Monday 18 December 2017

கிரகங்கள் படுத்தும் பாடு--( 21 )

கிரகங்கள் படுத்தும் பாடு -( 21 )


                                                                   
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
                                         ஒரு சில மனிதர்கள் தனது ஹார்மோன்களின் ஆட்டத்திற்கு ஏற்ப அதிக காம வயப்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?  அதற்கு கிரகங்கள் படுத்தும் பாடு என்ன? என்பதை அறிவியல் மற்றும் ஜோதிட அடிப்படையில்  ஆய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கும் போது "மனித உடலில் உள்ள சுரப்பிகளாவன கல்லீரல் மற்றும் கணையம் ஆகும். இதில் கணையம் என்பது நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்புகளின் மையமாக உள்ளது.நாளமுள்ள சுரப்பிகள் என்சைம்களையும்,நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களையும் சுரக்கிறது.

                                    இனப்பெருக்க ஹார்மோன்களை தவிர ஏனைய ஹார்மோன்கள் பிறந்ததிலிருந்து உற்பத்தியாகி மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது.ஆனால் இந்த இனப்பெருக்க ஹார்மோன்கள் மட்டும் ஒரு மனிதர் பருவ வயதை அடைந்தவுடன் சுரக்கிறது.
இவையே ஒரு மானிடரை இனப்பெருக்கம் செய்து தனது சந்ததிகளை பெருக்கிக்கொள்ள  உதவியாக உள்ளது.இந்த பருவநிலை அடைவதையே நாம் குமரபருவம் என்கிறோம்.

                                  .இக்ககாலத்தில்தான் இருபாலருக்கும் பாலியல் எண்ணத்தை உண்டாக்கி எதிர் பாலரின் மீது கவர்ச்சியை உண்டாக்குகிறது.
ஓரு  ஆடவருக்கு  மனைவி காரகனாகவும் ,மனைக்கு அதிபதியாகவும் இருக்கும் கிரகம் சுக்கிர பகவான் ஆகும்.

                                       இதே சுக்கிர பகவான்தான் காமத்திற்கும்,,பால் வினை நோய்க்கும் காரகராக உள்ளார்.

                                   இதேபோல ஒரு பெண்ணிற்கு கணவன் காரகர் மற்றும் மனைக்காரகர் செவ்வாய் பகவான் ஆவார்.

                                                                     

                                 எனவே இந்த சுக்கிர பகவானும் ,செவ்வாய் பகவானும் பாவிகள் சேர்க்கை மற்றும்  பார்வை பெறுவதால்தான் ஒரு சிலர் காம வயப்படுவதற்கும் தரம் தாழ்ந்து நடப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.
காமம் என்பதை "ஹார்மோன்களின் ஆட்டம் "என அறிவியல் கூறினாலும் இந்த ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஆண்ட்ரோஸன் (டெஸ்ட்ரோஸன்)
மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸேஸ்டிரான் ,ரிலாக்ஸின் போன்ற நாளமில்லா சுரப்பிகளை தூண்டி காம வயப்படும் செயலை ஜெனன காலத்தில்  பணிரெண்டு ராசிக்குள் அடைபட்ட கிரகங்களே செய்கின்றன்.

                                        சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு இதேபோல செவ்வாய் மற்றும் சனி
இணைவு ஏழாமிடத்தில் இருந்தாலும் அல்லது ஏழாமிடத்தை பார்த்தாலும் இது போன்ற அமைப்புடையவர்கள் காமவயப்பட்டு தன்னிலும் தரம் தாழ்ந்த நபரிடம் காம ஈடுபாடு வைத்துக்கொள்ள தூண்டும்.

                                              இதேபோல ஒருவரது சாதகத்தில் சந்திரன் ,சுக்கிரன் மற்றும் ராகு இணைவு காம எண்ணம் மேலோங்கி இருக்கும்.
செவ்வாய்,சுக்கிரன் மற்றும் ராகு பகவான் சேர்க்கை வெட்கம் கெட்ட காம உணர்வை கொடுக்கும்.

                                             சுக்கிர பகவானின் இணைவு 1,5,9 அல்லது 3, 7, 11 தொடர்பு ஒரு மனிதனை இயல்பான காம உணர்வை விட சற்று கூடுதலான உணர்வைக் கொடுக்கும்.

                                        சுக்கிர பகவான் 5,8 தொடர்பு பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானத்தை ஒரு மனிதனுக்கு வழங்கும்.
சுக்கிர பகவான் 8,12 ஆம் பாவ தொடர்பு ஒருவரை பெண்களால் வலி ,வேதனை ,பிரச்சனை ,டென்ஷன் மற்றும் விரயம் கொடுக்கும்.
லக்கனத்திற்கு இரண்டு ,ஆறாம் அதிபதி பாவரோடு சேர்ந்தாலும் அல்லது பாவர் சாரம் பெற்றாலும் இந்த அமைப்பானது இரண்டு அல்லது ஏழில் உண்டானால் காம எண்ணம் மிகும்.

                                  ஏழாமிடத்தில் இரண்டு மற்றும் ஆறுக்குடையவன் சேர காமி.
                            லக்கனத்தின் கோளும் ஆறின் கோளும்  பாவியோட சேர்ந்து நின்றாலும் காம எண்ணம் அதிகமாகும் வாய்ப்புண்டு.

                                     ஒரு மனிதனுக்கு நான்காமிடம் கற்பு ஸ்தானம்.இந்த ஸ்தானம் கெட்டு பாவர் சேர்க்கை மற்றும் பார்வை .இத்துடன் சுக்கிரன் /செவ்வாய் பாவி சேர்க்கை.பல மலர் கண்ட வண்டாவார்.மேலும் கற்பு ஸ்தானம் ஆறு,பணிரெண்டில் அமர்ந்தாலும் மேற்கண்ட பலனைத்தான் தரும்.

