Monday 20 September 2021

மனிதனை வழிநடத்தி செல்லும் ஜோதிடம்

 மனிதனை வழி நடத்தி செல்லும் ஜோதிடம்

                    


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
   ஒரு சிலருக்கு அறிவும், திறமையும் இருந்தும் அடிப்படையான செலவுகளுக்கே கஷ்டப்படக் கூடிய நிலையில் இருக்க,
 ஒரு சிலர் சரியான அடிப்படையான திறமையும் கல்வியும் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க கூடிய நிலையை அடைந்து விடுவதற்கான காரணத்தை ஆய்ந்து நோக்க அவர்கள் ஜெனன காலத்தில் வான வீதியில் சஞ்சாரம் செய்யும் கிரகநிலைகளும் மற்றும் உகந்த தசா அமைப்புக்கள் அவர்கள் வாழ்வில் சரியான வயதில் வந்து விடுவதுமே காரணமாக அமைகிறது.
  பெரும்பாலான நபர்கள் வாழ்வில் செட்டிலாக  ஒரு சில லட்சங்களை சம்பாதித்தாலே போதும் என்ற நிலையில் போராடி அதை அடைய முடியாத நிலையில் இருக்க,
 ஒரு சிலர் மட்டும் சில மாதங்களிலேயே பல கோடிகளை தன் வாழ்வில் சம்பாதித்து அதற்கு அரசிடம் கணக்கு காட்டவே  திணறும் நிலையில் பொருளாதார நிலை அடைவதற்கான காரணமும் அவர்களுடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளும் அந்த தசா அமைப்புகளுமே காரணமாக அமைகிறது.
  ஒருவர் தன் வாழ்வில் மிகுதியாக தனம் ஈட்ட உகந்த ஸ்தானங்களும் கிரக நிலைகளும் என்ன என்று ஆராய்ந்து இந்த கட்டுரையில் ஆராய்ந்து பார்ப்போம்.
  ஒருவர் மிகுதியாக தனம் ஈட்ட வேண்டும் என்றால் அவர்களது ஜாதகத்தில் முதலில் லக்கினாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும் .
பிறகு தன ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடம்  மற்றும் அதன் அதிபதி, பாக்கியஸ்தானம் என்று செல்லக்கூடிய ஒன்பதாம் இடம்  மற்றும் அதன் அதிபதி மற்றும் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பதினோராம் இடம் மற்றும் அதன் அதிபதி இவை தவிர மேலும் தனகாரகன் குரு பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி,தனாதிபதி ,பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி பலமடைந்து தங்களுக்குள் பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை நிலை பெற்று மேற்கூறிய இவைகளில் ஏதாவது ஒரு தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் பாக்கியவான்கள் ஆகும்.
  தன ,பாக்கிய மற்றும் லாபதிபதியின் சேர்க்கையானது பாவ கிரக சேர்க்கையாக இருப்பின் அக்கிரக சேர்க்கையானது ஏதாவது ஒரு வகையில் சுபத்துவம அடைந்திருக்க வேண்டும்.
 உதாரணமாக மேஷ லக்கினத்திற்கு தனாதிபதி சுக்கிரன், பாக்கியாதிபதி குரு, மற்றும் லாபாதிபதி சனி பகவான் ஆகும்.இரண்டாம் இடத்திலோ அல்லது 9-ஆம் இடத்திலோ அல்லது பதினோராம் இடத்திலோ சுக்கிரன் சனி இணைந்து இருக்கும் பொழுது அதை ஏதோ ஓர் இடத்தில் இருந்த குருபகவான் பார்க்கும் பொழுதுதான் நல்ல பலனைத் தரும்.
x

சாதக. பலனை கணிக்கும் போது கவனிக்க வேண்டியவை

 சாதக பலனை கணிக்கும் போது கவனிக்க வேண்டியவை 


                   


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவரது ஜாதகத்தில் சாதக பலனை கணிக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய சில விதிமுறைகளை இந்த சோதிட பதிவில் விரிவாகப் பார்ப்போம்.


   ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றின் நிலையை கவனிக்கப்பட வேண்டும்.


   ஜாதக கட்டத்தில் உள்ள ஒன்பது கிரகங்கள் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது என்பதை  கவனிக்கப்பட வேண்டும். 


