Monday 6 March 2017

யாருக்கு பயங்கரமான கனவுகள் வரும் ?

யாருக்கு பயங்கரமான கனவுகள் வரும் ?


                                                  கிரகங்கள் படுத்தும் பாடு-

                                      செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
கனவுகள் ஏன் வருகிறது ? யாருக்கு அதிகமாக வருகிறது ? -உளவியல் அடிப்படையில் முதலில் ஆராய்வோம்.

                             கனவு என்பது மனதின் நிறைவேறாத ஆசையின் வெளிபாடு ஆகும்.
                             மனம் போடும் கூச்சலே கனவு ஆகும்.பகலில் நம் மனதிற்கு எது தொடர்பான வேலைகள் கொடுக்கிறோமோ , அந்த வேலைகளில் மனம் செலுத்தும் தீவிரமான ஈடுபாடும் அதில் அவர்கள் சந்திக்கும் சம்பவங்களும் சிலருக்கு இரவில் கனவாக வந்து தொல்லை தரும்.

                                சில நேரங்களில் நாம் பார்க்கும் மற்றும் படிக்கும் சம்பவங்களில் அதிகமாக ஒன்டிப்போவதால் (involvement ) அதன் வெளிப்பாடும் கனவுகளாக வந்து தொல்லை தரும்.

                              சில நேரங்களில் தமது உயர்நம்பிக்கை (superiority complex) மற்றும் தாழ்வுமனப்பான்மை (inferiority)
இதன் பலனாகவும் இரவில் கனவுகளாக வந்து தொல்லை தருகிறது.


                                ஒன்று   கனவில் ஒரு மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக எண்ணிக்கொள்கிறான்.அங்கு அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது.அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது.இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி கொள்கிறான்.

                                     மற்றொன்று  சில நேரங்களில் தன்னை தாழ்வுபடுத்திக்கொண்டு தன்னை யாரோ துரத்துவதுபோலவும் ,தன்னை துன்பப்படுத்துவதுபோலவும் மற்றும் எதனையோ ஒன்றை இழந்ததை போலவும் எண்ணி தன்னை துன்பப்படுத்திக்கொண்டு உறக்கத்திலிருந்து அலறியபடியே எழுந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

                                     கனவுகள் என்பது ஒரு தனி உலகம் ஆகும்.இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் நடக்கவிருப்பதை முன்னரே கனவாக வந்து காட்டும்.இது ஒரு சில அறிஞர்கள் ,கவிஞர்கள்,மருத்துவர்கள் ,தத்துவ ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் கனவில் சிந்தனைகள் தோன்றி அதன் விளைவாக பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கிறது.

                                   சிலரது கனவில் பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் முன்னரே அவர்களது கனவில் வந்து காட்டியிருக்கும்.பிறகு அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ததைப்போலவே நடப்பதை கண்டு பேரதிர்ச்சி கொள்வார்கள்.

                                 சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் வராத புதிர்களுக்கான விடைகள்     சிலரது கனவில் விடையாக கிடைத்திருக்கிறது.

                                     விலங்கு செல்லின் உட்கருவில் உள்ள பாரம்பரிய பண்பிற்கு காரணமான ஜீன்களின் ஒன்றான   DNA -வின் அமைப்பை பலமுறை வரைந்து தூக்கி எறிந்த வாட்சனுக்கு அவரது கனவில் இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொள்வதுபோல கனவுகள் தோன்றி உடனே எழுந்து அந்த டி.என்.ஏ வின் வடிவத்தை வரைநது அதன் விளைவாக நோபல் பரிசும் பெற்றார்.

                          அதிகாலையில் காணும் கனவு அப்படியே பலிக்கும் என்பர்.எனவே கனவுகளில் நல்ல கனவும் உண்டு.தீய கனவும் உண்டு.
சில நேரங்களில் ஒரு மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும்.நாம் மனதிற்கு எதனை கொடுக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வருகிறது.பேய் படங்களை பார்த்துவிட்டு படுக்க செல்லும் இளைஞனின் கனவில் பேய் வந்து பயமுறுத்துவதும் ,காதல் மற்றும் காமசுகம் ததும்பும் படங்களை பார்த்துவிட்டு செல்லும் இளைஞனின் கனவில் அழகிய பெண்களின் அருகில் செல்வதுபோல கனவு காண்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் ஆகும்.

