Thursday 31 August 2017

ரஜ்ஜூ பொருத்தம்- ஓர் ஆய்வு

ரஜ்ஜூப் பொருத்தம் -ஓர் ஆய்வு

                     

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 164 )

செவ்வாய்ப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்ம Iன் துணை !

          இரு மனம் இணையும் திருமண பந்தத்திற்கு  மனபொருத்தமும்,சாதக பொருத்தமும் அவசியம் ஆகும்.சாதக பொருத்தம் பார்த்து  இல்லற வாழ்வில் தம்பதிகளை ஜோடி சேர்ப்பதில் சோதிடர்களின் பங்கு அலாதியானது.

           "திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் " என்பார்கள்.இப்பயிர் கால வெள்ளத்தில் அடித்து செல்லாமாலும்,அழிந்து போகமாலும் "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி நன் மக்களை பெற்றெடுத்து ஊர் போற்றும் தம்பதிகளாக வாழ வழி வகுப்பதில் கிரகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

           நமது கர்ம வினைப்படிதான் நமது வாழ்வானது இட்டு செல்லும் எனினும் அவர்களை ஒரளவு கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்ட உதவுதில் சோதிடர்கள் பங்கீடு முக்கியமானது.

            ஒரு சில தம்பதிகள் சரியாக கணக்கிடாத அல்லது கணக்கிடுவதில் கவனக்குறைவு உண்டான சோதிடர்களால் பொருத்தம் பார்க்கப்பட்டு திருப்தியான பொருத்தம் இல்லாமல் வாழ்வில் இன்னல்களையும்,பிரிந்து வாழும் சூழல் உருவாகிவிடுவதும் சோதிடர்களின் தவறு அன்று தங்களது கர்ம பலனே அன்றி வேறு அல்ல.

        எந்த ஓன்றும் 'காரணம் இன்றி காரியம் இல்லை " எல்லாம் அவரவர் வினைப்பயனே.இதன் அடிப்படையில் சோதிடம் அறிந்த புறநானூறு கவிஞர்  கணியன் பூங்குன்றனார்
தமது பாடல் வரிகளில்
"தீதும்நன்றும் பிறர் தரவாரா " என்கிறார்.

                             


            திருமணவானில் கொடி கட்டி பறக்க பெற்றோர்கள் கவனத்திற்கு. கொண்டுவரும் பொருட்டு இப்பதிவினை இட்டு  செல்கிறேன்.

               திருமண பொருத்தம் பார்க்க சோதிடர்களை நாடும்  பெற்றோர் நட்சத்திர அடிப்படையிலான "விவாக தசவிதப்பொருத்தம் " மற்றும் கட்ட அடிப்படையிலான கிரக பொருத்தங்கள் ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும்படி சோதிடர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எனது தனிப்பட்ட அனுபவ அறிவுரை "நட்சத்திர பொருத்தங்களை விட சாதக கட்ட அடிப்படையிலான கிரகங்களின் பொருத்தத்திற்கு " அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

              விவாக தசவித பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜூ பொருத்தம் எனப்படும் கயிறு பொருத்தம் அல்லது மாங்கல்ய பலப்பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.காரணம் என்னவெனில் தம்பதிகளின் ஆயுள் பலம் ஆகும்.

             நமது முன்னோர்கள் விவாக தசவிதபொருத்தங்களில் ஏனைய பொருத்தங்கள் இருந்தாலும் ரஜ்ஜூபொருத்தம் இல்லாவிட்டால் விவாகம் செய்யக்கூடாது என கூறியுள்ளார்கள்.அதாவது தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தால் திருமணம் செய்யக்கூடாது என விளக்கியுள்ளார்கள்.

       இதற்காக
ஏனைய பொருத்தங்களும்,கட்ட பொருத்தங்களும் நன்றாக  இருந்து ரஜ்ஜூ பொருத்தம் மட்டுமே இல்லாத தம்பதிகளுக்கு பொருத்தம் இல்லை என விவாகம் செய்யாமல் தடுத்துவிடலாமா ? என என்னிடம் கேள்வி கேட்டால் "கூடாது " என்பதே எனது பதிலாக அமையும்.
ரஜ்ஜூ பொருத்தம் பார்க்கும்போது சில விதிவிலக்குகள் உண்டு.என்னவென விரிவாகவும்,விளக்கமாகவும்  எனது சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்குகிறேன்.

          தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக இருக்கும் பட்சத்தில் ரஜ்ஜூ பொருத்தத்தில் ஆரோக ரஜ்ஜூ (ஏறுமுகம்) , அவரோக ரஜ்ஜூ (இறங்கு முகம் ) என இரு வகையான உட்பிரிவுகள் உள்ளது.ஒரே ரஜ்ஜூவாக உள்ள  தம்பதிகளுக்கு ஒரு ரஜ்ஜூ ஆரோக ரஜ்ஜூ ' வாக  இருந்து மற்றோன்று அவரோக ரஜ்ஜூ ' வானால் பொருத்தம் உண்டு என எடுத்துக்கொள்ளலாம் என சோதிட ஆர்வலர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

              ஆனால் தம்பதிகள் இருவரது ரஜ்ஜூ'வும் ஆரோக ரஜ்ஜூ ' வாக இருந்தாலோ அல்லது அவரோக ரஜ்ஜூ 'வாக இருந்தாலோ விவாகம் செய்யக்கூடாது.

                  தம்பதிகள் இருவருக்கும் ஆரோக
ரஜ்ஜூ 'வானால் புருஷ நாசம்.அவரோக ரஜ்ஜூவாக இருந்தால் ஸ்திரி நாசம் ஆகும்.

