Sunday 28 January 2018

சாதகம் ஏன் பார்க்கவேண்டும் ? எதற்காக பார்க்க வேண்டும்/?எப்பெழுது பார்க்க வேண்டும் ?

சாதகம் ஏன் பார்க்க வேண்டும் ? எதற்காக பார்க்க வேண்டும் ?எப்பொழுது பார்க்க வேண்டும் ?

                         

கிரகங்கள் படுத்தும் பாடு-( 189 )


செவ்வாய்பட்டிஅருள்மிகுதேவி  ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் துணை !

          மனித வாழ்வினை வழி நடத்துவதில் கிரகங்களின் தாக்கம் அளப்பரியது.கிரகங்கள் தான் பெற்ற ஒளி அளவிற்க்கு ஏற்ப பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஒரு செல் உயிரி முதல் எண்ணற்ற   ஜீவ ராசிகளையும் ,சிறிய அணு முதல் சிக்கலான மூலக்கூறுகளை கொண்ட  உயிறற்ற பொருட்களையும் தாக்கி கொண்டு இருக்கிறது.

          நாட்டில் நிலவும் புயல் ,வெள்ளம்,மழை பூகம்பம்,சுனாமி ,,வறட்சி  மற்றும் சீதோஷன மாற்றங்கள் ,பூமியின் சுழற்சியால் உண்டாகும் பருவ மற்றும் இரவு ,பகல் மாற்றங்கள் அனைத்திற்க்கும் கிரக சுழற்ச்சியும் அவைகள்  கொண்ட  ஒளி அளவும் காரணம் ஆகும்.

           புவியில் உள்ள அனைத்து பொருள்களின் சீரான இயக்கத்திற்க்கும் கிரகங்களின் சீரான சுழற்ச்சியே காரணம் ஆகும்.

         அண்ட வீதியில் உள்ள ஒவ்வொறு  பொருட்களும் கிரகங்களின் அதிர்வுகளுக்கு ஏற்ப தனது இயக்கத்தினை வெளிப்படுத்துகிறது.பிரபஞ்ச கிரகங்களின் அதிர்வுகளுக்கு ஒத்திசைவு கொண்டவை வாழ்வில் முன்னோக்கி செல்ல வைக்கிறது.இதனை சாதக கட்ட அடிப்படையில் பார்க்கும்போது ஒத்திசைவு பெற்ற கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்து அல்லது சேர்ந்திருக்க அவை அத்திசைக்கு பலமாக அமைந்து சுப திசையாக மாறி யோக பலன்களை அள்ளி தருகிறது.

            மாறாக நடக்கும் திசையானது அந்த குறிப்பிட்ட கிரகத்திற்க்கு ஒத்திசைவு தராததாக இருப்பின் அவை கெட்ட பலனை தரும் திசையாக மாறி கெடுபலன்களை தருகிறது.இவ்வாறு கெடுபலன்களை தரக்கூடிய திசையானது,பாதக,மாரக மற்றும் ஆறு,எட்டுக்குரிய திசையாகவோ  ,பகை,நீசம் ,அஸ்தமனம் பெற்ற திசையாக அமைகிறது.

                        

      ஒரு மனிதன் வெற்றி மேல் வெற்றியாக பெற்று திளைக்கும்போது தனது முயற்சியால் தான எல்லா  வெற்றிகளையும்  அடைந்ததாக எண்ணிக்கொள்வான்.அதே நேரத்தில் தோல்வி மீது தோல்வியாக வரும்போது மட்டும் நம்மை மீறிய ஏதோ  ஒரு சக்தி உள்ளதாக எண்ணி சாதகத்தினை தூக்கி கொண்டு சோதிடர்களை நாடி வருகிறான்.

   சாதகம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கால கண்ணாடி ஆகும்.இதனை அறிய நல்ல புலமை வாய்ந்த சோதிடர்களின் உதவி தேவைப்படுகிறது.
நமக்கு நடந்த,நடக்க இருக்கின்ற மற்றும் நடக்கின்ற அனைத்து செயல்களுக்கு காரணம் எது ? என்பதை அறிந்து கொள்ள சோதிடம் பயன்படுகிறது.நமக்க நடக்கின்ற நல்வினை,தீவினைகளுக்கு காரணங்களை ஆய்ந்தறிய பயன்படுகிறது.

  ஒரு சாதகர் தமது வாழ்நாளில் நல்ல புலமை வாய்ந்த சோதிடரை கண்டறிந்து அவரையே குடும்ப சோதிடராக கொண்டு அவரிடம் குறைந்தபட்சம் வருடத்திற்க்கு ஒரு முறை ஆலோசனை செய்து பலன்களை அறிந்து நற்பலன் நடக்கிறதா ? அல்லது ஏதேனும் தீங்கு நடைபெறும் அமைப்பு உள்ளதா ? என அறிந்து கொள்ள வேண்டும்.

  கெடுதல் தரும் திசை அமைப்புகள் இருப்பின் அதற்குரிய பரிகார பூஜைகள் செய்து சற்று முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வழிவகை செய்து கொள்ள சோதிடம் பயன்படுகிறது.
இதேபோல இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனி பெயர்ச்சி,ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ராகு,கேதுபகவான் பெயர்ச்சி மற்றும் வருடம் ஒருமுறை வரும் குருபெயர்ச்சி இதுபோன்ற தருணங்களை பொதுபலன்களை படித்து அதுபடி எதிர்பார்த்து ஏமாந்து விடாமல் அவரவர் சாதக ஜெனன கால கிரக நிலைகளோடு கோசார பெயர்ச்சி பலனையும் ஒப்பிட்டு நடக்ககூடிய திசைக்கு ஏற்றார்போல தனது பலனை தெரிந்து கொள்ள வேண்டும்.
               
                                        
  சாதகர் தனது கல்வி நிலை,திருமணநிலை, புத்திரபாக்கியம் ,செல்வ நிலை ,செய்யவேண்டிய தொழில் ,சொத்து வாங்குதல்,பொருள்சேர்த்தல்,பிள்ளைகளின் கல்விநிலை,அவர்களது எதிர்காலம் ,திருமஙம் இதுபோன்ற முக்கிய முடிவினை எடுக்கும்போது சாதகம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

     சோதிடர்களிடம் தமது சாதகத்தினை காட்டி தெரிந்து கொள்ளவேண்டிய அம்சங்களாவன 


       தனது சாதகத்தினை சோதிடர்களிடம் காட்டி தனது லக்கனம் ,ராசி ,நட்சத்திரம் மற்றும் ஒவ்வொறு கிரகங்களும் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது எனவும் மேலும் அக்கிரகங்கள் இடம்பெறும் இடத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

        ஒவ்வொறு  கிரகமும்  இடம் பெறும் ராசியினையும்  அந்த ராசியானது அக்கிரகத்திற்க்கு உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி ,நட்பு ,
சமம்,பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் இவற்றில் என்ன நிலைகளில் உள்ளது எனவும் தெரிந்துகொள்ள முயலவேண்டும்.ஏனெனில் உச்சம்,ஆட்சி போன்ற பலமடைந்த நிலைகளில் உள்ள கிரகங்கள் நற்பலனையும்,பகை,நீசம் போன்ற நிலைகளில் உள்ள பலமிழந்த கிரகங்கள் குறைவான பலன்களையும் தரும் என்பதால் ஆகும்.


