Sunday 30 June 2019

பூமி வாங்கி சேர்க்கும் யோகம்

                               

பூமி வாங்கி சேர்க்கும் யோகம்


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    " ஒரு ஜாதகத்தில் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டா?" என எவ்வாறு தெரிந்து கொள்வது எனில் ஜாதகத்தில பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் எப்படி சாதக கட்டத்தில் உள்ளார் என ஆய்ந்து பார்க்கப்பட வேண்டும்.

  ஒருவர் ஜாதகத்தில் பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் உச்சம், ஆட்சி பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமடைந்து நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசை அல்லது அதன் புத்தி நடைபெறும் காலங்களில் பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

  ஜாதக கட்டத்தில் நிலம் வாங்கி சேர்க்கும் யோகம் பற்றி அறிய சுகஸ்தானம் என்று அழைக்கப்படும் நான்காம் இடத்தினை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  ஒருவர் ஜாதகத்தில் நான்காம் அதிபதி பலமடைந்து பூமி காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் தொடர்பு பெற அவன் நிறைய நிலபுலன்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

  நான்காம் இடத்தில் ஒருவர் ஜாதகத்தில் நீர் காரகனாகிய சந்திரனும் , பூமிகாரகனான செவ்வாய் பகவான் சேர்ந்து இருக்க  அவன் நிறைய நிலபுலன்களை சேர்த்து, ஆழ்குழாய் கிணறு அமைத்து பெரு
நிலசுவான்தராக திகழ்வான். இவை அதன் தசா புத்தி காலங்களில்தான் நடைபெறும்.

  ஒரு ஜாதகத்தில் பூமிகாரகன் செவ்வாயும், வாகன காரகன் சுக்கிரனும் பலமடைந்து நில ஸ்தானமான நான்காமிட தொடர்பு பெறும்பொழுது பூமி வாங்கி சேர்க்கும் யோகம் அதன் தசா புத்தி காலங்களில் கிடைக்கும்.

 ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் என்றழைக்கப்படும் மறைவிட தான அதிபதிகளான 3, 6 ,8, 12 இதன் அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு இருக்க அதன் தசா புத்தி நடைபெறும் காலங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டமாக பெரும் செல்வ வளங்கள்  வந்து சேரும் யோகம் உண்டாகும். இதுபோன்ற காலங்களில் எதிர்பாராதவிதமாக பூமி வந்து சேரும் யோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் பூமி வாங்கி சேர்க்கும் மேற்படி யோகம் அமைந்தும் அவர் வாழ்வில் பூமி வாங்கி சேர்க்க முடியாது போய்விடலாம் .
காரணம் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கினால் அதற்குரிய திசைகள் அவர் வாழ்வில் வராமல் இருந்து விடலாம்.

  ஒரு சிலருக்கு பூமி வாங்கி சேர்க்கும் யோகம் இருக்குமாயின் அதன் தசா புக்தி காலங்கள் (கேந்திர, கோண தசைகள்)
வரா விட்டாலும் யோக தசைகள் நடைபெறும் காலங்களில் எதிர்பாராத விதமாக நிலபுலன்கள் வந்து சேரலாம்.

    ஒரு ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், லாபாதிபதியும் மற்றும் பூமி காரகன் செவ்வாய் பகவானும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பூமி வழியில் அவருக்கு ஆதாயம் வந்து சேரும்.

   யாருடைய ஜாதகத்தில் 4-ஆம் இடத்தில் சனி ,ராகு ,கேது மற்றும்  மாந்தி போன்ற பாவ கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் நீசம் ,அஸ்தமனம், பகை மற்றும் வக்கிரம் பெற்று பலம் இழந்து பூமிகாரகன் செவ்வாய் நீசம், அஸ்தமனம் பெற்று இருப்பின் அவருக்கு சொந்தமாக நிலம் வாங்கும் யோகம் மற்றவர் ஆக இருப்பார்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
  9715189647

  செல்
 9715189647
   7402570899

                        

 அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My blogspot
  AstroRavichandran.
blogspot.com

 AstroRavichandransevvai.
blogspot.com

...................................

Thursday 27 June 2019

நீசபங்க ராஜயோகம்

                                  

 நீசபங்க ராஜயோகம்



செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை

           ஒரு ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று சந்திர கேந்திரம் அடைந்து இருந்தாலும் அதேபோல நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் அல்லது ஆட்சி பெற்று சந்திர கேந்திரம் பெற்று  இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் என்று அழைக்கின்றோம்.