                         எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ ' அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.மனதிற்கு யோகா ,மூச்சுபயிற்ச்சி  மற்றும் தியானம் செய்து மனதினை பக்குவப்படுத்திக்கொள்வபர்களது உறக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை.

                         கனவுகள் ஏன் வருகிறது ?  யாருக்கு அதிகம் வருகிறது ?-ஜோதிடத்தில் இதற்கான விளக்கங்களை ஆராய்வோம்.

                       ஒரு மனிதனை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் லக்கனமும் அதன் அதிபதியும் ஆகும்.இவ்விரண்டும் பலவீனப்பட்டாலோ மற்றும் மனநிலைக்காரகன் எனப்படும் சந்திரபகவான் பலவீனமடைந்து இருந்தாலோ அவர்களது இரவில் கனவுகள் வந்து தொல்லைப்படுத்தும்.

                        ஒருவனது லக்கனத்தில் விரயஸ்தானாதிபதி இருந்தாலும் அல்லது லக்கனாதிபதி அஸ்தமனமாக இருந்தாலோ அல்லது லக்கனாதிபதி 6,8,12  போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அவர்களுக்கு கனவுகள் வரும்.

                              மனநிலைக்காரகன் சந்திரபகவான் அரவுகளான ராகு ,கேதுவோடு தொடர்புகொண்டிருந்தாலோ அல்லது லக்கனத்திற்கு 6,8,12 போன்ற மறைவுஸ்தானம் ஏறியிருப்வர்களுக்கும் கனவுகள் வரும்.

                             ஒரவரது சாதகங்களில் கோசார அடிப்படையில் ஏழரை ,அட்டமசனி நடந்துகொண்டு ஸ்ரீராகுபகவான் திசை நடப்பில் இருப்பவரின் கனவில் தேவையில்லாத  கனவுகள் வந்து பயமுறுத்தும்.

                           மனதிற்காரகன் சந்திரபகவானுக்கு எட்டாமிடத்தில் கர்மக்காரகன் சனிபகவான் இருக்க பிறந்தவர்களுக்கு ஏனைய பிற அமைப்பினை பொறுத்து பூர்வஜென்ம வினையால் கனவுகள் தோன்றும்.இதற்கு பூர்வபுண்ணிய ஸ்தான தொடர்பும் அவசியமாகும்.

                            பின்னர் நடக்க போவதை முன்னரே உணரும் சக்தி படைத்தவர் யார் ?
ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் ,செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் மேற்கண்ட பலன் உருவாகும்.

                          கனவுகள் ஏன் வருகிறது ? எதற்கு வருகிறது ?-மருத்துவ அடிப்படையில் இதற்கான விளக்கம் பின்வருமாறு..

                                கனவுகள் வராமல் தடுக்க
                    மனித சரீரத்தில் சளி அதிகம் இருந்தால் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் கனவுகள்  அதிகமாக வரும்.
 
                       வயிற்றில் பித்தம் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு இடைவெளிவிட்டு கனவுகள் வரும்.அவ்வப்போது தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இருக்க வைக்கும்.
வாயு தொல்லைகளும் சிலருக்கு கனவுகளை வரவழைக்கும்.

                             வாத,பித்த மற்றும் சிலோத்தும நாடிகளினை சரியாக பேணி காக்கவேண்டும்.

                       பலவீனமான உடல்நிலை மற்றும் மனநிலையும் கனவுகளுக்கு காரணம் என்பதால் உடற்பயிற்ச்சியும் ,மனபயிற்சியும் தினம்தோறும் செய்துவர பழகவேண்டும்.

