Sunday 14 October 2018

சாதகர் உடன் பிறந்தோர்களின் எண்ணிக்கையினை அறிந்து கொள்வது எப்படி ?

சாதகர் உடன்  பிறந்தோர்களின் எண்ணிக்கையினை அறிந்து கொள்வது  எப்படி ?


                                  

 கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
    
             ஒருவரது சாதகத்தில் உடன் பிறந்த சகோதர / சகோதரிகளின் எண்ணிக்கையினை சாதகத்தில் கண்டறிவது எப்படி ? என பல முகநூல் நண்பர்கள் பின்னூட்டத்தின் வழியாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இப்பதிவினை  கொண்டு செல்கிறேன்.

          ஒரு சாதக கட்டத்தில் சகோதர ஸ்தானத்தினை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானங்களாவன மூன்றாம் இடமும்,பதினோறாம் இடமும் ஆகும்.

      மூன்றாம் இடம் இளைய சகோதரத்தினை பற்றியும்,மூத்த சகோதரம் பற்றி அறிய பதினொறாம் இடமும் அத்தியாசவசமாகிறது.இதேபோல சகோதர காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானின் நிலையினைக் கொண்டும் உடன் பிறந்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ளலாம்.

             சாதகர் உடன்  பிறந்தவர்களின் எண்ணிக்கையினை அறிய வேண்டும் எனில் மூன்றாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள்,மூன்றாம் இடத்தினை பார்க்கும் கிரகங்கள் ,மூன்றாம் இட அதிபதி அமர்ந்த இடம் ,மூன்றாம் இட அதிபதியினை பார்த்த கிரகங்கள் ,் மூன்றாம் இட அதிபதியின் நட்சத்திர நாதன் மற்றும் அதன் சார நாதனுடன்  தொடர்பு கொண்டுள்ள கிரகங்கள் இவை எல்லாவற்றினையும் ஆராய்ந்து பார்த்து சகோதரர்களின் எண்ணிக்கையினை கண்டறிய முயல வேண்டும்.

           இவை மட்டுமல்லாமல் இதேபோல மேற்கண்ட முறையின் அடிப்படையில்  பதினொன்றாம் இடத்தினை பற்றியும் ஆராய வேண்டும். இதனை தொடர்ந்து சகோதரகாரகன் செவ்வாய் பகவானையினையும் இதே வழியில் ஆராய்ந்து அறிய முயலவேண்டும்.

             சகோதரகாரகன் செவ்வாய் பகவான் அமர்ந்து உள்ள இடம்,செவ்வாய் பகவானை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்ள் ,மேலும் சகோதரகாரகன் செவ்வாய் கொண்டுள்ள நட்சத்திர சாரநாதன் அந்த சார நாதனுடன் தொடர்புடைய கிரகங்கள் ஆகியவற்றினையும் ஆராய்ந்து சகோதர எண்ணிக்கையினை அறிய முயல வேண்டும்..

                                 

  இதேபோல பல வகையில் ஆராய்ந்து உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை துல்லியமாக அறியலாம்.

 மூன்று,பதினொன்று மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் பலமடைந்த சூழலில் ஒருவர் தனது உடன் பிறந்த சகோதரர்களால் பலன் அடையும் யோகம் உண்டு.

 மூன்று, பதினொன்று மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் பலம் இழந்த சூழலில் ஒரு சிலருக்கு உடன் பிறந்தவர்கள் இல்லாத நிலையோ அல்லது உடன் பிறந்தவர்கள் இருந்தும் அவர்களால் பயன் அற்ற நிலையோ உருவாகலாம்.

 சகோதரகாரகன் செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானத்தில் இடம்பெறுவது "காரக பாவ நாஸ்தினை '" தரும் என்ற வகையில் இடம் பெறாமல் இருத்தல் நலம் பயக்கும்.

      மேற்கண்ட கோணங்களில் ஆராய்ந்து அறிந்து மிகவும் துல்லியமாக ஒரு சாதகர் உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை அறிந்துவிடலாம்.ஆனால் இதில் தவறு இருப்பின் சோதிடத்தின் குற்றம் அன்று ,சாதகரின் நடவடிக்கையினால் உண்டான தவறே ஆகும்.

           ஒரு தம்பதியினர் தம்மிடம் வந்து சாதகம் பார்க்க வரும்போது அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கேட்கும்போது எமது அனுபவத்தில் பதிவில் தந்த கோணத்தில் ஆராய்ந்து அந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையினை கூறும்போது ஒரு சிலருக்கு தமது கணிப்பு தவறு என சொல்வார் எனில் அது சாதகர் நடத்தையில் காணும் குற்றமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

        எவ்வாறு எனில் ஒருவருக்கு இரண்டு ஆண் ,ஒரு பெண் என சோதிடர்  கூறும்போது  உடன் பலன் பெற வந்தவர் "இல்லை ஒரு ஆண் ,ஒரு பெண்தான் என பதில் அளிக்கும்போது அவர்களிடம் எந்த விதமான எதிர்விவாதம் செய்யாமல்தான் சோதிடர்களாகிய நாங்கள் இருக்கவேண்டும் ஏனெனில் உண்மை நிலையினை கூறி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க முடியாது.ஏனெனில் அந்த தம்பதியின் தந்தையின் சாதகத்தினை ஆராய்ந்து அறிய முற்படும்போது மனைவியல்லாத மற்றவருடன் உறவு கொள்பவராக இருப்பதால் நான் கூறிய மற்றொரு ஆண்குழந்தை வேறு பெண்ணுடன் கூடலில் உருவாகி பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

  இதேபோல வேறு சில தம்பதிகள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பற்றிய ஆராய்ச்சியில் ஆராய்ந்து பார்க்கும்போது அந்த தம்பதிகளில் பெண் பெற்ற கூடுதலான ஒரு குழந்தை "மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மலர்ந்த  மலர"் என கூறி சோதிடர்களாகிய நாங்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க கூடாது .இந்த பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு பெரும்பாலான சோதிடர்கள் சாதகம் எழுதும்போது உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை சோதிடர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் துருவகணிதம் பயன்படுத்தி விடுகிறார்கள் .இது சோதிடர்கள் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சங்கேத குறிகள் ஆகும்.

     சாதகத்திற்கு பலன் பார்க்க செல்லும் நபர்கள் பெரும்பாலோனர்கள் சாதகரின் திறமையினை உரசி பார்க்க அவர்கள் கேட்கும் முதல் கேள்வி " சாதகருடன் உடன் பிறந் ஆண்,பெண் குழந்தைகள் எத்தனை பேர் " என கேட்டு அவர்கள் இதற்கான பதிலை சரியாக அளிக்கும் பட்சத்தில் ஏனைய பலன்கள் சரியான கோணத்தில் ஆராய்ந்து பலன் அளிக்கவில்லை எனினும் தலைசிறந்த சோதிடராக கருதப்படுகிறார்.