                                       சூரியன் ,சந்திரன் இணைந்து அமாவசை யோகம் பெற்று உடன் நான்கின் கோளும் சேர்ந்தால் காம எண்ணம் கூட வாய்ப்புண்டு.
ஏழாமதிபதியும் ,மூன்றாமாதிபதி தொடர்பு காம எண்ணத்தை தூண்டும்.
ஏழு மற்றும் இரண்டாம் அதிபதி பாவி உடன் சேர்க்கை.

                                 ஆறில் சுபர் இருந்து மூன்றில் சந்திரன் ,செவ்வாய் இணைவு தவறாக நடக்க தூண்டும்.

                            இது போன்ற அமைப்பை பெற்றிருப்பதால்தான் சிலர் வரம்பு மீறிய மற்றும் வேலி தாண்டிய வெளளாடாய் மாறி போய் விடுகிறார்கள்.
"அன்பு மட்டுமே போதும் என்றால் ஒரு செல்ல பிராணி நாயை மட்டும் வளர்த்தாலே போதும் !

                                  வெறும் காமம் மட்டுமே போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும் !
எங்கு காமமும்-காதலும் சரிபாதியாக சங்கமித்துக்கொள்ளும்போது உண்மையான இல்லறம் பிறக்கும்.
"நமது தமிழரின் பண்பாடான "ஒருவனுக்கு ஒருத்தி "எனும் உயரிய கொள்கையை பின்பற்றுவோம்.
காமமும் ,காதலும் கலந்து உடல் நலத்திலும் அக்கறையோடு இன்பத்தை தருபவள் மனைவி மட்டுமே!
ஒருவனுக்கு ஒருத்தியான திருமண பந்தத்தோடு இணைந்து சுகம் பெறுவோம் !
எய்ட்ஸ் அரக்கனை விரட்டுவோம்!"


                                                                             
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியி யல் ஆசிரியர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு,இந்தியா.
தொடர்பு கொள்ள
          செல்
97151 89 647
                740 257 08 99
     வாட்ஸ்அப் எண்
97 151 89 647
My Email
masterastroravi@gmail.com
(போனின் வழியாக தங்களது சாதகத்தின் பலனை கேட்டு பலன் பெற மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்க.திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து தருதல் போன்ற சேவைகளையும் பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
விரிவான சோதிட தகவல் பெற
Click my wrbsite
***********************************
AstroRavichandransevvai.blogspot.com
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""::::""":"""""""""""""""""""""""""

Saturday 16 December 2017

கிரகங்கள் படுத்தும் பாடு--( 20 )

கிரகங்கள் படுத்தும் பாடு -(20)

                                    
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
         மானிட வாழ்வில்  கிரகங்கள்  புரியும் கோளாட்டத்தை விளக்கும் தொடர் பதிவு.

      சிலர் கடவுள் ஈடுபாடு மிக்கவராகவும்,ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்க வேண்டும் கூர்ந்து நோக்கில் அவர்களது சாதக கட்டத்தில் வேத விற்பனர் குரு பகவானும்,கர்மக்காரகன் சனி பகவானும் மற்றும் ஞானக்காரன் கேது பகவானும்  பலம் பெற்றிருக்க வேண்டும்.

                ஒருவருடைய சாதகத்தில் குரு அல்லது சனியுடன் கேது பகவான் இணைந்து இரண்டு ,பணிரெண்டு அல்லது ஐந்து ,ஒன்பது இவற்றில் ஏதாவது இடத்தில் இணைந்து பலம் பெற வேண்டும்.

                சனி பகவானையோ அல்லது கேது பகவானோ குருவினால் பார்க்கப்பட வேண்டும்.

                  கேது பகவானகப்பட்டவர் இரண்டு ,ஐந்து ,ஒன்பது மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர வேண்டும்.
மூன்று கோள்கள் இணைந்து பத்தாமிட தொடர்பு பெற்றிருத்தல் வேண்டும்.
தர்ம -கர்மாதிபதி யோகம் பெற்றிருக்க வேண்டும்.


                                 

            லக்கனத்திற்கு நான்காமாதிபதியும்,ராசிக்கு நான்காமாதிபதியும் கூடி சுப ஸ்தானம் ஏற வேண்டும்.

         குரு பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.

            கடக கேதுவும், மகர ராகுவும்  ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கும்.
ஐந்தில் செவ்வாய் ,கேது இணைவு
சூரியனுடன் குரு இணைவு  ஆன்மீகத்தின் ஈடுபாடும் மற்றும் ஆன்மீக அமைப்பின் மீது தலைவராக்கி பார்க்கும்.

              இரண்டில் சுக்கிரன்,புதன் இணைவு ஐந்தில் கேது இணைவு.
ஒருவரது சாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவம் பெற்றிருக்கும்.
2,4,7,8,10,12 ஆம் இடங்களில் கர்மஸ்தானாதிபதி எனும் பத்தாம் வீட்டு அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் தொடர்பு சன்யாச யோகத்தை கொடுக்கும்.

               ஒரு சிலர் ஈடுபாடு  இல்லாதவர்களுக்கு குருவோடு ராகு இணைந்து "குரு சண்டாள யோகம் "பெற்றிருப்பதே ஆகும்.

            இதுபோன்ற அமைப்பை பெற்றிருப்பவர்கள் பகுத்தறிவு உடையவர்களாக இருப்பார்
சனி ,செவ்வாய்  பார்வை ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி மற்றும் குருவிற்கு கிடைத்தாலும் அந்த அமைப்பை பெற்றவர்கள் நாத்திக தன்மை உடையவராகிறார்.
                                            
அன்புடன்
சோதிடர் ரவிசச்சந்திரன்
   M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர
கறம்பக்குடி
புதுகஙோட்டை மாவட்டம்.

செல் :97 151 89 647
               740 257 08 99

My whatsup no: 97 151 89 647

(போன் வழியாக சாதக ஆலோசனை பெறவழி உண்டு.கட்டணம் உண்டு..பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )


Thursday 14 December 2017

உங்களது சாதகப்படி சகோதரர்களால் புகழ் அடையும் யோகம் உண்டா?

