Tuesday 16 November 2021

சொத்து சேர்க்கும் யோகம்

                          


**சொத்து சேர்க்கும் யோகம்**


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   என்னிடம் சாதகம் பார்க்க வரும் மிகப் பலர் "எப்பொழுது சார் என் வாழ்வில் சொத்து சேரும்?" என்ற 

கேள்வியை கேட்டு  கொண்டதற்கிணங்க அவற்றுக்கு தரும் விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில் இந்த பதிவை தொடங்குகிறேன்.


 " நான் பார்க்க 

நேத்து வர என்ன மாதிரி  கஷ்டப்பட்டுகிட்டு இருந்தான்."  

குப்பையில் கிடந்தவன் இன்னைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டான்.

 எல்லாம் அவனோட

 கால நேரம். நானும் தான் இருக்கிறேன்". என 

சுய பச்சாதாபம் கொள்ளும் மனிதர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.


   "நான் பார்க்க அவன். ஒன்னும் பெரிய அறிவாளி  இல்ல சார். ஏதோ ஒன்னு முயற்சி பண்ணினான்  அதுல அதிர்ஷ்டம் அவனுக்கு கிளிக் ஆயிடுச்சு . இந்த உலகத்தில் எவ்வளவு தான் அறிவு , திறமை இருந்தாலும் 

 சாதித்து காட்டுறவனதான் சாதனையாளன் என்று உலகம் போற்றும். சாதிக்காமல் அறிவும், திறமையும் இருந்து என்ன புண்ணியம்?" எனப் புலம்பும் மனிதர்களை பார்க்கிறோம்.


ஒருவன் அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் இருந்தும் எதையும் சாதிக்க முடியாத சூழல் அமைவற்கும்,

   ஒருவருக்கு சரியான பொருத்தமான அறிவும் மற்றும்  திறமையும்  இல்லாவிட்டாலும் சாதித்து காட்டுவதற்கும்,

  அறிவும் மற்றும் திறமையும் இருந்து அதைப் பயன்படுத்தி சாதித்து காட்டுவதற்கும் எல்லாம் அவனது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.


  ஒருவன் அறிவாளியாகவும் மற்றும் திறமைசாலியாகவும் இருந்தும் அவன் வாழ்வில் சாதிக்க முடியாமல் போனதற்கு சோதிட அடிப்படையில் காரணங்களை ஆழ்ந்து நோக்கினால் அவனது வாழ்வில் யோகம் தரக்கூடிய உகந்த தசை அமைப்புகள்  வராமல் போய் விடுவதே காரணமாக அமைகிறது.


   பெரிய அறிவும், திறமையும் இல்லாவிட்டாலும் ஒரு சிலர் சாதித்து புகழ் பெறுவதற்கு அவனது வாழ்வில் உரிய காலத்தில் யோக தசைகள் வந்து அவனை உயர்த்திக் காட்டுவது காரணமாக அமைகிறது.


  ஒருசிலர் மட்டும் 

"அத்தி பூத்தார் போல் அறிவும் திறமையும் நிரம்பப் பெற்று அதன் வழியே பொருளீட்டி புகழும்,சொத்தும் சேர்க்கும் பாக்கியவவனாக திகழ்கிறார்கள்.இதற்கு காரணம் நல்ல கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் யோக தசைகள் உரிய காலத்தில் வருவதும் காரணமாக அமைகிறது


   ஒருவருக்கு பூமி சார்ந்த சொத்து சேர வேண்டிய நிலை அறிய அவரது ஜாதகத்தில் நான்காம் இடம் மற்றும் அதன் அதிபதி, பூமிக்கு காரகனாகிய செவ்வாய் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும்.


  செவ்வாய் பகவான் சுபத்துவமாக இருந்து அதனுடைய காரக பலனான

 பூமி வாங்கி சேர்க்கும் அமைப்பு நிலையில் பலம் உடையதாக இருக்க வேண்டும். இதற்கு உரிய உகந்த தசைகளும் வாழ்வில் நடப்பில் வர வேண்டும்.


    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடைய சுபத்துவ நிலையை அடையும் பொழுது அதனுடைய காரக  பலனான மருத்துவம், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சேர்ந்து சொத்து சேர்க்கும் யோகமும் உண்டாகும்.


   பாவத்துவ நிலையில் உள்ள செவ்வாய் பகவான் ரொளடியாகவும் ,

 கசாப்பு கடைக்காரர் மற்றும் சமையல்காரராக  இருந்து சம்பாதித்து சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 வண்டி,, வாகனம் ஹோட்டல், ஆடை, ஆபரணம், சினிமா, கலை, ஓவியம், நடனம், நடிப்பு கணிப்பொறி, பைனான்ஸ், கொடுக்கல்-வாங்கல், ஆடை அலங்காரம்,

 சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம், ஆர்ட் டைரக்டர், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலமாக சொத்துக்கள் பெருக ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற நிலையில் உகந்த யோக தசை அமைப்பு வரும் காலங்களில்மேற்கண்ட வகையில் ஒருவருக்கு சொத்து சேரும் யோகம் உண்டாகும்.


 ஒருவருக்கு சூரிய பகவான் சுபத்துவமான நிலையில் இருந்து அவை தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு அதன் தசை வரும் காலங்களில் ஒருவர் ஆட்சி, அதிகாரம் அரசியல்,, அரசாங்க உயர் அதிகாரி மற்றும் தலைமையேற்று செல்லும் பொது மேலாளர் போன்ற வகையில் ஒருவருக்கு சொத்து மற்றும் புகழ் சேரும் யோகம் உண்டாகும்.


புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து சுபத்துவமான நிலை பெற்றிருக்கும் போது கணிதம், கம்ப்யூட்டர்,  ஓவியம்,, இசை,

 புள்ளி விவரங்களை சேகரித்தல், ஆலோசனை கூறும் மந்திரியாக இருத்தல், செய்தித்தாள்களிலும் தலையங்கம் எழுதுதல், கதை,, கவிதை, கட்டுரை பாடல்கள் எழுதுதல், பட்டிமன்ற மேடைகளில் பேசுதல் ,பிரசங்கம் செய்தல், கணிதப் பேராசிரியராக இருத்தல், சிலை, சிற்பம், கூடை முடைதல், பாய் பின்னுதல, போன்ற நுண்கலை மூலமாகவும், ஆராய்ச்சி மேற்கொண்டு புதியன கண்டுபிடிப்பும் கண்டுபிடிப்பாளர் போன்றவற்றின் மூலம் உகந்த தசை யோக காலங்களில் ஒருவருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.


குருபகவான் உச்சம், ஆட்சி  போன்ற. நிலையில் பலம் பெற்று சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது ஆசிரியராகவும், பேராசிரியராகவும் மேடையில் ஏறி பேசக்கூடிய பட்டிமன்றப் பேச்சாளராகவும், நகைக்கடை முதலாளி மற்றும் நீதிபதியாகவும் உகந்த தசை அமைப்பு செயல்படும்போது சொத்து சேர்க்க கூடிய யோகம் உண்டாகும்.


