Tuesday 27 February 2024

ஜாதகத்தில் அறிவால் அகிலத்தை ஆள்வார்.

 ஜாதகத்தில் அறிவால் அகிலத்தை ஆள்வோர்.

         


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நடிகர் டி ராஜேந்தர் ஐயா அவர்கள் ஒரு பேட்டியில்  சொல்லி இருப்பார் 

"ஏழையாக பிறந்தாலும் கோழையாக பிறக்கக் கூடாது ". ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் தன்னை ஏழையாக நினைக்கக் கூடாது. "அறிவே ஆற்றல் ‌" ஆகும்.


    அறிவு நிலை கொண்டு எல்லா எதிர்ப்புகளையும் , கஷ்டங்களையும் உடைத்து எறிந்து விட்டு மற்றவர் பார்த்து வியக்கும் வண்ணம் எந்த நிலைமையில் இருந்த இவன் இன்றைக்கு உலகம் போற்றும் படியான சாதனையை செய்து உயர்ந்து நிற்கிறானே !? என எதிரி கூட பொறாமை படும் அளவிற்கு உயர்ந்து நிற்க வேண்டும்.


 ஒரு சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற வேண்டும்.ஆனால் அந்த கோட்டை அழிக்கவோ அல்லது திருத்தவோ கூடாது.ரொம்ப சிம்பிள் பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டா அந்த கோடு தன்னாலே சின்ன கோடாகி விடப்போகிறது.


 மேற்கண்ட இந்த கருத்து பாக்குறதுக்கு ரொம்ப சாதாரணமா தெரியும் ஆனா எவ்வளவு பெரிய ஆழமான தத்துவத்தை நமக்கு விளக்கி விடுகிறது .எப்படின்னு பாருங்க உங்களை எதிர்த்து நிற்கிறவங்கள நீங்க ஜெயிக்கிறது  அவங்களுக்கு கெடுதல் பண்ணியோ அல்லது  அவங்களோட சண்டை போட்டு கொண்டோ நின்றால் நீங்கள் முன்னேறவே முடியாது.  கால விரயம் தான் ஆகும். அதற்கு பதிலாக அவங்களுக்கு முன்னால அவங்கள விட ஒரு ஸ்டெப் உயர்ந்திருக்கும் போது ஆட்டோமேட்டிக்கா அவங்க சரியாயிடுவாங்க.ஒகே.


 அந்த அறிவே ஆற்றல் என்று சொன்னேனே அந்த அறிவை ஒரு மனிதனுக்கு தரக்கூடிய கிரகங்களில் முதன்மையான கிரகங்கள் இரண்டு ஆகும் ஒன்று குரு பகவான் மற்றொன்று புதன் பகவான் ஆவார்.


 ஒருவர் தன் அறிவாற்றல் கொண்டு  அவர் சார்ந்த துறை வாயிலாக உலகையே திரும்பி பார்க்க வைக்கும் கிரகம் குருவும், புதனும் ஆகும்.


 எவர் ஒருவர் ஜாதகத்தில் இந்த குரு பகவான் மற்றும் புதன் பகவானும் எவ்வித பங்கப்படாமல் மற்றும் பாவத்துவம் அடையாமல் வலிமையான நிலையில்  ஜாதகத்தில் இருக்கும் போது உகந்த தசா அமைப்புகளும் அவர்களுக்கு ஒத்துழைத்தால் அவர்கள் தனது அறிவால் அகிலத்தை அளக்க முடியும்.


  தன் கற்ற கல்விக்கும் , செய்யும் வேலைக்கும் தொடர்பு இன்றி அவர் கற்ற கல்வியும், பெற்ற அறிவும் எதற்கும் பயன்படாமல் அவர்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஏதோ ஒரு வேலையிலோ அல்லது தொழிலோ இருந்து தனது வாழ்வை கழித்து விடுவதும் உண்டு.


 ஒரு சிலர் தான் கற்ற கல்வியை அவர்கள் பார்க்கும் வேலைக்கும் அல்லது செய்யும் தொழிலுக்கும் தொடர்பு உண்டாகி அவ்வாறு தொடர்புடைய வேலை அல்லது தொழிலை செய்து அதன் வழி நின்று அறிவால் உலகை வெல்வோரும் உண்டு.


