Thursday 31 March 2022

ஜோதிட சூத்திரங்கள்-( 2 )

                  

ஜோதிட சூத்திரங்கள்-(2)


        கிரகங்களின் வலிமையை கணிப்பதில் அடுத்த சில அடிப்படை விஷயங்களை சென்ற பதிவின் தொடர்ச்சியாக பார்ப்போம்.


திக் பலம்


  கிரகங்களின் வலிமையை நிர்ணயிப்பதில் ஸ்தான பலம் ,திருக் பலம் ஆகிய இவற்றினை

 தொடர்ந்து "திக் பலம்" என்பதும் குறிப்பிடதக்க ஒன்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.திக் என்பது திசையை குறிக்கிறது. 


‌. கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆகிய நான்கு திக்கில் சில கிரகங்கள் இடம்பெறும் போது கிரகங்கள் திக் பலம் பெறுகிறது.


        லக்கினத்தில் குரு பகவானும் புதன் பகவானும் இருக்கும் போதும் , நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் பகவான் இருக்கும் போதும், ஏழாம் இடத்தில் சனி பகவானும் மற்றும் பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய் நிற்கும் போதும் திக் பலம் பெறுகிறது.


    சில  நேரங்களில் ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் திக் பலம் பெறும் போது அந்த கிரகங்கள் இழந்த பலத்தை மீண்டும் பெறுகிறது . 


   உதாரணமாக மிதுன லக்னத்திற்கு நான்காமிடத்தில் சுக்கிரன் இருக்கும்போதும், துலா லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் போதும் அவை நீசம் பெற்றிருந்தாலும் (அதாவது ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும்) திக் பலம் என்ற வகையில் இழந்த  பலத்தை மீண்டும் பெறுகிறது.


  அதே நேரத்தில் திக் பலம் பெற்ற கிரகத்திற்கு ஏழாம் வீட்டில் நில் பலம் பெறுகிறது.நிஷ் பலம் என்பது பலத்தை இழந்த நிலையாக கருதப்படுகிறது.


வர்க்கோத்தமம்


    ஒரு கிரகம் இராசியிலும்  மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.  அவை உச்சம் பெற்ற கிரகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.


   மேஷம் வீட்டில்   அஸ்வினி 1ஆம் பாதம்,

ரிஷபம் வீட்டில் ரோகினி இரண்டாம் பாதம்,

மிதுனத்தில் புனர்பூசம் 3-ஆம் பாதத்தில், கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதத்தில், 

சிம்மத்தில் பூரம் 1ம் பாதத்தில், கன்னியில் சித்திரை இரண்டாம் பாதத்தில், 

துலாத்தில் சித்திரை 3-ஆம் பாதத்தில், விருட்சத்தில் அனுஷம் நான்காம் பாதத்தில் ,

தனுசில் உத்திராடம் 1ஆம் பாதத்தில், மகரத்தின் உத்திராடம் 2ஆம் பாதம், கும்பத்தில் சதயம் மூன்றாம் பாதத்தில், மீனத்தில் ரேவதி 4-ஆம் பாதத்தில் நிற்கின்ற கிரகங்கள் ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் நின்று வர்க்கோத்தமம் பலம் பெறும்.


பரிவர்த்தனை


  கிரகங்கள் தங்களது வீடுகளில் பரிமாறி இருக்கும்போது அதாவது பரிவர்த்தனை பற்றி நிற்கின்ற பொழுது அவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அந்த கிரகம் பெறுகிறது.


      நீசம் பெற்ற கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்கும்பொழுது அவை நீச பலத்தை இழந்து நீச பங்கம் பெறுகிறது. ஆட்சி பலத்துக்கு நிகராக பலனைத் தருகிறது.


  கடக வீட்டில் செவ்வாயும் ,

விருச்சிக வீட்டில் சந்திரனும் நின்று பரிவர்த்தனை பெற்று நீசம் பெற்ற நிலையினை அவை பெற்றிருந்தாலும் அவை பரிவர்த்தனை மூலமாக

 நீசபங்கம் பெற்று ஆட்சி பலத்தை அடைகிறது.


 பரிவர்த்தனை மூன்று வித பரிவர்த்தனை கருதப்படுகிறது.


  1) சுப பரிவர்த்தனை ,

    2) அவயோக பரிவர்த்தனை 

    3) விபரீத ராஜ யோகம் பரிவர்த்தனை


1) சுப பரிவர்த்தனை


  கேந்திர ஸ்தானமான 1, 4, 7 ,10 திரிகோண ஸ்தானமான 1,5,9 இவர்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனையும் , கேந்திராதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பதும், கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் சுபயோக பரிவர்த்தனை ஆகும்.


2)அவயோக பரிவர்த்தனை


       கேந்திர, கோண அதிபதிகளுடன் மறைவு ஸ்தான அதிபதிகள் (3,6,8,12) பரிவர்த்தனை பெற்று நிற்பது அவ யோகம் தரும் பரிவர்த்தனை ஆகும்.


3) விபரீத ராஜ யோகம் பரிவர்த்தனை     


        மறைவிடஸ்தான   அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி கொண்டு நிற்பது " கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் விபரீத ராஜ யோகத்தை தரும்.

என்னைப் பொருத்தவரை ஆறு மற்றும் எட்டாம் அதிபதி பரிவர்த்தனை அவ யோகம் தரும் பரிவர்த்தனை  ஆகும்.


நீச பங்க ராஜயோகம்


   கீழ்க்கண்ட விதிகளில் ஒரு கிரகம் நீச பங்கம் பெறுகிறது.


       1)நீசம் பெற்ற வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெற்று இணைந்திருந்தாலும்,


      2) நீசம் பெற்ற கிரகம் இருந்த  வீட்டின் அதிபதி  உச்சம் பெற்று  நின்றாலும் 


       3) நீச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்,


        4) நீச்சம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும்


       5)  நீசம் பெற்ற கிரகம்  இருக்கும் வீட்டின் அதிபதி சந்திர கேந்திரத்தில் நின்றாலும்


  மேற்கண்ட விதிகளை தக்க உதாரணத்துடன் விளக்குவோம்.


 1) மீன் 🐟 வீட்டில் புதன் நீசம் பெற்று இருக்கும் போது அந்த வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று நின்றாலும்,


 2) மீன வீட்டில் சுக்கிரன் நீசம் பெற்று நின்றாலும் அந்த வீட்டின் அதிபதி குரு பகவான் கடகத்தில் உச்சம் பெற்று நின்றாலும்,


3) கடகம் வீட்டில் செவ்வாய் நீசம் மற்றும் விருச்சிகம் வீட்டில் சந்திரன் நீசம் ‌ஆனால் இவ்விரு கிரகங்களும் பரிவர்த்தனை பெற்று நிற்பதும் நீசம் பங்கம் ஆகும.


4) உத்ராடம் இரண்டாம் பாதத்தில் குரு பகவான் நிற்கின்ற பொழுது குரு பகவான் நீசம் பெற்றிருந்தாலும் அவை வர்க்கோத்தமம் என்ற வகையிலும் நீச பங்கம் பெறுகிறது.


5) புதன் நீசம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டின் அதிபதி குரு பகவான் சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமான 1,4,7,10 நிற்பதும் நீச பங்கம் பெறுகிறது.


  நீசம் பெற்ற கிரகத்திற்கு வலிமையானது பூஜ்யம் எனில் நீச பங்கம் பெற்ற கிரகத்தின் வலிமையானது உச்சம் பெற்ற கிரகத்தின் வலிமையை விட சற்று அதிகம் ஆகும்.