உங்கள் சாதகப்படி சகோதரர்களால் புகழ் அடையும் யோகம் உங்களுக்கு உண்டா ?


                           

கிரகங்கள் படுத்தும் பாடு -( 19 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான் " என்பார்கள்.

         ஒருவர் அதிக சகோதரர்களை பெற்றிருந்தால் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்ற அர்த்தத்தில்
இந்த பழமொழி கூறப்பட்டது.ஆனால் இன்றைய காலகட்டங்களில் பொருளாதாய உலகில் அதிக  சகோதர்களை பெற்றவர்கள் அவர்களுக்குள்ளே சொத்து தகராறு வந்து ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு பரம எதிரியாகி கோர்ட் ,கேஸ் என  சென்று விடுகிறார்கள்.

     "எனவே ஒரு  சிலருக்கு உடன் பிறந்த சகோதர / சகோதரிகளால் ஆதரவும்,பெருமையும் கிடைப்பதற்கு காரணம் அவரது சாதகங்களில் இளைய சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடமும் அதன் அதிபதியான கிரகமும்,அதேபோல மூத்த சகோதர ஸ்தானமான பதினொராமிடமும் அதன் அதிபதியும்  பாவரின் பார்வை ,நட்சத்திர சாரம் மற்றும் சேர்க்கை அற்று பலம் பெற்றிருக்க வேண்டும்.இதேபோல சகோதர காரகனாகிய செவ்வாயும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

                                 

         மாறாக ஒரு சிலருக்கு சகோதரனே இல்லாமல் போவதும் அப்படி இருப்பினும் எதிரியாகிவிடுவதற்கும் காரணம் என்னவாக இருக்கும என ஆய்ந்து நோக்கில் "சிலரது சாதகங்களில் சகோதரகன் செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் அமர்ந்து "காரக பாவ நாஸ்தியை" செய்துவிடுகிறது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சிலருக்கு சுபர் பார்வை மற்றும் சேர்க்கை இல்லாமல் இருப்பின் சகோதரர்களை இல்லாமல் செய்துவிடும்.மீறி இருப்பினும் அவர்களால் எந்நாளும் தொல்லையை தந்துவிடும்.

        இதேபோல மூன்று ,பதினொன்று ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும்  பாவ ஸ்தானம் வாங்கி இருந்தாலும் அல்லது அதில் ராகு,கேது போன்ற பாவிகள் இருந்தாலும் மேற்கண்ட ஸ்தானதிபதிகள் பாவிகளோடு சேர்ந்திருந்தாலோ அல்லது பார்வை மற்றும் சாரம் பெற்றவர்களும் மேலும் சகோதர காரகனான செவ்வாயும் பாவிகளோடு கூடி இருந்தாலும் தொல்லை தரும் சகோதரர்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்(சில நேரங்களில் சகோதர தோஷமாகி சகோதரர்கள் இல்லாமல் போவதுமுண்டு .அது அதன் கிரக வலிமையைப் பொறுத்தது )

       மூன்று ,பதினொன்று ஸ்தானாதிபதியும் மற்றும் சகோதர காரகனான செவ்வாயும் நீசம் மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருப்பின் சகோதரர்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.

                             

         ஆதலால் உடன் பிறந்தவர்களால் ஆதரவும் ,புகழும் கிடைப்பதற்கும் ,அவர்களே எதிரியாக மாறி நம்மிடம் போட்டி போட்டு எதிர்த்து நிற்பதற்கும் நமது சாதகத்தில் உள்ள " கிரகங்கள் படுத்தும் பாடு "தான் காரணம் என ஒரு ஞானம் பெற்ற சோதிடர்கள் வாயிலாக நாம் தெரிந்துகொண்டால் நமது விதிப்பலன் என எண்ணி அதனால் வரும் பிரச்சினைகளை ஒரளவு குறைக்கலாம்.இதுதான் சாதகம் பார்த்துக் கொள்வதின் பயன் ஆகும்.
    சகோதரகாரகன் செவ்வாய் மற்றும் இளைய ,மூத்த சகோதர ஸ்தானாதியும் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் போன்ற வகையில் பலமடைந்து இருப்பின் சகோதரர்களால் அன்பும் ஆதரவும் பெற்று சமூகத்தில் புகழ் அடைவார்கள்.

                                       
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647
Cell;  740 257 08 99
My Whatsup : 97 151 89 647
My email
masterastroravi@gmail.com
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
Do you want to know more information in Astrology ? Click my website
AstroRavichandransevvai.blogspot.com
*******************************

திருமணபொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

திருமணபொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.


                              

செவ்வாய்பட்டி   ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு--( 186 )

      திருமணத்திற்க்கு பொருத்தம் பார்ப்பது என்பது மிகவும் உன்னத பணி ஆகும்.திருமண பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகள் இருவரது சாதகங்களை தீர ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.

      தம்பதிகள் இருவரது சாதகத்தில் நட்சத்திர பொருத்தம் பார்ப்பதை விட சாதக கட்டபொருத்தம் பார்ப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.

        இருவரது சாதகத்தினிலும் லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் லக்கனம்,குடும்பம்,களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்யஸ்தானம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றினை நன்கு ஆராய்ச்சி செய்து பார்க்கப்படவேண்டும்.

         மேலும் அந்த ஸ்தான அதிபதிகள்,களத்திரகாரகன் சுக்கிர பகவான்,காம காரகன் செவ்வாய் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

         மேற்கண்ட நான்கு ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் உடன் இயற்கை பாவிகளான ராகு, கேது, சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் எவ்வித வகையில் தொடர்பு அற்று இருக்கவேண்டும்..இதனை ஆராய்ந்து கவனிக்கப்படவேண்டும்.இதேபோல இந்த ஸ்தான அதிபதிகளுடன் சேர்க்கையற்று இருக்கவேண்டும் அல்லது மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் மறைமுக ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் செல்லாமல் இருத்தல் நலம் பயக்கும்.