 தான் கற்ற கல்விக்கு அவர்கள் செய்யும் வேலை அல்லது தொழிலுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாத நிலையில் ஆனால் அதே நேரத்தில் அவர்களது பெற்ற ஞானத்தால் வேறொரு துறையில் சிறப்பாக பயன்படுத்தி அறிவால் அகிலத்தை ஆள்வோர் பலர் உண்டு.


  ஒருவர் தான் கற்ற கல்வியாலும் மற்றும் பெற்ற ஞானத்தாலும் புகழ் அடைய அவர்கள் ஜாதகத்தில் ராசி மற்றும் அதன் அதிபதி சுபத்துவமான நிலையில் வலிமை பெற்று நின்று வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம், கல்வி ஸ்தானமான நான்காம் இடம், அறிவு ஸ்தானமான ஐந்தாம் இடம்  , மேல்நிலைக் கல்வி  தொடர்பு கொண்ட பாக்கிய ஸ்தானம் ஆன ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி நல்ல நிலையில் ஜாதகத்தில் நின்று அறிவுக்கு உரிய காரக கிரகமான குரு மற்றும் புதன் பகவான் நல்ல முறையில் தொடர்பு கொண்ட அமைப்பை பெற்று உகந்த தசா புக்தி அவர்கள் ஜாதகத்தில் வரும் போது அவர்கள் தான் கற்ற மற்றும் பெற்ற அறிவாற்றலால் வெல்வார்கள்.


 தான் கொண்ட துறையில் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து பெற அவர்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடம் வலிமை பெற்று இருக்க வேண்டும்.


  எப்பொழுதும் ஜாதகருக்கு நடக்கும்  ஒவ்வொரு நல்ல/கெட்ட  பலனுக்கும் தனிப்பட்ட ஒரு ஸ்தானமோ அல்லது ஒரு கிரகமோ மட்டும் காரணம் அல்ல.கிரகங்கள் இருக்கும் வீடு , அந்த கிரகங்கள் பெற்ற உறவு , பார்வை, சேர்க்கை,கிரகங்களுக்கு இடைப்பட்ட தூர அளவு ( டிகிரி அடிப்படையில்),லக்கனாதிபதி வலிமை, கோச்சார மற்றும் தசா பலன்கள் இது போன்ற பல்வேறு planet combination  தான் ஜாதகருக்கு தரும் பலனை நிர்ணயிக்கிறது.


 ஜாதகருக்கு கிடைக்கும் பலனில் மாறுபட அவரவர் லக்கனத்தை பொறுத்தும் மற்றும் நடக்கும் தசா புக்தி பொறுத்தும்  கிரக சேர்க்கைகள் ,கிரக உறவுகள் வேறுபாடுகள், கிரகங்களுக்கு இடைப்பட்ட தூர அளவு ,கிரக வலிமை மற்றும் கிரகங்களின் சுப தன்மை/பாவ தன்மை  இப்படி பலவற்றை சார்ந்து ஜாதகத்திற்கு நாம் இடும் ஒட்டு மொத்த மதிப்பெண் அமைகிறது.


இங்கு பலன் எடுப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் அல்ல.இதற்கு நிறைய அனுபவ அறிவு தேவைப்படுகிறது.வெறும் விதிகளையோ அல்லது ஜோதிட மூல நூல்கள் சொன்ன கருத்தை மட்டும் கொண்டோ அல்லது ஜோதிட பெரியோர்கள் சொன்ன கருத்துகள் ஆகிய இவைகளை மட்டுமே வைத்து கொண்டு பலன் அளிக்க முயன்றால் ஜோதிடர் பலனை தவற விட வாய்ப்புண்டு.


 இவை அனைத்தையும் உள்வாங்கி உமது அனுபவத்தையும் இத்துடன் இணைத்து விதிகளுடன் விதிவிலக்குகள் பலவற்றை அலசி ஆராய்ந்து பலன் எடுக்க வேண்டும்.


  ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்கள் பலரது ஆரம்ப கால வாழ்க்கை என்பது அடிப்படை தேவைகளுக்கோ  பலவிதமாக கஷ்டப்பட்டு தான் இருந்து இருக்கிறார்கள்.அவர்களது மனம் தளராமல் உழைத்த உழைப்பு தான் இன்றைக்கு பெரிய அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள்.


