உங்கள் சாதகப்படி இல்லறத்தை நல்லறமாக அமைக்க....
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 80 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
உலகில் குறையில்லாத மனிதர்களே கிடையாது."குற்றம் பார்க்கின சுற்றம் இல்லை.மனிதர்களை குறைகளோடு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.எனவே ஒரு சாதகத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தோமேயானால் ஒவ்வொறுவருடைய சாதகத்திலும் ஒவ்வொறுவிதமான குறையிருக்கும்.
சிலருக்கு தனமிருக்கும் சுகமிருக்காது.சிலருக்கு அறிவு ,ஞானம் இருக்கும் சாம்பாதிக்கும் திறமையிருக்காது.சிலருக்கு அழகு இருக்காது .ஆனால் அழகான மனைவி அமையும்.இப்படியாக சாதகத்தில் நிறைகள் பல இருந்தாலும்.,ஏதோ ஒரு குறையானது ஒட்டுமொத்த நிறைகளையும் குலைத்துவிடும்.அதேபோல குறைகள் பல இருந்தாலும் நாம் செய்யக்கூடிய ஏதோ ஒரு நிறைவான மாற்றம் ஒட்டுமொத்த குறைகளையும் நிறைகளாக்கிவிடலாம்.
திருமண விஷயங்களிலும் குறைகள் இருந்தாலும் அந்த குறைகளுக்கு ஏற்றார்போல விவாகம் தேடும்போது அந்த குறைகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இனிய இல்லறமாக மாற்றிவிடலாம்.அதற்கு ஞானமும் ,அனுபவமும் மிக்க சோதிடர்கள் ஆலோசனை தேவை.
சில ஆலோசனைகள்;-
1) ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி மறைவுஸ்தானமாகிய ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடங்களில் இருந்தாலும் அதிலும் அந்த ஸ்தானதிபதிகளுடன் இணைந்திருக்கும் சாதகத்தை பெற்ற ஒரு பெண்ணை அவ்வித பாதிப்பிலிருந்து விடுபட அந்த பெண்ணை வீட்டில் அதிகம் தங்காத உத்யோகம் பார்க்கும் ஒருவருக்கு அல்லது வெளிநாட்டில் சம்பாதிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்களது இல்லறமானது கிரக பாதிப்புகளிலகருந்து விலகி நல்லறமாக அமைந்துவிடுகிறது.
2) செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு சம தோஷம் உள்ளவரையோ அல்லது போலிஸ்,இராணுவம் ,பொறியாளர் போன்றவற்றில் வேலை பார்க்கும் நபரை திருமணம் செய்யும்போது மகிழ்சியான மணவாழ்வு அமையும்.
3) சுக்கிரன் பாதிக்கப்பட்வர்கள் கலப்பு திருமணம் செய்து கொள்வதன் மூலம் மகிழ்சியான மணவாழ்வு அமையும்.
4) லக்கனம் மற்றும் ராசிக்கு ஒன்று ,ஏழு மற்றும் இரண்டு ,எட்டு போன்ற இடங்களில் ராகு,கேது (சுபர்பார்வை இன்றியும், அந்த ஸ்தானதிபதிகள் பலமிழந்து இருந்தால் மட்டும் ) சம்பந்தப்பட்டவர்களுக்கு களஸ்திர தடையை உருவாக்கி கால தாமத திருமணத்தை தருவதோடு மனதிற்கு பிடித்த மனைவி அமைவதில் தடை உருவாகலாம்.
இதற்கு திருநாகேஸ்வரம்,பேரையூர் மற்றும் காளஸ்தி போன்ற ராகுபகவான் ஸ்தலங்களுக்கும்,கீழ்பெரும்பள்ளம் போன்ற கேதுபகவான் ஸ்தாலங்களுக்கு சென்று பாலாபிஷேகம் வழிபாடு செய்துகொள்ளல்.
அல்லது
.திருமணத்தன்று கணவனால் கட்டப்பட்ட மாங்கல்யத்தை அம்பாளுக்கு போட்டுவிட்டு தாலி பெருக்கி போடும்போது மறுதாலி கோர்த்துக்கொள்ளச்செய்தல்.இடைப்பட்ட காலங்களில் மஞ்சளை தாலியில் வைத்து கட்டிவிடவேண்டும்.
.அல்லது
வெளிநாட்டில் தங்கி சம்பாரிக்கும் கணவனாக பார்த்து திருமணம் செய்து வைக்கும்போது தினம் சந்திக்கும் வாய்ப்பு குறைவதால் அவர்களுக்கிடையே எவ்வித பிரச்சினையின்றி இல்லறம் நல்லறமாக அமைய வாய்ப்புகள் உண்டு.
5) லக்கனம் அல்லது ராசிக்கு ஏழாம் அதிபதி சனியாக இருந்து செவ்வாய் வீட்டிலிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து பலம்பெற்றிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து சனி வீடு இருந்தாலோ அவர்களுக்கு அமையும் ஜோடியானவர் மருத்துவராகவோஅல்லது பொறியாளரோ அல்லது வெளியில் தங்கி வேலை பார்ப்பவரூக இருத்தல் நலம்.
6) புத்திரதோஷமும் ,பால் பொருத்தமும் ஒரு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ அதே மாதிரி புத்திரதோஷம் உள்ளவரை ஜோடியாக இணைக்கூடாது.ஐந்தாமிடம் அல்லது ஐந்தாமாதிபதி யோடோ அல்லது குரு பகவனோடு ராகு மற்றும் கேது தொடர்பு உண்டானால் புத்திரதோஷம் ஆகும்.
இவை மூன்று வகையில் கிரக வலிமையைப்பொறுத்து தோஷத்தின் தன்மையானது அமைகிறது.இதுபோன்ற தோஷம் உடையஹர்களுக்கு தோஷம் இருந்தாலும் புத்திரம் பாக்கியம் உடனடியாக காலதாமதமின்றி அமையும்போது அந்த புத்திரத்தால் சுகமடையும் பாக்கியம் அமையாது அல்லது ஆண் வர்க்கமின்றி பெண்குழந்தைகள் மட்டும் பிறக்க வாய்ப்புண்டு.அல்லது புத்திரபாக்கியமின்றி இருப்பர்.
பரிகாரம்
தம்பதிகள் இருவரும் முழுபக்தியோடு விரதமிருந்து குளித்துவிட்டு அரச மர விநாயகரை வழிபட்டு அரசமரம் மூன்று முறை வலம் வந்து சுமங்கலி பெண்கள் ஐந்து பேருக்கு தங்களது வசதிக்கு ஏற்றார்போல பூ,பொட்டு ,மஞ்சள் கயிறு மற்றும் வஸ்திரம் வைத்து வசதிக்கு ஏற்றார்போல ஜந்து பேருக்கு தானம் செய்தால் சகல தோஷமும் நீங்கும்.
அல்லது
ஷஷ்டியில் விரதமிருக்க அகப்பையில் குழந்தை உருவாகும் என அழகாக விளக்குகிறார்கள்.
மேற்கண்ட புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பின்பற்றி இறையருளை பற்றி நிற்க நமது வாழ்வானது இனிய இல்லறமாக அமைத்துக்கொள்ளலாம்.
நன்றி ! வாழ்க வளமுடன்
( தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருங்தாலும் ,தங்களது பிறந்ததேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது
வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )
வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,(Teacher)
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
M.SC,MA,BEd,(Teacher)
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
செல் : 97 151 89 647,
செல் : 740 257 08 99
செல் : 740 257 08 99
My mail
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My web.click hear
AstroRsvichandransevvvai.blogspot.com
AstroRsvichandransevvvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com