பூமி வாங்கி சேர்க்கும் யோகம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
" ஒரு ஜாதகத்தில் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டா?" என எவ்வாறு தெரிந்து கொள்வது எனில் ஜாதகத்தில பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் எப்படி சாதக கட்டத்தில் உள்ளார் என ஆய்ந்து பார்க்கப்பட வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் உச்சம், ஆட்சி பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமடைந்து நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசை அல்லது அதன் புத்தி நடைபெறும் காலங்களில் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஜாதக கட்டத்தில் நிலம் வாங்கி சேர்க்கும் யோகம் பற்றி அறிய சுகஸ்தானம் என்று அழைக்கப்படும் நான்காம் இடத்தினை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் நான்காம் அதிபதி பலமடைந்து பூமி காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் தொடர்பு பெற அவன் நிறைய நிலபுலன்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
நான்காம் இடத்தில் ஒருவர் ஜாதகத்தில் நீர் காரகனாகிய சந்திரனும் , பூமிகாரகனான செவ்வாய் பகவான் சேர்ந்து இருக்க அவன் நிறைய நிலபுலன்களை சேர்த்து, ஆழ்குழாய் கிணறு அமைத்து பெரு
நிலசுவான்தராக திகழ்வான். இவை அதன் தசா புத்தி காலங்களில்தான் நடைபெறும்.
ஒரு ஜாதகத்தில் பூமிகாரகன் செவ்வாயும், வாகன காரகன் சுக்கிரனும் பலமடைந்து நில ஸ்தானமான நான்காமிட தொடர்பு பெறும்பொழுது பூமி வாங்கி சேர்க்கும் யோகம் அதன் தசா புத்தி காலங்களில் கிடைக்கும்.
ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் என்றழைக்கப்படும் மறைவிட தான அதிபதிகளான 3, 6 ,8, 12 இதன் அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு இருக்க அதன் தசா புத்தி நடைபெறும் காலங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டமாக பெரும் செல்வ வளங்கள் வந்து சேரும் யோகம் உண்டாகும். இதுபோன்ற காலங்களில் எதிர்பாராதவிதமாக பூமி வந்து சேரும் யோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் பூமி வாங்கி சேர்க்கும் மேற்படி யோகம் அமைந்தும் அவர் வாழ்வில் பூமி வாங்கி சேர்க்க முடியாது போய்விடலாம் .
காரணம் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கினால் அதற்குரிய திசைகள் அவர் வாழ்வில் வராமல் இருந்து விடலாம்.
ஒரு சிலருக்கு பூமி வாங்கி சேர்க்கும் யோகம் இருக்குமாயின் அதன் தசா புக்தி காலங்கள் (கேந்திர, கோண தசைகள்)
வரா விட்டாலும் யோக தசைகள் நடைபெறும் காலங்களில் எதிர்பாராத விதமாக நிலபுலன்கள் வந்து சேரலாம்.
ஒரு ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், லாபாதிபதியும் மற்றும் பூமி காரகன் செவ்வாய் பகவானும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பூமி வழியில் அவருக்கு ஆதாயம் வந்து சேரும்.
யாருடைய ஜாதகத்தில் 4-ஆம் இடத்தில் சனி ,ராகு ,கேது மற்றும் மாந்தி போன்ற பாவ கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் நீசம் ,அஸ்தமனம், பகை மற்றும் வக்கிரம் பெற்று பலம் இழந்து பூமிகாரகன் செவ்வாய் நீசம், அஸ்தமனம் பெற்று இருப்பின் அவருக்கு சொந்தமாக நிலம் வாங்கும் யோகம் மற்றவர் ஆக இருப்பார்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
My blogspot
AstroRavichandran.
blogspot.com
AstroRavichandransevvai.
blogspot.com
...................................