  ஆனால் அதே நேரத்தில் நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதியும் நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும் சந்திர கேந்திரம் பெறவில்லை என்றால் அதனை நீசபங்க ராஜ யோகமாக கருதக்கூடாது இதனை நாம் நீசபங்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

 இதேபோல நீச்சம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதியும், நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் சந்திர கேந்திரம் பெற்று உச்சம் அல்லது ஆட்சி பெறவில்லை எனில் இதனையும் நாம் நீசபங்க ராஜ யோகமாக கருதக்கூடாது .
இதனையும் நீசபங்கம் என்றே கருதப்பட வேண்டும்.

 ஒரு கிரகமானது அதன் வலிமை அடிப்படையில் பின்வருமாறு இறங்கு வரிசையில் அடுக்கலாம். உச்சம், மூலதிரிகோணம் ஆட்சி, நட்பு என்ற வகையில் ஒரு கிரகத்தின் வலிமையானது விளக்கப்படுகிறது உச்சம் பெற்ற கிரகம் 100% பலனைத் தரும் எனில் நீசம் பெற்ற கிரகம் 0% தனது ஆதிபத்தியம் மற்றும் காரக பலனைத் தரும்.

 ஆனால் அதே நேரத்தில் நீசம் பெற்ற கிரகம் மேற்கூறிய வகையில் நீசபங்க ராஜயோகம் பெற்றால் அவை உச்ச பலனைவிட 120% பலனைத் தனது திசை காலங்களில் தரும். என்னதான் நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தாலும் முதலில் எல்லாவற்றையும் நீசம் அடையச் செய்த பிறகு யோக பலனைத்தரும்.

  நீசம் பெற்ற கிரகம் தனது திசையில் முதலில் நீச பலனை தந்த பிறகுதான் தனது திசையில் யோக பலன்களை தரும்.

   ஒரு சிலர் நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதியும், நீச்சம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் உச்சம், ஆட்சி பெற்று அந்த நீசம் பெற்ற கிரகத்திற்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் என்று கூறுகிறார்கள் ஆனால் இது முற்றிலும் தவறாகும்.

  ஒரு ஜாதகத்தில் நீசபங்கம் என்பது வேறு, நீசபங்க ராஜயோகம் என்பது வேறு என்பதை ஜோதிட ஆர்வலர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். நீசபங்க மட்டும் அடைந்த கிரகம் அதன் தசைகளில் யோக பலன்களைத் தந்து விடுவதில்லை மாறாக நீசபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் தனது தசா புத்தியில் யோக பலன்களை முதலில் நீசம் அடையச் செய்து பிறகு யோக பலன்களை தருகிறது.

 மேலும் நீசபங்க ராஜ யோகத்தை பற்றி ஒரு கருத்து தெரியவேண்டிய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது .
அதாவது நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதியும் , நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் உச்சம் பெற்று வக்கிரமடைந்திருந்தால் அது சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் நீசபங்க ராஜ யோகத்தை தர இயலாது. ஏனெனில் உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெறும் போது அது நீசப்பலனுக்கு  சமம் என்பதால் ஆகும்.

நீசபங்கம் அடைவதற்கான விதிமுறைகள்.

1) நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் , ஆட்சி பெறுவது,

2) நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் உச்சம், ஆட்சி பெற்றிருப்பது,

3) நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதியும் நீச்சம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டில் உள்ள கிரகமும் சந்திர கேந்திரம் பெறுவது,

4) நீசம் பெற்ற கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது,

5) நீசம் பெற்ற கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது.

6) நீசம் பெற்ற கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று இருப்பது,

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
        செல்
  9715189647
   7402570899
                      


அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd,
ஆசிரியர் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My blog

AstroRavichandran.
blogspot.com

AstroRavichandransevvai
blogspot.com
...........

Saturday 22 June 2019

பேய், பில்லி, சூனியம் பாதிக்கும் காலங்களும், பரிகார முறைகளும்

             பேய், பில்லி, சூனியம் பாதிக்கும்          காலங்களும்,பரிகாரமுறைகளும்.


                                                               

                                    செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !

                      இன்றைய நவீன யுக வளர்ச்சியில் நவநாகரீக இளைஞரிடம் நாம் சென்று பேய், பில்லி, சூனியம் பற்றி பேசினால் அவருக்கு அது கிண்டலாக தெரியும்.
                      " என்ன சார் ,உங்களைப் பார்த்தால் நிறையப் படித்தவர்கள் போல் தெரிகிறது .ஆனால் இந்த கால கட்டத்தில்  நீங்கள் போய் " பேய் ,பில்லி, சூனியம் பற்றி ரீல் விடுறீங்களே சார்" என்று கிண்டல் அடிப்பார்கள்.

