ஜாதகத்தில் அறிவால் அகிலத்தை ஆள்வோர்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நடிகர் டி ராஜேந்தர் ஐயா அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார்
"ஏழையாக பிறந்தாலும் கோழையாக பிறக்கக் கூடாது ". ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் தன்னை ஏழையாக நினைக்கக் கூடாது. "அறிவே ஆற்றல் " ஆகும்.
அறிவு நிலை கொண்டு எல்லா எதிர்ப்புகளையும் , கஷ்டங்களையும் உடைத்து எறிந்து விட்டு மற்றவர் பார்த்து வியக்கும் வண்ணம் எந்த நிலைமையில் இருந்த இவன் இன்றைக்கு உலகம் போற்றும் படியான சாதனையை செய்து உயர்ந்து நிற்கிறானே !? என எதிரி கூட பொறாமை படும் அளவிற்கு உயர்ந்து நிற்க வேண்டும்.
ஒரு சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற வேண்டும்.ஆனால் அந்த கோட்டை அழிக்கவோ அல்லது திருத்தவோ கூடாது.ரொம்ப சிம்பிள் பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டா அந்த கோடு தன்னாலே சின்ன கோடாகி விடப்போகிறது.
மேற்கண்ட இந்த கருத்து பாக்குறதுக்கு ரொம்ப சாதாரணமா தெரியும் ஆனா எவ்வளவு பெரிய ஆழமான தத்துவத்தை நமக்கு விளக்கி விடுகிறது .எப்படின்னு பாருங்க உங்களை எதிர்த்து நிற்கிறவங்கள நீங்க ஜெயிக்கிறது அவங்களுக்கு கெடுதல் பண்ணியோ அல்லது அவங்களோட சண்டை போட்டு கொண்டோ நின்றால் நீங்கள் முன்னேறவே முடியாது. கால விரயம் தான் ஆகும். அதற்கு பதிலாக அவங்களுக்கு முன்னால அவங்கள விட ஒரு ஸ்டெப் உயர்ந்திருக்கும் போது ஆட்டோமேட்டிக்கா அவங்க சரியாயிடுவாங்க.ஒகே.
அந்த அறிவே ஆற்றல் என்று சொன்னேனே அந்த அறிவை ஒரு மனிதனுக்கு தரக்கூடிய கிரகங்களில் முதன்மையான கிரகங்கள் இரண்டு ஆகும் ஒன்று குரு பகவான் மற்றொன்று புதன் பகவான் ஆவார்.
ஒருவர் தன் அறிவாற்றல் கொண்டு அவர் சார்ந்த துறை வாயிலாக உலகையே திரும்பி பார்க்க வைக்கும் கிரகம் குருவும், புதனும் ஆகும்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் இந்த குரு பகவான் மற்றும் புதன் பகவானும் எவ்வித பங்கப்படாமல் மற்றும் பாவத்துவம் அடையாமல் வலிமையான நிலையில் ஜாதகத்தில் இருக்கும் போது உகந்த தசா அமைப்புகளும் அவர்களுக்கு ஒத்துழைத்தால் அவர்கள் தனது அறிவால் அகிலத்தை அளக்க முடியும்.
தன் கற்ற கல்விக்கும் , செய்யும் வேலைக்கும் தொடர்பு இன்றி அவர் கற்ற கல்வியும், பெற்ற அறிவும் எதற்கும் பயன்படாமல் அவர்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஏதோ ஒரு வேலையிலோ அல்லது தொழிலோ இருந்து தனது வாழ்வை கழித்து விடுவதும் உண்டு.
ஒரு சிலர் தான் கற்ற கல்வியை அவர்கள் பார்க்கும் வேலைக்கும் அல்லது செய்யும் தொழிலுக்கும் தொடர்பு உண்டாகி அவ்வாறு தொடர்புடைய வேலை அல்லது தொழிலை செய்து அதன் வழி நின்று அறிவால் உலகை வெல்வோரும் உண்டு.
தான் கற்ற கல்விக்கு அவர்கள் செய்யும் வேலை அல்லது தொழிலுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாத நிலையில் ஆனால் அதே நேரத்தில் அவர்களது பெற்ற ஞானத்தால் வேறொரு துறையில் சிறப்பாக பயன்படுத்தி அறிவால் அகிலத்தை ஆள்வோர் பலர் உண்டு.
ஒருவர் தான் கற்ற கல்வியாலும் மற்றும் பெற்ற ஞானத்தாலும் புகழ் அடைய அவர்கள் ஜாதகத்தில் ராசி மற்றும் அதன் அதிபதி சுபத்துவமான நிலையில் வலிமை பெற்று நின்று வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம், கல்வி ஸ்தானமான நான்காம் இடம், அறிவு ஸ்தானமான ஐந்தாம் இடம் , மேல்நிலைக் கல்வி தொடர்பு கொண்ட பாக்கிய ஸ்தானம் ஆன ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி நல்ல நிலையில் ஜாதகத்தில் நின்று அறிவுக்கு உரிய காரக கிரகமான குரு மற்றும் புதன் பகவான் நல்ல முறையில் தொடர்பு கொண்ட அமைப்பை பெற்று உகந்த தசா புக்தி அவர்கள் ஜாதகத்தில் வரும் போது அவர்கள் தான் கற்ற மற்றும் பெற்ற அறிவாற்றலால் வெல்வார்கள்.