   ஒரு கிரகம் ஒரு ராசியில் எத்தனையாவது பாகையில் நிற்கிறது என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.


  ஒரு கிரகத்தின் ஸ்தான வலிமை, பார்வை பலம், சேர்க்கை நிலை போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.


  கிரகம் நின்ற வீட்டின் அதிபதி ராசி கட்டத்தில் எங்கு உள்ளார் என்பதையும் அவரது ஸ்தான வலிமை, பார்வை பலம் மற்றும் சேர்க்கை பலம் லக்கனாதிபதிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை பற்றி கவனிக்கப்பட வேண்டும்.


  ஒரு ராசி கட்டத்தில் இடம்பெற்ற கிரகங்கள் தனக்குள்ளும் மற்றும் அந்த ராசிக்கும் இடையையான உறவு நிலை (நட்பு சமம் மற்றும் பகை) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.


  விதிகளுக்குள் விதிவிலக்குகள் இருப்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் ஜோதிட பலன்களை கணித்து பலனளிக்க பழக வேண்டும். அதாவது கிரகங்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அதிக பலன் தரும் என்றும்,

 உச்சம், ஆட்சி, நட்பு போன்ற நிலைகளில் இருந்தால் அது வலிமை பெற்ற கிரகமாக கருதுவதும் விதியாக இருந்தாலும், விதிவிலக்காக அந்த கிரகங்களை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன்,  தனித்த புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தொடர்பை பெரும்பொழுது எதிர்பார்த்ததற்கு மாறாக அக்கிரகம் வலிமை பெற்று அதன் தசை காலங்களில் நல்ல பலனைத் தரும் என்பதை உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.


  ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்தாலும் அக்கிரகம் வேறு சில வகையில் வர்கோத்தமம் அல்லது நீசபங்கம் போன்ற வகையில் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுள்ளதா? என்பதையும் உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.


  ராசியில் உள்ள கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ?

 அசுப வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.


 சூரியனுடன் நெருங்கி இணைந்திருக்கும்  கிரகங்கள் அஸ்தமனம் பெற்றுள்ளதா? என்றும் மற்றும்" வக்கிர நிலை" போன்றவற்றையும் ஆராய்ந்து பலன் அளிக்க வேண்டும்.


   வக்கிரம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான பலனைத்தரும் என்பதையும், ஒரு கிரகம் உச்சம் பெற்று வக்கிரம் பெற்றால் அவை நீசத்திற்கு நிகரான பலனையும், நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் உச்சத்துக்கு நிகரான பலனையும் தரும் என்பதையும் உணர்ந்து பலன் அளிக்கப்பட வேண்டும்.


 பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பலத்துக்கு நிகரான பலத்தைப் பெற்று அதன் தசை காலங்களில் முழு பலம் பெற்ற கிரகமாக திகழ்கிறது.


 ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று பலம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.


  உச்சம், ஆட்சி மற்றும் நட்பு பெற்ற கிரகங்களும் மற்றும் கேந்திர கோணங்களில் உள்ள கிரகங்கள் மட்டுமே நன்மையை தந்துவிடும் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது .

சில நேரங்களில் மறைவிடங்களில் பலமிழந்த கிரகங்கள் கூட இயற்கை சுப கிரக தொடர்பால் சுபத்துவ நிலையைப் பெற்று அதன் தசா காலங்களில் நல்ல பலனைத் தந்து விடும் என்பதையும் உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.


   ஒரு கிரகம் என்னதான் வலிமை பெற்றுத் திகழ்ந்தாலும் இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய் ,ராகு, கேது தொடர்பினை பெற்ற கிரகங்கள் வலிமை குன்றிய கிரகங்களாகவே கருதப்படுகிறது. இவற்றை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பை பெரும் பொழுது மட்டுமே மறுபடியும் இழந்த பலனை பெறும் என்பதையும் உணர்ந்து பலன் அளிக்க வேண்டும்.


நன்றி!


வாட்ஸ் அப்

   9715189647

     செல்

  9715189647

   7402570899


My website.Click here


www.astroravichandransevvai.in


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                   



  அன்புடன்

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர்,   கரம்பகுடி புதுக்கோட்டை மாவட்டம்.

அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்புகள்

 அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்பு எது?


                        


   செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    அதிர்ஷ்டம் என்பது அவரவர் மன நிலையினை பொருத்தது ஆகும். ஆசைக்கு அளவு கிடையாது.