 ஏனைய பிற பலன்களை சரியாக ஆராய்ந்து தெளிவாக பலன் அளிக்கக்கூடிய சோதிடராக இருந்தாலும் உடன் பிறந்த சகோதர,சகோதரிகளின் எண்ணிக்கையினை சரியாக சொல்லவில்லை எனில் அவரால் success full astrologer ஆக வலம் வர இயலாது.

  ஆதலால் உடன் பிறந்தவரகளின் எண்ணிக்கையினை துல்லியமாக ஒரு சிலருக்கு சோதிடர்கள் சொல்ல தவறுவதற்கு மேற்கண்ட வகையிலான நிர்வாக சிக்கல்கள் இருப்பதால்தான் ஆகும்.சாதகம் பார்க்க செல்பவர் சாதகத்தில் கேட்கவேண்டிய நல்ல பல கேள்விகள் உள்ளது அதனை கேட்டு பலன் பெற முயலுங்கள் என கூறி இப்பதிவினை நிறைவு செய்கிறேன்.

 நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
     97 151 89 647

       செல்
     740 257 08 99
       97 151 89 647

                           

 அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd,
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

Tuesday 9 October 2018

குட்டி சுக்கிரன் குடியை கெடுக்குமா ?

குட்டி சுக்கிரன் குடியை கெடுக்குமா ?


                      

செவ்வாய்பட்டி
 - ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 176 )

          ஒரு குழந்தையானது  இப்பூமியில் ஜெனிக்கும்போது வானவீதியில் பரணி,பூரம் மற்றும் பூராடம் இவற்றுள் ஏதாவது ஒரு நட்சத்திரமானது தொடுவானத்தில் இருப்பின்  அதனையே ஜென்ம நட்சத்திரமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.எனவே அவ்வாறு  பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசையே ஜெனன தசை இருப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

     ஒரு குழந்தையானது சுக்கிர திசையில் பிறந்தால் உடனே அக்குழந்தையை பெற்ற பெற்றோரும்,உற்றாரும்
 "ஆஹா ! குழந்தை குட்டிசுக்கிரனில் பிறந்துவிட்டது ,குடும்பத்தையே கெடுக்கபோகிறது " என வருத்தப்படுவதோடு இருந்தால் கூட பரவாயில்லை இந்த வருத்தத்தை அந்த குழந்தையிடமும் ,அந்த குழந்தையை பெற்ற தாயிடமும் காட்டுவதை எனது அனுபவத்தில் பல இடங்களில் பார்த்ததன் விளைவாக இவர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற விதத்தில் இப்பதிவினை பகிர்கிறேன்.

          எனது அனுபவத்திலும்,ஆராய்ச்சியின் அடிப்படையில்  குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் எனும் கூற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
       
".  குட்டி சுக்கிரன் குடியைக்கெடுக்கும்" எனும் சொல்லோடை ஏன் வந்தது எனில் சுக்கிரன் என்பவர் களத்திரகாரகர் என்பதோடு மட்டுமல்லாமல் காதல் நாயகர்,மன்மதன் எனும் காம கற்பனைகளுக்கும் சொந்தகாரகர்.சிற்றின்பத்திற்கு சொந்தக்காரகர் ஆவார்.

          ஒருவரை சிற்றின்பத்தின் மயக்கத்திற்கு உட்படுத்தி உடலியல் கவர்ச்சியால் காதல் எனும் மாய எண்ணத்தில் விழுந்து இருபது வயதுவரை பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோரையும் மறந்து காதலித்தவனை/காதலித்தவளை இழுத்துக்கொண்டு ஓடி திருமணம் செய்து கொண்டு இன்றைய நவீன உலகின் அபரித பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவர்களது காதல் என்ற உடலியல் கவர்ச்சி விலகி உண்மை முகம் வெளிப்பட்டு பிரிவுக்கோ அல்லது பிரச்சினைக்கோ உட்படுத்தும் என்ற அர்த்தத்தில்தான் நமது குட்டி சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றார்கள்.

                                

       குட்டி சுக்கிரனில் பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசை இருபது வருடம் என்பதால் வாலிப வயதுவரை அத்திசை வரும் என்பதால் அவ்வாறு இருக்கும் சுக்கிரன் மேற்கண்ட வகையில் இன்னல்களை தரும் என்ற அர்த்தத்தில்தான் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்றிருப்பார்களே ஒழிய மற்றபடி சுக்கிர திசையில் பிறந்த குழந்தையானது உடல்,உயிர் மற்றும் பொருளாதர கஷ்டங்களை தந்துவிடுவதில்லை.

           ஒரு நட்சத்திரத்திற்க்கு நான்கு பாதம் என்பதால் முதல் பாதம் எனில் சுக்கிர திசை 15-20 வருடத்திற்குள் வரும்.சுக்கிரனின் நட்சத்திரமான பரணி,பூரம்,பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசையானது குறைந்த பட்சம் ஐந்து வருடத்திற்குள் வரும் என்பதால் நான் குறிப்பிட்ட மேற்கண்ட வகையிலான பாலியல் சார்ந்த பிரச்சினைகளை குழந்தைகளுக்கு தரபோவதில்லை.

        சில நேரங்களில் சுக்கிரன் பெற்றுள்ள ஸ்தான அடிப்படையில் வேறுசில கஷ்டத்தை தரலாமே ஒழிய குட்டி சுக்கிரன் திசை தருவதில்லை.

          சுக்கினோடு காமகாரகன் செவ்வாய் சேர்ந்துள்ள நிலையில் காம எண்ணம் மேலோங்கி நிற்கலாம்.சுக்கிரனோடு சனி சேர்ந்த நிலையில் பெண்களால் அவமானம்,தகாத உறவுநிலைகளை தரலாம்.

        சுக்கிரனோடு ராகு சேர்ந்துள்ள சூழலில் காதல் மணம்,கலப்பு மணம் மற்றும் அந்நியதேசமனைவி போன்றவை அமையக்கூடும்.சுக்கிரனோடு சனி,செவ்வாய் மற்றும் ராகுசேர்ந்த நிலையில் மதியும் கெட பாலியல் சார்ந்த பிரச்சினைகளில் அடிபட்டு கெட்ட பெயர் வாங்க வைத்துவிடும்.

