Monday 17 August 2020

நிழல் கிரகங்கள் தரும் சூட்சும உண்மைகள்.

 நிழல் கிரகங்கள் தரும் சூட்சும உண்மைகள்.


                       


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     சந்திர கிரகணம்


        சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். பிறகு மெல்ல நகரும்போது நிழல் விலகிவிடும். இவ்வாறு பூமியின் நிழலால் சந்திரனின் ஒளி சிறிது நேரம் மங்கி இருப்பது "சந்திர கிரகணம்" ஆகும்.


  பூமியின் மீது இந்த நிழல் சிறிது நேரம் 

விழுவதற்கான காரணம் நிழற் கிரகங்களான இந்த ராகு மற்றும் கேது சந்திரனை விழுங்குவதாக நம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள்.


         பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சந்திரனும் ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது.


      இப்படி பூமியை சுற்றி வரும் சந்திரன் பூமியின் வட்டப்பாதையில் மேல் நோக்கி செல்லும் போது ஒரு முறையும், கீழ்நோக்கி செல்லும் போது மற்றொரு முறையும் ஆக இருமுறை வெட்டுகிறது. இவ்வாறு சந்திரன் மேல் நோக்கி செல்லும் போது( acending node), பூமியின் பாதையை சந்திப்பது "ராகு" என்றும்,


     கீழ்நோக்கி வரும்போது பூமியின் பாதையை சந்திப்பது (decending node)  "கேது "என்றும் நவீன விஞ்ஞானம் கூறுகிறது.


   புராண ஜோதிட நூல்களின் படி சாயா (நிழல்) கிரகங்கள் என்பதையே அறிவியலின்படி மாயத்தோற்றம் ஆக உள்ளதாக விஞ்ஞானம் கூறுகிறது.


   நவக்கிரகங்களை பாம்பு தலையும் ,மனித உடம்பும் கொண்டவர் கேது பகவான் ஆவார்.

 மனித தலையும், பாம்பு உடலும் கொண்டவர் ராகு பகவான் ஆவார்.


  ராகு பகவானை "கரும்பாம்பு" என்றும் கேதுவை "செம்பாம்பு" என்றும் அழைக்கப்படுகிறது.


  மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து போகங்களையும் வாரி வழங்குபவர் " ராகு பகவான் ஆவார்".

ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தினை அள்ளி வழங்குபவர் "கேது பகவான் ஆவார்.


  ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் இருக்கும் இடத்திற்கு ஏழாம் கட்டத்தில் கேது பகவான் வாசம் செய்கிறார். அதாவது ராகு பகவானுக்கு 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார்.


  எல்லாக் கிரகங்களும் முன்னோக்கி நகர இந்த அரவுகளான ராகு-கேது பகவான்கள் மட்டும் பின்னோக்கி நகரும் தன்மை கொண்டதாக உள்ளது . இதன் அடிப்படையில் இவ்விரு நிழல் கிரகங்கள் மற்ற கிரகங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது.


 ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இவ்விரு நிழல் கிரகங்கள் பின்னோக்கி நகரும் தன்மை உடையதால் இவ்விரு கிரகங்களுக்கு வக்கிரம் அடைவது கிடையாது.


  ராகு பகவான் அமரும் பாவத்தினை கெடுத்து அப்பாவத்தில் உள்ள கிரகங்களின் பலனை தர விடமால் தடுப்பது போல கேதுபகவான் செய்வதில்லை.


  ராகு மற்றும் கேது ஆகிய இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் பதினெட்டு மாதங்கள்( ஒன்றரை வருடம்) வாசம் செய்கிறது. எனவே பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வர பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.


     ராகு பகவானைப் போல யோகத்தை தரக்கூடிய கிரகம் வேறு எதுவும் இல்லை. 

எனவே தான் "இராகுவை போல கொடுப்பாரில்லை, கேதுவை போல கெடுப்பாரில்லை என்றும்" ராகு கெடுத்துக் கொடுக்கும் என்றும்,

 கேது கொடுத்துக் எடுக்கும் என்றும் சொல்லோடை உண்டு.


   ராகு பகவான் மேஷம் முதலாக கன்னி வரை உள்ள முதல் ஆறு வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தருவார் என்றும், கேது பகவான் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு வீடுகளுக்குள் இருப்பின் நல்ல பலன்களைத் தருவார் என கூறப்படுகிறது.


  ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் நற்பலனை தருவார்.இவ்வாறு நல்ல பலனை ராகு தர வேண்டும் எனில் ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு கேந்திர ஸ்தானமான 1,4,7,10  சுப கிரகங்கள் அமர்ந்து இருக்க வேண்டும்.


   இதேபோல கேது பகவான் ஆனவர் மேஷம், கடகம், சிம்மம், விருட்சிகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய லக்னங்களுக்கு கேதுபகவான் தனது தசை காலங்களில் நற்பலனை தர கூடியவராகவும், சுபராகவும் உள்ளார். ஆகவே இவ்வீடுகளில் கேது பகவான் நன்மையைத் தரவல்லவர் ஆவார்.


   ராகு பகவான் ஆனவர் சனியைப் போலவும் ,

கேது பகவான் ஆனவர் செவ்வாயைப் போலவும் செயல்படுவார்.


 ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வழிபடுவது போல கேது பகவானை வழிபட உகந்த நேரம் எமகண்ட காலமாகும்.