                                   

    தம்பதிகள் இருவரது சாதகத்திலும் புத்திரஸ்தானம் என அழைக்கப்படும்
ஐந்தாமிடம் ,புத்திரகாரகன் குருபகவான் ஆகிய இரண்டையும் அரவுகளான ராகு,கேது பகவான் எவ்வகையிலும் தொடர்பு அற்று இருத்தல் வேண்டும். புத்திரகாரகன் மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய இரண்டுடன் மறைவிட அதிபதிகள் தொடர்பு அற்று இருக்கவேண்டும்.

       சனிபகவான் லக்கனம், ராசி,ஏழம் இடம் மற்றும் ஏழாமிட அதிபதி இவைகளை தம்பதிகள் இருவரது சாதகத்திலும் பார்க்காமல் இருத்தல் நலம்.

      சனிபகவான் சுக்கிரன் உடன் இணைந்தோ அல்லது பார்வை பெற்றோ இருப்பின் அந்த பெண்ணோ அல்லது ஆணோ மற்றவர் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருப்பர்.

               பெண்களது சாதகத்தில் இரண்டாம் வீடு என்பது பலம் பெற்று குருஅல்லது சுக்கிரன் அல்லது புதன் இரண்டாம் வீட்டில் இருப்பின் அந்த பெண்ணின் பிறந்த வீடும்,புகுந்த வீடும் புகழ்பெற்று விளங்கும்.

             தாம்பத்ய வாழ்வில் இருவரும் முழு நிறைவோடு இன்பம் பெற்று சரிநிகராக திகழ  பெண் சாதகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும்,ஆண் சாதகத்தில் உள்ள சுக்கிரன் பகவானையும் நன்கு ஆராய்ந்து கவனிக்கப்படவேண்டும்.

             தம்பதிகள் இருவரது சாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒன்றுக்கொன்று கேந்திர ம் பெற்றிருப்பது  ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டவராக திகழ்வர்.

   ஏழாம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன் இருக்கும் ஆண் மகனுக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன் உள்ள பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.அவ்வாறு திருமணம் செய்தால் அந்த ஆண் மகனால் அந்த பெண்ணை தாம்பத்ய சுகத்தில் திருப்தி செய்ய முடியாது.

   இருவரது சாதகத்திலும் ஏழாம் அதிபதியானது ஏழாம் வீட்டிற்க்கு 6,8,12 ல் மறையக்கூடாது.யாரவது ஒருவரது சாதகத்தில்  இருக்கலாம்.

நன்றி நன்றி நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

      தொடர்புக்கு
      வாட்ஸ்அப்
      97 151 89 647

        செல்
    740 257 08 99
       97 151 89 647

                                        
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
       M.Sc ,MA ,BEd,
   சோதிட ஆராய்ச்சியாளர்,
  ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

  My email
    masterastroravi@gmail.com

My website click here
  AstroRavichandransevvai.blogspot.com
...................................................................

Saturday 9 December 2017

சாதகப்படி தங்களுக்கு இனிய இல்லறம் அமைய ?

சாதகப்படி தங்களுக்கு இனிய இல்லறம் அமைய ?


                                         

கிரகங்கள் படுத்தும் பாடு-( 185 )

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

         இனிய இல்லறம் ஒருவருக்கு அமைய அவரது சாதக கட்டத்தில் குடும்ப ,களத்திர ஸ்தானதிபதிகள் (2,7)
அல்லது லக்கன, களத்திர ஸ்தானாதிபதிகள் (1,7) ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவராக இருப்பின் இணைபிரியா அன்புடையவராக இல்வாழ்வில் திகழ்வார்கள்.

     லக்கனாதிபதியானது களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் அதிபதியையோ அல்லது களத்திரகாரகர் சுக்கிரனை பார்த்தால் ஈடுயிணையில்லா அன்பு உடையவர்களாக இல்வாழ்வில் திகழ்வார்கள்.

        ஏழாம் அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில்  பலமடைந்து இருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி நீசபங்க யோகம் பெற்று இருந்தாலும் தம்பதிகள் இருவரிடையே அன்புடையவர்களாக திகழ்வர்.

           இதேபோல சுக ,களத்திர ஸ்தானாதிபதிகள் (4,7) ,ஜீவன,களத்திர ஸ்தானாதிகள்(7,10 ) இவ்விரு அமைப்புகள் ஒருவருக்கு ஓருவர் சம்பந்தம் இல்வாழ்க்கை இனிக்கும்.

                                  

            திருமணம் ஆன தம்பதிகள் பொருளாதார வாழ்வில் முழுவதும் திருப்தி உடையவர்களாக திகழ அவர்களது சாதகத்தில் லக்கன,தன மற்றும் களத்திர ஸ்தானாதிபதிகள் (1-2-7 ) ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று இருந்தால் சகல ஐஸ்வர்யங்கள் நிறைந்தவர்களாக திகழ்வர்.

            மணமகனின் லக்கனாதிபதி இருக்கும் இடம் மணமகளின் ராசியாக அமைவதும்,மணமகளின் லக்கனாதிபதி இருக்கும் இடம் மணமகனின் ராசிக்கு ஏழாம் இடமாக அமைவது நலம்.

         குருபகவான் அல்லது பூரண சந்திரன் ஏழாம் இடத்தில் இருப்பது தம்பதிகளிடையே ஒற்றுமையை அதிகரிக்கும்.

          களத்திர ஸ்தானாதிபதியானது மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் நின்று கொண்டிருந்தால்  அடிக்கடி பிரயாணம் செய்பவராக அல்லது மருத்துவ கணவராக அமைய அவர்களுக்கு இடையே பலவீனம் நீங்கி இல்வாழ்வு சிறக்கும்.