                         ஸ்ரீராமபக்தனான ஆஞ்சநேய வழிபாடு கனவுகள் வரவிடாம் தடுக்கும்.எனவே ஆஞ்சநேய ஸ்தோத்திரம் உறங்க செல்வதற்கு முன் சொல்லிவிட்டு ஸ்துதி செய்து படுக்கைக்கு செல்லுங்கள்.
நன்றி.

    (தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டண விவரங்களை பெறலாம் )


                                                                   செல்
                                                                      740 257 08 99                                                                                          97 151 89 647

                                                  வாட்ஸ்அப்                                                                                   97 151 89 647




                                                      அன்புடன்
                                     சோதிடர்ரவிச்சந்திரன்
                                                            M.SC,MA,BEd.
                                                   சோதிட ஆராய்ச்சியாளர்,
                           ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
                                            கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


                Myemail.                                               astroravichandransevvai@gmail.com                                                    masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com*******astroravichandransevvai.blogspot.in/?m=1@@@@@@@@@@@@@@@@@@@@

Friday 3 March 2017

கிரகங்களின் பலத்தால் சாதகர் பெறும் தொழில் நிலைகள்

"   

 "கிரகங்களின் பலத்தால் சாதகர் பெறும் தொழில் நிலைகள் "



                                            கிரகங்கள் படுத்தும் பாடு - ( 47 )

              எல்லாம் வல்ல ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியோடு கிரகங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் மகத்தான மாற்றாங்களை தொடராக எளிமையாக எழுதி வருகிறேன்.

               ஒரு மனிதனுடைய சாதகத்தில் சூரியன்,புதன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தில் நின்று (மறைவு ஸ்தானமாக இல்லாமல்) குரு பகவானின் பார்வை இந்த மூக்கூட்டு கிரகங்களுக்கு கிடைக்குமானால் அந்த சாதகரானவர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவான் அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையில் அதிக ஆர்வத்தையும் பல வெற்றிகளையும் தர வைக்கும்.

                               இதேபோல ஒரு மனிதனுக்கு தனது சாதகத்தில் குரு பகவான் உச்சம் பெற்று சுக்கிரன் பகவான் மற்றும் புதன் பகவான் ஆட்சி பெற்று இந்த மூன்று கிரகங்களும் பலம்பெற்று நிற்கும்போது அவருக்கு அக்கிரகங்களானது சக்கரவர்த்தி யோகத்தை தந்து நாடாள வைக்கும்.

                             ஒரு மனிதனது சாதகத்தில் வேதத்தின் நாயகன் குரு பகவான்,கணிதவல்லோன் புதன் பகவான் மற்றும் மனதுக்காரகன் சந்திர பகவான் பலம்பெற்று ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்று இருப்பின் சாதகரை போதகர் என அழைக்கப்படும் ஆசிரியர்,பேராசியர்,ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தலைசிறந்த சோதிடராகவோ மாற்றி புகழ் பெற வைக்கும்.

                          ஒருவரது சாதகத்தில் கலையின் அதிபதி சுக்கிர பகவான்,மனதுக்காரன் சந்திர பகவான் மற்றும் நுண்ணறிவு வித்தகன் புதன் பகவான் பலம் பெற்று ஓருவருக்கு ஒருவர் சுப தொடர்பு பெற சினிமா துறையில் நடனம்,இசை ,பாட்டு ,கதாசிரியர் மற்றும் நடிப்பு போன்மவற்றில் புகழடைய செய்யும்.

                              ஒருவரது சாதகத்தில் வீரத்தின் தலைவன்  செவ்வாய் பகவான் ,ராகு பகவான் மற்றும் சனி பகவான் பலம்பெற்று ஒருவருக்கொருவர் பலம்பெற்று சம்பந்தப்பெற்றால் முரட்டுதனமான போலிஸ்,ராணுவ வீரராகவோ அல்லது கிரிமினல் வழக்கறிகராகவோ மாற்றிவிடுகிறது.

                            அதேநேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் போன்ற சுபகிரகங்களின் தொடர்பு பெறும்போது தலைசிறந்த மருத்துவ வல்லுனராக மாற்றிவிடுகிறது.இதனுடன் ராகு பகவான் சாரம் பெறின் அறுவை சிகிச்சை வல்லுணராக மாற்றி புகழடைய செய்கிறது.

