Friday 30 June 2023

திருமணம் எப்பொழுது நடக்கும்?

 திருமணம் எப்பொழுது நடக்கும்?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


        ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன்  திருமணம் நடக்கவில்லையா? 

அல்லது திருமணம் எப்பொழுது நடக்கும்? 

அல்லது  நடந்து பிரிந்து இருக்கிறார்களா ? குழந்தை பாக்கியம் கால தாமதம் ஆகி கொண்டிருக்கிறதா ? இது  போன்ற கேள்விகளுக்கு விடை தர முடியுமா? என கேட்டால் கட்டாயம் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தர முடியும்.


  சரியான பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை  கொண்டு சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தினை கொண்டு ஜோதிடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடை தர முடியும்.


 ஒருவருக்கு திருமணம் இன்னும் நடக்க வில்லை என்பதை அவருடைய ஜாதகத்தில் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்களை லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.இவை தவிர திருமண ஸ்தானத்திற்கு அதாவது தாம்பத்திய சுகத்திற்கு  காரகரான களத்திர காரகன் என அழைக்கப்படும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.லக்கனம் மற்றும் லக்கனாதியின் வலிமை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய இரண்டும் என்பதால் இவைகளுக்கு ஏற்பவே திருமணம் நடந்து இருக்கிறதா ? அல்லது எப்போது நடக்கும்? திருமணம் நடந்து பிரச்சினை அல்லது பிரிவினை ஏதாவது உண்டா? புத்திர பாக்கியம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு துல்லியமாக பதில் தர இயலும்.


 ஒருவருக்கு திருமணம் இதுவரை நடக்க வில்லை என்பதையும் அதே நேரத்தில் திருமணம் எப்பொழுது நடக்கும் அல்லது திருமணமே நடக்காது என்பதையும் மேற்குறிப்பிட்ட (1,2,7,8) ஸ்தானங்களுடனும் , அதன் அதிபதிகளுடனும்  மற்றும் கார்க் கிரகங்களுடனும் சுப கிரக அல்லது பாவ கிரக தொடர்பு அடிப்படையில் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்.


 இயற்கை பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் அல்லது காரக கிரகங்கள் உடன் நின்றாலும் அல்லது அந்த ஸ்தானங்களை மற்றும் கிரகங்களை சனி மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் பார்வை செய்து லக்கன அவயோக அல்லது ஆறு ,எட்டுக்குடைய தசை நடப்பில் இருந்தாலும் அல்லது கோச்சார அடிப்படையில் தென்மச்சலியின் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலம் அஸ்தம சனி காலம் நலத்தில் இருந்தாலும் அவருக்கு திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்லும் எனவே அவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதியாக கூறிவிட முடியும்.


உதாரண ஜாதகம்-(1)

 இவருக்கு 47 வயது வரை இன்னும் திருமணம் நடைபெறவில்லை.


பிறந்த தேதி 13.03.1976 , பிறந்த நேரம் 6.30 am

மீன லக்னம், கடக ராசி ,

பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம்.


 இவருடைய  ஜாதகத்திலே லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய் ,சனி ஆகிய இரண்டு கிரகங்கள் பார்வை செய்கிறது.அதாவது செவ்வாய் மிதுன வீட்டில் இருந்து நான்காம் பார்வையாகவும், சனி கடக ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாகவும் பார்வை செய்கிறது.


 ஏழாம் இடத்திற்கு வேறு எந்தவிதமான சுபத்துவமும் இல்லாத நிலையில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனித்தனியாக பார்த்தால் அல்லது சேர்ந்து பார்த்தாலோ அந்த இடம் சர்வ நாசம் ஆகும் என்பது விதியாகும்.


 மேலும் ஏழாம் அதிபதி புதன் 12 இல் மறைவு, களத்திரகாரகன் சுக்கிரனும் 12ஆம் இடத்தில் மறைந்துள்ளார். லக்னத்திற்கு  இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில்  குரு பகவான் உடன் கேது இணைந்த நிலையில் சனி தனது பத்தாவது பார்வையால் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்ப ஸ்தானமுமும் கெட்டு விட்டது. மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் ராகு தொடர்பு.


  திருமண வயதை நெருங்கிய இருபத்தைந்தாவது வயதில் மீன லக்கனத்திற்கு அவயோக தசையான மூன்று மற்றும் எட்டுக்குரிய சுக்கிர தசை அதனைத் தொடர்ந்து  ஆறுக்குடைய சூரிய தசை 50 வயதை நெருங்கும் அதற்கு அடுத்து வரக்கூடிய சந்திர தசையோ யோக தசையாக இருந்தாலும் தசைநாதன் சந்திரனும் சனி சேர்ந்து நிலையில் திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.


 ராசிநாதன் சந்திரனுடன் சனி பகவான் இணைந்து ஏழாம் இடத்தை பார்வை செய்கிறார்.  ராசிக்கு ஏழாம் இடத்தை சனி ஏழாம் பார்வையாகவும் , செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து ராசிக்கு ஏழாம் இடமும் மிகுந்த பாவத்துவ நிலை  அடைந்து விட்டது.


உதாரண ஜாதகம் -2


 திருமணம் நடைபெற்றுவிட்டது .ஒரே வீட்டில் இருந்தாலும் 6 வருடமாக பேசி கொள்ளாமல் இருக்கும் ஜாதகம்.பிரிவு ஜாதகம் 


பிறந்த தேதி: 08.10.1978

பிறந்த நேரம்: 7.03 pm

ஜென்ம லக்னம்; மேஷம்

ஜென்ம ராசி: தனுசு

ஜென்ம நட்சத்திரம்: மூலம் -4 ம் பாதம்


  இவருடைய ஜாதகத்திலே‌ ஏழாம் இடத்தில் தன மற்றும் களத்திர  ஸ்தானாதிபதியும் மற்றும் களத்திரக்காரனுமான சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் திருமணம் இவருக்கு நடைபெற்று விட்டது.


  ஆனால் இந்த சுக்கிரன் உடன் இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சேர்ந்து நின்ற நிலையில் சனிக்கு பகை வீடான சிம்மம் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சனி பார்வை செய்து ஏழாம் இடம், ஏழாம் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் பாவத்துவ மாக்கி விட்டது.சனி தனது பத்தாவது பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து விட்டது. திருமணம் நடைபெற்ற சில வருடங்களிலே செவ்வாய் தசை ஆரம்பித்து விட்டது.தனுசு ராசிக்கு கோச்சார படி ஏழரை சனியும் நடப்பில் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக மனம் ஒத்து இல்லை.பேசி கொள்வது இல்லை.சனி பெயர்ச்சி நடைபெற்று விட்டதாலும் செவ்வாய் தசை முடியும் வரை இந்நிலை தொடரும்.அடுத்து வரும் 4,9 பரிவர்த்தனை பெற்ற சந்திரன் தசையில் இணைந்து விடுவார்கள்.


உதாரண ஜாதகம் -3


புத்திர பாக்கியம் கால தாமதமாகி கொண்டிருக்கும் ஜாதகம்


பிறந்த தேதி 28/29 .03.1984

பிறந்த நேரம் 4.55 am

ஜென்ம லக்னம்  மற்றும் ராசி: கும்பம்

ஜென்ம நட்சத்திரம்: அவிட்டம் -4-ம் பாதம்


  ஜாதகத்தில் ராசி லக்னத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி புதன் பகவான் தனது பகை வீடான செவ்வாய் வீடு ஏறி நின்று  உச்சம் பெற்ற சனி பகவானுடைய சமசப்தம பார்வையை பெற்றுள்ளது. ஐந்தாம் அதிபதி புதனுக்கு குரு பகவான் உடைய பார்வை கிடைத்தாலும் அந்த குரு பகவானையும் சனி மூன்றாம் பார்வையாக பார்த்து பாவத்துவப்படுத்திவிட்டது.