 ஒருவரது ஜாதகத்தில் சந்திர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று அதிக சுபத்துவமான. நிலையில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது பால்

ஐஸ்கிரீம்,கூல்டிரிங்ஸ் மற்றும் குடிக்க இயலும் திரவங்கள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு (🎏. மீன், இறால், 🦀 நண்டு,மட்டி,சிப்பி..)  மூலமாக உகந்த தசா அமைப்புகள் வரும்பொழுது சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


ஒருவரது ஜாதகத்தில் சனி சுபத்துவம் ஆன நிலையில் பொறியியல் வல்லுனர்,, பஞ்சாயத்து தலைவர், டெக்னிசியன் போன்றவற்றின் மூலமாகவும் பாவத்துவமான நிலையில் மெக்கானிக் சாக்கடை சுத்தப்படுத்துதல், கழிவுநீர் கழிப்பிடம், செப்டிக் டேங்க் பிணவரை, பிணம் எரித்தல், பாரில் வேலை செய்தல்,

கனரக வாகனங்களை இயக்குதல், குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனை மற்றும் அவைகளை ஏற்றிச்செல்லும் இடங்களில் வேலை செய்தல், லாரி டிரைவர், கிளீனர், உடல் முழுவதும் மசகு அப்பிக்கொண்டு வேற்றுடையில் வேலை செய்தல் போன்றவற்றின் மூலமாக உகந்த தசை அமைப்புகளில் ஒருவருக்கு சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


  நிழல் கிரகங்களான ராகு பகவான் ஒருவரது ஜாதகத்தில்  சுபத்துவமான நிலையில  குறிப்பாக சர ராசிகள் அல்லது விரய ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் நிற்கும் பொழுது

அதன் தசை காலங்களில் வெளிநாடு சென்று பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 ராகு பகவான் சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானமான பத்தாமிட தொடர்பு பெற்றுள்ள நிலையில் அதன் தசை நடப்பில். வரும் காலங்களில் அந்நிய மொழி, அந்நிய தேசம் ,அந்நிய நாட்டுடன் தொடர்பு, கடல் கடந்து சென்று வாணிபம் ,திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் கடல் கடந்து சென்று பொருளீட்டும் யோகம், ஷேர் மார்க்கெட், ஷாக்பாட், சூதாட்டம் ,

குதிரை ரேஸ், போன்றவற்றில் பொருள் சேர்த்தல், மருந்துப்பொருட்கள் மாந்திரீகம் , எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,

நகை கடத்தல் அரசியல் போன்றவற்றில் பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 ஜாதகத்தில் கேது பகவான் சுபத்துவ  நிலையில் உகந்த திசை காலங்களில் குறி சொல்லுதல் ,சோதிடம், ஆன்மீகத்தில் நாட்டம், சூட்சும உண்மைகளைக் கண்டறிந்து எழுதுதல் கோயில் அருகில்  கடை வைத்து நடத்துதல் போன்றவற்றின் மூலமாக சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.


   ஒருவர் ஜாதகத்தில் மிதமிஞ்சிய சொத்துகளை சேர்ப்பதற்கு அவரது ஜாதகத்தில் லக்கனாதிபதி ,

தனாதிபதி, பாக்கியாதிபதி,

 ஜீவன ஸ்தானாதிபதி,, மற்றும் லாபாதிபதி மற்றும் இந்த ஸ்தானங்களும் வலுப்பெற்று மேற்கூறிய கிரகங்களில் எந்த கிரகம் அதிகமான சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தான தொடர்பு கொண்டுள்ள கிரகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு  சொத்துக்களை சேர்க்கும் யோகம் உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

9715189647


    செல்

  9715189647

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும்  பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                         


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் 

அஸ்ட்ரோ கன்சல்டிங்  சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலை பெற காரணம் என்ன?

                        


 பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலைமையை பெற காரணம் என்ன?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!!


   வாழ்வில் ஒரு சிலர் மட்டும் ஏழ்மையான நிலையில் பிறந்து கடைசிவரையில் ஏழையாகவே வாழ்ந்து மரிப்பதற்கான  காரணம் என்ன ? என்பதை ஆழ்ந்து நோக்கினால் அவரது ஜாதகத்தில் முதலில் இலக்கனத்திலும் மற்றும் ராசியிலும்  இயற்கைப் பாபக் கிரகம் ஏதேனும் வகையில் தொடர்பு பெற்று, வேறுவகையில் சுபத்துவம் பெறாத நிலையில்  லக்னாதிபதியும்   மற்றும் ராசி அதிபதியும் பலம் இழந்து காணப்படும்.


  மேலும் இலக்கன யோகர்கள் பாவர்கள் பிடியில் சிக்கி காணப்படும்.


 சாதகத்தில் சில நேரங்களில் ஏதேனும் யோக அமைப்புகள் இருந்தாலும் அந்த யோக . அமைப்பு கிரக திசைகள் அவரது வாழ்வில் வருவதற்கான வாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமாக அமைகிறது.


 நீசம் ,அஸ்தமனம், மறைவிடம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்த கிரக தசைகள் அல்லது பாவர்கள் பிடியில் சிக்கிய கிரக தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழையாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.


 ஒரு சிலர்  ஜாதகத்தில் லக்கனாதிபதி, தனாதிபதி பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி பலமிழந்த சூழலில் 

சத்ரு ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்ற நிலையில் உகந்த தசா அமைப்புகளும் நடக்க இயலாத சூழலில் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை பெறுவதற்கு காரணமாக அமைகிறது.


ஒருவர் ஜாதகத்தில் என்னதான் யோக தசைகள் நடந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் பலமிழந்து சூழலில் ஒரு சிலர் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் பிறந்ததிலிருந்து 

அவ  யோக தசைகள் தொடர்ந்து  நடப்பிலிருக்கும் அமைப்பு பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் சுகத்தை அனுபவிக்கக் கூடிய சுகாதிபதியும் பலமிழந்து உகந்த திசை அமைப்புகள் வாழ்நாள் முழுவதும் வர இயலாத அமைப்பை பெற்றவர்களும் பிறந்ததிலிருந்து ஏழ்மை நிலையை அனுபவிக்க காரணமாக அமைகிறது.


நன்றி!


  வாட்ஸ் அப்

   9715189647


      செல்

 9715189647

   7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்..)

                        


அன்புடன் 

சோதிடர் 

சோ.ப ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நோய் வரும் காலம் பற்றி ஜோதிட விரல் கருத்து என்ன?

                           


நோய் வரும் காலம் பற்றி அறிய சோதிடவியல் தரும் கருத்து என்ன? 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவரது ஜாதகத்தில் நோய் பற்றி தெரிந்து கொள்ள ருண , ரோக ஸ்தானமான ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதி பற்றி ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.