  உதாரணமாக உச்சம் பெற்ற கிரகத்திற்கு வலிமையானது 100 எனில் நீச பங்கம் பெற்ற கிரகத்திற்கு 120 மதிப்பெண் என எடுத்துக் கொள்ள வேண்டும்.


அஸ்தமனம்


  சூரியன் ஒளி மிகுந்த கிரகம் ஆகும்.மாபெரும் சூரிய ஒளியை நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது.


  மாபெரும் சூரிய ஒளியினை பன்னிரெண்டு பாகைக்குள் நெருங்கும் மற்றுமொரு ஒளி கிரகமான சந்திரன் 🌙  இணையும் போது. அமாவாசை உண்டாகிறது.


சூரியனை நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது நெருங்கும்போது கிரகண தோஷம் உண்டாகின்றது.


 பொதுவாக புதனுக்கும், சந்திரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று கூறப்படுகிறது.


 சூரியனை சுக்கிரன் 9 பாகைக்குள்ளாக நெருங்கும் போதும்,

 புதன் பகவான் 11 பாகைக்குள்ளாக நெருங்கும்போதும், 

குரு பகவான் பதினைந்து பாகைக்குள் நெருங்கும்போதும், 

சனியும், செவ்வாயும் 17 பாகைக்குள்ளாக நெருங்கும் போதும் அஸ்தமனம் ஆகிறது.


 சூரியன் எந்தக் கிரகத்தை அஸ்தமனம் செய்கிறதோ அதன் பலனை தனது தசையில் தருகிறது.  சூரியனால் அஸ்தங்கம் அடைந்த கிரகம் அதன் தசையில் வலிமை இழந்து தனது ஆதிபத்திய பலனை தர இயலாமல் போய்விடுகிறது.


    புதன் சுக்கிரன் மற்றும் சந்திரன் மட்டும் அஸ்தங்கம் அடையும் போது அவை தன் சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை.


      புதன் சுக்கிரன் இரண்டு மட்டும் சூரியனுக்கு முன்-பின் என இருந்தபடி இருவகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும் போது தன் காரகத்துவ பலனை இழக்காது.ஸ்தானாதிபத்திய  பலனை இழக்கிறது.


இதுவே சூரியனுக்கு பின்புறம் அஸ்தங்கம் அடையும் போது காரக பலனை இழந்து ஆதிபத்திய பலனைக் கொடுக்கிறது .


புதன் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் இரண்டையும் தனித் தனியாகவும் , அஸ்தங்கம்,வக்கிரம் இரண்டும் இணைந்து அடைகிறது.


 சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் உள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. செவ்வாய், குரு ,சனி சூரியனை மையமாகக் கொண்டு பூமியின் வட்டப்பாதையில் அடுத்தாற்போல் வெளி வட்ட பாதையில் அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இவை வருவதில்லை.


ஆனால் உன் வட்ட கிரகங்களான சுக்கிரனும் புதனும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகிறது .சந்திரன் பூமியைச் சுற்றி 15 தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும் ,சூரியனுக்கும் இடையில் வருகிறது.


  செவ்வாய், குரு ,சனி இவை சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரமும் ஒரே நேரத்தில்  நடந்தால் அது சூரியனுக்கு முன் நடக்கிறது.


 எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கம் ,கிழக்கில் உதயமாகிறது. புதன் ,சுக்கிரன் மட்டுமே கிழக்கில் அஸ்தங்கம், மேற்கில் உதயமாகிறது.


வக்கிரம்


   கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேதுவை தவிர மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகர்கிறது.  ராகு மற்றும் கேது பகவான் மட்டும் பின்னோக்கி நகர்வதால் அவற்றிற்கு வக்கிர கதி கிடையாது.


  உண்மையாக விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது கிரகங்கள் எல்லாம் தத்தம் பாதையில் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கும் அவை பின்னோக்கி வருவதில்லை பின்னோக்கி வருவது போல் தோற்றம் அளிப்பதை தான் "வக்ர கதி"என்கிறோம்.


    சந்திரனுக்கும்  வக்கிர கதி கிடையாது.


    குருபகவான் மூன்று மாதத்திற்கு அதிகமாகவும், சனி பகவான் நான்கிலிருந்து ஐந்து மாதம் வரையும், செவ்வாய் பகவான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாத கால அளவும,

 சுக்கிர பகவான் ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை 50 நாட்கள் வக்கிர கதி அடைகிறது.


மேற்கண்டவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு மட்டுமே ஸ்தம்பனகதி என்ற சிறப்புப் பெயருண்டு. ஏனெனில் செவ்வாய் சில நேரங்களில் ஒரு இடத்தில்  4 முதல் 5 மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பது போல் தோற்றமளிக்கும். எந்த கிரகமும் ஒரே இடத்தில் நிலையாக நிற்பதில்லை ஆனால் செவ்வாய் மட்டுமே இது போல தோற்றமளிக்கும். 


  சூரியனோடு இணைந்து இருப்பது அர்த்தங்க கதி ஆகும்.

அதிலிருந்து விலகி வருவது உதயகதி. சூரியனுக்கு 2ல் இருப்பது சீக்கிர கதி சூரியனுக்கு 3-ல் இருப்பது சமதி சூரியனுக்கு  4-ல் இருப்பது மந்தகதி சூரியனுக்கு 5 ,6 இல் இருப்பது வக்கிரகதி,

 சூரியனுக்கு ஏழு எட்டில் இருப்பது அதி வக்கிர கதி,

சூரியனுக்கு 9 ,10ல் இருப்பது நிவர்த்தி கதி

 சூரியனுக்கு 11-ல் இருப்பது சீக்கிர கதி சூரியனுக்கு 12ல் இருப்பது அதி சீக்கிர கதி ஆகும்.


 

  

உதய கதி

    அஸ்தங்கத்தில்  இருக்கும் கிரகம் அஸ்தங்க எல்லையை விட்டு விலகும் போது  அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் உடைய அஸ்தங்க எல்லையை அல்லது பாதையை விட்டு விலகுவதை உதயகதி என்கிறோம் .


   இதன் பலன் இதுவரை ஜாதகர்  இழந்திருந்த காரக மற்றும் ஸ்தான பலத்தை மீண்டும் பெறுவார்.


    தொடரும்......


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

   9715189647


     செல்

  9715189647


Email 

masterastroravi@gmail.com


              



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

        M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜோதிட சூத்திரங்கள்-( 1 )

 ஜோதிட சூத்திரங்கள்-(1)


                         


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனித வாழ்வை வழிநடத்துவதில் பன்னிரெண்டு பாவகங்களுக்கும் மற்றும் ஒன்பது கிரகங்களுக்கும்  பெரும் பங்கு உண்டு.


 ஒன்பது கிரகங்கள் பன்னிரெண்டு பாவகங்களில் அமரும் போது அவை தரக்கூடிய பலாபலன்கள் கீழ் கண்ட வகையில் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டியதாக உள்ளது.


  1)ஸ்தான வலிமை


       ஸ்தான வலிமை என்பதும் அவசியமான ஒன்றாகும் ஒரு கிரகம் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம் ,பகை மற்றும் நீசம்  போன்ற வகையில் எந்த நிலையில் உள்ளது என்பதை அதனுடைய பாகைகளை( degree) அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும்.