     ராகுபகவான் ஆனவர் தன்னோடு சேர்ந்த கிரகங்கள் தன்மையையே மாற்றிவிடும் தன்மை உடையது. குருபகவானின் தன்மையான ஆன்மீக எண்ணத்தினை ராகுபகவான் உடன் நெருங்கி இணையும்போது (8 பாகைக்குள் ) ஜாதகரை கடவுள் நம்பிக்கை அற்றவராக மாற்றிவிடுகிறது.

 புத்திர காரகன் என பெருமையாக புகழப்படும் குருபகவான் உடன் சேரும் ராகு பகவான் புத்திர தோஷத்தை உண்டாக்கி விடுகிறது.


  மனநிலை காரகன் எனப்படும் சந்திர பகவானுடன் ராகு பகவான் சேர உறுதியான மனநிலை அற்றவராகவும், மனக்குழப்பம் உடையவராகவும் மற்றும் தெளிவான முடிவு எடுக்க தடுமாறும் மனநிலை உடையவராகவும் மாற்றிவிடுகிறது. இவை மட்டுமல்லாமல் சந்திரனே மாதுர்காரகன் என்ற வகையில் தாயின் உடல் சுகத்தை குறைக்கிறது. தாயாரால் பலன் அடையும் யோகம் அற்றவராக மாற்றிவிடுகிறது.


   களத்திரகாரகன் எனப்படும் சுக்கிர பகவான் உடன் ராகு பகவான் சுபத்துவம் பெறாத நிலையில் சேரும்போது களத்திர தடையை தருவதுடன் சாதகர் காம எண்ணம் மிகுதியாக உடையராக்கி வேலி தாண்டிய வெள்ளாடு போல மனதினை காம அலையில் தள்ளாட வைக்கிறது. ஒரு சிலருக்கு காதல் மணம் மற்றும் கலப்பு மணத்தை தருகிறது.


 காம கிரகம் அல்லது மங்களநாயகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானுடன், ராகுபகவான் சேரும்போது சாதகர் காம எண்ணம் மிகுதி உடையவராக மாற்றுகிறது மற்றும் வீரமில்லாத கோழையாகவும் மாற்றிவிடுகிறது. பூமி காரகனான செவ்வாய் பகவானுடன் சேரும் ராகு பகவான் பூமி சேரும் யோகம் அற்றவராக தனது சேர்க்கையில் உருவாக்கிவிடுகிறது.


 ஆத்மகாரகன் சூரிய பகவானுடன் ராகு பகவான் சேரும்போது ஆன்மீகத் தன்மை அற்றவராக மாறுவதோடு சூரியனின் காரக பலனான அரசாங்க யோகம் மற்றும் தந்தையால் யோகம் ஆகியவற்றில் யோக பங்கத்தை உருவாக்கி விடுகிறது.


  வித்தை காரகனான புதன் பகவானுடன் ராகு சேர்க்கை தனது வித்தையை நேரிய வழியில் பயன்படுத்தாதவனாக மாற்றிவிடுகிறது. மாமன் வழி உறவுகளால் பயனற்ற தன்மையை தந்துவிடுகிறது.


  ராகு பகவானை போல சேர்ந்த கிரகங்களின் இயல்பான பலன்களை கேதுபகவான் மாற்றுவது கிடையாது கேதுபகவான் தன்னுடன் சேர்ந்து உள்ள கிரகங்களின் பலனை உயர்த்தி பெருமைப்பட வைக்கிறது.


 கேது பகவான் ஆனவர் குரு, சனி உடன்  சூட்சும வழியில் தொடர்பு கொள்ளும்போது போது ஆன்மீக வழியில் உயரிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதர கிரகங்களான சூரியன்,சந்திரன்,

செவ்வாய் சுக்கிரன் புதன் உடன் சேர்ந்தாலும் அதன் இயல்பான பலன்களை கெடுப்பதும் இல்லை.


  ராகுபகவான் ஆனவர் லக்கினம் எனப்படும் சாதகர் , குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகியவற்றில் இடம்பெறும்போது திருமணத்தடையை தருகிறார். இதே போல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருக்கும்பொழுதோ அல்லது புத்திர காரகனான குருபகவான் உடன் தொடர்பு கொள்ளும்பொழுது புத்திர தோஷத்தை உருவாக்குகிறார்.


  மாறாக கேது பகவான் மேற்கண்ட ஸ்தானங்களில் இடம்பெறுவது பாவ கிரகம் என்ற வகையில் நல்லதல்ல. மற்றபடி அந்த ஸ்தானங்களை ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் கெடுத்து விடுவதில்லை.


   ராகுபகவான் நவீன யுகத்தில் சினிமாவில் நடித்தல், நாடகம் மற்றும் தொலைக் காட்சி போன்ற நேரடி ஊடங்களில் தோன்ற வைத்து புகழ் கொடியில் அமர வைக்கும்.


    ஒருவரது ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள்  சுபத்துவம் பெற்ற நிலையில் ராகு தசை மற்றும் புத்தி நடப்பில் உள்ள காலங்களில் சாதகரை அந்நிய தேசம், அந்நிய மொழி மற்றும் அந்நிய நபருடன் பழகி பொருளீட்டும் நிலையை தருகிறார்.


 கணிப்பொறி இயக்கும் அறிவு நிரம்ப பெற்று இணைய வழி வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்றவற்றின் மூலமாக நிரம்ப அறிவு பெற்று அதன் வழியாக மிகுந்த பொருளீட்டும் யோகம் உடையவராக திகழ்வார்.


   ஜாதகத்தில்  ராகு பகவான் பலம் பெற்று செவ்வாய் பகவானும் சுபத்துவம் பெற்று நிலையில் அறுவை சிகிச்சை நிபுணராக சாதகரை மாற்றி அழகு பார்க்கிறார்.


