்  இடத்தில் கேது 

தான தர்ம குணம்,சாஸ்திர‌ ஞானம் பெற்று திகழ்வார்.கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேது பகவான் தெய்வீக தொழில் புரிபவராக இருப்பார்.அதாவது குறி சொல்லுதல், பூசாரி போன்ற வகைகளில் பொருள் ஈட்டுவார்.பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் முக்தி யோகத்தை ஜாதகருக்கு வழங்குவார்.


சூரியன் கேது இணைவு ஆன்மிக தலைவராக திகழ்வார் .ஆன்மீக ஸ்தானங்கள் வைத்து வழி நடத்துவராக ஆன்மிக குருவாக திகழ்வார்.


குரு பகவானுடன் கேது இணைவு 

"கேள யோகம் "என்னும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு அள்ளித் தரும்.


       "வல்லரவு தனித்து நின்று     மறைவனோடு இசைஞானி மருககானில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என்று இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும்"


 இங்கு

(வல்லரவு -ராகு பகவான்

மறையவன் -குரு பகவான்

இசைஞானி -கேது பகவான்)


அஸ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நட்சத்திரத்துக்கு நாதனாக கேது பகவான் திகழ்கிறார். கேது தசை ஏழு ஆண்டுகள் ஆகும்.


 கேது பகவான் தரும் இன்னல்களில் இருந்து விடுபட கீழபெரும்பள்ளம் சென்று வழிபடலாம்.ஆந்திரவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வழிபாடு நடத்தலாம்.கேது பகவான் பாவ கிரகங்களில் செவ்வாய் பகவானை போல செயல்படுகிறார்.ஆதலால் செவ்வாய் கிழமை சென்று வழிபாடு நடத்துங்கள். 


 கேது பகவான் சுபத்துவமான நிலையில் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில்     நல்ல பலனை தருவார்.


 ஒருவருக்கு கேது பகவான் உடன் சனி இணைந்து செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் அல்லது கேது பகவான் உடன் செவ்வாய் இணைந்து சனி பகவான் பார்வை செய்த நிலையில் கேது தசை நடந்தால் அந்த ஏழு ஆண்டுகள் எந்த லக்கனமாக இருந்தாலும் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.லக்கனாதிபதி வலுவாக இருந்தால் அந்த ஏழு ஆண்டுகள் கேது பகவான் தரும் கஷ்டங்களை தாங்கி எதிர் நீச்சல் போடும் திராணி ஜாதகருக்கு இருக்கும்.


 குரு அணியைச் சேர்ந்த தனுசு ,மீனம், மேஷம் ,விருச்சகம், கடகம்  மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு கேது பகவான் இந்த ஆறு லக்னங்களிலேயே இருந்து தசை நடத்தினால் ஜாதகருக்கு நல்ல பலனை கொடுக்கும்.


   சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு கேது பகவான் இந்த ஆறு லக்னங்களில் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து தசை நடத்தினால் அந்த கேது திசை ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும்.


 கேது பகவானுக்கு என்று தனி வீடு கிடையாது. அது இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கொள்ளும் .உதாரணமாக மீனம் வீட்டில் கேது பகவான் இருந்தால் கேது பகவான் குரு பகவான் போல் செயல்பட்டு அதன் தசையில் பலனை தரும்.

 


 கேது பகவானுக்கு பலன் எடுக்கும் போது கேது பகவானுக்கு வீடு கொடுத்தவன் கிரக வலு  ,கேது பகவானை பார்வை செய்த மற்றும் சேர்க்கை பெற்ற கிரகங்களுடைய பலம் மற்றும் கேது பெற்ற நட்சத்திர சாரம் ஆகிய அனைத்தையும் சார்ந்தே ஜாதக பலன் கொடுக்கும்.


 கேது பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் அதன் தசையில் ஜாதகருக்கு நல்ல யோகத்தை தருகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

ஜாதகரை படம் பிடித்து காட்டும் ஜாதகம்

 ஜாதகரை படம் பிடித்து காட்டும் ஜாதகம்.

     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !


    "தனி மரம் தோப்பு ஆகாது ". எனவே ஒருவர் ஜாதகத்தில்  ஒரு பலன் சொல்வதற்கு தனிப்பட்ட ஒரு ஸ்தானத்தையோ அல்லது தனிப்பட்ட ஒரு கிரகத்தையினையோ மட்டும் கொண்டு துல்லியமான ஜாதக பலனை பெற இயலாது.