    இங்கு  உச்சத்திற்கு 100 மதிப்பெண் எனில் ,மூலத்திரிகோனத்திற்கு 75 மதிப்பெண் , ஆட்சி பெற்ற கிரகத்திற்கு 50 மதிப்பெண், சம தன்மையுள்ள கிரகத்திற்கு இருபத்தி ஐந்து மதிப்பெண்,  பகை பெற்ற கிரகத்திற்கு 10 மதிப்பெண் மற்றும் நீசம் பெற்ற கிரகத்திற்கு பூஜ்யம் மதிப்பெண் என்றாலும்  அதே நேரத்தில் நீச்சம் பெற்ற கிரகம் நீசபங்க பெரும்பொழுது 120 மதிப்பெண் பெறுகிறது. அதாவது உச்சத்தை விட கூடுதலான மதிப்பெண்ணை பெறுகிறது.


 ஸ்தான வலிமையைப் பொறுத்த வரை பாவ கிரகங்களான சனி செவ்வாய், ராகு மற்றும் கேது, உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் நேர் வலு பெற கூடாது என்பதும் ,கேந்திரத்திற்கு அதிபதியான ஒரு கிரகம் கேந்திரங்களில்  நின்று உச்சம், ஆட்சி பெற்று இருப்பதும் கேந்திராதிபத்திய தோஷம் தரும் என்பதையும் கவனித்து விதிகளுக்குள் விதிவிலக்குகளை அவசியம் கவனிக் கப்பட வேண்டும். 


 2)கிரக பார்வை ,


    எல்லா கிரகங்களுக்கும் ஏழாவது பார்வை உண்டு. இங்கு ஏழாவது பார்வைக்குக்கு 100 மதிப்பெண் தரப்படுகிறது. குரு ,சனி , செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் விசேஷ சிறப்பு பார்வை உண்டு.


  குரு பகவானுக்கு   ஐந்து மற்றும் ‌ஒன்பது என்ற சிறப்பு பார்வை உண்டு "குரு பார்த்தால் கோடி நன்மை தரும்" அதேநேரத்தில் சுப வீட்டிலிருந்து பார்க்கக்கூடிய குருவின் பார்வைக்கும் தனது பகை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய குருவின் பார்வைக்கும் சில மாறுபட்ட பலன்கள் உண்டு.நீசம் குருவின் பார்வை படம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.


 குருபகவான் உடைய ஏழாம் பார்வைக்கு 100% பலன் தரும் என்றால் அது ஐந்தாம் பார்வைக்கு 50 சதவீத பலனும்,

 ஏழாம் பார்வைக்கு 75 சதவீதம் பலனும் தரும்.


 சனி பகவான் பார்வை சர்வ நாசம் செய்துவிடும். சனிபகவானுடைய ஏழாவது பார்வைக்கு 100% எனில் அதனுடைய மூன்றாம் பார்வைக்கு நம் 50 சதவீதமும் பத்தாம் பார்வைக்கு 25 சதவீதம் பாதிப்பு இருக்கும்..


   குரு பகவான் பார்க்கப்பட்ட சனி பகவானுடைய பார்வை நல்ல பலனைத் தருவதில்லை. அதே நேரத்தில் தீய பாதிப்பையும் உண்டாக்குவதில்லை.


 செவ்வாய் பகவானுடைய ஏழாம் பார்வைக்கு 100% என்றால் அதனுடைய நாலாம் பார்வைக்கு 50 சதவீதமும் எட்டாம் பார்வைக்கு 75%    பாதிப்பு பலன் உண்டு.

செவ்வாய் பகவான் பார்வை சுப வீடுகளிலிருந்து பார்க்கப்படும் பொழுது அதன் பாதிப்பு தன்மை குறையும். செவ்வாய் பகவான் தனக்கு நட்பு கிரகமான சந்திரனும் ,குரு பகவானையும்  பார்க்கும் போது அதிக அளவு பாதிப்பதில்லை.


   வளர்பிறை சந்திரனின்  பார்வையானது தனது ஏழாம் வீட்டில் உள்ள கிரகங்களை மட்டுமல்லாமல் அதற்கு முன் பின் ராசிகளான ஆறு மற்றும் எட்டாம் இடங்களையும் அதன் ஒளி சென்றடையும் என்ற வகையில் சந்திரனுக்கு ஆறு ,ஏழு ,எட்டு உள்ள இயற்கைச் சுபக்கிரகங்கள் (சுக்கிரன், புதன் மற்றும் குரு) இருந்தால் சந்திர அதியோகம் பெறும் என்பதும் இந்த சூட்சும உண்மைகளை அடிப்படையாக கொண்டதாகும். தேய்பிறைச் சந்திரன் ஆன அமாவாசை சந்திரனுடைய பார்வை கெடு பலனை தரும். பாவர் உடன்   சேராத புதன் பார்வை சுப தன்மை அடைய வைக்கும்.


    சில நேரங்களில் குருபகவான் தனது 5ம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்ப்பதற்கு பதிலாக 6-ம் வீட்டையும், 7ஆம் வீட்டை பார்ப்பதற்கு பதிலாக 8-ஆம் இடத்தையும் மற்றும் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதற்கு பதிலாக பத்தாம் வீட்டையும் அதிகம் பார்க்க நேரிடும்.


 இது எவ்வாறெனில் ஒரு ராசியில் குருபகவான் 29 பாகையில்  இருப்பதாக வைத்துக்கொண்டால் இது போன்ற நிகழ்வு உண்டாகும்.உதாரணமாக மீன வீட்டில் இருபத்தி எட்டு பாகை 59 கலையில் இருக்கும் குருபகவான் கடக வீட்டில் தொடக்க பாகையில் இருக்கும் சனி பகவானைப் பார்த்து சுபத்துவ படுத்த வாய்ப்பு இல்லை.


3) கிரக சேர்க்கைகள்,


    கிரக சேர்க்கைகள் பற்றி பார்க்கும் போது  ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவற்றின் உறவு நிலைகளை கவனிக்கப்பட வேண்டும் .உதாரணமாக சூரியனுக்கு சனி பகை ,புதனுக்கு செவ்வாய் பகை ,குருவுக்கு சந்திரன் செவ்வாய் சூரியன் நட்பு இதுபோல் கவனிக்கப்பட வேண்டும். 


   இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன் , பாவி உடன் சேராத தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை சேரும்பொழுது தன்னுடன் இணைந்த கிரகத்தின் வலிமையை அதிகரிக்க செய்கிறது .மாறாக பாவக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு ,கேது போன்றவை  உடன் இணையும் போது தன்னுடன் இணைந்த கிரகத்தை கெடுத்து தான் சுபத் தன்மை அடைகிறது.


   பாகை ,கலை அடிப்படையில் கிரக சேர்க்கைகள் கவனிக்கப்பட வேண்டும்.இரண்டு கிரகங்கள் ஒரு ராசியில் இருந்தாலும் அவை ஒன்றாக இருந்ததாக கருத இயலாது. சில நேரங்களில் இரண்டு கிரகங்கள் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தாலும் அவை ஒன்றை ஒன்று சேர்ந்து உள்ளதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் இவை அனைத்தும் அடிப்படையில் ஆராயும் போதே இந்த சூட்சும உண்மை புலப்படும்.


   சனி  மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களுடன் கேதுபகவான் தனித்தனியாக இணையும் பொழுது தனது தசையில் சூட்சும வலுவை தருகிறது .மாறாக சனி, செவ்வாய் இருவரும் சேர்ந்து உள்ள நிலையில் கேது சேரும்போது சூட்சும உண்மை வேலை செய்வது இல்லை.


   ஒரு கிரகம் தன்னுடன் இணைந்த கிரகத்தை. உதாரணமாக குரு பகவான் உடன் சனி பகவான்  எட்டு பாகைக்குள் அமரும் போது அதிக பாதிப்பை தருகிறது. பதிமூன்று பாகைக்குள் அமரும்போது 50 சதவீத பாதிப்பு தருகிறது.


