ஆறு மற்றும் எட்டாம் பாவகம்
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்ர காளியம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் மறைவிட ஸ்தானங்களில் மிகவும் இன்னல்களை தரக்கூடிய ஸ்தானமாக ஜோதிடர்களால் பெரும்பாலும் அடிக்கடி கூறப்படும் ஸ்தனங்களாக ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் அமைகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஆறாமிடம் என்பது சாதகருக்கு வெற்றியை தரக்கூடிய ஸ்தானம் ஆகும்.
ஒருவர் தொழில் ஸ்தானத்தை பற்றி ஆராயும் போது அவருடைய இலக்கனம் , தொழில் ஸ்தானமான பத்தாமிடம் இவற்றினை ஆராய்ந்து பார்க்கப்படும்போது சாதகருடைய ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதியின் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தை தொழில் ஸ்தானமான பத்தாம் அதிபதியோடு ஆறாம் அதிபதியும் பலம் பெற்றிருக்கும் போது அவர்கள் கொண்ட தொழிலில் வெற்றி பெற்று புகழ் அடையும் யோகத்தை தருகிறது.
சிலநேரங்களில் பாவ கிரகங்கள் உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வலு பெறக்கூடாது என்ற சோதிட விதிப்படி பாவ கிரகங்கள் அந்த ஸ்தானத்துக்கு மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இடங்களில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் நின்று வலுப்பெறும் பொழுது மட்டுமே யோக பலன்களை அதிகமாக தருகிறது.
எட்டாமிடம் ஒரு ஜாதகத்தில் வம்பு ,சண்டை வழக்கு, வீண் விவாதம், தேவையில்லாத சண்டை சச்சரவுகள், காவல்நிலையம் வரை சென்று நீதிமன்றத்தை நாடுதல் போன்றவற்றை குறிக்கும் பாவகம் ஆகும்.
மேற்கண்டவற்றை விவரிக்கும் கெட்ட ஸ்தானமாக கருதப்பட்டாலும் அதே நேரத்தில் ஒருவருக்கு மறைமுக உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய ஸ்தானம் ஆகும். இதுபோன்ற தசை நடக்கும் பொழுது ஆராய்ச்சிப் படிப்பு ஈடுபடுவர்கள் ஏதாவது ஒரு புதிய உண்மைகளை அல்லது கருவிகளை கண்டறிந்து சமூகத்துக்கு வழங்கக்கூடிய யோகத்தையும் அஷ்டமாதிபதி தசாபுத்திகள் தருகிறது
எட்டாம் இடம் பாவகமானது வலுப்பெற்று அந்த திசை நடப்பில் இருக்கும் போது வெளிநாடு செல்லும் யோகத்தினை தந்து ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டம் தரும் பலனை சாதகருக்கு தருகிறது.
ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு அதன் தசாபுத்திகள் நடப்பில் உள்ள காலங்களில் யாரும் சற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை சாதகருக்கு தந்து வாழ்வில் எதிர்பார்க்க முடியாத உயரத்திற்கு ஒருவரைக் கொண்டு செல்கிறது.
எந்த வகையில் தரக்கூடிய வாய்ப்பு என ஆராய்ந்து பார்த்தால் அவர் ஏதோ ஒரு காலகட்டத்தில் மிகக் குறைந்த விலைக்கு ஒரு சில ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டிருப்பார் அது இந்த குறிப்பிட்ட தசா காலத்தில் எதிர்பாராத அளவிற்கு விலை உயர்ந்து அதன் வழியாக பல லட்சங்களை லாபமாக பெறக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள்.
ஒரு சிலர் தாம் மேற்கொண்ட தொழில் மூலமாக அதிக முயற்சி இல்லாமல் எதிர்பாராத அதிக லாபத்தை பெற்று விடுவார். ஒரு சிலருக்கு எதிர்பாராமல் லாட்டரி, ரேஸ் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு அதன் மூலம் பெரும் பணம் ஈட்டக்கூடிய யோகத்தை தசா புத்திகள் தருகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்த சூழலில் ஆறாம் அதிபதி பலம் பெற்ற நிலையில் சாதகருக்கு பிணி,பீடை,ருண மற்றும் ரோகம் முதலியவற்றை ஆறாம் இட திசை புத்திகளில் தருகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் ஆறாம் இட அதிபதியும் பலம் பெற்ற சூழலில் இன்னல்கள் எவ்வளவு வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையினை பெற்று திகழ்வார்.
ஒருவரது ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதி பலம் பெற்று, ஆயுள்காரகனான சனி பகவானும் பலம் பெற்ற சூழலில் ஒருவருக்கு தீர்க்க ஆயுள்.
ஆயுளை நிர்ணயிப்பது எட்டுக்கு எட்டாம் இடமான மூன்றாம் இடத்தையும், ஆயுள் காரகனான சனி பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானம் ஆயுள் நிலை பற்றியும், இதன் தசா புத்திகளில் சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களையும் மற்றும் ஒரு சில மறைமுக உண்மைகள் வெளிப்படக்கூடிய தசா புத்தியாகவும் அமையக்கூடிய யோகமும் உண்டு.
உங்கள் ஜாதகத்தில் இந்த மறைவு ஸ்தானமான
6 ,8,12 ஆம் இடங்களில் ஸ்ரீ ராகு பகவான் அமர்ந்து அதன் தசா புத்திகள் நடைபெறும் காலங்களில் சாதகருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களை சாதகருக்கு தருகிறது.
ஒரு ஜாதகத்தில் கேந்திர அதிபதிகள் இயற்கை சுபராக வரும் பட்சத்தில் 6 மற்றும் எட்டாமிடங்களில் அமரும் பொழுது யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.
ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடம் ஒருவருக்கு ஆயிலின் நினைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும் , அந்த ஜாதகருக்கு மரணத்தை நிர்ணயிப்பதில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சர ராசிகள் என்று சொல்லக்கூடிய (மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம்) ராசிகளுக்கு மாரகாதிபதிகளாக இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதிகளும் மற்றும் பாதகாதிபதிகள் என்று சொல்லப்படக்கூடிய பதினொன்றாம் இட அதிபதிகளும் வருவார்கள்.
ஸ்திர ராசிகள் (ரிஷபம் சிம்மம் விருச்சகம் மற்றும் கும்பம்) என்று அழைக்கப்படக்கூடிய ராசிகளுக்கு மூன்று மற்றும் எட்டாம் இட அதிபதிகள் மாரகாதிபதி களாகவும் , ஒன்பதாம் வீட்டு அதிபதி பாதகாதிபதியாகவும் செயல்படுவார்கள்.
உபய ராசிகள் என்று (மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம்) அழைக்கப்படக்கூடிய ராசிகளுக்கு பாதகாதிபதியாக ஏழாம் இட அதிபதியும் மற்றும் இதே ஏழாம் இட அதிபதியும் மற்றும் பதினொன்றாம் இட அதிபதியும் செயல்படுவார்கள்.