                                   

        மணமுடிக்க இருக்கும் மணமகனின் சாதகத்தில் சனி ஏழாம் அதிபதியாக இருந்து ஜென்ம விரோதியான செவ்வாய் பகவான் வீட்டில் இருப்பின் அயல்நாட்டில் பணிபுரியும் கணவராக இருந்தால் அவர்களது இல்லறம் நல்லறமாக அமையும்.

       திருமணம் செய்து கொள்ள கூடிய காலங்களில் தம்பதிகளுக்கு இடையே வயது இருவரும் இரட்டை படையாகவோ அல்லது ஒற்றை படையாகவோ இல்லாமல் இருந்தால் நலம்.

        இருவரது சாதகங்களில் யோக பங்கம் இல்லாமல் இருப்பின் இல்லறம் சிறக்கும்.உதாரணமாக பையன் சாதகத்தில் கெஜ-கேசரி யோகம் இருந்து பையனின் சாதகத்தில் சகடையோகம் இருக்க கூடாது.

      தம்பதிகள் இருவரது சாதகங்களிலும் பதினொறு மாத இடைவெளியில் ஒரு திசை முடிந்து மறுதிசை ஆரம்பிக்காமல் இருப்பின் சிறப்பு தரும்.

                                

   தம்பதிகள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காலத்தில் மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் இட அதிபதி திசையானது நடைபெறாமல் இருப்பின் திருமணத்திற்க்கு உகந்தது.

        இருவருக்கும் பகை திசைகள் நடைபெறாமல் இருத்தல் நலம் பயக்கும்.மேலும் 7,8 மற்றும் 11,12 க்குரியவர்கள் திசை சந்திப்புகள் இல்லாமல் இருப்பின் சிறப்பு தரும்.

    தம்பதிகள் இருவருக்கும் ஒத்த ராசி இருப்பின் ஒத்து வாழ நியதி இல்லை "என சொல்வதன் நோக்கம் என்னவெனில் காரணம் தம்பதிகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமையும் பட்சத்தில் ஒரே ராசியும்,ஒரே திசையும் நடக்க வாய்ப்பு உண்டு என்பதால் ஆகும்.இருவருக்கும் நடைபெறும் திசையானது  யோக திசையாக இருக்கும் பட்சத்தில் மணமுடிக்க இல்லறம் இனிக்கும்.

           இருவரது சாதகத்தில் உள்ள சூரியன் ஒன்றுக்கொன்று கேந்திர ஸ்தானத்தில் அமைவது நல்லது.

        பெண்ணின் சந்திரன் இருக்கும் இடம் பையனின் ஏழாம் அதிபதியின் வீடாகவோ அல்லது பையனின் சுக்கிரன் இருக்கும் ஏழாம் அதிபதியின் உச்ச வீடாகவோ அல்லது பையனின் சுக்கிரன் வீடாகவோ  அமைய இல்லறம் நல்லறமாக அமையும்.

  நன்றி நன்றி நன்றி. !

                               

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்புக்கு

  வாட்ஸ்அப்
    97 151 89 647

      செல்
     740 257 08 99
           97 151 89 647

                                      
      அன்புடன்
   சோதிடர் ரவிச்சந்திரன்
        M.Sc ,MA ,BEd
  சோதிட ஆராய்ச்சியாளர்,
   ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My Blogspot
  AstroRavichandransevvai.blogspot.com
.............................................................................

*சோதிடமும் பரிகாரங்களும் *

சோதிடமும்,பரிகாரங்களும்

                           


கிரகங்கள் படுத்தும் பாடு-187

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


                           


   மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகபலன்களே காரணம் ஆகும். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.

               அவரவர் செய்யக்கூடிய பரிகார பூஜை வழிபாடுகள்,தான தர்மங்கள்,நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது "பரிகார பூஜைகள் ஆகும். அவற்றில் ஒரு சில பரிகார வழிபாட்டு முறைகளை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.

             ஒருவரது ஜாதகத்தில் கடுமையான துன்பத்தையோ,விபத்தையோ  அல்லது பிணி மற்றும் பீடையையோ தருவதாக இருந்தாலும் ,மற்றும்
புத்திர பாக்கிய கால தாமதமாக தரக்கூடிய புத்திர தோஷமோ அல்லது திருமணத்தடை போன்றவை ஏற்பட்டாலும்,

            சில திருமண பொருத்ததங்களில் குறைபாடு இருப்பினும் ,கணவன் மனைவி ஒற்றுமை குறைபாடு இருப்பினும்
இவ்வித பிரச்சினைகளில் இருந்து வெளிவர சோதிடர்களால் கூறப்படும் தீர்வு முறைகள் பரிகாரங்களே ஆகும்.

   
                                

        திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம்  போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

           லக்கனம் மற்றும் ராசிகளோடு ராகு,கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன  ராகு இணைவு மற்றும் எட்டாமிட தொடர்பும்   திருமணத்தடையை ஏற்படுத்தும்

பரிகாரங்கள்


             ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர,
திருப்பாள்புரம்  மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை  குறைக்கலாம்.


          துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.

புத்திரதோஷம்


        புத்திரகாரகன் குரு நீசம் ,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலோ இருந்து
புத்திரஸ்தானத்தில் பாவி இருந்து அதன் அதிபதிகளுடன் ராகு,கேது தொடர்பு ஏற்படின் புத்திர தோஷம் ஆகும்.


                                


  பரிகாரங்கள்


             இத்தோஷமுடையவர்கள் அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள் மற்றும் குங்குமம் போன்றவை வைத்து தானம் செய்தால் விதியுள்ள ஜென்மன் பிறப்பான்

மேலும் ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்தல் தோஷம் நீங்கும்.

சகோதர தோஷம்


          ஓருவருக்கு பிறந்த குழந்தையின் குழந்தைக்கு( ஆணாக/பெண்ணாக இருப்பின் ) உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம்.சில நேரங்களில் உடன் பிறந்த சகோதரர் இருக்ககூடாது எனறும் சாதகத்தில் இருப்பின்
(சகோதரஸ்தானம் எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவுஸ்தானங்களில் இடம்பெறுவது இத்தகைய தோஷத்தை தரும்).