                             

        மேற்கண்ட வகையிலான முறையில் சுக்கிரன் பாதிக்கப்பட்டு குமரபருவத்தில் சுக்கிர திசையும் நடந்தால் வாழ்வில் தடம்புரண்டு,தடுமாறி கெட்ட பெயர் வாங்க வைத்துவிடும்.

          இதுபோன்ற பல கருத்துக்களை உள்ளடக்கித்தான் நமது முன்னோர்கள்  குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் ! என கூறியுள்ளார்கள்.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

   வாட்ஸ்அப்
     97 151 89 647

     செல்
    740 257 08 99
       97 151 89 647


                            

     அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc. ,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
   masterastroravi@gmail. com

My blogpot. click here

AstroRavichandransevvai blogspot com

AstroRavichandran. blogspot com

................................................

........

ஶ்ரீ ராகு பகவான் கெடுத்து கொடுப்பாரா ?

  ஶ்ரீ ராகுபகவான்கெடுத்து

  கொடுப்பாரா ?

                                         

கிரகங்கள் படுத்தும் பாடு-( 175 )

செவ்வாய்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

         ஶ்ரீ ராகு பகவான் லக்கனம்,இரண்டு ,நான்கு ,ஐந்து, ஏழு  மற்றும் எட்டாம் இடங்களில் கரும்பாம்பு என அழைக்கப்படும் ராகு பகவான் இருந்து அதன் திசை நடைபெறும் காலங்களில் பலவித இன்னல்களை தந்து கஷ்டப்படுத்தி கடன்காரர் ஆக்கி கஷ்டப்படவைக்கும்.

          ஒருவித போக எண்ணம் மேலோங்கி அதன் விளைவாக கடன்களையும்,எதிரிகளையும் மற்றும் பிரச்சினைகளையும் உருவாக்கி கொண்டு ஒரு சிலர் பல லட்ச கடன்காரர் ஆக்கி வீட்டைவிட்டே ஓடவிட்டு  அதாவது பலர் வெளி ஊர்,மாநிலம் மற்றும் நாடு சென்று அடிப்படையான வசதிகளுக்கே கஷ்டப்பட்டு பிறரிடம் அடிமை வேலை பார்க்கவைத்து பிறகு பணத்தின் அருமையும்,உறவுகளின் நிலைகளையும் புரியவைத்து இறுதியாக திசையின் முடிவை நோக்கி செல்லக்கூடிய காலகட்டத்தில் இழந்ததை மீட்பதோடு மட்டுமல்லாமல் பல லட்ச சொத்துகளுக்கு அதிபதியாக்கிவிடுவதை அனுபவத்தில் பார்த்த பின்புதான் ராகு பகவான் "கெடுத்து கொடுப்பார்" சொல்லோடையை நம்ப வேண்டியதாயிற்று.

         வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலனோரின் சாதகத்தில் ராகு பகவான் திசையோ அல்லது புத்தியோ நடப்பில் இருப்பதை பார்க்கலாம்.குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவான் குடியேறியிருப்போர் குடும்பத்தை விட்டு பிரியவேண்டிய கிரக நிர்பந்தத்தாலும் வெளிநாடு செல்வதை பார்க்கலாம்.

         இதேபோல வெளிநாடு ஸ்தானமான பணிரெண்டாமிடத்தில் ராகுபகவான் குடியேறி இருப்போரில் பெரும்பாலோனோர் கடல் கடந்து செல்லும் அமைப்பை தந்துவிடுகிறது.

          ஶ்ரீ ராகுபகவான் கெடுத்து கொடுப்பார் என ஏன் சொல்கிறார்கள் எனில் வெளிநாடு சென்றாலும் ,பணம் ஈட்டினாலும் குடும்பத்தை விட்டு பிரியும்  சூழலே ஒருவித மனகஷ்டம்தான்.

                          

           பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் பலமடைந்து நிற்பின் நவீன தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்குவான்.இனையதள வியபாரம்,கனிப்பொறி அடிப்படையாக software line ல் நிபுணத்துவம் பெற்று பணம் ஈட்டுவார்.பங்குசந்தை,அரசியல் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கிவான்.

             ஆறாமிடத்தில் உள்ள ராகுபகவான் எதிரியை வெல்வார்.சிங்கத்தை கண்ட எருதுபோல எதிரி பயந்து ஓடுவார்கள்.ஒருவித துணிச்சலான மனநிலை அவர்களிடையே காணப்படும்.எதிரிகளாலும்,
எதிர்ப்புகளாலும் பலன் பெறுவார்கள்.மறைமுக வருமானம் வரும்.

             எட்டாமிட ராகுபகவான அதன் திசை அல்லது புத்தி காலங்களில்  மறைமுக உண்மைகள் புலப்படவைக்கும்..மேலும் சோதிடம்,ஆன்மீகம்,தத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடவைத்து அவர்களுக்கு மறைமுக உண்மைகள் புலப்படவைத்து புகழின் உச்சிக்கு ஒருவரை கொண்டு செல்லும். வம்பு,வழக்கு ,
சிறைசெல்லல் மற்றும் கடன் தொல்லைகளை தந்து வாழ்வின் உண்மைநிலைகளை புரியவைக்கும்.

  பத்தாமிட தொடர்புடைய ராகுபகவான் திசை காலங்களில் செவ்வாய் பகவானும் பலம்பெற்ற சூழலில் ஒருவரை மருத்துவத்தில் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவும்,சிலர் கணிப்பொறி வல்லுநணராகவும் மற்றும் ஒரு சிலர் மக்கள் போற்றும் அரசியல் ஆலோசகராகவும் மாற்றி அழகு பார்க்கிறது.

வாக்குஸ்தானத்தில் உள்ள ராகுபகவான் சிறந்த அரசியல் ராஜதந்திரியாகவும்,சிறந்த பேச்சுவன்மை மிக்கவராகவும் இருப்பர்.

                         


 ஒரு நபரது சாதகத்தில் லக்கனத்தில் ராகுபகவான் நில்லஆமல் இருத்தல் நலம்.இந்த அமைப்பானது திருமண தடையை தருவதோடு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அவன்/அவள் தனது திறமையை உலகுக்கு காட்டமுடியாதபடி இருளில் நிற்க வைக்கும்.

ஒருவருக்கு ராகுபகவான் வாழ்வின் எல்லாவித கஷடங்களையும் தந்து இறுதியில் வாழ்வின் உண்மைநிலையினை அறியவைத்து திசையின்  இறுதி காலத்தில் நன்மைதனை தந்துவிட்டு செல்வார் என்பது அனுபவ உண்மையாகும்.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

    வாட்ஸ்அப்
     97 151 89 647

      செல்
  740 257 08 99
    97 151 89 647

                          

    அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail. com

My website
AstroRavichandransevvai.blogspot.com

Monday 8 October 2018

சாதக கட்டங்களில் "மறைவு ஸ்தானங்கள்" தரும் யோக பலன்கள்

சாதக கட்டங்களில்  "  மறைவு ஸ்தானங்கள் " தரும் யோக         பலன்கள்.


