Friday 28 September 2018

சோதிட விதிகளை மறுபரிசீலனை செய்வோம்

             சோதிட விதிகளை 

     மறு பரிசீலனை செய்வோம்

                            

செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

         கிரகங்கள்படுத்தும்பாடு

"இனி ஒரு விதி செய்வோம்-அதை
  எந்த நாளும் காப்போம்"

தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது தொடர்பான பதிவு

          நான் முதன் முதலில் சோதிட சம்பந்தமான அடிப்படை விதிகளை மதிப்புமிக்க ஆத்தூர் மாருதி மு.மாதேஸ்வரன் அய்யா எழுதிய "ஜோதிட ஆராய்சி திரட்டு" மூன்று பாகம் மற்றும் ஜோதிட ரகசியம் போன்ற நூல்களை படித்ததன் மூலம் அவரை நேரடியாக பார்க்காவிட்டாலும் அவரை மானசீக குருவாக அவரது நூல் வாயிலாக ஏற்றுக்கொண்டேன்.

        அவர் எழுதிய ஜோதிட ஆராய்சி திரட்டு இரண்டாம் பாகம் 159 பக்கத்தில் திருமணப்பொருத்தம் பார்க்கும் சரியான முறை என்ற தலைப்பின் கீழ் அவர் இட்ட கருத்தை ஆதாரமாக கொண்டு இப்பதிவில் என் எண்ணக்கருத்தை வெளியிடுகிறேன்
"திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக பொருத்தம் பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் 
தெளிவாக கூறியுள்ளார்கள்.ஆனால் சிலர் அதெல்லாம் தேவையற்றது என வாதம்செய்கிறார்கள்" என எழுதியுள்ளார்.
எனவே பத்து பொருத்தத்திற்கு பத்தும் இருந்தாலும் மேற்படி பாவக பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.நட்சத்திர பொருத்தங்கள் வலுவில்லாமல் இருந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் விவாகம் செய்யலாம் என்பது நான் கற்றதன் வாயிலாக அறிந்து கொண்ட கருத்து.இக்கருத்தை பின்வருமாறு விளக்குகிறேன்.

கட்ட அடிப்படையிலான பொருத்தம்


லக்கினப்பொருத்தம்:-

------------------

         ஆண்,பெண் இருவருக்கும் லக்கின பொருத்தத்தைக்கொண்டு அவர்களது குணாதிசியங்களை கணக்கிடலாம்.
உதாரணமாக மீன மற்றும் மேஷம்,
சிம்மம் மற்றும் கும்பம் இவர்களுக்குள் ஒத்து வராது.என்னதான் வசியப்பொருத்தம் இருந்தாலும் இவர்கள் வேறு வேறு குணாதிசியம் உடையவர்களை இணைத்தால் சுகப்படாது.

லக்கன  அதிபதி பொருத்தம்

--------------------------
    என்னதான் வசிய பொருத்தம் இருந்தாலும் லக்கன அதிபதிகள் ஒன்றுக்கொன்று நட்பாக இல்லாமல் பகையாக இருப்பின் அவர்களிடம் அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பில்லை.

ராசி பொறுத்தம் மற்றும் நாடிப்பொருத்தம்

******************

           இது மருத்துவ ரீதியான பொருத்தம்.ராசியைக்கொண்டு அவர்களது உடற்கூறு அமைப்பு வாதமா,பித்தமா மற்றும் சிலேத்துவமா என கண்டறியலாம்.
வாத,பித்த உடலும் இணையலாம்
வாத,சிலேத்தும உடலும் இணையலாம்
ஆனால்
பித்தமும்(உஷ்னம்),சிலேத்துவமும்(குளிர்சி) இணையக்கூடாது.
நீரும்,நெருப்பும் இணைய முடியுமா?
எனவே இப்பொருத்தம் இருப்பின் நாடி பொருத்தம் இல்லாவிடினும் செய்யலாம்

ராசி அதிபதி பொருத்தம்


        மேஷம்,சிம்மம்,தனுசு-நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்-நில ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்-காற்று ராசிகள்
கடகம்,விருட்சகம்,மீனம்-நீர் ராசிகள்

           மேற்கண்டவற்றுள் திரிகோண ராசிகளும்,அதன் அதிபதிகளும் ஒத்துபோக வாய்பிருக்கும்.இப்பொருத்தம் இருப்பின் வசிய பொருத்தம் தேவையில்லை

              யோனி பொருத்தம்


          ஆண்,பெண் பிறப்புறுப்பு என்பதே யோனி பொருத்தம்.வாத்ஸ்யாயனர் எழுதிய "காம சூத்திரத்தில்" இதன் அடிப்படை உள்ளது.
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் பிறப்பறுப்பு தோற்றம், உணர்ச்சி மற்றும் காம இச்சை இவற்றில் வேறுபாடு உண்டு ஒரே அளவாக இருப்பதில்லை.அவர்கள் தங்களுக்கிடையே சக்தியின் அளவிற்கேற்ப சமபோகம் செய்ய இயலும்.

        காம இச்சை அதிகம் உள்ள பெண்ணிற்கு,காம இச்சை குறைவாக உள்ளவர்களை பொருத்தம் தடம் பிரள வாய்ப்பு உள்ளது.இதை குறிக்க நட்பு யோனிகளை இணைக்கலாம்,பகை யோனிகளை இணைக்க கூடாது என்பது கருத்து.

           நான் இங்கு என்ன குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு ஆண்/பெண் சாதக கட்டத்தில்  உடல் உறவு ஆசைஎன்பதை ஏழாமிடம் கொண்டும்,கற்பு ஸ்தானம் என்பதை நான்காமிடம் கொண்டும்,படுக்கை சுகம் மற்றும் சயன சுகத்தை பணிரெண்டாமிடம் கொண்டும்,காதல் பிற பெண்களிடம் தொடர்பு என்பதை ஐந்தாமிடம் மேற்கண்ட நான்கு ஸ்தானங்களும்  கெடாமல் சுபதன்மை பெற்றும்

            காம கிரகம் எனப்படும செவ்வாய் ஆணுக்கு,சுக்கிரன் பெண்ணுக்கு  மற்றும் காம எண்ணத்தை தூண்டும் கிரகம் சந்திரன்   போன்ற கிரகங்கள்  சனி,ராகு,கேதுவோடு சேர்ந்து குணத்தை கெடுக்காமாலும் மற்றும் லக்கனத்தை பொறுத்த நல்ல குணாதிசியம் உள்ள ஜாதக தம்பதிகளை இணைக்கும்போது 
"யோனி பொறுத்தம் இல்லாவிட்டாலும் இணைக்கலாம்.இவர்கள் கிடைக்கும் தாம்பத்ய சுகத்தைக்கொண்டு திருப்தி அடைவார்கள்

விதிவிலக்கு ; 

            மேற்கண்ட அமைப்புடையவர்களுக்கு ஏனைய எல்லாவித கட்டபொருத்தமும்,நட்சத்திரபொருத்தமும்,தசா நிலைகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.அவர்களுக்கிடையே தாம்பத்ய திருப்தி இருக்கும்.இது ஆராய்சி ரீதியான உண்மை.