  உதாரணமாக லக்கனத்தில் சுக்கிரன் இருந்தால், இரண்டாம் இடத்தில் குரு இருந்தால் இது போன்ற வகைகளில் ஒற்றை வரியில் ஜாதக பலனை  தந்து விட முடியாது.ஒரு குறிப்பிட்ட பலன் அளிப்பதற்கு எண்ணற்ற ஸ்தான பலம் , கிரக சேர்க்கை,திக் பலம்  மற்றும் பார்வை ,வீடு கொடுத்தவன் வலு,பாவத் பாவகம் மற்றும் அம்சத்தில் கிரக நிலை இது போன்ற பல்வேறு விஷயங்களை ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குள் அலசி ஆராய்ந்து பலன் அளிக்க வேண்டி இருக்கிறது.


 பலன் அளிப்பதற்கு என்று பல தரப்பட்ட ஜோதிட விதிகள் பலவற்றை தெரிந்து கொண்டு அந்த ஜோதிட விதிகளுக்கு அப்பாற்பட்ட ஜோதிட விதி விலக்குகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.


 ஒரு மனிதன் எப்படி இருக்க விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கிரக சேர்க்கைகள் , வீடு கொடுத்தவன் வலு மற்றும் பார்வை  ஆகியவை ஜெனன‌ காலத்தில் எவ்விதம் அமைந்து இருக்கிறது என்பதை கொண்டே முடிவு செய்யப்படுகிறது.


ஜாதகரது வாழ்க்கை பாதையை தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது.


ஜாதகரின் மன நிலையை அறிந்து கொள்ள சந்திரனை பார்க்க வேண்டும்.சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து அல்லது நீசம் பெற்று சனி , ராகு மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் தாக்குதல் ஒட்டு மொத்தமாக இருப்பின் ஜாதகர் மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருப்பார்.சனி அல்லது செவ்வாய் அல்லது ராகு தசையே நடப்பில் இருப்பின் பிரச்சினையின் வீரியம் அதிகமாக இருக்கும்.


 ஜாதகரின் தன்னம்பிக்கை அளவீட்டை லக்கனம்,லக்கனாதிபதி மற்றும் லக்கின காரகன் சூரியன் பகவான் ஆகியோரின் துணை கொண்டு கணக்கிடப்படுகிறது.


 பொதுவாக மனிதனின் வாழ்க்கை தரம் மற்றும் குணநலன்களை முடிவு செய்வது தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகும்.இவை தவிர ஒரு தசை முழு யோகத்தை தர வேண்டுமாயின் நடப்பு தசை இயற்கை சுப கிரக சேர்க்கைகள் பெற்று இருக்க வேண்டும்.நடப்பு தசை மிகுந்த பாதிப்பை தர சனி , செவ்வாய் மற்றும் ராகு ஆகியோரரது முக்கூட்டு கிரகங்கள் தாக்குதல் காரணமாக அமைகிறது.


ஒருவர் ஜாதகத்தில் ராசி கட்டத்தை நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நீங்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடும்.


சில நேரங்களில் ராசி கட்டத்தில் பலம் மற்றும் பாவத்துவம் அடைந்த கிரகங்கள் அம்சத்தில் சுப மனை ஏறி நின்றால் நல்ல பலனைத் தரும் அமைப்பை பெறுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் சுப தன்மை அடைந்து உள்ளது.அதேபோல எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் பாவ தன்மை அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.தற்போது தசை நடத்தும் கிரகம் எப்படி உள்ளது என்பதையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு பலன் அளிக்க வேண்டும்.


  சனி பகவான் ஒரு ஸ்தானத்தில் அமரும் போது அவை இருக்கும் வீட்டையும் மற்றும் தன்னுடன் சேர்த்து உள்ள கிரகத்தையும் பாகை அடிப்படையில் பாவ தன்மையை அடைய வைக்கிறது.அதே போல பார்வை செய்யும் ஸ்தானம் மற்றும் கிரகம் ஆகிய இரண்டையும் பாவ தன்மையை அடைய வைக்கிறது.அதே நேரத்தில் இயற்கை சுப கிரக தொடர்பை பெற்ற சனி பகவான் நல்லதை செய்ய இயலாவிட்டாலும் கெடுதலை செய்ய மாட்டார்.


இதேபோல செவ்வாய் பகவான் தான் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் இடங்களையும் பாவ தன்மையை அடைய வைக்கிறது.


 செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் உடன் செவ்வாய் பகவான் சேர்க்கை மற்றும் பார்வை செய்தால் கெட்ட பலனை தந்து விடுவதில்லை.செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு உடன் இணையும் போது கூடுதலான கெடு பலனை இருக்கும் மற்றும் பார்வை செய்யும் இடத்திற்கு செய்கிறது.


  வளர்பிறை சந்திரன் எந்த இடத்தில் இருந்தாலும் சாதகருக்கு நல்ல பலனை தருகிறது .இவை தனது ஆறு , ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் இயற்கை சுப கிரகமான  சுக்கிரன் , புதன் மற்றும் குரு ஆக இருந்தால் சுப தன்மையை அடைய வைத்து சந்த்ராதி யோகத்தை  தருகிறது.


அதே நேரத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்தால் அந்த சந்திர பகவான் இருக்கும் இடத்தையும் தனுடன் சேர்ந்த கிரகங்களையும் பாவ நிலை அடைய வைக்கிறது தேய்பிறை சந்திரனுக்கு 6 7 8 ல் உள்ள இயற்கை சுப கிரகங்களை சுப தன்மை யை அடைய வைப்பதில்லை.


இயற்கை சுப கிரகமான குரு பகவான் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் ஸ்தானம் மற்றும் கிரகத்தையும் சுப தன்மையை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.

இதேபோல தனித்த புதன், சுக்கிரன் இருக்கும் மற்றும் சேரும் கிரகத்தையும் சுப தன்மை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


 சூரியன் பகவான் அரை பாவர் ஆகும்.சூரியன் பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் போது அல்லது சனி பார்வை பெறும் பொழுது அது தன் முழு பலத்தையும் இழக்கிறது.

 சூரியன் பகவான் உடன்  கிரகமான சுக்கிரன், புதன்,குரு  மற்றும் செவ்வாய் நெருக்கமாக இணையும் போது அந்த கிரகங்கள் குறிப்பிட்ட பாகை அடிப்படையில் அஸ்தங்கம் அடைந்து தன் பலத்தை இழக்கிறது.ஆனால் சூரியன் பகவான் முழு பலம் பெறுகிறது.தன்னால் அஸ்தமனம் ஆன கிரக ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை தனது தசையில் ஜாதகருக்கு கொடுக்கிறது.


 இவ்வாறு அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் இழந்த வலுவை ஸ்தான பலம் அல்லது சுப கிரக பார்வை பெறும் பொழுது இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


சூரியன் உடன் நிழல் கிரகமான ராகு அமாவாசை நேரத்தில் இணையும் போது சூரிய கிரகணத்தையும் மற்றும் பொளர்ணமி காலங்களில் இணையும் போது சந்திர கிரகணத்தையும் தருகிறது.

இதனால் சூரிய மற்றும் சந்திர ஒளியை ஒளி மறைப்பு செய்து புவியியல் விழ விடாமல் செய்து விடுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & வாட்ஸ் அப்

  097151 89647 


மற்றொரு செல் 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

        



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M

.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதகத்தில் ஒருவருக்கு யோகம் தரும் காலம்

 ஜாதகத்தில் ஒருவருக்கு யோகம் தரும் காலம்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் யோகம் தரும் காலத்தை கணிப்பது  என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஒருவருக்கு யோகம் தரும் காலத்தை கணித்து தெரிந்து கொண்டால் அது ஜாதகருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.


  ஒருவர் யோகம் தரும் காலத்தை கணித்து தெரிந்து கொண்டால் அந்த யோகமான தருணங்களில் செய்யப்படும் எதுவுமே மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் லாபகரமாகவும் இருக்கும் உதவிகரமாக இருக்கும்.


‌ யோகம் மற்றும் அவ யோகம் தரும் பாவகங்களை சரியாக கணித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


 உங்கள் ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பானது உங்களது லக்கனத்தை பொறுத்து மாறுபடக்கூடிய ஒன்றாக உள்ளது.


      லக்கனம், கேந்திர ஸ்தானம் மற்றும் திரிகோண ஸ்தானம் ஆகிய மூன்று நிலைகளில் உள்ள ஸ்தானங்களையும் மற்றும் அதன் அதிபதிகள் ஆகியவற்றை நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலனிற்கு ஏற்றார் போல் ஆராய்ந்து பார்ப்பதன்  மூலம் ஒருவருக்கு யோகம் தரும் காலத்தை நிர்ணயிக்க இயலும்.அதேபோல மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசை மற்றும் லக்கன அவயோகத்தை தரும் கிரகங்களின் தசை காலங்களிலும் மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களிலும் அவ யோகத்தை அனுபவிக்க கூடிய காலமாகவே இருக்கும்.


