Wednesday 11 July 2018

உங்கள் சாதகப்படி இல்லறத்தை நல்லறமாக அமைக்க....

உங்கள் சாதகப்படி இல்லறத்தை நல்லறமாக  அமைக்க....

                         
கிரகங்கள்  படுத்தும் பாடு- ( 80 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

            உலகில் குறையில்லாத மனிதர்களே  கிடையாது."குற்றம் பார்க்கின சுற்றம் இல்லை.மனிதர்களை குறைகளோடு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.எனவே ஒரு சாதகத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தோமேயானால் ஒவ்வொறுவருடைய சாதகத்திலும் ஒவ்வொறுவிதமான குறையிருக்கும்.

            சிலருக்கு தனமிருக்கும் சுகமிருக்காது.சிலருக்கு அறிவு ,ஞானம் இருக்கும் சாம்பாதிக்கும் திறமையிருக்காது.சிலருக்கு அழகு இருக்காது .ஆனால் அழகான மனைவி அமையும்.இப்படியாக சாதகத்தில் நிறைகள் பல இருந்தாலும்.,ஏதோ ஒரு குறையானது ஒட்டுமொத்த நிறைகளையும் குலைத்துவிடும்.அதேபோல குறைகள் பல இருந்தாலும் நாம் செய்யக்கூடிய ஏதோ ஒரு நிறைவான மாற்றம் ஒட்டுமொத்த குறைகளையும் நிறைகளாக்கிவிடலாம்.

          திருமண விஷயங்களிலும் குறைகள் இருந்தாலும் அந்த குறைகளுக்கு ஏற்றார்போல விவாகம் தேடும்போது அந்த குறைகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இனிய இல்லறமாக மாற்றிவிடலாம்.அதற்கு ஞானமும் ,அனுபவமும் மிக்க சோதிடர்கள் ஆலோசனை தேவை.

சில ஆலோசனைகள்;-

           1) ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி மறைவுஸ்தானமாகிய ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடங்களில் இருந்தாலும் அதிலும் அந்த ஸ்தானதிபதிகளுடன் இணைந்திருக்கும் சாதகத்தை பெற்ற ஒரு பெண்ணை அவ்வித பாதிப்பிலிருந்து விடுபட அந்த பெண்ணை வீட்டில் அதிகம் தங்காத உத்யோகம் பார்க்கும் ஒருவருக்கு அல்லது வெளிநாட்டில் சம்பாதிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்களது இல்லறமானது கிரக பாதிப்புகளிலகருந்து விலகி நல்லறமாக அமைந்துவிடுகிறது.

              2) செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு சம தோஷம் உள்ளவரையோ அல்லது போலிஸ்,இராணுவம் ,பொறியாளர் போன்றவற்றில் வேலை பார்க்கும் நபரை திருமணம் செய்யும்போது மகிழ்சியான மணவாழ்வு அமையும்.

              3) சுக்கிரன் பாதிக்கப்பட்வர்கள் கலப்பு திருமணம் செய்து கொள்வதன் மூலம் மகிழ்சியான மணவாழ்வு அமையும்.

            4) லக்கனம் மற்றும் ராசிக்கு ஒன்று ,ஏழு மற்றும் இரண்டு ,எட்டு போன்ற இடங்களில் ராகு,கேது (சுபர்பார்வை இன்றியும்,  அந்த  ஸ்தானதிபதிகள் பலமிழந்து இருந்தால் மட்டும் )  சம்பந்தப்பட்டவர்களுக்கு  களஸ்திர தடையை உருவாக்கி கால தாமத திருமணத்தை தருவதோடு மனதிற்கு பிடித்த மனைவி அமைவதில் தடை உருவாகலாம்.

             இதற்கு திருநாகேஸ்வரம்,பேரையூர் மற்றும் காளஸ்தி போன்ற ராகுபகவான் ஸ்தலங்களுக்கும்,கீழ்பெரும்பள்ளம் போன்ற கேதுபகவான் ஸ்தாலங்களுக்கு சென்று பாலாபிஷேகம் வழிபாடு செய்துகொள்ளல்.