பரிகாரம்



                  இது போன்ற குழந்தையை இறைவனுக்கு தத்து கொடுக்கும்போது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.

தார தோஷம்

          சிலரது ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலம் இழந்து லக்கனாதிபதி மற்றும்  பதினொராம் அதிபதி வலுப்பெற்றிருந்தாலும்


களஸ்திரகாரகன் சுக்கிரன் கேந்திரங்களிலே இருந்தாலும்,சனி ஏழாமிடத்தில் இருந்து  ஏழாம் அதிபதி வலுவிழந்த சாதகங்களிலும்
    லக்கன ராசிகளுடன் ராகு கேது தொடர்புபெற்று ஏழாம் அதிபதி பலமிழந்து 11- ம் இட அதிபதி வலுப்பெற்ற சாதகங்களிலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பரிகாரங்கள்



           இதுபோன்ற அமைப்புடையவர்கள் நமது கலாச்சாரப்படி   ஒருவனுககு ஒருத்தி என்ற உயர்கொள்கையை கொண்ட நாம் பரிகாரங்கள் மூலம் தார தோஷத்தை தவிர்த்துவிடலாம்.



       திருமணத்தைப்போன்றோ சுப விஷயங்கள் செய்து ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்டி விடுவதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து பிறகு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டலாம்.

    வாழை மரம் வெட்டுவது ஒரு மரத்தை வெட்டுவதற்குரிய பாவம் என்பதால் ஒரு பெண் பதுமை செய்து அதற்கு முறைப்படி தாலி கட்டி பிறகு அதை நீரில் கரைத்துவிடலாம்.

     இதேபோல் பெண்ணின் ஜாதகதத்தில் இருப்பின் ஒரு பெண்ணைக்கொண்டு தாலி கட்டி பிறகு அதை நீக்கிவிடல்.

            எல்லாவற்றிக்கு மேலாக கோவில்களில் திருமணம் நடத்தி அவ்வாறு திருமணத்தன்று கட்டப்படும் மாங்கல்யத்தை அம்பாளுக்கு சாத்தி பிறகு தாலி பெருக்கிபோடும்போது வேறு ஒரு மாங்கல்யம் போட்டுக்கொள்ளாலாம்.

தத்துக்கொடுத்தல்


           பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் தாய் ஸ்தானமாகிய 4-ம் இடமும்,சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு ஆகாது.

     இதேபோல் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடமும் ,சூரியனும் பாதிக்கப்பட்டிருந்தால் தந்தைக்கு ஆகாது.

எனவே மேற்கண்ட  அமைப்பை பெற்றுள்ள குழந்தையை சாமிக்கு தத்து கொடுப்பதன் மூலம் அவை சாமி பிள்ளை ஆகிவிடுதல் அத்தோஷம் பெற்றோர்களை தாக்காது.

திருமண யோகம் அற்ற சாதகங்களாக இருப்பின்


        சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும்


     லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.இவர்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளவும்.

கட்டாயம் தேவையானவை

       எந்த தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம்.
எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம்.

இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்


                                    
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ; 97 151 89 647
Cell; 740 257 08 99

Whatsup no
97 151 89 647

(Online Astro consult conduct my Cell and Whatsup.
தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

My email
  masterastroravi@gmail.com

Wednesday 6 December 2017

போராடி வெற்றிபெறும் மனப்பான்மை யாருடைய சாதகத்தில் உண்டு

போராடி வெற்றி பெறும் மனப்பான்மை யாருடைய சாதகத்தில் உண்டு ?

                       
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 134 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

             ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் மற்றும் அவமானங்கள் வந்தாலும் அவற்றால் உண்டாகும் மன உலைச்சல்களையும் ,வேதனைகளையும் கண்டு துவண்டுவிடாமல் அவற்றையே படிகட்டாக கொண்டு அதில் ஏறி சிலர் சிகரம் தொடுவதற்கும் மற்றும் ஒரு சிலர் அந்த வேதனைகளையும் ,துன்பங்களையும் உள் மனதிற்கு கொடுத்து வெம்பி , வெதுங்கி தனது அறிவையையும் மற்றும் திறமையினையும் மங்க செய்து தாழ்ந்து போகிவிடுகிறவர்கள் பலர் உண்டு.சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுவதுமுண்டு.

             ஒரு மனிதன் போராடி வெல்வதற்கும் ,போராட்ட குணமின்றி மங்கி சிதைவதற்கும் அவனது சாதக கட்டத்தில் உள்ள "கிரகங்கள் படுத்தும் பாடே " காரணம் ஆகும்.இந்த நவகிரகங்கள் மனித வாழ்வில் நிகழ்த்தும் கோளாட்டத்தை பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தை கொண்டு உங்களோடு தொடர்ந்து எழுதி வருகிறேன்.

                ஒரு மனிதனது துணிச்சலான போராட்ட குணத்தை தருவதில் சில ராசிகளுக்கும் அதன் அதிபதிகளுக்கும் அலாதியான பங்கு உண்டு.குறிப்பாக ஒரு மனிதனுக்கு துணிச்சல்,வீரம் மற்றும் போராட்ட குணத்தை தரக்கூடிய செவ்வாய்பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் மற்றும் விருட்சக ராசி காரர்களுக்கும் ,மேலும் ஆத்மாகாரகன் என அழைக்கப்படும் சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசி காரர்களுக்கும் போராட்ட குணமும,போராடி வெல்லும் தன்மையும் உண்டு(killer instinct ).

               இதேபோல பொதுவாக சமூகத்தில் ஆட்சிபுரிபவர்களாக(Ruling power)  ,விட்டுகொடுக்கும் தன்மையில்லாத தலைமையேற்கும் குணம் மிக்கவர்களாக(dominat power) பெரும்பாலும் மிதுனம்,,கடகம் மற்றும் சிம்ம ராசி காரர்களுக்கு உண்டு.