     இருபத்தி இரண்டு பாகை தாண்டி ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்தாலும்  ஒன்றை ஒன்று பாதிப்பதில்லை.இங்கு  குரு பகவானும் சனி பகவானும் ஒரு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இல்லை எனலாம்.சனி குரு பகவானை பாவத்துவம் அடைய செய்வதில்லை.


அதே நேரத்தில் மேஷ வீட்டில் 

இருபத்தி  ஒன்பது பாகையிலுள்ள சனி பகவான் ரிஷப வீட்டில் முதல் இரண்டு பாகையில் உள்ள குருபகவானை பாவத்துவம் அடையச் செய்கிறது. இங்கு பார்ப்பதற்கு குருவும், சனியும் வேறு வேறு வீடுகளில் இருந்தாலும் சனி பகவான் குருவை பாவத்துவம் அடைய வைத்து விடுகிறார் குரு பகவான் சனி பகவானை சுபத்துவ தன்மையை அடைய வைக்கிறார்.


  வீடு கொடுத்தவன் வலு


 கிரகம் இருக்கக்கூடிய வீட்டின் அதிபதியின் வலுவிற்கு ஏற்றபடியும் ஒரு கிரகம் தரும் பலாபலன்கள் அமைகிறது. கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகம் தனது தசை காலங்களில் அதிக நன்மையை தருகிறது .அந்தவகையில் பாவ கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் அந்த பாவ கிரகம் தனது தசையில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தருகிறது.


சார் நாதன் வலிமை


         ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் எத்தனையாவது பாத சாரத்தில் அமர்ந்து உள்ளது என்பதையும்,சார நாதன் யார் என்பதையும் மற்றும் சார நாதன் ஜாதக கட்டத்தில் பெற்ற ஸ்தான வலிமையினை பொருத்தும் , சாரம் கொடுத்த கிரகத்திற்கும் லக்கனாதிபதிக்கும் உள்ள உறவுகளை பொருத்தம் சாரநாதன் உடைய வலுவானது அமைகிறது. 


   சார நாதன் வலுப்பெற்ற நிலையில் அந்த கிரக தசையில் சாரநாதன் பெற்றுள்ள ஆதிபத்திய வழியாக அந்த ஜாதகருக்கு நன்மையைத் தருகிறது.


   தொடரும்...


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்& செல்

   9715189647


    செல்

 9715189647

‌ 7402570899


My email

masterastroravi@gmail.com

                           



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

          


வாழ்வில் உயர்வடைய தேவையான ஜாதக அமைப்புகள்


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே விருப்பப்படுகிறோம்.

மனிதன் அவன் வாழும் இடம் , உடல் வலிமை மற்றும் சூழலுக்கு ஏற்பவே இந்த முயற்சியின் தன்மை மற்றும் வகை அமைகிறது என பொதுவாக கூறப்பட்டாலும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகளும் நடப்பிலும் அதனை தொடர்ந்து வரும் தசா அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவில் முயல்கிறேன்.


"முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்"


 என் வள்ளுவப் பெருந்தகையால் விளம்பப் பட்டாலும் எல்லா முயற்சிகளும் வெற்றியை நோக்கி இழுத்துச் சென்று விடுவதில்லை.


  சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் கடின முயற்சியானது வெற்றி கனியை ஈட்டி தரும் என்றாலும் ஜாதகருக்கு லக்கனாதிபதி வலுப்பெற்று, சரியான உகந்த தசா அமைப்புகள் இருந்தால் மட்டுமே செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பாதையில் இட்டுச் செல்லும் என்பது ஜோதிட வியல் கருத்தாகும்.


  "விதியை மதியால் வெல்லலாம்" என்று கூறினாலும் அந்த விதியை மதியால் வெல்லும் யோக அமைப்பு சாதகமாக இருக்க வேண்டும்.


  பிரபஞ்ச வீதியில் உள்ள கிரகங்களின் அதிர்வலைகள் பிரபஞ்சத்தில் உள்ள மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் பாதிக்கிறது.


 கடினமான அவயோக அமைப்புகளையும் மற்றும் பாவ கிரகங்களையும் சுபத்துவமாக மாற்றக்கூடிய தன்மை இயற்கை சுப கிரகங்களான குரு பகவான், வளர்பிறை சந்திரன்,, தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் தொடர்பினை அடைகிறது.


  ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து படிப்படியாக முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல அவனது வாழ்வில் தொடர்ந்து நடக்கக்கூடிய தசா அமைப்புகள் உகந்த யோக தசை அமைப்புகளாக பிறந்ததில் இருந்து வரவேண்டும்.


   ஜாதகத்தில் லக்கின பாவங்களும் அதன் அதிபதியும் எந்த வகையிலும் பாதிப்பு அடையாமல் பலமடைந்து இருப்பின் அதன் வலிமைக்கு ஏற்ப ஜாதகரின் முயற்சி அமைந்து தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் அந்த மனிதனை இட்டுச் செல்கிறது.


 ஒருவனது முயற்சி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றால் அவனது முயற்சியானது "விடாமுயற்சி வெற்றிக்கு அறிகுறி"

 என்ற வகையில் சிறப்பாக செயல்பட அவனது சாதகத்தில் "முயற்சி ஸ்தானம்" என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலிமையடைந்து சுபஸ்தானம் ஏறி சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.


 ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசைகளாக திரிகோணாதிபதிகள் என்று அழைக்க கூடிய லக்கனாதிபதி, பஞ்சமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகிய மூன்று தூண்களும் பாவம் அற்று வலிமையடைந்து அதற்குரிய தசா அமைப்புகள் அவரது வாழ்வில் வாழும் இளமைக்காலத்தில் வாகை சூட வைக்க தூண்டுகோலாக அமைந்திருக்க வேண்டும்.


லக்னாதிபதி வலுப்பெற்று குருபகவான் பார்த்த தசா அமைப்புகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் தனது முயற்சியால் வெற்றி அடைந்து வாழ்வின் உச்சியை அடைவார்கள்.


ஒருவர் ஜாதகத்தில் பௌர்ணமி யோகத்தில் பிறந்த சந்திரனுக்கு ஆறு, ஏழு ,ஏட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன் அமர்ந்து அந்த தசா அமைப்பினர் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். இவர்கள் சந்திராதி யோகம் பெற்றவர்களாக கருதலாம்.


   பங்கப்படாத தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற தசைகள் வரும் காலங்களிலும் சாதகனது முயற்சி வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.


  குரு அணி (குரு சந்திரன் ,சூரியன் செவ்வாய், கேது,) மற்றும் சுக்கிரன் அணி (சுக்கிரன்,சனி ,புதன்,ராகு) ஆகிய இரு அணிகளில் பிறந்தவர்கள் தங்களது அணி சார்ந்த தசா அமைப்புகள் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்களும் வாழ்வில் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாகை சூடி தொழில் வானில் கொடி கட்டி பறப்பார்.சில நேரங்களில் மாற்று அணியின் தசா அமைப்பினர் ஜாதகருக்கு வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களுக்கு அக்கிரமங்கள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் நின்று சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

 9715189647


  செல்

  9715189647



                          


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,MA,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்) 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பன்னிரெண்டு ராசிகள் காட்டும் மகத்தான வாழ்வியல் நிலைகள்.

 

 பன்னிரண்டு ராசிகள் காட்டும் மகத்தான வாழ்வியல் நிலைகள்.


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தில் பன்னிரெண்டு ராசிகள் உள்ளன .ஒவ்வொரு கட்டத்தையும் ஒரு கிரகம் ஆளுமை செய்கிறது. இவ்வாறு ஆளுமை செய்யும் கிரகத்தை" காரகர்" என்று அழைக்கிறோம்.