                         ஒருவரது சாதகத்தில்    அந்தனன் குருவும்,ஞானகாரகன் கேது பகவானும் மற்றும்  கரமக்காரகன் சனி பகவான்  இம்மூவரும் பலம்பெற்று தொடர்புகொள்ளும்போது ஆன்மீகத்தில் உயரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது.

                     ஒருவருடைய சாதகத்தில் "கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சன்னியாச யோகம் யோகம் '' என புலிப்பானி சித்தர் கூறுகிறார்.

குறிப்பு ;(-மேற்கண்ட ஒவ்வொறு அமைப்பும் லக்கனம் மற்றும் ராசிக்கு பத்தாம் இடத்தோடு சம்பந்தம் பெற்றிருத்தல் வேண்டும்.)


                                                                 அன்புடன்
                                   P.RAVICHANDRAN M.Sc,MA,BEd,
                               ASTRO ONLINE CONSULTER
                      KARAMBAKKUDI,PUDUKKOTTAI (DISTRICT),TAMILNADU                                                     
                                                                                              
                                                                                       செல் ; 740 257 08 99
                                                                                                          9715189647
                                       வாட்ஸ் அப் எண்   
                                                        97 151 89 647

(தங்களது சாதகங்களுக்கான சோதிட பலனை போன் வழியாக பெறலாம் .கட்டணம் உண்டு.பிறந்த தேதி,நேரம் ,இடம் இதனை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் மூலமாக தெரிவித்து கட்டணம் செலுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள் )


My Email
masterastroravi@gmail.com

My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com

@@@@@@@@@@@@@@@@@@@@@

Thursday 2 March 2017

சாதகப்படி என்ன தொழில் நீங்கள் செய்யலாம் - ( 3 )


சாதகப்படி என்ன தொழில்

நீங்கள் செய்யலாம் ? -3




                                 "கிரகங்கள் படுத்தும் பாடு - ( 145 )

                    செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளிதம்மன் துணை!

               ஒரு மனித வாழ்வில் பொருள் ஈட்டல் என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும்.மண்ணில் பிறந்த ஒவ்வொறு மானிடனும் பொருள் ஈட்டலுக்கு ஏதாவது ஒரு வழிமுறையோ அல்லது தொழில் முறையோ  செய்யவேண்டியதாய் உள்ளது. அது என்ன தொழில் என்பதை கண்டறிந்து அதனை நோக்கிய பயணத்தை நகர்த்த வேண்டியது மனிதனாய் பிறந்த ஒவ்வொறு பிறப்பின் கடமையாகும்.

           எல்லோறுக்கும் ஒவ்வொறு  விதமான வழிமுறை அவரவர் கிரகபலன்களுக்கு ஏற்ப உள்ளது.யாரும் இங்கு தன்னை மொட்டைபயல் அல்லது வெறுங்கை என அழைக்கவோ அல்லது அழைத்துக்கொள்ளவோ கூடாது.

                         "வெறுங்கை என்பது மூடத்தனம்
                             விரல்கள் எல்லாம் மூலதனம் "

என்ற சிந்தனைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

என்ன தொழில் செய்யலாம் ?


சென்ற பதிவின் தொடர்ச்சி..

                  ஒருவரது சாதகத்தில் பத்தாம் அதிபதியோடு எட்டாம் அதிபதி கூடி பாவகிரகங்களான சனி மற்றும் செவ்வாய் ஆனது அவ்விடத்திற்கு தொடர்பு பெற்றால் உண்டாகும் தொழில்களை பார்ப்போம்.
சனி என்பவர் இரும்பு மற்றும் தொழில்நுட்பகாரகர் . ஆதலால் தொழிற்சாலைபணி,சிறையில்பணி  ,ஏவல் பணி மற்றும் அடிமை வேலை ,ஒட்டுனர் பணி முதலியன.