அல்லது

         .திருமணத்தன்று கணவனால் கட்டப்பட்ட மாங்கல்யத்தை அம்பாளுக்கு போட்டுவிட்டு தாலி பெருக்கி போடும்போது மறுதாலி கோர்த்துக்கொள்ளச்செய்தல்.இடைப்பட்ட காலங்களில் மஞ்சளை தாலியில் வைத்து கட்டிவிடவேண்டும்.

.அல்லது

             வெளிநாட்டில் தங்கி சம்பாரிக்கும் கணவனாக பார்த்து திருமணம் செய்து வைக்கும்போது தினம் சந்திக்கும் வாய்ப்பு குறைவதால் அவர்களுக்கிடையே எவ்வித பிரச்சினையின்றி இல்லறம் நல்லறமாக அமைய வாய்ப்புகள் உண்டு.

            5) லக்கனம் அல்லது ராசிக்கு ஏழாம் அதிபதி சனியாக இருந்து செவ்வாய் வீட்டிலிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து பலம்பெற்றிருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்து சனி வீடு இருந்தாலோ அவர்களுக்கு அமையும் ஜோடியானவர் மருத்துவராகவோஅல்லது பொறியாளரோ அல்லது வெளியில் தங்கி வேலை பார்ப்பவரூக இருத்தல் நலம்.

            6) புத்திரதோஷமும் ,பால் பொருத்தமும் ஒரு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ அதே மாதிரி புத்திரதோஷம் உள்ளவரை ஜோடியாக இணைக்கூடாது.ஐந்தாமிடம் அல்லது ஐந்தாமாதிபதி யோடோ அல்லது  குரு பகவனோடு ராகு மற்றும் கேது தொடர்பு உண்டானால் புத்திரதோஷம் ஆகும்.

           இவை மூன்று வகையில் கிரக வலிமையைப்பொறுத்து தோஷத்தின் தன்மையானது அமைகிறது.இதுபோன்ற தோஷம் உடையஹர்களுக்கு தோஷம் இருந்தாலும் புத்திரம் பாக்கியம் உடனடியாக காலதாமதமின்றி அமையும்போது அந்த புத்திரத்தால் சுகமடையும் பாக்கியம் அமையாது அல்லது ஆண் வர்க்கமின்றி பெண்குழந்தைகள் மட்டும் பிறக்க வாய்ப்புண்டு.அல்லது புத்திரபாக்கியமின்றி இருப்பர்.

பரிகாரம்

          தம்பதிகள் இருவரும் முழுபக்தியோடு விரதமிருந்து குளித்துவிட்டு அரச மர விநாயகரை வழிபட்டு அரசமரம் மூன்று முறை வலம் வந்து சுமங்கலி பெண்கள் ஐந்து பேருக்கு தங்களது வசதிக்கு ஏற்றார்போல பூ,பொட்டு ,மஞ்சள் கயிறு மற்றும் வஸ்திரம் வைத்து வசதிக்கு ஏற்றார்போல ஜந்து பேருக்கு தானம் செய்தால் சகல தோஷமும் நீங்கும்.

அல்லது

         ஷஷ்டியில் விரதமிருக்க அகப்பையில் குழந்தை உருவாகும் என அழகாக விளக்குகிறார்கள்.
         மேற்கண்ட புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பின்பற்றி இறையருளை பற்றி நிற்க நமது வாழ்வானது இனிய இல்லறமாக அமைத்துக்கொள்ளலாம்.

நன்றி ! வாழ்க வளமுடன்

( தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருங்தாலும் ,தங்களது பிறந்ததேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது
வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )

                                   

                                    
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
     M.SC,MA,BEd,(Teacher)
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல் : 97 151 89 647,
செல் : 740 257 08 99

My mail
masterastroravi@gmail.com

My web.click hear
AstroRsvichandransevvvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com


Friday 6 July 2018

மானிட வாழ்வில் கிரகங்களின் பங்கு ?

