Monday 30 April 2018

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு


.                                   
கிரகங்கள் படுத்தும் பாடு--

ஸ்ரீபத்ரகாளியமம்மன் துணை!

             இருமனம் இணையும் திருமண நிகழ்வில் இருவரும் உடல் மற்றும் உள்ளத்தாலும் இணைவு பெற்றிருக்கவேண்டும்.வெறும் உடல் இணைவு மட்டும்  நிகழ்ந்து உள்ள இணைவு நிகழாத தம்பதிகளிடையே இன்றைய காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உருவாகுகிறது.

           "கல்லானாலும் கணவன
         ் சிறு புல் ஆனாலும் புருஷன்"என தன்னை சமரசபடுத்திக்கொணடு வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.இதற்கு காரணம் பெண்கள் நிரம்ப கல்வியறிவு பெற்று பொருளாதார விஷயங்களுக்காக ஆண்களை சார்ந்து நிற்காமல் நிறைய பணம் ஈட்டும் வாய்ப்புகள் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிடுவதால் அவர்களால் சமூக கட்டுகோப்புக்காகவோ அல்லது பொருளாதர சார்புநிலைக்காகவோ பயந்து நிற்கவேண்டிய சூழலில் இருந்து விலகி நிற்கும் வாய்ப்பு வந்துவிட்டது.
இது பாரதிதாசன் கண்ட
"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
திமிர்ந்த ஞானசெறுக்கு கொண்டவளாக பெண் திகழவேண்டும்
   என விரும்பினார்.

    இதில் பெண்ணிற்கு ஞானத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை.அறிவார்ந்த செறுக்குதான் வேண்டும் என்கிறார்.இதை விடுத்து சம்பாரிக்கிறோம் என செறுக்கு கூடாது என்கிறார்.

            எனவே இதுபோன்ற சமூகசூழல் ஏதுவாக இருப்பதால் கிரகங்கள் அடிப்படையில் அவர்களுக்கு திசையினாலோ அல்லது கோசரப்படி அட்டமசனி ,ஏழரை சனி போன்றவை நடைபெறும் காலங்களில் ஏற்படும் சிறு சிறு வாதங்கள் தம்பதிகளுடையே நிகழ்ந்து அதனால் அவர்களுக்கிடையே கருத்து விவாதம் நிகழ்ந்து சிறு பிரச்சினை பெரிய பிரச்சினையாக வள்ளுவர் கூறியபடி "யாகாவராயினும் நாகாக்க "எனும் கட்டளைக்கு மீறி அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு,விவாகரத்து மற்றும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக்கொள்ளாத நிலை இப்படியாக ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி கூறியாக மாறிவிடுகிறது.இதுபோன்ற பிரச்சினைகள் படிக்காதவர்களை விட படித்தவர்களின் மத்தியில்தான் இதுபோன்ற ஈகோ கிராஸ் ஆகிறது.

              என்னிடம் போன் வழியாக சோதிட ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் இவ்விதமாக தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து அல்லது விவாகரத்து ஏற்பட்டவர்கள்தான அதிகம்.இதில் பெண்கள் துணிச்சலாக ஆடவரை வேண்டாம் என கூறிவிட்டு மறுதிருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.இது ஒரு விரும்பதகாது மாற்றமாகும்.

           எனவே இம்மாற்றத்தினால் குடும்பம் என நமது முன்னோர்கள் உருவாக்கி  வைத்து விட்டுபோன கட்டுகோப்பு நிலை உடைந்து விடக்கூடாது எனும் ஆதாங்கத்தில்
இப்பதிவை பகிர்கிறேன்.

            இதுவரை சமூக பொருளாதர விடுதலை ,சமூக கட்டுப்பாட்டுக்கு பயப்படுதல் ,பிறரை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமில்லாமை போன்ற சமூகவியல் மாற்றங்களால் எளிதாக சமூக வரம்பிலிருந்து விலகி மதசடங்குகளுக்கான அர்த்தங்களுக்கும் உட்படாமல் விலகி செல்லும் சூழல் தம்பதிகளுக்கிடையே வளர்ந்து வருதல் ஆரோக்கியமில்லாத சமூகமாற்றமாகும் என்பதை விளக்கினேன்.

               சோதிட அடிப்படையில் இப்பிரச்சினை நிகழ ஏதுவாக சில விஷயங்களை உங்களிடம் எனது சோதிட அனுபவ அடிப்படையாக கொண்டு பகிர்வதால் இதன் உண்மைநிலைகளை புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.இவை திருமணம் முயற்சி செய்யும் .

பெற்றோர்களுக்கும்,புதுமண தம்பதிகளுக்கும் உதவியாக இருக்கும்.
            1) முதலில் ஒரு பெண் (ஊர் ,பெயர் சொல்லவிரும்பவில்லை) திருமணம் ஆகி ஒரு குழந்தை வயிற்றில் ஜெனிக்கும் வரை திருமண வாழ்வை இன்பமாக அனுபவித்தோம்.ஆனால் எனது மகன்  வயிற்றில ஜெனித்ததிலிருந்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.நான் இனிமேல் அவரோடு வாழவே மாட்டேன் .என் பிள்ளை பிறந்தபோதுகூட அவர் வந்து பார்க்கவில்லை என ஆதாங்கப்பட்டார்.நான் இப்பொழுது அம்மா வீட்டில் தான் உள்ளேன்".என்றாள்.

             இருவரது சாதகங்களையும் ஆராய்ந்து பார்த்தபோது நல்லவிவாக பொருத்தம் உள்ள சாதகமாகத்தான் தெரிந்தது.பிறகு ஏன் அவர்களுக்குள் பிரிவு வந்தது  என அவர்களுக்கு பிறந்த குழந்தையின் சாதகத்தை ஆராய்ந்து  பார்த்தபோது அவனுக்கு ஏழரை சனி நடந்து கொண்டு இருப்பதையும்,இரண்டாமிட ராகு தசை நடப்பதையும் காணமுடிந்தது.இதனால் இவன் ஜெனிப்பதற்கு முன்புவரை அன்பாக போன தாம்பத்ய வாழ்க்கை ஜெனித்தபிறகு புயலடிக்க காரணமானது என அந்த பெண்ணிடம் விளக்கினேன்.தற்பொழுதும் தங்கள் கணவன் உண்மையில் உங்கள் மீது அன்பாக உள்ளார்.தற்சமயம் சிறுபிரிவுஏற்பட்டது நல்லது என விளக்கினேன்.

