Tuesday 22 January 2019

திருமண வாழ்வு பற்றி சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு .

              

திருமண  வாழ்வு பற்றி சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு .


கிரகங்கள் படுத்தும் பாடு -( 30 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..

     ஒரு மனிதனுக்கு தனது இணையான ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கிரகங்களின் பங்கு என்ன ?  என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

      இதில் முதலில் ஒரு மனிதனுக்கு தனது சாதக கட்டத்தில் ஆண் /பெண் இருபாலருக்கும்
 ஏழாமிடம் என்பது களஸ்திர ஸ்தானம் ஆகும்.

      இரண்டாமிடம் என்பது குடும்ப ஸ்தானம் மற்றும் அவருடைய சாதகத்தில் உள்ள மனைவி ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானமான
 எட்டாமிடம் ஆக வருவதால் இந்த இரண்டாமிடமும் அவசியம் ஆகும்.

      அடுத்து  ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாமிடம் ஆகும்.இவை மனைவி ஸ்தானத்திற்கு இரண்டாமிடம் அதாவது குடும்ப ஸ்தானம் ஆகும்..

      எனவே ஒருவர் தனது திருமண வாழ்வு குறித்து தன்னிடம் சாதகம் பார்க்க வருவோர்கள் வினா எழுப்பும்போது முதலில் அவர்களது சாதகத்தில் மேற்கூறிய இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

                               

   மேலும் லக்கனத்தில் அமரும் கிரகம் தனது ஏழாம் பார்வையால் களஸ்திர ஸ்தானத்தை பார்ப்பதால் இவற்றையும் கவனிக்கவேண்டும்.

     மேற்கண்ட இந்த ஸ்தானங்களில் அசயர்களான ராகு ,கேது ,செவ்வாய் மற்றும் சனி போன்ற பாவிகள் பலம்பெற்று நிற்க சாதகருக்கு திருமண வாழ்வு தடைபடுவதோடு மனம் ஒத்த மனைவி அமைவது சிரமம் ஆகிறது.

      இவை லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்கும் உள்ள 1,2,7,8 ஆம் ஸ்தானங்களையும் கவனிக்கப்படவேண்டும்.

     மேலும் ஏழாமாதிபதி மற்றும் குடும்பாதிபதி ஆறு ,எட்டு போன்ற ஸ்தானங்களில் அமர்ந்தாலோ அல்லது இவற்றுடன  சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது ஆறு,எட்டாம் அதிபதிகள் ஏழாமிடத்தில் அமர்ந்தாலோ திருமண வாழ்வு தடைபெறுகிறது.

.     மேலும் குடும்பம் மற்றும் களஸ்திரஸ்தானதிபதிகள் ஆறு மற்றும் எட்டாமாதிபதியின் நட்சத்திர சாரம் பெறக்கூடாது.மேலும் இவைகளுக்கிடையே பரிவர்தனை அடையகூடாது.

                           


      ஒருவருடைய சாதகத்தில் இரண்டு ,ஏழு மற்றும் எட்டாமிடத்தில் உச்சம்பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.மேலும் இவற்றின் அதிபதிகள் நீசம்,அஸ்தமனம்,பகை மற்றும் மறைவு பெறக்கூடாது.

       இதேபோல ஆண் சாதகருக்கு களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிர பகவானும் ,பெண் சாதகத்தில் களஸ்திரகாரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானும் ஒருவருடைய சாதகத்தில் பாவிகள் ஆளுகைக்கு உட்படக்கூடாது.இவ்வாறு அசயர்களான ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெறாமல் இருத்தல் நலம்.

     இவ்வாறு லக்கனம்,ராசி மற்றும் களஸ்திரகாரகருடன் ராகு ,கேது சேர்க்கை களஸ்திர தோஷத்தை உண்டு பண்ணுகிறது.

                          

களஸ்திர தோஷ பரிகார வழிபாடு:-


ராகு ஸ்தலங்களான திருநாகேஸ்வரம் ,
திருப்பாள்புரம்,பேரையூர் மற்றும் காளஸ்தி போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பு படம் வைத்து ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம்.

    துர்கை ,காலபைரவர் மற்றும் அனுமான் போன்ற தெய்வ வழிபாடு உகந்தது.

                          

    காரக பாவ நாஸ்தி


    ஒருவருடைய சாதகத்தில் காரகர் ஆனவர் காரகஸ்தானத்தில் இருப்பின் காரக பாவ நாஸ்தி ஆகும்.