சில நேரங்களில் விதிவிலக்காக லக்கன அவ யோகத்தை தரும் கிரக தசைகள் மற்றும் பாவ கிரகங்கள் தசை கூட சில நேரங்களில் நல்ல பலனைத் தந்து விடுவதும் மற்றும் லக்கன யோக தசைகள் சில நேரங்களில் கடுமையான கஷ்டங்களை தந்து விடுவதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் சுப தன்மையை அடைய வைப்பது அல்லது பாவ தன்மையை அடைய வைப்பது ஆகிய இரண்டில் ஒன்றே காரணமாக இருக்கும்.


நீங்கள் குரு அணியை சேர்ந்த நபராக இருந்தால் மேஷம், விருச்சிகம் தனுசு மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு பகவான் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்று இருப்பின் அவை பிறப்பிலிருந்து யோகம் தரும் அமைப்பு ஆகும்.


நீங்கள் சுக்கிரன் அணியை சேர்ந்த நபராக இருந்தால் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்கனங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி மற்றும் புதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் மிகுந்த யோகத்தை அனுபவிக்கும் தருணமாக கருதப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் யோகம் தரும் காலத்தில் யோகத்தை முழுமையாக அனுபவிக்க லக்கனாதிபதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாகும். ‍ராசி நாதனும் வலிமை பெற்று இருந்தால் மிகவும் நல்லது ஆகும்.


சில நேரங்களில் எதிர் அணியை சேர்ந்த கிரக தசைகளும் யோகத்தை தர அந்த கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடத்தில் நட்பு நிலையில் அல்லது இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


மேற்கண்ட அமைப்பை தவிர தன மற்றும் லாப ஸ்தானம் ஆகிய இரு அமைப்பையும் கவனிக்க வேண்டும்.

இந்த இரு அமைப்புகளின் தசைகளும் வருமான யோகத்தை தரும் அமைப்பாக கருதப்படுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன் , திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   

   


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்

வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஜோதிடம்

 வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஜோதிடம்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  "திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை" என்பார்கள்.திக்கு என்றால் "திசை" என்று பெயர். அதேபோல் வாழ்க்கையில் வழி அற்று தவிப்பவனுக்கு வாழ்வியல் சம்பவங்களை வழிகாட்டும் ஜோதிடம் காட்டும் "தசை" தான் முக்கியமாக அமைகிறது.


       லௌகீக வாழ்வில் ஈடுபடக்கூடிய மனிதனுக்கு வழிகாட்டும் சுடராக ஜோதிடம் விளங்குகிறது.. ஒருவனுக்கு நடந்த ,நடக்கின்ற மற்றும் நடக்க இருக்கும் சம்பவங்களை 12 கட்டங்களில் 9 கிரகங்கள் அமர்ந்திருக்கக் கூடிய வழிமுறையின் அடிப்படையில் அவருக்கு நடக்கும் தசா புத்திகள் அடிப்படையில் நிச்சயமாக, துல்லியமாக நடக்கக்கூடிய விஷயங்களையும் , நடந்த மற்றும் நடக்க இருக்கின்ற சம்பவங்களை எடுத்துக் கூறி வழிநடத்த ஜோதிடம் உதவுகிறது.


  இன்று ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். தனுசு லக்னம் லக்னத்தில் சனி மற்றும் ராகு , ஒன்பதாம் இடத்தில் சிம்மம் வீட்டில் குரு மற்றும் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சூரியன்,புதன் மற்றும் செவ்வாய் உள்ளது.தற்போது முப்பத்திரண்டாம் வயதில் அடி எடுத்து வைக்கும் இவருக்கு ராகு தசை ஆரம்பம் ஆக இருக்கிறது.

தற்போது ஜாதகருக்கு முப்பத்திரண்டு வயதை நெருங்குகிறது.


ஆனால் ஜாதகத்தை பார்த்தவுடனே ஜோதிட விதிகள் மற்றும் விதிவிலக்குகள் போன்ற வகைகளில் ஆய்வு செய்து பார்க்கும் போது இவருக்கு இன்னும் திருமணம் நடந்திருக்காது என்ற விஷயத்தை ஆணித்தரமாக சொல்ல முடிந்தது.