ரஜ்ஜூ பொருத்தம் வகைகள்

     1)  பாத ரஜ்ஜூ

     2)  தொடை ( ஊரு ) ரஜ்ஜூ
     3)  தொப்புள்
         (நாபி அல்லது உதர ) ரஜ்ஜூ

     4 ) கண்ட (கழுத்து ) ரஜ்ஜூ

     5) சிரசு ( தலை ) ரஜ்ஜூ

          மேற்கண்ட ஐந்துவிதமான ரஜ்ஜூவில் சிரசு ரஜ்ஜூ ,கழுத்து ரஜ்ஜூ ஆகிய இரண்டு ரஜ்ஜூ வும் ஒரே ரஜ்ஜூவாக தம்பதிகள் இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை எனலாம்.
ஏனேனில் சிரசு ரஜ்ஜூ புருஷ நாசம் ஆகலாம் எனவும்,கழுத்து ரஜ்ஜூ ஸ்திரி (மணமகள்) நாசம் ஆகலாம் எனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

               ஏனைய ரஜ்ஜூ க்கள் ஒரே ரஜ்ஜூ வாக வந்தால் திருமணம் செய்வதில் பாதிப்புகள் வந்துவிடுவதில்லை.

                தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக நாபி ரஜ்ஜூ இருந்தால் புத்திர தடையை தர வாய்ப்பு உண்டு.
ஊரு ரஜ்ஜூ வாக இருப்பின் தனம் நாசம் ஆக வாய்ப்பு உணடு.இதேபோல இருவருக்கும் பாத ரஜ்ஜூவாக இருந்தால் தேசாந்திரம் போவான் .இவ்வளவுதான் ஒழிய உயிருக்கு பயம் இல்லை விவாகம் செய்யலாம்.

                  ஒருசில மூலநூல்களில்  ராசி அதிபதி பொருத்தம்  இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            எனது அனுபவத்தில் கண்ட ,சிரசு ரஜ்ஜூகள் மட்டும் ஒரே ரஜ்ஜூவாக வரும்பட்சத்தில் விவாகத்தை தவிர்த்து ஏனைய ரஜ்ஜூ கள் ஒரே ரஜ்ஜூவாக வரும் பட்சத்தில் தம்பதிகள் இருிவரது "ஆயுள் ஸ்தானத்தை நன்கு ஆராய்ச்சி செய்து தீர்க்க ஆயுளாக இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் .சோதிட ஆசான்கள் தங்களது கருத்தினை தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும் பதிவாக மாறும் என்பதால் தங்களது கருத்தினை பகிரவும்.

   நன்றி! நன்றி!! நன்றி!!!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

   தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

   செல்
   740 257 08 99
      97 151 89 647

   அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
      M.Sc, MA ,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிடம் ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

Email
  masterastroravi@gmail. com

My website
  AstroRavichandransevvai.blogspot.com

--------------------------------------

சாதகம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள்

 சாதகம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள் :-


           சாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தால் அதன் திசை காலங்களில் யோகங்களை வாரி வழங்கும் என மேம்போக்காக பார்த்து பலன் சொல்லிவிட்டு அவ்வாறு அத்திசை காலங்களில் நன்மையை தருவதற்கு பதிலாக பலவித இன்னல்களை சாதகர்கள் அடையும்போது சாதகம் பார்க்கப்படும் நபரால் சோதிடத்தின் மீதும் ,சோதிடரின் மீதும் ஒருவிதமான அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது.

             உதாரணமாக துலாம் மற்றும் மேஷம் ஆகிய இரண்டையும் லக்கனம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு புதன் பகவானும் மற்றும் குருபகவானும் உச்சம் பெற்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவை சாதகருக்கு அதன் காரகபலனை சிறப்பாக தந்தாலும் அதன் திசை காலங்களில் அத்தனையும் இழந்தோ அல்லது அதனால் பயனற்றோ துன்ப படவேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறது.

                    


         இப்பொழுது மேலே குறிப்பிட்ட மேஷம் மற்றும் துலாம் லக்கன மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு குருவும்,புதனும் பலம்பெற்றிருக்கும்போது மேற்கண்ட காரக பலன்களை அனைத்தும் தந்தாலும் அதன் திசை காலங்களில் அந்த காரகத்தால் பெற்ற அனைத்து பலனையும் இழந்து வேதனைப்பட காரணம் எதுவாக இருக்கும் என ஆராய்ந்து நோக்கினால் பின்வரும் காரணங்களே காரணமாகிறது.

          அவை அவ்விரு ராசிகளுக்கும் மறைவுஸ்தானமான மூன்று மற்றும் ஆறாமிட ஸ்தானத்தை பெற்றிருப்பதாலே ஆகும்.அதிலும் குறிப்பாக ஆறாமிடத்திலே உச்சமோ அல்லது ஆட்சியோ பெற்றிருக்கும்போது ஆறாமிடஸ்தானம் ருணம் , ரோகம் மற்றும் சத்ருஸ்தானம் என்பதால் மிகுந்த இன்னல்களை குருவும்,புதனும் சுபராக இருந்தாலும் கொடுக்கிறது..

                             


                   1)  சுபர்களின் அதிபதிகள் கேந்திரம்  ஏற கேந்திராதிபத்தியதோஷத்தை அந்த கிரகங்கள் பெற்றுவிடுவதால் அத்திசை காலங்களில் அக்கிரகம் உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அவை தரும் யோகங்களில் பங்கம் ஏற்பட்டுவிடுகிறது.எனவே சுபர்கள் கேந்திர அதிபதிகளாக வரும்போது அவை திரிகோணங்களிலோ அல்லது மறைவு இடங்களிலோ இடம்பெறுதல் நல்லது.