 கோச்சார அடிப்படையில் கும்ப ராசிக்கு தற்பொழுது ஏழரைச் சனியும் நடப்பில் உள்ளது. நடப்பு தசையும் சனி திசையில் சனி புத்தி நடைபெறுவதால் புத்திர பாக்கியம் காலதாமதம் ஆயிக் கொண்டு செல்கிறது.


    ஒருவருடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் சரியாக நீங்கள் தரக்கூடிய பட்சத்தில் உங்களுடைய வாழ்க்கையிங நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கணித்து பலன் தரலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)





அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.SC,M.A, BEd

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சுக்கிரன் மற்றும் செவ்வாய் காட்டும் குடும்ப வாழ்வு

 சுக்கிரன் மற்றும் செவ்வாய் காட்டும் குடும்ப வாழ்வு 

               


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் என்பவர் நளினத்திற்கும்,பெண் தன்மைக்கும்  மற்றும்  அழகுக்கும் காரகன்  ஆவார். செவ்வாய் பகவான் முரட்டுத்தனத்திற்கும் ஆண் தன்மைக்கும் மற்றும் வீரத்திற்கும் காரகன் ஆவார்.


 ஒரு ஆணின் ஜாதகத்தில்  சுக்கிரன் பகவான் லக்னத்தில் அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது லக்கனத்தை பார்த்தாலோ அவர் ஆணாகப் பிறந்திருந்தாலும் பெண்ணிற்குரிய குணங்கள் அதாவது பெண் தன்மை மிகுந்திருக்கும்.


 இரக்கக் குணம் கொண்டவராகவும், தாய்மை தன்மை மிக்கவராகவும் ,மற்ற பெண்களை மதிக்க கூடிய தன்மை உடையவராகவும் இருப்பார்.


 ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னத்தில் அல்லது லக்கனாதிபதியாக அல்லது லக்கனத்தை செவ்வாய் பார்த்தால் அவர் பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆணிற்குரிய முரட்டுத்தனம், துணிச்சல்  போன்ற தன்மைகள் மிகுதியாக இருக்கும்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டும் சேர்ந்து லக்கனத்தில் நின்றாலும் மற்றும் லக்கனத்தில் சுக்கிரன் நின்று செவ்வாய் பார்த்தாலும் மற்றும் லக்கனத்தில் செவ்வாய் நின்று சுக்கிரன் பார்த்தாலும் பெண்ணிற்குரிய நளினமும் அதேபோல ஆணிற்கு உரிய வீரமும் நிறைந்த பெண்ணாக அல்லது ஆணிற்கு உரிய வீரமும் மற்றும் பெண் தன்மை நிறைந்த ஆணாக இருப்பார்.

எளிதில் காதல் வயப்பட கூடியவராக இருப்பார்.பாவத்துவ நிலையை அடையும்  முரண்பட்ட காமத்தை துய்க்கும் எண்ணம் உடையவராக இருப்பார்.

 ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் இளமைக்கும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும் காரகன் ஆவார்.மனைக்கும் மற்றும் மனையாளுக்கும் காரகன் ஆவார்.அனைத்து ஆடம்பர கார் ,பங்களா ,  , படுக்கை சுகம், நித்திரை சுகம் மற்றும் தாம்பத்திய சுகம் போன்ற அனைத்திற்கும் காரகனாக சுக்கிரன் பகவான் திகழ்கிறார்.


 செவ்வாய் பகவான் மாறுபட்ட காம எண்ணத்திற்கும், இரத்தம் வகைக்கும் மற்றும் காமத்தை அனுபவிக்க கூடிய தன்மைக்கும் காரகன் ஆவார்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் சுபத்துவ நிலையில் ஜாதக கட்டத்தில் நெருக்கமாக நிற்க கூடிய அமைப்பு  முறையாக ஏற்றுக்கொள்ள கூடிய காதல் திருமணம் நடைபெறும்.


 சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்த நிலையில் காம திரிகோண ஸ்தானமான மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் நின்று இவற்றுடன் ராகு இணைந்து சனி பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அதிகமான  காம எண்ணம் உடையவராக தன்னை விட வயது முதிர்ந்த அல்லது தரம் தாழ்ந்த அல்லது விதவை பெண் அல்லது சொல்லி கொள்ள வெட்கப்பட கூடிய உறவுநிலைகளில் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பார்.


 சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று ராகு சேர்ந்த நிலை விதவை பெண்,

சனி சேர்க்கை அழுக்கான கீழ்நிலை பெண்கள் மற்றும் செவ்வாய் சேர்க்கை வாட்ட சாட்டமான பெண் தொடர்பு.


 சுக்கிரன்+சனி+செவ்வாய்+ ராகு சேர்ந்து நின்ற நிலை அல்லது சுக்கிரன்+செவ்வாய்+ ராகு சேர்ந்து நின்ற  நிலையில் சனி பார்வை அல்லது சுக்கிரன்+சனி+ ராகு சேர்ந்து நின்ற நிலையில் செவ்வாய் பார்வை ஜாதகர் வக்ர எண்ணம் மாறுபட்ட காம எண்ணம் உடையவராக மற்றவரை அழ வைத்து இன்பம் துய்க்கும் மனநிலை அல்லது குழந்தை பாலியல் தொல்லை போன்ற குற்றங்களில் அகப்பட்டு மேற்குறிப்பிட்ட சேர்க்கை பெற்ற ஏதாவது ஒரு கிரக தசையில் அவமான நிலைக்கு ஜாதகர் தள்ளுபடுவார்.


 சுக்கிரன் காம இன்பம் மற்றும் செவ்வாய் வீரியம், ரத்த முஷ்டி இவை இரண்டும் நல்ல முறையில் சுபத்துவமான நிலையில் பாவத்துவமடையமால் நல்ல நிலையில் அமர்ந்து உரிய சுக்கிரன் தசை அல்லது புத்தி அல்லது சுக்கிரனின் வீடுகளாக ரிஷபம் மற்றும் துலாம் வீடுகளில் உள்ள கிரகங்கள் தசா புக்தி நடப்பில் இருக்கும் முறையான சமூகம் ஏற்கும் திருமணத்தை நற்குணம் நிறைந்த பெண்ணுடன் நடைபெற்று தெய்வீக சேர்க்கை ஏற்பட்டு நல்ல குணம் நிறைந்த புகழுடைய பிள்ளைகளை பெற்று எடுத்து வளர்ப்பார்கள்.இவர்கள் மற்றவர்களுக்கு உதாரண தம்பதிகளாக திகழ்வார்கள்.இவை 1,2,7 மற்றும் 8 ஆம் இடம் மற்றும் அதிபதிகளை பொறுத்து பலனில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.


  பொதுவாக சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இருவரும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை வாய்ந்த கிரகம் ஆகும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் ; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

கூட்டு கிரகங்கள் ஜாதகத்தில் பலன் எடுப்பது எப்படி?

 கூட்டு கிரகங்கள் -ஜாதகத்தில் பலன் எடுப்பது எப்படி?

        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒரு ஜாதகத்தில் கூட்டு கிரகங்கள் இடம் பெறும் போது பலன் காண்பது மிகவும் நுணுக்கமாக கவனித்து பலன் கூற வேண்டும்.


  நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இடம் பெற்றிருக்கும் போது இவற்றிற்கு பலன் கூற முற்படும் போது அந்த கிரகங்களுக்கு இடைப்பட்ட உறவு நிலைகளையும் மற்றும் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் பெற்றுள்ள டிகிரி அளவினையும் கவனிக்க வேண்டும்.