இன்றைய சினிமா துறையில் உச்சம் தொட்ட மரியாதைக்குரிய ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்றைய புகழுடைய நிலையினை அன்றைய காலகட்டத்தில் நினைத்து பார்த்தது கூட கிடையாது.


 இன்றைக்கும் பல  கோடிக்கணக்கான சம்பளத்தை வாங்கி கொண்டு இருக்கும் ரஜினிகாந்த் அன்றைய ஆரம்ப காலத்தில் தான் நடித்த படத்திற்கு சம்பளம் கேட்டதற்காக "ஏன்டா இரண்டு மூன்று படத்திலே சின்ன சின்ன ரோலில் நடித்திட்ட அவ்வளவு பெரிய ஆளா" என ஒரு படத் தயாரிப்பாளர் பேசியதாக தனது ஆரம்ப கால திரைத்துறை வாழ்க்கையை பற்றி சொல்லி இருக்கிறார்.


கவிஞர் வைரமுத்து ஐயா தனது அம்மா பற்றிய கவிதையில்

"வைரமுத்து பிறப்பான்னு 

வயித்திலே நீ சுமந்ததில்லை

உன் வயிற்றில் பிறந்த பிள்ளை

"வைர முத்தா "ஆகிடுச்சு.என்பார்.

பிற்காலத்தில் மிக பெரிய பாடலாசிரியர் ஆக வருவார்னு நினைச்சு அவரது  அம்மா சுமந்ததில்லை.என்று கூறி இருப்பார்.


இதனால்

 யாரும் சாதனையாளர்களாக பிறப்பதில்லை.அவர்கள் பிறந்த பிறகு உருவாக்கப்படுகிறார்கள் ".

இக்கருத்தை வலியுறுத்தி

"சாதனையாளர்கள் பிறப்பதில்லை

அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்."


 இவ்வாறு சாதனையாளர்கள் தனது அறிவை பயன்படுத்தி உயர் வேண்டுமாயின் அவர்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளே முடிவு செய்கின்றது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் &  கூகுள் பே 

097151 89647 


மற்றொரு செல்;; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

சனி பகவான் எம்மாதிரியான கஷ்டங்களை தருவார்?

 சனி பகவான் எம்மாதிரியான கஷ்டங்களை தருவார்?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  பாவ கிரகங்களிலே முதன்மையான பாவத்தன்மை படைத்த கிரகம் #சனிபகவான்  ஆகும். சனி பகவான் ஒரு இருள் கிரகமாகும். இவை மட்டுமல்லாமல் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் ஆகும். ஒரு ராசியினை  விட்டு அடுத்த ராசிக்கு செல்ல  சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.எனவே சனி பகவான் மிக மெதுவாக நகர்வதால் தான் இதனை #சனஸ்சரன் என்று அழைப்பார்கள். அழைப்பார்கள்.சனஸ் என்றால் மெதுவாக என்றும் மற்றும் சரன் என்றால் நகர்பவர் என்று அர்த்தம் ஆகும்.


 சனி பகவான் யாராக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை .மாளிகையில் உறங்கும் மன்னனாக இருந்தாலும் மற்றும் மாட்டுக்குப்பத்தில் பிறந்த சுப்பனாக இருந்தாலும் எல்லாரையும் ஒரே மாதிரியாக பாதிப்புக்கு உள்ளாக்கி வாழ்க்கையில் தாத்பாரிய   உண்மைகளை எடுத்து கூறுபவர் சனி பகவான் ஆவார்.


சனி பகவான்  நீதி வழங்குபவர்.ஆதலால் இதனை கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார்.


சனி பகவான் ஒருவரை ஏழரை மற்றும் அஷ்டம சளி காலங்களில் கடுமையான இன்னல்களுக்கும் மற்றும் தொல்லைகளுக்கும் உட்படுத்தி உண்மையான உறவு நிலைகளையும் மற்றும் நட்பு நிலைகளையும் ஜாதகருக்கு புரியவைத்து வாழ்வின் நிதர்சன உண்மைகளை அறிய வைத்து அமைதி நிலைக்கு ஞான நிலையை நோக்கி நகர்த்தி செல்பவர் ஆவார்.