                              

  இதிலும் தன,லாப ,கேந்திர மற்றும் கோண நிலைகளில் அமைந்த கிரகங்கள் பலம் அடைவது நல்லது. ஆறு,எட்டு போன்ற மறைவிட ஸ்தான அதிபதிகள் பலம் இழப்பது நல்லது.பொதுவாக சாதக கட்டத்தில் இயற்கை பாவ மற்றும் கெட்ட ஸ்தான கிரகங்கள் சுப கிரகங்கள் மற்றும் சுப ஆதிபத்திய கிரகங்களேடு சேர்ந்திருப்பதோ  அல்லது பார்வை பெறுவதோ கிரகங்களின் வலிமையை குறைக்கும் என்ற உண்மையினை தெரிந்துகொள்ளல் அவசியம் ஆகும்.

  ஒவ்வொறு கிரகம் பெறும் நட்சத்திர சாரம் அறிந்து அந்த நட்சத்திர அதிபதியானது அக்கிரகத்திற்க்கு பகையா ? நட்பா ? என சோதிடர்களின் உதவியால் ஆராய்ந்து அறியவேண்டும்.மேலும் அந்த நட்சத்திர அதிபதிகளின் ஸ்தான பலத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  ஏனெனில் ஒரு கிரகம் பெறும் நட்சத்திர அதிபதியானது அக்கிரகத்திற்க்கு நட்பாக இருக்கும்பட்சத்தில் அக்கிரக பலனை அதிகரிக்க செய்யும் ,பகையாக இருப்பின் அது கிரகம் தர வேண்டிய பலனை மட்டுபடுத்தும்.

  ஒரு கிரகத்தின் பலனை அறிய முற்படும்போது அவை ராசி,அம்சம் மற்றும் பாவ நிலைகளில் எவ்வாறு அமைந்துள்ளது எனவும் அறிய முற்படவேண்டும்.ஏனெனில் ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றிருப்பின் அந்த கிரகம் தனது திசையில் முழுப்பலனை தர மாட்டார்.அதே நேரத்தில் ராசியில் பலமிழந்த கிரகமானது அம்சத்தில் உச்சம் போன்ற பலம் பெறும்போது அக்கிர திசையானது தரும் பலன் சற்று கூடுதலாகவே இருக்கும்.

           இதேபோல ராசியிலும்,அம்சத்திலும் ஒரே இடத்தில் உள்ள கிரகமானது "வர்க்கோத்தமம் " என்ற நிலையில் அக்கிரகம் தரும் பலன் சற்று கூடுதலாகவே இருக்கும்.

         ஒரு கிரகமானது தன்னுடன்  இணைந்த,பார்க்கின்ற,சாரம் பெற்ற  மற்றும் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப  வழக்கமாக தரும்  தனது பலனை சற்று மாற்றி தருவதற்க்கு வாய்ப்புகள் உண்டு.
சாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் முன்னோக்கி செல்ல அரவுகளான ராகு ,கேதுக்கள் மட்டும் பின்னோக்கி செல்கிறது.எனவே ராகு,கேது தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ரகதி கிடையாது.இதில் சந்திரபகவானுக்கும் வக்கிரகதி கிடையாது.

           வக்கிரம் என்பது கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலங்கள் பின்னோக்கி செல்வது ஆகும்.அவ்வாறு கிரகங்கள் வக்கிரம் பெறும்போது தனது இயல்பான பலன்களில் மாற்றம் அடைகிறது.
அதாவது உச்சம் பெற்ற கிரகமானது வக்கிரம் பெறும்போது நீச பலனை தருகிறது.பாவ கிரகங்கள் வக்கிரம் பெறும்போது சுப பலனையும்,சுபர்கள் வக்கிரம் பெறும்போது பாவ பலனையும் தருகிறது.

        இவை மட்டுமன்றி கேந்திர அதிபதிகள் கேந்திரத்தில் அமராமல் இருப்பது நல்லது.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் "கேந்திராதிபத்திய தோஷத்தினை " தந்து பலமிழக்கிறது.

      பாவ கிரகங்கள் கேந்திரங்களில் இடம்பெறுவதும்,சுப கிரகங்கள் கோணங்களில் ஏறி நிற்பதும் நல்லது என்பதனையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

       நடைபெறும் திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாகவும்,லக்கனத்திற்க்கு கேந்திர,கோணங்களில் இருப்பின் அத்திசையானது நற் பலனை தரும்.

                         

       எனவே மேற்கண்ட பலவகையில் ஒருவர் தனது சாதத்தினை ஆராய்ச்சி செய்து இப்பிறப்பில் தனக்கான கொடுப்பினையை அறிந்து கொள்ளவேண்டும்.அதற்க்கு ஏற்றார்போல தனது மனநிலையினை மாற்றி அமைத்துக்கொள்ள பழகவேண்டும்.

          தனக்கு மட்டும் கடவுள் இவ்வளவு கஷ்டங்களை தருகிறார் ? என மனம் நொந்து கொள்பவர்களுக்கு சாதகம் பார்த்து கிரக பலனே காரணம் எனும்போது "தம்மால் மாற்றி கொள்ள முடியாத கஷ்டங்களை எண்ணி வருத்தப்படுவதில் பலன் ஏதும் இல்லை என ஒரு தெளிவு பிறக்கிறது.அதற்கு ஏற்றார்போல தனது வாழ்வினை நகர்த்தி செல்வதற்க்கு சாதகம் பலன் பார்ப்பது உதவுகிறது.