   ஜாதகத்தில் ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுப்பெற்று அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு அந்த கிரகம் சார்ந்த மற்றும் அந்த கிரகம் இடம்பெற்ற வீடு  தொடர்புடைய உடல் உறுப்புகளில் நோய்  உண்டாகும்.


  ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறாம் இட அதிபதி வலுப்பெற்றுள்ள நிலையில் அந்த தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த நோய் பாதிப்பிற்கு ஜாதகர் உள்ளாகுவார்.


  ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடமும் அதன் அதிபதியும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுவடைந்த  நிலையில் அதன் தசை காலங்களில் சாதகற்கு பிணி ,கடன்,சத்ரு போன்றவற்றால் பாதிப்பை தரும்.


  ரிஷபம் ,விருச்சிகம் லக்னங்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் லக்னாதிபதியாகவும் மற்றும் ஆறாம் இட அதிபதியாகவும்  வருவதால் அதன் தசை காலங்களில் பெரும் நோய் பாதிப்பை தந்து விடுவதில்லை. அதிலும் குறிப்பாக இலக்கனத்தில் அமரும்பொழுது முழுவதும் லக்கனாதிபதியாகவே அதிகம் செயல்படுவார். ஆறாமிட பாதிப்பை அதிகமாக தருவதில்லை. மாறாக ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெறும் பொழுது அவை இலக்கனாதிபதி பலனை விட அதிகமான ஆறாம் இட பாதிப்பான நோய், கடன் ,சத்ரு தொல்லைகளையே அதிகமாக ஜாதகருக்கு தருவார்.


  கும்ப லக்கினத்திற்கு ஆறாமிட அதிபதியாக வரும் சந்திரனுக்கு வேறு எந்த ஸ்தான ஆதிபத்தியம் கிடையாது. எனவே கும்ப லக்னத்திற்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய சந்திரதசை வந்து அதுவும் கடகத்திலே நின்று ஆட்சி பெற்ற நிலையில் தேய்பிறை சந்திரனாக இருக்கக் கூடிய நிலையில் அதிகமான பாதிப்பை சாதகருக்கு தருவார்.


 கும்ப லக்கினத்திற்கு சந்திரன் அதிக வலு பெறக்கூடாது என்று கூறினாலும் அதே நேரத்தில் சந்திரன் பலவீனம் அடைந்த நிலையில் சந்திரனுக்கு காரகனான தாய் மற்றும் மனநிலை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்கும்.


  மீன லக்கினத்திற்கு ஆறுக்குடையவர்  சூரிய பகவான் ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் அதிகமான நோய் பாதிப்புகளை சாதகற்கு தருவார் அதிலும் சூரியனுக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள்  உண்டாகும்.


  ஆறாம் இட அதிபதியான சூரியன் நீசம் போன்ற பலவீனமான நிலையில் இருப்பின் நோய் பாதிப்புகளை தராவிட்டாலும்,

ஜாதகரது தந்தை, அரசு வேலை கிடைப்பதில தாமதம் ,ஆளுமை தன்மை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்குவார் .


 பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி பலவீனம் அடைந்தால் நோய் பாதிப்பில் இருந்து ஜாதகர் தப்பித்தாலும், வேறு வகையில் பாதிப்படைவார்கள். அதாவது ஒருவர் மேற்கொண்ட தொழிலில் வெற்றி அடைய ஆறாமிட அதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும். ஆதலால் ஆறாமிட அதிபதி பலம் இழக்கும் போது தான் மேற்கொண்ட தொழிலில் வெற்றியடைய கூடிய நிலையில் பாதிப்பை உண்டாக்கும்.


 ஒருவரது ஜாதகத்தில் ஆறாமிட அதிபதியாக சூரியன் பகவான் வந்தால் ஜாதகருக்கு 

வயிறு வலி, அறையாப்பு, சொறிசிரங்கு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி போன்றவை உண்டாகும். 


   சந்திரனாக இருந்தால் அஜீரணம், சீதம், வயிற்றுப்போக்கு ,உதிரம் சம்பந்தப்பட்ட வியாதிகள்  உண்டாகும் .


செவ்வாய் பகவான் ஆக இருந்தால் 

வாந்தி தலைவலி, மண்டையிடி, புரடி வெட்டு, கத்தி காயம் போன்றவற்றால் பாதிப்பு உண்டாகும் .


ஆறாம் அதிபதி புதன் எனில் கை,கால் முடக்கம் எனும் வாயு சம்பந்தப்பட்ட வியாதி, கழுத்தில் புண் போன்றவை உண்டாகும்.


 குரு பகவானின் எனில் மர்மஸ்தான வியாதி, உதிரப்போக்கு, அரசர்களால் காயம், நெஞ்சிலிருந்து அடி, வயிற்று வலி போன்றவை உண்டாகும்.


 சுக்கிரன் பகவான் எனில் கட்டி பிளவை ஸ்ரீ மூலநோய்,

 பெண்களால் புருஷ நோய், சூலை நோய் போன்றவை உண்டாகும்.


 சனி பகவான் எனில் 

வாத நோய், சூலை நோய், எலும்புருக்கி நோய்,

 வாதம், வாதக் கடுப்பு, வாத நீர் போன்றவை உண்டாகும்.


  ஆறாமிடத்தில்  ராகு-கேது  தொடர்பு உண்டானால்  விஷம் பசித்தல், மயக்கம், பிசாசு, பீடை, துற் பிணி முதலியவை வரும்.


 பாதகாதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, மாரகாதிபதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, அஷ்டமாதிபதி தசையில் ஆறாமிட அதிபதி புத்தி அல்லது ஆறாம் இட அதிபதி தசையில் மாரக அல்லது பாதக அல்லது அஷ்டமாதிபதி புத்தி நடப்பில் இருக்கும் காலங்களில் ஜாதகர் நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கின்ற நிலை உண்டாகும். லக்கினாதிபதி வலுவாக இருக்கக் கூடிய சூழலில் உயிர் பாதிப்புகள் ஏதும் கிடையாது.


நன்றி.


     வாட்ஸ் அப்

     9715189647

        செல்

     9715189647

      7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில்  அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டண விவரங்களை பெறலாம்)

                             


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

யார் புகழ் பெறும் மனிதர்கள்?

                           


யார் புகழ் பெறும் மனிதர்கள்?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 புகழுக்கு மயங்காதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அதேபோல அங்கீகாரத்துக்கு ஏங்காத மனிதர்கள் இல்லை.

  

 எவரொருவர் நாள்தோறும் தன்னை பட்டை தீட்டிக் கொண்டு தனக்கான துறையில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் நிச்சயம் தனக்கான துறையில் அங்கீகாரம்  கிடைக்கும்.


   ஒருவரது ஜாதகத்தில் முயற்சி ஸ்தானம் என்று அழைக்கப்படுவது மூன்றாம் இடமே ஆகும்.ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியினை பொருத்துத்தான் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி எத்தகைய தன்மை உடையதாக இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.