 நிறைவேறும் வரை அதை நினைத்து மனது ஏங்கும் அது நம் கைக்கு கிடைத்தவுடன் அவை நமக்கு சாதாரணமாக போய் விடும்.பிறகு மனமானது  அடுத்த ஒன்றின் தேவையின் மீது எண்ணம் தோன்றி  மனம் அதை அடைய  ஏங்கும்.


  மனதளவில் நிறைவு இல்லாதவர்களுக்கு மலை போல் செல்வம் குவிந்தாலும் அவர்களது மனமானது என்றும் ஏழையாகவே இருக்கும். எனவே சொத்துக்களுக்கும், செல்வ வளத்திற்கும் போதும் என்ற அளவுகோல் கிடையாது.


  தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். மற்ற எந்த  ஒன்றை பிறர் கேட்டு தானமாக கொடுத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கேட்டு இருக்கலாமோ ! என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அன்னத்தை தானம் செய்யும்போது மட்டும்தான் வயிறு நிரம்பி முழு உவகையோடு போதும் என்ற முழு மனது வரும்.


  எல்லோருக்கும் தனது ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பு இருக்கிறதா?  என்பதையே முதலில் சோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் தோன்றும். அவ்வாறு இருப்பின் அது எந்த வயதில் வருகிறது? என்பதை கேட்பதில் மிக ஆர்வமாக இருப்போம்.


  ஒருவர் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பே இருந்தாலும் அந்த அமைப்பை தரக்கூடிய யோக தசைகள் உரிய காலத்தில் அனுபவிக்க வேண்டிய நேரத்தில் பெறக்கூடிய அமைப்பை பெற்றவர்கள்தான் பாக்கியசாலிகள் ஆவார்.


   ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி மூலத்திரிகோணம் போன்ற வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்றால்தான் யோகத்தை தரும் என்று நினைப்பது தவறு. சில நேரங்களில் அவ்வாறு நிற்கக்கூடிய கிரகங்களின் தசை அவரது வாழ்நாளில் வராமல் கூட போய் விடலாம்.


  ஒரு கிரகம் ஸ்தான வலுவிழந்த நிலையில் நின்றாலும் மற்றும் அவர்களோடு பாவர்கள் சேர்ந்தே நின்றாலும் மறைமுக வழியில் சுபத்துவம் பெற்ற நிலையில் அந்த கிரகம் அந்த ஜாதகரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விடுவது உண்டு.


   உதாரணமாக ரிஷப ராசிக்கு யோகரான சனிபகவான் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் அதாவது மறைவிடத்தில் நின்று நீசம் பெற்று தன் ஸ்தான பலத்தையும் இழந்து நிற்கும் சனி பகவான் தன் தசையில் மிகுந்த யோகத்தை சாதகருக்கு தந்துவிடுவதுமுண்டு.


    அல்லது

  ரிஷப லக்னத்திற்கு யோகரான சனி பகவான் தன் வீட்டிற்கு ஆறில் மறைந்து உச்சம் பெற்ற நிலையில் அவருக்கு மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்து விடுவது உண்டு.


   தனுசு லக்கினத்திற்கு தர்ம-கர்மாதிபதி யோகத்தினை தரக்கூடிய சூரியன் பகவானும், புதன்பகவானும் தத்தம் வீடுகளில்  உச்சம், மூல திரிகோணம், ஆட்சி போன்ற நிலைகளில் ஸ்தான வலுப்பெற்று நிற்பதை விட  தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பது மிகுந்த யோக பலனை தருகிறது .


    ஒரு சில ராசிகளுக்கு வலுப்பெற்ற கிரக ஸ்தான அமைப்பைப் பெற்ற இயற்கை சுப கிரகங்கள் அதன் தசை காலங்களில் மிகுந்த வேதனையை சாதகருக்கு தந்துவிடும்.


     மீன லக்கினத்திற்கு உச்சம்பெற்று லக்னத்தில் இருக்கும் இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் தனது தசை காலங்களில் மீன லக்னத்திற்கு மிகுந்த யோக பலனை தந்து விடுவதில்லை.