        ஒரு சிலர் அடிக்கடி சாதகம் தூக்கி கொண்டு திரிவதையே பிழைப்பாக கொண்டவர்களை பார்க்கும்போது சற்று வருத்தமாக திரிகிறது.இதுபோன்றவர்கள் " அவரிடம் பார்த்தேன் அப்படி சொன்னார் ? , இவரிடம் பார்த்தேன் இப்படி சொன்னார் ? என குழப்பிக் கொண்டு அவர் அந்த பரிகாரம் செய்ய சொன்னார் ,இவர் இந்த பரிகாரம் செய்ய சொன்னார்.ஆனால் நான் எல்லா பரிகாரமும் செய்துவிட்டேன்"என " பரிகாரம்  செய்யும்போது முழு நம்பிக்கை உடன் Astralogy -ஜோதிட பரிகாரம் செய்யாமல் தன்னையும் குழப்பிக்கொண்டு சோதிடரையும் குழப்பி விடுவதுண்டு..

" எதுவும் இவ்வுலகில் முக்கியமில்லை,எதுவும் இவ்வுலகில் நிரந்தரம் இல்லை எனும்போது கவலைப்பட இவ்வுலகில் என்ன இருக்கிறது ." எனும் எழுத்து சித்தர் பாலகுமாரன் கூற்றுப்படி எதையும் அலட்டிக்கொள்ள தேவையில்லை..

      சாதகமானது ஏதாவது முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழலில் மட்டும் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு நல்ல புலமை வாய்ந்த சோதிடர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.இவை தவிர்த்து அடிக்கடி சாதகங்களை வெவ்வேறு நபர்களிடம் பார்த்து தன்னை குழப்பிக்கொள்ள தேவையில்லை.

நன்றி !

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ்அப்
     97 151 89 647

     செல்
    740 257 08 99
        97 151 89 647

                      

அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot

 AstroRavichandransevvai.blogspot.com

.....

Monday 22 January 2018

யோகமுள்ள மனைவி அமைய கிரகநிலைகள் எப்படி அமையப்படவேண்டும் ?

                          

      யோகமுள்ள மனைவி அமைய 

                                        கிரகநிலைகள் எப்படி                                                             அமையப்படவேண்டும் ?


                            

                                                                     கிரகங்கள் படுத்தும் பாடு - ( 31 )

                                               ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

            "ஒரு பெண் குடும்பத்தில் மருமகளாக அடியெடுத்த வைத்து அந்த குலவிளக்கை ஏற்றிய பிறகு  குப்பையாக கீழ்மட்டத்தில் இருந்த அந்த குடும்பம் கோபுரம் போல உயர்ந்து நிற்கும்.

           .அந்த குடும்பம்  பெண் மகாலெட்சுமியாக அந்த வீட்டில்  நுழைந்த பிறகு  சாப்பாட்டுக்கே வழி இல்லாமல்  இருந்த குடும்பம் இன்றைக்கு சாப்பிடவே நேரம் இல்லாத அளவிற்கு சொத்தும்,சமூக அந்தஸ்தும் பெருகி தனது கணவனை உயர்த்தியுள்ளது.

        இவ்வாறு புகழ்ந்து கூறும் அளவிற்கு ஒருவருக்கு மனைவி அமைய சாதகத்தில் கீழ்கண்ட அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.

         ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்தில் புதன் உச்சவீட்டிலிருந்து பதினொன்றாம் வீட்டில் குரு பகவானும் இருக்க பிறந்தவளை மனைவியாக பெற்றவன் ராஜ ஸமானாக ஆவான்.

           புதன் பகவான் உச்சனாய் லக்கனத்திலிருந்து குரு பதினொன்றிலும்,சுக்கிரன் இரண்டிலும் ,பத்தில் சந்திரனும் இருக்க பிறந்த பெண்ணை மனைவியாக மணப்பவன் உலக பிரசித்தி பெற்றவனாகவும்,எல்லோராலும் கொண்டாடப்படும் ராஜயோகம் அவனை வந்தடையும்.

            ஸ்திர லக்கனத்தில்  குருவிலிருந்து அங்காரகன் மூன்றாமிடத்திலோ அல்லது ஆறாமிடத்திலோ இருந்து, பலம் பெற்ற சனி பதினொன்றாம் இடத்தில் இருக்க பிறந்தவளை மனைவியாக அடைந்தவன் போக போக்யங்களிலும்,சுகமும் நிறைந்த பாக்கியவான் ஆவான். 

              லக்கனத்தில் சுக்கிரனும் ,மூன்றாம் இடத்தில் புதனும்,நான்காமிடத்தில் பலம் பெற்ற குருவும் உள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் அரசனுக்கு சமமான பாக்கியவான்.

           பூர்ண சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று குருவினால் பார்க்கப்பட்ட பெண்ணை மனைவியாக பெற்றவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

           லக்கனத்தில் பூரண சந்திரனிலிருந்து பதினொன்றில் சூரியன் உச்சனாகவும்,பத்தில் புதனும் உள்ள பெண்ணை மணந்தவன் அரசனாவான்.

           ஒரு பெண்ணின் சாதகத்தில் களஸ்திரகாரகனான செவ்வாய் பாவிகளின் சம்பந்தம் பெறாமல் மேலும் லக்கனம்,இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இது போன்ற ஸ்தானங்களில் பாவிகள் இடம்பெறாமல் அந்த இடங்களுக்கு சுபர் பார்வை பெற்று அந்தந்த ஸ்தானாதிபதிகள் அந்தந்த ஸ்தானங்களில் உச்சம் ஆட்சி போன்ற நேர் வலு பெறாமல் சூட்சும வலுபெற்ற பெண்ணை மனைவியாக பெற்றவன் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

                             


அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்பு கொள்ள
செல் : 97 151 89 647
              740 257 08 99

    வாட்ஸ்அப் எண்
97 151 89 647

Email: masterastroravi@gmail.com
**************************************************************

website
:AstroRavichandransevvai.blogspot.com
(தங்களுடைய சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்தல் போன்ற சேவைகளையெல்லாம்  வீட்டிலிருந்தபடியே போன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு .
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து
கட்டணம் செலுத்து
ம் விபரங்களை பெறலாம் ).

Saturday 13 January 2018

லக்கனமே அச்சாணி -மானிட தேர் நன்முறையில் நகர .....

லக்கனமே அச்சாணி மானிட தேர் நன்முறையில் நகர.....


                                

                                                கிரகங்கள் படுத்தும் பாடு -( 29 )

                                                   ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

              ஒருவருடைய சாதகத்தில் லக்கனத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.அவ்வாறு இருப்பின் அது சாதகரின் குணநலன்களையும்,உடல் நலன்களையும் பாதிப்பதோடு அந்த பாவ கிரகம் ஏழாம் இடத்தையும் பார்வை செய்வதால் திருமண தடையை செய்வதோடு மட்டுமல்லாமல் மனம் ஒத்த மனைவி அமைய விடாமல் செய்து விடுகிறது.

