சாதகம் ஏன் பார்க்க வேண்டும் ? எதற்காக பார்க்க வேண்டும் ?எப்பொழுது பார்க்க வேண்டும் ?
கிரகங்கள் படுத்தும் பாடு-( 189 )
செவ்வாய்பட்டிஅருள்மிகுதேவி ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் துணை !
மனித வாழ்வினை வழி நடத்துவதில் கிரகங்களின் தாக்கம் அளப்பரியது.கிரகங்கள் தான் பெற்ற ஒளி அளவிற்க்கு ஏற்ப பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஒரு செல் உயிரி முதல் எண்ணற்ற ஜீவ ராசிகளையும் ,சிறிய அணு முதல் சிக்கலான மூலக்கூறுகளை கொண்ட உயிறற்ற பொருட்களையும் தாக்கி கொண்டு இருக்கிறது.
நாட்டில் நிலவும் புயல் ,வெள்ளம்,மழை பூகம்பம்,சுனாமி ,,வறட்சி மற்றும் சீதோஷன மாற்றங்கள் ,பூமியின் சுழற்சியால் உண்டாகும் பருவ மற்றும் இரவு ,பகல் மாற்றங்கள் அனைத்திற்க்கும் கிரக சுழற்ச்சியும் அவைகள் கொண்ட ஒளி அளவும் காரணம் ஆகும்.
புவியில் உள்ள அனைத்து பொருள்களின் சீரான இயக்கத்திற்க்கும் கிரகங்களின் சீரான சுழற்ச்சியே காரணம் ஆகும்.
அண்ட வீதியில் உள்ள ஒவ்வொறு பொருட்களும் கிரகங்களின் அதிர்வுகளுக்கு ஏற்ப தனது இயக்கத்தினை வெளிப்படுத்துகிறது.பிரபஞ்ச கிரகங்களின் அதிர்வுகளுக்கு ஒத்திசைவு கொண்டவை வாழ்வில் முன்னோக்கி செல்ல வைக்கிறது.இதனை சாதக கட்ட அடிப்படையில் பார்க்கும்போது ஒத்திசைவு பெற்ற கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்து அல்லது சேர்ந்திருக்க அவை அத்திசைக்கு பலமாக அமைந்து சுப திசையாக மாறி யோக பலன்களை அள்ளி தருகிறது.
மாறாக நடக்கும் திசையானது அந்த குறிப்பிட்ட கிரகத்திற்க்கு ஒத்திசைவு தராததாக இருப்பின் அவை கெட்ட பலனை தரும் திசையாக மாறி கெடுபலன்களை தருகிறது.இவ்வாறு கெடுபலன்களை தரக்கூடிய திசையானது,பாதக,மாரக மற்றும் ஆறு,எட்டுக்குரிய திசையாகவோ ,பகை,நீசம் ,அஸ்தமனம் பெற்ற திசையாக அமைகிறது.
ஒரு மனிதன் வெற்றி மேல் வெற்றியாக பெற்று திளைக்கும்போது தனது முயற்சியால் தான எல்லா வெற்றிகளையும் அடைந்ததாக எண்ணிக்கொள்வான்.அதே நேரத்தில் தோல்வி மீது தோல்வியாக வரும்போது மட்டும் நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி உள்ளதாக எண்ணி சாதகத்தினை தூக்கி கொண்டு சோதிடர்களை நாடி வருகிறான்.
சாதகம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கால கண்ணாடி ஆகும்.இதனை அறிய நல்ல புலமை வாய்ந்த சோதிடர்களின் உதவி தேவைப்படுகிறது.
நமக்கு நடந்த,நடக்க இருக்கின்ற மற்றும் நடக்கின்ற அனைத்து செயல்களுக்கு காரணம் எது ? என்பதை அறிந்து கொள்ள சோதிடம் பயன்படுகிறது.நமக்க நடக்கின்ற நல்வினை,தீவினைகளுக்கு காரணங்களை ஆய்ந்தறிய பயன்படுகிறது.
ஒரு சாதகர் தமது வாழ்நாளில் நல்ல புலமை வாய்ந்த சோதிடரை கண்டறிந்து அவரையே குடும்ப சோதிடராக கொண்டு அவரிடம் குறைந்தபட்சம் வருடத்திற்க்கு ஒரு முறை ஆலோசனை செய்து பலன்களை அறிந்து நற்பலன் நடக்கிறதா ? அல்லது ஏதேனும் தீங்கு நடைபெறும் அமைப்பு உள்ளதா ? என அறிந்து கொள்ள வேண்டும்.
கெடுதல் தரும் திசை அமைப்புகள் இருப்பின் அதற்குரிய பரிகார பூஜைகள் செய்து சற்று முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வழிவகை செய்து கொள்ள சோதிடம் பயன்படுகிறது.