  சமூக ஊடகங்கள் (facebook,youtube,twitter,instagram,blog and website) வழியாக மக்களை சந்தித்து அதன் வழியாக பொருளீட்டும் யோகமும் பெறுவார்.


  ராகுபகவான் ஆனவர் கண்ணுக்கு தெரியாத விஷயங்களையும் பிரமாண்டமாக காட்டக்கூடிய வல்லமை படைத்தவர் ஆவார்.


  லாட்டரி சீட்டு போன்ற சூதாட்டம் , அரசுக்கு விரோத தொழில், நாகரிகமாக ஏமாற்றுதல் பங்குச்சந்தை, நிதி நிறுவனங்கள் நடத்தி கவர்ச்சியாக விளம்பரம் செய்து ஏழை மக்களை பங்குதாரர் ஆக்கி இறுதியில் ஏமாற்றி விடுதல் போன்றவற்றிற்கு காரணகர்த்தா ராகு பகவானாவார்.


   ஒரு சிலரை ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வத்தை உண்டாக்கி அதில் ஈடுபட வைப்பவர். ராகுவானவர் ஒருவர் மந்திர தந்திர வித்தைகளில் ஆர்வத்தை உண்டாக்கி பில்லி ,சூனியம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைப்பார்.


   ராகு பகவான் ஒருவர் மற்றவரை தெரிந்தே ஏமாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்.  ராஜ தந்திரம், சூழ்ச்சி, கபடதன்மை, சிறந்த பேச்சாற்றல் போன்றவற்றை பெற்று விளங்குபவர்.


   கேது பகவான் ஆனவர் மற்றவரை ஏமாற்ற விரும்பாதவர், தன்னளவில் தாழ்வுமனப்பான்மை உடையவராகவும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவராகவும் மாற்றும் தன்மை உடையது.


  கேது பகவான் ஆனவர் ஞானத்தினை வழங்கக் கூடியவர். ஒருவரை அருள்வாக்கு சொல்பவர் ஆகவும், குறி சொல்லும் பூசாரி ஆகவும், நல்ல சோதிடர் ஆகவும், ஆலய திருப்பணி செய்பவராகவும் ,ஆலய வாசலில் இறைவனுக்கு உகந்த பூசை மற்றும் புனர்ஷ்கார பொருட்களை  விற்கும் கடைக்காரர்களாகவும் மாற்றி அழகாக செயல்பட வைப்பார்.


  சிலநேரங்களில் விரக்தி, தாழ்வுமனப்பான்மை, கபட எண்ணத்திற்கும், அகங்காரத்திற்கும் உரியவர். இவரே சந்நியாசம், கணபதி உபாசனை, புண்ணிய ஸ்தல யாத்திரை மேற்கொள்ள செய்பவர் ஆவார்.


   கேது பகவான் பாட்டியருக்கு காரகத்துவம் உடையவராகவும், வைராக்கியத்தை மோட்சத்திற்கு உரியவர்.போதை தரக்கூடிய பானங்களான கஞ்சா, அபின் போன்றவற்றிக்கும் காரகன் ஆவார்.


  ராகுபகவான் ஆனவர் போகக்காரகர் ஆவார். பாட்டனுக்கு உரியவர் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு (take it easy ) வாழ்க்கையில் செயல்படுபவர்.


  கேது பகவான் ஆனவார் ஆணவம், திமிர் மற்றும் சிறைவாசம் போன்றவற்றிற்கு முதியவர் புண்ணிய தலங்களையும்,

மகான்களையும் தரிசிக்கும் வாய்ப்பையும் மற்றும் சந்தர்ப்பத்தையும் தரக்கூடியவர் ஆவார். நல்லவற்றிற்காக மாந்திரீகம் செய்தல் ஆகியவற்றிற்கும் இவரே காரகர் ஆவார்.


  இவர்கள் சக்தியின் அருள் பெற்றவராவார். அந்நிய மனிதர்களிடம் தொடர்பு ,அந்நிய மொழி, அந்நிய தேசத்தில் வசித்தல் போன்றவற்றை தரக்கூடியவராவார்.இவை மட்டுமில்லாமல் தரித்திர யோகம் போன்றவற்றினை அளிப்பவரும் இவரே ஆவார்.


 நிழல் கிரகங்களுக்கு(ராகு மற்றும் கேது பகவான்) சொந்த வீடு கிடையாது.இவ்விரு கிரகங்கள் இருக்கும் வீட்டையே தனது  சொந்த வீடாக கருதி பலன் தர ஆரம்பிக்கிறது.


   நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தனது தசை காலங்களில் முதலில் தான் இருக்கும் வீட்டின் பலனையும், பிறகு தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலனையும், இத்துடன் தன்னை பார்க்கின்ற கிரகங்களின் பலனையும் மற்றும் தான் பெற்ற நட்சத்திர சார நாதன் பலனையும் அதன் திசை காலங்களில் கலந்து தர முயற்சிக்கும்.


  நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை  ஜாதகருக்கு தந்து அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் கொண்டு செல்லும்.


  நிழல் கிரகங்கள் கேந்திர மற்றும் கோண அதிபதிகளின் நட்சத்திரங்களை பெற்றிருக்கும் பொழுது அதன் திசை காலங்களில் கேந்திர கோணாதிபதிகள் போல் செயல்பட்டு யோக பலனை ஜாதகருக்கு தந்து விடுகிறது.


    நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தரும் பலன்களை கணிப்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.இதன் பலனை கணிக்க ஜோதிடருக்கு மிகுந்த ஞானமும் மற்றும் அனுபவ அறிவும் தேவைப்படுகிறது.


நன்றி!


(ஜோதிட அரசு மாத இதழில் செப்டம்பர்- 2018-ல் வெளிவந்த எனது கட்டுரை)


(தங்களது ஜாதக பலன் திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் எண்

   9715189647


  செல்

   9715189647

     7402570899


My website


   www.astroravichandransevvai.in


My email

masterastroravi@gmail.com


                            


அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday 13 August 2020

முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க..

 

                                            

முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க....


                                         


  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!


     ஒரு மனிதனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் மிக முக்கியமான பங்கு நவக்கிரகங்களுக்கு உண்டு.


  ஒரு மனிதனை கற்றவனாக மற்றும் படிப்பாளியாக ஏற்றிச்செல்ல அவர்களது ஜாதகத்தில் இரண்டாமிடம், நான்காம் இடம், ஐந்தாமிடம்  மற்றும் ஒன்பதாமிட இடம் அதிபதிகளான கிரகங்கள் பலம் பெற்று நிற்பதோடு கல்விக்கு உரிய கிரகமான குருவும் புதனும் பலம் பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக லக்னாதிபதியும் பலம் பெற்றிருப்பதோடு உரிய தசையும் படிக்கும் காலத்தில் நடப்பில் இருக்க வேண்டும். ஒருசமயம் அந்த ஸ்தான கிரகங்கள் பாவிகளான சனி செவ்வாய் ராகு போன்ற கிரகங்களுடன் சேர்ந்து பங்கமடைந்து நின்றாலும் , நீசம் பகை மற்றும் மறைவிடம் போன்ற இடங்களில் பலமிழந்து இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன் ,குரு மற்றும் சுக்கிரன்  போன்ற கிரகங்களது தொடர்பினை பெரும்பொழுது அது முழு பலம் பெற்று அதன் தசா காலங்களில் சாதகரை கற்றவனாக மாற்றிவிடுகிறது.

 

  சில நேரங்களில் இயற்கை சுப கிரகங்களாக மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் இருந்து உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அது கேந்திரங்களில் அமரும்பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை தந்து அதன் தசை அழைப்பில் இருந்தாலும் சாதகனை படிக்கவிடாமல்   செய்து விடுவதும் உண்டு.


  உதாரணமாக மிதுன லக்னமாக இருந்து நான்காமிடத்தில் புதன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷத்தை பெற்றுள்ள நிலையில் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாமல் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உண்டு.


   இவை தவிர அந்த கிரகங்கள் பெற்ற நட்சத்திர சாரநாதன் பலமிழந்த சூழ்நிலையிலும் ஜாதகரை கல்வி நிலையில் உயர்ந்து செல்ல முடியாத துர்பாக்கிய நிலையை தந்துவிடும் உண்டு.


  எனவே  பலன் அளிக்கும் பொழுது பலவற்றை ஆராய்ந்தறிந்து பலன் அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது.


  ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி பலம் பெற்று மகா தனயோகம் என்று அழைக்கக்கூடிய 

2 ,9, 11-க்குடைய கிரகங்கள் சேர்ந்து அல்லது பார்த்துக்கொண்டாலோ அல்லது பரிவர்த்தனை பெற்று தனகாரகன் குரு பகவானது தொடர்பினை பெற்ற நிலையில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகரை பொருளாதாரத்தில் மேல் நோக்கிய நிலையில் தந்து விடுவதும் உண்டு.


  ஒருவரது ஜாதகத்தில் குரு, சனி  மற்றும் கேது  ஆகிய மூன்று கிரகங்கள்‌ தொடர்பு பெற்ற நிலையில் ஜாதகரை ஆன்மீக வழியில் அழைத்துச் செல்வது உண்டு.


ஒருவர் ஜாதகத்தில் இலக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டாமிடம் ஆகிய இடங்களுடன் பாவிகளான  சனி, செவ்வாய் மற்றும் நிழல் கிரகங்களான ராகு ,கேது தொடர்பு இல்லாத சூழலில் அந்த ஸ்தானாதிபதிகள் பலம் பெற்ற நிலையில் புத்திர தோஷம் அற்றவராக இருப்பின் அந்த ஜாதகர் இளம்வயதிலேயே திருமணம் செய்து குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவித்து  இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபத்துவம் ஆன நிலையில் இருக்கின்றதோ, அந்த கிரகங்களின் திசை நடப்பில் உள்ள காலங்களில் அந்த கிரகத்தின் ஆதிபத்திய மற்றும் காரக பலன்களுக்கு  ஏற்றவாறு தனது வாழ்வை மாற்றிக் கொள்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் குரு மற்றும் புதன் பலம் பெற்று இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொண்டு அதன் தசை நடக்கும் காலங்களில் அவர் பிறருக்கு போதிக்கும் ஆசிரியராகவோ அல்லது போதகராகவோ தமது வாழ்வினை அமைத்துக் கொள்வார்.


 ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் பலமடைந்து வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில்  அமர்ந்து சுபத்துவம் பெற்ற நிலையிலும் மற்றும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நல்ல ஜோதிடராக சமூகத்தின் மத்தியில் வலம் வந்து பொருளீட்டி புகழ் பெற்று வாழ்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடமும், விரய ஸ்தானமான 12-ஆம் இடங்களும் பலம்பெற்று அதன் தசை நடப்பில் உள்ள காலங்களுடன் சாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் ராகு பகவான் அந்நிய தேசம், அந்நிய மொழி மற்றும் அந்நிய நாட்டில் வசிக்கக் கூடிய யோகத்தை தரக்கூடிய கிரகம் என்பதால் அது சுபத்துவம் பெற்று நிலையில் 8 12ஆம் இடங்கள் தொடர்பு பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் ஜாதகர் கடல் கடந்து சென்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.


  ஒருவரது ஜாதகத்தில் ஒளி கிரகங்களின் வீடுகளான கடகம் மற்றும் சிம்மம் பலம் பெற்று அதன் அதிபதிகளான சூரியன் மற்றும் சந்திரன் பலம் பெற்ற சூழலில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் ஒருவர் அரசாங்கத் பதவியைப் பெற்று பொருளீட்டி புகழுடன் வாழ்வார்.


   ஒருவரது ஜாதகத்தில் பெரும் கோணமான ஒன்பதாம் அதிபதியும், பெருங்கேந்திர ஸ்தானமாகிய பத்தாம் அதிபதியும் தங்களுக்குள் தொடர்பு பெற்ற சூழலில் அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் அரசு உயர் பதவியில் அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.


  ஒருவரது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டில் சுபக்கிரகங்கள் இருந்து அதன் தசை நடக்கும் காலங்களில் ஜாதகர் வாழ்வில் உயரிய அந்தஸ்துக்கு இட்டுச்செல்லும்.


  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று இரண்டாம் இடத்தில் சனி மற்றும் ராகு தொடர்பு பெற்ற நிலையில் புகழ் பெற்ற வழக்கறிஞராக வலம் வரும் யோகம் ஜாதகத்தில் உண்டு.


 சினிமாவில் புகழ்பெற அவரது ஜாதகத்தில் முதல் நிலை சுப கிரகமான சுக்கிரன் பலம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் தொடர்பு பெற்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் சினிமாவில் கொடிகட்டி பறக்க வைக்கும்.


 பெரிய நிதி நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உள்ள ஜாதகத்தில் தனஸ்தானமான இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் குரு பகவான் தொடர்பு பெற்ற நிலையில் ஜாதகரை அது சார்ந்த துறையில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க உதவுகிறது.


   ஒரு ஜாதகத்தில் சனி பகவான் பாவத்துவம்  பெற்ற நிலையில் பலம் பெற்று நிற்கும் பொழுது கீழான நிலையில் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய வேலையை  பார்க்க வைக்கும்.  சாக்கடையில் வேலை பார்த்தல், பழைய பேப்பர் மற்றும் இரும்பு சாமான்கள் வாங்குதல், உடல்முழுதும் மசகு அப்பிக்கொண்டு வேலை பார்க்கக்கூடிய சூழலை தரும்.


  சனி பகவான் சுபத்துவம் பெற்று நிலையில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் குடிக்க இயலாத பெட்ரோல் ,டீசல் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க் வைத்திருத்தல் மற்றும் அதில் வேலை பார்த்தல், கனரக வாகனங்களை இயக்குதல் ஊர் போற்றும் மக்கள் தலைவராக விளங்கும் சூழல் போன்றவற்றை தருகிறது


ஒருவர் ஜாதகத்தில் புதன் சுபத்துவம் பெற்ற நிலையில் கணித பேராசிரியர்,இசை அமைப்பாளர், புள்ளியியல் நிபுணர்,நிகழ்ச்சிகளை தொகுத்தல்,செய்தி சேகரிப்பாளர், எழுத்தாளர்,கவிஞர்,பாடல் ஆசிரியர், தலையங்கம் எழுதுபவர் மற்றும் இலக்கியவாதி ,

நுண்கலை வல்லுநர் (ஓவியம்,சிற்பம்,

கூடைமுடைதல்,...) போன்றவற்றுள் அடி எடுத்து வைத்து புகழ் பெற வைப்பார்.


   ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் சுபத்துவம் பெற்ற நிலையில்

 தகவல் தொழில்நுட்பம் (IT field), கணிப்பொறித் துறை ,ஆராய்ச்சி துறை மற்றும் கணிதத்துறையில் அடியெடுத்து வைத்து புகழ் பெற வைப்பார்.


   ஒருவர் ஜாதகத்தில் சந்திர பகவான் பலம் பெற்ற நிலையில் நீர்  சார்ந்த தொழிலான பால் குடிநீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் போன்ற குடிக்கும் தண்ணீர் சார்ந்த தொழில்கள், தண்ணீரில் வாழும் நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு மற்றும் உப்பாலங்கள் பொண்டாட்டி அடி எடுத்து வைத்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும்.


தொடரும்..


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் & டெலிகிராம் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & டெலிகிராம் எண்

   9715189647


   செல்

   9715189647

    7402570899


                           


   அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


Email

masterastroravi@gmail.com

தசை மற்றும் அந்தாரம் கணக்கிடும் முறை மற்றும் இதர விளக்கம்

 தசை மற்றும் அந்தரம் கணக்கிடும் முறை மற்றும் இதர விளக்கம்.



             


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     சாதகர் பிறந்த அன்று உள்ள நட்சத்திர ஆதியந்த பரம நாழிகையை கணக்கிட்டு அதிலிருந்து சாதகர் பிறந்த நேரம் வரை உள்ள‌ நட்சத்திர நாழிகையினை கழித்து கிடைக்கும் மீதமுள்ள நாழிகையினை நட்சத்திர இருப்பாக கணக்கிடப்பட்டு அந்த இருப்பு நாழிகையினை அந்த நட்சத்திரத்திற்கு உரிய தசா வருடத்தால் பெருக்கி கிடைப்பதை ஆதியந்ந பரம நாழிகையால் வகுத்து வரும் மீதியினை தசாவுக்குரிய " வருடம்" ஆகவும் கணக்கிடப்படுகிறது.