      எனவே ஏழாமிடத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரன் அமர்ந்தால் காரக பாவ நாஸ்தி பெற்று அந்த ஸ்தானத்தை பாதிக்கும்.எனவே அந்த ஸ்தான பலனான திருமண வாழ்வை பாதிக்கும்.

     பொதுவாக சுக்கிரன் ,சனி ஆகிய இரு கிரகங்களும் ஏழாமிடத்தில் இல்லாமல்  இருத்தல் நலம் ஆகும்.அதற்கான பாடல்கள் பின்வருமாறு

"சுக்கிரன்தான் கேந்திரத்தில் இருந்தாலப்பா சொல்லுகிறேன் சாதகருக்கு தாரம் இரண்டு "

"சட்டமாய் சனி ஏழாமிடத்தில் இருந்தால் தாரம் இரண்டு தப்பாமல் செய்யுவான் "

என்கிறது சாதக பாடல்.

                           

       எனவே ஏழாமிடத்தில் சனி ,சுக்கிரன் இருப்பவரெல்லாம் இரண்டாம் தாரம் செய்வார் என உறுதியாக கூற முடியாது.அதற்கான வேறு சில அமைப்புகள் உள்ளது.அதுபோன்ற அமைப்பை பெற்று மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு மட்டுமே தாரதோஷம் உண்டு.இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம் .

குறிப்பு ;-ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடம் ,சுக்கிரன் பலம்பெற்று சுபர்பார்வை பெறின் மேற்கண்ட பலன் மாறுபடும்.

வாழ்க மகிழ்வுடன்..


                           

       அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட  ஆலோசனை நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.


(தங்களுடை சாதகத்தினை ஆய்வு செய்து போனின் வழியாக சாதகபலன்,திருமணபொருத்தம்  பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்,கட்டணம் உண்டு .
  தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம் )

Wednesday 9 January 2019

பஞ்ச மஹா புருஷயோகம்

பஞ்ச மஹா புருஷ யோகங்கள்


                      

செவ்வாய்பட்டி  பத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு

  ஒருவரது சாதகத்தில் சூரியன் , சந்திரன், ராகு ,கேது தவிர ஏனைய ஐந்து முக்கிய கிரகங்களான குரு,புதன்,சுக்கிரன் ,சனி  மற்றும் செவ்வாய் ஆகியவை ஜென்ம லக்கனத்திற்கோ அல்லது இராசி்க்கோ உச்சம்,ஆட்சி  போன்ற வகையில் பலமடைந்து கேந்திர ஸ்தானமான 1,4,7,10 நிற்கும் போது இந்த பஞ்ச மஹா புருஷ யோகங்களை சாதகருக்கு அதன் உரிய தசையில் வேறு ஸ்தான அடிப்படையில் அக்கிரகங்கள் பங்க படாமல் இருப்பின்  கொடுக்கிறது.

                   

      ஹம்ச யோகம்


 குரு பகவான் ஒருவரது சாதகத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து  லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில்   நிற்கும்  போது சாதகருக்கு  ''ஹம்ச யோகத்தினை '' தருகிறது .

  இந்த ஹம்ச யோகமானது கடகம்,விருச்சிகம்,தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு  மிகுதியாக யோக பலன்களை தனது திசை காலங்களில் சிறப்பாக கொடுக்கிறது.

       கடக லக்கனத்திற்கு லக்கனத்திலே குரு பகவான் உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது  ஒன்பதாம் இடமான  மீனத்தில்  ஆட்சி பெற்று நிற்கும் போது யோக பலன்களை சிறப்பாக தருகிறது .

    அதேநேரத்தில் கடக லக்கனத்திற்கு ஆறாம் இடமான தனுசுவில் ஆட்சி பெற்ற நிலையில் குரு பகவான் நின்று ஹம்ச யோகத்தினை பெற்றிருந்தபோதிலும்  லக்கனத்திற்கு  ஆறாம் இடம் ருண ரோக ஸ்தானம் என்பதால் யோக பலனில் பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு .

  இதேபோல விருச்சிகம் லக்கனத்திற்கு இரண்டாம் இடமான தனுசுவில் ஆட்சி பெற்று நின்று ஹம்ச யோகத்தினை தருவதை விட ஐந்தாம் இடமான மீனத்தில் ஆட்சியும்,ஒன்பதாம் இடமான கடகத்தி்ல் உச்சமோ பெற்றிருப்பது மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .

                       

  இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் தனகாரன் குரு பகவான் ஆட்சி பெற்றிருப்பது ''காரக பாவ நாஸ்தியை '' கொடுக்கிறது .

     தனுசு லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற நிலையிலும்,நான்காம் இடமான மீனத்தில ஆட்சி  பெற்ற நிலையிலும் மட்டுமே யோக பலன்களை தர வாய்ப்பு உண்டு .இவை தவிர  லக்கனத்திற்கு  எட்டாம் இடத்தில் உச்சம் பெறுவது அஷ்டம ஸ்தானம் என்ற வகையில் ஹம்ச யோகத்தில்  யோக பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

      மீன லக்கனத்திற்கு  லக்கனத்தில்  ஆட்சியும்,ஐந்தாம் இடமான கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .

   இதேபோல பத்தாம் இடமான தனுசுவில் ஆட்சி  பெற்றிருப்பின் ஹம்ச யோகத்தினை தருகிறது .


                      

        பத்திர யோகம்


       ஒருவரது  சாதகங்ளி்ல் புதன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில்  நிற்கும் போது இவ்வித யோகத்தினை சாதகருக்கு வழங்குகிறது.

    ரிஷபம் ,மிதுனம் ,
கன்னி ,துலாம், மகரம் மற்றும் கும்பம்  ஆகிய ராசிகளுக்கு புதன் பகவான் மேற்கண்ட வகையில் பலமடைந்து நிற்கும் போது மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.

  ரிஷபம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற புதன் பகவான் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .இரண்டாம் இடத்தில் அமரும் புதன் பகவானும் யோக பலன்களை தருகிறது .

   மிதுனம் லக்கனத்திற்கு புதன் பகவான் லக்கனத்திலே ஆட்சி பெறும் நிலையிலும், நான்காம் இடத்தில் உச்சம் ,ஆட்சி பெறும் நிலையிலும் மிகுந்த யோக பலன்களை தருகிறது .

  கன்னி லக்கனத்திற்கு லக்கனத்திலே புதன் பகவான் உச்சம் ,ஆட்சி  போன்ற வகையில் பலமடைந்து இருப்பது பத்ர யோகத்தினை சிறப்பாக தரும் .

    இதேபோல  பத்தாம் இடத்தில் பலம் அடைந்த புதன் பகவானும்  பத்ர யோகத்தினை சிறப்பாக  தருகிறது.
     
     மகரம் லக்கனத்திற்கு ஒன்பதாம் இடத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்துள்ள புதன் சிறப்பாக யோக பலன்களை தரும் .

 இதேபோல கும்பம் லக்கனத்திற்கு அஷ்டம ஸ்தானமான  எட்டாம்  இடத்தில் புதன் உச்சம் ,ஆட்சி  போன்ற வகையில் பலம் பெறாமல் ஐந்தாம் இடமான  மிதுனததில் பலமடைந்த புதன் பகவான் மிகவும் சிறப்பாக பத்ர யோக பலன்களை கொடுக்கிறது .

                      

    மாளவ்யா  யோகம்


   ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து லக்கனத்திற்கு அலலது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில்  நிற்கும் போது ''மாளவ்யா யோகத்தினை சாதகருக்கு வழங்குகிறது .

    குறிப்பாக  ரிஷபம்,
மிதுனம் ,கன்னி விருட்சகம்,மகரம் போன்ற ராசிகளுக்கு மிகுதியாக யோக பலன்களை தனது திசை காலங்களில் கொடுக்கிறது .

  ரிஷபம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சுக்கிரன் மிகுந்த யோக பலன்களை தருகிறது .அதேநேரத்தில் ரிஷபம் லக்கனத்திற்கு  ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் ருண ரோக ஸ்தானம் என்ற வகையில் மாளவ்யா யோக பலன்களை சிறப்பாக தருவது கிடையாது .

 மிதுனம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற  சுக்கிரன் சிறப்பாக மாளவ்யா யோகத்தினை தருகிறது .

    கடக லக்கனத்திற்கு நான்கு,பதினொன்றாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் பகவானை விட ஒன்பதாம் இடத்தில் உச்சம்  பெற்ற சுக்கிரன் மிகுந்த மாளவ்யா யோகத்தினை தருகிறது.