இதேபோல இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனி பெயர்ச்சி,ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ராகு,கேதுபகவான் பெயர்ச்சி மற்றும் வருடம் ஒருமுறை வரும் குருபெயர்ச்சி இதுபோன்ற தருணங்களை பொதுபலன்களை படித்து அதுபடி எதிர்பார்த்து ஏமாந்து விடாமல் அவரவர் சாதக ஜெனன கால கிரக நிலைகளோடு கோசார பெயர்ச்சி பலனையும் ஒப்பிட்டு நடக்ககூடிய திசைக்கு ஏற்றார்போல தனது பலனை தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதகர் தனது கல்வி நிலை,திருமணநிலை, புத்திரபாக்கியம் ,செல்வ நிலை ,செய்யவேண்டிய தொழில் ,சொத்து வாங்குதல்,பொருள்சேர்த்தல்,பிள்ளைகளின் கல்விநிலை,அவர்களது எதிர்காலம் ,திருமஙம் இதுபோன்ற முக்கிய முடிவினை எடுக்கும்போது சாதகம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
சோதிடர்களிடம் தமது சாதகத்தினை காட்டி தெரிந்து கொள்ளவேண்டிய அம்சங்களாவன
தனது சாதகத்தினை சோதிடர்களிடம் காட்டி தனது லக்கனம் ,ராசி ,நட்சத்திரம் மற்றும் ஒவ்வொறு கிரகங்களும் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது எனவும் மேலும் அக்கிரகங்கள் இடம்பெறும் இடத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஒவ்வொறு கிரகமும் இடம் பெறும் ராசியினையும் அந்த ராசியானது அக்கிரகத்திற்க்கு உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி ,நட்பு ,
சமம்,பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் இவற்றில் என்ன நிலைகளில் உள்ளது எனவும் தெரிந்துகொள்ள முயலவேண்டும்.ஏனெனில் உச்சம்,ஆட்சி போன்ற பலமடைந்த நிலைகளில் உள்ள கிரகங்கள் நற்பலனையும்,பகை,நீசம் போன்ற நிலைகளில் உள்ள பலமிழந்த கிரகங்கள் குறைவான பலன்களையும் தரும் என்பதால் ஆகும்.
சமம்,பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் இவற்றில் என்ன நிலைகளில் உள்ளது எனவும் தெரிந்துகொள்ள முயலவேண்டும்.ஏனெனில் உச்சம்,ஆட்சி போன்ற பலமடைந்த நிலைகளில் உள்ள கிரகங்கள் நற்பலனையும்,பகை,நீசம் போன்ற நிலைகளில் உள்ள பலமிழந்த கிரகங்கள் குறைவான பலன்களையும் தரும் என்பதால் ஆகும்.
இதிலும் தன,லாப ,கேந்திர மற்றும் கோண நிலைகளில் அமைந்த கிரகங்கள் பலம் அடைவது நல்லது. ஆறு,எட்டு போன்ற மறைவிட ஸ்தான அதிபதிகள் பலம் இழப்பது நல்லது.பொதுவாக சாதக கட்டத்தில் இயற்கை பாவ மற்றும் கெட்ட ஸ்தான கிரகங்கள் சுப கிரகங்கள் மற்றும் சுப ஆதிபத்திய கிரகங்களேடு சேர்ந்திருப்பதோ அல்லது பார்வை பெறுவதோ கிரகங்களின் வலிமையை குறைக்கும் என்ற உண்மையினை தெரிந்துகொள்ளல் அவசியம் ஆகும்.
ஒவ்வொறு கிரகம் பெறும் நட்சத்திர சாரம் அறிந்து அந்த நட்சத்திர அதிபதியானது அக்கிரகத்திற்க்கு பகையா ? நட்பா ? என சோதிடர்களின் உதவியால் ஆராய்ந்து அறியவேண்டும்.மேலும் அந்த நட்சத்திர அதிபதிகளின் ஸ்தான பலத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு கிரகம் பெறும் நட்சத்திர அதிபதியானது அக்கிரகத்திற்க்கு நட்பாக இருக்கும்பட்சத்தில் அக்கிரக பலனை அதிகரிக்க செய்யும் ,பகையாக இருப்பின் அது கிரகம் தர வேண்டிய பலனை மட்டுபடுத்தும்.
ஒரு கிரகத்தின் பலனை அறிய முற்படும்போது அவை ராசி,அம்சம் மற்றும் பாவ நிலைகளில் எவ்வாறு அமைந்துள்ளது எனவும் அறிய முற்படவேண்டும்.ஏனெனில் ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றிருப்பின் அந்த கிரகம் தனது திசையில் முழுப்பலனை தர மாட்டார்.அதே நேரத்தில் ராசியில் பலமிழந்த கிரகமானது அம்சத்தில் உச்சம் போன்ற பலம் பெறும்போது அக்கிர திசையானது தரும் பலன் சற்று கூடுதலாகவே இருக்கும்.