    பிறகு அதில் கிடைக்கும் 'ஈவு'வினை பன்னிரண்டு மாதத்தால் பெருக்கி கிடைப்பதை ஆதியந்த  நாழிகையால் வகுக்க வரும் மீதியினை தசாவின் மாதங்களாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


    பிறகு அதில் கிடைக்கும் 'ஈவு'வினைனை ஒரு மாதத்திற்கு உரிய முப்பது நாட்களால் பெருக்கி வருவதை ஆதியந்த நாழிகையால் வகுக்க கிடைக்கும் மீதி தசாவுக்குரிய நாட்களாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


  மேற்கண்ட வகையில் பிறந்த குழந்தைக்கு தசா இருப்பு கணக்கிடப்படுகிறது.


  கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய தசை ஜனன கால இருப்பு தசையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.


  ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை ஜெனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்

கொள்ளப்படுகிறது.


 மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஜெனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்

கொள்ளப்படுகிறது.


 திருவாதிரை, சுவாதி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை ஜனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்

கொள்ளப்படுகிறது.


 புனர்பூசம், விசாகம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை ஜனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


 பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை ஜெனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்

கொள்ளப்படுகிறது .


ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை ஜெனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்

கொள்ளப்படுகிறது .


அசுவதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஜனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


 பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை ஜனன கால இருப்பு தசையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


    மதிப்பிற்குரிய பராசர முனிவர் உடு மகா திசை மொத்தம் 120 ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது சமமற்ற வருடங்களாக கீழ்க்கண்ட வகையில் வரிசைக்கிரமமாக பிரிக்கப்பட்டுள்ளது.


சூரிய திசை 6 வருடம்


 சந்திர தசை 10 வருடம்


 செவ்வாய் திசை 7 வருடம்

 

ராகு தசை 18 வருடம்


குரு திசை 16 வருடம்


சனி திசை 19 வருடம்


 புதன் திசை 17 வருடம்


 கேது திசை 7 வருடம்


 சுக்கிர திசை 20 வருடம்


 ஆக மொத்தம் 120 வருடம்.


 புத்தி காணக்கிடுதல்


  உதாரணமாக

 சனி திசை குரு புத்தி


தசா வருடம்×புத்தி நாதன் தசா வருடம்

19×16=304


   304 ல் கடைசி இலக்கத்தினை மூன்றாம் பெருக்கி அதனை நாட்களாக கருதப்பட வேண்டும்.4×3=12 நாட்கள்


   மீதமுள்ள 30 என்பது மாதங்கள் ஆகும்.

30 மாதத்தினை வருடமாக மாற்ற 2 வருடம் 6 மாதம் ஆகும்.


சனி தசையில் குரு புத்தி 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் ஆகும்.


  உதாரணம்-(2)


     புதன் திசையில் ராகு புத்தி


  17× 18=306


கடைசி இலக்கம் 6×3=18 நாட்கள்


30 மாதத்தினை வருடமாக மாற்ற 2 வருடம் 6 மாதம் ஆகும்.


புதன் திசையில் ராகு புத்தி


 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள்


உதாராணம் -(3)


  சூரிய தசை செவ்வாய் புக்தி

6×7=42


   கடைசி இலக்கத்தினை மூன்றால் பெருக்க 2×3=6 நாட்கள்


  4 என்பது மாதங்கள்


சூரிய தசை செவ்வாய் புத்தி 4 மாதங்கள் 6 நாட்கள்.


அந்தரம் கணக்கிடுதல்


  உதாரணமாக சனி தசையில் ராகு புத்தி புத்திக்கு. உரிய அந்தரம் கணக்கியல்.


முதலில் புத்தி கணக்கிடப்படுகிறது.


19×18 =342


 கடைசி இலக்கம் 2×3=6


   34 மாதத்தினை வருடமாக மாற்ற 2 வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள்


வருடம்-மாதங்கள் -நாட்கள்

  02-10-06


   வருடத்தினை மூன்றால் பெருக்கி நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.


மாதத்தை கால் நாட்களால் பெருக்கி நாட்களாக எடுத்துக் கொள்ளப்பட  வேண்டும், 


 நாள்களை  1/2 நாழிகையால் பெருக்கி நாழிகையாக்கி கொள்ளப்பட வேண்டும்.


வருடம் 2 ×3 =6 நாட்கள்


மாதம் 10×1/4 = 2  1/2

 நாட்கள்


நாட்கள் 6× 1/2 நாழிகை= 3 நாழிகை


ஆக மொத்தம் 8 1/2 நாட்கள் 3 நாழிகை ஆகும்.இதனை புத்தி நாதன்  தசா வருடத்தால் பெருக்கி வேண்டும்.


நாட்கள்

 8 1/2 நாட்கள்× 18 = 153 நாட்கள் ஆகும்.இதனை மாதமாக மாற்ற 5 மாதங்கள் 3 நாட்கள்


நாழிகை


3×18=54 நாழிகை


ஃ சனி திசையில் ராகு புத்தியில் ராகு அந்தரம்


 5 மாதங்கள் 3 நாட்கள் 54 நாழிகை


 மேற்கண்ட இந்த முறையில் சனி தசை ராகு புத்தியில் உள்ள ராகு அந்தரம் கணக்கிட்டு போல ஏனைய அந்தரங்களும் கணக்கிடப்படுகிறது.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்& டெலிகிராம் எண்

   9715189647


     செல்

 9715189647

 7402570899


  My google pay ;         7402570899


                                              

                                                   

அன்புடன்    

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email; masterastroravi@gmail.com.

