Saturday 24 June 2017

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ? ஒரு விரிவான அலசல் ஆய்வு.

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ?-ஓரு விரிவான அலசல் ஆய்வு.



செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு-( 156 )

திருமண பொருத்தம் பார்க்க வரும் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி , சார் சாதகத்தில் மாப்பிள்ளைக்கும்,பெண்ணிற்கும் சாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா ? என பாருங்கள் ஐயா ? என கேட்பவர்களே அதிகம்  என்பதால் அவர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் இப்பதிவை கொண்டுசெல்கிறேன்.

செவ்வாய் என்பது ஒரு

     பூமிக்காரகன்,
   சகோதரகாரகன்,
     வீரக்கிரகம்,
     உஷணகிரகம்
     யுத்தகிரகம்,
  இரத்த ஓட்ட கிரகம் ஆகும்.

இரத்தத்திற்கும் ,இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்கள் மற்றும் இரத்ததட்டுகள் போன்றவைகளுக்கும்,இரத்தபிரிவுகளுக்கும் (blood groups ) மற்றும் எலும்புமஞ்சைகளுக்கும் காரகர் கிரகங்களில் செவ்வாய்பகவானே ஆவார்.

சாதகத்தில் செவ்வாய்பகவானை பலமாக பெற்றவர்கள் எவ்வித மந்ததன்மையும் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.அவர்கள் எப்பொழுதும் செயல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.
மேலும் செவ்வாய் கிரகம் காம எண்ணம் மற்றும் காமம்  சார்ந்த செயல்பாடுகளை தூண்டும் கோள் ஆகும்.செக்ஸ்ஹார்மோன்களான ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான    ஆண்ட்ரோஷன்,பெண் இன ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஷன்,புரோஸஸ்டிரான் மற்றும் ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்கள் சுரத்தலுக்கும் அதனால் மனிதனுக்கு உருவாகிய செயல்பாடுகளுக்கும் காரணகர்த்தா செவ்வாய்பகவானே ஆகும்.

செவ்வாய்பகவானை பலவீனமாக பெற்றவர்கள்  மந்த தன்மையுடன்   சுறுசுறுப்பு தன்மை அற்றவராகவும்,காம எண்ணம் குறைந்தவர்களாகவும் இருப்பர்.இரத்த சோகை உடையவராகவும் இருப்பர்
செவ்வாய்பகவான் இரத்த பிரிவுகளுக்கும் காரகர் ஆவார். இன்று  அறிவியல் அறிஞர்கள் திருமண தம்பதிகளுக்கு இரத்த பிரிவு ( blood group test ) ஆய்வு செய்து விவாகம் செய்து கொள்ளல் நல்லது என்பர். சாதக அடிப்படையில் இரத்த ஆய்வு செய்யாமலே இந்த செவ்வஆய்பகவானின் நிலையை ஆய்வு செய்து தம்பதிகள் இருவர் செவ்வாய்பகவானின் வலிமை சமமாக உள்ளவரை திருமண பந்தத்தில் இணைத்தால் நல்லது.

மேலும் செவ்வாய் காமகிரகம் என்பதால் சாதக கட்டத்தில் செவ்வாய் கிரகம் பலமான அமைப்பை பெற்றவர்கள் ஆணோ/பெண்ணோ இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பும்,உணர்வுகள் மற்றும்  காமம் சார்ந்த கற்பனைகளும், செயல்பாடுகளும் மிகுதியாக இருக்கும்.மாறாக சாதககட்டத்தில் செவ்வாய் கிரகத்தினை பலமில்லாத அமைப்பை பெற்றவர்கள் மேறகுறிப்பிட்ட காமம் சார்ந்த செயல்பாடுகள் குறைவாக இருக்கும் என்பதால்தான் செவ்வாய்பகவான் நிலை அறிந்து பொருத்தம் போடவேண்டும்.

இவ்வாறு செவ்வாய் நிலையறியாது திருமணம் செய்யும்பட்சத்தில் செவ்வாய் ஓத்த அமைப்பை பெறாதவர்கள் திருமணபந்தத்தில் இணையும்போது அவர்களிடம் தாம்பத்யம் திருப்தி இல்லாமல் அவர்களிடம் அன்யோன்யம் குறை்து "வேலி தாண்டிய வெள்ளாடு" ஆகிவிடுவார்கள்.இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதற்கு செவ்வாயின் தன்மையை அறிய வேன்டும்.

செவ்வாய் தோஷம் இருப்பின் பால் உணர்வு விஷயத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் குண இயல்புகள் மாறுபடும்.
ஒரு ஆண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் காம உணர்வு அதிகம் இருத்கும்.அதேபோல பெண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அவள் அவசரப்பட்டு உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தி விடுவாள்.

செவ்வாய் தோஷம் உள்ள  ஆண் மகன் ஒரு காம உணர்வினால் ஒரு பெண்ணின் பிடியில் அடங்கிபோய்விட இயலும்.எனவேதான் திருமணத்தின்போது  செவ்வாய்தோஷம் உள்ள ஆணிற்கோ/பெண்ணிற்கோ அதே தோஷம் உள்ள நபரை பொருத்தம்போடும்போது அவர்களிடம் ஒத்த காம உணர்வுகள் உண்டாக வாய்ப்பு உருவாகி தாம்பத்ய உறவில் அன்யோன்யம் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் செவ்வாய் தோஷம் உள்ள நபருக்கு அதேபோல செவ்வாய் தோஷம் உள்ள நபரையே ஜோடி சேர்க்கப்படுகிறது.மற்றபடி உயிரை கொல்லும் அளவிற்கு பயப்படக்கூடிய தோஷம் இல்லை.

செவ்வாய் மனித உடலின் இரத்த ஒட்டத்திற்கும் காரகர் ஆவார் என்பதால்
உடலியல்கூற்றுப்படி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பெண்ணிற்கு பூப்பெய்திய பிறகு மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது.பிறகு பிரசவ காலத்தில் இரத்த இழப்பு ஏற்படுகிறது.எனவே பெண்கள் சாதகத்தில் செவ்வாய் பலமிழந்து நின்றால் இரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.அத்துடன் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி,உதிரபோக்கு ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

இவை மட்டுமல்லாமல்  செவ்வாய்பகவானுடன் களஸ்திரகாரகனான சுக்கிரன் ஆனவர் 30  பாகைக்குள் இணையும்போதோ அல்லது ஒன்றுக்கொன்று 180 பாகைக்குள் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும் அமைப்பை பெற்றவர்கள் காம உணர்வு மிகுதியால் அதிக காம செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

  சுப பார்வையின்றி     செவ்வாய் பகவான் உடன் சனி,ராகு,கேது சேர்க்கையை பெற்றவர்கள் அளவுக்கு அதிகமான காம உணர்வுகள் பெற்று பல மலரை நாடி தேன் எடுக்கும் வண்டு ஆவார்.