பொதுவாக சில நேரங்களில் எல்லா ராசிகளுக்கும் இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதிகளே மாரகாதிபதிகளாக செயல்படுவார்கள்.
ஒரு ஜாதகருக்கு அஷ்டமாதிபதி தசையில் மாரகாதிபதி அல்லது பாதகாதிபதி புத்தி நடப்பில் இருப்பினும்
அல்லது
பாதகாதிபதி திசையில் மாரகாதிபதி அல்லது அஷ்டமாதிபதி புத்தி நடப்பில் இருப்பினும்
அல்லது
மாரகாதிபதி தசையில் அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி நடப்பில் இருப்பினும்
சாதகருக்கு மரணத்துக்கு நிகரான இன்னல்களை தருவார்.
சில நேரங்களில் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி இதன் தசா புத்தி காலங்களில் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் இட அதிபதியோ அல்லது புத்தியோ நடப்பில் இருக்கும் பொழுது அவருக்கு நிறைய மருத்துவ செலவுகளை தரக்கூடிய தருணம் ஆகும் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேண்டும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர்மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran.blogspot.com
......
கிரகங்களின் அணிவகுப்பு
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
கிரகமாலிகா யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழு வீடுகள் வரை ராகு ,கேது தவிர ஏனைய ஏழு கிரகங்கள் வரிசையாக அமர்ந்திருந்தால் அது "கிரகமாலிகா யோகம்" எனப்படும் . இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு பேரும் , புகழும் மற்றும் அந்தஸ்தும் தேடிவரும்.
கேதார யோகம்
பார்க்கில்லக் கினம்தன் னோடு பயில்நான்கு மனைக்குள் ளாக
ஏற்கவே கிரகம் நின்றால்
இதுவேகே தார யோகம்
தீர்க்கமாய்க் கிருஷி பண்ணித்
தனம் தேடும் திடவான் சுற்றித்
தார்க்கன்பன் சுகவான் ராச
பூச்சியின் தகைமை உள்ளான்!"
பாடல் விளக்கம்;-
லக்கினத்திலிருந்து நான்கு வீட்டுக்குள்ளான சூரியன் முதல் சனி வரை ஏழு கோள்களும் இடைவிடாமல் நின்றிருக்குமானால் அது "கேதார யோகம்" எனப்படும்.
கேதார யோகத்தில் பிறந்தவன் வேளாண்மை செய்து பொருள் ஈட்டுவார். உறுதியானவன். உறவினர்களின் உள்ளன்புக்குரியவன். சுகவாசி. மன்னர்களால் மதிக்கப்படுபவர். பண்பாளர்.
கிருஷி-விவசாயம்
பூச்சியன்-மதிப்பிற்குரிய வன்
இத்தகைய யோகங்களைப் பார்க்கும்போது கிரகச் சேர்க்கைகளால் வேறு ஏதேனும் அவயோகங்கள் ஏற்படுகின்றன என்றும் கவனிக்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் கேதார யோகம் பலன்கள் பாதிக்கப்படும் என்பதை சோதிடர் ஆகிய நாம் மறந்துவிடக்கூடாது.
சூல யோகம்
"உள்ளதோர் மூன்று வீட்டில்
உற்றிடில் சூல யோகம்
மெள்ளவே பலன்அ நேகம்
வித்தையுள் ளவன்உற் சாகி
தெள்ளிய போக வானாம்
திரவியம் தேடும் செல்வன்
கொள்ளவும் விலைகள் கூறி
விற்கவும் குறிப்பு முள்ளான்!"
பாடல் விளக்கம்
லக்னத்திலிருந்து மூன்று வீடுகளுக்குள் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களும் இடைவிடாமல் நின்றிருந்தால் அதற்கு "சூல யோகம்" என்று பெயர். சூல யோகத்தில் பிறந்தவன் நற்பலன்களை அதிகமாக பெறுவான். கல்விமான், சுறுசுறுப்பானவன், இனிமையான இன்ப நுகர்வாளன். பலவிதத்தில் பொருள்தேடி செல்வம் சேர்க்க வல்லவன். சரக்குகளை கொள்முதல் செய்யவும், விற்கவும் ஆன வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்.
கிரகங்கள் ஏழும் மூன்று வீடுகளுக்குள் இருக்கும் போது சில விசேஷ கிரக சேர்க்கைகளும், சில விபரீத கிரக சேர்க்கைகளும் ஏற்பட்டிருக்கலாம். அவற்றுள் எவை பலம் பெற்றிருக்கின்றன என்பதை அறிந்தே சூல யோக பலனை நிர்ணயிக்க வேண்டும்.
நீளக யோகம்
ஆள்சன்மம் இரண்டில் ஏழு கிரகமும் அமர்ந்து நிற்கில் நீளக யோகம் என்பர்!
இதன்பலன் நிதியோன் ! மிக்கோர்
தாள்தொழு திறைஞ்சி நிற்கும்!
சரசவான் ! தீர்க்க சீவி!
கோள்சுப காமன் ! சென்மத்(து)
ஏழுறில் கவுள யோகம் !"
பாடல் விளக்கம்;-
லக்னத்திலும், இரண்டாம் இடத்திலும் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களும் அமர்ந்து இருந்தால் அதனை "நீளக யோகம்" என்று குறிப்பிடுவர்.
நீளகா யோகத்தில் பிறந்தவன் பணக்காரன். சான்றோர்களின் காலைத் தொட்டு வணங்கி அவர்களுக்கு மரியாதை செலுத்துவான்.கல்விக் கலைகளில் தேர்ந்தவன். அதிக வாழ்நாள் உடையவன். புனித காரியங்களில் விருப்பம் உள்ளவன்.
கவுள யோகம்
லக்னத்திலேயே சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களும் வீற்றிருந்தால் அது "கவுள யோகம்" எனப்படும்.கவுள யோக பலனை அடுத்த பாடலில் பார்ப்போம்.
கவுள யோக பலன்
யோகமாம் கவுள யோகம்
உறுதனம் சற்று மில்லான்!
பாகமா இளைத்தி ருப்பன்!
செலவுளான்! பகரில் சோம்பன்!
தோகைகேள் பொல்லான் !
சிற்ப காரியத் தொழிற்கு வல்லவன்!
வாகுடன் புவிசஞ் சார
வல்லமை உள்ள னாமே !"
பாடல்விளக்கம்
பெண்ணே கேட்பாயாக! கவுள யோகத்தில் பிறந்தவன் சிறிதளவும் செல்வம் இல்லாதவன் ஆவான். பாதிக்குப் பாதி மெலிந்து போய் இருப்பான். அதிகமான விரயச் செலவுகள் செய்ய வேண்டியவனாகி இருப்பான். ஆனால் அவன் ஒரு சோம்பேறி. தீயவன். சிற்பம் முதலிய கைவினைத் தொழிலில் திறமைசாலியாக இருப்பான். பூமியில் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.