தான் கொண்ட துறையில் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து பெற அவர்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடம் வலிமை பெற்று இருக்க வேண்டும்.
எப்பொழுதும் ஜாதகருக்கு நடக்கும் ஒவ்வொரு நல்ல/கெட்ட பலனுக்கும் தனிப்பட்ட ஒரு ஸ்தானமோ அல்லது ஒரு கிரகமோ மட்டும் காரணம் அல்ல.கிரகங்கள் இருக்கும் வீடு , அந்த கிரகங்கள் பெற்ற உறவு , பார்வை, சேர்க்கை,கிரகங்களுக்கு இடைப்பட்ட தூர அளவு ( டிகிரி அடிப்படையில்),லக்கனாதிபதி வலிமை, கோச்சார மற்றும் தசா பலன்கள் இது போன்ற பல்வேறு planet combination தான் ஜாதகருக்கு தரும் பலனை நிர்ணயிக்கிறது.
ஜாதகருக்கு கிடைக்கும் பலனில் மாறுபட அவரவர் லக்கனத்தை பொறுத்தும் மற்றும் நடக்கும் தசா புக்தி பொறுத்தும் கிரக சேர்க்கைகள் ,கிரக உறவுகள் வேறுபாடுகள், கிரகங்களுக்கு இடைப்பட்ட தூர அளவு ,கிரக வலிமை மற்றும் கிரகங்களின் சுப தன்மை/பாவ தன்மை இப்படி பலவற்றை சார்ந்து ஜாதகத்திற்கு நாம் இடும் ஒட்டு மொத்த மதிப்பெண் அமைகிறது.
இங்கு பலன் எடுப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் அல்ல.இதற்கு நிறைய அனுபவ அறிவு தேவைப்படுகிறது.வெறும் விதிகளையோ அல்லது ஜோதிட மூல நூல்கள் சொன்ன கருத்தை மட்டும் கொண்டோ அல்லது ஜோதிட பெரியோர்கள் சொன்ன கருத்துகள் ஆகிய இவைகளை மட்டுமே வைத்து கொண்டு பலன் அளிக்க முயன்றால் ஜோதிடர் பலனை தவற விட வாய்ப்புண்டு.
இவை அனைத்தையும் உள்வாங்கி உமது அனுபவத்தையும் இத்துடன் இணைத்து விதிகளுடன் விதிவிலக்குகள் பலவற்றை அலசி ஆராய்ந்து பலன் எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்கள் பலரது ஆரம்ப கால வாழ்க்கை என்பது அடிப்படை தேவைகளுக்கோ பலவிதமாக கஷ்டப்பட்டு தான் இருந்து இருக்கிறார்கள்.அவர்களது மனம் தளராமல் உழைத்த உழைப்பு தான் இன்றைக்கு பெரிய அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள்.
இன்றைய சினிமா துறையில் உச்சம் தொட்ட மரியாதைக்குரிய ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்றைய புகழுடைய நிலையினை அன்றைய காலகட்டத்தில் நினைத்து பார்த்தது கூட கிடையாது.
இன்றைக்கும் பல கோடிக்கணக்கான சம்பளத்தை வாங்கி கொண்டு இருக்கும் ரஜினிகாந்த் அன்றைய ஆரம்ப காலத்தில் தான் நடித்த படத்திற்கு சம்பளம் கேட்டதற்காக "ஏன்டா இரண்டு மூன்று படத்திலே சின்ன சின்ன ரோலில் நடித்திட்ட அவ்வளவு பெரிய ஆளா" என ஒரு படத் தயாரிப்பாளர் பேசியதாக தனது ஆரம்ப கால திரைத்துறை வாழ்க்கையை பற்றி சொல்லி இருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து ஐயா தனது அம்மா பற்றிய கவிதையில்
"வைரமுத்து பிறப்பான்னு
வயித்திலே நீ சுமந்ததில்லை
உன் வயிற்றில் பிறந்த பிள்ளை
"வைர முத்தா "ஆகிடுச்சு.என்பார்.
பிற்காலத்தில் மிக பெரிய பாடலாசிரியர் ஆக வருவார்னு நினைச்சு அவரது அம்மா சுமந்ததில்லை.என்று கூறி இருப்பார்.
இதனால்
யாரும் சாதனையாளர்களாக பிறப்பதில்லை.அவர்கள் பிறந்த பிறகு உருவாக்கப்படுகிறார்கள் ".
இக்கருத்தை வலியுறுத்தி
"சாதனையாளர்கள் பிறப்பதில்லை
அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்."
இவ்வாறு சாதனையாளர்கள் தனது அறிவை பயன்படுத்தி உயர் வேண்டுமாயின் அவர்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளே முடிவு செய்கின்றது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்;; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email masterastroravi@gmail.com