                                       

கிரகங்கள் படுத்தும் பாடு-( 163 )

செவ்வாய்பட்டி
 - ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் துணை!

        பணிரெண்டு ராசி கட்டங்களில் மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை மறைவிடஸ்தானங்களாக கருதப்படுகிறது.

        இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் இடம்பெறும் வீடும்,மறைவிட ஸ்தான அதிபதிகள் இணையும் அல்லது பார்வைபெறும் கிரகங்களும் பாதிக்கப்படும் அல்லது கிரகங்களின் பலன்களை குறைக்கும் என்பது சோதிடம் தெரிந்த அனைவருக்கும் அறிந்த விஷயம் ஆகும்.

           இதேபோல சுப ஸ்தான அதிபதிகள் (கேந்திர,கோண அதிபதிகள் ) இந்த மறைவிட ஸ்தானம் ஏற யோக பலன்கள் மட்டுப்படுத்தப்படும்.

           மறைவிட ஸ்தானங்களில்        மூன்றாமிடமும்,பணிரெண்டாமிடமும் அதிகமாக கெடுதலை தரக்கூடிய மறைவிட ஸ்தானமாக கருதக்கூடாது என்பதையும் தங்களது நினைவிற்கு கொண்டு வருகிறேன்.

          இதில் மூன்றாமிட ஸ்தானமானது ஒருவருக்கு கீர்த்தி,புகழ் ,கற்பனை உணர்வு மற்றும் வீரிய ஸ்தானமாக கருதப்படுவதால் மூன்றாமிட அதிபதி , மூன்றாமிடங்களில் இடம்பெறும் கிரகங்கள் மற்றும் மூன்றாமாதிபதி சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்ளையோ அல்லது ஸ்தானங்களையோ பாதிப்பதில்லை.மாறாக யோகபலன்களை தர தவறுவதில்லை.

                            

           இதேபோல மறறொரு ஸ்தானமான பணிரெண்டாமிடமும் அதிக இன்னல்களை தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படவில்லை.பணிரெண்டாமிடம் விரய ஸ்தானமாக இருந்தாலும் அதேநேரத்தில் அயன,சயன ,படுக்கை,மோட்ஷ  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற யோகங்களையும் தரும் ஸ்தானம் என்பதால் இதன் திசை காலங்களில் இவை தொடர்பு பெறும் இடங்களையும் பெரும்பாலும் அதிகமாக  பாதிப்பதில்லை.

           ஆதலால் மறைவிட ஸ்தானங்களில் ஆறு மற்றும் எட்டாமிடத்தையும் தான் தொடர்பு பெறும் வீடுகள்,கிரகங்கள் ஆகிய இரண்டையும் பாதிக்க செய்கிறது.அதேபோல தமது வீடுகளில் இடம்பெறும் கிரகங்களின் ஸ்தான வலுவினை பாதித்து அவை தரும் பலன்களை தாமதப்படுத்துகிறது.

            உதாரணமாக ஏழாமிடம் களஸ்திர ஸ்தானம் என்பதால் ஏழாமிட அதிபதிகளுடன் இவ்விரு மறைவிட ஸ்தான அதிபதிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அல்லது ஏழாமிட அதிபதியானது இவ்விரு ஸ்தானம் ஏறி நின்றாலோ (6,8) திருமண தடையை உருவாக்கிவிடுகிறது அல்லது தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் தன்மையை குறைத்துவிடுகிறது.

                              

                     ஆறாமிடம்

          இவை அதிக இன்னல்களை தரும் மறைவிடஸ்தானமாக கருதப்படுவதன் காரணம் இவை பிணி,பீடை,ருண மற்றும் ரோகங்களை தரக்கூடிய ஸ்தானம் ஆகும்

          ஆதலால் இதன் திசை காலங்களில் பிணி மற்றும் எதிரிகளால் வரும் பேராபத்திலிருந்து  விலகிகொள்ள கடன்காரனாக மாறிக்கொள்வது நல்லது.

           இந்த ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் இடம்பெறலாம்.ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றால் தரும் பலனை" சாதக அலங்காரம் "எனும் சோதிடநூலில் இடம்பெறும் பாடல் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

" பொருந்தும் சிங்கத்தைக் கண்டு புடைபடும் இடபம்போல
இருந்த சத்ருக்களெல்லாம் இரந்து கைகூப்பிநிற்பர்
திருந்திய குபேரன்போல செல்வம் உண்டாகப்பாரில்
வருந்திடாது இருப்பான் ஆறின் மருவுதீக்கோளினாலே "

விளக்கம்

         ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றிருந்தால் பெரிய யானை தன்னிலும் சிறிய உருவமுடைய சிங்கத்தினை கண்டு வெகுண்டு ஓடுவதுபோல ,பகைவர்கள் யாவரும் சொல்வன கேட்டு வணங்கி நிற்பார்கள்.குபேரன்போல செல்வசெழிப்போடு வாழ்வான் என பாடல் விளக்குகிறது.

         ஆனால்  ஆறாமிட அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற பலங்களை பெற்று இருந்தால் கடன்,பிணி மற்றும் எதிர்ப்புகளை சாதகருக்கு ஜெனன காலத்திலிருந்து தரும் எனினும் தனது திசை காலங்களில் சற்று கூடுதலாக தரும் என்பது பொது விதி எனினும் முற்றிலும் இந்த ஆறாமிடம் மற்றும் அந்த ஸ்தான அதிபதிகள் கெடுதலை மட்டுமே தரும்  என  பலன் கூறிவிட முடியாது.

        இந்த ஆறாம் வீடு சுப கிரகங்களான குரு,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு மறைவிடங்கள் ஆகும்.இக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும் பட்சத்தில் மறைவிடங்களில் நிற்கும்போது கேந்திராதிபத்திய தோஷம் நீங்கி சுப பலன்களை தருகிறது.

     ஒருவருக்கு ஆறாம் இடம் வலுப்பெற்று லக்கனாதிபதி பலம் இழந்து இருப்பின் எந்நாளும் கடன் ,பிணி மற்றும் பீடை உடையவனாக திகழ்வான்.

      அதேநேரத்தில் ஆறாம் இடம் என்பது ஒருவரது வெற்றியையும் குறிக்கும்.