செவ்வாய்தோஷம் என்பது ஓருவருடைய சாதக கட்டத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2.4.7.8.12 ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய்தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷத்தில் சில விதிவிளக்குகள் உள்ளது.
1)செவ்வாய் உச்சம்,ஆட்சி மற்றும் நீசமடைந்து இருப்பின் செவ்வாய் தோஷம் கிடையாது.
2) செவ்வாய் பகவானை  சனி, குரு, சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும்,சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
3)சில நேரங்களில் செவ்வாய் குரு வீடு ஏறியிருந்தாலோ ,சிம்ம வீடு ஏறியிருந்தாலும் தோஷம் இல்லை.

இவ்வாறு எல்லா விதிவிலக்குகளை கவனித்தாலே  செவ்வாய் தோஷம் இல்லாமல் விலகிவிடும்.
எனவே செவ்வாய் தோஷம் பற்றி பயப்பட தேவையில்லை.பொதுவாக செவ்வாய் ஒரு பாவகிரகம் என்ற வகையிலும் அவை குடும்பம்,களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தில் இருப்பின் திருமணதடை ,மனதிற்கு ஒத்த மனைவி அமைவதில் சிரமம் என்ற வகையில் பயப்படவேண்டுமோ ஓழிய உயிர் பயம் தேவையில்லை.

நன்றி நன்றி நன்றி!

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம். மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம்,மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்)

தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
97 151 89 647
   740 257 08 99

My email
masterastroravi @gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com


அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்.
ஒம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனையாளர்
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்..
---------------------------------------------------------------------------

Tuesday 20 June 2017

உங்களது சாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின்் வலிமையை அறிந்து கொள்வது எப்படி ?

உங்களது சாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை அறிந்து கொள்வது எப்படி ?




கிரகங்கள் படுத்தும் பாடு -(5)


ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..

  ஒரு மனித வாழ்வின் உயர்விற்கும்,தாழ்விற்கும் பெரும்பங்கு வகிப்பது அவனது ஜெனன காலத்தில் 360 பாகையை சுற்றி அமைந்திருக்கும் கிரக நிலைகளே .கிரகங்கள் அவனது ஜெனன நேரத்தில் எத்தனையாவது பாகையில் நிற்கிறதுகிரகங்களின் என்பதை கணித்து பணிரெண்டு கட்டங்களில் அடைக்கப்படுகிறது.

பிறந்த நேரத்தில் பால் வீதியின் தொடு வானத்தில் என்ன நட்சத்திரம் மிளிர்கிறதோ அதனை அவனது ஜென்ம நட்சத்திரமாக கொண்டு இதிலிருந்து ஜென்ம ராசி குறிக்கப்படுகிறது.பூமி சுற்றுவதை அடிப்படையாக கொண்டு லக்கனம் கணக்கிடப்படுகிறது.ஜென்ம நட்சத்திரம் எவ்வளவு பாதம் கடந்துள்ளது என்பதை கணக்கிட்டு அதிலிருந்து தசை மற்றும் புத்தி கணக்கிடப்பட்டு இக்கணித அடிப்படையாக கொண்டு ஒரு மனித வாழ்வின் சாதகம் எழுதப்படுகிறது.

இந்த கிரகங்கள் பணிரெண்டு ராசிக் கட்டங்களில் அதன் பாகையைப் பொறுத்தி அமர்த்தி  அமர்ந்து இருக்கும் இடத்தைப் பொறுத்து அக்கிரகம்  பலமா ? பலவீனமா ? என கணிக்கப்படுகிறது.

பலமெனில் இக்கிரகங்கள் பின்வரும் வரிசையில் பலத்திற்கான சதவீதம் அளிக்கப்படுகிறது.அதாவது முதலில் உச்சத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஒரு கிரகம் ஒரு ராசியில் இருக்கும்போது உச்சமாக இருந்தால் அவை ஒரு குறிப்பிட்ட பாகை வரை மட்டுமே உச்ச பலனை தருகிறது.பிறகு அவை சாதரண கிரகங்கள் போலவே பலனைத்தருகிறது.

உதாரணமாக கன்னியில் புதன் இருப்பதால் நாம் உச்சம் என்ற நிலையில் பலன்களை புகழ்ந்து பலனளிக்கும் போது அது அவ்வாறு கிரக பலனை தரமால் போய்விடுவதற்கான காரணம் மற்றும் சோதிடரையே ஏமாற்றிவிடுவதற்கு புதனின் பாகை நிலையை கவனிக்காததே காரணம் ஆகும்.உத்தேசமாக முதல் 14 பாகைக்குள்தான் உச்சத்திற்குரிய பலனை தருகிறது என வைத்துக்கொள்ளும்போது அந்த பாகையை தாண்டி செல்லும் புதனின் வலு சாதரண கிரக நிலையையே அடைந்துவிடுகிறது எனவே கன்னியில் புதன் இருந்தால் புதன் உச்சம் என பாகை நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சோதிடர் கூறும் பலனும் தவறாவதற்கு வாய்ப்பு உண்டு.எனவே "கிரகங்களை மனிதனை படுத்தும் பாடு "பற்றி பலனுரைக்க நல்ல கணித புலமையும் சோதிடருக்கு தேவைப்படுகிறது.

உச்சத்தை அடுத்து கிரக வலுவிற்கு இரண்டாவது நிலையை மூல திரிகோணமும் ,அதனையடுத்து ஆட்சி தொடர்ந்து நட்பு நிலை என கிரக வலிமை அமைகிறது.

கிரக வலிமையான பலனைத்தர அவை எந்த நட்சத்திர சாரம் வாங்கியுள்ளது என பார்க்கவேண்டும்.இவ்வாறு நட்சத்திர சாரம் பார்க்கும் இரண்டு வழிமுறையை பின்பற்ற வேண்டியிருக்கிறது.

முதல் வழிமுறை ஓரு கிரகத்தை தாங்கியுள்ள நட்சத்திரம் இயற்கை சுபரா ? அசுபரா ? என பார்க்கப்பட வேண்டும்.இயற்கை சுபர் எனில் அவை தாங்கியுள்ள கிரகத்தின் ஸ்தான வலுவையும் ,காரகத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.மாறாக பாவர் எனில் பலனை குறைக்க செய்யும் அல்லது தவறான வழிக்கு இட்டுச்செல்லும்.