பரிகாரங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உண்டா? -(2)

 பரிகாரங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உண்டா?--(2)


                         


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!


       ஒரு பிரச்சினைக்கு பரிகாரங்களால் முழு தீர்வு பெற முடியாது. பரிகாரங்களால் இந்தப் பிரச்சினை வீரியத்தை குறைக்கலாம் .அதாவது நமது கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு "

"ஓங்கி அடிப்பதை தாங்கி அடிக்கலாம்".


   ஒரு கிரகங்களால் வரும் இன்னல்களை பரிகாரங்களும் மற்றும் தீவிர பக்தியாலும் அந்தப் பிரச்சினையின் தாக்கத்தை குறைக்கலாம் அல்லது அந்தப் பிரச்சினையை தாங்கக்கூடிய மனநிலையை இறைவன் நமக்கு தரலாம்.


  நமக்கு வரும் இன்னல்களை போக்க செய்யப்படும் பரிகாரங்கள் முழு நம்பிக்கையுடனும் மற்றும் முழு பக்தியுடனும் தீவிரமாய் ஈடுபாட்டோடு செய்ய நிச்சயம் அந்த பரிகாரங்களுக்கு பலனுண்டு.


  நமக்கு வரும் இன்னல்களுக்கு ஏற்ற பரிகாரம் எது ?  என்பதை கண்டறிந்து அதனை சரியான முறையில் செய்ய அந்த பிரச்சினை பரிகாரங்களால் பிரச்சனையின் வடு தெரியாமலே போய்விடும்.


  நாம் செய்யும் பரிகாரம் அந்த இன்னல்களை போக்க கூடியதாக இருக்க வேண்டும் . மாறாக இன்னல்களை (பிரச்சினை) அதிகப்படுத்தக்கூடிய மற்றும்  வலிமையினை ஏற்படுத்தக்கூடிய பரிகாரங்களை நாம் செய்யக்கூடாது.


  உதாரணமாக ஒருவருக்கு கடன் பிரச்சனைகளை தரக்கூடிய அதாவது ருண ,ரோக மற்றும் கடன் பிரச்சனைகளை தரக்கூடிய மறைவிட ஸ்தான திசையான ஆறாம் அதிபதி தசை நடக்கும்போது அந்த அதிபதியை பலப்படுத்தக்கூடிய  பரிகாரங்களை நாம் செய்யக்கூடாது. அந்த அதிபதியை நாம் வணங்கக்கூடாது .அந்த அதிபதிக்கு உரிய பரிகாரங்களை செய்யும் பொழுது அது பலப்பட்டு கூடுதலான கஷ்டங்களை நமக்கு தரக்கூடிய வாய்ப்புண்டு.


   பொதுவாக மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் அதன் திசை காலங்களில் வெற்றி மற்றும் சூட்சும உண்மைகளை அறிதல் , வெளிநாட்டுப் பயணம் போன்ற சுபத்துவ விஷயங்களை தந்தாலும் பெரும்பாலும் அதன் தசை காலங்களில் ருண,யோகம்,கடன் ,பிணி , எதிர்ப்பு(ஆறாம் அதிபதி) மற்றும் வம்பு சண்டை வழக்கு மரணத்திற்கான நிகரான தொல்லை (எட்டாம் அதிபதி) போன்ற கஷ்டங்களை தரும் என்பதால் அதன் அதிபதிகளை பலப்படுத்தக்கூடிய பரிகார பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்யக்கூடாது.


 எனவே ஒரு பிரச்சினைக்கு உரிய அல்லது உங்களுக்கு நடக்கக்கூடிய திசை மற்றும் புத்திக்கு ஏற்ப தக்க சோதிடர்கள்  உதவியோடு தக்க பரிகாரங்களை செய்யும்போது மட்டுமே அந்த இன்னல்களிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.


   பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்ககூடிய மனிதர்களும் அதிகம் உண்டு.ஒரு சில பரிகாரங்கள் செய்ய அரை லட்சம் அளவிற்கு பணம் வாங்கி உகந்த பரிகாரங்களை செய்யாமல் விடும் நபர்களும் உண்டு.எல்லா தொழில்களிலும் அசலான நபர்களும் உண்டு.போலியான பணம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு பணம் பறிக்கும் போலிகளும் உண்டு.


  மக்கள் ஏதாவது செய்து பிரச்சினையிலிருந்து விடுபட முடியுமா? என ஏங்கும் நபர்கள் இது போன்ற போலிகளிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்து விடுவதும் உண்டு.


  பலரது பிரச்சினைகள் ஒரு சில உண்மைத்தன்மையற்ற ஆன்மீகவாதிகள் பணம் சேர்க்கும் மார்க்கமாக அமைந்து விடுவதுண்டு.


  ஒட்டுமொத்தமாக எல்லோரையும் நாம் இங்கு குறை சொல்லிவிட முடியாது.நேர்மையான உண்மையான மற்றும் நாணயத்தன்மைமிக்க ஆன்மீகவாதிகளும் ஆங்காங்கே அரிதாக காணப்படுவதும் உண்டு.