 எப்பேர்ப்பட்ட மனிதனையும் நிலைகுலை வைத்து மன வேதனைக்கு உட்படுத்தி கண்ணீர் விட்டு கலங்க வைப்பவர் சனி பகவான் ஆவார். அதிலும் குறிப்பாக ஒருவருக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லக்கூடிய காலங்கள் சொல்ல முடியாத, வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு கஷ்டங்களையும் மற்றும் நஷ்டங்களையும் தருவார். 


     சாதகமே பார்க்க நினைக்காதவர் சாதகமே தவறு என்று வாதாடியவர் கூட சாதகத்தை  கையில்  எடுத்து சோதிடர்கள் சென்று அதற்கான தீர்வை பெற நினைப்பதும் சனி பகவானுடைய மகிமையில் ஒன்றாகும்.


ஜாதகத்தில் லக்னத்தில் சனி அமர்ந்தோ அல்லது லக்கனத்தை சனி பார்த்த சாதகம் அல்லது லக்கனாதிபதி சனியாகவே இருந்து லக்னத்தில் இருந்தாலும் அவர் சோம்பேறித்தனமாகவும் எந்த செயலை செய்வதற்கு காலம் தாழ்த்துபவராகவும், அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய நபராகவும் ஒருவிதமான மந்த ன்மை  உடையவராகவும் இருப்பார்.


சனி பகவான்  கரியன் , மந்த கோள் என்றும், மெதுவாக நகர்வோர் என்றும்,வளைய கோல் என்றும் அழைக்கப்படுகிறது.


  கிரகங்களில் சனி பகவான் மட்டுமே தண்டனை மற்றும் இன்னல்களை கொடுத்து மனம் திருந்தி வாழ செய்பவர் ஆகும்.


சனி பகவான் எந்த ராசியில் இருந்தாலும் சரி, அது பார்த்தாலும் சரி. இருக்க கூடிய இடத்தையும் மற்றும் பார்க்கக்கூடிய இடத்தையும் தன்னுடைய கடுமையான பார்வையால் கஷ்டத்தை கொடுக்க கூடியவராக இருப்பார் . இன்னும் சொல்ல போனால் இருக்கும் இடத்தை விட  பார்க்கும் இடத்தையு அதிகமாக பாதிக்கப்பட செய்வார்.


 சனியுடன் இயற்கை பாவ கிரகங்கள் இணைந்தால் சனி பகவான் இன்னும் கூடுதலான பாவத்தன்மை அடைய வைத்து விடுவார். அதனால் அவர் இருக்கும் இடத்தையும் மற்றும் அவரால் பார்க்கக்கூடிய இடமும் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும்.

 சனியுடன் இயற்கை சுப கிரகங்கள் இணைந்தால் சனி பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தை பாவத்துவப்படுத்தி அதே நேரத்தில் தான் சுபத்துவம் ஆவார் இவ்வாறு சுபத்தன்மை அடைந்த சனி பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் பெரிய அளவிற்கு பாதிப்பு அடையச் செய்வதில்லை ஆனால் அதே நேரத்தில் தன்னோடு இணைந்த கிரகம் அதன் தசையில் கெடு பலனை தரக்கூடிய அமைப்பிற்கு மாறிவிடும்.


     தமக்கு துன்பம் விளைவிப்பவர்கள் ,,

மன்னிக்க முடியாத தொந்தரவுகளை தருபவர்  மற்றும் சொன்ன பேச்சைக் கேட்காதவர் இது போன்ற நபர்களை கோபமாக பேசும் போது கூட "ஏண்டா சனியன் பிடித்தவனே" என்று தான் திட்டுகிறோம்.அவ்வாறு சனியனே என்று அழைத்தவுடன் எதிராளிக்கு கடுமையான கோபம் வந்து அவரும் பதிலுக்கு நீ தாண்ட சனியன் பிடிச்சவன் என்று மாறி மாறி திட்டி கொள்வார்கள்.அந்த சனி என்ற பேரை கேட்டாலே கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி விடுவார்கள்.


 "பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லே " என்று பயப்படும் படியாக அனைவரையும் சனி பகவான் செய்து விடுகிறது.