 இணைந்து உள்ள இரு கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக இருந்தால் மிகவும் நெருக்கமாக உள்ளது என்று அர்த்தம் ஆகும்.இவை தன்னுடன் இணைந்த கிரகத்தை 100 % சதவீதம் பாதிக்கும்.13 பாகைக்கு உள்ளாக இருப்பின் 50 % சதவீத அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.அவை தன்னுடன் இணைந்த கிரகத்தை எவ்வித பங்கத்திற்கும் உள்ளாக்குவதில்லை..


சூரியன் பகவானை எட்டு பாகைக்குள்ளாக நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைந்து விடுகிறது.இவ்வாறு அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் வலிமை இழந்த கிரகமாக கருதப்படுகிறது.வலிமை இழந்த கிரகங்களின் பலனை சூரியன் தனது தசையில் தருகிறது.


இவ்வாறு வலிமை இழந்த கிரகங்கள் திக் பலம் பெறும் போது அல்லது ஸ்தான வலிமை பெறும்போது அல்லது சுபர் பார்வை படும் போதோ கிரகங்கள் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறது.


 லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை கணக்கிட வேண்டும்.லக்கனாத்தின் அடிப்படையில் நன்மை தரக்கூடிய கிரகங்களா அல்லது கெடு பலன்களை தரக் கூடிய கிரகங்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ராசியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் அல்லது இயற்கை பாவ கிரகங்கள் மற்றும் லக்கன யோகி அல்லது அவயோகி போன்ற விவரங்களையும் கவனிக்க வேண்டும்.


பெரும்பாலும் சூரியனை ஒட்டியும்  முன்பின் ஒரு ராசிகள் தள்ளி புதன் பகவானும் மற்றும் சுக்கிரன் பகவான் சூரியனை ஒட்டியும்  முன்பின் இரண்டு ராசிகள் தள்ளியும் சுக்கிரன் பகவான் இருக்கும்.எனவே பெரும்பாலும் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் என்பதால் இம்மூன்று கிரகங்களும்  பெரும்பாலும் ஒரு ராசியில் இணைந்த நிலையில் காணப்படும்.


 ஒரு ராசியில் இயற்கை சுப கிரகங்கள் உடன்  சனி செவ்வாய்,,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இணைந்த நிலையில் எந்த பாவ கிரகம் நெருக்கமாக இணைந்த நிலையில் உள்ளது.எந்த கிரகம் சுப கிரகத்தை விட்டு விலகி உள்ளது போன்ற விவரங்களை கவனித்து பலன் எடுக்க வேண்டும்.


  ஒரு ராசியில் மேற்குறிப்பிட்ட அத்தனை பாவ கிரகங்கள் இணைந்து அந்த பாவகத்தையும் மற்றும் அதில் இணைந்து உள்ள லக்கன யோகி மற்றும் சுப கிரகங்களையும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்தினாலும் ஒற்றை பங்கப்படாத குரு பகவான் பார்வை ஒட்டு மொத்தமாக சுபத்துவ படுத்தி நல்ல பலனை தர வைத்து விடும்.அதே நேரத்தில் ஒற்றை சனியின்  பார்வை ஒட்டுமொத்தமாக  பாவத்துவ படுத்தி விடுகிறது.


 கிரகங்கள் இணைந்த வீட்டின் வலிமையை கவனிக்க வேண்டும். இணைந்த வீட்டின் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி‌ போன்ற நிலையில் பலம்  பெற்றிருக்கும் போது வீடு கொடுத்தவன் வலுவின் அடிப்படையில் அந்த கிரகம் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பை பெறுகிறது.


 சில நேரங்களில் ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் தொடக்க அல்லது இருபத்து எட்டு பாகைக்கு மேலாக நிற்கும் அதற்கு முன் அல்லது பின் உள்ள ராசியில் உள்ள பாவ கிரகங்கள் அதிக பாவத்துவ  அல்லது சுபத்துவ படுத்தி விடுகிறது.

உதாரணமாக கடக ராசியில் தொடக்க இரண்டு அல்லது மூன்று பாகைக்குள் சனி, செவ்வாய் மற்றும் ராகு பகவான் நின்று உள்ள நிலையில் மிதுனம் வீட்டில் இருபத்து ஒன்பதாம் பாகையில் உள்ள இயற்கை சுப கிரகம் அடுத்த ராசியில் உள்ள கிரகங்களை சுபத்துவ படுத்தி விடுகிறது.


இதேபோல கடக வீட்டில் இருபத்து எட்டு அல்லது இருபத்து ஒன்பதாம் பாகையில் உள்ள செவ்வாய்,ராகு மற்றும் தேய்பிறை சந்திரனை சிம்ம வீட்டில் தொடக்க இரண்டு பாகைக்குள் உள்ள சனி பகவான் அடுத்த ராசியில் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பாவத்துவ படுத்தி அதன் தசையில் கெடு பலன்களை தருகிறது.


 இவ்வாறு பல வகையில் ஆய்வு செய்த பின்பு பலன் எடுக்க விரும்பும் கிரகமானது அம்சத்திலும் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ? பாவ வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்க வேண்டும்.


  ஒரு குறிப்பிட்ட பலனை எடுக்க மூன்று வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.அதாவது பாவகம்,பாவக அதிபதி மற்றும் அதன் கார்கள் ஆகிய மூன்று வகையில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


எனவே திருமண 💒 ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய்‌ மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் இணைந்து நிற்கும் போது ஏழாம் பாவகம் மற்றும் லக்கன பாவகம் கெடுதல் அடைந்து விட்ட நிலையில் திருமணமே நடக்காது என்று முடிவுக்கு உடனே வந்து விட கூடாது.ஏழாம் இடத்தை பாவத்துவ படுத்தி இருந்தாலும் ஏழாமிட அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய இரண்டையும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com

     



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

ஒரு கிரகத்தின் வலிமையை விளக்கும் ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம்

 ஒரு கிரகத்தின் வலிமையை விளக்கும் ,ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம்.

              


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் உள்ள கிரகமானது கீழ்க்கண்ட படி நிலைகளில் ஸ்தான வலிமையானது அமைகிறது.


   ஒருவர் ஜாதக கட்டத்தில் உச்சம் போன்ற நிலைகளில் அமரும் போது நூறு  சதவீத வலிமையை பெற்றதாக எடுத்து கொள்ள வேண்டும்.இதே உச்சம் பெற்ற வீட்டிற்கு ஏழாவது வீட்டில் நீசம் அடைகிறது.இவ்வாறு நீசம் பெற்ற கிரகம் ஆனது நீச பங்கம் அடையாத நிலையில் பூஜ்யம் வலிமையை அடைகிறது.


  உச்சம் நிலைக்கு அடுத்த படியாக மூல திரிகோண நிலையில் எழுபத்தைந்து மதிப்பெண் நிலையினை அடைகிறது.


அடுத்தபடியாக ஆட்சி நிலையை அடைந்த கிரகம் ஐம்பது சதவீதம் மதிப்பெண் வலிமையை அடைகிறது.


 கிரகமானது நட்பு நிலையில் இருபத்தைந்து மதிப்பெண் வலிமையை அடைகிறது.


 நட்பு நிலைக்கு கீழ் வரும் போது அதாவது பகை நிலையை அடையும் போது கிரகமானது வலிமையை பத்து சதவீதம் அளவிற்கு  அடைகிறது.