  மேஷ லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் உச்சம், மூலத்திரிகோனம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் புதன் பகவானை விட , பன்னிரண்டாம் இடத்தில் நீசம் பெற்று அந்த இடத்தில்  நிற்கும்  உச்சம் பெற்ற சுக்கிரனால் நீசபங்கம் பெற்று மறைமுகமாக வலுப்பெறும் புதன் பகவான் மிகுந்த யோகத்தை அதன் தசைகளில் சாதகருக்கு தந்துவிடும்.


      மீன லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு பகவான் அதன் தசை காலங்களில் அவரது வாழ்க்கைத் துணைக்கு பல இன்னல்களை தந்து விடுவது உண்டு.


   உபய லக்னத்திற்கு இயற்கை சுப கிரகங்களான குரு பகவானும் , புதன் பகவானும் கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் யோக பலனை தருவதில்லை.


     ஆதலால் இயற்கை சுப கிரகம் யோகத்தை தரும் என்றும், இயற்கைப் பாவக் கிரகங்கள் யோகத்தைத் தராது என்றும் நம்மால் தீர்மானித்து விட முடியாது.


  இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் தனுசு மீன லக்னத்திற்கு யோகத்தை தருவதில்லை. இயற்கை சுப கிரகமான புதன் பகவான் மேஷ, விருச்சிக லக்னத்திற்கு யோகத்தை தருவதில்லை. இயற்கை சுப கிரகமான குரு பகவான் ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு யோகத்தைத் தருவதில்லை.


   மாறாக இயற்கைப் பாபக கிரகமான சனிபகவான் ரிஷப மற்றும் துலாம்  ராசிக்காரர்களுக்கு யோகத்தினை தருகிறது. இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் பகவான் தனுசு மீன லக்னத்திற்கு யோகத்தை தருகிறது.


  ஒருவர் தொடர்ந்து யோகத்தை அனுபவிக்க வேண்டுமெனில் 

" எவர் ஒருவருக்கு குரு பார்த்த தசை தொடர்ந்து நடப்பில் வருகிறதோ அல்லது சந்திர அதியோகத்தில்   பூரன சந்திரனுக்கு 6, 7, 8 -ல் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன், சுக்கிரன் நின்று அதன் தசை தொடர்ந்து வருகின்றதோ , தர்மகர்மாதிபதி யோகம் பெற்று அதாவது 

9 ,10- க்குரியவர்கள்  சேர்ந்தோ பார்த்து அல்லது பரிவர்த்தனை பெற்று நின்று அதன் தசைகள் அடுத்தடுத்து வரும் காலங்களிலும் யோக பலனை அளிக்கக் கூடிய அமைப்பாகும்.


 எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி முழுவதும் வலுப்பெற்று தன ,பாக்கியம் மற்றும் லாப அதிபதிகள் நல்ல சுபத்துவம் பெற்று ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை மூலம் தொடர்பு பெற்று

 1,2,9, 11-ஆம் இடங்களில் பார்வை, சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை போன்ற நிலைகளில் நிற்கும் இவர்களை தன காரகனான குரு பகவான் எவ்வித பங்கமும் இல்லாமல் தொடர்பு கொள்ளும்   அமைப்பினை பெற்று  அதன் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பையும் பெற்றவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் தரும் யோகத்தைப் பெற்றவர்கள் ஆவார் .


  ஒருவர் ஜாதகத்தில் திரிகோன அதிபதிகளான 1,5,9 - க்கு உடையவர்கள் எவ்வித நிலையிலும் பங்கப்படாத அமைப்பை பெற்று அதன் தசை உரிய காலத்தில் தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்பை பெற்றவர் ஆவார்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647

  செல்

 9715189647

  7402570899


                       



அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நவாம்சம்-சில. உண்மைகள்

 நவாம்சம்- சில உண்மைகள்.


                  


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    முப்பது பாகை கொண்ட ஒரு ராசியை 9 சம பாகமாக பிரிக்க கிடைப்பது "நவாம்சம்" ஆகும். நவம் எனில் ஒன்பது  ஆகும்.


  "ராசி"  என்பது கோள்கள் இடம் பெறும் உண்மையான தோற்றம் ஆகும் . "அம்சம்"என்பது அந்த கிரகங்களின் நிழல் தோற்றமாகும்.


    ராசியில் உள்ள கிரகங்களை போல நவாம்சத்தில் உள்ள கிரகங்களுக்கு ஸ்தான வலிமை, திக்பலம்  மற்றும் கிரக பார்வை போன்றவை கிடையாது. மாறாக வர்கோத்தமம் மற்றும் கிரக சேர்க்கைகள் எடுத்துக்கொள்ளப்படும்.