               லக்கனத்தில் ராகு பகவான் இருப்பின் அவர் லக்கனாதிபதியின் தன்மையை மாற்றிவிடும்.லக்கனாதிபதி சுபராக இருந்தாலும் அவை தரக்கூடிய சுபத்தன்மைகளை கூட மாற்றிவிடும்.எப்படி எனில் "பன்றியொடு சேர்ந்த பசுங்கன்றும் மலம் தின்னும்"-என்ற பழமொழிப்படி அந்த லக்கனாதிபதி நடந்துகொள்ளும்.கிரிமினலாக யோசிக்க வைக்கும்.

                மேலும் ராகு திசை நடப்பின் அத்திசை காலங்களில் சாதகருக்கு உடல் நலக்கோளாறுகளை தரும்.உடல் பெருக்காமல் ஒல்லியாக இருக்க வைக்கும்.விஷ பயம்,விபத்தில் காயம் ஏற்படுதல்,தியானம்,எதிர் பாராத செல்வம,,அங்க குறைபாடு,மனம் பேதலித்தல்,தண்டனை அனுபவித்தல்,கீழ்தரமான பெண்கள் தொடர்பு,குஷ்ட ரோகம்,வெண்குஷ்டம் போன்றவைகளுக்கு ராகுவே காரகர் என்பதால் அவரவர் சாதகத்தின் ஏனைய அமைப்பை பொறுத்து பலன் உண்டாகும்.

              மேற்கண்ட அனைத்தும் நடைபெறும் என எடுத்துக்கொள்ள கூடாது.லக்கனாதிபதி தன்மை மற்றும் பார்க்கப்படும் கிரகங்களை பொறுத்து பலன் மாறுபடும்.

             லக்கனத்தில் கேது இருப்பின் சாதகருக்கு ஒரு விஷயம் நடப்பதற்கு முன்னாலே எப்படி நடக்கும் என்பதை யூகிக்கும் ஞானத்தை கொடுக்கும்.ஆன்மீக நாட்டத்தை தரும்.சன்யாசம் பெறுதல்,சக்தியின் அருள் பெற்றவர்கள்,அகங்காரம் உடையவர்கள்,தரித்திர யோகம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நடைபெறலாம்.

               லக்கனத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் முரட்டுத்தனமாகவும்,ஆணவம் மிக்கவராகவும் ,எதையும் செய்துவிடலாம் என அசட்டு தைரியம் உடையவராகவும் இருப்பர்.இழிவான செயல்களில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுப்பார்.உடலில் காயம் ஏற்படுதல்,விபத்துகளால் காயப்படுதல்,ஆயுதங்களால் விபத்து ,வாயுத்தொல்லை,நெருப்பால் பயம் போன்றவைகளுக்கு செவ்வாயே காரகர் என்பதால் மேற்கண்டவை அதன் தசை ,புத்திகளில் தரலாம்.

              செவ்வாய் உச்சம்,ஆட்சி நிலைகளை பெற்றிருந்தால் இரத்தம் தொடர்புடைய மருத்துவராககோ அல்லது துணிச்சல் தொடர்புடைய போலிஸ்,ராணுவம் மற்றும் சர்வாதிகாரி ஆவார்.

              லக்கனத்தில் சனி பகவான் இருப்பின் கால தாமத திருமணத்தை உண்டாக்கும்.பிறர் உடைய வார்த்தைகளை கேட்டு நடப்பவராகவும்,அடிமைத்தனமிக்கவராகவும் இருப்பர்.சனி உச்சம் ,ஆட்சி பெற்று லக்கனத்தில் இருப்பின் ஆயுள் பலம் தரும்.தைரியசாலி.தொழிலாளர் தலைவராவார்.அலட்சிய மனப்பான்மை,சோம்பேறித்தனம் தலைதூக்கும்,எதையும் நிதானமாக செய்யும் மனப்போக்கு உருவாக்கும்.எதையும் இதயம் இதயம் உடையவர் ஆவார்.

            லக்கனத்தில் குரு பகவான் இருந்தால் நல்ல குணங்கள் மேலோங்கி இருக்கும்.ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும் இருப்பர்.பெருந்தன்மை படைத்தவராகவும் இருப்பார்.

             குரு பகவான் உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் ஆன்மீக தலைவர்களின் தரிசனம்,சொற்பொழிவு ஆற்றல்,புத்திர செல்வத்தால் நன்மை உண்டாகும்,உயர் நிலை உத்தியோகம்,போதகர்,சித்திரம்,கலை,ஆர்வம்,நவரத்தின வியாபாரம் போன்றவை உண்டாகும்.

              லக்கனத்தில் சுக்கிரன் இருப்பின் கலை ஆர்வம் மிக்கவராகவும்,இயற்கை ரசனை மிக்கவராகவும்,கைவேலைப்பாடுகளில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.பெண் சுகம்,வண்டி வாகன யோகம் ,ரத்தின கற்கள் வியாபாரம்,சக்தியின் அருள்,அரசாங்க தொழில் ஏற்படலாம்.

                உச்சம்,ஆட்சி பெற்ற நிலையில் சினிமா தொழில் சம்பந்தப்பட்ட நடனம்,நாடகம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்றவற்றில் பிரகாசிக்க வாய்ப்பு,தொழில் அதிபர்கள் மற்றும் எஸ்டேட் முதலாளிகள் போன்றவற்றை உருவாக்கும்.

                லக்கனத்தில் புதன் இருப்பின் கணித ஆர்வமுடையவராக இருப்பர்.வாக்குவன்மை பெறலாம்.ஜோதிடம்,விஞ்ஞானம்,தொழில் கல்வி போன்ற ஏதோ ஒன்றில் புலமை உண்டாகும்.பொது அறிவு உடையவர்கள்,ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் ,வாதநோய் மற்றும் நரம்பு தளர்ச்சி உண்டாகலாம்.

                  புதன் பலம் பெற்ற நிலையில் சிறந்த அறிவாற்றல் மிக்க கல்வியாளர்களாகுவது உறுதி ஆகும்.
                  லக்கனத்தில் சந்திரன் இருந்தால் நல்ல உணவு,உடை,நல்ல வீடு,பால் உணவு,நேரம் தவறாமை,தவறாத சாப்பாடு,முக அழகு,தாய் நலம்,வெள்ளி பாத்திரம்,தர்மம் செய்யும் குணம் மற்றும் கணபதி அருள் ஆகியவை உண்டாகும்.
                   மேலும் சளித்தொல்லை ,சைனஸ் பிரச்சினை,காச நோய்,தண்ணீரில் கண்டம் ஆகியவை ஏற்படலாம்.
                லக்கனத்தில்  சூரியன் இருப்பின் மகிழ்சியான நிலை,சிவ பிரார்தனை,அரசாங்கத்தில் ஆணையிடும் அதிகாரம்,எப்பொழுதும் உண்மையே பேசுதல்,மாசற்ற மனம்,தந்தையால் சுகம்,
             உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள்,சிரங்கு,புண்,கட்டி உண்டாகும்.மொத்தத்தில் நவகிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன் பலம் பெற்றால் அரசாளும் யோகம் உண்டாகும்.
வாழ்க மகிழ்வுடன்...