         ஒரு குறிப்பிட்ட காலம்வரை பிரிந்திருக்கும் காலத்தில் அவரைப்பற்றி உறவினர்களிடம் தவறாக சொல்வதை தவிருங்கள்.அவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கிவிடுவார்கள்.முடிந்தவரை அமைதியாக இருக்க முயலுங்கள்.தினந்தோறும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள் 

பிரச்சினை தீரும் என விளக்கினேன்.சேரும்வரை அவர்சார்ந்த நல்ல விஷயங்களை மனதிற்குள்  அடிக்கடி நினையுங்கள் என விளக்கினேன்.இவ்வாறு செய்வதால் மீண்டும் சேரும்காலத்தில் அது உங்களுக்கு அவர் பற்றிய தவறான அபிப்ராயங்கள் மறைய  வாய்ப்புண்டு என கூறினேன்.
தொடரும்.......


                                                 

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட ஆலோசனை மையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

எனது செல் ;-
97 151 89 647
மற்றோரு செல்
740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(குறிப்பு;தாங்கள் திருமணம் சார்ந்த சோதிட ஆலோசனை மற்றும் விவாக பொருத்தம் மற்றும் ஏனைய சந்தேகங்களுக்கு சோதிட அடிப்படையிலான தீர்வுகளை போன் வழியாக பெறலாம்.கட்டணம் உண்டு,பிறந்தேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து  அனுப்பி கட்டணம் செலுத்தும் வழிமுறையைப் பெறலாம்)

My Email;
masterastroravi@gmail.com

My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
My facebook link.click hear
m.facebook.com/ravichandran3538039

கிரகங்கள் படுத்தும் பாடு-- ( 58 )

            கிரகங்கள் படுத்தும் பாடு-( 58 )

                                                                    
                                             ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                 எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே !

அவர் நல்லவர் ஆவாதும்,
தீயவர் ஆவதும் !
நல்லவர்,தீயவர் என இரண்டும்
கலந்த நிலையை  கொடுப்பதும்
அவரவர் கட்ட ஸ்தான அமைப்பினாலே .



                 மக்களிடம் பொதுவாக குரு திசை என்றால் நல்லது செய்யும் என்றும்,சனி,ராகு திசை என்றால் கெடுதல்தான் செய்யும் என 
ஒரு வித தவறான கருத்து நிலவுகிறது.காரணம் என்னவெனில் அவர்களை பொறுத்தவரை குரு எனில் நல்லவர் எனவும்,சனி,ராகு என கெட்டவர் என்பதால் கெடுதல்தான் செய்வார் .

                 இந்த பதிவை கூர்ந்து படியுங்கள் தங்களது கருத்தை எல்லோறும் மாற்றிக்கொள்வீர்கள்.நல்லவர் ,கெட்டவர் என்பதெல்லாம் அவரவர் ஸ்தானத்தை பொறுத்து மாறிவிடும்.இயற்கை சுபர் கெடுதல் செய்வதையும்,இயற்கை பாவி நல்லது செய்வதையும் கண்கூடாக காணலாம்.

                முதலில் இயற்கை சுபரான குரு பகவான் துலாம் லக்கனத்திற்கு செயல்படும் விதத்தை காணலாம்.

                 ஒரு மனிதனின் ஆளுமைத்திறனில் முக்கிய பங்கு வகிப்பது கிரகநிலைகளே .ஒரு கிரகமானது இயற்கையிலே சுபராக இருந்தாலும் கட்ட அடிப்படையிலான ஸ்தானத்தை பொருத்தவரை மறைவு ஸ்தான ஆதிபத்திய அமைப்பை பெற்றவர்கள் உச்சம்,ஆட்சி போன்ற வலுவான அமைப்பை பெறாமல் அவையும் மறைவு ஸ்தான அமைப்புகள் ,நீசம் போன்ற அமைப்பை பெறும்போதுதான் வலுப்படுகிறது.

                     உதாரணமாக துலா லக்கனத்திற்கு மூன்று மற்றும் ஆறாமிடத்திற்கு  உரிய குருபகவான்  மூன்று மற்றும் ஆறாமிடங்களில் ஆட்சியோ அல்லது பத்தாமிடத்தில் குரு பகவான் உச்சம் பெறாமல் நான்காமிடத்தில் குரு பகவான் நீசம் அடைதல் நலம் பயக்கும்.

                 ஸ்தான அடிப்படையில் பாவியான குரு பகவான் பலவீனப்படுவது நல்லது.அவை ஆறாமிட ஆதிபத்திய பலனான ரோண ,ரோகம் மற்றும் எதிரி போன்ற பாதிப்பிலிருந்து விலகினாலும் அதேநேரத்தில் குருவின் காரக பலனான பணம்,பதவி,பட்டம் ,புகழ் மற்றும் குழந்தை பாக்கியம் இவற்றில் பாதிப்போ அல்லது தடையோ ஏற்படலாம்.


               குருவின் பார்வையை பொறுத்தவரை இயற்கை சுபராக இருந்தாலும் இவை சுப ஸ்தானங்களை பார்க்கின்றபோது அதன் பலனை பலவீனப்படுத்தும் .(இங்கு குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும்).மறைவிட ஸ்தானங்களை பார்க்கும்போது அவற்றின் தீய பலனை பலப்படுத்தும்.

                                                             

                துலா வக்கனத்திற்கு குருபகவான் கடக வீட்டில் உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்க்கும்போது அது தன ,வாக்கு மற்றும் குடும்ப நிலையை வலுவிழக்கத்தான் செய்யும் இங்கு உச்ச குரு பார்வை நல்லது செய்யும் என எடுத்துக்கொள்ள இயலாது.

              அடுத்து சுக ஸ்தானத்தை ஏழாம் பார்வையாக பார்க்கும்போது அவை சுப ஸ்தானம் என்பதால் அந்த இடத்தில் குருபகவான் அதன் பலன்களை பலமிழக்க செய்யும்.எனவே சாதகருடைய வண்டி ,வாகனம்,வீடு,சுகம்,கல்வி,கற்பு மற்றும் தாய் போன்றவற்றால் அடையும் பலன்களை குறைக்கும்.

            அடுத்து ஒன்பதாம் பார்வையாக தனது சொந்த வீடான மறைவு ஸ்தான தன் ஆதிபத்தியத்தை பார்க்கும்போது மட்டும் பலவீனப்படுத்தாமல் அதன் பலனை பலப்படுத்துகிறது.எனவே குருபகவான் உச்சம் பெற்று ஆறாமிடத்தை பார்வை செய்வதால் குரு திசையே நடைபெறும் காலத்தில் மேற்கண்ட தன மற்றும் சுக ஸ்தானத்தை பலவீனமாக்கி சாதகர் எவ்வித வருமானமும் இன்றி கடன் ,எதிரி மற்றும் வியாதி போன்ற ஏதேனும் ஒரு தொல்லைகளை அத்திசை முடியும் காலம் வரை மாறி மாறி வந்த சொல்ல இயலாத தொல்லைகளை சாதகர் அனுபவிப்பார்.