                       ஒருவருக்கு நல்ல நேரம் நடக்கும் வரை இது போன்ற தாக்குதல் இருந்தாலும் அந்த தாக்குதல் அந்த ஜாதகரை பாதிப்படையச் செய்வதில்லை. அதே நேரத்தில் அவருக்கு நடக்கக்கூடிய திசையானது நல்ல திசையாக அமையாத பட்சத்தில் பேய், பில்லி சூனியம் போன்றவற்றால்  பெரிதும் பாதிக்கப்படுவர்.

           'யார் ஒருவரும் வெற்றி மேல் வெற்றி வரும் பொழுது அந்த வெற்றி தனது திறமையால் நடந்தது என்று பெருமை பீற்றிக் கொள்வதும், ஆனால் அதே நேரத்தில் தோல்வி மேல் தோல்வியாக ஒருவர் சந்திக்க நேரும் போது மட்டும் நேரம் சரியில்லை என்று கூறுவது சாதாரண மானிடரின் பண்பாகும்."

  ஒரு ஜாதகருக்கு எந்த நேரத்தில்  பேய், பில்லி, சூனியம் வேலை செய்யும் என்பதை  தற்பொழுது பார்ப்போம்.

                         1) ஒருவருக்கு பாதகாதிபதி தசை நடந்து சத்துரு ஸ்தானாதிபதி புத்தியிலும்,

                         2) சத்ரு ஸ்தானாதிபதி திசை பாதகாதிபதி புத்தி நடைபெறும் காலங்களிலும் ,

                        3) ஒருவர் ஜாதகத்தில் அஷ்டமஸ்தானத்தில் சனி, ராகு ,கேது போன்ற கிரகங்கள் இருந்து அந்த கிரகங்களின் திசை நடைபெறும் காலங்களிலும் சாதகருக்கு மேற்கண்ட பாதிப்பு ஏற்படுகிறது.

                                                              அல்லது

                          அஷ்டமத்துடன் தொடர்புடைய சனி ,ராகு, கேது புத்திகளிலும் மேற்கண்ட தோஷம் உருவாகிறது.

                                   4) கோசாரப்படி அஷ்டமத்தில் சனி, ராகு கேது ,போன்ற பாவ கிரகங்களின் ஆதிக்கம் தொடர்ந்து முடியும் வரை மேற்கண்ட பாதிப்பு உருவாகிறது.

                                     சாதகருக்கு யாரால் செய்வினை தோஷம் செய்யப்பட்டது என்பதை கண்டறிவதற்கு 'ஆறாம் அதிபதி இருக்கும்" இடத்தைப் பொறுத்தும் செய்வினையை யார் உருவாக்கியது? என சொல்லிவிடலாம்

                                          எதனால் இந்த செய்வினை தோஷம் உருவானது என்பதை கண்டறிய 'பாதகாதிபதி அமையும் இடத்தைப் பொருத்து" கண்டறியலாம்.

                                    ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும்,  மனநிலைக்காரகன் சந்திரன் பலமிழந்து சூழலில் மேலே குறிப்பிடப்பட்ட தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு‌ செய்யப்பட்ட‌ செய்வினை தோஷம் தாங்கும் மனநிலை அற்றவராக பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

                                     பாதகாதிபதி தசையை விட பாதகஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் அதன் தசாபுக்தி காலங்களில் மிகுந்த பாதிப்பை தருகிறது.

                                    அதேபோல ஆறாம் அதிபதியை விட ஆறாம் இடத்தில் அமைந்த கிரகங்கள் மேற்கண்ட தோஷ பாதிப்பு அதிகம் தருகிறது.

                                      இதேபோல அஷ்டமாதிபதியை விட அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி, ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் அதிகமான பாதிப்பைத் தருகிறது.

                                   பேய் பில்லி சூனியம் போன்ற செய்வினை தோஷங்கள் மேலே குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட தசை காலங்களில் மட்டும் அல்லது புத்திக் காலங்களில் மட்டும் மற்றவர் ஏவிய பாதிப்பு சாதகரை வந்தடைகிறது. அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவை அதனை ஏவி விட்டவரை அல்லது ஏவி விட்டு காரணமானவரை  நோக்கி பாய்கிறது.

                                  இதுபோன்ற பில்லி, சூனியம் செய்பவர்கள் "சுவற்றின் மீது வீசி எறியப்பட பந்து எப்படி நம்மை திரும்பி வந்து அடைகிறதோ" அதேபோல அதை செய்தவர்களை நோக்கி இரண்டு மடங்காக திரும்புகிறது.

                            "கெடுவான் கேடு நினைப்பான் " என்ற பழமொழிப்படி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பலத்த பாதிப்புக்குள்ளாவதை அனுபவ அடிப்படையில் நான் பார்த்திருக்கிறேன்.