                                 
அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
சோதிட ஆய்வாளர்
முது நிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,

செல் :97 151 89 647

செல்; 740 257 08 99


(வீட்டிலிருந்தபடியே போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

Friday 12 January 2018

"கேள்வியும் நானே,பதிலும் நானே --( 2 )

கேள்வியும் நானே,பதிலும் நானே - (2)


                                
                                   ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

                            1) ஒரு மனிதனுக்கு நடக்கக்கூடிய அனைத்தும் அவனது சாதகத்தில் உள்ளபடிதான் (விதிப்படி) நடக்குமா?

                                     ஒரு மனிதனுக்கு அவனது சாதகத்தில் உள்ளபடி அதாவது  அவனது விதிப்படித்தான் அனைத்துமே நடக்கும் என்றால் பிறகு கோயில்கள் எதற்கு ?அதில் வழிபாடு எதற்கு ? 

                                                         நீதிக்கதைகள்,அறிவுரைகள்,சொற்பொழிவுகள்,மதபோதனைகள்
,கல்விநிலையங்கள் இவையெல்லாம் தேவையற்றதாகிவிடும்.
கட்டாயம் விதிப்படி மட்டுமே அவனது அனைத்தும் நடக்கும் என்றால் பிறகு எவ்வித முயற்சியின்றி இருக்கலாமே.நடக்கிறபடி நடக்கட்டும் என விட்டுவிடலாமே?

                     அதற்காக விதிப்படி நடக்காது என்ற பகுத்தறிவாதிகள் பக்கம் நின்று நான் வாதாடவில்லை.விதிப்படியும் நடக்கும்.ஆனால் அந்த விதியையும் அவனது தெய்வ வழிபாட்டால்,நல்ல செயல்களால்,அவன் செய்யும் தர்ம நிலைகளால் மற்றும் தவவலிமையால் மாற்றி அமைக்கும் மாபெரும் சக்தியை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான்.எனவே ஒரு மனிதனால் விதியை வெல்லும் சக்தி உண்டு.

                                   


             2)விதியை மதியால் வெல்லலாம் என்றீர்கள் ? உண்மையா ஏதேனும் ஆதாரம் உண்டா?


                              விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு சத்தியவான் சாவித்திரி கதையும் ஒரு உதாரணம்.

                     சாவித்திரி என்பவள் பூரண ஆயுள் பெற்றவள்.இவளுக்கு குறைவான ஆயுள் கொண்ட சத்தியவான் மீது காதல்.அவனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பிடிவாதமாக நின்றாள்.நாரதர் முதலானோர் கூறியும் மறுத்து திருமணம் செய்துகொண்டாள்.

               திருமணம் முடிந்த சில நாள்களிலே அவனின் உயிரை பிடிக்க எமதர்மன் வந்துவிடுகிறார்.உயிரையும் பிடித்துக்கொண்டு செல்கிறார்.சாவித்திரி எமதர்மன் பின்னாலே சென்று மடிப்பிச்சை கேட்கிறாள்.எமதர்மனும் சாவித்திரியின் பதிபக்தி வலிமையால் தந்தேன் என சொல்லிவிடுகிறார்.அவள் கேட்ட மடிபிச்சை என்பது குழந்தை வரம் ஆகும்.
சமயோசித புத்தியால்" கணவன் இல்லாமல் மடிபிச்சை எப்படி சாத்தியம் என சாவித்திரி வினவ வேறுவழியில்லாமல் கொடுத்த வரத்தை திரும்ப வாங்க முடியாததால் எமதர்மன் சத்தியவான் உயிரை விட்டுவிட்டு செல்கிறார்.
சாவித்திரி தான் கொண்ட பதிபக்தியால் எமனிடமே வாதாடி கணவனின் உயிரை மீட்டால் என்பது புராண கதை ஆகும்.

                நவீன இளைஞர்களுக்கு இந்த கதை கிண்டலாக தெரியலாம்.உயிரை பிடிக்க எமன் என ஒருவர் உள்ளாரா ?அப்படியே இருந்தாலும் சாவித்திரிக்கு அவர் வருவது எப்படி தெரியும் ? என வினவலாம்.

                     புராண கதை அனைத்தும் ஒரு குறியீடு அல்லது பார்முலா (வாய்பாடு ) .எப்படி ஒரு பார்முலா கொண்டு கணிதத்தை தீர்வு செய்கிறோமோ அதைப்போல புராணகதைகளும் ஒரு சூட்சும குறியீடு ஆகும்.இது அதில் ஈடுபாடு உள்ளவர்களால் மட்டும் புரிந்துகொள்ளமுடியும்.
இங்கு சாவித்திரி என்பவள் பதிபக்தியின் அடையாளக்குறியீடு.அந்த பதிபக்தியால் விதியை வெல்லலாம் என்பது சூட்சும உண்மை..இவை எக்காலத்திற்கும் பொருந்தும்.

                                     


3)தவ வலிமையால் விதியின் பலனை மாற்றியமைக்க முடியுமா ?
கிரகங்கள் படுத்தும் பாட்டை மாற்றியமைக்க முடியுமா ?



                       தவ வலிமையால் கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாமா?என கேட்டால் விடுபடலாம் என பதில் கூறுவதை விட தவ வலிமை உடைய ஒருவனுக்கு உலகாதய விஷயங்களிலிருந்து விடுபட்டுவிடுவான்.அதாவது அவன் மனமற்ற நிலைக்கு சென்று எல்லாவற்றையும் தான் ஒரு காட்சி பொருளாக இருந்து எவ்வித பதிப்புக்கும் உட்படாமல் வேடிக்கையாக பார்ப்பான்.எனவே அவனுக்கு கிரக பாதிப்புகள் ஒன்றும் செய்துவிட முடியாது.மனதிற்குதான் இன்பம்,துன்பம் இரண்டு நிலைகள் உண்டு.
இதிகாச ரீதியாக  உதாரண கதை மூலம் விளக்கினால்
இலங்கை வேந்தன் ராவணன் தனது தவ வலிமையால் கிரகங்களின் இயக்கங்களை கட்டுபடுத்தினான் என்பார்கள்.