குறிப்புரை:
கவுள யோகா என்றால் என்னவென்று சென்ற பாடலின் இறுதி வரியிலே சொல்லப்பட்டுள்ளது.
ஏழு கிரகங்களும் ஒரே வீட்டில் இருக்கும் போது அவற்றிற்கு கிரகயுத்தம் ஏற்பட்டு ஒருவித மான ஸ்தம்பித்த நிலையைதான் அவை அடையும் .சரிவர பலன்கள் தராது.
அதே நேரத்தில் லக்கினத்தை பொருத்து கிரகங்கள் அடைந்திருக்கின்றன நட்சத்திர சாரங்களைப் பொறுத்தும் அபூர்வமான யோகங்கள் சில நேரங்களில் ஏற்பட்டு விடக் கூடும். எனவே உன்னிப்பாக ஆய்வு செய்வது முக்கியம்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
. செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
Teacher & Astrologer
Omsakthi online astro consulting centre,
Karambakkudi,Pudukkottai District.
Email : masterastroravi@gmail.com
........
எந்த கிரக திசை எந்த ராசிக்கு யோக பலனை தருவார்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனித வாழ்வை வழிநடத்திச் செல்வது கிரகங்கள்தான் என்றாலும் ,எந்த கிரகமானது எந்த ராசிக்கு எந்த இடங்களில் அமரும் போது யோக பலன்களை தருவார் என்பது பற்றியும்,
கிரகங்கள் வழி நடத்தி செல்லும் திசை அமைப்பு பற்றியும் ஆராய்ந்து அறிவதே இப்பதிவின் நோக்கமாகும்.
ஒருவருக்கு நடக்கும் திசை என்று கூறுவதைவிட தசை என்று கூறுவது தான் சாலச்சிறந்தது.
சமஸ்கிருதத்தில் தசா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் திசை என்பதே ஆகும்.
ஒருவருக்கு எந்த திசை யோகத்தை தரும் ? என அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டால் அந்த திசை காலங்களில் புதிய முயற்சியை அல்லது புதிய வியாபாரத்தை தொடங்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.
ஒரு சாதக கட்டத்தில் கிரகங்கள் பலமடைந்த அமைப்பில் இருந்தாலும் அவரது நடப்பில் இருக்கும்
தசையானது யோக திசையாக அமையாத பட்சத்தில் என்னதான் அந்த கிரகங்கள் பலம் அடைந்து இருந்தாலும் அந்த பலமடைந்துள்ள அந்த கிரக அமைப்புகளால் சாதகருக்கு எவ்வித பலனும் ஏற்படுவதிவில்லை.
கிராமங்களில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. "ஒதிய மரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது." என்பார்கள்.
அதுபோல சாதக கட்டத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர மற்றும் கோணாதிபதிகள் பலம் பெற்றிருந்தாலும் அந்த தசையானது வாழ்வில் நடப்பில் வரவில்லையெனில் கிரகங்கள் பலம் பெற்று இருந்தும் பயனில்லாமல் போய் விடுகிறது.
பொதுவாக ஒரு திசையானது யோக பலனை தர வேண்டும் எனில் அது லக்னாதிபதிக்கு நட்பாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.மேலும் நடப்பில் இருக்கும் தசை இலக்கனம் அல்லது லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர மற்றும் கோணங்களில் அமைந்து லக்கனாதிபதிக்கு நட்பாக இருக்கும் கிரகங்களின் திசையானது யோக பலன்களை சாதகருக்கு வாரி வழங்குகிறது.
ஒரு தசை நடப்பில் இருக்கும் பொழுது அந்த தசாநாதன் ஜாதகத்தில் லக்கனம் அடிப்படையில் அது பலமடைந்து உள்ளதா? என்பதைக் காணவேண்டும். இலக்கன அடிப்படையில் நடப்பில் இருக்கும் தசை பலம் இழந்த அமைப்பு பெரும் பொழுதோ அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகளான ஆறு மற்றும் எட்டுக்கு உடையவர்களாகவோ வரும்பொழுது அந்த திசை முற்றிலும் யோக பலனை தராது என்று முடிவுக்கு வர முடியாது. அந்த நிலையில் இலக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்கள் ராசி அடிப்படையில் அந்த கிரகம் சுப அல்லது அசுப ஸ்தானங்களில் உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
இரண்டு நிலையிலும் அந்த கிரகம் கெட்ட ஸ்தான அமைப்பை பெரும் பொழுது அது யோக பலனை தருவதில்லை.
ராசி மற்றும் லக்கனம் ஆகிய இருவேறு நிலையில் கவனிக்க வேண்டும் .இரண்டு நிலைகளிலும் நல்ல ஸ்தான அமைப்பைப் பெற்றிருக்கும் பொழுது அந்தத் தசை கொடிகட்டி பறக்கும் நல்ல யோகத்தை தரும் அமைப்பை சாதகருக்கு உருவாக்கும்.
ஒரு ஜாதகருக்கு யோக பலனை அள்ளித் தரக்கூடிய தசை என்று வைத்துக்கொண்டால் முதன்மையானவர் 1,5,9 எனப்படும் கோண அதிபதிகள் ஆவர். கோனாதிபதிகளுக்கு அடுத்தபடியாக யோக பலன்களை தருபவர் யார்? என வினா எழுப்பினால் கேந்திர அதிபதிகள் ஆகும்.
பொதுவாக ஒரு ஜாதகத்திற்கு கேந்திர ஸ்தானமான 1, 4 ,7 ,10 ஆம் இடங்களுக்குச் இயற்கை சுபர் அதிபதிகளாக வருகின்ற பட்சத்தில் அக்கிரகமானது "கேந்திராதிபத்திய தோஷத்தை அடையும் என்ற வகையில் சுபர்கள் கேந்திரங்களில் அமராமல் இருப்பது நல்லது.
கேந்திராதிபதிகள் இயற்கை சுப கிரகங்களாக வரும்பொழுது கோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலும் அமர்வது நல்லது . இவ்வாறு அமர்ந்து அதன் தசை நடக்கும் பொழுது கேந்திராதிபதிகள் யோக பலனை தருகிறது.இதேபோல பாவக்கிரகங்கள் கேந்திரங்களில் இருந்து அதன் தசை நடக்கும் போது மட்டுமே யோக பலனை தருகிறது.
கேந்திரம் மற்றும் கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு அதன் திசை நடக்கும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகனுக்கு தருகிறது.
கோணம் மற்றும் கேந்திர ஸ்தான திசையாக இருப்பதால் மட்டும் அது யோக பலனை தந்து விடும் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.
ஒரு ஜாதகருக்கு பெரும்பாலும் ஆறு மற்றும் எட்டு போன்ற மறைவிட ஸ்தான அதிபதிகளின் தசை நடக்கும் போது அந்த ஜாதகருக்கு யோக பலனை தந்து விடுவதில்லை.