 கிரக ஸ்தான வலிமையை நூறு சதவீத அளவில் வைத்து கணக்கிட்டு நிலையில் நீச பங்கம் அடைந்த கிரகம் ஆனது 120 மதிப்பெண் அளவிற்கு வலிமையை அடைந்த கிரகமாக விளங்குகிறது.


  இதே போல கிரக பார்வை பலத்தில் இயற்கை சுப கிரகமான குரு பகவான் எவ்வித பங்கமும் அடையாத நிலையிலும் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் பார்வை பலமானது முழுமையாக கொண்டு உள்ளது.


    இதில் இவ்விரு கிரகங்களின் சம சப்தம பார்வையானது ஒரு கிரகத்தின் மீது விழும் போது  தனக்கு எதிராக உள்ள கிரகத்தை நூறு சதவீத சுபத்துவ நிலையினை அடைய செய்கிறது.


  குரு மற்றும் வளர்பிறை சந்திரனுக்கு அடுத்த படியாக சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பகவான் பார்வை ஐம்பது சதவீதம் அளவிற்கு பார்வை மற்றும் சேர்க்கைகள் சுபத்துவ நிலையினை அடைய வைக்கிறது.


 எப்படி குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் தனது பார்வை பலத்தால் நூறு சதவீத சுபத்துவ நிலையினை அடைய செய்கிறதோ அதே போல் சனி பகவான் மற்றும் தேய்பிறை சந்திரன் தனது பார்வை பலத்தால் நூறு சதவீத பாவத்துவ நிலையினை அடைய வைக்கிறது..


 சனி பகவானுக்கு அடுத்த படியாக செவ்வாய் பகவான் முக்கால் பாவராக செயல்படுகிறார்.சூரியன் தன்னுடன் நெருக்கமாக உள்ள கிரகத்தை அஸ்தமனம் அடைய செய்து அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலனை தான் வாங்கி முழு பலமடைந்த கிரகமாக செயல்படுவார்.

சூரியன் பகவான் அரை பாவராக செயல்படுகிறார்.


     நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ஜடப் பொருள் அல்லாத நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றிற்கு பார்வை கிடையாது.இவற்றிற்கு என சொந்த வீடும் கிடையாது.இவை இருக்கும் வீட்டின் அதிபதியை போல செயல்படுவார்.


நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி,சேர்ந்து உள்ள கிரகம், பார்வை செய்யும் கிரகங்கள் மற்றும் அவை பெற்ற சார  நாதன் ஆகியவற்றை பொறுத்து அதன் பலம் அமைகிறது.


  ராகு பகவான் தன்னுடைய இணைந்த சுப  கிரகத்தினை  பாவத்துவம் அடைய செய்து தான் சுபத்துவம் அடைவார்.ராகு பகவான் பாவ கிரகமான சனி , செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகியவற்றுடன் இணைவு மற்றும் பார்வை கூடுதல் பாவத்துவ நிலையினை அடைவார்.இவைகள் சேர்ந்து இருக்கும் மற்றும் பார்க்கும் இடத்தை முழுவதும் பாதிப்பை அடைய செய்வார்.


  ஒரு சில கிரகங்கள் மட்டும்  சில இடங்களில் நிற்கும் போது திக் பலத்தை அடைகிறது.


  லக்னத்தில் குரு மற்றும் புதன் பகவான் அமரும் போது திக்பலத்தை அடைகிறது அதே நேரத்தில் அவை ஏழாம் இடத்தில் செல்லும் பொழுது நிஷ் பலத்தை அடைகிறது. அதாவது திக்பலத்தை இழந்த நிலையை அடைகிறது.


  நான்காம் இடத்தில் சந்திரனும் மற்றும் சுக்கிரனும் திக்பலத்தை அடைகிறது. அதே நேரத்தில் அவை பத்தாம் இடத்திற்கு செல்லும் பொழுது நிஷ் பலம் அடைகிறது.


    ஏழாமிடத்தில் சனி பகவான் திக்பலத்தை அடைகிறார். அதே நேரத்தில் லக்னத்தில் அவை நிஷ் பலத்தை அடைகிறது.


 பத்தாமிடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் திக்பலத்தை அடைகிறார். அவை  நான்காம் இடத்திற்கு வரும் பொழுது நிஷ்பலத்தை அடைகிறது.


இவ்வாறு திக் பலத்தை பெற்ற கிரகங்கள் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் அவை திக் பலத்தை பெறும் போது இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


உதாரணமாக துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் நீசம் பெற்றாலும் அவை திக் பலம் என்ற நிலையில் இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது. இங்கு செவ்வாய் நீசம் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.


சில நேரங்களில் கிரகங்கள் பலம் இழந்து நின்றாலும் ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் பொழுது அவை வர்கோத்தமம் என்ற வகையில் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.


கிரகங்கள் தங்களது வீடுகளுக்குள் பரிமாறி நிற்பதை பரிவர்த்தனை யோகம் என்று கருதப்படுகிறது. இங்கு கிரகம் ஆட்சி பெற்ற நிலைக்கு சமமான நிலை பெறுகிறது.


 நீசம் பெற்ற கிரகங்கள் வர்கோத்தமம்  மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் அவை நீசபங்கம் அடைகிறது.


 நீசம் பெற்ற கிரகத்தின் வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் நீசம் பெற்ற வீட்டின் அதிபதி ஏதேனும் ஒரு இடத்தில் உச்சம் பெற்று நின்றாலும் அவை நீச பங்கம் அடைகிறது.


நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் இருந்தால் அதை நீச பங்கராஜ யோகம் என்று பெயர். இங்கு உள்ள சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் கூடுதல் நல்ல பலனை தரும். இவை உச்சத்தை விட கூடுதலான 120 மதிப்பெண்ணை பெற்றுள்ளது.


  நீசம் பெற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டாலும் அவை நீசபங்கம் அடைந்ததாக  கருத்தில் கொள்ள வேண்டும்.


நன்றி


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899

         


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com


நன்றி.

சிற்றின்மா/பேரின்பமா

 சிற்றின்பமா ? பேரின்பமா ? 

         



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட சராசரி  திருமணமான மனிதனுக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான தேவைகள்

 பணம், பட்டம்,பதவி, மனை ,மனையாள் ,காம சுகம், மற்றும் புத்திர பாக்கியம் ஆகும்.


 மேற்கண்ட அனைத்தையுமே ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய அமைப்பை ஆய்வு செய்து பார்க்க வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் நிலையை ஜாதக கட்டத்தில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ஒருவருக்கு பணம் பதவி பட்டம், புகழ் அந்தஸ்து, கல்வி ,புத்ர பாக்கியம் மற்றும் ஞானம் ஆகியவற்றை அள்ளி  தரக்கூடியவர் ஆவார்.இதற்கு ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சனி ,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய தொடர்பு இன்றி நல்ல ஸ்தான வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று வலுப்பெற்ற அமைப்பை பெற்று இருக்க வேண்டும்.


 குரு பகவான் உபய ராசிகளாக கருதப்படும் தனுசு மற்றும் மீனம் லக்கனத்திற்கு கேந்திர ஸ்தானமான நான்கு மற்றும் பத்தாம் இடங்களில் நின்றால் கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் என்பதால் அவை லக்கனத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அல்லது மறைவிடங்களில் சுப வலுப்பெற்று நிற்கும் போது ஜாதகருக்கு நல்ல பலன்களை தரும் அமைப்பை பெறுகிறது.


  ஒருவருக்கு உடல் பசியானது  உரிய வயதை எட்டியவுடன் அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒருவரது உள்ளத்தில் தாகமாக வந்து நின்று விடுகிறது.