ஒரு கிரகம் தனது காரகன் பலன்களை வாழ்நாள் முழுவதும் தருகிறது.அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ஆதிபத்தியங்களை கொண்டுள்ளது. இந்த கிரகம் கொண்ட ஆதிபத்தியம் தரக்கூடிய பலன்கள் அந்த திசை காலங்களில் மட்டும் நடக்கிறது.


 தசை நடத்தும் கிரகம் நல்ல ஆதிபத்தியங்களை கொண்டிருந்தால் நல்ல பலன்களையும் ,தீய ஆதிபத்தியங்களையும் கொண்டிருந்தால் தீய பலன்களையும் நல்ல, கெட்ட ஆகிய இரு ஆதிபத்தியங்களையும் கொண்டிருந்தால் நல்லது, கெட்டதும் கலந்த இரண்டு ஆதிபத்திய பலன்களை தசை முழுவதும் தரக்கூடிய அமைப்பைப் பெற்றிருக்கும்.


 ஜாதகத்தில் லக்கனத்திற்கு காரகராக சூரிய பகவான் வருவார்.சூரியனின் பொதுவான காரக பலன்கள் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் கிரகம் ஆகும். பிரச்சனை என்று வரும் இடங்களில் ஓடி ஒளிந்து கொள்ளாமல் முன் நின்று தட்டிக்கேட்கும் தலைமைத்துவம் தரக்கூடிய குணம் லக்னத்திற்கு 

 காரகனான சூரிய பகவானுக்கு உண்டு.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னம், அதன் அதிபதி மற்றும் காரகர் சூரிய பகவான் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் கொடி கட்டி பறக்க கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் லக்னத்திற்கு காரகரான சூரிய பகவான் இரண்டும் வலுப்பெற்று நின்றால் தான் எவ்வளவு யோகமான தசை அமைந்தாலும் அந்த யோகத்தை அனுபவிக்க இயலும்.அதே போல் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனவலிமை ஜாதகருக்கு அமையும்.


  லக்னத்தில் சூரிய பகவான் அமர்ந்து ஏழாம் இடத்தில் சந்திரன் வரும் பொளர்ணமி யோகத்தில் பிறந்தவர் நல்ல தேஜஸ் உடையவராக காணப்படுவார்கள்.


  ஜாதகம் கட்டத்தில் இரண்டாம் பாவகம் ஒருவரது தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானமாகும்.இரண்டாம் பாவகத்திற்கு பொதுவான காரகராக செயல்படுபவர் குரு பகவான். இரண்டாம் இடத்தை ஜாதகருக்கு தன ஸ்தானம் என்று இருக்கிறது.


 இரண்டாம் ஆம் இடம் தன ஸ்தானம் ஆகும். அதன் அதிபதி தனாதிபதி மற்றும் தனகாரகன் குரு ஆகிய மூன்றும் வலுப்பெற்ற போதுமான நிலையில், தேவையான பொருளாதார வசதியை சாதகருக்கு தரக்கூடிய யோகமாகும். 

குரு பகவானே தனம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்றுக்கும் காரகர்களாக திகழ்வார்,


 ஒருவருக்கு தன யோகத்தை தரக்கூடிய தனம் ,பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்று ஸ்தான அதிபதிகளும்(2,9,11) வலுப்பெற்று தங்களுக்குள் பரிமாறி நின்று குருபகவான் பார்வையை பெற்றுள்ள நிலையை பெற்றவர்கள் மகாதனவானாக திகழ்வார்கள்.


இரண்டாம் இடமும் குருபகவானும் வலுப்பெற்ற நிலையில் கல்வி கேள்விகளில் வல்லவராகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் யோகம் உடையவராகவும் திகழ்வார்கள்.


 இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்களான சனி ,செவ்வாய் மற்றும் சாய கிரகங்களான ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லது .அவ்வாறு இருப்பின் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க கூடிய சூழலும் திருமண வாழ்வில் கால தாமதத்தையும் தரக்கூடும்.


ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்திற்கு காரராக செவ்வாய் பகவான் திகழ்வார். மூன்றாம் இடத்தை சகோதர ஸ்தானமாகவும் மற்றும் செவ்வாய் பகவானை சகோதர காரகராகவும் அறியலாம். இவை தவிர்த்து மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து தரக்கூடிய இடமாகவும். ஒருவருடைய செக்ஸ் வீரியத்தை அறிந்து கொள்ளக்கூடிய காம ஸ்தானம் ஆகும் .


 ஒருவர் ஜாதகத்தில் 3ஆம் இடம் வலுப்பெற்று நின்றால் அவர் சமூகத்தில் பேர் சொல்லி குறிப்பிடும் அளவிற்கு புகழ் பெற்ற விஐபி ஆக திகழ்வார்.


     நான்காமிடம் ஒருவருக்கு தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம் ஆகிய அனைத்து சுகங்களையும் அறிய உதவும் ஸ்தானமாகும். நான்காம் இடத்திற்கு கல்விகாரகன் புதன் பகவானும் ,தாய்க்கு காரகர் சந்திரன் பகவான் வாகனத்திற்கும் மற்றும் வீட்டிற்கும் காரக கிரகங்களாக சுக்கிரன் திகழ்வார்.


 ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி வலுப்பெற்ற நிலையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக் கூடிய யோகத்தை தருவார்.


  நான்காம் இடம் அந்த அதிபதி மாதுர் காரகன் சந்திரன் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் தாயார் சுகத்தையும், நான்காமிடம் அந்த அதிபதி மற்றும் சுக்கிரன் வலுப்பெற்ற நிலையில் வீடு வாகன யோகத்தையும் ஒருவர் பெறுவார்.


 நான்காம் இடத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் எட்டு பாகையில் நின்று நான்காம் அதிபதியும் சுக்கிரனும் கெட்ட நிலையில் கடைசி வரை சொந்த வீட்டில் வசிக்காமல் வாடகை வீட்டில் வசிக்க கூடிய நிலையை அடைவார்.


ஒருவர் ஜாதகத்தில் நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் காரகன் புதன் பகவான் ஆகிய மூன்றும் வலுப்பெற்ற நிலையில் கற்ற கல்வியாலும் பெற்ற வித்தையாகும் யோகத்தை தருவார்.


 நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகியவை திக் பலம் பெறுவார்கள். செவ்வாய் பகவான் நிஷ் பலம் பெறுவார். நான்காம் இடத்தில் பாவக் கிரகங்கள் இருப்பது கேந்திரா திபேத்திய தோஷத்தை தராது எனினும் வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெற வேண்டும்.


 ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் , புத்திர ஸ்தானம் மற்றும் புத்தி ஸ்தானம் ஆகும். ஐந்தாம் இடத்திற்கு காரக கிரகமாக குருபகவான் திகழ்வார். எனவே குரு பகவான் புத்திரகாரகன் என்றும்.


ஐந்தாமிடத்தில் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்று வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத நிலையில் ஐந்தாம் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பலனை அடைய வேண்டும்.ஒவ்வொன்றிற்கும் 40 மதிப்பெண் விகிதத்தில் மூன்று கெட்டுப்போனால் புத்திரதோஷம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வசிக்க இயலாத தன்மை மற்றும் பூர்வபுண்ணிய சொத்துக்கள் பெறாத நிலையை அடைந்து விடுவார்கள்.


 ஜாதகத்தில் ஐந்தாமிடம் அதிபதி லக்கின யோகராக செயல் படுவார்கள். அதனால் 5ஆம் இட அதிபதி தசை எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் அந்த தசை நடத்தினால் மிகுந்த யோகத்தை சாதகர்கள் அந்த காலங்களில் பெறுவார்கள்.


