சோதிட விதிகளை
மறு பரிசீலனை செய்வோம்
செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள்படுத்தும்பாடு
"இனி ஒரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்"
தம்பதிகள் இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது தொடர்பான பதிவு
நான் முதன் முதலில் சோதிட சம்பந்தமான அடிப்படை விதிகளை மதிப்புமிக்க ஆத்தூர் மாருதி மு.மாதேஸ்வரன் அய்யா எழுதிய "ஜோதிட ஆராய்சி திரட்டு" மூன்று பாகம் மற்றும் ஜோதிட ரகசியம் போன்ற நூல்களை படித்ததன் மூலம் அவரை நேரடியாக பார்க்காவிட்டாலும் அவரை மானசீக குருவாக அவரது நூல் வாயிலாக ஏற்றுக்கொண்டேன்.
அவர் எழுதிய ஜோதிட ஆராய்சி திரட்டு இரண்டாம் பாகம் 159 பக்கத்தில் திருமணப்பொருத்தம் பார்க்கும் சரியான முறை என்ற தலைப்பின் கீழ் அவர் இட்ட கருத்தை ஆதாரமாக கொண்டு இப்பதிவில் என் எண்ணக்கருத்தை வெளியிடுகிறேன்
"திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஜாதக ரீதியாக பொருத்தம் பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள்
தெளிவாக கூறியுள்ளார்கள்.ஆனால் சிலர் அதெல்லாம் தேவையற்றது என வாதம்செய்கிறார்கள்" என எழுதியுள்ளார்.
எனவே பத்து பொருத்தத்திற்கு பத்தும் இருந்தாலும் மேற்படி பாவக பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.நட்சத்திர பொருத்தங்கள் வலுவில்லாமல் இருந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் விவாகம் செய்யலாம் என்பது நான் கற்றதன் வாயிலாக அறிந்து கொண்ட கருத்து.இக்கருத்தை பின்வருமாறு விளக்குகிறேன்.
கட்ட அடிப்படையிலான பொருத்தம்
லக்கினப்பொருத்தம்:-
------------------ஆண்,பெண் இருவருக்கும் லக்கின பொருத்தத்தைக்கொண்டு அவர்களது குணாதிசியங்களை கணக்கிடலாம்.
உதாரணமாக மீன மற்றும் மேஷம்,
சிம்மம் மற்றும் கும்பம் இவர்களுக்குள் ஒத்து வராது.என்னதான் வசியப்பொருத்தம் இருந்தாலும் இவர்கள் வேறு வேறு குணாதிசியம் உடையவர்களை இணைத்தால் சுகப்படாது.
லக்கன அதிபதி பொருத்தம்
--------------------------என்னதான் வசிய பொருத்தம் இருந்தாலும் லக்கன அதிபதிகள் ஒன்றுக்கொன்று நட்பாக இல்லாமல் பகையாக இருப்பின் அவர்களிடம் அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பில்லை.
ராசி பொறுத்தம் மற்றும் நாடிப்பொருத்தம்
******************இது மருத்துவ ரீதியான பொருத்தம்.ராசியைக்கொண்டு அவர்களது உடற்கூறு அமைப்பு வாதமா,பித்தமா மற்றும் சிலேத்துவமா என கண்டறியலாம்.
வாத,பித்த உடலும் இணையலாம்
வாத,சிலேத்தும உடலும் இணையலாம்
ஆனால்
பித்தமும்(உஷ்னம்),சிலேத்துவமும்(குளிர்சி) இணையக்கூடாது.
நீரும்,நெருப்பும் இணைய முடியுமா?
எனவே இப்பொருத்தம் இருப்பின் நாடி பொருத்தம் இல்லாவிடினும் செய்யலாம்
ராசி அதிபதி பொருத்தம்
மேஷம்,சிம்மம்,தனுசு-நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்-நில ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்-காற்று ராசிகள்
கடகம்,விருட்சகம்,மீனம்-நீர் ராசிகள்
மேற்கண்டவற்றுள் திரிகோண ராசிகளும்,அதன் அதிபதிகளும் ஒத்துபோக வாய்பிருக்கும்.இப்பொருத்தம் இருப்பின் வசிய பொருத்தம் தேவையில்லை
யோனி பொருத்தம்
ஆண்,பெண் பிறப்புறுப்பு என்பதே யோனி பொருத்தம்.வாத்ஸ்யாயனர் எழுதிய "காம சூத்திரத்தில்" இதன் அடிப்படை உள்ளது.