உதாரணமாக ஜீவனத்தின் அதிபதி சுப சாரம் வாங்கினால் நேரிய வழியில் பொருள் ஈட்டவும்,பாவர் சாரம் எனில் ஜீவனத்தை குறைக்கும் அல்லது மறைமுக வழியில் பொருள் ஈட்ட வைக்கும்.

சாரம் பார்ப்பதில் இரண்டாவது வழிமுறை ஒரு கிரகம் கொண்டுள்ள நட்சத்திரத்தின் அதிபதி என்னவென பார்த்து அந்த அதிபதி அவனது ராசிக்கட்டத்தில் என்ன ஸ்தானம் வாங்கியுளளது அவை சுப ஸ்தனமா ? அசுப ஸ்தானமா ? என பார்த்து அதற்கு ஏற்றார்போல் பலனுரைப்பது
உதாரணமாக தனாதிபதியான கிரகம் அவனது ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் நட்சத்திரம் பெற்றிருந்தால் பாக்கிய யோகம் பெற்று வெகு தனவான் ஆவான்.

நட்சத்திர சாரத்தை அடுத்து கிரக பார்வைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதிலும் பார்வை தரும் கிரகம்
சுபரா ? அசுபரா ? என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பார்வையில் குரு பார்வையில் ஜந்தாம் பார்வை அரைப்பலனும்,ஒன்பதாம் பார்வை முக்கால் பலனும் தரும்.
இதேபோல் சனியின் ஏழாம் பார்வை முழுப்பலனும்,மூன்றாம் பார்வை அரைப்பலனும்,பத்தாம் பார்வை கால் பலனும் தரும்.
செவ்வாயில் நான்காம் பார்வை அரைப்பலனும்,மூன்றாம் பார்வை முக்கால் பலனும் தரும்.
மூன்று கிரகங்களிலும் ஏழாம் பார்வைக்கு முழு பலம் உண்டு.

அடுத்து அவை என்ன ஸ்தானம் பெற்றுள்ளது எனப்பார்க்க வேண்டும்.அவை கேந்திர ஸ்தானமா ,திரிகோணமா,பணபர ஸ்தானமா மற்றும் மறைவு ஸ்தானமா ?என பார்க்கவேண்டும்.

மேற்கண்ட ஸ்தானங்களில் கிரகங் அமையும் கிரக வலிமை பெறுகிறது.இவற்றுள் சுபர்கள் கேந்திரம் பெறும்போது கேந்திராதிபதி தோஷத்தை தந்து பலனை குறைத்துவிடுவதால் அவை திரிகோண மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருக்கும் போது அதிக பலனை தருகிறது(குறிப்பாக உபய ராசி காரர்களுக்கு).இதேபால் பாவிகள் கேந்திரமேற நற்பலனை தருகிறது.

இதனைத்தொடர்ந்து திக் பலம் பார்கக வேண்டும்.குரு  பகவானும்,புதன் பகவானும் லக்கனத்தில் நிற்கும்போது முழுபலம் அக்கிரகத்திற்கு கிடைத்துவிடுகிறது.சந்திர பகவானும்,சுக்கிர பகவினும் நான்கில் நின்றாலும்,சனி பகவான் ஏழில் நின்றாலும்,சூரிய பகவானும்,செவ்வாய் பகவானும் பத்தில் நின்றாலும் அக்கிரகங்களுக்கு முழுபலம் கிடைத்துவிடுகிறது. இக்கிரகங்கள் திக் பல  ஸ்தானத்திற்கு ஏழாமிடத்தில் இருக்கும்போது பலன் குறைவு ஏற்படுகிறது.

மேலும் ஒரு கிரகம் அந்த ஸ்தானத்திற்கு நட்பா?,பகையையா  ?பாதகாதிபதியா?,மாரகாதிபதியா ? என கவனிப்பதோடு ஒரு கிரகம் அந்த ராசிக்கும், நடக்கும் திசைக்கும் யோகரா? ,மாரகரா? ,பாபரா ? மற்றும் சுபரா ? என கவனிக்கப்பட வேண்டும்.

மேலும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் உள்ள கிரகம் வர்க்கோத்தமம் பெற்று பலன் அதிகம்.இதேபோல சுப கிரகங்களும்,சுப ஸ்தானங்களும் தங்களது வீடு பரிமாறி நின்றால் பரிவர்தனை யோகம் பெற்று பலம் அதிகம்.

ஒரு சில கிரகம் நீசம் பெற்றாலும் வீடு கொடுத்த கிரகமோ அல்லது அந்த வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றிருந்தாலும் இல்லை வீடு கொடுத்த கிரகம் சந்திர  கேந்திரம் பெற்றால் நீசம் பங்கம் ஏற்பட்டு வலுப்பெற்றுவிடும்.

மேற்கண்ட பல அமைப்புகளை பெற்றிருந்தால்தான் ஒரு கிரகம் வலுவானது என முடிவு செய்ய முடியும்.இதே போல அக்கிரகம் பலமற்றது என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட அம்சங்களை பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மனித சாதக கட்டத்தில் ஒரு கிரகம் நீசம்,பகை ,மறைவு ஸ்தானம் மற்றும் அஸ்தமனம் பெற்றிருந்தாலோ ,பாவர் சாரம் மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது பாவர் பார்வை பெற்று ஆறு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிட  சம்பந்தம் பெற்றாலோ அக்கிரகம் பலமிழந்து விடும்.அக்கிரகங்களை நடத்தும் திசைகள் நன்மையை செய்யாது என்பதை உணரவேண்டும்.

மேற்கண்ட பல விதிகளின் அடிப்படையில் ஒரு கிரகம் பலமா ?பலவீனமா ? என ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல அக்கிரகங்கள் நடத்தும் திசைகள் நன்மையை செய்யுமா?தீமையை செய்யுமா ? எனவும்.மேலும் அக்கிரகத்திற்குரிய காரகங்களை தருமா ? என ஆய்வு செய்யப்பட்டு "கிரகங்கள் படுத்தும் பாடு " பற்றி பலனுரைக்க வேண்டும்.