  முயற்சி செய்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட முடியாது. எவரொருவர் தான் கொண்ட செயலில் தொடர்ந்து 

விடா முயற்சியை சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்கின்றாரோ அவர் ஒருவரால் தான் புகழின் சிகரத்தை எட்டிப்பிடிக்க முடியும்.


 ஒரு மின் பல்பை கண்டறிய தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் தடவை முயற்சி செய்தார்.  ஆயிரமாவது முறையில் தான் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர் மின் பல்பை கண்டறிந்த பிறகு அவரை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம்" ஒரு மின் பல்பினை உருவாக்க  999 முறை நீங்கள் தோல்வி அடைந்து  ஆயிரமாவது முறையில்தான் உங்களால் வெற்றி பெற முடிந்தது. இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?" என கேட்டதற்கு அவர் கூறிய பதில்

" ஒரு மின் பல்பை எவ்வாறு எல்லாம் உருவாக்கக் கூடாது என்பதை  999 முறை கண்டறிந்த பின் தான் ஆயிரமாவது முறையில் ஒரு சரியான  மின் பல்பினை என்னால் உருவாக்க முடிந்தது"என்றாராம்.


 ஒருவரது கீர்த்தி, புகழ், அந்தஸ்து போன்றவற்றை கண்டறிய உதவும் ஸ்தானமும் ஜாதக கட்டத்தில் மூன்றாம் இடமே ஆகும்.


 மூன்றாமிடம், அதனுடைய அதிபதி மற்றும் ஆடம்பர காரகன் சுக்கிரன் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து ஒருவரது கீர்த்தி, புகழ்  மற்றும் அந்தஸ்து பெறும் நிலையை கண்டறியலாம்.


  ஒருவரது ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் எவ்வித பாவக்கிரகங்கள் இடம்பெறாமல், இயற்கை சுப கிரகங்களானகுரு வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பு பெற்று

 மூன்றாம் இட அதிபதி மற்றும் சுக்கிர பகவானும் நல்ல முறையில் பலம் பெற்று சுபத்துவ நிலையில் நின்று அதன் தசை நடக்கும் பொழுது அந்த தசை நடக்கின்ற அமைப்பை பெற்ற ஜாதகமானது  கீர்த்தி,புகழ் அந்தஸ்தை அடையக்கூடிய ஜாதகம் ஆகும்.


  எவரொருவர் ஜாதகத்தில்  எவ்வித பங்கப்படாத பௌர்ணமி யோகத்தில் பிறந்து இருக்கிறார்களோ, அவர்களும் கீர்த்தி, புகழ் அந்தஸ்து  பெறுகின்ற அமைப்பு பெற்றவர்கள் ஆவார்.


    சிம்மமும் , சூரியனும் வலுப்பெற்று நிற்க்கின்ற அமைப்பு பெற்றவர்களும்,

லக்னாதிபதி நன்றாக வலுப்பெற்ற நிலையில் கார்த்திகை மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் பெறும் அமைப்பை பெற்றவர்கள் ஆவார்கள்.


 விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒளிக்கிரகமான  சந்திரனும் மற்றும் சூரியனும் தர்ம மற்றும் கர்மாதிபதியான ஒன்பது மற்றும் பத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.எனவே இவர்களுக்கு சூரியனும் சந்திரனும் சமசப்தம பார்க்கக்கூடிய இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தொடர்பு பெறாத பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் சூரிய மற்றும் சந்திர தசையில் மிகப்பெரிய பிரபலம் அடையக்கூடிய யோகம் பெற்றவர்களாக அமைத்திருப்பார்கள்.


   ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் மற்றும் மூன்றாம் இடமும் பலம் பெற்ற நிலையில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப கிரகமான குரு ,புதன் மற்றும் சுக்கிரன் அமர்ந்து அதன் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் புகழ் பெறும் அமைப்பைப் பெற்றவர்கள் ஆவார்கள்.


  மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கீர்த்தி புகழ் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் உச்சமடைந்து நின்று வேறு எவ்வித பாவர்களுடைய தொடர்பின்றி தனுசு ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் உள்ள குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பார்க்கின்ற அமைப்பை பெற்ற சூரிய தசை நடைபெறும் காலங்களில் ஜாதகர் கீர்த்தி, புகழ்  மற்றும் அந்தஸ்தை அடைய கூடிய நபர் ஆவார்.


 தனுசு லக்கினத்திற்கு ஒன்பதுக்குடைய சூரியன், பத்தாம் இடத்திலும் பத்துக்குடைய புதன், ஒன்பதாம் இடத்திலும் பரிவர்த்தனை அடைந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று நின்று லக்கனத்தில் குரு பகவான் ஆட்சி பெற்ற நிலையில், மீன ராசியில் பிறந்த சாதகர் சூரியன், புதன் அல்லது குரு தசையில் புகழின் உச்சியை அடைவார்கள்.


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647

     செல்

  9715189647

    7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                         


அன்புடன்

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன்

அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Sunday 31 October 2021

ஜோதிடம் தரும் பதில் தான் என்ன? " யாருக்கு எதன்மீதும் நாட்டம்"

 ஜோதிடம் தரும் பதில்தான் என்ன? 

""யாருக்கு  எதன் மீது நாட்டம் உண்டாகும்?"


                               


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   முகநூலில் ஒரு வாசகர் "ஜோதிடத்தை மற்றவர்கள் மீது. ஏன் திணிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.


  ஜோதிடத்தை யார் மீதும் திணிக்க முடியாது.

 ஒரு பேருந்து நிலையத்தில் எத்தனையோ பேருந்துகள் வந்து போகின்றன. ஒரு ஊருக்கு பயணப்பட்டு செல்பவருடைய கவனம் முழுவதும் எல்லா பேருந்துகளிலும் இருப்பதில்லை. தனக்குரிய பேருந்து வரும்போது அதனைக் கண்டு ஏறி பிரயாணம் செய்கிறார்கள். அதேபோல முகநூலில் பலதரப்பட்ட விஷயங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் எழுதுகிறார்கள். விருப்பமுடையவர்கள் மற்றும் அதில் ஆர்வம் உடையவர்கள் அதனை படித்து விருப்ப குறியீடு அல்லது பின்னூட்டம் இடுகிறார்கள். மற்றவர்கள் அதனை ஸ்கிப் செய்து விட்டுப் போகிறார்கள்.


  பெரும்பாலும் முகநூலில் ஜோதிட பதிவுகளை விரும்பி படித்து விருப்ப குறியீடு மற்றும் பின்னூட்டம் இடுபவர்களுடைய ஜாதகத்தில் 

புதன் பகவான்  வலிமை பெற்றதாக இருக்கும்.


  ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் சனி, செவ்வாய், மற்றும் ராகு போன்ற பாவர் கலப்பின்றி இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள்  தொடர்பு பெற்று சுபத்துவம் ஆன நிலையில் அல்லது மூலதிரிகோணம்,

உச்சம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் ஸ்தான பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷம் பெறாமல் கேந்திர, கோணங்களில் நின்று சுபத்துவம் பெற்ற நிலையில் உள்ள நபர்  ஜோதிட பதிவுகளை விரும்பி படிப்பவராகவும் அல்லது முழு நேர தொழில் முறை சோதிடர் ஆகவும் இருப்பர்.