 லக்கனத்தில் சனி +ராகு லக்கனத்தை பாவபடுத்தியதோடு பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவானும் லக்கனத்தில் சனி+ராகு பகவானை பார்வை இட லக்கன பாவகம் நன்றாக கெட்டு விட்டது.லக்னத்தில் சனி + ராகு மற்றும் ஏழாம் இடத்தில் கேது பகவான் . லக்னத்தில் உள்ள செவ்வாய் பார்வை பெற்ற சனி+ராகு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து ஏழாம் இடத்தையும் பாவ நிலைக்கு தள்ளி உள்ளது.ஏழாம் இட அதிபதி புதன் பகவான் பாவரான செவ்வாய் உடன் இணைந்து செவ்வாய் பார்வை மற்றும் ராகுவின் சேர்க்கையை பெற்று கூடுதல் பாவத்துவமான சனி பகவான் ஏழாம் இட களத்திர ஸ்தானாதிபதி புதனை பார்வை செய்து ஏழாம் இட அதிபதியும் கெட்டு விட்டார்.


மேற்கண்ட காரணங்களால் திருமணம் தடைபட்டு கொண்டே செல்கிறது.

ஆனால் திருமணம் கட்டாயம் நடக்கும்.லக்கனத்தில் செவ்வாய் பார்வை பெற்ற சனி+ ராகு பகவானை சிம்மத்தில் உள்ள குரு பகவானும் பார்வை செய்வதால் திருமணம் நடைபெறும்.


 குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க தடைபடும் அமைப்பு ஆகும்.இதில் 32 வயதில் ராகு தசையும் ஆரம்பம் ஆகிறது.எனவே திருமணம் செய்வது என்பது கஷ்டபட்டு தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது.


   திருமணம் ஆக இருக்கும் தம்பதியினருக்கு தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரையும் அவசியம் ஆராய்ந்து பார்த்து பொருத்தம் போட வேண்டும்.


   ஜோதிட விதிகளை தெரிந்து கொளாளும் நாம் ஜோதிட விதிவிலக்குகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 ஒருவர் ஆசிரியர் ஆக வேண்டும் எனில் ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் குரு பகவான் தொடர்பு கொள்ள ஒருவர் ஆசிரியர் ஆவார் என்பது விதி ஆகும்.இதே போல் அதே ஜாதகருக்கு சிம்மம் ஸ்தானமும் மற்றும் அதன் அதிபதியான சூரியன் பகவானும் வலுப்பெற்று உள்ள நிலையில் அரசு ஆசிரியர் ஆவார் என்பதும் தவிர்க்க முடியாத விதி ஆகும்.


 மிதுன லக்கினம் ஜாதகிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்தில் உச்சம் அந்த வீட்டின் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ஆகும்.

 குரு பகவான் லக்கனத்திற்கு பத்தாம் அதிபதியாகி வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தினை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறது.ஜோதிட விதிப்படி ஆசிரியர் ஆவதற்கு குரு பகவான் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ளது.எனவே இந்த ஜாதகர் ஆசிரியர் ஆக உள்ளார்.


  இவர் ஜாதகத்தில் மிதுன லக்கினம் ரிஷபம் ராசி, இரண்டாம் இடத்தில் குரு மற்றும் புதன் பகவான், மூன்றாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய், ஏழாம் இடத்தில் ராகு மற்றும் எட்டாம் இடத்தில் சனி 


 இவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் உள்ள ராகு பகவான் குரு பகவானை போல செயல்பட்டு அரசு ஆசிரியர் ஆக இளவயதில் வந்து விட்டார்.


 ஒரு சிலருக்கு கார் ,பங்களா போன்ற ஆடம்பர வாழ்க்கை மேற்கொள்வார்.ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகும்.இதற்கான விதி நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கனத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி, ராகு பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பை பெற்று இருந்தாலும், புத்திர ஸ்தானாதிபதி ராகு போன்ற சர்ப்ப கிரகங்கள் இணைந்த நிலையில் இருந்தாலும் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் நீசம்,பகை அல்லது பாவ கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் திருமணம் ஆன பிறகு தொடர்ந்து அவ யோக தசைகள் அல்லது ஆறு அல்லது எட்டு தசைகள் நடப்பில் இருப்பதாலும் குழந்தை பாக்கியம் தடை பெறுகிறது.