  என்னை பொறுத்தவரை பரிகாரங்களுக்கு தேவையானது பணம் அல்ல.உங்கள் மனமே ஆகும்.பணத்தை செலவழித்து உங்களது பகட்டு தன்மையை இறைவனிடம் காட்டுவதற்கு பதிலாக எளிய செலவில் உங்களது முழு மனதினை இறைவனுக்கு அர்ப்பணிக்க அந்த பிரச்சினையே வந்தாலும் வந்த வடு தெரியாமல் போய்விடும்.


   அறுபத்து மூன்று நாயன்மார்களிலே கண்ணப்பநாயனரே மிக சிறந்தவராக கருதப்பட்டார். காரணம் அவர் படிப்பறிவில்லாத காட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய வேடவர் ஆவர். மேலும் அவர் காட்டில் தனக்கு கிடைத்த மாமிசத்தையும் , தேனையும் மட்டுமே இறைவனுக்கு உணவாக படைத்தவர். ஆனால் அதே நேரத்தில் இறைவன் கண்ணில் வந்த ரத்தத்தைப் பார்த்து தனது இரண்டு கண்களையுமே தானமாக வழங்க முழு மனதை இறைவனுக்காக ஒப்படைத்து முழுசரணம் அடைந்ததால் அவருக்கு சிவபிரான் காட்சியளித்தார்.


எளிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்து முழு மனதினை இறைவன்பால் வைத்து நாமே தனியாக ஒரு அறையில் இருந்து தக்க மந்திர அனுஷ்டானங்களை உச்சரிக்க நல்ல பலன்களை பெறலாம்.


 ஒருவருக்கு எதிரிகளால் தொல்லை உண்டாக காரணம் அவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று வேறு எந்த வகையிலும் சுமத்தும் பெறாத நிலையில் அதன் தசா புத்திகளில் நம்மைச் சுற்றி எதிர்ப்புகளும் மற்றும் எதிரிகளும் வாழ்வார்கள்.


  எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளை போக்க  வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட எதிரிகளால் உருவாகும் தொல்லைகளிலிருந்து எளிதாக விடுபட செய்யலாம்.


 ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 1,2,7,8 ஆகிய இடங்களில் நிழற் கிரகங்களான ராகு,  கேது இடம்பெற்றிருந்தாலோ அல்லது சனி ,செவ்வாய் பார்த்தாலோ கால தாமதம் திருமணம் ஏற்படும்.


 திருமண தடையை போக்க எளிய பரிகாரம்


  வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம். பூஜைக்கு முன்பு அந்த இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெய் ஆகிய நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.


 தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர் ஊதுபத்தியால் எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.


   விளக்கின் முன்பு அருகம்புல், துளசி கலந்த தீர்த்தம் மற்றும் நல்ல பழுத்த எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும்.


    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாகக் வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.


 அறுத்து பிழிந்த எலுமிச்சை பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் மூன்று அகல் விளக்குகள் போல செய்து ராகு காலத்தில் (குறிப்பாக சனிக்கிழமை 9 -10.30 ) கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும்.


"ஓம் ஸரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!

ஓம் ஸரீ நாராயண நமஹ!

ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமண்ய நமஹ!

ஓம் ஜம் ஹீரீம் மோகினி

சித்தி சுந்தரி கொளரி அம்பிகே! யோக பயங்கரி!

சகல ஸ்தாரை ஜங்கம முக ஹ்ருத!


  ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியோருடன் ராகுபகவான் சம்பந்தப்பட (சேர்க்கை மற்றும் நட்சத்திர சாரம்) புத்திர தோஷம் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் புத்திர தோஷம் போக்க எளிய பரிகாரம் அந்தக் குடும்பத்துப் பெண் விரதமிருந்து அரசமரம் சுத்திவந்து சுமங்கலி பெண்களுக்கு பூ ,பொட்டு மஞ்சள், குங்குமம் மற்றும் வஸ்திரம் அடங்கிய ஒரு தாம்பாலத்தை ஐந்து ( உங்களது பொருளாதார வசதிக்கு ஏற்ப ) சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக வழங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற நாகதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் எளிதில் பெறலாம்.


 வெள்ளியால் செய்யப்பட்ட நாகபடம் அடித்து நாகநாதசுவாமி சனிக்கிழமை ராகு காலத்தில் 9-10.30  அளவில் பாலாபிஷேகம் செய்து நாகதோஷ பரிகாரம் செய்து கொள்ளவும்.


  தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி,


 திருவாரூர் திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்,


 புதுக்கோட்டை பேரையூர் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி கோவில்,


 ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காலஹஸ்தி திருக்கோயில் 


   மேற்குறிப்பிட்ட  ஏதாவது ஒரு இடத்தில் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.சர்ப்ப தோஷம் உங்களது இல்லத்தில் மழலைச் செல்வம் உண்டாகி மகிழவைக்கும்.


  இது போன்ற எளிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்து அதிக செலவில்லாமல் முழுமனதுடன் திருப்தியுடன் செய்ய அந்த பரிகாரத்திற்கு பலன் கிடைத்தது உங்களை மகிழ்விக்கும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647


     செல்

  9715189647

     74025708999


 My google pay

  7402570899

Acc name: omsakthi online astro consulting centre


                     


அன்புடன்

ஜோதிடர்

 சோ.ப. ரவிச்சந்திரன்

      M Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email

masterastroravi@gmail.com


My blog

AstroRavichandran.blogspot.com


AstroRavichandransevvai.blogspot.com


எனது Astro Ravichandran sevvai என்ற எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டீர்களா.