                                    அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கினால் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு"(action and reaction equal but opposite) என்ற அடிப்படையிலும் ,
                            "வினை விதைத்தவன் வினையை அறுப்பான்,  தினை விதைத்தவன் தினையை அறுப்பான்" என்ற பழமொழிபடியும் இது போன்ற கெட்ட செயலில் ஈடுபடுவார்கள் அந்த கெட்ட செயலாலே பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது இயற்கை நியதி ஆகும்.

        பேய் பில்லி சூனியம் நீங்க பரிகாரங்கள்


                                      1) ஒரு குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்கள் வர சில நேரங்களில் பேய் பில்லி சூனியம் அல்லாது வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஒரு சமயம் தங்களது குல தெய்வத்தை வழிபட மறந்திருக்கலாம் ஒருவருக்கு ஏனைய தெய்வ வழிபாட்டை விட குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமானதாகும் எனவே மூன்று பௌர்ணமி தொடர்ந்து தனது குலதெய்வ கோயிலுக்குச் சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து வர வேண்டும்.

                                   2) உங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு கீழ்க்கண்ட பொருட்களை வைத்து பூசை பூசை செய்து வழிபடலாம்.
 தேங்காய் -9
வாழைப்பழம்-18
வெற்றிலை-18
கொட்டை பாக்கு-18
கதம்பம்-9 முழம்.

                            3) வீடு அல்லது வியாபார ஸ்தலத்தில் பரிகாரம்.

 ‌‌                  . தங்களது வீடுகளில் அல்லது வியாபார ஸ்தலங்களில் குலதெய்வத்திற்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டு  பிறகு 27 எலுமிச்சம் பழம் எடுத்து சாறு பிழிந்து ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வீடு அல்லது வியாபார ஸ்தலத்தை சுற்றி தெளிக்கலாம். பிறகு அந்த பிழிந்த 27 எலுமிச்சைப் பழத் தோலை 27 அரசங்குச்சியுடன் வைத்து எரித்து அந்த சாம்பலை வீடு அல்லது வியாபார ஸ்தலத்தை சுற்றி வீசலாம்.

நன்றி!

(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு  மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்  9715189647


     செல் 9715189647    7402570899


 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.Sc,M.A,BEd(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Wednesday 19 June 2019

கிரகங்கள் படுத்தும் பாடு

                             கிரகங்கள் படுத்தும் பாடு


                                                                                  

செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


                   ஒரு சில ஜாதகங்களில் ஒரு சில கிரகங்களை தவிர மற்ற கிரகங்கள் சரியாக பலப்படாமல் பலவீனப்பட்டு இருக்கஅந்த ஒரு சில பலமடைந்த கிரகங்களின் திசைகள் வாழும் காலத்தில் உரிய வயதில் வந்து சாதகரை எதிர்பாராத உயர்வு நிலைக்கு கொண்டு சென்றுவிடும். 
    ஆனால் அவர் ஜாதகத்தை பார்க்கும்போது மிகவும் மோசமான நிலையில்  காணப்படும்.

                   ஆனால் ஒரு சில ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு சில கிரகங்களை தவிர பெரும்பாலான கிரகங்கள் உச்சம் ஆட்சி போன்ற பலமடைந்த நிலையில் காணப்படும் . ஆனால் அந்த பலமடைந்த நிலையில் காணப்படும் கிரகங்களின் திசைகள் இளவயதில் வாழும் காலத்தில் வராமல் சாதகரை துன்பம் கொள்ள செய்யும். இது ஒரு துரதிருஷ்டமே.


           ஒரு சிலருக்கு ஏழரை மற்றும் அஷ்டமச் சனி காலங்களில்  நிறைய எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தந்து வாழ்க்கையை உயர்நிலைக்கு கொண்டு சென்றிருப்பதை காணலாம்.


                ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு சனி பகவான் யோகராக செயல்படுவதால்  இது போன்று ராசிகளுக்கு ஏழரை மற்றும் அஷ்டமச் சனி காலங்களில் எதிர்பாராத  அதிர்ஷ்டங்களை தந்து வாழ்வில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது.


          இயற்கை சுபராக இருந்தாலும் குருபகவான் தசையானது துலா ராசிக்கும், புதன் திசையானது மேஷ ராசிக்கும், சுக்கிரன் திசையானது மீன ராசிக்கும் நல்ல பலனைத் தந்துவிடுவதில்லை.


         இது போல பாவராக இருந்தாலும் செவ்வாய் திசையானது கன்னி ராசிக்கும், சூரியன் திசையானது மீன ராசிக்கும் நற்பலனை தந்து விடுவதில்லை.