             3) சிலநேரங்களில் கிரகங்களின் ஸ்தானங்கள் மறைவுஸ்தானமாக இல்லாமாலும் ,பாவ கிரகமாக இருந்தால் கேந்திரமேறியும் மற்றும் சுப கிரகமாக இருந்தால் திரிகோணமோ அல்லது மறைவுஸ்தானமேறியும் அதாவது மேலே குறிப்பிட்ட எல்லா விதிகளும் ஒத்துவந்தாலும் ஒரு கிரக திசையானது நன்மை தருவதில் தாமதமோ அல்லது பலனில் குறைவு  ஏற்பட்டு விடுகிறது.

             இதுபோன்ற பல சோதிட விதிகளை கவனித்து அதன் பின்னரே ஒருவருக்கு நடக்கும் திசையானது நன்மையை செய்யுமா ? அல்லது தீமையை செய்யுமா ? என சோதிடர்களாகிய நாம் பலனளிக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சோதிட விதிகளை தெளிவாக படித்திருந்தாலும் எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளும் ,கிரகங்களின் ஆசிர்வாதமும் மற்றும் குருவருளும்     சோதிடர்களுக்கு இருந்தால்தான மறைவாக உள்ள பல சூட்சும விதிகள் கண்ணிற்கு புலப்படும் என கூறி மேற்கூறிய மூவித ஆசிர்வாதமும் கிடைக்க நான் தினம் துதிக்கும் ஸ்ரீபத்ரகாளியம்பாளை வணங்குகிறேன்.
(தங்களுடைய சாதகங்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசைகள் நற்பலனை அளிக்குமா ? திருமண யோகமுண்டா ? கற்ற கல்வியாலும் ,பெற்ற வித்தையாலும் பலனுன்டா ?புத்திரபாக்கியம் உண்டா? இதுபோன்ற பயனுள்ள பல கேள்விகளுக்கு #போன் வழியாக பலன் அளிக்கப்படும்.கட்டாயம் கட்டணம் உண்டு.மேலும் முழுவிபரம் பெற எனது வாட்ஸ்அப் எண் அல்லது அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.)

வாட்ஸ்அப்
97 151 89 647

                          


                             

குல தெய்வ வழிபாட்டை தெரிந்து கொள்வது எப்படி ?

குலதெய்வ வழிபாட்டை தெரிந்து கொள்வது எப்படி?


                               
கிரகங்கள் படுத்தும் பாடு -( 104 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*******************************

              ஒருவருக்கு குலதெய்வ வழிபாடு என்பது மிக அவசியம்.நாம் எவ்வளவு தெய்வத்தை வழிபாட்டாலும் முதலில் குலதெய்வ வழிபாடு என்பது அவசியம் ஆகும்.

              கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட நாம் முதலில் குலதெய்வ வழிபாடு செய்தாகவேண்டும்.நாம் பிறந்த மண்ணைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தாலும் நமது வீடுகளில் எந்த இன்பமான மற்றும் துன்பமான சூழல்களில் சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம் செய்துவரவேண்டும்.

                 ஒருவரது சாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் பாதிகப்பட்டவர்கள் அவசியம் குலதெய்வத்தை கண்டறிந்து வழிபாட அதன் வழியாக உருவான பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஒருவருக்கு குலதெய்வம் என்பது வேறு ,இஷ்ட தெய்வம் என்பது வேறு.

             குலதெய்வங்களாக சிலருக்கு சப்பானி கறுப்பு,நொண்டி முனி,பேச்சியம்மாள்,சன்னாசியப்பச்சி,காவல்காரன்,எல்லைமுனி ,மதுரைவீரன் .....போன்ற பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு.

           நமது முன்னோர்கள் இதனால்தான் பிறந்தகுழந்தைக்கு முதல் முடி இறக்குவதை தனது குலதெய்வத்திற்கு உறவினர்கள் சூழ சென்று முடி இறக்குவதை முதல் விழாவாக குழந்தைக்கு வைத்தார்கள்.அவ்வாறு  இறக்கும்போது தாய்மாமன் மடியில் வைத்து முடி இறக்குவார்கள்.

          நமது குலதெய்வத்தை தெரிந்து வழிபடுவதுபோல நமது இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்யவேண்டும்.இதனை நமது சாதக கட்டங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

           எனவே ஜாதகப்படி நமது இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொள்ள ஐந்தாமிடம்,அதிபதி மற்றும் ஐந்தில்
உள்ள கிரகம் முதலியவற்றின்மூலம் அறிந்து கொள்ளலாம்.

      ஐந்தாமதிபதி சூரியன் ஆகில் சிவனையும்,

சந்திரனாகில் சக்தியையும்,

செவ்வாயாகில் முருகனையும்,

புதனாகில் விஷ்ணு எனப்படும் பெருமாளையும்,

குருவாகில் தெட்சிணாமூர்த்தியையும்
சனியாகில் விநாயகரையும்,

ராகுவாகில் அனுமானையும்,

கேதுவாகில் விநாயகரையும்,

சுக்கிரனாகில் சக்தியையும்
வழிபடவேண்டும்.

                            


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்                   M.SC,MA,BEd
முதுநிலை ஆசிரியர்
Om sakthi jothida nillsyam

Cell; 9715189647
செல்: 740 257 08 99

What's up
  97 151 89 647

(போன் வழியாக சாதகபலன் பெற தொடர்பு கொள்ளவும்.பார்வை கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை தெரிவிக்கவும்)

Email
masterastroravi@gmail. Com

My website

AstroRavichandransevvai.blogspot.com

Sunday 27 August 2017

சாதக அடிப்படையில் ஒருவருக்கு நோய் வரக்காரணம் என்ன ?

சாதக அடிப்படையில் ஒருவருக்கு
நோய் வரக்காரணம் என்ன...?
*********************************

#கிரகங்கள் படுத்தும்பாடு -(103)
செவ்வாய்பட்டி
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

           "  நோயற்ற வாழ்வே 
             குறைவற்ற செல்வம்" 
                                             என்பார்கள்.