அன்புடன்
          


  சோதிடர் ரவிச்சந்திரன்
                        M.SC,MA,BEd
Teacher & Astrologer
Omsakthi jothida Nillayam
Pudukkottai -District


Cell: 97 151 89 647
Cell; 740 257 08 99


My whatsup no
  97 151 89 647

(Do you want to know your horoscope prediction,conduct my mophile no.Charge is applicable)

சாதகபலனை போன் வழியாக பெற எனது அலைபேசியை தொடர்புகொள்ளவும்.பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரம் பெறலாம்.


Friday 16 June 2017

சுக்கிரபகவானும் , குருபகவானும் மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்.

சுக்கிரபகவானும்,குருபகவானும் மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்.


"கிரகங்கள் படுத்தும் பாடு -( 154 )


செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

அசுரர்களின் குருவான சுக்கிரபகவானும் ,தேவர்களின் குருவான குருபகவானும் மனிதர்களின் வாழ்விலை அருளையும்,பொருளையும் உணர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  சுக்கிரன் உச்சம்,ஆட்சி, போன்ற நிலைகளில் பலமடைந்து நிற்கும்போது ஜாதகருக்கு எல்லாவிதமான வசதிகளையும் தந்து வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்க வைத்து ஒருவித மன அமைதியில்லாத நிலையை தந்துவிடுகிறது.

அதேநேரத்தில் சுக்கிரன் நீசமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையில் பலமிழந்து நிற்கும்போது குடும்பம்,மனைவி,குழந்தைகள் இவைகளுக்காக சிரமப்படவேண்டிய நிலையை தந்து விடுகிறார்கள்.மேலும் எவ்வித சுகத்தையும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.

பொதுவாக சுக்கிரனை் நீசமாக  ் பெற்றவர்கள்  எவ்வித சுகத்தையும் பூரணமாக அனுபவித்தல் என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.அவ்வாறு கிடைத்தாலும் இறுதியில் கசப்பாகவே சென்று முடிகிறது.

காம இன்பங்களை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான்தான் ஒரு மனிதனை ஆன்மீகவாதியாகவும் மாற்றுகிறது.
தாரதோஷத்தை தருவதில் சுக்கிரபகவானுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.கேந்திர நிலைகளான 1,4,7,10 போன்ற இடங்களில்  இடம்பெறும்போது தாரதோஷத்தை தருகிறது.சிலநேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களை தந்து மனிதனை பயனற்ற பொருளாக மாற்றிவிடுகிறது.

தாரதோஷத்தை தருவதில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக குருபகவானுக்கும் பங்கு உண்டு.சுக்கிரனுக்கு எதிர் தன்மை படைத்த கிரகம்தான் குருபகவான் ஆகும்.அசுரர்களின்  ஆசிரியர் ஆனவர் சுக்கிரபகவான் ஆவார்.இவர் குருபகவானோடு சேரும்போது மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகிறான் என்பதை தெளிவாக பார்ப்போம்.

குருவும் ,சுக்கிரனும் இயற்கையில் ஒருவருக்கொருவர் பகைமை பெற்ற அம்சத்தினால் சாதகருக்கு லக்கன பாவத்தை தவிர இவர்கள் வேரு எந்த பாவத்தில் சேர்ந்தாளும் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது எனது அனுபவ உண்மையாகும்.

குரு சுக்கிர சேர்க்கை காதலில் தோல்வி,மன அமைதியற்ற குடும்பம்,ஒற்றுமையில்லாத மனைவி ,அன்பில்லாத குழந்தை இவைகளை கொடுப்பதன் மூலம் மனிதன் துயரத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறான்.

ஓருவருக்கு காதல் தோல்வி,வழக்கு மன்றத்திற்கு செல்லுதல்,சன்னியாசியாக போவதே நல்லது போன்ற மனமாற்றத்தை தருவது குரு சுக்கிரன் சேர்க்கையாகும்.
மனிதன் நிம்மதியாக வாழவேண்டுமாயின் இவ்விரு கிரகங்களும் தனித்து இருப்பதுதான் நல்லது.இந்த இரு கிரகங்கள் ஒன்றையொன்று சேராமலும் ,பார்த்துக்கொள்ளாமல் இருப்பதே நன்று ஆகும்.

தோஷ நிவாரணம் பெற :-

ஆண் ஜாதகத்தில் குரு-சுக்கிரன் சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ இருக்குமானால் அதே மாதிரியான அமைப்பை பெற்ற பெண் ஜாதகத்தினை வாழ்வில் இணைக்கும்போது எவ்வித  கஷ்டங்களும் இல்லாமல் மனமொத்து வாழ்வார்கள்.

ஒரு மனித வாழ்வில் தாரதோஷத்தை தருவதில் குரு-சுக்கிர சேர்க்கைக்கு மகத்தான பங்கு உண்டு.
எவ்வித அமைப்பில் இவற்றின் சேர்க்கை இருந்தால் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

தாரதோஷத்தை தரக்கூடிய கிரகநிலைகள்:-

1) குரு-சுக்கிரன் ஒன்றை ஓன்று பார்த்துக்கொள்ளும்போது

2) குரு-சுக்கிரன் லக்கன பாவத்தை தவிர ஏனைய பாவங்களில் சேர்ந்து இருக்கும்போது

3) சில நேரங்களில் சுக்கிரன் மட்டும் உச்சமாகவோ அல்லது நீசமாக இருக்கும்போது

4)  சுக்கிரனோடு பாவிகளான  சனி,ராகு,கேது சேர்க்கை பெறும்போது

5) கேந்திர நிலைகளில் சுக்கிரன் பலமடைந்து நிற்கும்போது

6) சுக்கிரன் களத்திர வீடான ஏழாம் இடத்தில் நிற்கும்போது

7)/ஏழுக்குடையவனோடு களத்திரகாரகன் சுக்கிரன் சேரும்போது

மேற்கண்ட அமைப்பானது ஓருவரது சாதகத்தில் இருப்பின் தாரதோஷத்தை சாதகருக்கு தருவதற்கான வாய்ப்புகள் உண்டு.இதில் சில விதிவிலக்குகள் உண்டு.சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை அல்லது ஏழாமிட ,தாரதோஷ தொடர்புடைய பதினொறாமிட அதிபதி ஆகிய கிரகங்களின்
தன்மையை பொறுத்து பலனில் மாறுபடலாம்.

பொதுவாக ஒருவருக்கு தாரதோஷத்தை தர ஏழாமிட அதிபதி பலமிழந்து பதினொறாமிட அதிபதி பலமடைந்தால் தாரதோஷத்திற்கு வாய்ப்புகள் உண்டு.
குடும்பாதிபதி,லாபாதிபதி ஆகிய இருவர் களத்திர அதிபதியுடன் சேர்ந்து நிற்கும்போது தாரதோஷத்தை தருகிறது.