                               

                             எட்டாமிடம் 

      இது ஒரு சாதகருக்கு வம்பு,சண்டை,வழக்கு ,சிறைசெல்லல் மற்றும் மரணம் போன்றவற்றை தரும் ஸ்தானம் என்ற வகையில் இந்த ஸ்தான அதிபதி பலம் பெற்று தனது திசை நடக்கும்போது மரணத்திற்கு நிகரான கெடுபலன்களை கொடுக்கும்.

      ஆயுள்ஸ்தானம் என்ற வகையில் பலம்பெற்று நிற்கும்போது ஆயுள் பலப்படும்.மேலும் மறைபொருள் உண்மைகள் ஒருவருக்கு புலப்பட எட்டாமிடம் பலமடையவேண்டும்.

யோகபலனை எப்பொழுது தரும்

 மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களில் பலப்படுவது யோகத்தை தரும்.

விபரீத ராஜயோகம்

          மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெறும்போது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களிலே பரிமாறிக்கொள்ளும்போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.

            உதாரணமாக ஆறுக்குடையவன் பணிரெண்டிலும்.பணிரெண்டுக்குடையவன் வேறு ஏதேனும் (3,6,8) மறைவிடங்களிலோ இடம்பெறுதல்.

          இதன்பலனாக மாளிகை போன்ற வீடு அமையும்.இதற்கு சுக்கிரன் ,நான்காமிட அதிபதியின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.

             பொதுவாக மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் ஐந்து மற்றும் ஒன்பதாம் இட அதிபதிகள் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் நலம் பயக்கும்.

  நன்றி.ஆராய்ச்சி தொடரும்....


                                    

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  வாட்ஸ்அப் எண்

    97 151 89 647

   செல்
    97 151 89 647
       740 257 08 99

                                     

  அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
 M Sc,MA, BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My website
AstroRavichandransevvai.blogspot.com

My email
masterastroravi@gmail. Com

--------------------------------------------------------------------.

கோசார கிரக நிலைகளும் மற்றும் ஜெனன கால கிரக நிலைகளும்-( 1 )

கோசார கிரக நிலைகளும் மற்றும் ஜெனன கால கிரகநிலைகளும்.- ( 1 )


                       

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 137 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

          ஒவ்வொறு குழந்தையும் பிறப்பதற்கான இடம் , நேரம் மற்றும் நபரை தானே தேர்ந்தெடுத்து பிறக்கிறது.கலவியில் ஈடுபடும் தந்தையின் விந்து செல்கள் ஆயிர கணக்கில் வெளிப்பட்டாலும் எல்லா விந்து செல்களும் பெண்ணின் அண்ட செல்லுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுவதில்லை.

           ஏதோ ஒரு வீரியமிக்க விந்து செல் மட்டுமே அண்ட செல்லோடு இணைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுகிறது.இவ்வாறு கருமுட்டை உருவான பிறகு எத்தனை வீரிய விந்து செல்கள் வெளிப்பட்டாலும் கருமுட்டைகள் நுழைந்துவிட முடியாது.

        இந்த உருவான நேரத்திலிருந்து சாதகருக்கான கிரகநிலை பாதிப்பானது ஆரம்பிக்கிறது.இக்கரு உருவாகும் நேரத்தினை ஜெனன நேரமாக கொண்டு கணித்து பலன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அவனது சாதகபலன் துல்லியமாக கிடைக்கும்.

         ஆனால் இவை இயலாத காரியமாகும்.யாராலும் கரு உருவாகும் நேரத்தை  துல்லியமாக கண்டறிய முடியாது.இது படைப்பின் இரகசியமாகும்.நான் பதிவின் ஆரம்பித்திலே கூறியதுபோல .ஒவ்வொறு பிறப்பும் குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் ,இடம் மற்றும் பெற்றோரை தேர்ந்தெடுத்தே பிறப்பு எடுக்கிறது.குழந்தையானது கருவாகி வளர ஆரம்பிக்கும்போது பிரபஞ்ச கதிர்களின் தாக்கம் அக்குழந்தைக்கு கிடைத்துவிடுகிறது.

          கரு உருவாகும் நேரத்தை சரியாக நம்மால் கணிக்க இயலாமையால்தான் அக்குழந்தையானது இப்பிரபஞ்சத்தை வெளியில் தொடும் பிறப்பு நேரத்தையே ஜெனனநேரமாக கொண்டு சாதகம் கணிக்கப்படுகிறது.அக்குழந்தை ஜெனிக்கும்போது பால்வீதியில் அடிவானத்தில் தொடும் அன்றைய நட்சத்திரங்களை ஜெனன நட்சத்திரமாக கொண்டும் அப்பொழுது வான வீதியில் அமைந்துள்ள கிரகநிலைகளை அதன் பாகை அடிப்படையாக கொண்டு பணிரெண்டு ராசிகளில் அடைக்கப்பட்டு ஜெனன சாதகம் கணிக்கப்படுகிறது.

                          

          ஜெனன சாதகத்தை கொண்டு ஒருவருக்கு சாதக பலன் அளிக்கும்போது அன்றைய நிலையில் வான வீதியில் உள்ள கிரகநிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

        உதாரணமாக 
ஜெனன காலத்தில் சனிபகவான் எங்கு இருக்கிறார் ?  சாதகம் பார்க்கும் காலத்தில் அதே சனிபகவான் கோசார நிலையில் எந்த ராசியில் இருக்கிறார் ? என்பதை கவனித்து சனி கிரகம் சார்ந்த பலனை அளிக்க வேண்டும்.

        ஜெனன காலத்தின் சனிபகவான் இருந்த வீடு அவை பெற்ற சாரம்,பார்வை மற்றும்,சேர்க்கை நிலை ஆகியவற்றை கவனித்து பிறகு அன்றைய நிலையில் நவகோள்கள் இடம்பெறும் கட்டநிலையில் சனிபகவான் எந்த வீட்டில் இருக்கிறார்.அன்றைய நிலையில் அவரை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகநிலைகள் ஆகியவற்றை கணக்கிட்டு பலனளிக்கப்படுகிறது.

        அதாவது ஜெனன மற்றும் கோசார கிரக நிலைகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து சோதிடரின் அனுபவத்தோடு இணைத்து பார்த்து இறைஆசியோடு பலனளிக்கப்படவேண்டும்.

         இந்த  கோசார அடிப்படையில் சனிபகவான் சுற்றி வரும்போது அவரவர் ராசிக்கு அதாவது  சந்திரபகவானுக்கு பணிரெணடில் வரும்போது ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.