               "எப்பொழுது அறிவியல் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ அப்பொழுதே மனிதனிடம் சுய உழைப்பு குறைந்து எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது.
அதேபோல் விவசாயத்திலும் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள்,கலப்பின விதைகள்(மரபணுநீக்கம் செய்யப்பட்ட விதைகள்) மற்றும் மனிதர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய உணவுப்பொருட்களை உண்ண ஆரம்பித்ததாலும் மனிதனுக்கு நோய் வர ஆரம்பித்து விட்டது.

                          ஜாதக அடிப்படையில் ஒருவருக்கு நோய் வரக்காரணங்களை ஆராய கீழ்கண்ட ஸ்தானங்களை ஆய்வு செய்யவேண்டும்.

                           1) ருண,ரோக ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம்,அதன் அதிபதி

                            2)  லக்கனம் மற்றும் லக்கனாதிபதி

                            3) சுகம் ஸ்தானம் என அழைக்கப்படும் நான்காமிடம் மற்றும் அதன் அதிபதி

                          4) ராசி  ,ராசி இருக்கும் வீட்டின் அதிபதி,ராசிக்கு 4,6 ம் இடங்கள்

                             

சோதிட கவிதை
*******************
உடல் உயிரோடு அரவுகூடி
உடலோனும் உயிரோனும் கெட்டு
சுபர் உறவு பார்வையற்று
சுகத்தோனும் வலுவிழந்தால்
ருணகாரன் ஆட்சி செய்ய
என்னடா அவன் பாவம் செய்தான்
எந்தாலும் அவனுக்கு பிணிதானே"


விளக்கங்கள்
                                   1) உடல் மற்றும் உயிர் என சொல்லக்கூடிய லக்கனம்,ராசியில் ராகு,கேது அமர்ந்து பாவிகள் பார்வை பட்டாலும் அல்லது இவ்விருஸ்தானங்களோடு சனி,செவ்வாய்,ராகு மற்றும் கேது போன்ற பாவிகள் சம்பந்தப்பட்டு நின்றாலும்,

                                    2) லக்கனாதிபதி,ராசிக்கு அதிபதி நீசம்,பகை பெற்றாலோ அல்லது 6,8,12 போன்ற மறைவிடத்தில் இருந்தாலோ(சுபர் பார்வையற்று)

                                   3) நான்காமிடத்தில் பாவிகள் இருந்து சுபர் பார்வையற்றும் அதன் அதிபதி நீசம்,பகை மற்றும் 6,8,12 இடங்களில் இருந்தாலும்,

                                     4 ) ஆறாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று , அதேநேரத்தில் லக்கனாதிபதி வலுவிழந்து நின்றாலும்,

                                     5) ராசிக்கும்,ராசியிலிருந்து 4 மற்றும் 6 ம் இடத்தையும் கவனிக்கவேண்டும்.

                                    6) மனதுக்காரகன் சந்திரனும் மற்றும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டு நின்றாலும் எந்நாளும் திடமான மனதின்றி மனகுழப்பத்தால் மனவியாதிகள் வரவாய்ப்புண்டு.இதுபோன்ற அமைப்புகள் உடையோரின் லக்கனமும் அதன் அதிபதியும் உடலும் பலவீனப்பட்டு நின்றால் உடலும் ,உள்ளமும் பாதிக்கப்பட்டு நிற்பான்.

                மேற்கண்ட அமைப்புகள்( அடிப்படை விதிகள்) அனைத்தும் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நோயாளியாக இருப்பான்.
தெய்வ வழிபாட்டாலும்,யோகா,தியானம் போன்ற செயல்களாலும் குறைக்கலாம்.

                               

மேலும் சில விதிகள்;-
++++++++++++++

                              1)  1,6 க்குடையவர்கள் பரிவர்தனை பெற்று 4-ம் அதிபதியும் கெட்டு இருந்தால் லக்கனாதிபதி தசை ஆறாம் அதிபதி புத்தியிலோ அல்லது ஆறாம் அதிபதி தசை லக்கனாதிபதி புத்தியில் நோயாளியாவான்.

                             2) துய்ய கேரளம் எனும் சோதிடநூல் பாடல்

"என்னிய ஒன்றிற் கோளாறாமிடத்துக் கோளுடன் கூடி

உன்னிய ராகு கேதுவோடு ஒரு தலத்தே நிற்க

 தன்னுடல் சுகமில்லாமல் சஞ்சல மனத்தனாகி 

மின்னலாய் வியாதிஸ்தானம் என விளம்பலாமே"



விளக்கம்
***********

                         லக்கனாதிபதி ஆறாம் அதிபதியுடன் கூடி இவர்களுடன் ராகு,கேது சம்பந்தபட்டால் உடல் சுகமில்லாமல் சஞ்சல மனதுடையவனாய் இருப்பான்.
*************௳***********************

(போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டாயம் பார்வைகட்டணம் உண்டு)
பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்தால்போதுமானது.)

                                                                                     

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc, MA ,BEd,
முதுநிலை வேதியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்


  செல்
9715189647
740 257 08 99


வாட்ஸ்அப்
97 151 89 647


Email
masterastroravi@gmail. Com


Website
AstroRavichandransevvai.blogspot.com

.................,

சாதக கட்டங்களில் "மறைவு ஸ்தானங்கள் " தரும் யோக பலன்கள்.

சாதக கட்டங்களில் 

      "  மறைவு ஸ்தானங்கள "       தரும் யோக         பலன்கள்.


                      


கிரகங்கள்  படுத்தும் பாடு-( 163 )

செவ்வாய்பட்டி
- ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் துணை!

                    பணிரெண்டு ராசி கட்டங்களில் மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை மறைவிடஸ்தானங்களாக கருதப்படுகிறது.