இதேபோல ராசியிலும்,அம்சத்திலும் ஒரே இடத்தில் உள்ள கிரகமானது "வர்க்கோத்தமம் " என்ற நிலையில் அக்கிரகம் தரும் பலன் சற்று கூடுதலாகவே இருக்கும்.
ஒரு கிரகமானது தன்னுடன் இணைந்த,பார்க்கின்ற,சாரம் பெற்ற மற்றும் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வழக்கமாக தரும் தனது பலனை சற்று மாற்றி தருவதற்க்கு வாய்ப்புகள் உண்டு.
சாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் முன்னோக்கி செல்ல அரவுகளான ராகு ,கேதுக்கள் மட்டும் பின்னோக்கி செல்கிறது.எனவே ராகு,கேது தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ரகதி கிடையாது.இதில் சந்திரபகவானுக்கும் வக்கிரகதி கிடையாது.
வக்கிரம் என்பது கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலங்கள் பின்னோக்கி செல்வது ஆகும்.அவ்வாறு கிரகங்கள் வக்கிரம் பெறும்போது தனது இயல்பான பலன்களில் மாற்றம் அடைகிறது.
அதாவது உச்சம் பெற்ற கிரகமானது வக்கிரம் பெறும்போது நீச பலனை தருகிறது.பாவ கிரகங்கள் வக்கிரம் பெறும்போது சுப பலனையும்,சுபர்கள் வக்கிரம் பெறும்போது பாவ பலனையும் தருகிறது.
இவை மட்டுமன்றி கேந்திர அதிபதிகள் கேந்திரத்தில் அமராமல் இருப்பது நல்லது.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் "கேந்திராதிபத்திய தோஷத்தினை " தந்து பலமிழக்கிறது.
பாவ கிரகங்கள் கேந்திரங்களில் இடம்பெறுவதும்,சுப கிரகங்கள் கோணங்களில் ஏறி நிற்பதும் நல்லது என்பதனையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
நடைபெறும் திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாகவும்,லக்கனத்திற்க்கு கேந்திர,கோணங்களில் இருப்பின் அத்திசையானது நற் பலனை தரும்.
எனவே மேற்கண்ட பலவகையில் ஒருவர் தனது சாதத்தினை ஆராய்ச்சி செய்து இப்பிறப்பில் தனக்கான கொடுப்பினையை அறிந்து கொள்ளவேண்டும்.அதற்க்கு ஏற்றார்போல தனது மனநிலையினை மாற்றி அமைத்துக்கொள்ள பழகவேண்டும்.
தனக்கு மட்டும் கடவுள் இவ்வளவு கஷ்டங்களை தருகிறார் ? என மனம் நொந்து கொள்பவர்களுக்கு சாதகம் பார்த்து கிரக பலனே காரணம் எனும்போது "தம்மால் மாற்றி கொள்ள முடியாத கஷ்டங்களை எண்ணி வருத்தப்படுவதில் பலன் ஏதும் இல்லை என ஒரு தெளிவு பிறக்கிறது.அதற்கு ஏற்றார்போல தனது வாழ்வினை நகர்த்தி செல்வதற்க்கு சாதகம் பலன் பார்ப்பது உதவுகிறது.
ஒரு சிலர் அடிக்கடி சாதகம் தூக்கி கொண்டு திரிவதையே பிழைப்பாக கொண்டவர்களை பார்க்கும்போது சற்று வருத்தமாக திரிகிறது.இதுபோன்றவர்கள் " அவரிடம் பார்த்தேன் அப்படி சொன்னார் ? , இவரிடம் பார்த்தேன் இப்படி சொன்னார் ? என குழப்பிக் கொண்டு அவர் அந்த பரிகாரம் செய்ய சொன்னார் ,இவர் இந்த பரிகாரம் செய்ய சொன்னார்.ஆனால் நான் எல்லா பரிகாரமும் செய்துவிட்டேன்"என " பரிகாரம் செய்யும்போது முழு நம்பிக்கை உடன் Astralogy -ஜோதிட பரிகாரம் செய்யாமல் தன்னையும் குழப்பிக்கொண்டு சோதிடரையும் குழப்பி விடுவதுண்டு..
" எதுவும் இவ்வுலகில் முக்கியமில்லை,எதுவும் இவ்வுலகில் நிரந்தரம் இல்லை எனும்போது கவலைப்பட இவ்வுலகில் என்ன இருக்கிறது ." எனும் எழுத்து சித்தர் பாலகுமாரன் கூற்றுப்படி எதையும் அலட்டிக்கொள்ள தேவையில்லை..
சாதகமானது ஏதாவது முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழலில் மட்டும் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு நல்ல புலமை வாய்ந்த சோதிடர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.இவை தவிர்த்து அடிக்கடி சாதகங்களை வெவ்வேறு நபர்களிடம் பார்த்து தன்னை குழப்பிக்கொள்ள தேவையில்லை.
நன்றி !
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
.....