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் பிறப்பறுப்பு தோற்றம், உணர்ச்சி மற்றும் காம இச்சை இவற்றில் வேறுபாடு உண்டு ஒரே அளவாக இருப்பதில்லை.அவர்கள் தங்களுக்கிடையே சக்தியின் அளவிற்கேற்ப சமபோகம் செய்ய இயலும்.
காம இச்சை அதிகம் உள்ள பெண்ணிற்கு,காம இச்சை குறைவாக உள்ளவர்களை பொருத்தம் தடம் பிரள வாய்ப்பு உள்ளது.இதை குறிக்க நட்பு யோனிகளை இணைக்கலாம்,பகை யோனிகளை இணைக்க கூடாது என்பது கருத்து.
நான் இங்கு என்ன குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு ஆண்/பெண் சாதக கட்டத்தில் உடல் உறவு ஆசைஎன்பதை ஏழாமிடம் கொண்டும்,கற்பு ஸ்தானம் என்பதை நான்காமிடம் கொண்டும்,படுக்கை சுகம் மற்றும் சயன சுகத்தை பணிரெண்டாமிடம் கொண்டும்,காதல் பிற பெண்களிடம் தொடர்பு என்பதை ஐந்தாமிடம் மேற்கண்ட நான்கு ஸ்தானங்களும் கெடாமல் சுபதன்மை பெற்றும்
காம கிரகம் எனப்படும செவ்வாய் ஆணுக்கு,சுக்கிரன் பெண்ணுக்கு மற்றும் காம எண்ணத்தை தூண்டும் கிரகம் சந்திரன் போன்ற கிரகங்கள் சனி,ராகு,கேதுவோடு சேர்ந்து குணத்தை கெடுக்காமாலும் மற்றும் லக்கனத்தை பொறுத்த நல்ல குணாதிசியம் உள்ள ஜாதக தம்பதிகளை இணைக்கும்போது
"யோனி பொறுத்தம் இல்லாவிட்டாலும் இணைக்கலாம்.இவர்கள் கிடைக்கும் தாம்பத்ய சுகத்தைக்கொண்டு திருப்தி அடைவார்கள்
விதிவிலக்கு ;
மேற்கண்ட அமைப்புடையவர்களுக்கு ஏனைய எல்லாவித கட்டபொருத்தமும்,நட்சத்திரபொருத்தமும்,தசா நிலைகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.அவர்களுக்கிடையே தாம்பத்ய திருப்தி இருக்கும்.இது ஆராய்சி ரீதியான உண்மை.
யோனி பொருத்தம் இருந்து கட்ட ரீதியாக ஏழில் சந்திரன்,சுக்கிரன் உள்ள சாதகரும்,அதேபோல் நான்கில் சனி,செவ்வாய் சேர்ந்துள்ள சாதகரும் ,4-ம் பாவத்தில் சந்திரன் ,சுக்கிரன் பத்து பாகைக்குள் இணைந்துள்ள அல்லது சநதிரன்,சுக்கிரன் 180 பாகைக்குள் இணைந்துள்ள சாதகரும்(ஆண்/பெண்) தடம் மாறி போய்விட்டார்கள்.இது அனுபவ உண்மை.
துலாம் லக்கினத்தில் சுக்கிரபகவான் ஆட்சியடைந்து சனிபகவானை உச்சமாக கொண்டு அவை வீர்யஸ்தானமான மூன்றாமிடமாகவோ,காம கற்பனையுணர்வு தரும் ஐந்தாமிடமாகவோ,காம ஆசையை தூண்டும் களஸ்திரஸ்தானமான ஏழாமிடமாகவோ அல்லது எண்ணங்களை ஈடேற்றும் பதினொறாமிடம் மற்றும் போக ,சயன மற்றும் படுக்கை ஸ்தானமாகவோ அந்த துலாம் வீடு இருந்தால் அதுபோன்ற அமைப்பை பெற்ற ஒருவர் எந்த பெண்ணிடம் பேசினாலும் அந்த பெண் இவரை படுக்கைசுகத்தில் பங்குபோட கட்டாயப்படுத்தும்.