                     இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் இடம்பெறும் வீடும்,மறைவிட ஸ்தான அதிபதிகள் இணையும் அல்லது பார்வைபெறும் கிரகங்களும் பாதிக்கப்படும் இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் இடம்பெறும், பார்வை  மற்றும் சேர்க்கை பெறும் இடம் அல்லது கிரகங்களின் பலனை குறைக்கும் என்பது சோதிடம் தெரிந்த அனைவருக்கும் அறிந்த விஷயம் ஆகும்.

              இதேபோல சுப ஸ்தான அதிபதிகள்  (கேந்திர,கோண அதிபதிகள் ) இந்த மறைவிட ஸ்தானம் ஏற யோக பலன்கள் மட்டுப்படும் என்பது சோதிட ஞானம் பெற்ற அனைவருக்கும் தெரிந்த அடிப்படையான தகவல்கள் ஆகும்.

                  மறைவிட ஸ்தானங்களில் மூன்றாமிடமும்,பணிரெண்டாமிடமும் அதிகமாக கெடுதலை தரக்கூடிய மறைவிட ஸ்தானமாக கருதக்கூடாது என்பதையும் தங்களது நினைவிற்கு கொண்டு வருகிறேன்.

                            


           இதில் மூன்றாமிட ஸ்தானமானது ஒருவருக்கு கீர்த்தி,புகழ் ,கற்பனை உணர்வு மற்றும் வீரிய ஸ்தானமாக கருதப்படுவதால் மூன்றாமிட அதிபதி , மூன்றாமிடங்களில் இடம்பெறும் கிரகங்கள் மற்றும் மூன்றாமாதிபதி சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்ளையோ அல்லது ஸ்தானங்களையோ பாதிப்பதில்லை.மாறாக யோகபலன்களை தர தவறுவதில்லை.


             இதேபோல மறறொரு ஸ்தானமான பணிரெண்டாமிடமும் அதிக இன்னல்களை தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படவில்லை.பணிரெண்டாமிடம் விரய ஸ்தானமாக இருந்தாலும் அதேநேரத்தில் அயன,சயன ,படுக்கை,மோட்ஷ  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற யோகங்களையும் தரும் ஸ்தானம் என்பதால் இதன் திசை காலங்களில் இவை தொடர்பு பெறும் இடங்களையும் பெருமபாலும் அதிகமாக  பாதிப்பதில்லை.

                 ஆதலால் மறைவிட ஸ்தானங்களில் ஆறு மற்றும் எட்டாமிடத்தையும் தான் தொடர்பு பெறும் வீடுகள்,கிரகங்கள் ஆகிய இரண்டையும் பாதிக்க செய்கிறது.அதேபோல தமது வீடுகளில் இடம்பெறும் கிரகங்களின் ஸ்தான வலுவினை பாதித்து அவை தரும் பலன்களை தாமதப்படுத்துகிறது.

               உதாரணமாக ஏழாமிடம் களஸ்திர ஸ்தானம் என்பதால் ஏழாமிட அதிபதிகளுடன் இவ்விரு மறைவிட ஸ்தான அதிபதிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அல்லது ஏழாமிட அதிபதியானது இவ்விரு ஸ்தானம் ஏறி நின்றாலோ (6,8) திருமண தடையை உருவாக்கிவிடுகிறது அல்லது தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் தன்மையை குறைத்துவிடுகிறது.

                           


ஆறாமிடம்


         இவை அதிக இன்னல்களை தரும் மறைவிடஸ்தானமாக கருதப்படுவதன் காரணம் இவை பிணி,பீடை,ருண மற்றுன,ரோகங்களை தரக்கூடிய ஸ்தானம் ஆகும்.

             ஆதலால் இதன் திசை காலங்களில் பிணி மற்றும் எதிரிகளால் வரும் பேராபத்திலிருந்தி விலகிகொள்ள கடன்காரனாக மாறிக்கொள்வது நல்லது.

               இந்த ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் இடமபெறலாம்.ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றால் தரும் பலனை" சாதக அலங்காரம் "எனும் சோதிடநூலில் இடம்பெறும் பாடல் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

" பொருந்தும் சிங்கத்தைக் கண்டு புடைபடும் இடபம்போல
இருந்த சத்ருக்களெல்லாம் இரந்து கைகூப்பிநிற்பர்
திருந்திய குபேரன்போல செல்வம் உண்டாகப்பாரில்
வருந்திடாது இருப்பான் ஆறின் மருவுதீக்கோளினாலே "

விளக்கம்

           ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றிருந்தால் பெரிய யானை தன்னிலும் சிறிய உருவமுடைய சிங்கத்தினை கண்டு வெகுண்டு ஓடுவதுபோல ,பகைவர்கள் யாவரும் சொல்வன கேட்டு வணங்கி நிற்பார்கள்.குபேரன்போல செல்வசெழிப்போடு வாழ்வான் என பாடல் விளக்குகிறது.

           ஆனால்  ஆறாமிட அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற பலங்களை பெற்று இருந்தால் கடன்,பிணி மற்றும் எதிர்ப்புகளை சாதகருக்கு ஜெனன காலத்திலிருந்து தரும் எனினும் தனது திசை காலங்களில் சற்று கூடுதலாக தரும் என்பது பொது விதி எனினும் முற்றிலும் இந்த ஆறாமிடம் மற்றும் அந்த ஸ்தான அதிபதிகள் கெடுதலை மட்டுமே தரும்  என  பலன் கூறிவிட முடியாது.

          இந்த ஆறாம் வீடு சுப கிரகங்களான குரு,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு மறைவிடங்கள் ஆகும்.இக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும் பட்சத்தில் மறைவிடங்களில் நிற்கும்போது கேந்திராதிபத்திய தோஷம் நீங்கி சுப பலன்களை தருகிறது.