 பசி ,தாகம் வந்தால் உணவையும் மற்றும் நீரை அருந்துவது போல காமமும் ஒருவர் துய்க்க வேண்டும்.நாம் பெறும் காமம் சமூகத்தால் திருமணம் என்ற பந்தத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றாக இருக்க வேண்டும் என்பது சமூக ஒழுங்கு ஆகும்.இவ்வாறு தவிக்கிக்கின்ற உடல் வேட்கையை தணித்து சந்தோஷப்படுத்தும் விழாவினை சாந்தி முகூர்த்தம் என்று பெயர் வைத்தார்கள்.


 சுக்கிர பகவானை ஒருவருக்கு காமத்தை அனுபவிக்க கூடிய நிலையை அறிய உதவும் கிரகமாகும். தாம்பத்திய சுகத்தை ஒருவருக்கு தரக்கூடிய கிரகம் எது என ஜாதகத்தில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது முழு முதல் கிரகமாக சுக்கிர பகவானே திகழ்கிறார்.


 ஜாதகத்தில் சுக்கிர பகவானை  வைத்து அவர் அனுபவிக்க கூடிய காமம் முறையான காமமா  அல்லது முறையற்ற காமமா என்பதை கண்டறிந்து விடலாம். ஒருவர் பெண் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவக்கூடிய கிரகம்  சுக்கிரன் பகவான் ஆகும்.


சிலர் பெண் சுகத்தை கடைசி வரை அனுபவிக்க இயலாமல் அல்லது வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கும் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்து அமைகிறது.


சிலர் எண்பது வயதிலும் செக்ஸை நன்றாக அனுபவித்து மற்றவரை திருப்தி படுத்தக் கூடிய நிலையில் இருப்பதற்கும் ,சிலர் செக்ஸ் என்றாலே பயன்படக்கூடிய நிலையிலோ அல்லது மற்றவரை திருப்தி படுத்த இயலாத தன்மை படைத்தவராக இருப்பதற்கும் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடம், சேர்க்கை மற்றும் பார்வை போன்ற தொடர்பை பொறுத்து அமைகிறது.


 ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்று நின்றால் மனைவி அல்லாது பல பெண்களுடன் சல்லாபம் அதே நேரத்தில் சுக்கிரன் நீசம் பெற்று நின்றாலும் தனது ஒரே மனைவி உடனான தொடர்பு ஆகும்.


 சிலருக்கு தனது மனைவியே படுக்கை சுகத்தை தர மறுக்கும் அல்லது தர இயலாத நிலையில் இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் குரு பகவானை சுக்கிரன் பார்ப்பது அல்லது குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை போன்ற அமைப்பு காரணமாக இருக்கும்.இது ஒரு பொது பலனே ஆகும்.அவரவர் சாதக நிலையினை பொறுத்து பலன் மாறுபட வாய்ப்பு கட்டாயம் உண்டு.


  சுக்கிரன் பகவான் உடன் சனி, செவ்வாய் அல்லது ராகு எட்டு பாகைக்குள் இணைந்த நிலையில் அல்லது சுக்கிரன் பகவான் ஆனவர் செவ்வாய், ராகுவுடன் இணைந்து சனி பார்க்கும் நிலையில் அல்லது சுக்கிரன் ஆனவர் சனி மற்றும் ராகு உடன் இணைந்து செவ்வாய் பார்க்கின்ற நிலையில் இந்த அமைப்பானது காம வீரியம் ஸ்தானமான மூன்றாம் இடம், கணவன் மனைவி செக்ஸ் உறவு நிலை ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் படுக்கை சுகத்தை தரும் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் கூடுதலான பாதிப்பை ஜாதகருக்கு கொடுக்கும்.


 மேற்கண்ட இது போன்ற அமைப்பை பெற்று சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் ,தனித்த புதன் சுக்கிரன் ஆகியவற்றின் சேர்க்கை அல்லது தொடர்பை பெறாத நிலையில் ஒருவர் சொல்லி கொள்ள வெட்கப்பட கூடிய நிலையில் தன்னுடன் வயதில் மூத்த அல்லது கீழ் மட்ட நிலை அல்லது முறையற்ற உறவு நிலையில் காமத்தை துய்க்க கூடிய நிலையில் இருப்பர்.


 சுக்கிரன் பகவான் ஜாதகருக்கு சிற்றின்ப வாழ்வை தருபவர். சுகபோகங்களில் திளைத்து மகிழும் ஆற்றல், மாட மாளிகை, திருமண வாழ்க்கை,  குடும்பம் திருமணம், வாழ்க்கைத்துணை  தேர்ந்தெடுக்கும் கலா ரசனை ,அழகு சம்பந்தமான அழகியல் ஈர்ப்பு, தன்னை அழகாக காட்டிக் கொள்ளக்கூடிய தன்மை, ஆபரணங்கள் மீது நாட்டம் அழகான தோற்றம் ,பெண்களின் நளினம் ஒருவருடைய திருமணம், கவர்ச்சி, வீரிய சக்தி ,மனதிற்குப் பிடித்த வகைகளில் அடையும் ஆகுதி, இயல் ,இசை ,நடனம் மூலம் இன்ப சுகம் அனுபவித்தல் ,இசை உணர்வு ,கற்பனை உணர்வு வளர்த்தல்,

 காவிய இன்பம் , அடுக்குமாடி சொகுசு ரக வீடுகள் பங்களா நவீன ரக கார்கள் பொருள் சேர்த்தல் ஆடவர்க்கு சுகம் தரும் வாசனை திரவியங்கள் ஆகிய மேற்கண்ட இவை அனைத்தும் தான் மற்றவரை கவர்ந்து இருக்கக்கூடிய விஷயங்களோடு தொடர்பு கொண்டதாகும்.


 மற்றவரை மகிழ்விக்க கூடிய வேசக்காரன் நாடக நடிகர் கலைத்துறை ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்துதல், அலங்கார வண்டிகள், ஆடம்பர வஸ்துக்கள், வெண்ணிற பொருட்கள் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆவணங்களை அணிதல், விடியற்காலம், , களத்திரக்காரகன் உயர்க வாகனம்  உயர்ந்த,நடுத்தர மற்றும் கீழ்நிலை வாகனமா என்பது அவருடைய சுக்கிரன் நிலையை குறித்து அமைகிறது. ஒருவருக்கு சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் கடைசி வரை வசிப்பதும் சுக்கிர பகவான் நிலையை பொருத்து அமைகிறது.


 ஒருவருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பதை ஆராய ஒன்று இரண்டு, ஏழு  மற்றும் எட்டாம் இடங்கள் இருந்தாலும் சுக்கிரனுடைய நிலைய வைத்து அவர் காம சுகத்தை அதாவது மனைவி மூலம் சுகத்தை எப்பொழுது பெறுவார் என்பதை கணித்து விட முடியும்.


 ஒருவருக்கு கட்டி சுகத்தை தருவதும் சுக்கிரன் பகவான் என்றால் தொட்டில் சுகத்தை தருவது குரு பகவானே ஆகும்.


 சுக்கிரனை பலம் ஆக பெற்றவர்கள் அனைத்து விதமான ஆடம்பர விஷயங்களை அனுபவிக்க துடிப்பார்கள். மனதளவில் நிம்மதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் வேண்டும் என்ற உள்ள பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் குரு பகவானை பலமாக பெற்றவர்கள் நேரிய வழியில் முறையான விஷயங்களை மட்டும் அனுபவிக்க ஆசைப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை வஞ்சித்தோ அல்லது எல்லா ஆடம்பர விஷயங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்றோ நினைக்காதவர்கள். உள்ளதைக் கொண்டு நிறைவாக வாழும் மனம் படைத்தவர்கள் அதனால் மனதளவில் பெரும் பணக்காரராக இவர்கள் திகழ்வார்கள்.