     சனிபகவான் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டை எடுத்துக்கொள்வதால் பணிரெண்டாமிடத்தில் வரும்போது விரய சனி என்றும் ,ராசியை அடையும்போது ஜென்மசனி என்றும் ,இரண்டாமிடத்தில் வரும்போது பாதசனி என இந்த மூன்று ராசிகளை கடப்பதையே நாம் ஏழரை சனி என அழைக்கிறோம்.

        இதேபோல ராசிக்கு நானக்காமிடத்திற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனி எனவும்,ஏழாமிடத்திற்கு வரும்போது கண்டசனி எனவும் மற்றும் எட்டாமிடத்திற்கு வரும்போது அட்டமசனி எனவும் அழைக்கப்படுகிறது.

       இங்கு ஏழரை சனி எனும்போது ஏழரை ஆண்டுகளுமே இன்னல்களை தருவதில்லை. ஆனால் சிலநேரங்களில் சில ராசிகளுக்கு  ஏழரை சனி காலத்தில் நன்றாக இருப்பதுபோல இருந்துவிட்டு கடைசியில் ஏழரை மாதமோ அல்லது ஏழரை நாழிகையோ ஒரு உலுக்கு உலுக்கி கஷ்டங்களை தந்து வாழ்வின் எல்லா அனுபவங்களையும் பெறவைப்பார்.

                             

        இந்த ஏழரை சனி மூலம் அதிக இன்னல்களை அனுபவிப்பதன் மூலம் வாழ்வின் உண்மைநிலைகளையும் மற்றும் உண்மையான உறவுகளையும் ,நண்பர்களையும் இனம் காண உதவுகிறது.

        அதேபோல எல்லா  ராசிகளுக்கும் ஒரே மாதிரியான மற்றும் ஒரே அளவான கஷ்டங்களையும் தந்துவிடுவதுமில்லை.இந்த ஏழரை சனியானது சனியின் பகை வீடுகளான செவ்வாய் மற்றும் சூரியனை அதிபதிகளாக கொண்ட வீடுகளுக்கு சற்று அதிக இன்னல்களை தருகிறது.

        இதேபோல ஏழரை சனி நடைபெறும்போது சந்திரதிசை நடந்தாலோ அல்லது சனிபகவான் ஆனவர் சந்திரசாரம் பெற்றிருந்தாலோ அல்லது சந்திரனோடு அரவுகளான ராகு அல்லது கேது பகவான் சேர்ந்துள்ள நிலையில் ராகு அல்லது கேது திசை நடந்தாலோ  இந்த நிலையான சாதகருக்கும் சற்று கூடுதலான கஷ்டங்களை ஏழரை மற்றும் அட்டம சனி தரக்கூடிய சூழல் அமைகிறது.

         இதனால் மற்ற ராசி காரர்களுக்கு இன்னல்களை தராது என பதிவிடவில்லை.மேற்கண்ட சூழல்களில் சற்று கூடுதலான கஷ்டங்களை தருகிறது என்பதை எனது அனுபவத்தில் கண்ட உண்மைகளை எல்லோறும் அறிந்து கொள்ள பகிர்கிறேன்.

           மனிதனாக பிறந்த அனைவரும் அவரவர் கர்மபலனை அனுபவித்தே தீரவேண்டும்.இதில் இன்பம் மற்றும் துன்பம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்த விஷயம் ஆகும்.அவரவர் செய்யும் பூர்வபுண்ணியப்படியும் மற்றும் நிகழ்காலத்தில் எண்ணும் நல்ல சிந்தனை,சேவை மற்றும் இறைவழிபாடு அடிப்படையில் விதிபலனை மாற்றியோ அல்லது தாங்கிகொள்ளக்கூடிய மனவலிமையையோ இறைவன் அளிக்கிறார் என்பதே உண்மை ஆகும்.

தொடரும்..

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் பெறலாம்.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

  செல்
  740 257 08 99
   97 151 89 647
வாட்ஸ்அப்
  97 151 89 647

                                    

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமழ்நாடு.

Sunday 7 October 2018

கிரகங்களின் சில விஷேஷ இணைவுகள்

கிரகங்களின் சில விசேஷ இணைவுகள்


                             

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

         கிரகங்கள் படுத்தும் பாடு

நன்றி நூல் ஆதாரம் ; ஜோதிட ஆராய்ச்சி திரட்டு

         கிரகங்கள் எப்பொழுதும் ஒரு ராசியில் தனித்து இருப்பதைவிட உடன் கிரகங்கள் இணைந்து இருப்பது நல்லது ஆகும்.இயற்கை சுப கிரகமாக குருபகவான்  இருந்தாலுமே அக்கிரகம் தனித்து நின்றால் நல்லது அல்ல என்பது சோதிட விதி .அதாவது "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும்" என்கிறார்கள்.

  இவ்வாறு இணைந்து நின்கின்ற பொழுது  "சூரியனுடன் இணையும் கிரகங்கள் அஸ்தங்க தோஷம் பெறும் என்றாலும் மேஷம்,கடகம்,சிம்மம் ,விருச்சிகம் மற்றும் தனுசு போன்ற ராசிகளுக்கு சூரியனுடன் இணைவு பெறும் கிரகங்கள் யோக பலன்களை தருகின்றன.சூரியனுடன் குரு, சந்திரன் ஆகிய முக்கூட்டு கிரகங்களின் இணைவு விசேஷ பலனை தரும்.

 மேஷ ராசிக்கு சூரியன் முதல் திரிகோணமான ஐந்துக்குடைய யோகர் ,கடக ராசிக்கு தன காரகர்,சிம்ம ராசிக்கு லக்கினாதிபதி ,விருட்சக ராசிக்கு ஜீவன காரகர் மற்றும் தனுசு ராசிக்கு இரண்டாவது திரிகோணம் என அழைக்கப்படும் பாக்கியாதிபதி என்பதுடன் ராசிக்கு யோகரும் ஆவார்.ஆதலால் இந்த அடிப்படையில் ஆய்ந்து இந்த ஐந்து ராசிகளுக்கும் சூரியனுடன் இணைவு பெறும் கிரகங்கள் மிகுந்த யோக பலன்களை தருகின்றன்.

 சூரியனுடன் அஷ்டமாதிபதி,ராகு மற்றும் கேதுக்களின் தொடர்பு அறவே சாதகருக்கு ஆகாது.அஷ்டமாதிபதியான ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்தாலும் அதன் பலனை இழப்பதில்லை.

  மேஷ ராசிக்கு தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சூரியன்,குரு மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைவு விசேஷ பலனை தரும். குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமானது களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு ஆயுள் ஸ்தானமாக வருவதால் இங்கு ஒரு கிரகம் உச்சம் பெறக்கூடாது என்பது சோதிட விதி எனினும் சில வேளைகளில் விதிவிலக்குகள் ஏற்படுவதும் உண்டு.இங்கு உச்சம் பெற்ற சந்திரனுக்கு குரு பகவானின் இணைவு சமன்செய்து மூலநூல்களில் கூறியுள்ளபடி கெடுபலன்களை தராமல் செய்துவிடும்.