            யோனி பொருத்தம் இருந்து கட்ட ரீதியாக ஏழில் சந்திரன்,சுக்கிரன் உள்ள சாதகரும்,அதேபோல் நான்கில் சனி,செவ்வாய் சேர்ந்துள்ள சாதகரும் ,4-ம் பாவத்தில் சந்திரன் ,சுக்கிரன் பத்து பாகைக்குள் இணைந்துள்ள அல்லது சநதிரன்,சுக்கிரன்  180 பாகைக்குள் இணைந்துள்ள சாதகரும்(ஆண்/பெண்) தடம் மாறி போய்விட்டார்கள்.இது அனுபவ உண்மை.

            துலாம் லக்கினத்தில் சுக்கிரபகவான் ஆட்சியடைந்து சனிபகவானை உச்சமாக கொண்டு அவை வீர்யஸ்தானமான மூன்றாமிடமாகவோ,காம கற்பனையுணர்வு தரும் ஐந்தாமிடமாகவோ,காம ஆசையை தூண்டும் களஸ்திரஸ்தானமான ஏழாமிடமாகவோ அல்லது எண்ணங்களை ஈடேற்றும் பதினொறாமிடம் மற்றும் போக ,சயன மற்றும் படுக்கை ஸ்தானமாகவோ அந்த துலாம் வீடு இருந்தால் அதுபோன்ற அமைப்பை பெற்ற ஒருவர் எந்த பெண்ணிடம் பேசினாலும் அந்த பெண் இவரை படுக்கைசுகத்தில் பங்குபோட கட்டாயப்படுத்தும்.

          எனவே இதுபோன்ற கட்ட அமைப்புடைய தம்பதிகளை இணைக்கும்போது யோனி பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டும்.அவ்வாறு யோனிபொருத்தம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யும் போது மனைவியால் திருமணத்திற்கு பிறகு மாற்றிவிடும் அமைப்புண்டு.

           மற்றபடி சுக்கிரபகவான் மற்றும் செவ்வாய்பகவான் பாபர் தொடர்பற்று இருந்து மேலும்  3,5,7,11 மற்றும் 12 ஆம் இடங்களில் சுக்+செவ்  ,சுக்+சனி  ,செவ்+ராகு  ,சந்+சுக்  ,சுக்+ராகு போன்ற சேர்க்கை இல்லாத தம்பதிகளுக்கு #யோனிபொருத்தம் இல்லாதபட்சத்திலும் இணைக்கலாம்.இவர்கள் மன அடக்கத்துடன் வாழ்வார்கள்.

ரச்சு பொருத்தம்

       ஆண்,பெண் இருபாலருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்பது பொது விதி.இதில் விதிவிலக்காக ஒரே ரஜ்ஜூவாக இருந்தாலும் ஆரோ கணம்,அவரோக கணமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.இதில் ஒரே கணமாக வந்தால் செய்யக்கூடாது.

       ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிட்டாலும் ஆண்,பெண் இருவருக்கும் 2,7,8 இடம் 
சுத்தமாக இருந்தாலும் நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாமிடம் ஆண் ஜாதகமாக இருப்பின் பெண்ணிற்கு ஆயுள் ஸ்தானம்,இதேபோல் பெண் ஜாதகமாக இருப்பின் ஆணிற்கு ஆயுள் ஸ்தானம்.

        இதேபால் 8-மிடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் இவை வலுவாக இருப்பின் ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிடினும் திருமணம் செய்யலாம்.

          தம்பதிகள் இருவருக்கும் ஆயுள்பலம் அதிகமாக இருக்கும்போது ஒரே ரஜ்ஜீவாக இருந்தாலும் ஆரோகணம் மற்றும் அவரோகணமாக மாறிவரும்போது ஏறுமுகம் மற்றும் இறங்குமுகம் என்பதால் தம்பதிகளை இணைக்கலாம்.

                         பால் பொருத்தம்


       இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ பால் உள்ள மரம் வந்தால் பால் பொருத்தம்.இவை குழந்தை செல்வத்தை கொடுக்கும்.

விதி விலக்கு

          ஆண்,பெண் ஜாதகத்தில் 5,9 ம் இடங்களில் பாவியற்று (ராகு,கேது..),ஐந்தாமிட அதிபதி மற்றும் குரு வலுப்பெற்று இருப்பின் பால் பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்,புத்திரபாக்கியம் இருக்கும்

                    கணப்பொருத்தம்


         லக்கன மற்றும் லக்கன அதிபதி பொருத்தம் இருந்தால் போதும்.பெண் ராட்சத கணம் எனினும் பொருத்தம் போடலாம்

         இதுபோல பல விதிவிலக்குகள் உள்ளதை கவனித்து பொருத்தம் போட்டால் நல்ல தம்பதிகள் இணைய வாய்ப்பு ஏற்படும்.
ஜோதிடர்களாகிய  நாம் சாதக ரீதியான  பொருத்தங்களுக்கு  ,நட்சத்திர பொருத்தங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

                                       

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
ஜோதிட ஆராய்சியாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

      தொடர்பு கொள்ள

செல் : 97 151 89 647
செல் ; 740 257 08 99

எனது வாட்ஸ்அப்
97 151 89 647

(ஜாதகம் இருந்த இடத்திலிருந்துகொண்டு போனின் மூலம் பார்க்க விரும்புவோர் மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.தங்களது குழந்தைகளுக்கு தெளிவாக ஆராய்ந்து திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப்பில் பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பவும்.)

வாழ்க மகிழ்வுடன்.........

எனது வெப் முகவரி.கிளிக் செய்யவும்

 AstroRavichandransevvai.blogspot.com

 AstroRavichandran. blogspot. com

...........
.

Sunday 23 September 2018

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள்- ( 2 )

                 சுக்கிரபகவான் தரும் 

                   யோகபலன்கள் -(2)

                                       

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 116 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம் ஆசியோடு....

           சுக்கிரபகவானால் தரப்படும் காரக பலன்களை சோதிடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் சென்ற பதிவில் அழகாக விளக்கியிருந்தேன்.இப்பதிவிலும்  பகவான் அருளோடு மேலும் பல தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.தொடர்ந்து நல் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

          சுக்கிரபகவான் ஆனவர் #ரிஷபம் மற்றும் #துலாம் ஆகிய இரு வீடுகளை ஆட்சி வீடாக கொண்டவர்.எந்த ஒரு ராசியையும் லக்கனமாக  கொண்டவர்களுக்கூட சுக்கிரபகவானின் ஒரு வீடு சர ராசியாகவும் மற்றொன்று ஸ்திர ராசியாகவும் வருமேயொழிய உபய ராசியாக வருவதற்கு வாய்ப்பில்லை.

      .எனவே ஒரு ஸ்தானம் மட்டுமே கேந்திரமாக வரும் வாய்ப்பு உள்ளதால் சுக்கிரபகவானுக்கு #கேந்திராதிபத்திய தோஷம் வருவதற்குரிய சாத்தியகூறு இல்லை.

          சுக்கிரபகவான் சுப பலனை தரவேண்டுமாயின் அக்கிரகமானது அரவுகள் மற்றும் அசயர்களான ஸ்ரீராகு மற்றும் ஸ்ரீகேது பகவான்களோடு தனது வலிமையிழக்க கூடாது.தனது எதிரியான ஸ்ரீசூரியபகவானோடு இணைந்து அஸ்தமனம் அடையக்கூடாது.