  எவரொருவர் ஜாதகத்தில் ஆன்மீக கிரகம் குரு ,சனி, கேது ஆகிய மூன்றும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்று புதன் பகவானும் வலிமை பெற்ற நிலையில் சந்திர கேந்திரத்தில் இருப்பின் அவருக்கு ஜோதிடம் தொடர்பான சூட்சும உண்மைகள் அவரது ஞானதிருஷ்டியால் உணர்வார்.


   அதேநேரத்தில் எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு, சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் நிழல் கிரகமான  ராகு சேர்ந்து பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பகவவானால் பார்க்கப்படும் அமைப்பினை  பெற்றவர்கள் ஜோதிடத்தைப் பழிப்பவராகவும் மற்றும் விதண்டாவாதம் ஆன கேள்வி கேட்பவராகவும் இருப்பர்.


  கிரகங்கள் யாரை பாதிப்பதில்லை? என வினா எழுப்பினால் மனதளவில் எண்ணமற்ற நிலையில் மனதைக் கடந்துள்ள நிலையில் உள்ள ஞானிகளை கிரகங்கள் பாதிப்பதில்லை.


 மற்ற படி சோதிடத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரபஞ்சத்தில் இந்த கிரக அதிர்வுகள் தாக்கம் உண்மையில் நிச்சயம் உங்களை வந்தடையும்.


  ஒருவரது ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவம் ஆன நிலையில் உள்ளதோ அது தொடர்புடைய அதாவது அந்த கிரக தொடர்புடைய ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்களுக்கு ஏற்ப ஒரு நபரின் நாட்டம் நிச்சயம் அவரை வந்தடையும்.


  அவரது மனதில் எழும் மாற்றத்திற்கு ஏற்ப அந்த தசாபுத்திகள் வந்து ஒத்துழைக்கும் போது அவர் அந்தத் துறையில் ஈடுபட்டு அத்துறை தொடர்பான விஷயங்களில் கொடி கட்டி பறப்பார்.


   ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தொழில் அமையும் என்றாலும் அந்த கிரகத்தின் சுபத்துவ வலிமைக்கு ஏற்றார்போல தொழில் அமையும் .


  அதே போல சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் பலம் அடைந்து அதிகமான  சுபத்துவ நிலையில்  ஒரு நபர்  ஜோதிடம் தொடர்பான நாட்டம் ஏற்பட்டு முறையான குரு அமைந்து அதன் மூலமாக அந்தத்துறையில் அவர் சாதிப்பார்.


நவக்கிரகங்களும் அவை தரும் தொழில்களும்.


  உதாரணமாக

 செவ்வாய் பகவானுக்கு காரக தொழிலான டாக்டர் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள்,

 போலீஸ் ,ராணுவம், கசாப்புக் கடைக்காரர் சமையல்காரர் ,

வீடு கட்டித் தருபவர், விவசாய மேற்பார்வையாளர் இது போன்ற இன்னும் பல தொழில்கள் உண்டு.

செவ்வாய் பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மருத்துவராகவும் ,

அதற்கு அடுத்த நிலையில் மருத்துவம் சார்ந்த படிப்பைப் படிப்பவராகவும், சுபத்துவம் குறைந்த நிலையில் சமையல்காரர் ஆளாகவும் வேலை பார்ப்பார் ஆகும்.


   சுபத்துவம் ஆன செவ்வாய் பகவானை பெற்றவர்கள் பொது நலத்திற்காக பிறரை சுட்டு வீழ்த்த கூடிய போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரியாக வேலை பார்ப்பார் . அதேநேரத்தில் பாவத்துவமான நிலையில் கறி வெட்டும் கசாப்புக் கடைக்காரராக வேலை பார்ப்பார் அல்லது பலரை சுட்டு வீழ்த்தும் ரொளடியாகவும், தீவிரவாதியாகவும் திகழ்வார்.


  புதன் பகவானுக்கு கணிதம் பேராசிரியர், புள்ளியியல் நிபுணர், எழுத்தாளர் ,பேச்சாளர், கவிஞர், இசை அமைப்பாளர், செய்திகளை சேகரிப்பவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சோதிடர் ,கணிப்பொறி நிபுணர், ஆலோசனை வழங்கும் மந்திரி இது போன்ற பல தொழில்கள் அமையும்.


 குருபகவானுக்கு ஆசிரியர் பேராசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, போதகர், நகை கடை விற்பனையாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் போன்றவை அடங்கும்.


  சுக்கிர பகவானுக்கு  கேட்டரிங், அழகு கலை நிபுணர், நடிகர் ,நாட்டியம், ஆர்ட் டைரக்டர், நுண்கலை வித்தகர், சிற்பம், சிலை மற்றும் ஓவியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், உணவு விடுதி மற்றும் ஹோட்டல் நடத்துபவர், பலசரக்கு கடை பல்பொருள் அங்காடி


சனிபகவானுக்கு  

பாவத்துவமான நிலையில்

ஆள் அடிமை, அலுவலகங்களில் வாட்ச்மேன்,, இரவு காவலர் போன்ற கீழ்மட்ட பணிகள், சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய தொழில்கள் அதாவது சாக்கடை அள்ளுதல் அதாவது செப்டிக் டாங் வேலை, கழிப்பறை,

பெட்ரோல்,, டீசல் கடைகளில் வேலை,

உடல்முழுவதும் அழுக்காக்கி கொள்ளக்கூடிய மெக்கானிக் ,

கிரீஸ், மசகு போன்றவற்றை அபப்அபி கொள்ளக்கூடிய வேலை, ஒருவர் வேலைக்கு போட்டுக்கொண்டு செல்கின்ற உடையை அவுத்து வைத்துவிட்டு பபிரவுன்  கலர் உடைய  வேஏறற்றுடடை அணிந்து பார்க்கக்கூடிய வேலைகள், மிசினரி இயக்கும் வேலை, குடிக்க இயலாத திரவங்களை சுமந்து செல்லுதல், மதுபான கடைகளில் வேலை ,பார்களில் வேலை போன்றவை.


சனிபகவான்

 சுபத்துவமான நிலையில் பொறியியல் வல்லுநர், பஞ்சாயத்து தலைவர்,

 நீதி வழங்கக்கூடிய வழக்கறிஞர் போன்ற தொழில்கள் அமையும்.


   சந்திர பகவானுக்கு குடிக்கக்கூடிய திரவ வகையைச் சேர்ந்த பால், குடிநீர், கூல் ட்ரிங்ஸ் ஐஸ்கிரீம் போன்றவை.

கடல்வாழ் உயிர்கள் வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, வெண்ணிறமான அரிசி கடை போன்றவை அடங்கும்.