                                                                   

                       சனி பகவான் இயற்கை பாவி என்றாலும் அதே துலாம லக்கனத்திற்கு நான்கு மற்றும் ஐந்தாமிட ஆதிபாத்தியம் பெற்று லக்கன யோகராக இருப்பதால் ஐந்தாமிடத்தில் ஆட்சி பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் யோகங்களை வாரிவழங்குகிறது.இதன் பார்வையும் லக்கன யோகராக இருப்பதால் எவ்வித கெடுதலையும் தந்துவிடுவதில்லை.

                  ஆதலால் குரு திசை என்றால் ஆஹா ,ஒஹா என புகழ்வதும் ,சனி திசை(பாவி என்பதால்) என்றால் கடுமையாக கஷ்டம் தரும் பொதுவாக மக்கள் மனதில் உள்ள கருத்தை தவிர்கவே இவ்வளவு நேரம் விளக்கினேன்.

               இதேபோலவே மேஷ லக்கனத்திற்கு புதன் பகவானும் பாவியோட சேராதவரை சுபராக  இருந்தாலும் மூன்று மற்றும் ஆறாமிட ஆதிபத்தியம்  பெற்று பாவரவாதல் பலமிழப்பது  நல்லது.

  நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

     வாட்ஸ் ஆ ப்  

 97 151 89 647       

 செல்

                          740 257 08 99    

                         97 151 89 647.


                                                                               


அன்புடன்சோதிடர்ரவிச்சந்திரன்     M.Sc, MA, BEd,சோதிட ஆராய்சியாளர்வாழ்வியல் ஆலோசகர்,முதுநிலை வேதியியல் ஆசிரியர்ஓம் சக்தி ஜோதிட ஆய்வகம்கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.My email  masterastroravi@gmail.com
My  Astro blogspot. Google search
AstroRavichandran. blogspot. com.
   AstroRavichandransevvai.blogspot. com
.............................................................................

Saturday 28 April 2018

"காமம் மனித வாழ்வில் நிகழ்த்தும் பாடு "

காமம் மனித வாழ்வில்் நிகழ்த்தும் பாடு?

                                  

கிரகங்கள் படுத்தும் பாடு -( 21 )

ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

             ஒரு சில மனிதர்கள் தனது ஹார்மோன்களின் ஆட்டத்திற்கு ஏற்ப அதிக காம வயப்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?  அதற்கு கிரகங்கள் படுத்தும் பாடு என்ன? என்பதை அறிவியல் மற்றும் ஜோதிட அடிப்படையில்  ஆய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

           அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கும் போது "மனித உடலில் உள்ள சுரப்பிகளாவன கல்லீரல் மற்றும் கணையம் ஆகும். இதில் கணையம் என்பது நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்புகளின் மையமாக உள்ளது.நாளமுள்ள சுரப்பிகள் என்சைம்களையும்,நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களையும் சுரக்கிறது.

            இனப்பெருக்க ஹார்மோன்களை தவிர ஏனைய ஹார்மோன்கள் பிறந்ததிலிருந்து உற்பத்தியாகி மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது.ஆனால் இந்த இனப்பெருக்க ஹார்மோன்கள் மட்டும் ஒரு மனிதர் பருவ வயதை அடைந்தவுடன் சுரக்கிறது.

           இவையே ஒரு மானிடரை இனப்பெருக்கம் செய்து தனது சந்ததிகளை பெருக்கிக்கொள்ள  உதவியாக உள்ளது.இந்த பருவநிலை அடைவதையே நாம் குமரபருவம் என்கிறோம்.

              .இக்ககாலத்தில்தான் இருபாலருக்கும் பாலியல் எண்ணத்தை உண்டாக்கி எதிர் பாலரின் மீது கவர்ச்சியை உண்டாக்குகிறது.

                                  

              ஓரு  ஆடவருக்கு  மனைவி காரகனாகவும் ,மனைக்கு அதிபதியாகவும் இருக்கும் கிரகம் சுக்கிர பகவான் ஆகும்.

               இதே சுக்கிர பகவான்தான் காமத்திற்கும்,,பால் வினை நோய்க்கும் காரகராக உள்ளார்.

               இதேபோல ஒரு பெண்ணிற்கு கணவன் காரகர் மற்றும் மனைக்காரகர் செவ்வாய் பகவான் ஆவார்.

                  இந்த சுக்கிர பகவானும் ,செவ்வாய் பகவானும் பாவிகள் சேர்க்கை மற்றும்  பார்வை பெறுவதால்தான் ஒரு சிலர் காம வயப்படுவதற்கும் தரம் தாழ்ந்து நடப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.

                காமம் என்பதை "ஹார்மோன்களின் ஆட்டம் "என அறிவியல் கூறினாலும் இந்த ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஆண்ட்ரோஸன் (டெஸ்ட்ரோஸ்டீரான்)
மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸேஸ்டிரான் ,ரிலாக்ஸின் போன்ற நாளமில்லா சுரப்பிகளை தூண்டி காம வயப்படும் செயலை ஜெனன காலத்தில்  பணிரெண்டு ராசிக்குள் அடைபட்ட கிரகங்களே செய்கின்றன்.

               சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு இதேபோல செவ்வாய் மற்றும் சனி
இணைவு ஏழாமிடத்தில் இருந்தாலும் அல்லது ஏழாமிடத்தை பார்த்தாலும் இது போன்ற அமைப்புடையவர்கள் காமவயப்பட்டு தன்னிலும் தரம் தாழ்ந்த நபரிடம் காம ஈடுபாடு வைத்துக்கொள்ள தூண்டும்.

                                         

        
              இதேபோல ஒருவரது சாதகத்தில் சந்திரன் ,சுக்கிரன் மற்றும் ராகு இணைவு காம எண்ணம் மேலோங்கி இருக்கும்.

            செவ்வாய்,சுக்கிரன் மற்றும் ராகு பகவான் சேர்க்கை வெட்கம் கெட்ட காம உணர்வை கொடுக்கும்.

            சுக்கிர பகவானின் இணைவு 1,5,9 அல்லது 3, 7, 11 தொடர்பு ஒரு மனிதனை இயல்பான காம உணர்வை விட சற்று கூடுதலான உணர்வைக் கொடுக்கும்.

             சுக்கிர பகவான் 5,8 தொடர்பு பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானத்தை ஒரு மனிதனுக்கு வழங்கும்.