        மேலும் தனது எதிர் அணியான ஸ்ரீகுருபகவான் அணியோடு இணைவதும் மற்றும் பார்வை பெறுவதும் கூடாது.(.குரு அணி என்பது குரு,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது ).இவை மட்டுமன்றி லக்கன பாவிகளோடு இணையக்கூடாது.

                              

         சுக்கிரன் உடன் சாயகிரகங்களான ராகு,கேது , காமகாரகன் செவ்வாய் மற்றும் மனதுக்காரன் சந்திரன் இணைவு மற்றும் பார்வையானது உடலியல் கவர்ச்சியால் ஒருவரை தன்னைவிட தரம் தாழ்ந்த இடத்தில் காதல் திருமணம் நடைபெற செய்ய வைக்கும்.

         அதுவும் இதுபோன்ற அமைப்பு ஆடவருக்கோ/பெண்டிருக்கோ இருந்து இளவயதில் அதாவது பள்ளிபருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால் அவர்களது குணத்தை கெடுத்து வீட்டைவிட்டு,தன்னை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களையும் மறந்து தவறான முடிவு எடுக்க வைக்கிறது.எனவேதான் பள்ளிபருவத்தில் சுக்கிர திசை வரக்கூடாது என பொதுவாக சொல்லிவிடுவார்கள்.மேலும் "குட்டிசுக்கிரன் குடியைக்கெடுக்கும் "என ரிதமாக கூறுவதன் உள்ளர்த்தமும் இவைதான்.

           அதனால் பெற்றோர்களாகிய அனைவரும் தமது பிள்ளைகளுக்கு சுக்கிரதிசை வந்தால் இதுபோல் நடந்துவிடுமோ! என பயப்பட தேவையில்லை.

      ஒருவருக்கு சுக்கிர திசை நடைபெறும்போது நான் கூறிய மேற்கொண்ட அமைப்பில் பாவிகளோடும் மற்றும் எதிர்தன்மையுடைய கிரகங்களோடு சுக்கிரன் பலவீனப்பட்டு அதன் திசை நடந்தால் மட்டுமேதான் இதுபோன்று நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.

          இல்லையெனில் ரிஷபம் மற்றும் துலாத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபத்துவம் பெறாமல் இருப்பின் அக்கிரகங்களது திசையிலும் இதுபோன்ற பலன்கள் நடைபெறலாம்.

                              

           சோதிடர்களாகிய நாங்கள் கூறும் பொதுப்பலனை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்.இதில் சில விதிவிலக்குகளும் உண்டு..நான் பதிவில் கூறக்கூடிய அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு இருப்பின் சோதிடரின் ஆலோசனையோடுதான் முடிவு எடுக்கவேண்டும்.இவ்வாறு நடைபெறும் கிரக அமைப்புகள் இருக்கின்றது நடைபெறும் திசையும் உடன்பாடாக இருப்பின் சற்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.

        மேலும் ஒருவரது சாதகத்தில் சுக்கிரபகவனோடு காமகிரகம் செவ்வாய் பகவான் சேரும்போது அவர்கள் காமவயப்பட வாய்ப்புகள் உண்டு.ஆனால் சுபர் பார்வை பெற்றாலோ அல்லது மனதுக்காரகன் சந்திரபகவான் பலப்பட்டிருந்தாலோ இதுபோன்ற எண்ணங்கள் தோன்றினாலும் தன்னை அடக்கி ஆளும் ஆளுமை தன்மையை ஒருவன் பெற்றுவிடுகிறான்.

       ஆனால் அதேநேரத்தில் சுபர் பார்வையின்றி மனதுக்காரகன் சந்திரபகவானும்  கெட்டுவிடும்போதுதான் ஒரு சிலர் காம எண்ண மிகுதியால் தனக்கு உடன்படாத கல்லூரி பெண்ணை கொலைசெய்யும அளவிற்கு சென்றுவிடுகிறான்.

         இன்றைய காலகட்டத்தில் சுவாதி கொலை வழக்குகளிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற நிறைய கொலை வழக்குகளை செய்திதாள்களிலிருந்து பார்கின்றபோது ஒரு ஆடவரினை உண்மையான காதல் தனது காதலி தனது காதலை மறுத்தாலும் அவளை வாழவைத்துதான் பார்க்கும். அன்பு எப்பொழுதும் பிறர்மீது வன்முறை செய்யதூண்டாது.கொலை செய்யதூண்டாது.வலுக்கட்டாயமாக பறிக்க தூண்டது.உண்மையான அன்பு காலம் மற்றும் காதல் கனியும்வரை காத்திருக்கும்.உண்மையான அன்பு தனக்கு அவள் கிடைக்காவிட்டாலும் கூட தூரத்தில் அவள் மகிழ்வோடும்,நிறைவோடும் வாழ்வதை எண்ணி உளம்பூரிக்கும்.

         காம மிகுதியான உடலியல் கவர்ச்சிகளால் வரும் காதல்தான் ஒருவனை கொலை செய்யும் அளவிற்கு வெறி கொள்ள செய்கிறது.

           இதற்கு சமூக அமைப்புமுறை,ஊடகங்கள் மற்றும் கல்விமுறை போன்ற பல காரணங்கள் இருந்தாலும் அவனது ஜெனன சாதகத்தில் உள்ள கிரகநிலை அமைப்புகளும் ஒரு காரணமாக அமைகிறது.

         இதுபோன்ற அமைப்புகள் தங்களது பிள்ளைகளுக்கு உண்டு என்பதை தக்க சோதிடரின் உதவியோடு முன்னரே தெரிந்துகொண்டால் பெற்றோர்கள் சில முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பிரச்சினையின் ஆழத்தை குறைத்து கொள்ளலாம்.

         பதிவின் கருத்துக்கு வருகிறேன்.எனவே சுக்கிரன்+செவ்வாய் மற்றும் சுக்கிரன்+சந்திரன் சேர்க்கை நல்லதல்ல.
மேலும் சுக்கிரபகவான் திரிகோண ஸ்தானமான  ஒன்று,ஐந்து மற்றும் ஒன்பது மற்றும் மூன்று ,ஏழு மற்றும் பதினொன்றாம் இடத்துடன் தொடர்பு பெறும்போது ஒருவர் தனது இயல்பைவிட அதிக காம உணர்வு கொண்டவராக இருப்பார்.

         இதுபோன்ற அமைப்புகள் ஒருவருக்கு இருப்பின் தெய்வவழிபாடு,தியானம் மற்றும் யோகா மூலமாக மனதை அலைபாய விடாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

                           

        ஒருவருக்கு சுக்கிரபகவான் ஐந்து மற்றும் எட்டாம் இட தொடர்பு கொண்டால் சாதகர் பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானங்களை சந்திக்க நேரிடும்.இதிலும் சுபர் பார்வை மற்றும் இணைவு இவற்றை பொறுத்து பலன் மாறுபடலாம்.இதுபோன்ற அமைப்பு தாங்களுக்கோ/பிள்ளைகளுக்கோ இருக்கிறதென்றால் அவை நடைபெறாமல் இருப்பதற்கான விதிவிலக்குகள் உண்டா ? என தக்க சோதிடரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யவேண்டும்.வாய்ப்பு உண்டு எனில் சில நேரங்களில் செய்யாத தவறுக்கு தண்டனை மற்றும் கெட்டபெயர் வரும்.முன்னரே தெரிந்துகொண்டு பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம்.