அதே நேரத்தில் இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இருக்கும்பொழுது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் விபரீத ராஜயோக பலன் தந்து விடுகிறது.
சில நேரங்களில் கோணம் மற்றும் கேந்திராதிபதியாகவே இருந்தாலும் அவை பகை, நீசம், அஸ்தமனம் மற்றும் மறைவிடங்களில் சென்று இருந்தாலும் அல்லது பகைக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு போன்றவற்றின் தொடர்பு இருந்தாலும் அந்த தசை நடப்பில் இருக்கும் போது யோக பலனை மட்டுப்படுத்துகிறது.
ஒரே இலக்கனம் மற்றும் ராசியை கொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட தசை நடப்பில் இருக்கும் காலங்களில் யோக பலனை தந்து விடுவதில்லை மாறாக அத்திசை காலத்தில் சாதகருக்கு இன்னல்கள் பலவற்றை அனுபவித்து விடுகிறார்கள்.
மேஷ ராசிக்கு 6-க்குடைய புதன் திசை
.
ரிஷப ராசிக்கு 8-க்குடைய குரு தசை
மிதுன ராசிக்கு 6-க்குடைய செவ்வாய் திசை
கடக ராசிக்கு 8-க்குடைய சனி திசை
சிம்ம ராசிக்கு 6-க்குடைய சனி திசை
கன்னி ராசிக்கு 8-க்குடைய செவ்வாய் திசை
துலாம் ராசிக்கு 6-க்குடைய குரு தசை
விருச்சக ராசிக்கு எட்டுக்குடைய புதன் திசை
தனுசு ராசிக்கு ஆறுக்குடைய சுக்கிரதிசை
மகர ராசிக்கு 8-க்குடைய சூரியதிசை,
கும்ப ராசிக்கு 6-க்குடைய சந்திர தசை
மீன ராசிக்கு 8-க்குடைய சுக்கிர தசை மற்றும் ஆறுக்குடைய சூரிய திசை.
ஒரு சில நேரங்களில் மேற்கண்ட தசைகள் கெடுபலனை தராமல் இருக்க வேண்டுமெனில் அந்த தசாநாதன் நீசம், அஸ்தமனம் மற்றும் மறைவிடங்களுக்கு செல்லுதல் மூலமாகவும் அல்லது இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை பெறுவதும் மூலமாகவும் அத்திசை காலங்களில் ஒரு சிலருக்கு இன்னல்கள் குறைந்து யோக பலனை தந்து விடுவதும் உண்டு.
பொதுவாக 12 ராசிகளுக்கும் எந்த தசை யோகங்களை தரும் என்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது சாதக கட்டத்தில் இரண்டு வகையான அணிகளை(Team) ஜோதிட ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் ஒன்று அருள் அணி என்று சொல்லக்கூடிய குருபகவானை தலைமையாகக் கொண்டு செயல்படக்கூடிய அணியும் மற்றொன்று பொருள் அணி என்று சொல்லக்கூடிய சுக்கிரனை தலைமையாகக் கொண்டு செயல்படக்கூடிய அணியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அருள் அணி
குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது.
பொருள் அணி
சுக்கிரன்,சனி, புதன் மற்றும் ராகு
இலக்கனம் மற்றும் ராசியை ஒரே மாதிரியாக கொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட தசைகள் யோகப் பலனைத் தருகிறது.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் போன்ற ராசிகளுக்கு குரு, சந்திரன், செவ்வாய் மற்றும் கேது போன்ற கிரகங்களின் திசைகள் யோக பலன்களை அளிக்கிறது.
மேற்கண்ட திசைகள் யோக பலனை தர வேண்டுமாயின் மேற்கண்ட கிரகங்கள் மறைவிடங்களுக்கு செல்லாமலோ அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பு அல்லது சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்களுடன் தொடர்பும் பெறாமல் இருக்க வேண்டும்.
இந்த ராசிகளுக்கு சுக்கிரன்,சனி,புதன் மற்றும் ராகு போன்ற கிரகங்களின் திசைகள் யோக பலன்களை தருவதில்லை.இது போன்ற கிரகங்கள் கோண மற்றும் கேந்திரங்களில் இடம்பெறாமல் உப ஜெய ஸ்தானங்களில் நட்பு நிலையில் இடம் பெற கெடு பலன்களை அதிகம் தருவதில்லை.
இதேபோல ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு சுக்கிரன்,சனி, புதன் மற்றும் ராகு திசைகள் யோக பலனை தருகிறது.
இதுபோன்ற ராசிகளுக்கு குரு ,சந்திரன் ,செவ்வாய் சூரியன் மற்றும் கேது தசைகள் யோக பலனை தருவதில்லை.
இக்கிரங்கள் உபய ஸ்தானமான 3 ,6, 10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் நிற்கின்றபோது இன்னல்களை அதிகமாக தருவதில்லை.
யோகம் தரும் ஒரு கிரகம் இரு ஆதிபத்தியம் பெறும் பொழுது ஒன்று கேந்திரம் அல்லது கோணமாக இருந்து மற்றொன்று மறைவிட ஸ்தானமான இருக்கின்ற பொழுது அந்தத் திசையில் பாதி ஆண்டுகள் கற்பனையும் பாதி ஆண்டுகள் ஆதிபத்திய பாவ பலனையும் தருகிறது.
இதில் பொதுவாக இயற்கை பாவர்கள் கேந்திரங்களிலும் , இயற்கை சுபர்கள் கோணங்களிலும் இடம் பெறும் பொழுது யோகப் பலனைத் தருகிறது.
உதாரணமாக கடக லக்னத்திற்கு குருபகவான்
6 மற்றும் 9-க்குடையவர் என்றவகையில் குருபகவான் அவர் ஆறாம் இடமான தனுசு ராசி இடம் பெறாமல் ஒன்பதாம் இடமான மீன ராசியில் இருக்கும்போது மிகுந்த யோகத்தை தருவார்.
குரு திசை -16 ஆண்டுகளில் ஒரு எட்டரை ஆண்டுகள் ஆறாம் இட ஆதிபத்தியம் பலனையும் மற்றும் ஒரு எட்டரை ஆண்டுகள் ஒன்பதாம் இட கோண ஆதிபத்திய பலனையும் தருகிறது.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.பா. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com
My blog
www.AstroRavichandran.blogspot.com
WWW.AstroRavichandransevvai.blogspot.com
................
ஜோதிட விதிகளும், விதிவிலக்குகள்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
முகநூலில் எழுதப்படும் எந்த ஒரு ஜோதிட விதிகளும் பொதுப்பலன் ஆகும். இவ்வாறு சோதிடர்களால் தரப்படும் போது பலனை படிக்கக்கூடிய ஆரம்ப சோதிடர்கள் அந்த ஒவ்வொரு விதியையும் தன்னுடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம் அவ்வாறு ஒப்பிட்டு பார்த்து தானாகவே ஒருசில முடிவுகளை எடுத்து விடக்கூடாது.