மானிட வாழ்வில் கிரகங்களின் பங்கு

                                           

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

        ஒரு மனிதனை வழிநடத்தி செல்வதிள் கிரகங்களின் பங்கு அலாதியானது.ஒரு குழந்தையானது தனது பெற்றோரை தேர்ந்தெடுத்து பிறப்பதில் அவரது ஊழ்வினைப்பயன்தான் முடிவு செய்கிறது.இதனை நாம் "கர்மா " என்கிறோம்.

         ஒருவரது கர்மாதான் இந்ந நேரத்தில் இன்னார் வயிற்றில் பிறப்பது என்பதையே முடிவு செய்கிறது.

      ஒரு தாயின் வயிற்றில் ஒரு கருவானது உருவாகும் கதையானது நாம் எண்ணி பார்த்தால் மிகவும் விந்தையானது.களவியின்போது ஒரு ஆடவரது விந்தனுவிலிருந்து வெளிப்படும் பல்லாயிரம் கணக்கான விந்தனுவில் எல்லா விந்தனுக்களும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வழியாக நுழைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுவதில்லை என்கிறது விஞ்ஞானம்.

     பல்லாயிர கணக்கான விந்தனுக்கள் பாய்ந்தாலும் ஏதோ ஒரு வீரியமுள்ள விந்தனு மட்டும் நுழைந்து பெண்ணின் அண்ட அனுவுடன் இணைந்து ஒரு கருவுற்ற முட்டையை உருவாக்குகிறது.இந்த கருவுற்ற முட்டைக்கு "சைகோட் " என்று பெயர் ஆகும்.இவ்வாறு சைகோட் உருவாகும் நிலையினை "கருவுறுதல் " என்கிறோம்.

      இந்த கருவுற்ற முட்டை உருவான பிறகு களவியில் ஈடுபட்டால் எத்தனை விந்தனுக்கள் பாய்ந்தாலும் அதில் எந்த ஒரு விந்தனுவும் கருமுட்டைக்குள் நுழைந்துவிடுவதில்லை.

          ஒரு மனிதனுக்கு துல்லியமான பிறந்த நேரம் என்பது இந்த கரு உருவாகும் நேரமே ஆகும்.இந்த நேரத்தினை கணக்கில் எடுக்கும் வாய்ப்பு இல்லாததால்தான் ஒரு குழந்தையானது இந்த பிரபஞ்சத்தில் ஜெனிக்கின்ற நேரத்தினை பிறந்த நாள் மற்றும் பிறந்த நேரமாக எடுத்துக்கொண்டு சாதகம் கணிக்கப்படுகிறது.

         ஆனால் ஒருவரது கர்மாதான் ஒருவரது பிறப்பினையே முடிவு செய்கிறது. ஒருவர் இந்த நேரத்தில் எந்த தந்தையின் விந்தனுவில் வெளிப்பட்டு எந்த தாயின் கருவினில் நுழைந்து கருமுட்டை உருவாகவேண்டும் என முடிவு செய்கிறது.

          அக்குழந்தையானது அவரது ஊழ்வினை பயனிற்கு ஏற்பவே அக்குழந்தையின் வாழ்வும்,குணநலன்களும் தாயின் வயிற்றில் வடிவமைக்கப்படுகிறது.

           ஒரு குழந்தையானது பெண்ணா ? ஆணா ? என முடிவு செய்வதில் ஆணின் விந்தனுவின் உள்ள "குரோமோசோம்கள் " முடிவு செய்கிறது.ஒரு மனிதருக்கு இருபத்து மூன்று ஜோடி குரோமோசோம்கள் உள்ளது.அதாவது மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளது.