                      


எட்டாமிடம்

               இது ஒரு சாதகருக்கு வம்பு,சண்டை,வழக்கு ,சிறைசெல்லல் மற்றும் மரணம் போன்றவற்றை தரும் ஸ்தானம் என்ற வகையில் இந்த ஸ்தான அதிபதி பலம் பெற்று தனது திசை நடக்கும்போது மரணத்திற்கு நிகரான கெடுபலன்களை கொடுக்கும்.

           ஆயுள்ஸ்தானம் என்ற வகையில் பலம்பெற்று நிற்கும்போசு ஆயுள் பலப்படும்.மேலும் மறைபொருள் உண்மைகள் ஒருவருக்கு புலப்பட எட்டாமிடம் பலமடையவேண்டும்.
யோகபலனை எப்பொழுது தரும்
மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களில் பலப்படுவது யோகத்தை தரும்.

விபரீத ராஜயோகம்

             மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெறும்போது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களிலே பரிமாறிக்கொள்ளும்போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.

                உதாரணமாக ஆறுக்குடையவன் பணிரெண்டிலும்.பணிரெண்டுக்குடையவன் வேறு ஏதேனும் (3,6,8) மறைவிடங்களிலோ இடம்பெறுதல்.
இதன்பலனாக மாளிகை போன்ற வீடு அமையும்.இதற்கு சுக்கிரன் ,நான்காமிட அதிபதியின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.

                  பொதுவாக மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் ஐந்து மற்றும் ஒன்பதாம் இட அதிபதிகள் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் நலம் பயக்கும்.

  நன்றி.ஆராய்ச்சி தொடரும்....

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  வாட்ஸ்அப் எண்
    97 151 89 647

   செல்
    97 151 89 647
       740 257 08 99

  அன்புடன்

                              


சோதிடர் ரவிச்சந்திரன்
M Sc,MA, BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My website
AstroRavichandransevvai.blogspot.com

My email
masterastroravi@gmail. Com

.....,....................................
--------------------------------------------------------------------

Tuesday 22 August 2017

கிரகங்களின் தன்மை பற்றிய ஓர் ஆய்வு

                                  #கிரகங்கள் படுத்தும் பாடு -( 102 )

                                                          

                              ஒரு மனிதனின் சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் கிரகங்கள் வலம்வருகிறது. அதாவது வானவீதியில் 360 பாகையை நீள்வட்ட பாதையாக கொண்டு ஒரு ராசிக்கு 30 பாகை வீதமாக கொண்டு அவை தாம் பெற்ற ஒளியின் அளவுக்கு ஏற்ப சில ராசிகளில் உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி,நட்பு,நீசம்,பகை ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் இவற்றுள் ஏதாவது ஒன்றினை அக்கிரகங்கள் பெற்று அது தான் பெற்ற சக்திகளுக்கு ஏற்ப இயற்கை சுபராகவும் மற்றும் இயற்கை பாவியாகவும் கொண்டு வழிநடத்துகின்றன.

                             கிரகங்களில் குருபகவான்,சுக்கிரபகவான்,பாவியோடு சேராத புதன் பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் பகவான் (அமாவாசையிலிருந்து பொளர்ணமிக்குள் பிறந்தவர்கள்) ஆகிய கிரகங்களை இயற்கை சுபராக சாதகத்தில் கருதப்படுகிறது.இவர்கள் சுபராக இருந்தாலும் சாதக கட்டத்தில் யோகராக இருக்கும் பட்சத்தில்தான் நன்மையை சாதகருக்கு தருகிறது.

                உதாரணமாக
                        ஒருவரது சாதகத்தில் பாவியோடு சேராத புதன் பகவான் உச்சம்பெறும்போது அவன் வித்தைகாரகன் என்பதால் அவனுக்கு கணிதம் நன்றாக வரும்,எழுத்து அழகாக வரும்,கணிப்பொறியை இயக்குதலுக்கும்,கதை ,கவிதை ,கட்டுரை ,இசை மற்றும் சோதிடம் ஞானம் போன்றவற்றில் வித்தகனாக திகழ்வான் இதுபோன்ற நல்ல காரக பலன்களை தருவதாக  இருந்தாலும் சில ராசிகளுக்கு ஆட்சி,உச்சம் போன்ற நேர்வலு பெறாமல் இருத்தல் நலம் .மேலும் அத்திசையே அவனுக்கு நடப்பில் வராமல் இருத்தல் நலம் என்கிறார்கள்.

                                                              


                                   ஏனெனில் பாவியோடு சேராத புதன் பகவான் சுபராக இருந்தாலும் அவற்றின் கட்டஸ்தானத்தை பொறுத்து அச்சாதகருக்கு அவர் படுபாதகங்களை செய்யக்கூடிய பாவர் ஆகிவிடுகிறார்.பொதுவாக இயற்கை சுபராக இருக்ககூடிய ஒரு கிரகம் உச்சம் போன்ற வலிமை பெற்று சாதக கட்டத்தில் இருக்கும்போது ஸ்தான வலுப்படி அக்கிரகம் பாவராக இருப்பினும் அது தன் காரக பலனை சிறப்பாக தரும்.ஆனால் ஸ்தான வலுப்படி சாதகரை கஷ்டப்படுத்தி பார்க்கும்.

                                  மேஷ ராசிக்கு புதன் பகவான் உச்சம்பெறும்போது அவை இயற்கை சுபராகவே இருந்து அதன் காரகபலனை தந்தாலும் அக்கிரகம் சாதக கட்டப்படி மூன்று மற்றும் ஆறு எனும் மறைவு ஸ்தான ஆதிபத்தியங்களை பெற்று அதிலும் குறிப்பாக ருணம்,ரோகம் மற்றும் எதிர்ப்பு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால் அதன் திசை காலங்களில் சாதகரை கடன்,பிணி மற்றும் எதிரி தொல்லைகளுக்கு ஆட்படுத்தி பார்ப்பார்.
அதிலும் லக்கனம் மற்றும் ராசியும் ஒன்றாக பெற்றவர்களாக இருப்பின் (மேஷ லக்கனம் மற்றும் மேஷராசி) இன்னும் கூடுதலான இன்னல்களை பெறுவர்.