             ஒரு ஜாதகத்தில் கோசாரப்படி ஏழரை, அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் ராகு பகவான் அல்லது சந்திரன் திசையோ  நடப்பில் இருக்கக் கூடாது. இவை மிதமிஞ்சிய கஷ்டங்களை சாதகருக்கு தந்துவிடும்.


        "குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்ற வகையில் ஒரு ஜாதகருக்கு துவக்க திசையே  சுக்கிர திசையாக இருந்து அத் திசை ஜாதகருக்கு இளம்பிராயத்தில் வரும்பொழுது ஜாதகரை இழப்பிராய  வேகத்தில் செயல்பட்டு சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் கஷ்டங்களை  அனுபவிக்க நேரிடும் என்பதால் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்றார்கள்.


           ராகு பகவானுக்கு சொந்த வீடு இல்லை என்பதால் அவை இருக்கும் வீட்டினையே சொந்த வீடாகக் கொண்டு செயல்படும்.


          ராகு திசை ஆனது எந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது அந்த வீட்டின் அதிபதி பலனை உறிஞ்சி அதன் தசையில் தர முயலும். அத்துடன் மட்டுமல்லாமல் ராகு பகவானை பார்த்த மற்றும் சேர்ந்துள்ள கிரகங்களில் பலனை எடுத்து தனது திசையில் தரக் கூடிய வாய்ப்பு உண்டு .சில நேரங்களில் ராகு பகவான் தான் பெற்றுள்ள நட்சத்திர சார அதிபதியின் பலனையும்‌தனது திசை காலங்களில் தர முயலும்.


               நடைபெறும் திசையானது சாதகருக்கு யோக பலனை தர வேண்டும் எனில் அது லக்னாதிபதிக்கு நட்பாக அமர்ந்து லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர ,கோணங்களில் அமர்ந்து இயற்கை மற்றும் ஸ்தானத்தின் அடிப்படையில் சுபராக இருந்து  திசை நாதன் மீது அதன் பார்வை பட நடைபெறும் திசையானது  ஜாதகருக்கு அந்த திசை நடைபெறும் காலங்களில் யோகா பலன்களை  அள்ளிக் கொட்டுகிறது.


            நடைபெறும் திசையானது லக்னாதிபதிக்கு பகையாகவும் அல்லது லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு மறைவிடங்களிலும் நின்று இருப்பின் அந்த திசையானது யோகப் பலனைத் தராது.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்க்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                                              வாட்ஸ் அப்                                                                       9715189647


                                                   செல் 

                                         9715189647  

                                              74025708999


                                                             
                                     அன்புடன்

                  சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்  

                                             M.Sc,M.A,BEd,

                   (ஆசிரியர்& சோதிட ஆராய்ச்சியாளர்)

          ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்                                கறம்பக்குடி 

                         புதுக்கோட்டை மாவட்டம்

பொருத்தம் பார்க்கும் போது திருத்தம் செய்ய வேண்டியது தான்

பொருத்தம் பார்க்கும்போது திருத்தம் செய்ய வேண்டியது


                       

                                                          செவ்வாய்ப்பட்டி
                                             ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                     '' ஒரு தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்க வரும் போது அவர்கள் கொண்டு வரும் ஜாதகத்தினை நன்றாக கணக்கீடு செய்து உள்ளார்களா ? '' என ஆய்வு செய்ய வேண்டியது ஜோதிடர்களுக்கு முதல் கடமையாகும்.

                         பெரும்பாலும் தம்பதிகள் இருவருடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை கொண்டு  இரண்டு சாதக  கணித முறைகளில்( வாக்கிய அல்லது திருகணித முறை) ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து சாதகம் கணித்து அவசியமாகும். தம்பதிகள் இருவரது சாதகமும் ஒரே கணித முறையில் கணக்கீடு செய்யப்பட்டு பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.

                   தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு திருக்கணித முறையிலும், மற்றவருக்கு வாக்கிய முறையிலும் கணக்கீடு செய்து இவர்களுக்கிடையே இந்த கணக்கீட்டுடினை கணக்கில் கொண்டு பொருத்தம் பார்ப்பது சரியான பொருத்தமாக அமையாது.

   என்னைப் பொருத்தவரையில் தம்பதிகள் இருவரது சாதகங்களையும் திருக்கணித முறையில் கணக்கில் எடுத்துக்கொண்டு பிறகு திருமணம் பொருத்தம் பார்ப்பது சாலச் சிறந்ததாக கருதுகிறேன் என்  சோதிட அனுபவத்தில் நன்றாக உணர்ந்துள்ளேன்.

