Saturday 30 June 2018

உங்களது சாதகத்தில் பூர்வீகயோகம் பற்றிய ஓர் ஆய்வு

உங்களது சாதகத்தில்   பூர்வீகயோகம் பற்றிய  ஓர் ஆய்வு.

                      

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 28 )

ஸ்ரீ பத்ரகாளியம்மன் தொடர் ஆசியோடு....
           ஒரு மனிதனுக்கு பூர்வீக சொத்து என்பது தந்தையால் சேர்க்கப்பட்ட சொத்து அல்ல.பாட்டனால் தேடப்பட்ட (தந்தையின் அப்பா) சொத்தும் அவர்களால் தேடப்பட்ட புகழும் ,புண்ணியமும் சொத்தாக பேரன்களுக்கு கிடைக்கும்.

          இந்த பூர்வீக யோகம் உண்டா ? என தெரிந்துகொள்ள திரிகோண ஸ்தானமாக கருதப்படும் ஐந்தாமிடமும்  அதில் உள்ள கிரகங்கள்  ,ஐந்தாமிடத்தை பார்க்கும் கிரகங்கள்  மற்றும்  அதன் அதிபதிகளின் பலம் மற்றும் தன்மை முதலியவற்றை கவனிக்கப்பட வேண்டும்.

.             மேலும் ஐந்தாமாதிபதி ஏறிய வீடுகளின் நிலை மற்றும்  அதனுடன் சேர்ந்துள்ள கிரகங்கள் ஆகிய விதிமுறைகளை கவனிக்கப்பட வேண்டும்.

           ஐந்தாமாதிபதி பெற்றுள்ள நட்சத்திர சாரம் மற்றும் அம்ச அடிப்படையில் ஐந்தாமாதிபதி பலம் முதலியவற்றை கவனிக்கப்பட வேண்டும்.
.
               லக்கனத்திற்கு ஐந்தாமிடத்தை கவனிப்பதுபோல ராசிக்கு ஐந்தாமிடத்தையும் கவனிக்கப்படவேண்டும்.

               மேற்கண்ட அடிப்படையில் ஆராய்சி செய்து அதற்கு பிறகு ஒரு மனிதனுக்கு பூர்வீக சொத்து பற்றி பலனுரைக்க ஒரு சோதிடர் தயாராக வேண்டும்.

              ஒரு சிலர் பூர்வீக சொத்துக்கள்  இல்லாமல் போவதற்கு காரணம்  அவரது சாதகத்தில் ஐந்தாமாவதி நீசம் பெற்று (வேறு எவ்வித சூடாசும பலன் பெறாமல் ) இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தானங்களில்  இருந்தாலோ இல்லாமல் செய்துவிடுகிறது.

              ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் அது அவர்களுக்கு எதிர்ப்பாக இருந்து அப்பா உறவுகளுக்கு இடையே வம்பு மற்றும் வழக்குகளில் இருப்பதற்கு காரணம் அவர்களது சாதகங்களில் ஐந்தாமாதிபதியானது எதிரி ஸ்தானமான ஆறாமிடம் ,கோர்ட்,வழக்கு மற்றும் சிறை செல்லும் ஸ்தானமான எட்டாமிடம் இவர்களின் அதிபதிகள் சோர்க்கை,பார்வை மற்றும் ஐந்தாமாதிபதி இவர்களின் நட்சத்திர சாரத்தில் நிற்பதே காரணம்  ஆகும்.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்களுக்கு சுபர் பார்வை  இருப்பின் வழக்கில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

                 ஒரு சிலர் ஐந்தாமாதிபதி பலம் பெற்றிருப்பதால் பூர்வீக மனை இருந்தாலும் பூர்வீக ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அரவுகளான ராகு ,கேது குடியேறி இருப்பின் அவர்கள் பூர்வீக மனையில் வசித்தால் சுபிட்சம் பெற முடியாது.இது போன்ற அமைப்பை பெற்றவர்கள் பூர்வீக  மனையில் வசிக்காமல் தானே அல்லது அப்பாவால் தேடப்பட்ட சொத்தில் வீடு கட்டி வசித்தல் நலம்.

                ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் அதிகம் இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்தபின் பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகி கடைசியில் இல்லாமல் செய்துவிடுவதற்கு காரணம் அவர்களது பூர்வீக ஸ்தானத்தோடு விராயாதிபதியான பணிரெண்டாமாதிபதி பார்வை மற்றும் விராயாதிபதி மற்றும் ஐந்தாமாதிபதி பரிவர்தனை.அல்லது  ஐந்தாமாதிபதி விரய ஸ்தானம் ஏறினாலோ அல்லது விராயாதிபதி ஐந்தாமிடம் ஏறினாலோ மேற்கூறிய பலன்தான் நடக்கும்.

       பரிகாரம் :
           மேற்கண்ட அமைப்பை  பெற்றவர்கள் பூர்வீக சொத்துக்களை வைத்திருக்காமல் விற்று புதிய சொத்துக்களை வாங்கிக்கொள்வது.
பூர்வீக மனையில் வசிக்காமல் இருத்தல் நலம்.

           ராகு ,கேது தொடர்பு ஐந்தாமிடத்திற்கு இருப்பின் ராகு ,கேது ஸ்தலங்களுக்கு சென்று வழிபடல்.
அல்லது கால பைரவருக்கு மிளகு தீபம்  ஏற்றல்
அல்லது துர்கையை அல்லது அனுமானை சனி கிழமை ராகு காலத்தில் வழிபடல் நலம்.


                                                     
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்,
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

  வாட்ஸ்அப்
     97 151 89 647
செல் ; 97 151 89 647
              740 257 08 99

(தங்களுக்கு போன் மூலமாக சாதக பலன் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு)

My Email:
masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai. blogspot. com

Sunday 24 June 2018

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ?

செவ்வாய் தோஷம் என்றால் பயப்படக்கூடிய தோஷமா ?-ஓரு விரிவான அலசல் ஆய்வு.


                              

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு-( 156 )

            திருமண பொருத்தம் பார்க்க வரும் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி " சார் சாதகத்தில் மாப்பிள்ளைக்கும்,பெண்ணிற்கும் சாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா ? என பாருங்கள் ஐயா ? " என கேட்பவர்களே அதிகம்  என்பதால் அவர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் இப்பதிவை கொண்டுசெல்கிறேன்.

             செவ்வாய் என்பது ஒரு பூமிக்காரகன்,சகோதரகாரகன்,
வீரக்கிரகம்,
உஷணகிரகம்
யுத்தகிரகம்,இரத்த ஓட்ட கிரகம் ஆகும்.

              இரத்தத்திற்கும் ,இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்கள் மற்றும் இரத்ததட்டுகள் போன்றவைகளுக்கும்,இரத்தபிரிவுகளுக்கும் (blood groups ) மற்றும் எலும்புமஞ்சைகளுக்கும் காரகர் கிரகங்களில் செவ்வாய்பகவானே ஆவார்.

                 சாதகத்தில் செவ்வாய்பகவானை பலமாக பெற்றவர்கள் எவ்வித மந்ததன்மையும் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.அவர்கள் எப்பொழுதும் செயல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.