              சுக்கிர பகவான் 8,12 ஆம் பாவ தொடர்பு ஒருவரை பெண்களால் வலி ,வேதனை ,பிரச்சனை ,டென்ஷன் மற்றும் விரயம் கொடுக்கும்.

             லக்கனத்திற்கு இரண்டு ,ஆறாம் அதிபதி பாவரோடு சேர்ந்தாலும் அல்லது பாவர் சாரம் பெற்றாலும் இந்த அமைப்பானது இரண்டு அல்லது ஏழில் உண்டானால் காம எண்ணம் மிகும்.

             ஏழாமிடத்தில் இரண்டு மற்றும் ஆறுக்குடையவன் சேர காமி.

                               

              லக்கனத்தின் கோளும் ஆறின் கோளும்  பாவியோட சேர்ந்து நின்றாலும் காம எண்ணம் அதிகமாகும் வாய்ப்புண்டு.

                ஒரு மனிதனுக்கு நான்காமிடம் கற்பு ஸ்தானம்.இந்த ஸ்தானம் கெட்டு பாவர் சேர்க்கை மற்றும் பார்வை .இத்துடன் சுக்கிரன் /செவ்வாய் பாவி சேர்க்கை.பல மலர் கண்ட வண்டாவார்.மேலும் கற்பு ஸ்தானம் ஆறு,பணிரெண்டில் அமர்ந்தாலும் மேற்கண்ட பலனைத்தான் தரும்.

               சூரியன் ,சந்திரன் இணைந்து அமாவசை யோகம் பெற்று உடன் நான்கின் கோளும் சேர்ந்தால் காம எண்ணம் கூட வாய்ப்புண்டு.

                          ஏழாமதிபதியும் ,மூன்றாமாதிபதி தொடர்பு காம எண்ணத்தை தூண்டும்.

           ஏழு மற்றும் இரண்டாம் அதிபதி பாவி உடன் சேர்க்கை.

              ஆறில் சுபர் இருந்து மூன்றில் சந்திரன் ,செவ்வாய் இணைவு தவறாக நடக்க தூண்டும்.

               இது போன்ற அமைப்பை பெற்றிருப்பதால்தான் சிலர் வரம்பு மீறிய மற்றும் வேலி தாண்டிய வெளளாடாய் மாறி போய் விடுகிறார்கள்.

              "அன்பு மட்டுமே போதும் என்றால் ஒரு செல்ல பிராணி நாயை மட்டும் வளர்த்தாலே போதும் !
வெறும் காமம் மட்டுமே போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும் !
எங்கு காமமும்-காதலும் சரிபாதியாக சங்கமித்துக்கொள்ளும்போது உண்மையான இல்லறம் பிறக்கும்.

             "நமது தமிழரின் பண்பாடான "ஒருவனுக்கு ஒருத்தி "எனும் உயரிய கொள்கையை பின்பற்றுவோம்.

                காமமும் ,காதலும் கலந்து உடல் நலத்திலும் அக்கறையோடு இன்பத்தை தருபவள் மனைவி மட்டுமே
ஒருவனுக்கு ஒருத்தியான திருமண பந்தத்தோடு இணைந்து சுகம் பெறுவோம்.எய்ட்ஸ் எனும் அரக்கனை விரட்டுவோம்.நன்றி!

                                     

                               
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியி யல் ஆசிரியர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு,இந்தியா.

தொடர்பு கொள்ள
          செல்
97151 89 647
                740 257 08 99

     வாட்ஸ்அப் எண்
97 151 89 647

My Email
masterastroravi@gmail.com

(போனின் வழியாக தங்களது சாதகத்தின் பலனை கேட்டு பலன் பெற மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்க.திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து தருதல் போன்ற சேவைகளையும் பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
விரிவான சோதிட தகவல் பெற
Click my wrbsite
***********************************
AstroRavichandransevvai.blogspot.com
 AstroRavichandran. blogspot. com
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""::::""":"""""""""""""""""""""""""

"காதல் திருமணம் யாருக்கு கைகூடும் " ?

     "காதல் திருமணம் யாருக்கு

                                           கைகூடும் " ?


                                                
கிரகங்கள்  படுத்தும் பாடு-  (  22 )

ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

        "கண்ணின் கடைப்பார்வை காதலியார் காட்டி விட்டால் -மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் "

            ஒரு சிலரை காதல் மீது ஆர்வத்தினையும் ,காதல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும்,மன உறுதியையும் தருவதில் கிரகங்களின் பங்கு அளப்பறியது.

             சாதக கட்டத்தில் எந்த கிரகங்களாலும் மற்றும் ஸ்தானத்தாலும் ஒருவரை பெற்றோரும்,உற்றார் உறவினரும் எதிர்த்து நின்றாலும்
"இருபது வயது வரை என் பெற்றோர் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே உன் வசம் வந்தேனடா " என ஓடி கூட திருமணம் செய்ய வைத்துவிடுகிறது என்பதை "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் இருபத்திரண்டாம் பதிவில் பார்ப்போம்.

        "ஒருவர் காதல் கோட்டை கட்டவேண்டுமெனில் அதற்கு அஸ்திவாரமாக சாதக கட்டத்தில் ஜந்தாம் இடம் முக்கியமானது ஆகும்.

            ஜந்தாமிடமும் அதன் அதிபதியும் ஒருவருடைய கற்பனை ,புத்தி ,யுக்தி,எண்ணங்கள் ,காதல் உணர்வு ,எழுத்தாற்றல் ,மொழியாற்றல் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றிற்கு காரகமாக இருப்பதால் மேற்கண்ட யாவும் ஒருவருக்கு காதல் உணர்வை தூண்ட பாலமாக உள்ளது.

           எனவே லக்கனாதிபதி மற்றும் ஜந்தாமிட அதிபதி சேர்க்கை மற்றும் பரிவர்தனை தெய்வீகமான நேர்மையான காதல் உணர்வை ஒருவருக்கு வழங்கும்.

                                 

            ஜந்தாமிடம் மற்றும் லக்கன,குடும்ப ,களஸ்திர மற்றும் லாப ஸ்தான
( 5 மற்றும் 1,2,7,11 ) தொடர்பும் காதல் திருமணத்தை ஒருவருக்கு ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.இதில் குறிப்பாக ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பு காதல் திருமணத்தை தரும்.

             ஒருவரின் ஜாதகத்தில் இந்த ஜந்தாமிட அதிபதியும் ,கற்பனை ,ஆசை ,காதல் உணர்வை தரக்கூடிய மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பகவானும் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்துவிட்டால் அவர் எளிதில் காதல் வசப்பட்டுவிடுவார்.
(இரு பாலருக்கும் பொருந்தும் )
இதில் துளிகூட ஜயமில்லை.