    சூரிய பகவானுக்கு சூரியன் அதிக சுபத்துவம் ஆன நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் போன்ற உயரிய பதவியில் அமரக்கூடியவராக யோகம் அமையும் அல்லது ஜனாதிபதி, பிரதமர் ,முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் போன்ற ஏனைய அரசு பதவிகள் சூரியனுடைய வலிவுக்கு ஏற்றார்போல அடுத்த அடுத்த நிலையில் அமையும்.


சூரிய பகவான் மற்றும் சிம்ம லக்னமும் வலிமையடைந்து இருந்தால் அதற்குரிய தசாபுத்திகள் வரும்பொழுது அரசின் உயரிய பதவிகளிலும் அல்லது அரசாட்சியின் உயரிய பதவிகளிலும் அமரக் கூடிய யோகம் அமையும்.


   சூரிய பகவானுடைய வலிமைக்கு ஏற்ப அடுத்த பதவியான தாசில்தார் ,ரெவின்யு இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகள் அமையும்.


சூரியனுக்கு பொதுவாக தலைமை ஏற்று நடத்தக்கூடிய பண்பே மேலோங்கி நிற்கும் எலக்ட்ரிக்கல் கடைகள் வைத்து நடத்த கூடிய யோகமும் அமையும்.


 ராகு பகவானை சுபத்துவமான. விலையில் பெற்றவர்கள் அதன் தசை காலங்களில் வெளிநாடு செல்லுதல், ஷேர் மார்க்கெட்டில் ஈடு,படுதல், லாட்டரி, குதிரை ரேஸ் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், கணிப்பொறி தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்,, இணையத்தை பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகம் செய்தல், மருந்து பொருட்கள் மூலம் பொருளீட்டல் போன்றவையாகும்.


 கேது பகவானை சுபத்துவம் ஆன பெற்றவர்கள் சோதிடர் குறி சொல்லும் பூசாரி, பேய் பிசாசு விரட்டுதல், நல்வாக்கு சொல்பவர், கோவில்களில் அருகே கடை வைத்து நடத்துபவர் போன்றவை.


   எனவே ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அது சார்ந்த எண்ணங்களும் மற்றும் செயல்களும் மனதில் தோன்றி அந்த கிரகம் தொடர்பான தொழில்களில் ஆர்வம் உண்டாகி அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவ  நிலையில் அதன் தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் ஈடுபட்டு அதிக  செல்வ வளம் பெருக்கம் ஏற்படும்.


 அதனால் எந்த ஒரு தனிநபரும் யார் மீதும் அவருடைய எண்ணத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட வைக்க முடியாது.

 ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒருவர் மீது திணிக்கவும் முடியாது. எல்லாம் இறைவனின் பிராப்தம் ஆகும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     9715189647

       செல்

  9715189647

‌. 7402570899

                             


அன்புடன்

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகம் பெற முடியுமா?

 மனைவியிடம் நீண்ட தாம்பத்ய சுகம் பெற முடியுமா?

                             


   செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவருக்கு தாம்பத்திய சுகத்தை அள்ளித் தரக்கூடிய கிரகம் எதுவாக இருக்க வேண்டும்?  என ஆராய்ந்து பார்த்தால் நவகிரகங்களில் சுக்கிரன் பகவான் மற்றும் செவ்வாய் பகவானுக்கு உண்டு.


  குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பலம் இழக்கக்கூடாது.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் நீசம், அஸ்தமனம் , வக்கிரம் மற்றும் பகை போன்ற நிலைகளில் நின்று வலுவிழந்து நிற்கக்கூடாது.


   மேலும் சுக்கிரனுடன் சனி ,ராகு போன்ற பாவ கிரகங்கள் நெருக்கமான நிலையில் இணைந்து இருக்கவும் கூடாது.


    மேற்கண்ட வகையில் சுக்கிரன் பலமிழந்த நிலையில் அந்த சுக்கிர பகவான் தன் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், போன்றவற்றின் தொடர்பு பெரும் பொழுது அவை மீண்டும்  பலம் அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


    ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனம் அடைந்த நிலையில் அவர் மனைவியின் மூலமாக நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுகிறார்.


   ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை மனைவியின் மூலம் பெறக்கூடிய அமைப்பை தெரிந்து கொள்ள சுக்கிரபகவான் தவிர காம திரிகோணமான மூன்றாம் இடம் , ஏழாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


   ஒருவரது ஜாதகத்தில் மூன்றாமிடம் அவர் செயல்படும் காம வீரியத்தையும்,

 ஏழாமிடம் கணவன் மனைவி உறவு நிலையையும் மற்றும் அவர்களது கற்பு நிலையையும் காட்டுகிறது. மேலும் 12-ஆம் இடம் ஒருவருக்கு நித்திரை சுகம் காமசுகம் போன்றவற்றில் திருப்தி அடையும் நிலையை தரும்.


  மேற்கண்ட மூன்று ஸ்தான அதிபதிகளையும் அவற்றில் இடம்பெறக்கூடிய கிரகங்களையும் பொருத்தம் ஒருவர் தாம்பத்திய சுகத்தை அல்லது காமசுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகத்தை அளந்து அறிய முடியும்.


  எனவே ஒருவர் தனது மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவானும் மேற்கண்ட 

3 ,7, 12-ஆம் இடங்கள் நல்ல நிலையில் நிற்க வேண்டும்.


  குறிப்பாக ஒருவர் படுக்கை சுகத்தை அனுபவிக்க அவரது சாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் மிக முக்கியமானதாகும். அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின்படி  ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்கின்ற பொழுது புதன் நீசம் அடைந்து நிற்கிறது. அதாவது எவரொருவர் மனதில் காமம் மிகுதியாக இருக்கும் பொழுது அறிவு குன்றும் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டுகிறது.


  நித்திரை சுகம் மற்றும் படுக்கை சுகம் ஆகிவற்றை அனுபவிக்க ஒருவருடைய  ஜாதகத்தில் 12ஆம் இடம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


  ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் சுபத்துவம் பெற்று களத்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்படாத நிலையில் இருப்பின் அவர் மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை பெற்றவராவார்.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவானுடன் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெற்று பலவீனம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது காம திரிகோண ஸ்தானமான மூன்று,,ஏழு மற்றும் -பன்னிரெண்டாம் இடத்தையும் கவனிக்கப்பட. வேண்டும்.


   மேற்கண்ட மூன்று இடங்களில் சனி,ராகு செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறும் பொழுது அல்லது அந்த வீட்டின் அதிபதிகளுடன்  தொடர்பை பெரும்பொழுது பிறகு களத்திரகாரகன் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் பாவர்களுடன் தொடர்பை பெரும்பொழுது நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுவார்.


   களத்திரகாரகன் சுக்கிரனும் மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் நல்ல நிலையில் இருக்க திருமணமான புதிதில் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி மற்றும். மறைவிடஆறு மற்றும் எட்டாம் ஸ்தானத்துடன்  கூடிய தசை நடப்பில் இருப்பினும் அதையும் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் தடை உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்; 9715189647


செல் : 7402570899

             9715189647


                         



அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

 ஜாதகத்தில் லக்கனம் மற்றும் லக்னாதிபதியின் முக்கியத்துவம் என்ன?