               ஏனைய ராசியை கொண்டவர்களுக்கு போராடி வெற்றி பெறும் ஆளுமை தன்மையில்லை என நான் சொல்ல வரவில்லை.ஏனைய மற்ற ராசிகளைவிட இந்த ராசிகளுக்கு சற்று அதிகம் போராட்ட குணம் இருக்கும்..ஆனால் மேற்கண்ட மேஷம்,மிதுனம்,கடகம் மற்றும் விருட்சக ராசியாக இருந்தாலும் அவர்களது சாதகங்களில் செவ்வாய் மற்றும் சூரியன் நீசம்,அஸ்தமம் போன்ற பலமிழந்து ,மேலும் லக்கனாதிபதியும் வலிமையிழந்து இருப்பின் பலனில் மாற்றம் உண்டு.

              எனவே எந்த ராசியாக இருந்தாலும் அவர்களது சாதகத்தில் செவ்வாய்பகவான் ,சூரியபகவான்  ஆகிய இருவரும் பலமடைந்து இருக்கவேண்டும்.இவ்விரு கிரகங்கள் மட்டும் பலமடைந்து இருந்தாலும் ,மனவலிமைகாரகன் சந்திரபகவானும் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நல்ல மனவலிமையோடு போராடி வெற்றி பெற கூடியவராக திகழ்வார்.எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் எந்த கஷ்டம் வந்த சூழலிலும் போராடி வெற்றிபெற லக்கனாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும்.

            மேற்கண்ட அமைப்பை பெற்றவர்கள் தமது வாழ்வில் அட்டமாதிபதி,ஆறாமாதிபதி மற்றும் பாதகாதிபதியின் திசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களிலோ அல்லது கோசாரப்படி அட்டம சனி,ஏழரை சனி காலங்களிலோ அவமானம் ,வம்பு மற்றும் வழக்குகளை சந்தித்தாலும் மனதிடத்துடன் போராடி பொறுமை காத்து நல்ல திசை வரும் காலங்களில் சாதனையளராக மாறிவிடுவார்கள்.
  தமிழ் மூதாட்டி ஓவையார் தனது "மூதுரை " நூலில் இத்தகைய தன்மையுடையவரின் குணநலத்தை கொக்கு வழி நின்று விளக்குவார்.
"ஓடுமீன்  ஓட உறுமீன்  வரும்வரை
வாடியிருக்குமாம் கொக்கு " என்கிறார்.

            தக்க மனவலிமையுடையவர்கள் சிறுமீன்களையெல்லாம் ஓட விட்டு தனக்கான பெரிய மீன்வரும்வரை கொக்கானது ஒற்றைக்காலில் பறந்துகொண்டு நின்று தவமிருப்பதுபோல  பொறுமையாக காத்திருந்து கவர்ந்து செல்வதுபோல  தக்க காலம் வரும்வரை காத்திருப்பார்"என்கிறார்.

            சிலர் இதுபோன்ற கஷ்டமான சூழலில் தற்கொலை முயற்சி வரை சென்றுவிடுவதற்கான காரணம் அவர்களது சாதகங்களில் போராடி வெற்றி பெறும் தன்மையில்லாமைக்கு அவர்களது சாதகங்களில் செவ்வாய்,சூரியன் மற்றும் சந்திரன் பலம் இழந்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சாதகத்தில் "லக்கனாதிபதி,மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி தொடர்பெற்று பலம் குறைந்து இவற்றில் ஏதேனும் திசை நடந்தாலே கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனநிலையின்றி சிலர் தற்கொலை முயற்சி செய்ய கூடும்.

            இதேபோல சனி மற்றும் செவ்வாய்பகவான் மறைவுஸ்தானமான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பு பெறுவது.
லக்கனத்தோடு விரய தொடர்பு பெறுவதும் மேற்கண்ட அமைப்பை தரும்.

             ஒருவரது சாதகத்தில் லக்கனம் மற்றும் ராசியின் இருபுறங்களிலும் பாவகிரகங்கள் அமர்ந்து "பாவகர்த்தாரி யோகம் "பெற்றிருந்தாலோ அல்லது இவ்விரு அதிபதிகள் பலவீனமடைந்து இருந்தாலோ அல்லது இவ்விரு அதிபதிகளும் மறைவிடங்களிலோ அல்லது பாவர்களின் சேர்க்கை பெற்றிருந்தாலோ போராட்ட குணமின்றி சோம்பேறிதனமிக்கவராக இருப்பர்.

நன்றி
(தங்களது சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் துல்லியமாக ஆராய்ந்து போன் வழியாகவே பலன் அளிக்கப்படும்.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்காணும் எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும்)

செல்
740 257 08 99
  97 151 89 647

வாட்ஸாஅப் எண்
97 151 89 647

                              
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
My Email id
masterastroravi@gmail.com
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
***** ***** **** **** **** **** **** ****

Tuesday 5 December 2017

மானிட வாழ்வில் குருபகவான் மற்றும் சனிபகவான் ஆற்றும் பணி.

மானிட வாழ்வில் குருபகவான் மற்றும் சனி பகவான் ஆற்றும் பணி


                                          


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 168 )

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                             குருபகவானும்,சனிபகவானும்

                   குருவிற்கு சனியும்,சனிக்கு குருவும் சம கிரகம் என்றாலும் குருவிற்கு நட்பாக உள்ள சூரியன்,சந்திரன்,செவ்வாய் ஆகிய கிரகங்கள் சனிக்கு பகை கிரகங்களாக உள்ளது.

                  இதேபோல் குருவிற்கு பகையாக உள்ள கிரகம் புதன்,சுக்கிரன் கிரகங்கள் சனிக்கு நட்பாக உள்ளது.
எனவே குருவிற்கும் சனிக்கும் இடையே பனிப்போர் நடைப்பெறுகிறது.