 விருச்சிகம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ,கும்பம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் பகவான் மிகுந்த யோக பலன்களை தருகிறது .

                    

   சச யோகம்


  ஒருவரது சாதகத்தில் சனி பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து ஜென்ம லக்கனத்திற்கு அலலது இராசிக்கு கேந்திர ஸ்தானங்களில்  நிற்கும் போது சாதகருக்கு ''சச  யோகத்தினை '' தருகிறது .

 இவ்வித யோகமானது குறிப்பாக மகரம்,கும்பம்,ரிஷபம்,
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு தனது தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது .

  மகரம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சனி பகவான்,கும்பம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சனி ,ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற சனி பகவானும் மிகுந்த சசக யோகத்தினை தருகிறது .

 மிதுனம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில்  உச்சம் பெற்ற சனி பகவானும், எட்டாம் இடத்தினை விட ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானும் மிகுந்த யோக பலன்களை சாதருக்கு தருகிறது .

 கன்னி லக்கனத்திற்கு  ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானை விட  ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி சிறப்பாக யோக பலன்களை தருகிறது .

                           

           ருசக யோகம்


     ஒருவரது சாதகங்களி்ல் செவ்வாய் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில்  நின்றால் சாதகருக்கு ''ருசக யோகத்தினை '' தருகிறது .

  இவ்வித யோகமானது மேஷம்,ரிஷபம் ,கடகம்,
சிம்மம்,விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளுக்கு தனது திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .

 மேஷ லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் ,பத்தாம் இடத்தில்  உச்சம் பெற்ற செவ்வாய் பகவானை விட லக்கனத்திலே ஆட்சி பெற்ற செவ்வாய் லக்கனாதிபதி என்ற வகையில் மிகுந்த யோக பலன்களை தனது தசைகளில் தருகிறது .

     ரிஷபம் லக்கனத்திற்கு ஏழு,பன்னிரெண்டாம் இடத்திற்கு ஆட்சி பெற்ற செவ்வாய் பகவானை விட ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் மிகுந்த யோக பலன்களை தனது தசை காலங்களில் தருகிறது .

   கடக லக்கனத்திற்கு ஐந்து ,பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் தனது தசா காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது .

 விருச்சிகம் ,மகரம் லக்கனத்திற்கு லக்கனத்திலே  ஆட்சி ,உச்சம்  பெற்ற செவ்வாய் தனது தசா காலங்களில் ருசக யோகத்தினை சிறப்பாக தருகிறது .

 நன்றி !

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

 வாட்ஷ் அப்
   9715189647

    செல்
   9715189647
    7402570898

                      

 அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc .MA .BEd 
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
 ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் .

My email
 masterastroravi@gmail.com

My blogspot .Google search

AstroRavichandran .
blogspot .com .

AstroRavichandransevvai 
.blogspot.com

astrosmartnotes .blogspot .com
.................

அயன சயன முக்தி யோகம்

அயன,சயன மற்றும் முக்தி யோகம்.


                                

கிரகங்கள் படுத்தும் பாடு--( 188 )

செவ்வாய்பட்டி பத்ரகாளிஅம்மன் துணை!

    ஒருவரது சாதக கட்டத்தில் மறைவிட ஸ்தானங்கள் என அழைக்கப்படுவது மூன்று, ஆறு,எட்டு   மற்றும் பணிரெண்டு ஆகும்.இதில் மூன்று மற்றும் பணிரெண்டாமிடம் ஆகிய இவ்விரண்டு இடங்களும் முழு மறைவு ஸ்தானங்கள் அல்ல.

      இதில் மூன்றாமிடம் கீர்த்தி,புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய இடம் என்பதைப்போலவே பணிரெண்டாம் இடமும் மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்பட்ட  போதிலும் இந்த இடமே ஒரு மனிதனுக்கு அயன,சயன மற்றும் படுக்கை சுகங்களை தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படுகிறது.

       இவை மட்டுமல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்வில் அடையக்கூடிய முக்தி நிலையை அடையக்கூடிய ஸ்தானம் இந்த பணிரெண்டாம் இடம் ஆகும். 

         பணிரெண்டாம் இட அதிபதி உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி போன்ற வகையில் பலம்பெற்றிருக்க மெத்தையில் படுத்து உறங்கும் யோகம் உண்டு.நித்திரை சுகம் தரும்.