இரண்டு , ஏழுக்குடையவனோடு அரவுகளான ராகு,கேது மற்றும்  சனி பேன்ற கிரகங்களின் சேர்க்கையினாலும் தாரதோஷம் தர வாய்ப்புகள் உண்டு.

நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து அனுப்பிவைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த  நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பெறலாம்.தங்களது " பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு message செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )


தொடர்புக்கு

  வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

   செல்
97 151 89 647
   740  257 08 99

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd.
ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi @gmail.com

My website
astroravichandransevvai. blogspot. Com

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Tuesday 13 June 2017

கமல்ஹாசன் சாதகம் ஓர் ஆய்வு

சினிமாவில் சாதித்தவர்கள்- ( 6 )


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 69 )


ஸ்ரீபத்ரகாளியம்மன துணை!

தமிழ் திரை உலகில் சிவாஜிகணேசனுக்கு அடுத்தப்படியாக அந்த இடத்தை நிரப்பியவர்.மேலும் அவருடைய திரையுலக வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவர் எனது கல்லூரி கால பருவத்தில் நான் விரும்பி பார்த்த படங்களில் இவரது படமே அதிகம். இவர் தமிழ் திரை உலகம் மட்டுமல்லாத பிற மொழி படங்ளிலும் திறம்பட நடித்தவர்.

கதை,திரைக்கதை,வசனம்,இசை,பாடல்கள் ,நடனம் என அத்தனை துறையிலும் பாண்டித்யம்பெற்றவர்.

இராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் 7-11-1954 ல் பிறந்தவர்.இவர் பிறந்து நான்காவது வயதிலே அதாவது 1959 ல் "களத்தூர் கண்ணம்மாவில்"சிறப்பாக நடித்ததற்காக ஜனாதிபதி கோல்ட் மெடல் விருது பெற்றவர்.இன்றுவரை திரையுலகில்  இளம் நடிகர்களுக்கு சவாலாக கலக்கி கொண்டிருப்பவர்.

ஆம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.இவர் திரை உலகில் இமாலய சாதனை புரிந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என அவரது சாதகத்தில் உள்ள கிரகநிலைகளை இப்பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.

கமல்ஹாசன் சாதக கிரகநிலையும் பலன்களும்.

சிம்ம லக்கனம்,மீன ராசி


ரேவதி நட்சத்திரம்


லக்கனத்திலிருந்து
3-ல் சூரியன்,புதன்,சனி
4)ல் சுக்கிரன்
5-ல் ராகு
6-ல் செவ்வாய்
8-ல் சந்திரன்
11-ல் கேது
12-  ல் குரு


முதலில் மீன ராசியை லக்கனமாக கொண்டு பலன்களைப் பார்ப்போம்.

ராசி அடிப்படையில்
++++++++++++++++++++++


உடல் தோற்றம்

   இவரது  சாதகத்தில்     குருவும் ,சந்திரனும் பரிமாறி கொண்டது மற்றும் குரு பகவான் கடகத்திலும்,சந்திரன் பகவான் மீனத்திலும  (அதாவது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் அமர்ந்து )இருந்து குருவால் சந்திரன் பார்க்கபட்டது #குருசந்திரயோகம் ஆகும்.இந்த அமைப்பால்தான் நல்ல உடல் அமைப்பு கொண்டும், அழகான தோற்றத்தைக்கொண்டும்  சினிமா உலகில் ஜொலிக்க இயன்றது.

தனயோகம்

மேலும் தனம் மற்றும் பாக்கிய யோகத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் லாபஸ்தானத்தில் உச்சம்பெற்று லக்கனாதிபதியும் ,ஜீவனாதிபதியான குருபகவானின் சமசப்தம பார்வையை பெற்றது .

மேலும் ஒன்றுக்கொன்று கேந்திரமாக அமைந்தது அதாவது தன-பாக்கியாதிபதி சம்பந்தம் செல்வ சீமான் என்பதையும் தான்மேற்கொண்ட துறையில் அதிக செல்வத்தை ஈட்டக்கூடிய நிலையையும் தந்தது.

மக்கள் செல்வாக்கு,ரசிகர்களின் ஆதரவு;-

மேலும் தர்மாதிபதி மற்றும் கர்மாதிபதி (9,10) யான செவ்வாயும்,குருவும் உச்சம்பெற்று சமசப்தமாக  பார்வை பெற்றது #தர்மகர்மாதிபதியோகம் தந்து மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு நிலையை தந்தது.

கோடீஸ்வரயோகம்

ஏழு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் புதனும் (வித்தைக்காரன்),சனியும் லக்கனாதிபதிக்கு கேந்திரந்தில் அமர்ந்த அமைந்த அமைப்பு சகல பாக்கியங்களையும் பெறும் கோடீஸ்வரயோகமாகும்.

திரையுலகில் சிறந்த நடிகனாக மற்றும் இயக்குனராக சாதனை புரிய;-
ஒருவர் சினிமாவில் சாதிக்க கலைக்காரகன் சுக்கிர பகவானின் ஆதரவு தேவை.

இவரது சாதகத்தில் சுக்கிரபகவான் லக்கன மற்றும் ராசிக்கு மூன்றாம் திரிகோணமான ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து அந்த வீட்டு அதிபதி தன -பாக்கியாதிபதியாகி லாபத்தில் உச்சம் பெற்று அமர்ந்து, உச்சம் பெற்ற லக்கன மற்றும் ஜீவன அதிபதியான  திரிகோணஸ்தானத்தில் அமர்ந்த குருவால் பார்க்கப்பட்டு குருவுக்கு கேந்திரத்தில் அமர்ந்து ,
அந்த வீட்டு அதிபதியான சனி பகவானும் உச்சம்பெற்று வித்தைக்காரன் புதனுடன் குருவ்க்கு கேந்திரத்தில் அமர்ந்து டிரிபிள் டெபாஸிட்டர் முறையில் பலம்பெற்றதால் சினிமா உலகில் மகத்தான சாதனையும் ,சிறந்த இயக்குனராக பல தேசியவிருதுகளையும் பெற முடிந்தது.நடிப்பில் தனக்கென ஒரு முத்திரையை பதிக்க முடிந்தது.

