ஜோதிட சூத்திரங்கள்-(2)
கிரகங்களின் வலிமையை கணிப்பதில் அடுத்த சில அடிப்படை விஷயங்களை சென்ற பதிவின் தொடர்ச்சியாக பார்ப்போம்.
திக் பலம்
கிரகங்களின் வலிமையை நிர்ணயிப்பதில் ஸ்தான பலம் ,திருக் பலம் ஆகிய இவற்றினை
தொடர்ந்து "திக் பலம்" என்பதும் குறிப்பிடதக்க ஒன்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.திக் என்பது திசையை குறிக்கிறது.
. கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆகிய நான்கு திக்கில் சில கிரகங்கள் இடம்பெறும் போது கிரகங்கள் திக் பலம் பெறுகிறது.
லக்கினத்தில் குரு பகவானும் புதன் பகவானும் இருக்கும் போதும் , நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் பகவான் இருக்கும் போதும், ஏழாம் இடத்தில் சனி பகவானும் மற்றும் பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய் நிற்கும் போதும் திக் பலம் பெறுகிறது.
சில நேரங்களில் ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் திக் பலம் பெறும் போது அந்த கிரகங்கள் இழந்த பலத்தை மீண்டும் பெறுகிறது .
உதாரணமாக மிதுன லக்னத்திற்கு நான்காமிடத்தில் சுக்கிரன் இருக்கும்போதும், துலா லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் போதும் அவை நீசம் பெற்றிருந்தாலும் (அதாவது ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும்) திக் பலம் என்ற வகையில் இழந்த பலத்தை மீண்டும் பெறுகிறது.
அதே நேரத்தில் திக் பலம் பெற்ற கிரகத்திற்கு ஏழாம் வீட்டில் நில் பலம் பெறுகிறது.நிஷ் பலம் என்பது பலத்தை இழந்த நிலையாக கருதப்படுகிறது.
வர்க்கோத்தமம்
ஒரு கிரகம் இராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது. அவை உச்சம் பெற்ற கிரகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
மேஷம் வீட்டில் அஸ்வினி 1ஆம் பாதம்,
ரிஷபம் வீட்டில் ரோகினி இரண்டாம் பாதம்,
மிதுனத்தில் புனர்பூசம் 3-ஆம் பாதத்தில், கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதத்தில்,
சிம்மத்தில் பூரம் 1ம் பாதத்தில், கன்னியில் சித்திரை இரண்டாம் பாதத்தில்,
துலாத்தில் சித்திரை 3-ஆம் பாதத்தில், விருட்சத்தில் அனுஷம் நான்காம் பாதத்தில் ,
தனுசில் உத்திராடம் 1ஆம் பாதத்தில், மகரத்தின் உத்திராடம் 2ஆம் பாதம், கும்பத்தில் சதயம் மூன்றாம் பாதத்தில், மீனத்தில் ரேவதி 4-ஆம் பாதத்தில் நிற்கின்ற கிரகங்கள் ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் நின்று வர்க்கோத்தமம் பலம் பெறும்.
பரிவர்த்தனை
கிரகங்கள் தங்களது வீடுகளில் பரிமாறி இருக்கும்போது அதாவது பரிவர்த்தனை பற்றி நிற்கின்ற பொழுது அவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அந்த கிரகம் பெறுகிறது.
நீசம் பெற்ற கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்கும்பொழுது அவை நீச பலத்தை இழந்து நீச பங்கம் பெறுகிறது. ஆட்சி பலத்துக்கு நிகராக பலனைத் தருகிறது.
கடக வீட்டில் செவ்வாயும் ,
விருச்சிக வீட்டில் சந்திரனும் நின்று பரிவர்த்தனை பெற்று நீசம் பெற்ற நிலையினை அவை பெற்றிருந்தாலும் அவை பரிவர்த்தனை மூலமாக
நீசபங்கம் பெற்று ஆட்சி பலத்தை அடைகிறது.
பரிவர்த்தனை மூன்று வித பரிவர்த்தனை கருதப்படுகிறது.
1) சுப பரிவர்த்தனை ,
2) அவயோக பரிவர்த்தனை
3) விபரீத ராஜ யோகம் பரிவர்த்தனை
1) சுப பரிவர்த்தனை
கேந்திர ஸ்தானமான 1, 4, 7 ,10 திரிகோண ஸ்தானமான 1,5,9 இவர்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனையும் , கேந்திராதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பதும், கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் சுபயோக பரிவர்த்தனை ஆகும்.