            ஒருவரது வாழ்க்கை துணையை குறிக்கும் பாவம் ஏழாம் பாவம்,களஸ்திரகாரகன் ஆடவருக்கு சுக்கிர பகவானும்/பெண்டிருக்கு செவ்வாய் பகவானும் இணைந்து இவர்களுடன் லக்கனாதிபதியும்,ஐந்தாமாதிபதியும் தொடர்பு கொள்ள இவர்களுக்கிடையே உருவான காதல் யாராலும் பிரிக்க முடியாத காதலாகிவிடும் என்பது திண்ணம்.

          ஒருவரது வாழ்வில் ஏற்படும் வெற்றிக்கும் ,மகிழ்ச்சிக்கும்,யோகத்திற்கும் மற்றும் காதல் திருமணத்திற்கும் குரு பகவானும்,ஒன்பதாமாதிபதியான பாக்கியாதிபதியின் ஆசியும் ,அருளும் தேவை .எனவே இவர்களது பார்வை மற்றும் சேர்க்கையும் அவசியமாகும்.

          ஜந்தாம் அதிபதியும்,ஏழாம் அதிபதியும் மற்றும் ஒன்பதாம் அதிபதியும்  இம்மூவரும் கேந்திர திரிகோணங்களில் மற்றும் தனலாபமேறி சுபர் பார்வை பெறின் காதல் திருமணம் கைகூடி நீண்ட மகிழ்சியை ஒருவருக்கு வழங்கும்.மாறாக இம்மூவரும் மறைவு ஸ்தானங்களான ஆறு ,எட்டு ,பணிரெண்டாமிடம் போன்ற இடங்களில் மறைந்தாலும் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த சாதகருக்கு உருவாகும் காதல் தோல்வியில் போய் சேரும்.மீறியே திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்பட வாய்ப்புண்டு.

             ஒரு சிலர் பெற்றோரே எதிர்த்து திருமணம் செய்துகொள்ள காரணம் அவர்களது சாதகத்தில் களஸ்திரகாரகன் சுக்கிர பகவான் ஆறு அல்லது எட்டாம் இடத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று பாவிகளால் பார்க்கப்பட்டாலும் எதிர்ப்பில் திருமணம் நடக்கும்.

                                      


          இதேபோல ஏழு மற்றும் எட்டாம் அதிபதிகள் இணைந்து ஆறு,எட்டு,பணிரெண்டாமிடத்தில் மறைந்து சனியால் பார்க்கப்பட்டாலும் பெற்றோரை எதிர்த்தே திருமணம் நடைபெறும்.

           சிலர் கலப்புமணம் செய்துகொள்வதற்கு அவரது சாதகத்தில் களஸ்திரகாரகன் என ஆண் ,பெண் இருபாலருக்கும் கூறக்கூடிய சிற்றின்ப ஆசையை தூண்டும் கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்து கேந்திர ஸ்தானம் பெற்றிருக்கும்.

           சிலர் தன் தகுதிக்கும் ,தரத்திற்கும் கீழான இடத்தில் காதல் மணம் செய்துகொள்ள காரணம் அவர்களது சாதக கட்டத்தில் ஏழாமிட அதிபதி ஆறு ,எட்டு இதில் ஓரிடத்தில் நின்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெறும்போது இதுபோன்ற அமைப்பு ஏற்படும்.

          பொதுவாக ஒருவருக்கு காதல் மற்றும் காம உணர்வு தூண்டும் கிரக அமைப்பை பெற்றிருப்பவர்கள் ராகு திசையோ அல்லது புத்தியோ நடக்கும்போது இதுபோன்ற தகுதி தராதரம் அறியாமல் உடல் காட்டும் ஆசையில் தவறான முடிவெடுத்து வீட்டைவிட்டு கிளம்பி காதல் மணம் புரிந்து "ஆசை அறுபது மோகம் முப்பது "என மூன்று மாதம் சென்ற பிறகு உடல் காட்டிய சிற்றின்ப ஆசை முடிந்தவுடன் பொருளாதய பிரச்சினை வந்தவுடன் "நான் உன்னை திருமணம் செய்து கொண்டது தவறு ? உன்னை கட்டிக்கொண்டு  என்ன சுகம் கண்டேன் ? என இவள் கேள்வி அவன் பதில் கேள்வி கேட்க என பிரச்சினையிலும் ,கஷ்டத்திலும் வாழ்க்கை நகர்த்துபவர்களும் உண்டு.வழக்காடு மன்றாம் நாடி சென்று விவாகரத்து வாங்கி கொள்பவர்களும் உண்டு.

                                         

            இளம் வயதில் சுக்கிர திசை வரக்கூடாது என்பதும் இதற்காகத்தான்.இளம் வயது சுக்கிரன் தன்னை அழகுபடுத்தி கொள்வதிலும் ,கற்பனை உணர்வையும்  தூண்டி தவறான வழியை தேர்ந்தெடுக்கவைக்கும் என்பதால்தான்.

          எனவே காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுப்பவர்கள் தங்களது சாதகங்களை நன்கு ஆய்வு செய்து அந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால் மட்டும் திருமணம் செய்துகொள்ளல் உத்தமம்.இதைவிட்டு இரண்டு மனம் ஒத்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதத்திற்கு வர நான் தயாராக இல்லை.திருமணத்திற்கு முன்பு வரும் மனம் ஒத்த கருத்து உடலியல் கவர்ச்சியால் வருவதே ஆகும்.இன்றைய கால கட்டத்தில் நூற்றில் ஒரு நபரே திருமணத்திற்கு பிறகும் மனமொத்த காதல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.பாதிபேர் சமூக ஒப்பந்தத்தை  மீறக்கூடாது என்ற காரணத்தால் திருமண வாழ்க்கை நகர்கிறது.

நன்றி நன்றி நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                
அன்புடன்
சோதிடர் ரவிசாசந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியிதல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647
           740 257 08 99
வாட்ஸ்அப் : 97 151 89 647
My email
masterastroravi@gmail.com
சோதிட தpகவல்களை விரிவாக படிக்க
Google Search my Blogspot
"""""""""""""""""""""""""""""""""""""""
AstroRavichandransevvai.blogspot.com
  AstroRavichandran. blogspot. com
****************************************************************************

" கோடீஸ்வரர் ஆகும் யோகம் "-உங்களது சாதகத்தில் உண்டா ?

கோடீஸ்வரர் ஆகும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா ?