அதில் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. விதிகளை மட்டும் தெரிந்த உங்களுக்கு விதிவிலக்குகள் தெரியாததால் பொது விதியை அப்படியே உங்களது ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்த்து மனக்கஷ்டம் கொள்வதோ அல்லது பிறரை மனக் கஷ்டத்திற்கும் உட்படுத்துவதும் கூடாது.
மனதை கஷ்டப்படுத்தும் ஒரு சில ஜோதிட விதிகளை தந்து விதிவிலக்குகளையும் தக்க உதாரணம் மூலம் விளக்கலாம் என உள்ளேன்.
பொது விதி
ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளால் ஒருசில ஆடவர அல்லது பெண்டிர் தனது காம எண்ணம் மிகுதியால் இடம் மாறி, தடம் மாறி பல மலரில் தேன் எடுக்கும் வண்டினைப்போல மாற்றான் வீட்டு மஞ்சத்தில் பங்கு கொள்ளும் நபராக கிரக பலனால் மாறிவிடும் அபாயகரம் உள்ளது.
களத்திரகாரகன் சுக்கிரனுடன் அல்லது காமகாரகன் செவ்வாயுடன் சனி ,ராகு போன்ற கிரகங்கள் சேர்ந்து இருப்பது அல்லது சுக்கிரன் +செவ்வாய் சேர்ந்திருப்பது போன்றவை .
மேற்கண்ட விதிகளை எடுத்துக்கொண்டு ஜாதகத்தை ஆராயும் பொழுது அதனை அப்படியே Apply செய்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தந்து விடுவதில்லை.
இது போன்ற கிரக அமைப்புகள் உள்ள சாதகங்களை பார்க்கும் போது அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க நேரிட வாய்ப்புண்டு என்பதால் கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் மூலம் விளக்குகிறேன்.
கீழ்க்கண்ட இரண்டு உதாரண ஜாதகங்களில் முதல் ஜாதகத்தில்
(சிம்மம் லக்னம், துலாம் ராசி)
செவ்வாயும், சனியும் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இணைந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குருவின் ஐந்தாவது பார்வை அந்த இடத்திற்கு வருவதாலும் மேலும் வாக்கு ஸ்தானத்தில் சேரக்கூடிய செவ்வாய், சனி ஒருவருக்கு காம எண்ணத்தை மிகுதி படுத்தாது என்பதாலும்,
மனநிலை காரகன் சந்திரன் எவ்விதத்திலும் கெடாமல் இருப்பதாலும்
மேற்கூறிய வகையில் கூறப்பட்ட பொதுவிதி இந்த ஜாதகருக்கு செயல்படவில்லை.
ஆனால் அதே நேரத்தில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சாதகத்தை எடுத்து கொண்டு பார்க்கும்போது
(கன்னி லக்கினம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம்)
இந்த ஜாதகத்தில் அயன, சயன மற்றும் படுக்கை சுகத்தை தரக்கூடிய பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன்+ செவ்வாய் சேர்ந்திருப்பதுடன் இயற்கை சுப கிரகத்தின் பார்வை படாத நிலையிலும்,
இவை மட்டுமல்லாமல் காம காரகன் செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக சனியைப் பார்ப்பதாலும், சனி பகவான் லக்கனத்திற்கு வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் காமகாரகன் செவ்வாய் பகவான் வீட்டில் இருந்து பத்தாம் பார்வையாக அயன, சயன மற்றும் படுக்கை சுகம் தரக்கூடிய சுக்கிரன்+ செவ்வாய் உடன் தொடர்பு கொள்ளவும்,
மேற்கண்ட அமைப்புடன் மனநிலை காரகன் சந்திரனுடன் கேது மற்றும் ராகு தொடர்பு கொண்டு இருப்பதாலும்
இதுபோன்ற மேற்கண்ட பல காரணங்கள் இருப்பதால் மேற்கண்ட அமைப்புடைய சாதகர் தனது கணவனை விட்டு பிரிந்து வேறு சில ஆடவருடன் தவறான தொடர்பு கொள்ள நேர்ந்தது.
ஆதலால் ஒரு சாதகத்தில் பொதுவான விதியை எடுத்துக் கொண்டு ஒரே கோணத்தில் பலன் பார்த்தால் பலனில் தவறிவிட வாய்ப்பு உண்டு.இரண்டு காதலர் தினம் பொதுவான விதி இருந்தாலும் ஏனைய சிறப்பு விதிகளில் பலன்களில் மாறுபட்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email: masterastroravi@gmail.com
....
வாழ்வின் வழிகாட்டி ஜோதிடம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடம் என்பது கடலில் வழி தெரியாமல் திண்டாடும் மாலுமிக்கு கப்பலை கரை சேர்க்க வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது!
வாழ்வின் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி தவிக்கும் மனிதனுக்கு
வாழ்வின் உன்னத தாத்பரியத்தை உணர வைக்கும் ஒரு நல்ல புத்தகம் போன்றது !
எந்த ஒரு ஜோதிடராலும் அவரே ஒரு ரிஷியாக இருந்தாலும் றூறு சதவீத உண்மை சாதகருக்கு வழங்கிவிட முடியாது. ஏன் றூறு சதம் உண்மையை கூறி விட முடியாது எனில் ஊழ்வினைப் பயனால் அவனுக்கு அமைந்த சாதகப்பலன் என்பது எண்பது சதவீதம் எனில் மீதம் இருக்கும் இருந்து சதவீதம் பலன் சாதகர் இப்பிறப்பில் செய்யும் நல்வினை மற்றும் தீவினையை பொறுத்து அமைகிறது.
நமது முன்னோர்கள் "விதியை மதியால் வெல்லலாம்" என்றார்கள். எல்லோரும் விதியை மதியால் வென்று விட முடியாது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் விதியும் சாதகத்தில் அமைய வேண்டும்.
சாலையில் வாகனத்தில் செல்லும் போது வழியில் பள்ளம் இருப்பது "விதி" எனில் அங்கே பள்ளம் இருப்பதைக் காட்டிக் கொடுப்பது " மதி "ஆகும்.
மனித வாழ்வில்
காலப் போக்கினை தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி சோதிடம் ஆகும்.
"உற்றது உரைத்தல் உறுவது கூறல்" சோதிடத்தின் மிக முக்கியக் கூறாக அமைந்துள்ளது.
ஒரு மனித வாழ்வின் பூர்வபுண்ணிய பலனையும் ,போன பிறவியின் தொடர் வினையையும் இப்பிறப்பின் நாம் அனுபவிக்க இருக்கும் கர்ம வினையின் தொடர்ச்சியையும் தெளிவாக எடுத்துக் காட்டுவது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஐந்தாம் இடமாகும்.