                       எனவே ஒருவன் தியானத்தின் மூலம் பயிற்சி பெற்று தன்னை சுற்றி நடப்பதை காட்சிபொருளாக பார்ப்பவர்களை கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.அப்படியே பாதித்தாலும் அந்த கிரக கதிர்களின் தாக்கம் உடலில் பட்டு எதிரொலித்துவிடும்.

                               


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆய்வாளர்,
ஓம்சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

வாட்ஸ்அப்
   97 151 89 647

செல் :
      97 151 89 647
              740 257 08 99

(தங்களுடைய சாதகத்தினை போன் வழியாக பார்க்க விரும்பினால் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு)

Sunday 7 January 2018

முயற்ச்சி+தன்னம்பிக்கை=வெற்றி

முயற்சி - தன்னம்பிக்கை  =வெற்றி( SUCCESS)


                                                   

                       கிரகங்கள் படுத்தும் பாடு--( 187 )


செவ்வாய்பட்டிஅருள்மிகுதேவி  ஸ்ரீ பத்ரகாளிஅம்மன்
துணை!


     
    "முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார் "
          முயற்ச்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் "

    "விடா முயற்ச்சி வெற்றிக்கு அறிகுறி "

"எழு,விழித்தெழு ,எல்லையை அடையும் வரை போராடு "-சுவாமி விவேகானந்தர்

           "வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்"-தாராபாரதி.

            இதுபோல நம்பிக்கையூட்டும் பல வார்த்தைகளை கூறி ஊக்கப்படுத்தி முயற்சி செய்ய அறிவுரை வழங்கினாலும் அவனது சாதக கட்டத்தில் முயற்ச்சி ஸ்தானம் என அழைக்கப்படும் "மூன்றாமிடமும் அதன் அதிபதியும் " பலமடைந்து நிற்கவேண்டும்.

 ஒருவன் வாழ்வில் உயர செய்யப்படும் அனைத்து முயற்ச்சிகளின்         நிலை களை அறிவதற்க்கு மூன்றாமிடம் முக்கியமானது.எனவே இதனை வீரிய ஸ்தானம்,கீர்த்தி ,புகழ் அடைய செய்யும் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது.

          மூன்றாமிடம் மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் மூன்றாமிடத்தில் அதன் அதிபதி ஆட்சி பெற்று விளங்குவதும் அல்லது உச்சம்,நட்பு போன்ற பலமான அமைப்பில் அமர்ந்து இயற்கை சுபரால் பார்க்கப்பட்ட  சாதகர் எந்த காரியத்தினை தொட்டாலும்  அந்த காரியத்திற்க்கு உரிய அனைத்து நுணுக்கங்களையும் பெற்று திறம்பட முயற்ச்சி செய்து வாழ்வில் வெற்றி பெறுவர்.இதற்கு நடைபெறும் திசையும் உகந்ததாக அமையப்படவேண்டும்.

          மூன்றாமிட அதிபதி நீசம்,பகை,அஸ்தமனம் போன்ற பலமிழந்த    அமைப்பினை பெற்றவர்கள் எவ்வளவு அறிவுடையவர்களாக இருந்தாலும் எவ்வித முயற்சியின்றியும்,அவ்வாறே முயற்ச்சியே செய்தாலும் இவர்களால் மேற்கொண்ட முயற்ச்சிகள் பல தடைபட்டுக்கொண்டே செல்வதை காணலாம் .
.
  மூன்றாமிட அதிபதி செவ்வாய் பகவானாக இருந்து பலம்பெற்று நிற்கும்போது தமது உடல் பலத்தால் முயற்சிகள பல  செய்து வெற்றி பெறுவார்.இவர்கள் போலீஸ்,இராணுவம்,விளையாட்டு,
மருத்துவம் ,வீரதீர செயல்கள் போன்ற அடிப்படையான துறைகளில் முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெறுவர்.

     மூன்றாமிட அதிபதி புதன் பகவான இருந்து பலப்பட தமது நுண்ணறிவினை பயன்படுத்தி மூளை பலத்தால் முயற்சிகள்  செய்து வாழ்வில் வெற்றி பெறுவர்.இவர்கள் பேச்சு,எழுத்து ,கணிதம்,இசை போன்றவை சார்ந்த துறைகளில் முயற்சி செய்து முன்னேறுவர்.

  மூன்றாமிட அதிபதியானது சந்திர பகவானாக இருந்து பலமடைய தனது உறுதியான மனநிலையால் வாழ்வில் வெற்றி பெறுவர்.இவர்கள் செஸ்,புதிர்,படைப்பாற்றல் போனறவற்றில் ஈடுபட்டு சிறந்து விளங்குவார்.

    மூன்றாமிட அதிபதி சுக்கிரபகவானாக இருந்து பலமடைந்து நிற்க கலை உணர்வு மிக்கவர்களாக திகழ்ந்து சிறப்புகளை பெறுவர்.இவர்கள் சினிமா,நடனம்,,நாடகம் சார்ந்து துறைகளில் சிறந்து விளங்குவர்.
  மூன்றாமிட அதிபதியானது குரு பகவானாக இருந்து பலம்பெற்று திகழ ஆன்மீகம்,கல்வி போன்ற துறைகளில் ஈடுபட்டு புகழ் பெறுவார்.

    மூன்றாமிட அதிபதியானது சனிபகவானாக இருந்து பலப்பட அடிமைத்தனமான எண்ணம் மேலோங்கி பிறருக்கு எடுபிடி வேலை செய்வதில் ஆர்வமுடையவராக இருப்பர்.

           மூன்றாமிட அதிபதியானது கேதுபகவானாக இருந்து பலப்பட சோதிடம்,ஆன்மீகம் போன்ற துறைகளில் முயற்சி உண்டாகும்.

      மூன்றாமிட அதிபதியானது ராகு பகவானாக இருந்து பலமடைந்து நிற்பின் சூழ்ச்சி,சூது,மந்திர தந்திரங்களில் முயற்சிகள் உண்டாகி நற்  பெயரினை இழந்து நிற்பார்.

  "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் " என்பர்.அதாவது கெட்டவன் என சாதக கட்டத்தில் அழைக்கப்படும் மறைவிட ஸ்தான அதிபதிகளான மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இட அதிபதிகள் இந்த மறைவிட ஸ்தானங்களிங்களிலே பரிமாறி நின்றால் "விபரீத ராஜயோகம் " எனும் யோகத்தினை அதன் திசை காலங்களில் தரும் என்றாலும் இந்த மூன்றாமிட அதிபதிக்கு சற்று விதி விலக்கு உண்டு.