    பொதுவாக நவாம்சத்தில் ஒரு கிரகம் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ? அசுப வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதை மட்டுமே கண்டறிய பயன்படுகிறது.


   ராசியில் இலக்கனம், இரண்டாமிடம், மூன்றாமிடம் ....என குறிப்பிடுவது போல அம்சத்தில் எண்கள் கிடையாது.


  ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அது கிரக பலத்தை இழந்துள்ளது என ஒரு சிலர் வாதிடுவர். ஆனால் அது உண்மை அன்று.  பலன் எடுக்கும்போது அம்சத்தில் ஸ்தான வலிமையை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத போது   நீசம் என்று மட்டும் எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.


  ஒரு கிரகம் இராசியிலும், அம்சத்திலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அந்த நட்சத்திரமும் அவை கொண்ட பாதமும் முடிவு செய்கிறது. இந்த அமைப்பை "பாதசாரம்" என்று நாம் அழைக்கிறோம்.


  ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களைக் கொண்டது ஆகும். ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்கள் வீதம் அதாவது ஒரு ராசியில்

 9 -பாதங்கள் இடம்பெறுகிறது.


   மேஷ ராசி 

அசுபதி, பரணி முழுவதும் மற்றும் கார்த்திகை முதல் பாதம்


     ரிஷப ராசி


 கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகினி முழுவதும் மற்றும் மிருகசீரிடம் முதல் இரண்டு பாதங்கள்.


மிதுன ராசி 


மிருகசீரிடம் 3 மற்றும் 4ஆம் பாதங்கள், திருவாதிரை முழுவதும், புனர்பூசம் முதல் மூன்று பாதங்கள்.


 கடக ராசி 


புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் முழுவதும் 


சிம்மம் ராசி 


மகம், பூரம் முழுவதும், உத்திரம் முதல் பாதம் முடிய 


கன்னி ராசி 


உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் முழுவதும், சித்திரை முதல் இரண்டு பாதங்கள்.


 துலாம் ராசி 


சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி முழுவதும் விசாகம் முதல் மூன்று பாதங்கள்.


 விருச்சகம் ராசி


விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை முழுவதும்


தனுசு ராசி


 மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய .


மகர ராசி 


உத்திராடம் 2 ,3 ,4 பாதங்கள் ,திருவோணம் முழுவதும், அவிட்டம் 1, 2 பாதங்கள்.


 கும்ப ராசி 


அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் முழுவதும், பூரட்டாதி முதல் மூன்று பாதங்கள் .


மீனம் ராசி


 பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முழுவதும்.


  மேற்கண்ட அடிப்படையில் ராசியில் ஒரு கிரகம் பெற்ற நட்சத்திரம் மற்றும் அதன் பாதசாரம் விதிப்படி கிரகங்கள் இடம் பெறுகிறது.


 இப்பொழுது நவாம்சத்தில் கிரகங்கள் எவ்வாறு நட்சத்திர பாதசார  அடிப்படையில்

கிரகங்கள் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை புரியும்படியாக விளக்கமாகப் பார்ப்போம்.


  ஒன்பது கிரகங்களும் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம் வீதமாக  27 நட்சத்திரங்களை பங்கு  பங்கு போட்டுக் கொள்கிறது.


           சூரியன் 

கார்த்திகை, உத்திரம் உத்திராடம் 


          சந்திரன் 

ரோகிணி ,அஸ்தம் திருவோணம் 


        செவ்வாய் மிருகசீரிடம், சித்திரை அவிட்டம்

        ராகு 

திருவாதிரை ,சுவாதி சதயம் 

          குரு 

புனர்பூசம் ,விசாகம் பூரட்டாதி 


        சனி 

 பூசம், அனுஷம், உத்திரட்டாதி 


      புதன்


ஆயில்யம் கேட்டை ரேவதி      


        கேது

அசுவதி, மகம், மூலம்


     சுக்கிரன் 

பரணி ,பூரம், பூராடம்


   நவாம்சத்தில் ஒரு கிரகம் ஆனது எந்த நட்சத்திரத்தில் நிற்கிறது என்பதைப் பொறுத்து அதனை மூன்று பிரிவாக

வகை படுத்தப்பட்டுள்ளது.