                 குருவும்,சனியும் சம சப்தமாக பார்க்கும்போது குருவின் வலிமையை சனி இழக்க செய்வார்.

                  குருவிற்குரிய தொழிலான போதகர்,வேதமந்திர சாஸ்திர அறிவு,யாகம் செய்தல்,புத்திரஞானம்,
தேகசொளக்கியம்,நல்ல புத்தி,ஞாபகசக்தி,மந்திரம்,ராஜதந்திரம்,நியம நிஷ்டை,உயர்ந்த அந்தஸ்து,செல்வாக்கு,பணம்,பிராமண உபச்சாரம்,தீர்த்த யாத்திரை ஆகியவைகளை அடைய விடமாட்டார்.

             இதற்கு மாறாக விஷமத்தனம்,கஞ்சத்தனம்,பிறர்க்கு தீங்கு செய்யும் எண்ணம்,கள்ளத்தனம்,வீண்கலகம்,தேகசஞ்சாரியாக,மதுகுடித்தல்,போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களை செய்ய தூண்டுவார்.

            குருவானவர் சூரியனுடன் சேரும்போதும் பார்க்கின்றபோதும் ஜாதகரை ஆன்மீக தலைவர்களாக மாற்றுகிறது.



              சனியானவர் சூரியனுடன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோது ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துபோகாத தன்மையை ஏற்படுத்துகிறது.சில நேரங்களில் தந்தையிருந்தும் அவரால் எவ்வித பலனுமில்லாமல் செய்துவிடுகிறது.
குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் "குருசந்திர யோகத்தை "வாரி வழங்குகிறார்.

         "கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே"

பாடல் விளக்கம்:-        
                   
           குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும்.மனைவி வழியில் தனலாபம் ஏற்படும்.பூமியில் பேரும்புகழும் பெற்று இறையருளோடு நீடோடி வாழ்வான்.

           குறிப்பு:-குரு சந்திர யோகம் தந்தபாவாதிபதி நீசம் பகை மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருப்பின் மேற்கண்ட பலனை தராது.எனவே பாடல் கருத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கோளாராய்சி செய்து பலனுரைக்கவும்.
சனியுடன் சந்திரன் சேர்ந்தாலும்,பார்த்தாலும் தாய்க்கு பீடை,திருமண தடை மற்றும் மன ரீதியாக ஊசாலாடும் மனம் படைத்தவராக இருப்பார்.மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைவது கடினம்.

              குருவுடன் செவ்வாய் சேர்ந்தாலும்,பார்த்தாலும் "குரு மங்கள யோகம்"அளிப்பார்.
நல்ல வாழ்க்கை துணை அமையும்.திருமணத்திற்கு பிறகு மனைவியால் முன்னேற்றம் ஏற்படும்.நில புல வசதி ஏற்படும்.
சனியோடு செவ்வாய் சேர்ந்தாலும்,ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் வாகன விபத்து மற்றும் மனித புத்தியைக்கெடுக்கும்.
சனியும் செவ்வாயும் சேர்ந்து ஏழாம் இடத்தில் இருப்பின் ஜாதகர் காம எண்ணம் மிக்கவராக இருப்பார்.
சனி,செவ்வாய் இணைந்து பார்க்கப்படும் ஸ்தானம் பாதிக்கப்படுகிறது.

                          


               இதேபோல் தேவர்களின் தலைவனும் பேரின்ப நிலையை அள்ளி தரும் குருவும்,அசுரர்களின் தலைவனும் சிற்றின்ப நிலையை அள்ளி தரும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.

                 ஜாதகத்தில் குரு ஆட்சி உச்சம் பெற்று சுப ஸ்தானத்திலே இருக்க பெற்றவர்கள் ஆன்மீக நாட்டத்தின் மூலமாக தியானத்தின் மூலம் நித்திய பேரின்பத்தை அடைவார்கள்.ஆனால் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று சுப ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வாழ்வின் எல்லாவித லொளகீக இன்பங்களையும் அடைந்து சிற்றின்பத்தின் உச்ச நிலையை அடைவர்.

              இப்படிப்பட்ட குருவும் சுக்கிரனும் இணைந்தோ அல்லது பார்த்துக்கொள்ளும்போது அந்த தசா புத்திகளான குரு தசையில் சுக்கிர புத்தியோ அல்லது சுக்கிர தசையில் குரு புத்தி சிறப்பாக அமைவதில்லை.
சனி சுக்கிரன் சேர்ந்து அல்லது பார்த்துக்கொள்வது கனரக வாகனங்களுக்கு யோகம்,ஆடு,மாடு ஜீவ ராசிகளுக்கு ஆகாது.திருமணம் தடைபடும்.

                        குருவும் ,புதனும் சேர்ந்து இருந்தாலும் ,ஒருவரையோருவர் பார்த்துக்கொண்டாலும் கல்வி ,கேள்விகளில் சிறந்து விளங்குவார்.ஜோதிட ஞானம்,வேத சாஸ்திரஞானம்,கவிதை எழுதுவது ,மற்றும் பேச்சாற்றலில் சிறந்து விளங்குவான்.

              சனியும்,புதனும் சேர்ந்து இருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் கல்வியில் நாட்டமின்மையை ஏற்படுத்துகிறது.ஜாதகரை எலக்ட்ரானிக் பொருட்களை பிரித்து பார்த்தால்,மெக்கானிக் மற்றும் பொறியில் நாட்டங்களை ஏற்படுத்துகிறது.மின்சாதன பொருட்களை பிரித்து மேற்பொருத்துதல் போன்ற விஷயங்களில் நாட்டத்தை ஏற்படுத்துகிறது.(இலக்கிய,கலை,பேச்சு நாட்டம் ஏற்படுத்தாது).

              குரு மற்றும் சனியை ஒப்பிட்டு பார்க்கும் போது மனதில் தோன்றியவை.

வாழ்க நிறைவுடன்

                                  

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல்
        9715189647
              740 257 08 99

வாட்ஸ்அப்
  97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)