                                          

                                     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தினை பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காலபுருஷ தத்துவத்தின்படி மேஷலக்னம் முதலாவது இலக்கனமாக கொண்டு , நிறைவான இலக்கனமாக மீனம் வைக்கப்படுகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இலக்கனத்தை "உயிர்" என்பார்கள். ராசியை "உடல்" என்று அழைக்கப்படுகிறது. உயிரின்றி உடல் வாழ முடியாது. வெறும் உயிரை மட்டும் கொண்டு ஒரு உயிர் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடியாது. உடலின்றி உயிர் வாழ்ந்தால் அதை ஆவி பேய் என்று அழைத்து விடுவார்கள்.


 உடலும், உயிரும் போல லக்னமும், ராசியும் அவசியமான ஒன்றாகும்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை "ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அவரது ஜென்ம தசை கண்டறியப்படுகிறது. ஆனால் அந்த ஜென்ம தசை யோக தசையா? அல்லது அவயோகத்தை அள்ளித்தரும் தசையா? என்பதை இலக்கனத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.


    ஜாதகத்தில் நடைபெறும் ஜென்ம தசையானது பாவத் பாவ விதிப்படி சொந்த வீட்டிற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது  என்பதையும், லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டும்.


 அந்த தசை நாதன் எந்தப் பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களுக்கு  பலாபலன் தரப்படுகிறது.


 இரண்டு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் முதலில் எந்த பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளதோ அதன் பலாபலன் முதலில் நடக்கும் .

பிறகுதான் மற்ற ஆதிபத்திய  பலனைத் தரும்.


   பன்னிரெண்டு  ராசி கட்டங்களில் இலக்கனமும் அதன் அதிபதியும் பலமடைந்து நின்றாலே, ஏனைய பிற அமைப்புகள் பலம் பெறவில்லை என்றாலும் அதாவது வலு பெறவில்லை என்றாலும் அந்த சாதகர் தன் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம். ஆனால் இலக்கனத்தை தவிர ஏனைய பிற கட்டங்கள் வலுப்பெற்று இலக்கனமும் அதன் அதிபதியும் பலம் இழந்த சூழலில் எவ்வளவுதான் யோகங்கள் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை சாதகருக்கு இருக்காது.


  ஒருவர் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்து அதன் தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது இலக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் இழந்துள்ள  சூழலில் அந்த யோகம் ஜாதகருக்குத் ஜொலிக்காது.


  லக்னத்திலேயே லக்னாதிபதி ஆட்சி பெறுவது நல்லது என்று கூறினாலும் லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருந்து லக்கனத்தில் வலுப்பெற்று நிற்பது நல்லது அல்ல.


  பொதுவாக லக்னாதிபதி 6 ,8 ,12 போன்ற இடங்களில் மறைவதோ அல்லது லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இணைவது நல்லதல்ல எனக் கூறினாலும் லக்னாதிபதியானவர் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை லக்னாதிபதியாக கொண்ட மகர, கும்ப மற்றும் மேஷ, விருச்சிக லக்கனங்களுக்கு லக்கனத்திலே நின்று ஆட்சி பெறுவதோ அல்லது உச்ச வீடுகள் நின்று பலம் பெறுவதோ நல்லதல்ல. 


     லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருப்பின்  உதாரணமாக 

மகர, கும்பம் லக்கனங்களுக்கு சனி, செவ்வாய் லக்னத்தில் இருந்து ஆட்சி பெறுவதைவிட மறைவிடங்களில் நின்று மறைமுகமாக வலுப்பெற்று இருப்பதே நல்லது ஆகும்.


  பொதுவாக லக்னாதிபதி மறைவிட ஸ்தானமேறி நிற்பின் அவர்கள் வாழ்வு சிறக்காது .வாழ்க்கையில் அடிப்படையான தேவைக்கே போராடி கஷ்டப்பட்டு வாழவேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.


 ஆனால் அதே நேரத்தில் லக்னாதிபதி மறைவிடங்களில் நின்றாலும், நீசம் அல்லது அஸ்தமனம் அடைந்திருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவர்களது தொடர்பினை பெறுகின்றபொழுது சுபத்துவ நிலையை அடைந்து அவை அப்படியே நேர்வழி பெற்று நல்ல பலனை சாதகருக்கு தந்துவிடும்.


  பொதுவாக லக்கனத்தில் பாவக்கிரகங்கள் இடம் பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அல்லது பார்வை அல்லது சேர்க்கை பெறும் பொழுதும் அவை நல்லதாகும்.


     இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் லக்னாதிபதி பாவ கிரகங்களாக இருப்பின் லக்கனத்தில் இடம்பெறாமல் இருப்பது நல்லது. லக்கனாதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து அவை இலக்கனத்தில் இடம்பெற்று இலக்கனத்தை வலுப்படுத்துகிறது.


      லக்கனத்தில் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் இருப்பது ஜாதகருக்கு முரட்டுத் தனத்தை தரும். செவ்வாயுடன்  ராகு சேர்ந்து சனி பார்க்கின்ற அமைப்பை பெற்று இருப்பின் சாதகர் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற குணம் உடையவராக இருப்பார் பிற உயிர்களை வஞ்சித்து ரசிக்கும் குணமுடையவராக திகழ்வார்.


   பொதுவாக லக்கனத்தில் இருள் கிரகமான சனி பகவானும் மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது இடம்பெறாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இடம் பெற்றிருப்பின் அதனை இயற்கை சுப கிரகங்கள் பார்த்து சுபத்துவம் படுத்தினால் கெடு பலனை தருவதில்லை.


 பொதுவாக இலக்கனம் பலம்பெற லக்னத்திற்கு இருபுறமும் (2,12)  இயற்கை சுப கிரகங்கள் இருப்பது "சுப கர்த்தாரி யோகம்" ஆகும்.இவ்வாறு இருப்பின் சாதகர் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ கூடிய யோக அமைப்பு உருவாகும்.


      லக்கனத்திற்கு இரு புறமும் இயற்கை பாவ கிரகங்கள் இடம் பெறுவது அவை "பாபகர்த்தாரி யோகம்" எனப்படும். இதனால் சாதகர் மிகவும் கீழான நிலையில் போராடி வாழ வேண்டிய சூழல் உருவாகும்.வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் மேற்கண்ட பலன் நடைபெறும்.


  லக்னாதிபதி  லக்கனத்தில் அல்லது கேந்திர கோணங்களில் நின்று உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெறுவது நல்லது எனினும் பாவ கிரகங்களாக இருப்பின் மறைமுக இடங்களில் நின்று உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வழி பெறாமல் மறைமுகமாக வலுப் பெறுவது நல்லது. ஆகும்.