          "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " இந்த ஸ்தானமானது பலப்படும்போது சாதகரை கடல் கடந்து செல்ல  வைப்பதில் பெரும் பங்கு உண்டு. இது விரயம் தரக்கூடிய விரயஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது.

                         

          பணிரெண்டாம் இடத்து அதிபதியோ அல்லது பணிரெண்டாம் இடத்திலோ பலம்பெற்ற கிரகம் நிற்பின் சாதகரை கடல் கடந்து தன் திசை,புத்திகளில் செல்ல வைத்து பொருள் ஈட்ட செய்யும்.

          ராகு பகவான் என்பவர் அந்நியதேசம்,அந்நிய மொழி மற்றும் அந்நியநாடு ஆகியவைகளுக்கு காரகர் என்பதால் இவை பணிரெண்டாம் இடத்தில் குடியேறி இருக்க தன் தசை,புத்தி காலங்களில் வெளிநாடு சென்று பொருள் ஈட்டக்கூடிய நிலையினை சாதகருக்கு தருகிறார்.

          அதேநேரத்தில் ஞானகாரகன் கேது பகவான் இவ்விடத்தில்  நிற்க சாதகர் இவ்வுலக லொளகீக வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து இறுதியில் பற்றற்று முக்திநிலையை அடையக்கூடிய முக்தி யோகத்தினை  சாதகருக்கு அளிக்கிறார்.

          பணிரெண்டாம் இடத்தில் காமகாரகன் செவ்வாய் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் இவ்விரண்டின் சேர்க்கை காம எண்ணம் மிகுந்து படுக்கை  சுகம் தேடவைக்கும்.

              இயற்கை சுப கிரகங்களான குரு,புதன்,சந்திரன்,
சுக்கிரன் பணிரெண்டாம் இடத்தில் இருப்பது நல்லது.

                           

               பணிரெண்டாம் இடத்தில் சூரியன் ,சந்திரன் சேர்க்கையானது தாய்,தந்தையாருக்கு ஆகாது.பணிரெண்டாம் இடத்தில்
 சூரி+சந் இருக்க பிறந்த சாதகர் தாய்,தந்தையர்களிடம் ஓற்றுமை குலைவை தர வாய்ப்பு உண்டு.அவர்களது சொத்து குறைந்து போக செய்து பலவித இன்னல்களை தரலாம்.

                பணிரெண்டாம் அதிபதி சுப கிரகமாக இருந்து பலமடைந்து நிற்பின் சாதகர் செய்யும் செலவுகள அனைத்தும். சுப செலவாக அமையும்.பாவ கிரகமாக இருந்து பலமடைந்து நிற்பின் கெட்ட விரய செலவுகளாக சாதகருக்கு அமையும்.

                பணிரெண்டாம் அதிபதி இரண்டாமிடத்திலும்,
இரண்டாமாதிபதி பணிரெண்டிலும் பரிவர்த்தனையடைந்து லக்கனாதிபதியும் நீசமானால் சாதகரின் பொருள் அனைத்தையும் இழந்து நிற்பான்.

                       பணிரெண்டுக்குரிய கிரகம் ஆறு,எட்டு மறைவிடங்களில் இருந்து சனியும்,ராகுவும் பணிரெண்டாம் இடத்தில் இருந்து சுப கிரகங்களின் பார்வை பெறவில்லை எனில் சாதகர் சொந்த வீடு இல்லாமல் வீதியில் நிற்பர்.

                  பணிரெண்டாம் இட அதிபதி, நான்காமிட அதிபதி ஆகிய இருவரும் பலமடைந்து சுபர் பார்வை பெற்றால் வீடு,வாகன வசதிகள் சாதகருக்கு உருவாகும்.

                           

           பணிரெண்டாம் இட அதிபதி, ஒன்பதாம் இட அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூவரும் சேர்க்கை பெற்று பலமடைந்து நிற்பின் அந்த சாதகர் தந்தையை பேணி பாதுகாப்பார்.

            குருவும்,புதனும் கூடி லாப அல்லது விரய ஸ்தானம் ஏறி நின்றால் லெட்சுமி யோகம் ஆகும்.