இது போன்று மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக ஜோதிடம் செயல்படுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்:

 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஏழாம் இடத்தில் பன்னிரெண்டு பாவ அதிபதிகள் இடம் பெறுவதால் அடையும் பலன்கள்.

 ஏழாம் இடத்தில் பன்னிரெண்டு பாவ அதிபதிகள் இடம் பெறுவதால் அடையும் பலன்கள்

       


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


  ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனக்கு வரும் வாழ்க்கைத் துணையை பற்றியும் மற்றும் நட்பு நிலை பற்றியும் அறிய உதவும் ஸ்தானமாகும் .எனவே இந்த இடத்தை களத்திர ஸ்தானம் என்றும் ,இதன் அதிபதியை களத்திர ஸ்தான அதிபதி என்றும் மற்றும் களத்திரத்துக்கு காரகராக சுக்கிர பகவான் விளங்குகிறார்.


  பொதுவாக ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது இடம் பெறக் கூடாது .ஆனால் அதே நேரத்தில் இயற்கை சுபர்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் இடம் பெறுவது அல்லது பார்வை செய்வது நல்லது.


       ஏழாம் இடத்தில் லக்கனாதிபதி இடம் பெறுவது நல்லது என்பது பொதுவாக கூறப்பட்டாலும் ஆனால் அதே நேரத்தில் பாவ கிரகமாக சனி மற்றும் செவ்வாய் ஏழாம் இடத்தில் இடம்பெறும் போது அது ஏழாம் இடத்தையும் தனக்கு சம சப்தமாக லக்கனத்தையும் பார்த்து கெடுபலனை தர வைப்பார் இதனால் திருமண தடை உருவாகும். இயற்கை சுப கிரகங்களாக இருந்து இடம்பெறும் போது அழகான நல்ல மனைவி அமையக்கூடிய யோகம் உண்டாகும்.


 சில நேரங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அதனை பார்வை அல்லது சேர்க்கை மூலமாக சுமர


   ஏழாம் இடத்தில் தனாதிபதி அதாவது இரண்டாம் இட அதிபதி இடம் பெறுவது நல்லது. தன அதிபதியான இரண்டாம் இட அதிபதி ஏழாம் இடத்தில் இடம் பெறும் போது மனைவி வகையில் தன வரவு உண்டாகும். அதே நேரத்தில் இரண்டாம் அதிபதி பாவ கிரகங்களாக இருந்து ஏழாம் இடத்தில் இடம்பெறாமல் இருப்பது நல்லது.


   ஏழாமிடத்தில் கீர்த்தி, புகழ், அந்தஸ்து தரக்கூடிய மூன்றாம் இட அதிபதி இடம் பெறுவது நல்லது. சாதகருக்கு மனைவி வழி அல்லது மனைவி வந்தபின் சமூகத்தில் புகழ்பெறக்கூடிய யோகத்தை தரும். வழக்கம்போல் மூன்றாமிடத் அதிபதி பாவ கிரகமாக இல்லாமல் சுப கிரகங்களாக இருந்து ஏழாம் இடத்தில் அமர்வது நல்லது. அவ்வாறு பாவ கிரகங்களாக இருப்பினும் இயற்கை சுப கிரகங்கள் பார்வை செய்தால் சுப தன்மையை அடைந்து நல்ல பலனைத் தந்து விடும்.


 ஏழாம் இடத்தில் நான்காம் இட அதிபதி இடம் பெறுவது நல்லது ஆகும். அதாவது ஒரு கேந்திர அதிபதி மற்றொரு கேந்திர ஏறுதல் என்பது சிறப்பான பலனை தரும். ஆனால் அதே நேரத்தில் பாவ கிரகங்களாக இருந்து ஏழாம் இடம் பெறுவது நல்லது அல்ல.

சுக ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானம் ஏறுவதால் சாதகர் மனைவி வழியில் சுகத்தை அடைவார்.


ஏழாமிடத்தில் ஐந்தாமிட அதிபதி இடம் பெறுவது என்பது சாதகர்களுக்கு மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும். அதாவது ஒரு கோனாதிபதி மற்றொரு கேந்திரம் ஏறுதல் நல்லது என்ற வகையில் ஜாதகருக்கு நல்ல பலனை தரும். மனைவி நல்ல புத்திசாலியாக திறமை வாய்ந்ததாக அமைவாள்.