          இதில் பெண்ணிற்கு உள்ள இருபத்து மூன்று ஜோடி குரோமோசோம்களும் " X " குரோமோசோம்களாகவே உள்ளது. இதனை "ஆட்டோசோம்கள் " என்கிறது.
ஆனால் ஆடவருக்கு இருபத்துமூன்று ஜோடி குரோமோசோம்களில் இருபத்து இரண்டு ஜோடி குரோமோசோம்கள் பெண்ணினைப்போல ஒத்த X குரோமோசோம்களாக உள்ளது.இதில் ஆடவருக்கு இறைவனின் வித்தியாசமான படைப்பினால் இந்த இருபத்து மூன்றாவது ஜோடி குரோமோசோம்கள் ஆனது " X மற்றும் Y "குரோமோசோம்களாக உள்ளது.இந்த இருபத்து மூன்றாம் ஜோடி குரோமோசோம்களை " அல்லோசோம்கள்"என்கிறோம்.
(ஆட்டோ-ஒத்த,அல்லோ -மாறுபட்ட)

          களவியின் போது ஆணின் X குரோமோசோம் ஆனது வெளிப்பட்டு பெண்ணின் அண்ட அணுவினில் நுழைந்து கருமுட்டை உருவாக்கினால் பிறக்கின்ற குழந்தை ( X+ X குரோமோசோம்கள்) பெண் குழந்தையாக பிறக்கின்றது.

           அதேநேரத்தில் ஆணின்  Y குரோமோசோம் வெளிப்பட்டு பெண்ணின் அண்ட அணுவினில்(X) நுழைந்து கருமுட்டையை உருவாக்கினால் பிறக்கின்ற குழந்தையானது
(  Y+ X குரோமோசோம்கள்) ஆண் குழந்தையாக பிறக்கின்றது.

           எனவே பிறக்கின்ற குழந்தையானது ஆணா ? பெண்ணா ? எனும் பாலினை ஆணின் குரோமோசோம்கள்தான் முடிவு செய்கிறது என விஞ்ஞானம் கூறினாலும் ஒரு கருவானது தனது கர்ம வினைப்படியே தனது பால் தன்மையை முடிவு செய்கிறது.

  ஒரு கரு இரட்டையர்(identical twins)

       ஆணின் ஒரு விந்தனுவானது பெண்ணின் ஒரு அண்ட அனுவுடன் இணைந்து ஒரு கரு முட்டையை உருவாக்குகிறது.இவ்வாறு உருவான ஒரு கருமுட்டை இரண்டாக பிளந்து இரு குழந்தையாக பிறப்பெடுக்கிறது.இவ்வாறு பிறக்கும் குழந்தையானது பண்பினிலும்,பால் வேறுபாட்டிலும் ஒத்ததாகவே இருக்கிறது.பிறக்க கூடிய குழந்தையானது இரண்டும் ஆணாகவோ அல்லது இரண்டும் பெண்ணாகவோ உள்ளது.

இரு கரு இரட்டையர்

       இனப்பெருக்க காலத்தில் ஆணின் இரு விந்தனுவானது ஒரே நேரத்தில் பெண்ணின் ஒரு அண்ட அனுவுடன் இணைந்து இரு கருமுட்டையை உருவாக்கினால் அது "இரு கரு இரட்டையர் ஆவார்.இவ்வாறு பிறக்கும் குழந்தையானது பண்பினில் மாறுபட்டதாகவே உள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தையானது ஒன்று ஆண் , மற்றொன்று பெண் குழந்தையாகவோ
அல்லது இரண்டும் ஆண் அல்லது பெண்ணாக பிறக்க வாய்ப்பு உண்டு.


What's up
97 151 89 647

CELL
740 257 08 88
   97 151 89 647

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                         
அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி.

My email
  masterastroravi@gmail.com

My blogspot. Google search
  AstroRavichandran. blogspot. com
   AstroRavichandransevvai. blogspot. com
...............................................................................