 பொருத்தம் பார்க்கும்போது முதலில் தம்பதிகள் இருவரது சாதகங்களையும்  நன்கு ஆய்வு செய்து சாதக கட்ட அடிப்படையில் அவர்களுக்கு இடையே பொருத்தம் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டபின் நட்சத்திர பொருத்தம் பார்க்கப்பட வேண்டும். நட்சத்திரப் பொருத்தத்தை விட கட்ட பொருத்தமே சிறந்ததாக நான் கருதுகிறேன். இதில் மற்றவருக்கு கருத்து மாற்றம் இருக்கலாம்.

  ஒரு சமயம் நட்சத்திர அடிப்படையில் உத்தமம் பொருத்தம் இருப்பினும் கட்ட அடிப்படையில் இருவருக்குமிடையே நல்ல விவாகப் பொருத்தம் இல்லையெனில் திருமணம்  நிகழ்த்துவதை தடுத்து விடுவது நல்லது ஆகும்.

  கட்ட அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் இவற்றுடன் புத்திரகாரகன் குரு மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரது  நிலையையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டியது சோதிடர்களான நமது மிக முக்கிய கடமையாகும்.

     மேற்கண்ட ஸ்தானங்களும் கிரகங்களும் அரவுகளான ராகு ,கேது மற்றும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்களுடைய தொடர்பும் மற்றும் ஆறு மற்றும் எட்டாம் ஸ்தான அதிபதிகளுடைய தொடர்பும் இருக்கிறதா? என்பது கவனிக்கப்பட வேண்டும்.

  மேற்கண்ட ஸ்தான அதிபதிகளும், கிரகங்களும் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவிட இடங்களுக்குச் செல்லுதல் போன்ற வகைகளில் பலமிழந்து உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

    திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான லக்கனம், இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகி அதிபதிகள் பலம் அடைந்து  இயற்கை சுபரால்‌ பார்க்கப்பட்டு நவக்கிரகங்களில் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் கிரகங்களும் பலவீனப்படாமல் உள்ள ஜாதகத்தை பாதிக்கப்பட்ட அமைப்பு உள்ள சாதகத்துடன் இணைத்து பொருத்தம் உள்ளது என கூறி இணைப்பது உகந்தது அல்ல.

     நட்சத்திரம் மற்றும் சாதக கட்ட பொருத்தம் இருப்பினும் அவர்களுக்கு நடைபெறும் திசையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.

    ஒருவருக்கு கேந்திர கோணாதிபதிகள் திசைகள் நடந்து மற்றவருக்கு மறைவிட ஸ்தான அதிபதிகள் அல்லது கெட்ட ஸ்தானம் ஏறிய பாவிகளான ராகு ,கேது திசை அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகள் திசைகள் நடப்பில் இருப்பின் ஒருவரது திசை மற்றவரது வளர்ச்சியினை பாதிக்கும் என்ற வகையில் நன்கு கவனித்து பொருத்தம் போடுதல் அவசியம் ஆகும்.

ராகு தோஷம் சனி தோஷம்

   திருமணப்பொருத்தம் பார்க்கும் சாதகத்திற்கு ராகு அல்லது சனி இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது.

     இந்த தோஷத்திற்கு மற்ற சாதகத்தில் சமதோஷம் இருத்தல் வேண்டும். ராகு பெண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழில் இருந்தால் ஆண் ஜாதகத்தில் சனி இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம்.

    சனி பெண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் ராகு ஆண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம் .

   இதில் விதிவிலக்கு என்னவெனில் ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் இலக்கனம் ,இரண்டாம் இடம், 7-ஆம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகிய வீடுகளும் அவற்றிற்குரிய கிரகங்களும் பலமுள்ளவராக இருந்தால் இந்த தோஷம் இருப்பினும் பயப்படாமல் தம்பதிகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்.

 சுக்கிர தோஷம்

சுக்கிரன் களத்திரகாரகர் ஆவார். மனைவியை அல்லது கணவனை குறிக்கும் வீடு ஏழாம் இடம் ஆகும்.

களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருந்தால் இந்த சுக்ர தோஷம் ஏற்படுகிறது. இதற்கு சுக்கிரன் பெண் அல்லது ஆண் ஜாதகத்தில் ஏழில் இருந்தால் ஆண் சாதகத்தில்  ஆறு ,ஏழு எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும் .மேலும் ஒன்று அல்லது 7க்குரிய அதிபதி சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்க வேண்டும் ‌.

  தம்பதிகள் இருவரும் ஜாதகத்திலும் புத்திர தோஷம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   ஏனைய தோஷங்களுக்கு தம்பதிகளுக்கு இடையே சமதோஷம் வேண்டும். ஆனால் புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு புத்திர தோஷம் உள்ள இல்லத்துணையை இணைக்கக் கூடாது.