           மேலும் செவ்வாய் கிரகம் காம எண்ணம் மற்றும் காமம்  சார்ந்த செயல்பாடுகளை தூண்டும் கோள் ஆகும்.செக்ஸ்ஹார்மோன்களான ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான    ஆண்ட்ரோஷன்,பெண் இன ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஷன்,புரோஸஸ்டிரான் மற்றும் ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்கள் சுரத்தலுக்கும் அதனால் மனிதனுக்கு உருவாகிய செயல்பாடுகளுக்கும் காரணகர்த்தா செவ்வாய்பகவானே ஆகும்.

                              


            செவ்வாய்பகவானை பலவீனமாக பெற்றவர்கள்  மந்த தன்மையுடன்   சுறுசுறுப்பு தன்மை அற்றவராகவும்,காம எண்ணம் குறைந்தவர்களாகவும் இருப்பர்.இரத்த சோகை உடையவராகவும் இருப்பர்.

               செவ்வாய்பகவான் இரத்த பிரிவுகளுக்கும் காரகர் ஆவார். இன்று  அறிவியல் அறிஞர்கள் திருமண தம்பதிகளுக்கு இரத்த பிரிவு ( blood group test ) ஆய்வு செய்து விவாகம் செய்து கொள்ளல் நல்லது என்பர். சாதக அடிப்படையில் இரத்த ஆய்வு செய்யாமலே இந்த செவ்வாய்பகவானின் நிலையை ஆய்வு செய்து தம்பதிகள் இருவர் செவ்வாய்பகவானின் வலிமை சமமாக உள்ளவரை திருமண பந்தத்தில் இணைத்தால் நல்லது.

            மேலும் செவ்வாய் காமகிரகம் என்பதால் சாதக கட்டத்தில் செவ்வாய் கிரகம் பலமான அமைப்பை பெற்றவர்கள் ஆணோ/பெண்ணோ இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பும்,உணர்வுகள் மற்றும்  காமம் சார்ந்த கற்பனைகளும், செயல்பாடுகளும் மிகுதியாக இருக்கும்.மாறாக சாதககட்டத்தில் செவ்வாய் கிரகத்தினை பலமில்லாத அமைப்பை பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட காமம் சார்ந்த செயல்பாடுகள் குறைவாக இருக்கும் என்பதால்தான் செவ்வாய்பகவான் நிலை அறிந்து பொருத்தம் போடவேண்டும்.

            இவ்வாறு செவ்வாய் நிலையறியாது திருமணம் செய்யும்பட்சத்தில் செவ்வாய் ஓத்த அமைப்பை பெறாதவர்கள் திருமணபந்தத்தில் இணையும்போது அவர்களிடம் தாம்பத்யம் திருப்தி இல்லாமல் அவர்களிடம் அன்யோன்யம் குறை்து "வேலி தாண்டிய வெள்ளாடு" ஆகிவிடுவார்கள்.இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதற்கு செவ்வாயின் தன்மையை அறிய வேன்டும்.

           செவ்வாய் தோஷம் இருப்பின் பால் உணர்வு விஷயத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் குண இயல்புகள் மாறுபடும்.
ஒரு ஆண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் காம உணர்வு அதிகம் இருத்கும்.அதேபோல பெண் சாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அவள் அவசரப்பட்டு உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தி விடுவாள்.

                          


              செவ்வாய் தோஷம் உள்ள  ஆண் மகன் ஒரு காம உணர்வினால் ஒரு பெண்ணின் பிடியில் அடங்கிபோய்விட இயலும்.எனவேதான் திருமணத்தின்போது  செவ்வாய்தோஷம் உள்ள ஆணிற்கோ/பெண்ணிற்கோ அதே தோஷம் உள்ள நபரை பொருத்தம்போடும்போது அவர்களிடம் ஒத்த காம உணர்வுகள் உண்டாக வாய்ப்பு உருவாகி தாம்பத்ய உறவில் அன்யோன்யம் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் செவ்வாய் தோஷம் உள்ள நபருக்கு அதேபோல செவ்வாய் தோஷம் உள்ள நபரையே ஜோடி சேர்க்கப்படுகிறது.மற்றபடி உயிரை கொல்லும் அளவிற்கு பயப்படக்கூடிய தோஷம் இல்லை.

            செவ்வாய் மனித உடலின் இரத்த ஒட்டத்திற்கும் காரகர் ஆவார் என்பதால்
உடலியல்கூற்றுப்படி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பெண்ணிற்கு பூப்பெய்திய பிறகு மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது.பிறகு பிரசவ காலத்தில் இரத்த இழப்பு ஏற்படுகிறது.எனவே பெண்கள் சாதகத்தில் செவ்வாய் பலமிழந்து நின்றால் இரச்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.அத்துடன் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி,உதிரபோக்கு ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

            இவை மட்டுமல்லாமல்  செவ்வாய்பகவானுடன் களஸ்திரகாரகனான சுக்கிரன் ஆனவர் 30  பாகைக்குள் இணையும்போதோ அல்லது ஒன்றுக்கொன்று 180 பாகைக்குள் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும் அமைப்பை பெற்றவர்கள் காம உணர்வு மிகுதியால் அதிக காம செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

          சுப பார்வையின்றி     செவ்வாய் பகவான் உடன் சனி,ராகு,கேது சேர்க்கையை பெற்றவர்கள் அளவுக்கு அதிகமான காம உணர்வுகள் பெற்று பல மலரை நாடி தேன் எடுக்கும் வண்டு ஆவார்.

          செவ்வாய்தோஷம் என்பது  ஓருவருடைய சாதக கட்டத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2.4.7.8.12 ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய்தோஷம் ஆகும்.

        செவ்வாய் தோஷத்தில் சில விதிவிலக்குகள் உள்ளது.

                 1)செவ்வாய் உச்சம்,ஆட்சி மற்றும் நீசமடைந்து இருப்பின் செவ்வாய் தோஷம் கிடையாது.

                  2) செவ்வாய் பகவானை  சனி, குரு, சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும்,சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

                3)சில நேரங்களில் செவ்வாய் குரு வீடு ஏறியிருந்தாலோ ,சிம்ம வீடு ஏறியிருந்தாலும் தோஷம் இல்லை.

           இவ்வாறு எல்லா விதிவிலக்குகளை கவனித்தாலே  செவ்வாய் தோஷம் இல்லாமல் விலகிவிடும்.

         எனவே செவ்வாய் தோஷம் பற்றி பயப்பட தேவையில்லை.பொதுவாக செவ்வாய் ஒரு பாவகிரகம் என்ற வகையிலும் அவை குடும்பம்,களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தில் இருப்பின் திருமணதடை ,மனதிற்கு ஒத்த மனைவி அமைவதில் சிரமம் என்ற வகையில் பயப்படவேண்டுமோ ஓழிய உயிர் பயம் தேவையில்லை.

நன்றி நன்றி நன்றி!

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம். மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம்,மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்)

தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
97 151 89 647
   740 257 08 99

My email
masterastroravi @gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com

                                      

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்.
ஒம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனையாளர்
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்..
---------------------------------------------------------------------------

Saturday 23 June 2018

கமல்ஹாசன் சாதகம் ஓர் ஆய்வு

கனவுநாயகன் கமல்ஹாசன் சாதகம் ஓர் ஆய்வு


                                    

சினிமாவில் சாதித்தவர்கள்- ( 6 )

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 69 )

ஸ்ரீபத்ரகாளியம்மன துணை!