          இதேபோல் சுக்கிரபகவான் எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பானது பெண்களால் ஒருவர் வலி,வேதனை,பிரச்சினை மற்றும் டென்ஷனை அனுபவிக்க தோன்றும்.

         இதுபோன்ற பாதிப்புகள் தமக்கு வரும் வாய்ப்புகள் என மதியால் அறிந்து கொண்டால் விதியை மதியால் பரம்பொருளின் அருள் கொண்டு வெல்லலாம்.

           தொடர்ந்த அடுத்த பதிவில் மேலும் பல தகவல்களை வெளிப்படையாக எல்லோறும் புரிந்துகொள்ளும் வகையில் பார்ப்போம்.படித்து பயன்பெறுங்கள்.பகிர்ந்து மற்றவரும் பயன்பட உதவுங்கள்.நன்றி!.

(தங்களுக்குளுடைய குடும்ப அங்கத்தினரின் #சாதகத்தினை முழுமையாக ஆராய்ந்து அதன் நிறை மற்றும் குறைகளை கண்டறிந்து குறைபோக்கும் பரிகார வழிபாடுகளை தெரிந்துகொள்ளவும்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து சாதகம் எழுதுதல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு)

தொடர்புக்கு -
செல் ; 97 151 89 647
             740 257 08 99

 வாட்ஸ் அப் ; 97 151 89 647 

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                         

அன்புடன்
AstroRavichandran
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

My web Google search

WWW

AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran. blogspot. com

உங்களுடைய சாதகம் யோகமான சாதகமா ? என எப்படி தெரிந்து கொள்வது ?

உங்களுடைய சாதகம் யோகமான சாதகமா? என எப்படி தெரிந்து கொள்வது.?


                   

 கிரகங்கள்படுத்தும்பாடு

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*****************************
            எல்லோருக்கும் நம்முடைய ஜாதகம் யோகமுடையதா? என தெரிந்து கொள்வதில் அளவுக்கதிகமான ஆசை இருக்கும்.

           ஏதாவது சிறு யோகம் இருந்தாலும் அதை வைத்தே நம்ம வாழ்க்கையை ஓட்டிடலாம என நினைப்பவர்கள் பலர் உண்டு. என்னிடம் சாதகம் பார்க்க வருபவரில் பலர் எப்படியாவது நான் முன்னேறிவிடும் அளவிற்கு யோகம் உண்டா சார்?என கேட்பவர்களே அதிகம் ஆகும். எனவே இவர்கள் பயன்படும் விதமாக  ஒரு பதிவு போடவேண்டும் என எனது நீணட நாள்  ஆர்வத்தால் எழுந்த  பதிவு.

   ஒரு சாதகமா என ஆராய்ந்தறிய பின்வரும் விதிகளை கவனிக்கப்பட வேண்டும்.

             1) ஒருவருடைய ஜாதகத்தில் கேந்திராதிபதிகள்  கோணம் அல்லது மறைவு ஸ்தானங்களில் இடம் பெற வேண்டும்.மேலும் அவர்களுடைய தசை நடக்கவேண்டும்.

             2) பாவிகள் கேந்திரத்தல் இடம்பெறல் நல்லது.மேலும் கேந்திர(1,4,7,10) கோணாதிபதிகளுடன் (1.5.9)பரிவர்தனை நல்லது.

              3) கோணதிபதிகள் தமக்குள் பரிவர்தனை பெறுதல் நலம்.

            4) 5 மற்றும் 2- க்கு அதிபதியும் வலுவான 9-வது திரிகோணம் அல்லதுது  பத்தாவது கேந்திரம் பெற்று இவற்றுள் இடம்பெற்றும் கிரக தசைகளில் இராச யோகத்தை கொடுக்கும்.

             5) இராகு 4,5,10,11 வீடுகளில் இருந்தால் அதன் தசா புத்திகளில் யோகங்களை தரும்

            6) சந்திரனும் ,சுக்கிரனும் மூன்றாம் வீட்டில் இருப்பின் சுக்கிர.தசை யோகத்தை தரும்.

           7) குரு 9 -க்கு உடைய கிரகமாகி 8- ம் வீட்டில் இருப்பின் பாக்கியவான்.

            8 )  2,5,11 இவற்களுடைய அதிபதிகள் பரிவர்தனை அல்லது பரஸ்பர பார்வை பெற்று இருப்பின்

          9) 10 மற்றும் 11 க்குடைய அதிபதி பரிவர்த்தனை,2,9 பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர பார்வை

         10) தர்ம-கர்மாதிபதி யோகம் பெறல்( 9,10  க்கைடைய அதிபதிகள் பரிவர்தனை ,சம சப்தம பார்வை)

          11) 9,10 க்குடைய கோள்கள் தத்தம் வீட்டில் ஆட்சி பெறல்.அல்லது ஏழாம் வீட்டிலோ,லக்கனத்திலோ இடம் பெறல்

         12) 5,7,10 -ஆம் அதிபதிகள் கேந்திர கோணங்களில் இடம்பெறல் புகழ்,அதிகாரம்,செல்வம் கிடைக்கும்

         13) 9 மற்றும் 11 -ஆம் வீட்டின் அதிபதிகள் பரிவர்தனை மற்றும் பரஸ்பர பார்வை யோகத்தை தரும்

         14) பாவிகள் 3,6,11-ல் இருப்பின் யோகர்

         15) லக்கினாதிபதி 9,4 க்குடைய கோள்கள் 10-ம் வீட்டில் இருப்பின் அல்லது லக்கினாதிபதி 7,10 ம் வீட்டில் கோள் ஒன்று சேர்ந்து இருப்பின் தங்களது தசை காலங்களில் யோகங்களை கொடுக்கும் 

            16) மீன லக்கனம் லக்கனத்தில் சந்திரன்,சிம்மத்தில் சூரியன்,கும்பத்தில் சனி,மகரத்தில் செவ்வாய் அரசனுக்கு சமமான யோகம்

          17) மகர லக்கனம் லக்கனமாகி லக்கனத்தில் செவ்வாயும்,கடத்தில் சந்திரனும் பெற்றவர்கள்

         18) லக்கனாதிபதி ஐந்திலும் 2-க்குடையவன் 11-ல் இருந்தால் சுய உழைப்பில் முன்னேறுவான்.

       19) பிறர் வழியாக சொத்து சேரல்;-

          a )     2,4 சேர்க்கை தாய் மூலமும்

           b)    2,5 சேர்க்கை புத்திரர் மூலமும்

           c)   சுக்கிரன் 4 லும்,      4- ம் அதிபதி              7- லும் இருந்தால் மனைவி மூலமும்,

           d)     6-ம் அதிபதி மற்றும் 6-ம் ஸ்தானாதிபதி செவ்,சனி உடன் லக்க்னாதிபதி சேர்க்கை எதிரி மூலமும் சொத்து சேரும் யோகம்.

           20) சுப கிரகங்கள் மற்றும் பஞ்ச மகாயோகம் பெறல்.

குரு ஆட்சி உச்சம்-ஹம்சக யோகம்

புதன் ஆட்சி உச்சம்- பத்ர யோகம்

செவ் ஆட்சி உச்சம்-ருசக யோகம்

சுக்கிரன் ஆட்சி உச்சம்-மாளவீக யோகம்

சனி ஆட்சி உச்சம் -சசக யோகம்

         21) 4,2 ஆம் அதிபதியுடன் கூடி 9-ம் இடத்தில் இருக்க 10- ம் அதிபதி பலவனாய் 2-ல் இருக்க லாபாதிபதி மற்றும் லக்கனாதிபதி உச்சம் பெற கோடீஸ்வர யோகம்.