  இந்த மூன்றாமிட அதிபதியானது கேந்திர,கோணம் ஏறி நின்றால்தான் நல்லது .இந்த அதிபதிகள் சற்று விதிவிலக்காக மேற்கண்ட வகையில் கெட்டவன் கெட்டிடாமல் (6,8,12 ) தன,லாப ,கேந்திர ,கோணங்களில் பலம்பெற்று சுபர் பார்வையினை பெற சாதகரது முயற்சி ஸ்தானமானது சிறப்பாக அமைந்து கீர்த்தி,புகழினை தனது திசை,புத்தி காலங்களில் தந்து பெயரும்-புகழும் அடைய செய்கிறது
.
நன்றி,நன்றி,நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ்அப்
 
  97 151 89 647

  செல்
  740 257 08 99
    97 151 89 647


                                                       

    அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்'

My email
masterastroravi@gmail.com

My Blospot. Click here.
AstroRavichandransevvai.blogspot.com

Tuesday 2 January 2018

"கேள்வியும் நானே பதிலும் நானே "

கேள்வியும் நானே பதிலும் நானே -(1)

                                                     

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

                                      இந்த கேள்வியும் நானே பதிலும் நானே -என்ற தலைப்பின் கீழ் சோதிடம் / ஆன்மீகம் தொடர்பாக தாங்களுக்கு எழும் சந்தேகங்களை விளக்கும் விதமாக  கேள்விகளை நானே எழுப்பி அதை விளக்கும் விதமாக இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

1) பரிகாரம்  செய்வதால் பலன் உண்டா ?

                        ஒருவரது சாதகத்தில் திசை புத்திப்படியோ அல்லது கோச்சாரப்படியோ ஒருவருக்கு நடக்க  இருக்கும் பலனை யாராலும் ஏன் தெய்வத்தாலும் கூட மாற்ற முடியாது.நடப்பது நடந்தே தீரும்.ஆனால் முழு மன நம்பிக்கையோடு இறைவனுக்கு செய்யப்படும் பரிகாரங்களோ அல்லது அடிப்படை தேவைகளுக்கே அல்லாடும் ஏழைகள் ,அனாதைகள் மற்றும் உடல்ஊனமுற்றோர்கள் ஆகியவர்களுக்கு நீங்களே நேரடியாக செய்யப்படும் தர்மங்களாலோ நிச்சயமாக பலன் உண்டு.

                                  என்ன சார் நடப்பது நடந்தே தீரும் என்று கூறி விட்டு பிறகு பரிகாரத்தாலும் பலன் உண்டு எனவும் குழப்புகிறீரே என வினா எழுப்ப தோன்றும்.நான் கூறிய இரண்டு பதிலும் சரியே.எப்படி என விளக்குகிறேன் சற்று பொறுமையாக பின்தொடருங்கள்.

                                   ஒருவருக்கு சாதக விதிப்படி விபத்து ஒன்றை சந்திக்கவேண்டும் என இருந்தால் ஆனால் கட்டாயம் நடந்தே தீரும்.இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் அவரால் முழு மன நம்பிக்கையோடு தொடர்ந்து செய்யப்பட்டு வந்த பரிகாரத்தாலோ அல்லது தர்மத்தாலோ விபத்தின் தன்மையை மாற்றி அமைக்கும் சக்தி தெய்வத்திற்கு உண்டு.

                                  அதாவது பேருந்தோடு(பஸ்) நேருக்கு நேராக நடந்த மோதலில் பேருந்து டிரைவர் போட்ட சடன் பிரேக்கால் பேருந்து மேதி சிறு சிறு ரத்த காயத்தோடு பெரிய இழப்பு இன்றி (கை,கால் முறிவு இல்லாமல்) தப்பிக்கும்  வாய்ப்பை அந்த பரிகாரத்தால் உமக்கு கிடைத்துவிடுகிறது.
இதனைதான் நமது கிராம மக்கள் தமது பழமொழி வாயிலாக நான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு பதிந்த பதிவை ஒற்றை வரியில் கூறிவிடுவார்கள்.

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு"
என்றும்
"ஓங்கி அடிக்கிறது தாங்கி அடிக்கும்"

                           எனவும் ஒற்றை வரியில் சோதிட உண்மையை கூறியிருப்பார்கள்.
எனவே நாம் செய்யும் பரிகாரம் சோதனையின் தன்மையை குறைக்கும் அல்லது சோதனையை தாங்கிக்கொள்ளும் வலிமையைத்தந்து அந்த பிரச்சினை
யை எளிதாக உருண்டோடச்செய்வார்.

2) சார் எவ்வளவோ பரிகாரம் செய்து பார்த்துட்டேன் ஒரு பரிகாரத்தாலும் பலன் இல்லை என்ன செய்தால் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்?


                                         "முழு மன உறுதியோடு இறைவனுக்கு செய்யப்படும் பரிகாரத்தால் முழுப்பலன் உண்டு.

                                 பரிகாரம் என்றால் பெரும் தொகை செலவழித்து செய்யப்படும் பரிகாரத்தால்தான் பலனை அதாவது  இறைவனிடம் இருந்து பாவமன்னிப்பு கிடைக்கும் என்பதில்லை .பரிகார பலன் நீங்கள் செய்யப்படும் தொகையால் (பணத்தால்) அல்ல.நீங்கள் இறைவனுக்கு கொடுக்கப்படும் மன உறுதியான வழிபாட்டால்.வெறும் பணத்தால் மட்டும் செய்யப்படும் பரிகாரத்தால் பலன் இல்லை.அவை அகந்தையால் அகந்தை வளர்ப்பவை.நான் இவ்வளவு பெரிய மாலையை யாரும் கட்டிபோடாத அளவு கட்டிபோட்டிருக்கிறேன்.எனக்கு மற்றவரை விட அதிக லாபத்தை கொடு என்பது கடவுளிடம் கூட வியாபரம் தேடும் தந்திரம் அல்லது நான் பெரிய பணக்காரன் என்பதை மற்றவருக்கு காட்டிக்கொள்ளும் விஷயம்.எனவே இறைநம்பிக்கையோடு ஒரு சிறு நெய்விளக்கு ஏற்றி வைப்பதுகூட பரிகாரம்தான்.

                        எனவே வெறும் ஆடம்பாரத்தால் செய்யப்படும் பரிகாரங்களால் பலன் இல்லை.

3) கடவுளின் அருளைப்பெற இறைவனுக்கு செய்யப்படும் செலவால் மட்டும்தான் பெற முடியுமா ? சக மனிதனுக்கு செய்யப்படும் உதவியால் பெற முடியாதா ?