               தமிழ் திரை உலகில் 
சிவாஜிகணேசனுக்கு அடுத்தப்படியாக அந்த இடத்தை நிரப்பியவர்.மேலும் அவருடைய திரையுலக வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவர் எனது கல்லூரி கால பருவத்தில் நான் விரும்பி பார்த்த படங்களில் இவரது படமே அதிகம். இவர் தமிழ் திரை உலகம் மட்டுமல்லாத பிற மொழி படங்ளிலும் திறம்பட நடித்தவர்.கதை,திரைக்கதை,வசனம்,இசை,பாடல்கள் ,நடனம் என அத்தனை துறையிலும் பாண்டித்யம்பெற்றவர்.

            இராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் 7-11-1954 ல் பிறந்தவர்.இவர் பிறந்து நான்காவது வயதிலே அதாவது 1959 ல் "களத்தூர் கண்ணம்மாவில்"சிறப்பாக நடித்ததற்காக ஜனாதிபதி கோல்ட் மெடல் விருது பெற்றவர்.இன்றுவரை திரையுலகில்  இளம் நடிகர்களுக்கு சவாலாக கலக்கி கொண்டிருப்பவர்.ஆம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.இவர் திரை உலகில் இமாலய சாதனை புரிந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என அவரது சாதகத்தில் உள்ள கிரகநிலைகளை இப்பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.

          கமல்ஹாசன் சாதக கிரகநிலையும் பலன்களும்.

சிம்ம லக்கனம்,மீன ராசி

ரேவதி நட்சத்திரம்

லக்கனத்திலிருந்து

3-ல் சூரியன்,புதன்,சனி
4)ல் சுக்கிரன்
5-ல் ராகு
6-ல் செவ்வாய்
8-ல் சந்திரன்
11-ல் கேது
12-  ல் குரு

முதலில் மீன ராசியை லக்கனமாக கொண்டு பலன்களைப் பார்ப்போம்.

ராசி அடிப்படையில்
++++++++++++++++++++++

உடல் தோற்றம்

          இவரது  சாதகத்தில்     குருவும் ,சந்திரனும் பரிமாறி கொண்டது மற்றும் குரு பகவான் கடகத்திலும்,சந்திரன் பகவான் மீனத்திலும  (அதாவது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் அமர்ந்து )இருந்து குருவால் சந்திரன் பார்க்கபட்டது #குருசந்திரயோகம் ஆகும்.இந்த அமைப்பால்தான் நல்ல உடல் அமைப்பு கொண்டும், அழகான தோற்றத்தைக்கொண்டும்  சினிமா உலகில் ஜொலிக்க இயன்றது.

தனயோகம்

              தனம் மற்றும் பாக்கிய யோகத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் லாபஸ்தானத்தில் உச்சம்பெற்று லக்கனாதிபதியும் ,ஜீவனாதிபதியான குருபகவானின் சமசப்தம பார்வையை பெற்றது மேலும் ஒன்றுக்கொன்று கேந்திரமாக அமைந்தது அதாவது தன-பாக்கியாதிபதி சம்பந்தம் செல்வ சீமான் என்பதையும் தான்மேற்கொண்ட துறையில் அதிக செல்வத்தை ஈட்டக்கூடிய நிலையையும் தந்தது.

மக்கள் செல்வாக்கு,ரசிகர்களின் ஆதரவு;-

           மீன ராசிக்கு தர்மாதிபதி மற்றும் கர்மாதிபதி (9,10) யான செவ்வாயும்,குருவும் உச்சம்பெற்று சமசப்தமாக  பார்வை பெற்றது #தர்மகர்மாதிபதியோகம் தந்து மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு நிலையை தந்தது.

கோடீஸ்வரயோகம்

            ஏழு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் புதனும் (வித்தைக்காரன்),சனியும் லக்கனாதிபதிக்கு கேந்திரந்தில் அமர்ந்த அமைந்த அமைப்பு சகல பாக்கியங்களையும் பெறும் கோடீஸ்வரயோகமாகும்.

திரையுலகில் சிறந்த நடிகனாக மற்றும் இயக்குனராக சாதனை புரிய;-

            ஒருவர் சினிமாவில் சாதிக்க கலைக்காரகன் சுக்கிர பகவானின் ஆதரவு தேவை

             இவரது சாதகத்தில் சுக்கிரபகவான் லக்கன மற்றும் ராசிக்கு மூன்றாம் திரிகோணமான ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து அந்த வீட்டு அதிபதி தன -பாக்கியாதிபதியாகி லாபத்தில் உச்சம் பெற்று அமர்ந்து, உச்சம் பெற்ற லக்கன மற்றும் ஜீவன அதிபதியான  திரிகோணஸ்தானத்தில் அமர்ந்த குருவால் பார்க்கப்பட்டு குருவுக்கு கேந்திரத்தில் அமர்ந்து ,

                அந்த வீட்டு அதிபதியான சனி பகவானும் உச்சம்பெற்று வித்தைக்காரன் புதனுடன் குருவ்க்கு கேந்திரத்தில் அமர்ந்து டிரிபிள் டெபாஸிட்டர் முறையில் பலம்பெற்றதால் சினிமா உலகில் மகத்தான சாதனையும் ,சிறந்த இயக்குனராக பல தேசியவிருதுகளையும் பெற முடிந்தது.நடிப்பில் தனக்கென ஒரு முத்திரையை பதிக்க முடிந்தது.

எழுத்து துறையில் சாதிக்க;-

             சனி உச்சம் பெற்று சூரியன் நீசம் பெற்றதால் நீசபங்க ராஜயோகம் பெற்று சூரியன் பலன் பெற்று புதனுடன் #புதயாதித்யயோகமாகும்.இது ஒருவித சரஸ்வதியோகமாகும்.எனவே புதன் பலம் பெற்றதால்தான் எழுத்தாளராகவும்,ஒரு நல்ல கதாசிரியராகவும்,நல்ல வசனகந்த்தராகவும் மற்றும் பாடலாசிரியராகவும் திகழ முடிந்தது.

சிறந்த இசை அனுபவம் பெற:-

             இசைக்குரிய சந்திரனும்,சுக்கிரனும் பலம்பெற்றதால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் மற்றும் பாடாகராகவும் திகழ முடிந்தது.

நடன கலைஞராக திகழ;-

              கலைக்காரகன் சுக்கிரன் மற்றும் புதனும் பலம்பெற்றதால் பாரதநாட்டியம் முதலான நடன கலைஞராகவும் திகழ முடிந்தது.

சிறப்பு அமைப்புகள்(இராஜயோகம்):-

             இவரது சாதகத்தில் செவ்வாய்,சனி மற்றும் குரு ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவதும்.

             குரு,சுக்கிரன்,சந்திரன் ஒன்றுக்கொன்று திரிகோணம் பெறுவதும் சிறந்த இராஜயோகமாகும்.

அரசியல் ஈடுபாடு

            பத்தில் ராகு பகவான் இருப்பது பொதுவாழ்வில் ஈடுபட்டு தன்னை அர்பணிக்கும் நிலை ஆகும்.