திருமண வாழ்வில் கிரகங்களின் பங்கு

திருமண BL கிரகங்களின் பங்கு

          
"கிரகங்கள் படுத்தும் பாடு -( 157 )

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

        இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களது பேச்சும்,கிண்டலும் அவர்களது கல்யாணம் சார்ந்த பேச்சாகவே இருக்கும்.தனக்கு வரக்கூடிய மனைவி /கணவன் எப்படி இருக்கவேண்டும் ? என்ற கற்பனையும்,ஆசையுமே அவர்களுக்கு இடையேயான பேச்சில் தென்படுவதை காணலாம்.

          இவ்வாறு எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டவர்களுக்கு ,
அவர்களது  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல மமைவி அமையாதபோது அவர்களுக்குள் பிரச்சினை முற்றி பிரிந்து வாழும் சூழல் உருவாகி விடுகிறது.மேலும் இக்காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்டீரும் கல்வியிலும்,சாம்பாத்தியத்திலும் சரிநிகர் ஆக திகழ்வதால் தனித்து வாழும் மனநிலை மேலோங்கி எளிதாக இவர்களது மனதில் புரையோடிவிடுகிறது.

        என்னிடம் போன்வழியாக சாதக Councelling - ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் இவை சார்ந்த பிரச்சினைக்கு உட்பட்டோர் அதிகம் என்பதால் இவை அவர்களது பெற்றோர்களுடைய மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவினை இட்டு செல்கிறேன்.

         ஒரு ஆணுக்கோ/பெண்ணிற்கோ திருமணம் செய்ய நினை்க்கும் பெற்றோர்கள் அவர்களது சாதகங்களை நன்கு ஆய்வு செய்து பார்க்கவேண்டும் .அவர்களது சாதகத்தில் லக்கனம்,இரண்டாமிடம்(குடும்ப ஸ்தானம்),
ஏழாமிடம் (களத்திரஸ்தானம் )மற்றும் எட்டாமிடம் (மாங்கல்யஸ்தானம்)/போன்ற இடங்களையும் மற்றும் களத்திர காரகனான சுக்கிரனின் நிலை,மங்களகாரகன் செவ்வாய் பகவானின் நிலை முதலியவைகளை  நல்ல திறம் வாய்ந்த சோதிடரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

                                

        ஓருவரது சாதகத்தில்
" விதி கெட்டால் மதி , மதியும்  கெட்டால் கதி என்பார்கள" .
      இங்கு
விதி என்பது லக்கனம்

மதி என்பது ராசி

கதி என்பது சூரியன்

       இம்மூன்று வகையில்  மேற்கண்ட ஸ்தானங்களை  ஆய்வு செய்து பார்க்கும்போது மூன்று பரிமாணங்களிலும் பாதிக்கப்பட்டு இருந்தால் அவை பலவீனமான சாதகம் ஆகும்.எனவே இவ்வகையான  சாதகங்களுக்கு ஏற்றார்போல ஜோடி சேர்க்கும்போது அவர்களுக்கு இடையே கருத்து மாறுபாடு உருவாகமல் இருக்க வாய்ப்பு உருவாகிறது.

          லக்கன அடிப்படையில் மேற்கண்ட ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ராசி அடிப்படையில் பாதிக்கப்படாமல் இருப்பின் அதற்கு தகுந்தாற்போல பொருத்தம் போடும்போது அவர்களது இல்வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

          மேற்கண்ட ஸ்தானங்கள் எவ்வாறு இருந்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம்.
(லக்கனம், இரன்டு,ஏழு,எட்டு மற்றும் சுக்கிரன்)

1) மேற்கண்ட ஸ்தானங்கள் நீசம், பகை,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பெறக்கூடாது.

2)   மேற்கண்ட ஸ்தானங்கள் மறைவிடங்களான ஆறு,எட்டு அதிபதிகள் தொடர்பின்றியோ அல்லது இவ்வதிபதிகள் மறைவிடங்கள் செல்வதோ கூடாது.

3) மேற்கண்ட ஸ்தான மற்றும் கிரகங்கள் உடன் பாவிகளான ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.