தொடரும்.......

                                
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd,
சோதிடர் & ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ;97 151 89 647
செல்; 740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

My email
masterastroravi@gmail.com

 My blogspot
 AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com

Saturday 22 September 2018

கிரக பலன்களும்,பரிகார முறைகளும்

கிரக பலன்களும்,பரிகார முறைகளும்.


                                          

   கிரகங்கள் படுத்தும் பாடு-

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


   மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகபலன்களே காரணம் ஆகும். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.

 அவரவர் செய்யக்கூடிய பரிகார பூஜை வழிபாடுகள்,தான தர்மங்கள்,நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது "பரிகார பூஜைகள் ஆகும். அவற்றில் ஒரு சில பரிகார வழிபாட்டு முறைகளை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.

      ஒருவரது ஜாதகத்தில் கடுமையான துன்பத்தையோ,விபத்தையோ  அல்லது பிணி மற்றும் பீடையையோ தருவதாக இருந்தாலும் ,மற்றும்
புத்திர பாக்கிய கால தாமதமாக தரக்கூடிய புத்திர தோஷமோ அல்லது திருமணத்தடை போன்றவை ஏற்பட்டாலும்,
சில திருமண பொருத்ததங்களில் குறைபாடு இருப்பினும் ,கணவன் மனைவி ஒற்றுமை குறைபாடு இருப்பினும்
இவ்வித பிரச்சினைகளில் இருந்து வெளிவர சோதிடர்களால் கூறப்படும் தீர்வு முறைகள் பரிகாரங்களே ஆகும்.

        திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம்  போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

           லக்கனம் மற்றும் ராசிகளோடு ராகு,கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன  ராகு இணைவு மற்றும் எட்டாமிட தொடர்பும்   திருமணத்தடையை ஏற்படுத்தும்

பரிகாரங்கள்
++++++++++
      ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர்,
திருப்பாள்புரம்  மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை  குறைக்கலாம்.

  துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு ராகு காலத்தில்  செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.

            புத்திரதோஷம்


         புத்திரகாரகன் குரு நீசம் ,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலோ இருந்து
புத்திரஸ்தானத்தில் பாவி இருந்து அதன் அதிபதிகளுடன் ராகு,கேது தொடர்பு ஏற்படடிருந்தாலோ அல்லது புத்திர ஸ்தானாதிபதி மறைவிடங்களில் நின்றாலோ புத்திர தோஷம் உண்டாகிறது.

               பரிகாரங்கள்

          இத்தோஷமுடையவர்கள் அரச மரம் சுற்றி வந்து , பூ,பொட்டு,மஞ்சள,வஸ்திரம்  மற்றும் குங்குமம் போன்றவை வைத்து சுமங்கலி பெண்களுக்கு  தானம் செய்து அவர்களது மனம் நிறைந்த ஆசிர்வாதம் பெற விதியுள்ள ஜென்மன் பிறப்பான்

மேலும் ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்தல் உத்தமம் ஆகும்.

               சகோதர தோஷம்


          ஓருவருக்கு பிறந்த குழந்தையின் குழந்தைக்கு( ஆணாக/பெண்ணாக இருப்பின் ) உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம்.சில நேரங்களில் உடன் பிறந்த சகோதரர் இருக்ககூடாது எனறும் சாதகத்தில் இருப்பின்
 (சகோதரஸ்தானம் எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவுஸ்தானங்களில் இடம்பெறுவது இத்தகைய தோஷத்தை தரும்)

             பரிகாரம் வழிபாடு

              இது போன்ற குழந்தையை இறைவனுக்கு தத்து கொடுக்கும்போது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்

                  தார தோஷம்


   சிலரது ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலம் இழந்து லக்கனாதிபதி மற்றும்  பதினொராம் அதிபதி வலுப்பெற்றிருந்தாலும்,

களஸ்திரகாரகன் சுக்கிரன் கேந்திரங்களிலே இருந்தாலும்,சனி ஏழாமிடத்தில் இருந்து  ஏழாம் அதிபதி வலுவிழந்த சாதகங்களிலும்,

    லக்கன ராசிகளுடன் ராகு கேது தொடர்புபெற்று ஏழாம் அதிபதி பலமிழந்து 11- ம் இட அதிபதி வலுப்பெற்ற சாதகங்களிலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

   தார தோஷம் போக்கும்பரிகாரங்கள்

     இதுபோன்ற அமைப்புடையவர்கள் நமது கலாச்சாரப்படி   ஒருவனுககு ஒருத்தி என்ற உயர்கொள்கையை கொண்ட நாம் பரிகாரங்கள் மூலம் தார தோஷத்தை தவிர்த்துவிடலாம்

       திருமணத்தைப்போன்றோ சுப விஷயங்கள் செய்து ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்டி விடுவதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து பிறகு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டலாம்.

    வாழை மரம் வெட்டுவது ஒரு மரத்தை வெட்டுவதற்குரிய பாவம் என்பதால் ஒரு பெண் பதுமை செய்து அதற்கு முறைப்படி தாலி கட்டி பிறகு அதை நீரில் கரைத்துவிடலாம்

     இதேபோல் பெண்ணின் ஜாதகதத்தில் இருப்பின் ஒரு பெண்ணைக்கொண்டு தாலி கட்டி பிறகு அதை நீக்கிவிடல்.

   எல்லாவற்றிக்கு மேலாக கோவில்களில் திருமணம் நடத்தி அவ்வாறு திருமணத்தன்று கட்டப்படும் மாங்கல்யத்தை அம்பாளுக்கு சாத்தி பிறகு தாலி பெருக்கிபோடும்போது வேறு ஒரு மாங்கல்யம் போட்டுக்கொள்ளாலாம்.

           தத்துக்கொடுத்தல்

    பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் தாய் ஸ்தானமாகிய 4-ம் இடமும்,சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு ஆகாது.

     இதேபோல் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடமும் ,சூரியனும் பாதிக்கப்பட்டிருந்தால் தந்தைக்கு ஆகாது.மேலும் சூரியனும் அவரது மைந்தன் சனிபகவானும் சேர்ந்து இருந்தாலும் அல்லது சம சப்தமாக பார்த்துக்கொண்டாலும் தந்தை-மகன் உறவுநிலை சிறப்பாக அமையாது.

எனவே மேற்கண்ட  அமைப்பை பெற்றுள்ள குழந்தையை சாமிக்கு தத்து கொடுப்பதன் மூலம் அவை சாமி பிள்ளை ஆகிவிடுதல் அத்தோஷம் பெற்றோர்களை தாக்காது.

திருமண யோகம் அற்ற சாதகங்களாக இருப்பின்

      ஒரு சாதகருக்கு மண வாழ்வினை பற்றி அறிய உதவும் ஸ்தானங்கள் லக்கனம்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகும்.

  மேற்கண்ட ஸ்தானங்களில் பாவகிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும்,
  
  இவை மட்டுமல்லாமல் இந்த நான்கு ஸ்தான அதிபதிகள்  மேற்கண்ட வகையில் பாவிகள் தொடர்பு அல்லது பலம் இழந்து நிற்பது அல்லது மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இடங்களில் அமர்ந்தாலோ கால தாமத திருமணத்தினை தரும்.

        சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும்

     லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.இவர்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளவும்.

கட்டாயம் தேவையானவை

       எந்த தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம்.

எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம்.

இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்.

                      

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ; 97 151 89 647
Cell; 740 257 08 99

Whatsup no
97 151 89 647

(Online Astro consult conduct my Cell and Whatsup. 
தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

My blogspot

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com

............

Wednesday 19 September 2018

ராகு தரும் ராஜயோகம்

ராகு தரும் ராஜ யோகம்


                               

        கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

"ஒருவரது சாதகத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில்  ராகு பகவானை கொண்டிருப்பவர்கள் 
பைனான்ஸ்,அடகுபிடித்தல்,கமிஷன் ஏஜெண்ட, , ரியல் எஸ்டெட்,அரசு விரோத தொழில்கள் ,லாட்டரி ,கணிப்பொறி
,அந்திய நாடு செல்லுதல்,ஷேர் மார்க்கெட் ,அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் புகழ் பெற வைக்கும்."

  ராகு பகவான் குப்பையில் இருப்பவரை கோபுரத்தில் ஏற்றி அழகு பார்க்கும்.கோபுரத்தில் இருப்பவரையும் குப்பையை நோக்கியும் செல்ல வைக்கும்.

    ராகுபகவான் ஒருவரது சாதகத்தில் உகந்த இடங்களில் இருந்து அதன் தசை நடப்பில் இருப்பின் பல லட்சங்களை அள்ளி கொடுத்து கோடீஸ்வரனாக்கி அழகுபார்க்கும்.அதே ராகு இகந்த இடங்களில் இல்லாதபோது ஒருவனை ஓட்டாண்டியாக்கி அடுத்தவரிடம் கையேந்தி நிற்க வைக்கும்.

ஒருவரது சாதகத்தில் லக்கனம் ,இரண்டாம் இடம் ,எட்டாம் இடம் போன்ற இடங்களில் ராகு பகவான் இருந்து அந்த திசை நடைபெறும் காலங்களில் சாதகருக்கு மிகுந்த கஷ்டங்களை தந்து வாழ்வில் பக்குவப்படுத்துகிறார்.

அதேநேரத்தில் மூன்று,ஆறு,பதினோன்றாம் இடங்களில் ராகு இருந்து அந்த இடங்களும் மேஷம்,ரிஷபம் ,கடகம்,கன்னி  மற்றும் மகரம் வீடுகளில் ஒன்றாக இருந்து ராகு பகவான் சுய சாரம் பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சாதகரை உயர்ந்த நிலைக்கு கோபுர கலசமாக ஜொலிக்க வைக்கும்.

பணிரெண்டாம் இட ராகு விரயத்தினை தந்தாலும் சாதகரை கடல் கடந்து அந்நிய தோஷம் செல்ல வைத்து வாழ்வில் பொருளாதர நிலையினை உயரத்தில் இட்டு செல்லும்.

 ராகு பகவான் திசையில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து நிற்கும் ராகு அதன் திசை காலங்களில் மிகுந்த யோகத்தினை வாரி வழங்கும்.

 ஆறாம் இடத்தில்   ராகு உடையவர்  எதிரியை வெல்லக்கூடியவராக திகழ்வார்.

ஶ்ரீ ராகு பகவான் கெடுப்பதைப்போல கெடுத்து நிறைவாக போக வாழ்வினை அள்ளி தருவதில் வல்லவர் .ஆதலால்தான் "ராகுவினைப்போல கொடுப்பவர் இல்லை,
 கேதுவினைப்போல கெடுப்பவர் இல்லை " என்ற சொல்லோடை மக்கள் மத்தியில் சோதிட பழமொழியாக பரவி வருகிறது.

ஶ்ரீராகு பகவான் தரக்கூடிய யோகங்களாவன;-


  1) அஸ்தகிரி யோகம்
   2) கிளர் யோகம்
   3) புதையல் ( லாட்டரி ) யோகம்

அஸ்தகிரி யோகம்


 "கேளே நீ சேல் கன்னி யெருது மேடம்
கெதியுள்ள மகரமடா கடகந்தன்னில்
கூளே நீ கரும்பாம்பு அதனில் தோன்ற
கொற்றவனே யோகங்களை புகழ்ந்திடாதே
சீளே நீ கிரகங்கள் நான்கு திக்கில்
சிவ சிவ சென்மனு கமைந்திருந்தால் 
ஆளே நீ யோகங்கள் கூறு அல்லால்
அப்பனே அஸ்தகிரி யோகஞ்சாற்றே "

 என்று புலிப்பாணி மகா முனிவர் அருளியுள்ளார்.

பாடல் விளக்கம்;

மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் கரும்பாம்பு எனப்படும் ஶ்ரீ ராகு பகவான் அமர்ந்து தசை நடத்தும் காலங்களில் யோகங்களை புகழ்ந்திடாதே லக்கனத்திற்கு நான்கு திக்கான 1,4,7,10 ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகத்தை கூறு என கூறுகிறார்.ராசிக்கு நான்கு திக்கிலும் (1,4,7,10) கிரகம் அமைந்திருந்தாலும் இப்பலனை கூறலாம் .

           கிளர் யோகம்


"கேளப்பாயின்னமொரு புதுமை கேளு 
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம்
அத்தலத்தோன் சுபரை கூட அப்பனை சேர்ந்தாலும் கண்ணுற்றாலும் 
சீரப்பா ஜென்மனுக்கு யோகம்
மெத்த சிவ சிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிணாதன் சேர்ந்து நிற்க குமரனுக்கு அனுதினமும் பலனே கூறே "

பாடல் விளக்கம்
ஶ்ரீ  ராகு பகவான் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது 1,5,9 என்ற திரிகோண ஸ்தானத்திலே அமர்ந்து ஶ்ரீ ராகு பகவான் வீற்றிருந்த ராசிஅதிபரின் சுபகிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது .😈 ஶ்ரீராகு பகவான் பார்த்திருந்தாலும் கிளர்யோகத்தினை அழகாய் கூறுவாய் என்றும் ,லக்கன அதிபதி சேர்ந்து நின்றால் அனுதினமும் யோகம் என்று புகழ்ந்துரைப்பாய் என மகா முனிவர் கூறுகிறார்.

புதையல் (லாட்டரி ) யோகம்


 "ஆரப்பா கரும்பாம்பு ஆறிலேற
அப்பனே செம்பாம்பு யீராரேற
சீரப்பா சிறந்த குரு கெந்திரமேற
சிவ சிவா அஷ்டலட்சுமியாள் யோகம்
கூறப்பா கெஙங்களுக்கு பெலி கொசுத்து
கெணத்திலுள்ள திரவியம் வெளியேடுத்து 
பாரப்பா பாக்கியங்கள் கண்ணால் பார்ப்பான் 
பண்பாக புலிப்பாணி பகர்ந்தேன் பாரே "

பாடல் விளக்கம்

"கரும்பாம்பு என்று சொல்லக்கூடிய ஶ்ரீராகு பகவான் லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் இருக்க ,செம்பாம்பு என்று சொல்லக்கூடிய கேதுபகவான் பன்னிரெண்டாம் இடத்தில் இருக்க ஶ்ரீகுரு பகவான் கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க அந்த ஜாதகருக்கு அஷ்ட லெட்சுமியாள் யோகம் ஆகும்.பூத கணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிணற்றில் உள்ள நீரை வெளியேடுத்து அங்கே உள்ள புதையலை பெறுவார்கள்.