ஆஸ்கார் கனவு;-

               சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி குரு லக்கனத்திற்கு திரிகோணம் ஆகும்.குரு நின்ற ராசிக்கதிபதி சந்திரன் குருவுக்கு திரிகோணமாகும்.சுக்கிரன் ராசிக்கதிபதி செவ்வாய் லக்கனத்திற்கு லாபத்தில் உச்சம்,ராகு நின்ற ராசிக்கதிபதி குரு லக்னத்திற்கு திரிகோணத்தில் உச்சம் .எனவே அகில உலக ஆஸ்கார் சாதனை புரியும் யோகம் உள்ளது.
இதுவரை ராசியையே லக்கனமாக கொண்டு பலன்களை பார்த்தோம்.இனி சிம்ம லக்கன அடிப்படையில் பலன்களை காண்போம்.

லக்கன அடிப்படையில் ஆய்வு
++++++++++++++++(+++(+

            இவரது சாதகத்தில் லக்கனம் சிம்மமாக இருப்பதாலும் ,போராட்ட குணத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் உச்சம்பெற்று இருப்பதாலும் போராட்ட குணம் மிக்கவர்.படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தன்னை வருத்தி நடிக்க கூடியவர்.

திருமண வாழ்க்கை

           சிம்ம லக்கனமாக இருந்து லக்கன அதிபதி சூரியனுக்கு ஏழாம் அதிபதி சனி  (களஸ்திரஸ்தானாதிபதி) பகை கிரகமாகவும் இருந்து  மறைவு ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து நீசபங்கம் பெற்று பலம் பெற்று  இவர்களுடன் ராசிக்கு பாதகாதிபதியான புதனும்  சேர்ந்திருந்து சுபர் பார்வையின்றி இருந்ததால் இவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

புத்திரபாக்கியம்

              லக்கனத்திற்கு ஐந்தாமிடமான புத்திரஸ்தானத்தில் கரும்பாம்பு ராகு அமர்ந்திருப்பது தோஷம் எனினும் அந்த வீட்டுக்குடையவனும் ,புத்திரகாரகனுமான குரு பகவான் உச்சம்பெற்று ராசிக்கு ஐந்தாமிடத்தில் அமர்ந்ததால் காரக பாவ நாஸ்தி என்ற வகையில் இரண்டு பெண் குழந்தைகளை தந்து உச்சம் பெற்ற குருவால் புத்திரமும் சினிமாவில் புகழ்பெற வைத்தது.

             இதேபோல கிரக அமைப்புகள் இவரது சாதகத்தில் இருந்ததால்தான் திரையுலகில் சாம்பவனாகவும்,சக்கரவர்தியாகவூம் திகழ முடிகிறது.

             இதேபோல பல்வேறு கோணங்களில் ஒருவர் சாதகத்தை இறைவன் அருளின் துணையோடு ஆராய்சி செய்து பார்க்கவேண்டும்.

தொடரும்.....
(இதேபோல தங்களது சாதகங்களையும் கோளாராய்சி செய்து பலனை போன் வழியாகவே பெறலாம்.தாங்களால் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு ஆராய்ந்து விடையளிக்கப்படும்.இதேபோல திருமணபொருத்தமும்,பிறந்த சாதகம் எழுதுதல் போன்ற விவரங்களுக்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடத்தை மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டண விபரம் அதில் தெரிவிக்கப்படும்)

                                  
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

வாட்ஸ் அப்
  97 151 89 647

செல்; 740 257 08 99
செல்; 97 151 89 647.

Email
 masterastroravi@gmail.com

Tuesday 19 June 2018

உங்களுடைய சாதகத்தில் செல்வமும்,புகழும் பெறும் யோகங்கள் உண்டா?

உங்களுடைய சாதகத்தில் செல்வமும்,புகழும் பெறும் யோகங்கள் உண்டா ?


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 73 )


ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்.


             ஒருவருடைய சாதகத்தில் முதலில்  விதியை (லக்கனத்தை) அடிப்படையாக யோகங்களை பார்க்கவேண்டும்.விதி சரியில்லையெனில் மதியை (ராசியை லக்கனமாக கொண்டு) பார்க்கவேண்டும்.


               இந்த விதியும்,மதியும் சரியில்லையென்றாலும் இறுதியில் கதியை அடிப்படையாக (சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டு) கொண்டு யோகங்களை ஆய்வு செய்யவேண்டும்.


                 பொதுவாக ஒருவருடைய சாதகத்தில் விதி,மதி மற்றும் கதி என மூன்று கோணங்களில் ஆய்வு செய்து யோகங்களை பார்த்து அதில் செல்வமும்,புகழும் அடையும் யோகங்கள் உண்டா ? என பார்க்கவேண்டும்.இப்பதிவில் அந்த யோகங்களை எவ்வாறு பார்ப்பது என ஆராய்வோம்.


              ஒருவரது சாதகம் யோக சாதகமாக அமைய அவரது சாதகத்தில் குரு பகவான் லக்கனத்தினையோ ,ராசியையோ அல்லது இவ்விரு அதிபதிகள் ஆகிய ஏதேனும் ஒன்றின் மீது பார்வை பெற்று இருக்கவேண்டும்.


           திரிகோண அதிபதிகளும்(1,5,9),கேந்திர அதிபதிகளும் (1,4,7,10) பலம்பெற்று  தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.        உபஜெய ஸ்தானமான 3,6,9,11 போன்ற இடங்களில் பாவிகள் இடம்பெற்று பலம்பெற்று சுபர் பார்வை பெறவேண்டும்.


        கேந்திர அதிபதிகள் சுபராக வரும் பட்சத்தில் அவை  கேந்திரங்களில் இல்லாமல்  திரிகோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ இருந்து சூட்சும வலு பெற்றிருககவேண்டும்.பாவிகளாக இருப்பின் கேந்திரங்களில் இருக்கலாம்.


          பாதகாதிபதிகள் நேர் வலுபெறமால் சூட்சும வலுபெறப்படவேண்டும்.சர ராசிக்கு 11-ம் அதிபதி,ஸ்திரத்திற்கு9-ம் அதிபதி,உபயத்திற்கு 7-ம் அதிபதி பாதகாதிபதியாகும்.


          லக்கனம் ,ராசி மற்றும் சூரியனுக்கு பத்தாம் அதிபதி அல்லது பத்தாம் பாவத்திற்கு அதாவது விதி,மதி மற்றும் கதி இதனுடைய பத்தாம் பாவத்திற்கு குருவின் பார்வையானது விழவேண்டும்.


           இதனுடைய அதிபதிகள் அதாவது லக்கனம் மற்றும் ராசி மற்றும் சூரியன் இருக்கும் இடத்தின் அதிபதிகள் உச்சம்,ஆட்சி ,திரிகோணம் போன்ற பலம்பெற்றிருக்கவேண்டும்.


           ஒருவனுடைய சாதகத்தில் ஆணிவேரான லக்கனாதிபதி பலம்பெற்று இதனுடன் தனத்தை தரும் இரண்டாமிடமும் ,பாக்கியத்தை அல்லது வருமானத்தை தரக்கூடிய ஒன்பதாமிடம்,ஜீவனத்தை தரக்கூடிய பத்தாமிடம் மற்றும் லாபத்தை தரக்கூடிய பதினொறாமிடம் ( 1,2,9,10,11) ஆகிய இவற்றின் அதிபதிகள் பலம்பெற்று சுபர் சேர்க்கை,சாரம் மற்றும் பார்வை பெற்று தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.


