**சொத்து சேர்க்கும் யோகம்**
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
என்னிடம் சாதகம் பார்க்க வரும் மிகப் பலர் "எப்பொழுது சார் என் வாழ்வில் சொத்து சேரும்?" என்ற
கேள்வியை கேட்டு கொண்டதற்கிணங்க அவற்றுக்கு தரும் விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில் இந்த பதிவை தொடங்குகிறேன்.
" நான் பார்க்க
நேத்து வர என்ன மாதிரி கஷ்டப்பட்டுகிட்டு இருந்தான்."
குப்பையில் கிடந்தவன் இன்னைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டான்.
எல்லாம் அவனோட
கால நேரம். நானும் தான் இருக்கிறேன்". என
சுய பச்சாதாபம் கொள்ளும் மனிதர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
"நான் பார்க்க அவன். ஒன்னும் பெரிய அறிவாளி இல்ல சார். ஏதோ ஒன்னு முயற்சி பண்ணினான் அதுல அதிர்ஷ்டம் அவனுக்கு கிளிக் ஆயிடுச்சு . இந்த உலகத்தில் எவ்வளவு தான் அறிவு , திறமை இருந்தாலும்
சாதித்து காட்டுறவனதான் சாதனையாளன் என்று உலகம் போற்றும். சாதிக்காமல் அறிவும், திறமையும் இருந்து என்ன புண்ணியம்?" எனப் புலம்பும் மனிதர்களை பார்க்கிறோம்.
ஒருவன் அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் இருந்தும் எதையும் சாதிக்க முடியாத சூழல் அமைவற்கும்,
ஒருவருக்கு சரியான பொருத்தமான அறிவும் மற்றும் திறமையும் இல்லாவிட்டாலும் சாதித்து காட்டுவதற்கும்,
அறிவும் மற்றும் திறமையும் இருந்து அதைப் பயன்படுத்தி சாதித்து காட்டுவதற்கும் எல்லாம் அவனது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.
ஒருவன் அறிவாளியாகவும் மற்றும் திறமைசாலியாகவும் இருந்தும் அவன் வாழ்வில் சாதிக்க முடியாமல் போனதற்கு சோதிட அடிப்படையில் காரணங்களை ஆழ்ந்து நோக்கினால் அவனது வாழ்வில் யோகம் தரக்கூடிய உகந்த தசை அமைப்புகள் வராமல் போய் விடுவதே காரணமாக அமைகிறது.
பெரிய அறிவும், திறமையும் இல்லாவிட்டாலும் ஒரு சிலர் சாதித்து புகழ் பெறுவதற்கு அவனது வாழ்வில் உரிய காலத்தில் யோக தசைகள் வந்து அவனை உயர்த்திக் காட்டுவது காரணமாக அமைகிறது.
ஒருசிலர் மட்டும்
"அத்தி பூத்தார் போல் அறிவும் திறமையும் நிரம்பப் பெற்று அதன் வழியே பொருளீட்டி புகழும்,சொத்தும் சேர்க்கும் பாக்கியவவனாக திகழ்கிறார்கள்.இதற்கு காரணம் நல்ல கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் யோக தசைகள் உரிய காலத்தில் வருவதும் காரணமாக அமைகிறது
ஒருவருக்கு பூமி சார்ந்த சொத்து சேர வேண்டிய நிலை அறிய அவரது ஜாதகத்தில் நான்காம் இடம் மற்றும் அதன் அதிபதி, பூமிக்கு காரகனாகிய செவ்வாய் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும்.
செவ்வாய் பகவான் சுபத்துவமாக இருந்து அதனுடைய காரக பலனான
பூமி வாங்கி சேர்க்கும் அமைப்பு நிலையில் பலம் உடையதாக இருக்க வேண்டும். இதற்கு உரிய உகந்த தசைகளும் வாழ்வில் நடப்பில் வர வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடைய சுபத்துவ நிலையை அடையும் பொழுது அதனுடைய காரக பலனான மருத்துவம், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சேர்ந்து சொத்து சேர்க்கும் யோகமும் உண்டாகும்.
பாவத்துவ நிலையில் உள்ள செவ்வாய் பகவான் ரொளடியாகவும் ,
கசாப்பு கடைக்காரர் மற்றும் சமையல்காரராக இருந்து சம்பாதித்து சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
வண்டி,, வாகனம் ஹோட்டல், ஆடை, ஆபரணம், சினிமா, கலை, ஓவியம், நடனம், நடிப்பு கணிப்பொறி, பைனான்ஸ், கொடுக்கல்-வாங்கல், ஆடை அலங்காரம்,
சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம், ஆர்ட் டைரக்டர், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலமாக சொத்துக்கள் பெருக ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் அதிக சுபத்துவம் ஆன நிலையில் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற நிலையில் உகந்த யோக தசை அமைப்பு வரும் காலங்களில்மேற்கண்ட வகையில் ஒருவருக்கு சொத்து சேரும் யோகம் உண்டாகும்.
ஒருவருக்கு சூரிய பகவான் சுபத்துவமான நிலையில் இருந்து அவை தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு அதன் தசை வரும் காலங்களில் ஒருவர் ஆட்சி, அதிகாரம் அரசியல்,, அரசாங்க உயர் அதிகாரி மற்றும் தலைமையேற்று செல்லும் பொது மேலாளர் போன்ற வகையில் ஒருவருக்கு சொத்து மற்றும் புகழ் சேரும் யோகம் உண்டாகும்.
புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து சுபத்துவமான நிலை பெற்றிருக்கும் போது கணிதம், கம்ப்யூட்டர், ஓவியம்,, இசை,
புள்ளி விவரங்களை சேகரித்தல், ஆலோசனை கூறும் மந்திரியாக இருத்தல், செய்தித்தாள்களிலும் தலையங்கம் எழுதுதல், கதை,, கவிதை, கட்டுரை பாடல்கள் எழுதுதல், பட்டிமன்ற மேடைகளில் பேசுதல் ,பிரசங்கம் செய்தல், கணிதப் பேராசிரியராக இருத்தல், சிலை, சிற்பம், கூடை முடைதல், பாய் பின்னுதல, போன்ற நுண்கலை மூலமாகவும், ஆராய்ச்சி மேற்கொண்டு புதியன கண்டுபிடிப்பும் கண்டுபிடிப்பாளர் போன்றவற்றின் மூலம் உகந்த தசை யோக காலங்களில் ஒருவருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.
குருபகவான் உச்சம், ஆட்சி போன்ற. நிலையில் பலம் பெற்று சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது ஆசிரியராகவும், பேராசிரியராகவும் மேடையில் ஏறி பேசக்கூடிய பட்டிமன்றப் பேச்சாளராகவும், நகைக்கடை முதலாளி மற்றும் நீதிபதியாகவும் உகந்த தசை அமைப்பு செயல்படும்போது சொத்து சேர்க்க கூடிய யோகம் உண்டாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சந்திர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று அதிக சுபத்துவமான. நிலையில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது பால்
ஐஸ்கிரீம்,கூல்டிரிங்ஸ் மற்றும் குடிக்க இயலும் திரவங்கள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு (🎏. மீன், இறால், 🦀 நண்டு,மட்டி,சிப்பி..) மூலமாக உகந்த தசா அமைப்புகள் வரும்பொழுது சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி சுபத்துவம் ஆன நிலையில் பொறியியல் வல்லுனர்,, பஞ்சாயத்து தலைவர், டெக்னிசியன் போன்றவற்றின் மூலமாகவும் பாவத்துவமான நிலையில் மெக்கானிக் சாக்கடை சுத்தப்படுத்துதல், கழிவுநீர் கழிப்பிடம், செப்டிக் டேங்க் பிணவரை, பிணம் எரித்தல், பாரில் வேலை செய்தல்,
கனரக வாகனங்களை இயக்குதல், குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனை மற்றும் அவைகளை ஏற்றிச்செல்லும் இடங்களில் வேலை செய்தல், லாரி டிரைவர், கிளீனர், உடல் முழுவதும் மசகு அப்பிக்கொண்டு வேற்றுடையில் வேலை செய்தல் போன்றவற்றின் மூலமாக உகந்த தசை அமைப்புகளில் ஒருவருக்கு சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
நிழல் கிரகங்களான ராகு பகவான் ஒருவரது ஜாதகத்தில் சுபத்துவமான நிலையில குறிப்பாக சர ராசிகள் அல்லது விரய ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் நிற்கும் பொழுது
அதன் தசை காலங்களில் வெளிநாடு சென்று பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ராகு பகவான் சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானமான பத்தாமிட தொடர்பு பெற்றுள்ள நிலையில் அதன் தசை நடப்பில். வரும் காலங்களில் அந்நிய மொழி, அந்நிய தேசம் ,அந்நிய நாட்டுடன் தொடர்பு, கடல் கடந்து சென்று வாணிபம் ,திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் கடல் கடந்து சென்று பொருளீட்டும் யோகம், ஷேர் மார்க்கெட், ஷாக்பாட், சூதாட்டம் ,
குதிரை ரேஸ், போன்றவற்றில் பொருள் சேர்த்தல், மருந்துப்பொருட்கள் மாந்திரீகம் , எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,
நகை கடத்தல் அரசியல் போன்றவற்றில் பொருளீட்டி சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் கேது பகவான் சுபத்துவ நிலையில் உகந்த திசை காலங்களில் குறி சொல்லுதல் ,சோதிடம், ஆன்மீகத்தில் நாட்டம், சூட்சும உண்மைகளைக் கண்டறிந்து எழுதுதல் கோயில் அருகில் கடை வைத்து நடத்துதல் போன்றவற்றின் மூலமாக சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் மிதமிஞ்சிய சொத்துகளை சேர்ப்பதற்கு அவரது ஜாதகத்தில் லக்கனாதிபதி ,
தனாதிபதி, பாக்கியாதிபதி,
ஜீவன ஸ்தானாதிபதி,, மற்றும் லாபாதிபதி மற்றும் இந்த ஸ்தானங்களும் வலுப்பெற்று மேற்கூறிய கிரகங்களில் எந்த கிரகம் அதிகமான சுபத்துவம் பெற்று தொழில் ஸ்தான தொடர்பு கொண்டுள்ள கிரகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு சொத்துக்களை சேர்க்கும் யோகம் உண்டாகும்.
நன்றி!
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன்
அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்