  ஒருவன் செய்யும் நல்வினை மற்றும்

தீ வினைக்கு ஏற்ப நீதியை வழங்க கூடியவராக சனி பகவான் திகழ்கிறார்.

சனி பகவான் மன்னாதி மன்னர்களை மண்ணை கவ்வ வைத்து விடுவார்.கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடக்கும் காலங்களில் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், மற்றும் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கும் அளவிற்கு செய்து விடுவது உண்டு.


அதேநேரத்தில் ரிஷபம் துலாம் ராசி காரர்களுக்கு சுபத்துவமான நிலையில் சனி தசை நடக்கும் போது குப்பையில் கிடந்தவரையும் கோபுரத்தின் உச்சத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவதும் உண்டு.


  சனியை போல மானிடரை தாக்கு தாக்குன்னு தாக்கி கஷ்டப்பட செய்பவரும் இல்லை. அதே நேரத்தில் அள்ளி அள்ளி கொடுத்து  அழகு பார்ப்பவரும் இல்லை.

சனி பகவான் குரு பகவான் பார்வையை பெற்று புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பையும் பெற்று தசை நடத்தினால் சனியை போல வேறு எந்த கிரகமும் இந்த அளவுக்கு உயர்த்தி விட முடியாது.சாதரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றிவிடும்.


சனி பகவான் தரும் தொல்லைகளில் இருந்து விடுபட  கணபதி,துர்கை மற்றும் அனுமார் ஆகிய மூவரையும் வழிபாடு செய்ய வேண்டும்.


சனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து தப்பிக்க காக்கைக்கு விரதம் இருந்து சாதம் வைத்தல், ஐயருக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல், பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றுதல்,,எள்ளை படுக்கும் போது தலையனைக்கு அடியில் வைத்திருந்து மறுநாள் காலை ஓடும் தண்ணீரில் விடுதல் போன்ற பரிகாரங்களை செய்ய வேண்டும்.சனி பகவான் காயத்ரி மந்திரம் சொல்லுதல் போன்றவற்றை வழக்கமாக கொள்ள வேண்டும்.


 சனி பகவான் சூரிய பகவானின் மைந்தன் ஆவார்.பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சனி பகவான் விளங்குகிறார்.சனி தசை 19 ஆண்டுகள் ஆகும்.


  கோச்சார அடிப்படையில் சனி பகவான் சந்திரன் இருக்கும் இடத்திற்கு அதாவது ராசிக்கு  பன்னிரெண்டாம் இடத்தில் வரும்பொழுது ஏழரை சனி ஆரம்பமாகிறது. ராசிக்கு பன்னிரன்டில் விரயச் சனி,  ராசியில் சனி இருக்கும் போது ஜென்ம சனி. மற்றும் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாதச்சனியாகும். சனி பகவான் ஆனவர் ராசிக்கு நாலாம் இடத்தில் வரும் போது அர்த்தாஷ்டம சனி , ராசிக்கு ஏழாம் இடத்தில் வரும் போது கண்டகச் சனியாகவும்  மற்றும் ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும் போது அஷ்டமச்சனியாகவும் செயல்படுகிறார்.


 நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

 M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

ஒருவருக்கு உயர்வை தரும் காலம் எது ?

 உயர்வை தரும் காலம் எது?

       


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகம் பார்க்க செல்லும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள விருப்பப்படும் ஒரு கேள்வி  என்னவெனில் ஒருவர் ஜாதகத்தில் உயர்வை தரும் காலம் எது? என்பதே ஆகும்.


  என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பலர்   "பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐயா , எப்பதான் விடி மோட்ஷம் கிடைக்கும்னு தெரியலே  சார். இல்லை என் மகன் ஜாதகத்தில் ஆவது உயர்ந்த நிலை அடையும் தன்மை ஏதாவது இருக்கிறதா?  "  என வருத்தப்பட்டு பலர் கேட்பதை தினம் தினம்  பார்க்க நேரும்போது ஒருவிதமான மன வருத்தம் வர தான் செய்கிறது.இவ்வாறு மனவருத்தம் அடைவதை தவிர வேறு தீர்வு இல்லை..