எழுத்து துறையில் சாதிக்க;-

சனி உச்சம் பெற்று சூரியன் நீசம் பெற்றதால் நீசபங்க ராஜயோகம் பெற்று சூரியன் பலன் பெற்று புதனுடன் #புதயாதித்யயோகமாகும்.இது ஒருவித சரஸ்வதியோகமாகும்.எனவே புதன் பலம் பெற்றதால்தான் எழுத்தாளராகவும்,ஒரு நல்ல கதாசிரியராகவும்,நல்ல வசனகந்த்தராகவும் மற்றும் பாடலாசிரியராகவும் திகழ முடிந்தது.

சிறந்த இசை அனுபவம் பெற:-

இசைக்குரிய சந்திரனும்,சுக்கிரனும் பலம்பெற்றதால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் மற்றும் பாடாகராகவும் திகழ முடிந்தது.

நடன கலைஞராக திகழ;-

கலைக்காரகன் சுக்கிரன் மற்றும் புதனும் பலம்பெற்றதால் பாரதநாட்டியம் முதலான நடன கலைஞராகவும் திகழ முடிந்தது.

சிறப்பு அமைப்புகள்(இராஜயோகம்):-

இவரது சாதகத்தில் செவ்வாய்,சனி மற்றும் குரு ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவதும்.
குரு,சுக்கிரன்,சந்திரன் ஒன்றுக்கொன்று திரிகோணம் பெறுவதும் சிறந்த இராஜயோகமாகும்.

அரசியல் ஈடுபாடு

பத்தில் ராகு பகவான் இருப்பது பொதுவாழ்வில் ஈடுபட்டு தன்னை அர்பணிக்கும் நிலை ஆகும்.

ஆஸ்கார் கனவு;-

சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி குரு லக்கனத்திற்கு திரிகோணம் ஆகும்.குரு நின்ற ராசிக்கதிபதி சந்திரன் குருவுக்கு திரிகோணமாகும்.சுக்கிரன் ராசிக்கதிபதி செவ்வாய் லக்கனத்திற்கு லாபத்தில் உச்சம்,ராகு நின்ற ராசிக்கதிபதி குரு லக்னத்திற்கு திரிகோணத்தில் உச்சம் .எனவே அகில உலக ஆஸ்கார் சாதனை புரியும் யோகம் உள்ளது.

இதுவரை ராசியையே லக்கனமாக கொண்டு பலன்களை பார்த்தோம்.இனி சிம்ம லக்கன அடிப்படையில் பலன்களை காண்போம்.

லக்கன அடிப்படையில்

++++++++++++++++(+++


இவரது சாதகத்தில் லக்கனம் சிம்மமாக இருப்பதாலும் ,போராட்ட குணத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் உச்சம்பெற்று இருப்பதாலும் போராட்ட குணம் மிக்கவர்.படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தன்னை வருத்தி நடிக்க கூடியவர்.

திருமண வாழ்க்கை

சிம்ம லக்கனமாக இருந்து லக்கன அதிபதி சூரியனுக்கு ஏழாம் அதிபதி சனி  (களஸ்திரஸ்தானாதிபதி) பகை கிரகமாகவும் இருந்து  மறைவு ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து நீசபங்கம் பெற்று பலம் பெற்று  இவர்களுடன் ராசிக்கு பாதகாதிபதியான புதனும்  சேர்ந்திருந்து சுபர் பார்வையின்றி இருந்ததால் இவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

புத்திரபாக்கியம்

லக்கனத்திற்கு ஐந்தாமிடமான புத்திரஸ்தானத்தில் கரும்பாம்பு ராகு அமர்ந்திருப்பது தோஷம் எனினும் அந்த வீட்டுக்குடையவனும் ,புத்திரகாரகனுமான குரு பகவான் உச்சம்பெற்று ராசிக்கு ஐந்தாமிடத்தில் அமர்ந்ததால் காரக பாவ நாஸ்தி என்ற வகையில் இரண்டு பெண் குழந்தைகளை தந்து உச்சம் பெற்ற குருவால் புத்திரமும் சினிமாவில் புகழ்பெற வைத்தது.
இதேபோல கிரக அமைப்புகள் இவரது சாதகத்தில் இருந்ததால்தான் திரையுலகில் சாம்பவனாகவும்,சக்கரவர்தியாகவூம் திகழ முடிகிறது.

இதேபோல பல்வேறு கோணங்களில் ஒருவர் சாதகத்தை இறைவன் அருளின் துணையோடு ஆராய்சி செய்து பார்க்கவேண்டும்.

தொடரும்.....
(இதேபோல தங்களது சாதகங்களையும் கோளாராய்சி செய்து பலனை போன் வழியாகவே பெறலாம்.தாங்களால் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு ஆராய்ந்து விடையளிக்கப்படும்.

இதேபோல திருமணபொருத்தமும்,பிறந்த சாதகம் எழுதுதல் போன்ற விவரங்களுக்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடத்தை மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டண விபரம் அதில் தெரிவிக்கப்படும்)

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.


What's up no
97 151 89 647
செல்; 740 257 08 99
செல்; 97 151 89 647. 

Friday 2 June 2017

"செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும்-( 1 )

செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும் - 

(1)     
                        :       
                      
கிரகங்கள் படுத்தும் பாடு-( 67 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

இந்த லொளகீக உலகில் வன்முறைகளும்,யுத்தங்களும் இரண்டே காரணங்களினால்தான் இருக்கும்.இதில்  ஒன்று
அதிகாரம் செய்யும் ஆசை  இதனுள் பொன்,பொருள் மற்றும் சொத்து சேர்த்தல் அடங்கும்.

மற்றொன்று காமத்தால் வரும் ஆசை.(பெண்ணாசை)
"வேதம் எல்லாம் காதலை மறுப்பதில்லையே-அவை வேதம் செய்யும் முனிவரையும் விடுவதில்லையே"
சொல்லி தோன்றுமோ மன்மதக்கலை அள்ளிப்பருக வேண்டும்.

எனவே ஒருவருக்கு காம எண்ணத்தை தூண்டி வேடிக்கை பார்ப்பதில் மங்களகாரகன் செவ்வாய் பகவானுக்கும்,களஸ்திரகாரகன் சுக்கிரபகவானுக்கும் அதிக பங்கு உண்டு.

இந்த சுக்கிரனும்,செவ்வாய்யும் முப்பது பாகைக்குள் ஒரு ராசி கூடியிருந்தாலும் அல்லது இருவரும் 180 பாகைக்குள் சம சப்தமாக பார்த்துக்கொண்டாலோ ஒரு ஆடவரோ /பெண்டீரோ காம எண்ணம் மிகுந்து பல மலரில் தேன் சுவைக்கும் வண்டாவர்.சுபர் பார்க்க பலன் மாறுபடலாம்.

சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஏழாம் பாவகத்தில் இருப்பின் கிழவனுக்கு மாலையிட்டு மதனத்தால் பல பேரை கூடி தனது ஸ்தானம் குலுங்க நடந்து வருவாள்.யாருக்கோ பிள்ளையை பெற்று தொட்டில் இட்டு தாலாட்டுவாள் என புலிப்பாணி சித்தர் தனது புலிப்பாணி சோதிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

இதேபோல சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்து சுபர்   பார்வையற்று    மனதுக்காரகன் சந்திரனுடன் ராகு,கேது தொடர்போ அல்லது நீசம்,மறைவு பெற்றிருந்தாலும் காம எண்ணம் மிகுந்து காணப்படுவர்.

பொதுவாக மங்களக்காரகன் செவ்வாய்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் சனி அல்லது ராகு அல்லது சனி,ராகு சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ காம எண்ணத்தை உருவாக்கும்.

இதுபோன்ற பல காரணங்களை படித்திருந்தாலும் இவை எந்த அளவுக்கு உண்மையாக உள்ளன என்பதை என்னிடம் சாதக ஆய்வுக்கு வந்த சாதகத்தை பார்த்து அதை ஊர்ஜிதப்படுத்தியபோது எந்த அளவுக்கு நமது சித்தர்களின் தனது ஞானத்தால் அனைத்து ஆசையும் துறந்த அவர்களால் எவ்வாறு காம எண்ணத்தை உருவாக்கும் கிரகநிலைகளை கண்டறிய முடிந்தது என வியந்ததுண்டு.

இப்பொழுது காம மிகுதியால் தவறு செய்த ஒரு நபரின் சாதகத்தை இங்கே பகிர்கிறேன்.

மீன லக்கனம்
துலாம் ராசி

2-ல் மாந்தி
4-ல் குரு(வக்கிரம்)
5-ல் கேது
10-ல் செவ்,சனி
11-ல் புதன்,சுக்,ராகு
12-ல் சூரியன்

இந்த நபரின் சாதகத்தில் ஆய்வுக்குரிய விஷயங்கள்

1) மனதுக்காரகன் சந்திரன் எட்டாமிடத்தில் மறைவு.தேவையில்லாத மனகுழப்பங்கள்

2)களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் ,கற்புஸ்தானம் எனப்படும் நான்காமிட அதிபதி புதனுடனும் ராகு,கேது தொடர்பு.

3)மங்களகாரகன் செவ்வாயுடன் சனி சேர்க்கை பெற்று அந்த ஸ்தான அதிபதி கற்பு ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று வக்கிர பார்வை.

4)நபரின் சாதகத்தின் காம கற்பனை உருவாக்கும் இடமான ஐந்தாம் இடமும் கெட்டிருக்கிறது.ஐந்தில் கேது ஐந்துக்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிட அதிபதி செவ்வாய் ஜென்ம விரோதியான சனியுடன் சேர்க்கை பெற்று தவறான எண்ணத்தை தூண்டும்.மேலும் புத்திரதோஷத்தையும் உருவாக்கியுள்ளது.புத்திரகாரகன் குருவும் வக்கிரம் பெற்று  உள்ளது.எனவே புத்திரபாக்கியம் அமையாது.அப்படியே பிறந்தாலும் தனது கணவனுக்கு பிறந்த பிள்ளையாக அமையாது.

5)இவரது சாதகத்தில் திருமணத்திற்கு உகந்த இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடமும்களஸ்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மணவாழ்வு சிறக்காது.

6) குடும்பாதியான செவ்வாய் உடன் விரோதியான சனி சேர்க்கை,ஏழாம் அதிபதியான புதன் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரன் இவர்களோடு ராகு,கேது தொடர்பு.இவருக்கு திருமணவாழ்வு சிறக்காது.இவரது சாதகமே தனது துணைவரையும் பாதிக்கவைக்கும்.

7)நான்காமிடம் எனப்படும் கற்புஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற குரு,நான்காமாதி சந்திரன் எட்டில் மறைவு.தாய் உடனான உறவும் ,கற்புநிலையும் பாதிக்கப்படும்.

8) தந்தைகாரகன் சூரியன் பணிரெண்டில் மறைவு மற்றும் தந்தை ஸ்தானதிபதி செவ்வாய் அதன் எதிரி சனியோட சேர்க்கை.இவரது தந்தையும் இறந்துவிட்டார்.

மேற்கண்ட நபரின் வாழ்வில் விதி எவ்வாறு விளையாடி உள்ளது.இவருக்கு சாதக கிரக பலனால் தாய்,தந்தை மற்றும் வாழ்க்கை துணைவர் மேற்கண்ட இம்மூவராலும் எவ்வித உதவியின்றி செய்து இவளை விபச்சார நிலைக்கு தள்ளியது.

மேற்கண்ட அமைப்பால் அந்த நபரின் வாழ்வானது மாறிப்போனது.
எல்லாம் விதிப்பயன் .
"ஆட்டுபவர் ஆட்டுவித்தால்
ஆடாதாரோ கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதார் யார் கண்ணா ?"
---------தொடரும்

(தங்களது சாதகங்களில் உள்ள பலனை தெளிவாக ஆராய்ந்து போன் வழியாக எங்கு  இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.மேலும் விபரத்திற்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 என்ற எண்ணிற்கு மெஸேஸ் செய்யவும்)

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆலோசகர்.
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ சென்டர்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் :97 151 89 647

செல்: 740 257 89 647.

Email;
masterastroravi@gmail.com

My website address.Click hear

AstroRavichandransevvai.blogspot.com
**********************************
Online Astro consult,conduct my cell and whatsup or Email or messenger

"செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும் "- ( 2 )

செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும் -(2)


(கிரகங்கள் படுத்தும்பாடு -(68)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை'

"காமம் மட்டும் போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும்!
ஒரு காதல் மட்டும் போதும் என்றால் ஒரு செல்ல பிராணியை வளர்த்தால் போதும் !
எங்கு காதலும்,காமமும் சம அளவில் சந்திக்கிறதோ அதுதான்
உண்மையான வாழ்வு !"


கவிஞர் வைரமுத்துவின் கவிதை புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.

உண்ணுதல்,உறங்குதல் போன்று காமமும் ஒருவகை உணர்வு.வாழ்வின் சுழற்சியே காமத்தால் அடுத்த தலைமுறைகளுக்கு அழைத்து செல்கிறது.