முதல் பிரிவு 


மேஷம், முதல் கடகம் வரை,


     முதல் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷத்திலும், இரண்டாம் பாதம் ரிஷபத்திலும், மூன்றாம் பாதம் மிதுனத்திலும் மற்றும் நான்காம் பாதம் கடகத்திலும் இடம் பெறுகிறது.

    


 இரண்டாம் பிரிவு 


    கடகம் முதல் விருச்சிகம் வரை .


      இரண்டாம் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திரத்தின் முதல் பாதம் கடக ராசியிலும், இரண்டாம் பாதம் சிம்ம ராசியிலும், மூன்றாம் பாதம் மிதுனம் ராசியிலும் மற்றும் நான்காம் பாதம் விருச்சகம் ராசியிலும் அமைகிறது.


   மூன்றாம் பிரிவு


 தனுசு ,முதல் மீனம் வரை.


     மூன்றாம் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் , இரண்டாம் பாதம் மகர ராசியிலும், மூன்றாம் பாதம் கும்ப ராசியிலும் மற்றும் நான்காம் பாதம் மீன ராசியிலும் அமைகிறது.


  முதல் பிரிவிற்கு உட்படும் நட்சத்திரங்கள்.


   குரு, சந்திரன் மற்றும் கேது பகவானது நட்சத்திரங்கள் அடங்கும்.


 இரண்டாம் பிரிவிற்கு உட்படும் நட்சத்திரங்கள்


 சுக்கிரன், சனி, செவ்வாய் பகவானின் நட்சத்திரத்திரங்கள் அடங்கும்.


 மூன்றாம் பிரிவிற்கு உட்பட்ட நட்சத்திரங்கள்


    புதன், சூரியன், ராகு பகவானது நட்சத்திரங்கள் அமையும்.


 முதலில் முதல் பிரிவை கவனிப்போம்.


  

     ஒரு கிரகம் குரு, சந்திரன் மற்றும் கேது  நட்சத்திரத்தில் நின்றால் 

அதிலும் குறிப்பாக குருபகவான் நட்சத்திரத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தினை எடுத்துக் கொள்வோம். புனர்பூசம் முதல் பாதம் என்றால் மேஷ ராசி,

 2ஆம் பாதம் என்றால் ரிஷப ராசி,

 மூன்றாம் பாதம் என்றால் மிதுன ராசி ,

நான்காம் பாதம் என்றால் கடக ராசி என கிரகங்கள் நவாம்சத்தில் நிற்கும்.இதேபோல ஏனைய இரு கிரக நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.


  இரண்டாம் பிரிவு


  இதே போல ஒரு கிரகம் சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதிலும் குறிப்பாக சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் முதல்பாதம் எனில் சிம்ம ராசி, இரண்டாம் பாதம் எனில் கன்னி,

 ராசி 3ஆம் பாதம் எனில் துலாம் ராசி,

 4ஆம் பாதம் எனில் விருச்சக ராசி ஆகும்.இதேபோல ஏனைய இரு கிரக நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.


    மூன்றாம் பிரிவு ஒரு கிரகம் ஆனது புதன் சூரியன் மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதிலும் குறிப்பாக ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்திருந்தால் திருவாதிரை முதல் பாதத்தை தனுசு ராசி, இரண்டாம் பாதம் மகர ராசி மூன்றாம் பாதம் கும்ப ராசி,

 4ஆம் பாதம் மீன ராசி இதே போல ஏனைய இரண்டு கிரக நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.


  வர்க்கோத்தமம்


 ராசியிலும், அம்சத்திலும் ஒரே வீட்டில் நிற்கும் கிரகங்கள் வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள் ஆகும். இவ்வாறு வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள்  உச்சம் பெற்ற கிரகத்திற்கு  நிகரான வலிமை பெற்ற கிரகங்களாக கருதப்படுகிறது.


  கீழ்க்கண்ட நட்சத்திர பாதத்தில் நிற்கும் கிரகங்கள் வர்கோத்தமம் பெற்ற கிரகங்களாகும் ராசியிலும் ,அம்சத்திலும் இந்த கிரகங்கள் ஒரே வீட்டில் இருக்கும்.