 ஒருவருக்கு எப்பொழுது புத்திர பாக்கியம் அதாவது புத்திரத்தை தூக்கி கொஞ்ச கூடிய நேரம் எந்த தசா புத்தியை வருகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தே அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்றும் எளிதாக கணித்து விட முடியும்.


 ஒருவருக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் அந்த குழந்தை பிறந்த பிறகு அவருடைய குடும்ப வாழ்வு சரிந்து விழக்கூடிய நிலையா அல்லது குப்பையில் தூசியாக இருந்தாலும் இந்த குழந்தை பிறந்த பிறகு கோபுர கலசமாக உயர்ந்து நிக்கக்கூடிய குழந்தையா அரசாங்க அதிகாரியாக திகழும் குழந்தையா அல்லது நாடாளும் குழந்தையா என்பதை ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள குரு பகவான் நிலையை வைத்து இத்துடன் ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாமிடம் அதிபதியுடைய நிலையினை வைத்து முடிவு செய்யப்படுகிறது.


 ஒரு மனிதனுக்கு சிற்றின்ப வாழ்வை தரக்கூடியவர் சுக்கிர பகவான் ஆவார். அதேபோல ஒரு மனிதன் பேரின்ப நிலை அடைய குரு பகவானுடைய அருள் ஆசி அவசியமானதாக அமைகிறது.


 குருபகவான் தேவர்களுடைய தலைவன் குருவுடன் சூரிய, சந்திர மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது .

சுக்கிரன் அசுரனுடைய தலைவன் ஆவார். புதன் ,சுக்கிரன் மற்றும் சனி ஆகியவை இதன் நட்பு கிரகங்கள் ஆகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

பலன் அளிக்கும் முறை -உதாரண ஜாதக விளக்கம்

 பலன் அளிக்கும் முறை- உதாரண ஜாதகம்

              



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஜாதகத்தில் ஒருவரது திருமணத்தை பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்க அவருடைய ஜாதகத்தில் லக்கன பாவகம் என்னும் ஜாதகர் , அவரது குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,

 களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இயற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .இவை தவிர தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் 

ஆகியவற்றையும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.


   மேற்கண்ட 1,2,7,8 ஆம் இடங்களுடனோ அல்லது குரு மற்றும் சுக்கிரன் உடனோ சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக சேர்ந்து இருப்பதும் அல்லது பார்ப்பதும் திருமண அமைப்பை தடை படுத்துவதும் அல்லது கால தாமதம் செய்வதும் நடக்கும் தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களை சார்ந்து அமைகிறது.


மேற்கண்ட ஜோதிட கருத்துக்களை விளக்கும் ஒரு உதாரண ஜாதகம் இருப்பதால் அந்த ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்கம் தந்தால் உங்களுக்கு எளிமையாக புரிபடும் .


பிறந்த தேதி: 22.01.1995

பிறந்த நேரம்: 9.45 am

பிறந்த இடம்; புதுக்கோட்டை 


ஜென்ம லக்னம் கும்பம்

ஜென்ம ராசி; கன்னி

ஜென்ம நட்சத்திரம்; அஸ்தம் முதல் பாதம் 

தசை இருப்பு : 08-05-18


  ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருப்பதோ அல்லது லக்கனப் பாவத்தை சனி பார்ப்பதோ நல்லதல்ல இவ்வாறு லக்னத்திலே சளி இருந்து ஆட்சி பெற்ற நிலையில் செவ்வாய் அதை பார்க்கக் கூடிய நிலையில் குணம் கெட்ட நபராக இருப்பார் .கோபத்தன்மை கூடுதலாக மேலங்கி நிற்கும்.


   லக்னத்தில் சனி 16 பாகைக்கு மேல் இருப்பதால் ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாய் தொடக்க ஆறு பாகைக்குள் இருப்பதால் லக்னத்தில் உள்ள சனி ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கவில்லை ஆனால் அதே நேரத்தில் ஏழாம் பாவகத்தை பார்வை செய்கிறது.

ஆனால் ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாய் லக்னத்தில் உள்ள சனி பகவானை பார்வை செய்கிறது.


  குடும்ப அதிபதியும் மற்றும் புத்திர ஸ்தான அதிபதியும் ஆன குரு பகவான் சுக்கிரனுடைய இணைந்திருப்பது தாம்பத்திய சுகத்தை கெடுக்கும் என்றாலும் இந்த குரு பகவானை லக்கனத்தில் உள்ள சனி பகவான் பத்தாம் இடத்தில் உள்ள குரு பகவானை பார்க்க வில்லை என்பது மிக நல்ல விஷயம் ஆகும்.ஆனால் அதே நேரத்தில் சனி பகவானால் பார்க்கப்படாத குரு பகவான் ஆனவர் குருவின் நட்பு கிரகமான செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் குரு பகவானை பார்வை செய்வது பெரிய கெடு பலனை தந்து விடுவதில்லை.


 தன் வீட்டை தானே பார்க்க கூடிய கிரகம் அந்த இடத்தை வலுப்படுத்தும் என்ற விதிப்படி லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ள குரு பகவான் தனது ஐந்தாவது பார்வையால் குடும்ப ஸ்தானத்தினை பார்வை செய்கிறார்.பொளர்ணமியை விட்டு விலகிய இயற்கை சுப கிரகமான சந்திரன் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுந்து சுபத்துவ படுத்திய நிலையில் உள்ளது.


  களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் செவ்வாய் இருப்பதும், ஏழாம் இட அதிபதி சூரியன் பன்னிரண்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் பகை வீடு ஏறிய நிற்பதும் மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் பகை வீடு ஏறிய நிலையில் சனியின் பத்தாம் பார்வை சுக்கிரன் பகவான் மேலே விழுந்து பாவத்துவ நிலையை அடைய வைப்பதும் ஆகிய மூன்று நிலைகளில் பலம் இழந்த நிலையில் இருப்பதால் திருமணம் கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


தற்போது ராகு தசையில் சுக்கிர புத்தி நடப்பில் இருப்பதால் இந்த சுக்கிரன் புத்தி 26 ஜனவரி 2025 வரை நடப்பில் இருப்பதால் சுக்கிரன் புத்தியும் சனி பார்வையில் இருப்பதால் சுக்கிரன் புத்தி நிறைவு பெறக்கூடிய நிலையில் திருமணத்தை கொடுத்து விட்டு செல்வார் என்பது எனது கருத்து ஆகும்.


நன்றி


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)..


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647


மற்றொரு செல்: 7402570899


      



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்


Email masterastroravi@gmail.com

உங்கள் பிள்ளைகள் கெட்ட நண்பர்கள் சக வாசத்தால் திசை மாறி செல்ல...

 உங்கள் பிள்ளைகள் கெட்ட நண்பர்கள் சக வாசத்தால் திசை மாறி செல்ல ...

           


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


        ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தை கொண்டு தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை அல்லது நட்பு நிலை பற்றி அறிந்து கொள்ள இயலும்.


        வாழ்க்கையில் சில பேர் தனக்கு வரும் நண்பர்கள் மூலமாகவே கெட்ட சக வாசம் பெற்று விடுகிறார்கள்.


"உன் நண்பன் யாரென்று காட்டு உன்னை யாரென்று சொல்லி விடுகிறேன்"


       ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் நின்று அல்லது ஏழாம் இடத்தை பாவ கிரகங்கள் பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் தனக்கு வரக்கூடிய நண்பர்கள் மூலமாகவே தான் கெட்ட பழக்கங்களை பழகி கொள்வார்கள்.