          மேற்கண்ட அதிபதிகளில் யாராவது ஒருவர் லக்கனம் அல்லது ராசிக்கு பத்தில் இருந்தாலும் அல்லது பத்தாம் பாவத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு துறையில் புகழ் அடைவார்கள்.


               சுக்கிரனும்,குருவும் ஆட்சி பெற அதற்கு ஏழாமிடத்தில் பலமான கிரகம் இருப்பது.


             லக்கனாதிபதி இருக்கும் இடத்திலிருந்து 1-5-9 ஆம் ராசிகளில் எவை ஸ்திர ராசியாக வருகிறதோ அதுவே புகழ்தரும்  லக்கனம் என குமார சுவாமியம் கூறுகிறது.


           ராகுவுடன் வேறு ஒரு கிரகம் ஆட்சி பெறாமல் அமைய இருபுறமும் சுபர் இருப்பது.


           குருபகவானுக்கு ஏழில் புதன் இருக்க இருவரும் பலம்பெற இருபுறமும் சுபர் இருப்பது.


           நான்கு சுபர்கள் பதினொன்றாம் பாவத்தில் இருப்பது.


           லக்கனம் அல்லது ராசியானது வர்க்கோத்தமம் பெற்று இருந்தாலும்,சூரியனுக்கு இரண்டில் சுப கிரகம் இருந்தாலும் அவை உச்சம் ஆட்சி போன்ற பலமாக இருந்தாலும் இதற்கு" காரகயோகம்"ஆகும்.இந்த யோகம் பெற்றவர்களுக்கு புகழும்,செல்வமும் தேடி வரும்.


          ஓன்பது மற்றும் பத்துக்குடையவன் சேர்க்கை பரிவர்தனை மற்றும் சமசப்தம பார்வை பெற்று "தர்ம-கர்மாதி யோகம்"பெற்று அந்த திசையே நடப்பதும் யோகங்களை தரும்.


             பஞ்ச மகா யோகங்களை பெற்று இருப்பது(குரு ,புதன்,சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெறுவது)சனி-சசகயோகம்


செவ்வாய்-ருசகயோகம்


புதன்-பத்ரயோகம்


சுக்கிரன்-மாளவீகாயோகம்


குரு-ஹம்சக யோகம்.


இதுபோன்ற பலவிதயோகங்கள் உள்ளது.

             சோதிடம் என்பது சமுத்திரம் ஆகும்.அதில் அள்ள,அள்ள குறையாத பல முத்துக்கள் மறைந்திருக்கிறது.முழுவதையும் யாராலும் விளக்கமுடியாது.இதற்கு பரம்பொருள் அருள் தேவை.எனவே மேற்கண்ட பதிவில் ஒருவருடைய சாதகத்தில் உள்ள யோகங்களை காண்பதற்கான அடிப்படை விதிகளை மட்டுமே கூறியுள்ளேன்.அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.தொடரும்....

(தங்களது சாதகங்களிலும் செல்வமும்,புகழும் அடையும் யோகங்கள் உண்டா? என்பதை போன் வழியாகவே வீட்டிலிருந்தபடியே எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.விவாக பொருத்தங்கள் பார்க்கப்படும்.கட்டணங்கள் மற்றும் இதர விவரஙகளை பெற எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647
க்கு மெஸ்ஸேஸ் மூலம் விவரங்களை பெறலாம் அல்லது கால் செய்து விபரங்களை பெறவும்)


அன்புடன் 

       சோதிடர்ரவிச்சந்திரன்                             M.SC,MA,BEd. 

ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர், 

சோதிட ஆய்வாளர், 

வாழ்வியல் ஆலோசகர், 

முதுநிலை வேதியியல் ஆசிரியர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம். 

Mail;masterastroravi@gmail.com

   செல் : 97 151 89 647 

             740 257 08 99

My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com.

AstroRavichandransevvai. blogspot. com

நீ என்னவாக ஆக விரும்புகிறாய் ?

நீ என்னவாக ஆக விரும்புகிறாய் ?


                        

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

            நான் ஐந்தாம் வகுப்பு வரை என்னுடைய சொந்த ஊரான செவ்வாய்பட்டியில் படித்துவிட்டு ஆறாம் வகுப்பு கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.இன்று ஆறாம் வகுப்பு படிக்கும்  மாணவன் போல் அல்லாமல்  விவரம் அற்றவனாக ,அதேநேரத்தில் ஆசிரியர்களை மதிக்க தெரிந்தவனாக இருந்தேன்.

        எனது வகுப்பில் முதன்முதலாக நுழைந்த நாகர்கோவில் ஆசிரியை எங்களிடம் கேட்ட முதல் கேள்வி "நீ என்னவாக ஆக விரும்புகிறாய் ? " இதற்கு என்னுடன் பயின்ற பீர் முகமது என்ற மாணவன் "டாக்டராக ஆக விரும்புகிறேன் " என்றான்.பின்னாளில் அவன் கசாப்பு கடையில் கறி வெட்டி விற்பவனாக ஆனான்.

    "கம்யூட்டர் என்ஜினியர் ஆவேன் " என சொன்ன மாதவன் கல்லூரியில் படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதால் தான் சொந்தமாக செல் சரிபார்க்கும் கடை வைத்து நடத்தி முதலாளி ஆகிவிட்டான்.இவ்வாறு ஒவ்வொறுவரும் தான் சொன்ன துறைக்கு சம்பந்தமல்லாமல் வேறு வேலை பார்க்க ,"ஆசிரியர் ஆவேன் ? "என்று சொன்ன நான் மட்டுமே ஆசிரியர் ஆனேன்.

       ஆசிரியர் ஆன நான் எமது மாணவர்களிடம் " நீ என்னவாக ஆக விரும்புகிறாய்? " -என கேள்வி கேட்பதில்லை.ஏனெனில்" ஒரு மனிதனை என்னவாக ஆக போகிறாய் "என்பதனை ஜெனன காலத்தில் அவரது சாதக கட்டத்தில் அமர்ந்த கிரகங்கள்தான் முடிவு செய்கின்றது.இது நூறு சதவீத உண்மை ஆகும்.இதை நான் உறுதியாகவே சொல்கிறேன்.

        எவ்வாறு எனில் எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவர் 2016-17 ஆம் கல்வியாண்டில் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் சாதகத்தினை என்னிடம் ஆய்வுக்கு எடுத்து வந்து " எனது மகள் மருத்துவம் படிக்கும் யோகம் உண்டா ?" என ஆய்வு செய்து பார்க்கும்படி  கூறினார்.நான் அந்த பெண்ணின் சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்கும்போது மருத்துவம் பயில்வதற்கான காரகர் ஆன  சூரியன்,சந்திரன்,செவ்வாய மற்றும் ராகு பகவான் ஆகியோர்  பலம் இழந்து காணப்பட்டார்.மருத்துவம் பயில்வதற்கான உகந்த கிரகநிலைகளும்,திசையமைப்பும் இல்லை "என கூறியதை நம்பாமல் சென்றார்.