  ஒருவருடைய ஜாதகத்தில் வலுப் பெற கூடாத ஸ்தானம் எது என ஆராய்ந்து பார்த்தால் அதாவது கெட்டுப் போக வேண்டிய ஸ்தானம் ஆறாம் இடம் ஆகும்.இதனால் ஆறாம் இடத்தை சத்ரு ஸ்தானம் என்று அறியலாம்.


ஆறாம் இடத்தை ஒருவரது கடன் ,பிணி, நோய், எதிர்ப்பு மற்றும் ஆள் அடிமை போன்றவற்றை ஆராய்ந்து அறிய உதவும் ஸ்தானமாகும்.


  பொதுவாக 6-ஆம் இட அதிபதி வலுப்பெற்று நிற்பதோ அல்லது 6-ஆம் இடத்தையும் அதன் அதிபதியும் இயற்கைச் சுபக்கிரகங்கள் பார்த்து வலுப்பெறக் கூடாது .மாறாக பாவ கிரகங்கள் பார்த்து அந்த ஸ்தானத்தையும் அதிபதியையும் வலிமை குன்றச் செய்வது நல்லது.


  ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் வலிமை குன்றி ஆறாம் இடம் வலிமை பெற்று நிற்பின் பிறரிடம் வேலை செய்யும் நிலையை தருமே ஒழிய சொந்த தொழில் செய்ய முடியாது. மாறாக 6-ஆம் இடம் வலிமை இழந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் வலுப்பெற்று நிற்பின் சுயதொழில் செய்யலாம்.


 ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்று நிற்பின் அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் நிலையைத் தரும்.


ஆறாம் இடத்திற்கு காரகராக செயல்படுவது மிகுந்த பாப கிரகமான செவ்வாய் பகவானும் சனி பகவானும் ஆவார். செவ்வாய், சனி ஆகிய இரண்டும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஒரு இடத்தைப் பார்த்தால் அந்த இடம் சர்வநாசம் ஆகிவிடும்.


ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனக்கு வரும் வாழ்க்கைத்துணை பற்றி அறிய உதவும் மிக முக்கியமான ஸ்தானம் ஆகும். இந்த களத்திர ஸ்தானத்திற்கு காரகராக நவகிரகங்களில் சுக்கிர பகவான் திகழ்வார்.. அதனால்தான் இலக்கணம் ஆகிய சாதகருக்கு சம சப்தமாக ஏழாம் இடத்தை பிடித்துள்ளார்.


   ஏழாம் இடம் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு நிலைகளை பற்றி அறிந்து கொள்ளவும். தனக்கு வரும் நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகிறது.


   தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் அனைத்து தகுதிகளையும் அறிந்துகொள்ள ஏழாம் இடம், அதன் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


 பொதுவாக ஏழாமிடத்தில் அல்லது அதிபதியுடன் களத்திரகாரகன் சுக்கிரனுடன் சனி ,செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்வதோ அல்லது பார்ப்பதோ அதற்கு உகந்தது அல்ல. அவ்வாறு சேர்ந்து இருப்பின் வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெற்று இருக்க வேண்டும்.


 ஒருவரது ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்று அறியப்படுகிறது. சனி பகவான் ஆயுளுக்கு காரகராக திகழ்வார். ஒருவரது ஜாதகத்தில் அஷ்டமாதிபதி என்றழைக்கப்படும் எட்டாம் இடத்தின் தசையானது நடப்பில் உள்ள காலங்களில் வம்பு ,சண்டை, வழக்கு,அசிங்கம், கேவலம் ,ஆயுள் பங்கம் மற்றும் சிறை செல்லல் போன்ற துர் விஷயங்களை தரக்கூடிய நிலையில் அமையும்.


 எட்டாமிடம் சுபத்துவம் நிலையை அடைந்தால் வெளிநாடு செல்ல உகந்த யோகத்தையும் மறைபொருள் உண்மைகளையும் அறிந்து கொள்ளவும் உதவும்.


ஒருவரது ஆயுளை அறிந்துகொள்ள உதவும் ஸ்தானம் எட்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் ஆயுள்காரகன் சனி பகவான் ஆவார். பாதகாதிபதி மாரகாதிபதி மற்றும் சத்ரு ஸ்தானாதிபதி ஆகியவற்றை எல்லாம் ஆய்வுசெய்து முடிவு செய்ய வேண்டும். லக்கனாதிபதியின் வலிமையையும் மற்றும் நடக்கக்கூடிய தசையையும் பொறுத்து ஒருவரது ஆயுளை நிர்ணயம் செய்ய இயலும்.


 ஒருவரது ஜாதகத்தில் தந்தையை பற்றியும் ,தான தர்ம குணங்களையும் மற்றும் மேல்நிலை கல்வி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானமாக விளங்குவது ஒன்பதாம் இடம் ஆகும்.


 பெருங் கோணம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடம் லக்கன யோகராகக் கருதப்படுகிறது.ஒன்பதாம் இடமான தந்தைக்குக் காரகராக சூரிய பகவான் திகழ்கிறார்.ஒன்பதாம் இடம் அந்த அதி மற்றும் சூரிய பகவான் வலிமை பெற்ற நிலையில் தந்தையாலும் தந்தை வழி உறவுகளாலும் பெருத்த யோகத்தை அடைகிறார்.


ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகமான ராகு அல்லது சனி நின்று சூரியனும்,சனி பகவானும் சம சப்தமாக பார்த்து கொள்ளும் அமைப்பானது தந்தை மகன் உறவின் நிலையை பாதிக்கும்.


ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானமாக கருதப்படுகிறது.பாக்கியத்திற்கு காரகராக குருபகவான் விளங்குகிறார்.ஒன்பதாம் இடம் மற்றும் குரு பகவான் இரண்டும் வலுப்பெற்று ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று விளங்கும் நிலையில் மிகுந்த வருமானத்தை ஒன்பதாம் இட அதிபதி தசையில் அடைவார்.


ஒருவர் செய்யும் தொழிலை அறிந்து கொள்ள உதவுகிறது.


பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு காரகராக சூரியன், புதன், குரு சனி ஆகிய கிரகங்கள் விளங்குகின்றன.


 ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக நின்று ராசி மற்றும் லக்கனத்திற்கு தனம் மற்றும் ஜீவன ஸ்தானமான இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு சுபத்துவமான தசை நடப்பில் உள்ள காலங்களில் அந்த கிரகம் தொடர்பு கொண்டு தொழில் செய்து மிகுந்த ஜீவனத்தை ஜாதகர் ஈட்டுவார்.


  ஒருவர் தனக்கு வரும் லாபத்தை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் என்பதால் பதினொன்றாம் இடத்தினை லாப ஸ்தானம் என்றும் குறிப்பிடுகிறது.


 தனக்கு வரக்கூடிய லாபம், இளைய தாரம் மற்றும் மூத்த சகோதரன் ஆகியவை ஆய்வு செய்து கண்டறிய உதவும் ஸ்தானமாக விளங்குவது.


பதினொன்றாம் இடத்தில் உள்ள நட்சத்திர சாரம் பெரும்பாலும் லக்கன யோகரின் நட்சத்திரமாக இருப்பதால் லக்கன அவ யோகராக இருந்தாலும் பாவராக இருந்தாலும் உபஜெய ஸ்தானம் என்பதால் நட்பு நிலையில் இருக்கும் போது மிகுந்த யோக பலன்களை ஜாதகருக்கு கொடுப்பவராக திகழ்வார்.


 லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு காரகராக குரு பகவான் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் 11ஆம் அதிபதியும், குரு பகவானும் வலுப்பெற்று இருந்தால் அல்லது 11-ஆம் இடத்தின் அதிபதி குரு பார்த்தாலும் அந்த தசை காலங்களில் தான் மேற்கொண்ட தொழில் மூலமாக மிகுந்த லாபத்தை ஜாதகர் அடைவார்.


   பதினொன்றாம் இட அதிபதி எந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறார்களோ அவை சார்ந்த லாபத்தை ஜாதகரது வாழ்வில் கொடுக்கும்.


 ஒருவர் ஜாதகத்தில் நிறைவான ஸ்தானமான 12-ஆம் இடத்தை ஒரு வாழ்வின் அல்லது ஒரு நாளின் இறுதி நிலையாக கருத வேண்டும். ஒரு நாளின் இறுதி நிலை என்பது நித்திரையை தழுவும் இடம் என்பதாலும் ,ஒரு நாளின் இறுதியில் உலகியல் ஓசை அடங்கி உடலின் ஆசை தொடங்குகின்ற நேரம் என்பதாலும் அயன ,சயன , நித்திரை, படுக்கை மற்றும் முக்தி சுகத்தை தரும் ஸ்தானம் ஆகும்.ஆறு தாண்டும் இடமாகவும் கருதப்படுகிறது.


   ஒருவர் வாழ்வில் அடையும் விரயத்தை குறிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. பணம் விரயமாக இருக்கலாம் அல்லது கால விரயமாக இருக்கலாம் அல்லது வாழ்வியலில் எடுத்த முயற்சி விரயமாக இருக்கலாம்.


 பன்னிரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து அந்த தசைகள் நடக்கக்கூடிய காலங்களில் கடல் கடந்து வெளிநாடு செல்ல யோகத்தையும் சுபத்துவமான நிலையில் தரும்.


 பனிரெண்டாம் இடம் பலமான அமைப்பைப் பெற்றவர்கள் படுக்கை சுகம் மற்றும் நித்திரை செல்வத்தைப் பெற்றவர்கள் அவர்கள்.


 12ஆம் இட அதிபதி எந்த ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறார்களோ அவை சார்ந்த விரயத்தை அவர்களுக்குக் கொடுப்பார்.


 பனிரெண்டாம் இடம் காமம் தழுவி இன்பரசம் அடையும் இடம் என்பதால் இந்த இடத்துடன் சுக்கிரன் சுபத்துவம் பெற்ற நிலையில் நல்ல தரமான பெண்களுடன் தொடர்பு கொள்வார்கள். இந்த இடத்தில் சுக்கிரன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவகிரகங்கள் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் பலருடன் அல்லது பரத்தையருடன் கூடி பாலியல் நோய் அடைவார்.


 பன்னிரண்டாம் பாவகத்திற்கு காரகராக சனி பகவான் திகழ்வார்.


  ஒருவரது ஜாதகத்தில் 8 முதல் 12ஆம் தேதி வரை சுபத்துவம் பெற்ற நிலையில் கடல் கடந்து வெளிநாடு செல்வார்

 அவ்வாறு சென்று அங்கு நீண்ட பொருளை ஈட்டும் யோகம் உண்டாகும்.12-ஆம் இடம் வெளிநாடு செல்லும் யோகத்தையும் எட்டாமிடம் அங்கு தங்கி இருந்து பொருளீட்ட கூடிய யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும் .


 ஒருவரின் ஜாதகத்தில் 12-ஆம் இடம் சுபத்துவம் பெற்ற நிலையில் எட்டாம் இடம் பாவத்துவமான அமைப்பில் இருந்தால் அடிக்கடி வெளிநாடு சென்று வரக்கூடிய யோகத்தை மட்டும் தரும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜாதகம் எழுதி கோரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளைப் பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647


   செல்

 9715189647

  7402570899


மின்னஞ்சல் ஐடி ;masterastroravi@gmail.com.


   



அன்புடன்

ஆஸ்ட்ரோ ரவிச்சந்திரன் M.Sc,MA,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிடர்)

ஓம்சக்தி ஆஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,

கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மன நல பாதிப்புகளுக்கு உட்படுபவர்‌ யார் ?

 

மன நல பாதிப்புகளுக்கு உட்படுபவர் யார்?


    செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


   இன்றைய உடலால் வரும் வியாதிகளை விட மனதால் வரும் வியாதிகள் தான் அதிகம் ஆகும்.


  மனதளவில் திடமான உறுதியான நம்பிக்கை உடன் நேர்மறை எண்ணங்கள் உடையவர் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனச்சோர்வு கொள்ளாமல் எளிதாக வெற்றி பெறுவார்..


  ஒரு சாதகத்தில் தன்னம்பிக்கையின் அளவுகோலாக செயல்படுவது லக்கனாதிபதி ஆகும். லக்கினாதிபதியானவர் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்று வலுவான அமைப்பை பெற்றவர்கள் எந்த நிலையிலும் தன் நிலை மாறாத திடமான உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வின் போக்கை எதிர்கொள்வார்கள்.


 ஜாதகத்தில் மன நிலைக்கும் , சந்திரன் பகவானுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.அமாவாசை மற்றும் நிறைமதி காலங்களில் மனநல விடுதிகளில் பைத்திய கார தன்மை அதிகரித்துள்ளது.


 மனமானது நாம் விழிக்கும் முன்பே அவை விழித்து கடந்த காலத்தில் நடந்த துரோகங்கள், அவமானங்கள், சண்டைகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து மனதை காயப்படுத்தும்.


பொதுவாக ஒரு ஜாதகத்தில் மனநிலை காரர்கள் என்று அழைக்கக்கூடிய சந்திர பகவான் எந்த விதத்திலும் கெடக்கூடாது சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்து பாவிகளான சனி, செவ்வாய் மற்றும் ராகு போன்றவற்றின் தொடர்பை பெற அதன் தசா புத்திகளின் பாதிக்கப்படும் அமைப்பைப் பெறுகிறது.


 ஜாதகத்தில் சந்திரனுடன் சனி, ராகு மற்றும் செவ்வாய் போன்றவை தொடர்பு கொள்ளும்பொழுது அதாவது ஒரு ராசிக்குள் எட்டு பாகையில் அவை நெருக்கமாக இருக்கும் போது வேறு எந்த விதத்திலும் சுபத்துவம் கிடைக்காத நிலையில் சனி தசையில் அல்லது ராகு திசையோ அல்லது சந்திர திசையோ மனமானது பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையை அடையும்.


  

   ஒரு ராசியில் சந்திரன் பகவான் சூரியன் பகவானுடன் சேர்ந்து அமாவாசை யோகம் பெற்று தேய்பிறை சந்திரனாக இருந்து பாவ 🌙 சந்திரனாகி அந்த ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் மற்றும் செவ்வாயும் அந்த வீட்டில் நெருக்கமான நிலையில் இருக்கும் சம சப்தமாக சனிபகவான் பார்க்கக்கூடிய நிலையில் வேறு எந்த விதத்திலும் சுபத்துவம் பெறாத நிலையில் சனி ராகு செவ்வாய் போன்ற ஏதாவது ஒரு ராசியில் நடக்கலாம். அல்லது புக்தி காலங்களில் மனநல பாதிப்புக்கு சாதகமாக இருப்பார்கள்.


 கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அதிலும் குறிப்பாக ஏழரை சனி காலங்களில் ஜென்ம சனி காலங்களில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் காலங்களில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் ஜாதகர் மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளைப் பெறலாம்.)


வாட்ஸ் அப்

  9715189647

    செல்

  9715189647

Email ; masterastroravi@gmail.com

                               

         


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,MA,BEd

(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர்,

கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

திடீர் பணக்காரர் ஆக மாற்றும் யோகம் எது?