                  இரத்தகாரகர் ,துணிச்சல்காரகன் செவ்வாய்பகவானது சேர்க்கை கசாப்பு கடை,அறுவை சிகிச்சை நிபுணர்,கிளப்,மதுக்கடை மற்றும் கேளிக்கை விடுதி .இவற்றோடு சனிபகவானின் சேர்ந்தால் இத்தொழிலின் ஆர்வத்தை மிகுதியாக்கும்.

              சனி மற்றும் செவ்வாய் இருவரின் சேர்க்கை மேற்கண்ட அமைப்புடன் இணைந்தால் பாலியல் சார்ந்த தொழில்கள்,அடாவடிதனமான ரொளடிதன்மை முதலியன.
பத்தாம் அதிபதியான கர்மாதிபதியோடு , பாக்கியாதிபதி மற்றும் கர்மாதிபதியான    ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கையானது தர்ம-கர்மாதிபதி யோகத்தை தந்து புகழடைய செய்யும்.

               ஒருவருக்கு தர்ம-கர்மாதிபதியோகம் பெற்று அரசுக்கிரகமான சூரியனும் மற்றும் அறிவு மற்றும் ஆன்மீக செம்மலான குருபகவானின் சேர்க்கையானது சாதகரை போதனை துறையில் ஈடுபட வைக்கும்.உதாரணமாக ஆசிரியர்,சொற்பொழிவாளர் மற்றும் பிரசங்கி முதலியன்.இவர்கள் அரசு வேலை பார்ப்பர்.

            இல்லையெனில் கல்விநிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்தும் உரிமையாளராக இருப்பர்.
சிலர் அறநிலையதுறை,ஆசிரமம் நடத்துதல்,நீதிவழங்கும் நீதிமான்,நீதிபதி,தர்மகர்த்தா,புரோகிதர்,கோவில் முன்பாக பூஜை சாமான்கள் விற்பவரகவும் இருப்பர்.
தந்தைவழி சொத்துக்களை நிர்வாகிப்பவர்,வெளிநாட்டுபணி,பாஸ்போர்ட் ஆபிஸில் வேலை முதலியன.


                  பத்தாம் அதிபதியோடு லாபாதியான பதினொன்றாம் அதிபதியின் சம்பந்தமானது தான் மேற்கண்ட சொழிலில் மிகுந்த லாபம் அடைவர்.இவர்களோடு குரு மற்றும் சனிபகவானின் சேர்க்கையானது புத்தகங்களை வெளியிடும் புத்தகவெளியீட்டாளர்,புத்தக எழுத்தாளர்,சபாநடத்துபவர்,நிலம் தொடர்பான புரோக்கர்,பயிர்தொழில்,வாடகை மூலம் வருமானம் பெறுபவர் மற்றும் கல்யாண தரகர் முதலிதனஂ

                   பத்தாம் அதிபதியோடு பணிரெண்டாம் அதிபதி தொடர்புபெற்று ராகுபகவான் தொடர்பு அந்நியநாடு,அந்நியமொழி மற்றும் அந்நியநாட்டு பெண்மூலம் வருமானம் தரும்.
குருபகவான் தொடர்பு விவாதம் செய்யும் தொழில்
செவ்வாய் தொடர்பு இரவுகாவலர் பணி,ஜெயிலர் மற்றும் உளவுபணி
சனிதொடர்பு விரயம் செய்யும் பெருள்களால் தொழில்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணி.
சுக்கிரன் தொடர்பு பெண்கள் மற்றும் அழகுபொருட்களால் வருமானம் முதலியன
.


    Thanks

( தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் முறையில் பெறலாம் )


  தொடர்புக்கு

                               செல்
                                             740 257 08 99
                                                               97 151 89 647


                                                      வாட்ஸ்அப்
                                                                              97 151 89 647



                                                          அன்புடன்
                                            சோதிடர்ரவிச்சந்திரன்
                                                                 M.SC ,MA ,BEd,
                                                    சோதிட ஆராய்சியாளர்,
                                   
                                              ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
                                          கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
                                                        தமிழ்நாடு.


My email
                                             masterastroravi@gmail.com


My website.click hear

AstroRavichandransevvai.blogspot.com

*****************************************