சுகர்நாடி எனும் சோதிட பாடலில்

"மங்கிய வியத்திற் பாபர் கூடி
வன்பகை யோடு வந்துறினுந்
திங்களும் சனியுஞ் சேயு மீறார்
சேரினு நோக்கினு மதியுஞ்
செங்கதிரவனும் வியப்பதியுறினு
ஆறெட்டோர் தீயவராய் வியத்தே
தங்கினும் வியத்தே நால்வர் கூட்டுறினுந்
தகர்த்து போம் நிலனோடு தனங்கள் "

 பாடல் விளக்கம்

       பணிரெண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் பகையோடு நின்று சனி,செவ்வாய், சந்திரன் இம்மூவரும் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் அல்லது நோக்கினாலும்,சூரியன், சந்திரன் ஆகிய இருவர் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும், ஆறு,எட்டுக்குரியவர் பணிரெண்டாம் இடத்தில் இருந்தாலும், இந்த நான்கு கிரகங்கள் (சூரியன்,சந்திரன், சனி, செவ்வாய் ) சேர்ந்து ஒரு ராசியில் நின்றாலும் சாதகர் நிலபுலன்கள்,வீடு,வாதல் இழந்து நிற்பர்.

நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

 வாட்ஸ்அப்

  97 151 89 647

  செல்
   
  740 257 08 99
     97 151 89 647

                          

  அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail .com

My blogspot .Google search

AstroRavichandran .
blogspot .com,

AstroRavichandransevvai .
blogspot .com

astrosmartnotes .blogspot .com.

...........................................

Monday 7 January 2019

திருமணம் என்னும் இரு மனம் இணைவு

திருமணம் என்னும் இரு மனம் இணைவு.


                        

கிரகங்கள் படுத்தும் பாடு.

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

     என்னிடம் போன் வழியாக சாதக பலன் பெற விரும்பும் நபர்களில் பெரும்பாலோனோர் கீழ்கண்ட  மூன்று வகையினரே ஆவார் .

       1)திருமணம் காலம் தாமதம் ஆகி கொண்டே செல்பவர்கள்.

       2) திருமணமே ஆனாலும் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது அல்லது பிரிந்து தனித்தனியாக வாழ்கின்ற நிலை.

      3) புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகிகொண்டே செல்கின்ற நிலை.

     மேற்கண்ட மூன்று வகைகளில் பாதி்க்கப்பட்டோர் எண்ணிக்கை  அதிகரித்தல் என்பது சமூகத்திற்க்கு உகந்த சூழல் அல்ல.

      இவற்றிற்க்கு உளவியல் அடிப்படையில் காரணம் என்னவெனில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணத்திற்க்கு முன்பாக தேவையில்லாத வீண் கற்பனைகளை வளர்த்துக்கொள்வதும்,
எதிர்பார்ப்புகளை உருவாக்கிகொள்வதும் ஆகும்.

        இவை மட்டுமல்லாமல் ''பொறுமையும்,
சகிப்புதன்மையும் இல்லாததும் '' ஒரு முக்கிய காரணமாக ஆகிறது.

                      

   சோதிடர் என்ற முறையில் என்னை பொறுத்த வரையில் பெற்றோர்களாகிய உங்களைதான் குறை சொல்ல வேண்டியதாக உள்ளது.

  ஏனெனில் பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகனுக்கோ/மகளுக்கோ பண்பிலும்,குணத்திலும் ஏற்ற ஜோடியா ? என தேடுவதைவிட ,  தனது ஈகோவினால் தான் அந்தஷ்துக்கு ஏற்ற வரனா என்றும் ,தனது பேச்சை கேட்ககூடிய வரனாகவும் அமையவேண்டும் என்றே எதிர் பார்ப்பதும் காரணம் ஆகும். 

    இவ்வாறு அமையும் பட்சத்தில் நல்ல ஆராய்ச்சி திறன் வாய்ந்த சோதிடர்கள் பொருத்தம் இல்லை என்றாலும் யாராவது ஒரு சோதிடர் பொருத்தம் உள்ளது என சொல்வார்களா ? என எதிர்பார்த்து அவ்வாறு பொருத்தம் உள்ளது  என யாராவது ஒரு  சோதிடர்  சொல்லும் வரை பல சோதிடர்களிடம் பலன் பெற செல்வதையும் நாம் காணலாம்.

  இவ்வாறு பலன் பெற விரும்பும் பெற்றோர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட  ஒரு சில முககுறி சோதிடர்கள் ''பரிகாரம் செய்து திருமணம் செய்து கொள்ளலாம் '' என பலன் சொல்லிவிடுகிறார்கள்.
அதனையே வேத வாக்காக கொண்டு தனது பிள்ளைகளுக்கு  மணம் முடித்துவிடுவதும் ஒரு  காரணமாகவும்  அமைந்துவிடுகிறது.

  எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தனக்கு விவாகம் பொருத்தம் பார்க்க எனது ஆலோசனையை பெற விரும்பினார் ,பல சாதகம் பார்த்து பொருத்தம் இல்லாமல் போய்விட்டது.இறுதியாக ஒரு அரசு வேலை பார்க்கும் பெண் என்பதால் என்னிடம் பொருத்தம் பார்த்தால்        '' பொருத்தம் இல்லை என சொல்லிவிடுவோனோ '' என பயந்து என்னிடம் சோதிட ஆலோசனை பெறாமலே  வேறு ஒரு சோதிடரிடம் சாதக பொருத்தம் பார்த்து தனது திருமணத்தினை முடித்துவிட்டார்.

  திருமணம் முடிந்து பல ஆண்டுகள் சென்றபிறகு புத்திர பாக்கியம் இல்லாத சூழலில் என்னிடம் சாதக பலன் பெற வந்தார்.பலன் பார்க்கும்போதுதான் தெரிந்தது இருவருக்கும் கடினமான புத்திர தோஷம் இருப்பது தெரிந்தது.

                      

     ஆதலால் திருமணம் பொருத்தம் பார்க்கும் பெற்றோர்கள் தனது ஈகோவினையும்,
அந்தஷ்தினையும் நிறைவு செய்யக்கூடிய வரன்களை தேடாமல் தனது பிள்ளையின் சாதகத்திற்க்கு ஏற்ற நல்ல பொருத்தமான ஜாதகத்தினை நல்ல புலமை பெற்ற ஆய்வு செய்து பார்க்கக்கூடிய  சோதிடராக பார்த்து விவாகம் செய்ய வேண்டும் .

   ஒருவரது மணவாழ்விலும்,புத்திர பாக்கியத்திலும் உருவாகக்கூடிய பிரச்சினைகளுக்கு சோதிடர்களும் ஒருவகையில் காரணமாக அமைகின்றனர்.

   ஆதலால்  கீழ்கண்ட வகையில் திருமண பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகளது சாதகத்தினை ஆய்ந்து அறியப்பட வேண்டியதாக உள்ளது .

                          

1) திருமண பொருத்தம் பார்க்க வரும் தம்பதிகள் இருவரது சாதகத்தில் உள்ள பிறந்த நேரம் சரியாக உள்ளதா ? என கேட்டு அதனை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும் .ஏனெனில் பலரது சாதகங்ளி்ல் பிறந்த நேரம் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
நானே பலரது சாதகங்களை சரி செய்து உள்ளேன்.

   ஏனெனில் பலர் சோதிடர் மீது உள்ள நம்பிக்கையில் கணக்கீடு செய்யப்பட்ட பிறந்த நேரத்தினை நன்கு கவனித்து பார்ப்பதில்லை.இதுபோல தவறான நேரத்தில் கணிக்கப்பட்ட சாதகத்தினை கொண்டு பார்க்கப்படும் பொருத்தங்களும் தவறான முடிவினையே தரும் என்பதனை தரும் என்பதனை உங்களுக்கு விளக்குகிறேன்.

    2) இரண்டாவதாக தம்பதிகள் இருவரது சாதகமானது எந்த வகை கணிதமுறையினை கொண்டுள்ளது என கவனிக்கப்பட வேன்டும்.
திருக்கணித முறையா  அல்லது வாக்கிய முறையா என கவனிக்கப்பட வேண்டும் .இரண்டு சாதகமும் ஒரே கணிதம்  முறையில் கொண்டு வந்து பிறகு சாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் .

        3) தம்பதிகள் இருவரது சாதகத்தில் சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் என அழைக்கப்படக்கூடிய உயிர் மற்றும் உடலாக செயல்படக்கூடிய லக்னம் , ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழக்காமல் உள்ளதா ? என கட்டாயம் முதலில் கவனிக்ப்பட வேண்டியதாக உள்ளது .இருவரது சாதகங்ளிலும் பலவீனமாக இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்க கூடாது.