           ஏனெனில் அவரது மகள் ஆனவள் இறுதி திருப்புதல் தேர்வில் கூட ஆயிரத்து நூறை தாண்டி மதிப்பெண் பெற்றிருப்பதால் நான் கூறிய பலனை நம்பவில்லை.அதேபோல அரசுபொதுதேர்விலும் 1125 மதிப்பெண் பெற்று விட்டாள்.அவளது இந்த மதிப்பெண்ணிற்கு மருத்துவம் கிடைக்கும் என நம்பிக்கை வந்த நேரத்தில் அரசு அறிவித்த நீட் தேர்வால் மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது ? " என அவர்கள் வ்ருத்தத்தில் இருந்தாலும் "விதி வலியது " என்ற வகையில் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீர் ஆனது.ஆதலால் வேறுவழியின்றி B.sc Agri படித்து கொண்டு உள்ளாள்.

       நான் சோதிடராக இருந்துகொண்டு ஆசிரியராக இருப்பதால் நான் இப்பொழுது எனது மாணவர்களிடம் "என்னவாக ஆக விரும்புகிறாய்? எனும் கேள்வியை கேட்பதில்லை.

   போதிய திறமையும் ,அறிவும் இருந்தும் தொழில் செய்யலாம் என முயன்ற கண்ணன் தனது அறிவும்,திறமையும் தான் மேற்கொண்ட தொழிலிற்கு உதவாமல் கடன் மேல் கடனாக வாங்கி கடன்காரர் ஆகிவிட்டார்.பணத்தினை எண்ணி பார்க்கின்ற அளவிற்கு போதுமான திறமையும், அறிவும் இல்லாது முருகன் புதிய ஜவுளிக்கடை ஆரம்பித்து இன்று பல கோடிக்கு முதலாளி ஆகிவிட்டான்.

        இங்கு அறிவு மற்றும் திறமை என்பதனை காட்டிலும் அவர்கள் இருவரது சாதகத்திலும் உள்ள தொழில் ஸ்தான அமைப்பும் மற்றும் நடைபெற்று கொண்டிருக்ககூடிய தசை அமைப்புமே இவர்களது தொழில் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.

  சுகந்தி நல்ல அழகு, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவள்,பிறரை அனுசரித்து செல்லும் மென்மையான தன்மை கொண்டவள் மற்றும் போதுமான வசதி வாய்ப்பை பெற்றவள் .இவ்வளவு தகுதி உடையவளாக இருந்தும் கல்யாணம் ஆகி ஒரு சில மாதத்தில் " அவனோடு எனக்கு வாழ பிடிக்கவில்லை ?" என பெட்டி,படுக்கையோடு வீடு வந்து சேர்ந்தாள்.

                  அவளை அழைக்க பெண் வீட்டாரும் வரவில்லை .இவளிடம் அவளது பெற்றோர்கள் "ஏம்மா எவ்வளவு கஷ்டமான சூழலாக இருந்தாலும் விட்டுகொடுத்து போக வேண்டும் என தத்துவ வார்த்தை பேசியபோது ,நீங்கள் சொல்வது சரிதான் விட்டுக்கொடுத்து போக வேண்டும்தான் ஆனால் அவன் தாம்பத்ய உறவிற்கு அருகதை அற்றவனாக உள்ளானே " என கூறியவுடன் அவர்களது தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

                குறைவான வசதி,மாநிறம் ,பள்ளி படிப்பைக்கூட முடிக்க வசதி இல்லாத வனிதாவிற்கு அமைந்த வரன் சிறப்பாக அமைந்தது."அவளது கணவன் அவளை தரையில் நடக்கவிடாமல் தாங்குகிறானாம் ,மாமன்,மாமியாரை தனது அப்பா,அம்மா மாதிரி கவனித்து கொள்கிறான் "என ஊர் வனிதாவின் கணவனை புகழ்ந்தது.

                இதுபோன்ற அமைப்பிற்கு காரணம் என்ன அவரவர் சாதக கட்டத்தில் அமைந்துள்ள லக்கன,குடும்ப ,களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இடங்களும் அதன் அதிபதிகளின் நிலைகளும் ஆகும்.இவை மட்டுமல்லாமல் காமகிரகம் செவ்வாய், களத்திர காரகர் சுக்கிரன் மற்றும் அலிக்கிரகமான புதன் போன்றவைகளும் காரண கர்த்தா ஆகிறார்.

                இவ்வாறு வாழ்வில் நம்மை சுற்றி  நடந்த  பல சம்பவங்களையும்,அனுபவங்களையும் பார்க்கின்றபோது ஒரு சிலர் தாம் எண்ணியதுபோல ,முயன்றதை போல ஆக இயலாமல் , உருவாக இயலாமல் ஆனதற்கான காரணங்களை ஆய்வு செய்து பார்ப்பின் அவர்களது சாதக கட்டத்தில் கிரகங்கள் நடத்தும் கோளாட்டமே " காரணம் ஆகிறது எனும் உண்மை நிலை அறிந்து கொண்டால் தனது கர்மா படி தனது வாழ்வினை வருத்தப்படாமல் வாழ்ந்துவிட்டு செல்லலாம்.

நன்றி

வாட்ஸ் அப்
  97 151 89 647
 
    செல்
740 257 08 99
   97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                

  அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blogspot. Google search
  AstroRavichandran. blogspot. com
  AstroRavichandransevvai. blogspot. com

....................
..................................................................

Sunday 17 June 2018

கல்வி செல்வம் யாருக்கு ?-சோதிட விளக்கம்

கல்வி செல்வம் யாருக்கு?


கிரகங்கள் படுத்தும் பாடு- (74 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை;
**************************
              ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான செல்வம் கல்வி செல்வம் மட்டுமே.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் வழங்க
வேண்டிய செல்வம் ஏனைய செல்வங்களை விட கல்விச்செல்வமே ஆகும்.

             எனவேதான் வான்புகழ் கொண்ட
திருவள்ளுவர் கூட
"கேடில்விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றவை  யவை "
          என கல்வியின் சிறப்பை விளக்கியுள்ளார்.

நமது முன்னோர்கள் கூட
"கற்றோர்க்கு சென்ற இடமல்லாம் சிறப்பு " எனறனர்.

           இவ்வளவு சிறப்பு வாய்ந்த கல்வியில் சிறக்க அவனது ஜாதகத்தில் குரு,புதன் ,சனி,செவ்வாய்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் சிறப்பு நிலை பெற்று இருக்க வேண்டும்.

           அடுத்து அவனது ஜாதகத்தில்
வாக்காதிபதி எனப்படும் இரண்டாமிடம்,கல்விக்கு அதிபதி
எனப்படும் நான்காமிடம், புத்திஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் போன்ற மூன்று ஸ்தானங்களும்,அதன் அதிபதிகளும் பலம் பெற்று இருக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக லக்கனாதிபதி வலுப்பெற்றிருக்கவேண்டும்.

          ஒரு மனிதன் அடிப்படை கல்வியில் சிறக்க இரண்டாமிடமும்,
உயர்நிலைகல்வியில் சிறக்க நான்காமிடமும்,
இளங்களை,முதுநிலை கல்வியில்
சிறக்க ஒன்பதாமிடமும் சிறக்க வேண்டும்.

          மேற்கண்ட ஸ்தானங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் பலம்பெற்று சுபர்பார்வைப்பெறவேண்டும்.