2)அவயோக பரிவர்த்தனை
கேந்திர, கோண அதிபதிகளுடன் மறைவு ஸ்தான அதிபதிகள் (3,6,8,12) பரிவர்த்தனை பெற்று நிற்பது அவ யோகம் தரும் பரிவர்த்தனை ஆகும்.
3) விபரீத ராஜ யோகம் பரிவர்த்தனை
மறைவிடஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி கொண்டு நிற்பது " கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் விபரீத ராஜ யோகத்தை தரும்.
என்னைப் பொருத்தவரை ஆறு மற்றும் எட்டாம் அதிபதி பரிவர்த்தனை அவ யோகம் தரும் பரிவர்த்தனை ஆகும்.
நீச பங்க ராஜயோகம்
கீழ்க்கண்ட விதிகளில் ஒரு கிரகம் நீச பங்கம் பெறுகிறது.
1)நீசம் பெற்ற வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெற்று இணைந்திருந்தாலும்,
2) நீசம் பெற்ற கிரகம் இருந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நின்றாலும்
3) நீச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்,
4) நீச்சம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும்
5) நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி சந்திர கேந்திரத்தில் நின்றாலும்
மேற்கண்ட விதிகளை தக்க உதாரணத்துடன் விளக்குவோம்.
1) மீன் 🐟 வீட்டில் புதன் நீசம் பெற்று இருக்கும் போது அந்த வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று நின்றாலும்,
2) மீன வீட்டில் சுக்கிரன் நீசம் பெற்று நின்றாலும் அந்த வீட்டின் அதிபதி குரு பகவான் கடகத்தில் உச்சம் பெற்று நின்றாலும்,
3) கடகம் வீட்டில் செவ்வாய் நீசம் மற்றும் விருச்சிகம் வீட்டில் சந்திரன் நீசம் ஆனால் இவ்விரு கிரகங்களும் பரிவர்த்தனை பெற்று நிற்பதும் நீசம் பங்கம் ஆகும.
4) உத்ராடம் இரண்டாம் பாதத்தில் குரு பகவான் நிற்கின்ற பொழுது குரு பகவான் நீசம் பெற்றிருந்தாலும் அவை வர்க்கோத்தமம் என்ற வகையிலும் நீச பங்கம் பெறுகிறது.
5) புதன் நீசம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டின் அதிபதி குரு பகவான் சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமான 1,4,7,10 நிற்பதும் நீச பங்கம் பெறுகிறது.
நீசம் பெற்ற கிரகத்திற்கு வலிமையானது பூஜ்யம் எனில் நீச பங்கம் பெற்ற கிரகத்தின் வலிமையானது உச்சம் பெற்ற கிரகத்தின் வலிமையை விட சற்று அதிகம் ஆகும்.
உதாரணமாக உச்சம் பெற்ற கிரகத்திற்கு வலிமையானது 100 எனில் நீச பங்கம் பெற்ற கிரகத்திற்கு 120 மதிப்பெண் என எடுத்துக் கொள்ள வேண்டும்.
அஸ்தமனம்
சூரியன் ஒளி மிகுந்த கிரகம் ஆகும்.மாபெரும் சூரிய ஒளியை நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது.
மாபெரும் சூரிய ஒளியினை பன்னிரெண்டு பாகைக்குள் நெருங்கும் மற்றுமொரு ஒளி கிரகமான சந்திரன் 🌙 இணையும் போது. அமாவாசை உண்டாகிறது.
சூரியனை நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது நெருங்கும்போது கிரகண தோஷம் உண்டாகின்றது.
பொதுவாக புதனுக்கும், சந்திரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று கூறப்படுகிறது.
சூரியனை சுக்கிரன் 9 பாகைக்குள்ளாக நெருங்கும் போதும்,
புதன் பகவான் 11 பாகைக்குள்ளாக நெருங்கும்போதும்,
குரு பகவான் பதினைந்து பாகைக்குள் நெருங்கும்போதும்,
சனியும், செவ்வாயும் 17 பாகைக்குள்ளாக நெருங்கும் போதும் அஸ்தமனம் ஆகிறது.
சூரியன் எந்தக் கிரகத்தை அஸ்தமனம் செய்கிறதோ அதன் பலனை தனது தசையில் தருகிறது. சூரியனால் அஸ்தங்கம் அடைந்த கிரகம் அதன் தசையில் வலிமை இழந்து தனது ஆதிபத்திய பலனை தர இயலாமல் போய்விடுகிறது.