  லக்னாதிபதி நீசம் பெற்றிருந்தாலும், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்து இருந்தாலும் லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெறும்போது லக்கினாதிபதி ஆனவர் மறைமுகமாக நேர் வலுப்பெறுகிறது.


  லக்கனத்தில் குரு மற்றும் புதன் பகவான் நிற்கும் பொழுது அவை திக் பலம் பெறுகிறது.

லக்னாதிபதியாக

 குரு மற்றும் புதன் பகவானாக இருந்து ஏழாம் இடத்தில் இடம்பெறும் போது அவை நிஷ் பலம் பெறுகிறது.


  ஜென்ம லக்கனம் எந்த நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் அதன் பலாபலன் அமைகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

   9715189647

     செல்

  9715189647

    7402570899

                                        


அன்புடன் 

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

((M..Sc,M.A,BEd)

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

 ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய?...
                                     


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நமது ஜாதகத்தில் ஏதாவது ஒரு யோகம் அமைந்து அது நம் வாழ்வின் தக்க  தருணத்தில் வந்து  நமது பொருளாதார அந்தஸ்தினை உயர்த்தி  விடாதா ?!" என்று ஏங்குபவர்கள் பல பேர் உண்டு.


  இவ்வாறு ஏங்குபவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பயனுள்ள பதிவாக அமையும்.


  ஒரு மனிதன் இவ்வுலக வாழ்வை சுகபோகமாக அணுபவிப்பதற்கும், வாழ்வின் இளவயதில் கஷ்டப்பட்டு பிறகு முன்னேறுவதற்கும் மற்றும்  பிறந்ததில் இருந்து கடைசி வரை கஷ்டப்படுவதற்கும் காரணமாக அமைகின்ற ஒன்று ஊழ்வினைப் பயன்   என்ற உண்டு. இதனை வள்ளுவர் தனது "ஊழ்" என்ற அதிகாரத்தில் அழகுபட விளக்கி இருப்பார்.


  ஊழ் என்பது தலைவிதி என்று பரவலாக பேசப்படுகிறது. அதாவது பிறக்கும்போதே பிரம்மன் தலையில் எழுதிவிட்டான் . இதனைதான் திருவள்ளுவர் 

"வகுத்தான் வகுத்த வகை" அல்லது "வல்லான் வகுத்த வழி" என்றும் குறிப்பிடுகிறார். இங்கு வகுத்தான் மற்றும் வல்லான் என்று குறிப்பிடுவது விதியின் கர்த்தா(இறைவன்) ஆகும்.


   படைக்கும் போதே பிரம்மா தலையில் எழுதி விட்டது. எல்லாம் தலைவிதிப்படி தான் நடக்கும் என்றால் பிறகு படிப்பது எதற்கு? 

கடவுள் வழிபாடு எதற்கு?

முயற்சி செய்வது எதற்காக?

 எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். பிறக்கும்போதே தலையில் எழுதியதை மாற்ற முடியாது என்றால் அதற்குப் பிறகு மனிதன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீண் என்றுதானே அர்த்தம். இருப்பினும் விதியே என்று யாரும் இருந்து விட முடியாது.

 அந்த விதியையும் மாற்றும் வல்லமை மதிக்கும் உண்டு .


  "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".அதனால் விதியை எண்ணி முடங்கி விடக்கூடாது. முடங்கி கிடந்தால் சிலந்தி கூட உன்னை வலை பிடிக்கும்.


  சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து கொண்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் .

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.


  ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமாக அமைய வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலமடைந்து வேறு எந்த விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பங்கம் அடையாத  அந்த தசை உரிய காலத்தில் வரும் பொழுது அதிலும் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தசைகள் யோக தசையாக அமையும் போது லக்கினாதிபதியும் வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் அது யோகமான ஜாதகம் ஆக அமைந்து விடுகிறது.


   ஒருவர் ஜாதகத்தில் இலக்கனமும், ராசியும் மற்றும் அதன் அதிபதிகளும் பாவ தன்மை மற்றும் பலவீனம் அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று லக்னத்தையும், ராசியையும்  மற்றும் அதன் அதிபதிகளையும்  குரு பார்த்த அமைப்பிலுள்ள ஜாதகம் ஒரு விதமான யோக ஜாதகம் ஆகும்.


   மேற்கண்ட அமைப்பை பெற்று யோக தசைகள் தொடர்ந்து வரவேண்டும். (அதாவது கீழ்க்கண்ட அமைப்பை பெற்றுள்ள கிரகங்கள்  தசைகள் தொடர்ந்து வரப்பட வேண்டும்.)


     1) எவ்விதத்திலும் பங்கப்படாத குரு பார்த்த கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வருமாயினும் அவை யோக ஜாதகம் ஆகும்.


  2) தர்ம-கர்மாதிபதிகள் எவ்விதத்திலும் பங்கப் படாமல் முழுமையான சுபத்துவ நிலையில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான ஜாதகம் ஆகும்.


 3)ஒருவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்து சந்திரனுக்கு ஆறு ,ஏழு, எட்டில் இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் நின்று எவ்விதத்திலும் பங்கப்படாத நிலையை அடைந்து சந்திர அதியோகத்தில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் சாதக அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதகத்தினை உடையோன் ஆவார்.


4) சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம்,, கன்னி, மகரம் மற்றும் கும்ப லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி, புதன் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று அதன் தசைகள்  தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதத்தை உடையவர்கள் ஆவார்கள்.


5) இதேபோல குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம் இலக்கனத்தை சேர்ந்தவர்களுக்கு குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையை பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோக ஜாதகம் ஆகும்.


6) ஒருவர் ஜாதகத்தில் உள்ள அவ யோக கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3, 6 ,10, 11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் அமர்ந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்ற ஜாதகம் ஓரளவு யோக ஜாதகமாக கருதப்படுகிறது.


7) ஒருவரது ஜாதகத்தில் மகாதன யோகம் என்று சொல்லக்கூடிய யோகத்தை தரக்கூடிய ஸ்தானங்களாஆன

 தன ஸ்தானமான இரண்டாம் இடம்,

 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகிய மூன்று இடங்கள் வலுப்பெற்று மற்றும் லக்னாதிபதியும் வலுவடைந்து நிலையில் இவைகள் தங்களுக்குள் ஏதாவது ஒரு நிலையில் தொடர்பு பெற்று சுபத்துவ நிலையில் நிற்கும் பொழுது அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்களும் யோக ஜாதக அமைப்பை பெற்றவர் ஆவார்.


ஒரு சிலருக்கு யோகமான அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் அதன் தசைகள் வாழ்வில் வராத சூழலில் அது யோக பங்கம் ஆகிவிடுகிறது. எனவே ஒருவர் யோகத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த யோகத்தை தரக்கூடிய தசைகளும் வலுவடைந்து உரிய தருணத்தில் வரவேண்டும். அந்த யோகத்தை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்கினாதிபதியும் வலுவடைந்து இருக்கவேண்டும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


    செல்

  9715189647

    7402570899


                            

 அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.