இப்பிறப்பில் நாம் செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப மறுபிறப்பில் நாம் என்னவாக பிறப்பெடுப்போம் ? , மறுபிறப்பு நமக்கு உண்டா? என்ற வினாவிற்கு விடைதேடும் முயற்சியில் ஈடுபடும் போது மோட்ச பயனை உணர்த்தும் மோட்சம் அல்லது முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படும் காலபுருஷ தத்துவத்தின்படி நிறைவு ஸ்தானமான "பன்னிரண்டாம் இடத்தை" கொண்டும் அறியலாம்.
ஊழ்வினைப் பயனால் பிறப்பெடுத்த நாம் நம் கர்ம பயனை அனுபவிக்க இந்த மண்ணில் ஒரு குறிப்பிட்ட நபருக்கு, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளையாக ஜெனிக்கின்றோம்.
புல்லாகிப் ,பூண்டாகி மிருகமாய் ,மனிதராய்.... என பல பிறப்பு எடுக்கிறோம்.
ஒருவர் பிறப்பற்ற நிலையடைய ஆசையற்ற நிலையை அடைந்து நமது ஆத்மா சங்கமிக்கும் போது மறு பிறப்பற்ற நிலை உருவாகிறது.
இதனை ஜாதக கட்டத்தில் மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தை கொண்டு அறியலாம். பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து, பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதியும் பலம் பெற்று நிற்க
மறுபிறப்பற்ற நிலையை அடைவதாக நமது சாதக சாத்திரம் கூறுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் திரிகோண ஸ்தானமான 1 ,5 ,9 மற்றும் மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் இடம் ஆகிய இடங்களில்
சனி+ கேது இணைந்து அல்லது சனியோ அல்லது கேதுவோ தனியாக நின்று ஆன்மீக கிரகமான குரு பகவானால் பார்க்கப்பட சாதகர் இப்பிறப்பில் ஆன்மிக சிந்தனை கொண்டவராக திகழ்வார்.
"கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்க கேதியுள்ள சன்னியாச யோகம்! யோகம்!
பொதுவாக ஜாதக கட்டத்தில் பத்தாம் இடம் என்பது கர்ம ஸ்தானம் ஆகும். சனி பகவானை கர்ம காரகன் என்று அழைக்கப் படுகிறது. எனவே கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் மூன்று கோள்கள் இணைந்து நிற்பின் சன்னியாச யோகத்தை சாதகருக்கு தருகிறது.
ஒருவர் தான் இப்பிறப்பில் செய்யும் தர்மங்களை அளந்தறிய சாதக கட்டத்தில் தர்ம ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும் அதன் அதிபதியும் ஆராய்ந்தறிய வேண்டும்.
ஒருவரது பிறப்பின் கர்ம வினையை பற்றி ஆராய பத்தாமிடமான கர்ம ஸ்தானம் உதவுகிறது.
சூட்சும உண்மையாக ஒரு மனிதரின் தர்மம் , அவரது கர்மத்துடன் இணையும் போது ஆன்மீக யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது. இதனைத்தான் சாதக கட்டத்தில் "தர்மகர்மாதிபதி யோகம்" என்கிறோம்.
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாமிட அதிபதி மற்றும் பத்தாம் இட அதிபதி , அதாவது தர்ம மற்றும் கர்ம ஸ்தானாதிபதி ஆனவர் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மற்றும் இருவரும் இணைந்து நின்றாலும் (குறிப்பாக
1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் நின்றாலும்) தர்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும்.
"சொல்லுமையா பாக்கியத்தோன் பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனை கேளு! எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களும் பணிவார்கள் இறைவன் போல!
தொல்லையில்லான் பலபேரை காக்க வல்லோன்!
துணையாளர் பலபேரும்
உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்சத்தாலே வளமையாக
வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"
ஒருவர் இப்பிறப்பில் அவருடைய வாக்கு வன்மையையும் மற்றும் புத்தி ஸ்தானத்தையும் ஆராய்ந்து அறிய இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடத்தை ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் சுப நிலையில் நிற்க கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் உடையவராகவும் மற்றும் மற்றும் நல்ல புத்தி உடையவராக திகழ்வாரா? என கண்டறிய ஐந்தாமிடத்தையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒருவருடைய குணம் நலன்களை ஆராய்ந்து அறிய அவருடைய ஜாதகத்தில் இலக்கனத்தையும் அதன் அதிபதியும் பொருத்து அமைகிறது.
சென்ற பிறப்பில் நாம் செய்த பூர்வ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் நமக்கு புத்திர பாக்கியம் அமையும். எனவேதான் பூர்வ புண்ணிய ஸ்தான பலனே புத்திர பாக்கியம் ஆக நமக்கு அமைந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com.
........
சூரியன் பகவான் தரும் சோதிட உண்மைகள் --( 2 )
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனித உடலின் உஷ்ணம் தொடர்பான வியாதிகளுக்கு சூரியன் பகவான் முக்கிய காரணகர்த்தா ஆவார்.உஷ்ணம் தொடர்பான காய்ச்சல், உடலில் கட்டி,அம்மை ... போன்ற வியாதிகளுக்கும் சூரியன் பகவானே காரணகர்த்தாவாக திகழ்கிறது.
நவகிரகங்களில் சூரியனே தலைமை கிரகமாக திகழ்வதால் ஒரு மனிதன் தலைமை ஏற்று நடத்தும் திறமை மனிதனுக்கு தருவதும் சூரிய பகவானின் ஆசியே முக்கியமாகும். வட்டாட்சியர் ,மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் மாநில மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற உயரிய தலைமை பதவிகளுக்கு சூரிய பகவானே காரணமாக அமைகிறது.
ஒரு மனிதனின் தலை, மூளை, உழைப்பு உற்சாகம் ,உயிர்ப்புடன் திகழ்வது மற்றும் தனித்தன்மையாக திகழ்வது போன்றவற்றிற்கு சூரியன் பங்கு முக்கியமானது.
சூரியன் ஒளி பிரகாசிக்கும் பகல் காலத்தில் மனித மூளை சிந்தித்து கொண்டு இருக்கிறது. சூரியன் அஸ்தமன பிறகும் இரவு நேரத்தில் மூளையானது ஓய்வு எடுக்கிறது.
சூரியன் தனது தனித்துவமான அமைப்பை பெற்றிருப்பது போல ஒரு மனிதனின் புகழ் , கீர்த்தி மற்றும் அந்தஸ்து போன்றவற்றை பெற சூரிய பகவானின் பலம் அவசியமானது ஆகும்.
சூரிய பகவான் தலை, முகம், இதயம் ,கண்,
ரத்த அழுத்தம், காக்காவலிப்பு, மலச்சிக்கல் ,அஜீரணம் , சுத்த இரத்தம் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கு அனைத்திற்கும் காரண கர்த்தாவாக விளங்குபவர் சூரியபகவானே ஆவார்.
இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் தனது சூரிய வெப்பத்தால் பூமியில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றி மேல்நோக்கி எழும்ப செய்து மேகமாக மாற்றி பிறகு மீண்டும் மழையாக மற்றும் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் வாழ வைக்கும் குணம் உடையது போல பலமான சூரியனைத் தனது ஜாதக கட்டத்தில் கொண்டவர்கள் எல்லா உயிர்களையும் தன்னுயிராக கருதும் ஜீவ காருண்யம் மிக்க மனிதர்களாக இப்புவியில் ஜெனிக்கிறார்கள். அருட்பிரகாச வள்ளலார் கூறியது போல" வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று என்று வருந்திய சித்த புருஷர்கள் தோன்றுவதற்கும் சூரிய பகவானின் அருளாசி அவசியம் தேவை.
மனித உடலில் அனைத்து உறுப்புக்களையும் இணைக்கும் எலும்புக்கு சூரியன் காரணகர்த்தா ஆவார்.
சூரியன் ஆட்சி மற்றும் மூல திரிகோண வீடு-
சிம்மம்,
உச்ச வீடு -மேஷம்
நீச வீடு- துலாம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது சூரியன் தனது காரக மற்றும் ஸ்தான பலத்தையும் சிறப்பாக தரும்.
சூரியனுடைய நட்புகிரகம்
குரு ,சந்திரன் மற்றும் செவ்வாய்
ஆதலால்
இதனுடைய நட்பு ராசிகள்
தனுசு,மீனம், கடகம் மற்றும் விருச்சிகம்
சம கிரகம் -புதன்
சம ராசிகள் : மிதுனம் மற்றும் கன்னி
எனவே சூரிய பகவான் தனக்கு நட்பு கிரகமான குரு ,சந்திரன் செவ்வாய் மற்றும் புதனுடன் சேர்ந்து இருப்பது அல்லது நட்பு மற்றும் சம தன்மை கொண்ட கிரகங்களால் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பரிவர்த்தனை பெற்றிருப்பதும் அல்லது அதனுடைய நட்சத்திர சாரம் பெற்று இருப்பது அல்லது அவருடைய நட்பு வீடுகளில் இடம் பெறுவது ஆகிய மேற்கண்ட வகையில் ஏதாவது ஒரு வகையில் சூரியன் பகவான் ஜாதக கட்டத்தில் நிற்க ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும்.
சூரியன் பகை கிரகம்
சுக்கிரன்,சனி ,ராகு மற்றும் கேது
சூரியன் பகை ராசிகள்
ரிஷபம், மகரம் மற்றும் கும்பம்
சூரியன் தனது பகை கிரகமான சுக்கிரன் ,சனி, ராகு மற்றும் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் அல்லது பகை கிரகங்களின் பார்வை பெறுவது அல்லது அதன் நட்சத்திர சாரம் பெறுவது அல்லது பகை வீடு மற்றும் நீச வீடுகளில் நிற்பது போன்ற மேற்கூறிய வகைகளில் ஏதேனும் ஓரு வகையில் நிற்பின் சூரியன் தனது காரக மற்றும் ஸ்தான பலத்தையும் இழக்கிறது.
சூரிய பகவானுடன் அரவுகளான ராகு மற்றும் கேது சேர்க்கை கிரகண தோசத்தை உண்டாக்குகிறது. இதில் சூரியனுடன், ராகு சேர்க்கை மிகுந்த கிரகண தோஷம் தருகிறது. சூரியனுடன், கேது சேர்க்கை ஆன்மீகத்தில் உயர் நிலை அடைய வைக்கிறது.
சூரியன்
ஸ்தலம் -தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோவில்.
நிறம் சிவப்பு
தானியம் -கோதுமை
வாகனம் -ஏழு குதிரை பூட்டிய தேர்
ராசி கல் -மாணிக்கம்
கிழமை -ஞாயிறு
குணம் -தாமசம்
சுபாவம் -குரூரம்
சுவை- காரம்
திக்கு -கிழக்கு, மையம்
தாது -எலும்பு
நோய் -பித்தம்
உலோகம்- தாமிரம்
பஞ்சபூதம்- நெருப்பு
மலர் -செம்பருத்தி செந்தாமரை
சூரியன் திசை-6
சூரியன் நட்சத்திரம்-
கார்த்திகை உத்திரம், உத்திராடம்
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com
.....
சூரியன் பகவான் தரும் சோதிட உண்மைகள்.( 1 )
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நவக்கிரகங்களில் தலைமை கிரகமாக கருதப்படுவது சூரிய பகவான் ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனை அடிப்படையாக கொண்டு பலன் காணும் முறை பெரும்பாலும் மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியலின் ஒரு பிரிவான வானவியலிலில் (Astronomy) சூரியனை மையமாக கொண்டு எல்லா கோள்களும் சுற்றி வருவதால் சூரியனை மையமாக கொண்டே அறிவியலார்
" சூரிய குடும்பம்" என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
போலந்து நாட்டு வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் காலத்திற்கு முன்பு வரை புவியை மையமாகக் கொண்டே கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாக கருதப்பட்டது.
அதாவது 15 -ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பெரும்பாலான விஞ்ஞான அறிஞர்கள் நிலவில் இருந்த பூமியை மையமாகக் கொண்டே கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாக எண்ணினர்.
கிரேக்க நாட்டின் வானியல் அறிஞரான தாலமி என்பார் கிபி -140 ல் புவியை மையமாகக் கொண்டே கோள்கள் சுற்றி உள்ளதாக கருத்துகளை வலியுறுத்தினார்.
கிரேக்கத் தத்துவ மேதையும் வானியல் அறிஞரான அரிஸ்டாட்டில் என்பவரும் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் சுற்றி வருவதாக கருத்துக்களை கூறினார் .ஆனால் மதவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்தக் கொள்கை நிலை பெறவில்லை.
போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் "சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றி வருகிறது" என்ற கருத்தை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தினார்.
சூரியனை சுற்றி வரும் கோள்களில் புதன் சுக்கிரன், புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட் கோள்களும் புவியை ஒத்த கோள் என்று அழைக்கப்படுகிறது. உள்வட்ட கோள்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அதனால்தான் சாதக கட்டத்தில் புதன் பகவான் சூரியனுடன் அல்லது அதற்கு முன் ,பின் ராசிகளில் வாசம் செய்கிறது.
சுக்கிரன் பகவான் சூரியனுடனோ அல்லது சூரியன் இருக்கும் ராசிக்கு முன்பின் இரண்டு ராசிகள் தள்ளி வாசம் செய்கிறார்.
சூரியன் ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளிலும் ஒரு ஆண்டு சுற்றி வருகிறார். சாதாக கட்டத்தில் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் மேஷ ராசியிலும்,வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ரிஷப ராசியிலும் இவ்வாறாக பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு மீன ராசியிலும் சூரியன் வாசம் செய்வார்.