          ஒருவன் தான்பெற்ற கல்வியால் பெயரும்,புகழும் பெற மூன்றாமிடம் பலம் பெறவேண்டும்,

        தான்பெற்ற கல்வியால் புகழடையவும்,படிப்புக்கேற்ற தொழில் புரிய பத்தாம் இடம் பலமடைந்திருக்கவேண்டும்.

           தான் கற்ற கல்வியால் பணம் ஈட்டி மற்றவர்களுக்கு தான தர்மம் செய்ய தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றிருக்கவேண்டும்.

           கற்ற கல்வியால் வெளிநாடு சென்ற பொருளீட்ட அவரது சாதகத்தில் பதினொன்று மற்றும் பணிரெண்டாமாதிபதிகள் உச்சம்,ஆட்சி பெற்றிருக்கவேண்டும்.

   ஒருவரது சாதகத்தில் என்னதான் கல்வி கற்பதற்கான கிரகங்கள் பலமடைந்து இருந்தாலும் நடைபெறுகின்ற திசையும் ,கோசார பலன்களும் கல்வி கற்பதற்கு உகந்ததாக கல்வி கற்கின்ற காலத்தில்  இருக்குமானால்தான் ஒருவர் கற்றவராக திகழ இயலும்.
பொதுவாக வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம்,பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் ஆகிய இடங்களின் அதிபதிகள்(2,4,5,9) பலப்பட்டு பாவர் கலப்பின்றி இயற்கை சுபரின் சம்பந்தம் பெற்று நின்று இந்த ஸ்தான கிரகங்களின் ஏதாவது ஒரு திசையானது நடப்பில் இருப்பின் சாதகர் கல்வி ஞானம் பெற்று வித்தகனாக திகழ்வான்.

   ஒருவரது சாதகத்தில் சூரியனும்,புதனும் இணைந்து நின்று இருவரில் ஓருவர் பங்கப்படாமல் இருப்பின் "புத ஆதித்ய யோகம்" பெற்று பல பட்டங்களை பெறுவான்.

            ஒருவரது சாதகத்தில் சூரியன், புதன்,சுக்கிரன் ஆகிய மூவரும் இணைந்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுப குருவால் பார்க்கப்பட சாதகர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான்.

                                  

என்றும் அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
     M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஒம்சக்தி சோதிடநிலையம்
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

போன்வழியாக
ஜோதிடம் பார்க்க விரும்புவோர்
தொடர்புகொள்ளவேண்டிய

அலைபேசி :9715189647
                       740 257 08 99

வாட்ஸ்அப் எண் : 97 151 89 647
(தங்களது சாதகபலனை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி, நேரம், பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு message செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

Saturday 16 June 2018

சுக்கிர பகவானும், குருபகவானும் மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்

                சுக்கிரபகவானும்,

                              

                     குருபகவானும் 

                        

மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்.


                            "கிரகங்கள் படுத்தும் பாடு -( 154 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                   அசுரர்களின் குருவான சுக்கிரபகவானும் ,தேவர்களின் குருவான குருபகவானும் மனிதர்களின் வாழ்விலை அருளையும்,பொருளையும் உணர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

                    சுக்கிரன் உச்சம்,ஆட்சி, போன்ற நிலைகளில் பலமடைந்து நிற்கும்போது ஜாதகருக்கு எல்லாவிதமான வசதிகளையும் தந்து வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்க வைத்து ஒருவித மன அமைதியில்லாத நிலையை தந்துவிடுகிறது.

                  அதேநேரத்தில் சுக்கிரன் நீசமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையில் பலமிழந்து நிற்கும்போது குடும்பம்,மனைவி,குழந்தைகள் இவைகளுக்காக சிரமப்படவேண்டிய நிலையை தந்து விடுகிறார்கள்.மேலும் எவ்வித சுகத்தையும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.

                 பொதுவாக சுக்கிரனை் நீசமாக  ் பெற்றவர்கள்  எவ்வித சுகத்தையும் பூரணமாக அனுபவித்தல் என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.அவ்வாறு கிடைத்தாலும் இறுதியில் கசப்பாகவே சென்று முடிகிறது.

                 காம இன்பங்களை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான்தான் ஒரு மனிதனை ஆன்மீகவாதியாகவும் மாற்றுகிறது.

                 தாரதோஷத்தை தருவதில் சுக்கிரபகவானுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.கேந்திர நிலைகளான 1,4,7,10 போன்ற இடங்களில்  இடம்பெறும்போது தாரதோஷத்தை தருகிறது.

                 சிலநேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களை தந்து மனிதனை பயனற்ற பொருளாக மாற்றிவிடுகிறது.
தாரதோஷத்தை தருவதில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக குருபகவானுக்கும் பங்கு உண்டு.சுக்கிரனுக்கு எதிர் தன்மை படைத்த கிரகம்தான் குருபகவான் ஆகும்.அசுரர்களின்  ஆசிரியர் ஆனவர் சுக்கிரபகவான் ஆவார்.இவர் குருபகவானோடு சேரும்போது மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகிறான் என்பதை தெளிவாக பார்ப்போம்.

                குருவும் ,சுக்கிரனும் இயற்கையில் ஒருவருக்கொருவர் பகைமை பெற்ற அம்சத்தினால் சாதகருக்கு லக்கன பாவத்தை தவிர இவர்கள் வேரு எந்த பாவத்தில் சேர்ந்தாளும் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது எனது அனுபவ உண்மையாகும்.

                    குரு சுக்கிர சேர்க்கை காதலில் தோல்வி,மன அமைதியற்ற குடும்பம்,ஒற்றுமையில்லாத மனைவி ,அன்பில்லாத குழந்தை இவைகளை கொடுப்பதன் மூலம் மனிதன் துயரத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறான்.

                  ஓருவருக்கு காதல் தோல்வி,வழக்கு மன்றத்திற்கு செல்லுதல்,சன்னியாசியாக போவதே நல்லது போன்ற மனமாற்றத்தை தருவது குரு சுக்கிரன் சேர்க்கையாகும்.
மனிதன் நிம்மதியாக வாழவேண்டுமாயின் இவ்விரு கிரகங்களும் தனித்து இருப்பதுதான் நல்லது.இந்த இரு கிரகங்கள் ஒன்றையொன்று சேராமலும் ,பார்த்துக்கொள்ளாமல் இருப்பதே நன்று ஆகும்.

தோஷ நிவாரணம் பெற :-

                  ஆண் ஜாதகத்தில் குரு-சுக்கிரன் சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ இருக்குமானால் அதே மாதிரியான அமைப்பை பெற்ற பெண் ஜாதகத்தினை வாழ்வில் இணைக்கும்போது எவ்வித  கஷ்டங்களும் இல்லாமல் மனமொத்து வாழ்வார்கள்.