  ஒருவருக்கு உயர்வை  தரும் காலம் எது என்பதை பொதுவாக விளக்கினாலும் அவரவர் லக்கனத்தை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படுகிறது.


 ஒருவருக்கு லக்கனம் மற்றும் லக்கன அதிபதி வலிமை அடைந்த நிலையில் இருந்தால் யோகத்தை தராவிட்டாலும், அந்த கஷ்டங்களை போராடி எதிர் நீச்சல் போட்டு தாங்கி கொண்டு சமாளிக்க கூடிய நிலையினை யாவது ஒருவர் அடைய இயலும்.


 அதேபோல ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தந்தாலும் அதை அனுபவிக்கக் கூடிய நிலை ஒருவர் அடைவதற்கும் லக்கனாதிபதியின் வலிமை அவசியமாக தேவைப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் என்ன தான் யோகம் தரும் நிலை இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் எனில் அந்த தசா புக்தி வாழ்வில் சரியான நேரத்தில் வர வேண்டும்.


 தசை மற்றும் புக்தி நிலை தான் ஒருவரது வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வதாக அமைகிறது.


 இந்த தசை தான் ஒருவரை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை  உறுதியளித்து கூறி விட முடியாது.


 ஒருவருக்கு இயற்கை சுப கிரக தசை தான் யோகத்தை அள்ளித்தரும்  அப்படின்னு சொன்னா அதுவும் சரியில்லை.


 ஒருவருக்கு இயற்கை பாவ கிரக தசை தான் யோகத்தை தரும் எனசொன்னால் அதுவும் தவறாக போய் விடுகிறது.


உச்சம்  மற்றும் ஆட்சி போன்ற  ஸ்தான வலிமை பெற்ற கிரகங்கள் தான் யோகத்தை  அள்ளி தரும் என சொன்னாலும் அதுவும் தவறாக போய் விடுகிறது.


 இதே போல கேந்திர மற்றும் கோணத்தில் நிற்கும் கிரகங்கள் தான் அதன் தசை காலங்களில் நல்ல பலனை தரும் என்று உறுதியாக கூறி விட முடியாது.


பிறகு எப்ப ஐயா ஒருவருக்கு உயர்வு நிலையை தரும் என நீங்கள் கோபமாக கேள்வி கேட்க நினைப்பது எனக்கு புரிகிறது.


 விதி என்று இருந்தால் விதிவிலக்குகள் என்ற நிலை ஒன்று உள்ளது.


இயற்கை சுப கிரக தசை யோகத்தை தரும் என்பது விதியாக இருந்தாலும்‌ ரிஷபம்  மற்றும் துலாம் லக்னத்திற்கு இயற்கை சுப கிரக குரு தசையை விட பாவ கிரக தசையான சனி தசையே யோகம் தரும் தசையாக அமைகிறது.


இதேபோல உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற கிரகம் தான் நல்ல பலனைத் தரும் என்பது விதியாக இருந்தாலும் உபய லக்கனமான மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய நான்கு லக்கனத்திற்கு குரு மற்றும் புதன் பகவான் கேந்திர ஸ்தானத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று நிற்பதை விட மறைவிடங்களில் அல்லது கோண நிலையில் இருப்பது தான் அதன் தசை காலங்களில் ஜாதகருக்கு உயர்வை அள்ளி கொடுக்கும்.


ஏனேனில் உபய லக்கனத்திற்கு குரு மற்றும் புதன் பகவான் கேந்திர அதிபதி மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதியாக வருவதால் ஆகும்.


 எனவே  ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் விதியை மட்டுமே எடுத்துக் கொண்டு பலனளிக்க முற்பட்டால் அந்த ஜாதக பலன் தவறாகி விடுகிறது.இவ்வாறு விதிகளுக்கு அப்பாற்பட்ட பல ஆய்வுகளை அவரவர் லக்கனத்திற்கு ஏற்ப ஆய்வு செய்து பார்த்து பலன் அளிக்க முற்பட வேண்டும்.


 ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இரண்டு அணியாக பிரித்து பார்த்து ஜாதக பலன் அறிய முற்படலாம்.இந்த முறையிலும் விதி என்று ஒன்று இருந்தாலும் விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.


 ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ராகு கேதுவை தவிர ஏனெனில் அதற்கு சொந்த வீடு கிடையாது என்பதால் ஏனைய ஏழு கிரகங்களையும் இரண்டு அணியாக பிரிக்கிறோம் .அதில் ஒன்று அருள் அணி மற்றொன்று பொருள் அணி ஆகும்.


   அருள் அணியின் தலைவராக குரு பகவான் எடுத்துக் கொள்கிறோம். இந்த அணியைச் சேர்ந்த ஏனைய கிரகங்கள் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும் செவ்வாய் ஆகும். இந்த அணியை சேர்ந்தவை மொத்தம் ஆறு ராசிகளாகும் அவையாவன : மேஷம் ,விருச்சகம், தனுசு, மீனம் ,கடகம் மற்றும் சிம்மம் ஆகும்.


 பொருள் அணியின் தலைவராக  சுக்கிரன் பகவான் விளங்குகிறார். இந்த அணியை சேர்ந்த ஏனைய கிரகங்கள் புதன் மற்றும் சனி பகவான் ஆகும். இந்த அணியை சேர்ந்த ஆறு ராசிகளாவன  ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும்.


    நிழல் கிரகங்களான  ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கின்ற வீடு சொந்த வீடாக கொள்ளப்படுகிறது. என்பதால் இவை ஒரு பச்சோந்திக் கிரகம் என்பதாலும் இவர் எந்த அணியில் வீட்டில் இருக்கிறாரோ அந்த அணியை சேர்ந்தவராக மாறி விடுவார்.


மேற்கண்ட இந்த அணியை அடிப்படையில் வைத்து நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த லக்கனத்தைக் கொண்டு நீங்கள் குரு அணியை சேர்ந்தவரா  ?  அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்தவரா ? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முடிவு செய்து கொள்ளும் பொழுது உதாரணமாக நீங்கள் குரு அணியில் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு சூரிய ,சந்திர, செவ்வாய் மற்றும் குரு தசைகள் யோகத்தை தரும்  .  சுக்கிரன் ,புதன் மற்றும் சனி தசைகள் அவயோகத்தை தரும் என்பது விதி ஆகும்.


இதே போல நீங்கள் சுக்கிரன் அணியில் பிறந்தவராக இருந்தால் சுக்கிரன் அணியை சேர்ந்த சுக்கிரன், சனி  மற்றும் புதன் ஆகிய தசைகள் உங்களுக்கு யோகத்தை தரும் என்றும் ,சூரிய ,சந்திர செவ்வாய் மற்றும் குரு தசைகள் அவயோகத்தை தரும் என்பதும் பொதுவான விதியாகும்.


இதில் விதிவிலக்காக நீங்கள் எந்த அணியை சேர்ந்தவரோ அதற்கு கெடு பலனை தரக்கூடிய எதிரணி தசைகள் யோகத்தை தர வேண்டுமாயின் அவை உப ஜெய ஸ்தானமான 3, 6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருந்தால் நல்லதை தரும் என்பது ஒரு விதிவிலக்காக ஆகும்.


 மற்றொரு விதிவிலக்கையும் உங்களுக்குத் தருகிறேன்.

சில நேரங்களில் நீங்கள் குரு அணியில் பிறந்து உங்களுக்கு குரு , சூரிய, சந்திர செவ்வாய் தசைகள் யோகத்தை தரவில்லை எனில் அவை சில நேரங்களில் சனி, செவ்வாய் ,ராகு  மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களோடு சேர்ந்தோ அல்லது பார்க்கப்பட்ட பாவத்துவ நிலை அடைந்ததால் அந்த தசைகள் யோகத்தை தரவில்லை என்று அர்த்தம்.


அதே நேரத்தில் குரு அணியை சேர்ந்தவர்களுக்கு எதிரணியை சேர்ந்த தசைகள் கெடுபலனை தரக்கூடிய தசையாக இருந்தாலும்  அந்த கிரகத்தை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச்சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் சுப நிலையை அடைந்து  அந்த எதிரணியை சேர்ந்த தசைகளும் குரு அணி சேர்ந்த லக்னங்களுக்கு நல்ல பலனை தரக்கூடிய நிலையில் இருக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

 097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


E-mail masterastroravi@gmail.com