அதனால் ஜாதகத்தை பார்த்தவுடன் சூரியன் இருக்கும் இடத்தை வைத்து சாதகர்ர் பிறந்த மாதத்தை எளிமையாக கண்டறியலாம்.
சூரிய பகவானுடன் சந்திரன் சேர்வது "அமாவாசை யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் அமாவாசையில் பிறந்தவன் திருடனாக இருப்பான் என்று கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. ஒரு சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.
சூரியன் என்பது சிவனாகவும், சந்திரன் என்பதை சக்தியாகவும் கொண்டால் சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதக கட்டத்தில் இணைந்திருப்பவர்கள் அர்த்தநாரீஸ்வரர் போல அன்பாக அவனும் ,அவரது மனைவியும் கருத்து ஒத்த தம்பதியாக வாழ்வார். இயற்கை சுபர் கிரக பார்வை படவோ அல்லது வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தரும்.
சூரியனுடன் ,சந்திர பகவான் சம சப்தமாக பார்த்துக்கொள்வது "பௌர்ணமி யோகம்" என்று பெயர். பௌர்ணமி யோகம் பெற்றவர்கள் மிகுந்த யோகவான்கள். ஆன்மிகவாதிகளாக திகழ்வார். பெரும்பாலும் சிவன் பக்தர்களாக ஏற்பார்கள் கிரிவலம் மேற்கொள்வதை விரும்புவார்கள். சித்தர்களை சந்திப்பதிலும், ஆண்ம-ஞாண விசாரணை செய்வதிலும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
சூரியன் பகவானுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது அரசியலில் உயரிய பதவியை அடைய இந்த அமைப்பு நல்ல அமைப்பாகும்.சூரியன் மற்றும் செவ்வாய் பகவானுடன் ஆறுக்குடையவர் இணைவு சிறந்த வழக்கறிஞர்களாக திகழ்கிறார்கள்.
சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் உடன் குருபகவான் சேர்க்கை நீதித்துறையில் தலைசிறந்த நீதிபதியாக திகழக்கூடிய யோக பலனை சாதகருக்கு தருகிறது.
சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் சேர்ந்து இருக்கும் போது தரும் எதிர்மறை பலனை சாதக அலங்காரத்திலிருந்து பின்வரும் பாடல் விளக்குகிறது.
"இடு செவ்வாய் கதிர்கூடி எங்கு இருந்தாலும் இவளும் வாலிபம் தன்னில் அமங்கலியாவாள்"
மேற்கண்ட பாடலின் கருத்துப்படி ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும் இளவயதில் விதவையாக கூடிய அமைப்பு என்று கூறப்பட்டுள்ளது.
மூல நூலில் கூறப்பட்ட இந்த கருத்தை அப்படியே நாம் எடுத்துக் கொண்டு பலன் கூறக் கூடாது .இதில் சில விதி விலக்குகள் உண்டு.
சூரியனும் ,செவ்வாயும் சேர்ந்திருக்கும் பொழுது சூரியன் அல்லது செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் போது அல்லது சூரியன் மற்றும் செவ்வாயுடன் வேறு ஏதேனும் கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது இயற்கைச் சுபக்கிரகமான குருபகவான் பார்வை படும் பொழுது மேற்கூறிய பலனை தருவதில்லை.
ஒரு ராசி கட்டத்தில் இணைந்திருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் உடன் புதன் அல்லது சுக்கிரன் அல்லது குரு சேர்ந்து இருக்க பலனியில் மாற்றம் ஏற்படுகிறது.
சூரியனுடன் ,புதன் பகவான் சேரும்பொழுது
" புத ஆதித்ய யோகத்தை" தருகிறது.இவ்வகை சேர்க்கை மிகுந்த யோகத்தை தருகிறது.
இந்த சேர்க்கை சாதகரை கற்றவனாக அல்லது சான்றோனாக மாற்றுகிறது. பல பட்டங்கள் படிக்கக்கூடிய யோகத்தை தருகிறது.
ஒரு ராசி கட்டத்தில் இணைந்திருக்கும் சூரியன் மற்றும் புதனுடன் குரு அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் சேர மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்து தான் கொண்ட துறையில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய புகழை தருகிறது.
சூரியன் உடன் குரு பகவான் சேர்க்கை ஆன்மிகத்தில் உயர் நிலை அடையவும், ஆன்மீகத்தின் தலைமை ஏற்றுச் செல்லக்கூடிய தலைமை பொறுப்பை சாதகருக்கு வழங்குகிறது.
சூரிய பகவானை குரு பகவான் பார்க்க அரசாங்கத்தில் அல்லது அரசியலில் உயரிய இடத்தில் அமரக் கூடிய வாய்ப்பை ஸ்தான அடிப்படையில் தருகிறது.
சூரிய பகவானுடன் சனிபகவானுடைய சேர்க்கை தொழிலில் உயர்ந்தோங்கி விளங்க சிறப்புமிக்க சேர்க்கையாக அமைகிறது.
ஆனால் அதே நேரத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான உறவு நிலையில் சிறப்பு இருக்காது.தந்தைக்கு பிள்ளை மீதோ அல்லது பிள்ளைக்கு தந்தை மீதோ ஒருவித பாசம் தன்மை இல்லாது இருக்கக் கூடிய சூழலை தருகிறது.
சூரியனுடன், ராகு சேர்க்கை கிரகண தோசத்தை தருகிறது. இது அரசாங்கத்தின் பணிகளில் அடையாமல் தடுக்கிறது. தந்தையின் வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது ஒரு சிலருக்கு அதன் தசா புத்திகளில் தந்தையை இழக்கக்கூடிய சூழ்நிலை தருகிறது.
சூரிய பகவான் உடன் கேது பகவான் சேர்க்கை சாதகருக்கு நம்பகத்தன்மை இல்லாத சூழ்நிலை தருகிறது. ஆன்மீக ஞானத்தை தருகிறது. இதன் மீது குருபகவானின் பார்வை ஒரு நல்ல ஆன்மீக தலைவரை உருவாக்கியுள்ளது.
ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை இல்லற சுகத்தைப் திருப்திகரமாக அனுபவிக்க இயலாது. இயற்கை சுப கிரக பார்வை பலனில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருப்பது சூரியனை பலப்படுத்தி அதன் திசை புத்திகளில் யோக பலனை தருகிறது.
ஒரு ஜாதகத்தில் சூரியனும், சிம்மலக்கனமும் பலம் பெற்ற அமைப்பில் இருப்பின் அரசாங்க உயர் பதவிகளிலும் மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சாதகருக்கு வழங்குகிறது.
சூரியனுக்கு இரண்டு புறமும் பாவ கிரகங்கள் இருப்பது "பாப கர்த்தாரி யோகம்" பெற்று அதன் தசை விளக்கக்கூடிய காலங்களில் ஆயுள் பங்கத்தை சாதகருக்கு தருகிறது.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com
............