 தம்பதியர் இருவருக்கும் புத்திர தோஷம் இல்லாது இருக்க வேண்டும் அல்லது யாராவது ஒருவருக்கு புத்திர தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லை எனில் அவரது யோகத்தில் புத்திர பாக்கியம் உருவாக வாய்ப்பு உண்டு.

  தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் புத்திரஸ்தானமான ஐந்தாம் இடம், ஐந்தாம் இடம் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவை நீசம், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் மற்றும் மறைவிட ஸ்தானங்களுக்கு செல்லுதல் கூடாது.

   இதேபோல மேற்கண்ட புத்திர ஸ்தானம் மற்றும் அதன் அதிபதியுடனும், புத்திரகாரகன் குரு உடனும ராகு ,கேது சேர்க்கையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ பெறக்கூடாது.

 திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் மேற்கண்ட வகையில் பலவாறு ஆராய்ச்சி செய்து விவாகப் பொருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி

( தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில்  அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் )

                                                             


அன்புடன்
சோதிடர்
சோ.ப ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

குரு பகவானும் ,சனி பகவானும்

                                குரு பகவானும் சனிபகவானும்


                               

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                            ஜாதகத்தில் குரு பகவானும் சனிபகவானும் எதிரிடையான கருத்துக்களைக் கொண்டவர்கள் .குரு பகவான் மேல்மட்ட நிலை கொண்டவர் .சனிபகவான் கீழ்மட்ட நிலையிலும் உள்ளவர்களை ஆதரிப்பவர்.

                      குரு பகவான் பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ஞானம் ,வேதம் மற்றும் புத்திர பாக்கியம் போன்றவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்குபவர் .

                   குரு பகவான் ஜாதகரை மனநிலையிலும் மற்றும் உடல் நிலையிலும் தான் உடுத்தும் உடை ,பேசும் பேச்சு போன்ற எல்லாவற்றிலும் நேர்மையையும் நாணயத்தையும் கடை பிடிப்பவராக இருப்பார். சற்று கர்வமுடையவராகவும், ஞானச் செருக்கு உடையவராகவும் இருப்பார்.

                  தனக்கு சரிசமமாகவும் மற்றும் மேலான நிலை உள்ளவர்கள் மட்டும் பழக கூடியவராக இருப்பர்.

               வேதம் இயற்றுதல் சொற்பொழிவு பாடம் நடத்துதல் மற்றும் படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்வார்.

                சனி பகவான் சாதகர் எப்பொழுதும் கிழிந்த மற்றும் மசகு பிடித்த சட்டையை அணிபவராகவும் திகழ்வார் இவர் இருக்கும் இடத்தை சுற்றி குப்பைகளும்,
கூளங்களும் மிகுந்திருக்கும்.

                இவர்கள் தனக்கு கீழான நிலை உள்ளவர்களிடம் பழகக் கூடியவர்கள். இவர்கள் பேச்சிலும் செயலிலும் மற்றும் நடத்தையிலும் ஒருவித நேர்மை மற்றும் நாணயத்தன்மை காணப்படாது.

                    அதே நேரத்தில் சனி பகவான் சுப சாரம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டாலும் பத்தாமிடத்தில் அமரும்போது அமலயோகம்  பெற்று மக்கள் போற்றும் மகத்தான தலைவராக திகழ்வார். இருப்பினும் இவர்கள் எண்ணத்திலும் செயலிலும் ஒரு வித கீழான நிலை மற்றும் புத்தி காணப்படும்.

               குரு பகவான் white colour job என்று சொல்லக்கூடிய நிர்வாகத் திறன் உள்ள  தனது அறிவைக் கொண்டு பிழைக்கும் வேலை கிடைக்கும் .

                  சனி பகவான் பாவர் சாரம் பெற்று மிகக் கூடிய சூழலில் தனது சட்டையை கழட்டி வைத்து விட்டு வேறு உடை அணிந்து உடல் முழுவதும்  ஆயில்,மசகு போன்றவற்றை அப்பிக்கொண்டு வேலை பார்க்கும் மெக்கானிக்காக இருப்பார். அதே வேகத்தில் சனி பகவான் சுபர் சாரம் பெற்று நிற்கும்பொழுது  இதுபோன்ற மெக்கானிக்கை நிர்வாகிக்கும் பொறியியல் நிபுணராக அல்லது மேலாளராக இருப்பார்.

               குரு பகவான் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கோயில் குருக்கள் ,ஆன்மீக சொற்பொழிவாளர்கள், கோயில் ஓரத்தில் கோவில் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்றுப் பிழைக்கும் முதலாளிகள், ஆன்மீக ,இலக்கிய மற்றும் பட்டிமன்ற சொற்பொழிவாளர்கள், புரோகிதர்கள், கல்வி நிலையங்களை வைத்து  நடத்தி பொருளீட்டும் முதலாளிகள் மற்றும் குறி சொல்லும் பூசாரிகள் போன்றவர்களை உருவாக்குவதில் குருபகவான் பங்கு மேலானது.