                                   அதே நேரத்தில் லக்கனமும்,ராசியும் வெவ்வேறாக பெற்றவர்களாக இருந்தால் ஒரு சிலருக்கு ராசிப்படி(மேஷம்) மூன்று மற்றும் ஆறுக்குடையவராக  இருந்தாலும் லக்கனப்படி பாதி சுபராக இருப்பர்.எனவே பாதி கஷ்டம் குறைய வாய்ப்புண்டு.

                                       இதேபோல இயற்கை பாவிகளாக கருதப்படும் சனி,செவ்வாய்,சூரியன்,பாவியோடு சேர்ந்த புதன் ,தேய்பிறை சந்திரன்(பொளர்ணமியிலிருந்து அமாவாசையில் பிறந்தவர்கள்) மற்றும் அரவுகளான ராகு,கேது பகவான்கள் ஆகும்.

                                                                  


                                இவர்கள் இயற்கை பாவிகள் இந்த கிரகங்கள் சாதக கட்த்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் இருத்தாலே நலம்.அதிலும் குறிப்பாக சனிபகவான் ஒருவருக்கு லக்கனாதிபதியாகவே இருந்தாலும் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறக்கூடாது என்பதன் காரணம் பாவிகளிலே சனிபகவான் முழுபாவர் என்பதால் ஆகும்.

                               .இதனை அடுத்து செவ்வாய் பகவான் முக்கால் பாவர் ஆகும்.இவை பலப்படும்போது முக்கால்வாசி தீமையை செய்தாலும் கால்வாசி நன்மையை தருவார்.இதனை அடுத்து சூரியன் அரைபாவராகவும் செயல்படுவார்.

                     அரவுகளான ராகு மற்றும் கேதுக்கள் பாவிகளாக இருப்பின் அதனோடு தொடர்பு பெறக்கூடிய கிரகங்களின் பலனை உறிஞ்சி நன்மையை தரும்.

                             இவைகள் இயற்கை பாவிகளாக இருந்தாலும் சாதக கட்டத்தில் ஸ்தான வலுப்படி நன்மையை செய்துவிடுகிறது.உதாரணமாக துலாம் லக்கனத்திற்கு சனி யோகர் என்பதால் பாவியாக இருந்தாலும் யோகர் எனும் முறையில் அதன் திசை காலங்களில் நன்மையை செய்கிறது.

*******************************************
                       தங்கள் சாதகங்களை ஆய்ந்து ஆராய்ந்து சாதகபலன்,திருமண பொருத்தங்கள் மற்றும் ஜெனன ஜாதகம் வாக்கிய அல்லது திருக்கணித முறையில் கணித்து தர எனது அலைபேசியிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ "பிறந்ததேதி,நேரம் பிறந்த இடமும் ,மாவட்டமும் போன்ற தகவல்களை மெஸ்ஸீஸ் செய்து நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் பலன்பெறலாம்.எனது பார்வை கட்டணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தினால்போதும் நன்றி.

தொடர்புக்கு
அலைபேசி
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 89 647



அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆன்லைன் நிலையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

சோதிட அடிப்படையில் "மரபும் சூழ்நிலையும் "-ஓர் ஆய்வு

சோதிட அடிப்படையில் "மரபும் சூழ்நிலையும்-ஒர் பார்வை

                                                     
கிரகங்கள் படுத்தும் பாடு -( 141 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

மரபும் சூழ்நிலையும்


                                ஒருவரை பார்த்த்வுடனே "நீ இன்னாருடைய பேரனா ?  அல்லது இவரோட மகனா ? என கேட்க ,அவன் ஆம் என பதிலளித்துவிட்டு எப்படி கண்டுபிடிச்சீங்க என கேட்கிறபோது அவர் "உங்க தத்தாவுடைய முகத்தை அப்படியே உரிச்சு வைத்து பிறந்திருக்கிறேயே ? அவருடைய மூக்கு அப்படியே இருக்கு-என்பார் "

                                  ஒரு சிலர் நடை ,உடை மற்றும் பாவனை என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே பெற்றிருப்பான்.

                                     இவ்வாறு "பெற்றோரின் பண்புகள் தலை முறை , தலைமுறையாக கடந்து செல்வதையே நாம் பாரம்பரியம் என்கிறோம்.இந்த பராம்பரிய பண்புகளை கடத்தும் பண்புகளை செல்லின் உட்கருவிலிருந்து செயல்படும் ஜீன்கள் செய்கின்றன.

                           

                    ஜீன்களில் உள்ள DNA மற்றும்     RNA களுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரு மனித தலைமுறையின் உள்ளார்ந்த திறன்கள் மற்றும் ஆற்றல்கள் இந்த
" டி.என்.ஏ "வில் பொதிந்து காணப்படுகிறது.எனவே மனிதவாழ்வினை வழிநடத்தி செல்வதில் இந்த மரபு பண்புகளுக்கு முக்கிய உண்டு.

                       .என்னதான் மரபுநிலை சிறப்பாக இருந்தாலும் அதாவது உதாரணமாக ஒரு நெல்லின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை நெல் என்னதான் வீரியமாக இருந்தாலும் அதற்கு உகந்த மண்ணில் விதைக்கப்படாமலும் ,தகுந்த அளவு நீர் பாய்ச்சி ஊட்டச்சத்து அளிக்கப்படாமலும் மற்றும் தகுந்த சீதேஷ்ண நிலை இல்லாவிட்டால் நல்ல விளைச்சலை அவ்விதை தந்துவிடுவதில்லை.