                                 

புத்திரதோஷம்

          இவை மட்டுமன்றி தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருக்ககூடாது.ஏனைய செவ்வாய், களத்திர,மாங்கல்ய தோஷங்களுக்கு  , தோஷம் உள்ளவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை ஜோடி சேர்க்கவேண்டும்.ஆனால் புத்திரதோஷம் உடையவர்களுக்கு அதே மாதிரி தோஷம் உடையவர்களை இணைக்கும்போது புத்திரபாக்கியம் உருவாவதில் சிக்கல் உருவாகிவிடுகிறது.

                             

புத்திரதோஷம் என்பது மூன்று வகையில் தோஷங்களை தருகிறது.

1)புத்திரமே உருவாகாத நிலை

2)ஆண் குழந்தையின்றி பெண்குழந்தை மட்டும் உருவாகும் நிலை.

3)புத்திரர்கள் உருவாகி இருந்தாலும் அவர்களால் பயனற்ற நிலை.

        இதுபோன்ற மூன்று நிலைகளில் பாதிப்பு தருகிறது.இதில் முதல் இரன்டு நிலை மட்டுமே திருமணவாழ்வில் பாதிப்பு உருவாக வாய்ப்பு உருவாகி விடுகிறது.

          இதற்கு தம்பதிகளது சாதக கட்டத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் புத்திரகாரகனான குருபகவான் ஆகியவற்றின் நிலைகளை விதி, மதி மற்றும் கதி என முப்பரிமாணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.இம்மூன்று வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் புத்திரதோஷம் இருப்பின் அவர்களை திருமண பந்தத்தில் இணைக்காமல் இருத்தல் நல்லது.

                               

புத்திரதோஷம் உருவாக

1) புத்திரஸ்தானம்,புத்திரகாரகனான குருபகவான் நீசம்,பகை,வக்கிரம் ,அஸ்தமனம் பெறக்கூடாது.

2) புத்திர ஸ்தானம் மற்றும் குரு பகவான் உடன் அரவுகளான ராகு. கேது சேர்க்கை கூடாது.

3)ஐந்தாமாதிபதி மற்றும் குருபகவான் அரவுகளான ராகு,கேது நட்சத்திர சாரம் பெறக்கூடாது.

4) புத்திரஸ்தானாதிபதி,குருபகவான் ஆகிய இரு கிரகங்களுடன் ஆறு,எட்டு ஆம் அதிபதிகளோடு சம்பந்தமோ அல்லது ஆறு மற்றும் எட்டாமிடம் சேர்வதோ நல்லதல்ல.

        இதுபோல அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் அமையும் பட்சத்தில் விவாக பொருத்தம் போடக்கூடாது.

         இவை மட்டுமல்லாமல் தம்பதிகள் இருவரது சாதகத்திலும் களத்திர ஸ்தானத்திற்கு சனி,செவ்வாய் சேர்க்கையோ அல்லது பார்வையோ கூடாது.

          இதேபோல 3,4,5,7,12 ஆம் இடங்களில சுபர் பார்வையற்ற
் சுக்கிரன்+செவ்வாய் ,சனி+ராகு
,சுக்கிரன் +சனி ,செவ்வாய் மற்றும் சுக்கிரன் உடன் ராகு சேர்க்கை  மற்றும் சந்திரன்+சுக்கிரன் சேர்க்கை போன்ற அமைப்பை பெற்றவர்கள் சாதகங்களை இணைக்கும்போது நன்கு ஆய்வு செய்து பொருத்தம் போடப்படவேண்டும்.

         எல்லாவற்றிற்கும் மேலாக தம்பதிகளை இணைக்கும்போது நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்த்து பொருத்தம் போடாமல் கட்ட அடிப்படையிலான பொருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

நன்றி.தொடரும்.....

(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து ஜெனன சாதக பலன், திருமணபொருத்தம், மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

  வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
  740 257 08 99
    97 151 89 647

                                    
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M Sc,MA ,BEd,
  சோதிட  ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் கன்சல்டிங் சென்டர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
May website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
..........
---------------------------------------------------------------------------