புதன் சுக்கிரன் மற்றும் சந்திரன் மட்டும் அஸ்தங்கம் அடையும் போது அவை தன் சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை.
புதன் சுக்கிரன் இரண்டு மட்டும் சூரியனுக்கு முன்-பின் என இருந்தபடி இருவகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும் போது தன் காரகத்துவ பலனை இழக்காது.ஸ்தானாதிபத்திய பலனை இழக்கிறது.
இதுவே சூரியனுக்கு பின்புறம் அஸ்தங்கம் அடையும் போது காரக பலனை இழந்து ஆதிபத்திய பலனைக் கொடுக்கிறது .
புதன் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் இரண்டையும் தனித் தனியாகவும் , அஸ்தங்கம்,வக்கிரம் இரண்டும் இணைந்து அடைகிறது.
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் உள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. செவ்வாய், குரு ,சனி சூரியனை மையமாகக் கொண்டு பூமியின் வட்டப்பாதையில் அடுத்தாற்போல் வெளி வட்ட பாதையில் அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இவை வருவதில்லை.
ஆனால் உன் வட்ட கிரகங்களான சுக்கிரனும் புதனும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகிறது .சந்திரன் பூமியைச் சுற்றி 15 தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும் ,சூரியனுக்கும் இடையில் வருகிறது.
செவ்வாய், குரு ,சனி இவை சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரமும் ஒரே நேரத்தில் நடந்தால் அது சூரியனுக்கு முன் நடக்கிறது.
எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கம் ,கிழக்கில் உதயமாகிறது. புதன் ,சுக்கிரன் மட்டுமே கிழக்கில் அஸ்தங்கம், மேற்கில் உதயமாகிறது.
வக்கிரம்
கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேதுவை தவிர மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகர்கிறது. ராகு மற்றும் கேது பகவான் மட்டும் பின்னோக்கி நகர்வதால் அவற்றிற்கு வக்கிர கதி கிடையாது.
உண்மையாக விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது கிரகங்கள் எல்லாம் தத்தம் பாதையில் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கும் அவை பின்னோக்கி வருவதில்லை பின்னோக்கி வருவது போல் தோற்றம் அளிப்பதை தான் "வக்ர கதி"என்கிறோம்.
சந்திரனுக்கும் வக்கிர கதி கிடையாது.
குருபகவான் மூன்று மாதத்திற்கு அதிகமாகவும், சனி பகவான் நான்கிலிருந்து ஐந்து மாதம் வரையும், செவ்வாய் பகவான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாத கால அளவும,
சுக்கிர பகவான் ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை 50 நாட்கள் வக்கிர கதி அடைகிறது.
மேற்கண்டவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு மட்டுமே ஸ்தம்பனகதி என்ற சிறப்புப் பெயருண்டு. ஏனெனில் செவ்வாய் சில நேரங்களில் ஒரு இடத்தில் 4 முதல் 5 மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பது போல் தோற்றமளிக்கும். எந்த கிரகமும் ஒரே இடத்தில் நிலையாக நிற்பதில்லை ஆனால் செவ்வாய் மட்டுமே இது போல தோற்றமளிக்கும்.
சூரியனோடு இணைந்து இருப்பது அர்த்தங்க கதி ஆகும்.
அதிலிருந்து விலகி வருவது உதயகதி. சூரியனுக்கு 2ல் இருப்பது சீக்கிர கதி சூரியனுக்கு 3-ல் இருப்பது சமதி சூரியனுக்கு 4-ல் இருப்பது மந்தகதி சூரியனுக்கு 5 ,6 இல் இருப்பது வக்கிரகதி,
சூரியனுக்கு ஏழு எட்டில் இருப்பது அதி வக்கிர கதி,
சூரியனுக்கு 9 ,10ல் இருப்பது நிவர்த்தி கதி
சூரியனுக்கு 11-ல் இருப்பது சீக்கிர கதி சூரியனுக்கு 12ல் இருப்பது அதி சீக்கிர கதி ஆகும்.
உதய கதி
அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகம் அஸ்தங்க எல்லையை விட்டு விலகும் போது அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் உடைய அஸ்தங்க எல்லையை அல்லது பாதையை விட்டு விலகுவதை உதயகதி என்கிறோம் .
இதன் பலன் இதுவரை ஜாதகர் இழந்திருந்த காரக மற்றும் ஸ்தான பலத்தை மீண்டும் பெறுவார்.
தொடரும்......
நன்றி.
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.