                          அதேபோல ஒருவர் நல்ல மரபுநிலையை பெற்றிருந்தாலும் உகந்த சூழ்நிலை அமையாவிட்டால் அவனது வாழ்வு சிறக்காது.எனவே ஒரு மனிதனது வாழ்வானது சிறக்க "மரபும் சூழ்நிலையும்" அவசியமாகும்.
இந்த தகுந்த மரபுநிலையையும் சூழ்நிலைகளையும் மனிதனுக்கு உருவாக்கி தருவதில் கிரகங்களுக்கு முக்கிய பண்பு உண்டு.ஒருவரது சாதகத்தில் மரபுநிலைகளை ஆராய்ந்து பார்க்க முதலில் அவனது லக்கனம் மற்றும் லக்கனாதிபதிகளை கொண்டும் மற்றும் பூர்வபுண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தை கொண்டு அவனது பூர்வபுண்ணிய நிலைகளை ஆராய்ந்து அறியலாம்.இந்த ஸ்தானங்களிலிருந்து தனது முந்தைய தலைமுறைகளை ஆய்ந்தறியப்படுகிறது.

                            

                               நான்காமிடம் மற்றும் சந்திரபகவானை கொண்டு  தனது தாய் மற்றும் தாய்வழிநிலைகளை உறவுகளை பற்றி தெளிவாக அளந்தறியப்படுகிறது.இதேபோல ஒன்பதாமிடம் மற்றும் சூரியபகவானை தந்தைவழியான உறவுநிலைகளை கணக்கிட்டு அறியப்படுகிறது.
தாத்தா மற்றும் பாட்டிவழிநிலைகளை ராகு மற்றும் கேதுபகவான்களை கொண்டு அவர்களது நிலையறியபபடுகிறது.

                               அம்மான் வழி உறவுநிலைகளை பற்றி அறிய நான்காமிடம் மற்றும் புதன்பகவானை பற்றி அறியப்படுகிறது.
ஒருவனது மரபுதன்மைகளை நாம் கிரகங்களை கொண்டும் அறியலாம்.செவ்வாயின் பலத்தை பெற்றவர்கள் வீரமிக்கவர்களாக உள்ளனர்.படைதளபதிகள் பிறக்கும்போது செவ்வாய்பகவான் உச்சத்தில் இருக்கும்போது பிறப்பெடுக்கிறார்கள்.இவர்களில் மருத்துவநிபுணர்கள், போலிஸ் ,இராணுவ அதிகாரி அல்லது ரொளடி இதுபோல இருக்கிறார்கள்.பெரும்பாலோனோர்களது சாதகங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது இந்த உண்மையானது புலப்படுகிறது.

                       இதேபோல கணிதமேதைகள் வேறு இராசியில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.அதாவது கணிதமேதைகள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் ,பேச்சாளர்கள் ,இசைநுணுக்கம்,கணிதவல்லுணர்கள் ,புள்ளியல் நிபுணர்கள் ,மற்றும் சோதிட வித்வான்கள் இவர்களை போன்றோரது பல்லாயிரக்கணக்கான சாதகங்களை எடுத்து ஆய்வு செய்து பார்க்கும்போது அவர்கள் புதன்பகவானை பலமாக தனது சாதகத்தில் கொண்டவர்களாக உள்ளார்கள்.

                       இதேபோல கலையர்வம் மிக்கவராகவும்,நடிப்பு ,நடனம் ,உடையார்வமிக்கவராக ,ஆடை ,ஆபரணம் ,ஹோட்டல் மற்றும் அழகுசாதனபொருட்களில் ஈடுபாடு மிக்கவராக உள்ளவர்களின் சாதகங்களில் சுக்கிரபகவான் 
பலம்மிக்கவராக உள்ளார்.

                             


                    குருபகவானை பலமாக கொண்டவர்கள் குருமார்களாக ,ஆன்மீக மற்றும் வேதவிற்பன்னர் ,போதகராக ,தத்துவவிசாரணை புரிபவர்களாக இருப்பதை காணலாம்.

                                நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளது.சோதிடத்திலே சுத்தமாக நம்பிக்கையில்லாத பேராசிரியர் பிரவுன் மேற்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்த்தார்.தளபதிகள்,மருத்துவர்கள் மற்றும் திறமைசாலிகள் இவர்களது சாதக குறிப்புகளை எடுத்து ஆய்வு செய்துபார்த்தார்.அவரது ஆராய்ச்சின் வழியாக ஒருவனது உள்ளார்ந்த திறமையானது அவனது பிறக்கும் நேரத்தில் கிரகநிலைகளை பொறுத்தது என்ற சோதிட முடிவினை ஏற்றுக்கொண்டார்.

                              அறிவியல் அடிப்படையில் கூறப்படும் ஒரு மனித வளர்ச்சிக்கு தேவையான "மரபும் சூழ்நிலையும் "அவனது ஜெனன காலத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டே அறியப்படுகிறது.

                     ஒருவரது நோக்கம்,சாத்தியம் ,விருப்பம் மற்றும் ஆசை முதலியவற்றிற்கு ஏற்ப அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிடாட நேரத்தில் பிறப்பெடுக்கிறார்.கர்ப்பம் தரிக்கும் நேரத்தையும் அந்த குழந்தையே முடிவு செய்துகொள்கிறது.பிறந்தபிறகு அவை என்ன நோக்கத்திற்காக பிறப்பெடுத்திருக்கிறதோ அதை நோக்கிய வளர்ச்சியில் செல்கிறது.
நன்றி

(தங்களது பிறப்பின் ரகசியத்தினை அதாவது சாதகபலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்தல் போன்ற சேவைகளை #போன்வழியாக பெற ,தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

                                                                     

தொடர்பு கொள்ள

செல்
740 257 08 99
  97 151 89 647

வாட்ஸ்அப்
97 151 89 647


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
              M.SC ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்,
தமிழ்நாடு.
My email id
masterastroravi@gmail.com