சில நேரங்களில் விருப்பப்பட்ட அல்லது காதலித்த பெண்ணே மனைவியாக அமையக்கூடிய யோகம் உண்டு. மற்றபடி வழக்கம் போல் பாவ கிரகங்களாக இல்லாமல் சுபகரங்களாக இருந்து ஏழாம் இடம் ஏறுதல் நல்லது.


     ஏழாம் இடத்தில் ஆறாம் இட அதிபதி இடம் பெறுவது நல்லது அல்ல.இவை கால தாமத திருமணத்தை கொடுக்கிறது.ஆறாம் இட அதிபதி பாவ கிரகமாகவும் இருந்தால் கூடுதலான கெடு பலனை கொடுக்கிறது.சுப கிரகமாக இருந்து ஏழாம் இடத்தில் இடத்தில் இருந்தால் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.


 ஏழாமிட அதிபதியே ஆட்சி பெற்ற நிலையில் ஏழாம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு மனைவி வழியில் நல்ல ஆதாயம் கிட்டும். ஆனால் அதே நேரத்தில் ஏழாம் இட அதிபதி பாவ கிரகமாக இருந்து ஏழாம் இடத்திலே ஆட்சி பெற்ற நிலையில் நிற்பது ஏழாம் இடத்தையும் லக்னத்தையும் கெடுக்கும்..


    ஏழாம் இடத்தில் எட்டாம் இட அதிபதி இடம் பெறுவது நல்லதல்ல அவ்வாறு இடம் பெற்று இருப்பின் மனைவி வழியில் வில்லங்கம், பிரச்சனை உருவாகும்.அதே இடத்தில் எட்டாம் இட அதிபதி பாவ கிரகமாக இருந்து ஏழாம் இடத்தில் இருந்தால் பிரச்சினை கூடுதலாக இருக்கும்.இயற்கை சுப கிரகமாக இருந்தால் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.


 ஏழாமிடத்தில் ஒன்பதாம் இட அதிபதி இடம் பெறுவது நல்ல பலனைத் தரும். ஒன்பதாம் இட அதிபதியாக இருந்தாலும் பாவக் கிரகமாக இருந்தால் நல்லதல்ல. சுப கிரகமாக இருந்து ஏழாம் இடத்து இடம் பெறுவது சாதகருக்கு மனைவி வழியில் வருமானம் சொத்துகள் கிடைக்கும்.சில நேரங்களில் மனதுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.


 ஏழாம் இடத்தில் ஜீவன அதிபதியான பத்தாம் இட அதிபதி இடம் பெறுவது நல்லது. அந்தப் பத்தாமிட அதிபதி பாவ கிரகமாக இருந்தால் இடம்பெறுவது கெடுபலனை சாதகருக்கு கொடுக்கும். சுப கிரகமாக இருந்தால் சம்பாதிக்கக்கூடிய மனைவியாக அமையக்கூடிய நிலை உருவாகும்.


   ஏழாம் இடத்தில் லாப அதிபதி இடம் பெறுவது மனைவி வழியில் நல்ல லாபங்களையும் மற்றும் சொத்துக்களையும் கொடுக்கும். மனைவியே நல்ல மதி யுக மந்திரியாக இருந்து நல்ல லாபத்தை சாதகருக்கு வர ஒத்துழைப்பு தருவாள். லாப அதிபதி பாவ கிரகமாக இருந்தால் ஏழாம் இடத்தில் இருந்தால் அதே நேரத்தில் சாதகரை கெடுக்கும் திருமண வாழ்வில் தடையை கொடுக்கும்.


   விரய அதிபதி என்னும் பனிரெண்டாம் இட அதிபதி ஏழாம் இடத்தில் இடம் பெறும்போது மனைவி வழியில் விரயங்களை உண்டாக்கும். மனைவி தேடுதலில் நிறைய செலவுகளை தரும் மனைவி வந்த பிறகு ஜாதகர் தேவையில்லாத வீண் செலவுகள் ஈடுபட்டு மன குழப்பத்திற்கு ஆளாவார். சுப கிரக பார்வைபடும் பொழுது அதுவே நல்ல பலனை தரக்கூடிய அமைப்பிலும் இருக்கும். விரயாதிபதி ஏழாம் இடத்தில் இடம்பெற்று சுபர் பார்வை பெறும் பொழுது அவர் செய்யும் செலவுகள் அனைத்தும் சுப விரயமாக அமையும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.