                     சனிபகவான் ஆனவர் இரும்புக்கு காரகன் ஆவார் .எனவே கட்டிடத்திற்கு தேவையான இரும்புக் கம்பிகளை விற்கும் முதலாளிகள், கட்டடங்களைக் கட்டும் பொறியாளர்கள், கட்டடங்களைக் கட்டி விற்க்கும்  முதலாளிகள், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் பொருள்கள், பாத்திர கடை முதலாளிகள் ,மெக்கானிக்,இரும்பு வியாபாரம், பழைய இரும்பு பொருட்களை வாங்கும் பழைய இரும்புக் கடைக்கு முதலாளிகள் ,பெரிய கனரக இயந்திரங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள், டிரைவர்கள் போன்ற  தொழில்களையும் சாதகருக்கு தருவதில் சனி பகவான் பங்கு அலாதியானது.

                        குரு பகவான் ஆனவர் இலக்கணத்தில் திக்பலம் பெறுகிறார்.  சனி பகவான்  ஏழாமிடத்தில் திக்பலம் பெறுகிறார். ஆனால் நன்றாக கவனித்தால் இதில் ஒரு சூட்சுமம் உண்மை புலப்படும்.  என்னவாக இருக்கும் என யோசிக்கிறீர்களா? இதோ விளக்குகிறேன். குருபகவான் ஆனவர் திக்பலம் பெற்ற இடத்தில் சனி பகவான் தனது திக் பலத்தை இழந்து நிற்கிறார். இதேபோல சனிபகவான் திக் பலம் பெறும் ஏழாம் இடத்தில் குரு பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார்.

                         இதிலிருந்து அறிந்து கொள்ளவேண்டிய சூட்சும உண்மை என்னவெனில் குரு பகவான் பலம் பெற்று இருக்கும் இடத்தில் சனி பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார் . அதேபோல சனி பகவான் பலம் பெற்று இருக்கக் கூடிய அமைப்பில் இருக்கும் போது குரு பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார்.

                குரு பகவானுடன் சனிபகவான் சேரும்போது குரு சண்டாள யோகம் தந்து குருவினுடைய தன்மையான  ஆன்மீகம் போன்ற தன்மையிலிருந்து மாறி பகுத்தறிவு கருத்து உள்ளவர்களாக சாதகரை மாற்றிவிடுகிறது. இதேபோல குருவும், சனியும் சமசப்தம பார்த்துக் கொள்ளும் போது கூட குருவின் இயல்பான தன்மையை சனிபகவான் மாற்றி அமைத்துவிடுகிறது.

                 ஆனால் குருபகவான் ஆனவர் சனிபகவானை 5 மற்றும் 9ம் பார்வையால் பார்க்கப்படும்போது ஜாதகரை ஆன்மீகத் தலைவராக  அல்லது ஆன்மிக ஞான விஷயங்களில் ஈடுபடுவராக மாற்றி விடுகிறது.

                குரு பகவானால்  நீதிநெறி கதைகளையும், நீதிமானாக எவ்வாறு திகழ்வது என்பதை ஜாதகருக்கு புரியவைக்கிறார் .ஆனால் சனி பகவான் நீதி வழங்கும் நீதிமானாக உள்ளார்.

                   குரு பகவான் ஆன்மீக காரகன், புத்திர காரகன் மற்றும் தனகாரகன் என்று அழைக்கிறோம். சனிபகவானை கர்மகாரகன், இரும்புக்காரகன், மற்றும் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரது புத்தி ,அறிவு சிந்தனை மற்றும் செயல் போன்றவற்றை தீர்மானிப்பதில் குருபகவானின் பங்கு அலாதியானது .

               ஆனால் சனிபகவான் ஆனவர் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பது மிக முக்கிய காரணகர்த்தாவாவார். ஒருவர் அவர் செய்யும் கர்மவினைக்கு ஏற்பவும் மற்றும் முற்பிறப்பில் செய்த ஊழ்வினைப் பயனுக்கு ஏற்பவும் ஒருவருக்கு ஆயுளை வழங்குவதில் சனி பகவான் முக்கியமானவர். மேலும் ஒருவருக்கு வரக்கூடிய மரணத்தின் நிலையையும் முடிவு செய்பவர் சனி பகவானே ஆவார்.

நன்றி

(தங்களது ஜாதகபலன், திருமணப்பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

  செல்
  9715189647
    7402570899



  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.