     4) தம்பதிகள் இருவரது சாதகங்களி்ல் மனநிலைகாரகன் என அழைக்ப்படும் சந்திரன்  நீசம்,மறைவு மற்றும் அஸ்தமனம்  பெற்றோ அல்லது அரவுகளான ராகு,கேது சேர்க்கைகளுக்கு உட்படாமல் இருக்கிறதா ? என கவனிக்ப்பட வேண்டும் .ஏனெனில் மனநிலை சரியாக இல்லாத நபரிடம் வாழ்வது கடினம் ஆகும்.

                        

      5)தம்பதிகள் இருவருக்கும் நடப்பில் இருக்கும் திசையானது உகந்த திசையாக உள்ளதா ? என கவனிக்ப்பட வேண்டும் .திருமண காலங்களில் ஏழரை ,அஷ்டம சனி போன்றவை நடக்கும் காலங்களில் தம்பதிகளுக்கு ராகு திசையோ அலலது சந்திரன் திசையோ நடப்பில் இல்லாமல் இருத்தல் உத்தமம் ஆகும்.

    6) தம்பதிகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரம்,ராசி மற்றும் ஒரே திசை நடப்பில் இல்லாமல் இருத்தல் சால சிறந்தது.அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மறைவிட ( 6.8 ) அதிபதிகளின் திசையாகவோ அல்லது 1,2,4,5,7,8 ம் இடங்களில் நிற்கின்ற அரவான ராகு ,கேது திசையாகவோ அல்லது பாவர்கள்  திசையாகவோ நடப்பில் இருக்க கூடாது.

     7)    திருமணம் தொடர்பான  ஸ்தானங்களான ஒன்றாம் இடமான லக்கனம்,
இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம்  ஆகிய  ஸ்தானங்களையும்,அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

                        

    மேற்கண்ட இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்களோ அல்லது மறைவிட அதிபதிகளின்  தொடர்போ உள்ளதா ?எனவும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

     அதே நேரத்தில் மேற்கண்ட ஸ்தான அதிபதிகள்  நீசம்,பகை ,வக்கிரம் ,
மறைவு
அஸ்தமனம் அடைந்தோ அல்லது மறைவிடம் அதிபதிகள் தொடர்போ அல்லது பாவ கிரகங்கள் தொடர்போ பெற்றுள்ளதா? எனவும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் .

  8  )   இவை மட்டும் அல்லாமல் களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் மங்கள காரகன் செவ்வாய் ஆகிய இக்கிரகங்களை கவனிக்ப்பட வேண்டும் .

    இக்கிரகங்கள் இரண்டும் சுபர் பார்வையின்றி ராகு, கேது ,சனி  மற்றும் செவ்வாய் இவர்களது தொடர்பு நிலை பற்றி ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

                          

  9) தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷமும்,தசவித பொருத்தத்தில் பால் பொருத்தம் இல்லை எனில் கட்டாயம் விவாகம் செய்யக்கூடாது.

  புத்திர தோஷத்தினை பொருத்த வரை தம்பதிகள் இருவரது சாதகங்ளி்லும் லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தினையும்,
ஐந்திற்க்கு ஐந்தாம் இடமான ஒன்பது இடத்தினையும்,புத்திர காரகனான குரு பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

  அதாவது புத்திர ஸ்தானாதிபதியும்,புத்திர காரகனான குரு பகவானும் நீசம்,பகை,அஸ்மனம்,
வக்கிரம் மற்றும்  மறைவோ அல்லது மறைவிட அதிபதி தொடர்போ அல்லது  அரவான ராகு ,கேதுவின் சேர்க்கையோ அல்லது நட்சத்திர சாரமோ பெறாமல் இருக்கிறதா ?'' என கவனிக்ப்பட வேண்டும் .

10 ) நிறைவாக தம்பதிகள் இரண்டு பேருக்கும் தசவித விவாக பொருத்தம் உள்ளதா ? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் . இதில் 13 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் அதில் குறிப்பாக தினம்,கணம்,ராசி ,ரஜ்ஜூ,பால் மற்றும் யோனி பொருத்தங்கள் உள்ளதா ? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

                          

நன்றி !

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

வாட்ஷ் அப்
 9715189647

  செல்
 9715189647
  7402570899

                  

  அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.Sc .MA,BEd 
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் .
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம் .

My email
 masterastroravi@gmail .com

My blogspot .Google search

AstroRavichandran .
blogspot .com

AstroRavichandransevvai .
blogspot .com

astrosmartnotes .blogspot .com.

..............................................