  முதல் பிரிவில்


அசுபதி முதல் பாதம், ரோகினி இரண்டாம் பாதம் ,

புனர்பூசம் மூன்றாம் பாதம்,

 புனர்பூசம்  நான்காம் பாதம்


இரண்டாவது பிரிவில்


 பூரம் முதல் பாதம், சித்திரை இரண்டாம் பாதம்,

 சித்திரை மூன்றாம் பாதம்,

 அனுஷம் நான்காம் பாதம்,


மூன்றாம் பிரிவில்


 உத்திராடம் முதல் பாதம், உத்திராடம் இரண்டாம் பாதம் ,

சதயம் மூன்றாம் பாதம், ரேவதி நாலாம் பாதம் ஆகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப் &; டெலிகிராம்

    9715189647


      செல்

   9715189647

     7402570899


My website.click here

  www.astroravichandransevvai.in


                   


  


 அன்புடன்


சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பகுடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறக்க ஜாதகம் கூறும் அமைப்பு


 பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறக்க ஜாதகம் கூறும் அமைப்பு 

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


                  


    ஒருவருக்கு பெருமை சேர்க்கும்  புத்திரர்கள் பிறக்க அவரது ஜாதகத்தில் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


1 ) புத்திர ஸ்தானமான ஐந்தாமிடம்

 2) புத்திர ஸ்தானாதிபதி 

 3) புத்திரகாரகன் குரு


    எவரொருவர் ஜாதகத்தில் மேற்கண்ட மூன்று வகையில் ஆய்வு செய்து பார்க்கும்போது ஐந்தாமிடத்தில் எவ்வித பாவ கிரகங்கள் இடம்பெறாமல் ஐந்தாம் இடத்தை இயற்கை சுப கிரகங்களால் பார்க்க பெற்றும், ஐந்தாம் இட அதிபதி கேந்திர, கோணங்களில் உச்சம் ஆட்சி,மூல திரிகோணம் மற்றும் நட்பு போன்ற ஏதாவது ஒரு நிலைகளில்  பலம் பெற்று அமைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அல்லது தொடர்பு பெற்ற அமைப்பை பெற்று புத்திரகாரகன் குரு பகவானும் எந்த விதத்திலும் பங்கப்படாமல் நின்று இவர்களுடன் தொடர்புகொள்ள பெருமை சேர்க்கும் புத்திரர்கள் நிச்சயம் அந்த தம்பதிகளுக்கு பிறக்கும். இலக்கனம் மற்றும் ராசிக்கு என்ற இரு வகையிலும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   ஐந்தாம் அதிபதியும் ,

வித்தைகாரன் புதன்பகவானும் ஒருவரது ஜாதகத்தில் வலிமை பெற்று விளங்கினால் நல்ல அறிவும், குணமுடையவன் ஆவான். 


   லக்கனம் மற்றும் ஐந்தாம் இடங்களில்  புதன் , குரு ஆகியவை நட்பு நிலையில் அதி பலம் பெற்றால் நல்ல யோகம் உடையவனாவான்.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் , ஐந்தாம் அதிபதியும் இணைந்து லக்னத்தில் இருந்தாலும் பார்த்தாலும் மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரம் உடையவர்களாக இருப்பர்.


 ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் மற்றும் 1,5,7 ஆம் அதிபதிகள் ஆகிய இவற்றில் ஒன்றை 

குரு பகவான் பார்த்தாலும் பிள்ளைகளால் பெற்றோர்கள் இன்பம் அடைவார்கள். சந்திரபகவானும் மற்றும் பார்க்கும் கோளும் அம்சத்திலும் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


  லக்கினாதிபதிக்கு நான்காம் இடம் அதிபதியானவர்  லக்னாதிபதியை பார்த்தாலும் மற்றும் நட்புறவாக இருந்தாலும் தந்தைக்குப் பின் உரிய பிள்ளைகள் வாழ்ந்து வருபவர்.


   ஐந்தாம் அதிபதியும், சுக்கிரனும் ,சந்திரனும் கூடினாலும்  மற்றும் பார்த்தாலும் வெகு புத்திரர் உண்டு.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி ஏழாம் இடத்திலும்,  நான்கு மற்றும் ஏழாம் இட  அதிபதிகள் சேர்ந்து நின்ற நிலையில் இரண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும் திறமையும் சாமார்த்தியம் உடைய பிள்ளைகள் பிறப்பர். இரண்டாம் அதிபதி ஐந்தில் இருந்து குரு பார்வை பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டு.