உனது காமத்தை முறையான சமூக அங்கீகாரத்துடன் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய கொள்கையோடு வெளிப்படுத்த சமூக அங்கீகாரம் கிடைக்கிறது.

ஒரு சிலர் இந்த சமூக வரம்பை உடைத்தெறிய அவனது சாதகத்தில் உள்ள கிரக அமைப்பு ஒரு காரணமாகிறது.

ஒருவனது செக்ஸ் வீரியத்தன்மையை அவனது மூன்றாம் வீட்டிலிருந்து அறியப்படுகிறது.சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாமைக்கு காரணம் அவனது மூன்றாமிடமும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டிருப்பது ஒரு காரணமாகிறது.

சிலரது அந்தரங்க வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள நான்காமிடம் முக்கியமானதாகும்.ஒருவரது சாதகத்தில் நான்காமிடம் மற்றும் அதிபதிகளை ஆராய்சி செய்து பார்த்தாலே அவரது கற்புநிலை பற்றி தெளிவாக சோதிடரால் ஆராய்ந்துவிடலாம்.

நான்காமிடத்தில் சனி+செவ்வாய்,செவ்வாய்+சுக்கிரன் ,செவ்வாய்+ராகு ,சுக்கிரன்+ராகு இதுபோன்ற சேர்க்கைகள் ஆகாது எனினும் இதுபோன்று நான்காமிடத்தில் இணைந்துள்ளதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை தவறாக எடைபோடக்கூடாது.நான்காமாதிபதி சுபராக இருக்கும்பட்சத்திலோ அல்லது சுபர் பார்வைபெறின் பலன் மாறுபடலாம்.
இந்த நான்காமிடத்தை காமசுகம் முறையாக பெறுவானா? அல்லது முறைதவறிய நிலையா?என்பதை அறியலாம்.

பொதுவாக சாதக கட்டத்தில் உள்ள நான்காமிடத்தைக் கொண்டு காம சுகத்தை பெறக்கூடிய யோகத்தையும் மற்றும் அவனது அந்தரங்க வாழ்வினையும் சோதிடரால் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவரது சிற்றின்பம்,காமம் மற்றும் காதல் போன்ற கற்பனை உணர்வை வளர்க்க கூடிய இடம் அவனது சாதக கட்டத்தில் ஐந்தாமிடமே ஆகும்.

ஒருவன் அழகுணர்ச்சியோடு காதல் கவிதைகள் ,கதைகள் மற்றும் பாடல்கள் இயற்றும் கவிஞராவதற்கும்,
"காமம் ததும்பும் கதைகள்,கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதும் கவிஞனாவதற்கும் ,
ஒரு சிலர் உடல் கவர்ச்சியால் காதலில் விழுவதற்கும்,
காமமிகுதியால் ஒரு பெண்ஆணிற்கோ /ஆண் பெண்ணிற்கோ அடிமையாகி இழப்பதற்கும்,
மனைவி சொல்லோ மந்திரம் என பெண்டாட்டிதாசர்களாகி உறவுகளையும்,பெற்றோர்களையும் மதிக்காமல் போவதற்கும்
இந்த ஐந்தாமிட கிரகநிலைகளே காரணமாகும்.

ஒருவனது கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையே உள்ள தாம்பத்யு உறவுநிலையும்,தொடுவதால் உண்டாகும் ஸ்பரிச நிலையும்,ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொள்ளும் நிலையும் அவரது சாதககட்டத்தில் ஏழாமிடத்தை கொண்டு அறியலாம்.

ஒருவருக்கு படுக்கை சுகத்தை பற்றி அறிந்து கொள்ள பணிரெண்டாமிடத்தை கொண்டும் அறியலாம்.
எனவே ஒருவரது செக்ஸ் வாழ்க்கையைப்பற்றி அறிய நமது சித்தர்களால் உருவாக்கபட்ட கட்டங்கள் முன்றாமிடம்,நான்காமிடம்,ஐந்தாமிடம்,ஏழாமிடம் மற்றும் பணிரெண்டாமிடம் போன்றவை ஆகும்.

இதேபோல காமநிலைகள் பற்றி அறிய கிரகங்களில் மங்களகாரகன் செவ்வாயும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் ஆகும்.

ஒருவனது அலித்தன்மையைப்பற்றி அறிய புதன் பகவான் முக்கியம் ஆகும்.புதனும்,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொண்டால் சாதகருக்கு அலிதன்மை உண்டு  என படித்திருக்கிறேன்..

ஆனால் இதில் விதிவிலக்கு உண்டு.நான் பார்த்த பல சாதகங்களில் சனியும்,புதனும் சமசப்தாமாக பார்த்துக்கொண்டுள்ள பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

புதன்,சனி சமசப்தம பார்வை அலித்தன்மையை ஏற்படுத்தும் உண்மை என்றாலும் ஏனைய காமஸ்தானங்களும்,காமகிரகங்களும் பலம்பெற்றிருப்பதால் இந்த சமசப்தம பார்வை பலனளிக்கவில்லை.இருநிலைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சாதகர் அலியாகிவிடுவார்.

.எனவே பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் இதுபோன்ற நிலைகளை நல்ல சோதிட ஞானம்
நிறைந்த சோதிடர்களை கொண்டு விவாக பொருத்தம் பார்க்கும்போது அறிந்துகொண்டு தம்பதிகளை இணைக்கவேண்டும்.


இந்த செக்ஸ்நிலைகளை பற்றி அறிய #விவாகதசவதப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்,வசியப்பொருத்தம் மற்றும் பால்பொருத்தம் என மூவித பொருத்தநிலைகள் உள்ளது.
இதுபோன்ற பலவிஷயங்களை நமது ஞானிகள் சூட்சும வடிவில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.இவைகளை முறையான பயபக்தியோடு படிக்க படிக்க தெய்வகடாட்ஷம் இருப்பின் புலப்படும்.
குரு வாழ்க !குருவே துணை!!

(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து சோதிட பலன்கள் மற்றும் பொருத்தம் போன்ற விவரங்களை வீட்டிலிருந்தபடியே போன் வழியாக பலன்பெறலாம்.கட்டணம் உண்டு.விவரங்களுக்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு "பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்.
புதுக்கோட்டை மாவட்டம்


செல்: 97 151 89 647
            740 257 08 99
வாட்ஸ் அப்


97 151 89 647


Email id

masterastroravi@gmail.com


My website.

AstroRavichandransevvai.blogspot.com


@@@@@22@@2@22222@@@@@@@@@@