                                   
கிரகங்கள் படுத்தும் பாடு -( 25 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

          ஒரு சிலர்  அரசாங்கத்திற்கு கடன் கொடுக்கும் அளவிற்கே வசதி படைத்த கோடீஸ்வராக இருப்பார்கள்  எப்படி இந்த யோகம் அவர்களுக்கு வந்திருக்கும் ? என ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர்களது சாதகத்தில் "தனம் ஸ்தானம்" எனப்படும்  இரண்டாமிடம் மற்றும் "பாக்கியம"எனப்படும் வருமானத்தை தரும் ஒன்பதாமிடமும் ,"தொழில் ஸ்தானம்" எனப்படும் பத்தாமிடமும் மற்றும் "லாபஸ்தானம" எனப்படும் பதினொறாமிடமும்  ஒருவரது சாதகத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.

            மேலும் ராகு இருக்கும்  வீட்டிற்கு ஒன்பதாமிடத்தில் சுக்கிர பகவானும்,புதன் பகவானும் கூடியிருக்கவேண்டும்.இவ்வாறு கூடியிருப்பின் கோடீஸ்வரயோகமாகும்.

          பொதுவாக ஒருவருக்கு தனம் யோகம் பெற்றிருக்க வேண்டுமெனில் அவனது சாதகத்தில் தனகாரகன் குரு பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.இதேபோல தனஸ்தானம் ,பாக்கியஸ்தானம் ,
தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகிய நான்கு ஸ்தானங்களும் பலம்பெற்று இருந்தாலோ அல்லது தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று சேர்க்கை பெற்று சுப ஸ்தானம் ஏறியிருந்தாலோ தனயோகம் நிரம்ப பெற்றவராகிறார்.

        தனாதிபதி குரு வீடு ஏறி குரு பார்வை பெறுவதும் தனயோகத்தை தரும்.

       தனஸ்தானத்திற்கு தன-லாப பரிவர்தனை,தன-பாக்கிய பரிவர்தனை,தன-தொழில்ஸ்தான பரிவர்தனை மற்றும் 3-9, 4-9 பரிவர்தனை பெறுவதும் தனயோகம் தரும்.

                          

          குரு உச்சம் பெற்று 1,2,5,9,11 போன்ற ஸ்தான தொடர்பு பெறுவதும் தன யோகத்தை தரும்.

        லக்கனாதிபதியை ஐந்து கிரகங்கள் பார்ப்பதும்,சூரியன் பதினொன்றில் உச்சம்,ஆட்சி பெற்று வர்க்கோத்தமம் பெற்று குரு பார்வை பெறுவதும் தனயோகம் ஆகும்.

           பல கிரகங்கள் சர ராசியில் இருந்து பலம் பெறுவதும் தன யோகத்தை தரும்.

         மூன்று,ஆறு ,எட்டு மற்றும் பதிரெண்டாமாதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வது "விபரீத ராஜயோகத்தை"அதன் தசை புத்திகளில் தந்து தனயோகத்து தரும்.

            ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்தனை ,சேர்க்கை மற்றும் ஒன்றுக்கொன்று சமசப்தம பார்வை பெற்றிருந்து
தர்ம -கர்மாதிபதி யோகத்தை பெற்றிருப்பது.

           .குருவும்,சந்திரனும் சேர்ந்திருந்து
"குரு -சந்திர யோகம்" பெற்று
இருப்பது தன யோகத்தை உண்டுபண்ணும்.

       தனாதிபதியானது பாக்கியாதிபதி நட்சத்திரசாரம் பெற்று இருப்பின் பாக்கியயோகத்தை தரும்.
"வல்லரவு தனித்து நின்று
மறையவனோடு இசைஞானி
மறுவக்காணில் எல்லையிலலா
நிதிக்கு இறைவன் இவன் என்று
இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான்போலும்"

--என்ற பாடல் வாயிலாக நாம் அறிந்து  கொள்ள வேண்டியது ஒருவரது சாதகத்தில்  ராகு பகவான் தனித்து நின்று அந்த ஸ்தானத்திற்கு ஏழாம் இடத்தில் கேது பகவானோடு குரு பாகவான் இணைந்திருந்தால் எல்லையில்லா நிதிக்கு இறைவனாக இருப்பான்.

குறிப்பு : யோகத்தை தரும் வீட்டு அதிபதி பலம் குறையக்கூடாது.அந்த கிரகம் பாதகாதிபதியாக  இருக்க கூடாது.

       இதுபோன்ற அமைப்புகள் பெற்றிருந்தால் தனயோகம் பெற்று சிறந்து விளங்குவார்கள்.

                             


           ஒருவருக்கு என்னதான் தனயோகம் உடையவர்களாக இருந்தாலும் அவருக்கு நடைபெறும் திசையானது உகந்ததாக அமையவேணாடும்.மாறாக ஆறு மற்றும் எட்டாமிட திசையோ அல்லது அட்டமசனி மற்றும் ஏழரை சனி காலங்களில் தன விரயத்தை ஒருவருக்கு உண்டாக்கும்.இதுபோன்ற காலங்களை ஒரு நல்ல சோதிடரின் உதவியுடன் அறிந்துகொண்டு பெரும் முதலீடு செய்து புதிய தொழில் முயற்சி செய்யாமல் இருத்தல் நலம்.

             திசை உகந்ததாக இல்லாத காலங்களில் தனநஷ்டத்தை தவிர்க்க சாதகர் பண வரவு-செலவு விவரங்களை சாதகர் செய்யாமல் தனயோகம் உள்ள நபருக்கு மாற்றி செய்ய வைக்கவேண்டும்.

         தனயோகம் தர


         தனயோகத்தை சிறப்பாக உங்களுக்கு கிடைக்க வியாழன்தோறும் குருபகவான் வழிபாடு செய்யவும்.அன்றைய தினம் சுண்டல் அவித்து வழிபாடு செய்து பலருக்கு கொடுங்கள்.மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொள்ளுங்கள்.உங்களது அருகில் தென்முகமாக பார்க்கும்படி தெட்சிணாமூர்த்தி போட்டோவை வைத்து தினம்தோறும் குருஸ்தோத்திரம் செய்யுங்கள்.

                                  

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99
(தங்களது சாதகத்திற்கு சோதிட ஆலோசனையை போனின் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு .பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வங்கி விவரங்களை தெரிந்து கொள்ளவும் )
My Email
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
**********************************////*

சிறை செல்லும் அமைப்பு யாருக்கு உண்டு ?

"சிறை செல்லும் அமைப்பு " -யாருக்கு உண்டு?

                                          
கிரகங்கள் படுத்தம் பாடு -( 26 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு சிலர் குறுகிய காலத்திலே பொருள் ஈட்டி பெரும் பணக்காரனாக ஆகி விட வேண்டும் என்னும் தணியாத தாகமுடையவர்களாக இருப்பார்கள்.இவர்களை
போன்றவர்கள் நேர்மையைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.மனசாட்சிக்கு பயப்படமாட்டார்கள்.