  சந்திரன் நின்ற வீட்டு அதிபதி மற்றும் 

ஒன்று மற்றும் ஐந்தாம்  இட அதிபதிகள் ஐந்தில் இருந்தாலும், ஐந்தாம் அதிபதி குருவுடன் சேர்ந்தாலும் குழந்தைப்பேறு உண்டாகும் புகழ் பெற்ற குழந்தைகள் பிறப்பார்கள்.


    ஐந்து மற்றும் ஒன்பதாமிடம் அதிபதிகள் குருவுடன் கூடி ஒன்பதாம் இடத்தில் இருப்பது அல்லது குரு, புதன், சுக்கிரன் ஆகியவை ஐந்தாம் இடத்தில் இருந்து, 1-9 ஆம் அதிபதிகள் நான்கினில், நான்காம் அதிபதி குரு வீட்டில் இருப்பது புகழ் பெறும் அதிர்ஷ்டம் நிறைந்த பிள்ளைகள் ஜாதகருக்கு பிறக்கும்.


  சூரியபகவானுக்கு 5,7,9 வீடுகளில் சந்திரன் இருந்த அந்த வீடு சந்திரனுக்கு நட்பு, ஆட்சி, உச்சம் ஆகிய வீடாகவும் இருந்து குருவின் பார்வையும் சந்திரனுக்கு கிடைத்தால் தந்தையை விட செல்வம் அதிகம் சேர்ப்பார்கள் சுக்கிரன் பார்த்தால் மிகுந்த சுகபோகங்களை அனுபவிக்கும் ‌ யோகம் உடையவனாக திகழ்வார்.


  பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும், லக்னாதிபதியும் நட்பாகவும், ஐந்தாம் அதிபதி உச்சம் பெற்று சுபமாக 11-ஆம் இடத்தில் இருந்தாலும் தந்தை சொல் தவறாமல் நடக்கும் பிள்ளைகள் பலர் உண்டு. ஐந்துக்குரியவருடன்  சேர்ந்துள்ள கோள்கள் எத்தனையோ அத்தனை நல்ல பிள்ளைகள் உண்டாகும்.


 புத்திர ஸ்தான அதிபதியான ஐந்துக்கு உரியவரும் மற்றும் புத்திரகாரகன் குருவும் உச்சம், ஆட்சி, நட்பு, கேந்திரம் மற்றும் கோணம் ஆகிய நிலைகளில் ஸ்தான வலுப்பெற்று நின்றாலும், ஐந்து உரிய புத்திர காரகன்  குரு பகவான் மற்றும் 5ஆம் வீடு ஆகியவற்றுடன் நற்கோள்கள் சேர்ந்தாலும் குழந்தைகள் அதிகம் உண்டாகும்.


  லக்கினாதிபதி, 5 ஆம் அதிபதியுடன் கூடியிருக்க முழு வலிமையுடன் குரு பார்க்க வெகு புத்திர பாக்கியம் உண்டு.


 பொதுவாகவே ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதியும்  மற்றும் 5ஆம் அதிபதியும் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று, புத்திரகாரகன் குரு பகவானால் பார்க்கப்பட அமைப்பை உடையவர்களுக்கு  பிறக்கும் குழந்தைகள் நல்ல பலவானாம்.


 ஒருவர் ஜாதகத்தில் நான்கு மற்றும் ஐந்துக்கு உரியவர்கள் தன,பாக்கிய மற்றும் லாப ஸ்தானங்களில் பலம் பெற்று நின்றாலும் அல்லது உச்சம் பெற்று கேந்திர , திரிகோணம் பெற்று இருந்தாலும் தந்தை, தாயுடன் அந்த சாதகன் அளவில்லாத மகிழ்ச்சியுடன் சுகமாய் நன்கு வாழ்வான்.


   நான்காம் அதிபதியும் சுக்கிரனும் கூடினாலும் அல்லது இருவரும் கேந்திரம் பெற்று நின்றாலும் அல்லது நான்காம் அதிபதியும், சந்திரனும் கூடி லாப ஸ்தானமான 11-ல் இருந்தாலும் பல வகையான வாகனங்கள் உடையவனாக திகழ்வான்.


 நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


     செல்

   9715189647

    7402570899


             




அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.