                          


திடீர் பணக்காரர் ஆக மாற்றும்  யோகம் எது ?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


"காசேதான் கடவுளப்பா!

 அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!

கைக்கு ✋கைமாறும் பணமே 

உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே!"


 


ஒருவன் திடீர் பணக்காரராக மாறவேண்டும் எனில் யாரோ பெயர் தெரியாத லட்சக்கணக்கான நபர்கள் தனது பணத்தை இழந்து நிற்க வேண்டும்.பலரது தோல்வி ஒருவரது அதிர்ஷ்டத்தால் நிகழ்கிறது.


 இன்று எவ்வித உடல் உழைப்பு இல்லாமல் திடீர்  பணக்காரராக வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் ஜாதக அமைப்பு இருத்தல் வேண்டும்.


 ஷோர் மார்க்கெட்டிங், ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் ரம்மி , ஷாக்பாட், லாட்டரி, சூதாட்டம், ரேஸ் போன்றவற்றின் மூலம் சில நேரங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சிலரது ஜாதகத்தில் அமைந்து  தக்க தசா புக்தி காலங்களில் தந்து விடுவது

 உண்டு. 


  "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்ற வகையில் மறைவிட ஸ்தானாதிபதி கள் தங்களுக்குள் பரிமாறி நிற்பின் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை தரும் என்பது பொது விதியாக இருப்பினும் சில விதிவிலக்குகள் உண்டு.


  எந்த வகையிலும் பங்கப்படாத லக்கன யோகாதிபதிகள் (1,5,9) தசைகள்,குரு பார்வை பெற்ற தசைகள் போன்ற தசை காலங்களில் யோகம் தரும் அமைப்பை ஜாதகர் பெறுவார்கள்.


  சில நேரங்களில் நெருக்கமான உறவுகள் மூலமாக கிடைத்த எதிர்பாராத சொத்து அல்லது 🏠 வீட்டிற்கு தெரியாமல்  கடன்  கொடுத்த நபரது மரணம் அல்லது ஒருவர் வாங்கி போட்டுள்ள தரிசு நிலமானது பிளாட்டாக பல லட்சம் லாபத்திற்கு விற்கும் நிலை போன்றவை.


 திடீர் பணக்காரராக ஒருவர் மாறினார் எனில் நிச்சயமாக நேரிய வழியில் உழைத்து பொருள் ஈட்ட முடியாது.ஆனால் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.


 எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் சாதகங்களை எடுத்துப் பார்த்து ஆய்வு செய்து பார்த்தால் அவர்களது ஜாதகத்தில் உபஜெய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 3, 6 ,10, 11 ம் இடங்களில் இயற்கை பாவ கிரகங்களான ராகு ,சனி, செவ்வாய் நட்பு நிலையில் நின்று அதன் தசை நடக்க கூடிய காலங்களில் எதிர்பாராத வகையில் பெருமளவில் பணம் சேர்த்து பணக்காரராக கூடிய யோகத்தை தரும்.


 எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு மூன்று வகைகளில் பெறமுடியும்.


 1) மூளையைப் பயன்படுத்தி பெரும் தனம். ஈட்டும்  யோகம் ,

2) உடலுழைப்பை பயன்படுத்தி பெரும் தனம் ஈட்டும் யோகம்,

 3) உடல் உழைப்பையும் மூளையையும் பயன்படுத்தாமல் திடீர் தனயோகம் பெறும் அமைப்பு.


     மூளையை அதாவது தான் பெற்ற அறிவை பயன்படுத்தி பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் அறிவு நிலை காரக கிரகம் என்று அழைக்கப்படும் புதன் மற்றும் குரு பகவான் நல்லமுறையில் சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடனும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் தொடர்பு பெற்று அவைகள் லக்கன யோகராக அமைந்து அதன் திசை நடக்கக்கூடிய காலங்களில் தனது மூளையால் தான் மேற்கொண்ட தொழிலில் பணம் ஈட்டக் கூடிய யோகத்தை ஜாதகர் அடைவார்.


  உடல் உழைப்பைப் பயன்படுத்தி பெரும் அதிர்ஷ்டத்தை பெற அவரது ஜாதகத்தில் பாவ கிரகங்களான செவ்வாய் மற்றும்  சனி பகவான் சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திலும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்திலும் தொடர்பு பெற்று மறைமுகமாக முறையில் வலுப்பெற்ற அமைப்பைப் பெற்றவர்கள் அதன் தசை காலங்களில் உடல் உழைப்பை பயன்படுத்தி பெருந்தனம் ஈட்டுவார்கள்.


  சில நேரங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பை பயன்படுத்தாமல் எதிர்பாராதவிதமாக ஒரு தொழிலில் ஈடுபடும் போதோ  அல்லது தான் வாங்கி வைத்திருந்த ஒரு நிலமானது எதிர்பாராத வகையில் பெரும் விலை ஏற்றம் பெறுவதன் மூலம் யோகத்தை அடைவார்கள்.


இதுபோன்று மூன்றாம் வகை அமைப்பினர் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெற கீழ்க்காணும் கிரக நிலைகளும் காரணமாக அமைகிறது.


    நிழல் கிரகங்களில் ராகு பகவானுக்கு எதிர்பாராத தீடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய யோக அமைப்புகள் உண்டு.சற்றும் எதிர்பாராத பிரமாண்டத்தை தருவதில் ராகுவுக்கு நிகர் ராகு பகவானே ஆகும்.


       ராகு பகவான் மேஷம் ♈, ரிஷபம், கடகம், ♑ மகரம், ♍ கன்னி போன்ற ஐந்து ராசிகளில் ஏதாவது ஒன்றில் அமர்ர்ந்து அந்த வீடானது உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் வீடுகளில் ஒன்றாக  இருந்து 

அதன் தசை நடப்பில் வரக்கூடிய காலங்களில் ஜாதகருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.


 அதிலும் குறிப்பாக மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு பகவான் அதன் தசை காலங்களில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பை பெற்றிருக்கும்.மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு பகவான் லக்கன யோகர்களது நட்சத்திர 🔯 சாரத்தில் நிற்க கூடிய அமைப்பை பெற்றிருக்கும்.


ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது ராகு பகவான் உடன் கோணதிபதிகள் தொடர்பு பெற்றிருந்தாலும் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அளிக்கிறது.


 மேற்கண்ட அமைப்பினை பெற்றுள்ள ராகு பகவான் அந்நிய மொழி பேசக்கூடிய அந்நிய நாட்டு  தேசம் சென்று பொருள் ஈட்ட கூடிய அமைப்பு,, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், லாட்டரி, குதிரை 🐎 ரேஸ், மாந்திரிகம்,மருந்து பொருட்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கமிஷன், போன்ற வகையிலான தொழிலில் ஈடுபட்டு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை பெற்றிருக்கும்.


 மகா தன யோகம் தரக்கூடிய ஸ்தானங்களான தன, பாக்கிய மற்றும் லாப ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி நின்றாலோ அல்லது லக்கன ,தன,பாக்கிய மற்றும் லாப ஸ்தானங்களில் ஏதோ ஒரு இடத்தில் நின்று சுபத்துவமான நிலையில் நின்று அதன் தசை நடப்பில் இருக்க கூடிய காலங்களில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை தரும்.


 பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவை உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் சுபத்துவமான நிலையில் நின்று அதன் தசை நடக்க கூடிய காலங்களில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பை ஜாதகர் பெறுவார்கள்.


நன்றி.


வாட்ஸ் அப்

 9715189647

    செல்

 9715189647

  7402570899


                       



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.