"கவிஞர் பட்டுக்கோட்டையார் பாடியது போல"குறுக்கு வழியிலே வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா !
என்பதுபோல

       ஒருவரது சாதகத்தில் ஆறாம் அதிபதி பாவியாக வந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சம்பந்தப்படுமானால் அரசுக்கு விரோதமான தொழில் ஈடுபட்டு குறைவான காலத்தில் பொருள் ஈட்டும் யோகமுண்டு.

        பத்தாமிடத்தை சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்படும்போது சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு சனி திசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் திசை சனி புத்தி போன்ற காலங்களில் சிறை வாசம் செய்ய வைக்கும்.சுபர் பார்வை பெறின் தண்டனை குறையலாம்.

         தொழில் ஸ்தானத்துடன்  ராகு பகவான் தொடர்பு பெற்று பலம்பெற்றிருக்கும் போது லாட்டரி விற்பனை ,சீட்டு விளையாடுதல்  ,பைனான்ஸ் மற்றும் குதிரை ரேஸ் போன்ற அரசு விரோத தொழிலில் ஈடுபாட்டைத்தரும்.

           ஒருவரது சாதகத்தில் இரண்டு ,பணிரெண்டாமிடங்களில்  பாவிகள் இடம்பெறுவதும், இவர்களுடன் லக்கனாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பு.

        தனகாரகனான குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகி உச்ச வக்கிரம் பெற்று (நீசம் ) பெற்று தனஸ்தானத்தில் இருப்பதும்,இரண்டாம் பாவத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் சிறை செல்லும் யோகத்தை உண்டாக்கும்.

         ஆறு,எட்டு மற்றும் ஜீவனஸ்தானம் போன்ற இடங்களை உச்ச வக்கிரம் பெற்ற குருபகவான் பார்வை பெறுவதும் குறுக்கு வழியில் பணம் ஈட்ட செய்யும்.

       ராசிக்கு ஆறாம் அதிபதி பத்தாமிடத்தில் உச்ச வக்கிரம் பெற்ற குருவால் பார்க்கப்படும்போது இவையும் குறுக்கு வழியில் பொருள் ஈட்ட வைக்கும்.

         குருவோடு ராகு அல்லது சனி பகவான் சேர்ந்து "குரு சண்டாள யோகம் பெற்றவர்களும் ஆன்மிக நாட்டம் குறைந்து காணப்படுவதோடு தவறான வழியில் ஈடுபட வைக்கும்.

            எதிரி ஸ்தானம் என அழைக்கப்படும் ஆறாமிடம் பலம் பெற்று லாப ஸ்தானம் ஏறலும் பலம் ஆகும்.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சிறை செல்லும் வாய்ப்பை உண்டாக்கும்.

         இரண்டாம் அதிபதி ஆறாம் வீடு குடியேறினால் தனது சொத்து வம்பு வழக்குகளில் ஈடுபட்டு எதிரிக்கு சென்றுவிடும்.

         மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீடு குடியேறியிருந்தால் வம்பு வழக்கு என கோர்ட்டிற்கு சென்றால் எதிரி சொத்து தனக்கு கிடைத்துவிடும்.சண்டைக்கு சென்றாலும் எதிரியின் பலம் பாதி தமக்கு கிடைத்துவிடும்.

         ஒருவருக்கு சுபர் பார்வையில்லாத அட்டமாதிபதியின் திசையோ அல்லது அட்டம சனி நடைபெறும் காலங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.இல்லையெனில் வீண் வம்புகளிலா ஈடுபட்டு சிறை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

            பொதுவாக பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்பார்கள்.அப்பொழுதுதான் நேரிய வழியில் உடல் உழைப்பு கொடுத்து பொருள் ஈட்ட முடியாவிட்டாலும் எப்படியாவது பிழைத்துக்கொள்வான்.ஆதலால் பத்தாம் இடத்தில் சுபர் இல்லாவிட்டாலும் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்றனர்.

           பத்தாமிடத்தில் சனி,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் சம்பந்தபட்டவர்கள் அரசுக்கு விரோத தொழில் ஈடுபட்டு அதனால் சிறை செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.
 நன்றி!

                                      
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
omsakthi jothida nillayam
pudukkottai ( District ).

cell : 97 151 89 647
             740 257 08 99

வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

(தங்களது குழந்தைகளுக்கோ அல்லது தமக்கோ சாதகம் எழுதி போன் வழியாக பலன் பெற தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு .தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரம் பெறலாம்.)

  Email
   masterastroravi@gmail.com

My blogspot Google search
  AstroRavichandran. blogspot. com
    AstroRavichandransevvai.blogspot. com
............,.................................
.

கிரகங்களில் வக்கிரம் நிலை மற்றும் அஸ்தங்கம் நிலை பற்றிய ஆய்வுநிலை

" கிரகங்களின் வக்கிரநிலை மற்றும் அஸ்தங்கம் நிலை  பற்றிய ஓர் ஆய்வுநிலை "

                                 
கிரகங்கள் படுத்தும் பாடு -( 27 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                இன்றைய *கிரகங்கள் படுத்தும் பாடு* எனும் தொடர் பதிவில்" வக்ர நிலை " என்றால் என்ன ?  எந்தந்த கிரகங்கள் வக்ர நிலை உண்டு ,எந்த கிரகங்களுக்கு வக்ரகதி இல்லை எனவும் ,அவ்வாறு வக்ரம் அடைந்த கிரகங்களின் பலம் பற்றியும் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

              சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி  வருவதுபோல தோற்றமளிக்கும். இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம்.கிரகங்கள் எல்லாம் தத்தம்பாதையில் முன்னோக்கிதான் சென்றுகொண்டிருக்கும் அவை பின்னோக்கி வருவதில்லை.

              எப்படி பூமியின் சுழற்சியினால் சூரியன் உதிப்பதும் ,மறைவதும்போல காட்சியளிக்கிறதோ அதுபோலவே வக்கிரகதியும் ஆகும்.உண்மையாக அறிவியல் அடிப்படையில் சொல்லவேண்டுமென்றால் சூரியன் உதிப்பதும் மற்றும் மறைவதும் இல்லை.

         வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது.மேலும் அந்த கிரகங்களின் தன்மை கூட மாறி விடுகிறது.நல்லது செய்யக்கூடிய சுப கிரகங்கள் கூட நல்லது செய்வதற்கு பதிலாக கெடு பலனை தந்து விடுகிறது அல்லது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கமால் செய்துவிடுகிறது. ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள் ஆகும்.

   
         இதில் ராகு,கேதுக்களுக்கு வக்ர கதியைதத்தவிர நேர்கதியே கிடையாது.


         சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது.