                                

 சில நேரங்களில் பொது விதியானது கிரகங்களின் இணைவு, பார்வைக்கு ஏற்றவாறும் ,லக்கினத்துக்கு சுப,அசுப ஸ்தானங்களுக்கு ஏற்றவாறும் மூல நூல்களில் கூறியுள்ள பொது பலன்களில் சில மாற்றங்கள் உண்டாகலாம்.இதனை "சிறப்பு பலன்கள்" ஆகும்.

 மேஷ ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் இடமான கடக ,சிம்ம வீடுகளுக்கு சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் இணைவு ஆனது விசேஷ பலனை தரும்.

  மேஷ லக்கின காரர்களுக்கு சூரியனுடன் செவ்வாய்,ராகு மற்றும் கேது இணைவு உகந்தது அல்ல.பொதுவாகவே அரவான  ராகு எக்கிரகத்துடன் இணைந்தாலும் அதன் இயல்பான பலனையே மாற்றிவிடக்கூடிய தன்மை உரியது.
உச்சம் அடைந்த சூரியன், ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் சனிபகவானின் இணைவு கூட நல்லது ஆகும்.ஆனால் ராகு பகவானின் இணைவு நல்லதல்ல.இது சம்பாத்தியத்தில் சிக்கலை தர வாய்ப்பு உண்டு.

 ஒருவரது சாதகத்தில் இலக்கினத்திற்து இன்ன இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுபோன்ற பலன்களை தரும் என சோதிடர்கள் உறுதியாக பலன் அளிக்க வேண்டும் என்றால் அக்கிரகம் தனியாக எவர் பார்வை அல்லது இணைவு இன்றி இருக்கும்பொழுது மட்டும்தான் அப்படியே கூறியபடியான பலன்கள் சாதகருக்கு நடக்கும்.

 மேஷ ராசியில் ராசி அதிபதிக்கு ஜென்ம விரோதியான சனி இடம்பெறக்கூடாது என்பது பொதுவான விதி.அத்துடன் உச்சம் அடைந்துள்ள சூரியன் பகவான் உடனும் அவரது மைந்தரான சனி சேர்ந்து இருப்பது நல்லதல்ல என்றாலும் அந்த இடத்தில் சூரியன், சனி இவர்களுடன் குரு பகவானும் இணைவு பெறுவதன் அடிப்படையில் சோதிடர்களாகிய நாம் எதிர்பார்த்த பலனை விட நற்பலன்களை தரும்.

 எனவே ஒரு கிரகம் தரும் தனித்துவ பலன் ஆனது சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்களை பொறுத்து பலனில் மாறுதல் அடைகிறது.

மேஷ லக்கனத்திற்கு நான்காம் இடமான  கடகத்தில் சூரியன், குரு மற்றும் சந்திரன் இணைவு தொழஇல் விருத்தியை தந்து சுகபோக வாழ்வினை சாதகருக்கு தரும்.இதேபோல பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் தனுசுராசியிலும் கடகத்தினைப்போல  இம்முக்கூட்டு கிரகங்களின் இணைவானது சிறப்பான பலன்களை தரும்.

                                    

  மேஷ லக்கனத்திற்கு தொழில் ஸ்தானமான மகர வீட்டில் சூரியன், குரு  மற்றும் வளர்பிறை சந்திரன் இணைவு சிறப்பினை தரும். இங்கு சூரியனுடன் இணையும் சனி பகை கிரகம் என்ற பொழுதிலும் நீச பங்கம் பெற்ற குரு பகவான் இணைவு சூரியனுக்கு வலுவினை தந்து பாதிப்பிலிருந்து சமன் செய்து நற்பலனை தர வைக்கிறார்.

 மேஷ லக்கனத்திற்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சனி இணைவானது கெடுபலன்களை தந்துவிடுவதில்லை.
பதினொறாம் அதிபதி ஆட்சி பெற்று நிற்பது நல்லது எனினும் சப்தமாதிபதி பலம் பெறாத சூழலில் தாரதோஷத்தினை தந்துவிடுகிறது.

 இதுவரை மேஷத்தினை லக்கனமாக கொண்டு கிரகங்கள் தனித்து நிற்கின்ற நிலையில் (சுப/அசுப பலன்கள்)  தருகின்ற பலன்கள் அக்கிரகத்துடன் மற்ற கிரகங்களது பார்வை அல்லது சேர்க்கையினை பொறுத்து பலன்கள் எவ்விதம் மாறுபடுகிறது என்பதனை பார்த்தோம்.

 இதேபோல தொடர்ந்து வரும் அடுத்த பதிவுகளிலும் அடுத்தடுத்த ராசிகளை லக்கனமாக கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.

  நன்றி!

 (தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   97 151 89 647

       செல்
  740 257 08 99
    97 151 89 647

                                   

 அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd,
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com

..........................................

தனம் சேர்க்கும் யோகம் எனது சாதகத்தில் உண்டா ?

தனம் சேர்க்கும் யோகம் எனது சாதகத்தில் உண்டா ?

                        

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு

         ஒருவர் கை நிறைய காசு பணங்களை சம்பாரித்து வெற்றி பாதையினை நோக்கி முன்னேறி சென்றுகொண்டிருக்கும்
போது  அந்த வெற்றிக்கு "தனது அறிவோ அல்லது திறமையோ காரணம" என மார்தட்டிக்கொள்ளும் மானிடர் ,தமக்கு தோல்வி வந்து அடிப்படை தேவைக்கே பொருள் ஈட்ட முடியாத சூழல் உண்டாகக்கூடிய நிலையில் மட்டும் 
"கால நேரம் சரியில்லை" என்ற குற்றசாட்டினை வைப்பதை பெரும்பாலான நபர்களிடம் பொதுவாக காண்கின்றோம்.

    ஒருவர் உயர்வு பாதையினை நோக்கி முன்னேறி செல்வதற்கும்,தாழ்வு பாதையில் சரிந்து விழுவதற்கும் கோள்கள் நடத்தும் கோளாட்டமே காரணம் ஆகும்.

          ஒருவர் உயர்வு பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய கிரகநிலை,மற்றும் நடப்பு திசை ஆகிய உகந்ததாக இருப்பின் அவருக்கு எத்தனை தடைகள் வந்தாலும்,சரியான நிர்வாக மற்றும் கல்விதிறமை இன்றி இருந்தாலும் அவரது யோகபலனால் ஒரு குறிப்பிட்ட திசைக்குள்  நன்கு பொருள் ஈட்டி நல்ல சமூக அந்தஸ்தினை பெற்ற நபராக மாறிவிடுகிறார்.