                  ஒரு மனித வாழ்வில் தாரதோஷத்தை தருவதில் குரு-சுக்கிர சேர்க்கைக்கு மகத்தான பங்கு உண்டு.
எவ்வித அமைப்பில் இவற்றின் சேர்க்கை இருந்தால் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

தாரதோஷத்தை தரக்கூடிய கிரகநிலைகள்:-

1) குரு-சுக்கிரன் ஒன்றை ஓன்று பார்த்துக்கொள்ளும்போது

2) குரு-சுக்கிரன் லக்கன பாவத்தை தவிர ஏனைய பாவங்களில் சேர்ந்து இருக்கும்போது

3) சில நேரங்களில் சுக்கிரன் மட்டும் உச்சமாகவோ அல்லது நீசமாக இருக்கும்போது

4)  சுக்கிரனோடு பாவிகளான  சனி,ராகு,கேது சேர்க்கை பெறும்போது

5) கேந்திர நிலைகளில் சுக்கிரன் பலமடைந்து நிற்கும்போது

6) சுக்கிரன் களத்திர வீடான ஏழாம் இடத்தில் நிற்கும்போது

7)/ஏழுக்குடையவனோடு களத்திரகாரகன் சுக்கிரன் சேரும்போது

             மேற்கண்ட அமைப்பானது ஓருவரது சாதகத்தில் இருப்பின் தாரதோஷத்தை சாதகருக்கு தருவதற்கான வாய்ப்புகள் உண்டு.இதில் சில விதிவிலக்குகள் உண்டு.சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை அல்லது ஏழாமிட ,தாரதோஷ தொடர்புடைய பதினொறாமிட அதிபதி ஆகிய கிரகங்களின்
தன்மையை பொறுத்து பலனில் மாறுபடலாம்.

             பொதுவாக ஒருவருக்கு தாரதோஷத்தை தர ஏழாமிட அதிபதி பலமிழந்து பதினொறாமிட அதிபதி பலமடைந்தால் தாரதோஷத்திற்கு வாய்ப்புகள் உண்டு.

                குடும்பாதிபதி,லாபாதிபதி ஆகிய இருவர் களத்திர அதிபதியுடன் சேர்ந்து நிற்கும்போது தாரதோஷத்தை தருகிறது.

               இரண்டு , ஏழுக்குடையவனோடு அரவுகளான ராகு,கேது மற்றும்  சனி பேன்ற கிரகங்களின் சேர்க்கையினாலும் தாரதோஷம் தர வாய்ப்புகள் உண்டு.

நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து அனுப்பிவைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த  நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பெறலாம்.தங்களது " பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு message செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

தொடர்புக்கு

  வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

   செல்
97 151 89 647
   740  257 08 99

                              

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd.
ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi @gmail.com

My website
astroravichandransevvai. blogspot. Com
AstroRavichandran. blogspot. com
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday 9 June 2018

நட்சத்திர சார பலன்

                நட்சத்திர சார பலன்

                            


செவ்வாய்பட்டி ஸ்ரீ  பத்ரகாளி அம்மன் துணை!


           ஒருவரது சாதகத்தில் ஒரு வீட்டு அதிபதி பலமடைந்து இருப்பினும் அதன் நட்சத்திர சாரத்தினை பொறுத்தும் அதன் பலன் அமைகிறது.


         ஒரு வீட்டு அதிபதியின் சார நாதன் அந்த வீட்டு அதிபதியினை வழிநடத்துகிறது.சாரநாதன் என்பது ஒரு கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறதோ அதன் அதிபதி ஆவார்.


           நட்சத்திர அதிபதி ஆனவர் அந்த வீட்டு அதிபதிக்கு நட்பாக இருப்பின் அந்த திசையானது நல்ல பலன்களை சாதகருக்கு வாரி வழங்குகிறது.


            ஒரு வீட்டு அதிபதியின் திசை நற்பலனை தர அந்ந கிரகம் பெற்ற சாரநாதன் பகை,நீசம்,அஸ்தங்கம் மற்றும் மறைவிடம் சென்று மறைதல் போன்ற அம்சங்களை பெறாமல் இருப்பதே நல்லது ஆகும்.
  ஒரு கிரகம் அதற்குரிய காரக பலன்களை தர விடாமல் அல்லது தாமதப்படுத்தும் செயலை இந்த சாரநாதன் செய்வதுண்டு.


  உதாரணமாக புத்திரகாரகன் குரு பகவான் ராகு சாரத்தில் நிற்க புத்திரசந்தானம் கால தாமதம் ஆகிறது.
   இதுபோல ஒவ்வொரு கிரகத்திற்கும் சொல்லலாம்.இவை பொதுபலனேயொழிய முடிவான பலன் அல்ல.சில நேரங்களில் காரகர் இதுபோன்ற வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் காரகத்திற்குரிய ஸ்தான அதிபதி பாதிக்காத சூழலில் (புத்திர ஸ்தானாதிபதி) புத்திரபாக்கியத்தினை தந்துவிடுவதும் உண்டு என்பதனையும் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்.
  ஏனெனில் நான் பதிவிடும் ஒரு கோணத்தினை மட்டும் எடுத்துக்கொண்டு எதிர்வாதம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதற்காக விரிவாகவும்,அதேநேரத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும்படியாகவும் எனது பதினைந்து ஆண்டு சோதிட அனுபவத்தினைகொண்டு மற்றவர் பயன் தரும் வகையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.


             எனவே ஒரு கிரகம் நற்பலன்களை தர இயற்கை பாவ கிரகங்கள் சாரம் பெறாமல் இயற்கை சுப கிரகங்களின் சாரம் பெறுதல் நலம் பயக்கும்.


            வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்போது ஒரு கிரகம் இயற்கை பாவ கிரக சாரமே பெற்றிருந்தாலும் அச்சாரநாதன் பெற்ற ஸ்தான அடிப்படையில் அவை கேந்திர, கோணதிபதியாக இருப்பின் கெடுபலன்களை தந்துவிடும் என்ற கருத்தினை திருத்தம் செய்ய வேண்டியதாகவும் உள்ளது.


           ஆதலால் தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து பார்க்கும் சோதிடரின் திறமையை பொறுத்தே உங்களுக்கு கிடைக்கும் சாதக பலன் அமைகிறது. இதுபோன்ற பல வகையில் ஆய்வு செய்து குல தெய்வ ஆசியோடு சொல்லப்படும் பலன்தான் பலனளிக்கிறது.


             ஆரம்ப நிலை சோதிட ஆர்வலர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய சாரநாதனை பதிவிடுகிறேன்.


அசுவதி,மகம்,மூலம்-கேது


பரணி,பூரம்,பூராடம்-சுக்கிரன்


கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-சூரியன்


ரோகினி,அஸ்தம்,திருவோணம்-சந்திரன்


மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்-செவ்வாய்


திருவாதிரை,சுவாதி,சதயம்-ராகு


புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி-குரு


பூசம்,அனுஷம்,உத்ரட்டாதி-சனி


ஆயில்யம்,கேட்டை,ரேவதி-புதன்


         ஒரு நட்சத்திரத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம் ஒரு ராசிக்கு ஒன்பது பாதம் ஆக அமைகிறது. எனவே மொத்த இருபத்தேழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம
27 × 4= 108 பாதம் ஆக அமைகிறது.
  ராசி அடிப்படையில் பாரத்தால்
12 ×9=108


நன்றி


வாட்ஸ் அப்
     97 151 89 647


      செல்
   740 257 08 99
     97 151 89 647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
                             

அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
       M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


  Email
  masterastroravi@gmail.com


Google search. My website
  AstroRavichandran. blogspot. com

    AstroRavichandransevvai.blogspot. com
.....................