                                


          குரு,செவ்வாய்,சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது.ஏழில் வரும்போது அதிவக்ரமும்,ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது.இதனைப்பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் பின்வருமாறு பார்ப்போம்.

             1) சூரியனோடு கிரகங்கள் இணைந்திருப்பது "அஸ்தங்க கதி"

               2)அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது "உதயகதி"

               3)சூரியனுக்கு 2-ல் கிரகங்கள் இருப்பது "சீக்கிரகதி"

                4)சூரியனுக்கு 3-ல் கிரகங்கள் இருப்பது "சமகதி"

               5)சூரியனுக்கு 4-ல் கிரகங்கள் இருப்பது "மந்தகதி"

             6)சூரியனுக்கு 5,6 -ல் கிரகங்கள் வரும்போது" வக்கிரகதி"

             7)சூரியனுக்கு 7,8-ல் கிரகங்கள் வரும்போது "அதிவக்கிரகதி"

            8)சூரியனுக்கு 9,10 -ல் வரும்போது "வக்கிரநிவர்த்தி கதி"

            9)சூரியனுக்கு 11-ல் கிரகங்கள் வரும்போது" சீக்கிரகதி"

              10 )சூரியனுக்கு 12- ல் கிரகங்கள் வரும்போது "அதிசீக்கிரகதி" உண்டாகிறது.

                                 


   அஸ்தங்கம் என்பது


               கிரகங்கள் சூரியன் பகவான் உடன் ஒரு ராசியில் இணைகின்றபோது ஒரு குறிப்பிட்ட பாகையில் சூரியன் உடன் நெருங்கி செல்லும்போது இணைகின்ற கிரகம் தனது காரக மற்றும் ஸ்தான பலன்களை இழந்து நிற்கும். இதனை தான் நாம் "அஸ்தங்கம்" என்கிறோம்.

          செவ்வாய் பகவான் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள் அஸ்தங்கம் அடைகிறது.

      புதன் பகவான் -  11 பாகை

          குருபகவான்-  15 பாகை


  சுக்கிரன் பகவான்-9 பாகை


   சனி பகவான்-         17 பாகை


              புதன்,சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் அடையும்போது அவை தனது சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை.

        புதன், சுக்கிரன் ஆகிய இரண்டு மட்டும் சூரியனுக்கு முன்,பின் என இருந்தபடியே இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது சுய காரகத்துவ பலனை இழக்காது.ஆனால் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது.

                                              


                 கிரகங்களில் சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களும் சூரியனின் உள்வட்ட பாதையில் சுற்றி வரும்  கிரகங்கள் ஆகும்.இவ்விரு கிரகங்கள் மட்டுமே அஸ்தமனம் அடையும்போதே வக்கிரமும் அடைகிறது.இக்கிரகஙகள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும், அல்லது இரண்டும் இணைந்தும் நடக்கிறது.இவ்விரு கிரகங்கள் மட்டும் சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் வருகிறது.


            ஆனால் மற்ற கிரகங்கள் அனைத்தும் அஸ்தங்கம் மற்றும் வக்ரகதி இரண்டையும் ஒரே நேரத்தில் அடைவது கிடையாது.செவ்வாய், குரு,சனி ஆகிய மூன்று கிரகங்களும் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்ட பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது.இக்கிரகங்கள் பூமிக்கும்,சூரியனுக்கும் இடையே வருவதில்லை.

              சந்திரனும் பூமியை சுற்றி வருவதால்  பதினைந்து தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும்,சூரியனுக்கும் இடையில் வந்து வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாகிறது.
  செவ்வாய், குரு,சனி இவை சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கமடைகிறது.புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் என்பதால் சூரியனுக்கு முன் நிற்கிறது.

               புதனும்,சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் சூரியனுக்கு 13- பாகைக்குள்ளே வரின் புதனுக்கும்,8-பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.

              எல்லா கிரகங்களை விட புதனும் ,சுக்கிரனும் மாறுபட்டு நிற்கிறது.அதாவது எல்லா கிரகங்களும் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தங்கம் ஆகிறது.ஆனால் புதன்,சுக்கிரன் மட்டுமே மேற்கில் உதயமாகி கிழக்கில் அஸ்தங்கம் அடைகிறது.

                                     


               உதயகதி என்பது
அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகமானது அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி " என்கிறோம்.

               ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்தவுன் அக்கிரகத்திற்குரிய காரக மற்றும் ஸ்தான பலன்களை  இழந்து நிற்கும்.இவ்வாறு இழந்த காரக மற்றும் ஸ்தான பலன்களை உதயகதியின்போது மீண்டும் சாதகர் பெறுவார்.

வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -


            1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.

            2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்ரம் அடையுமானால் அவர்களின் தசையில் யோக பலனை தருகிறது.

           3) ஒரு கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.

            4) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் வக்ரபலன் நீங்கிவிடுகிறது.

             5) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு வக்கரம் பெற்ற கிரகம் இருந்த வீட்டின் அதிபதி எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அந்த வீட்டின் அதிபதியும் உச்சம் பெற்றால் டபுள் டெபாஸிட்டர் முறையில் வக்ரபலன் நீங்கி நன்மையை செய்துவிடுகிறது.

            6)வக்கிரம் பெற்ற கிரகம் உச்ச வர்க்கோத்தம் பெறுமானால் அவர் இருக்கும் இடத்தினை பாதிப்பதில்லை (வர்க்கோத்தமம் என்பது ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருப்பது )

          7) வக்கிரம் பெற்றுள்ள கிரகம் ஆட்சி நிலையில் இருந்தால் நற்பலனையே தரும்.

                                  


கிரகங்களின் வக்கிரகதி காலம்


குருபகவான் -மூன்று மாதத்திற்கு அதிகமாகவும் ,

சனிபகவான் -நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை


செவ்வாய்பகவான் -இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக இரண்டு மாதகாலம்


சுக்கிரபகவான் -ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐம்பது நாட்கள்
 
            மேற்கண்ட காலங்களில் கிரகங்கள் வக்கிரநிலை அடைகிறது.
இதில் செவ்வாய்பகவான் மட்டும் சிலநேரங்களில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பதுபோல தோற்றமளிக்கும்.எனவே செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பன்கதி "என்ற சிறப்பு பெயரும் உண்டு.


நன்றி.

                                    
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆய்வாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.


செல் ; 97 151 89 647
               740 257 08 99


    வாட்ஸ்அப் எண்
97 151 89 647


(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதக பலனை வீட்டிலிருந்த படியே போன் வழி மூலம் தகவல் பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )

My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
********************************

 My email
     masterastroravi@gmail.com
.......................................................................