புதையல் யோகம் என்பது அந்த கால கட்டங்களில் வங்கி இல்லாத சூழலில் தங்கம்,பொற்காசுகள் மற்றும் வெள்ளி நகைகள் ஆகியவற்றை திருடனுக்கு பயந்து புதைத்து வைப்பார்கள் .இவ்வாறு புதைத்து வைக்க ஐஸ்வர்யங்களை எடுக்க முடியாத சூழலில் பிறகு அதனை புதையலாக பெறுவதனை புதையல் யோகம் என்கிறோம்.

இன்றைய சூழலில் லாட்டரி,சூதாட்டம்,குதிரை ரேஸ்,சிட்பண்டுகள் இப்படி பணக்குவியல் மூலம் பெறும் யோகம் ஆகும்.

 நன்றி

வாட்ஸ் அப்
   97 151 89 647

  செல்
   740 257 08 99
     97 141 89 647

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)



அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
          M.Sc,MA,BEd,
     ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blog
AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai .blogspot. com
......................
.

Tuesday 18 September 2018

சோதிடன் என்பவன் யார் ? மற்றும் பஞ்சமஹாயோகங்கள் பற்றிய ஓர் ஆய்வு நிலை ?

   சோதிடன் என்பவன் யார் ? 

        மற்றும்

    பஞ்சமஹாயோகங்கள் பற்றிய ஆய்வு நிலை -( 2 ) 


                                             

             கிரகங்கள்படுத்தும்பாடு -( 113 )

               ஸ்ரீபத்ரகாளியம்மன்துனை!

        அன்பார்ந்த சோதிடம் பார்க்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

        .கிரகங்கள் அனைத்தும் பணிரெணடு ராசிக்கட்டத்தில் எவ்விடத்தில் அமர்ந்தால் என்னவிதமான பலனை தரும் என்பதை #கிரகங்கள்படுத்தும்பாடு  எனும் தலைப்பில் தொடர்ந்து  விளகக்கி வருகிறேன்.

      சிலர் என்னிடம் போன் வழியாக தொடர்பு கொள்ளும்போது உதாரணமாக எனது சாதகத்தில் குரு உச்சம் மற்றும் புதன் ஆட்சி .ஆதலால் புதன் திசை  வந்து அள்ளி கொடுக்கும் என்றார்கள்.ஆனால் அதுமாதிரி எனக்கு நடைபெறவில்லை.அந்த திசை காலத்தில்தான் கஷ்டம் அதிகமாக நடக்கிறது ? என கூறியவரது சாதகத்தை வாங்கி பார்த்தபோது அவனது சாதகத்தில் பின்வருமாறு நான் விளக்கும் விதிவிலக்குகள் இருப்பதால்தான் அத்திசை சரியாக நடைபெறவில்லை.

                    இதை சரியாக விளக்கி கூறுபவர்தான் சோதிடர் ஆவார். .ஒருவர் சிறந்த சோதிடர் ஆவது என்பது சாதரன விஷயமல்ல. அதற்கு அவரது சாதகத்தில் பிராப்தம் வேண்டும்.அதற்கு நிறைய விஷயங்களை மனப்பாடம் செய்யும் மனன திறன் இருக்கவேண்டும்.கணித அறிவு வேண்டும்,கோள்களை ஆராய்ச்சி செய்யும் அறிவியல் ஞானம் வேண்டும்,சாதகரின் மனநிலைக்கு தகுந்தமாறி பலனுரைக்கும் உளவியல் அறிவுவேண்டும்,வேதவிசாரனையறிவு வேண்டும்..

           கடவுளின் ஆசியும் மற்றும் அருளும் பெறும் அணுக்கிரகம் வேண்டும்எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குருவின் கீழ்படிந்து அவர் சூட்சும விஷயங்களை அவராக கற்று தரும் வரை காத்திருக்கும்  பொறுமையுணர்வு வேண்டும்.மேலும் சோதிடம் கற்ற்றுக்கொள்ளும்போது பலவிதமான இன்னலகளை தந்து இறைவன் பரிசோதித்து பார்ப்பார் அதனை தாங்கி கொண்டு விடாமல் அடியெடுத்து வைக்கும் மன உறுதிவேண்டும்.

"கற்றது கை மண்ணளவு.கல்லாதது உலகளவு "என்ற வகையில் சமுத்திரம் போன்ற சோதிட நூல்களை படிக்கவேண்டும்.பலமணிநேரம் செலவழித்து முகநூல் பதிவுகள் மற்றும் சோதிடநூல்களில் எழுதி மக்களின் ஆதரவை பெறவேண்டும்.லொளகீக எண்ணங்களிலிருந்து விலகி ஆன்மீக வழிபாடு செய்யவேண்டும்.அவ்வாறு செய்து பரம்பொருளின் அருளால் சூட்சும உண்மைகளை அறிந்தாகவேண்டும்.

           இவ்வளவு படிகளை தாண்டிதான் ஒரு சோதிடர் சாதகபலன் கூறி பலன் ஈட்ட முடியும்.எனவே"  ஒரு சோதிடர் என்பவர் கிரகங்களை வித்தை காட்டியோ அல்லது பயமுறுத்தி பரிகாரம் கூறி பணம் ஈட்டுபவர் அல்ல. ஒருவர் சோதிடர் ஆவதும் மற்றும் அவரால் பலன் கூறி பணம் ஈட்டுவதும்  விதிப்பலனே ஆகும் .

சோதிடரின் பணி


           வருமுன் காக்கும் மற்றும் அறிவுறுத்தும் வழிகாட்டியாகவும் ,மன ரீதியாக பக்குவப்படுத்தும் (counsiling) உளவியல் நிபுணராகவும் ,நோய்களை  மருத்துவர் கண்டறிந்து  கூறுவதற்கு முன்பே உடலையே தொட்டு பார்க்காமல் கண்டறியும் மருத்துவராகவும் செயல்படக்கூடியவர்.

         எனவே சோதிடர் கிரகங்களை கொண்டு வித்தை காட்டி பிழைப்பவர் அல்ல. இது ஒரு விஞ்ஞானம்.இக்கலை சங்க காலம் முதற்கொண்டு பயிலப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் கணிதத்தின் பிறப்பிடமே சோதிடவியல் ஆகும்.

           குருகுலகல்வியல் சோதிடம் ,மருத்துவம் மற்றும் யுத்தமுறை முதலிய பாடங்கள் கற்பிக்கப்பட்டது.மன்னர் அவையிலும் ராஜசோதிடர்கள் இடம்பெற்றார்கள்.அவர்கள் மன்னர் யுத்தம் செய்ய உகந்த காலங்களை கணித்து கொடுத்தனர்.தற்பொழுதும் பல்கலைகழகங்களில் சோதிடவியல் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

        ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கே உரித்தான சோதிடம் இணைய வளர்ச்சியால் எல்லா தட்டு மக்களிடமும் சோதிட ஞானம் சென்றுவிட்டது.

 சென்ற வார பஞ்சமஹாயோகம் பதிவின் தொடர்ச்சியை பார்ப்போம்.