           எவ்வளவோ அறிவு,திறமை மற்றும் கல்வியறிவு இருந்தும் உகந்த திசையமைப்புகள் அமையாதபட்சத்தில் சகலவற்றையும் இழந்து கடன்காரர் ஆகிவிடுகின்றனர்.

            ஒருவர் நன்கு பொருள் ஈட்ட வேண்டும் எனில் அவரது சாதகத்தில் முக்கியமாக தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம் நன்கு பலமடைந்து இருக்கவேண்டும்.

           அதற்கு அடுத்தபடியாக பாக்கிய ஸ்தானம் (வருமான ஸ்தானம் ) என அழைக்கப்படும் மூன்றாவது திரிகோணமான ஒன்பதாம் இடம் பலமடைந்து நிற்கவேண்டும்.

                             



             ஒருவரது வாழ்வில் ஜீவன ஸ்தானம் என அழைக்ப்படும் தொழி்ல் ஸ்தானமும் பலமடைந்து  நிற்க வேண்டும் .

            லாபஸ்தானமான பதினொறம் இடம் இதனை தொடர்ந்து வலுப்பெற்று நிற்கவேண்டும்.

              இவைமட்டும் அல்லாமல் தனம் சேர்க்கும் யோகத்தினை அளிக்கும் குருபகவானும் பலமடைந்து நிற்கவேண்டும்.
குருபகவான் தனத்தினை தர வழிவகுப்பவர் ஆவார்.ஆனால் சுக்கிரபகவான் செலவு செய்ய வைப்பவர் ஆவார்.

                   மேற்கண்ட நான்கு (2,9,10,11) ஸ்தானங்களும்,தனகாரகர் குருபகவானும்  பலமடைந்து தங்களுக்குள் பரிவர்தனையோ அல்லது பார்வை அல்லது தொடர்பினை பெற்று சுபர் பார்வை பெற்று இவர்கள் நால்வரில்  யாரவது ஒருவரது திசை நடப்பில் இருக்கும் காலங்களில் இவரது ஜீவன ஸ்தானம் காட்டும் தொழிலினை தொடங்கி  நிறைய காசு,பணம்களை சம்பாரித்து பொருளாதர நிலையில் சமூக அந்தஸ்து உடைய நபராக வாழ்வினில் வலம் வருவார்.

             தனயோகம் சிறப்பாக செயல்பட அவரது சாதகத்தில் சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் என அழைக்கப்படும் லக்கனாதிபதியும் பலமடைந்து நிற்கவேண்டும்.

  ஒருவருக்கு கோசார பலன்களான ஏழரை சனி,அட்டம சனி நடைபெற்றுகொண்டிருக்கும் காலங்களிலும் ஒருவர் பொருள் ஈட்ட முடியாத சூழலையோ அல்லது தனாதிபதியின் வலிமையினை பொறுத்து பணமே சம்பாரித்தாலும் அவர் ஈட்டிய பணம் அனைத்தும் வந்த வழி தெரியாமல் செலவழிந்து மிச்சப்படாத சூழல் அமைந்து விடுவதும் உண்டு.

 இதேபோல ஒருவருக்கு மறைவிட அதிபதிகளின் திசை,புத்தி காலங்களில் (6,8 ) என்னதான் தனயோகம் உடையவர் ஆயினும் சம்பாரித்த பொருள் அனைத்தும் இழந்து நிற்பர்.

           உதாரணமாக  மேஷ ராசிக்கு 3,6 க்கு உடைய புதன்திசையினிலோ ,கன்னி ராசிக்கு 3,8 க்கு உடைய செவ்வாய் திசைகாலங்களிலோ ,துலாம் ராசிக்கு 3,6 க்குடைய குருபகவான் திசையினிலோ ,மீன ராசிக்கு 3,8 க்கு உடைய சுக்கிர திசையிலோ ஒருவர் என்னதான் பொருள் உடைய பெரும் தனக்காரர்களையும் கடுமையாக சோதித்து கஷ்ட ,நஷ்டங்களை தந்துவிடுகிறது.

                         

           மற்ற ராசிகளுக்கு ஓர் இடம் மறைவிடம் ஆக இருந்தாலும் அந்த கிரகத்தின் மற்றொரு வீடு சுப வீடாக அமைந்துவிடுவதுண்டு.
உதாரணமாக
சிம்ம வீட்டிற்கு குருபகவான் அட்டமாதிபதியாக இருந்தாலும் மற்றொரு ஆதிபத்தியம் ஐந்தாமிடம் ஆகி லக்கன யோகர் ஆகிறார் குருபகவான் .ஆதலால் அதன் திசை காலங்களில் முழுவதும் கஷ்டங்களையே தந்துவிடுவதில்லை.

          ஒருவர் பொருள் ஈட்ட வேண்டுமாயின் தன ஸ்தானத்துடன் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆம் இடங்களும் பலமடைந்து நிற்கவேண்டும்.

          ஒரு சிலர் எவ்வளவு முயன்று கடினமாக உழைத்தாலும் பணம் அவர்களது கையில் நிற்பதில்லை .இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கில் அவரது சாதகத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் வலுப்பெற்று நின்று நல்ல வருமானத்தினை தரக்கூடிய நிலையில் அவரது சாதகத்தில் தனகாரகன் குருபகவானும், தனாதிபதி பலம் இழந்து காணப்படும் அமைப்பினை பெற்றிருப்பார்கள்.

      இது போன்ற தனயோகம் அற்றவர்கள் பரிகாரமாக தாம் சம்பாரிக்கும் பணத்தினை தன் கையில் வைத்திருக்காமல் குடும்பத்தில் யாருக்கு தனத்தினை சேர்த்து வைக்கும் யோகம் உள்ளவர்களிடம் கொடுத்து பணநிர்வாகம் செய்யவைக்கவேண்டும்.

            சிலநேரங்களில் முன்னரே ஏதாவது ஒரு நகையினையோ அல்லது இடமோ அல்லது இவை இரண்டையும் கடனாக வாங்கி தவணைமுறையில் கட்டும்படியான நிலையினை உருவாக்கி கொள்ளவேண்டும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஷ் அப்
     97 151 89 647

    செல்
   740 257 08 89
     97 151 89 647

                              


     அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

Email
  masterastroravi@gmail.com

My blog. Google search
  AstroRavichandran. blogspot. com

  AstroRavichandransevvai.blogspot. com

.......