                          "பிரார்திக்கும் உதடுகளை விட உதவி செய்யப்படும் கரங்களே மேல்"
"கடவுளுக்கு செய்யப்படும் தொகையை அன்றாடம் உண்ணும் உணவு ,உடை இல்லாமல் அல்லல்படுபவர்களுக்கோ அல்லது கை கால்களை இழந்து தவிக்கும் ஊனமுற்றோர்களுக்கோ அல்லது
ஆதரவற்ற அனாதைகளுக்கோ அல்லது திறமையிருந்தும் படிக்க வசதியில்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கோ உதவி செய்யும்போது அவர்கள் உங்களை தெய்வமாக எண்ணி கை தூக்கி கும்பிடுவார்கள்.
அவ்வாறு செய்யப்படும் உதவிகளால் கடவுளுக்கு பிரியமான பிள்ளைகளாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.அப்பொழுது நீங்களே தெய்வமாகி விடுகிறீர்கள்
.இதனால்தான் இந்த உலகில் பிறர் நலனில் அக்கறையோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் விண்ணில் தெய்வமாக மாறுகிறார்கள் என்பதை திருவள்ளுவர் தமது குறளில் அழகாக கூறியிருப்பார்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் "

                          யார் யார் பிறர் போற்ற அல்லது தெய்வம் என கும்பிடும் அளவிற்கு சேவை செய்பவர்கள்தான் பிறகு விண்ணகத்தில் வாழும் தெய்வங்கள்.
எனவை "சக மனிதனை நேசி "அதுவே கடவுளுக்கு செய்யப்படும் பரிகாரங்களை விட பெரிய பரிகாரம் ஆகும்.சக மனிதனை நேசிக்காது வெறும் பணத்தை செலவழித்து இறைவனிடம் பரிகாரம் தேட நினைப்பது "பஞ்சால் நெருப்பை அணைக்க முயல்வது போல " ஆகும்.
"கையில் உள்ள பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு பிறகு இரண்டு கை தூக்கி சாமி என கும்பிடுவதை விட அந்த கையில்  உள்ள பணத்தை இயலாதவருக்கும்,முடியாதவருக்கும் கொடுத்து உதவி செய்யும்போது  அவர்கள் இரண்டு கையை தூக்கி உன்னை சாமி என கும்பிடுவார்கள் "

                                                                               

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆய்வாளர்,

ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

செல்  : 97 151 89 647
Cell : 740 257 08 99
Whatsup no
    97 151 89 647

(போன் வழியாக தங்களது சாதகத்தினைவீட்டிலிருந்தபடியே பார்க்க தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு )
Message your date of birth ,time and place in my whatsup.

கிரகங்கள் படுத்தும் பாடு-( 139 )

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 139 )


                                                               
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
                         "கிரகங்கள் மனித வாழ்வில் உண்டாக்கும் மாற்றங்களை தொடராக எழுதி வருகிறேன்.அனைவரும் படித்து பயன்பெறுங்கள்.

                        ஒருவரது  சாதகத்தில் சாதகரின் குணநலன்களை லக்கனாதிபதி மற்றும் ராசியாதிபதி மற்றும் இவ்விரண்டு ஸ்தானங்களை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகநிலைகளை கொண்டு ஆராய்ந்து பலனறியப்படுகிறது.

                     ஒருவரது வாக்குநிலையை அதாவது அவனது பேச்சு சுத்தத்தையும் மற்றும் கொடுக்கும் வாக்கை காப்பாற்றும் தன்மைகளை அறிய இரண்டாமிடம் மற்றும் அந்த ஸ்தானததை பார்வை பெறும் கிரகநிலைகளை கொண்டும் அறியப்படுகிறது.

                        ஒருவர் நன்றாக படிப்பாரா ? கல்வியில் வித்தகனாக ஆவானா ? என்பதை ஆய்வு செய்து பார்க்க இரண்டாமிடம்,நான்காமிடம் ,ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாமிடம் போன்ற ஸ்தான அதிபதிகள் மற்றும் பார்க்கும் சேர்க்கை பெறும் கிரகநிலைகளை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.
ஒருவரது திருமண வாழ்வினை பற்றியும் ,திருமணம் நடைபெறும் காலம் மற்றும் தம்பதிகளுக்கான அன்னியோன்யநிலை பற்றி இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடம் போன்ற ஸ்தானங்களின் அதிபதிகள் மற்றும் பார்க்கும் ,சேர்க்கை பெறும் கிரகநிலைகளை ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.

                          ஒருவரது புத்திரம் மற்றும் பூர்வீகஸ்தானங்களை பற்றி ஆய்வு செய்ய ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதிகளை ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.

                                ஒருவர் தனது எதிரியின நிலை,கடன் மற்றும் பிணி போன்ற நிலைகளை ஆய்வு செய்ய ஆறாமிடமும் மற்றும் ஒருவர் தனக்கு வரக்கூடிய வம்பு ,சண்டை வழக்க,சிறைசெல்லுதல் மற்றும் ஆயுள்நிலை போன்றவற்றை எட்டாமிடம் கொண்டும் அறியலாம்.

                               ஒருவரது தன் சுகம்,தாய்சுகம்,வண்டி வாகனத்தால் சுகம் மற்றும் கல்வியால் சுகம் போன்ற சுகநிலைகளை பற்றி அறிய நான்காமிடத்தை பற்றி ஆய்வு செய்யப்படவேண்டும்.

                             ஒருவர் தனக்கு கிடைக்ககூடிய புகழ் ,கீர்த்தி மற்றும் அந்தஸ்து மற்றும் சகோதரநிலைகளை பற்றி அறிய மூன்றாமிட ஆய்வு புரிய வேண்டும்.
ஒருவர் தானதர்ம நிலை ,தனக்கு கிடைக்க இருக்கும் பாக்கியநிலை ,உயர் கல்விநிலை , தந்தையால் பெறப்படும் லாபநிலை மற்றும் தந்தை மகன் உறவுநிலைகளை ஒன்பதாம் இடத்தை ஆய்வு செய்து அறியலாம்.
ஒருவரது ஜீவனம்,தொழில் நிலை அறிய பத்தாமிடத்தை கொண்டும் அறியலாம்.

                                  ஒருவரது லாபநிலை ,மூத்தசகோதரம் மற்றும் இளையதாரம் போன்றவற்றை பதினொறாமிடத்தை கொண்டு ஆய்வு செய்து அறியலாம்.
ஒருவரது அயன,சயன,படுக்கை சுகம் ,மோட்சநிலை மற்றும் விரயநிலையை பணிரெண்டாமிடம் மூலம் அறியலாம்.

நன்றி

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருப்பினும் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
                                                                                      
அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


செல் : 97 151 89 647
            ::  740 257 08 99

வாட்ஸ்அப் எண்
  97 151 89 647


My email
masterastroravi@gmail.com