              குரு,புதன்,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது இவ்வித யோகங்களை தரும் என்பது அடிப்படையான விதி ஆகும்.இந்த பஞ்சமஹாயோகங்களானது வேறு சில காரணங்களால் எனது அனுபவத்திலும் மற்றும் எனது குருமார்களின்படியும் யோகங்களில் சில குறைவு ஏற்படுகிறது என்பதை மட்டுமே பகிர்கிறேன்.மற்றபடி அடிப்படை விதிகளை மாற்றும உரிமை எனககு கிடையாது.

   ரிஷபலக்கனம்


           இந்த லக்கனத்திற்கு #பத்ரயோகம் தரும் #புதன்பகவான் ஆனவர் இரண்டு மற்றும் ஐந்தாமிட அதிபதியாகவும் ,லக்கனயோகரகவும் மற்றும் லக்கனாதிபதி சுக்கிரனுக்கு நட்பாகவும் இருப்பதால் இவ்விரு இடங்களில் ஆட்சி மற்றும் உச்சம் பெறும் புதன் பகவான் அதன் திசைகாலங்களில் பத்ரயோகத்தை குறைவின்றி வழங்குவார்.

              இதன் பலனாக அதன் காரகபலனான எழுத்து,இசை,கணிதம் ,சோதிடம் போன்ற பலன்களை சிறப்பாகவும் மற்றும் அதன் ஸ்தான பலனான தனம் ,கல்வி,வாக்கு,நேத்திரம்,பூர்வபுண்ணிய மற்றும் புத்திரயோகங்களையும் இதுபோன்ற பலன்களை சிறப்பாக வழங்குவார்.
மேலும் இவ்வித பலன்களை சிறப்பாக தர புதன்பகவான் பாவியின் தொடர்பின்றி இருக்கவேண்டும்.பாவியோடு சேர்ந்த புதன் பாவியாகிவிடுவார் .

              மாளவீகயோகம்


                ரிஷப லக்கனத்திற்கு #சுக்கிரபகவான் லக்கனாதிபதியாக மட்டுமில்லாமல் ருணரோக அதிபதியான ஆறாமிட அதிபதியாகவும் வருவதால் சுக்கிரன்  ஆட்சியாகவோ அல்லது உச்சமடைந்தாலோ மாளவீகயோகத்தை தந்தாலும் அதன் ஆறாமிட ஆதிபத்தியம் இறுதியில் யோகபலனை ரிஷபலக்கனத்திற்கு பங்கபடுத்திவிடும்.

                 ருசகயோகம்


             ரிஷப லக்கனத்திற்கு ஏழு மற்றும் பணிரெண்டுக்குடைய #செவ்வாய் பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று ருசக யோகத்தை தந்தாலும் சாதகரை ஆணவகாரனாக மாற்றிவிடுகிறது.அதிலும் ஏழாமிடத்தில் ஆட்சி பெறுதல் திருமணவாழ்வில் சில கஷ்டங்களை உண்டாக்கும்.சனிபகவான் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுதல் சாதகரை கோபக்காரணாகவும் ,விட்டுக்கொடுக்கும் தன்மையற்றவனாகவும் மற்றும் கர்வமிக்கவனாகவும் மாற்றுகிறது.அதேநேரத்தில் சாதகரை பூமியோகம் மற்றும் விவசாயயோகமுடையவனாகவும் மாற்றுகிறது.

            ஹம்சகயோகம்


             ரிஷபலக்கனத்திற்கு #குருபகவான்  ஒரு ஸ்தானம் லாபஸ்தானமாக இருந்தாலும் மற்றுமொரு ஸ்தானமானது அஷ்டமஸ்தானமாக வருவதால் இங்கு குருபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் இருத்தல் நலம்.

             சசகயோகம்


          #சனிபகவான் முழுபாவராக இருப்பதால் பாவிகள் நேர்வலுபெறக்கூடாது எனும் அடிப்படையில் சனிபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலுபெறாமல் இருத்தல் நலம்.துலா லக்கனத்திற்கு முழுயோகத்தை தரும் சனிபகவானும் ஆட்சி பெறாமலே இருத்தல் நலம்.

குறிப்பு;

           பாவ கிரகங்களோ அல்லது ஆறு மற்றும் எட்டு போன்ற மறைவுஸ்தான அதிபதிகளோ    உச்சம் ,ஆட்சி போன்ற நேர்வலுகூடாது எனும்போது அவை மறைமுக வலுபெறலாம் .உதாரணமாக மிதுன லக்கனத்திற்கு ஆறாமிடத்தில் செவ்வாய் ஆட்சிபெறுவதைவிட ஆறுக்கு ஆறாமிடமான மறைவுஸ்தானத்தில் ஆட்சி பெறுவது மறைமுக வலுப்பெறுதல் ஆகும்.எனவே பதினொன்றாமிடத்தில் ஆட்சி பெறுவது நல்லது.

       மிதுனம்


            இவை #உபயலக்கனமாக இருப்பதால் #ஹம்சயோகத்தை தரும் #குருபகவானும் மற்றும் #பத்ரயோகத்தை தரும் #புதன்பகவானும் கேந்திரஸ்தானங்களில் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது #கேந்திராதிபத்தியதோஷத்தை தரும் என்பதால் புதன்பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவதும் மற்றும் குருபகவான் ஆட்சி பெறுவதும் நல்லதல்ல.மேலும் மிதுனலக்கனத்திற்கு ஏழாம் அதிபதியானது #பாதகாதிபதி மற்றும் #மாரகாதிபதியாவதால் குருபகவானும் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவது நல்லதல்ல.

              ருசகயோகம்


               மிதுன லக்கனத்திற்கு ருசகயோகம் தரக்கூடிய #செவ்வாய்பகவான் ரூனரோக ஸ்தானமான  ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதைவிட பதினொன்றாமிடத்தில் ஆட்சி பெறுவது நல்லதல்ல.மற்றுபடி சனிபகவான் வீடான மகரத்தில் உச்சம் பெறுவதும்கூட சிறப்பல்ல.

             மாளவீகயோகம்


            மிதுனலக்கனத்திற்கு ஐந்து மற்றும் பணிரெண்டு இட அதிபதியான #சுக்கிரபகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவதால் மாளவுகயோகம் சிறப்பாக வேலை செய்யும்.

            சசகயோகம்


            முதலில் கூறியதுபோல #பாவ கிரகமான #சனிபகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலுபெறாமல் இருத்தல் நலம்.மறைவாக வலு பெறுதல் நல்லது ஆகும்.

-----------------------------
(தங்களது சாதகங்களை ஆய்வு செய்து நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் #போன்வழியாகவே தங்கள் குடும்ப உறுப்பினந்களுக்கு #சாதகபலன் ,#திருமணப்பொருத்தம் மற்றும் #சாதகம் கணித்து எழுதுதல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டணம் உண்டு.

#பிறந்தேதி ,#நேரம் மற்றும் #இடம் போன்ற தகவல்களை எனது #வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

#தொடர்புக்கு

 செல்

97 151 89 647
740 257 08 99

#வாட்ஸ்அப்
97 151 89 647
                         

அன்புடன்
AstroRavichandran
M.SC,MA,BEd,
Om sakthi Astro online consulting centre,
Astro Researcher & PG Teacher in Chemistry,
Karambakkudi,Pudukkottai District.

Email
 Masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandran. blogspot.. com
AstroRavichandransevvai.blogspot. com