   லக்கனத்தில் சனி பகவான் நின்று ஏழாம் இடத்தில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்த நிலையில் நின்று வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறவில்லை எனில் தனது நண்பர்களுடன் இணைந்து ஏதாவது கூட்டு தொழில் மேற்கொள்வாராயின் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.


 ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி , ராகு, மற்றும் தேய்பிறை சந்திரன் நின்று செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்த நிலையில் அல்லது பார்க்கின்ற நிலையில் "பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்" என்ற பழமொழி படி மது ,மாது போன்ற கெட்ட பழக்கத்திற்கு கெட்ட நண்பர்கள் சக வாசத்த்தால் ஏற்படும்.


 லக்கனத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் பகவான் நின்று பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவானை பார்க்க, பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் ஏழாம் இடத்தில் உள்ள சனி பகவானை பார்க்க இது போன்ற நிலைகளில் ஏழாம் இடம் மிகுந்த பாவத்துவ நிலைக்கு உட்படும்.இது போன்ற சூழலில் தனக்கு கெட்ட நண்பர்கள் பழக்க வழக்கம் உருவாகி தவறான பாதையில் தடம் மாறி வைக்கும்.


 ஏதாவது ஒரு இடத்தில் இருந்து குரு பகவான் பார்க்கும் நிலையில் அந்த கெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு மீண்டு வரும் நிலை உருவாகிறது.


  ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது பார்வை செய்யாமல் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் நிற்கின்ற அல்லது பார்வை பெறும் நிலையில் நல்ல நண்பர்கள் சக வாசம் உண்டாகிறது.


நன்றி


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647

மற்றொரு செல்: 7402570899


         



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

தசைக்குள் புக்தி

 தசைக்குள் புக்தி செய்யும் மாயாஜாலம்.

      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


  ஜாதகத்தில் நடக்கக்கூடிய தசைக்குள் புக்தி எவ்வாறு செயல்படுகிறது? என்று கேட்கப்படும் வினாவிற்கான விடையை ஆராய்ந்து பார்த்ததில் கீழ்க்கண்ட முடிவுகளே கிடைக்கிற


  ஜாதகத்தில் மனித வாழ்வியல் தொடர் நிகழ்ச்சிகளை முடிவு செய்வது தசைகளே ஆகும்.. மனிதன் பிறந்ததிலிருந்து தொடர்ந்து அவருக்கு நடந்த தசைகளை  எடுத்து ஆராய்ந்து பார்த்து அந்த காலகட்டங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை நாம் கூறினால் நிச்சயமாக அந்த பலன் மிக துல்லியமாகவே எனது அனுபவத்தில் வருகிறது


தசையே அந்த மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது


       சில தசைகள் வாழ்க்கையை உயர்த்திக் கொடுத்திருக்கும்


    சில தசைகள் வாழ்க்கையில் பெரிய அடியை கொடுத்து ஒரு பாடத்தை தந்திருக்கும்


    சில தசைகள் நடுத்தரமாக இன்ப மற்றும் துன்பங்கள்  இரண்டும் கலந்து நடந்து இருக்கும்


 தசையே ஒரு மனிதனுக்கு முதலாளி போன்றவர்கள் . அந்த தசையில் வருகின்ற  புத்திகள்  என்பது தசைநாதன் இட்ட பணியை செய்யக்கூடிய வேலைக்காரர்கள் தானே ஒழிய அவர்களே முதலாளியாகி விட முடியாது


  ஒருவர் ஜாதகத்தில் நடக்கும் தசை சரியான தசையாக இல்லாம

 அதாவது  ஆறு அல்லது எட்டுக்குடைய தசையாகவோ அல்லது லக்கன அவயோக தசையாகவோ இருப்பின் அவற்றுக்குள் வரக்கூடிய புத்திகள் என்ன தான் யோகத்தை தரக்கூடிய புத்திகளாக இருந்தாலும் அவர்கள் முதலாளியின் அனுமதியை மீறி நல்லதை தந்து விட இயலாது


  ஒரு முதலாளி தனக்கு கீழ் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழிலாளியை மற்றொரு தொழிலாளியிடம்

" இவனை அடித்து தொரத்து" என்று சொன்னால் ஒரு சமயம் அந்த வேலை ஆளுக்கு முதலாளி அடிக்கச் சொன்ன நபர் நண்பராக இருக்க கூடிய பட்சத்தில் அடிப்பது போல் பாசாங்கு செய்து வெளியில் துரத்தி விடுவார்


 இங்கு முதலாளி என்பவர் நடக்கும் தசை ,அடிக்க சொன்ன நபர் புத்தி  மற்றும் அடி வாங்கும் நபர் ஜாதகர் ஆவா


 அடிக்கச் சொன்ன நபருக்கும் அடிவாங்க கூடிய நபருக்கு பகை எனில் செமத்தியாக அடித்து வெளியில் துரத்துவார்


 ஆனால் இருவருமே அந்த கடையை விட்டு வெளியில் துரத்த கூடியவர்கள் தா


    இங்கு புத்தி நன்றாக இருக்கும் பொழுது அந்த தசை கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு பாசாங்கு போல வந்து விட்டுப் போய்விடும் .பெரிய அளவில் கஷ்டம் இல்லாமல் கடக்க வைப்பார்


   தசைக்குள் வரும்  புத்தி  என்ப

சஷ்ட  மற்றும் அஷ்டமமாக (6,8 ) இருக்கக்கூடிய புத்திகள் சாதகருக்கு  மிகுதியான கெடுதலை தரக்கூடியவையாக இருக்கும்


   அருள் அணி என அழைக்கப்படு

குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம், மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு வரக்கூடிய குரு ,சந்திரன் ,செவ்வாய் ,சூரியன் மற்றும் கேது ஆகிய ஆறு தசைகள் யோக தசைகளாக செயல்படும்


 இதே போல பொருள் அணி என்று அழைக்கப்படும் சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம் ,மிதுனம் ,கன்னி, மகர மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சுக்கிரன், புதன், சனி மற்றும் ராகு தசைகள் யோக தசைகளாக கருதப்படுகிறது


எனவே குரு அணி  சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசைகளே நடக்கக்கூடிய காலங்களில் எதிரணியைச் சேர்ந்த சுக்கிரன், ,புதன், சனி மற்றும் ராகு புத்திகள் கெடுதல் தரக்கூடிய புத்திகளாக கருதப்படுகிறது. தசைநாதன் யோக தசையாக இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த புத்திகள் பெரிய அளவில் பாதிப்பை சாதகருக்கு தந்து விடுவதில்


  இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிர அணியைச் சேர்ந்த தசைகளே நடக்கும் பொழுது குரு அணியைச் சேர்ந்த சூரிய, சந்திர, செவ்வாய் ,ராகு மற்றும் குரு புத்திகள் பாதிப்பை தரக்கூடிய புத்திகளாக கருதப்படுகிறது .இருப்பினும் தசைநாதன் வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த புத்திகள் பெரிய அளவில் பாதிப்பை தந்து விடுவதில்லை


  குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு எதிரணியான சுக்கிர அணியை சேர்ந்த தசைகள் நடக்கும் பொழுது குரு அணியைச் சேர்ந்த புத்திகள் வரும்போது இந்த குரு அணியை சேர்ந்த புத்திகள் என்னதான் யோக புத்திகளாக இருந்தாலும் தசையை மீறி நல்லதை சாதகருக்கு தந்து விட முடியாது


    இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியைச் சேர்ந்த தசைகள் நடந்து கொண்டிருக்கும் போது சுக்கிரன் அணியை சேர்ந்த புத்திகள் நடக்கும் பொழுது அந்த புத்திகள் என்னதான் யோக புத்திகளாக இருந்தாலும்  தசையை மீறி அதாவது முதலாளியை மீறி அந்த புத்திகள் நல்லதை சாதகருக்கு  தந்துவிட முடியா