எனவே இதுபோன்ற கட்ட அமைப்புடைய தம்பதிகளை இணைக்கும்போது யோனி பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டும்.அவ்வாறு யோனிபொருத்தம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யும் போது மனைவியால் திருமணத்திற்கு பிறகு மாற்றிவிடும் அமைப்புண்டு.
மற்றபடி சுக்கிரபகவான் மற்றும் செவ்வாய்பகவான் பாபர் தொடர்பற்று இருந்து மேலும் 3,5,7,11 மற்றும் 12 ஆம் இடங்களில் சுக்+செவ் ,சுக்+சனி ,செவ்+ராகு ,சந்+சுக் ,சுக்+ராகு போன்ற சேர்க்கை இல்லாத தம்பதிகளுக்கு #யோனிபொருத்தம் இல்லாதபட்சத்திலும் இணைக்கலாம்.இவர்கள் மன அடக்கத்துடன் வாழ்வார்கள்.
ரச்சு பொருத்தம்
ஆண்,பெண் இருபாலருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்பது பொது விதி.இதில் விதிவிலக்காக ஒரே ரஜ்ஜூவாக இருந்தாலும் ஆரோ கணம்,அவரோக கணமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.இதில் ஒரே கணமாக வந்தால் செய்யக்கூடாது.
ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிட்டாலும் ஆண்,பெண் இருவருக்கும் 2,7,8 இடம்
சுத்தமாக இருந்தாலும் நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாமிடம் ஆண் ஜாதகமாக இருப்பின் பெண்ணிற்கு ஆயுள் ஸ்தானம்,இதேபோல் பெண் ஜாதகமாக இருப்பின் ஆணிற்கு ஆயுள் ஸ்தானம்.
இதேபால் 8-மிடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் இவை வலுவாக இருப்பின் ரஜ்ஜூ பொருத்தம் இல்லாவிடினும் திருமணம் செய்யலாம்.
தம்பதிகள் இருவருக்கும் ஆயுள்பலம் அதிகமாக இருக்கும்போது ஒரே ரஜ்ஜீவாக இருந்தாலும் ஆரோகணம் மற்றும் அவரோகணமாக மாறிவரும்போது ஏறுமுகம் மற்றும் இறங்குமுகம் என்பதால் தம்பதிகளை இணைக்கலாம்.
பால் பொருத்தம்
இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ பால் உள்ள மரம் வந்தால் பால் பொருத்தம்.இவை குழந்தை செல்வத்தை கொடுக்கும்.
விதி விலக்கு
ஆண்,பெண் ஜாதகத்தில் 5,9 ம் இடங்களில் பாவியற்று (ராகு,கேது..),ஐந்தாமிட அதிபதி மற்றும் குரு வலுப்பெற்று இருப்பின் பால் பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்,புத்திரபாக்கியம் இருக்கும்
கணப்பொருத்தம்
லக்கன மற்றும் லக்கன அதிபதி பொருத்தம் இருந்தால் போதும்.பெண் ராட்சத கணம் எனினும் பொருத்தம் போடலாம்
இதுபோல பல விதிவிலக்குகள் உள்ளதை கவனித்து பொருத்தம் போட்டால் நல்ல தம்பதிகள் இணைய வாய்ப்பு ஏற்படும்.
ஜோதிடர்களாகிய நாம் சாதக ரீதியான பொருத்தங்களுக்கு ,நட்சத்திர பொருத்தங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
ஜோதிட ஆராய்சியாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்பு கொள்ள
செல் : 97 151 89 647
செல் ; 740 257 08 99
எனது வாட்ஸ்அப்
97 151 89 647
(ஜாதகம் இருந்த இடத்திலிருந்துகொண்டு போனின் மூலம் பார்க்க விரும்புவோர் மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.தங்களது குழந்தைகளுக்கு தெளிவாக ஆராய்ந்து திருமண பொருத்தம் பார்த்து தரப்படும்.கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப்பில் பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பவும்.)
வாழ்க மகிழ்வுடன்.........
எனது வெப் முகவரி.கிளிக் செய்யவும்
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
...........
.