  ஆனால் முதலாளிக்கு தெரியாமல் பெரிய அளவில் பாதிப்பை தராமல் அதாவது அடித்து நொறுக்காமல் அடிப்பது போல் பாசாங்கு செய்து சாதகரை  அந்த புத்தி காலங்களில் நகர வைப்பார்


 குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசா மற்றும் புத்தி நடக்கும் பொழுதும் மற்றும் சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிரணியைச் சேர்ந்த தசா மற்றும் புத்தி நடக்கும் பொழுதும் சாதகர் டபுள் டெபாசிட்டர் முறையில் மிகுந்த யோகத்தை அனுபவிக்க கூடிய காலமாக இருக்கும் .இதில் சுபத்துவம் ஒன்று விதிவிலக்காகு


   குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த புக்தி நடக்கும் பொழுதும் அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த புத்திகள் நடக்கும் பொழுதும் அவை எதிர் அணியை சேர்ந்த புத்தியாக இருப்பினும் அவை சுபத்துவமாக இருந்தாலும் அல்லது உப ஜெய ஸ்தானமான 3 ,6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருந்தாலோ நல்ல பலனைத் தந்து விடும்


  இவையே தசைக்குள் புக்தி செய்யும் மாயாஜாலம் ஆகு


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள்


   097151 8964


மற்றொரு செல்; 74025708


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)


                     



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,B

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம்


My email masterastroravi@gmail.com .,Ed ன்.)997  பே.ம்..ம்..து. ..லை...ம்.து .ன்..ர்.. .ல்...   . . ..து.!

புதுக்கோட்டை மாவட்டம்.


My email masterastroravi@gmail.com

குழந்தை பேறு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

 குழந்தை பேரு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்.    





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  


  திருமணம் ஆன சில மாதங்களுக்கு பிறகு எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு நல்ல செய்தி புத்திர பாக்கியம் ஆகும்.


புத்திர பாக்கியம் உருவாவதே அந்த திருமணத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.


    ஒரு பெண் பிறந்து அவள் பூப்பெய்திய உடன் 50 சதவீத பெண்ணை அடைகிறான். பிறகு திருமணம் ஆகும்போது 75% பெண்ணாக மாறுகிறார். அவளே பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதற்கு தாயாக மாறிய பிறகு தான் நூறு சதவீத பெண்மை தன்மை அடைகிறார் அதாவது தாய்மை தன்மையை அடைகிறார்.


   ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பதாகும். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஜெனரேஷன் தொடர்ந்து வருவது என்பது அவள் பெற்றெடுக்கும் ஆண் குழந்தையை சார்ந்தே அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இந்த குழந்தை பாக்கியத்தை பெற்றெடுக்கக்கூடிய பெரிய வாய்ப்பை ஆராய்ந்து அறியக்கூடிய ஸ்தானம் என்பது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் ,

புத்திர ஸ்தான அதிபதி என்னும் ஐந்தாமிட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்றையும் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரண்டு வழிகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். திருமணமான தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் ஆராய்ந்து பார்த்து அவருடைய புத்திர பாக்கிய பற்றிய கேள்விக்கு பதில் தர முடியும்.


 புத்ர ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரகன் ஆகிய மூன்றிற்கும் ஒவ்வொன்றிற்கும் 40 மதிப்பெண் வீதம் கொடுக்கப்பட்டு புத்திர பாக்கியம் பற்றிய ஆய்வில் ஈடுபடப்படுகிறது.


  புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு பகவான் அமர்ந்து இருப்பதும் அல்லது புத்திர ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டு அதிபதியோடு ராகு நெருக்கமாக இணைந்து இருப்பதும் அல்லது புத்திர காரகன் குருவோடு ராகு நெருக்கமாக இணைந்து இருப்பதும் புத்திர தோஷத்தை வழி வகுக்கும்.


 பொதுவாக புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரக தொடர்பு, புத்திர ஸ்தானதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய இருவரும் நீசம், அஸ்தமனம்,பகை , மறைவிடம் செல்லுதல் மற்றும் பாவ கிரகங்கள் உடன் இணைந்து நிற்பது புத்திர தடையை வழிவகுக்கும்.


சில நேரங்களில் உகந்த திருமண யோகம் வருவதற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுவதும் அல்லது புத்திர பாக்கியத்திற்கு உரிய தசாபுத்தி வராமல் இருப்பதும் புத்திர தடையை உண்டாக்கிவிடுகிறது.


குழந்தை பேரு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்


    ராகு காலத்தில்  துர்க்கை அம்மனுக்கு அல்லது மாரியம்மன் அல்லது ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து மெய் தீபம் ஏற்றவும்.


  திருநாகேஸ்வரம், பேரையூர் திருக்காளஸ்த்ரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் உள்ள ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்யவும்.


  புத்திர தோஷம் உள்ளவர்கள் அரசமரம் சுற்றி வழிபாடு செய்ய வேண்டும் சுற்றும் போது நீராடி விட்டு தலை துவட்டாமல் ஈரத் துணியுடன் சுற்ற வேண்டும் .ஒரு நாளைக்கு ஒன்பது சுற்றுகள் சுற்ற வேண்டும் அவ்வாறு சுற்றும் போது கொஞ்சம் ,கொஞ்சமாக அரிசி குருணை அல்லது பொரியினை மரத்தைச் சுற்றி போட்டு வரவும். அரச மரம் சுற்றும் போது விநாயகர் உடைய காயத்ரி மந்திரம் சொல்லவும் ,அதன் பிறகு மும்மூர்த்திகளுடைய மந்திரத்தை சொல்லி வரவும்.


 (  விநாயகர் மந்திரம்


 ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி,

தன்னோதந்தி ப்ரஜோதயாத்தே


மும்மூர்த்திகளுடைய மந்திரம்


  "மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ

விஷ்ணு ரூபினி அக்ரதோ சிவரூபாய

விருட்ச ராஜாயதே நம் ")


    இவ்வாறு மூன்று சுற்று சுற்றிய பின் ஒரு தாம்பலத்தில் ஒன்பது உருட்டு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு மற்றும் ஏதாவது ஒரு வஸ்திரம் வைத்து 9 சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கவும்.


இறை வழிபாடு செய்யவும் தீர்க்க ஆயுளுடன் நிச்சயம் குழந்தை பிறக்கும்.


இதற்கான மருந்துகள்


  1) வில்வ இலையை எடுத்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து அந்த இலையை வாங்கி வந்து மிளகாய் அரைக்காத அம்மியில் அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவு உருட்டி பசும்பாலில் கலந்து அதிகாலை மூன்று நாட்கள் சாப்பிடவும்..


2) மலைவேம்பு ,சின்ன வெங்காயம் ,சீரகம் இம்மூண்டையும் இடித்து சாறெடுத்து அதிகாலை 3 நாட்களுக்கு சாப்பிடவும்.


3) அரச விதை அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்.


இதற்கான பத்தியம்

 ‌ மூன்று நாட்களுக்கு கணவன் மனைவி சேர்க்கை கூடாது. மருந்து சாப்பிட்ட நாட்களில் மாமிசம் உண்ணக்கூடாது. காலை 10 மணிக்கு தக்காளி ரசம் வைத்து சுடு சாதம் சாப்பிடவும்.

 தலை குளித்த நான்கு, ஐந்து ,ஆறு நாட்களில் மருந்து சாப்பிடவும் தொடர்ந்து 48 நாட்களுக்கு கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

        



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.